எஷ்டு தொகண்டிதிரி குமாரசாமி ?

You may also like...

736 Responses

  1. you’re in reality a good webmaster. The website loading speed is
    amazing. It kind of feels that you are doing any distinctive trick.
    Also, The contents are masterpiece. you’ve performed a fantastic process in this
    matter!

  2. flash says:

    u are correct But it seems to be another Grand father and Daddy of Kumarasaamy may be created in SC judges too due to foul play played in the APEX court by Jaya team from Delhi circle . So we are loosing hope day by day…

  3. flash says:

    Yes u are correct But it seems to be another Grand father and Daddy of Kumarasaamy may be created in SC judges too due to foul play played in the APEX court by Jaya team from Delhi circle . So we are loosing hope day by day…

  4. Raju says:

    the High Court appears to have made some more glaring errors. Item number 8 in the table on Page 852 is a loan of Rs 1.57 crore in the name of VN Sudhakaran, Jayalalithaa’s foster son and one of the accused. A comparison with Pages 136 and 137 of the trial court order shows the discrepancy. Three pieces of evidence are cited in this particular loan – one, a letter from Sudhakaran to Indian Bank requesting a loan of Rs 1.57 crore. The second evidence is a letter from Indian Bank sanctioning a loan amount of Rs 1.33 crore and not the full amount requested. The third bit of evidence is the statement of accounts from the bank’s records. The trial court has taken the outstanding balance of the loan amount as income. The High Court, however, in a glaring error, takes into account only the first piece of evidence i.e. the loan amount requested by Sudhakaran, which was not even sanctioned in full.

    Another glaring error in the loan table is that of item number 3 – a loan of Rs 90 lakhs taken by Jayalalithaa from Indian Bank. The HC has taken this into account despite that loan having been sanctioned in August 1996, after the ‘check period’ of the case, i.e. after her first term as Chief Minister of the state had ended.

    “There are a number of apparent errors in the High Court’s treatment of the funds that need to be gone into,” said Supreme Court lawyer Karuna Nundy.

    • Raman says:

      What is the status of this case? Last time, the SC gave instructions to Kar HC to complete the case in 3 months, now SC is taking it’s own time….When is this case coming in SC…did DMK and Kar filed their response?

      • flash says:

        As deliberately delayed by kar Govt and DMK due to the forecast news abt Dutt’s retirement on Dec2015. After his retirement it may benefit to appellants .Meanwhile there is a ray of hope of next hearing of this case in the mid of Oct and after that only We could know whether DMK and Kar Govt is fit for APPEAL. Once this stage is over it is better to lengthen the second hearing after Dec2015 .Then only DMK will get it’s purpose.Let us wait and see…

        • Raman says:

          What kind of judiciary system we have…it is shame…even if the whole world knew, the judgmental errors in Kar HC “kuppa samy” AKA kumarasamy, our dis”HONORABLE” SC Judge could not stop JJ from becoming CM….What kind of “corrupt” free govt we have, the PM screams…BJP is for anti-corruption…without any shame PM tweets congratulating “The corrupt CM of TN”…. If we observer….Mr.Subramanian Swamy did nothing, when BJP govt withdrew IT cases against JJ…..

        • Raman says:

          It may be not good….the delaying tactic may backfire…The next SC judge T.S. Thakur recuse himself….http://www.dnaindia.com/india/report-jayalalithaa-case-deferred-after-supreme-court-judge-opts-out-1607043

          • flash says:

            As I told the next hearing comes on Oct 12 th . DMK and Kar Govt now files petition and seeks 6 weeks time for counter and thereby extending it to max period that will definitely favor them.

        • Raman says:

          You are right. Now the case is adjourned till Nov 23.

          • flash says:

            Now it is benefit to DMK side as they drag it to till Dec 2015 and afterward get favorable judgement WAIT and SEE..

    • Raman says:

      After all the drama of SC – not hearing DMK arguments….giving enough clues…in observations by SC judges….delaying the verdict….can we still expect the SC will punish the guilty?…When can we expect the verdict? Any news regarding this….seems no one is interested in this anymore…….

  5. flash says:

    #jayalalithaa jaya’s tricky affidavit shows value of kodanaadu estate just 3.15Cr see here at

    http://jayaverdict.blogspot.in/p/jaya-affidavits-compar.html

    • Raman says:

      What is the status of this case? Last time, the SC gave instructions to Kar HC to complete the case in 3 months, now SC is taking it’s own time….When is this case coming in SC…did DMK and Kar filed their response?

  6. வெங்காயம் says:

    இந்திய தொலைக்காட்சி sorry நீதி துறை வரலாற்றிலே முதன் முறையாக TOP 5 ரேங்க்ல் வந்த பழுதுபட்ட தீர்ப்பில் அய்யாகுமாரசாமி http://jayaverdict.blogspot.in/p/ranking-of-thisverdict.html

  7. Raju says:

    1,068 பக்கங்களில் என்ன இருக்கிறது ?

    ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதிக் களமாக உச்ச நீதிமன்றம் இருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 22-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டுவிட்டது. இதே வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யா இப்போது மனுதாரர். ஆச்சார்யாவின் சார்பில் வழக்கைத் தாக்கல் செய்துள்ளவர் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில்.

    1,068 பக்கங்கள் கொண்ட மேல்முறையீட்டு மனுவில், 1,002 பக்கங்கள் வரை வழக்கின் வரலாறும், நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பின் மொத்த நகலும் இணைக்கப்பட்டுள்ளது. 1,003-ம் பக்கத்தில் இருந்துதான் மேல்முறையீட்டுக்கான காரண காரியங்களை ஆச்சார்யா அடுக்கி உள்ளார். அதன் உள்ளடக்கத்தைப் படிக்கும்போது திகிலாக இருக்கிறது.

    நீதியை கல்லறைக்கு அனுப்பிய தீர்ப்பு

    கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில், ஆவணங்களின் முக்கியத்துவம், ஆதாரங்களின் உறுதி, சாட்சிகளின் நேர்மை முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு உள்ளன. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. தமிழக அரசு தன்னிச்சையாக அரசு வழக்கறிஞரை நியமித்ததில் தொடங்கி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்ததில் பல குளறுபடிகள் நிகழ்ந்தன. அவற்றில் தலையிட்டு நீதிபதி குமாரசாமி, ஒருமுறைகூட கறார் காட்டவில்லை. மேலும், ‘பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தது செல்லாது’ என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் எப்படித் தீர்ப்பளிக்க வேண்டும் என்று, நீதிபதி குமாரசாமிக்கு பல வழிகாட்டுதல்களை எடுத்துரைத்தது. அதில் ஒன்றைக்கூட அவர் கடைப்பிடிக்கவில்லை. மொத்தமாக நீதியைக் கல்லறைக்கு (grave miscarriage of justice) அனுப்பி சமாதி கட்டிய தீர்ப்பாக குமாரசாமியின் தீர்ப்பு உள்ளது.

    சில ஆயிரங்களும் பல கோடிகளும் ஒன்றா?

    ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்வதற்கு அக்னிஹோத்ரி வழக்கை முன்னுதாரணமாகக் காட்டி உள்ளார் நீதிபதி குமாரசாமி. அந்த வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக அக்னிஹோத்ரியிடம் இருந்த சொத்து மதிப்பு வெறும் 11 ஆயிரத்து 350 ரூபாய். அது சேர்க்கப்பட்ட காலம் 13 ஆண்டுகள். சொத்து சேர்க்கப்பட்ட காலத்தை ஒப்பிடும்போது அக்னிஹோத்திரியின் வருமானம் மிகக்குறைவு. அதனால்தான் அந்த வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டார். ஜெயலலிதா வழக்கில் வருமானம் பல கோடிகள். அது ஈட்டப்பட்ட வருடங்கள் மிகக் குறைவு. அதுவும் 1947 சட்டப்படி தான் அக்னிஹோத்ரி விடுதலை செய்யப்பட்டார். அதன்பிறகு, ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ஆக என சட்டம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. அதில், பிரிவு 13 (1) (e) நியாயமான வருமானம் என்பது ‘நியாயமான வழிகளில் வந்த வருமானம் மட்டுமே’ என்று தெளிவுபடுத்தி உள்ளது. மேலும், வருமானத்துக்கு அதிகமாக ஏதாவது சொத்துகள் பொது ஊழியருக்கு வரும்போது, அதுபற்றி அவர் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு உரிய தகவல்களைத் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும் என்றும் வரையறுத்துள்ளது.இதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.

    ஆதாரங்கள், ஆவணங்கள், சாட்சிகள் புறக்கணிக்கப்பட்ட தீர்ப்பு நீதிபதி

    குமாரசாமி தனது தீர்ப்பில், கட்டடங்களின் மதிப்பீடுகள் (பக்கம் 776 முதல் 797), வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவுகள் (பக்கம் 797 முதல் 843), கடன் மூலம் வந்த வரவுகள் (பக்கம் 850 முதல் 852), திராட்சைத் தோட்ட வருமானம் (பக்கம் 853), பரிசுப் பொருள்கள் மூலம் வந்த வருமானங்கள் (பக்கம் 853 முதல் 854), சசி என்டர்பிரைஸஸ் (பக்கம் 854 முதல் 860), ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் மூலம் வந்த வருமானங்கள் (பக்கம் 860 முதல் 876), சூப்பர் டூப்பர் டி.வி (பக்கம் 876 முதல் 883), வாடகை வருமானம் (பக்கம்-883) ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளார். ஆனால், இதுபற்றிய ஆதாரங்களும் ஆவணங்களும் ஏராளமாக இருக்கும்போது அவற்றை எல்லாம் சரியாகப் பரிசீலிக்காமல் தவறு செய்துள்ளார்.

    கட்டடங்களின் மதிப்பீடுகள்

    ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கட்டடங்களின் மதிப்பு என அரசுத் தரப்பு 28 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரத்து 430 ரூபாயைக் கணக்கிட்டது. அதனைத் தீர ஆராய்ந்து அந்தத் தொகையில் இருந்து 20 சதவிகிதத்தை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து, 22 கோடியே 53 லட்சத்து 92 ஆயிரத்து 344 ரூபாயைக் கட்டடங்களின் மதிப்பாக எடுத்துக்கொண்டது.

    ஆனால், நியாயமான கணக்கீடுகள், மதிப்பீடுகள், கட்டடங்களின் ஆடம்பரத் தன்மை, கட்டடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கிரானைட்கள், மார்பிள்கள், அதில் செய்யப்பட்ட வேலைப்பாடுகள், கட்டடங்களில் இருந்த சொகுசு இருக்கைகள், நாற்காலிகள், மேஜைகள், அவற்றின் கலை வேலைப்பாடுகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு, ஒரு சதுர அடிக்கு 28 ஆயிரம் ரூபாய் என தட்டையாக நீதிபதி குமாரசாமி கணக்கிட்டுள்ளார். பொதுப்பணித் துறை பொறியாளர்கள், போயஸ் கார்டன் இல்லத்தின் மதிப்பு 7 கோடி ரூபாய் என்று கணக்கிட்டனர். இந்த மதிப்பீடு மிகவும் அதிகம் என்று குறிப்பிட்ட நீதிபதி குமாரசாமி, மொத்தமாக 17 கட்டடங்களையும் ஒரே மதிப்பில் கணக்கிட்டுள்ளார். 17 கட்டடங்களின் தன்மைகளும் வேறானவை. அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருள்களின் தரம் வேறு வேறானவை. அதில் இடம் பெற்றுள்ள வேலைப்பாடுகளின் கலைநயம் வித்தியாசமானவை. அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் அனைத்துக்கும் ஒரே தொகையை நிர்ணயித்து கணக்கிட்டது நேர்மையற்ற கணக்கீடு.

    இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதா தரப்பு சிறப்பு நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த சாட்சியத்தில், தங்களின் கட்டட மதிப்பு ரூ.8 கோடியே 60 லட்சம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால், குற்றவாளிகள் சொன்ன மதிப்புக்கும் குறைவாக நீதிபதி குமாரசாமி மதிப்பிட்டது முறையற்றது.

    சுதாகரன் திருமணச் செலவுகள்

    ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவாக அரசுத் தரப்பு கணக்கிட்ட தொகை 6 கோடி ரூபாய். ஆனால், சிறப்பு நீதிமன்றம் மூன்று கோடி ரூபாயை மட்டும் சுதாகரன் திருமணச் செலவாக எடுத்துக்கொண்டது. நீதிபதி குமாரசாமி, வெறும் 28 லட்சம் ரூபாயை மட்டும் திருமணச் செலவாகக் காட்டுகிறார். ஜெயலலிதா வருமானவரித் துறைக்கு அளித்த விவரங்களின் அடிப்படையில் இதை எடுத்துக்கொண்டதாக அவர் குறிப்பிடுகிறார். ஆனால், ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குமூலத்திலேயே, “சுதாகரன் திருமணத்துக்கு தன்னுடைய செலவு 29 லட்சத்து 92 ஆயிரத்து 761 ரூபாய்’’ என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் சொன்ன வாக்குமூலத்தைக்கூட ஏற்காமல், அதையும்விட குறைவானத் தொகையைக் கணக்கிட்டு குற்றவாளிகளை விடுதலை செய்தது தவறான சட்ட நடைமுறை.

    கடன் மூலம் வந்த வருமானங்கள்

    மிக மிக முக்கியமான பகுதி இது. தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களின் மூலம் அவர்களுக்கு 27 கோடியே 17 லட்சத்து 31 ஆயிரத்து 271 ரூபாயை கணக்கில் எடுத்துக்கொண்டு, அதில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை கணக்கிட்டு வைத்திருந்த தொகை 5 கோடியே 99 லட்சம் ரூபாயை கழித்துவிட்டு, 18 கோடியே 17 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயை கடன் மூலம் வந்த வருமானமாகக் காட்டி உள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துப்படி, 10 தேசிய வங்கிகளில் இவர்கள் வாங்கிய கடன் தொகையைக் கணக்கிட்டால், 10 கோடியே 67 லட்சத்து 31 ஆயிரத்து 271 ரூபாய் மட்டுமே வருகிறது. இந்தத் தொகை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சொன்ன தொகையோ அல்லது அரசுத் தரப்பு சொன்ன தொகையோ அல்ல. நீதிபதி குமாரசாமி போட்டுக் காட்டி உள்ள அட்டவணைப்படி கணக்கிட்டாலே 10 கோடிதான் வருகிறது.

    அப்படி இருக்கும்போது, அவர் 27 கோடி என்று கணக்கிட்டுள்ளார். இந்தப் பிழையைச் சரி செய்தால், மொத்தக் கணக்கீட்டில் அடியோடு மாற்றம் வருகிறது. அதாவது கடன் மூலம் குற்றவாளிகளுக்கு வந்த வருமானம் வெறும் 4 கோடியே 67 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்று தெளிவுபடுகிறது. இதன்படி கணக்கிட்டால், குற்றவாளிகளின் முறையற்ற வருமானம் 76.7 சதவிகிதம் என்றாகிறது. அப்படி ஆகும்போது, ஜெயலலிதாவிடம் இருந்த வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு வெறும் 8.12 சதவிகிதம் என்பது தவறாகி, அவரை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்ததும் தவறாகிவிடுகிறது.

    குற்றவாளிகள் தேசிய வங்கியில் வாங்கிய கடன்களை ஏற்கெனவே சேர்த்துக் கணக்கிட்டுத்தான் அரசுத் தரப்பு அவர்களுக்கு கடன் மூலம் வந்த வருமானம் என்று 5 கோடியே 99 லட்சம் என்று காட்டி உள்ளனர். ஆனால், நீதிபதி குமாரசாமி அதைப் புரிந்துகொள்ளாமல் இரண்டு முறை இந்தத் தொகையை கணக்கில் சேர்த்துள்ளார். இந்தத் தவறைச் சரி செய்தால், குற்றவாளிகள் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 126.19 சதவிகிதமாக வரும். இப்படி எந்தக் கணக்கின்படி பார்த்தாலும் குற்றவாளிகளை அக்னிஹோத்ரி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது. கடன் மூலம் பெற்ற வருமானங்களைக் கணக்கிட்டதில் ஒட்டுமொத்தமாக நீதிபதி குமாரசாமி தவறிழைத்து, அந்தத் தவறையே சரியெனக் காட்டி குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளார். இந்த ஒரு காரணத்தை வைத்தே, குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுதலையை ரத்து செய்யலாம். அதற்கு இதுவே போதுமானது. அப்போதுதான் நீதி கேலிக்குரியதாக மாற்றப்பட்டுள்ள நிலையில் இருந்து மீண்டு வரும்.

    திராட்சைத் தோட்ட வருமானம்

    ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து வந்த வருமானமாக அரசுத் தரப்பு 5 லட்சத்து 78 ஆயிரத்து 340 ரூபாய் என்று கணக்கிட்டது. ஆனால், ஜெயலலிதா தரப்பு தங்களுக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து 52 லட்சத்து 50 ஆயிரம் வருமானம் வந்ததாக சொன்னார்கள். இரு தரப்பின் வாதங்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மற்றும் விவசாய அதிகாரிகள் கணக்கிட்ட மதிப்பீடுகளை தீர ஆராய்ந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, திராட்சைத் தோட்டத்தில் இருந்து ஜெயலலிதாவுக்குக் கிடைத்த வருமானம் 10 லட்ச ரூபாய் எனக் கணக்கில் எடுத்துக்கொண்டார். ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி இவற்றில் எதையும் கருத்தில்கொள்ளாமல், காலம் கடந்து தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் வருமானவரிக் கணக்கை மட்டும் கருத்தில் கொண்டு 46 லட்சத்து 70 ஆயிரத்து 600 ரூபாய், ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து வருமானம் வந்ததாகக் கணக்கிட்டுள்ளார்.

    கிரிமினல் வழக்குகளைப் பொறுத்தவரை, நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள், சாட்சிகளின் உண்மைத் தன்மையைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் சட்ட விதிமுறை. ஆனால், இந்த வழக்கில் அதை மீறி, வருமானவரி அதிகாரிகள் அளித்த சான்றுகளின் அடிப்படையில் நீதிபதி குமாரசாமி கணக்குப் போட்டுள்ளார்.

    பரிசுப்பொருள் மூலம் வந்த வருமானங்கள்

    ஜெயலலிதாவுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வருமானம் அவருடைய 44-வது பிறந்த நாளுக்குப் பரிசுப்பொருளாகக் கிடைத்துள்ளது. அதில் தவறில்லை என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில், சி.பி.ஐ லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன்படி ஒரு பொது ஊழியர் பரிசுப் பொருள் பெறுவது குற்றம் என்று வழக்குத் தொடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால், அந்த வழக்கை காலம் கடந்து தொடுக்கப்பட்ட வழக்கு என்று சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. சி.பி.ஐ சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, இந்த நீதிமன்றத்தில் (உச்ச நீதிமன்றத்தில்) வழக்குத் தொடுத்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த விவரங்கள் எதையும் எதிர் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் மறைத்துவிட்டனர்.

    ஊழல் தடுப்புச் சட்டம் 13 (1) (e), ஒரு பொது ஊழியர் பெறும் பரிசுப் பொருள்கள் பற்றிய விவரங்களை உரிய முறையில் தகவலாக சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிறது. ஆனால், இந்த வழக்குத் தொடுக்கப்படும் வரை, ஜெயலலிதா, தான் பரிசுப் பொருள் பெற்ற விவரத்தை அரசாங்கத்துக்குத் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக சி.பி.ஐ வழக்கு நிலுவையில் இருக்கும் விவரத்தையும் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கவில்லை.

    சசி என்டர்பிரைஸஸ்

    சசி என்டர்பிரைஸஸ் நிறுவனத்தில் இருந்து தங்களுக்கு 95 லட்சம் வருமானம் வந்தது என்று எதிர்தரப்பு தெரிவித்தது. அதில் வாடகை வருமானம் தனியாக 12 லட்சம் ரூபாய் கிடைத்தது என்றும் தெரிவித்தது. ஆனால், அரசுத் தரப்பு 6 லட்சம் ரூபாயைக் கணக்கில் எடுத்துக் கொண்டது. ஆனால், இரண்டு தரப்பு சொன்னதற்கும் ஆதாரமாக எந்த ஆவணங்களையும் சிறப்பு நீதிமன்றத்தில் இருவராலும் சமர்ப்பிக்க முடியவில்லை. அதனால், சிறப்பு நீதிமன்றம் அந்தத் தொகையை தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி, அதைக் கணக்கில் கொள்ளாமல் வெறும் யூகத்தின் அடிப்படையில் சசி என்டர்பிரைஸஸ் நிறுவனத்தில் இருந்து குற்றவாளிகளுக்குக் கிடைத்த வருமானம் என்ற வகையில் 25 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டுள்ளார்.

    ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் வருமானம்

    நமது எம்.ஜி.ஆரில் இருந்து தங்களுக்குக் கிடைத்த வருமானம் ஒரு கோடியே 15 லட்சம் என்று ஜெயலலிதா சசிகலா இருவரும் எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி நமது எம்.ஜி.ஆரில் இருந்து அவர்களுக்குக் கிடைத்த வருமானம் என்று 4 கோடி என்று கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளார். தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவர்களே சொன்ன வருமானத்தைக் காட்டிலும், நீதிபதி அவர்களுக்குச் சாதகமான வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார். அதுவும் காலம் கடந்து பல ஆண்டுகள் கழித்து தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி ஆவணங்களின் அடிப்படையில் இதை நீதிபதி எடுத்துக்கொண்டுள்ளார். ஆனால், நமது எம்.ஜி.ஆர் திட்டம் மற்றும் அதன் சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தில் இருந்த நம்பகமற்ற தன்மை மற்றும் அந்தத் திட்டத்தில் இருந்த போலித்தன்மை ஆகியவற்றை கருத்தில்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ‘இந்தத் திட்டம் போலியானது. இதில் சொன்ன சாட்சிகள் பிறழ்சாட்சிகள்’ என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    சூப்பர் டூப்பர் டி.வி

    சூப்பர் டூப்பர் டி.வி மூலம் தனக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக சுதாகரன் தெரிவித்தார். ஆனால், சூப்பர் டூப்பர் டி.வி மூலம் சுதாகரனுக்கு கிடைத்த வருமானம் என்று அரசுத் தரப்பு 9 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டது. ஆனால், எந்த ஆவணங்களையும் பரிசீலிக்காமல், சுதாகரன் சொன்னதையே நீதிபதி கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார்.

    சொத்துகள்…

    அசையா சொத்துகள் மொத்தம் 146 என்று சிறப்பு நீதிமன்றம் கணக்கிட்டுள்ளது. ஆனால், அதில் எந்தவிதமான குறையும் இல்லாத நிலையில் 49 சொத்துகளை எந்தக் காரணமும் இன்றி நீதிபதி குமாரசாமி நீக்கிவிட்டார். எதற்காக அவற்றை நீக்கினார் என்று அவர், அவருடைய தீர்ப்பில் எந்த இடத்திலும் விளக்கவில்லை. வெறும் 97 சொத்துகளை மட்டும் கணக்கில் கொண்டுள்ளார். மேலும், அந்தச் சொத்துகளின் மதிப்பாக எதிர்தரப்பு நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட தொகையே 16 கோடி. ஆனால், உயர் நீதிமன்றம் வெறும் 6 கோடி ரூபாயை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.

    இதுபோன்ற குளறுபடிகளால், எதிர்தரப்பு முறைகேடான வழிகளில் சம்பாதித்த சொத்துகளாக ஆதாரப்பூர்வமாக அரசுத் தரப்பு நிரூபித்த 60 கோடி ரூபாயை, நீதிபதி குமாரசாமி வெறும் 37 கோடி ரூபாய் என்று குறைத்துக் காட்டி உள்ளார்.

    – இவ்வாறு பட்டியல் போட்டுள்ளது அப்பீல் மனு. நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை வரிக்கு வரி விமர்சித்து இந்த மனுவைத் தயாரித்துள்ளார் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா.

    Source: http://www.vikatan.com/article.php?module=magazine&aid=107661

    • வெங்காயம் says:

      மிக சரியாக சொன்னீர்கள் …!!1இதோடு இப்ப லேட்டஸ்ட் ஒன்றையும் சேர்த்தால் அதுவும் ஒரு முக்கிய ஆவணமாக ஆகி விடும் அது தான் வேட்பு மனு தாக்கலின் போது அவரே தெரிவித்த affidavit போயஸ் கார்டன் மட்டும் 45 கோடி என மதிப்பீடு செய்ய தெரிந்தவருக்கு கொடநாடு எஸ்டேட் இன் உண்மையான மதிப்பு தெரியாதா.? பாருங்க affidavit யில் பொய் சொல்லி உள்ளதை :-https://goo.gl/2LjXpd இதையும் அப்பீல் இல் சொல்லி இருந்தால் …விஷயம் தீவிரமாகி விடும்

    • வெங்காயம் says:

      இந்திய தொலைக்காட்சி sorry நீதி துறை வரலாற்றிலே முதன் முறையாக TOP 5 ரேங்க்ல் வந்த பழுதுபட்ட தீர்ப்பில் அய்யாகுமாரசாமி http://jayaverdict.blogspot.in/p/ranking-of-thisverdict.html

  8. Raju says:

    The Wire had earlier this month reported on the four main inconsistencies in the High Court’s verdict which had allowed Jayalalithaa and others to be acquitted. But there is one more large and inexplicable error in the High Court verdict, say legal experts.

    Since the fundamental determinant of the accused persons’ disproportionate assets hinges on their spending more money during the impugned period than their declared sources of income, the acquittal turned on the curious tabulation of expenditure made by Judge Kumaraswamy — especially the money spent on construction costs

    On Page 797 in the High Court order acquitting Jayalalithaa – after a lengthy discussion of the arguments of the prosecution, the defence and the trial court order – Judge Kumaraswamy puts the costs incurred in the construction and renovation of various buildings at Rs 5,10,54,060 (Rs 5.1 crores).

    On comparing the High Court’s tally with the written submissions made by the defendants, in this case Jayalalithaa and her close aide Sasikala, a peculiar situation arises.

    Item number 51 in the written submission of Jayalalithaa clearly states that she has admitted to expenditure of Rs 3,62,47,700 (Rs 3.6 crores) towards construction costs in Poes Garden and a farmhouse in Hyderabad.

    Similarly, a tabular column detailed in the written submission of Sasikala shows that she and another accused, J Elavarasi, have admitted to expenditure of Rs 5,05,59,419 (Rs 5 crores) towards construction costs of various buildings.

    The sum total of the construction costs admitted to by the defence is thus Rs 8,68,07,119 (Rs 8.6 crores).

    The Wire cross-checked this tally with the written submissions made by the defendants to the Karnataka High Court. Again, a tabular column under the heading “Value of the assets according to the accused under following heads as shown in Page 711 of the trial court judgement” shows clearly the defence claim on the amount spent towards construction costs. The defence clearly states that they have spent a total of Rs 8,60,59,261 (Rs 8.6 crores) in their submission to the High Court too.

    Strangely enough, the High Court has decided that the defendants have in fact spent less than the amount that they have themselves admitted to. Judge Kumaraswamy has stated in his order that the defendants have spent only Rs 5.1 crores, reducing costs incurred by the defendants by about Rs 3.5 crores.

    More costs incurred by the defendants would mean a higher amount of expenditure that would need to be explained to the courts. The trial court on Page 711 held that Jayalalithaa and others had spent Rs 22,53,92,344 (Rs 22.5 crores) on construction and renovation of various buildings. The defendants disagreed and said they had spent Rs 8.6 crores only. The Karnataka High Court disagreed with both and said Jayalalithaa and others had spent only Rs 5.1 crores.

    “This is really strange,” said a retired High Court judge. “The judge has gone neither by what the prosecution says, nor by the defendants. This is a clear example of a case where the evidence needs to have been scrutinized thoroughly. Errors like this will creep in otherwise,” he said.

    http://thewire.in/2015/06/01/flawed-jayalalithaa-verdict-finally-heads-to-supreme-court/

    • flash says:

      #jayalalithaa jaya’s tricky affidavit shows value of kodanaadu estate just 3.15Cr see here athttp://jayaverdict.blogspot.in/p/jaya-affidavits-compar.html

      • Raman says:

        It seems it is total waste…..in every court there are kumarasamies…..updated news is that, SC does not take the case on 8th of jan 2016 as scheduled earlier.

        • flash says:

          February onwards day to day hearing starts. So there is no need to loose hope.

          • Raman says:

            Thanks for the reply. Yes. Just read the news….

          • Raman says:

            After all the drama of SC – not hearing DMK arguments….giving enough clues…in observations by SC judges….delaying the verdict….can we still expect the SC will punish the guilty?…When can we expect the verdict? Any news regarding this….seems no one is interested in this anymore…….

          • Anonymous says:

            Yes u are correct But it seems to be another Grand father and Daddy of Kumarasaamy may be created in SC judges too due to foul play played in the APEX court by Jaya team from Delhi circle . So we are loosing hope day by day…

    • flash says:

      tell how Jaya could buy this 800 acres Estate at kodanaad while she was salaried at that time with Re1/mo and she herself declared that she was salary less in her Income statement in the year 1995 and in the same year ,when she purchased this biggest asset worth Rs .4000Cr value in her name ..? http://jayaverdict.blogspot.in/p/jaya-asset.html

    • flash says:

      #jayalalithaa jaya’s tricky affidavit shows value of kodanaadu estate just 3.15Cr see here at

      http://jayaverdict.blogspot.in/p/jaya-affidavits-compar.html

  9. Vaasagan says:

    Mr.David Ibhrahim,

    I have couple of questions about your Islam, since you wanted to spread Islam to the world

    1. why God chooses MoohMAD to be messenger on what quality , illiterate, not successful in any venture not a warrior, not a good soul, never heard of anything good like Jesus or any other apostles .. or saints, like Budha or any other Hindu saints..
    2. If God wanted to tell a message why can say the message to his own people he can declare it directly to them why would he need a messenger or a power broker like Neera Radia.
    3. If the god can’t be seen by any one. how MoohMAD did see the god… because he himself said , we can’t see him. – what makes him what he saw or visualize was god.. what is the proof..your way of asking?
    4. why Gabriel was the chosen on to teach MoohMAD – what kind of qualities he possess to teach Peace and Love or harmony ( that’s why Islam become Piece and brute) .
    5. Islam is the only fascist method (its not religion – it never ever talk about theology or achieving or reaching god rather than fucking and screwing young girls and boys ) forcing people Slavery – cruelest of all man made discriminating practices to fellow human beings.
    5. who said Islam has no Caste system – you know its haram to touch a an Arab by non believers, Arabs don’t allow to touch their dead bodies by non Muslims. MoohMAD is came from a low caste and used to be slaves, but when he grabs power he does enslave thousands, rape women ,kids and kill .
    6. At least in Christianity Jesus himself never does any mistake against another fellow human being ,esp women and children.. and never acquire wealth, lived with only one women – The devil in Christianity is the churches. – Jesus never wanted to take the messiah to other regions than Israel. Only the Romans used to trick the people to get away worshiping Caligula. Constantine used Jesus name to unite the anti Caesar forces. Evil churches took the opportunity to grab power, crusades and colonization started from there.
    7. Can a non Muslim walk or live in Mecca esp in an around the Abraham – grave what you call Kaaba, which is actually dead body worship, Christians don’t do that , Jews don’d do that. worst according to Jews and Christians books Abraham never reached Meeca.. who’s Khabarstan is there. May be MoohMADs girl friend.

    8. Do you know exactly when MoohMAD was born and MoohMAD’s Mothers husband died ( he died two years before he was born in Syria -Sham ) on a business trip. How he was conceived and who is his real father. if you know for sure let us know.

    9. Can you marry an Arab Muslim women , even she is poor or widow or divorced. try it in Gulf and let us know. can you allow your family women to marry a Dalit muslim. even now Urdu Muslims don’t marry or allow to marry Tamil or leppai muslims , who converted their religion for money , gulf job or marrying more women. Do you know the tribal islamic arabs live is saudi can never become citizen of S Arabia or nor carrying a legal office. you know why…?

    10. what is the contribution of Muslims to the world, any medicine , science , technology, literature or anything to save human being from extinction or mass death.
    11. why the God is so Idiot he lost his teachings by messenger after messenger and till chooses and illiterate crude nature man to his disciple , and people around him write Quran in bones and wood and slate stones, deer skins… some one here is having lot of fun about qurans origin… it means no one on his followers has any knowledge of documenting any such a holy holy stuff – words of god directly given – who is Gabriel here….
    12. Quran was compiled by people after the death of MoohMAD 100 years latter none of them were alive , it was done by latter caliphates not by MoohMAD or his followers. how much is original how much is who made up what ..

    13. Don’t use Thiru quran Thiru is a goddess laxmi’s name , you can’s use the word in a religion there is no respect for women or no way of using kaffir gods… neither do vedas or Marai they do also have only to mention hindu texts not even buddhists using such name . you can call holy quran or Punitha quran.. like the Christians call it Holy Bible.. not Vedas or Marai..

    14. and about your Evil world power , you never going to achieve any such all your tentacles will be chopped and every country in the world going to kick out the Mullahs soon. lets see what the Arabs going to do on that day… I Know they wont take a single muslim to their country as citizen

    15. Misquote about EVR.. he married to a women of his own caste not any low class or not even a Tamil girl, he was telugu and married to telugu naicker. he speaks for others not for himself. and again he married only to take the ancestor property back from the society , contributed by his parents , with the help of Rajaji not for any other great cause. he never contributed any of his wealth to any low cast or poor people, most of his wealth is maintained by Veeramani now.

    16. about Carl Marx – he is nor Aryan or German – He is a German born Jew. you Arab Masters cousins as per arabs , Jews never consider Arabs as cousins.
    17. for your sake MoohMAD was a Jewish clan, and kings of Saudi is Jewish they are not Arabs but Turkish Jews. why no Saudis grow ugly beard while India and pakistan muslims grow.

    18. How come none of the Muslims who does terrorist activist are the real muslims, who claims they are from Arabia by family name, for example in Madurai MoohMAD Ali was a hindu low cast guy , in every suicide attempt all the muslims are low class, even the Kasab guy is a low class muslim. while the upper class muslims and arabs, mongoal muslims safe home and play the game behind the scene.
    Is this the equality of islam..

  10. வெங்காயம் says:

    ஏன் இஸ்லாமும் குரானும் வேண்டாம் [ பகுதி 1]
    —————————————————————————————————
    உப தலைப்பு: அரசியல் காரணம்
    பக்கம் 2 தொடர்ச்சி…..
    ==================================
    மேற்சொன்ன கட்டுரை இந்த comments பகுதியில் தொடர்வதாக இருந்தது. ஆனால் முழு வடிவ கோப்பாக மாற்றிய பின்னர் இன்னும் சில கால இடைவெளிக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.எப்போது வெளியிடப்படும்என்பது….!!!
    முக்கிய காரணங்கள் :
    1] இக்கட்டுரை நீண்ட விளக்கம் கொண்ட ஒரு நெடுந்தொடர் இதன் கட்டுரை நீள அளவீடு கருதி இதனை PDF கோப்பாக மாற்றி சவுக்கின் வாசர்களுக்கு சில கால இடைவெளி விட்டு தெரிவிக்கப்படும்..
    2] இரண்டாவது முக்கிய காரணம் இப்போது ரமலான் காலம் என்ன தான் நான் இந்த கட்டுரை இஸ்லாத்துக்கும குரானுக்குமேதிராக இருந்தாலும் நான் சொல்லுகிற MODERN rationalist அரசியல் சித்தாந்தம் என்பது ஒரு நீண்ட நெடிய பயணம் அதில் இலக்கு எட்டப்படும் வரைக்கும் இங்கு உள்ள இஸ்லாமியர்களும் ஹிந்துக்களும் எனது நண்பர்கள் தான் இங்குள்ள எனது தொப்புள் கொடி உறவுகள் அனைவரும் நான் இருக்கும் இந்த இந்திய இன குழுக்களுள் இருக்கின்ற சொந்தங்கள் என்பதால் அவர்களது மத நம்பிக்கை இன்று உள்ள நிலவரப்படி மதித்து ஆக வேண்டும் என்கிற காரணத்தால் கட்டுரை வெளியிடுவதை சற்று தள்ளி வைக்கின்றேன்.. கட்டுரை தான் தள்ளி போகின்றதே தவிர நான் கொண்ட கொள்கைகள் அல்ல என்பதையும் நினைவில் வைக்கவும்
    என்னுள் உள்ள புத்தனும், வள்ளுவனும் மார்க்சும், பெரியாரும், வள்ளலாரும், சித்தரும் என்னை மனித நேய மாண்பினை உள்ளே இருந்து கட்டுப்படுத்துவதாலும் கட்டுரை இப்போதைக்கு வெளியிட வில்லை
    ஆனால் பொதுவான விவாதம் இந்த பகுதியில் தொடரும் அதற்கு எந்த தடையும் இல்லை.
    உடல் வருத்தி நோன்பு இருக்க போகும் இஸ்லாமிய நண்பர்களுக்கு எனது அன்பும் பரிவும் கொண்ட ரமலான் வாழ்த்துக்கள்….!!!

    • தாவூத் இப்ராஹிம் says:

      // உடல் வருத்தி நோன்பு இருக்க போகும் இஸ்லாமிய நண்பர்களுக்கு எனது அன்பும் பரிவும் கொண்ட ரமலான் வாழ்த்துக்கள்….!!! //
      ————–

      அசத்திவிட்டீர். நமது கருத்தை எடுத்து சொல்லலாம். அதே சமயம் பிறருடைய நம்பிக்கையை மதிக்க வேண்டும். ஆத்திகரோ நாத்திகரோ, அனைவருக்கும் நம்பிக்கை உரிமையுண்டு. யாரையும் இழிவு செய்யக்கூடாது. எங்களுடைய ரத்தபந்தம், தொப்புள் கொடி உறவு சவூதிக்காரனோ அரபியோ கிடையாது. ஹிந்துக்கள்தான். ஆக கூட்டி கழித்து, நாமெல்லாம் சித்தப்பா பெரியப்பா குழந்தைகள்தான்.

      நீங்கள் சமத்துவத்துக்காக போராடுவதை நான் வரவேற்கிறேன். “ஏழையின் பசியை உணர நோன்பு வை. உனது வருட வருமானத்தில் 2.5 சதவீதத்தை எழைகளின் வரியாக செலுத்து” என அல்லாஹ் திருக்குரானில் கட்டளையிடுகிறான். இந்த ரமலான் மாதத்தில், உங்களுடைய வீட்டிற்கு அருகேயுள்ள பள்ளிக்கு சென்று இப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களை அன்போடு வரவேற்கிறேன். பெரியார் நோன்பு கஞ்சியை மிகவும் விரும்பி சாப்பிட்டார் என்பதை பதிவுசெய்ய விரும்புகிறேன். மாற்றுமத சகோதரர்கள் எங்களுடன் சேர்ந்து நோன்பு கஞ்சி குடிப்பதை நாங்கள் மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறோம்.

      “நபியே !!. நான் நினைத்திருந்தால் அனைவரையும் முஸ்லிமாக படைத்திருப்பேன். உங்கள் கடமை எடுத்து சொல்வது. அவர்கள் வழி அவர்களுக்கு. உங்கள் வழி உங்களுக்கு – லகும் தீனுக்கும் வலியத்தீன்” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான். எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழும் இந்தியா உருவாக அல்லாஹ் அருள் புரிவானாக.

  11. வெங்காயம் says:

    இன்னொரு பாகிஸ்தான் வேண்டும் என்கிறாய்…!!
    நாங்களோ இந்தியாவையோ United India ஆக ஆக்க வேண்டும் என்கிறோம். எங்களுக்கு இருப்பது வெறும் ஏட்டில் உள்ள கொள்கைகள் தான் ஆனால் உங்களுக்கோ பாரம்பரியாமான மத பின்னணி இருக்கிறது..அதில் இருக்கும் ஒவ்வருவருவரையும் இங்கே எங்கள் பக்கமும் அது போல ஹிந்து பூர்விக மதத்திலி இருந்து கிளப்பி எங்கள் பக்கத்தில்/இயக்கத்தில் சேர்ப்பது என்பதும் எவ்வளவு கடினமான காரியம் என்பதை நாங்கள் அறிவோம்….!!

    ஆனாலும் 200 வருடங்களான போராட்டத்திற்கு பின்னர் தான் உங்களுக்கு பாகிஸ்தானும் இங்கு பங்களாதேஷ்ம் கிடைத்தது. அதில் பங்களாதேஷ் வராற்றில் இன்னுமும் அரசியல் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது..
    உலகின் எட்டாவது அதிக சனத்தொகை கொண்ட நாடான வங்காளதேசம் மராத்தியப் பேரரசு காலத்தில், முகலாயர்கள் காலத்தில் வங்காள பூர்விக ஹிந்து மத இனங்களில் இருந்து மதம் மாற்றம் செய்யப்பட்ட முஸ்லிம் களை கொண்ட பெரு வாரியான முஸ்லிம்கள் திரும்பவும் தாய் மதத்திற்கு மாறியவர்கள் பெரும்பாலான ஹிந்துக்கள் இந்தியாவுடன் இணைந்து இன்றைய மேற்கு வங்காளத்தில் உள்ளனர் .. அதில் மதம் மாறிய பெரு வாரியான மக்கள்தொகை கொண்ட கிழக்கு பகுதி டாகாவை தலை நகராக கொண்டு பிரிந்தது தான் பங்களாதேஷ். டாக்காவைத் தலைநகராகக் கொண்டு கிழக்கு வங்காளம் (பின்னர் கிழக்குப் பாகிஸ்தான்) எனும் பெயரில், பாகிஸ்தானுடன் இணைந்தது.. ஆக என்ன சொல்ல வருகிறேன் என்றால் மதங்கள் மாறுவதும் ஒன்றும் பாவ செயல் இல்லை என்று அன்றே இஸ்லாமும் உணர்ந்திருந்தது அதனால் தான் இன்று மோடி அரசில் நிறைய இஸ்லாமியர்கள்[ முன்பு ஹிந்து வாக இருந்தவர்கள்] இப்போது பழைய படிக்கு தாய் மதம் மாறுகிறார்கள்..!! அது போல தான் எந்த மதமும் வேண்டாம் என்றோ அல்லது புத்தத மதத்திற்கு இணைகிறோம் என எங்களுடன் வரும் கூட்டம் வரும் நாள் இன்னும் அதிக தொலைவில் இல்லை…!!!
    இவர்களில் இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் தான் அதிகம்… ஒரு காலத்த்தில் இந்திய இன குழுக்களில் இருந்த மிக பெரும் பழங்குடிகள் தான் இவ்வாறு மதம் மாறியவர்கள். இவர்களுக்கென்று பூர்விக இன பாரம்பரியமும்[வங்கா இனம்] தனி மொழியான வங்க மொழியும் கொண்டவர்கள் தான் இந்த மக்கள்.. இக்காலப்பகுதியில், வங்காளி பேசும் மக்களின் அரசியல் குரலாக அவாமி லீக் எழுச்சி பெற்றது. யாஹ்யா கான் செய்த திடீர் தாக்குதலில் கைதான முஜிப் பின்னர் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கினங்க விடுவிக்கபட்டார்.இடையில் பல பல இடியாப்ப சிக்கலை கொண்டு அரசியல் பயணம் பங்களாதேஷ்ஷில இன்னும்ம் தொடர்கிறது. இதற்கிடையே தான். 1975ல் முற்பகுதியில், புதிதாக உருவாக்கப்பட்ட BAKSAL கட்சியை மட்டும் கொண்ட ஒருகட்சி சோசலிச ஆட்சியை ஏற்படுத்தினார். இது மாதிரியான ஒரு அமைப்பை நிறுவும் முயற்சில் ஈடுபடும் பொது இந்தியாவில் உள்ள பூர்விக இதிய இன குழுக்கள் [ இவர்களில் நிறைய பேர் ஹிந்து முஸ்லிம் கிருத்துவர் என பிரிந்து கிடக்கின்றனர். இவர்களை ஒருங்கிணைப்பது சாத்தியம். ஏன் என்றால் இவர்கள் அனைவரும் ஆரிய வருணாஸ்ரம சனாதான மனு தர்ம முறையின் படி தான் மதம் என்கிற வட்டத்துக்குள் வந்தவர்கள்
    அவர்களிடம் இருந்தது நான்கு உபாயங்கள்…பின்சொல்லப்பட்ட நான்கு வழிமுறைகளில் மாறியவர்கள் தான் ஹிந்து வில் இருந்து முஸ்லிம் ஆகவும் அல்லது ஹிந்து வில் இருந்து கிருத்துவர் ஆகவும் அல்லது முஸ்லிம் இல் இருந்து ஹிந்து ஆகவும் மாறியவர்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும்
    1 சாம
    2 பேத
    3 தான
    4 தண்ட
    வழிமுறைகள் தான் அவை…..!!!
    இவற்றில் சாம வேதம் மூலம் மாற்றபட்டவர்கள் தான் இன்றைய ஹிந்து மதத்துக்காரர்கள் [இவர்கள் ஒரு காலத்தில் இந்திய பூர்விக இனக்குழுக்கள்]
    இவற்றில் பேதம் மூலம் வளந்தவர்கள் தான் இன்று இந்தியாவில் உள்ள கிருத்துவர்…!!! ஹிந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் பேதைமை உண்டு பண்ணி வளர்ந்தவர்கள் தான் கிருத்துவர்கள் [ இந்தியாவை பொறுத்தவரை]
    இவற்றில் “தானம்: மற்றும் “தண்டம்” என்கிற வழிமுறைகளில் [ அரசியல் பண வசதியாலும், அரசியல் வாள் முனையிலும் தான். ] மாற்றப்பட்டவர்கள் தான் இன்றைய இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள். ஆக நீ சொன்ன 4௦ கோடி பேரில் குறப்பிட்ட சத வீதமும் ஏற்கனவே இங்கு உள்ள ஹிந்து மதத்தில் உள்ள கணிசமான [7௦ சதம் மேற்பட்ட] மக்கள் தொகை யில் அதிக சத வீதமும் கொண்ட சோசலிச ஆட்சி தான் முதலில் சேர்க்கப்பட வேண்டும் நான் சொன்ன MODERN rationalist இயக்கத்தில் ..!!.[ முஜிப் காலத்தில் உருவானதை போல ]
    அதற்கு எனக்கு உதவுபவர்கள் தான் நீங்கள் குரானில் தடை செய்யபட்டதாக கூறும் சுபி என்கிற sufist களை போல எங்களுக்கு பவுத்தத்தில் “ஜென்” [ZEN] துறவிகள் மற்றும் இங்கு வள்ளுவர் போல உள்ள சித்தர்கள் எல்லாம் தேவைப்படுவார்கள்…!!!
    சமணர்கள் தேவைப்படுவார்கள் …!!
    இவர்களை கொண்டு கட்டப்படும் புதிய அரசியல் சித்தாந்தத்தின் போது நிறைய பேர் மூன்று மதங்களில் இருந்து எங்கள் பக்கம் வருவார்கள் என்கிற நம்பிக்கை நிறையவே உள்ளது. .அப்போது United India உருவாக்குவதில் சிரமம் குறையும்..!!!

    • தாவூத் இப்ராஹிம் says:

      // நிறைய பேர் மூன்று மதங்களில் இருந்து எங்கள் பக்கம் வருவார்கள் என்கிற நம்பிக்கை நிறையவே உள்ளது. //
      ————

      ஹிந்து மதத்தை உடைத்துதான் இஸ்லாமும் கிருத்துவமும் வளர்ந்தது. இப்போழுது நீங்கள் நான்காவதாக ஒரு நாத்திக மதத்தை உருவாக்க முனைகிறீர். இஸ்லாத்தின் அடைப்படையே மதமாற்றம்தான். எங்களுக்கு போட்டியாக இன்னொரு மதம் வந்தால் மிகவும் நல்லது. எங்களால் வெளிப்படையாக இஸ்லாமிய பிரச்சாரம் செய்யமுடியும். எது பிடித்திருக்கிறதோ அந்த பக்கம் மக்கள் செல்லட்டும்.

      கருத்து சுதந்திரமும் மத சுதந்திரமும் மனிதனின் மூச்சு. எங்களுடைய இஸ்லாமிஸ்தான் கனவுக்கு உங்களுடைய போட்டி மிகவும் அவசியம். வாழ்த்துக்கள்.

  12. தருமபுரி இளவரசன் says:

    // குரானில் நீங்கள் சொன்ன இந்து மத ஜாதிகளோ இனமோ மொழியோ துவேஷம் இல்லை என கோட்பாட்டு அளவில் தான் உள்ளனவே ஒழிய நடைமுற என வரும் பொது ஒரு முஸ்லிமும் அதை கடைபிடிப்பதில்லை //
    ————

    இஸ்லாத்தால் ஜாதியை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. அதை விட அருமையான திட்டம் என்னிடமுள்ளது என்கிறாய் நீ.

    ஹிந்துக்களிடம் ஜாதியை எப்படி நீ ஒழிப்பாய்?. முதல் கட்டமாக என்ன செய்வாய்?. அதை மட்டும் சொல். மற்றவை அப்புறம் பேசலாம்.

    Please expain your first and foremost step to abolish caste from Hindus. After that, we shall discuss the rest.

    • வெங்காயம் says:

      simple thing is first you drop your BHAGAVTH GITA, BIBLE and Quran and become ATHEIST and follow Naveen Periyaarist.

      • Anonymous says:

        // simple thing is first you drop your BHAGAVTH GITA, BIBLE and Quran //

        அருமையான பாய்ண்ட். 40 கோடி முஸ்லிம்களிடம் திருக்குரான் உள்ளது. உயிரே போனாலும் சரி, இவர்கள் தங்களுடைய வேதத்தை விடமாட்டார். ஜிஹாத் செய்வர். இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்குவர்.

        உன்னால் திருக்குரானை தடைசெய்ய முடியுமா?.

        • வெங்காயம் says:

          இங்கு உள்ள முஸ்லிம்களும் கிருத்துவரும் 40 கோடி என்றால் அவர்களில் 39 கோடிக்கும் மேலே உள்ளவர்கள் அனைவரும் மதம் மாறியது குரானை பார்த்தோ அல்லது பைபிளில் மயங்கியோ அல்ல எல்லாம் காசு, துட்டு. டப்பு ,மணி, மணி,…..
          .. எப்ப அவர்களுக்கு அதை விட அதிகம் தருகிறேன் என்று இன்னொரு சித்தாந்தம் வாக்கு குடுக்கும் பொது அவர்களாகவே எல்லாத்தையும் போட்டு விட்டு வருவார்கள்.

          இங்கே அ தி மு க விற்கு ஓட்டு போடுவதை போல தான் 500ரூ தரும் இடத்தில் 1000 ரூ குடுக்கிறேன் என்றால் பல்லை இளித்து கொண்டு வரும்.!! இவர்களது இரத்தத்தில் கலந்திருப்பது பொருளாதாரமே அல்லாது வேற இல்லை…!! ஆகவே குரானை தடை செய்ய வேண்டிய அவசியமே எழாது மற்ற பைபிள் மற்றும் பஹவத் கீதைக்கும் இதே நிலை தான்..so very simple..!!!

          • தாவூத் இப்ராஹிம் says:

            // ஆகவே குரானை தடை செய்ய வேண்டிய அவசியமே எழாது மற்ற பைபிள் மற்றும் பஹவத் கீதைக்கும் இதே நிலை தான் //
            ———–

            அதாவது கிட்டத்தட்ட முழு இந்தியாவையும் ஒட்டுமொத்தமாக உன்னுடைய நாத்திக மார்க்கத்துக்கு “கர் வாப்ஸி” செய்ய ஒரு மாபெரும் திட்டம் வைத்திருக்கிறாய். நீ பெரிய கில்லாடிதான். அதாவது “மயிரைக்கட்டி மலையை இழுப்பேன். வந்தால் மலை, போனால் மயிர்” என்கிறாய். சரி ராசா. போய் காசு கொடுத்து கீதை, திருக்குரான், பைபிளை ஒழி. வாழ்த்துக்கள்.

    • வெங்காயம் says:

      நாயகன் படத்தில் வருவதை போல அவனை நிறுத்தத் சொல்லு நான் நிறுத்துறேன் என்று ஒருத்தரும் அவனை நிறுத்தத் சொல்லு நான் நிறுத்துறேன் என்று இன்னொருத்தரும் சொல்லி கொள்ளுவது போல ஒரே சீன வரும் . அதை போல தான் நீங்கள் ஹிந்துகளை பார்த்துசொல்லுவதும் அவர்கள் உங்ககளை பார்த்து சொல்லுவதும் உங்க இரண்டு பேரை பார்த்து கிருத்துவர்கள் சொல்லுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
      நான் என்ன சொல்லுகிறேன் என்றால் நீங்க மூன்று பேருமே நிறுத்துங்கள் நாஸ்திகராக மாறுங்கள் நவீன பெரியாரிஸ்ட் ஆக மாறுங்கள்
      ஒரு சிந்தனை வாதியாக திருத்தும் /பணியாகத்தான் ஆறாம் அறிவுக்காரர்கள் தமது சுய மரியாதை என்கிற இரத்தம் சுமந்த பகுத்தறிவு உடலை கட்டி காக்க வேண்டி பிரச்சார பயணம் செய்ய வேண்டி உள்ளது ..!!எங்களுக்கு பயணம் நிறைய மட்டுமல்ல பயண தூரமும் அதிகமாக இருக்கிறது காரணம் வருணாஸ்ரம இழிவுகளை மட்டுமே மைய ப்படுத்தி பகுத்தறிவு ஆசான் பயணப்பட்டார். அதன் காரணமாகவே மற்ற இரண்டும் [ இஸ்லாமும் கிருத்துவுமும் சந்தடி சாக்கில் நுழைந்து கோலோச்சி விட்டன…!!] பெரியார் வருநாஸ்ர்மததை எதிர்த்து ஓங்கி குரல் கொடுத்தாரே ஒழிய இன்னும் வரைக்கும் அவரது கொள்கை தமிழ் நாட்டில் கூட முழு வெற்றியை தர வில்லை என்பது தான் வேதனையான விஷயம்.. சொல்லப்போனால் மூட நம்பிக்கைகளும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்களும் இன்னும் பல்கி பெருகினவே ஒழிய குறைந்த பாடில்லை.
      அதே போல மார்க்ஸ் கண்ட கனவும் முழு வெற்றி அடையாவிட்டாலும் சீனா அதை வேறு வடிவத்தில் கொண்டு வந்து வெற்றி யாக்கி விட்டது [ ரஷியா விட்ட இடத்தினை]
      ஆக இரண்டு பேராசான்களின் சித்தாந்தமும் முழு வெற்றியும் முழு தோல்வியும் இல்லாத ஒரு நிலை பாட்டிலே தான் அவர்கள் இரண்டு பேரயும் விஞ்சி யோசிக்கிற ஒரு இயக்கமாக தான் இந்த நவீன பெரியாரிஸ்ட் வளர வேண்டிஉள்ளது. அதற்கு
      கார்ல மார்க்ஸ் ம் பெரியாரும் மட்டுமல்ல……..=========================
      எங்களுக்கு புத்தனும் தேவை
      வள்ளுவனும் தேவை
      சமணரும் தேவை
      வள்ளலாரும் தேவை
      சீக்கிய குர்நானக்கும் தேவை
      சைவ சித்தர்களும் தேவை
      மாவொயிசமும் தேவை
      லாவொயிசமும் தேவை…

  13. வெங்காயம் says:

    ….////////இஸ்லாத்தில் ஜாதி கிடையாது. ஷியா, சுன்னி, லெப்பை, தக்னி, மரைக்காயர், ராவுத்தர் என 20க்கும் குறைவான சில பிரிவுகள் உள்ளன. ஆனால், யாரும் பிறப்பால் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ கிடையாது. தேவைப்பட்டால், ஷியா சுன்னியாகலாம், லெப்பை தக்னியாகலாம், ராவுத்தர் மரைக்காயர் ஆகலாம்./////……
    =====================================================================

    இதை இஸ்லாமில் உள்ளவர்களே நம்ப மாட்டார்கள் காரணம் மேற்சொன்ன 2௦ பிரிவுகளில் ஒருவரை ஒருவர் பேதங்களுடன் நடந்து வருவது தான் நடை முறை உண்மை.!!!! ஒரு பிரிவில் உள்ளவர் இன்னொரு பிரிவில் மாறலாம் என்பது வரைக்கும் நீ சொன்னது உண்மை தான்…!! ஆனால் அந்த பிரிவுகளுக்கு இடையே உள்ள மோதல் என்பது இங்கு இந்தியாவில்உள்ள ஹிந்து ஜாதி சண்டைகளை விட கொடுமையானது
    கீழ் கண்ட செய்தி ஒரு சாம்பிள்
    —————————————————————————————————————————————–
    @@@@@@@@@@@@@@சுன்னி முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் ஈராக் ராணுவம் தாக்குதல்:25 பேர் படுகொலை!
    பாக்தாத்: அம்பார் மாகாணத்தில் சுன்னி போராளிகளுக்கு எதிராக ஈராக் ராணுவம் நடத்திய விமானத்தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.மாகாணத்தின் ஃபலூஜா, ரமாதி ஆகிய நகரங்களின் கட்டுப்பாட்டை சுன்னி முஸ்லிம்களிடமிருந்து பறிப்பதற்காக ராணுவம் விமானத்தாக்குதலை நடத்துகிறது.
    சில வாரங்களுக்கு முன்பு ரமாதியில் சுன்னி முஸ்லிம்களின் போராட்ட மையத்தை ஈராக் போலீஸ் நீக்கம் செய்தது.இதனைத்தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது. இதனைத்தொடர்ந்து நடந்த பலத்த மோதலில் ஃபலூஜா மற்றும் ரமாதியின் கட்டுப்பாட்டை சுன்னி போராளிகள் தம் வசம் கொண்டுவந்தனர்.
    யுப்ரடீஸ் நதி கரையோரத்தில் அமைந்துள்ள இந்த இரண்டு நகரங்களின் கட்டுப்பாட்டை சுன்னி போராளிகளிடமிருந்து மீட்பதற்காக பழங்குடி இன தலைவர்களின் உதவியை ஈராக் ராணுவம் கோரியுள்ளது. ஆனால், பழங்குடியின தலைவர்கள் போராளிகளை ஆதரிக்கின்றனர்.ஈராக்கின் 3-வது பெரிய மாகாணமான அம்பாரில் சுன்னி முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர்.
    பெரும்பான்மை ஷியா ஆதரவு பெற்ற பிரதமர் நூரி அல் மாலிகியின் அரசு தங்களிடம் பாரபட்சமாக நடந்துகொள்வதாக சுன்னி முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகின்றனர்.பாரபட்சத்திற்கு எதிராக ஒருவருடமாக போராட்டம் நடைபெறுகிறது.
    இதனிடையே சுன்னிகளை எதிர்கொள்ள ஆயுதங்களும், ஆலோசனைகளும் வழங்க தயார் என்று ஈரான் ராணுவ தலைவர் பிரிகேடியர் ஜெனரல் முஹம்மது ஹிஜாஸி அறிவித்துள்ளார்.@@@@@@@@@@@@
    ———————————————————————————————————————————————
    மேற்சொன்னது ஒரு சிறிய சாம்பிள் இன்னும் மெயின் பிச்சர் நிறையவே உள்ளன அவற்றை சொன்னால் சவுக்கின் மொத்த வெப் சைட்இயே விலைக்கு வாங்கி போட வேண்டிருக்கும்

    இதை தான் ஆரிய வருணாஸ்ரம தாயான உனது ஹிந்துத்துவ மனு நீதி தாய் இங்கு இந்தியாவில் செய்து வந்ததை நீ வேறு வடிவில் செய்கிறாய் என்கிறேன். இரண்டு ஆரிய மதங்களுக்கும் இந்த பேதைமை என்கிற விஷயத்தில் பெரிதாக வேறுபாடு இல்லை மட்டுமல்ல வேறு பாடில்லை என நான் சொன்னது இந்த விஷ்யத்தில் மட்டும் தான் என்றில்லை இன்னும் நிறைய நிறைய உள்ளன அவை ஒவ்வொன்றாக எனது கட்டுரை ஏன் இஸ்லாமும் குரானும் வேண்டாம் [ பகுதி 1]
    —————————————————————————————————
    [உப தலைப்பு: அரசியல் காரணம்
    தொடர்ச்சியில் பார்ப்போம்]

  14. வெங்காயம் says:

    =============================================================================
    /////……திருக்குரான் நபிகளின் வாழ்க்கை வரலாறு கிடையாது. அது அல்லாஹ் மனிதகுலத்துக்கு அருளிய நீதி நூல். வானவர் ஜிப்ரயில் மூலமாக அல்லாஹ் எழுதப்படிக்கத் தெரியாத அண்ணல் நபிக்கு திருக்குரானை அருளினான். நபிகள் மனதில் அது உடனுக்குடன் பதிந்துவிட்டது. ……..—–“ஒவ்வொரு மனிதனும் தொழுகையின் மூலம் என்னோடு பேசலாம்” என அல்லாஹ் அறிவிக்கிறான். அல்லாஹ் மனிதனுக்கு அருளிய மொபைல் போன் திருக்குரான்./////………
    ===========================================================================
    சரி அது உனது மத நம்பிக்கை…. அதனுள் புகுந்து நான் பகுத்தறிவு விளையாட்டை விளையாட விரும்ப வில்லை.
    அது எப்படி மொபைல் போன் டவர் இல்லாமல் சிக்னல் இல்லாமல் செய்தி பரிமாற்ற முடியும் அதுவும் அல்லாஹ் என்றால் எந்த உருவ வடிவ இல்லாத, …. உடலால் உணரப்பட முடியாத,….. ஒரு சக்தி என்று சொல்லுகிற போது..??……………….??????

    நான் நினைக்கிறேன் அன்று “அசரீரி” என்று ஹிந்துத்துவ சொன்னதை தான் நீங்களும் அல்லாஹ் குரல் என காப்பி அடித்தீர்களோ என்று நான் கேட்டால்
    பகுத்தறிவு பித்தன் என்று என்னை வஞ்சித்தாலும் வைவர்.. ஆக ஒன்று தெரிகிறது …!!

    ஆரிய தாயான ஹிந்துத்துவாவின் பிள்ளை தான் நீங்கள் என்பதை பல வடிவங்களில் பல செயல்களில் நிரூபித்து வருவதற்கும சேர்த்து உங்கள் அல்லாஹ் விற்கு நன்றியை தெரிவியுங்கள்…???

  15. தாவூத் இப்ராஹிம் says:

    // பணவசதியும் சமூக அந்தஸ்தும் தான் அங்கெ முன்னிருத்தப்படுமே ஒழிய நீயும் இஸ்லாமியர் நானும் இஸ்லாமியர் //
    ————-

    ஒரு பணக்கார லெப்பையும், பணக்கர தக்னியும் திருமணம் செய்து கொள்ளலாம். ஒரு ஏழை ராவுத்தரும், ஏழை மரைக்காயரும் திருமணம் செய்து கொள்ளலாம். பணக்கார முஸ்லிமும் ஏழை முஸ்லிமும் திருமணம் செய்து கொள்ளலாம்

    ஆனால் ஒரு பணக்கார தலித் பையனும் ஏழை தேவர் பெண்ணும் திருமணம் செய்யமுடியாது. ஜாதிக்கலவரம் நடக்கும்.

    • வெங்காயம் says:

      நான் கேட்டதற்கு இது சரியான பதிலாக தெரியவில்லை. உனது மதத்தில் உள்ள கடமைகளில் / கோட்பாடுகளில் THEORY ஆக வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் நடைமுறை அப்படி இல்லை என்பது தான் கசப்பான உண்மை …!!

      ஜாதி இன வேறுபாடு பார்ப்பதில்லை என குரானில் போதிக்கப்பட்டு இருக்கலாம் ஆனால், நிஜ வாழ்வு அது போல இல்லை..!!
      இங்கும் தமிழ் நாட்டில் சுய மரியாதை திருமணங்கள் ஆயிர கணக்கில் நடந்து உள்ளனவே அங்கு யாரும் அருவாளை தூக்கவில்லையே. கலப்பு திருமனகளுக்கேன்று சட்டம் கூட தி மு க ஆட்சியில் கொண்டு வரப்பட்டு உள்ளது..
      தி மு க தலைவரே கலப்பு திருமணம் செய்தவர் தான் அரிவாள் கொண்டு யாராவது வெட்டி செத்தார்களா.?/ ஒரு விஷயம் வேண்டுமானால் சொல்லி கொள்ளலாம்.

      ஹிந்து வருநாஸ்ரமத்தில் வேண்டுமானால் ஜாதிய கட்டுக்களை [வர்ணாஸ்ரம தர்மத்தை] தூக்கி பிடிக்க வேண்டும் என்று அதன் ஹிந்து மதம் வலியுறுத்தும் போது குரானில் நீங்கள் சொன்ன இந்து மத ஜாதிகளோ இனமோ மொழியோ துவேஷம் இல்லை என கோட்பாட்டு அளவில் தான் உள்ளனவே ஒழிய நடைமுற என வரும் பொது ஒரு முஸ்லிமும் அதை கடைபிடிப்பதில்லை என்பது தான் நான் மேற்கோள் காட்டிய ஆய்வு கட்டுரை தரும் ஆதராபூர்வமான செய்தி இதை உன்னால் மறுக்க முடியாது….!!!!!!!!!!!!!!!
      நடைமுறை என்று வரும் பொது முஸ்லிம் குரானின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு ஹிந்து மத ஜாதிக்காரன் என்ன செய்தானோ அதையே தான் இவனும் திருப்பி செய்கிறான் என்று தான் எனது ஆய்யு கட்டுரையில் சொல்லிருந்தேன்..

      அதை உன்னால் இன்று வரை மறுக்க முடியவில்லை முஸ்லிம் திருமண கோட்பாடு மற்றும் சமூக நடைமுறை ஆகியவற்றில் இன்றும் “மனு தர்ம இஸ்லாமியர்கள்” இன்றும் உள்ளார்கள் என ஆதாரப்பூர்வமாக நான் சொன்ன மேற்படி கட்டுரைக்கு இன்னும் வரை உன்னிடம் பதில் வராமல் குரானின் பின்னால் ஒளிந்து கொண்டு அந்த விஷயங்களை வசதியாக மறைத்து விடுகிறாய்..

      இஸ்லாமிய இளைஞரான மசூத் ஆலம் ஃபலாஹி. உலேமாக்கள் பற்றி சொல்லும் போது முஸ்லிம் மன்னர்களும் மேட்டுக்குடி ஆளுங்கும்பலும் கீழ்ச் சாதியினர் அல்லது ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுவர்களை அவர்கள் இந்துக்களானாலும், முஸ்லிம்களானாலும் கல்வி கற்க அனுமதித்ததில்லை..ரஸில் (கீழ்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள், அஷ்ரஃப் (மேல்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்வதற்கென்றே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்றுகூட பராணி வாதிட்டுள்ளார். கீழ் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றழைக்கப்பட்டவர்களின் குழந்தைகள் தமது முன்னோர்களின் பரம்பரைத் தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
      ========================================================================
      //////.“”குரான், தொழுகை, நோன்பு ஆகியவற்றுக்கு அப்பால், மேலான அறிவை ரஸில் என்றழைக்கப்படும் கீழ் சாதியினருக்கு அளிக்கக் கூடாது; இவ்வாறு செய்வது நாய்கள், பன்றிகளின் முன்பு விலையுயர்ந்த முத்துக்களைப் பரப்பி வைப்பதைப் போன்றதாகும்!” /////
      ======================================================================
      இதை நான் சொல்லவில்லை உனது மத நண்பர் ஒருத்தரே ஆய்வு செய்து உள்ள ஆதார்ப்போர்வமான உண்மைகள் ..!! அவர் வேறு யாருமில்லை
      அவர் தான் இஸ்லாமிய இளைஞரான மசூத் ஆலம் ஃபலாஹி என்பவர்
      [தற்போது டெல்லி நேரு பல்கலைக்கழகத்தின் அரபுமொழித் துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவராக உள்ள இவர், ஜாமியா உல்ஃபலா மதரசாவில் இஸ்லாமிய மார்க்கக் கல்வியைப் படித்து முடித்தவர். இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி மற்றும் சாதி அடிப்படையிலான இழிவுபடுத்தல்கள் பற்றி இவர் விரிவாக ஆராய்ந்து உள்ளார்]
      இந்த ஆய்வாளரின் கேள்விக்கு என்ன பதில்.?]….///////
      =======================================================================

      அதை உன்னால் இன்று வரை மறுக்க முடியவில்லை..!!

      இன்னும் வரை உன்னிடம் பதில் வராமல் குரானின் பின்னால் ஒளிந்து கொண்டு அந்த விஷயங்களை வசதியாக மறைத்து விடுகிறாய் ..

      ஆனால் மார்க்ஸ்ய பெரியாரிஸ்ட ஆக ஆனவர்களுக்கு அந்த சிக்கல் இல்லை …!!!
      நீயே கூட ஒரு நாள் இஸ்லாமியர்களிடையே உள்ள சமூக பாகுபாட்டினை பார்த்து மார்க்ஸ் பெரியாரிஸ்ட் பக்கம் திரும்பும் சாத்தியகூறுகள் இருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு வந்து உள்ளது’
      இஸ்லாம் இன மத துவேஷங்களுக்கு இடம் குடுப்பதில்லை என சொல்லி உள்ளை
      நான் கீழ் தரும் இரண்டு செய்திகள் உனக்கு என்ன உண்மையை உணர்த்துகின்றன.???
      =========================================================================
      செய்தி 1
      காபூல் : தலீபான்களால் அழிக்கப்பட்ட பாமியான் புத்தர் சிலைகளை 3டி ஒளி தொழில்நுட்பம் மூலம் மீண்டும் காண சீன ஜோடியினர் எடுத்த முயற்சி வெற்றியடைந்துள்ளது. ஆப்கானிலுள்ள உலகப்புகழ் பாமயான் புத்தர் சிலைகளை 14 ஆண்டுகளுக்கு முன்பு தாலீபான்கள் அழித்தனர். வெற்றிடமாக இருந்த சிலை இருந்த இடத்தில், 3டி ஒளி தொழில்நுட்பம் மூலம் சிலையின் அமைப்பை உருவாக்கி சீன ஜோடிகள் சாதனை புரிந்துள்ளனர். பாமியான் புத்தர் சிலை யுஜெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜப்பான், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள், மீண்டும் அந்த இடத்தில் சிலை வைக்க ஏற்பாடு செய்ய வலியுறுத்தியுள்ளனர்.
      —————————————————————————————————–
      செய்தி 2
      தென் ஆப்ரிக்கா சென்றுள்ள சூடான் அதிபர் ஒமர் அல் பஷீரை கைது செய்ய, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. சூடான் அதிபர் ஒமர் அல் பஷீர் மீது போர்குற்றங்கள், இனப்படுகொலை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்பரிக்க யூனியன் மாநாட்டில் கலந்து கொள்ள ஒமர் அல் பஷீர் தென் ஆப்ரிக்கா சென்றுள்ளார். அவர் மீது பல்வேறு குற்றங்கள் உள்ளதால் அவரை கைது செய்ய வேண்டுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தென் ஆப்ரிக்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது
      ===============================================================================

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress