தமிழகத்தில் வைகுண்டராஜன் அடிக்கும் கொள்ளையும், அவர் ஆட்சியாளர்களுக்கு துணை போவதும் தங்கு தடையின்றி பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அரசு, காவல்துறை நிர்வாகம் என்று பல அமைப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், வைகுண்டராஜன், தற்போது, நீதித்துறையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார்.
திமுகவாக இருந்தாலும் சரி. அதிமுகவாக இருந்தாலும் சரி. தாது மணல் கொள்ளை தங்குதடையின்றி தொடர்ந்து வந்தது. 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வைகுண்டராஜனின் கனிம சுரங்கத்தில் சட்ட விரோதமாக தாது மணல் அள்ளப்படுவதாக தொடர்ந்துவந்த புகார்களால், அந்த சுரங்கங்களில் அதிரடி சோதனை நடத்திய தூத்துக்குடி கலெக்டர் ஆசிஷ்குமார் அந்தப் பதவியிலிருந்து தூக்கப்பட்டார். இந்த அதிரடி சோதனைகளுக்காகத்தான் ஆஷிஷ் குமார் தூக்கப்பட்டார் என்பது பரவலாக பேசப்பட்டாலும், ஜெயலலிதா அரசு இது குறித்து எந்த கவலையும் படவில்லை. ஜெயா டிவி மற்றும் மிடாஸ் நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கும் வைகுண்டராஜனின் தொழிற்சாலையில் சோதனை என்றால் ஜெயலலிதா சும்மா இருப்பாரா என்ன ?
மக்கள் பிரச்சினைகளுக்காக மக்களோடு நிற்க வேண்டிய மார்க்சிஸ்ட் கட்சி, ஒரு கனிமக் கொள்ளையனின் கைப்பாவையாக மாறி, வைகுண்டராஜனின் கனிமச் சுரங்கத்தில் சோதனை நடத்திய ஆஷிஷ் குமார் ஐஏஎஸ்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆசிஷ்குமார், தனது மகன் பிறந்தநாள் விழாவில் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை பெற்றதாக குற்றம்சாட்டியது. இதையடுத்து ஆசிஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
ஆஷிஷ் குமார் மாற்றம், மக்களிடையே, இந்த கனிமக் கொள்ளை பற்றி பரவலாக விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த விவாதத்தை அடுத்து, இதை மூடி மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு விசாரணை கமிட்டியை அமைத்தார். சுரங்கங்களை நேரில் சென்று ஆய்வு செய்த ககன்தீப் சிங் 2013 செப்டம்பர் 17ல் அரசிடம் இடைக்கால அறிக்கை சமர்ப்பித்தார். அந்த இடைக்கால அறிக்கையிலேயே அரசுக்கு வைகுண்டராஜன் 3000 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பேடி குறிப்பிட்டுள்ளதாக கூறுகின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.
இதனிடையே, கனிமக் கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று கனிமம் அள்ளும் வேறு சில நிறுவனங்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். நீதிபதிகள் ஜெயச்சந்திரன், வேணுகோபால் முன்னிலையில் அவை விசாரணைக்கு வந்தன.
விவி மினரல்ஸ், ட்ரான்ஸ் வேர்ல்ட் கார்னெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அனுமதி அளித்ததைவிட கூடுதலான இடங்களில் கனிமம் அள்ளுவதாக புகார் கூறப்பட்டது. இந்த இரண்டும் வைகுண்டராஜனின் கம்பெனிகள். கார்னெட், இல்லுமினைட், ரூட்டைல், ஸிர்க்கான் போன்ற அரிய வகை தாதுப்பொருட்கள் அள்ளப்படுவதாகவும், இதனால் தமிழக, மத்திய அரசுகளுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமயாஜி, இதை விசாரிக்க ககன்தீப் சிங் பேடியை அரசு நியமித்து இருப்பதாகவும், மனு தாரர்கள் தங்கள் குறைகளை அவரிடம் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.
அப்போது வழக்கறிஞர் இல்லாமல் நேரில் ஆஜரான வைகுண்டராஜன், மேற்படி புகார்கள் ஏற்கனவே அரசால் பறிசீலிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு விசாரிப்பதால் இந்த வழக்கை விசாரிக்கவே தேவையில்லை என்று வாதிட்டார். இவரது வாதத்தின் சாரம், ககன் தீப் சிங் பேடி விசாரணை நடக்கையில் வேறு விசாரணை தேவையில்லை என்பதே. வைகுண்டராஜனின் வாதத்தையும், அரசு வழக்கறிஞர் வாதத்தையும் ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வாதங்களை அடிப்படையாக வைத்தும், விசாரணை ஐந்து மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்பதை அடிப்படையாக வைத்தும், சிபிஐ விசாரணை கோரிய மனுவை முடித்து வைத்தனர்.
இந்திய கடலோரத்தில் 2002 முதல் 2012 வரையிலான 10 ஆண்டுகளில் கொள்ளை அடிக்கப்பட்ட மோனசைட் தாதுவின் மதிப்பு மட்டும் 60 லட்சம் கோடி ரூபாய் என்று நாடாளுமன்றத்தில் அரசு அறிக்கை அளித்திருக்கிறது. இதில் தமிழக கடலோரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மோனசைட் மதிப்பு மட்டும் 45 லட்சம் கோடி ரூபாய். தமிழகத்தில் 90 சதவிகித தாது மணல் வணிகம் வி.வி. மினரல்ஸ் குழுமத்திடம்தான் உள்ளது. எனவே இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்’ என்று கவர்னரிடம் ஏற்கனவே பா.ம.க. மனு அளித்துள்ளது.
பிற சுற்றுச் சூழல் அமைப்புகளும், விரிவான விசாரணை கோரி பல மனுக்களை அளித்துள்ளன. ககன்தீப் சிங் பேடியின் அறிக்கையில் உள்ள விபரங்கள், தமக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை நன்கு உணர்ந்த வைகுண்டராஜன், சென்ற ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘1998ம் ஆண்டு திருநெல்வேலி சப் கலெக்டராக இருந்த ககன்தீப் சிங் பேடி, என் மீது வழக்குப் பதிவுசெய்து வாகனத்தைக் கைப்பற்றினார். அதன் பின்னணியில் பேடி மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன். கனிம விவகாரம் குறித்து அவர் பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்தமாட்டார். எனவே, அவரை விசாரணை அதிகாரியாக நியமித்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்” என்பது வைகுண்டராஜனின் கோரிக்கை.
இந்த வழக்கில் நீதிபதி டி.ராஜா ஜுலை 29ம் தேதி தீர்ப்பு வழங்கினார். பேடி மீது மனித உரிமை ஆணையத்தில் (17 ஆண்டுகளுக்கு முன்பு) வைகுண்டராஜன் அளித்த புகார் மற்றும் வைகுண்டராஜனை பேடி நேரில் அழைத்து விசாரிக்காதது ஆகிய இரு காரணங்களால் பேடியால் நியாயமான விசாரணை நடத்த முடியாது என்ற முடிவுக்கு நீதிபதி வந்திருக்கிறார். பேடியின் விசாரணை வழக்கு விசாரணை நடக்கும் வரை, முடியாமல்தான் இருந்தது. பேடி எப்போது வேண்டுமானாலும் வைகுண்டராஜனை அழைத்து விசாரித்திருக்க முடியும். ஆனால் இது வரை ஏன் விசாரணை நடத்தவில்லை என்பதை ஒரு முக்கிய காரணமாக குறிப்பிடுகிறார் நீதிபதி. இந்த காரணங்களையெல்லாம் விளக்கமாக குறிப்பிட்டு, ககன்தீப் சிங் பேடியை விசாரணை அதிகாரியாக நியமித்த அரசு ஆணையை ரத்து செய்வதாக குறிப்பிட்டார்.
இந்த உத்தரவுக்கு பின்னால், தமிழக அரசு, ஒரு வேளை வேறு ஒரு அதிகாரியை நியமித்திருக்கலாம். அந்த அதிகாரி மீது, வைகுண்டராஜன் எந்த குற்றச்சாட்டும் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவையெல்லாம் நடந்து விடக்கூடாதோ என்ற எண்ணத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதியான வினோத் கே சர்மாவை, விசாரணை அதியாரியாக நியமித்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி ராஜா. இந்த வினோத் கே சர்மா பஞ்சாப் நீதிமன்றத்தைச் சேர்ந்தவர். அந்த நீதிமன்றத்தில் திருகல் வேலை செய்ததால்தான் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். அப்படி இருக்கையில், இந்த நீதிபதியை விசாரணை அதிகாரியாக நியமித்தால் அந்த விசாரணை விளங்குமா ? மேலும் இவரை விசாரணை அதியாரியாக நியமிக்கலாம் என்று வைகுண்டராஜன் தரப்பிலோ, அரசுத் தரப்பிலோ, புகார்தாரர் தரப்பிலோ எவ்விதமான ஆலோசனையும் சொல்லப்படாத நிலையில் இப்படியொரு நியமனத்தை எப்படி செய்தார் நீதிபதி என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இந்த ஓய்வு பெற்ற நீதிபதிக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இணையான சம்பளம், வாகனம், இதர வசதிகளை அரசு செய்து தர வேண்டும். இந்த பணமெல்லாம் நீதிபதி ராஜாவின் அப்பா வீட்டிலிருந்தா வரும் ? மக்கள் வரிப்பணம்தானே ? ககன்தீப் சிங் பேடி விசாரணையை தொடர்ந்திருந்தால் அவருக்கென்று தனியாக ஊதியம் அளித்திருக்க வேண்டியதில்லைதானே ? ஆனால் யார் அப்பன் வீட்டுப்பணம் செலவானால் நீதிபதி ராஜாவுக்கு என்ன ?
இந்த விசாரணையை ரத்து செய்ததன் மூலம், வைகுண்டராஜன் தங்குதடையின்றி கொள்ளையடிப்பதற்கு வழி செய்து தந்திருக்கிறார் நீதிபதி ராஜா.
இத்தீர்ப்பு குறித்து ஒரு மூத்த வழக்கறிஞரிடம் கேட்டபோது, “பேடியின் நியமனத்தை அங்கீகரித்து அவரிடம் உங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என்று 2013ல் உத்தரவிட்டது இரண்டு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச். அந்த உத்தரவில் மாறுதல் செய்யவோ, திருத்தம் செய்யவோ, புதிதாக விளக்கம் அளிக்கவோ அதே டிவிஷன் பெஞ்சுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. அதைத் தவிர சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் உண்டு. இந்த நிலையில், நீதிபதி ராஜா டிவிஷன் பெஞ்ச் உத்தரவுக்கு மாறாக ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது சட்டபூர்வமானதாக தெரியவில்லை” என்றார்.
வைகுண்டராஜனின் எதிர்த்தரப்பினர் பேடி முன்பு ஆஜராகி மனு கொடுக்கலாம் என்று ஐகோர்ட்டில் தெரிவித்தவர் அரசு தலைமை வழக்கறிஞர் சோமையாஜி. அவர் கடந்த 20 ஆண்டுகளாக வைகுண்டராஜனின் வழக்கறிஞராக இருந்தவர். அப்படிப்பட்டவர் வைகுண்டராஜனுக்கு எதிரான வழக்குகளில் அரசுத் தரப்பில் ஆஜராவது எப்படி சரியாக இருக்கும்? இந்தக் கேள்வி பரபரப்பாக விவாதிக்கப்படும் சூழலில் சோமையாஜியின் ஜூனியரான பெருமாள்தான் இப்போதும் வைகுண்டராஜனின் வழக்கறிஞர் என்று இன்னொரு தகவல் பரபரப்பை அதிகரித்திருக்கிறது.
மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடி வரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன், இந்த உத்தரவைப் பார்த்து நொந்துபோயிருக்கிறார். “திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் தாதுமணல் கொள்ளையால் மக்களுக்கு சிறுநீரகக் கோளாறுகளும், புற்றுநோய்களும் பரவுகின்றன. இந்த நிலையில், இயற்கை வளங்களைச் சீரழிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய நீதிமன்றங்கள் இவ்வாறு தாராளம் காட்டுவது வேதனை அளிக்கிறது” என்றார்.
இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய நீதிமன்றங்கள், அதைச் செய்யாமல் கனிமக் கொள்ளையர்களுக்கு பாதுகாப்பு அரணாக நின்று கொண்டிருக்கின்றன. குறிப்பாக, நீதித்துறையின் குமாரசாமிகள், இந்த காரியங்களைச் செய்வதில் முன்னணியில் இருக்கிறார்கள்.
இதனிடையே ராஜா மட்டும் வைகுண்டராஜனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தால் நான் என்ன பின் தங்கி விடுவேனா என்று தன்னையும் குமாரசாமியாக கருதி களத்தில் குதித்தவர் நீதிபதி கர்ணன்.
கனிமச் சுரங்கத்தில் கனிம வளங்களை அள்ளுவதற்கு மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். அந்த அனுமதி முடிவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே அனுமதி புதுப்பிக்கப்பட்டால்தான் தொடர்ந்து கனிமங்களை அள்ள முடியும். நாம்தான் பெரிய அப்பாடக்கராயிற்றே.. நம்மை யார் கேள்வி கேட்பார் என்று உரிய நேரத்தில் அனுமதி கேட்காமல் விட்டு விட்டார் வைகுண்டராஜன். இதையடுத்து உடனடியாக 32 கனிமச் சுரங்கங்களில் மணல் அள்ள தடை விதித்தது மத்திய அரசு. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் வைகுண்டராஜன். இந்த வழக்குகளில், மத்திய அரசின் சுரங்கத்துறை பதில் மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன்பாகவே, 32 வழக்குகளிலும் வைகுண்டராஜனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார் தீர்ப்பு வழங்கிய பிறகே, இந்த வழக்கில் 31 பதில் மனுக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு முக்கியமான விஷயம். கடந்த 20 ஆண்டுகளாக, வைகுண்டராஜனின் வழக்கறிஞர் யார் தெரியுமா ? தற்போது அரசுத் தலைமை வழக்கறிஞராக இருக்கும் ஏ.எல்.சோமயாஜிதான். இந்த வழக்குகளில் வைகுண்டராஜனுக்கு எதிராக தற்போது ஆஜராவதும் சோமயாஜிதான். வைகுண்டராஜனுக்கு யார் வழக்கறிஞர் தெரியுமா ? சோமயாஜியின் ஜுனியர் பெருமாள்தான். எப்படி இருக்கிறது இந்த நாடகம் ?
ஒரு வழக்கில் பணம் வாங்கிக் கொண்டு தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் கூட, இந்த பதில் மனு விவகாரத்தில் கவனமாக இருப்பார்கள். இரு தரப்பு கருத்தையும் கேட்டு அலசி ஆராய்ந்து முடிவெடுத்தது போல தீர்ப்பளிப்பார்கள். ஆனால் இந்த அடிப்படை கூட கர்ணன் பின்பற்றவில்லை. கவலையே இல்லாமல் வைகுண்டராஜனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளார். இப்படிப்பட்ட நீதிபதிதான் கர்ணன். இந்த லட்சணத்தில் கர்ணனுக்கு வாழும் கர்ணன் நீதியரசர் கர்ணன் என்று பட்டம் வழங்கி கவுரவித்தனர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள். அந்த விழாவில் பேசிய வழக்கறிஞர் சங்கரசுப்பு என்ன பேசினார் தெரியுமா ? “கர்ணன் போன்ற சிறந்த நீதிபதியை இந்தியாவிலேயே எங்கும் காண முடியாது. அவரை உடனடியாக உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பத் தவறினால், அதை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தை நானே முன்னெடுப்பேன்” இரண்டு பேரும் எப்படிப்பட்ட கேப்மாரிகள் என்பது புரிகிறதா ?
இப்படித்தான் இந்திய நீதித்துறை குமாரசாமிகளால் நிறைந்துள்ளது.
Dear Savukku,
if you use the pictures, Please remove innocent people / students photos. they will get affected.
thanks
Ravi
Great news , thanks savukku
எனக்கு இதுவரை நீதி மன்றங்களின் மேல் தான் ஓரளவு நம்பிக்கை இருந்தது…பொது மக்களை அது தான் கடைசியில் காப்பாற்றும் என்றல்ல….மிக்க அதிகாரம் கொண்டோரை நீதி மன்றம் ஒன்றால் தான் தண்டிக்க முடியும் என்று……குறைந்தபட்சம் ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்ட ஒன்றை மக்களுக்கு பயந்தாவது நீதி வழங்கி தண்டிக்கும் என்று……ஆனால் என்று உலகறிந்த ஒன்றை, மக்களாவது மயிராவது என்று குமாரசாமி தீர்ப்பு வழங்கினாரோ…..அதை வேடிக்கை பார்த்து உச்சநீதி மன்றம் உச்சா போய் கொண்டிருந்ததோ….அன்றே நீதியின் மேல் நம்பிக்கை போய்விட்டது.
இந்த இரண்டும் நடைபெற்றால் தான் நம் நாடு உருப்படும்…
1. உச்ச நீதி மன்றத்தில் 31 குன்ஹாக்கள்.
2. பாராளுமன்றத்தில் 795 அப்துல் கலாம்கள்
இப்ப சொல்லுங்க நம்ம நாடு முன்னேறுமா….? தல கிர்ர்ர்ர்ருஇன்னு சுத்துதுல…!!!!
உச்ச நீதி மன்றத்தில் 31 குன்ஹாக்கள்.??? நம்ம நாடு முன்னேறுமா….? savukku kumarasamy visayathil thavaru seithuvittathu .innamum naan savukkirkku savaal vidukirean mudinthal witness of subramaniya samy ,nallama naidu ,lathikasaran umudi ,ithellam vida FIR pottaney oru paavi IG avan witnessium tamil paduththi intha thalaththil vida thayaaraa ??? mudiyavillaiyendral savukku yarukkaaka குமாரசாமி தீர்ப்பு உலகறிந்த ஒன்றை வெளிச்சம் போட்டு காட்டப்பட்ட ஒன்றை மக்களுக்கு பயந்தாவது உடனடியாக veliyida vendum .இப்ப சொல்லுங்க தல கிர்ர்ர்ர்ருஇன்னு சுத்துதுல…!!!! குன்ஹா uththaman alla alla alla . itharkku melum kumarasamy methu koorum kutrachchattu savukku methu ulla ஓரளவு நம்பிக்கை???.
முதன் முதலாக இன்று போக்குவரத்து காவல்துறையிடம் கெல்மெட் அணியாமல் 100 பைன் கட்டிட்டேன்.
எப்பா நீதிபதி கிருபாகரா ஒனக்கு இப்ப சந்தோசமா?
வயிறு எறிஞ்சு சொல்றேன்யா… நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட…
என் தலையில நான் கெல்மெட்ட சொமக்கனும்னு சொல்ல நீ யாருப்பா? ஒனக்கு என்ன உரிமை இருக்கு?
ஒனக்கு என்னய்யா என் உயிர்மேல அக்கறை…
நாளைக்கி நான் ஒரு 10 லட்ச ரூபாய் கடன்பட்டு இருக்கேன்னா நீ வந்து அக்கறையோட குடுப்பியா? என் உயிர் மேல எனக்கு இல்லாத அக்கற ஒனக்கு எதுக்குப்பா? எனக்கு எது நல்லது கெட்டதுன்னு எனக்குத் தெரியும்பா.. நீ ஒன் வேலய மட்டும் பாரு.
நீதிமன்றத்தோட வேல என்ன? சட்டத்துக்கு புறம்பா எது நடந்தாலும் அது மூனாவதா ஒருத்தன பாதிக்கிறதா இருந்தா அந்த மனுசன காப்பாத்த வேண்டியதுதான்..
நான் எவன் குடும்பத்தயும் கெடுத்தனா? இல்ல பைக்ல கஞ்சா கடத்திட்டு போறனா?…
நான் பாட்டுக்கு கஞ்சிய குடிச்சிட்டு எவனயும் டிஸ்ட்ர்ப் பன்னாம என் வேலைய பாத்துட்டு இருக்கேன். என் வாழ்க்கைல தலையிடுதுக்கு ஒனக்கு என்னய்யா உரிமை?
இம்புட்டு பேசுறியே… ஒனக்கு தைரியம் இருந்தா தெருவுக்கு ரெண்டு சாராய கடய தெறந்து வச்சு பொதுமக்க வாழ்க்கை சீரழிச்சுட்ருக்கே கவர்மெண்ட்… அத தடுத்துப்பாரு..
அதுக்கு தைரியம் இருந்தா அடுத்து மக்கள் மேல அக்கறப்படலாம்..
அதுக்காக அடுத்து கெல்மட் போடலாம்னு சட்டம் போடலாம்னு அர்த்தம் இல்ல.. அது அவனவன் இஷ்டம். அவனுக்குத் தேவன்னா அவன் போட்டுக்குவான்.
சட்டத்துல இருக்குறததான் அமல்படுத்துறேன்னு சொன்னியாமேப்பா? சட்டத்துல இருந்தா அத திருத்துற வழியப்பாருப்பா.. அந்த சட்டமே தப்புதான். நான் எத போடனும்னு சட்டம் சொல்றதுக்கு சட்டத்துக்கு என்ன உரிமை இருக்கு.
நாளைக்கி ஜட்டி போட்டா இருக்கமா இருக்கும். உயிரணு பாதிக்கப்பட்டு ஆண்மைக்குறைவு வந்துரும். அதுனால யாரும் ஜட்டி போடக்கூடாதுன்னு ஒரு உத்தரவு போட்ருங்க. வௌங்கும்யா தமிழ்நாடு.
எனக்கு கடைசியா ஒன்ன தெரியனும். நாளைக்கி கெல்மெட் போட்டுட்டு போகும்போதும் ஒரு லாரி என்னய நெஞ்சுல ஏத்தி கொன்னுருச்சுன்னா ? எங்குடும்பத்துக்கு நஷ்ட ஈடு கொடுத்துருமா கோர்ட்டு? குடுக்காதுல்ல…
கெல்மெட் நல்லதுதான்யா… ஆனா அத நீ எனக்கு கட்டாயப்படுத்தி போட வைக்க முடியாது. போட மாட்டேன். முடிஞ்சத பாத்துக்கங்க. எதயும் சந்திக்க தயார்.
karuna means corruption…
நீதிமன்ற பயங்கரவாதம்.
தமிழ்நாட்டில் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 32 தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்த தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்வதில் திட்டமிட்டு முட்டுக்கட்டைகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்திகள் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றன.
தென் மாவட்டங்களில் வி.வி. மினரல்ஸ் நிறுவனம் சட்டவிரோதமாகவும், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் விதிமுறைகளை மீறி தாது மணல் அள்ளியது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. விதிகளை பின்பற்றி நடக்காததால் அந்த நிறுவனம் தாது மணல் அள்ள தடை விதித்து மத்திய அரசு ஆணையிட்டிருந்தது. அதை எதிர்த்து வி.வி. மினரல்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த 32 வழக்குகளில் இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக ஒற்றை நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசின் முடிவுக்கு எதிராக நெல்லை மாவட்டத்தில் உள்ள குடிமையியல் நீதிமன்றத்தில் வி.வி. மினரல்ஸ் நிறுவனம் பல வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு தான் இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றத்தை வி.வி. மினரல்ஸ் அணுக முடியும். ஆனால், அந்த நிறுவனம் அவசர அவசரமாக உயர்நீதிமன்றத்தை அணுகி சாதகமான தீர்ப்புகளை பெற்றிருப்பது பல ஐயங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
அதுமட்டுமின்றி, இவ்வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எதிர்த்து உரிய காலத்தில் மேல்முறையீடு செய்வதும் திட்டமிட்டு தடுக்கப்பட்டிருக்கிறது. நீதிப்பேராணை வழக்குகளில் தீர்ப்பின் ஆணை தயாரான நாளில் இருந்து 30 நாட்களில் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும். ஆனால், வி.வி. மினரல்ஸ் நிறுவனம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு 6 மாதங்களாகியும் அதன் சான்றளிக்கப்பட்ட நகல்கள் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, அந்த வழக்குகளில் மத்திய அரசின் விளக்கத்தைக் கேட்காமலேயே, வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சான்றளிக்கப்பட்ட தீர்ப்பாணை குறித்த காலத்தில் வழங்கப்படாவிட்டாலும் கூட, அதைக் காரணம் காட்டி, தீர்ப்பாணை இல்லாமலேயே மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய முடியும். ஆனாலும் அந்த வாய்ப்பை மத்திய அரசு வழக்கறிஞர்கள் ஏன் பயன்படுத்தவில்லை என்பதும் தெரியவில்லை.
வி.வி. மினரல்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்ட விதமும், தீர்ப்பாணைகளை வழங்குவதில் திட்டமிட்டு செய்யப்பட்ட காலதாமதமும் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதைத்து விட்டன. 2ஜி ஊழல் தொடர்பான வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், இயற்கை வளங்கள் தேசிய சொத்தாக கருதப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. தாது மணலை பொறுத்த வரை, அது பொருளாதாரம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல… நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய விஷயமும் ஆகும். அவ்வாறு இருக்கும் போது தாது மணல் குவாரிகள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசின் விதிகளை மீறும் வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக அகற்றுவதும், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிடாமல் முட்டுக்கட்டை போடுவதும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் செயலாகும்.
ஏழை, எளிய மக்களின் கடைசி நம்பிக்கையாக நீதிமன்றங்கள் தான் உள்ளன. ஆட்சியாளர்களாலோ, அதிகாரிகளாலோ அநீதி இழைக்கப்படும் போது நீதிமன்றங்களை அணுகி நீதி பெறலாம் என்று மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை தோற்கும் வகையில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் அமையக் கூடாது.வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது யார்? தீர்ப்பாணைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய அரசுக்கு வழங்கப்படாததற்கு காரணம் யார்? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரியவில்லை. ஆனாலும், வி.வி. மினரல்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு சாதகமாக ஒருசிலர் செயல்படுவது தொடர்ந்தால், ஏழைகளின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் மேல்நிலை நீதிமன்றங்கள், பணக்காரர்களின் முதல் நம்பிக்கையாக மாறிவிடும் ஆபத்து இருப்பதை உரியவர்கள் உணர வேண்டும்.
எனவே, வி.வி. மினரல்ஸ் நிறுவனம் தொடர்பான வழக்குகளில் தவறு செய்தவர்கள் யார்? என்பதை கண்டறிவதுடன், இனியும் இத்தகைய தவறுகள் நடக்காமல் தடுக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் காலம் காலமாக கட்டிக்காக்கப்பட்டு வரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்பை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Before 1991 private parties chould not involve in mining. It is the responsiblity of privatization and globalization. Now, india is looted ny privates..
Its all our fate..
கட்டுரையின் முதல் வரியில் “அவர் ஆட்சியாளர்களுக்கு துணை போவதும் என்பதை “ஆட்சியாளர்கள் அவருக்கு துணை போவதும்” என மாற்றினால் மிகப் பொருத்தமானதாக இருக்கும் என கருதுகிறேன்.
What is happening in this country sir? So, Justice can be available anywhere except courts.
this news came in economic times already
http://articles.economictimes.indiatimes.com/2013-09-14/news/42062340_1_illegal-mining-mining-baron-beach-sand