கிராமங்களில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். “வித்தாரக்கள்ளி விறகொடிக்கப் போனாளாம். கத்தாழை முள்ளு கொத்தோட வந்துச்சாம்.” என்று. நயமாக பொய்யுரைப்பவர்களை அடையாளம் காட்ட இந்த பழமொழி பயன்படுகிறது. ஜெயலலிதா, தனது நான்காண்டு கால சாதனையை விளக்கி மூன்று நாட்களுக்கு பொதுக்கூட்டம் போட வேண்டும் என்று கழகக் கண்மணிகளுக்கு அழைப்பு விடுத்திருப்பது, இந்தப் பழமொழியைத்தான் காட்டுகிறது.
ஒரு வாரத்துக்கு முன்னதாக தமிழகத்தில் அனைவரும் விவாதித்துக் கொண்டிருந்த விவகாரம், ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் பெரும் ஊழல் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு என்ன ஆகும் எனப்து குறித்தே. ஆனால் தற்போது என்ன விவாதிக்கப்படுகிறது ? ஜெயலலிதாவுக்கு உடல் நிலை சரியாக இருக்கிறதா ? அவருக்கு சிறுநீரகக் கோளாறா ? கல்லீரல் சிக்கலா ? அறுவை சிகிச்சையா என்று பரபரப்பான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த வதந்திகளை உண்மையாக்குவது போல, விகடன், நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்களும், பல்வேறு இணையதளங்களும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
நிர்வாக சீர்கேடு, ஊழல், உச்சநீதிமன்ற மேல் முறையீடு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டு, தற்போது ஜெயலலிதாவின் உடல்நிலை மக்களிடையே முக்கிய விவாதமாக மாறியுள்ளது. இதைத்தான் ஜெயலலிதா விரும்பினார். அது நடந்து விட்டது. ஜெயலலிதா எவ்வளவு பெரிய நடிகை என்பதற்கு ஆர்கே நகர் பிரச்சாரத்தின் போது அவர் பேசியதே சான்று. ஒரே ஒரு மெகாவாட் மின்சாரம் கூட, அதிமுக அரசு வகுத்த திட்டத்தினால் உருவாக்கப்பட வில்லை என்பது தெள்ளத் தெளிவாக அனைவரும் கண்டு வரும் உண்மை. ஆனால் ஜெயலலிதா கூசாமல் 4992 மெகாவாட் மின்சாரத்தை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது என்று பொய்யுரைக்கிறார். மக்களையும், ஊடகங்களையும் எந்த அளவுக்கு ஜெயலலிதா முட்டாள்கள் என்று கருதுகிறார் என்பதற்கு இதுவே சான்று. தமிழக மின் திட்டத்தின் நிலைமை என்ன என்பது குறித்த இந்த அட்டவணையைப் பாருங்கள்.
இதில் ஒரே ஒரு திட்டம் கூட அதிமுக அரசால் தொடங்கப்பட்டது அல்ல. இப்படியொரு நிலையில்தான் கூசாமல் பொய்யுரைத்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதா அமெரிக்கா செல்கிறார் என்று முதன் முதலில் பிரச்சினையை கிளப்பியது, நக்கீரன் இதழ்தான். ஜெயலலிதாவின் இயல்பு, உடனடியாக அவதூறு வழக்கு பதிவு செய்வதே. ஆனால் நக்கீரன் இதழின் மீது இது வரை அவதூறு வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஏனெனில் ஜெயலலிதாவின் திட்டத்தின் ஒரு பகுதியே இது. சமூக வலைத்தளங்களிலும், வாட்சப் போன்ற தொடர்பு மென்பொருள்களிலும், இந்த செய்தி வேண்டுமென்றே கசிய விடப்படுகிறது. சரி எதற்காக இப்படியொரு நாடகத்தை ஜெயலலிதா அரங்கேற்ற வேண்டும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 அன்று மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பு வெளிவருகையில் ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டோர், இப்படியொரு தீர்ப்பை துளியும் எதிர்ப்பார்க்கவில்லை. விடுதலை நிச்சயம் என்று ஏற்கனவே அவர்களுக்குத் தரப்பட்ட ஒரு போலியான தீர்ப்பின் அடிப்படையில், கொண்டாட்டத்தோடுதான் பெங்களுரு சென்றனர். ஆனால் அவர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்தார் மைக்கேல் டி குன்ஹா. இந்த முறை அப்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த நாடகம்.
ஜெயலலிதா உடல்நிலை குறித்து செய்தி எப்போது கிளம்பியது, எப்படிக் கிளம்பியது என்பதை நாம் கவனமாக பார்க்க வேண்டும். செப்டம்பர் 27 அன்று கைது செய்யப்பட்டு, மீண்டும் ஜாமீனில் வெளிவரும் வரையில் ஜெயலலிதாவுக்கு பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை. தண்டனைக்காக அவர் சார்பில் வாதாடிய பி.குமார் தனது வாதத்தில் ஜெயலலிதாவுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மற்றும் தைராய்டு பிரச்சினைகள் இருப்பதாக கூறி வாதிட்டார். ஆனால் இவை அனைத்துக்கும் சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்படும் என்று குன்ஹா உத்தரவிட்டு, ஜெயலலிதா உள்ளிட்டோரை சிறைக்கு அனுப்பினார்.
ஒரு வேளை நாம் பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் தண்டிக்கப்படப் போகிறோம் என்பது ஜெயலலிதாவுக்கு முன்னதாகவே தெரியும் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஜெயலலிதா பெங்களுரு சென்றிருப்பார் என்றா நினைக்கிறீர்கள் ? ராமச்சந்திரா மருத்துவமனையில் படுத்திருக்க மாட்டார் ? ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவரை கர்நாடக காவல்துறை சென்னை வந்து கைது செய்திருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா ?
1996ல் அமலாக்கப்பிரிவு சசிகலா உள்ளிட்டோரை நீதிமன்றத்துக்கு வரவழைத்தபோது, மருத்துவமனை- யிலிருந்து ஒரு ஸ்ட்ரேச்சரில் படுத்ததபடி நீதிமன்றத்துக்கு வருகை தந்து நாடகம் ஆடியவர்தான் சசிகலா என்பதை மறந்து விடாதீர்கள்.
இப்போது ஜெயலலிதா ஆடி வரும் இந்த நாடகம், ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கும் சதித் திட்டமேயன்றி வேறு இல்லை. செப்டம்பர் 27ல் தண்டிக்கப்பட்டபோது இருந்த அனுதாப அலை, இப்போது இல்லை என்பதை ஜெயலலிதா நன்றாகவே அறிவார். ஊழல் மற்றும் மோசமான நிர்வாகம் போன்ற விவாதங்கள் அனைத்தும், உடல் நிலை சரியில்லை என்றால் அப்படியே தலைகீழாக மாறிப்போகும் என்பது ஜெயலலிதா நன்றாக அறிந்ததே.
இதற்கான சான்று, தமிழக வரலாற்றில் உள்ளது. 1984ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர் சென்று, மருத்துவமனையில் இருந்தபடியே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒரு முறை அதே போன்ற வெற்றியை ஈட்டலாம் என்ற திட்டமே தற்போது நடந்து வருவது.
மிக மிக கவனமாக திட்டமிட்டே இந்த நாடகத்தை ஜெயலலிதா நடத்தி வருகிறார். மே 11 தீர்ப்பு வெளியான பின்னர் நடந்த ஒவ்வொரு சம்பவங்களும், இந்த மேடை நாடகத்தின் காட்சிகளே. பதவியேற்பு விழாவை சுருக்கமாக முடித்தது. தலைமைச் செயலகத்தில் நடக்கும் காணொலி காட்சிகளுக்கு பத்திரிக்கையாளர்களை அழைக்காமல் விட்டது, சட்டமன்றக் கூட்டத்தொடரை நடத்தாமல் இருப்பது, பார்வையாளர்கள் யாரையும் சந்திக்காமல் இருப்பது, இப்தார் விருந்தை ரத்து செய்தது உள்ளிட்ட அனைத்தும், ஓரங்க நாடகங்களே. தனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அதை வெளிப்படையாக கூறும் நபர் அல்ல ஜெயலலிதா.
இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு செல்லத் தவறிய ஜெயலலிதா அனுப்பிய வாழ்த்துச் செய்தியை நாம் கவனமாக பார்க்க வேண்டும். “அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படும் இந்த இப்தார் நோன்பு திறப்பு விழாவில் வழக்கம் போல் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும். எனினும், திடீரென்று ஏற்பட்ட உடல்நல குறைவின் காரணமாக இந்த விழாவிற்கு என்னால் நேரில் வர இயலவில்லை. என்னால் இந்த விழாவில் கலந்துகொள்ள இயலாவிடினும், எனது எண்ணங்கள் இந்த விழாவைச் சுற்றியே உள்ளன. எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், எனது உரையை இந்த விழாவில் படிக்குமாறு நான் பணித்துள்ளேன்.”
“விழாவில் கலந்து கொள்ள இயலாவிடினும், எனது எண்ணங்கள் இந்த விழாவைச் சுற்றியே உள்ளன” என்பது போன்ற நாடகத்தனமாக வசனங்களையெல்லாம் பேசும் நபர் அல்ல ஜெயலலிதா. மேலும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டால், அதற்காக மெனக்கெட்டு செய்தி அனுப்பும் வழக்கமும் ஜெயலலிதாவிடம் கிடையாது. முதன் முறையாக “திடீரென்று ஏற்பட்ட உடல்நலக் குறைவால்” என்ற வாசகத்தை நாம் கவனமாக பார்க்க வேண்டும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கையில், கவனமாக தலைமுடிக்கு கருப்புச் சாயம் பூசி, உதட்டுச் சாயத்தோடு பங்கேற்கும் ஜெயலலிதா, தன்னுடைய உடல் நலன் குறித்து இப்படியெல்லாம் வெளிப்படையாக கூறும் நபர் அல்ல. தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய வாசந்தி என்ற எழுத்தாளருக்கு எதிராக தடையுத்தரவு பெற்று, அந்த புத்தகத்தையே வெளிவராமல் செய்த நபர்தான் இந்த ஜெயலலிதா இணைப்பு . தடை உத்தரவு பெறுவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு கூட, பார்வையாளர்கள் யாரும் இல்லாமலேயே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜெயலலிதாவா தனது உடல்நிலை குறித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிடுவார் ?
ஜெயலலிதா சிறுநீரகம் அல்லது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சிகிச்சை என்ற பெயரில் ஒரு மாதம் ஓய்வெடுத்து விட்டு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அறுவை சிகிச்சை செய்யும் நேரத்தில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகையில், இந்த உடல்நிலையை காரணம் காட்டி, தண்டனை குறைவு அல்லது, விடுதலை செய்யப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா இல்லையா ?
ஜெயலலிதாவின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால், கூசாமல் பொய் கூறக்கூடிய நபர் அவர் என்பது தெளிவாகத் தெரியும். 1991 அரசாங்கத்தில் நெடுஞ்சாலைகளில் பேருந்துகளை வழிமறித்து கொள்ளைகள் நடைபெற்றன. அது குறித்து சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதா, மத்தியில் ஆளும் நரசிம்மராவ், ஜெயலலிதாவின் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று கொள்ளையர்களை தமிழகத்துக்கு அனுப்பி வைக்கிறார் என்றார். கொஞ்சமும், கூச்சம் இல்லாமல், அப்போதைய ஆளுனர் சென்னா ரெட்டி தனது கையைப் பிடித்து இழுத்தார், தவறாக நடக்க முயற்சித்தார் என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டவர்தான் இந்த ஜெயலலிதா. டான்சி வழக்கிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக, தலைமைச் செயலக கோப்பில், தான் போட்ட கையெழுத்து தன்னுடையதே இல்லை என்று கூசாமல் நீதிமன்றத்தில் கூறியவர்தான் ஜெயலலிதா. தன்னை அதிமுகவில் சேர்த்து ஆளான எம்ஜிஆருக்கே துரோகம் செய்ய நினைத்தவர்தான் ஜெயலலிதா. எம்ஜிஆர் மருத்துவமனையில் இருக்கிறார். அவரால் சரிவர ஆட்சி நடத்த முடியவில்லை. ஆகையால் அவருக்கு பதிலாக என்னை முதலைமைச்சராக நியமியுங்கள் என்று 1984ம் ஆண்டு ராஜீவ் காந்திக்கும் ஆளுனர் குரானாவுக்கும் கடிதம் எழுதியவர்தான் ஜெயலலிதா. இந்த விபரம் தெரிந்ததும் ஜெயலலிதாவுக்கு வழங்கியிருந்த நாடாளுமன்ற மாநிலங்களவை அதிமுக துணை தலைவர் பதவியை பறித்தார் எம்ஜிஆர். இதையடுத்து, அதிமுகவுக்கு உள்ளாகவே, “ஜெயலலிதா பேரவை” என்ற புதிய அமைப்பை தொடங்கினார் ஜெயலலிதா. 33 எம்எல்ஏக்களை தன் பக்கம் சேர்த்து, தனிக்கட்சி தொடங்கப் போவதாகக் கூட அறிவித்தவர்தான் இந்த ஜெயலலிதா.
இப்படி தன்னுடைய நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஜெயலலிதாதான் தற்போது உடல்நிலை குறித்த இந்த நாடகத்தை நடத்தி வருகிறார். உடல்நிலை குறித்த தகவல்கள் மிக மிக கவனமாக பரப்பப்படுகின்றன. போயஸ் தோட்டத்துக்கு உள்ளே சென்று வரக்கூடியவர்களில் பலர், தங்களுக்குத் தெரிந்த பத்திரிக்கையாளர்களை அழைத்து, இந்த செய்திகளை தெரிவிக்கின்றனர். மாநில உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும், இந்த பொய்யை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
கடந்த ஏழாம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், பேசிய கருணாநிதியும், ஜெயலலிதாவின் நாடகத்துக்கு பலியாகி வெளிப்படையாக ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசினார். அதன் பிறகு, இன்று வெளிப்படையாக விவாதங்கள் தொடங்கி உள்ளன. இந்த வியாதியா, அந்த வியாதியா என்று பரபரப்பாக விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா நினைத்தால் ஒரே ஒரு அறிக்கை மூலமோ, பத்திரிக்கை செய்தி மூலமோ இந்த விவாதங்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆனால் இந்த விவாதங்களை மிக மிக ஆனந்தமாக ஜெயலலிதா ரசித்துக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் அவரது உடல்நிலைக்கு என்ன என்று பேசிக்கொண்டிருக்கையில், மீண்டும் முதல்வராக நினைக்கும் தனது மாஸ்டர் ப்ளானை நினைத்து அகமகிழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதாவின் இந்த நாடகம், 1984 எம்ஜிஆர் வென்றதைப் போன்று, தேர்தலிலும், வழக்கிலும் வெற்றிக் கனியை ஈட்டித்தருமா அல்லது, திரை மூடப்பட்டு, நாடகம் கடும் தோல்வியை அடையுமா என்பதற்கு காலம்தான் விடை சொல்ல வேண்டும்.
If we start voting for the candidate instead of the symbols, these asswipes will be wiped out of power
வித்தாரகள்ளிக்கு இதை விட சிறந்த விளக்கம். எதுவும் இல்லை..
அனைத்து வகையான நாடகங்களையும் அரங்கேற்றுபவர்தான் இந்த அம்மையார். ஆனால் இந்த கட்டுரை பொய்யாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலனோர் விருப்பம். அவர் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் ஏதாவது ஒரு நேரத்தில் அவமானபடுத்தியுள்ளார். அதுபோலவே அவருடைய கட்சியினரையும் தன் காலில் விழவைத்து ரசித்து கொண்டுள்ளார். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் செயல் உண்டு. அதுதான் குன்காவோட தீர்ப்பும் இப்ப அவரோட உடல் நிலையும். இப்ப ரத்தகண்ணீர் எம் ஆர் ராதா தான் நியாபகத்துக்கு வருகிரார்
அவர்களின் பழைய கால நடவடிக்கைகளை பார்க்கும் போது ஓத்துகொள்ள வேண்டியது தான் ஆனால் அவர்களின் வயதை வைத்து பார்க்கும் போது உடல்நிலை சரியில்லையோ என்றே நினைக்க தோன்றுகிறது.ஆனால் இதற்கெல்லாம் காரணம் நமது 4 PILLARS மீடியா , நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை முக்கியமாக தணிக்கையின் அலட்சியம் அல்லது பழுது அல்லது மேற்கண்ட அமைப்புகளில் நிலவும்சாதிய முறை
Vayathai vaithu mannikka mudiyathu. 60 vayathu kilavan 15 vayathu pennai seendinaal , enna seiveergal. avar seithathu thavaru thaan aanaal periyavar endru vittu vida mudiyuma..
xvcxvc
xxxxxxxxxxxv
ஜெயலலிதா உடல் நிலை குறித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். ஒரு நாடகத்தை நம்பியா அறிக்கைவிடுவார்?. அந்த அறிக்கை தனக்கே பாதகாமனது என தெரியாதவரா கருணாநிதி? என்ற கோணத்தில் சிந்திக்கும்போது ‘ஜெ’யின் உடல்நிலை உண்மை என்று தோன்றுகிறது.
தெய்வத்தை மனிதானால் தண்டிக்கமுடியுமா ???? என்று கேள்வி கேட்டார்கள்
தெய்வத்தின் முன்னால் பல நாடகங்களை போட்டார்கள் இந்த செய்தி உண்மையாக இருப்பின்
தெய்வம் தண்டிக்க ஆரம்பிவித்துட்டது என்று நினைக்கிறேன்.
இவர் விடுதலையானதும் அறநிலையத்துறை அமைச்சர் கோமா நிலைக்கு போனார்
இன்று இறந்தே போனார்
வித்தாரக்கள்ளி
”செம டைட்டிலு” சவுக்கு
ஜெயாவுக்கு கிட்னியோ,ஹார்ட்டோ பொத்துக்கிச்சுனு அமெரிக்கா டாக்டர் சொன்னாதான் நாங்க நம்புவோம்..அதுவரை சவுக்கு சொல்றதுதான் உண்மை
savukku dmk sombu.. all your articles are just went into dustbin you corrupt dmk supporter
So no one should comment about ADMK loot?
dmk loot is more destructive and should be talk more. savukku by not talking about dmk now is trying to give credit for it by talking more on aiadmk.
இந்தக் கட்டுரையில் வெளியாகியிருக்கும் தங்களின் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை. தன்னுடைய உடல்நிலை மோசமாக இருப்பதாக எல்லாரையும் நம்ப வைப்பதற்காக ஜெயலலிதாவே இவ்வாறு செய்கிறார் என்பதை துளியும் ஏற்கமுடியாது. கட்டுரையில் கூறியுள்ள கருத்தை ஏற்றுக்கொள்வதென்றால் ஜெயலலிதாவை புத்திசாலி என்றே எண்ணவேண்டியிருக்கும். எனவே அடிப்படையிலேயே தவறிருக்கிறது.
காரணங்கள்:
மேல்முறையீட்டு மனுவில் சுப்ரீம்கோர்ட் என்ன நடவடிக்கை எடுக்குமோ என்ற பயத்தினாலும், ஆட்சி மீது மக்களுக்கு ஓரளவு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை எப்படி மறைப்பது என்பதை எல்லாம் யோசித்துத்தான் ஜெயலலிதா உடல்நிலைகுறித்து அவரே வதந்தி பரப்புகிறார் என்பதாகப் போகிறது கட்டுரை. கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் வழக்கில் என்ன தீர்ப்பை வழங்கவேண்டும் என்று கிட்டத்தட்ட தீர்ப்பையே மறைமுகமாக வற்புறுத்தியது மூன்று நடுவர்களைக்கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச். ஆனால் நடந்தது என்ன? ஜஸ்ட் லைக்தட்டாக ஹேண்டில் செய்தார் அதனை. கைசுத்தம் கொண்ட அத்தனை நீதிபதிகளையும் இந்த வழக்கின் பல்வேறு நிலைகளில் உச்சநீதிமன்றம் விசாரிக்க வைத்துவிட்டது. எனவே அவர்கள் யாரும் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கப்போவதில்லை. கர்நாடக அரசின் தற்போதைய மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கப்போவது ‘ஜெயலலிதா பேரவை டில்லி கிளை’ நிர்வாகிகளாக இருக்கும் தத்து & கோவின் ஏதேனும் ஒரு கிளிப்பிள்ளைதான்.
“இந்த வழக்கில் ஜெயலலிதாவிற்கு தேவையற்ற மன உளைச்சலை 19 ஆண்டுகளாக தந்ததற்காக திமுகவும், கர்நாடக அரசும், ஆச்சார்யாவும் ஜெயலலிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்” என்றும், “இத்தனை சோதனைகளையும் கடந்து நெருப்பாற்றில் நீந்திகரைசேர்ந்தவருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்த கோர்ட் உத்தரவிடுகிறது” என்றும்கூட தீர்ப்பு வரவைக்கு முடியும் ஜெயலலிதாவால். எனவே உச்சநீதிமன்ற மேல்முறையீடு பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்பவரில்லை ஜெ.
ஆட்சிமீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை குறைப்பதற்காக ஜெ. நாடகம் ஆடுகிறார் என்பதையும் ஏற்பதற்கில்லை. சந்தீப் சக்சேனா தேர்தல் ஆணையராக இருக்கும்வரை 2016 பொதுத்தேர்தலில் இருக்கிற 265 சட்டசபை தொகுதிகளிலும் ஜெ.தான் வெற்றிபெறுவார். 234 தொகுதி எப்போது 265 தொகுதியானது என்றெல்லாம் தீவிர ஆராய்ச்சி கூடாது. ஆர்.கே. நகரில் 181வது வார்டு மறுதேர்தல் ஞாபகம் இருக்கிறதல்லவா?
எனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கின் நிலையோ, ஆட்சிமீதான அதிருப்தியோ ஜெ.வை துளியும் கவலைப்பட வைக்கப்போவதில்லை.
கட்டுரையின் கருத்துப்படி, ஜெயலலிதா மிகத்தீவிரமாக ஆராய்ந்து, யோசித்து இந்த நாடகத்தை நடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அளவுக்கெல்லாம் ஜெ. வொர்த் இல்லை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்பதே இதுநாள்வரை அவரது பாலிசியாக இருந்துவந்துள்ளது.
கன்னியாகுமரியில் இருக்கும் ஏதோ ஒரு குக்கிராமத்தில் பத்து பதினைந்து லட்சத்தில் கட்டப்பட்ட ஒரு அரசு அலுவலகத்தை திறந்துவைத்து அதனையும் பத்திரிக்கைகளில் செய்தியாக வரவைத்து விளம்பரம் தேடிக்கொள்வதுதான் ஜெ. ஸ்டைல். அந்தக் கட்டிடம் ஏற்கெனவே திறந்து வைக்கப்பட்டு, தினசரி அலுவல்கள் நடைபெற்றுவந்தாலும், அதே கட்டிடத்தை திரும்பவும் திறந்துவைத்து அழகு பார்க்கிறவர் ஜெ. அதாவது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தமிழக மக்கள் குறித்தே அவர் சிந்தித்து வருகிறார் என்ற கருத்தை வலுவூட்டதற்காகத்தான் இந்த கட்டிட திறப்பு விழாக்கள் எல்லாம். அப்படி இருக்கும்போது சென்னையின் அடையாளமாக இருக்கப்போகும் மெட்ரோ ரயில் திறப்பு விழாவிற்கு எவ்வளவு பெரிய விழாவை ஜெ. எடுத்திருக்க முடியும்? கட்டுரையின் கூற்றுப்படிப் பார்த்தால் அவர் நடத்தும் நாடகத்திற்கு வலு சேர்க்கத்தான் மெட்ரோ ரயில் திறப்புவிழாவுக்க்கூட அவர் வரவில்லை எனப்படுகிறது. அப்படி பொறுமை காப்பதெல்லாம் ஜெ.வுக்கு எந்த காலத்திலும் பழக்கமில்லை. மேலும், தன்னைப்பற்றி குறைந்தபட்ச அளவில்கூட எதிர்மறை விமர்சனங்களை அனுமதிப்பவரில்லை ஜெ. அப்படியிருக்கையில் அவரே அவரைப்பற்றி எதிர்மறையாக செய்தி பரப்புகிறார் என்பது நம்பக்கூடியதாக இல்லை.
சக்கர நாற்காலி அரசியல்வாதி என்று கருணாநிதியை இகழ்ந்தார். கருணாநிதியாவது சக்கர நாற்காலியில் அமர்ந்து நினைத்த இடத்திற்கெல்லாம் சென்று வருகிறார். அரசியல் செய்கிறார். அந்தோ பரிதாபம் நிற்கமுடியாமல், நடக்கமுடியாமல், வெளியில் முகத்தைக்கூட காட்டமுடியாமல், சுருக்கமாக சொல்வதென்றால் வாரத்திற்கொருமுறை ரிமோட் கண்ட்ரோலை அழுத்தி கட்டிடங்களை திறந்து வைப்பதைத்தவிர வேறேதுவும் செய்யமுடியாத கூண்டுப்பறவையாகிவிட்டார் ஜெ.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்…..
எனக்கிருக்கும் சந்தேகங்கள் சில:
1. மே மாதம் நடக்க இருந்த உலக முதலீட்டாளர் மாநாடு கடும் வெயில் காரணமாக செப்டம்பர் மாதம் தள்ளிவைக்கப்பட்டது. இப்போது திரும்பவும் தள்ளிவைக்கப்படுவதற்கு காரணமாக இருக்கப்போவது மழையா அல்லது வேறு காரணிகளா?
2. கோகுல இந்திராவும், வளர்மதியும் திரும்பவும் தீச்சட்டி தூக்கத்தான் வேண்டுமா?
நன்கு ஆராய்ந்து பதிலுரைத்திருக்கீர்கள். போயஸ் கார்டனிலோ அல்லது கொட நாட்டிலோ சட்டசபை கூட்டப்படலாம்
Yeah. if we start asking who is the next leader of admk, it may come to an end. Let us see. somebody may come from the same party to ask. I was shocked of karunanithi who believed this drama. Stupid drama. But it looks you also believed to some extent sir. aren’t you? Because the previous post like that. You mentioned that she is ill because of these appeal. Anyway no problem. Dmk team will read this post. it will begin again.
excellent article as always savukku. if her rule continues for another 5 years it is guaranteed that tamilnadu will be worse than bihar or some other poor states. of the last 25 years this is the most inefficient and incompetent administration that TN has ever seen. god save TN.
But your previous article also was on her health, wasn’t it? But anyway your angle might be correct.
///இவர் உதயநிதியே தேடி சென்று சந்தித்து பரிசு தொகை பெற்றவர் இவர் எழுத்து காசுக்கு விலை போய் ரெம்ப நாளாகிவிட்டது///
இது முற்றிலும் தவறான வாதம். சவுக்கு, காசுக்கு விலை போய்விட்டார். என்பது என்றும் ஏற்றுகொள்ள முடியாது. அதற்கு சரியான ஆதாரம் இல்லாமல் பொத்தாம் பொதுவாய் சவுக்கின் எதிர்பாளர்கள் எழுதகூடாது.
சவுக்கு விலை போயிருந்தால் என்றோ விலை போயிருக்கும். உதாரணம் 2g case டேப் ரிலிஸ்…. அன்றேல்லாம் மனம் மாறாமல் நேர்மையை மூலதனாமாக வைத்து புலனாய்வு கட்டுரை எழுதும் சவுக்கா விலை போய்விடும். அதுவும் துச்சா பய உதய நிதியிடம் போய்…
சவுக்கு கட்டுரைகள் ஒரு ஊடகம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறது.
பொதுவா ஆளுக்கட்சி பற்றிதான் 90 சதவீதம் எழுத வேண்டி இருக்கும்.
அப்படி எழுதும்போது – அந்தகட்சிக்கு ஆதரவு – இந்தகட்சிக்கு ஆதரவுன்னு கருத்த பதிவு செய்வது நடுநிலையாகுமா ? யோசிக்க வேண்டும்.
இதே சவுக்கு சமீபத்தில் – கேடிகலா கில்லாடி தயா- ன்னு எழுதலையா?
இப்படி இருக்கும்போது நம்கருத்தை தவறாக பதிவு செய்தால் அதைப் படிப்பவர் – நமது அறிவுத்திறனை எடைபோடுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும்.
நீ கவலபடாம உன் வேலயப்பாரு சவுக்கு. ஆமா வருமானத்துக்கு என்ன பண்ற?
நாடகத்தின் பாதி உண்மை, பாதி பொய் கூட கலந்திருக்கலாம்.
ஜெ க்கு எவனாவது முட்டா பய கிழடுகள் ஆலோசனை சொல்லிருக்கும்.
அனுதாபம் எல்லாவற்றையும் வெற்றி கொள்ளும்மா என்ன..? ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக இருக்கிறது. தமிழ்நாடு ஏதோ குட்டி சுவராக இருந்தது இப்போது அதுவும் இடிந்துவிட்டது. அம்மையாரின் ஆட்சி இருண்ட வரலாற்றின் ப்க்கதை உருவாக்கிவிட்டது.
காந்தியின் பெயர் இருக்கும்வரை கோட்சேவின் பெயரும் இருப்பது போல தமிழ் நாட்டின் வரலாற்றின் பக்கத்தில் ஜெ யின் பெயரும் கசப்பான அனுபவம் கொண்டு இருக்கும்.
ஜெயின் இந்த கசப்பவிட குள்ள நரி கருணாவின் கசப்பு வேற் ஒரு திசை கொண்டது.
இரண்டு கைகளில் எந்த கை குற்றம் செய்தால் என்ன.. குற்றம், இரண்டு கைகளூக்கும் சேர்த்தே உள்ளது.
கட்டுரை சிறப்பு சவுக்கு, வாழ்த்துகள்….!
போன முறை திமுக எதிர்ப்பாளர் இந்த முறை அதிமுக எதிர்ப்பாளர் சவுக்கு சங்கர் உதயநிதியே எல்லாம் மனிதனாய் மத்தித்து தேடி சென்று பார்த்தவர் இவர் எழுத்துகளை எப்படி நம்புவது இவர் எதோ தில்லாலங்கடி வேலை செய்கிறார்
Bullshit.
தங்களின் கூற்றுப்Uடி விகடன், நக்கீரன் போன்ற இதழ்கள் மற்றும் கருணாநிதியும் !!!
கூட்டு சேர்ந்து முதல்வருக்காக நாடகம் ஆடுகிறார்களா?
சங்கர், வர வர தங்களின் இந்த விதமான ஏனோ தானோ கட்டுரைகள், என் போன்றவர்களின் _ தங்கள் மீதுள்ள அபிப்ராயத்தை மாற்றும் நிலமைக்கு தள்ளும் ‘
இவர் உதயநிதியே தேடி சென்று சந்தித்து பரிசு தொகை பெற்றவர் இவர் எழுத்து காசுக்கு விலை போய் ரெம்ப நாளாகிவிட்டது
Very well said, Savukku. What do we do? Again vote en masse for DMK in 2016. You’ll be writing similar articles probably in 2020 against DMK Government asking people to overthrow the corrupt DMK Government during the elections in 2021. This you did successfully in 2011 when you set up a ‘count down’ for the DMK Government. There’s no concrete alternative in Tamil Nadu.
Very well written article by savukku. The government is there to serve the people and improve the lives of people. JJ has long forgotten that and she is interested in only her own survival. No new initiatives, no new Jobs, infrastructure is pathetic. The corporation is very inefficient. Traffic police are pathetic, half the signals do not work. Enforcement of law strictly to ensure people do not behave badly on the roads is not done. Such poor state of affairs. And she is
Well said Savukku..
ஜெயலலிதா என்ன நாடகம் வேண்டுமாவது ஆடட்டும். பதிலுக்கு அ.தி.மு.கவின் அடுத்த தலைவர் யாருன்னு விவாதத்தை ஆரம்பத்தால் முடிந்தது கதை.
Good idea…We can expect the same from Dr.Ramadoss and Karunanidhi..
இந்த கோணத்தில் எவனுமே சிந்தக்கவில்லை. முட்ட பயலுக நம்ம தமிழனிங்க