தமிழக அரசியல் வரலாறை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு, ஆணவத்தின் மறுபெயர் ஜெயலலிதா என்பது நன்றாகவே தெரியும். எவ்விதமான தவறுகளை இழைத்தாலும் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்பதில் அவருக்கு அபார நம்பிக்கை உண்டு. திமுகவின் மீது அப்படியொரு நம்பிக்கை அவருக்கு. அவரது நம்பிக்கைக்கு ஏற்றவாறுதான், திமுகவும் பல்வேறு தவறுகளை இழைத்து, ஜெயலலிதாவை மீண்டும் மீண்டும் மகுடத்தில் ஏற்றி வருகிறது.
1991-1996 ஆட்சிக்கு பிறகு, ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது என்றே பலரும் கருதினார்கள். ஆனால் அந்த கருத்துக்களையெல்லாம் பொய்ப்பித்து, 1998ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலிலேயே 18 எம்.பிக்களை பெற்றார் ஜெயலலிதா. தேர்தலானாலும் சரி, வழக்குகளானாலும் சரி. ஒரு குமாரசாமி கிடைக்காமலா போய் விடுவார் என்ற அசாத்திய நம்பிக்கை அவருக்கு உண்டு.
2011ல் ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே இந்த ஆணவத் தொனி ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் வெளிப்பட்டது. திமுகவின் திட்டங்களை ஒவ்வொன்றாக முடக்குதையே தனது முதல் நடவடிக்கையாக தொடங்கினார் ஜெயலலிதா. அண்ணா நூற்றாண்டு நூலகம், தலைமைச் செயலகம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை படிப்படியாக முடக்கினார். அந்த கட்டிடங்களில் செய்யப்பட்டுள்ள கோடிக்கணக்கான முதலீடுகளைப் பற்றி ஜெயலலிதா துளியும் கவலைப்படவில்லை. தலைமைச் செயலகம் கட்டுவதில் பெரும் ஊழல் நடந்திருக்கிறது என்று கூறி, முதல் பட்ஜெட்டிலேயே, அந்த கட்டுமான ஊழல் குறித்து விசாரிப்பதற்கென்று ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார். அந்த விசாரணை ஆணையத்தின் தலைவராக இருந்த நீதிபதி ரகுபதி, கடந்த நான்கரை ஆண்டுகளாக தெண்டச் சம்பளம் வாங்கியதைத் தவிர அந்த விசாரணை ஆணையத்தால் எந்தப் பயனும் நடைபெறவில்லை.
திமுக பிரமுகர்கள் பலர் மீது நில அபகரிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் நில அபரிப்புக்கென்றே ஒரு தனி பிரிவு காவல்துறையில் தொடங்கப்பட்டது. இதற்கென ஒரு அரசு சிறப்பு வழக்கறிஞரும் நியமிக்கப்ட்டார். நீதிபதி ரகுபதி போலவே, இந்த நில அபகரிப்புப் பிரிவினரும் கடந்த நான்கரை ஆண்டுகளாக தெண்டச் சம்பளம் மட்டுமே வாங்கியுள்ளனர். தொடக்க காலத்தில் நூற்றுக்கணக்கான திமுக பிரமுகர்களை நில அபரிப்பு வழக்கில் கைது செய்ததோடு சரி. இது வரை ஒரே ஒரு வழக்கில் கூட தண்டனை பெற்றுத் தர முடியவில்லை ஜெயலலிதாவால். இதுதான் ஜெயலலிதாவின் நிர்வாகம்.
ஜெயலலிதாவின் ஆணவப் போக்குக்கு சிறந்த உதாரணம் தமிழக சட்டப்பேரவையை அவர் நடத்திய விதம். விவாதம் நடக்க வேண்டிய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருவரைக் கூட பேச விடாமல், பேரவையில் எவ்வித விவாதமும் நடைபெறாமல் முழுமையாக தடுத்ததோடு, விவாதத்துக்கே இடம் தராமல் அனைத்து அறிவிப்புகளையும் 110 விதியின் கீழ் படித்தார் ஜெயலலிதா. 110 விதியின் கீழ் அனைத்து அறிவிப்புகளையும் வெளியிட்டது, எவ்வித விவாதத்துக்கும் ஜெயலலிதா தயாராக இல்லை, விவாதங்களைக் கண்டு அஞ்சினார் என்பதையே காட்டுகிறது. இதைத் தவிர்த்து, சட்டப்பேரவையை தனக்கு துதிபாடும் மன்றமாகவே மாற்றினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவை புகழ்ந்து பாட்டு பாடுவது, கவிதை பாடுவது, உரையாற்றுவது என்று துதிபாடும் மன்றமாக மாற்றி, தினம் தினம் அதைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தார்.
இந்தியாவில் எந்த முதலமைச்சரும் செய்யாத ஒரு வேலையை நான்கரை ஆண்டுகளாக தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் ஜெயலலிதா. வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து மாதங்களுக்கு கொடநாடு எஸ்டேட்டில் சென்று ஓய்வெடுப்பதே அது. ஒரு முதலமைச்சர் கவனிக்க வேண்டிய பணிகளுக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாது. அத்தனை அவசரமாக கோப்புகள், அரசியல் ரீதியான முடிவுகள், நிர்வாக கூட்டங்கள் என்று ஏராளமான பணிகள் இருக்கும். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஒய்யாரமாக கொடநாட்டில் சென்று ஓய்வெடுத்தார் ஜெயலலிதா. அவர் கொடநாடு சென்றபோது, தலைமைச் செயலகத்தில் இருந்த முக்கிய அதிகாரிகள் விமானம் மூலம் கோவை சென்று, அங்கிருந்து அரசு வாகனங்கள் மூலம் கொடநாட்டுக்கு வாரம் இரண்டு முறை சென்று வந்தனர். இதைத் தவிர்த்து கோப்புகள்.
கொடநாடு செல்லும்போதுதான் கோப்புகள் தாமதமாகின்றன என்றால், ஜெயலலிதா சென்னையில் இருக்கும்போதும் எந்தப் பணிகளும் நடைபெறுவதில்லை. தலைமைச் செயலகத்துக்கு வாரத்தில் ஒரு நாள் சென்றாலே அதிசயம் என்ற நிலையில்தான் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. அப்படி செல்லும் நாட்களிலும், காணொலி காட்சி மூலமாக சில திட்டங்களை திறந்து வைப்பது, யாரையாவது சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று ஒரு மணி நேரத்துக்கு மேல் தலைமைச் செயலகத்தில் இருப்பதில்லை. அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள், செய்தி ஒளிபரப்புத் துறையால், அந்த வாரம் முழுக்க தினமும் ஒன்றிரண்டாக ஊடகங்களுக்கு அனுப்பப்படுவதுதான் வாடிக்கையாக இருந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான கோப்புகள் நிலுவையில் இருப்பதால், பதவி உயர்வுகள், உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் மாதக்கணக்கில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.
ஜெயலலிதாவின் அமைச்சர்களை எடுத்துக் கொண்டால், எவ்விதமான தகுதி, திறமை போன்றவற்றின் அடிப்படையில் இல்லாமல், மன்னார்குடி மாபியாவுக்கு விசுவாசமானவர்களை மட்டுமே அமைச்சர்களாக நியமித்துள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கும், மன்னார்குடி மாபியாவுக்கும் கப்பம் கட்டுவதை மட்டுமே ஒரே லட்சியமாகக் கொண்டு இந்த அமைச்சர்கள் கடந்த நான்கரை ஆண்டுகாலமாக செயல்பட்டு வந்துள்ளனர். மக்களை சந்திப்பதையோ, பத்திரிக்கையாளர்களை சந்திப்பதையோ, தங்களின் பணிகளின் ஒரு பகுதியாக ஒரே ஒரு அமைச்சர் கூட கருதி செயல்பட்டது கிடையாது. பொழுது போகாதபோதெல்லாம் அமைச்சர்களை மாற்றும் ஜெயலலிதா, எதற்காக அமைச்சரவை மாற்றம், மாற்றப்பட்ட அமைச்சர் என்ன தவறு செய்தார் என்பது போன்ற எந்த விபரங்களையும் வெளியிட்டதில்லை. எப்போது பதவி பறிபோகும், எது செய்தால் சரி, எது செய்தால் தவறு என்று எவ்வித புரிதலும் இல்லாமல் அமைச்சர்கள் செயல்பட்டுக் கொண்டு வருகின்றனர்.
ஜெயலலிதா சிறை சென்றபோது, காவடி எடுப்பது, மண் சோறு சாப்பிடுவது, மண் தரையில் உருளுவது, நீதித்துறையை கேவலமாக விமர்சித்து சுவரொட்டி அடிப்பது போன்ற, ஜனநாயகபூர்வமான காரியங்களை செய்த அமைச்சர்களே, கவுரவிக்கப்பட்டார்கள். இது போன்ற அடிமை நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டன.
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, திமுகவிலிருந்து அதிமுகவுக்கு பிரிந்து சென்றவர்கள், திமுகவிலிருந்த சக்கைகள். தற்போது போல அல்லாமல், ஒரு திரைப்பட நடிகரின் பின்னால் செல்வதற்கு அப்போது பெரும் தயக்கம் இருந்தது. திராவிட இயக்கத்தின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்கள், திமுகவிலேயே இருந்தார்கள். தொங்குசதை போல, திமுகவில் ஒட்டிக் கொண்டிருந்த கழிவுகள் எம்ஜிஆரின் பின்னால் சென்றன. அப்போது உருவான கலாச்சாரம் இப்போதும் அதிமுகவில் தொடர்கிறது என்பது, தற்போது அதிமுகவில் உள்ள தலைவர்களின் லட்சணத்தைப் பார்த்தாலே தெரியும். மேலும் கூடுதலாகத் தெரிய வேண்டுமென்றால், தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும், அதிமுக பேச்சாளர்களின் பேச்சுக்களை கேளுங்கள். சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த நத்தம் விஸ்வநாதன்தான் இன்று அதிமுகவிலேயே அதிகாரம் பொருந்திய அமைச்சர்.
இந்த அமைச்சர்கள் ஜெயலலிதாவுக்கும், மன்னார்குடி மாபியாவுக்கும், விசுவாசமாக இருப்பதோடு அல்லாமல் தொடர்ந்து கப்பமும் கட்ட வேண்டும். கப்பம் கட்டாமல் ஒரு அமைச்சர் அமைச்சராக இருப்பது, நினைத்தே பார்க்க முடியாத காரியம். முதல் ஆட்சியில் மன்னார்குடி மாபியாவின் தினகரன், பாஸ்கரன், திவாகரன், சுதாகரன் ஆகியோர் கொள்ளையடித்து கொழுத்துத் திளைத்தார்கள் என்றால், இரண்டாவது ஆட்சியில் மகாதேவன், டாக்டர் வெங்கடேஷ். தற்போதைய ஆட்சியில் புதிதாக முளைத்திருப்பவர்கள்தான் இளவரசி, சிவக்குமார், கார்த்திகேயன், விவேக், ஆகியோர்.
இந்த இளைய தலைமுறை மன்னார்குடி மாபியா எப்படியெல்லாம் சொத்துக்களை குவித்துள்ளது என்பதை சிறை செல்லும் சீமாட்டி தொடர் கட்டுரைகள் மூலமாக சவுக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாகவே அம்பலப்படுத்தியுள்ளது. இந்து நாளேடு ஜாஸ் சினிமாஸ் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது என்று செய்தி வெளியிட்டதும், அனைத்து அரசியல் கட்சிகளும், இது குறித்து அறிக்கை வெளியிட்டன. செய்தி வெளியான ஒரு வாரம் கழித்து சாவகாசமாக, பீனிக்ஸ் மால் உரிமையாளர்கள் பெயரில், ஜாஸ் சினிமாஸ் தியேட்டரை விலைக்கு வாங்கவில்லை, வாடகைக்குத்தான் வாங்கியுள்ளனர் என்று ஒரு அறிக்கை வெளியானது.
பீனிக்ஸ் மால் திறக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும், தியேட்டர்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. கடந்த ஒரு வருடமாக பீனிக்ஸ் மாலில் உள்ள லூக்ஸ் தியேட்டரை சத்யம் சினிமாஸ் நடத்தி வந்தது என்பதும் அனைவரும் அறிந்ததே. பீனிக்ஸ் மாலில் பதினோரு தியேட்டர்கள் திறக்கப்பட்டதும், அந்த தியேட்டர்களை வாடகைக்கு விடுவதாக இருந்தால் ஏற்கனவே தியேட்டர் தொழிலில் இருக்கக் கூடிய பிவிஆர், பிக் சினிமாஸ், சத்யம் போன்ற நிறுவனங்களுக்கு அளிப்பதுதான் இயல்பு. அந்த அடிப்படையில்தான் சத்யம் சினிமாஸ் நிறுவனம் ஒரு வருடத்துக்கு மேலாக லூக்ஸ் சினிமாஸை நடத்திக் கொண்டிருந்தது. ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் என்று இருந்த நிறுவனத்தை திடீரென்று ஜாஸ் சினிமாஸ் என்று பெயர் மாற்றம் செய்து, விவேக் ஜெயராமன் என்ற கல்லூரியில் படிக்கும் ஒரு சிறுவனை தலைமை இயக்குநராக கொண்ட ஒரு புதிய நிறுவனத்துக்கு, 11 தியேட்டர்களை வாடகைக்கு தர எந்த நிறுவனமாகவது ஒப்புக்கு கொள்ளுமா ? மேலும், சத்யம் சினிமாஸ் உரிமையாளர்கள், நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகே இந்த பரிமாற்றம் நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சத்யம் சினிமாஸ் போன்ற பெரும் செல்வந்தர்களுக்கு எதிராக நீங்கள் எந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அந்தப் புகார், குப்பைத் தொட்டிக்கு செல்வதைத் தவிர வேறு எதுவும் நடக்காது. அப்படி இருக்கையில் சத்யம் சினிமாஸ் அதிபர்கள் மீது வழக்கு பதிவு செய்ததோடு, கைதும் செய்து அத்தனை விரைவாக சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றா நினைக்கிறீர்கள் ?
ஜாஸ் சினிமாஸ் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது ஒரு முழுமையான விசாரணை நடத்தினால் மட்டுமே வெளியே வரும். 11 தியேட்டர்களை வாடகைக்கு எடுக்க கல்லூரி மாணவனான விவேக் ஜெயராமனுக்கு எங்கிருந்து அத்தனை பணம் வந்தது ? வருடத்துக்கு வாடகையாக தரப்படும் தொகை எவ்வளவு என்பது அனைத்தும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவால் விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்படி விசாரணை நடத்தினால் அவை அத்தனையும் ஜெயலலிதாவின் பணமே என்ற உண்மை வெளிவரும்.
தமிழகத்தில் ஐமேக்ஸ் தியேட்டர்கள் நெடுங்காலமாக திறக்கப்படாமல் இருப்பதற்கான காரணம், ஐமேக்ஸ் தியேட்டர்களுக்கான உபகரணங்கள் விலை உயர்ந்தவை என்பதால் அதற்கான கட்டணமும் அதிகமாக இருக்கும் என்பதாலேயே. தமிழகத்தில் அதிகபட்ச கட்டணம் 120 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதால், ஐமேக்ஸ் திரையரங்கை திறக்க முடியவில்லை என்று தியேட்டர் நிர்வாகத்தினர் பத்திரிக்கைகளில் தெரிவித்திருந்தனர். ஆனால், ஜாஸ் சினிமாஸிடம் லூக்ஸ் திரையரங்கங்கள் கைமாறியதும், கடந்த வாரம் முதல், ஐமேக்ஸ் தியேட்டர் 390 ரூபாய் டிக்கெட் விலையில் செயல்படத் தொடங்கியுள்ளன. இதற்கான அரசு விதி எப்போது மாற்றப்பட்டது, யாரால் மாற்றப்பட்டது என்பதற்கான எந்த விடையும் இல்லை.
மதுவிலக்கு
மதுவிலக்கு கோரி ஒட்டுமொத்த தமிழகமும் போராட்ட களத்தில் இறங்கியிருந்தபோது, அது குறித்து எந்த விதமான சலனமும் இல்லாமல் இருந்தார் ஜெயலலிதா. அவர் பினாமி பெயரில் நடத்தும் மிடாஸ் மது ஆலை, தொடர்ந்து தமிழக டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது சப்ளை செய்து வருகிறது என்ற செய்தி ஊடகங்களில் அம்பலமான பிறகும், அது குறித்து எவ்விதமான கவலையும் ஜெயலலிதா படவில்லை. மாறாக, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மதுபானங்களின் விலையை உயர்த்தி, மதுபான ஆலைகளை லாபம் பார்க்க வைத்தார் ஜெயலலிதா. மிடாஸ் மதுபான ஆலையின் நிர்வாகத்தை கவனிப்பது, தற்போது கார்டனின் செல்லப்பிள்ளையாக உள்ள டாக்டர் கே.எஸ்.சிவக்குமார் என்பது ஆவணங்களோடு ஊடகங்களில் வெளியான பின்னாலும், மிடாஸிடமிருந்து அரசு செய்யும் கொள்முதலை துளியும் குறைக்கவில்லை.
வீதிதோறும் மதுதான் ஆறாக ஓடுகிறதென்றால், தரமான மதுவாவது கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை. மதுபான கொள்முதலில் நடக்கும் கொள்ளைகள் குறித்தும், தரம் குறைந்த மதுபானங்கள் தமிழகத்தில் எப்படி விநியோகம் செய்யப்படுகின்றன என்பது குறித்தும், சவுக்கு தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது.
இதற்கெல்லாம் உச்சமாக, மதுஒழிப்புக்கு ஆதரவாக பாடல் எழுதிய மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவனை நள்ளிரவில் தீவிரவாதி போல கைது செய்தார் ஜெயலலிதா. அந்தக் கைது நடவடிக்கை எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை ஜெயலலிதா நன்றாகவே அறிவார். நான்கு பேர் கேட்டுக் கொண்டிருந்த கோவனின் பாடல்கள், வாட்சப், முகநூல், ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைத்தளங்களின் வழியாக பட்டிதொட்டியெங்கும் பரவியது. கோவனின் கைதை, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே குரலில் கண்டித்தன. பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்பு எழுந்தது. ஊடகங்கள் அனைத்தும், (சொம்பு ஊடகங்களை தவிர்த்து) ஒருமித்த குரலில் கண்டித்தன. இருப்பினும், இது குறித்து துளியும் பாடம் கற்காத ஜெயலலிதா, கோவனின் காவல் கட்டுப்பாடு விசாரணையை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை, மக்களின் கருத்துக்களை அவர் துளியும் மதிப்பதில்லை என்பதை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டியது.
மின்துறை ஊழல்
மின்துறையில் நடந்துள்ள பகாசுர ஊழல்கள் குறித்து, சவுக்கு தளத்தில் தொடர்ந்து கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. நத்தம் விஸ்வநாதனும், ஷீலா பாலகிருஷ்ணனும், ஞானதேசிகனும் சேர்ந்து அடித்த கொள்ளைகள், அதன் காரணமாக விளைந்த நீதிமன்ற வழக்குகள், தமிழக அரசு அந்த வழக்குகளை கையாண்ட விதங்கள் குறித்தெல்லாம் விரிவான கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதில் இன்னமும் ஊழல் தங்குதடையில்லாமல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அண்டை மாநிலங்கள் குறைந்த விலைக்கு சூரிய ஒளி மின்சாரத்தை வாங்குகையில், தமிழகம் அடானியோடு 7.01 ரூபாய்க்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்தது கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. அடானியோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தை தகவல் அறியும் சட்டத்தின்படி கூட தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருக்கிறது தமிழக மின்வாரியம்.
ஊடகங்களின் மீதான தாக்குதல்
அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே ஊடகங்களை ஒதுக்கி வைத்து, அவற்றை எப்படி நெருக்குவது என்ற வேலையை ஜெயலலிதா செய்து வந்தார். ஜால்ரா அடிக்கும் ஊடகங்களுக்கு விளம்பரம் என்ற எலும்புத் துண்டை போடுவது. எதிர்த்து எழுதும் ஊடகங்களை அவதூறு வழக்கு என்ற ஆயுதம் கொண்டு மிரட்டுவது என்ற போக்கை கையாண்டார். தமிழக ஊடகங்கள் என்று அல்லாமல் தேசிய ஊடகங்களையும் ஜெயலலிதா விட்டு வைக்கவில்லை. சிஎஎஎன் ஐபிஎன் தொலைக்காட்சியில் வரும் திஸ் வீக் தட் வாஸ்ன்ட் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் ஜெயலலிதா விமர்சனம் செய்யப்பட்டதைக் கூட விட்டுவைக்காமல், அந்த தொலைக்காட்சி நிறுவனம், அந்நிகழ்ச்சியை நடத்தும் சைரஸ் ப்ரோச்சா ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். விஜயகாந்த் மற்றும் கேப்டன் டிவி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த ஜெயலலிதா, வரலாற்றிலேயே இல்லாத வகையில், செய்தி வாசிப்பவர் மீது கூட அவதூறு வழக்கு தொடர்ந்தார். அவதூறு வழக்குகள் தன் இறுதிக் கட்டத்தை எட்டுவதில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அவை வாபஸ் பெறப்படும் என்பதை நன்றாக உணர்ந்தே ஜெயலலிதா இந்த அவதூறு ஆயுதங்களை கையில் எடுத்துள்ளார்.
இந்த அடாவடி நடவடிக்கைகளுக்கெல்லாம் உச்சம், ஆனந்த விகடன் இதழ் மீது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதல். மந்திரி தந்திரி தொடரின் இறுதியாக என்ன செய்தார் ஜெயலலிதா என்று ஜெயலலிதாவின் கையாலாகாத்தனம் மற்றும் ஊழல்களை பட்டியலிட்டு வெளியிட்ட கட்டுரைக்காக விகடன் மீதும், அதை எடுத்தாண்ட திமுக நாளேடு முரசொலி மற்றும் திமுக தலைவர் கருணாநிதி மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்த ஜெயலலிதா, விகடன் இதழ்களை விற்பனை செய்யும் கடைகள் மீதும், முகவர்கள் மீதும் காவல்துறையை ஏவிவிட்டு மிரட்டியதுதான் அயோக்கியத்தனத்தின் உச்சம். இதைத் தவிர்த்து, ஆனந்த விகடனின் முகநூல் பக்கம், அதிமுக லகுடபாண்டிகளால் முடக்கப்பட்டது. வள்ளியூர் தி.மு.க. நகரச் செயலாளர், சேதுராமன், நெல்லை மாவட்ட இளைஞர் அணித் துணை அமைப்பாளர் முத்துராமலிங்கம் ஆகிய இருவரும் “ஆனந்தவிகடன்” இதழை விநியோகம் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டார்கள்.
ஆனந்த விகடனின் அந்த கட்டுரைக்காக, நமது எம்ஜிஆர் இதழில், தொடர்ந்து விகடனைப் பற்றி ஆபாசமாக கவிதை என்ற பெயரில் குப்பைகளை வெளியிட்டு, அதை படித்து முதுகு சொறிந்து கொண்டார் ஜெயலலிதா. நமது எம்ஜிஆர் என்ற குப்பையை யார் படிக்கிறார்களோ இல்லையோ, ஜெயலலிதா தொடர்ந்து படிக்கிறார். விமர்சனம் என்ற பெயரில் வரும் இப்படிப்பட்ட ஆபாசங்களை படித்து ரசிக்கிறார் என்றால் ஜெயலலிதாவின் பக்குவம் என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில் வெள்ளம்
வரலாறு காணாத வெள்ளம் தமிழகத்தைத் தாக்கி தமிழகமே தத்தளித்துக் கொண்டிருந்தபோது, துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஜெயலலிதா மிகுந்த மெத்தனமாகவே இருந்தார். எதிர்க்கட்சிகள், மழையால் பாதிக்கப்பட்ட கடலூருக்கு தொடர்ந்து படையெடுத்த பிறகுதான், கடலூருக்கும் இதர ஊர்களுக்கும் அதிகாரிகளை அனுப்பி வைத்தார். முதல்வர் நேரில் பார்வையிடவில்லை என்று பலத்த விமர்சனங்கள் எழுந்த பிறகு, பிரச்சார வேனில் ஏறி, தேர்தல் பிரச்சாரம் போலவே ஆர்கே நகருக்கு சென்று வந்தார். மக்கள் இடுப்பளவு நீரில் தள்ளாடிக் கொண்டிருக்கையில், அவர்களிடையே சென்று அண்ணா நாமம் வாழ்க, எம்ஜிஆர் நாமம் வாழ்க என்று தேர்தல் பிரச்சாரம் செய்தார் ஜெயலலிதா. நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட அதிமுக அமைச்சர்கள், நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதா படம் முன்னால் இருப்பதுபோல பார்த்துக் கொண்டது அருவருப்பையே ஏற்படுத்தியது.
இப்படி ஒட்டுமொத்தமாக அனைத்து தளங்களிலும் தோல்வியைத் தழுவியிருக்கும் ஜெயலலிதா மீண்டும் அமோக வெற்றி பெறுவார் என்றே ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்த பல்வேறு கணிப்புகள் ஆருடம் கூறிக் கொண்டிருந்தன. 2014ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற பெரும் வெற்றியைப் போலவே, கூட்டணி இல்லாமலேயே தனித்து போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெறுவார் என்றே பல தரப்பினரும் கணித்தனர். ஆனால், இன்று ஜெயலலிதா மீதும் அவரது அரசு மீதும், கடுமையான அதிருப்தி மக்களிடையே நிலவுகிறது. தமிழகத்தை, அதிமுகவிடமிருந்து எப்படியாவது மீட்டாக வேண்டும் என்ற எண்ணத்தை பரவலாக பார்க்க முடிகிறது. அம்மா என்ற போர்வையில் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் நடிகையின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை என்றால், தமிழகத்துக்கும், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
அதிமுக ஆட்சியின் முடிவு தொடங்கி விட்டது.
Jinna…..Thulukar Ji…… 6 vayasu kozhandaye rape pann 65 vayasu thathava irai thoodharnu soldreenga….. neenga pesalama???? Mukkal gnanthoda pesa koodadhu……. Gopiyar’na avanga Paapana????
Mutta thulukanu manniku oru murai nirubikireer…… unga appa unnoda pondatiya ushar pannanruna..neenga enna pannuveenga… avar irai thoodarnu vittu kotudhalum kudupeenga…….. yenana Neenga neenga thaan…. Ippdai shiyavoda oru perusu unga Sunniyoda ponna ushar panna enna pannuveenga?????
Thulukar Ji…… 6 vayasu kozhandaye rape pann 65 vayasu thathava irai thoodharnu soldreenga….. neenga pesalama???? Mukkal gnanthoda pesa koodadhu……. Gopiyar’na avanga Paapana????
Mutta thulukanu manniku oru murai nirubikireer…… unga appa unnoda pondatiya ushar pannanruna..neenga enna pannuveenga… avar irai thoodarnu vittu kotudhalum kudupeenga…….. yenana Neenga neenga thaan….
மஞ்சள் துண்டு சரியான தில்லு முல்லு மனிதர் . இரட்டை வேடம். பொது வாழ்விலும் சரி . சொந்த வாழ்க்கையிலும் இரட்டை வேடம் . தமிழகத்தின் தீய சக்தி என்றைக்கு உண்மை சொல்லி உள்ளார்.
சென்னையில் நடந்த மழை துயரத்துக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டது தான் காரணம் என்று பெரிய அளவில் சில ஊடகங்கள் வாயிலாக முழு பிரச்சாரங்களை முடுக்கி விட்டு குளிர் காய்கிறார் ஸ்டாலின்…இதன் மூலமாக ஒரு உண்மையை தண்ணியில் கரைக்க பார்க்கிறார் அவர்…செம்பரம் பாக்கம் எரி திறக்கப்பட்டதும் ஒரு காரணம் என்றாலும் அதுவே காரணமல்ல… காரணம் அடையார் ஆற்றின் கொள்ளளவு மிக அதிகமாகயிருந்தது ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பாக …இப்போது ஆறு அகலம் குறைந்தது…அது தான் உண்மை…கடந்த 15 வருடங்களும் ஆண்ட ஆளுகின்ற அரசுகளின் லட்சணம்…முழுநிலங்களும் ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் மாபியாவிர்க்கு விற்றதன் விளைவு ..இன்றைய பெரும் துயரம்…இன்று மாறி மாறி கரியை பூசும் இவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவோ தடுக்கவோ சிறுதளவு முயற்சி கூட எடுக்கவில்லை என்பதே…சென்னைமானகரத்தின் drainage ஒழுங்காக் இருந்திருந்தாலும் இது ஓரளவு பாதிப்புகளை குறைத்திருக்கும்…அதையும் கண்டுகொள்ள இவர்களுக்கு நேரமில்லை…பிளாஸ்டிக் தடை அரசு விதித்தால் அது வெறும் அறிக்கை மட்டுமாகவே இருக்கும்…முழு அளவு இல் பிளாஸ்டிக் பொருட்கள் தண்ணி செல்லவேண்டிய drainaage ஐ ஆக்கிரமிததின் விளைவு… துயரம்…மக்களும் முக்கிய காரணம் தான்…எந்த சட்டம் வந்தாலும் பின்பற்ற மாட்டோம்…விளைவை ப்பற்றி சிந்திக்க நமக்கு நேரவுமில்லை…அனுபவித்தே திருந்துவோம்…அம்பத்தூர் பகுதியில் industriyal எஸ்டேட் இருக்கும் இடத்தில் ஏகப்பெட்ட தண்ணீர் குளங்கள் இருந்தன ஒருகாலத்தில்… இன்று …பாதி காணாமல் போனது…ஸ்டாலின் அவர்கள் தங்களது ஆட்சி க்காலத்தில் தாரை வார்த்த ஏரி இடங்களின் எண்ணிக்கையை கொஞ்சம் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்…அதேபோன்று இந்த ஜெயா அரசும் வெளியிட வேண்டும்…பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்…பல உயிர்கள் இழப்பிற்கும் காரணங்களும் வெளியாகும்…செய்ய துணிவிருக்கா?..இப்போது election ஐ வைத்து இந்த செம்பரம்பாக்கம் ஏரி விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது இந்த கட்டுமரத்தின் தனயன்…
93 வயதான கலைஞர் மக்களை சந்தித்தால் நடிப்பு. வைகோவும் திருமாவும் குப்பைகளை சுத்தம் செய்தால் நடிப்பு. அன்புமணி ராமதாஸ் நிவாராணப் பணிகளுக்காக பரிசல் வழங்கினால் நடிப்பு. ஸ்டாலின் மழைநீரில் நடந்து மக்களுக்கு உணவு வழங்கினால் நடிப்பு. எல்லாம் சரி. நடிப்பாகவே இருக்கட்டும். ஜெயலலிதாவால் இப்படி நடிக்கவாவது முடியுமா?
We don’t need politicians who acts. A non acting person is better to trust then frauds who act to cheat people. 93 year old karuna is super drama person and we know how he use to cheat people. I don’t think other politicians like vaiko, vijayakanth are acting here. so don’t them to karuna to boost his image. Karuna is worst of the worst.
pavam ayya pavam neengal. Gelusil venuma,?
ha ha ha dmk sombu. kalachutru aiya..poda porambokku…nee enna kuvinallum dmk thatha stalin cant win
இன்று காலையில் தந்தி டீவியில் அச்சு அ(ல)சல் நிகழ்ச்சியில் முன்னால் சென்னை கமிஷனரும் இந்நாள் #அதிமுக உறுப்பினருமான #நடராஜ்_IPS வுடன் நடந்த பேட்டியில் அதிமுக அரசின் செயல்பாடுகள் குறித்து சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
வெள்ள நிவாரண பணிகளை குறித்து பேட்டியாளர் எழுப்பிய கேள்விக்கு நடராஜ் IPS அளித்த பதில் அதிமுகவை கலகலக்க வைத்துள்ளது. நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரத்திலேயே ஜெயலலிதாவிடம் இருந்து அறிவிப்பு வெளிவருகிறது.
“அதிமுகவில் இருந்து நடராஜ் நீக்கப்படுகிறார். இனி அதிமுக வினர் யாரும் நடராஜ்-வுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது” என்றும் எச்சரிக்கை விடப்படுகிறது.
அப்படி என்னத்தான் நடராஜ் பேசி இருப்பார் என்பவர்களுக்காக நிகழ்ச்சியில் இருந்து ஒரு மேற்க்கோள்:
“இங்கே அதிகாரம் பரவலாக்கபடவில்லை. எல்லா அதிகாரமும் முதல்வர் கையில் உள்ளது. அவர் கண்ணசைவுக்கு அதிகாரிகள் காத்திருந்ததே இந்த பெரும் சேதத்துக்கு காரணமாக அமைந்து விட்டது.”
தனக்கு வாய்த்த அடிமைகளில் ஒன்று வாயைத் திறக்கிறது என்றால் ‘மம்மி’யின் பேயாட்டம் இப்படித்தானே தொடரும்.
இதையும் அரசியல் நடவடிக்கை என்று தமிழர்கள் நம்பிக் கொண்டிருந்தால் தனக்கு வாய்த்த அடிமைகளைப் போல் ‘மக்களும் எனக்கான அடிமைகள்’ என்கிற கொழுப்பெடுத்த சிந்தனைதான் #ஜெயலலிதா வரும்.
தமிழக மக்களுக்கு இப்படிப்பட்ட திமீர் / வெறி / ஆணவம் பிடித்த ‘சண்டிராணி’ தேவைதானா?
நீங்க பெரிய புத்திசாலிதான் ஒத்துக்குறேன். நீங்க கேட்ட 5 கேள்வியில் உள்ளவற்றை செயல்படுத்த கூட நேரமில்லை என்பதே உண்மை.காரணம் சென்னை வரலாற்றில் வெறும் 6 மணி நேரத்தில் 250 mm மழை பெய்துள்ளது. இது யாருமே எதிர்பாராதது. அதிகம் மழை பெய்யும் எச்சரிக்கை என்பது உண்மை. இத்தன மணி நேரத்தில் இவ்வளவு மழை பெய்யும் என்று யாரும் கூறவில்லை. மேலும் ஏரியை முன் எச்செரிக்கையாக முன் கூட்டியே திறந்து உடனே மழை நின்றிருந்தால் பின்னர் ஏரி நிறைந்திருகாது. அதை வைத்து அரசியல் செய்வார்கள். பல 100 ஆண்டுகளுக்கு பின் இப்போதே செம்பரம்பாக்கம் ஏரி முழுமையாக நிறைந்துள்ளது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது சரி அல்ல. திமுக ஆட்சியில் மழையும் பெய்யாது. தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும். மழை பெய்தும் இந்த ஆட்சியில் தண்ணீர் பஞ்சம் உண்டாகணும். அதோதான் திமுகவின் நோக்கம். இராணுவமே திணறும் அளவுக்கு பேய் மழை பெய்துள்ளது. போய் புள்ளை குட்டிகளை படிக்க வைங்கப்பா…
Well, your brain is able to absorb only so much information. While the entire country and courts are able to see the real problem of mismanagement, you are trying to hide behind known facts regarding the extent of rain.
well our brain also know many other information like mega corruption like 2g, methane approval by dmk stalin and total misrule by dmkas well. While the world, entire country and courts are able to see that real problem, you are trying to hide behind those known facts and talk this natures disaster in 100 years.
••••
1. தமிழகத்தில், துணை நகரம் என்று திட்டம் போட்டு, வயல்வெளிகளை ஏரிகளின் வடிகால்களை , வீட்டு மனைகளாக , ரியல் எஸ்டேட் பணக்காரர்களின் ஆசைக்கு தீனி போடும் வகையில் உத்தரவு போட்டது யார்?… 2. சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தற்போதைய ஆட்சியில் படுத்துவிட்டது…மக்கள் புறநகரில் வீடு வாங்க அல்லது விற்க முடியாமல் தவிக்கிறார்கள்…நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வீடுகள் விற்பனை , ரியல் எஸ்டேட் பூம் ஆகும் என்று பேட்டி கொடுத்தது யார்?..3. அடையாறு, மற்றும் கூவம் யாருடைய ஆட்சியில் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது?…4. கூவத்தில் , மதுரவாயல் – எண்ணூர் பறக்கும் சாலையை அமைக்க முற்பட்டது யார்?.. தற்போதைய ஆளும் கட்சி, கூவத்தின் நீர்போக்கை இந்த சாலை பாதிக்கும், என்று கூறிய போது, அதனை கிண்டல் பண்ணியது யார்?… 5. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன்…. சிங்கப்பூராக மாற்றுவேன்… என்று கொக்கரித்தவர் யார்?…. 6. சென்னை மேயராக இருந்தவர் சென்னைக்கு நீண்ட கால திட்டம் எதுவும் இன்றி இப்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளர் ஆக போட்டியிடுவது நியாயமா? .. 7. கூவத்தை , தேம்ஸ் ஆக மாற்றுவேன், என்று கொக்கரித்துவிட்டு, துணைவியுடன், இங்கிலாந்து சென்று [அரசு பணத்தில்], தேம்ஸ் நதியை பார்த்து வந்தவர் யார்?…8. நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து, துணை நகரம் , SATELLITE CITY , என்ற போர்வையில், அரசானை இட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு நீர் வழி பாதைகளை தாரை வார்த்தது யார்? யார்?… 9. குப்பை காடாக இருக்கும் சென்னையை சீரமைக்காமல், 20000 கோடியில், தேவை இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தையும், 2000 கோடி செலவில் சட்டமன்ற கட்டடமும் கட்ட எத்தனித்தது தான் நிர்வாக திறமையா?… அடிப்படை வசதியே இல்லாத சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒரு கேடா?…. 10. இலவச TV என்னும் தரித்திரத்தை, தொடங்கி வைத்து, தமிழகத்தில் இலவச மாயையை ஆரம்பித்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பிள்ளையார் சுழி போட்டது யார்?…..[ தமிழ்செல்வன் அல்லது பிற திமுக அபிமானிகளுக்கு தில் இருந்தால் மேல் கண்ட கேள்விகளுக்கு பதில் கூறி விட்டு, இயற்கை பேரழிவின் உச்சத்தால், இன்று நடக்கும் அவலங்களின் கோலங்கள் பற்றி கேள்வி எழுப்பட்டும்
கொஞ்ச காலத்திற்கு முன் ஜெயாவின் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இனைத்துக் கொண்டவரும், முன்னாள் சென்னை மாநகர கமிஷனருமான நடராஜ் IPS அவர்களை இன்று காலை தந்தி டீவியில் அச்சு அ(ல)சல் நிகழ்ச்சியில் அவர் சொன்னதில் சில முக்கிய செய்திகள்
⚫ இங்கே அதிகாரம் பரவலாக்கபடவில்லை. எல்லா அதிகாரமும் முதல்வர் கையில் உள்ளது. அவர் கண்ணசைவுக்கு அதிகாரிகள் காத்திருந்ததே இந்த பெரும் சேதத்துக்கு காரணமாக அமைந்து விட்டது.
⚫ கீழ்மட்ட அதிகாரிகளுக்கு உத்திரவிடத்தான் தலைமை செயலர் இருக்கிறார். ஆனால் புதிதாக அவருக்கு ஆலோசனை வழங்க ஒருவர் வந்து, அவர் எல்லா தேவைக்கும் முதல்வர் உத்தரவிற்கு காத்திருந்தது இந்த பெரும் சேதத்துக்கு காரணம்.
⚫ முன்பெல்லாம் அணையை பொதுப் பணிதுறை அதிகாரிகள் திறந்து விடுவார்கள். இப்பொழுது ”மான்புமிகு தமிழகமுதல்வர் புரட்சிதலைவி அம்மாவின் ஆணைகினங்க”ன்னு யார் யாரோ திறங்குறாங்க. அவர்களுக்காக காத்திருந்ததும் இந்த பெரும் சேதத்துக்கு காரணம்.
⚫ மொத்தத்தில் அரசு நிர்வாகம் சரியாக செயல்படாததே இந்த பெரும் சேதத்துக்கு காரணம்
இவைதான் அவர் அடுக்கிய குற்றச்சாட்டுகள். இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால் தந்தி டிவிக்காரன் அவர் அதிமுக உறுப்பினர் போல் பேசுவார் என்று நம்பி பேட்டி எடுத்திருக்கின்றனர்.. ஆனால் back fire ஆகிவிட்டது.
# நடராஜ் அவர்கள் உண்மையில் மக்கள் நலன் கருதி அப்படி சொல்லி இருப்பார் என்று நம்பிக்கை இல்லை. அவரை ஜெயா ஆப்படித்திருப்பார்..
இல்லையேல் காவல்துறை அலோசகர் பதவி எதிர்ப்பார்து கிடைக்காமல் போன எரிச்சலில் பேசி இருக்ககூடும்
# எது எப்படியோ இப்போதாவது பயம் கொள்ளாமல் உண்மையை உரக்க சொன்னதற்கு பாராட்டுகள் மிஸ்டர் நட்ராஜ்
கடந்த ஆட்சி காரர் : ஆனந்த விகடன் ஒரு நடுநிலை பத்திரிகை. மக்கள் : எப்படி சொல்றீங்க ? கடந்த ஆட்சி காரர் : கடந்த ஆட்சியில் (2006 – 2011 ) நாங்கள் பல துறைகளில் பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்தோம். அதை ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், சவுக்கு போன்ற பத்திரிகைகளில் கிழி, கிழி என்று கிழித்து எழுதினார்கள். மக்கள் கடும் கோபம் கொண்டு அதிமுக கூட்டணிக்கு வாக்கு அளித்தார்கள்… மக்கள் : அப்புறம் ? கடந்த ஆட்சி காரர் : இப்ப அதிமுக கட்சி காரர்கள் பல துறைகளில் பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்து இருக்கிறார்கள். அதே பத்திரிகைகளில் கிழி, கிழி என்று கிழித்து எழுதுகிறார்கள். மக்கள் : அப்புறம் ? கடந்த ஆட்சி காரர் : எங்க கட்சி தலைவர் அவர்களே ஒத்துக்கொண்டார்கள். நாங்கள் கடந்த ஆட்சியில் பல தவறுகள் செய்துவிட்டோம். மன்னித்துவிடுங்கள். (மீண்டும் எங்களுக்கு ஒட்டு போடுங்கள்; நாங்கள் மீண்டும் கொள்ளை அடிப்போம்). மக்கள் : இதெல்லாம் ஒரு பிழைப்பு…மானங்கெட்ட ஜென்மங்கள்….திருந்தவே திருந்தாதுங்க….
இதெல்லாம் சும்மா முன்னாடியே நீரை வெளியேற்றிருந்தாலும் 49சிஎம் மழை தாம்பரத்திலும் 47சிஎம் செம்பரம்பக்கத்திலும் மற்றும் அடையாரை சுற்றியுள்ள பகுதிகளில் பொழிந்த 37சிஎம் மழை என்பது சாதரணமான ஒன்றல்ல அத்துணை நீரும் போவதற்கு வடிகால் அடையார் மட்டுமே. இந்த வழியில் உள்ளது அதோடு இல்லை அண்டைய மாநிலமான ஆந்த்ராவில் வெளியேற்றிய நீரும் வடசென்னையை புரட்டிபோட்டதே அப்புறம் velechery வெள்ளகாடானதர்க்கும் இந்த ஏரியின் நீர் திறப்பு காரணமில்லை. சும்மா வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோன்னு எல்லாத்துக்கும் அரசியல் பண்ணியே பழகிவிட்ட அரசியல்வாதிகள் போல் பத்திரிக்கைகளும் ஆளாகிவிட்டார்கள். மதுராந்தகம் ஏறி பூண்டி ஏரிகளில் அவ்வப்போது நிறைய நீர் திறந்தவர்களுக்கு இந்த நீர் திறப்பு தெரியாதா? அவ்வளவு மடையர்களா Enna? ஏன் விசாரணை வருண பகவானை கூப்பிட்டு கூண்டில் ஏற்றலாமே? அதைகூட கேட்பார்களோ நம் அரசியல்வாதிகள். மின்சாரம் தட்டுபாடு இருக்க மின்நிலையங்களில் பழுது ஏற்ப்பட செய்த எதிர்கட்சியினர் ஏன் இந்த வெள்ளம் ஏற்ப்பட அதிகாரிகளுக்கு உத்தரவு பிரபித்து இருக்க கூடாதுன்னு ஆளும் கட்சி கூறினால் என்னவாகும் பேத்தல் அரசியல் பித்தலாட்டம் பேரழிவு எப்படியும் வந்திருக்கும் பலவருஷங்களுக்கு முன்னாள் கூட செம்பரம்பாக்கம் ஏறி உடைந்துபோச்சு என்று அதனால் கொட்டுர்புரத்தில் வெள்ளம் புகுந்து நாசம் ஆச்சே அப்போது விசாரணை கூறினார்களா? இல்லை சுனாமி தானே புயல் வந்தபோது விசாரணை கேட்கவில்லை? நிறைய ஏரிகள் மக்களாலே உடைக்கப்பட்டுள்ளது அதற்க்கு யார் காரணமாம் எங்கள் வீட்டு அருகே பெருங்களத்தூர் ஏறி மற்றும் நிறைய ஏரிகளை உடைத்தது யார்? எங்கள் வீடு வெள்ளத்தில் சிக்கியது யாரால்? சென்னை இவ்வளவு பெரிய மழையை சந்திக்க தயாரில்லை இனிவரும் காலங்களில் திட்டமிடல் வேண்டும் அதுபோல செம்பரம்பாக்கம் ஏரியை சிலர் கூறுவதுபோல திறக்க முடியாது ஏன் என்றால் அது மட்டுமே சென்னையின் பிராதன நீர் ஆதாரம் முன்கூட்டியே திறந்துவிட்டிருந்தாலும் விசாரணை கேட்ப்பார்கள் அரசியல் கட்ச்சிகள் ஜோசியத்தையும் வானிலை அறிக்கையையும் கேட்டு வீணாக தண்ணீரை கடலில் சேர்த்தார்கள் ஆளும் கட்ச்சியினர் என்று குதித்திருருப்பார்கள் சென்னை பூகோள அமைப்பின்படி சரி சமமாக உள்ள பகுதி கடல் நீர் வெள்ளநீரை ஏற்றுகொள்ள அதிக டைம் ஆகும் நீரை உறிஞ்சும் தன்மை குறைவான பகுதி சென்னை இவ்வளவு மழை வெள்ளம் கொட்டியும் சென்னையின் மைய்யபகுதிகளில் அல்லது ஏரியின் அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் ஆய்வு செய்தால் புரியும் எவ்வளவு ஆழத்தில் இன்னும் நீர் கிடைக்கிறதென்று ஒரே தீர்வு பல அகல நீர் வழி பாதைகளை ஏற்படுத்தி ஆறுகளை ஏரிகளை இணைக்கணும் எல்லா ஆக்கிரமிப்புகளையும் அகற்றவேண்டும் ஒரே நாளில் 7 கிலோமீட்டர் வரதராஜபுரம் ஆக்கிரமிப்புகள் என்ன ஆளும் கட்ச்சியா செய்ய சொன்னது முடிச்சூர் பாப்பாங்கல்வாய் அடையார் ஆக்கிரமிப்புகளுக்கு யார் பொறுப்புன்னு ஏன் விசாரணை கேட்கவில்லை அரசியல் கட்ச்சிகள் ஒரு கண்ணில் சுன்னாபும் மறுகண்ணில் வெண்ணையை வைத்து பார்க்கும் நிலை மாறவேண்டும் மெட்ரோ ரயில் underground டுன்னேல்கள் வழியாக நீர் புகுந்ததற்கு மத்திய அரசு மீது பழியை போடலாமா? மக்களே நன்றாக யோசியுங்கள் குழப்பவாதிகளின் பிடியில் சிக்கி சீரழியாதீர்கள் வராது வந்த மாமழை பல நேரம் வானிலை அறிக்கைகள் பொய்யாகிவிட்டது ஆகையால் அவர்கள் சொன்னார்கள் என்று அவர்களால் எல்லா நீரையும் வெளியேற்ற முடியாது நீர் வரும் நிலைமையை பொருத்துதான் எல்லாம் ஏன் அரசியல்கட்ச்சிகள் நாசா சொன்னதாக whatsapp செய்தியையும் பிபிசி சொன்னதுன்னு வந்த அறிக்கைகளுக்கு விசாரணை கேட்கவில்லை அதுமாதிரி அந்த தேதிகளில் நடக்கும் என்று நீரை விட்டுருந்தால் விசாரணை கேட்ப்பார்கள் ஆகையால் இது ஒரு பேரிடர் நிகழ்வு அரசுக்கு தோள்கொடுப்போம் தியரத்திளிருந்து மீண்டு வருவோம் இனியாவது அரசும் நீர்வழிபாதையை சீக்கிரம் அமைக்கணும்
எங்கே அரசுத்துறைகள் மூலம் நிவாரண பொருட்களை கொடுத்தால்..அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடுமோ என்றுதான் சில எதிர்கட்சிகள்..பைகளில் அப்பனுடைய படமும்..இன்னோர் பக்கம் மகனின் கேரளா சென்று ஹாயாக திரும்பிய ஆயில் மசாஜ் செய்துவந்த பின்னர் எடுத்த அழகு (?) படத்தையும் போட்டு மூன்று கிலோ அரிசியை கொடுக்க பைகளில் இந்த கன்றாவிகளும்..இன்னோர் கூட்டமோ..ஐந்தாறு கேமெரா மேன்களோடு புடை சூழ மாற்றம்..தடுமாற்றம் ..மண்ணாங்கட்டி என்கிற வாசகத்தோடு பனியனையும் அணிந்துகொண்டு வெறும் நாலு லட்ச ரூபாய்க்கு நிவாரணம் கொடுத்ததை பெருமையாக பீத்திகொண்டதும்..இன்னொருத்தர் வேஷ்டியை மடித்துக்கொண்டு தனது கட்சி எம் எல் ஏக்கள் கொடுக்க வந்ததை தடுத்து தானே கொடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த கண்றாவியும்..கண்டோம்..இதில் இன்னோர் கூத்து கொண்டுவருகின்ற நிவாரண பொருட்களை திமுகவினர் வழியிலேயே கொள்ளையடித்த சம்பவமும்…ஒ மை லார்ட்..என்னவென்று சொல்ல? அதில் வெத்து விளம்பரமாக கோடானு கோடி கொள்ளையடித்த பணமிருக்க..எச்சில் கையால் ஈ ஓட்டுகின்ற நபர்களை பற்றி கேள்விப்பட்டுள்ளோம்..ஆனால் அந்த செய்திகளில் அவர்களே அவர்களை புகழ்ந்து..பால் பாக்கெட்டுகளை விளம்பரதாரர் மூலம் இனாமாக கொடுக்க வைத்து தாங்களே செலவு செய்து கொடுத்ததாக தினமும் 200 லிட்டர் கொடுத்ததை 2000 முறை தங்களின் பெயரை சொல்லி சொல்லி பெருமை பீத்தி வந்ததை கண்டோம்..இந்த கூத்துகளை மறைக்க..ஸ்டிக்கர் ஒட்டினார்கள் ஆளும் கட்சியினர் என்று சொல்லி சொல்லி தொடர்ந்து அதனையே சொல்லி..இவர்களே அதனை செய்த கொடுமைதான் இந்த நிவாரண பொருட்களின் உதவி என்கிற பெயரில் அரசு செய்ய விடாமல் செய்த கதை..இதில் திமுக வசூல் செய்த நிவாரண பொருட்களை ஒன்லி திமுகவினருக்கு என்று அறிவாலயத்தில் பதுக்கி வருகின்ற கொடுமைகளை கண்டுதான் நீதிபதி அவர்கள் பொங்கிவிட்டார்..அரசு செய்யவேண்டிய நிவாரண பொருட்கள் வழங்குவதை குறை சொல்ல முடியாது…பாகுபாடின்றி வழங்க ஆவன செய்துவருகின்றது..எவ்வளவோ வழக்குகள் அவசரமாக விசாரிக்க இருந்தாலும்..இந்த எதிர்கட்சிகளின் எண்ணம் அறிந்து முந்தைய வழக்கறிஞராக இருந்த பொது காங்கிரஸ் ஆதரவாளர் என்கிற போர்வையில் இவர் விசாரிக்கவில்லை என்றே நம்புவோமே..ஆதங்கம் கூட அப்படி இருக்காது என்றே நம்புவோமே..
இந்த பேரழிவிற்கு அதிமுக அரசு மட்டும் காரணமல்ல, திமுகவும் பங்களித்திருக்கிறது என்கிறார்கள். இவ்வாறு சொல்வதில் நியாயம் நிறையவே இருக்கிறது என்றாலும், எவ்வகை அரசியலின் வியாக்யானமாக இந்த வாதம் வெளிபடுகிறது என்பது முக்கியம். தேர்தல் அரசியலின் ஆக விபரீதமான விளைவாக, இப்போது இந்த அனர்த்தத்தின் மூலம் நிறுவப்பட்டுவிட்ட ஜெயலலிதா தலைமையிலான அரசை, இன்னமும் ஏதாவது சொல்லி காக்க வேண்டிய, ஒரு பொய்மை அரசியலின் அவசியம்தான் இன்றய வக்கிரம்; 2005இல் பாராட்டியது போல், இப்போதய அரசை எந்த சாக்கு சொல்லியும் பாரட்ட முடியாத நிலையில், பிழைத்து வர எந்த சாத்தியமும் இல்லாமல் ஒழிய வேண்டியதை, தங்களை அறிஞர்களாக கற்பித்துக் கொண்டவர்கள் ‘ரெண்டு பேரும் ஒண்ணு, அறியாதார் வாயில் மண்ணு’ என்று காக்க முனைவதைத்தான் எதிர்க்க வேண்டியுள்ளது.
நூறு ஆண்டுகளின் பெருமழை பெய்ததற்கு, புவி சூடேற்றத்தின் விளைவான பருவ மாற்றம்தான் காரணம் என்று கொண்டால், கார் வைத்திருக்கும் விமானத்தில் சென்ற ஏசியில் உட்கார்ந்த நான் கூட ஒருவகையில் காரணிதான். அந்தவகை அறிவு விவாதங்களை நிதானமான நேரத்திற்கு தள்ளிவிட்டு, கண்ணெதிரே நடந்ததை அணுகும் போது, எந்த சந்தேகமும் இல்லாமல் இது தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு செய்துள்ள படுகொலை; திட்டமிட்டு செய்யாவிடினும், திட்டமிடாததால் நடந்த படுகொலை; நிகழ்த்திய பேரழிவு.
அதிமுக ஆதரவு நிலையில் இல்லாவிட்டாலும், குன்ஹாவின் தீர்ப்பு வெளிவந்த போது நான் சந்தோஷப்படவில்லை. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நியாயம் எவ்வகையில் இருந்தாலும், அதிமுக அரசே இங்கே தொடர வேண்டிய தலைவிதியான நிலையில், ஜெயலலிதா ஜெயிலுக்கு போவது இங்கே முற்றிலும் செயலின்மையை உருவாக்கும், அது தமிழகத்திற்கு நண்மை பயக்கப் போவதில்லை என்ற கருத்தையே டிவிட்டரில் எழுதினேன். நாமறிந்த அறியாத பல காரணங்களினால், ஜெயிலில் இருந்து வெளியே வந்த பின்னரும் அதே செயலின்மை தொடர்கிறது. பொதுவெளியில் தோன்றுவதை கூட தவிர்க்கும் ஒரு முதல்வரை இந்திய வரலாற்றில் எங்காவது பார்த்திருக்க முடியுமா? எம்ஜியார் நோயாவாய் பட்டு அமேரிக்காவில் இருந்தபோது கூட, முடிவெடுக்க இப்படி அண்ணாந்து காத்திருக்கும் ஒரு செயலற்ற அரசு இருந்ததில்லை.
கடந்த வாரம் வரலாறு காணாத மழை பெய்தது உண்மை; ஆனால் பெருமழை பெய்யப்போவதை மூன்று நாட்கள் முன்னமே அறியப்பெற்றும், முழுமையாக நிரம்பிய ஏரியை அதன் போக்கில் அப்படியே பராமரித்து, பெருமழை பெய்யத் தொடங்கிய பின்னும் காலம் தாழ்த்தி, எந்த முன்னெச்சரிக்கையும் முன்னேற்பாடுகளும் இன்றி, வெளியான அளவு இன்னமும் தெளிவில்லாத ஒரு பெரும் கொள்ளளவில் நீரை திறந்து விட்டு, எந்த அவகாசமும் இல்லாத மக்கள் சாவையும் பேரழிவையும் சந்திக்க நேர்ந்தற்கு எந்த சமாதானமும் கிடையாது. சொந்தமாக தீர்மானத்தை எந்த தளத்திலும் எடுத்து நிறைவேற்ற முடியாமல், ‘அம்மா அவர்களின் ஆணைக்கு இணங்க’ என்று சொல்லக் காத்திருந்த நிர்வாகமே இந்த நிலைக்கு காரணம். கருணாநிதி ஆட்சியில் துரைமுருகனோ அல்லது அதிகாரிகளோ கூட ஆணைக்கு இப்படி காத்திருக்க மாட்டார்கள். ஒரு பேரழிவு நிலை கொண்டிருந்த நிலையில் அதிரடியாக களத்தில் இறங்க வேண்டிய ராணுவம், பல மணி நேரங்களுக்கு சும்மா காக்க வைக்கப்பட்ட செய்தியும் வந்துள்ளது. பேரழிவிற்கு பின் அதிமுக ரவுடிகள் நிகழ்த்திய அராஜகங்கள் வீடியோ ஆதாரங்களுடன் பதிவாகி விட்டது. திமுக யோக்கியமான கட்சியாக இல்லாவிட்டாலும், இந்த பேரழிவிற்கு வரலாற்றுரீதியில் அவர்களுக்கும் பொறுப்பு உண்டு எனினும், இப்போதய அதிமுக அரசை போன்ற ஒரு மாபெரும் குற்றவாளி அல்ல அது; எல்லா ஊழல் கட்சிகளையும் போன்ற சமக்குற்றவாளி. அதிகாரிகள் பணியாளர்கள் அளவில் தமிழகத்தில் திறமையாளர்களுக்கான பஞ்சமே இல்லை; அரசதிகார அளவில் முறையான முடிவுகளை காலம் கடக்கும் முன் நிச்சயம் திமுக போன்ற ஒரு ஆட்சி எடுத்து, நடந்த அழிவுகளின் தீவிர அளவுகளை நிச்சயம் குறைத்திருக்கும். இதுவரை இந்தியாவில் ஆண்ட எந்த மோசமான கட்சியையும் விட மோசமாக அதிமுக நடந்து கொண்டிருக்கிறது. எல்லா மட்டத்திலும் அரசியல் பேசும் தமிழ் நாட்டில் எப்படி இப்படி ஒரு பேரவலம் நடக்க நாம் அனுமதித்தோம் என்று சொந்த அரசியலின் சுயமைய சார்புகளை அவிழ்த்துவிட்டு யோசிக்க வேண்டிய தருணம் இது.
நேரடியாக கணித பூர்வமாக நிறுவ முடியாவிட்டாலும், கணிக்கும் எல்லா ஆதரங்களும், நவீன மனித வாழ்க்கை விளைவிக்கும், தொடரும் பருவ நிலை மாற்றத்தை இந்த பெருமழைக்கான காரணமாக்குகிறது. பருவ மாற்றம் மேற்கையும் பாதித்தாலும், அதற்கான தீர்வை நோக்கி இன்னும் பல பேரழிவுகள் நிகழும் வரை- ஒருவேளை நிகழ்ந்த பிறகும் கூட – முதலீட்டிய சமுதாயம் அனுமதிக்கப் போவதில்லை; ஒருவகையில் பேரழிவுகள் முதலீட்டியத்திற்கு பெரும் வாய்ப்புகள். வால் ஸ்டீர்ட் தண்ணீரில் மறைந்தால் கூட, கார்பன் டை ஆக்சைடு உருவாக்கம் எவ்வளவு அவசியமானது என்று அமேரிக்க தேர்தலில் போட்டியிடும் ஒருவரே கூட தர்க்கித்து கொண்டிருப்பார். அந்தவகையில் அழிவை நோக்கி நாம் நகர்வதை தடுக்கும் சாத்தியம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.
திராவிட ஆட்சி இல்லாமல் தேசிய ஆட்சி தமிழகத்தில் நடந்தாலும், நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும். நீர்நிலைகளை, இயற்கையை நாசமாக்காத வளர்ச்சி பக்கத்து மானிலங்களிலும் நடைபெறவில்லை; வளர்ச்சி என்பதே அவ்வாறுதான் கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கடந்த பத்தாண்டுகளில், தமிழகம் போன்று ஊழலும் கொள்ளையடிப்பும் இயற்கை சீரழிவிற்கு துணைபோன அளவும் வேகமும் மற்ற இடங்களில் இல்லை என்பதுதான் என்னுடைய மனப்பதிவும். திமுகவின் கடந்த ஆட்சி பெரும் ஊழலும், சட்டவிரோதமான அக்கிரமிப்புகளும், வரலாறு காணாத மணல் மாஃபியா சீரழிவுகளும் கொண்டதுதான். இதனாலேயே பதவி இழந்து, தன்னை விட சீரழிவான ஒரு ஆட்சியை பதிவிக்கு கொண்டு வந்ததிலும் திமுகவிற்கு பங்குள்ளதை மறக்க முடியாது. இதற்காக நாம் திமுக திட்டவும் எதிர்க்கவும் செய்யும்போது, அதைவிட மோசமான ஒன்றிற்கு எந்த நியாயமும் கற்பித்து விடக் கூடாது; அஷ்டே!
ஜெயலலிதாவை துதிபாடும் செயல்பாட்டை தவிர இங்கு எதுவுமே நடைபெறும் தோற்றம் இல்லையே. தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட, ஒரு ஆளுங்கட்சி பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களிடமும், அதற்கு உதவும் தன்னார்வலர்களிடமும் இவ்வளவு அராஜகமாக எப்படி நடந்து கொள்கிறது? சிம்பு ரசிகர் மன்றம் நினைத்தால் கூட மக்களுக்கு உதவும் சாத்தியம் உண்டு; அதிமுக என்ன முயன்றாலும் – நிவாரண நிதி அளிப்பதை தவிர- எந்த நிவாரண பணியையும் செய்யமுடியாது. ஏனெனில் அது கொள்ளையை மட்டுமே கொள்கையாக கொண்ட தலைமையையும், அதே சுயலாபத்திற்காக தலைமையை துதிபாடுவதையே கடமையாக அடிமைப்பட்ட, அரசியல் முற்றிலுமற்ற ஒரு கூட்டம். ஒருகையில் திமுகவும் தனது அரசியலில் இருந்து விலகிய, லாபத்தை நோக்காக கொண்ட ஒரு கார்பரேட் நிறுவனம் போல மாறிவிட்ட ஒன்றுதான்; ஆனால் இன்றைக்கும், தீவிர அரசியலை தர்க்கத்துடன் பேசுபவர்களையும், அறிவு விவாதத்தில் ஒரு தரப்பாக நிலைபாடு கொண்டவர்களையும் கொண்டது திமுக; மாறாக கல்வியற்ற அறியாமையும், எலீட் மக்களின் பொய்மையும், நடுநிலைகளின் சாதுர்யமுமே அதிமுக ஆதரவாக உள்ளது. இந்த தரப்பை திமுகவை விட குறைந்த தீமை என்று ஆட்சியில் அமர்த்திய சாதூர்யத்தின் பலன்தான் தற்போதய பேரழிவு.
திமுக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலனடைய நினைப்பதாக சொல்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை கூட அவர்கள் பயன்படுத்தி குற்றம் சொல்லவில்லையெனில் அவர்கள் எதற்காக திமுகவினராக இருக்க வேண்டும்; பேசாமல் நடுநிலை அதிமுக அரசியலையே செய்யலாமே. இவ்வளவு மோசமான விபரீதமான அரசை, அரசியல் உணர்வும் கல்வியறிவும் கொண்ட தமிழகத்தில், நாம் எப்படி அதிகாரத்தில் ஏற்றினோம் என்று தீவிரமாக பரிசீலனை செய்யவேண்டிய கட்டத்தில் உள்ளோம். அதனால் திமுக பயனடைந்தால், இருக்கும் பேராபத்தான நிலையை விட அது பெரிய ஆபத்து இல்லை; மேலும் தேர்தல் அரசியலில் இது நியாயமானதும் கூட. என் பயம் எல்லாம் சன் டீவி போன்றவைகளின் மிகை விளம்பர பாணி பிரச்சாரத்தினால் அதிமுக மீதான வெறுப்பு தணிந்துவிடுமோ என்பதுதான்.
தனிமனிதத் துதியை விரும்பும், ஊக்குவிக்கும் ஓர் அரசின்கீழ் நாங்கள் வாழ்வது தமிழர்களான எங்களுக்கு நிரந்தர அவமானம்! உலகமே கேவலமாக பேசுகிறது. ஆனால் தமிழகத்தில் வாழும் சில சுயநல அடிமை தமிழனுக்கு மட்டும் அது உறைக்கவில்லை.
– இப்படிக்கு
தன்மானம் உள்ள தமிழன்
who beat the RK Narayan for srilanka issue, what he is doing now? I heard that he offered entire asset to Kadalor village people? true?
what other srilankan is doing for our own TN people crises? I don’t see any comments on social network from them?
#செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து…..
பக்கத்தில் இருக்கும் இந்த தகவல் அதி முக்கியமானது. அரசாங்கத்தின் மெத்தனம், அலட்சியம், நிர்வாக சீர்கேடு, இயலாமை, ஆணவம் என ஒட்டுமொத்த Governance failure க்கான அத்தாட்சி.
//Once these rescue agencies were in, however, confusion prevailed. “No central control room was set up by the Tamil Nadu police,” said a senior officer in the police force. “Each agency was doing its own thing. In my area, I had no idea who all were working – NDRF, Army or Navy. We went about our own rescue operations regardless,” he said.
The Coast Guard officer too confirmed the same. “The Army, Navy, Air Force, Coast Guard all coordinated with each other informally,” said the senior officer. “There were no directions from state police. We got calls from the public and we moved to those areas based on calls received. At the ground level, our personnel coordinated with police personnel on the ground,” he added.
// via The Wire
இன்னும் எத்தனை பேர் இதற்கும் எதிர்கட்சி தான் காரணம் என்று நீட்டி முழக்கப் போகிறீர்கள் ?
ஓடை, நத்தம், புறம்போக்கு, குளம், ஏரி, கண்மாய், நீர்வழி தடங்கள் என்று அனைத்திலும் வீடு கட்டலாம் என்று பட்டா கொடுத்ததே கருணாநிதி அரசுதான்.. இதற்கு அரசு ஆவணங்கள் சாட்சி….. இப்படி பட்டா வாங்கியவர்கள் பெரும்பாலும் கட்சிகாரர்கள்…..இன்று சென்னையின் அலங்கோல நிலைக்கு அடிப்படை காரணமே கருணாநிதியின் தவறான முடிவுகள்தான்… இதுதான் உண்மை…. இப்படி ஒவ்வொரு துறையிலும் தவறுகளுக்கு முன்னுதாரணம் கருணாநிதியின் திறமையற்ற செயல்கள்தான். இன்று சென்னை வெள்ளத்தால் மிதப்பதற்கு இவரின் கொள்கைகளே காரணம்….சமீபத்தில் கூட மாநாடு நடத்த ஆப்பூரில் குளங்களையும் கண்மாய்களையும் நீர் வழி தடத்தையும் மூடினார்கள்…பத்திரிக்கையில் செய்தி வந்தது…ஆனால் அதை பற்றி அலட்டிக்கொள்ளவில்லை கருணாநிதி..இன்று நீலி கண்ணீர் வடித்து என்ன பயன்?பேரன்கள் 100 டு 150 கோடியில் சினிமா எடுக்கிறார்கள்…அந்த பணம் தமிழ் நாடு கொடுத்தது.தமிழ் மக்கள் கொடுத்தது…. ஏன் ஒரு 50 கோடி இந்த மக்களுக்கு கொடுக்க முடியாதா? தமிழன் தலைஎழுத்து என்ன செய்ய? இப்படிப்பட்ட தலைவனுக்கு ஜால்ரா அடிப்பது, ஒத்து ஊதுவது மகா கேவலம். எதிர்கால தமிழகம் இவர்களை மன்னிக்காது.
திமுக அபிமானிகளிடம் , 1. தமிழகத்தில், துணை நகரம் என்று திட்டம் போட்டு, வயல்வெளிகளை ஏரிகளின் வடிகால்களை , வீட்டு மனைகளாக , ரியல் எஸ்டேட் பணக்காரர்களின் ஆசைக்கு தீனி போடும் வகையில் உத்தரவு போட்டது யார்?… 2. சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தற்போதைய ஆட்சியில் படுத்துவிட்டது…மக்கள் புறநகரில் வீடு வாங்க அல்லது விற்க முடியாமல் தவிக்கிறார்கள்…நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வீடுகள் விற்பனை , ரியல் எஸ்டேட் பூம் ஆகும் என்று பேட்டி கொடுத்தது யார்?..3. அடையாறு, மற்றும் கூவம் யாருடைய ஆட்சியில் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது?…4. கூவத்தில் , மதுரவாயல் – எண்ணூர் பறக்கும் சாலையை அமைக்க முற்பட்டது யார்?.. தற்போதைய ஆளும் கட்சி, கூவத்தின் நீர்போக்கை இந்த சாலை பாதிக்கும், என்று கூறிய போது, அதனை கிண்டல் பண்ணியது யார்?… 5. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன்…. சிங்கப்பூராக மாற்றுவேன்… என்று கொக்கரித்தவர் யார்?…. 6. சென்னை மேயராக இருந்தவர் சென்னைக்கு நீண்ட கால திட்டம் எதுவும் இன்றி இப்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளர் ஆக போட்டியிடுவது நியாயமா? .. 7. கூவத்தை , தேம்ஸ் ஆக மாற்றுவேன், என்று கொக்கரித்துவிட்டு, துணைவியுடன், இங்கிலாந்து சென்று [அரசு பணத்தில்], தேம்ஸ் நதியை பார்த்து வந்தவர் யார்?…8. நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து, துணை நகரம் , SATELLITE CITY , என்ற போர்வையில், அரசானை இட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு நீர் வழி பாதைகளை தாரை வார்த்தது யார்? யார்?… 9. குப்பை காடாக இருக்கும் சென்னையை சீரமைக்காமல், 20000 கோடியில், தேவை இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தையும், 2000 கோடி செலவில் சட்டமன்ற கட்டடமும் கட்ட எத்தனித்தது தான் நிர்வாக திறமையா?… அடிப்படை வசதியே இல்லாத சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒரு கேடா?…. 10. இலவச TV என்னும் தரித்திரத்தை, தொடங்கி வைத்து, தமிழகத்தில் இலவச மாயையை ஆரம்பித்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பிள்ளையார் சுழி போட்டது யார்?…..[ தமிழ்செல்வன் அல்லது பிற திமுக அபிமானிகளுக்கு தில் இருந்தால் மேல் கண்ட கேள்விகளுக்கு பதில் கூறி விட்டு, இயற்கை பேரழிவின் உச்சத்தால், இன்று நடக்கும் அவலங்களின் கோலங்கள் பற்றி கேள்வி எழுப்பட்டும்
இண்டர்நேஷனல் மருத்துவமனை என்று விளம்பரப்படுத்திக்கொண்ட ‘மியாட்’ மருத்துவமனையின் ஜனரேட்டருக்குள் வெள்ளம் புகுந்து ஐ.சி.யூ.-வில் 24 மணிநேரமும் கண்காணித்து சிகிச்சை அளிக்கவேண்டிய நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) தடைப்பட்டு 20-க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக இறந்த சம்பவத்தில், மருத்துவமனை நிர்வாகத்தையே ஓவர்டேக் பண்ணும் அளவுக்கு காவல்துறையும்…சுகாதாரத்துறையும் மூடிமறைக்கும் வேலைகளில் ஈடுபட்டதுதான் வேதனையிலும் வேதனை! செயற்கை சுவாசம் தடைப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் மியாட்டிலிருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது அன்று முழுக்க அங்கு செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அத்தனை பேரும் நீரில் மூழ்கி மியாட் மருத்துவமனை ஓரத்தில் பிணமாய் மிதந்து ஒதுங்கியதுபோல வழக்குப்பதிவு செய்ய, கொந்தளித்த உறவினர்கள் போலீஸாரை முற்றுகையிட்ட பிறகே, அங்கிருந்த டி.சி. செந்தில்குமரன் ‘நீரில் மூழ்கி இறப்பு’ என்பதை நம் கண்முன்னே அடித்துவிட்டு ‘இயற்கைக்கு எதிரான மரணம்’ என்று குறிப்பிட்டார். கொஞ்சம் விட்டிருந்தால் நோயாளிகள் அனைவரும் தற்கொலை செய்துகொண்டனர் என்று வழக்கு பதிவு செய்திருப்பார்கள் போல. இப்படியொரு சம்பவம் அரசு மருத்துவமனையில் நடந்திருந்தால் ஊடகங்கள் ஊதி பெரிதாக்கியிருக்கும். ஆனால், பண வாடை வீசும் தனியார் மருத்துவமனை என்பதால் பிண வாடை வீசாமல் மூடிமறைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களிடம் பல லட்சங்களை சிகிச்சைக்காக கொள்ளையடித்திருக்கிறது மியாட் நிர்வாகம். ஆனால், இறந்ததைக்கூட உறவினர்களிடம் தெரிவிக்காமல் நோயாளிகளை அப்படியே விட்டுவிட்டு ஓடியிருக்கிறார்கள் அங்குள்ள மருத்துவர்கள். செயற்கை சுவாசம் தடைப்பட்டதற்கு உடனடியாக வேறு மருத்துவமனையில் கொண்டுப்போய் சேர்த்திருந்தால் இத்தனை உயிர்கள் போயிருக்காது. பச்சைப் படுகொலை செய்திருக்கிறது மியாட். அதோடு இன்றுவரை இறந்தவர்களின் உறவினர்களுடன் எவ்வித பேச்சு வார்த்தையும் மியாட் நடத்தவில்லை. இந்தப் படுகொலைக்கு அரசும் எவ்வித நடவடிக்கையையும் மியாட் நிர்வாகிகள் மீது எடுக்கவில்லை! இது யாருக்கான அரசு என்பதை இதிலிருந்தே தெரிந்துக்கொள்ளலாம்!
முந்தைய காலங்களில் தக்காளி விலையோ வெங்காய விலையோ அதிகரித்தால் மக்கள் இறங்கி வந்து போராடுவார்கள் தற்காலங்களில் என்ன விலையஶணாலும் சரி என்னிடம் பணம் இருக்கிறது என வாங்கும் போக்கு அதிகரிப்பால் விலை வாசி ஸ்திர தண்மையில் இருப்பதில்லை மக்கள் தெளிவாண சிந்தணை பெற இன்னும் பத்து ஆண்டு கள் கூட ஆகலாம் அதுவரை தமிழகத்தை கடவுள் கூட காப்பாற்ற முடியாது
சென்னை அழிந்ததற்கு முழு முதல் காரணம் மக்களின் பேராசையை தவிர வேறொன்றும் இல்லை அரசாங்கம் பாதுகாப்பற்ற பகுதி என அறிவிக்கப்பட்டாலும் அடம் பிடித்து தங்குவதை என்ன சொல்வது மக்களின் எண்ணங்கள் மாற வேண்டும் சரிஇணிமேல் அது மாதிரி நடப்பார்களா எண்றால் இல்லை காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்
சென்னை அழிந்ததற்கு முழு முதல் காரணம் மக்களின் பேராசையை தவிர வேறொன்றும் இல்லை அரசாங்கம் பாதுகாப்பற்ற பகுதி என அறிவிக்கப்பட்டாலும் அடம் பிடித்து தங்குவதை என்ன சொல்வது மக்களின் எண்ணங்கள் மாற வேண்டும் சரிஇணிமேல் அது மாதிரி நடப்பார்களா எண்றால் இல்லை காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்
Dear Savukku
I have been following your Articles, Threads and News Capsules from the beginning. I fully Appreciate your initiatives, efforts as Tamil Wikileaks initiatives. I have always been commenting on your Article as well. One Point of Importance I have been emphasizing and insisting is that your Contribution should be counter Productive, Protective and Preventive for all sects of Society viz., Citizens, Industries, Economy and Welfare of Tamil nadu. Your criticism bolstering the Governments earlier and now has only yielded in change of parties. But let us take the present scenario of Flood and the Disaster Recovery Process.
a. All Political parties blaming AIADMK for the Actions on Flood Relief. On the Flip side, why cant the 234 MLAs and the 39 MPS work only towards their individual constituencies along with the Local Councillors to and salvage the situation from the available funds and also from the Public and chalk out a plan. People are not important for any party. Political party wants to seek mileage in each and every action taking photographs, publicity etc including ADMK, DMK, DMDK, PMK, MDMK, BJP, CONGRESS and other parties. When there is a disaster, if each and every constituency is worked towards individually it is enough to salvage.
b. SEcondly, take the flood relief fund. the major earnings are made by Politicians and second by Cinema artists evading Income Tax. Can you imagin e the so called Super Star Rajini Kanth, who has earned all the name, money and fame here has contributed Rs.10 lakhs while the budding artists like Sri Divya has also contributed Rs.10 lakhs. Look at Mr.Ragava Lawrence who has been immensely contributing consistently, continuously through various means for Senior Citizens, Orphans has contributed Rs.1 crore. The Telugu filmdom has been generous as well. The Tamil Heros have been so cheap and mean like Ajith, Rajini whose contribution is almost nil . Tamil Actress contribution has been almost nil again with of course few exceptions. People of Tamil Nadu should ignore films of Ajith, Rajinikanth, Director Shankar and other leading Hero films hereinafter. People spend huge money on entertainment only to make them richer by making them poorer so far. This should change. A Huge tax should be levied for all these Actors, Actress, Directors etc who have been making big budget movies. The black money should be taken from such people.
c. Politicians should be stripped off their money which are black, corruption based earnings. Also, next is the Tamilnadu Police with of course, some officers, who should be probed, investigated for their corrupt money. Also the Industrialist who are either proxies or black moneyed people.
, ,
Totally 24 districts have been affected, with over 21 lakh people worst affected with over 17 lakh people staying in camps, with over 10000 people missing , over 25000 crore direct loss on properties, livelihood, over 100000 crore Indian rupees loss on Tamilnadu economical Growth, These politicians are throwing shit on each other playing drama to prove before public. All the Engineering , Arts and science Colleges, Medical colleges, Para Medical Colleges, Educational institutions are governed either directly or indirectly by Politicians. Inexperienced Politicians play theatrical comedy like Kushboo, Tamilisai Soundarajan, sunrise political party chiefs. Nobody has any welfare schemes or salvage plans
Mr.Savukku, Here comes your contribution – Phenomenal contribution, Public Needed Contribution which you and only You can take it and you shall know how to do it, this is the Proper time to propagate, campaign, pronounce the idea –
GOVERNOR’S Rule of Minimum 1, Year with no political party to clean up the state especially the Illegal framework of Infrastructure based , Education System which is predominantly ruled by Politicians in Tamilnadu, take back the encroachments, land grabs, etc. This will not only clean up the State Government Political Machinery but also the political party system in Tamilnadu to a little extent for the people to be very clear on electing the next Governance based Government.
For your consideration of thought. Thanks
ஓடை, நத்தம், புறம்போக்கு, குளம், ஏரி, கண்மாய், நீர்வழி தடங்கள் என்று அனைத்திலும் வீடு கட்டலாம் என்று பட்டா கொடுத்ததே கருணாநிதி அரசுதான்.. இதற்கு அரசு ஆவணங்கள் சாட்சி….. இப்படி பட்டா வாங்கியவர்கள் பெரும்பாலும் கட்சிகாரர்கள்…..இன்று சென்னையின் அலங்கோல நிலைக்கு அடிப்படை காரணமே கருணாநிதியின் தவறான முடிவுகள்தான்… இதுதான் உண்மை…. இப்படி ஒவ்வொரு துறையிலும் தவறுகளுக்கு முன்னுதாரணம் கருணாநிதியின் திறமையற்ற செயல்கள்தான். இன்று சென்னை வெள்ளத்தால் மிதப்பதற்கு இவரின் கொள்கைகளே காரணம்….சமீபத்தில் கூட மாநாடு நடத்த ஆப்பூரில் குளங்களையும் கண்மாய்களையும் நீர் வழி தடத்தையும் மூடினார்கள்…பத்திரிக்கையில் செய்தி வந்தது…ஆனால் அதை பற்றி அலட்டிக்கொள்ளவில்லை கருணாநிதி..இன்று நீலி கண்ணீர் வடித்து என்ன பயன்?பேரன்கள் 100 டு 150 கோடியில் சினிமா எடுக்கிறார்கள்…அந்த பணம் தமிழ் நாடு கொடுத்தது.தமிழ் மக்கள் கொடுத்தது…. ஏன் ஒரு 50 கோடி இந்த மக்களுக்கு கொடுக்க முடியாதா? தமிழன் தலைஎழுத்து என்ன செய்ய? இப்படிப்பட்ட தலைவனுக்கு ஜால்ரா அடிப்பது, ஒத்து ஊதுவது மகா கேவலம். எதிர்கால தமிழகம் இவர்களை மன்னிக்காது.
ஒரு பானை சோற்றிலிருந்து ஒரு பருக்கையை மட்டும் எடுத்து கொடுக்கிறார்… என்ன ஒரு தாராள குணம். பேரன்கள் பலநூறு கோடிகளில் சினிமா எடுக்கிறார்கள்…நயன்தாராவுக்கு ஒரு பேரன் B m w கார் வாங்கி கும்மாளம் அடிக்கிறார்..பல ஆயிரக்கணக்கான கோடிகளில் விமானங்கள் வைத்து இருக்கும் மாறன் பிரதர்ஸ்….இது ஒரு சின்ன சாம்பிள்தான்…..இந்த பணம் இவர்கள் என்ன வெளிநாடுகளில் வேலை செய்து சம்பாதித்து கொண்டு வந்ததா… இல்லை….ஜப்பானில் உள்ள பூர்வீக சொத்துக்களை விற்று கொண்டு வந்த பணமா இல்லை.. எல்லாம் தமிழனின் வியர்வை……ஆனால் அந்த தமிழன் நிர்கதியாய் இருக்கோம் போது ஒரு கோடி நிதி கொடுக்கிறாராம்…….. இந்த பணம் தமிழனுக்கு தேவை இல்லை….இதற்கும் வட்டி போட்டு நீங்கள் எதிர்காலத்தில் பிடுங்கி விடுவீர்கள் என்று எங்களுக்கு தெரியும்..சிங்கார சென்னை என்று மேயர் ஸ்டாலின் அடுத்து சுப்பிரமணியம் செய்த பணிகள் என்ன? சும்மா பெயிண்ட் அடித்தால் சிங்காரம் ஆகிவிடுமா? இன்று சென்னையின் இந்த நிலைமைக்கு காரணம் கருணாநிதி கட்சியினர் செய்த நில அபகரிப்பும் ஆக்கிரமிப்பும்தான்…..இறுதியாக ஒரு உண்மை….சென்னைக்கு அருகே ஆப்புரில் தி. மு.க மாநாடுக்காக மூன்று குளங்களும் ஒரு ஏரியும் 30 நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதை அரசாங்கம் கண்டுபிடித்து போர்டு வைத்துள்ளது…..ஆட்சியில் இல்லாத போதும் இவர்கள் செய்யும் அராஜகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல………சென்னை வெள்ளம் ஆனது…..ஏன்? இவர்கள் ஆட்சியில் ஓடை,குளம்,கண்மாய்,ஏரி,நீர் வழி தடங்கள் எல்லாம் கொள்ளை போனதுதான். வரலாறு இவர்களை மன்னிக்காது…………..அரசியலுக்கு அப்பாற்பட்டு உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஸ்டாலின் ஊர் ஊரா சுத்தி பொம்மலாட்டம், ரெகார்ட் டான்ஸ், தெரு கூத்து, பூம் பூம் மாடு, கரகாட்டம், ஒயிலாட்டம், மானாட்டம், மயிலாட்டம், மோடி மஸ்தான் மேஜிக் வேலை, சர்கஸ் பபூன் வேலை எல்லாம் செய்தாரு. ஒட்டு போடும் மக்களை இன்னும் நிஜமாகவே சந்திக்கவில்லை அல்லது இவரை யாரும் ஒரு பொருட்டாகவே சீண்டவில்லை. ” நமக்கு நாமே” பயணம் திமுக நடத்திய ஒரு சினிமா சூட்டிங். ஒரு எழுச்சியும் ஏற்படவில்லை…..எந்த ஒரு கட்சியும் இவர்களிடம் கூட்டு வைத்தால் மக்கள் ஒதுக்கி விடுவார்கள் என்று பயந்து போய் உள்ளார்கள்….திமுக உடன் கூட்டணி வைத்தால் விஜயகாந்த் ஒரு இடத்தில கூட வெற்றி பெற முடியாது….இது கேப்டனுக்கு நன்றாக தெரியும்….என்னவென்றால் 2ஜீ தீர்ப்பு வந்தவுடன் திமுகவின் அஸ்தமனம் ஆரம்பமாகிவிடும்.2016 தேர்தலில் உதிரி கட்சி நிலைக்கு போய்விடும்….இது தமிழகத்தில் உள்ள எல்லா தலைவர்களுக்கும் தெரியும்….இதை புரிந்து கொண்ட ராமதாஸ்,கேப்டன்,வைக்கோ,கம்யுனிஸ்டுகள் தனி வியுகம் அமைக்கின்றன….திமுக வுக்கு இனி முதல்வர் பதவி இல்லை….. ஆகவும் முடியாது..2020 க்கு பிறகு திமுக(ஸ்டாலின்) திமுக (அழகிரி) என்று பிரியும்
ஊழல் டாக்டர், ஊழல் பாரத ரத்னா,ஊழலுக்கு ஒரு நோபெல் ப்ரைஸ் என்றால் அது கருணாநிதிக்கு மட்டுமே இந்த இந்திய திரு நாட்டில் பொருந்தும்….ஜெயலலிதா அவர்கள் ஊழல் செய்தார்கள் என்று கட்டுமரம்தான் வழக்கு போட்டார்….அம்மா அவர்கள் ஒருவர்தான் இந்த கருணாநிதியின் வண்டவாளத்தை தெரிந்தவர். அம்மா ஏதோ சின்ன தப்பு செய்து விட்டார் என்று தெரிந்தும் மக்கள் அவரை ஆதரிக்க ஒரே காரணம்……தமிழகத்தை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற தகுதியானவர் அம்மா ஒருவர் மட்டும் என்பதுதான்……அம்மா இல்லை என்றால் கோபாலபுரம் வாய்க்குள் மொத்த தமிழ்நாடும் என்றோ போயிருக்கும்……தமிழர்கள் இதை எப்போது நன்கு உணர்ந்து விட்டார்கள்…..யார் யாருக்கு எப்ப ஆப்பு அடித்தால் ஆட்சி நல்லா இருக்கும் என்று என் தமிழனுக்கு தெரியும்…..இனி தி மு க மற்றவர்களைத்தான் கெஞ்ச வேண்டும்….அவர்கள் காலில் அழுது புரள வேண்டும். இதுதான் நாளைய யதார்த்தம்.
ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி சென்னைக்கு நல்ல உள்கட்டமைப்பு வசதி செய்து கொடுக்காமல் தன் குடும்பத்திற்கு மிக மிக அருமையான உள்கட்டமைப்பு வெளி கட்டமைப்பு வசதி செய்து சீரும் சிறப்புமாய் வைத்துள்ளார்….. சாதாரண மக்கள் படும் இன்னல்களை நேரில் பாக்கட்டுமே? இதில் என்ன தவறு? சி.எம்.டி.ஏ. கொடுத்த அறிக்கையை மூன்று முறை கிடப்பில் போட்ட உத்தமர்தான் கருணாநிதி…. 1989.1996,2006 என்று மழை வெள்ளம்,புயல் போன்ற காலகட்டங்களில் முன் கூடி எடுக்க வேண்டிய நடவடிக்கை மற்றும் மழை நீர் வடிகால் கால்வாய்கள் என்று பல யோசனைகள் சொல்லியும் இரண்டு ஆட்சிகளும் அலட்சியபடுத்தியதன் விளைவே சென்னையின் இன்றைய நிலைக்கு காரணம்… அரசியல்வாதிகள் தான் இந்த துறையை ஆட்டிபடைக்கின்றனர்… ஆட்சி புரிந்த அனைவரும் சென்னையின் அவல நிலைக்கு காரணம்……… வெந்ததை தின்று கண்டதை பேசும் நிலை மாறனும்.
திமுக அபிமானிகளிடம் , 1. தமிழகத்தில், துணை நகரம் என்று திட்டம் போட்டு, வயல்வெளிகளை ஏரிகளின் வடிகால்களை , வீட்டு மனைகளாக , ரியல் எஸ்டேட் பணக்காரர்களின் ஆசைக்கு தீனி போடும் வகையில் உத்தரவு போட்டது யார்?… 2. சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தற்போதைய ஆட்சியில் படுத்துவிட்டது…மக்கள் புறநகரில் வீடு வாங்க அல்லது விற்க முடியாமல் தவிக்கிறார்கள்…நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வீடுகள் விற்பனை , ரியல் எஸ்டேட் பூம் ஆகும் என்று பேட்டி கொடுத்தது யார்?..3. அடையாறு, மற்றும் கூவம் யாருடைய ஆட்சியில் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது?…4. கூவத்தில் , மதுரவாயல் – எண்ணூர் பறக்கும் சாலையை அமைக்க முற்பட்டது யார்?.. தற்போதைய ஆளும் கட்சி, கூவத்தின் நீர்போக்கை இந்த சாலை பாதிக்கும், என்று கூறிய போது, அதனை கிண்டல் பண்ணியது யார்?… 5. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன்…. சிங்கப்பூராக மாற்றுவேன்… என்று கொக்கரித்தவர் யார்?…. 6. சென்னை மேயராக இருந்தவர் சென்னைக்கு நீண்ட கால திட்டம் எதுவும் இன்றி இப்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளர் ஆக போட்டியிடுவது நியாயமா? .. 7. கூவத்தை , தேம்ஸ் ஆக மாற்றுவேன், என்று கொக்கரித்துவிட்டு, துணைவியுடன், இங்கிலாந்து சென்று [அரசு பணத்தில்], தேம்ஸ் நதியை பார்த்து வந்தவர் யார்?…8. நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து, துணை நகரம் , SATELLITE CITY , என்ற போர்வையில், அரசானை இட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு நீர் வழி பாதைகளை தாரை வார்த்தது யார்? யார்?… 9. குப்பை காடாக இருக்கும் சென்னையை சீரமைக்காமல், 20000 கோடியில், தேவை இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தையும், 2000 கோடி செலவில் சட்டமன்ற கட்டடமும் கட்ட எத்தனித்தது தான் நிர்வாக திறமையா?… அடிப்படை வசதியே இல்லாத சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒரு கேடா?…. 10. இலவச TV என்னும் தரித்திரத்தை, தொடங்கி வைத்து, தமிழகத்தில் இலவச மாயையை ஆரம்பித்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பிள்ளையார் சுழி போட்டது யார்?…..[ தமிழ்செல்வன் அல்லது பிற திமுக அபிமானிகளுக்கு தில் இருந்தால் மேல் கண்ட கேள்விகளுக்கு பதில் கூறி விட்டு, இயற்கை பேரழிவின் உச்சத்தால், இன்று நடக்கும் அவலங்களின் கோலங்கள் பற்றி கேள்வி எழுப்பட்டும்
சென்னை நகரம் முன் எப்போதும் இல்லாத வகையில், வெள்ளத்தில் மிதக்கிறது. இதற்கு திட்டமிடாத வளர்ச்சி தான் காரணம் என்றாலும், நீர்நிலைகளையும், விலைமதிப்பில்லா, சதுப்பு நிலங்களையும், கண்மூடித்தனமாக, ‘கான்கிரீட்’ காடுகளாக மாற்ற திமுக அரசு உடந்தையாக இருந்ததே காரணம் என்பது, மீண்டும் உறுதியாகியுள்ளது.
சோழிங்கநல்லுார் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் முளைத்திருக்கும், ஐ.டி., கட்டடங்களுக்காக, நிலப் பயன்பாடு மாற்றம் பெரும் அளவில் மாற்றப்பட்டுள்ளது. மேலும், பழைய மகாபலிபுரம் சாலையே, பக்கிங்ஹாம் கால்வாய்க்கு செல்லும் நீரோட்டத்தைத் தடை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், நீர்நிலைகள் கபளீகரம் செய்யப்பட்டதையும், இது தானாக உருவானதல்ல; மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. சென்னை, தாழ்வான, தட்டையான நிலப்பரப்பை உடையது. இங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், அதை ஈர்த்து தன்னுள் தாங்கி பிடித்துக் கொள்வதற்கும், இயல்பான நீரோட்டத்துக்கும், இயற்கையாக அமைந்த சதுப்பு நிலப்பகுதிகளும், கால்வாய்களும் அதிக அளவில் இருந்தன. கடந்த, 2006ம் ஆண்டில், சென்னையில், ஐ.டி., என்னும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, மாநில அரசு முன்னுரிமை தரத் துவங்கியது. தென் சென்னை, புறநகர்ப் பகுதிகள் அமைந்திருக்கும் காஞ்சி மாவட்டத்தில், தொழில் நிறுவனங்கள் பெருகவும் ஊக்கம் அளித்தது.
* ஐ.டி., நிறுவனங்கள் பெருகப் பெருக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, தரமணி, சோழிங்கநல்லுார் பகுதிகளில், இதர நிறுவனங்களும், குடியிருப்புகளும், சென்னை நகருக்குள் இல்லாத வகையில், வானுயர் கட்டடங்களும் கட்டப்பட்டன. அதற்கு ஏற்றார்போல், நில உபயோக மாற்றம் செய்யப்பட்டது. விளை நிலங்களாக, நீர்நிலைகளாக இருந்த பகுதிகள், கண்மூடித்தனமாக குடியிருப்பு பகுதிகளாக உருமாறின. அப்பகுதியில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் கல்வி நிறுவனங்களும் உருவாகின.
* இத்துடன், 174 சதுர கி.மீ., பரப்பளவில் இருந்த, சென்னை மாநகரம், காஞ்சி மாவட்டத்தின் பல பகுதிகளை உள்ளடக்கி, 426 சதுர கி.மீ., கொண்ட விரிவாக்கப்பட்ட மாநகராட்சியாக, 2009ல் மாறியது. அதன்பின் அப்பகுதி, முன்னிலும் வேகமாக விரிவடைந்தது. இது போன்ற காரணங்களால், வெள்ள நீரைக் கொண்டு செல்லும் கால்வாய்களில், நீரோட்டம் தடைபட்டது.
* வெள்ள நீரை, பூமிக்குள் பெருமளவில் தேக்கி வைக்கும், விலை மதிப்பில்லாத, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், கட்டுப்பாடின்றி ஆக்கிரமிப்புகள் நடந்தன. இதுதவிர ஒக்கியம் மடுவு உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட தீவு போன்ற சிறு, சிறு, நீர்நிலைகள், கான்கிரீட் கட்டடங்களாக மாறின.
* பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கட்டப்பட்டிருக்கும் மேம்பால ரயில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ள என்.ஐ.ஓ.டி., எனப்படும், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், சிறுசேரியில் அமைக்கப்பட்டுள்ள, ஐ.டி., சிறப்பு பொருளாதார மண்டலம் என, அரசே, ஆக்கிரமிப்பு செய்வோருக்கு வழிகாட்டி விட்டது.
* பெருங்குடியில் உள்ள மாநகராட்சி குப்பை கொட்டும் இடமும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தான் உள்ளது. 1960களில், 15 ஆயிரம் ஏக்கராக இருந்த பள்ளிக்கரணை சதுப்புநிலம், தற்போது 1,500 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கிப் போய்விட்டது.
* இது போல், கிழக்கு கடற்கரைச் சாலையில் பக்கிங்ஹாம் கால்வாய் பகுதி மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில், கால்வாய் போன்ற நீர்நிலைகளை, செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள், தங்களுக்குள் பங்கு போட்டு, கோடி கோடியாக குவித்தனர்.
நகர்ப்புறமயமாதலில் காட்டிய தீவிரத்தை, நீர்நிலைகளை காப்பதில் அரசு காட்டாததன் விளைவாக, மழைக்காலத்தில் நீரோட்டம் தடைபட்டு, புறநகர்ப் பகுதியையே, ஒரு மாபெரும் ஏரிக்குள் எடுத்து வைத்தது போல் தத்தளிக்கிறது.எல்லாவற்றையும் கண்டும், காணாமல் இருந்துவிட்டு, இப்போது குத்துதே, குடையுதே என புலம்புவதற்கு, யார் காரணம் என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
புறநகர்ப் பகுதிகளில் நடந்துள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை, ‘தி நியூஸ் மினிட்’
ஆங்கில செய்தி இணையதளத்தில், சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் என்பவர் வெளியிட்டுள்ளார். அதில், 2002 – 06ல் தென் சென்னை புறநகர்ப் பகுதிகள் எப்படி இருந்தன; அவை இப்போது எப்படி மாறியுள்ளன என்பதை ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.
இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் :உத்தண்டியில், பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கோவளம் சிற்றோடைக்கு இடைப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள மணற்பாங்கு, மழைநீரை உறிஞ்சும் அபரிமிதமான சக்தியைக் கொண்டது.
சிறுசேரி, ஐ.டி., பூங்கா:இரண்டு நீரோட்ட கால்வாய்கள், இணைந்து கடலுக்குச் செல்லும் வழியில், கோவளம் சிற்றோடையில் சேருமிடத்தில், ‘சிப்காட்’ உருவாக்கியுள்ள ஐ.டி., பூங்காக்கள், நீரில் மிதப்பதில் ஆச்சரியம் இல்லை.
செம்பரம்பாக்கம் ஏரி:இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், ‘ஹுண்டாய்’ போன்ற ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன.
ஒரகடம்:2006ல் விளைநிலங்களாகவும், ஏரிகளாகவும், நீர்ப்பிடிப்புப் பகுதியுமாக இருந்த ஒரகடம், இன்று, ‘டெய்ம்லர், பென்ஸ், ரெனோ -நிசான்’ போன்ற சர்வதேச ஆலைகளின் வரவால் தன் முகத்தை இழந்துவிட்டது.
பள்ளிக்கரணை:2004 மற்றும் 2008 இடையே, ஒரு பெரிய, ஐ.டி., நிறுவன கட்டடம் உருவான பகுதியை, வழக்கறிஞர் டி.கே.ராம்குமார் என்பவர், இந்த புகைப்படம் வாயிலாக சித்தரித்துள்ளார்.
வேளச்சேரி:மேம்பால ரயில் வருவதற்கு முன், அதன்பின், வேளச்சேரியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், அதற்கு இன்று ஏற்பட்டிருக்கும் கதி, ஆச்சரியத்தைத் தராது.
இங்கே நிறைய திமுக மற்றும் அதிகமுகவின் அனுதாபிகள் அடிமைகள்,அல்லகைகள், தொண்டுகள், அடிபொடிகள் எல்லோரும் ஒருவரை ஒருவர் நீ செய்ததுதான் தப்பு, இல்லையில்லை நீ செய்ததுதான் தப்புன்னு குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே! உங்கள் அனைவரையும் ஒன்று கேட்கிறேன்…. உங்களுக்கெல்லாம் துளிகூட வெக்கமென்பதே கிடையாதா? என்ன மானங்கெட்ட பிறவி நீங்கலளெல்லாம்! ஒருத்தனையொருத்தன் கட்சி சார்பா நின்னு குற்றம் சொல்லிக்கொள்கிறீர்களே, அந்த கட்சிசார்பான பார்வையை விடுத்து ஒரு முறையாவது கட்சி சார்பில்லாத சாமான்ய குடிமகன்(டாஸ்மாக் குடிமகன் இல்லை) பார்வையில் நின்று உங்கள் நிர்வாகத்தை உற்று நோக்குங்கள் –அப்போதுதான் தெரியும். நீங்கள் செய்தவையெல்லாம் அயோக்யத்தனமான காரியங்கள் என்று- ஒருவரையொருவர் குறைசொல்லிக்கொள்ள உங்களுக்கெல்லாம் தகுதியே இல்லை. —-இந்தப்பக்கம் அதிமுககாரன் திமுக காரனை பார்த்து நீதான் பல திருமணம் செய்தாய், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொத்து சேர்த்தாய்- மணல் மாபியாவை தொடங்கினாய்- தேசிய அளவில் ஊழல் செய்தாய் ஆகவே நீதான் பெரிய திருடன்கிறான், அந்தபக்கம் நீதான் அளவுக்கு மீறி சொத்து சேர்த்து கோர்ட்டில் தண்டனை வாங்கி, பணத்தால் அடித்து நீதியை விலைக்கு வாங்கி அப்போதும் திருந்தாமல் இண்றளவும் சட்டத்திற்கு புறம்பாக நடந்து மிரட்டி பலஆயிரம் கோடிகளில் தியேட்டர்களையும் எஸ்டேட்களையும் வாங்கியிருக்கிறாய் ஆகவே நீதான் பெரிய திருடன் என்கிறான். ஆனா சாமான்ய மனிதனா உங்கள பார்த்தா நீங்க எல்லோருமே பக்கா திருட்டு பசங்கதான். ஆடு நனையறதப் பார்த்து ஓநாய் அழுவுற கணக்கா நீங்கல்ல்லாம் வரப்போற தேர்தலை நினைத்து மக்கள பார்த்து கண்ணீர் விடுறீங்க. நீங்கள்ளாம் சோறுதான் திங்கறீங்களா அல்லது சோத்த விட்டுட்டு லத்திய திங்கறீங்களா? மானங்கெட்ட அயோக்யப் பயலுங்களா, பொழப்பத்த புளுத்த பயலுங்களா
Both DMK and AIADMK are going to get thrashed in this elections. let this allkai’s fight each other and people understand the truth and keep informed.
வாக்காளர்கள் ஐந்து வருஷம் தமிழ்நாட்டை கருணாநிதிக்கு அல்லது ஜெயலலிதாவுக்கு அடமானம் வைக்கிறார்கள்…இவங்க ரெண்டு பேரும் போடும் சண்டையும் கூச்சலும்தான் தமிழன் தமிழில் அதிகம் கேட்ட வார்த்தைகள்….. இளித்து கொண்டு இலவசங்கள் வாங்கினோம்….வெறிகொண்ட வெள்ளத்தில் எல்லாம் சாக்கடைக்கு போனது…வாங்கியவனும் சேர்ந்துதான்……ஓட்டு வாங்குபவன் ஒருமுறைதான் வணக்கம் போடுவான்…ஓட்டு போட்டவன் முதுகுதண்டு வளைந்து இவர்களுக்கு ஐந்து வருஷம் வணக்கம் போட வேண்டும்…….ஒரு முறை நாம் திருந்தினால் என்ன?
2006-இல் இருந்து 2010 வரை கருணாநிதி தமிழகத்தின் முதல்வர்……இந்த அறிக்கை அவரிடம் சமர்பிக்கப்பட்டது….அவருக்கு அதை படிக்க நேரமில்லை…..மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு நேரம் ஆகிவிட்டதால் அவர் புறப்பட்டு சென்று விட்டார்…2011-இல் தானே புயலின் கோரதண்டவத்தால் கடலூர் சின்னாபின்னமாக்கப்பட்டது …..அப்போது மக்களை சந்திக்க பயந்து மருத்துவமனைக்கு சென்று பதுங்கி கொண்டார்… ஒரு முதல்வர் மக்களை சந்திக்க பயப்படுகிறார்…..இன்னொரு முதல்வர் சந்திப்பதே இல்லை….இதுதான் தமிழகத்தின் தலைஎழுத்து…….கடைசியில் உணவின்றி,இடமின்றி,குடி நீரின்றி நடுவீதியில் நின்று உணவு பொட்டலம் வாங்க நிற்கும் நிலை….மக்கள்தான் திருந்த வேண்டும்
Breaking news!
சென்னை வெள்ள பாதிப்பு தொடர்பாக தாமே முன்வந்து வழக்குப்பதிவு செய்தது உயர்நீதிமன்றம்!
வெள்ள நிவாரணம் தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகளில் கடும் அதிருப்தி!
மத்திய, மாநில அரசுகள் வரும் 16 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலைமை நீதிபதி கவுல், புஷ்பா சத்தியநாரயணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
//ஜெயலலிதாவின் தோல்வியுற்ற அரசிற்கு மேலுமொரு கரும்புள்ளி//
கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா…
.
நீயே கேள்..
.
பிரிக்க முடியாதது என்னவோ..?
.
“ஸ்டிக்கர் மற்றும் நிவாரண பொருட்கள்”
பிரிய கூடாதது…?
.
“110 விதியும், சட்டமன்றமும்”
.
சேர்ந்தே இருப்பது ..?
.
“ஓப்ஸ் மற்றும் அவரது குனிந்த முதுகும்”
.
சேராதிருப்பது…?
.
“மக்களுடன்”
.
சேர கூடாதது ..?
.
“குன்ஹா & குமாரசாமி” .
.
சொல்ல கூடியது…?
.
“செய்வீர்களா, செய்வீர்களா ?”
.
சொல்ல கூடாதது ..?
.
“மதுவிலக்கு”
.
பார்க்க கூடாதது..?
.
“கோவன் பாடல்கள்”
.
பார்த்து ரசிப்பது..?
.
“ஜெயா டிவி”
.
ஐயோ சொக்கா.காகாகாகாகாகா .
திருவாரூர் பெற்ற தங்கம் , திருட்டு ரயில் சிங்கம் , கடலில் போட்டால் மிதக்கும் மரம் . டாக்டர் பட்டதை வாங்கியது அவரது திறம் . பெற்றோரை இறந்த தன மகனை இல்ல என்று சொல்லவைத்தது அவரது அறம் . ஈழத்தமிழனை கொன்றது ஒரு புறம் , இந்திய் தமிழனை அவர் எழுதி படுத்தி எடுப்பது நாம் வாங்கிய வரம் . வீரனத்தில் ஆரம்பித்தது அவரது கொள்ளை 2ஜீ கண்டும் முடியவில்லை அதன் எல்லை . கடவுள் இல்லை என்பார் வெளியே சாய்பாபாவை வரவளைத்து ஆசி வாங்குவர் வீட்டின் உள்ளே . கூட்டணிக்கு தான் ஆசை சேர்வார் இல்லாததால் நிராசை. அறிவலய்லத்தில் மக்கள் தங்க இடம் கொடுக்கவேண்டும் என்றேன் . ஒரு பதில் இல்லை . இந்த அறிவலயமே மக்களிடம் இருந்து அடித்த பணத்தில் கட்ட பட்டது தான் . இப்போ அறிவாலயத்தில் பொருள் நிரம்பி விட்டதாம் . கருப்பை வெள்ளையாக்கும் முயற்சி . என் தலைவன் ஆதாயம் இல்லாமல் வெள்ளத்தில் கால் வைக்க மாட்டான் . செம்மொழி தமிழனடா அவன். எங்கள் கட்டுமரத்துக்கு ஏதாவது குறை கண்டுபிடிக்க வேண்டும் என்ன செய்வது . எல்லாம் திருவாரூர் டிக்கெட் பரிசோதனை செய்தவர் 50 வருடம் முன் செய்த கவனக்குறைவு . அவரு மட்டும் அன்னைக்கு கழிவறையை திறந்து பார்த்திருந்தால் இன்று தமிழ்நாடு தப்பிச்சிருக்கும்.இந்த படத்த பிரிண்டு பண்றது,ஸ்டிக்கர் ஒட்டுறது எல்லாத்தையும் ஆரம்பிச்சதே நம்ப தலீவர் தானே..மறந்துட்டாரு போல…
ஊரறிந்த கட்டுமரத்துக்கு ஸ்டிக்கர் தேவையில்லை. ரேஷன் இலவச அரிசிப் பையில் கூட தனது இளிக்கும் போட்டோவைப் போட்டு மகிழும் கலாசாரம் திராவிடத் திருடர்களுக்கே உரியது…
இந்தியாவில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் 3 நிமிடத்தில் அதற்கு அறிக்கை விடும் கட்டுமரம்…..சகாயம் அவர்கள் தாக்கல் செய்த கிரனைட் கொள்ளை பற்றி இதுவரை வாயே திறக்கவில்லையே………..1 லட்சம் கோடி கொள்ளை போய் உள்ளது…இரண்டு ஆட்சிகளிலும். கருணாநிதி இதற்கு ஒரு அறிக்கை விட்டால் நல்லது.. பாதி கொள்ளையை அவர்கள் செய்து இருக்கும்போது எப்படி விடுவார்…….இணையதளத்தில் சண்டை போடும் நண்பர்கள் இதை உணர்ந்தால் நன்மை
ஆயிரகணக்கான கோடிகளில் உங்கள் அன்பு பேரன்கள் வாங்கிய விமானங்கள் பற்றி இதுவரை வாய் திறந்தது உண்டா? நீங்கள் தமிழன் பணத்தை அமுக்கவே இல்லைன்னு ஒரு வாதத்துக்கு சரின்னு வைப்போம். உங்கள் ஆருயிர் நண்பர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், உங்க மொத்த குடும்பத்தின் சொத்து விவரங்களை வெளியிட்டு பதில் கேட்டாரே. ஒரு வார்த்தை உண்டு இல்லைன்னு பதில் சொல்ல வக்கில்ல. நீதிபதி மார்கண்டேய கச்சு கேட்ட கேள்விக்கு பதில் இல்ல. நீங்க நூறு மாடி கட்டிடம் கட்டிக் கொள்ளலாம். உங்க குடும்பம் இருநூறு கட்டலாம்…..ஆனா ஒருத்தன் ஒரு கக்கூசு கட்டுனா எப்புடி சரியா ஸ்மெல் பண்றீங்க.?
அப்படி செய்தால் தமிழ்நாடு உருப்பட்டு விடும் அல்லவே? பாப்பாத்தி தமிழ்நாட்டை பீகாருக்கு கீழ் தள்ளிவிட்ட பிறகுதான் ஓய்வெடுப்பார்.
அவசர காலங்களில் கூட அமைச்சர்களாலும், அதிகாரிகளாலும் அணுகமுடியாத ஒரு முதலமைச்சர் !
ஆபத்துக் காலங்களில் கூட தன்னை முன்னிலைப் படுத்தும் ஒரு முதல் அமைச்சர் !
தன் திறமையில்லா ஆட்சியினால் நீதிமன்றங்களின் இடிந்துரைகளுக்கு ஆளாகும் ஒரு முதலமைச்சர் !
அமைச்சர்களையும், அதிகாரிகளையும் தம் காலில் விழவைக்கும் ஒரு அல்லிராணி முதலமைச்சர் !
வழக்கு ஒன்று வந்து விட்டால் மூலைக்குள் முடங்கிப் போகும் ஒரு முதலமைச்சர் !
தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்கும் ஒரு முதலமைச்சர் !
தேர்தல் பிரச்சார மேடையில் மட்டும் தன்னை அடையாளம் காட்டிய ஆசை நாயகனை நினைவு கூறும் ஒரு முதலமைச்சர் !
மக்கள் படும் துன்பங்களை மனதில் கொள்ளாமல் பதவி ஒன்றே குறிக்கோளாய் கொண்ட ஒரு முதலமைச்சர் !
சனநாயக மாண்பினை மதிக்காத சண்டிராணியான ஒரு முதலமைச்சர் !
உறவுகள் இல்லை என்று நீலிக் கண்ணீர் வடித்து ஊழலில் திளைக்கும் ஒரு முதலமைச்சர் !
அவரின் ஆட்சியில் நீதியாவது ? விசாரணையாவது ? தேர்தலில் பதில் தாருங்கள் மக்களே
ஏரிகளை மறித்து , வயல்வெளிகளில் பட்டா போட்டு வீடு கட்டியவர்களுக்கு நல்ல பாடம்… இந்த 1 லட்சம் வீடுகளில் 90 % முந்தய திமுக ஆட்சியில் அப்ப்ரூவல் கொடுக்கப்பட்ட இடங்கள் தான்.. அதானால் தான் என்னவோ 3 மாதத்துக்கு முன்னரே சுடாலின் , ரியல் எஸ்டேட் மந்தமாகி விட்டது என அவர்களுக்கு வக்காலத்து வாங்கினார்… இப்போது தெரிகிறதா, இந்த மழை வெள்ளத்துக்கு யார் காரணம் என்று?.. பொது விவாதத்துக்கு நான் தயார்… அடிச்சு சொல்லுகிறேன்.. திமுக காலத்தில் அப்ப்ரூவல் ஆனா நிலங்களில் கட்டப்பட்ட வீடுகளில் தான் இப்போது வெள்ளம் சூழ்ந்துள்ளது…ஆனால் திமுக இன்று நல்ல புள்ளை வேடம் போடுகிறது…அவர்கள் தப்பு பண்ணும்போது கூட அவ்வளவா கோவம் வரவில்லை…ஆனால் இப்போது நல்லவர்கள் போல நடிக்கிறார்கள் பாருங்கள் கோவம் பொத்துக்கொண்டு வருகிறது, ஒரு சராசரி மனிதனாய்….
I understand but this ADMK sombu version all did by DMK and always ADMK is inactive
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் கடிதம்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு,
வணக்கம். தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, நிரந்தர முதல்வர் போன்ற அடைமொழிகள் இல்லாததைக் கண்டு முகம் சுளித்திருப்பீர்கள். அப்படி அழைப்பதற்கான நேரமோ விருப்பமோ இல்லை. முதல்வர் என்ற முறையில் ‘மாண்புமிகு’ என்று அழைத்திருக்கலாம். ஆனால் மக்களின் மீது கரிசனம் கொள்ளும் மாண்பு தங்களுக்கு இல்லை என்று கருதுவதால் அப்படி அழைக்கவும் மனம்
உயரத்தில் பறந்து சண்டையிட்டுக் காப்பாற்ற முயலும் தாய்க்கோழி. ஆனால் நீங்களோ வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களைக் கண்கொண்டும் பார்க்கத் தயாராயில்லை.
நவம்பர் மாத இறுதியில் பெருமழை பெய்து கணிசமான பாதிப்புகள் ஏற்பட்டும், கூக்குரல்கள் எவையும் உங்கள் காதுகளை எட்டவில்லை. உங்கள் போயஸ் கார்டன் வீட்டைத் தாண்டியும் சென்னை இருக்கிறது. அங்கே உங்களுக்கு வாக்களித்த அப்பாவி மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் உணரவேயில்லை. சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் என பாதிப்புகளைப் போதுமான அளவுக்குப் பட்டியலிட்டும் படம் பிடித்தும் காட்டியபிறகு, ஒருவழியாக உங்கள் வீட்டின் கதவுகள் திறந்தன. நீங்கள் தமிழகத்துக்கே முதல்வர் என்று நினைத்தால், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. மட்டும்தான் என்பதுபோல் ஆர்.கே.நகருக்குச் சென்றீர்கள். காரைவிட்டு இறங்காமலே ‘பார்வையிட்டீர்கள்’. மைக் பிடித்து ‘வாக்காளப் பெருமக்களே’ என்று பேசி இழிவான அரசியலின் அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தீர்கள். ‘ஒருமாதம் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று கச்சிதமாக வசனம் பேசினீர்கள். அவ்வளவுதான்!
சரி, அப்போது நீங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில் 50 செ.மீ மழை பெய்யும் என்று பி.பி.சி. அறிவித்ததே, வானிலை ஆய்வு மையமும் கனமழை பெய்யும் என்று அறிவித்ததே… அந்த மழைக்கும் பெருகப்போகும் வெள்ளத்துக்கும் என்ன செய்தீர்கள்? ‘செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?’ என்று எங்களைப் பார்த்து கேட்ட நீங்கள், பேரிடர் தருணத்தில் கூட ஒன்றுமே செய்யவில்லையே! டிசம்பர் 1 தொடங்கிய பெருமழை, பெருகிய வெள்ளம், திறந்துவிடப்பட்ட ஏரி சென்னையின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரங்களை, உடைமைகளை, கனவுகளை, சேமிப்பை, கடன்தொகையை, கால்நடைகளை, நம்பிக்கையை, பல உயிர்களை, உறவுகளை அடித்துச் சென்றுவிட்டது. அப்போதாவது போயஸ் கார்டன் கதவு திறந்ததா? இல்லை!
மோடி, ஹெலிகாப்டரில் பார்வையிடப்போகிறார் என்ற செய்தி வந்ததும், அவருக்கு முன்னால் நீங்கள் ஹெலிகாப்டரில் ‘பார்வையிட்டீர்கள்’. அடுத்த மாநிலத்து முதல்வரோ, பிரதமரோ ஹெலிகாப்டரில் வந்து பார்வையிடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சென்னை முழுக்க வெள்ளப் பாதிப்பு என்பது எல்லோருக்கும் தெரியும்போது சிலநாட்கள் கழித்து ஹெலிகாப்டரில் பார்வையிடுவதற்குப் பெயர்தான் முதல்வரா? பாதிக்கப்பட்ட மக்களைப் போய்ச் சந்திப்பதில் இருந்து எது உங்களைத் தடுத்தது?
பாதிக்கப்பட்டவர்களைத்தான் பார்க்க வரவில்லை. பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசியிருக்கலாமே. சென்னையின் பாதிப்பு, அதற்கு அரசு எடுக்கப் போகும் முயற்சிகள் என விலாவாரியாக விளக்கியிருக்கலாமே! ‘விஸ்வரூபம்’ படப் பிரச்னையில் கமல்ஹாசனைக் குற்றம் சாட்ட மிக நீண்ட பிரஸ்மீட் நடத்தினீர்களே… லட்சோப லட்சம் மக்களைப் பாதிக்கும் இந்தப் பேரிடர் குறித்துப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அரசின் நிலை பற்றி விளக்கவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? உங்களைச் சுற்றியிருக்கும் ஆலோசகர்கள் உங்களுக்கு உணர்த்தவில்லையா?
பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை; பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. இதோ இத்தனை பாதிப்புகளுக்கு இடையில் ஈரநெஞ்சம் கொண்ட சாமான்ய மனிதர்களும், சிறுசிறு அமைப்புகளும், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட அரசு ஊழியர்களும் நிவாரணப் பணிகளைச் செய்து முடித்தபிறகு, முந்தா நாள் அறிக்கை விடுகிறீர்கள், ‘கனமழை பெய்ததால்தான் வெள்ளம் ஏற்பட்டது’ என்று. இதைக் கண்டுபிடிக்க இத்தனை நாட்களா? ஊரே கதறியபோது, சென்னையில் ஒன்றுமே நடக்காததுபோல் இருந்தது ஜெயலலிதாவும் ஜெயா டி.வி.யும் மட்டும்தான்.
சாதாரண மக்கள் கொண்டுசேர்த்த நிவாரணப் பொருட்களைப் பறித்து அதில் அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள் உங்கள் கட்சிக்காரர்கள். பல இடங்களில் நிவாரண உதவிகள் செய்யப்போனவர்களை மிரட்டினார்கள். ‘தவறு செய்யும் கட்சிக்காரர்களைத் தண்டிப்பவர் ஜெயலலிதா’ என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். ‘அக்ரி கிருஷ்ணமூர்த்திக்குத்தான் அமைச்சர் பதவி போகுமே தவிர, ‘குற்றவாளி’ என்று குன்ஹா தீர்ப்பளித்தாலும் ஜெயலலிதாதான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர்’ என்று புரிந்தவர்களுக்கு இந்தப் பிம்பம் ஒரு மாயை என்று தெரியும். இந்த மாயையை நம்புபவர்கள் சார்பாகவே கேட்கிறேன், அடுத்தவர் பொருட்களில் ‘அம்மா ஸ்டிக்கர்’ ஒட்டிய அடாவடிக்காரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ஜெயலலிதா? கொடுமையிலும் கொடுமையாக துக்க வீட்டிலும் ’அம்மா துதி’ பாடுகிறார்கள் உங்கள் கட்சிக்காரர்கள். சகிக்கவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கச் செல்லாதது, நிவாரணப் பொருட்களிலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவது மட்டுமா உங்கள் ஆட்சியின் குற்றங்கள்? இதோ, ‘அதிக மழை பெய்ததால் மட்டும் வெள்ளம் ஏற்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியைச் சீராகத் திறந்துவிடுவதில் ஏற்படும் தாமதமும் ஒரேடியாகத் திறந்துவிடப்பட்டதும், மக்களுக்கு முறையாக அறிவிக்காததும்கூட காரணங்கள்’ என்று செய்திகள் வெளியாகியிருக்கிறதே, இதற்கெல்லாம் காரணம் உங்கள் தலைமையிலான செயல்படாத அரசாங்கம்தானே ஜெயலலிதா அவர்களே..!?
‘அம்மாவின் ஆணைக்கிணங்க’ என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கட்சிக்காரர்கள் தொடங்கி கலெக்டர்கள் வரை சொல்ல வைத்திருக்கிறீர்களே, அந்த ‘அம்மாவின் ஆணை’ எப்போது வரும் என்று தெரியாமல் காத்துக்கிடந்ததுதானே இந்த வெள்ளத்துக்குக் காரணம். இந்தக் கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடிவரை தலைமைச் செயலாளரால் உங்களைச் சந்திக்க முடியவில்லையே. பாதிக்கப்பட்ட மக்களையும் பத்திரிகையாளர்களையும், ஏன் பிரதமரையும்கூட சந்திக்காத நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி நிவாரணப் பணிகளை முறையாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.
பதவியில் இல்லாதபோதும் ‘மக்களின் முதல்வர்’ என்று உங்களுக்கு நீங்களே பட்டம் சூட்டிக்கொண்டீர்கள். ஆனால், பதவியில் இருக்கும் இப்போதுகூட நீங்கள் மக்களின் முதல்வராக இல்லையே!
உங்கள் கட்சிக்காரர்கள் உங்களை நிரந்தரப் பொதுச்செயலாளர் என்றும், நிரந்தர முதல்வர் என்றும் அழைக்கிறார்கள். ஜனநாயகத்தின் வாசனை தப்பித் தவறிக்கூட கசிந்துவிடாத உங்கள் கட்சியில் நீங்கள் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருக்கலாம். நீங்கள் நிரந்தர முதல்வரா இல்லையா என்பதை ஆறுமாதங்களில் வரப்போகும் தேர்தல் சொல்லிவிடும். ஆனால் ஒன்றுமட்டும் உறுதி – இந்த இயற்கைப் பேரிடரும், அதில் நீங்கள் காட்டிய அலட்சியமும் ஆணவமும், உங்கள் கட்சிக்காரர்கள் காட்டிய அடிமை மோகமும், தமிழகத்துக்கு நிரந்தரக் களங்கம்.
தனிமனிதத் துதியை விரும்பும், ஊக்குவிக்கும் ஓர் அரசின்கீழ் நாங்கள் வாழ்வது தமிழர்களான எங்களுக்கு நிரந்தர அவமானம்!
இப்படிக்கு,
தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட பிரதேசமான போயஸ் கார்டனுக்கு அப்பால் வசிக்கும் ஒரு சென்னைவாசி!
சென்னை நகரம் முன் எப்போதும் இல்லாத வகையில், வெள்ளத்தில் மிதக்கிறது. இதற்கு திட்டமிடாத வளர்ச்சி தான் காரணம் என்றாலும், நீர்நிலைகளையும், விலைமதிப்பில்லா, சதுப்பு நிலங்களையும், கண்மூடித்தனமாக, ‘கான்கிரீட்’ காடுகளாக மாற்ற திமுக அரசு உடந்தையாக இருந்ததே காரணம் என்பது, மீண்டும் உறுதியாகியுள்ளது.
சோழிங்கநல்லுார் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் முளைத்திருக்கும், ஐ.டி., கட்டடங்களுக்காக, நிலப் பயன்பாடு மாற்றம் பெரும் அளவில் மாற்றப்பட்டுள்ளது. மேலும், பழைய மகாபலிபுரம் சாலையே, பக்கிங்ஹாம் கால்வாய்க்கு செல்லும் நீரோட்டத்தைத் தடை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், நீர்நிலைகள் கபளீகரம் செய்யப்பட்டதையும், இது தானாக உருவானதல்ல; மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. சென்னை, தாழ்வான, தட்டையான நிலப்பரப்பை உடையது. இங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், அதை ஈர்த்து தன்னுள் தாங்கி பிடித்துக் கொள்வதற்கும், இயல்பான நீரோட்டத்துக்கும், இயற்கையாக அமைந்த சதுப்பு நிலப்பகுதிகளும், கால்வாய்களும் அதிக அளவில் இருந்தன. கடந்த, 2006ம் ஆண்டில், சென்னையில், ஐ.டி., என்னும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, மாநில அரசு முன்னுரிமை தரத் துவங்கியது. தென் சென்னை, புறநகர்ப் பகுதிகள் அமைந்திருக்கும் காஞ்சி மாவட்டத்தில், தொழில் நிறுவனங்கள் பெருகவும் ஊக்கம் அளித்தது.
* ஐ.டி., நிறுவனங்கள் பெருகப் பெருக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, தரமணி, சோழிங்கநல்லுார் பகுதிகளில், இதர நிறுவனங்களும், குடியிருப்புகளும், சென்னை நகருக்குள் இல்லாத வகையில், வானுயர் கட்டடங்களும் கட்டப்பட்டன. அதற்கு ஏற்றார்போல், நில உபயோக மாற்றம் செய்யப்பட்டது. விளை நிலங்களாக, நீர்நிலைகளாக இருந்த பகுதிகள், கண்மூடித்தனமாக குடியிருப்பு பகுதிகளாக உருமாறின. அப்பகுதியில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் கல்வி நிறுவனங்களும் உருவாகின.
* இத்துடன், 174 சதுர கி.மீ., பரப்பளவில் இருந்த, சென்னை மாநகரம், காஞ்சி மாவட்டத்தின் பல பகுதிகளை உள்ளடக்கி, 426 சதுர கி.மீ., கொண்ட விரிவாக்கப்பட்ட மாநகராட்சியாக, 2009ல் மாறியது. அதன்பின் அப்பகுதி, முன்னிலும் வேகமாக விரிவடைந்தது. இது போன்ற காரணங்களால், வெள்ள நீரைக் கொண்டு செல்லும் கால்வாய்களில், நீரோட்டம் தடைபட்டது.
* வெள்ள நீரை, பூமிக்குள் பெருமளவில் தேக்கி வைக்கும், விலை மதிப்பில்லாத, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், கட்டுப்பாடின்றி ஆக்கிரமிப்புகள் நடந்தன. இதுதவிர ஒக்கியம் மடுவு உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட தீவு போன்ற சிறு, சிறு, நீர்நிலைகள், கான்கிரீட் கட்டடங்களாக மாறின.
* பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கட்டப்பட்டிருக்கும் மேம்பால ரயில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ள என்.ஐ.ஓ.டி., எனப்படும், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், சிறுசேரியில் அமைக்கப்பட்டுள்ள, ஐ.டி., சிறப்பு பொருளாதார மண்டலம் என, அரசே, ஆக்கிரமிப்பு செய்வோருக்கு வழிகாட்டி விட்டது.
* பெருங்குடியில் உள்ள மாநகராட்சி குப்பை கொட்டும் இடமும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தான் உள்ளது. 1960களில், 15 ஆயிரம் ஏக்கராக இருந்த பள்ளிக்கரணை சதுப்புநிலம், தற்போது 1,500 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கிப் போய்விட்டது.
* இது போல், கிழக்கு கடற்கரைச் சாலையில் பக்கிங்ஹாம் கால்வாய் பகுதி மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில், கால்வாய் போன்ற நீர்நிலைகளை, செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள், தங்களுக்குள் பங்கு போட்டு, கோடி கோடியாக குவித்தனர்.
நகர்ப்புறமயமாதலில் காட்டிய தீவிரத்தை, நீர்நிலைகளை காப்பதில் அரசு காட்டாததன் விளைவாக, மழைக்காலத்தில் நீரோட்டம் தடைபட்டு, புறநகர்ப் பகுதியையே, ஒரு மாபெரும் ஏரிக்குள் எடுத்து வைத்தது போல் தத்தளிக்கிறது.எல்லாவற்றையும் கண்டும், காணாமல் இருந்துவிட்டு, இப்போது குத்துதே, குடையுதே என புலம்புவதற்கு, யார் காரணம் என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
புறநகர்ப் பகுதிகளில் நடந்துள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை, ‘தி நியூஸ் மினிட்’
ஆங்கில செய்தி இணையதளத்தில், சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் என்பவர் வெளியிட்டுள்ளார். அதில், 2002 – 06ல் தென் சென்னை புறநகர்ப் பகுதிகள் எப்படி இருந்தன; அவை இப்போது எப்படி மாறியுள்ளன என்பதை ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.
இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் :உத்தண்டியில், பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கோவளம் சிற்றோடைக்கு இடைப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள மணற்பாங்கு, மழைநீரை உறிஞ்சும் அபரிமிதமான சக்தியைக் கொண்டது.
சிறுசேரி, ஐ.டி., பூங்கா:இரண்டு நீரோட்ட கால்வாய்கள், இணைந்து கடலுக்குச் செல்லும் வழியில், கோவளம் சிற்றோடையில் சேருமிடத்தில், ‘சிப்காட்’ உருவாக்கியுள்ள ஐ.டி., பூங்காக்கள், நீரில் மிதப்பதில் ஆச்சரியம் இல்லை.
செம்பரம்பாக்கம் ஏரி:இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், ‘ஹுண்டாய்’ போன்ற ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன.
ஒரகடம்:2006ல் விளைநிலங்களாகவும், ஏரிகளாகவும், நீர்ப்பிடிப்புப் பகுதியுமாக இருந்த ஒரகடம், இன்று, ‘டெய்ம்லர், பென்ஸ், ரெனோ -நிசான்’ போன்ற சர்வதேச ஆலைகளின் வரவால் தன் முகத்தை இழந்துவிட்டது.
பள்ளிக்கரணை:2004 மற்றும் 2008 இடையே, ஒரு பெரிய, ஐ.டி., நிறுவன கட்டடம் உருவான பகுதியை, வழக்கறிஞர் டி.கே.ராம்குமார் என்பவர், இந்த புகைப்படம் வாயிலாக சித்தரித்துள்ளார்.
வேளச்சேரி:மேம்பால ரயில் வருவதற்கு முன், அதன்பின், வேளச்சேரியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், அதற்கு இன்று ஏற்பட்டிருக்கும் கதி, ஆச்சரியத்தைத் தராது.
யப்பா யாரப்பா அது..எங்க கலைஞர்தான் இந்த தொழில்களை சென்னைக்கு கொண்டுவந்தார் என்று சொல்லி திரிந்தது? வாங்கோ வாங்கோ வந்து என்னன்னு சொல்லுங்க..அனைத்து நீர் நிலைகளிலும் இந்த ஐ டி நிறுவங்களுக்கும்..வீடுகளை கட்டிக்கொள்ளவும் கமிஷன் வாங்கிகொண்டு செய்த அடாத காரியங்களே என்பதை வெட்ட வெளிச்சமாக்கி கொடுத்தது இந்த செய்தி..முறையான விசாரணையை மேற்கொண்டு இதற்கு அனுமதி கொடுத்த கருணாவை விசாரித்து சிறையில் அடிப்பதுதான் நியாயமான தீர்வாகும்..இத்தனை மக்களின் பாதிப்புக்கும் நிர்வாகமே தெரியாத கருணா அண்ட் து முதல்வராக இருந்த ஸ்டாலினும் அவரது அடிபொடிகலுமே காரணம் என்பதை தெள்ளத்தெளிவாக கூறிவிட்டது இந்த அறிக்கை..விடாதீங்க அவர்களை..
இங்கே நிறைய திமுக மற்றும் அதிகமுகவின் அனுதாபிகள் அடிமைகள்,அல்லகைகள், தொண்டுகள், அடிபொடிகள் எல்லோரும் ஒருவரை ஒருவர் நீ செய்ததுதான் தப்பு, இல்லையில்லை நீ செய்ததுதான் தப்புன்னு குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே! உங்கள் அனைவரையும் ஒன்று கேட்கிறேன்…. உங்களுக்கெல்லாம் துளிகூட வெக்கமென்பதே கிடையாதா? என்ன மானங்கெட்ட பிறவி நீங்கலளெல்லாம்! ஒருத்தனையொருத்தன் கட்சி சார்பா நின்னு குற்றம் சொல்லிக்கொள்கிறீர்களே, அந்த கட்சிசார்பான பார்வையை விடுத்து ஒரு முறையாவது கட்சி சார்பில்லாத சாமான்ய குடிமகன்(டாஸ்மாக் குடிமகன் இல்லை) பார்வையில் நின்று உங்கள் நிர்வாகத்தை உற்று நோக்குங்கள் –அப்போதுதான் தெரியும். நீங்கள் செய்தவையெல்லாம் அயோக்யத்தனமான காரியங்கள் என்று- ஒருவரையொருவர் குறைசொல்லிக்கொள்ள உங்களுக்கெல்லாம் தகுதியே இல்லை. —-இந்தப்பக்கம் அதிமுககாரன் திமுக காரனை பார்த்து நீதான் பல திருமணம் செய்தாய், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொத்து சேர்த்தாய்- மணல் மாபியாவை தொடங்கினாய்- தேசிய அளவில் ஊழல் செய்தாய் ஆகவே நீதான் பெரிய திருடன்கிறான், அந்தபக்கம் நீதான் அளவுக்கு மீறி சொத்து சேர்த்து கோர்ட்டில் தண்டனை வாங்கி, பணத்தால் அடித்து நீதியை விலைக்கு வாங்கி அப்போதும் திருந்தாமல் இண்றளவும் சட்டத்திற்கு புறம்பாக நடந்து மிரட்டி பலஆயிரம் கோடிகளில் தியேட்டர்களையும் எஸ்டேட்களையும் வாங்கியிருக்கிறாய் ஆகவே நீதான் பெரிய திருடன் என்கிறான். ஆனா சாமான்ய மனிதனா உங்கள பார்த்தா நீங்க எல்லோருமே பக்கா திருட்டு பசங்கதான். ஆடு நனையறதப் பார்த்து ஓநாய் அழுவுற கணக்கா நீங்கல்ல்லாம் வரப்போற தேர்தலை நினைத்து மக்கள பார்த்து கண்ணீர் விடுறீங்க. நீங்கள்ளாம் சோறுதான் திங்கறீங்களா அல்லது சோத்த விட்டுட்டு லத்திய திங்கறீங்களா? மானங்கெட்ட அயோக்யப் பயலுங்களா, பொழப்பத்த புளுத்த பயலுங்களா
இந்த காரியங்களை ஏழைகள் செய்தாலோ அல்லது சாமான்யர்கள் நடுத்தர மக்கள் செய்தார்கள் என்றால் அதிலே ஓர் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது. எப்படியேனும் ஒரு குருவிக்கூடு சைசில் இருந்தாலும் கூட போதும் ஒன்டிகொள்ளலாம் என்பது சகஜம்தான்..ஆனால் பல லட்சம் கோடிகளை பதவிகளை வைத்து சம்பாதித்து உலக கோடீஸ்வரர்களான திமுக தலீவரின் ஆக்கிரமிப்பை ஏன் சொல்லுவதில்லை இந்த ஊடகங்கள்? கோபாலபுர வீட்டுக்கு பின்பக்கம் உள்ள பகுதியை மாநகராட்சி எவ்வளவோ கேட்டுக்கொண்டும் கூட ஆக்கிரமித்த இடத்தை நீதிக்கு புறம்பாக வைத்துகொண்டு தர மறுக்கின்றாரே. அதிலும் 70 வருட அரசியல்வாதி அனுபவம் வாய்ந்தவர்ர்ர்ர். ஐந்தோ ஆறுமுறையோ முதல்வராக இருந்தவர்ர்ர் என்று பெருமை பீத்தி கொள்ளுகின்ர கருணா அவர்களின் ஆக்கிரமிப்பை ஏன் இந்த நேரத்தில் கூட சொல்ல மறுக்கின்றார்கள். அதனாலேயே கோபாலபுரத்தில் மழைத்தண்ணீர் கூட செல்லாமல் தேங்கிவிட்டது. அங்கே வசிக்கும் பலர் இதனால் பாதிக்கப்பட்டார்கள். இதே போலத்தான் அறிவாலயம் முன்னர் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து, என்ன சொல்ல. இதனையெல்லாம் தட்டிகேட்க துணிவில்லாத ஊடகங்களே ஏன் ஏழைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்கி வருகின்றீர்கள்? ஏரிகள் இருந்த இடத்தை ஆக்கிரமித்த ஏழைகளை விரட்ட துநிவதை விட்டுவிட்டு, மாற்றுவழியை கண்டுபிடித்து ஆவன செய்யுங்கள். கோடி கோடியாய் வாரி சுருட்டிகொள்ளலாம் என்கிறபோது வேண்டாத வேலையாய் சேது சமுத்திர திட்டத்திற்கு மாற்றுவழி காண விளைகின்ற கூட்டம் ஏன் இன்றைய சூழலில் ஏழைகள் கட்டிய வீடுகளை நீக்கிவிட்டு தண்ணீர் செல்லுகின்ற வழியை காண துடிக்கின்றீர்கள்..? எல்லோருக்குமே ஒரே நீதிதான்..மாற்றுவழியை காணும் சமயமே இது..
எப்போதுமே திமுக தேறாது.. என்றைக்கு சர்க்காரியா கமிஷனில் விஞ்ஞான திருடர்கள் என்று பெயர் பெற்றார்களோ..அன்று முதலே இவர்களுக்கு மக்கள் மத்தியில் ஊழல்வாதிகள் என்று முத்திரை விழுந்துவிட்டது..போதாக்குறைக்கு அது உண்மைதான் என்பதுபோல..2 G கொள்ளையில் மகள் ஜெயிலுக்கு சென்றதும்..மனைவியும் அதற்கு உடன்தையானதும்..மக்கள் மத்தியில் இவர்களுக்கு சொல்லொனா அவமான பெயர்தான் மிஞ்சியது. செட்டப் செய்து நிறுத்திய கூட்டத்தின் புகழுரையை கேட்டு சிந்தை மயங்கி தான்தான் அடுத்த முதல்வர் என்கிற மாதிரி செயல்படுவது என்பது தத்தி என்கிற சொல்லே நிரந்தரமாகிவிடும். திணிக்கப்படும் வாரிசுகள் ஒருபோதும் எங்கேயும் எப்போதும் வெற்றிபெறவே முடியாது. மூன்றாம் இடமே நிரந்தரம் என்பதுதான் தமிழகத்தில் திமுகவின் நிலை. நிழலுக்கு நீர்பாய்ச்சுகின்றார் கருணா..
Well said anand,திமுக ஆட்சியில் ஏகத்துக்கு கவுன்சிலர் தொடங்கி..எம் எல் ஏக்கள் ஆரம்பித்து எம் பிகள் வரையில் கையூட்டு பெற்றுக்கொண்டு சகட்டுமேனிக்கு வீடுகளை கட்டிக்கொள்ள அனுமதித்த கொடுமையின் விளைவு இது. அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் முன்னரே கையூட்டு வாங்கிய திமுகவினர் அவர்களை கொண்டு முறையாக கட்டாத வீடுகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் ஸ்டே ஆர்டர் வாங்கிவிடுகின்றார்கள். அப்போதெல்லாம் இப்படி பாதித்தவர்களுக்கு எதுவும் தெரியாது.. வெள்ளம் சூழ்ந்துவிட்டது என்று இப்போது கூப்பாடு போடுதல் வீண்தான். மாநகராட்சியின் ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்ட வீடுகள் அனைத்துமே திமுக ஆட்சியில் அதாவது ஸ்டாலினுக்கு என்றே உருவாக்கப்பட்ட மேயர் பதவி வந்தபின்னர கட்டப்பட்ட வீடுகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?சென்னை பெருநகர வளர்ச்சி கழகத்தின் அனுமதி இன்றி கட்டும்போது தெரியாதா இவர்களுக்கு நாம் செய்வது தவறு என்று. கையூட்டு கொடுத்து திமுகவினரின் அனுமதியோடு கட்டிகொண்டார்கள்..இப்போது அனுபவிக்கின்றார்கள்..இப்போது கூப்பிடுங்களேன் அந்த திமுகவினரை..கையூட்டு கொடுத்ததற்கு நல்ல பலன்..நீர் சூழ நிற்கதியாக..கோபாலபுரம் சென்று போராடுங்கள்..அவர்கள் ஆட்சியில்தானே அனுமதி வாங்கினீர்கள்..
MGR ஒரு தீர்க்கதரிசி, 85 ஆண்டு மழைக்கு பின்னர் சென்னை தலைநகராக இருக்க லாயக்கு இல்லை ..அதனால் திருச்சியை தலைநகரமாக்க வேண்டும் என்று ஆய்வு செய்து அறிவித்தார்….உடனேயே தீய சக்திகள் தையத்தக்க தையதக்கா என குதித்தது….காரணம் தீய சக்திகள் தான் சென்னையில், MGR காலத்தில் கூட கொடி கட்டி பறந்தன…. காரணம், SECURED ஊழியர்களின் அபரித ஆதரவு மற்றும் ஆக்கிரமிப்பாளர்களின் ஆதரவு…. [ ஆனால் அதன் பின்னர் ஆக்கிரமிப்பாளர்கள் MGR ஐ ஆதரித்தார்கள், என்பது தனி கதை… ஆளும் கட்சியையே ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து ஆதரித்து வருவது இருபக்கமும் உள்ள சுயநலம் ] ..ஆனால் அன்று திருச்சி தலை நகரமாகியிருந்தால் சென்னை மற்றும் திருச்சி ஒரே மாதிரி ஆக டெவெலப் ஆகியிருக்கும்…மும்பை – புனே போல….ஆனால் இன்று சென்னை வீங்கி போயி உள்ளது.. வாழ முடியா நரகமாக மாறியுள்ளது.. சென்னை மக்கள் சுயநலம் மிக்கவர்களாக , திமிர் பிடித்தவர்களாக உள்ளனர்… இந்த மழை, புயலுக்கு அப்புறம் தான் சிலருக்கு அடுத்த வீட்டில் யார் உள்ளார்கள் என்று தெரிகிறது…அடுத்த வீட்டு காரன் கூட பேச வேண்டும் என்று புரிகிறது… காரணம் சென்னையின் கலாசாரம் கெட்டு குட்டிசுவராக உள்ளது… அனைத்து மொழி பேசுவோரும் இங்கு குடிவந்து சென்னையை , பிளாட் போட்டு விற்று விட்டார்கள்…இதனை தடுக்க தான் MGR தீர்க்கதரிசனமாக அன்றே திருச்சியை தலைநகராக மாற்ற துடித்தார்….ஆனால் அன்று படித்தவர்கள் கூட , தீய சக்தியுடன் சேர்ந்து இதனை எதிர்த்தார்கள்… MGR ஐ கேலி பேசினார்கள்… ஆனால் படித்த முட்டாள்களுக்கு இன்று புரிந்திருக்கும்…இப்போதும் கெட்டுபோகவில்லை… ஜெயலலிதா அரசு MGR இன் இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்….1. திருச்சியை நிர்வாக தலைநகராக மாற்ற வேண்டும்….2. சென்னையை வர்த்தக நகராக மாற்ற வேண்டும்… சென்னையில் ஒரு கட்டிடம் கூட கட்ட இனி புற நகரில் அனுமதி கொடுக்க கூடாது…3.புதிதான IT கம்பனிகளை , தொழில் பேட்டைகளை இனி திருச்சியில் தான் அமையக்க வேண்டும்… 4. திருச்சி விமான நிலையத்தை INTERNATIONAL AIRPORT ஆக மாற்ற வேண்டும்…5. சென்னைக்கும் திருச்சிக்கும் இடையில் புல்லட் ரயில் விடவேண்டும்…300 KM தொலைவு தான்… 50000 கோடியில் 5 வருடத்தில் இந்த திட்டத்தை கூட முடித்து விடலாம்… 6,திருச்சியில் அகன்ற காவேரி இருப்பதால், வெள்ள அபாயம் அறவே இல்லை… 7. திருச்சி மேடான இடம்… ஆற்று வடிகால் நகரம் அல்ல… தமிழகத்தின் மத்தியில் உள்ளது….ஆகையால் திருச்சி தான் நிர்வாகத்துக்கு உகந்த இடம்…. 8. இனி சென்னை புறநகரில் ஒரு சென்ட் , வயல்வெளியை பிளாட் போடுபவனை, குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ள வேண்டும்…. 9. சென்னையில் நிச்சயம் ஆக்கிரமிப்புகளை அகற்ற சாத்தியம் இல்லை…அதனால், இருக்கிற நீர் நிலைகளை மேம்படுத்தி மக்கள் தொகையை குறைப்பது ஒன்றே , சென்னையை காப்பாற்ற ஒரே சாத்திய வழி… இப்போது, ஆக்கிரமிப்பை அகற்று என்று கூறுபவர்கள் ஒரு மாதத்தில் காணாமல் போய்விடுவார்கள்… ஏனென்றால் அனைவரும் இந்த பிரச்சினையை மறந்தே விடுவார்கள்… 10. திருச்சி நிர்வாக தலைநகரமாகவும், சென்னை வர்த்தக தலைநகரமாகவும் , மாற்ற ஜெயலலிதா அவர்கள், MGR விருப்பபடி அதிரடி அறிவிப்பு வெளியிட்டு, சென்னை அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,….
17 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் வைக்கப்பட்டு பாதுகாக்க பட்டனர்…. இதுவே அரசின் வெற்றி….அதில் முக்கால் வாசி பேர் வீடு திரும்பி விட்டனர்….மீதம் உள்ளவர்கள் விரைவில் திரும்புவார்கள்…. வெறும் 350 பேர் தான் இந்த கடும் மழையில் இறந்துள்ளனர்…அதுவும் சென்னையில் நிச்சயம் 100 பேர் தான் இறந்திருக்க கூடும்….இதுபோல ஒரு மிக பெரிய பேரிடரில் ஆயிரக்கணக்கான பேர் இறந்திருக்க வாய்ப்பு உள்ளது…. தமிழக அரசு, தீயணைப்பு துறை, ராணுவம், இயற்கை பேரிடர் மீட்பு படை , மற்றும் பொதுமக்களின் சிறப்பான செயல்பாட்டால், சாவு எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது… ஒருவேளை பகல் வேளையில் , தண்ணீர் திறந்துவிட பட்டிருந்தால், STAMPEDE மூலம் பல ஆயிரம் பேர் இறந்திருக்க கூடும்… ஒருவேளை நள்ளிரவில் தண்ணீர் திறந்து விட பட்டிருந்தால், தூக்கத்தில் பல லட்சம் பேர் இறந்திருக்க கூடும்….ஆனால் அரசு அதி புத்திசாலிதனமாக மக்கள் தூங்குவதற்கு முன்னர் திறந்து விட்டதால், மக்களால் பாது காப்பான இடங்களில் செல்ல முடிந்தது…ஜாபர்கான் பேட்டை, சைதா பேட்டை மக்களிடம் இது பற்றி கேட்டபோது, அவர்கள் அனைவரும் தப்பித்த விதத்தை திகிலுடன் சொன்னார்கள்… என்றாலும் பொருள்கள் நாசமாகியத்தை பற்றிய கவலை தான் அதிகம்….மற்றபடி அரசு மிக சிறப்பாக முகாம்களில் அவர்களை தங்க வைத்ததாகவும் சொன்னார்கள்…ஆனால் மிக சீக்கிரமே , அரசு அவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டதாக குற்றம் சொன்னார்கள்…ஆனாலும் மக்கள் தப்பித்தே கடவுள் புண்ணியம் என்று தான் சொன்னார்கள்… ஒரே நாளில் 50 CM மழை என்பது உலகம் காணாதது… மும்பையில் கூட 3 நாள் சேர்ந்து தான் 100 CM மழை பெய்தது… ஆகையால், டிசம்பர் 1 ஆம் தேதி மழைக்கு, அந்த நாள் அல்லது அடுத்த நாள் தான் திறந்து விட முடியும்… முன்பே திறந்து விட்டிருந்தால், ஏரிகளை வெறுமையாக்கினர் என்று எதிர் கட்சிகள் பிரச்சாரம் செய்திருக்கும்… தமிழக அரசின் வெள்ளத்துக்கு பிந்தைய செயல்பாடுகளை , இன்று பலர் கிண்டல் , விமர்சனம் பண்ணினாலும் , கடைசியில் இந்த போரில் வெல்ல போவது ஜெயலலிதா தான்… காரணம், இந்த இயற்கை பேரிடர் க்கு முக்கிய காரணம், முந்தய திமுக அரசின் SATELLITE CITIES திட்டம் தான்… இன்றும் சைதாபேட்டை ஆக்கிரமிப்புகளில் திமுக கொடி தான் தான் பறக்கிறது…சைதாபேட்டை பாலத்தில் செல்பவர்கள் கவனியுங்கள்….. ஆக ஆக்கிரமிப்பு, மற்றும் துணை நகர திட்டம் தான் வெள்ளம் வடிய அதிக நேரம் எடுத்ததால், வெள்ளம் ஊரில் புகுந்தது….அது மட்டும் அல்ல, வெள்ளம் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டம் ஆகிய மாவட்டத்தில் தான்…. இந்த மாவட்டங்களில் 30 தொகுதிகள் தான் உள்ளது…. பிற தமிழக மக்கள் சென்னை மக்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் என்று தான் சொல்கிறார்கள்..காரணம் சென்னை மக்களிடம் கலாசாரம் இல்லை…ஒழுக்கம் இல்லை, ..மற்றவர்களை மதிக்கும் குணம் இல்லை என்ற பிற தமிழ் மக்கள் நினைக்கிறார்கள்… அதனால் இந்த போரில் ஜெயலலிதாவே வெல்வார்… நிவாரண பணிகள் மிக சிறப்பாக உள்ளது… எனக்கு தெரிந்து தமிழகம் முழுதும்…அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் 5000 கொடுக்க வேண்டும்,…. பாதிக்கபடாத அணைத்து மாநில மக்களுக்கும் கொடுத்து ஆகியே தீர வேண்டும்…அது மட்டும் அல்ல….சென்னை / காஞ்சி/ திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு மாதம் தோறும் 2000 வீதம் தொடர்ச்சியாக 5 மாதங்களுக்கு வழங்க வேண்டும்…மற்ற மாவட்ட விவசாய மக்களுக்கு மாதம் 1000 வீதம் 5 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்…. மக்களுக்கு நிச்சயம் இது உதவும்….ஆக 5 மாதங்களுக்கு 1 கோடி குடும்ப அட்டை தாரகளுக்கு இப்படி தொகை கொடுக்க்பட்டால் வெறும் 15000 கோடி தான் செலவாகும்…ஆனால் இது MUCH NEEDED நிவாரணம்… மக்களுக்கும் பேருதவியாக இருக்கும்…அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும்… ஒரேடியாக நிவாரணம் கொடுக்கமால், 5 மாதங்களுக்கு பிரித்து கொடுத்தால் , மக்களின் தேவையில் 25 % ஆவது அரசால் பூர்த்தி அடையும்போது, மக்கள் மகிழ்ச்சி அடைய கூடும்.
திமுக அபிமானிகளிடம் , 1. தமிழகத்தில், துணை நகரம் என்று திட்டம் போட்டு, வயல்வெளிகளை ஏரிகளின் வடிகால்களை , வீட்டு மனைகளாக , ரியல் எஸ்டேட் பணக்காரர்களின் ஆசைக்கு தீனி போடும் வகையில் உத்தரவு போட்டது யார்?… 2. சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தற்போதைய ஆட்சியில் படுத்துவிட்டது…மக்கள் புறநகரில் வீடு வாங்க அல்லது விற்க முடியாமல் தவிக்கிறார்கள்…நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வீடுகள் விற்பனை , ரியல் எஸ்டேட் பூம் ஆகும் என்று பேட்டி கொடுத்தது யார்?..3. அடையாறு, மற்றும் கூவம் யாருடைய ஆட்சியில் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது?…4. கூவத்தில் , மதுரவாயல் – எண்ணூர் பறக்கும் சாலையை அமைக்க முற்பட்டது யார்?.. தற்போதைய ஆளும் கட்சி, கூவத்தின் நீர்போக்கை இந்த சாலை பாதிக்கும், என்று கூறிய போது, அதனை கிண்டல் பண்ணியது யார்?… 5. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன்…. சிங்கப்பூராக மாற்றுவேன்… என்று கொக்கரித்தவர் யார்?…. 6. சென்னை மேயராக இருந்தவர் சென்னைக்கு நீண்ட கால திட்டம் எதுவும் இன்றி இப்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளர் ஆக போட்டியிடுவது நியாயமா? .. 7. கூவத்தை , தேம்ஸ் ஆக மாற்றுவேன், என்று கொக்கரித்துவிட்டு, துணைவியுடன், இங்கிலாந்து சென்று [அரசு பணத்தில்], தேம்ஸ் நதியை பார்த்து வந்தவர் யார்?…8. நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து, துணை நகரம் , SATELLITE CITY , என்ற போர்வையில், அரசானை இட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு நீர் வழி பாதைகளை தாரை வார்த்தது யார்? யார்?… 9. குப்பை காடாக இருக்கும் சென்னையை சீரமைக்காமல், 20000 கோடியில், தேவை இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தையும், 2000 கோடி செலவில் சட்டமன்ற கட்டடமும் கட்ட எத்தனித்தது தான் நிர்வாக திறமையா?… அடிப்படை வசதியே இல்லாத சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒரு கேடா?…. 10. இலவச TV என்னும் தரித்திரத்தை, தொடங்கி வைத்து, தமிழகத்தில் இலவச மாயையை ஆரம்பித்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பிள்ளையார் சுழி போட்டது யார்?…..[ தமிழ்செல்வன் அல்லது பிற திமுக அபிமானிகளுக்கு தில் இருந்தால் மேல் கண்ட கேள்விகளுக்கு பதில் கூறி விட்டு, இயற்கை பேரழிவின் உச்சத்தால், இன்று நடக்கும் அவலங்களின் கோலங்கள் பற்றி கேள்வி எழுப்பட்டும்……பதில் கூற தயார் ]
சென்னையில் பெய்த பெருமழையை வெள்ளமாக மாற்றியது தமிழக அரசின் மெத்தனப்போக்குதான் என ஃப்ரண்ட்லைன், டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் வயர்ட் போன்ற இதழ்கள் குற்றம் சாட்டியுள்ளன. அக்கட்டுரைகள் தரும் ஆதாரங்களை எளிதில் புரியும் வண்ணம் விளக்குவதே இப்பதிவு.
நவம்பர் 8, 9, 12, 13, 15, 23 தேதிகள்:
சென்னையில் கனமழை பெய்கிறது.
நவம்பர் இறுதி வாரம் (தோராயமாக 26ஆம் தேதி):
1) சர்வதேச வானிலை மையங்கள் சென்னையில் டிசம்பர் 1 மற்றும் 2ஆம் தேதி 50செமீ வரையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கின்றன.
2) எச்சரிக்கையை ஏற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளிடம், அதாவது பொதுப்பணித்துறை செயலாளரிடம் (PWD Secretary) செம்பரப்பாக்கம் ஏரியில் 83அடி இருக்கும் நீரின் அளவை 75அடியாக குறைக்க சொல்கிறார்கள். குறைத்தால் மட்டுமே வர இருக்கும் அதீத கனமழையை ஏரி தாங்கும் என்றும் சொல்கிறார்கள்.
நவம்பர் 27ஆம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.
நவம்பர் 28ஆம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.
நவம்பர் 29ஆம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.
நவம்பர் 30ஆம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.
அதாவது சுருங்கச் சொன்னால் மழை மிகவும் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்த (Dry days) நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் ஏரியில் இருக்கும் நீரை வெளியேற்றி நீரின் அளவை குறைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பொதுப்பணித்துறை செயலாளர் தலைமைச் செயலாளரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். தலைமைச் செயலாளரோ முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். (இந்த இடத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பி.எஸ்சின் உத்தரவுக்காக தலைமைச் செயலாளர் காத்திருக்கிறார் என்றுதான் நாம் எழுதியிருக்க வேண்டும். ஆனால் இது அம்மாவின் ஆட்சி. அம்மாவின் ஆட்சியில் “அணையை திறக்க நான் உத்தரவிட்டுள்ளேன்… அணையை மூட நான் ஆணை பிறப்பித்துள்ளேன்,” என எல்லா வேலைகளையும் அம்மாவே இழுத்துப்போட்டுச் செய்வார் என்பதால் இதில் மட்டும் நாம் ஓ.பி.எஸ்சை இழுத்துவிடுவது அறம் அல்ல. அதனால் தலைமைச் செயலாளர் அம்மாவின் ஆணைக்காகத்தான் காத்திருந்திருக்கிறார் என்பது குழந்தைக்கும் தெளிவு)
டிசம்பர் 1:
· சர்வதேச வானிலை மையங்கள் சொன்னதைப் போலவே கிட்டத்தட்ட 50செமீ கனமழை பெய்கிறது. (தாம்பரத்தில் அவர்கள் சொன்னதை போலவே மிகச்சரியாக 49செமீ பெய்தது)
· செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு அரசு தளத்தின்படி 3141மில்லியன் கன அடியாக இருக்கிறது.
· டிசம்பர் 1ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை கலெக்டர் சுந்தரவல்லியிடம் இருந்து பத்திரிக்கையாளர்களுக்கு, செம்பரபாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் நொடிக்கு 5000 கனஅடி நீரை வெளியேற்ற இருப்பதாகவும், இந்த அளவு நொடிக்கு 7500 கனஅடி வரை உயர்த்தப்படலாம் என்றும் மொட்டையாக ஒரு செய்தி கிடைக்கிறது.
· மாலை 5 மணிக்கு முதலில் ஏரியை திறக்கிறார்கள். பெயரை வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் நொடிக்கு 10000 கன அடி நீரை வெளியேற்றியதாகவும், இவ்வளவு பெரிய வெள்ளத்தை திறந்துவிட முடிவுசெய்த அரசு கண்டிப்பாக முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருப்பார்கள் என தான் நம்பியதாகவும் wired இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
· ஆனால் தமிழக அரசின் இணையதளத்தில் செம்பரபாக்கம் ஏரியில் இருந்து நொடிக்கு வெறும் 900கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டதாக குறிப்பிட்டிக்கிறார்கள்.
ஆகமொத்தத்தில்,
செய்தியாளர்களுக்கு கலக்டர் சொன்னபடி நொடிக்கு 5000-7000 கன அடியை திறந்துவிட்டார்களா? அல்லது பொதுப்பணித்துறை ஊழியர் கூறியதைப் போல நொடிக்கு 10000கன அடி நீர் திறந்துவிட்டார்களா? அல்லது அரசு தளம் சொல்வதைப் போல நொடிக்கு வெறும் 900கன அடி நீர் தான் திறந்துவிட்டார்களா? எது உண்மை? உண்மையோ இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது!
டிசம்பர் 2ஆம் தேதி:
· அரசு தளத்தின்படி டிசம்பர் 1ஆம் தேதி ஏரியில் நீரின் அளவு 83.48அடி (3141 மில்லியன் கன அடி). டிசம்பர் 2ம் தேதி ஏரியில் நீரின் அளவு 74.08அடி (1134மில்லியன் கன அடி). ஆக 2007 மில்லியன் கன அடி நீர் முந்தைய இரவு 10 மணிக்கு வெளியேற்றப்பட்டிருக்கிறது. அதாவது அறிவித்த நொடிக்கு 7500கன அடிக்கு மாறாக கிட்டத்தட்ட நொடிக்கு 29000 கன அடி நீரை டிசம்பர் 1ஆம் தேதி எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென வெளியேற்றியிருக்கிறார்கள். அதிகாலை 2மணிக்கு சென்னையை வெள்ளம் வந்தடைகிறது. இரவு 10மணிக்கு அபாயகரமான அளவில் திறந்துவிடப்பட்ட வெள்ளம் தூங்கிக்கொண்டிருந்த மக்களையும், வீடுகளையும் மூழ்கடிக்கிறது.
வெள்ளத்திற்கான காரணங்கள்:
1) 26ஆம் தேதியே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கச் சொல்லியும், 27,28,29,20 ஆகிய மழையில்லா தேதிகளில் எழவு காத்த கிளி போல ‘மேலிட’ உத்தரவுக்காக காத்திருந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.
2) டிசம்பர் 1ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு வெறும் 7500கன அடி மட்டுமே திறக்கப்போகிறோம் என செய்தி கொடுத்துவிட்டு, இரவு 10 மணிக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல், மக்கள் வெளியேற நேரமும் கொடுக்காமல் திடீரென நொடிக்கு 29000கன அடி நீரை திறந்துவிட்டது.
3) சொல்லாமல் கொள்ளாமல் திறந்துவிட்டதை கொஞ்சம் சீக்கிரமாக 6மணிக்கு திறந்துவிட்டிருந்தால் இரவு 10மணிக்கு வெள்ளம் சூழ்ந்திருக்கும். ஆனால் இரவு 10மணிக்கு திறந்ததால் அதிகாலை 2மணிக்கு வெள்ளம் சூழ்ந்து மக்கள் தப்பிக்க வழியின்றி மாட்டிக்கொண்டார்கள். இவ்வளவு அபாகரமான அளவு நீரை நடு இரவில் திறப்பது என்பது மிகப்பெரிய தவறு.
4) இந்த 29000 கன அடி திறப்பைப் பற்றி பத்திரிக்கைகளுக்கு எந்தத் தகவலும் தரப்படவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டபின் சில அதிகாரிகள் வாய்மொழியாக மட்டுமே இதை டிசம்பர் 2ஆம் தேதி எல்லாம் முடிந்தபின் தெரிவித்திருக்கிறார்கள்.
5) பொதுவாகவே ஏரியில் இருக்கும் நீரை, வெளியேற்றுகிறேன் பேர்வழி என வாளியைக் கவிழ்ப்பதைப் போல கழிப்பது மரபல்ல. அபாயகரமான அளவை எட்டிவிட்டால் வாளியில் துளையிட்டு நீரை வெளியேற்றுவதைப் போல கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுவதுதான் முறை. இதை நவம்பர் 27,28,29,30ஆம் தேதிகளில் செய்திருந்தால் வெள்ளத்தை கண்டிப்பாக தடுத்திருக்க முடியும் என்றும் இந்த வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல, முழுக்க முழுக்க அரசுதான் இதற்கு காரணம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
6) இதெல்லாம் போக சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக அரசு அவசர அவசரமாக சாலைகள் அமைத்தது நினைவிருக்கலாம். அந்த குப்பைகள், கழிவுகள் எல்லாம் அடையாறு கடலில் கலக்கும் வழியை அடைத்துக்கொண்டதும் வெள்ளத்திற்கு முக்கிய காரணம் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.
7) சென்னையை சுற்றியுள்ள நான்கு ஏரிகளையும், அடையாறு, கூவம் நதிப்பாதைகளையும், ஓட்டெரி, பங்கிங்காம் கால்வாய்களையும் ஜூன் ஜூலை மாதத்தில் தூர்வாருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதைச் செய்யாமலோ/சரியாகச் செய்யாமலோ விட்டிருப்பது இன்னொரு முக்கிய காரணம். ஆனால் முறையாக தூர்வாரியதைப் போல கணக்கு மட்டும் காட்டியிருக்கிறார்கள்.
ஆக, மேலுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும்போது சென்னையையும், சென்னை மக்களையும் மீளாத்துயரில் தள்ளியிருக்கும் வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல. கனமழையை அரசின் மெத்தனமும், அதிகாரிகளின் பயமும் ஊரை அழித்த வெள்ளமாக மாற்றியிருக்கிறது. இப்போது நாம் அனைவரும் ‘ஸ்டிக்கர்’ பணிகள் பற்றி பேசுவதிலும், அதிமுகவை கிண்டலடிக்கும் மீம்கள் செய்வதிலும். எல்லா கட்சிகளும் இப்படித்தான் என உண்மைகளை அறியாமல் பேசுவதும் என பிசியாக இருக்கிறோம். இன்னும் சிலரோ ஏரியில் வீடு கட்டினால் வெள்ளம் வரத்தான் செய்யும், பல்லாண்டு காலம் செய்த தவறு என்றெல்லாம் பேசி அரசின் நிர்வாகமின்மைக்கும், மெத்தனபோக்குக்கும் தங்களை அறியாமலேயே துணை போகின்றார்கள். அரசும் அதையேதான் விரும்புகிறது.
இந்திய ஊடகங்கள் நம்மை கவனிப்பதில்லை என கூக்குரலிட்டதன் பலனாக சென்னை வெள்ளத்தின் காரணங்களை அலசி ஆராய்ந்து அவர்கள் உண்மைகளை வெளியிட்டிருக்கின்றார்கள். இதை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்?
எந்த அளவுக்கு நிவாரணப்பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபாட்டுடன் வேலை செய்தார்களோ அதே அளவில் உண்மையை வெளிக்கொணர்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். ஆட்சியாளர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் முறையான சுதந்திரமான விசாரணைக் கமிஷன் வைத்து உண்மையை உலகுக்கு கூறுவது மட்டும்தான் இறந்தவர்களுக்கும், இழந்தவர்களுக்கும் நாம் செய்யும் உண்மையான நிவாரணம் ஆகும்.
-டான் அசோக்
நன்றி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
வயர்ட்
ஃப்ரண்ட்லைன்
அனைவருக்கும் தெரியும்… ஆனாலும் எதற்கெடுத்தாலும் அரசை குறை கூறியே வாழ்கை நடத்தவேண்டும் என்று பலர் உள்ளனர்.. .அதிலும் இன்னும் 6 மாதங்களில் தேர்தல் வேறு வருகிறதல்லவா… அரசை வசைபாடுவது பன்மடங்கு அதிகரிக்கும்… பிணம் தின்னி கழுகுகளிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
என்ன சொல்ல வரீங்க… கடந்த 114 வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு கனமழை பெய்யும் நேரம், மக்களின் பேரிடரை அரசு முடிந்தவரை குறைத்து அவர்களை மீட்டுக்கொண்டு வரும் நேரம், பெர்முடாவில் அமர்ந்து இப்படி ஒரு சம்பந்தமில்லாத கருத்தை கூற எப்படி உங்களுக்கு மனம் வருகிறது.. ஏன்.. 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானேன் என்று மார்தட்டுகிறவரை வீட்டை விட்டு ஒருநாள் வெளியே வர சொல்லுங்கள்.. தைரியம் இருந்தால்… மூலிகைக் குளியல் போட சென்றவரை உடனே வந்து களப்பணியாற்ற சொல்லுங்கள்… தைரியம் இருந்தால்.
சிலரை பணத்தை கொடுத்து தொலைக்காட்சி முன்னர் பேசவைக்கும் காரியத்தை சில ஊடகங்கள் செய்து வருகின்றன. அப்போதைக்கு அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு அவர்களால் சொல்லித்தரப்படுகின்ர அரசு எதிர்ப்பு வாசகத்தை சொல்லி இவர்கள் தங்களுக்கு கிடைக்க இருக்கும் நிவாரண உதவிகளை இழக்க போகின்றார்கள். அப்பாவி மக்களை இதற்குமா இந்த திமுக ஊடகங்கள் இந்த நேரத்தில் பயன்படுத்திகொள்லனும்? ஆனானப்பட்ட சுனாமி பாதிப்புகளையே உலகிலேயே தமிழகத்தில்தான் மிக விரைவான நிவாரணங்களை செய்து உலக மக்களிடம் நல்ல பெயர் எடுத்தது..அப்படிப்பட்ட அம்மா அவர்களின் நிர்வாகத்தில் இந்த மக்கள் யாரும் பயம்கொள்ள தேவையில்லை. ஒரே ஓர் உதாரணம் இங்கே சொல்ல விரும்புகின்றேன்..சித்தார்த்த் என்கிற நடிகர் இந்த முறை மக்களின் துயர்தீர்ப்பு நடவடிக்கைகளில் பங்குபெற்று ஓர் ஆங்கில தொலைகாட்சிக்கு கொடுத்த பேட்டியிலேயே சொல்லி இருக்கின்றார்..ஐந்தே நாளில் இன்றைய தமிழக அரசை தவிர இந்த அளவுக்கு மிக தீவிரமாக நிவாரணங்களை செய்ய முடியாது..அவ்வளவு அற்புதம் என்று பாராட்டி இருக்கின்றார். இதுதான் உண்மையான செய்தி..ஆனால் திமுக ஊடகங்கள் செய்கின்ற பொய் பரப்புரை..நல்ல சாவே இவர்களுக்கு வாராது என்பதே மக்களின் நிந்தனை..இதனை வழக்கம் போல திமுகவினர் கொச்சை படுத்தி வருகின்றதையும் அறிவோம். நாட்டு மக்கள் பாராட்டுகின்றார்கள்..தமிழக அரசின் செயல்களை..எதிர்கட்சிகளுக்கு பீதி..நிவாரண உதவிகளை செய்து மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார்களோ என்று..மக்களுக்காக மக்கள் முதல்வர் இருக்கின்றவரையில் ஓர் துன்பமில்லை..என்கிற நம்பிக்கையில் மக்கள்..உறுதியாக..
SATELLITE CITIES என்று சொல்லி, நீர்வழி பாதைகளை அடைத்து, ரியல் எஸ்டேட் காரர்களுக்கு அல்லது கட்சி காரர்களுக்கு சம்பாதிக்க பாலம் போட்டு கொடுத்து, செம்பரம்பாக்கம் மற்றும் பல ஏரிகளின் வடிகால் பகுதிகளை அடைப்பதை பற்றி கவலை படமால் கட்டடங்கள் கட்ட அனுமதி அளித்தது யார் ? …பதில்….ஆப்ஷன் A . திரு . முக …ஆப்ஷன் B . திரு .கருணா ….ஆப்ஷன் C . திரு சுடாலின் அவர்கள் …ஆப்ஷன் D . திரு .தளபதி அவர்கள்…. பதில் கூறினால், SATELLITE CITY யில் ஒரு வீடும், கூடவே ஒரு படகும், துடுப்பும் இலவசம்
நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்….இங்கு ஜெயலலிதாவை குற்றம் சொல்லும் ஒவ்வொருவரும் , இயற்கை யை கொச்சை படுத்துவதாகவே அர்த்தம்… இயற்கை எப்போதுமே , MGR அல்லது ஜெ க்கு எதிராகவே வேலை செய்கிறது…85, 95, 2005 [ சுனாமி ], 2015 ஆகிய காலங்களில் MGR ஜெ ஆட்சி தான்.. யாரும் மறுக்கவில்லை…. ஆனால் தீய சக்திகள் [ இயற்கை பேரழிவு ] நல்ல சக்தியை [ MGR,ஜெ ] தான் எதிர்த்து போராடும் என்பது விதி…. இயற்கை பேரழிவுகள், தீய சக்தியுடன் இணைந்து செயலாற்றும்…. புரியும் என்று நினைக்கிறேன்…இப்படி எழுதுவது அபத்தம் தான்…ஆனால் ஜெ காலத்தில் தான் இயற்கை பேரழிவு செய்யும் என்று பரப்பப்படும் விஷ கருத்துக்கு இப்படி தான் பதிலடி கொடுக்க வேண்டியுள்ளது…. முந்தய நிதிஷ் ஆட்சியில் இப்படி தான் பிகாரில் வெள்ளம் வந்து , பிகார் நிலை குலைந்தது…. பத்திரிகைகள் , பிகாரில் ஆட்சி என்ற ஓன்று உள்ளதா என கூக்குரலிட்டன….ஆனால் அடுத்து வந்த தேர்தலிலும் நிதிஷ் கட்சியே 2 வது முறையாக வென்றது…இப்போது 3 வது முறையாகவும் வென்றுள்ளார்… ஆக நிவாரண பணிகளை ஜெ அரசு கண்ணும் கருத்துமாக செய்ய வேண்டும்… 1 மாதத்தில் சென்னையை சீரமைக்க வேண்டும்…. சென்னையின் ஆக்கிரமிப்புகளை அவ்வளவு சுலபமாக மாற்ற இயலாது….ஆகையால் சென்னையின் மக்கள் தொகையை குறைக்கும் வண்ணம் திருச்சியை தலைநகராக்க வேண்டும் என்ற பலரின் ஆசையை ஜெ அரசு நிறைவேற்ற வேண்டும்…. [ இது பற்றி விலா வாரியாக ஒரு கருத்தை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன் ] … ஜெ அரசு இந்த போராட்டத்தில் வெற்றி பெரும் என்றே கருதுகிறேன்… காரணங்கள் 1. ஜெ அரசு, மத்திய அரசுடன் இணைந்து போர்கால நடவடிக்கை மூலம், மக்களை மீட்டது….[ ராணுவத்துக்கு, தீயணைப்பு துறைக்கு, தேசிய பேரிடர் மீட்பு குழுவுக்கு , தன்னார்வ மக்களுக்கு நன்றி ] உயிர் பலி மிக சொற்பம்… 2. நிவாரண முகாம்களில் உணவு மருத்துவ வசதி மிக சிறப்பாக உள்ளது… 3. சாலைகளில் கிடக்கும் குப்பைகளை அள்ளுவது மிக பெரிய சவால்…அதனை செவ்வனே செய்ய வேண்டும்… 4. சாலைகளை ஒரு மாதத்தில் சீரமைக்க வேண்டும்… 5. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ஜெ அரசு கில்லாடி… எனக்கு தெரிந்து, குறைந்தது சென்னை , கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மக்களின் ரேஷன் அட்டை தாரகளுக்கு குறைந்தது 5000 முதல், அதிக பட்சமாக 10000 வரை வழங்க வாய்ப்புள்ளது….[ புதுவையில் ரங்கசாமி அரசு 4000 வழங்குகிறது ] …அதே சமயம் தமிழகத்தில் [ சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் தவிர பிற மாவட்டங்கள் ] பாதிக்கபடாத குடும்பங்களுக்கு தலா 1000 முதல் 2000 வரை வழங்க வாய்ப்புள்ளது… இந்த மழையால் பாதிக்கப்பட்டவர்கள் 15 % தமிழக மக்கள்….ஆனால் பாதிக்கபடாத 85 % மக்களும் எதிர்க்கட்சி ஊடகங்களின் பொய் பிரசாரத்தால், பீதியில், ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளனர் என்பது உண்மை…ஆனால் இதனை போக்க ஒரே வழி அனைவருக்கும் நிவாரண உதவி…. இதனை ஜெ அரசு மிக சிறப்பாக செய்து, எதிரிகளின் சதியை வெல்ல வேண்டும்… கிட்ட தட்ட முள்ளை முள்ளால் எடுப்பது போல தான் … வேறு வழியில்லை… வெற்றி மிக அருகாமையில்… வாரிசு அரசியலை வேரறுக்க தமிழக மக்களுக்கு இதை விட வேறு மாற்று வழி இல்லை… திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றால், நிறைய கண்டிஷன்கள் எல்லாம் கிடையாது…ஒரே ஒரு கண்டிஷன் தான்… கருணாநிதி குடும்பம் , திமுக தலைமை பதவியை , வைகோ விற்கு விட்டு தர வேண்டும்…நியாப்படி வைகோ தான் திமுக தலைவராக வேண்டும்… ஏனென்றால் திமுக கருணா குடும்ப சொத்தல்ல… அண்ணா ஆரம்பித்த கழகம்… அதனால் வைகோ தலைவரானால் , நாம் திமுகவை ஆதரிக்கலாம்… இல்லைஎன்றால் ஜெ ஆட்சியை மீண்டும் தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலித்தனம்
திமுக ஆதரவு ஊடகங்கள் கேவலமான அரசியல் நடத்துகின்றன…. இயற்கை பேரிடர் நேரத்தில் அரசுக்கு ஆதரவளிக்காமல், தனி ஆவர்த்தனம் பாடுகிறது….சில நடுநிலை ஊடகங்கள் கூட இப்போது திமுக விற்கு ஆதரவா செய்திகள் போடுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது…ஏதோ ஜெயலலிதாவே, மழை வரவழைத்து, மக்களை பழி வாங்குவது போல செய்திகள் வெளியிடுகிறது… தமிழக அரசு, மத்திய அரசு, ராணுவம், தேசிய பேரிடர் படை ஆகியவை செய்யும் உன்னத பணிகளை கொச்சை படுத்துகிறது… 100 பேருக்கு பிஸ்கட் பாகெட் வழங்குவது அல்ல நிவாரணம்… முதலில் மக்களை மீட்க வேண்டும்…அப்புறம், அவர்களுக்கு புகலிடம் அளிக்க வேண்டும்…அப்புறம், நிலைமையை சீரமைக்க வேண்டும்… இதனை ஜெயலலிதா அரசு செவ்வனே செய்கிறது….மத்திய அரசு பெரும் உதவி செய்கிறது…ஆனால் பத்திரிகைகள் , ஒரு சில அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தானார்வ தொண்டு நிறுவனங்கள் பிஸ்கட் , ரொட்டி ஆகியவற்றை ஒரு சிலருக்கு வழங்குவதை மனிதாபிமானம் என்று பிதற்றுகிறது… ஆனால் அரசு , பாழடைந்த ரோடுகளை சரி செய்வதை, ஏரிகள் உடைப்பை இரவு பகல் பாராது சரி செய்வதை காண்பிக்காமல் இருட்டடிப்பு செய்கின்றன….திமுகவின் துணை நகர திட்டத்தால் தான் ஏரி, வயல்வெளிகள் காணாமல் போயின…. அடையாறு, கூவம் ஆகியவை சுருங்கின….ஆனால் திமுக கூட்டம் இன்று நல்ல வேஷம் போடுவதை சகிக்க முடியவில்லை…அதற்க்கு அநேக பத்திரிகைகள் துணை போகின்றன….
மக்கள் இந்த மழையினால் ஆளும் கட்சி மீது கொஞ்சம் அதிருப்தி அடைந்துள்ளது வேதனையான உண்மை… பெரும் இயற்க்கைக்கு அழிவிற்கு அரசை குற்றம் சொல்லி காலம் கடத்துகிறார்கள்… ஆனால் இதனால் பாதிப்பு அடைந்தவர்கள் 5 முதல் 10 லட்சம் பேராக இருக்ககூடும்….. ஆனால் நேரடியாக பாதிப்பு அடையாதவர்கள்… பல கோடி பேர்…. ஆனால் ஒருவேளை அரசு அனைவருக்கும் நிவாரணம் கொடுத்தால், பாதிப்பு அடையாதவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்…அதனால் அரசு அனைவருக்கும் நிவாரணம் கொடுப்பார்கள் என்றே நினைக்கிறேன்…இது ஒரு புறம் இருக்க, ஆளும் அரசின் மீதுள்ள கோபத்தை விட மக்களுக்கு பல மடங்கு திமுக மீது உள்ளது….இந்த சந்தர்ப்பத்தை மக்கள் நல கூட்டணி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்…. வைகோ, விஜயகாந்து, வாசன், கம்யுனிஸ்ட்கள், மனித நேயம், திருமா, ராமதாஸ் ஆகியோர் இணைந்தால், 30 % ஓட்டுக்களை வாங்கி விடுவார்கள்…ஆளும் கட்சி ஓட்டும் பிரியகூடும்… மக்கள்நல கூட்டணி கணிசமான தொகுதிகளை வெல்வார்கள்… இது நிச்சயம்… திமுக கூட்டணியில் சேருவதை விட மக்கள் நலகூட்டனிக்கு தலைமை தாங்குவது தான் விஜயகாந்துக்கு , அவரது அரசியல் எதிரகாலதுக்கு நல்லது…திமுக கூட்டணியில் சேர்ந்தால், அதோ கதி தான்…
ஏரிகளை மறித்து , வயல்வெளிகளில் பட்டா போட்டு வீடு கட்டியவர்களுக்கு நல்ல பாடம்… இந்த 1 லட்சம் வீடுகளில் 90 % முந்தய திமுக ஆட்சியில் அப்ப்ரூவல் கொடுக்கப்பட்ட இடங்கள் தான்.. அதானால் தான் என்னவோ 3 மாதத்துக்கு முன்னரே சுடாலின் , ரியல் எஸ்டேட் மந்தமாகி விட்டது என அவர்களுக்கு வக்காலத்து வாங்கினார்… இப்போது தெரிகிறதா, இந்த மழை வெள்ளத்துக்கு யார் காரணம் என்று?.. பொது விவாதத்துக்கு நான் தயார்… அடிச்சு சொல்லுகிறேன்.. திமுக காலத்தில் அப்ப்ரூவல் ஆனா நிலங்களில் கட்டப்பட்ட வீடுகளில் தான் இப்போது வெள்ளம் சூழ்ந்துள்ளது…ஆனால் திமுக இன்று நல்ல புள்ளை வேடம் போடுகிறது…அவர்கள் தப்பு பண்ணும்போது கூட அவ்வளவா கோவம் வரவில்லை…ஆனால் இப்போது நல்லவர்கள் போல நடிக்கிறார்கள் பாருங்கள் கோவம் பொத்துக்கொண்டு வருகிறது, ஒரு சராசரி மனிதனாய்….
மிகச்சரியான கருத்து
திமுகவின் பொய் பிரச்சாரம் எடுபடாது…
super…
1. தமிழகத்தில், துணை நகரம் என்று திட்டம் போட்டு, வயல்வெளிகளை ஏரிகளின் வடிகால்களை , வீட்டு மனைகளாக , ரியல் எஸ்டேட் பணக்காரர்களின் ஆசைக்கு தீனி போடும் வகையில் உத்தரவு போட்டது யார்?… 2. சில மாதங்களுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் தற்போதைய ஆட்சியில் படுத்துவிட்டது…மக்கள் புறநகரில் வீடு வாங்க அல்லது விற்க முடியாமல் தவிக்கிறார்கள்…நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வீடுகள் விற்பனை , ரியல் எஸ்டேட் பூம் ஆகும் என்று பேட்டி கொடுத்தது யார்?..3. அடையாறு, மற்றும் கூவம் யாருடைய ஆட்சியில் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது?…4. கூவத்தில் , மதுரவாயல் – எண்ணூர் பறக்கும் சாலையை அமைக்க முற்பட்டது யார்?.. தற்போதைய ஆளும் கட்சி, கூவத்தின் நீர்போக்கை இந்த சாலை பாதிக்கும், என்று கூறிய போது, அதனை கிண்டல் பண்ணியது யார்?… 5. சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவேன்…. சிங்கப்பூராக மாற்றுவேன்… என்று கொக்கரித்தவர் யார்?…. 6. சென்னை மேயராக இருந்தவர் சென்னைக்கு நீண்ட கால திட்டம் எதுவும் இன்றி இப்போது முதல்வர் பதவிக்கு வேட்பாளர் ஆக போட்டியிடுவது நியாயமா? .. 7. கூவத்தை , தேம்ஸ் ஆக மாற்றுவேன், என்று கொக்கரித்துவிட்டு, துணைவியுடன், இங்கிலாந்து சென்று [அரசு பணத்தில்], தேம்ஸ் நதியை பார்த்து வந்தவர் யார்?…8. நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து, துணை நகரம் , SATELLITE CITY , என்ற போர்வையில், அரசானை இட்டு, ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு நீர் வழி பாதைகளை தாரை வார்த்தது யார்? யார்?… 9. குப்பை காடாக இருக்கும் சென்னையை சீரமைக்காமல், 20000 கோடியில், தேவை இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தையும், 2000 கோடி செலவில் சட்டமன்ற கட்டடமும் கட்ட எத்தனித்தது தான் நிர்வாக திறமையா?… அடிப்படை வசதியே இல்லாத சென்னைக்கு மெட்ரோ ரயில் ஒரு கேடா?…. 10. இலவச TV என்னும் தரித்திரத்தை, தொடங்கி வைத்து, தமிழகத்தில் இலவச மாயையை ஆரம்பித்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க பிள்ளையார் சுழி போட்டது யார்?
TIRUTTU NAYKALE JAYA ADIMAIKALE..MAKKAL SETHTHU KONDIRUKKIRAARKAL NEE STICKER OTTUKIRAYA. EVAN APPAN VEETU PORULUKKU PADAM OTTANUM. KOLLAI ADITTU MAKKALAI PIZHINTHU KAASU KODUTTHU OTTU VAANKINEERKAL. INTRU AMMAVAIN AANAIYAL MAZHAI KOTTUTHU EN ADIMAIKAL SOLKIRAARKAL. DMK, KARUNANITHI IVARKALAI MATTUM THITTUM NAAYKALE. UN THALAVI EVVALVU SOTHTHU MANANARGUDI KUMBALUKKU STHU EPPADI VANTHANDU. AGRI VAZAHHU, AAVIN MPSADI, DSP KOLAI, TAMIZHALA GOPURA SINNAME MARANTHU POYIDDU. JAYA PADAMTHAAN OORELLAM. INNUM PATHAVI AASAI VERU. KETTAL KARUNANITHIYA THIDDANUM. SAATHARANA VATTA SEYALARUKKU EVVLAVU SOTHUU. EPPADI VANTHAHDU. JAALRA NAYKAL. AVATHOORU VAZAKKU. TAMILNADU JAYAVUKKU POKA VAIGO, TIRUMA, CPI KOOTAM KAASU VANKI THANI JAALRA PODURAANKA. CHENNAI MAKKALE. ITHU NALLA NERAM. INI INTHA KUM
BALA VIRATUTUNK
சத்தம் போடாம தண்ணியை திறந்து விட்டு சென்னையை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய ஆட்சியைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாம இன்னமும் கலைஞரை திட்டிப் போட்ட 2011 வருடத்திய ஸ்டேடஸ் / போட்டோக்களை பகிர்ந்துட்டு இருக்கிர சேடிஸ்ட்கள் இருக்கும் வரை திரும்பவும் அதிமுக ஆட்சிக்கு வந்தா அதில் எந்த ஆச்சரியமும் இல்லை..
கருணாநிதியை குடும்ப அரசியல் செய்கிறார் என்று இன்று நொடிக்கொரு முறை அலறும் அதிமுக அடிமைகள், மன்னார்குடி மாபியா அடிக்கும் கொள்ளைகளை எந்த பிரிவில் சேர்ப்பார்கள் என்று தெரியவில்லை. கருனாவுக்காகவாவது குடும்பம் பெரியது. அனால் என் குடும்பமே தமிழ்நாடுதான் என்று பிதற்றும் Amma ஏன் மன்னார்குடி கும்பலை கொள்ளையடிக்க விடுகிறார்? இதைக்கூட புரிந்து கொள்ள முடியாத அதிமுக அடிமைகள் ஏன் இங்கு கூக்குரல் இடுகிறார்கள் என்று தெரியவில்லை
திமுகவின் ஜால்ராக்கள் திட்டித் தீர்ப்பார்கள்… அவர்கள்தான் சில நாட்கள் முன்பு வரை திமுக ஆட்சியில்தான் தொழில்கள் பல உருவாகின என்று மார் தட்டியவர்கள்… அதனால் விளை நிலங்கள், நீர்பிடிப்பு பகுதிகள், ஏரிகள், குளங்கள் போன்றவை அழிந்து அதனால் இன்றைய மழையின் தாக்கமும் அதிகம் என்ற உண்மை கசக்கும்… அந்த உண்மைக்கு பதில் எழுதாமல், ஒருமையில் தனிநபர் விமர்சனம் செய்வார்கள்… பரவாயில்லை. பகுத்தறிவுவாதிகள்தானே.
திமுக ஆட்சியில் இந்த நேரம் இருந்திருந்தால் இன்னும் கேவலமாகத்தான் இருந்திருக்கும். இந்த அரசு முடிந்தவரை சரியாகவே செயல்படுகிறது. இது பாதிக்கப்பட்ட சில நண்பர்கள் வாயில் இருந்து வந்த வார்த்தைகள்.
ஜெயலலிதா அவர்கள் சென்னையை விட்டு தாண்டினா எகிறி எகிறி குதிக்கும் திமுக அல்லக்கைகள் இவரு கேரளா போயி வரதுக்கு என்ன சொல்லப் போறாங்க… (இது ஒரு ஊக செய்தி என்று சொல்லுவதைத் தவிர்த்து)
2005ல் பெரும் மழை வந்த பின் அடுத்த தேர்தலில் திமுக ஜெயித்தது.. அதேபோல 2015ல் மழை வந்துள்ளதால், அடுத்து வரும் தேர்தலில் திமுக ஜெயிக்குமென்று ஒரு தலைவர் பகுத்தறிவு கொள்கைப்படி, அறிக்கை விடுவார் பாருங்க.
விளம்பரம்… விளம்பரம்… எல்லாவற்றிலும் விளம்பரம் தேவை இவருக்கு… நல்லவேளை.. 1 கோடி ரூபாய் காசோலை வாங்குவதற்கு முன்பு அதற்காக ஒரு பாராட்டு விழா நடத்தவேண்டும் என்று கேட்கவில்லை
When DMK was in power Jaya was in kodanaadu most of the time but nobody questioned
At that time people are busy questioning karunanidhi spending time in mannada myilada and parttu vela functions..
திமுக வெட்கமே இல்லாமல் பழியை அதிமுக மீது போடுகிறது…. இந்த இயற்கை பேரிடர் உலகம் காணாதது….ஆனால் திமுக தான், ஏரிகளை குளங்களை, வயல்வெளிகளை மனை போட்டு கூவி கூவி விற்றது….ஆனால் இன்று இந்த இயற்கை பேரழிவிற்கு காரணம், திமுக தான்… திமுக, தான் MGR காலத்தில் கூட சென்னையில் ஜெயித்தது…காரணம் ஆக்கிரமிப்புகளை ஓட்டுக்காக , சுய நலத்துக்காக ஊக்குவித்தது…. 96, 2006 காலங்களில் அனைத்து வயல்வெளிகளையும் துணை நகரம் என்று கூவி கூவி பட்டா போட்டு விற்றது… ஆனால் இன்று நல்ல புள்ள வேஷம் போடுது…இயற்கை , அதிமுக, விற்கு எதிராக உள்ளது…. திமுக , மற்றும் அதன் ஆதரவு ஊடகங்கள், அதனை அறுவடை செய்ய நினைப்பது பிணம் தின்னி அரசியல்….இதனை திமுக செவ்வனே செய்கிறது….
சென்னையை_நாசமாக்கிய
மலை முழுங்கி மகாராஜனன் கருநாகத்தின் கூட்டாளித்திருடன் ஏரியை முழுங்கி ஏப்பம் விட்ட ஏகாம்பரம் முன்னாள் பொதுப்பணி துரை(றை)முருகனின் கேடு கெட்ட நிர்வாகமே இன்றைய அவலத்திற்க்கு ஏக பொருப்பாவார்.,
ஊழலில் மட்டுமே ஊரித்திளைத்த முந்தைய மைனாரிட்டி திமுக அரசின் பேயாட்சி காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியினை தூர்வாரி ஆழப்படுத்தவும் கரைகளை பலப்படுத்தவும் உலக வங்கியிடமிருந்து ரூ.600 கோடி கடனாக பெற்றார். ஆனால் மக்கள் நலன் என்பதை காகிதத்தில் எழுதி பார்க்ககூட தயங்கும் திமுக அரசின் பொ.ப.துறை அமைச்சர் ஏரியை பலப்படுத்தாமல் தன்மானங்கெட்ட தலைவனையும் அவருடைய ஆக்கங்கெட்ட கட்சியினையும் பலப்படுத்த பயன்படுத்தியதன் விளைவே இன்றைய அவலத்தின் ஆணிவேர் எனபதை மக்களும் மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை…
கருணாநிதியை குடும்ப அரசியல் செய்கிறார் என்று இன்று நொடிக்கொரு முறை அலறும் அதிமுக அடிமைகள், மன்னார்குடி மாபியா அடிக்கும் கொள்ளைகளை எந்த பிரிவில் சேர்ப்பார்கள் என்று தெரியவில்லை. கருனாவுக்காகவாவது குடும்பம் பெரியது. அனால் என் குடும்பமே தமிழ்நாடுதான் என்று பிதற்றும் Amma ஏன் மன்னார்குடி கும்பலை கொள்ளையடிக்க விடுகிறார்? இதைக்கூட புரிந்து கொள்ள முடியாத அதிமுக அடிமைகள் ஏன் இங்கு கூக்குரல் இடுகிறார்கள் என்று தெரியவில்லை
திருவாரூர் பெற்ற தங்கம் , திருட்டு ரயில் சிங்கம் , கடலில் போட்டால் மிதக்கும் மரம் . டாக்டர் பட்டதை வாங்கியது அவரது திறம் . பெற்றோரை இறந்த தன மகனை இல்ல என்று சொல்லவைத்தது அவரது அறம் . ஈழத்தமிழனை கொன்றது ஒரு புறம் , இந்திய் தமிழனை அவர் எழுதி படுத்தி எடுப்பது நாம் வாங்கிய வரம் . வீரனத்தில் ஆரம்பித்தது அவரது கொள்ளை 2ஜீ கண்டும் முடியவில்லை அதன் எல்லை . கடவுள் இல்லை என்பார் வெளியே சாய்பாபாவை வரவளைத்து ஆசி வாங்குவர் வீட்டின் உள்ளே . கூட்டணிக்கு தான் ஆசை சேர்வார் இல்லாததால் நிராசை. அறிவலய்லத்தில் மக்கள் தங்க இடம் கொடுக்கவேண்டும் என்றேன் . ஒரு பதில் இல்லை . இந்த அறிவலயமே மக்களிடம் இருந்து அடித்த பணத்தில் கட்ட பட்டது தான் . இப்போ அறிவாலயத்தில் பொருள் நிரம்பி விட்டதாம் . கருப்பை வெள்ளையாக்கும் முயற்சி . என் தலைவன் ஆதாயம் இல்லாமல் வெள்ளத்தில் கால் வைக்க மாட்டான் . செம்மொழி தமிழனடா அவன். எங்கள் கட்டுமரத்துக்கு ஏதாவது குறை கண்டுபிடிக்க வேண்டும் என்ன செய்வது . எல்லாம் திருவாரூர் டிக்கெட் பரிசோதனை செய்தவர் 50 வருடம் முன் செய்த கவனக்குறைவு . அவரு மட்டும் அன்னைக்கு கழிவறையை திறந்து பார்த்திருந்தால் இன்று தமிழ்நாடு தப்பிச்சிருக்கும்.இந்த படத்த பிரிண்டு பண்றது,ஸ்டிக்கர் ஒட்டுறது எல்லாத்தையும் ஆரம்பிச்சதே நம்ப தலீவர் தானே..மறந்துட்டாரு போல…
இவ்வளவு திட்டிலும் அதிமுகவை ஆதரிக்கும் அல்லக்கைகளுக்கு:
இந்த பேரழிவிற்கு அதிமுக அரசு மட்டும் காரணமல்ல, திமுகவும் பங்களித்திருக்கிறது என்கிறார்கள். இவ்வாறு சொல்வதில் நியாயம் நிறையவே இருக்கிறது என்றாலும், எவ்வகை அரசியலின் வியாக்யானமாக இந்த வாதம் வெளிபடுகிறது என்பது முக்கியம். தேர்தல் அரசியலின் ஆக விபரீதமான விளைவாக, இப்போது இந்த அனர்த்தத்தின் மூலம் நிறுவப்பட்டுவிட்ட ஜெயலலிதா தலைமையிலான அரசை, இன்னமும் ஏதாவது சொல்லி காக்க வேண்டிய, ஒரு பொய்மை அரசியலின் அவசியம்தான் இன்றய வக்கிரம்; 2005இல் பாராட்டியது போல், இப்போதய அரசை எந்த சாக்கு சொல்லியும் பாரட்ட முடியாத நிலையில், பிழைத்து வர எந்த சாத்தியமும் இல்லாமல் ஒழிய வேண்டியதை, தங்களை அறிஞர்களாக கற்பித்துக் கொண்டவர்கள் ‘ரெண்டு பேரும் ஒண்ணு, அறியாதார் வாயில் மண்ணு’ என்று காக்க முனைவதைத்தான் எதிர்க்க வேண்டியுள்ளது.
நூறு ஆண்டுகளின் பெருமழை பெய்ததற்கு, புவி சூடேற்றத்தின் விளைவான பருவ மாற்றம்தான் காரணம் என்று கொண்டால், கார் வைத்திருக்கும் விமானத்தில் சென்ற ஏசியில் உட்கார்ந்த நான் கூட ஒருவகையில் காரணிதான். அந்தவகை அறிவு விவாதங்களை நிதானமான நேரத்திற்கு தள்ளிவிட்டு, கண்ணெதிரே நடந்ததை அணுகும் போது, எந்த சந்தேகமும் இல்லாமல் இது தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு செய்துள்ள படுகொலை; திட்டமிட்டு செய்யாவிடினும், திட்டமிடாததால் நடந்த படுகொலை; நிகழ்த்திய பேரழிவு.
அதிமுக ஆதரவு நிலையில் இல்லாவிட்டாலும், குன்ஹாவின் தீர்ப்பு வெளிவந்த போது நான் சந்தோஷப்படவில்லை. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நியாயம் எவ்வகையில் இருந்தாலும், அதிமுக அரசே இங்கே தொடர வேண்டிய தலைவிதியான நிலையில், ஜெயலலிதா ஜெயிலுக்கு போவது இங்கே முற்றிலும் செயலின்மையை உருவாக்கும், அது தமிழகத்திற்கு நண்மை பயக்கப் போவதில்லை என்ற கருத்தையே டிவிட்டரில் எழுதினேன். நாமறிந்த அறியாத பல காரணங்களினால், ஜெயிலில் இருந்து வெளியே வந்த பின்னரும் அதே செயலின்மை தொடர்கிறது. பொதுவெளியில் தோன்றுவதை கூட தவிர்க்கும் ஒரு முதல்வரை இந்திய வரலாற்றில் எங்காவது பார்த்திருக்க முடியுமா? எம்ஜியார் நோயாவாய் பட்டு அமேரிக்காவில் இருந்தபோது கூட, முடிவெடுக்க இப்படி அண்ணாந்து காத்திருக்கும் ஒரு செயலற்ற அரசு இருந்ததில்லை.
கடந்த வாரம் வரலாறு காணாத மழை பெய்தது உண்மை; ஆனால் பெருமழை பெய்யப்போவதை மூன்று நாட்கள் முன்னமே அறியப்பெற்றும், முழுமையாக நிரம்பிய ஏரியை அதன் போக்கில் அப்படியே பராமரித்து, பெருமழை பெய்த மறுநாளும் காலம் தாழ்த்தி, எந்த முன்னெச்சரிக்கையும் முன்னேற்பாடுகளும் இன்றி, வெளியான அளவு இன்னமும் தெளிவில்லாத ஒரு பெரும் கொள்ளளவில் நீரை திறந்து விட்டு, எந்த அவகாசமும் இல்லாத மக்கள் சாவையும் பேரழிவையும் சந்திக்க நேர்ந்தற்கு எந்த சமாதானமும் கிடையாது. சொந்தமாக தீர்மானத்தை எந்த தளத்திலும் எடுத்து நிறைவேற்ற முடியாமல், ‘அம்மா அவர்களின் ஆணைக்கு இணங்க’ என்று சொல்லக் காத்திருந்த நிர்வாகமே இந்த நிலைக்கு காரணம். கருணாநிதி ஆட்சியில் துரைமுருகனோ அல்லது அதிகாரிகளோ கூட ஆணைக்கு இப்படி காத்திருக்க மாட்டார்கள். ஒரு பேரழிவு நிலை கொண்டிருந்த நிலையில் அதிரடியாக களத்தில் இறங்க வேண்டிய ராணுவம், பல மணி நேரங்களுக்கு சும்மா காக்க வைக்கப்பட்ட செய்தியும் வந்துள்ளது. பேரழிவிற்கு பின் அதிமுக ரவுடிகள் நிகழ்த்திய அராஜகங்கள் வீடியோ ஆதாரங்களுடன் பதிவாகி விட்டது. திமுக யோக்கியமான கட்சியாக இல்லாவிட்டாலும், இந்த பேரழிவிற்கு வரலாற்றுரீதியில் அவர்களுக்கும் பொறுப்பு உண்டு எனினும், இப்போதய அதிமுக அரசை போன்ற ஒரு மாபெரும் குற்றவாளி அல்ல அது; எல்லா ஊழல் கட்சிகளையும் போன்ற சமக்குற்றவாளி. அதிகாரிகள் பணியாளர்கள் அளவில் தமிழகத்தில் திறமையாளர்களுக்கான பஞ்சமே இல்லை; அரசதிகார அளவில் முறையான முடிவுகளை காலம் கடக்கும் முன் நிச்சயம் திமுக போன்ற ஒரு ஆட்சி எடுத்து, நடந்த அழிவுகளின் தீவிர அளவுகளை நிச்சயம் குறைத்திருக்கும். இதுவரை இந்தியாவில் ஆண்ட எந்த மோசமான கட்சியையும் விட மோசமாக அதிமுக நடந்து கொண்டிருக்கிறது. எல்லா மட்டத்திலும் அரசியல் பேசும் தமிழ் நாட்டில் எப்படி இப்படி ஒரு பேரவலம் நடக்க நாம் அனுமதித்தோம் என்று சொந்த அரசியலின் சுயமைய சார்புகளை அவிழ்த்துவிட்டு யோசிக்க வேண்டிய தருணம் இது.
நேரடியாக கணித பூர்வமாக நிறுவ முடியாவிட்டாலும், கணிக்கும் எல்லா ஆதரங்களும், நவீன மனித வாழ்க்கை விளைவிக்கும், தொடரும் பருவ நிலை மாற்றத்தை இந்த பெருமழைக்கான காரணமாக்குகிறது. பருவ மாற்றம் மேற்கையும் பாதித்தாலும், அதற்கான தீர்வை நோக்கி இன்னும் பல பேரழிவுகள் நிகழும் வரை- ஒருவேளை நிகழ்ந்த பிறகும் கூட – முதலீட்டிய சமுதாயம் அனுமதிக்கப் போவதில்லை; ஒருவகையில் பேரழிவுகள் முதலீட்டியத்திற்கு பெரும் வாய்ப்புகள். வால் ஸ்டீர்ட் தண்ணீரில் மறைந்தால் கூட, கார்பன் டை ஆக்சைடு உருவாக்கம் எவ்வளவு அவசியமானது என்று அமேரிக்க தேர்தலில் போட்டியிடும் ஒருவரே கூட தர்க்கித்து கொண்டிருப்பார். அந்தவகையில் அழிவை நோக்கி நாம் நகர்வதை தடுக்கும் சாத்தியம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை.
திராவிட ஆட்சி இல்லாமல் தேசிய ஆட்சி தமிழகத்தில் நடந்தாலும், நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும். நீர்நிலைகளை, இயற்கையை நாசமாக்காத வளர்ச்சி பக்கத்து மானிலங்களிலும் நடைபெறவில்லை; வளர்ச்சி என்பதே அவ்வாறுதான் கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கடந்த பத்தாண்டுகளில், தமிழகம் போன்று ஊழலும் கொள்ளையடிப்பும் இயற்கை சீரழிவிற்கு துணைபோன அளவும் வேகமும் மற்ற இடங்களில் இல்லை என்பதுதான் என்னுடைய மனப்பதிவும். திமுகவின் கடந்த ஆட்சி பெரும் ஊழலும், சட்டவிரோதமான அக்கிரமிப்புகளும், வரலாறு காணாத மணல் மாஃபியா சீரழிவுகளும் கொண்டதுதான். இதனாலேயே பதவி இழந்து, தன்னை விட சீரழிவான ஒரு ஆட்சியை பதிவிக்கு கொண்டு வந்ததிலும் திமுகவிற்கு பங்குள்ளதை மறக்க முடியாது. இதற்காக நாம் திமுக திட்டவும் எதிர்க்கவும் செய்யும்போது, அதைவிட மோசமான ஒன்றிற்கு எந்த நியாயமும் கற்பித்து விடக் கூடாது; அஷ்டே!
ஜெயலலிதாவை துதிபாடும் செயல்பாட்டை தவிர இங்கு எதுவுமே நடைபெறும் தோற்றம் இல்லையே. தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட, ஒரு ஆளுங்கட்சி பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களிடமும், அதற்கு உதவும் தன்னார்வலர்களிடமும் இவ்வளவு அராஜகமாக எப்படி நடந்து கொள்கிறது? சிம்பு ரசிகர் மன்றம் நினைத்தால் கூட மக்களுக்கு உதவும் சாத்தியம் உண்டு; அதிமுக என்ன முயன்றாலும் – நிவாரண நிதி அளிப்பதை தவிர- எந்த நிவாரண பணியையும் செய்யமுடியாது. ஏனெனில் அது கொள்ளையை மட்டுமே கொள்கையாக கொண்ட தலைமையையும், அதே சுயலாபத்திற்காக தலைமையை துதிபாடுவதையே கடமையாக அடிமைப்பட்ட, அரசியல் முற்றிலுமற்ற ஒரு கூட்டம். ஒருகையில் திமுகவும் தனது அரசியலில் இருந்து விலகிய, லாபத்தை நோக்காக கொண்ட ஒரு கார்பரேட் நிறுவனம் போல மாறிவிட்ட ஒன்றுதான்; ஆனால் இன்றைக்கும், தீவிர அரசியலை தர்க்கத்துடன் பேசுபவர்களையும், அறிவு விவாதத்தில் ஒரு தரப்பாக நிலைபாடு கொண்டவர்களையும் கொண்டது திமுக; மாறாக கல்வியற்ற அறியாமையும், எலீட் மக்களின் பொய்மையும், நடுநிலைகளின் சாதுர்யமுமே அதிமுக ஆதரவாக உள்ளது. இந்த தரப்பை திமுகவை விட குறைந்த தீமை என்று ஆட்சியில் அமர்த்திய சாதூர்யத்தின் பலன்தான் தற்போதய பேரழிவு.
திமுக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலனடைய நினைப்பதாக சொல்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை கூட அவர்கள் பயன்படுத்தி குற்றம் சொல்லவில்லையெனில் அவர்கள் எதற்காக திமுகவினராக இருக்க வேண்டும்; பேசாமல் நடுநிலை அதிமுக அரசியலையே செய்யலாமே. இவ்வளவு மோசமான விபரீதமான அரசை, அரசியல் உணர்வும் கல்வியறிவும் கொண்ட தமிழகத்தில், நாம் எப்படி அதிகாரத்தில் ஏற்றினோம் என்று தீவிரமாக பரிசீலனை செய்யவேண்டிய கட்டத்தில் உள்ளோம். அதனால் திமுக பயனடைந்தால், இருக்கும் பேராபத்தான நிலையை விட அது பெரிய ஆபத்து இல்லை; மேலும் தேர்தல் அரசியலில் இது நியாயமானதும் கூட. என் பயம் எல்லாம் சன் டீவி போன்றவைகளின் மிகை விளம்பர பாணி பிரச்சாரத்தினால் அதிமுக மீதான வெறுப்பு தணிந்துவிடுமோ என்பதுதான்.
Both DMK or AIADMK sombu’s are doing good job here. so what this DMK sombu in his ..I quote
திமுகவின் கடந்த ஆட்சி பெரும் ஊழலும், சட்டவிரோதமான அக்கிரமிப்புகளும், வரலாறு காணாத மணல் மாஃபியா சீரழிவுகளும் கொண்டதுதான். இதனாலேயே பதவி இழந்து, தன்னை விட சீரழிவான ஒரு ஆட்சியை பதிவிக்கு கொண்டு வந்ததிலும் திமுகவிற்கு பங்குள்ளதை மறக்க முடியாது. இதற்காக நாம் திமுக திட்டவும் எதிர்க்கவும் செய்யும்போது, அதைவிட மோசமான ஒன்றிற்கு எந்த நியாயமும் கற்பித்து விடக் கூடாது.
திமுக யோக்கியமான கட்சியாக இல்லாவிட்டாலும், இந்த பேரழிவிற்கு வரலாற்றுரீதியில் அவர்களுக்கும் பொறுப்பு உண்டு எனினும், இப்போதய அதிமுக அரசை போன்ற ஒரு மாபெரும் குற்றவாளி அல்ல அது.
ha ha ha so this DMK sombu’s even accepting all about DMK then saying it is better then AIADMK..poda dupukku..do you think people of TN is searching for who is better even after seeing the most destructive rule from 2006 – 2011 by DMK and this AIADMK from 2011.. “thirudan” keeta iruthu certificate veera.. DMK sombu’s and AIADMK allkai’s forget about TN..your days are counted to thrown our of politics..”thiruttu naikala”
ஊழல்வாதிகளுக்கு இந்த தேர்தலில் சீட் இல்லை – தபால்பதி
அப்ப உங்க குடும்பத்துக்கே சீட் இல்லையா?
To all dmk allkai’s in dream to loot one again tamilnadu
நமக்கு நாமே ஷூட்டிங்கில் ஆவேசமான பொது மக்கள் ஸ்டாலின் மற்றும் அவர் ஆதரவாளர்களை சகட்டு மேனிக்கு திட்டு தீர்த்தார்கள்.
வெறுங்கையோடு ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு 100க்கும் மேற்பட்ட ஸ்டாலின் நமக்கு நாமே நாடக குரூப்புடன் வந்து, 6 காமெராக்கள் மற்றும் லைட்டிங்ஸ் செட் செய்து மக்களிடம் ஸ்டாலின் பேசுவது போல நாடகம் அமைத்தார்கள், பிறகு ஸ்டாலின் மக்களிடம் பேசும் போது ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர்என்று பேசி கடுப்பேத்தினர்கள், அதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள், ஸ்டாலினை தரக் குறைவாக திட்டி விரட்டி அடித்தார்கள். செருப்படி இல்லாமல் தப்பித்தால் போதும் என்று பறந்தது ஸ்டாலின் நாடக குரூப்.
உன் அம்மாவின் குரூப் எப்படி செருப்படி பெற்று எல்லா இடங்களிலும் இருந்து ஓடி ஒழிந்தது என்று ஜெயா டிவியை தவிர்த்து எல்லா சேனல்களிலும் காட்டினார்கள் அல்லக்கை முண்டமே. அதை பார்த்து விட்டு பதில் சொல். அந்த காமெராவுக்கு pose கொடுக்க கூட இயலாத தலைவியை வைத்துக்கொண்டு நீ ஏன் இவ்வளவு கூவுகிறாய் தண்டமே?
Dharmaa ..kanana poondai..modaa puromboku..nee ithuku pathi solludaa..stalin periya okiyam daa..thirrutu nai avan..drama pottu act parannraen poonda mavan nee avan sunniya nakki poolikara adimai summa coovaraaa..people of TN know all the truth..count your days DMK sombu kala
To all those ADMK allakkais, particularly the one adimai who has taken other aliases:
As Chennai limps back to normalcy after being battered by the heaviest rains in a 100 years, a story of an IAS officer Vijay Pingale is going viral. Why? Corporation works department joint commissioner Dr Vijay Pingale was shunted out of the Corporation of Chennai after he had named contractors who botched up road work in the city and fined them in an unprecedented move towards transparency by the civic body.
Pingale, an MBBS graduate and IAS officer of 2004 batch, spearheaded several initiatives during his tenure in the corporation, most notably in the road quality control wing. He was was second only to corporation commissioner Vikram Kapur and handled major duties in the civic body including roads, bridges,buildings, storm water drains, solid waste management, etc.
According to the corporation officials, it was because of Pingale’s expertise that they were able to limit waterlogging when it rained.
Pingale’s probe
On 11 November, the corporation, under Pingale, made public the names of nine contractors who it said would have to reimburse the corporation Rs 2 crore for repairs it carried out on stretches laid by them.
Pingale had stated that he would name other contractors as well for poor work and that the total penalties were likely to rise.
According to a Times of India report, Pingale was transferred to the industries department as joint secretary on 14 November. Reportedly, his transfer was brought about by the powerful contractor lobby. The timing of his transfer, only days after he penalized contractors responsible for poorly laid roads, is rather telling.
Even the ministers and officials had taunted Pingale for being a ‘straight arrow’. What may have caused the floods
The corruption at various levels in the corporation has left Chennai roads potholed and broken with the first monsoon rain.
According to the corporation officials, the contractors have been carrying out inferior work and have formed a cartel to bag contracts from the corporation. Poor quality material is used to lay roads because councilors have to be “bribed” with at least 10 per cent of the cost of any project.
After Pingale took charge as joint commissioner, he set up a quality control wing in the corporation. He faced resistance as the assistant engineers reportedly thought that they would not be able to mint money from contractors if they reported poor quality of work.
As support pours in for Pingale, maybe the citizens of Chennai will now know who to blame for much of the devastation they have seen these last few weeks.
தமிழனின் பிணத்தையும் தோண்டி எடுத்து, ஒத்த ரூபாயை கூட விட்டு வைக்காத கேடுகெட்ட திருடர் இயக்கம் தி மு க
Yes.. the problem is you adimai has left an ‘a’ before DMK.
Both with out a and with a is true.. you both fighting with each other as though we don’t know that..lols
For All DMK allkai’s and people with short term memory that DMK lives in
The State government on Tuesday entered into a Memorandum of Understanding with Great Eastern Energy Corporation Limited (GEECL) for production of Coal Bed Methane (CBM) in the Mannargudi area covering Tiruvarur and Thanjavur districts.
A government release here stated that the GEECL proposed to invest Rs.100 crore initially for the exploration activity and once the commercial viability and feasibility was established, it would further invest Rs.3500 crore on production of CBM.
The project is likely to generate direct and indirect employment to about 1500 persons, besides making available CNG to the State. It will also generate revenue to the government by way of royalty, Value Added Tax etc. The government has issued Petroleum Exploration licence to the company and also agreed to facilitate the company in getting necessary approvals and clearances for the successful implementation of the project.
The MoU was signed by Rajeev Ranjan, Principal Secretary to Government, Industries Department, and Yogendra Kumar Modi, Chairman and Chief Executive Officer of GEECL, in the presence of Deputy Chief Minister M.K. Stalin. GEECL is the first company to commercialise Coal Bed Methane (CBM) in India. The company produces CBM from a block in Raniganj, West Bengal, and supplies to various industrial consumers in and around Assansol/Durgapur, West Bengal. It also supplies Compressed Natural Gas to vehicles through the outlets of Indian Oil Corporation Limited.
விகடன் விலை போனது தெரியாமல் உள்ள வாசகர்களின் மனநிலையும்
கற்பழிக்கப்படுகிறோம் என்று தெரியாமல் திருமண ஆசையில் காமுகனிடம்
கற்பிழந்த பெண்ணின் மனநிலையும் ஒன்றுதான்.
“சாயம் வெளுத்த அம்மா உணவகங்கள்”
அம்மா உணவகங்கள் என்ற டுபாக்கூர்.. வெள்ளத்தில் கூட உதவாத சுய விளம்பர உணவங்கள்!
ஊருக்கு பத்து அம்மா உணவகங்கள் என்ற பெயரில் ஹோட்டல்களை திறந்துவிட்டு, தமிழகத்தின் பசியை போக்கிவிட்டதாக நடைபெற்ற பிரச்சார சாயத்தை, இந்த மழை வெளுக்க வைத்துவிட்டது. சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளிலும், பாலும், தண்ணீரும் கூட இன்னும் உருப்படியாக போய் சேரவில்லை என்ற கூக்குரல்கள் ஒலிக்கின்றன.
அப்படியிருக்கும்போது உணவு பொருள் தட்டுப்பாடு பற்றி சொல்ல தெரிய வேண்டியதில்லை. இந்த நேரத்தில்தான், உணவு பஞ்சத்தை போக்க வந்த பசுமை புரட்சிக்கு ஈடாக, உசுப்பேற்றப்பட்ட அம்மா உணவகங்கள் பக்கம் மக்கள் கவனம் செல்கிறது.
இந்த இடர்பாட்டு காலத்திலும்கூட, அம்மா உணவகங்கள் கீ கொடுத்த பொம்மை போல, தனது வழக்கமான பணிகளை மட்டுமே செய்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
கடமைக்காக வேலை, நாள் ஒன்றுக்கு, காலையில் சில நூறு பேருக்கு இட்லி, மதியம் சில நூறு பேருக்கு சாப்பாடு போட்டுவிட்டால் நமது கடமை முடிந்தது, என்ற ரீதியில்தான், அம்மா உணவகங்கள் இப்போதும் செயல்பட்டுவருவதாக சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவிக்கும் வெள்ளம் பாதித்த சென்னைவாசிகள் கூக்குரல் எழுப்புகிறார்கள்.
200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகர பகுதியில், மொத்தம், 252 அம்மா உணவகங்கள் உள்ளன. ஒவ்வொரு வார்டுக்கும் தவறாமல் ஒரு அம்மா உணவகம் வந்துவிட்டது. அப்படியிருந்தும், ஒரு மழைக்கே, பசி, பட்டினி என்ற கூக்குரல்தான் தலைநகரில் எதிரொலிக்கிறது
இதற்கு காரணம், அம்மா உணவகங்கள் தனது சாப்பாடு வழங்கும் அளவை அதிகரிக்காததுதான். வழக்கம்போலவே அவை குறிப்பிட்ட நேரத்துக்கு திறந்து, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே சாப்பாடு வழங்கிவருகின்றன.
இந்த உணவகங்களை பகல், இரவு என முழு நேரமும் திறந்துவைத்து, தேவைப்படும் அளவுக்கு, உணவு பதார்த்தங்களை வினியோகித்திருந்தால், வார்டுதோறும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருமே உணவு பெற்றிருக்க முடியும்.
தமிழகத்தின் உணவு தட்டுப்பாட்டை தீர்க்க வந்த திட்டம் என்று பெரும் அளவுக்கு உசுப்பேற்றப்பட்ட திட்டம் ஒரு மழைக்கே, சாயம் வெளுத்து நிற்பது பரிதாபமே !
#JayaFails
சென்னையை_நாசமாக்கிய
மலை முழுங்கி மகாராஜனன் கருநாகத்தின் கூட்டாளித்திருடன் ஏரியை முழுங்கி ஏப்பம் விட்ட ஏகாம்பரம் முன்னாள் பொதுப்பணி துரை(றை)முருகனின் கேடு கெட்ட நிர்வாகமே இன்றைய அவலத்திற்க்கு ஏக பொருப்பாவார்.,
ஊழலில் மட்டுமே ஊரித்திளைத்த முந்தைய மைனாரிட்டி திமுக அரசின் பேயாட்சி காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியினை தூர்வாரி ஆழப்படுத்தவும் கரைகளை பலப்படுத்தவும் உலக வங்கியிடமிருந்து ரூ.600 கோடி கடனாக பெற்றார். ஆனால் மக்கள் நலன் என்பதை காகிதத்தில் எழுதி பார்க்ககூட தயங்கும் திமுக அரசின் பொ.ப.துறை அமைச்சர் ஏரியை பலப்படுத்தாமல் தன்மானங்கெட்ட தலைவனையும் அவருடைய ஆக்கங்கெட்ட கட்சியினையும் பலப்படுத்த பயன்படுத்தியதன் விளைவே இன்றைய அவலத்தின் ஆணிவேர் எனபதை மக்களும் மக்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை…
சவுக்கை ஒரே பக்கமா சுழற்றுவது நியாயமா …. ? ஜூன் 2011 — ல் விகடன் குழுமத்தை கே.டி. பிரதர்ஸ் வாங்கியதை பற்றி விலாவரியாக எழுதி இருந்திர்கள் …. இப்போது விகடனுக்கு சப்பை கட்டு கட்டுகிறீர்கள் ….! இதோ இந்த செய்தியையும் தோலுரித்து காட்டுங்களேன் : — 1… https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/12359924_570996799720671_8420476954711746572_n.jpg?oh=d5e48ca2e299161489d487155191829c&oe=56E740F1&__gda__=1461849755_482830774ப7ப3பப்9எ30க3க94ப14எ9ப69 —– கொட்டும் மழையிலும் ஒரு பட்டைசாதம் வாங்கி கொடுக்காமல் தங்களின் கொள்ளையை தொடர்ந்த கேடு கேட்ட ஜென்மங்களை பாருங்கள் அய்யா …. 2 …https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12369229_849665058464027_7968094085385793373_n.jpg?oh=489802d633a6647c64d923e78e9f19ac&oe=57221489
3 …. https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/12341086_849665128464020_1269834527126383194_n.jpg?oh=2ddd039d761c444c6fcd2b6cbddcde95&oe=56த4க746 —- இதை பற்றியும் எழுதி ” உங்களின் சவுக்கு நன்றாக —- மக்களுக்காக சுழலும் என்று காட்டுங்கள் …. என்னவோ கலைஞர் குடும்பம் ” புத்தர் பரம்பரையில் ” வந்தவர்கள் போல நீங்கள் தாங்கி பிடிப்பது தான் வேடிக்கையானது …. காலை — மாலை தினசரிகள் …. வாரம் — மாதம் இருமுறை — மாத பத்திரிக்கைகள் ….. தொலைக்காட்சிகள் —- கேபிள் கனைக்சன்கள் —- விமான செர்விஸ்கள் —- தியேட்டர்கள் —- பட தயாரிப்புகள் —- குடும்ப நடிகர்கள் —- பங்கு வர்த்தகம் —- ஹோட்டல்கள் —- அப்பப்பா …. சொல்லி மாளாது — இந்த ஆக்டோபஸ் குடும்பம் கபளீகரம் செய்து உள்ளதை …. மேலும் அதன் பசி அடங்காமல் வரும் தேர்தலிலும் தமிழகத்தை விழுங்க துடித்துக்கொண்டு —- ” நாங்கள் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்ட்கிறோம் —- இனி செய்யமாட்டோம் என்று ஊழல் செய்து கொள்ளை அடித்தது உண்மைதான் என்பதற்கு ” ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து கொண்டு மக்களை ஏமாற்ற பவனி வரும் இவர்கள் — ” யோக்கியர்களா ” ….? உங்களின் பார்வையில் இவர்களை எந்த கோணத்தில் பார்க்கிறீர்கள் என்பதை பற்றி எழுதுங்களேன் …. செய்வீர்களா ….?
Article in economic times: For the benefit of ADMK sombus
CHENNAI: A chief minister for almost three terms, J Jayalalithaa is not new to disasters or disaster management, but this time there are questions if her style of governance–one of micro-managing–was the Achilles Heel that turned a potential disaster into a catastrophe.
As Tamil Nadu’s capital struggles to recover from its worst flooding in recent memory, there is growing public anger about the administration’s response to the disaster as well a political backlash ahead of assembly elections next year. Jayalalithaa, who rarely speaks in public, has kept a stoic silence amid accusations that her government was leaden-footed in dealing with the flooding that paralysed the city for days on end.
People familiar with Jayalalithaa’s style are of the view that the AIADMK regime is highly centralised now and a ‘note’ from chief minister is expected for even small tasks. Retired IAS officer M G Devasahayam contrasted the Jayalalithaa government’s lethargic response to the Chennai flood with the nimble-footed reaction to disasters in her previous administration.
“This is a chief minister who handled the double whammy in 2004 (tsunami) and 2005 (floods) extremely efficiently. The state already has an administrative decision-making hierarchy and technical decision-making hierarchy,” said Devasahayam, who was the chief administrator of the Haryana Urban Development Authority. “This has been rendered redundant now with all decisions being centralised.”
Many reports are emerging now about the delay in decision-making, especially about releasing water from the sluice gates of the Chembarambakkam reservoir which flooded the already swelling Adayar river flowing through the heart of Chennai. The opposition has got a handle now to whip the state government saying that small decisions that needed to have been taken at a local level waited for the chief minister’s nod, and by the time they came, it was too late.
DMK leader and former Public Works Department minister for many years, Duraimurugan said “The decision of lifting the sluice gates of Chembarambakkam need not have been waiting at the Chief Secretary’s office, who in turn was sending a note across to the chief minister for approval. If the PWD Minister was in touch with his officials and was assessing the situation constantly, the situation could have been handled much more efficiently.”
According to Duraimurugan, engineers at Chembarambakkam had issued several alerts to the state administration but did not get a response immediately. “These Engineers were just left to themselves with no one from the bureaucracy or the PWD ministry coordinating with them,” Duraimurugan claimed.
The chief secretary, K Gnanadesikan, could not be reached for a response.
As chief minister between 2001 and 2006 Jayalalithaa quickly established a disaster management team with four of her best civil servants and delegated powers so that they could handle the post-tsunami rehabilitation and the subsequent flooding in Chennai and other parts of Tamil Nadu. “The same officials who had the expertise to handle a tsunami are still around in the state bureaucracy’ they are also working efficiently now, but this time around the delegation of powers seem to be missing,” said Devasahayam, an expert in urban governance who was also the administrator of the Chandigarh Capital project.
The chief minister’s office did not reply to a detailed set of questions.
Amid reports of lack of coordination between departments, the Indian Army teams that reached as the floods were ravaging the city and its outskirts were made to wait for hours before being told which areas to go to and undertake rescue operations. An Army official said, “Yes, there were teething problems, but in a disaster of mammoth proportions like this, teething problems are likely to be there.” Another army source on condition of anonymity said that the lack of coordination even affected distribution of relief materials that arrived in naval ships. The Indian Navy’s public relations office declined to comment.
A city police official said that they had no idea that the water being released from Chembarambakkam would maroon the entire city. “We were only alerting people on the river banks. We had no clue about the size of the devastation,” the middle-level official said.
While the police department comes directly under the purview of the chief minister who holds the home portfolio, even the police said they had no idea of what was coming. “We could not immediately help stranded people locally because we were not prepared in terms of equipment or boats,” the officials added.
“I wonder if this micro-management style of functioning is turning into something mysterious where the leader is actually being cut-off from vital information and a coterie around her is controlling the entire situation by creating a myth that every decision needs to have Amma’s consent” said Devasahayam, referring to the chief minister by her sobriquet.
சென்ற திமுக ஆட்சியில் தவறுகள் நடந்திருக்கலாம். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லும் ஸ்டாலினே, ஈழத்திலே எம் மக்கள் கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்டுக் கொண்டு இருந்த வேளையிலே, உங்கள் அப்பன் இங்கே ஆட்சியை நடத்திக் கொண்டு இருந்ததே பெரும் தவறு தான் என்று நாங்கள் சொல்கிறோம், நீ என்னவென்றால், அந்த ஆட்சியில் நடந்த தவறு பற்றி பேசிக் கொண்டு இருக்கிறாய். மரியாதையாக ஓடி விடு, எங்கள் வயிற்றெரிச்சலைக் கிளப்பாமல் !
#DMKFails
கனமழையில் உருக்குலைந்து போயிருந்த சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு உதவி செய்ய விட்டாலும் போகட்டும், திரு ஸ்டாலின் அவர்கள் தன் 100க்கு மேற்பட்ட கட்சி தொண்டர்ககள், பாதுகாவலர்கள் மற்றும் போட்டோ குழுவினர்களுடன் வந்து அவர் நடத்திய நாடகம் மிகவும் வருத்தப்பட கூடிய ஒன்று. அரசு அதிகாரிகளும், தொழிலாளிகளும், சேவை நிறுவனங்களும், தன்னார்வலர்களும் மிகவும் கஷ்டப்பட்டு தண்ணீரை வெளியேற்றவும், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரவும், உணவுகள் மற்றும் மருந்து பொருள்களை விநியோகம் செய்து கொண்டு இருக்க, இவர் தெருவுக்கு தெரு சென்று தன்னைத் தானே போட்டோ எடுத்து facebook , twitter மற்றும் whatsappல் அனுப்பி கொண்டு அரசையும் வேலை செய்வோரையும் பற்றி குறை கூறி தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்பதை மட்டுமே குறிக்கோளாக இருந்தார். 100க்கும் மேற்பட்டோர் திமுக கரை வேட்டிகளுடன் குறுகிய தெருக்களின் நடந்து வந்து மக்களுக்கு உதவி செய்வோருக்கு இடைஞ்சலாக இருந்து வருகிறார்.
இவர் நடந்த ஒவ்வொரு அடியும் வாயில் இருந்து சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும், திரும்பும் தலையும், ஆடும் கைகளும் இவர் பின்னால் உள்ள டிராமா குழு உருவாக்கியது தான். அதனால் தான் ஈவு இரக்கமே இல்லாமல் இவருடைய கொளத்தூர் தொகுதியில் மக்கள் துயரத்தில் வாடும் போது, 100 பேருடன் வந்த இவர், அதிகாரிகள் நீரை வெளியேற்றா விட்டால் போராட்டம் நடத்துவேன் என்று கூறினார். தொகுதி இவருடையது. இவருக்குத்தான் மக்கள் வாக்களித்தார்கள். தொகுதியில் உள்ள அதிகாரிகளும் தொழிலாளர்களும் இவர் சொன்னால் கேட்ட கடமை பட்டவர்கள் தான். தன்னிடைய தொகுதியில் இவருக்கு தானே நீரை எங்கு வெளியேற்றுவது போன்றவை தெரிந்து இருக்க வேண்டும். காரணம் இது மட்டும் அல்ல.
இவருக்கு பின்னால் இருந்தும் இயக்கம் இயக்குனரின் திட்டத்தில் மக்களுக்கு உதவுவது பற்றி ஒரு Ideaவும் இல்லாதது தான் காரணம். ‘போராட்டம் நடத்துவேன்’ என்று எழுதி கொடுத்ததை மனப்பாடம் செய்து பத்திரிக்கைகாரர்களிடம் ஒப்பித்தால் போதுமானது.
உண்மையில் இவர் ஒரு ரொபட் ஆக வலம் வருகிறார்.
மீத்தேன் திட்டத்தில் தெரியாமல் கையெழுத்திட்டேன். -ஸ்டாலின்
தெரியாமல் உங்க சொத்து பத்திரத்தில் கையெழுத்து போடுவீர்களா?
அதிமுக அடிமையே, ஒரு வெள்ளத்தை ஒழுங்காக சமாளிக்க முடியாத நிர்வாக திறன் இல்லாத அரசை கேள்வி கேட்க வக்கில்லை உனக்கு.. நாடே இந்த அம்மாவை காரித்துப்புகிறது. அனால் அதை பற்றியெல்லாம் கேள்வி கேட்க துப்பில்லை உனக்கு. ஆட்சியில் இல்லாத கருணாவையும் ஸ்டாலினையும் குற்றம் சொல்லியே அம்மாவின் தவறுகளை எல்லாம் திசை திருப்பி விடலாம் என உன் போன்ற அடிமைகளின் கனவு பலிக்கப்போவதில்லை. இந்த முறை கோமளவல்லி துரத்தி அடிக்கப்படுவார்.
AIADMK is going for sure… no doubt but never dream for DMK to gain power using this situation as you DMK Allkai’s want to and screaming here for people not to discuss DMK/stalin. looters. DMK allkai’s pissing in pant to see other parties gaining the votes due to AIADMK downfall when they expect for DMK.. You DMK Allkai’s take some chillies and rub on your ass and be cool. enna karanum adichalum DMK/Stalin no way can come back to power. people are totally angry against this two. they know stalin’d drama
ஊழல்வாதிகளுக்கு இந்த தேர்தலில் சீட் இல்லை – தபால்பதி
அப்ப உங்க குடும்பத்துக்கே சீட் இல்லையா?