இந்திய அரசியல் வரலாறில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக நிகழ்ந்தது ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி. கருப்புப் பணம் மட்டுமே, அரசியலின் அடிப்படையாக இருந்த ஒரு சூழல். கருப்புப் பணம் இல்லாதவர்கள் அரசியலில் இறங்கவே முடியாத என்ற ஒரு விரக்தி அளிக்கக் கூடிய நிலையில், அதற்கு மாற்றாக, அந்தத் தடையை உடைத்து மிகப் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது ஆம் ஆத்மி கட்சி. ஒரு சாதாரண தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் இத்தகைய வெற்றியை பெற முடியுமா என்று அனைவரும் அவநம்பிக்கை கொண்டிருந்த ஒரு சூழலில், முடியும் என்பதை மிக தீர்க்கமாக நிரூபித்த ஒரு கட்சி.
ஆம் ஆத்மி கட்சி பெற்ற மிகப் பிரம்மாண்டமான ஆதரவு என்பது, இந்திய சமூகத்தில் நியாய உணர்வு மிக்க அனைவரையும் நம்பிக்கை கொள்ள வைத்த ஒரு விஷயம். இடதுசாரிகள் முழுக்க தோல்வியடைந்து, வாக்கு அரசியலிலும் நில்லாமல், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திலும் உறுதியாக நில்லாமல், தாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி ஒரு திரிசங்கு நிலையில் இருந்த காலத்தில், காங்கிரஸ், பிஜேபி ஆகிய கட்சிகளுக்கும், வட இந்தியாவைச் சேர்ந்த சாதிக் கட்சிகளுக்கும் மாற்றே இல்லையா என்று ஏங்கிக் கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்தினரின் கனவாக உருவானதே ஆம் ஆத்மி கட்சி.
எந்த ஒரு இயக்கத்துக்கும் ஒரு முகமூடி ஒன்று வேண்டும். அந்த முகமூடியை வைத்தே வெற்றிகளை ஈட்ட முடியும். வரலாற்றில் இட்லர், காந்தி, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா என்று இது போல பல்வேறு தலைவர்களின் முகங்களே மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்திருக்கின்றன. ஆனால் இப்படி தங்கள் முகங்களை வைத்து வெற்றிகளை ஈட்டிய தலைவர்கள், அந்த வெற்றி தங்கள் தலைக்கு ஏறாமல் பார்த்துக் கொண்டார்களேயானால் வரலாற்றில் நிலைத்து நிற்பார்கள்.
கேஜ்ரிவால்தான், ஆம் ஆத்மியின் முகம், அவரது யோசனையில்தான் இக்கட்சியே உருவானது. ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கான பிரதான காரணம், கேஜ்ரிவால்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவரால் கிடைத்த வெற்றி என்ற காரணத்தால் தன்னைத் தவிர வேறு யாருமே தலைவராக இருக்கக்கூடாது, எதிர்த்துக் கேள்வி கேட்கக் கூடாது என்ற மனநிலையில்தான் கேஜ்ரிவால் இருக்கிறார்.
ஊழலுக்கு எதிரான இயக்கம் என்று அன்னா ஹசாரே ஒரு இயக்கத்தை தோற்றுவித்து, உண்ணாவிரதம் இருந்தபோது, அதன் பின்னணியில் இருந்து செயல்பட்டு, அந்த இயக்கத்தை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றவர் கேஜ்ரிவால். அதன் பின்னணியில் இருந்து லோக்பால் வரைவு மசோதாவை தயாரிப்பது முதல், மற்ற அரசியல் கட்சிகளை கையாள்வது வரை பின்னணியில் இருந்து செயல்பட்டார். இப்படி செயல்பட்டு, அன்னா ஹசாரேவோடு நெருக்கமாக ஆன காரணத்துக்காக இவரோடு இருந்த கிரண் பேடியின் கோபத்துக்கும் ஆளானார் என்பதை மறுக்க முடியாது.
அதன் பிறகு, லோக்பால் இயக்கம் ஒரு தேக்க நிலையை அடைந்தபோது, அடுத்த கட்டத்துக்கு அதை எப்படி எடுத்துச் செல்வது என்று அன்னா ஹசாரே உள்ளிட்டோர் வியந்து கொண்டிருந்த நிலையில் துணிச்சலாக ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார் கேஜ்ரிவால். “நேர்மையான அரசியல்” (Imandhar Rajneedhi) என்று அறிவித்தார். இந்தியாவில் அனைத்துக் கட்சிகளும் ஊழல் கட்சிகள் என்றார். வாரந்தோறும், பெரிய தலைவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழல் பட்டியல்களை வெளியிட்டார். காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆம் ஆத்மி கட்சியைப் பார்த்து அதிர்ந்து போனாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
2013 டெல்லி சட்டசபைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி ஒரு போட்டியே அல்ல. போட்டி காங்கிரஸ் மற்றும் பிஜேபி இடையேதான் என்று இரு கட்சிகளுமே பேசின. ஒரு அரசு அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்த அவர், ஒரு கைதேர்ந்த அரசியல்வாதிக்கு உரிய சாதுர்யத்தோடு அனைத்து விவகாரங்களையும் கையாண்டார்.
ஆம் ஆத்மி கட்சியின் ஆரம்பகால வளர்ச்சியின்போது, பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் என்ற இரண்டு மிகப்பெரிய அறிவுஜீவிகள் அவருக்கு துணை நின்றனர். நீண்டகால அரசியல் ஆய்வறிஞர் என்ற வகையில் யாதவின் பங்கு ஆம் ஆத்மி கட்சிக்கு பக்க பலமாக ஒரு புறம் இருந்ததென்றால், நீதித்துறை ஊழல் மற்றும் அரசியல் கட்சி ஊழல் என்று பல்வேறு முனைகளில் போராட்டத்தை முன்னெடுத்த பிரசாந்த் பூஷணின் பங்கு மற்றொரு வகையில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பலமாக அமைந்தது.
இந்துத்துவா மற்றும் வலதுசாரிகள், வெளிநாடுகளிலும், உள்நாடுகளிலும், பிஜேபிக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களிலும் இணையத்திலும் ஒரு பெரும் ஆதரவு முழக்கத்தை முன்னெடுத்த அதே நேரத்தில், அதற்கு சற்றும் குறையாத வகையில், பிஜேபியை நேரடியாக மோதி கலங்க வைக்கும் அளவுக்கு ஆம் ஆத்மிக்கான தொண்டர்கள் குவிந்தனர். வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆம் ஆத்மிக்காக ஒரு புறம் நிதி சேகரித்தனர் என்றால், வசதியான வேலைகளில் இருந்த பல்வேறு மென்பொறியாளர்கள், கார்ப்பரேட்டுகளில் பணியாற்றியவர்கள் ஆகியோர், தங்கள் வேலைகளைத் துறந்து தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
அறுபதுகளில், திராவிட முன்னேற்றக் கழகம் மொழிப்போரை முன்னெடுத்தபோதும், எழுபதுகளில், இந்திரா காந்திக்கு எதிராக ஜெய்பிரகாஷ் நாராயணன் இயக்கம் நடத்தியபோதும், சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தியின் அழைப்பை ஏற்று ஆதரவு குவிந்தபோதும் இருந்த ஆதரவு, ஆம் ஆத்மி கட்சிக்கு இருந்தது என்றால் மிகையாகாது.
அமெரிக்காவில் சிகாகோ நகரில் ஆம் ஆத்மி கட்சிக்காக வெளிநாடுவாழ் இந்தியர்கள் 18 மே 2013 அன்று நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் யோகேந்திர யாதவ் மற்றும் குமார் விஸ்வாஸ். அந்த மாநாட்டைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சிக்கு நிதி குவிந்தது. 2013 டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட முடிவெடுத்தபோது, இந்தியா முழுக்க குவிந்த தொண்டர்களின் ஆதரவை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இந்தியாவெங்கும் உள்ள தொண்டர்கள், குறிப்பாக ஊழலை ஒழிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள். ஆயிரக்கணக்கில் குவிந்தார்கள். டெல்லி பிரச்சாரம் களை கட்டியது.
ஆம் ஆத்மி கட்சியின் பலமே அதன் தொண்டர்கள்தான். விடுப்பு எடுத்து, சொந்தக் காசை செலவு செய்து, டெல்லி சென்று, நண்பர்கள் வீட்டில் தங்கி, வீடு வீடாக பிரச்சாரம் செய்தனர். அந்த பிரச்சாரமே, காங்கிரஸ் கட்சியை பின்னுக்குத் தள்ளி, இரண்டாவது பெரிய கட்சியாக டெல்லி தேர்தலில் வெல்ல உதவியது. 2013 தேர்தலில் 28 சீட்டுகளை ஆம் ஆத்மி கட்சி வென்றபோது, இந்தியாவே திரும்பிப் பார்த்தது. அந்த வெற்றி, இந்தியா முழுக்க ஒரு மாற்று அரசியலை தேடி அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரு ஊக்கமாக அமைந்தது.
ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு சிறப்பான அம்சம் என்னவென்றால், மற்ற கட்சிகளைப் போல தெளிவான கொள்கை அல்லது கோட்பாடுகள் எதுவும் இல்லாமல், ஊழல் எதிர்ப்பு என்ற ஒற்றை முழக்கத்தை வைத்து அரசியலை முன்னெடுத்ததே. இந்தியாவின் மோசமான அரசியல் சூழலை நெடு நாட்களாக கவனித்து மனம் வெதும்பி இருந்த பலரை, திரும்பிப் பார்க்க வைத்தது ஆம் ஆத்மி கட்சி. இதன் காரணமாகவே பலர் தங்களை ஆம் ஆத்மி கட்சியோடு இணைத்துக் கொண்டனர். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், இல்லாதவர்கள், அரசியலில் பல்வேறு கொள்கைகளை உடையவர்கள் என்று அனைவரும் பாரபட்சமின்றி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்கள். இந்தியாவின் சுதந்திர வேட்கைக்கு காந்தி எப்படி ஒரு முகமாக இருந்தாரோ, அது போலத்தான் ஊழல் எதிர்ப்பு என்ற இயக்கத்துக்கு கேஜ்ரிவால் ஒரு முகமாக இருந்தார்.
2013 தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு ஆட்சியமைத்தார் கேஜ்ரிவால். அந்த ஆட்சி அதிகாரமே அவரது மனதை மாற்றியிருக்கக் கூடும். அப்போது கேஜ்ரிவால் ஆட்சியில் இருந்தபோது, டெல்லி செல்ல நேர்ந்தது. பிப்ரவரி 2014. 2ஜி தொடர்பான உரையாடல்களை பிரசாந்த் பூஷண் வெளியிட இருந்த நேரம்.
முதல் நாள் பிரசாந்த் பூஷணிடம் இந்த உரையாடல்களை அளித்தபோது அவர் கூறியது,
நான் தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் எடுக்க முடியாது. எங்கள் கட்சியின் தலைமை செயற்குழுவோடு ஆலோசித்த பிறகுதான் முடிவெடுக்க முடியும். நீங்கள் டெல்லியிலேயே இருங்கள். நான் உங்களுக்கு தகவல் கூறுகிறேன்
என்றார். அன்று அவரோடு அமர்ந்திருந்தபோது, அவரது இளைய வழக்கறிஞரிடம் கேஜ்ரிவால் இருக்கிறாரா என்று கேட்பதற்கு பதிலாக “சிஎம் இருக்கிறாரா” என்றுதான் கேட்டார். அப்போதே, ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அன்று இரவு, பூஷண், உரையாடலை ஆம் ஆத்மி வெளியிட முடிவெடுத்து விட்டதாகவும், மறுநாள் காலை ஏழு மணிக்கு அலுவலகம் வருமாறும் கூறினார். அவர்கள் கட்சியின் தலைமைக் குழுவோடு விவாதித்து முடிவெடுத்த அந்த வடிவம் மிக சிறப்பாக இருந்தது. பிரசாந்த் பூஷண் ஒரு மூத்த வழக்கறிஞர் என்ற முறையில் அந்த உரையாடல்களில் இருந்தவை என்ன என்பது அவருக்கு நன்கு தெரியும். அவர் நினைத்திருந்தால், அவராகவே அந்த உரையாடல்களை யாரையும் கலந்தாலோசிக்காமல் வெளியிட்டிருக்க முடியும். ஆனால் அவர் கட்சியினரோடு கலந்தாலோசித்தே இதை செய்தார்.
அவரோடு பத்திரிக்கையாளர் சந்திப்பு தொடர்பான வேலைகளில் ஈடுபட்ட பிறகு மாலை 4 மணிக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு. தமிழகத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சியை பார்த்து வந்த காரணத்தால், இவர்கள் அனைவரும் ஒன்றாகத்தான் இருப்பார்கள் என்று ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு கேஜ்ரிவால் வரவில்லை. அவர் ஜந்தர் மந்தரில் நடந்த ஏதோ ஒரு வடகிழக்கு மாகாண மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்று விட்டார் என்று கூறினார்கள். 2ஜி டேப் வெளியீடு என்பது, ஆம் ஆத்மி கட்சியின் ஒரு பெருமையான தருணம். அதை ஏன் கேஜ்ரிவால் தவற விடுகிறார் என்று ஒரு எண்ணம் எழுந்தாலும் அப்போது அது குறித்து பெரிதாக எண்ணவில்லை. ஆனால், யோகேந்திர யாதவ் அந்த சந்திப்புக்கு வந்திருந்தார். பிரசாந்த் பூஷணோடு சேர்ந்து இறுதி வரை அமர்ந்திருந்தார். சந்திப்பு முடிந்ததும், ஒரு மாருதி காரில், மூன்று பேர் அமரும் இடத்தில் நான்கு பேரோடு அமர்ந்து சென்றார் யாதவ்.
அதன் பிறகு பாராளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டு அடைந்த தோல்விகள் அனைவரும் அறிந்ததே. அத்தோடு ஆம் ஆத்மி கட்சியின் வரலாறு முடிந்து விட்டது என்றே பெரும்பாலானோர் ஆருடம் கூறினர்.
ஆனால் 2015 டெல்லி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது ஆம் ஆத்மி கட்சி. 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றியது. இந்த தேர்தல் பிரச்சாரக் களத்தை நேரடியாக சென்று ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்தியாவெங்கும் வந்து குவிந்திருந்த தொண்டர்களில் பலரை சந்திக்க நேர்ந்தது. அவர்களிடம் குவிந்திருந்த ஆர்வம், துடிப்பு மலைக்க வைத்தது. ஏன் ஆம் ஆத்மி வெற்றியடையப் போகிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஒரு இளைஞன் வந்திருந்தான். அந்த இளைஞன் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி, கரோல் பாக் பகுதியில் நடந்த ஆம் ஆத்மி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஓடினான். அவனோடு சேர்ந்து ஓடுவதற்கே சிரமமாக இருந்தது. எதற்காக இங்கே வந்திருக்கிறாய் என்று கேட்டதற்கு, இது போன்றதொரு கட்சியை நான் பார்த்ததில்லை என்றான். இந்த கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டியது நமது கடமை என்றான். கூட்டம் முடிந்து மெட்ரோ ரயில்நிலையத்துக்கு திரும்புகையில் வழி நெடுக “பான்ச் சால் கேஜ்ரிவால் ” என்று கத்தியபடியே வந்தான்.
இப்படி பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இந்தியாவெங்கும் வந்து குவிந்திருந்தனர். அந்தத் தொண்டர்கள் தங்கள் சொந்தப் பணத்தில், தன்னார்வத்தோடு வந்திருந்தனர். மற்ற அரசியல் கட்சிகளைப் போல அவர்கள் பணத்துக்காக அங்கே வரவில்லை. முதன் முறையாக ஒரு மாற்று அரசியல் உருவாகியிருக்கிறது, இந்த அரசியலின் மூலமாக ஒரு நெம்புகோல் வைத்து, இந்தியாவை புரட்டிப் போடப் போகிறோம் என்று நம்பினர்.
ஆனால் இந்த ஆதரவுகளையெல்லாம் அரவிந்த் கேஜ்ரிவால் தனக்கான ஆதரவு என்று நம்பினார். 28 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றதுமே இந்த முடிவுக்கு கேஜ்ரிவால் வந்து விட்டார்.
2015ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதிலேயே சிக்கல்கள் தொடங்கின. தேர்தல் செலவுக்கு தேவையான நிதிகள் வந்து கொண்டிருந்ததால், நேர்மையான சிறந்த வேட்பாளர்களை நியமிக்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் கூறியதை அரவிந்த் கேஜ்ரிவால் துளியும் ரசிக்கவில்லை. இந்த தேர்தலிலேயே பிரசாந்த் பூஷணை ஏறக்குறைய கேஜ்ரிவால் ஓரங்கட்டினார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் தேர்தல் பிரச்சார சமயத்தில், கட்சிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது என்று அவர் எவ்விதமான குரலும் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் யோகேந்திர யாதவ் அந்தத் தேர்தலில் பம்பரமாக சுழன்று உழைத்தார். கட்சியின் முகமாக தொலைக்காட்சிகளில் தோன்றுவதும், ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதுமாக யாதவின் பணி மகத்தானது.
ஏற்கனவே இருந்த சிக்கல் 67 இடங்களை வென்றதில் பூதாகரமாக உருவெடுத்தது. ஏற்கனவே தன்னகங்காரத்தோடு இருந்த கேஜ்ரிவாலுக்கு இந்த வெற்றி முழுக்க முழுக்க தனக்கு கிடைத்த வெற்றி என்று எண்ண வைத்தது. அந்த எண்ணம் படிப்படியாக தன்னை எதிர்த்தவர்களை ஓரங்கட்டுவதிலும், தனக்கென்று ஒரு துதிபாடிகளின் கூட்டத்தை உருவாக்குவதிலும் சென்று முடிந்தது.
மாக்கியவல்லி வர்ணித்த அரசியல்வாதியின் சாதுர்யத்தோடு, யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷணை ஓரங்கட்டும் முயற்சியில் படிப்படியாக இறங்கினார் கேஜ்ரிவால். பதவியேற்பு விழாவின்போது பேசிய பேச்சிலேயே, மறைமுகமாக 2 மார்ச் அன்று, தனது சதுரங்கத்தின் மிக மிக ஆபாசமான ஒரு நகர்த்தலை நடத்தினார் கேஜ்ரிவால்.
“இந்த வெற்றி சிலருக்கு அகங்காரத்தை தந்திருக்கிறது. நாம் பல்வேறு மாநிலங்களில் விரிவடையப் போகிறோம் என்று கூறுகின்றனர்”
என்று பேசினார் கேஜ்ரிவால். தேர்தல் வெற்றியை ஒட்டி, பத்திரிக்கையாளர்களை சந்தித்த யோகேந்திர யாதவ்தான்
வேறு மாநிலங்களுக்கு விரிவாக்கம் செய்வது குறித்து யோசிப்போம்
என்று கூறினார். தனிப்பட்ட முறையில் ஒரு பத்திரிக்கையாளரோடு ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர் ஒருவர் நடத்திய உரையாடலை பகிரங்கமாக ஆக்கி, அதன் மூலம் யோகேந்திர யாதவை கட்சி விரோதி என்றும், ஆம் ஆத்மிக்கு எதிரானவர் என்ற பிம்பத்தையும் உருவாக்கினார். இணைப்பு இந்த செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியானதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள், யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை ஊடகங்களில் தொடர்ந்து கூறி வந்தனர். அமைதியாக இருந்த பூஷண் யாதவ் கூட்டணி ஒரு கட்டத்தில் பதில் தாக்குதலை தொடுக்கத் தொடங்கினர். இந்த சண்டை தெருச்சண்டையாகியது.
ஒரு கட்டத்தில் அரசியல் தலைமைக் குழுவைக் கூட்டி, அதில் இருந்து பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவை நீக்கினர். இந்த தெருச் சண்டைகள் அனைத்தும் நடக்கையில், அர்விந்த் கேஜ்ரிவால், பெங்களுரில் சிகிச்சைக்காக சென்றிருந்தார். இவை அனைத்தும் கேஜ்ரிவாலுக்கு தெரியாமல் நடந்தது போல ஒரு பிம்பத்தை அவர் உருவாக்க முயன்றாலும், அவை அனைத்துமே கேஜ்ரிவாலின் திட்டத்தின்படியே நடந்தது. தன்னுடைய அரசியல் எதிரிகளை பழிவாங்குவதில், நரேந்திர மோடிக்கு சற்றும் சளைத்தவர் அல்ல என்பதை கேஜ்ரிவால் நிரூபித்தார். தன்னை வளர்த்து எடுத்து நெருக்கடிகளில் காப்பாற்றிய அத்வானியை அரசியல் வானிலிருந்தே மறையச் செய்தவர்தான் மோடி. அதே போல, ஆம் ஆத்மி என்ற கட்சி இன்று ஒரு அரசியல் சக்தியாக உருவாகக் காரணமாக இருந்தவர்களை மலிவான தந்திரங்களின் மூலம் ஓரங்கட்டி விரட்டியடிப்பதில் கேஜ்ரிவால் தற்காலிகமாக வெற்றி பெற்றுள்ளார்.
இன்று நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் நடந்த சம்பவங்கள், கேஜ்ரிவால் எந்தவொரு மலிவான அரசியல்வாதிக்கும் சற்றும் சளைத்தவர் இல்லை என்பதையே நிரூபித்துள்ளது. ஒரு கட்சிக்கு லோக்பால் என்ற அமைப்பை உருவாக்கி, அதில் சமூகத்தில் அந்தஸ்து உள்ள அட்மிரல் ராமதாஸ் என்பவரை நியமித்து, அவர் இதற்கு முன்னர் நடந்த அனைத்துக் கூட்டங்களிலும் பங்கேற்ற நிலையில், இந்தக் கூட்டத்தில் அவரை அழைப்பதை தவிர்த்து, பூஷண் ஆதரவாளர்கள் என்று அறியப்பட்டவர்களை கூட்டத்துக்கு வர விடாமல் தடுத்து, பூஷண் மற்றும் யோகேந்திர யாதவை, தன்னுடைய ஆதரவாளர்களால் தள்ளு முள்ளுக்கு ஆளாக்கி, ஒழிக ஒழிக என்று கோஷமிட வைத்து, அவர்கள் இருவருக்கும் பேச வாய்ப்பே வழங்காமல், தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கியதன் மூலம், தான் ஒரு சராசரிக்கும் கீழான மலிவான அரசியல்வாதி என்பதை கேஜ்ரிவால் நிரூபித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி ஒரு மாற்று அரசியல் என்பதை நம்பி கேஜ்ரிவால் பின்னால் வந்தவர்களில் ஒருவரான போராளி மேத்தா பட்கர் இன்று கேஜ்ரிவால் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வெளியேறியுள்ளார்.
கேஜ்ரிவால் வாழ்க என்று இன்று துதிபாடுபவர்ளுக்கு மட்டுமே கட்சியில் இடம் என்பதை கேஜ்ரிவால் வெளிப்படையாக உணர்த்தியுள்ளார். கேஜ்ரிவால் பேசியதாக வெளியிடப்பட்ட உரையாடலில், அவர் சராசரிக்கும் கீழான மனிதர் என்பது அவர் பேசிய வார்த்தைகளின் மூலம் தெரிகிறது. தன்னை எதிர்த்து கேள்வி கேட்டவர்களின் மீது இப்படியொரு கோபம் இருக்கும் மனிதன் தன்னை மாற்று அரசியலின் வடிவம் என்று கூறிக் கொள்வதுதான் வேடிக்கை.
புரட்சித் தலைவி வாழ்க, மக்கள் முதல்வர் வாழ்க என்று கூவும் இந்தக் கூட்டத்துக்கும், கேஜ்ரிவாலின் அருகில் இருக்கும் கூட்டத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இந்தக் கூட்டத்தின் பலத்தால் எதையும் சாதிக்கலாம் என்று கேஜ்ரிவால் நினைத்தால் அவர் பகற்கனவு காணுகிறார். ஏழை மக்களின் கட்சி என்று செதுக்கி செதுக்கி உருவாக்கிய ஆம் ஆத்மி போன்ற கட்சியை தன்னுடைய துதிபாடிகளின் கட்சியாக மாற்றியதன் மூலம், இந்தியாவில் ஜனநாயகத்தை விரும்பும், ஜனநாயகத்தை நேசிக்கும் மக்களின் கனவை சிதைத்துள்ளார் கேஜ்ரிவால்.
ஆம் ஆத்மி கட்சி என்ற அற்புதமான கனவை மரணிக்கச் செய்துள்ளார் கேஜ்ரிவால்.
We don’t know what has really happened. Let us for the good thing which will sure happen for the people of Delhi who voted. We can hope for their unity.
Let us wait
கனவு மரணித்து விட்டது. யோக்கியனாக வேடம் போட்டவனெல்லாம் அயோக்கியனாகிவிட்டான். இனி யாரை நம்புவது?. வழிதெரியாமல் திகைத்து நிற்கும் இந்த சமுதாயத்துக்கு யார் வழிகாட்டுவார்?.
அயோக்கியரை உன்னால் எதிர்க்கமுடியுமா?. அவர்களிடம் பயங்கர ஆயுதங்களும், போலிசும், ராணுவமும் இருக்கிறது. எதிர்த்தால் உன்னை சுட்டுத்தள்ளுவர். தண்ணீரையும் உணவையும் தடுத்து நிறுத்தி பட்டினி போட்டு, அவர்களுக்கெதிராக ஒரு விரலைக்கூட உன்னால் அசைக்க முடியாதபடி ஒரே நாளில் செய்துவிடுவர். தேவைப்பட்டால் விஷவாயு குண்டுக்களை வீசை ஆயிரக்கணக்கில் கொல்வர். உன்னால் என்ன செய்யமுடியும்?.
உன்னுடைய வேதங்களும், கீதையும், ராமாயணமும், மஹாபாரதமும் ஏதாவது வழியை போதிக்கிறதா?. ப்ருந்தாவனத்திலே பொம்மனாட்டிகள் கூட்டத்திலே மதிமயங்கி கிடக்கும் கண்ணன் வந்து தருமயுத்தம் செய்வானா?. உன்னுடைய பொய்க்கடவுள்கள் அனைத்தும் கற்சிலைகளாய் சமைந்து நிற்கின்றன. நீ எவ்வளவு கதறினாலும் அவை அசையாது. என்ன செய்வாய்?.
தமிழனில்லாத நாடில்லை, தமிழனுக்கென்றொரு நாடில்லை:
சென்னையில் சீன நாட்டுக்கான துணை தூதரகம் விரைவில் அமைக்கப்படும் என்று இந்தியாவுக்கான சீனத் தூதர் லீ யுசென், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவித்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:
தமிழகத்தில் தொடங்கப்பட்ட பல அரசுத் திட்டங்களை சீனாவைச் சேர்ந்தவர்கள் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகமும், சீனாவும் இணைந்து செயல்படுவதற்கான ஆற்றல்களைப் பெற்றுள்ளன. மின்னணு வன்பொருள், அரைக் கடத்திகள், ஜவுளி, கனரக பொறியியல், ஆட்டோமொபைல், அதனுடைய உதிரி பாகங்கள், தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு ஆகியவை இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியமிக்க துறைகளாகும்.
———————-
பெங்களூரில் 30 வருடங்களாக வாழ்ந்து வரும் முருகேசன் என்பவரின் 8 வயது மகள் கேன்சர் நோயால் இறந்துவிட்டார். அந்த சிறுமியை அங்கே புதைக்க பெங்களூர்க்காரர்கள் அனுமதிக்கவில்லை. உனது நாட்டுக்கு எடுத்துச்செல் என விரட்டிவிட்டனர். கடைசியில் மனம் நொந்து போய் அவரது சொந்த ஊர் கிருஷ்ணகிரிக்கு எடுத்துச்சென்று இறுதிக்கடனை நிறைவேற்றினார்.
————————
“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்றார் பாரதியார். அவர் இன்று இருந்திருந்தால் “சீனாவுக்கொரு பாலம் அமைப்போம். தமிழனுக்கென்றொரு தேசம் எழுப்புவோம்” என பாடியிருப்பார். 65 வருடங்களாக பரதமாதா எனும் பிசாசுடன் இருந்து தமிழகம் என்ன சாதித்தது?. நதியுரிமை இழந்தது. கடலுரிமை இழந்தது. விவசாயம் அழிந்தது. மீன்வளத்தை நம்பி பிழைத்த லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அழிந்தது.
பட்டப்படிப்பு படித்துவிட்டு வெளியே சொன்னால் வெட்கக்கேடென்று சவூதியில் டாய்லட் கழுவி பிழைக்கிறான் தமிழன். இன்று தமிழகம் ஒரு பாலைவனமாக மாறிவருகிறது. இன்று தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் உதைதான் கிடைக்கிறது. எரியும் வீட்டில் பிடுங்கின வரை ஆதாயமென அம்மா, அய்யா, கொய்யாக்களெல்லாம் சேர்ந்து சுருட்டுகின்றனர்.
கேஜ்ரிவால் வந்து தமிழனைக் காப்பாற்றுவாரென மோட்டுவளையை பார்த்துக்கொண்டிருந்தால் அதைவிட மடத்தனம் உலகிலில்லை. அழுதாலும் புரண்டாலும் உன் பிள்ளையை நீதான் பெறவேண்டும். உனது சுமையை நீதான் தூக்கவேண்டும். கழற்றிவிடு பாரதமாதாவை. சீனாவின் பெடரேஷனாக தமிழகம் சேர்ந்தால், தென்னிந்தியா தமிழத்தின் பின்னால் ஓடிவரும். காவிரி பிரச்னை முடிந்தது. மீனவர் பிரச்னை முடிந்தது. ஈழத்தமிழர் பிரச்னை முடிந்தது. சிங்களன் வாலாட்ட மாட்டான். வறுமை ஒழிந்தது. தமிழன் தரணி ஆள்வான்.
I had a discussion with my china friend about this he said who ever written this he is bros… bloody don’t know about taivan, hongkon, thepet issues. is this correct?
omparathula china karan best aa ungalukku???
china budisit and srilangan budhist come together and kill all tamilan like srilanka tamilan. including this comment oompi
எல்லோருமே நல்லவர்கள் ஆனால் நீங்கள் சொன்னது போல் அறிவு ஜீவிகள் அதனால் ஈகோ வந்து விட்டது .அதனால்தான் நம் தமிழகத்தில் அறிவுஉள்ள யாரையும் விட்டு வைப்பதில்லை ஜால்ராவுக்கும் காலில் விழும் கபடவேடதாரிக்கும் மட்டும் தான் கட்சியில் இடம் உண்டு.
Shankar, you ruined your credibility , time to revamp your earlier posts.
Had a hope on your trustworthiness , now dubious….
கேஜ்ரிவாலும் ஒரு டுபாக்கூர்தானென்று ஆகிவிட்டால், இனி எந்த யோக்கியனையும் மக்கள் நம்ப மாட்டார். ஒவ்வொரு அரசியல்வாதியையும், போலிஸ்காரனையும், நீதிபதியையும் தெருவில் ஓடஓட மக்கள் விரட்டியடித்து கொல்வர். சமுதயாய நம்பிக்கை குலைந்துவிடும். உள்நாட்டுக்கலவரம் வெடிக்கும். வெகுவிரைவில் இந்தியா துண்டுதுண்டாக சிதறிவிடும்.
இந்திய அரசியல்வாதிகளின் சராசரி மனநிலை எப்படிப்பட்டது என்பதை ஆம் ஆத்மி விரிசல் சரியாக வெளிப்படுத்தியுள்ளது. இங்கு பிரசாந் பூஷண் யோகேந்திரநாத யாதவ் கேஜ்ரிவாலை விடவும் புனிதர்கள் என்று சொல்லுவதற்கில்லை. ஈகோ மட்டுமே முன்னிலை வகித்து தாறுமாறாக வெளிவந்திருக்கிறது. பிரசாந் பூஷண் மற்றும் யோகேந்திர நாத் இருவரும் ஒரே கருத்தை கொண்டவர்கள் என்று சொல்ல முடியாது கேஜ்ரிவாலை எதிர்ப்பதற்காக அவர்கள் ஒன்றாக நிற்கின்றனர், ஆம் ஆத்மியிலிருந்து பிரிந்துபோய் பிஜேபி வெட்பாளரான மலிவான கிரண் பேடியை முன்னர் ஆம் ஆத்மி முன்னிலையில் வைத்திருந்ததையும் நினைவுகூரவேண்டும். தமிழ்நாட்டில் இரண்டு வருடங்கள் மட்டுமே முதலமைச்சராக இருந்தபடியால் கருணாநிதி என்ற கரு முதலை அண்ணாத்துரையை புனிதராக காட்டி அரசியல் செய்கிறது அதே அண்ணாத்துரை இன்னும் இரண்டு அல்லது நான்கு வருடங்கள் அரசியலில் இருந்திருந்தால்
அண்ணாத்துரையை உதாரண புருஷராக எடுத்துக்காட்ட கருணாநிதியால் முடிந்திருக்காது. அன்று ஒரு தேச பக்தனைப்போல வேடம்போட்டு திமுகவை கைபற்றிய கருணாநிதி ஒரு சர்வாதிகாரியாக மாறியபின்னரும் தன்னை தமிழினத்தின் காவலன் என்று சொல்ல முடிகிறது அதை ரசிக்க ஒரு கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அரசியலில் இவையெல்லாம் சகஷம் அப்பா. என்பதுதவிர வேறொன்றுமில்லை ஏனென்றால் இது இந்தியா.
ஏனைய்யா ஊர்குருவி எதை சொல்வது என்றாலும் திமுக கருணாநிதிதானா இந்தியாவில் மாற்று சிந்தனை ஏற்படாத காரணமே தங்களை போன்ற சிந்தனாசிற்பிகளால் தான்
Time to move on from AAP for better accountability and democracy.
The ideal democracy should be where teachers teach in schools, doctors and nurses turn up at primary health centers and the benefits of government welfare schemes reach all intended beneficiaries regardless of their political affiliation, caste or religion. This will be through constant democratic engagement of political parties with the people in accordance with the Constitution of India. This is what the founding fathers at Independence wanted but alas it was to be utopia.
The current Indians accept the description of themselves as the world’s largest democracy with haste. India is, at best, a democracy in the making after 68 years of freedom. Those elected to serve become and behave like rulers or kings. Our leaders do not hold office. They come to power, wield it, arbitrarily and with scarce any opposition. Criminal cases get dropped against those in power, criminal cases get charged against those who question them. India follows a first past the post system of elections that makes it relatively easy for the likes of Kejriwal and Modi to grow delusions of grandeur. Had India followed proportional representation, power would not have gone to the head so easily for either Nehru-Gandhi family in the center or the dynasties in different states (The Karunanidhi Family, The Abdullah Family, The Thackeray Family, The K. Karunakaran Family, The Mukherjee Family, The Nandamuri Family, The Mishra Family, The Yadav Family to name a few) with the petty potentates who strut around as democratic leaders in state after state, demanding unquestioned obedience from their followers and adulation from those who crowd around when they hold court and pluck in masses when they throw out crumbs.
However, AAP was about alternative politics. It was the hope and aspiration of people whose voice was unheard. A group of brave, honest people was burning with the desire to bring justice to the common man and make sacrifices bigger than an individual’s own struggle against the corrupt society. Those who have studied politics and history know about phases and cyclic patterns of political fortunes. AAP is a new party and allowed insecurities to set in which manifested in compromises. To ask for transparency within is not wrong. If the party has to sustain on any of the standards it set for itself, the current leader must sit back and analyse and give back the ideals the party was set up for. A scrutiny of the people associated with the party need also to be made. AAP stood for not just transparent fund raising, but also internal democracy and institutional functioning.
Having tasted power, Kerjiwal wants a traditional Indian party, not the new standard in politics that AAP promised to be. Yogendra Yadav and Prashant Bhushan might not have wings growing from the back nor have musical instruments like the Gods, but they stand for the original, alternative political paradigm that AAP sought to create. Now that it is demonstrably clear that the outfit led by Arvind Kejriwal has moved out of that paradigm, they should waste no time in setting up another organization that embodies the values and aspirations that led to the creation of AAP. They should wish Kejriwal all success as they would wish and move on. This will also help them to gauge the mood of the people whether they want an accountable and democratic party or an autocratic one like the rest of the sewage and rubbish to which AAP is now currently associated with.
We very much appreciate the stand taken by Savukku to condole this undemocratic and autocratic behavior by AAP’s elected leader and we stand together in support of a totally democratic and accountable political system in India which will make its citizens to be the best among the world irrespective of their political affiliation, money, caste or religion.
தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு கேசரிவாலை மட்டும் காரணம் கூறமுடியாது. பிரசாந்த்பூசனும் யாதவும் சிறிது பொருத்திருக்கவேண்டும். இவரகளது ஈகோ பிரச்சினையே முக்கியகாரணமாக தெரிகிறது. சவுக்கின்்கட்டுரையில் சில விபரங்கள் வேண்டுமென்றே விட்டுப்போயிருக்கிறது. பிரசாந்தபூசன் யாதவ் அறிவு ஜீவிகளே. அதற்காக அவர்கள் கேசரிவாலை மட்டம்தட்ட்எண்ணியிருப்பது சரிஅல்ல. பொருத்திருந்து பார்பபோம்.
// ஆம் ஆத்மி கட்சி என்ற அற்புதமான கனவை மரணிக்கச் செய்துள்ளார் கேஜ்ரிவால்.//
————–
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
யோகேந்திர யாதவும் பிரசாந்த் பூஷணும் விலை போய்விட்டனரென்றே தோன்றுகிறது. நாறிப்போன இந்திய அரசியல் சாக்கடையை சுத்தம் செய்வது அவ்வளவு எளிதல்ல. கேஜ்ரிவால் தனது கொள்கையில் உறுதியாக இருக்கிறார். டெல்லியை இந்தியாவுக்கு ஒரு உதாரணமாக மாற்றிக்காட்ட துடிக்கிறார்.
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை பேசும் வாய்ச்சொல் வீரர்களை விட சொன்னதை செய்துகாட்டும் செயல்வீரர்கள் பன்மடங்கு மேல். இன்று இந்தியாவுக்கு தேவை ஒரு நேர்மையான சர்வாதிகாரி. அந்த நேர்மையான சர்வாதிகாரியாக கேஜ்ரிவால் உருவெடுத்தால், அது வரவேற்கத்தக்கதே.
நேர்மையான நல்லவர், சர்வதிகாரி அல்ல. பூசன், யாதவ் விலையாகி சோரம் போய்விட்டனர் என்ற நிலைப்பாடு சரியாக தெரியவில்லை. இவர்களுக்கும் ஏற்பட்டு இருக்கும் பிரச்னை சரி செய்யப்பட்டு மீண்டும் இணைந்து தொண்டுகள் செய்வார்கள். என்ன பிரச்னை என்பதை உணர்ந்து அதை சரி செய்ய ஊடகங்கள் முயலவேண்டும், பிரச்னையை வளர்ப்பதே ஊடகங்கள் என்றால் எப்படி சரி செய்வது, சவுக்கு போன்றவர்கள் மற்ற ஊடகங்கள் செய்வது போல் இதை ஊதி பெரிசாக்கி, அதற்கு அரசியல் சாயம் பூசி, கட்சியின் மீது மக்களிடம் அதிருப்தியை வளர்த்து, மீண்டும் சாத்தான்களை. வளர விட நினைக்கும் ஊடகங்களை போல் செய்யவேண்டாம். மோசமான தரமற்ற ஊடகங்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை. அதிர்ச்சியாக இருக்கிறது.
அர்விந்த் ஒரு பீனிக்ஸ் பறவை. இந்த அக்னி குண்டத்தில் இருந்து மீண்டு எழுந்து விஷ்வ ரூபனாக வெளிப் படுவார்.எங்கள் முழு நம்பிக்கை அவருக்கு அந்த பலத்தை கொடுக்கும்.இன்று சோரம் போனவர்களின் பின்னால் செல்பவர்கள் நாளை இதே குற்றத்தை ,அதாவது, தன்முனைப்பு எனப்படும் அஹங்காரத்தை அங்கும் காண நேரிடும். அர்விந்த் ஒரு ஆக்சன் ஹீரோ.நாங்கள் அவரிடம் எதிர் பார்ப்பது ஒரு அரசியல் புரட்சியைத் தானே தவிர ஆண்டோ லன் அமைப்பை அல்ல. அதை செய்வதற்கோ, செய்வதாகச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றி உலையில் போடுவதற்கோ இந்த நாட்டில் பல்வேறு அமைப்புக்கள் உள்ளன.இந்த மாபெரும் அரசியல் புரட்சியில் சவுக்கும் தன்னை இணைத்துக் கொள்ளலாம் குற்றவாளிகளை .மன்னிப்பது ஒருவகை.வதம் செய்வது மற்றொரு வகை. இரண்டையும் india ஏற்றுக் கொண்டுள்ளது ,.நாங்கள் சட்டப் படி வதம் செய்யும் வகை. அரசியல் சட்ட அமைப்பில் உள்ள ஓட்டைகளை அடையாளம் கண்டு ,இனியொரு விதி செய்வோம் அதை எந் நாளும் காப்போம்.இது அர்விந்த் தலைமையில் மட்டுமே சாத்தியம்.கட்சிக்கு உள்ளேயே இருந்து கொண்டு கட்சி நடவடிக்கைகளை சீர்செய்ய முயல்பவனே உண்மையான கொள்கை யாளன்.கட்சிக்கு துரோ கம் இழைப்பவர்களை நம்பி கட்சியை விட்டு வெளியேறுபவர்கள்,நாளை திரிசங்கு சொர்க்க நிலைக்கு தள்ளப் படலாம். பூஷனின் குடும்பத்தாரின் சதிகளுக்கும் மாறாக,ஆம் ஆத்மிகட்சி பெற்றுள்ள மாபெரும் வெற்றியின் கிரெடிட் அனைத்தும் எங்கள் தலைவனின் வழிநடத்தலையும் அவரது தீர்க்கமான முடிவுகளையுமே சாரும்.we dontknow y THIS YY JOINED DIS BUSHAN GROUP . HE IS NOT AN EGOIST LIKE BUSHAN .BUT WHY..?.THOUGH BUSHAN IS A GOOD GENIUS ,I CANT DENY THAT HE IS AN EGOIST HE HAS NO ABILITY TO LEAD .IDEOLOGY LOVERS,TO SUCH A POLITICAL REVOLUTION AS THAT OF ARVIND. SOON BUSHAN WILL PROVE HIS PROPOSED MOVEMENT TO BE AN ABORTION. WE TRUST ARVIND AND ALSO HIS DECISIONS. பூஷன்தேரைத் தெருவில் இழுத்து, விட்டு விட்டு ஓடப் போகிறார் .JAI HIND!-MISSION SAVE INDIA!
ayyo pavam. ippo nee thangara ramodoss trouser ennaikku kilya pogutho??
தங்களது கட்டுரையும் ஓருசார்பாக தான உள்ளது பூஷன் குடும்பத்தினர ஆம் ஆத்மி கட்சிக்கு செய்த தொண்டுகளை http://www.scroll.inல் கட்டுரையாகவே வந்துள்ளது.சாந்ததி பூஷன்(பிரசாந்தின் தந்தை)தேர்தல் சமயத்தில் கிரன்பேடி கேஜ்ரிவாலைவிட சிறந்தவ அவரை ஆதரிக்கிறேன் என்று சொனனது பிரசாந்த் இத்தேர்தலில் டெல்லியில் கண்டிப்பாக ஆம்ஆத்மி தோற்று அரவிந்திற்கு ஓரு பாடம் கற்பிக்கவேண்டும் என சொன்னது பிரசாந்தின் சகோதரி வெளிநாட்டு இந்தியர்களுக்கு அனுப்பிய இமெயில்கள் யோகேந்திராயாதவ் அரவிந்தை நீக்கிவிடவேண்டும் என பத்திரிக்கையாளரிடம் தனிபட்டமுறையில் சொன்னது இவ்வளவும் செய்து விட்டு இன்று ஜெயிதத உடன் பிளேட்டை திருக்கி போடுவது யார் அரவிந்த்தா அல்லது இவர்களா இதே இவ்வாறு ஜெயிககாவிடில் என்ன நடந்திருக்கும் என நினைத்து பாருங்கள் பொதுவாக இந்திய மீடியாக்கள் செய்த தவற்றினையே தாங்களும் செய்வது மிக வேதனையளிக்கிறது ஆம்ஆத்மி டெல்லி தலைவர் அதுலோஷ் அவரகளின் யாதவிற்கு அனுப்பிய ஓப்பன் கடிதத்தை அவரது டிவிட்டரில பாருங்கள் இந்த நாட்டின் தலையெழுத்து நல்லவர்கள் யாரவது நல்லது செய்யபுறப்பட்டால் அதனை அழிப்பது தான் வாழ்க வளமுடன்
நன்றி முகில் அவர்களே. இவர்களின் உறவில் என்ன சிக்கல்கள் நிகழ்ந்தன என்று புரிய வைத்து உண்மையை வெளிப்படுத்தி உணர வைத்து உள்ளீர்கள். இனி திரு. சவுக்கு அவர்கள் ஆம் ஆத்மியின் சிறப்புகளை உணர்த்து எழுதுவார்.
கேஜ்ரிவால், இந்தியாவின் சொந்தக்காரர்களாக இருக்கும் டாட்டா, பிர்லா, அம்பானி, காங்கிரஸ், பா.ஜ.க போன்ற மாபியாக்களின் அடித்தளத்தை அசைக்க ஆரம்பித்துவிட்டார். இவர்கள் சும்மா விடுவார்களா?. ஒன்று கூடி போட்தள்ள முடிவு செய்து விட்டார்கள். ஒன்றுமே முடியாவிட்டால், ஒரு கட்டத்தில் விமானவிபத்தில் கேஜ்ரிவாலின் கதையை முடித்துவிடுவர்.
————–
குருட்டாம்போக்கில் பேசுவதை விட, பதவியேற்றது முதல் இந்த கேஜ்ரிவால் என்ன செய்து கிழித்தார் என்பதை பார்ப்போம்.
AAP achievements – ஆம் ஆத்மி கட்சியின் சாதனைகள்:
1) Removal of red beacons and end of VIP culture.
கார்கபோட்தள்ள முடிவு செய்து விட்டார்கள். ஒன்றுமே முடியாவிட்டால், ஒரு கட்டத்தில் விமானவிபத்தில் கேஜ்ரிவாலின் கதையை முடித்துவிடுவர்.ளில் சிவப்பு சுழலொளி விளக்கு தடைசெய்யப்பட்டது.
கேஜ்ரிவால், இந்தியாவின் சொந்தக்காரர்களாக இருக்கும் டாட்டா, பிர்லா, அம்பானி, காங்கிரஸ், பா.ஜ.க போன்ற மாபியாக்களின் அடித்தளத்தை அசைக்க ஆரம்பித்துவிட்டார். இவர்கள் சும்மா விடுவார்களா?. ஒன்று கூடி
2) Electricity rates reduced by 50% for up to 400 units of consumption
400 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் உபயோகித்தவர்களுக்கு மின்கட்டணம் பாதியாக குறைப்பு.
3) 20,000 litres of free water per month per connection
டெல்லியில் உள்ள வீடுகளுக்கு மாதம் 20,000 லிட்டர் இலவச குடிநீர் திட்டம்.
4) 300+ night shelters for the homeless established
வீடில்லாத ஏழைகள் இரவு நேரத்தில் உறங்க, 300+ ஓய்வு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
5) CAG audit of power discoms ordered
மின்சாரம் சப்ளை செய்து கொள்ளை லாபம் அடிக்கும் கம்பெனிகளின் CAG தணிக்கை ரிப்போர்ட் வெளியிட உத்தரவு.
6) In Delhi Jal Board, 800 employees transferred, 3 suspended for corruption
டெல்லி தண்ணீர் வாரியத்தில் வேலை செய்யும் 800 பேர் இடமாற்றம். 3 பேர் சஸ்பெண்ட்.
வீடில்லாதவர்கள் இரவில் தூங்க 300+ இலவச விடுதிகள்.
7) Anti-corruption helpline 1031 started
ஊழலுக்கெதிரான அவசர உதவி டெலிபோன் எண் 1031 தொடங்கியது.
8) Nursery admission helpline started
நர்சரி பள்ளி அட்மிஷன் அவசர உதவி டெலிபோன் தொடங்கியது.
9) Awarded Rs. 1 crore to family of police constable who died fighting the liquor mafia
கள்ளச்சாராய பெருச்சாளிகளை எதிர்த்து போராடி உயிரிழந்த நேர்மையான போலிஸ் அதிகாரியின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கப்பட்டது.
10) Inspection of 500+ govt schools by volunteers completed
500+ அரசாங்க பள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
11) 36000 contract jobs were made permanent which benefited around 1,80,000 people
36000 ஒப்பந்த வேலைகள் நிரந்தரமாக்கப் பட்டதால், 180,000 பேர்களின் பணி நிரந்தரமாக்கப் பட்டுள்ளது.
————
Following are the Helpline Numbers and Office Schedules of all Delhi MLA’s. You can get in touch with them directly to register your Grievance or suggestions.
உங்கள் தொகுதி எம்.எல்.ஏவை எங்கே சந்திப்பது?.
http://delhi.aamaadmiparty.org/aap-delhi-mlas-schedule
———–
கேஜ்ரிவால் சொன்ன பெரிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டார். டெல்லி மக்கள் சந்தோஷமாக உள்ளனர். இவரைப்பார்த்து ஜெயலலிதா, கருணாநிதியெல்லாம் வெட்கப்பட வேண்டும்.
அற்புதம். அரசு பள்ளிகள் சிறந்து விளங்க பாடு படும் உன்னத தலைவர் வாழ்க. திரு சவுக்கு அவர்களே இந்த உன்னத செயல்களை இதை எப்படி நீங்கள் எழுதாமல் தவிர்த்தீர்கள் என்பது கேள்விகுறி , ஒரு வேலை ஜெயலலிதா, சசிகலா ,இளவரசி, கருணாநிதி, நீதி துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் செய்யும் அநியாங்களை எழுதி உங்கள் மூளையின் செல்களில் வெளிச்சம் இல்லாமல் ஆகிவிட்டது என நினைக்க தோன்றுகிறது. கல்வி பணியில் தனியார்களை அனுமதிப்பதும் பெற்ற தாயை தகப்பனும், பிள்ளைகளும் சேர்ந்து விபச்சாரத்திர்க்கு அனுப்பி சம்பாதித்து வயிற்றை வளரபது போன்ற செயலே. மிக ஒழுக்க கேடான, அருவருப்பான தனியார்களின் அராஜக கல்வி சாம்ராஜ்யத்தை திறமையாக அழித்து அரசு பள்ளிகளை உயர்த்தி ஏழை, எளிய , நடுத்தர மக்களை ஏற்ற தாழ்வு இல்லாமல் தரமான அனைவருக்கும் சமமான கல்வியை தரும் உன்னத செயல் எப்படி சவுக்கு அவர்களே உங்கள் கவனத்திற்கு கொண்டு வராமல் போனது. சரி மீண்டும் ஒரு சிறந்த கட்டுரை ஆம் ஆத்மியின் உன்னத பணிகளை தெளிவாக எழுதி தமிழக அரசியலை மாற்ற முயலுங்கள்.
நன்றி சத்யம் அவர்களே. ஆம் ஆத்மியின் அற்புதமான திறமையான ஆட்சியை புரியவைத்தமைக்கு நன்றி. சவுக்கு அவர்கள் நிறைய அநியாயங்களை பார்துல்ளதால் இந்த பிழை நேர்ந்து விட்டதாக கருதுகிறேன். இதை தவிர்க்க சில நாள் சாதனையாளர்களின் சாதனைகளையும் எழுதினால் மூளையின் வேலை சிறப்பாக இருக்கும்.
“ஒரு கட்டத்தில் அரசியல் தலைமைக் குழுவைக் கூட்டி, அதில் இருந்து பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவை நீக்கினர்.” – இந்த அரசியல் தலைமை குழுவை மீண்டும் கூட்டி இவர்களை சேர்த்துக்கொண்டு கட்சியை செம்மை படுத்தவேண்டும். அந்த இக்கட்டான ஒற்றுமையை குலைக்கும் கட்டம் மாறவேண்டும். இவர்கள் மேல் என்ன குற்றச்சாட்டு உள்ளது, அதை தெளிவாக்கி, அந்த குற்றச்சாட்டுகள் நீங்க பாடுபடவேண்டும். இவர்களை போன்ற மேலும் பல நல்லவர்களை சேர்த்துக்கொண்டு கட்சி பலம் பெறவேண்டும்.
ஒரு கட்டத்தில் அரசியல் தலைமைக் குழுவைக் கூட்டி, அதில் இருந்து பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவை நீக்கினர். இந்த அரசியல் தலைமை குழுவை மீண்டும் கூட்டி இவர்களை சேர்த்துக்கொண்டு கட்சியை செம்மை படுத்தவேண்டும். அந்த இக்கட்டான ஒரு கட்டம் மாறவேண்டும். இவர்கள் மேல் என்ன குற்றச்சாட்டு உள்ளது, அதை தெளிவாக்கி, அந்த குற்றச்சாட்டுகள் நீங்க பாடுபடவேண்டும். இவர்களை போன்ற மேலும் பல நல்லவர்களை சேர்த்துக்கொண்டு கட்சி பலம் பெறவேண்டும்.
ஏமாற்று கட்சி, ஊழல் கட்சிக்கு மாற்றே இல்லையா என்று ஏங்கிக் கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்தினரின் கனவாக உருவானதே ஆம் ஆத்மி கட்சி. ஆம் ஆத்மி கட்சி பெற்ற மிகப் பிரம்மாண்டமான ஆதரவு என்பது, இந்திய சமூகத்தில் நியாய உணர்வு மிக்க அனைவரையும் நம்பிக்கை கொள்ள வைத்த ஒரு விஷயம். தெளிவாக என்னை போன்றவர்களின் உணர்வுகளை இந்த கட்டுரையில் பதிவு செய்துள்ள போதிலும், இரண்டு அறிவு ஜீவிகள், கட்சியை வளர்த்தவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் என்ற செய்தி நடுத்தர வர்கத்தினரை எந்த அளவு பாதிக்கும்னு, வாழ்கையில் ஏமாற்றம் பல சந்தித்து விரக்தியில் வாடுபவர்களுக்கு நம்பிக்கை தரும் கட்சியாக உள்ள நிலையில் ஏழை மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் மீண்டும் இவர்கள் சேர்ந்து கட்சியை, இயக்கத்தை வளர்க்கவேண்டும் என்று வேண்டிகொள்கிறேன். என் வேண்டுதல் நிறைவேற வேண்டும். ஆக்கபூர்வமாக மீண்டும் இவர்கள் இயக்கத்தில் ஒன்று சேர்ந்து செயல்பட என்ன செய்யலாம் என்பதை ஒரு கட்டுரையாக தரவேண்டும். உடல் உழைப்பு, கருத்து பகிர்தல், நேரில் சந்தித்து விண்ணப்பித்தல், சம்பந்த பட்டவர்களுக்கு ஈமெயில் மூலம், சமூக வலைபக்கத்தில் எழுதுவதன் மூலம் மீண்டும் ஒன்றிணைய வற்புறுத்தல்கள் போன்று ஆக்கபூர்வமாக எனென்ன செய்யவேண்டும் என்றும், இந்த இயக்கத்தை தமிழகத்தில் வளர்த்து ஊழலை ஒழித்து, ஊழல் அரசியல் வாதிகள் சொத்தை பறிமுதல் செய்து தமிழகத்தை வளமாக்க எனென்ன செய்யவேண்டும் என்று தெளிவாக,ஆழமாக ஒரு கட்டுரை தாருங்கள்.
நிறைய அறிவாளி கள் ஒரே இடத்தில் குழுமியிருக்க முடியாது ஒருவேளை இது கூட பிரச்சினை யாக இருக்கலாம்
நிறைய அறிவாளிகள் ஒன்றிணைந்து நம் தேசத்தை காக்கவேண்டும். தேசம், மக்கள் நலம், ஊழல் ஒழிப்பு, நேர்மை, ஊழல் சொத்து பறிமுதல் ஆகியவை மட்டுமே நோக்கமாக கொண்டு வேறு பிரச்னைகளை சற்று ஒதுக்கிவைத்து மீண்டும் ஒன்றிணைய வேண்டும்.இதற்கு நம்மால் ஆன செயல்களை செய்யவேண்டும்.
வேறெங்காவது வெளிச்சக்கீற்று தெரிகிறதா என்று பார்ப்போம்/// நாட்டு நலனை பற்றி சிந்திப்போர் நாசமாய் போவது உறுதி
ஒரு சார்பான கட்டுரை. பிரஷாந்த்பூஷன் தேர்தலில் ஒரு வேலையும் பார்க்கவில்லை. இப்பொழுது இவர்கள் வைக்கும் கோரிக்கைகளை கேஜ்ரிவால் ஏற்றுக்கொண்டால் தில்லியில் சொன்னது போன்ற ஆட்சியை தர முடியாது. கட்சியில் தினம் நடக்கும் பஞ்சாயத்தை சரி செய்யவே நேரம் போதாது. இவர்களின் செயல் பொறாமையின் வெளிப்பாடுதான்.
வலிக்கும் உண்மை
good story…
உண்மை . வலிக்கும் உண்மை . வருத்தப்படத்தான் முடியும் . வேறென்ன செய்ய முடியும் ? மறுபடியும் காத்திருப்போம் எங்காவது வெளிச்சக்கீற்று தோன்றுகிறதா என்று .
ஒன்று சேர வேண்டுவோம், வெளிச்ச கீற்று வர நம்மால் ஆன வேலைகளை செய்வோம். ஒன்றிணைவோம், ஒன்றாக இணைந்து நம் ஆற்றல்களை செம்மைபடுத்தி நல்லவர்களை ஒன்றாக செயல்படவைத்து, தீமை உணர்வை மங்க செய்து, நன்மைகளை பேணுவோம். நம் ஆற்றல் ஒன்றிணைவதன் மூலம் எல்லை அற்றதாக ஆகட்டும். வலிமையான, தூய்மையான பாரதம் ஆக பாடுபடுவோம். ஒற்றுமையின் பலனை ஒருங்கிணைப்போம்.