சென்ற கட்டுரையில், இந்த வழக்கு பல விசித்திரமான நீதிமன்றங்களை சந்தித்திருக்கிறது என்பதைப் பார்த்தோம். இணைப்பு
அப்படியொரு விசித்திரமான நீதிமன்றம்தான், நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், மற்றும் எஸ்.ஏ.போப்டே அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு.
மே 2013ல், கர்நாடகாவில் தேர்தல் நடந்து முடிந்து, காங்கிரஸ் தலைமையிலான புதிய ஆட்சி வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் நியமனம் செய்யப்பட்டிருந்த பவானி சிங் குறித்து ஆய்வு நடந்தது. அந்த ஆய்வில், கர்நாடக அரசு அனுப்பியிருந்த நான்கு வழக்கறிஞர்களின் பெயரை நிராகரித்து விட்டு, அப்போதைய கர்நாடக நீதிபதி, தானாக ஒரு பெயரை தேர்ந்தெடுத்து பவானி சிங்கை நியமனம் செய்தார்.
இதற்கும் ஒரு சுவையான பின்னணி இருக்கிறது. டிசம்பர் 2012ல், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த விக்ரம்ஜித் சென், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தவர், சமீபத்தில் ஓய்வு பெற்ற மஞ்சுநாத். இந்த மஞ்சுநாத் தான், கர்நாடக அரசு அனுப்பிய நான்கு வழக்கறிஞர் பெயர்களையும் நிராகரித்து விட்டு, அவராக ஒரு பெயரை – பவானி சிங்கை தேர்ந்தெடுத்தது. 😼
இதற்கு நடுவே, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை, 23 ஆகஸ்ட் 2013 அன்று இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியை மீண்டும் மறு விசாரணை செய்ய வேண்டும் என்று ஒரு மனுவை தாக்கல் செய்கிறது. புலன் விசாரணை அதிகாரியை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட அந்த மனு, வழக்கை குழப்புவதற்காக என்பதை உணர்ந்த கர்நாடக அரசு, 26 ஆகஸ்ட் 2013 அன்று பவானி சிங்கை நீக்கி உத்தரவிடுகிறது. பவானி சிங்தான் என்னை விசாரிக்கும் அரசு வழக்கறிஞராக இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தை அணுகுகிறார். 🙆 அந்த மனுவில், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை கலந்தாலோசிக்காமல், பவானி சிங் நீக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா கூறினார். 30 ஆகஸ்ட் 2013 அன்று கர்நாடக இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிடுகிறது.
பழைய உத்தரவை திரும்ப பெற்றுக் கொண்ட கர்நாடக அரசு, 10 செப்டம்பர் 2013, பவானி சிங்கை ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து நீக்கி மீண்டும் ஒரு உத்தரவை பிறப்பிக்கிறது. இந்த உத்தரவுக்கு கர்நாடக தலைமை நீதிபதி தனது 14 செப்டம்பர் 2013 நாளிட்ட கடிதத்தின்படி சம்மதத்தை தெரிவிக்கிறார். இந்தக் கடிதத்தை அடிப்படையாக வைத்து, பவானி சிங் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து நீக்கப்படுகிறார் என்று 16 செப்டம்பர் 2013 அன்று மீண்டும் ஒரு உத்தரவை பிறப்பிக்கிறது கர்நாடக அரசு.
கர்நாடக தலைமை நீதிபதி பவானி சிங் நீக்கத்துக்கு ஏன் சம்மதித்தார் என்றால், தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் வகேலா, மார்ச் 2013ல், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்கிறார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்காக ஆஜராகி வாதாடியது யார் தெரியுமா ? தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் யுயு.லலித்.
இது மட்டுமன்றி, ஜெயலலிதா தாக்கல் செய்த இன்னொரு மனுதான் வேடிக்கையானது. இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் பெங்களுரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா, வரும் செப்டம்பர் 2013ல் ஓய்வு பெறுகிறார். புதிய நீதிபதி வந்தால், அவர் இந்த வழக்கை படித்துப் பார்த்து புரிந்து கொள்ள மிகுந்த கால அவகாசம் ஆகும். இந்த வழக்கில் குற்றவாளிகள் நீண்ட நாட்களாக இந்த வழக்கை சந்தித்து வருகிறார்கள். இதனால் இந்த வழக்கு தாமதமில்லாமல் முடிவதற்கு ஏற்ப, 30 செப்டம்பர் 2013 அன்று ஓய்வு பெறும் நீதிபதி பாலகிருஷ்ணாவே தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்கும் வகையில் பாலகிருஷ்ணாவுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பதே அந்த மனு. 👷
இப்படியொரு மனுவை நீங்களோ, நானோ, அல்லது வேறு யாரோ ஒரு சாதாரண குற்றவாளி தாக்கல் செய்தால் என்ன ஆகியிருக்கும் ? ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்திருப்பார்கள். ஆனால் இந்த இரண்டு மனுக்களையும் விசாரித்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். இது விசித்திரமான நீதிமன்றமா இல்லையா ?
அந்த தீர்ப்பில் இவ்வாறு கூறுகிறார்கள் நீதிபதிகள்
“The learned Judge examined 99 defence witnesses and 384 defence exhibits were marked before him. The defence concluded its argument before the learned Special Judge and SPP commenced the final arguments on 23.8.2013. He was interrupted abruptly as on 26.8.2013, the SPP was asked not to continue with the work. The evidence led in the case is very bulky as it runs into 34000 pages. In case a new Judge starts hearing the matter, he is bound to take a long time to understand the factual and legal niceties involved in the case. Accordingly, we have no hesitation in holding that the Notification purporting to revoke the appointment of Shri G. Bhavani Singh as SPP is liable to be struck down.”
அந்த நீதிபதி, ஏற்கனவே 99 எதிரித் தரப்பு சாட்சிகளையும், 384 எதிரித் தரப்பு ஆவணங்களையும் பார்த்துள்ளார். எதிரித் தரப்பு இறுதி வாதத்தை தொடங்கி முடித்து விட்டது. அரசு வழக்கறிஞரும் (பவானி சிங்) தனது இறுதி வாதத்தை தொடங்கி விட்டார். ஆனால் திடீரென்று 26 ஆகஸ்ட் 2013 அன்று அவரை இனி இவ்வழக்கில் ஆஜராக வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆவணங்கள் 34 ஆயிரம் பங்கங்களை தாண்டுகின்றன. ஒரு புதிய நீதிபதி இதை விசாரிக்கத் தொடங்கினால் அவர் இந்த வழக்கின் நுணுக்கங்களை புரிந்து கொள்ளவே பல காலம் ஆகும். இந்த அடிப்படையில், பவானி சிங் நியமனத்தை வாபஸ் பெற்ற, கர்நாடக அரசின் உத்தரவை, ரத்து செய்கிறோம்.”
நீதிபதிகளுக்கு என்ன கவலை பார்த்தீர்களா ? ஒரு குற்றவாளி, தனது வழக்கில், இவர்தான் அரசு வழக்கறிஞராக வேண்டும், இவர்தான் நீதிபதியாக இருக்க வேண்டும் என்று ஒரு வழக்கு போடுகிறார். மங்குணிப் பாண்டியர்கள் அதையும் விசாரித்து ஒரு தீர்ப்பு சொல்கிறார்கள் என்றால் இது விசித்திரமான நீதிமன்றமா இல்லையா ? 😊😊😊
பவானி சிங் நியமனத்தை ரத்து செய்ததோடு நிற்கவில்லை. ஜெயலலிதாவின் வழக்கறிஞர், அரசியல் சாசனப் பிரிவு 142ஐ பயன்படுத்தி, இவ்வழக்கில் தாமதமில்லாமல் தீர்ப்பு வழங்க, நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக்காலத்தை 30 செப்டம்பர் 2013க்கு பிறகு இவ்வழக்கு முடியும் வரை நீட்டிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் சேகர் நாஃபடே வாதிட்டார்.
கர்நாடக அரசு சார்பாக வாதிட்ட, மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் வாகன்வதி, அரசியல் சாசனப் பிரிவு 142ன் படி, ஒரு நீதிபதியின் பதவியை நீட்டிக்குமாறு உத்தரவிட உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார்.
இதற்கு நீதிபதிகள்…
We do not intend to say that it would be illegal to extend the term of the special judge, but that it is a matter within the jurisdiction of the State in accordance with the relevant law.
ஒரு சிறப்பு நீதிபதியின் பதவியை நீட்டிக்க உத்தரவிடுவது சட்டவிரோதம் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், இதற்கென உள்ள சட்டங்களின் படி, சம்பந்தப்பட்ட மாநில அரசுதான் இதற்கான முடிவை எடுக்க வேண்டும்.
…இத்தோடு அந்த லகுட பாண்டிகள் நிற்கவில்லை.
Karnataka Judicial Service (Recruitment) Rules 2004 என்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பான விதிகளை குறிப்பிட்டு, ஒரு நீதிபதி ஓய்வு பெற்ற பிறகு அவரை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் நியமிக்க இந்த விதிகளில் இடமிருப்பதால், நீதிபதி பாலகிருஷ்ணாவின் பணி நீட்டிப்பை பொருத்தவரை, அந்த முடிவை கர்நாடக அரசே எடுக்கலாம் என்று தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2013.
அப்போது சென்னை தலைமைச் செயலக வட்டாரங்களில் பேசப்பட்ட பேச்சு என்ன தெரியுமா ? ஜெயலலிதா சார்பாக நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்ட தொகை 100 கோடி என்றும், பவானி சிங்குக்கு வழங்கப்பட்ட தொகை 50 கோடி என்றும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. 😷😷😷😷😷
என்ன காரணத்தாலோ, இந்த வழக்கில் பணி நீட்டிப்பில் நீதிபதியாக தொடர்வதற்கு, பாலகிருஷ்ணா மறுப்பு தெரிவித்து விட்டார். இதையடுத்து, தலைமை நீதிபதி வகேலா பரிசீலித்து தேர்ந்தெடுத்த நீதிபதிதான் மைக்கேல் டி குன்ஹா. மைக்கேல் குன்ஹா நியமிக்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2013. ஆனால் அவரால் தீர்ப்பு வழங்க முடிந்த நாள் 27 செப்டம்பர் 2014.
உச்சநீதிமன்றம் சென்று, நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும், அவர் ஓய்வு பெற்று விடுவார். இவ்வழக்கில் குற்றவாளிகள் மிக மிக நீண்ட காலமாக இவ்வழக்கை சந்தித்து வருகிறார்கள். விரைவான விசாரணை என்பது, ஒருவரது அடிப்படை உரிமை என்றெல்லாம் வாதாடிய ஜெயலலிதா, கிட்டத்தட்ட ஒரு வருடம் இந்த வழக்கை இழுத்தடித்திருக்கிறார். இப்படி இவர் இழுத்தடிப்பதற்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்தவர் யார் தெரியுமா ? பவானி சிங். 😎
பெங்களுரு வழக்கில் இறுதி வாதங்கள் தொடங்க இருந்தது. தொடங்கும் நேரத்தில், பவானி சிங் “எனக்கு உடல் நிலை சரியில்லை. என்னால் இறுதி வாதங்களை தொடர முடியாது” என்று கூறினார். நீதிபதியும், இரண்டு முறை பொறுத்துப் பார்த்தார். மூன்றாவது நாள் அதே காரணத்தை கூறியதும், எரிச்சலடைந்த நீதிபதி, பவானி சிங்கின் ஒரு நாள் ஊதியமான 65 ஆயிரத்தை அபராதமாக விதித்தார். இணைப்பு
அப்போதும் சிங் வரவில்லை. மறுநாள் மீண்டும் ஒரு 65 ஆயிரத்தை அபராதமாக விதித்ததும், பவானி சிங் நீதிமன்றம் வந்தார். வந்து இரண்டு வார்த்தைகள் பேசி விட்டு, மயக்கமடைந்ததைப் போல உட்கார்ந்து கொள்வார். பிறகு, அவரது உதவியாளர் வாதிட்டார். தனக்கு 65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றார் பவானி சிங். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா, பவானி சிங்கின் தகிடுதத்தங்கள் முழுமையையும் அறிந்து, விரிவான ஒரு தீர்ப்பை வழங்கினார்.
“இந்த வழக்கில் வாதங்கள் 02.08.2013 அன்று தொடங்கின. எதிரிகள் தரப்பில் வாதங்கள் 16.08.2013 அன்று முடிவடைந்தன. அரசுத் தரப்பு 23.08.2013 அன்று தொடங்கிய வாதங்கள் 27.08.2013 அன்று நின்று போயின. இந்த வழக்கு 27.08.2013 முதல் தினந்தோறும் தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வழக்குக்காக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர், எத்தனையோ முறை தேதி வழங்கினாலும், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி வாய்தா வாங்குகிறார். மருத்தவ சான்றிதழை அளிக்கிறார். மருத்துவ சான்று அளித்த மருத்துவரின் பெயரைக் கூறுமாறு நீதிமன்றம் கேட்டபோது, கடைசி வரை கொடுக்காமல் மறுத்துள்ளார். இதனால், ஒவ்வொரு முறையும், என்ன காரணத்தினாலோ, இந்த வழக்கை தாமதப்படுத்துவதில் மிகுந்த முனைப்பு காட்டுகிறார்.
நீதிமன்றத்தின் வழக்கு உத்தரவுகளை பார்வையிட்டதில், ஒவ்வொரு முறை இந்த வழக்கு முடியும் தருவாயை நெருங்கும்போது, இந்த வழக்கை விரைவாக முடிப்பதற்காக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர், நீதிமன்றத்தோடு ஒத்துழைக்காதது மட்டுமல்லாமல், ஒவ்வொரு முறையும், நீதிமன்றத்தோடு மோதும் போக்கை கடைபிடித்துள்ளது தெளிவாக தெரிய வருகிறது. மேலும், அவருக்கு நீதிமன்றத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் எண்ணம் துளியும் இல்லை என்பதும் தெரிய வருகிறது. இந்த வழக்கு 17 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில்தான் அரசு வழக்கறிஞரை நீதிமன்றத்தோடு ஒத்துழைக்க நெருக்கடி தந்தே ஆக வேண்டும் என்ற அசாதாரண சூழலில் வேறு வழியின்றி அவரை ஒத்துழைக்க வைக்க இந்த நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில், இந்த ஆணைக்கு தடை விதித்தாலோ, இந்த ஆணையை மாற்றினாலோ, இந்த வழக்கை விரைவாக முடிக்க நினைக்கும், நீதிபதிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.
மேலும், இந்த நீதிமன்ற குறிப்புகளைப் பார்வையிடுகையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், நேரில் ஆஜராகாமல், ஒவ்வொரு முறையும் மனுத்தாக்கல் செய்வதும், வாதங்களை தொடங்க விடாமல் தாமதப்படுத்துவதும், என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, அதன் மூலம், விசாரணை நீதிமன்றத்தை கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.
இந்தப் பின்னணியில்தான் 14.03.2014 அன்று ஒரு உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது (65 ஆயிரம் அபராதம் விதித்த உத்தரவு) குற்றம் சாட்டப்பட்டப்பட்டவர்களாலும், அரசுத் தரப்பாலும், எந்த அளவுக்கு நீதிமன்றம் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது அந்த உத்தரவு மிக மிக தெளிவாக, எடுத்துரைக்கிறது. இந்த உத்தரவு மிக மிக நியாயமானதும், சரியானதும் ஆகும். இதன் காரணமாக, இந்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை”
இந்த உத்தரவில் என்ன தவறு ? ஒரு நீதிமன்றத்தில் மருத்துவ சான்றிதழ் தெரிவித்து விட்டு, அந்த மருத்துவரின் பெயரைக் கூட சொல்லாமல் மறைக்கும் ஒரு அயோக்கியனின் ஒரு நாள் ஊதியத்தை பிடிப்பதில் என்ன தவறு ? இந்த பவானி சிங், அரசுத் தரப்போடு கூட்டு சேர்ந்து கொண்டு, ஜெயலலிதாவை காப்பாற்றத் துடிக்கும் துடிப்பை நீதிமன்றம் தடை செய்தது நியாயமான காரியமா இல்லையா ? இதில் என்ன தவறு இருக்கிறது ? ஆனால், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், பவானி சிங் செய்த மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர் மற்றும் சவுஹான் ஆகியோர், சொத்துக் குவிப்பு வழக்கு நடத்துவதற்கு மூன்று வார காலம் தடை விதித்துள்ளனர். எதற்காகவென்றால், பவானி சிங் சிகிச்சை எடுக்க வேண்டுமாம். 😠😠😠
உச்சநீதிமன்றம் தன்னுடைய உத்தரவில், “மனுதாரர் (பவானி சிங்) சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மனுதாரருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும், அவர்தான் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்பதால், அவர் வேலையை வேறு யாரிடமும் வழங்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சிகிச்சை எடுக்க மூன்று வாரங்கள் அவகாசம் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, மூன்று வார காலத்துக்கு பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்குக்கு தடை விதிக்கிறோம். 28 ஏப்ரல் 2014 வரை இந்த தடை. 28 ஏப்ரல் 2014க்குப் பிறகு, இந்த வழக்கு தொடர்ந்து, தினந்தோறும் நடக்க வேண்டும். அப்போதும் பவானி சிங்குக்கு உடல் நிலை சரியில்லை என்றால், அவர் பெங்களுரு உயர் நீதிமன்றத்தை அணுகி வேறு அரசு வழக்கறிஞரை நியமிக்குமாறு நாங்கள் அவரை கேட்டுக் கொள்வோம்.” உடல் நிலை சரியில்லையென்றால், வேறு வழக்கறிஞரை வைத்து வாதாடலாம் என்று உத்தரவிட வேண்டிய உச்சநீதிமன்றம், இவ்வழக்கில் எப்படிப்பட்ட உத்தரவை பிறப்பித்திருக்கிறது பார்த்தீர்களா ?
இதன் பிறகு மற்றொரு மோசமான தந்திரத்தை கையாண்டார்கள். ஜெயலலிதாவின் பினாமி நிறுவனங்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது, அந்த நிறுவனங்களின் சொத்துக்களுக்கும், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையாம். சிறப்பு நீதிமன்றம் தவறாக அந்த சொத்துக்களை இணைத்து விட்டதாம். இந்த வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு 2003ல் கர்நாடகாவுக்கு மாற்றப்படுவதற்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்டது. இந்த நேரத்தில் (ஏப்ரல் 2014) அதை விசாரணைக்கு எடுத்து, இவர்களுக்கு சாதகமான ஒரு அடிமை நீதிபதி முன்பு கொண்டு வந்தார்கள். அந்த அடிமை நீதிபதியான அருணா ஜெகதீசன், சொத்துக் குவிப்பு வழக்கு வேறு மாநிலத்தில் நிலுவையில் இருக்கிறது என்பதையே மறந்து விட்டு, எந்த அளவுக்கு ஜெயலலிதா மீதான தன் விசுவாசத்தைக் காண்பித்தார் என்றால், “இந்த வழக்குக்கு சம்பந்தப்படாத பல்வேறு சொத்துக்கள் இதில் இணைக்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டார். இணைப்பு இந்த தீர்ப்பின் நகல் சிறப்பு நீதிமன்றத்தில் குன்ஹாவிடம் கொடுக்கப்பட்டது. இதை அடிப்படையாக வைத்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சொத்துக்களை இணைத்தது குறித்த முடிவு எடுக்கப்படும் வரை, விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினர். குன்ஹா மறுக்கவே, இதையும் எடுத்துக் கொண்டு உச்சநீதிமன்றம் சென்றார் ஜெயலலிதா.
பவானி சிங் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அப்போது நீதிமன்றம் வரவில்லை. அப்போது, பி.வி.ஆச்சார்யா இருக்கையில் அவரிடம் இளநிலை வழக்கறிஞராக பணியாற்றியவர், சொத்துக்களை இணைப்பது தொடர்பாக தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தையும் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று சிறப்பு நீதிமன்றம் முன்பு தெரிவித்தார். இதை ஜெயலலிதா தரப்பு சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. இந்த அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
வேறு வழியே இன்றி, இனி தாமதப்படுத்த எந்த வழியும் இல்லை என்ற நிலையில்தான், செப்டம்பர் 27, 2014 அன்று, ஜெயலலிதா உள்ளிட்டோரை சிறையில் தள்ளி உத்தரவிடும் தீர்ப்பை வழங்கினார் நீதி நாயகர் மைக்கேல் டி குன்ஹா.
இதையடுத்து, ஜெயலிதா சிறையில் அடைக்கப்பட்டதும், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து, கருணையோடு இருபத்தி இரண்டே நாட்களில் அவசர அவசரமாக, ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்ததோடு அல்லாமல், மற்ற நால்வரையும் விடுதலை செய்ததை நாம் அறிவோம்.
அதன் பிறகு, பேராசிரியர் அன்பழகன், பவானி சிங்குக்கு எதிராக பெங்களுரு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததையும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி. லோக்கூர் மற்றும் பானுமதி அளித்த மாறுபட்ட தீர்ப்பையும் குறித்து, எத்தனை கோணம் எத்தனை பார்வை கட்டுரையில் விரிவாகப் பார்த்தோம் இணைப்பு
தற்போது, தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு குறித்து பார்ப்போம். தீர்ப்பை தொடங்கும்போதே, 1999ம் ஆண்டு, திமுக அரசு அமைத்த ஊழல் வழக்குக்கான சிறப்பு நீதிமன்றங்களை செல்லாததாக அறிவிக்கக் கோரி ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பின் ஒரு பகுதியை குறிப்பிடுகிறார்கள்.
Corruption corrodes the moral fabric of the society and corruption by public servants not only leads to corrosion of the moral fabric of the society but is also harmful to the national economy and national interest, as the persons occupying high posts in the Government by misusing their power due to corruption can cause considerable damage to the national economy, national interest and image of the country.
ஊழல் சமூகத்தின் தன்மையையே அரித்து விடுவது மட்டுமல்லாமல், பொது ஊழியர்களின் ஊழலும், அதே காரியத்தை செய்கிறது. இது சமூகத்துக்கு ஆபத்து மட்டுமல்ல, அது தேசிய பொருளாதாரத்துக்கும், தேச நலனுக்கும் மிகுந்த ஆபத்தாக அமைகிறது. ஏனெனில் அரசில் உயர் பதவியில் இருப்போர் தங்கள் அதிகார துஷ்பிரயோகம் மூலமாக ஊழலில் ஈடுபடுவது தேசத்தின் பொருளாதாரம், தேச நலனுக்கு ஆபத்து விளைவிப்பதோடு, தேசத்தின் பெருமையையும் பாதிக்கிறது.
இப்படி தீர்ப்பை தொடங்கி விட்டு, நாங்கள் எதற்காக இதை குறிப்பிடுகிறோம் என்றால், இது குறித்து பின்னால் விவாதிக்க இருக்கிறோம் என்றுதான் இந்த தீர்ப்பே தொடங்குகிறது.
அதன் பிறகு மிக மிக விரிவாக, மதன் லோக்கூர் தீர்ப்பே சட்டபூர்வமானது, சரியானது, பானுமதியின் தீர்ப்பு நியாயமற்றது என்று எழுதி விட்டு, விசாரணை முழுமையாக முடிந்து விட்டதால், மீண்டும் விசாரணை நடத்தத் தேவையில்லை என்று கூறி விட்டு, இந்த உயர்நீதிமன்ற நீதிபதியின் (குமாரசாமி) பொறுப்பு என்ன என்பதை விளக்குகிறார்கள்.
Be it noted, the appeal has been heard by the learned Single Judge of the High Court and the appeal assails the judgment of conviction and order of sentence passed under the various provisions of the 1988 Act. It needs no special emphasis that the appellate court has the sacrosanct duty to evaluate, appreciate and consider each material aspect brought on record before rendering the judgment. That is sacred duty of a Judge; and the same gets more accentuated when the matter is in appeal assailing the defensibility of the conviction in a corruption case.
இந்த மேல்முறையீடு, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியால் விசாரிக்கப்பட்டது என்பதையும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்பையும் எதிர்த்து அந்த மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு மேல் முறையீடு நீதிமன்றம், அந்த வழக்கின் தன்மை, ஆதாரங்கள், அவர் முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் பரிசீலித்த பிறகு முடிவெடுக்க வேண்டும் என்ற புனிதமான பணி அந்த நீதிபதிக்கு உள்ளது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. அந்த புனிதமான பணி ஒரு ஊழல் வழக்கின் தண்டனையை எதிர்த்து வாதாடப்படுகையில் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கு அதற்கே உரிய முக்கியத்துவத்தை பெறுகிறது என்று கூறும் நீதிபதிகள், நிரஞ்சன் ஹேமச்சந்திரா சஷீத்தல் என்கிற வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பகுதியை குறிப்பிடுகிறன்றனர்.
Niranjan Hemchandra Sashittal v. State ofMaharashtra , it has been held thus:-
“It can be stated without any fear of contradiction that corruption is not to be judged by degree, for corruption mothers disorder, destroys societal will to progress, accelerates undeserved ambitions, kills the conscience, jettisons the glory of the institutions, paralyses the economic health of a country, corrodes the sense of civility and mars the marrows of governance. It is worth noting that immoral acquisition of wealth destroys the energy of the people believing in honesty, and history records with agony how they have suffered. The only redeeming fact is that collective sensibility respects such suffering as it is in consonance with the constitutional morality.”
ஊழல் என்பது, ஒழுங்கற்ற தன்மையை உருவாக்குகிறது, முன்னேற வேண்டும் என்ற சமூகத்தின் விருப்பத்தை அழிக்கிறது, நியாயமற்ற எதிர்ப்பார்ப்புகளை உருவாக்குகிறது, மனசாட்சியை கொல்கிறது, நிறுவனங்களின் புகழை சிதைக்கிறது, தேசத்தின் பொருளாதார நலனை படுத்த படுக்கையாக்குகிறது, நாகரீக உணர்வை அரித்து விடுகிறது மற்றும் அரசின் மையத்தையே உருக்குலைக்கிறது என்பதை தயக்கமில்லாமல் சொல்லலாம். தவறாக சொத்து சேர்ப்பது, நேர்மையில் நம்பிக்கை உள்ளவர்களின் மனதை சிதைக்கிறது என்பதை வரலாறு வேதனையோடு பதிவு செய்துள்ளது. ஒட்டுமொத்தமான சமூகத்தின் உணர்வுகள், இந்த வேதனைகளை அடையாளம் கண்டு மதிப்பதே, அரசியல் சாசனத்திற்கான மதிப்பு.
அதற்கு அடுத்து சுப்ரமணிய சுவாமி வழக்கில் உள்ள தீர்ப்பை குறிப்பிடுகிறார்கள்.
“Corruption is an enemy of the nation and tracking down corrupt public servants and punishing such persons is a necessary mandate of the PC Act, 1988. It is difficult to justify the classification which has been made in Section 6-A because the goal of law in the PC Act, 1988 is to meet corruption cases with a very strong hand and all public servants are warned through such a legislative measure that corrupt public servants have to face very serious consequences. The status or position of public servant does not qualify such public servant from exemption from equal treatment. The decision-making power does not segregate corrupt officers into two classes as they are common crime doers and have to be tracked down by the same process of inquiry and investigation.”
ஊழல் என்பது இந்த தேசத்தின் எதிரி. ஊழல் செய்யும் பொது ஊழியர்களை தேடிப் பிடித்து தண்டிப்பதே, லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பணி. பிரிவு 6Aவில் வகுத்துள்ள பாரபட்சம் ஏற்றுக் கொள்ள முடியாதது, ஏனென்றால், லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் நோக்கமே, ஊழலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதும், ஊழல் பொது ஊழியர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதும், ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஒரு பொது ஊழியரின் பதவி அல்லது தகுதி எந்த வகையிலும் அவரை வேறுபடுத்தி கையாள வேண்டுமென்பதற்கான அடிப்படை ஆகாது. ஒரு முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள ஒரு பொது ஊழியர் என்பதால், ஒரு சாதாரண குற்றவாளியிடமிருந்து அவரை வேறுபடுத்தி பார்க்க இயலாது. அவர்களையும், அதே சட்டத்தின்படி, புலயாய்வு செய்து தண்டிக்க வேண்டும்.
இதன் பிறகு இந்த மூவர் நீதிபதிகள் அமர்வு எழுதியதுதான் முக்கியமானது. வரலாற்றுச் சிறப்பு கொண்டது.
We have referred to the aforesaid two authorities only to highlight the gravity of the offence. We are absolutely sure that the learned Single Judge, as the appellate Judge, shall keep in mind the real functioning of an appellate court. The appellate court has a duty to make a complete and comprehensive appreciation of all vital features of the case.
மேற்குறிய தீர்ப்பை நாங்கள் எடுத்துக் கூறுவதன் காரணம் இவ்வழக்கின் குற்றத்தின் தீவிரத்தன்மையை உணர்த்துவதற்காகவே. மேல்முறையீட்டு நீதிபதி, ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பணி என்ன என்பதை மனதில் வைத்து செயல்படுவார் என்பதில் எங்களுக்கு துளியும் சந்தேகமில்லை. இந்த வழக்கின் ஒவ்வொரு முக்கிய பகுதியையும், இந்த நீதிமனற்ம் அலசி ஆராய்வது அதன் கடமையாகும்.
The evidence brought on record in entirety has to be scrutinized with care and caution. It is the duty of the Judge to see that justice is appropriately administered, for that is the paramount consideration of a Judge. The said responsibility cannot be abdicated or abandoned or ostracized, even remotely, solely because there might not have been proper assistance by the counsel appearing for the parties. The appellate court is required to weigh the materials, ascribe concrete reasons and the filament of reasoning must logically flow from the requisite analysis of the material on record. The approach cannot be cryptic. It cannot be perverse. The duty of the Judge is to consider the evidence objectively and dispassionately. The reasonings in appeal are to be well deliberated. They are to be resolutely expressed.
மிக மிக கவனமாக மற்றும் எச்சரிக்கையாக இந்த வழக்கில் எடுத்து வைக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை கூர்ந்தாய்வு செய்ய வேண்டும். ஒரு வழக்கில் நீதி சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்பதை உணர்ந்து செயல்படுவது, ஒரு நீதிபதியின் பிரதான கடமையாகும். ஒரு வழக்கில் ஆஜராகும் இரு தரப்பு வழக்கறிஞர்களும், போதுமான அளவுக்கு நீதிபதிக்கு உதவவில்லை என்பது, நீதிபதியின் கடமையை குறைக்கவோ, நீர்த்துப் போகவோ, வரையறுக்கவோ கூடாது. ஒரு மேல் முறையீட்டு நீதிமன்றம் தன் முன் உள்ள ஆதாரங்களை உரிய காரணங்களோடு ஆராய்ந்து, அது எடுக்கும் முடிவு ஆதாரங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இருக்க வேண்டும். அந்த நடவடிக்கை குறுகிய முறையில் அமையக் கூடாது. பிறழ்வானதாகவும் இருக்கக் கூடாது. சாட்சிகளையும், ஆதாரங்களையும் பாரபட்சமின்றி ஆராய்வதே ஒரு ஒரு நீதிபதியின் முக்கிய கடமை. மேல் முறையீட்டு தீர்ப்பில், எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அதற்கான காரணங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு சொல்லப்பட வேண்டும். வெளிப்படையாக விளக்கப்பட வேண்டும்.
An objective judgment of the evidence reflects the greatness of mind – sans passion and sans prejudice. The reflective attitude of the Judge must be demonstrable from the judgment itself. A judge must avoid all kind of weakness and vacillation. That is the sole test. That is the litmus test. This being the position of a Judge, which is more elevated as the appellate Judge, we are of the considered opinion that there is no justification for rehearing of the appeal as the matter has been heard at length and reserved for verdict.
பாரபட்சமற்ற ஒரு தீர்ப்பு விருப்பு வெறுப்பற்ற, பாரபட்சமற்ற ஒரு அறிவார்ந்த தன்மையை காட்டுகிறது. ஒரு நீதிபதியின் தன்மை அந்த தீர்ப்பில் வெளிப்பட வேண்டும். ஒரு நீதிபதி, எல்லா விதமான பலவீனத்தையும், ஊசலாட்டத்தையும் தவிர்க்க வேண்டும். அதுதான் சத்திய சோதனை. அதுதான் முக்கியமான சோதனை. இது ஒரு நீதிபதியின் பொறுப்பாக இருக்கையில், அதுவும் மேல் முறையீட்டு நீதிபதி என்றால் கூடுதல் பொறுப்பாக இருக்கையில், மிக மிக விளக்கமான முறையில் நீண்ட காலத்துக்கு இந்த வழக்கின் மேல் முறையீட்டு விசாரணை நடந்து முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறோம்.
The appellant has submitted his written note of submissions before the trial court and, therefore, we are inclined to permit him to file a written note of submissions within 90 pages before the learned Single Judge/Appellate Judge. The State of Karnataka, which is the prosecuting agency, is granted permission to file written note of submissions within 50 pages. The written submissions be filed latest by 28.4.2015. The written note of submissions filed before the trial court and the High Court along with written note of submissions of State of Karnataka shall be considered by the learned Single Judge and the consideration should be manifest in the judgment.
அன்பழகன் விசாரணை நீதிமன்றத்தின் முன்பு எழுத்துபூர்வமான வாதங்களை சமர்ப்பித்துள்ள காரணத்தால், கர்நாடக நீதிமன்றத்தின் முன்பும் 90 பக்கங்களுக்கு மிகாமல் எழுத்துபூர்வமான வாதங்களை சமர்ப்பிக்க அனுமதிக்கிறோம். அரசுத் தரப்பு வழக்கை நடத்தும், கர்நாடக அரசு, 50 பக்கங்களுக்கு மிகாமல் எழுத்துபூர்வமான வாதங்களை சமர்ப்பிக்க அனுமதிக்கிறோம். இந்த எழுத்துபூர்வமான வாதங்கள் 28 ஏப்ரல் 2015க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விசாரணை நீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துபூர்வமான வாதங்களை உயர்நீதிமன்ற நீதிபதி (குமாரசாமி) உரிய முறையில் பரிசீலித்து, அவை, தன் தீர்ப்பில் பிரதிபலிக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
Written note of submissions, if any, by the 4th respondent shall not be considered by the learned Judge. A copy of our judgment be sent by the Registry of this Court in course of the day to the Registrar General of the High Court of Karnataka so that he can place the judgment before the learned Single Judge for perusal and guidance.
பவானி சிங் ஏதாவது எழுத்துபூர்வமான வாதங்களை சமர்ப்பித்திருந்தால், அவற்றை நீதிபதி பரிசீலிக்க வேண்டாம். எங்களின் தீர்ப்பு, கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளருக்கும், நீதிபதிக்கும், நீதிபதியின் வழிகாட்டுதலுக்காக அனுப்பப்பட வேண்டும்.
இறுதியாக கர்நாடக நீதிபதி குமாரசாமிக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.
(g) The learned Appellate Judge, after receipt of our judgment sent today, shall peruse the same and be guided by the observations made therein while deciding the appeal.
ஜெயலலிதாவின் மேல் முறையீட்டை முடிவு செய்கையில், எங்கள் தீர்ப்பு கையில் கிடைத்த பிறகு, அத்தீர்ப்பை படித்துப் பார்த்து, அதில் கூறியவற்றை மனதில் வைத்து, தீர்ப்பு வழங்க வேண்டும்.
இதுதான் உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு. இந்தத் தீர்ப்பு கிட்டத்தட்ட குமாரசாமி, ஜெயலலிதாவை தண்டிக்க வேண்டும் என்று மறைமுகமாக சொல்வது போலவே உள்ளதா என்றால் அப்படித்தான் உள்ளது.
வழக்கமாக கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக தீர்ப்பளிக்கையில் நீதிபதிகள், நாங்கள் இந்த தீர்ப்பில் கூறியுள்ள கருத்துக்கள், எந்த வகையிலும் தீர்ப்பளிக்கும் நீதிபதியின் எண்ணத்தை பாதிக்கக் கூடாது. இந்த கருத்துக்களை நிராகரித்து விட்டு, சாட்சிகளையும், ஆவணங்களையும் பரிசீலித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றே கூறுவார்கள்.
இது முழுக்க முழுக்க நீதிமன்ற மரபை மீறிய தீர்ப்பு. நீண்ட நாட்கள் குற்றவியல் வழக்குகளில் அனுபவம் பெற்ற ஒரு மூத்த வழக்கறிஞர் கூறியது “கடந்த 50 ஆண்டுகளாக, லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வந்துள்ள அனைத்து தீர்ப்புகளையும் நான் படித்துள்ளேன். இது போன்ற ஒரு தீர்ப்பை நான் பார்த்ததே கிடையாது” என்றார்.
இது நிச்சயமாக வரலாறு படைத்துள்ள தீர்ப்புதான். இதனால், ஜெயலலிதாவுக்கு பாதகமா என்றால் நிச்சயம் பாதகமே. உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதியிடம் எப்படி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று மூவர் அமர்வு கொண்ட உச்சநீதிமன்றம் சொன்னால், அவர் அதை மீறி எப்படி தீர்ப்பு வழங்க முடியும் ? மேலும், அரசுத் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள அனைத்து எழுத்து பூர்வ வாதங்களையும் நிராகரியுங்கள் என்று தெளிவாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்கள். ஊழல் சமூகத்துக்கு எத்தகைய தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி, இதை பரிசீலித்து தீர்ப்பு வழங்குங்கள் என்று உத்தரவிட்டால், அது ஜெயலலிதாவுக்கு எப்படி பாதகமாக இல்லாமல் போகும் ?
பாதகம்தான். ஆனால், வினையை விதைத்தால் தினையையா அறுவடை செய்ய முடியும் ? இந்திய நீதிமன்றங்களையும், சட்டங்களையும், வளைத்து, நெளித்து, அதன் இண்டு இடுக்களில் எல்லாம் புகுந்து, வெளியேறி, 18 ஆண்டுகளாக ஒரு வழக்கை இழுத்தடித்து, சட்டத்தின் ஆட்சியை கேலிக்கூத்தாக்கிய ஜெயலலிதாவுக்கு, இது சரியான தீர்ப்பே.
ஜெயலலிதாவின் வழக்கில் பல்வேறு தீர்ப்புகளைச் சொன்ன விசித்திரமான நீதிமன்றங்கள், இறுதியாக வழங்கிய இந்தத் தீர்ப்பின் மூலம், இதுவும் விசித்திரமான நீதிமன்றம்தான் என்பதை உணர்த்தியுள்ளது. ஆனால் இது நியாயத்தின் பக்கம் உள்ள விசித்திரம்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் – சிலப்பதிகாரம்.
🙏🙏🙏
சட்டம் ஒரு இருட்டறை தான் எனபதை முள்ளமாரி குமாரசாமி தெரியபடுத்தி அசிங்கபடுத்திவிட்டான் இந்த தலையங்கத்தை.
For your kind information , Jayalalitha released today, no fine,and others also released. What a Miracale judgement by Kumarasami . Now What you have to Say ?
Karunanidhi started public life at a time when India was still fighting for freedom. Previously he symbolised the Dravida dissent, and even
offered an inclusive idea of governance. But now, the story of the aging Dravida patriarch is also the story of big money, family
rivalries, television power, greed, violent reprisal and diminishing influence in Delhi. He has always disguised his selfish ego centered interest and family interest as a Tamil/Dravidian struggle and fooled the people of Tamilnadu for years. The fear of violence against his opponents had silenced a lot of people. Thamizharuvi Maniyan, a Gandhian who was appointed to a position on the State Planning Commission by Karunanidhi but resigned in frustration before the end of his term said he would call Karunanidhi “Ettappan”! Ettapan was a landlord in the 18th century who eliminated the Madurai chieftain and folk hero Veerapandiya Kattabomman on behalf of the British. Ettappan’s name has become synonymous with treason. “That is how Karunanidhi will be remembered by history,” Maniyan continued. “He cheated the people with grand ideological promises, and he still thinks he is very clever.” When it comes to matters of money and family interest, our Ettapan Grandpa always makes wrong decisions
Cho Ramaswamy, a veteran Tamil comic actor and an editor of the political magazine Thuglak said Karunanidhi would be remembered in Tamil Nadu “as someone who looked after his family very well!” Karunanidhi will be remembered for the three to four institutions that are working decently in Tamil Nadu— the public distribution system, healthcare and a few social welfare programmes. But he will be mostly remembered for institutionalising corruption in all spheres of the state.”
The Dravida Munnetra Kazhagam was simply Brahmin Pinnetra Kazhagam (pushback Brahmins league). It never bothered about Dalits in its entire political existence, right from the days of the iconoclast, anti-Brahminist and founder of the Dravidian movement, Periyar EV Ramasamy. Another worse thing that Karunanidhi did was bringing MGR to the silver screen and politics. That was the ultimate doom he brought to Tamil Nadu and TN could never come out of that celluloid obsession curse. It continues with MGR, his second wife Janaki, his another love Komalavalli Amma (motto-in life there is one person you must rely on -yourself), drunkard Vijayakanth and the former drug addict and ascetic showoff Rajinikanth. No genuine social politician is yet to emerge other than these cinema fireflies in TN and it is a pity that these film scumbags have led the Tamil people to the bottom of the social pit by their glamour and empty talk.
மக்கள் பிரதிநிதியான ஒருவர் ஊழல் தடுப்பு சட்டம் 1988-ன் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் அந்த தண்டனை அறிவிக்கப்பட்ட 30 நாட்களில் அந்த கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சட்டரீதியான கிரிமினல் மேல் முறையீட்டை அந்த மாநில ஐகோர்ட்டில் தாக்கல் செய்யலாம். அந்த மேல் முறையீடு சட்டரீதியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட உடனே அந்த குற்றவாளி தண்டனை குறைப்புக்கும் ஜாமீனுக்கும் உரியவர் ஆகிறார்.
இது சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்துள்ள ஒரு தீர்ப்பின் அடிப்படையில் வகுத்துள்ள நெறிமுறையாகும். இதை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி சந்திரசேகரா கருத்தில் கொள்ளாமல் நீதிமன்ற பிழையினை செய்துள்ளார். இது நெறிமுறைக்குப் புறம்பான செயலாகும்.
sir u r going to bring a change in tamilnadu politics it is true u r a maveeran why u r not thinking about 82 years old young man doing some goodservices including for anti corruption traffic ramasamy one man army who got spinalcordd in the race of future tamilnadu politics people will accept him whole heartedly pl think
கர்நாடக தலைமை நீதிபதி பவானி சிங் நீக்கத்துக்கு ஏன் சம்மதித்தார் என்றால், தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் வகேலா, மார்ச் 2013ல், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மே 2013ல், கர்நாடகாவில் தேர்தல் நடந்து முடிந்து, காங்கிரஸ் தலைமையிலான புதிய ஆட்சி வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் நியமனம் செய்யப்பட்டிருந்த பவானி சிங் குறித்து ஆய்வு நடந்தது..காவேரி பரட்சினை இருப்பதனால் அங்கே அம்மாவுக்கு தோல்விதான் வரும் என்று காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து செய்த சதி.
அன்பழகன் விசாரணை நீதிமன்றத்தின் முன்பு எழுத்துபூர்வமான வாதங்களை சமர்ப்பித்துள்ள காரணத்தால் (,காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து செய்த சதி.) கர்நாடக நீதிமன்றத்தின் முன்பும் 90 பக்கங்களுக்கு மிகாமல் எழுத்துபூர்வமான வாதங்களை சமர்ப்பிக்க அனுமதிக்கிறோம்.
இந்த வழக்கில் புகார்தாரராக இருந்த சுப்ரமணியன் சுவாமி,. சொத்துக் குவிப்பு வழக்கை நடத்தும் சிறப்பு அரசுத்தரப்பு வழக்கறிஞராக வாதிட வாய்ப்பு வழங்கப்படவில்லை???
ஜெயலலிதா லஞ்சம் வாங்கினார் என்று வழக்கில் எந்த இடத்திலும் நிரூபிக்க படவில்லை. அப்படி இருக்க லஞ்சம் வாங்கினார் என்று நிரூபிக்க பட்டிருப்பதாக சொல்வது பொய் வாதம்.. மேலும் நீதிபதி குமாரசாமி கூறுகையில் சொத்து குவிப்பு வழக்கு ஊகங்கள் அடிப்படையில் தான் குற்றசாட்டுக்கள் புனைய பட்டுள்ளன. ஜெயலலிதா லஞ்சம் வாங்கினார் என்றோ ஊழல் செய்தார் என்றோ நிரூபிக்க படவில்லை.
டைரி ஆதாரம் இல்லாமல் சொத்து குவிப்பு வழக்கில் FIR போட்டிருப்பது முதல் தவறு. இந்த தவறை குமாரசாமி சுட்டி காட்டி உள்ளார்
தா கிருட்டிணன் வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமித்தது கருணா தலைமையிலான தமிழக அரசு… அங்கே மட்டும் நீதி கிடைத்து விட்டது.. அரசு காவலரே பிறள் சாட்சியமாக மாறிய கொடுமை அந்த வழக்கில் தான் நடந்தது… காரணம் ஆட்சி மாற்றம்… ஒரு கொலை குற்ற விசாரணையை இந்த அளவுக்கு நேர்மையாக நடத்தியவர்கள் தான் இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தில் “நீதி” க்காக போராடுகிறார்கள்
அன்பழகன் ஏதோ கை சுத்தம் போல பேசுகிறார்…..இவர் தம் நெருங்கிய உறவினர் தான் பாஸ்போர்ட் பல கோடிகள் ஊழல் புகழ் சுமதி ரவிச்சந்திரன். தற்போது டெல்லி பாஸ்போர்ட் அலுவலகத்தில் சொகுசான பதவியில் உள்ளார் என்பது கூடுதல் தகவல்
பல மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிவது… எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று நன்றாக தெரிகிறது… ஆனால் இது போன்ற ஒரு முக்கியத்துவம் மக்கள் பிரச்சனைக்கு என்றைக்காவது கொடுத்திருக்கிறார்களா? காவிரிக்கு பிரச்சனைக்கு இப்படி நடந்து கொண்டது உண்டா? மேகதாது பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றத்தை நாடி தடை வாங்கலாமே? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வழக்கு தொடுக்கலாமே? நில கையகப் படுத்துதல் சட்டத்துக்கு எதிராக கூட வழக்கு போடலாம்…. ஆனால் இவர்கள் அரசியல் லாபத்துக்கு மட்டுமே இவ்வளவு விடா முயற்சி எடுக்கிறார்கள்.
பாரபட்சமற்ற ஒரு தீர்ப்பு விருப்பு வெறுப்பற்ற, பாரபட்சமற்ற ஒரு அறிவார்ந்த தன்மையை காட்டுகிறது. ஒரு நீதிபதியின் தன்மை அந்த தீர்ப்பில் வெளிப்பட வேண்டும்.
sir ur role will be more inthe coming electionn sir why dont u organising a forum to unite a corruption free organisation to elect a corruption free personality like u to contest inthe coming election like at delhi pl guide and do some good services sir
தனக்கு 65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றார் பவானி சிங். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா, பவானி சிங்கின் தகிடுதத்தங்கள் முழுமையையும் அறிந்து, விரிவான ஒரு தீர்ப்பை வழங்கினார்.
“இந்த வழக்கில் வாதங்கள் ” 02.08.2013 ” அன்று தொடங்கின. எதிரிகள் தரப்பில் வாதங்கள் “16.08.2013” அன்று முடிவடைந்தன. அரசுத் தரப்பு 23.08.2013 அன்று தொடங்கிய வாதங்கள் 27.08.2013 அன்று நின்று போயின??? WHY . இந்த வழக்கு 27.08.2013 முதல் தினந்தோறும் தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வழக்குக்காக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர், எத்தனையோ முறை தேதி வழங்கினாலும், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி வாய்தா வாங்குகிறார். மருத்தவ சான்றிதழை அளிக்கிறார். மருத்துவ சான்று அளித்த மருத்துவரின் பெயரைக் கூறுமாறு நீதிமன்றம் கேட்டபோது, கடைசி வரை கொடுக்காமல் மறுத்துள்ளார். இதனால், ஒவ்வொரு முறையும், என்ன காரணத்தினாலோ, இந்த வழக்கை தாமதப்படுத்துவதில் மிகுந்த முனைப்பு காட்டுகிறார்.
மைக்கேல் குன்ஹா நியமிக்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2013. ஆனால் அவரால் தீர்ப்பு வழங்க முடிந்த நாள் 27 செப்டம்பர் 2014. 65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட நாள் ???????
பவானி சிங் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அப்போது நீதிமன்றம் வரவில்லை. அப்போது,:”: பி.வி.ஆச்சார்யா:” இருக்கையில் அவரிடம் இளநிலை வழக்கறிஞராக பணியாற்றியவர், சொத்துக்களை இணைப்பது தொடர்பாக தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தையும் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று சிறப்பு நீதிமன்றம் முன்பு தெரிவித்தார்.
There is only one article in savukku regarding mass murder of 20 tamilians in andra.
But there are 7 articles about JJ case.
Savukku? Do u really have any integrity?
There were many cases against JJ. If all of them had been moved outside of TN for hearing, then, she would have been convicted in many cases. Savuku, can anyone reopen other cases and move it to another state for hearing?
in all cases supreme court acquited her. hope you know supreme court if out of TN you dmk fool
Everyone knows, How JJ got aquited in Tansi. Latest in the list…is IT case…after intervention of Central Govt….
like wise karunanidhi in veeranam case. sakariaya commission etc. those are mega corruptions.compare to karunidhi and dmk, jj is less but still need to be punished but letting dmk and mega corrupts out and punish this lady. dmk should go in first and then aiadmk. not vise versa.
” dmk should go in first and then aiadmk. not vise versa.” What you mean by that? Do you want stop/suspend JJ conviction until dmk get’s convicted? ….it may take another 50 years.
Nicely written. Let all the corrupt people go behind the bars
சவுக்கு நீங்கள் வெளியிடும் செய்திகள்கூட அடுத்து வரவிருக்கும் தேர்தலில் கொஞ்சமாவது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில்க்கொள்ளவும்.
அந்த வகையில் ஜெயலலிதாவின் வழக்கு சம்பந்தமான இந்த தகவல்கள் கருணாவுக்கு சாதகமான் ஒரு சூழ்நிலையை நிச்சியம் ஏற்படுத்தும். பேயை காட்டிக்கொடுத்து, மிக மிக பெருத்த அடிமாடன் பிசாசை வளர்த்துவிடக்கூடாது.
இது எனது ஆதங்கமும்கூட,
எனவே தயவு செய்து பெருத்த அடிமாடன் பிசாசான கருணா குடும்பத்தின் ஊழல்களையும் உறங்குநிலையிலிருந்து உயிர்ப்புடன் மக்கள் முன் எடுத்து வைக்கவேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உண்டு.
புலனாய்வு ஊடகமான சவுக்குக்கு அந்த பொறுப்பு மிக அதிகமாக உண்டு என்பதை இந்த வேளையில் நினைவுக்கு கொண்டுவருகின்றேன் அடுத்து மிக விரிவான கருணாவின் ஊழல் வரலாற்றை தரவு ரீதியாக வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
well said
சவுக்கின், ஜெயாவின் அனேக ஊழல் கட்டுரை எழுதி முடித்துவிட்டது அடுத்து..கடையை காலி பண்ணவேண்டியதுதான்
திமுக பக்கம் சவுக்கின் கடையை திறக்க வேண்டியதுதான். ஏறகனவே திறந்த கடையை ஓனர் இல்லாமல் கல்லா கட்டவில்லை அதனால்
சவுக்கு ஓனர் கடையில் உட்கார்ந்து கல்லா கட்டுமாறு….
அனைத்துலக சவுக்கு ரசிகர் மன்ற சார்பாக கேட்டுகொள்கிறோம்.
இந்த வழக்கை எடுத்து நடத்த திமுகவிற்கு தகுதி இருக்கிறதா என்பதை விட திரு க. அன்பழகன் என்னும் தனி நபருக்கு இருப்பதாகவே கருதுகிறேன். அவர் திமுக பொதுச் செயலாளராக இருப்பது அவர் குற்றமல்லவே. நான் இந்த வழக்கை திமுக சார்பாக நடத்துகிறேன் என்றோ திமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் நடத்துகிறேன் என்று அவர் சொன்னதில்லை. எதையுமே சர்ச்சையாக்கிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடனே இங்கு சிலர் வருவார்கள் போலும்.
யார் யார் மீதோ ஊழல் குற்றச்சட்டு சுமத்தும் சவுக்கால் கூட திரு க. அன்பழகன் மீது எந்த குற்றச் சாட்டும் சுமத்த முடியவில்லை. அவர் தன் வாரிசுகள் யாரையும் அரசியலுக்கும் கொண்டு வரவில்லை.
mr. anbu knows dmk is mega corruption party. why mr. anbu got the same spirit in taking those cases if he so true and clean person. we know who he is and who is dmk. so stop your shit
Though many people say that, DMK does not have any moral rights etc…to file the cases…..If not DMK then…is there any other person/party which can offered to spend money and time….(almost 20 years)…what were other parties or lawyers who were aware of this crimes doing?
they are worried more about kings of corruption sissues like 2G, airtel maxi, kalignar tv looting etc which is more sensitive then this case. also we know dmk will take care of this petty case
If others are more concerned about 2g, airtel.. there is no issues for dmk to to fight DA case… அரசியல் ஆதாயம் இல்லாம யாருமே இங்க இல்ல… 2g கேஸ்ல மத்தவங்க முனைப்பு காற்றது மக்கள் நலனுக்காக இல்ல அரசியல் ஆதாயம் தான்.. அதே தான் தி.மு.காவும் செய்யுது…
எது எப்படியோ தப்பு செஞ்சா தண்டனை… அதை சட்டரீதியில் போராடி பெற்றுதரவேண்டியது எதிர்கட்சிகள் கையில தான் இருக்கு…
சற்காரிய கமிஷன் கதைய பேசறவுங்க அத ஆதாரமா வெச்சி ஒரு வழக்கு தொடுத்து தண்டன வாங்கி தந்தா நல்லா இருக்கும் !!
IN REALITY THE AGGRIEVED PARTY IS THE COMMON MAN OF TAMILNADU WHO IS CHEATED BY JJ AS WELL AS BY MK AND HIS FAMILY MEMBERS, COTERIE ETC. . DMK AND OTHER POLITICAL OUTFITS IN TAMILNADU HAS NO MORAL RIGHTS IN JJ CASE. HOWEVER LAWYER ACHARYA HAS RIGHTLY SAID THAT JJ’S APPEAL COULD NOT BE CONSIDERED AS THE MAIN PARTY VIZ., KARNADAKA GOVT. IS NOT GIVEN NOTICE WHEN JJ ATTEMPTS AND ARGUE FOR MODIFICATION OF JUDGEMENT . YES THIS CASE WILL END IN GREAT COMPLICATION FOR JJ EVEN THOUGH HER ARDENT FOLLOWERS GOING ROUND THE TEMPLES IN TAMILNADU.
Strange. All of a sudden…Dr. Swamy has become silent on this issue….looks like….BJP’s effect
This is excellent article. Keep it up. Looking forward to many more exposure….Still waiting for your artile on JJ conviction part 2…
yes it is excellent but it will be more excellent if we see more updates on mega corruption cases like 2G, airtel maxi etc..
Well done sir. Based on the verdict, I also believe the same. but, we’ll wait for the judgment. You know which is important at which time. These people have the prone to forget your writings on DMK. Don’t heed them sir. I know. soon you are going to write about 2g scam. another group will come and say. you are ADMK Savukku. let them say. you keep doing your sacred work in Tamilnadu and India. A good critic is the one who appreciates when somebody do something good to the society. Nothing wrong in praising Prof Anbazhagan at this time. They have to read you at least to criticize. Happy may day sir. You are the one among the few who works for the country.
so you think mr. anbazhagan is super clean. the difference bewtween jj and anbu is one get caught and another one is free escaped from get caught.
நீதிபதி அருணா ஜெகதீசன் JJ அடிமை என்றால், குன்கா யாருக்கு அடிமை??
சொல்லுங்கள் Savukku. Please
Other judges are மங்குணிப் பாண்டியர்கள். Kunha mattum உத்தமர்.
The same great கர்நாடக அரசு is did not appointed CBI for IAS officer Ravi murder case
Savukku thinks everyone is stupid enough to believe his stories.
மிக நல்ல கற்பணை உடன் எழுதப்பட்ட கற்பணை.
நல்லவனாக இரு, இல்லாட்டி கெட்டவணா இரு. நல்லவனாட்ட நடிக்காதீர்கள் savukku.
The same great கர்நாடக அரசு is did not appointed CBI for IAS officer Ravi murder case till they manage to erase the evidence
நல்ல கதை என் அதிமுகவிடம் உங்கள் பேரம் படியவிள்ளையா???????
ஆ.தி.மு.காவுக்கு சப்போர்ட்டா பேசனா நடுநிலையாளன் .. அப்படி இல்லனா தி.மு.க அடிவருடி.. என்னே உங்கள் நடுநிலைமை……
சவுக்குக்கு எனது பாராட்டுக்கள் ஜெயலலிதாவின் ஊழலை வெளிப்படுத்தியதற்காக அல்ல ஜெயலலிதாவின் வழக்கு சம்பந்தமாக இந்திய நீதித்துறையின் கிலிசகேடுகளை ஒவ்வொரு பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு தெளிவாகவும் தைரியமாகவும் தோலுரித்தமைக்காக அந்த பாராட்டுக்கள் உரித்தாகட்டும். அதே நேரம் எனது மனதுள் கிடந்து தொடர்ந்து குடைந்து கொண்டிருக்கும் கேள்வி கருணாநிதியின் குடும்ப ஊழல்களை ஓரளவு மக்கள் புரிந்து கொண்டிருந்தாலும் சிபிஐ கோர்ட்டுக்கு நேரடியாக சென்று சாட்சியமளிக்காமல் தயாளுவை தடுத்து காக்கக்கூடிய சட்ட ஓட்டைகளை எப்படியெல்லாம் கருணா பயன்படுத்தினார் பேரன்களான கேடி சகோதரர்கள் துரை தயாநிதி கற் குவாரி ஊழல் தயா பொறியியல் கல்லூரிக்கான நில ஊழல் உதயநிதி, மற்றும் தலபதி ஸ்ராலின் ஆகியோரின் ஊழல்களையும், கனிமொழி ராசா ஆகியோரின் விசாரணை நிலை என்ன என்பதையும் தரவு வாரியாக ஆவண உறுதிப்பாட்டுடன் வெளியிடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
very very very very well said. these days savukku so excited about AIADMK and jayalaitha and forgets the kings of mega corruption DMK.. come on savukku bring those cases that are most destructive to the society then this. we got all the infor about jayalitha assests case. no use in keep writing this one case article after article. we want dmk mega corruptions is lime light.
there is no need to praise DMK by criticizing AIADMK. savuku did that as though DMK is divine of all. i know the amount of looting between two governments. DMK is the master looters and infact they are one who started all this. there is no comparison between two. DMK is grave for all. we cannot have DMK for the sake of replacing AIADMK even though there is zero development. now what you mean be development ? for whom ? family with 1000 members looted TN like Hell with all their regional ministers and family. is that the situation now? AIADMK is far better. there is no body threatening now to steal lands as like previous dmk ministers. where is the power cut now ? what project that dmk did. yeah you need family project to make commission.
In TN practical political choice is either DMK or AIADMK. We can’t have a choice of third alternative until these two parties are powerful. hence we need to finish one at a time politically and get with another and not targetting both. election after election we give give life for either of these two and that is reason these two gains momentum. This time we have to be very careful in whom we should not elect then whom we should. We need to have long term plan. Already DMK is outsetted by the people. We need to defeat them in one more election to finish them once for all. After this finishing of AIADMK is really easy because we would have a second choice alternative to DMK at that time. DMK should not get life any more . they are no better then any one and it is the worst of all. AIADMK is the next worst. finish the family looters and target the mannargudi mafia AIADMK and set TN free..
Nallavan vanthuttar. Sombha eduthu ulla vainga!!!!
திரு சவுக்கு சங்கர் அவர்களுக்கு, என் வாழ்நாளில் மிகச் சிறப்பான கட்டுரைகளையோ நீதிமன்ற தீர்ப்புகளையோ படித்தவன் அல்ல. ஆனாலும் நிர்வாகத்திறமை என்னிடம் உள்ளது என்ற உண்மையை யாராலும் மறுக்க இயலாது. 186 கோடி வரவு செலவு இருந்த ஒரு டெக்ஸ்ட்டைல் மில்லை எந்த ஒரு இயந்திரமும் வாங்காமல் நான்கே ஆண்டுகளில் 580 கோடிக்கு உயர்த்தியதில், மில்லின் பொது மேலாளர் என்ற வகையில் எனக்கு பெரும் பங்கு உண்டு. இதை எதற்காக சொல்கிறேன் என்றால், நான் செய்த பணியை விட, இந்த நான்கு ஆண்டுகளில் நீங்கள் செய்ததுதான், அதாவது ஊழல் குறித்த விபரங்களை கட்சி பாகுபாடு இல்லாமல் ஆதாரத்தோடு முகநூல், ட்விட்டர் மற்றும் இ மெயில் மூலம் வாசகர்களை சென்றடையச் செய்தது சிறப்பானது என்பதை ஒத்துக்கொள்வதில் பெருமை தான். ஒரு இந்தியன் என்றமுறையில், நண்பரே என்வாழ்நாளில் நான் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். என்னாலான உதவியை உங்களுக்கு செய்ய காத்துக்கொண்டு இருக்கிறேன். நன்றி! சிறக்கட்டும் உங்கள் பணி. இறை நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதோ இல்லையோ எனக்கு நிறைய உண்டு. எல்லாம் வல்ல இறைவனின் அருள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களைக் காக்க பிரார்த்திக்கிறேன். நன்றி!
I too do.
புதுடில்லி: 2ஜி வழக்கு விசாரணையை வரும் ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச், இதற்கான உத்தரவை வழங்கி உள்ளது.
Savukku sankar — do you get your share and invested properly!!!!!!!!!!!!!!!!
Well Said. DMK savukku sankar
I think you have not b rest his earlier articles. He had thrashed DMK like anything. If you think no one should point finger against Jaya that’s not b possible. She is also equivalent to Karina.
but writing most articles for this jj case leaving mega corruption cases like 2g. airtel maxi makes to suspect savukku for its polititics in the time of election. let write equal number of articles consistently