சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கொதித்துக் கொண்டிருக்கிறது. ஹெல்மெட் அணிவதற்கு எதிராக ஜனநாயக வழியில் போராட்டம் நடத்திய மதுரை வழக்கறிஞர்களை தண்டிக்க வேண்டும் என்று, வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளான தர்மராஜ் மற்றும் ஏ.க.ராமசாமி ஆகியோர் மீது, தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார்கள் நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் தமிழ்வாணன் ஆகியோர். சமுதாயத்தில் அனைத்து தரப்பும் போராட்டம் நடத்துகையில் வழக்கறிஞர்களுக்கு போராட்டம் நடத்த உரிமை இல்லையா என்ன ? அந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி என்னவென்றால், ஒரு நீதிபதி உத்தரவு போடுகையில், அதை எதிர்த்து போராட உங்களுக்கு என்ன துணிச்சல் வேண்டும் என்ற நீதிபதிகளின் ஆணவமே இதற்கு காரணம்.
இப்படி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்த நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் தமிழ்வாணன் யோக்கிய சிகாமணிகளா என்றால் அதுவும் இல்லை. சொந்த தம்பி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்த யோக்கியவான்தான் செல்வம். சவுக்கு இணையதளத்தை முடக்க வேண்டும் என்பதற்காக, சட்டத்தை மீறி பல்வேறு உத்தரவுகளை இன்று வரை பிறப்பித்துக் கொண்டிருப்பவர்தான் செல்வம். பெண் விவகாரத்தில் மோசமான பெயர் எடுத்தவர்தான் நீதிபதி தமிழ்வாணன். இந்த யோக்கிய சிகாமணிகள்தான் இன்று மதுரை வழக்கறிஞர்களோடு மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டத்தை வழக்கறிஞர்கள் மீறுகிறார்கள் என்றால், அதை கேள்வி கேட்கும் உரிமை ஒரு நேர்மையான நீதிபதிக்கு மட்டுமே உண்டு. ஆனால் சொத்துத் தகராறுக்காக சொந்த தம்பி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கும் சி.டி.செல்வம் போன்ற அயோக்கியர்களுக்கு இந்தத் தகுதி அறவே கிடையாது.
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள், மதுரை வழக்கறிஞர்களை முழுவதுமாக ஒற்றுமைப் படுத்தியுள்ளது. போர்க்குணத்தோடு போராடி வருகிறார்கள். இந்த அவமிப்பு வழக்கால், பல்வேறு நீதிபதிகளின் முகத்திரை கிழிந்து வருகிறது. நீதித்துறையின் ஊழலை அம்பலப்படுத்துகிறார்கள் மதுரை தோழர்கள். கடவுள்கள் போல தங்களைக் கருதிக் கொண்டு, தங்களை யாருமே கேள்வி கேட்க முடியாது என்று இறுமாப்போடு இருக்கும் இந்த நீதிபதிகளுக்கு சரியான பாடத்தை புகட்டிக் கொண்டிருக்கிறார்கள் மதுரை வழக்கறிஞர்கள். வெல்லட்டும் அவர்கள் போராட்டம்.
மதுரை வழக்கறிஞர்கள் வெளியிட்ட துண்டறிக்கை உங்களுக்காக.
அன்பார்ந்த நண்பர்களே,
ஹெல்மெட் பிரச்சனையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துப் போராடியதற்காக மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் திரு.தர்மராஜ், செயலர் திரு.ஏ.கே.ராமசாமி ஆகியோர் மீது தானே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 24.08.2015-அன்று நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி.செல்வம் முன்பு ஆஜராகச் சொன்னது.மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் அவர்கள் மதுரை வழக்கறிஞர் சங்கத்துக்காக ஆஜராகி” நீதிபதி கிருபாகரன் தீர்ப்பில் ”சட்டவிரோதமாக வாகனத்தை, ஆர்.சி.யை பறிமுதல் செய்ய உத்தரவிட்டதற்கு எதிராக சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது; தற்போது தலைமை நீதிபதி கோரியதன்பேரில் போராட்டம் முடிக்கப்பட்டு நீதிமன்றம் நடக்கிறது.எனவே நீதிமன்ற அவமதிப்பை முடியுங்கள்” எனக் கோரினார்.இதை ஏற்க மறுத்த நீதிபதிகள்’ தலைவர்.தர்மராஜ், செயலர்.ஏ.கே.ராமசாமி ஆகியோரை கோட்டு, கவுனை முதலில் கழட்டுங்கள், எனச் சொல்லி கழட்ட வைத்தனர்.மதுரையில் நடந்த சம்பவத்திற்கு, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்துங்கள், எனக்கு 73 வயதாகிறது, உடலில் பல நோய்கள் உள்ளது, அலைய முடியாது என்று பேச முயன்ற திரு.ஏ.கே.ராமசாமி அவர்களைப் பேசவே அனுமதிக்காததுடன், வழக்கைத் தவிர வேறு எதுவும் பேசக்கூடாது, இது பொதுமேடை அல்ல” என்று சொல்லி, நான்கு வாரம் வாய்தா தர மறுத்து 16.09.2015-ல் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
கறார் கந்தசாமிகளின் யோக்கியதை என்ன?
நீதிமன்றத்தில் சட்டப்படி நடக்க வேண்டுமென கறாராகப் பேசும் நீதிபதி சி.டி.செல்வம்தான் வழக்கறிஞர்களால் கிரானைட் செல்வம், சூட்கேஸ் செல்வம் எனச் செல்லமாக அழைக்கப்படுபவர்.கிரானைட் மாபியாக்களிடம் பெட்டி வாங்கிக் கொண்டு கடந்த 2013-ல் ” பல்லாயிரம் கோடி கொள்ளையடித்த கிரானைட் திருடர்களுக்கு ஜாமின் வழங்கியதுடன், அரசு , உச்சநீதிமன்றம் செல்வதாகச் சொன்னவுடன்” உச்சநீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வரும்வரை ஏற்கனவே உள்ள, இனி வரும் எந்த வழக்கிலும்” கிரானைட் திருடர்களை கைது செய்யக் கூடாதெனச் சொல்லி உத்தரவிட்டார்.வழக்கறிஞர்களுக்கு உபதேசிக்கும் இவர்தான் ,”தனது தம்பிக்கு எதிரான வழக்கை தானே விசாரித்துத் தீர்ப்பளித்தார்.இதை எதிர்த்த சவுக்கு சங்கர் என்பவரின் இணையதளத்தை முடக்கி, சங்கரை விரட்டி, விரட்டி கைது செய்ய வைத்தார்.(விபரங்களுக்கு:பார்க்க சவுக்கு இணையதளம்).
அடுத்து நீதித்துறையின் அப்துல்கலாம் அய்யா டாக்டர்.தமிழ்வாணன் அவர்கள்.இவர் மீது பல பாலியல் புகார்கள் உள்ளது.தற்போது மதுரை ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு டாக்டர் பட்டம் வழங்கிய உப்புமா பல்கலையில் லட்சரூபாய் கொடுத்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.பவர்புல்லான பார் கவுன்சில் நிர்வாகிகள் வந்தால் இவரது நீதிமன்றத்தில் உத்தரவு நிச்சயம்.இந்த உப்புமா கம்பெனிதான் மதுரை வக்கீல் சங்கத்தை மிரட்டுகிறது.
நீதிபதிகளா? ஆளும் கட்சி எடுபிடிகளா?
சமீபத்தில் இறந்த சசி பெருமாளை மரணத்தை எடுத்துக் கொள்வோம். உயர் நீதிமன்றமும் அவரது மரணத்துக்குக் காரணம் என்ற உண்மையை யாரேனும் மறுக்க முடியுமா? சட்டத்தின் மீதும், நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை வைத்து மூன்றாண்டு காலம் சசிபெருமாள் போராடினார். உண்ணாமலைக் கடை டாஸ்மாக்கை அகற்ற வேண்டும் என்று ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே உயர்நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்து விட்டது. விதியை மீறி நெடுஞ்சாலைகள், பள்ளிகள் அருகில் அமைக்கப்பட்டிருக்கும்கடைகளை அகற்றுமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எதையும் தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்பது எல்லா நீதிபதிகளுக்கும் தெரியும்.மதுரை வழக்கறிஞர்கள் மீது தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கும் நீதிபதிகள், டாஸ்மாக் விவகாரத்தில் ஒரு இடத்தில் கூட அரசுக்கு எதிராகநீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவில்லை.சசி பெருமாள் உயிர் துறந்த பிறகாவது, தன்னுடைய குற்றத்தை உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறதா? சசி பெருமாளை மரணத்துக்குத் தள்ளிய அரசைக் கண்டித்து உயர்நீதிமன்றம் ஒரு வார்த்தையாவது பேசியதா? சசி பெருமாளின் மரணத்துக்குப் பின்னராவது, சட்டவிரோதமான கடைகள் அனைத்தையும் மூடுமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியதா? எதுவும் இல்லை.
அரசமைப்புச் சட்டத்தின் விதி 47, “மதுவிலக்கை அமல்படுத்துவது அரசின் கடமை” என்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் மீதான நம்பிக்கையை விட, அரசு அதிகாரத்துடனும் ஆளும் கட்சியுடனும் அனுசரித்துப் போவதால் கிடைக்கக்கூடிய ஆதாயங்களின் மீதுதான் நீதிபதிகளுக்கு நம்பிக்கை இருக்கிறது. பணம் வாங்குவது மட்டும் ஊழல் அல்ல.அரசு, போலீசுடன் ஒத்துழைத்து நீதிபதிகள் போவதுதான் மிகப்பெரிய அறம் கொன்ற, ஊழல் மலிந்த செயலாகும். குறிப்பாக மாஜீஸ்ட்ரேட்டுகள் உள்ளூர் போலீசின் எடுபிடிகளாகவே இருக்கிறார்கள்.உயர்,உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உயர் காவல்துறை, அரசின் கூட்டாளிகளாகவே உள்ளனர்.
கொள்ளையின் பங்காளிகளாக………………….நிதி அரசர்கள்….!
ஆற்று மணல், கிரானைட், தாது மணல் கொள்ளை வழக்குகளைக் கையாண்ட நீதிபதிகள் பலர் கனிமவளக் கொள்ளையர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறார்கள். “இந்த தீர்ப்புகள் பற்றி சகாயம் குழு விசாரணை நடத்த வேண்டும்” என்றுமுன்னாள் நீதிபதி சந்துருநாளேடு ஒன்றில் கட்டுரை எழுதிய பின்னரும் நீதிபதிகள் யாருக்கும் கோபம் வந்ததாகத் தெரியவில்லை. மாறாக, “முழுதும் நனைந்தவனுக்கு முக்காடு எதற்கு” என்று வெளிப்படையாகவே இறங்கிவிட்டார்கள்.
மதுரையில் கடந்த டிசம்பர், 2014-ல் கிரானைட் கொள்ளைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி ராஜா சென்னையில் ஜூலை மாதம் வைகுண்டராஜனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறார். ஆகஸ்டு மாதம் மதுரைக்கு வந்த இந்த நீதிபதிக்கு மீண்டும் கனிமவளத்துறையே ஒதுக்கப்படுகிறது. வைகுந்தராசனின் கனிம வளக்கொள்ளை தொடர்பாக பேடி குழு அளித்த பரிந்துரையை அப்படியே நிராகரித்து, வினோத் குமார் சர்மா என்ற தமிழே தெரியாத பஞ்சாப் மாநில ஒய்வு பெற்ற நீதிபதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப் படுகிறார். 9 மாதங்களாக கனிமவளத்துறை என்ற ஒரு துறையை ஒரு குறிப்பிட்ட நீதிபதிக்கு மட்டுமே ஒதுக்கித் தந்திருப்பவர், சட்டத்தின் ஆட்சி பற்றி பெரிதும் கவலைப்படும் தலைமை நீதிபதி சஞ்சய்கிசன்கவுல்தான்.
கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் கொள்ளைகளில், நீதிபதிகள் தனபால், வேலுமணி, கர்ணன்,ராஜேந்திரன்,பி.என்.பிரகாஸ் உள்ளிட்ட பலரும் திருடர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளார்கள்.நீதிபதி தனபாலின் மருமகள்”தனது கணவர் நீதிமன்றம் செல்லாமலே சட்டவிரோதமாக பலலட்சம் சம்பாதிக்கிறார், தன்னைக் கொடுமைப்படுத்துகிறார்கள்” என்று சொல்லித் தொடுத்த வழக்கில் ஊழல் நீதிபதி தனபாலுக்கு ஆதரவாக வழக்கைத் தள்ளுபடி செய்கிறார் நீதிபதி நாகமுத்து.22,000 கோடி கொள்ளையடித்த நோக்கியா கம்பெனியிடம் பெட்டி வாங்கிக் கொண்டு ஸ்டே கொடுக்கிறார் நீதிபதி ராஜேந்திரன்.நீதிபதிகள் பி.என்.பிரகாஸ், வைத்தியநாதன் ஆகியோர் சாதி பார்த்தே தீர்ப்பளிக்கின்றனர்.நீதிபதி மணிக்குமார் மீது பாலியல் புகார் உள்ளது.இன்னும் நீதிபதிகள் பி.ஆர்.சிவக்குமார்,வாசுகி, விமலா உள்ளிட்ட பலர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளது.சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரில் நடக்கும்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வழங்கினார் நீதிபதி அருணா ஜெகதீசன்.ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிராக சென்றமாதம் ஆவேசமாகப் பேசிய நீதிபதி சுதாகர் அடுத்த வாய்தாவில் பதுங்குகிறார்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து ஊழல்பேர்வழி என்று நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ சொல்கிறார்.அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டியதுதானே? நீதிபதி கங்குலி மீது பாலியல் புகார்.நீதிபதி சதாசிவம், கே.ஜீ.பாலகிருஸ்னன்,முன்னாள் சட்ட அமைச்சர்,மூத்த வழக்கறிஞர் சாந்திபூசண் சொன்ன 8 ஊழல் இந்திய தலைமை நீதிபதிகள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?
நீதிபதிகள் தங்கள் மனதை தொட்டுச் சொல்லட்டும்.மேற்சொன்ன விபரங்கள் உண்மை இல்லையா? கீழமை நீதிமன்றங்களிலிருந்து, உயர்,உச்சநீதிமன்றம்வரை பல நீதிபதிகள் லஞ்சம்,ஊழல்,பாலியல் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களா? இல்லையா? இவர்கள் மீது கடந்த 65 ஆண்டுகளாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இக்குற்றங்களை சாதாரண மக்கள் செய்தால்,விட்டுவிடுவோமா?
இதில் மிக முக்கிய பிரச்சனை ஒரு கீழ்நிலை அதிகாரி லஞ்சம் வாங்கும்போது அது அந்தத் தனிநபரின் குற்றமாக முடிந்து விடுகிறது. ஆனால் ஒரு உயர்,உச்சநீதிமன்ற நீதிபதிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தீர்ப்பெழுதும்போது, அந்தக் குற்றமே சட்டமாகி விடுகிறது. அந்தத் தீர்ப்பைக் காட்டி சட்டபூர்வமாகவே கொள்ளையிடும் வாய்ப்பு எல்லோருக்கும் திறந்து விடப்படுகிறது.
குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் காவலன் என்று கூறிக்கொள்ளும் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள், தங்கள் சொந்த ஆதாயத்துக்காக தமிழ் மண்ணையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் சூறையாடுவதுடன்,நீதித்துறை, வழக்குரைஞர் தொழிலுக்குரிய மாண்பையும் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களை அம்பலப்படுத்துவதுதான் அரசியல் சட்டம், நீதித்துறையின் மாண்பைக் காப்பதாகும்.இனித் தயங்குவதில் பயனில்லை.வழக்கு எங்களுக்குப் பொருட்டல்ல.இது தொடக்கம்தான்.அடுத்தடுத்து நீதித்துறை ஊழலுக்கு எதிரான எங்களது போராட்டக்களம் ஒட்டுமொத்தத் தமிழகம், இந்தியா என விரிவடையும்.ஊழல் நீதிபதிகள் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும்.
இவண்: அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள், மதுரை மாவட்ட,உயர் நீதிமன்றங்கள்.
நீதிபதி கிருபாகரன் மிக பெரிய கொள்ளைக்காரன். பாதிக்கபட்டவன் என்ற முறையில் சொல்கிறேன். ஒரு சாதாரண வழக்கில் கூட காசு பார்க்கும் மோசமான நபர். ஒரு விவாகரத்து வழக்கு. அரியலூர் சப் கோர்டில் ஒரு கணவர் மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டி வழக்கு தொடுக்கிறார். மனைவிக்கு திருமணத்துக்கு முன்னரே இருந்த குனபடுத்தமுடியாத மருத்துவ குறைபாடுகளை மறைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்பது குற்றசாட்டு. கல்யாணத்துக்கு பின்னர் 4 வது மாதம் முதல் தொடர் மருத்துவ சிகிச்சை அளித்தும் மனைவிக்கு சரியாக வில்லை. 4 வருடங்கள் தொடர் சிகிச்சை எடுத்தும் சரியாகவில்லை. மனைவியால் தாம்பத்திய உறவில் சரியாக ஈடுபடமுடியவில்லை. மனைவிக்கு இயற்கையாகவோ செயற்கையாகவோ குழந்தை பெறும் பாக்கியமும் இல்லை. அனைத்தையும் ஆதாரங்களுடன் வழக்கை தொடுக்கிறார் கணவர். மனைவி போலியான குற்றசாட்டுகளை கூறி இடைகால ஜீவனாம்சம் வேண்டி மனுதாக்கல் செய்கிறார். யாரிடம் தவறு உள்ளது என்பதை நீதிபதியும் நீதிமன்றமும்தான் முடிவு செய்யவேண்டும். சுமார் 11/2 வருடங்கள் ஆகியும் மனைவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதற்கான காரணத்தையும் நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. கணவர் பல முறை ஆஜராகி அழுத்தம் கொடுத்தும் எந்த உத்தரவையும் பிறப்பிக்க நீதிபதி மறுக்கிறார். 11/2 வருடங்கள் கழித்து வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றவேண்டும் என்று மனைவி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்கிறார். நீதிபதி கிருபாகரன் விசாரிக்கிறார். மொத்த வழக்கையும் அங்கேயே முடிக்க நடவடிக்கை எடுக்க நினைத்து இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு அபோல்லோ மருத்துவ மனைக்கு அனுப்புகிறார். மருத்துவ அறிக்கை மனைவிக்கு பாதகமாக வர மேற்கொண்டு கணவரை மனைவியுடன் சேர்ந்து வாழ நிர்பந்திக்கமுடியாது என்கிறார். பின்னர் மனைவி 25 லட்சம் பணம் ரொக்கமாக கொடுத்தால் விவாகரத்து தருகிறேன் இல்லை எனில் வழக்கை நான் கேட்கும் நீதிமன்றத்திற்கு மாற்றவேண்டும் என்று கோருகிறார். அதற்கு கணவர் இந்த வழக்கு தொடுக்கப்பட்டு 11/2 வருடங்கள் ஆகிறது. நான் என் மனைவி மீது கூறிய குற்றசாட்டுகள் மருத்துவ பரிசோதனை மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. என் மனைவியின் மருத்துவ செலவுக்கு சுமார் 10 லட்சம் வரை நான் செலவு செய்துள்ளேன். அதற்கான ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டன. 25 லட்சம் கொடுக்கும் அளவுக்கு என்னிடம் வருமானமோ, சொத்தோ இல்லை. என் சம்பள சான்றிதழும் சமர்பிக்கப்பட்டது. மேலும் என் மனைவி BE பட்டதாரி. திருமணத்திற்கு முன்பு வரை 5 வருடங்கள் பணியில் இருந்த அனுபவம் உள்ளவர். நல்ல வசதியான குடும்பத்தை சார்ந்தவர். எனவே சட்டப்படி அவர் ஜீவனாம்சம் பெற தகுதியற்றவர் என்று ஆதாரங்களுடன் விளக்கப்பட்டது. இருந்தும் 10 லட்சம் கொடுக்கிறேன் என்றேன். சரி அப்படியே நீதிமன்றத்தை மாற்றினாலும் பரவா இல்லை. வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட வேண்டும் என்றேன். இப்படி என் கோரிக்கை எதையும் நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. 25 லட்சம் கொடு. இல்லையேல் வழக்கை வேறு நீதிமன்றத்தில் சந்தித்து கொள். வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு போட மாட்டேன். வேண்டுமெனில் உச்ச நீதிமன்றத்தை அணுகி கொள் என்று கூறி வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு போட்டார். இதில் எங்காவது சட்டத்தின் நடைமுறைகள் பின்பற்றபட்டனவா? என்று சவுக்கு விளக்குமா? இது நீதிமன்றமா? இல்லை கட்டபஞ்சாயத்தா? ஒன்றும் புரியவில்லை. வழக்கை சட்டப்படி சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நீதிபதியும் நீதிமன்றமும் அதற்கு முட்டுகட்டையாக உள்ளன. இப்போது புரிகிறதா? பல கோடி வழக்குகள் ஏன் தேங்கி கிடக்கின்றன என்று! என் மனைவி மீது என் கோபத்தை காட்ட விரும்ப வில்லை. ஏன் எனில் இருவருமே நீதிமன்றத்தை அணுகி விட்டோம். ஆனால் என் கோபம் முழுவதும் நீதிபதி மீது மட்டுமே. 25 லட்சம் கொடுக்க சட்டத்தில் இடம் உள்ளதா? அப்படி இருந்தால் அதை நீதிபதி மேற்கோள் காட்டியிருக்கவேண்டும். ஆனால் காட்டவில்லை. அல்லது இதற்கு முன்னர் அப்படி ஏதாவது தீர்ப்பு இருந்தால் சொல்லியிருக்கலாம். சொல்லவில்லை. தற்சமயம் பணியில் உள்ள என் மனைவி ஜீவனாம்சம் பெற தகுதியற்றவர் என்று நான் பல வழக்குகளின் தீர்ப்பை மேற்கோள் காட்டினேன். அதற்கான நகலை காண்பித்தேன். ஆனால் எதையும் நீதிபதி கிருபாகரன் கருத்தில் கொள்ளவில்லை. பின்னர் அவரை பற்றி சில வக்கில்களிடம் விசாரிக்கும் போது சொன்னார்கள். அவர் மிக பெரிய ஊழல் பெருச்சாளி. நீ உன் வக்கீல் மூலம் அவரிடம் பேரம் பேசி இருந்தால் அனைத்து வகையிலும் உனக்கு சாதகமான இந்த வழக்கில் 1 ரூபாய் கூட ஜீவனாம்சம் கொடுக்காமல் உனக்கு விவாகரத்து கொடுக்க உத்தரவு போட்டிருப்பார் என்கிறார்கள். நிச்சயம் உன் எதிர்தரப்பு வக்கீல் பணம் கொடுக்காமல் இப்படி ஒரு தீர்ப்பை வாங்கியிருக்கமுடியாது என்கிறார்கள். சில வழக்குகளில் நாங்களே அப்படிதான் செய்துள்ளோம் என்று கூறிய போது அதிச்சி அடைந்தேன்.
Good Article
Intha samook thirokikalai ean thookkiliddu kollakkoodathu?
நீதி அரசர்கள்… ஏன் நிதி அரசர்களாகவே உள்ளனர்….!
Only a REVOLUTION could bring the change in Judiciary.If not KUMARASAMIES ARE to be best Judges,CHANDRUS are to not to open their mouth and wealthy could do anything they want.
LONG LIVE AMBEDHAR’S INDIAN JUDICIARY.
are u a fool to say about kumarasamy he is really the best judge. let any one come to the debate i am ready .for ur kind information savukku it self absconding from the maran case and it present going on .without knowing the truth pl keep mum .if any of u have the thil publish tamil version of entire judgement.each and every tamilian know the truth.
அடுத்து நீதித்துறையின் அப்துல்கலாம் அய்யா டாக்டர்.தமிழ்வாணன் அவர்கள்.??? why you bring அப்துல்கலாம்????? நீதிபதி கங்குலி மீது பாலியல் புகார்?? ivai irandum innum kattumaranthin kaasu ullatho endru enna thodrukirathu ? athu sari kedi sakothararkalukku koduththa முன் ஜாமின் வழங்கிய நீதித்துறை patri konchamum sollavillai ??? enna thadukirathu unnai savukku ???
It seems a good start. Let it spread all over the nation to see a revival very soon. Peoples think about anti corruption but never speak about judiciary corruption which is the root cause of all corruption in the country. Severe punishment to be given to the Judges who those are corrupted.