தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் அதிமுக அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசிக் கொண்டு வருகிறது. முடங்கிப் போன நிர்வாகம், பெருகிய ஊழல், செயல்படாத அரசு, தலைகாட்டாத முதல்வர் என்று அனைத்துத் துறைகளிலும் அதிமுக அரசு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு தேர்தலை சந்தித்தபோது, மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார் ஜெயலலிதா. கடந்த வாரம் சட்டப்பேரவையில் பேசுகையில், “அரசில் 36 துறைகள் உள்ளன. 5 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் செய்யப்பட்டுள்ள சாதனைகளையும் சொல்ல வேண்டுமானால் 36 நாட்கள் பதில் வழங்க வேண்டும். அவற்றை ஒன்றரை மணி நேரத்தில் சொல்லும் அளவுக்கு சுருக்கி, பார்த்து பார்த்து இந்த பதிலுரை தயாரிக்கப்பட்டுள்ளது.
எங்கள் செயல்பாடுகள், திட்டங்கள் எல்லாம் மக்களுக்காகத்தான். எங்களுக்கு எந்த சுயநலமும் இல்லை. பொது நலம், மக்கள் நலம் மட்டும்தான். அதிமுக உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட இயக்கம். நான் இருக்கும் வரை, இந்த இயக்கம் மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அதிமுக மக்களுக்காகவே இயங்கும்” என்று கூறினார் ஜெயலலிதா.
உண்மையில் சொன்னதை செய்தாரா ? அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியது என்ன. செய்துள்ளது என்ன ?
விவசாயத்துறையை பொருத்தவரை, அதிமுக தேர்தல் அறிக்கையில், அரிசி உற்பத்தி, 8.6 மில்லியன் டன்களில் இருந்து, 13.45 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
2013-14 புள்ளி விபரக் கணக்குகளின்படி, அரிசி உற்பத்தி 7.1 டன்னாக குறைந்துள்ளது.
விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை 2 முதல் 3 மடங்கு உயர்த்த புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்றார் ஜெயலலிதா.
ஆனால் அப்படி எந்தத் திட்டமும் உருவாக்கப்படவில்லை.
விலைவாசியைக் குறைக்க சிறப்புத் திட்டம் கொண்டு வரப்படும் என்றார். இணையத்தில் ஊக வணிகம் தடை செய்யப்படும்.
இரண்டுமே செய்யப்படவில்லை.
கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2500 வழங்கப்படும் ன்று 2011ல் அறிவித்தார் ஜெயலலிதா.
ஜனவரி 2016ல் கரும்பு விலை 2650 ஆக உயர்த்தப்பட்டது.
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அம்மா குடிநீர் என்று அறிவித்து, ஒரு லிட்டர் குடிநீரை 10 ரூபாய்க்கு விற்றதுதான் நடந்தது. இத்திட்டத்தின் மூலம் 5.6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார். ஆனால் எந்த வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை.
அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் மிகுந்த வீடுகள் கட்டித் தரப்படும்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டித்தரப்படும் என்று அறிவித்த 10 ஆயிரம் வீடுகள் கூட கட்டித்தரப்பட வில்லை. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த முயற்சிகளையும் அரசு எடுக்கவில்லை.
அனைத்து கிராமங்களுக்கும் 4 ஆண்டுகளுக்குள் தடையில்லா 3 ஃபேஸ் மின்சாரம் வழங்கப்படும். 2013ம் ஆண்டுக்குள் 5000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரே ஒரு மெகாவாட் மின்சாரம் கூட புதிதாக உற்பத்தி செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை. திமுக ஆட்சிகாலத்தில் திட்டமிடப்பட்ட எண்ணூர் மற்றும் உடன்குடி மின் திட்டங்களும், டெண்டரில் செய்த குளறுபடிகளால் நீதிமன்ற வழக்குகளில் இத்திட்டங்கள் முடங்கியுள்ளன. ஒரு மெகாவாட் மின்சாரம் கூட புதிதாக உற்பத்தி செய்யாமல், தனியாரிடமிருந்து ஒரு யூனிட் 13 ரூபாய்க்கு வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
2012ம் ஆண்டுக்குள், 151 மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் குப்பையிலிருந்து 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். 160 கிராமப் பஞ்சாயத்துகளில் 150 கிலோ வாட் பயோ கேஸ் மின்சாரம் தயாரிக்கப்படும்.
குப்பைகளைக் கூட ஒழுங்காக வாராத அரசு என்று பெயர் வாங்கியதைத் தவிர, எதையுமே செய்யவில்லை அதிமுக அரசு.
இத்திட்டங்களின் மூலம், 1,20,000 கோடி கூடுதல் வருமானத்தை 5 வருடங்களில் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்தகைய சிறப்புத் திட்டங்களின் மூலம், ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்ற தலைகுனிவில் இருந்து தமிழகத்தை மீட்டு, நீடித்த வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்.
மார்ச் 2016 அன்று உள்ளபடி, தமிழகத்தின் மொத்த கடன் 2,16,000 கோடி என்று தமிழகத்தின் நிதித் துறை செயலாளரே அறிவித்துள்ளார். இந்தியாவில் கடன் வாங்காத மாநிலமே கிடையாது என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகிறார். இப்படி தமிழகத்தின் கடனை இரட்டிப்பாக்கியதைத் தவிர வேறு எந்த சாதனையும் அதிமுக அரசு செய்யவில்லை.
விவசாய உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் பூங்காக்கள், குளிர்பதன கிடங்குகள், தொழிற்பூங்காக்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்படும். குறைந்த விலையில் காய்கறிகள் பழங்கள் மற்றும் அனைத்து விவசாயப் பொருட்களும் மக்களுக்கு விரைந்து கிடைக்கிற வகையில் நவீன மக்கள் சந்தைகள் அமைக்கப்படும்.
1996-2001 திமுக ஆட்சிக் காலத்தில் இருந்த உழவர் சந்தைகளை மூடியதுதான் ஜெயலலிதாவின் சாதனை. இது போன்ற எந்த சந்தைகளையும் அமைக்கவில்லை.
விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட 6 ஆடை அலங்கார சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். இதனால் 70 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.
நிறைவேற்றப்படவில்லை.
பால் உற்பத்தி 2.5 மில்லியன் லிட்டரில் இருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2013-2014 புள்ளி விபரத்தின்படி 7.04 மில்லியன் டன்னாக பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. பால் விலையை கணிசமான உயர்த்தியது அதிமுக அரசு என்பதும் குறிப்பிடத்தக்கது.
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.
நிறைவேற்றப்பட்டுள்து.
மாணவர்களின் புத்தகச்சுமை குறைக்கப்படும். பள்ளிக் கல்வியின் நடைமுறைக் குறைபாடுகள் நீக்கப்படும்.
சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்வதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியதுதான் ஜெயலலிதா ஆட்சியின் லட்சணம்.
பல்கலைக்கழகங்கள் தனித்தன்மையுடன் இயங்க 12 அம்ச திட்டங்கள் தீட்டப்பட்டு, பல்கலைக்கழங்களின் தரம் உலகத் தரத்திற்கு இணையாக உயர்த்தப்படும்.
இன்றைய தேதிக்கு தமிழகத்தின் 8 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் இல்லை. அண்ணா பல்கலைக்கழகம் உட்பட, தமிழகத்தின் அனைத்துப பல்கலைக்கழக நியமனங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. துணை வேந்தர் பதவிக்கு 14 கோடி லஞ்சம் பெறப்படுவதாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
மாணவர்களின் பன்முகத்திறனை ஊக்குவிக்க தனித்திறமை மற்றும் அறிவுசார் கழகம் உருவாக்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும்.
அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. லேப்டாப் வழங்குகையில், இலவச மென்பொருளான லைனக்ஸ் மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து, விண்டோஸ் மின்பொருளோடு கூடிய லேப்டாப்பை வாங்கினார் ஜெயலலிதா. அறிவுசார் கழகம் உருவாக்கப்படவில்லை.
இலவச ஃபேன் மிக்சி கிரைண்டர் வழங்கப்படும்.
நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக நதிகளை நீர்வழிச்சாலை மூலம் இணைத்து, தண்ணீர் வீணாகாமல் வெள்ளப்பெருக்கு நீரையும் வரைமுறைப்படுத்தி, பாசனத்திற்கு பயன்படுத்தப்படும். தமிழக நதிகளை இணைக்கும் நவீன நீர்வழிச் சாலை, உலகவங்கி கடன் உதவியோடு அமைக்கப்படும்.
நீர்நிலைகளை இணைத்து, வெள்ளப்பெருக்கு நீரை சேமிக்கும் லட்சணத்தை சமீபத்திய வெள்ளத்தில் பார்த்தோம்.
அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரண்முறை, உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் நிறைவு செய்யப்படும்.
அரசு ஊழியர்கள் தங்கள் குறைகள் குறித்து பேசுவதற்காக கடந்த ஐந்தாண்டுகளாக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு, கிடைக்காத காரணத்தால், படிப்படியாக பல்வேறு போராட்டங்களில் இறங்கி, பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை இரண்டு மடங்காக்குவோம்.
இரண்டு மடங்காக்கி கிழிப்பது இருக்கட்டும். ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளும், கடையை காலி செய்து விட்டு அண்டை மாநிலங்களுக்கு செல்லும் நிலைமைதான் தமிழகத்தில் நிலவுகிறது.
சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவைக்கு சிங்கப்பூரில் உள்ளது போல மோனோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
கட்டி முடிக்கப்பட்ட மெட்ரோ ரயிலே, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக காத்துக் கிடந்தது தமிழகத்தில் நடந்தது. மோனோ ரயில் சாத்தியப்படாது என்று நிபுணர்கள் தெளிவாக தெரிவித்து விட்ட நிலையில், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக எவ்வித தயவுதாட்சண்யமின்றி நிலை நாட்டப்படும். மக்கள் அமைதியாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி சந்தி சிரிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. உள்துறையை கையில் வைத்திருக்கும் ஜெயலலிதா தமிழக சட்டம் ஒழுங்கை ஒழுங்காக பராமரிக்கத் தெரியாமல் கோட்டை விட்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும். கொலைகள், கொள்ளைகள், திருட்டுக்கள் என்று குற்றங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் இருக்கிறது.
சென்னையை மட்டுமே சார்ந்து புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதால், தமிழகத்தின் தெற்கு, கிழக்கு, மற்றும் மேற்கு பகுதிகளுக்கும் அதை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்டோமொகைல், தொலைத் தொடர்பு, எலெக்ட்ரானிக்ஸ், மற்றும் கட்டுமானத் துறை, கப்பல் கட்டும் துறை, போன்ற துறைகள் ஊக்குவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். சிறுதொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கப்பல் கட்டுமானத் துறையில் 10,000 கோடி அந்நிய முதலீட்டுக்கு வழிவகை செய்யப்படும்.
சிறப்புத் தொழிற் கொள்கை உருவாக்கப்பட்டு ஒற்றைச் சாளர முறையில் வெளிநாட்டு முதலீட்டை கவர திட்டம் தீட்டி தொழில் துறை முன்னேற்றத்திற்கு நீர்மிகு நடவடிக்கை எடுக்கப்படும்.
2011ம் ஆண்டில் ஜெயலலிதா பதவியேற்றதிலிருந்து ஒரே ஒரு புதிய தொழில் கூட தொடங்கப்படவில்லை. இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்பட்ட தமிழகம், தொழில் துறையில் அதளபாதாளத்திற்கு வீழ்ந்தது. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகியவை, முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்கி, முதலீடுகளை வரவேற்று வந்த நிலையில், தமிழகத்தில் முதல்வரையே சந்திக்க முடியாத ஒரு அவலச் சூழல் நிலவியது. முதல்வரை சந்திக்க முடியாதது மட்டுமல்ல, அப்படியே சந்தித்தாலும், தொழில் தொடங்க வருபவர்களிடம் 25 சதவகிதிம் கட்சி நிதி என்று கறாராக கேட்டதன் காரணமாக பல்வேறு தொழில் அதிபர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். ஆட்சி முடியப்போகிற கடைசி கட்டத்தில், முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை நடத்தி, அதில் 2,42,000 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்று நாடகமாடியதைத் தவிர்த்து, தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்காக ஜெயலலிதா எதையுமே செய்யவில்லை.
கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகம் தொழில்துறையில் சந்தித்த பின்னடைவை வேறு எப்போதும் சந்தித்தது கிடையாது.
போக்குவரத்துத் துறை நவீனப்படுத்தப்படும். கூடுதலான நவீன பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படும்.
ஓட்டை உடைசலாக ஓடும் தமிழக பேருந்துகளின் படங்கள் சமூக வலைத்தளங்கள் முழுக்க உலவிக் கொண்டிருக்கின்றன. தமிழக போக்குவரத்துத் துறை மிக மிக மோசமான சீரழிவை சந்தித்துள்ளது.
இவையெல்லாம் புரட்சித் தலைவி அறிவித்தது. ஆனால், சொல்லாமலேயே பலவற்றை செய்து மிகச்சிறந்த சாதனையாளராகியிருக்கிறார் ஜெயலலிதா.
தமிழக மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தையும் தனது சொந்தப் பணத்தில் செயல்படுத்துவது போல, “நான்” “எனது” என்று மார்தட்டிக் கொள்வது. வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள், இலவச பொருட்கள் அனைத்திலும் தன் படத்தை வெட்கமே இல்லாமல் ஒட்டிக் கொள்வது.
திமுக தலைவர் கருணாநிதி படம் இருந்தது என்பதற்காக, லட்சக்கணக்கான பாடப்புத்தகங்களை கிழித்தது.
அற்புதமான முறையில் உருவாக்கப்பட்டிருந்த அண்ணா நூலகத்தை எப்படியாவது முடக்க கடுமையாக முனைந்தது. நீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் பின்னடைவை சந்தித்த பிறகு, நூலகத்தை திருமண நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விட்டது.
கூடங்குளம் மக்களுக்கு ஆதரவு தருவது போல நடித்து, இடைத்தேர்தல் முடிந்ததும் அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்தது.
பேருந்துக் கட்டணம், பால் விலை மற்றும மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியது. இத்தனை கட்டண உயர்வுகளுக்குப் பிறகும், தமிழகத்தின் கடன் சுமையை அதிகரித்தது.
சட்டசபையை துதிபாடும் அரங்கமாக மாற்றியது. எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறித்தது.
அடிப்படை வசதிகளான சாலை வசதிகளைக் கூட செய்து தராமல், மக்களை பரிதவிக்க விட்டது.
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை கொடநாட்டில் ஓய்வெடுத்தது.
மக்கள் நலப் பணியாளர்களை நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பின்னாலும் பணி நீக்கம் செய்தது.
தமிழக மக்களை குடிக்கு அடிமையாக்கியது காவல்துறை பாதுகாப்போடு டாஸ்மாக்கை நடத்தி சாதனை புரிந்தது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற ஒரே முதல்வர் என்ற பெருமை
சிறையிலிருந்து விடுதலை அடைய வேண்டி அமைச்சர்களும், இதர அடிமைகளும் மண் சோறு தின்றது, காவடி எடுத்தது, அலகு குத்தியது.
விஸ்வரூபம் திரைப்படத்தின் மூலம் அற்பத்தனமாக அரசியல் ஆதாயம் தேடியது.
அப்துல் கலாம் மரணத்திற்கு கூட செல்லாமல் ஓய்வெடுத்தது.
செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டு சென்னை நகரை மிதக்க விட்டது.
வெள்ள நிவாரணத்துக்கு வந்த பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியது.
எதிர்த்துப் பேசியவர்கள், எழுதியவர்கள் மீதெல்லாம் அவதூறு வழக்கு போட்டது.
டாஸ்மாக்கை எதிர்த்து பாடல் பாடியவரை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது.
இந்தியாவிலேயே இல்லாத வகையில், செய்தி வாசிப்பாளர் மீது அவதூறு வழக்கு போட்டது.
வருடந்தோறும் நடக்கும் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் மாநாடுகளை நடத்தாமல் நிறுத்தியது.
இப்படி சொல்லாமல் செய்த சாதனைகள் ஏராளம். மொத்தத்தில், தமிழகம், ஜெயலலிதாவின் ஆட்சியில், தீராத வேதனைகளையே சந்தித்துள்ளது.
ஆனால் ஜெயலலிதாவோ, ஒவ்வொரு துறையின் சாதனைகளையும் சொல்ல ஒரு நாள் போதாது என்கிறார். ஜெயலலிதாவின் இந்தப் பொய்களை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தண்டனை அளிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
மண் மூடிப்போன எங்கள் தமிழ் இனத்தின் சாபம் வீண் போகாது. இந்த தேர்தலுடன் thimuka தமிழின கொலைஞரின் திமுக மண்மூடிபோகட்டும். அடிமை ராணியின் ஆட்சியை அடுத்த தேர்தல் தீர்மானிக்கட்டும்
அ தி மு க மின்சார உற்பத்தி அதிக படுத்தியதா என்பது தெரியாது. ஆனால் திமுக ஆட்சியில் தென் தமிழ்நாட்டு மாநிலங்களில் 18 மணி நேரம் மின் வெட்டு இருந்தது உண்மை. பல சிறுதொழில்கள் மண் மூடி போனது உண்மை. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு மறைந்ததும் உண்மை. அதிமுக வை விட எந்த விதத்திலும் உருப்படியான கட்சி என்று திமுக மார்தட்ட முடியாது . ஊர் கண்டு பிடிக்க முடியாமல் ஊழல் செய்வதில் அவர்களுக்க் இணை இல்லை .
I think savukku was encountered by J
Ellorukkum 2acre land endru pulukhiyathuthaan karunas achievement.tn debt is well within fisc objectives .
சவுக்கு சார் ஏன் சமீப காலங்களில் உங்கள் பதிவுகள் காணவில்லை
இல்லை வேறு ஏதேனும் தளத்தில் பதிவிடுகிறீர்களா
Sanker sir where are you…….?
In Tamilnadu, we have to select the parties based on bad, poor and worst. no party is good.
we can’t forgot the corruption of DMK as well as ADMK
The leaders should feel ashame for this but they wouldn’t, they are not leaders they are blood suckers.
DMK is leader in corruption and all sort of bad things.
savukku started count down, one way good but which devil is going to come that is bigger shock than this.
இங்கு கபடர் கூட்டத்தலைவன் தனது ஆட்சிக்காலத்தில் எத்தனை சி வாங்கினான் என்று தெரியவில்லை
கேரளாவில் இருந்து கடற்கரை வழியாக பைப்லைன் போட்டு எடுத்துச்செல் சொல்ல துப்பில்லாமல்
வழக்கம் போல் முதுகில் குத்தினான்,
அப்பீலுக்கு போக வேண்டும் என்று கபட மவுனம் காக்கிறான்
ஆளும் அடிமை கூட்டத்தலைவின் ஆசி பெற்ற 37 அடிமைகள் பாராளுமன்றம் அனுப்பி வைக்கப்பட்டார்கள்
நம்மால் காசுவாங்கிக்கொண்டு.
இந்த 37 அடிமைகளும் இரண்டு விசயங்களுக்காக வாயை திறப்பார்கள் ஒன்று பார்லிமெண்ட் கேண்டினில்
தின்பதற்கு மற்றொன்று மாண்புமிகு இதயதெய்வம் என்று அடிமை கீதம் பாடுவதற்கு.
தான் கொள்ளையடித்த ஊழல் வழக்குகளில் தப்பிபதற்கு கோடிக்கணக்கில் செலவழித்து வாதடுவார்
ஆனால் கெயில் பைப்லைன் போன்ற வழக்குகளில் ஆ.ராசா போன்ற மரத்தடி வக்கீலை வைத்து வாதடுகிறார்.
இதற்கெல்லாம் மூல காரணம் இரண்டு கிழட்டு விபச்சாரி மகன்ங்கள்.
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்னன் இந்த வழக்கு குறித்து நான் பேச விரும்பவில்லை என்கிறார்.
ஏழு மாவட்ட மக்கள் நாங்கள் வாக்காளிக்க விரும்பவில்லை என்று சொன்னால்
நீங்கள் கேரளாவிலும் இலங்கையிலும் சென்றுதான் வாக்கு சேகரிக்க வேண்டும்.
ஆகையால் இந்த விடயத்தில் திருட்டு கழகம்.அடிமை கழகம்.இத்தாலியன் மாபிய காங்கிரஸ், பாரதிய கார்ப்பரேட்
கட்சிகளை புறக்கணிக்கவில்லை என்றால் உங்களது கோவணத்தையும் உருவி விடுவார்கள்.
இப்பொழுது சவுக்கும் ஒட்டடை படிந்து காணப்படுகிறது
சங்கர் நம்ம சாதிக்காரானா இருந்து கொண்டு இப்படி எழுதலாமா???
என்று கனமா கவனிச்சிருப்பாங்களோ ?????
நம்ம ஆட்சி வநததும் ஜாபர் சேட்ட உனக்கு டாவாலி ஆக்கிருவம்ய்யா என்று சொல்லியிருப்பார்கள்
தலைவர் : வணக்கம். எங்களை மன்னித்து விடுங்கள்… நாங்கள் கடந்த ஆட்சியில் சில தவறுகள் செய்துவிட்டோம்.
மக்கள் : ஓஹோ…. என்ன என்ன தவறுகள் செய்தீர்கள் ?
தலைவர் : கடந்த ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடுகள் இருந்தன…. லஞ்ச ஊழல் கடுமையாக இருந்தது…. ஏரி, குளங்கள் கூட தூர் வாரப்படவில்லை…..நீர் வழித்தடங்கள் எல்லாம் ஆக்கிரமிப்பு செய்தோம். அதனால் தான் சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. இது சிறு தவறுதான்.
மக்கள் : ஓஹோ….அப்புறம் ?
தலைவர் : தாது மணல் கொள்ளை நடந்தது. மக்களுக்கு சேர வேண்டிய பல ஆயிரம் கோடிகள் தனியார் கொள்ளை அடித்து அந்தப் பணத்தினை பதுக்கினார்கள். எங்களுக்கும் பங்கு கிடைத்தது.
மக்கள் : ஓஹோ….அப்புறம் ?
தலைவர் : கிரானைட் கொள்ளை நடந்தது. கடந்த இருபது வருடங்களாக கொள்ளை நடந்தது என்று சகாயம் கூட சொன்னாரே ? தெரியும் இல்லையா ?
மக்கள் : நல்ல தெரியுமே. கடந்த இருபது வருடங்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் கொள்ளை நடந்ததாக சொன்னாரே.
தலைவர் : ஆமாம், இது சிறு தவறுதான்.
மக்கள் : ஓஹோ….அப்புறம் ?
தலைவர் : எங்கள் ஆட்சியில் ஆற்று மணல் கொள்ளை நடந்தது. இது சிறு தவறுதான்.
மக்கள் : ஓஹோ….அப்புறம் ?
தலைவர் : மது விற்பனை மூலம் நல்ல வருமானம் கிடைத்தது. எங்கள் கட்சிக்காரர்களும் ஐந்து மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கினோம். எங்கள் குடும்பத்திற்கும் நல்ல பங்கு கிடைத்தது. எதிர்க்கட்சி காரர்கள் சில மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வைத்து இருந்தார்கள். அவர்களுக்கும் பணம் நிறைய கிடைத்தது. நாங்கள் இருவரும் இதில் கூட்டாளிகள் .
மக்கள் : ஓஹோ….அப்புறம் ?
தலைவர் : நாங்கள் மின்சாரம் தயாரிக்க வில்லை. அந்த பணத்தில் இலவசங்கள் கொடுத்து மக்களை ஏமாற்றினோம்.
மக்கள் : ஓஹோ….அப்புறம் ?
தலைவர் : அதனால், எங்கள் கட்சிக்கு ஓட்டு போடுங்கள். நாங்கள் தவறு செய்தாலும் இது போன்ற சிறு சிறு தவறுகள் தான் செய்வோம். எங்களுக்கு ஓட்டு போடுவீர்களா ?
மக்கள்: ஆம். நாங்கள் முடிவு செய்துவிட்டோம். உங்களுக்கும், உங்கள் ‘கொள்ளை’ பங்காளிகளுக்கும் ஓட்டு போடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டோம். நன்றி. நீங்கள் கிளம்பலாம்.
( மக்களே, இதனை Facebook, WhatsApp வழியாக பல லட்சம் மக்களை சென்று அடைய செய்வோம் ).
thoo karunanidhi thevaidya mavan
Thooo thevudiyaa…..
இக்கரைக்கு அக்கறை பச்சை என்பது போல ஜெ..கருணாநிதி இருவரும் ஒருவரைவிட ஒருவர் சிறந்த ஊழல் பெருச்சாளிகள்.ஆனால் தமிழனின் தலையெழுத்து இவர்களை வேறு ஆள் இல்லை.வெறு ஓருவரை வரவும் விடமாட்டார்கள்.விஜயகாந்த்.பாமக அன்புமணி ,வைகோ போன்றவர்கள் இனி எப்பொழுதும் முதல்வராக கனவுவேண்டுமானால் காணலாம்
சரி ஜெயலலிதா என்ற சாக்கடையை 2016 வரவிருக்கும் தேர்தலில் மூடிவிட்டோம் என்று வைத்துக்கொள்ளுவோம், அடுத்து அந்த இடத்தை ஆக்கிரமித்து சங்காரம் செய்ய காத்திருப்பது நாறி புழுத்து நாட்டையே காவுகொள்ள காத்திருக்கும் கருணாநிதி என்ற கழிப்பறை அப்போ என்ன செய்யலாம்?
இப்படியே இவங்க ரெண்டு பேருதான் இருக்காங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி?? வைகோ போற்றவர்களை ஆதரிப்போமே.. மூன்றாவது அணிக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போமே
sariyaga sonneer.. tharpothaya nilamaiku idhuve sirantha theervu..
Giving red carpet welcome to a person who goes on vacation, its the most pathetic thing to do in this world. If the party men spend money in a huge amount, then how will they earn it back?? offcourse they gonna loot our money.
போங்கடா நீங்களும் உங்க அரசியலும். மொத்த ஊரையும் பாழ் படுத்தி நீங்களும் கோர்ட்டுக்கும் ஜெயிலுக்கும் அலைந்து தொலைங்க. உங்கள சொல்லி குற்றம் இல்ல. இன்னும் ஜனநாயகம் மேல நம்பிக்கை வைத்து ஓட்டு சாவடி போய் ஓட்டு போடற ஜனங்கள நினைச்சா பாவமா இருக்கு.
DMK’s achievements. ( some thing that i can do for kelavan sudalin and karunanidhi)
1. 2g mega great world scandal. Caught red handed by accepting 200 crore scam money for kalignar TV where main dmk family members kanimozhi, karunanidhi wife daylu main accused with substantial evidence.
2, Introduced 12 -14 hours power cut to all over tamilnadu to favour few industries in chennai for commission
3, unprecedented price raise.
5, land mafia under DMK ministers looted agriculture lands to real estate plots
6, DMK ministers and DMK secretaries in each region acted as small kings looted others properties like malls, cinema theatre’s, bus routes by black mailing.
7, DMK leaders watching namitha show and delighted with paid self praise shows.
8, Official sathik basha murder the witness in 2g scam. Ex DMK minister kiruttinan murder for DMK family interest.
Prison ex Ministers for looting others properties using political weight like kn nehru, ponmudi, veerapandi arumugam.
NKKP Raja for beating a man in open public for not accepting to agree to the demand to sell his land.
9, In the corruption of sand querying, granite querying, ration rice hijack, horlicks bottle scam
10, all headlines dayalu ammal (karunanidhi wife) Kanimozhi, Raja, dyanathi maran blockage in jail on various corruption charges.
The supreme Court denied bail and closed in tihar. Dayalu ammal to avoid jail quoted famous “alzemeir” disease pathetically.
11, Indian history of sakria commissison ruling of skillful scientific corruption to karunanidhi. later escaped from court sentence by making and begging to indra gandhi to with draw the case in exchange tamil nadu core interest like katcha thivvu, cauvery water etc
12, With proxy tatumanal corruption
13, Stalin and kanimozhi 5000 crore deal for malls in coimbatore, chennai etc
14, Police launched murderous attacks on lawyers and judges before the court.
15, Anti-Dalit and Anti backward class policies
17, court warned of law and order for numerous thefts and day time robbery.
18, Massacre of honest officers.
20, Blocked Granite investigation as Alagiri and dayanathi alagiri son/ grand son of karunanidhi directly involved.
21, cancellation of subsidies for the elderly.
22, Acting before public for liquor ban to cheat peopls when doing nothing for liquor ban during DMK rule when 60 % of DMK ministers and party mens owing the liquor factory that supplies liquor to tasmaq.
23, Used DMK supporter Cowan using corrupt money to raise voice for liquor ban hiding the facts DMK is the reason who brought liquor into the state.
25, Spend time watching “manda mayilada” the famous half nude namitha show with zero governance while the state was in 14 hours power cut.
26, Thirumangalam success the famous vote for money introduction by alagiri (son of karunanidhi)
27, Gave away Tamil nadu’s core river and dam interest like mullai periyar , cauvery to congress demand just for few ministerial posts to enjoy the looting and corruption in central government port folio’s.
28, Just for family interest and few ministerial posts that are key critical corrupt posts for looting, gave away Ellem tamil peoples and supported the congress/rajabaksha to lead the war that kill lakhs of peoples.
29, Famous three hours fasting drama for ellam war and cheated the TN people.
30, Went for most destructive Methane project approval by Stalin in the interest of corrupt commission money (http://www.thehindu.com/news/national/tamil-nadu/mou-signed-for-production-of-coal-bed-methane/article1033130.ece) even after knowing that it would spoil the entire lively hood of farming and farmers in delta to stone age from activist like nam alvar by repeated protest. As when caught red handed cunningly and shamelessly asking sorry as he signed with out knowing it.
31, Awarded Mani megali sonia for giving family members posts in central government and discarded Ellem peoples, southern districts peoples interest in mullai periyar.
32, Introduced family culture in politics discarding the core principles of DMK by its founding members like Annadurai.
இதற்குமேல எழுதற பொறுமை எனக்கில்லையே தவிர இது கையளவுதான்…இன்னும் கடலளவு இருக்கு
well said.
இது, இன்றைய பராசக்தி கருணாநிதி- இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களை கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமுமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப்பாதையிலே சர்வ சாதாரணமாக காணக்கூடிய ஜீவன்தான். தமிழக அரசியலில் குழப்பம் விளைவித்தேன். முதல்வரை தாக்கி அவதூறாக எழுதினேன் என்றுகுற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் . நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்… நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று… இல்லைநிச்சயமாக இல்லை தமிழக அரசியலில் குழப்பம்விளைவித்தேன். அரசியல் கூடாது என்பதற்காக அல்ல. அரசியல் எங்கள் குடும்பத்தை விட்டு அடுத்தவர்களின் கைகளுக்கு செல்லக்கூடாது என்பதற்காக. அதிமுக ஆட்சியை தாக்கினேன்.. ஊழல் கூடாது என்பதற்காக அல்ல. எங்களுக்கும் பங்கு வேண்டும் என்பதற்காக. உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் குடும்பநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு இனத்தை பெருக்குகிறதே மீன் அதைப்போல. என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் நான் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை நீதிபதி அவர்களே.. தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள். தமிழ்நாட்டிலே திருவாரூரரில் திருக்குவளையில் பிறந்தவன் நான். பிறக்க ஒரு இடம் பிழைக்க ஒரு இடம். தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? சென்னை டிக்கெட் எடுக்க வழியின்றி டிரைன் ஏறி திருவாரூரில் இருந்து வந்த என்னை இந்த மாநிலத்தையே விலைக்கு வாங்குமளவிற்கு வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. இதோ என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்களே அம்மையார். அவர்களால் தான் நான் ஆட்சியை இழந்தேன், அடுத்தவர்களின் ஆட்சியை சகித்து கொள்ளும் பழக்கம் எனக்கு என்றும் இருந்ததில்லை. அதனால் தான் ஆட்சியை பழி சொன்னேன். தற்பொழுது இங்கு வந்து நிற்கிறேன். ஆட்சி இல்லாததால் ராஜாத்தி அம்மாள் கனிமொழியை காப்பாத்த என்னை மிரட்டுகிறார். பயந்து போய் கோபாலபுரம் சென்றேன் அங்கே ஸ்டாலின் தலைவர் பதவி கேட்டு என்னை துரத்தினார் அலறி அடித்து அறிவாலயம் வந்தேன். அங்கே அழகிரி அதிகாரம் கேட்டு அதட்டினார்.. ஓடினேன் ஓடினேன் அன்பழகன் வீட்டிற்கு.. அங்கும் வந்து நின்றார் தயாநிதி தாத்தா எதாவது தா தா என்று. ஓடினேன் ஓடினேன் ஒருவர் வீடு பாக்கியில்லாது. ஓடினேன் பதவி இருந்திருந்தால் நான் ஓடியிருப்பேனா? என் ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? ஆள விட்டார்களா என்னை ? அரசு வக்கீல்: குற்றவாளி வழக்கிற்கு சம்பந்தமில்லாமல் பேசுகிறார்.. கருணாநிதி-இதுவும் வழக்கோடு சம்பந்தம் உள்ளதுதான்.. என்னை ஆட்சிக்கு எதிராக பேச வைத்தது யார் குற்றம்? ஊழலின் குற்றமா? அல்லது ஊழலின் பெயரைச் சொல்லி என் ஆட்சியை மாற்றிய தமிழர்களின் குற்றமா? பணம் பறிக்கும் எங்கள் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் எங்களின் குற்றமா? பகுத்தறிவின் பெயரால் மஞ்சள் துண்டை போர்த்தி கொண்டு போலிப் பகுத்தறிவாதி களை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? பெரியாரின் குற்றமா? அல்லது பெரியாரின் பெயரைச் சொல்லி கட்சி நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை கருணாநிதிகளும் வீரமணிகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.. நீதிபதி-வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது.. கருணாநிதி- இதுக்கு தான் இவ்வளவு பில்டப் விட்டேனா…
அதிமுக ஆட்சியில் மீதேன் திட்டம் கொண்டுவந்து விவசாயிகளை அழிக்க நினைக்கவில்லை அது தெரியுமா தமிழின துரோகியே எங்கள் உப்பை தின்றுவிட்டு எங்களுக்கு துரோகம் செய்த கருணாநிதிக்கு விவசாயிகளை பற்றி பேச என்ன யோக்கிதை இருக்கிறது ? காவிரி நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விட்ட யோக்கிதையா ? விவசாய நிலங்களுக்கு அடிக்கும் பூச்சி கொல்லி மருந்திலும் ஊழல் செய்த யோக்கிதையா ? விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடந்திய யோக்கிதையா அல்லது விவசாயம் பொய்த்து போனதால் ..உரிய காலத்தில் கூட்டுறவு கடனை திருப்பி செலுத்தாத விவாசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டு ..மாடு கன்றுகள் , பாரவண்டிகள் , ஏர் கலப்பைகள் , பாத்திரம் பண்டங்கள் , விதை நெல்களை கூட விடாமல் அள்ளிச்சென்று விவாசிகளில் தன்மானத்தை கேள்விக்குறியாக்கிய யோகியர் அறிக்கை விடுகிறாரா கருணாநிதியின் துரோகத்தை யார் மறந்தாலும் விவசாயி மறப்பனா ?
நம் இனத்தையே கூறு போட்டு அழித்த தீய சக்தி கருணாநிதி கருணாநிதியின் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் ..DNA வும் தமிழின துரோகத்தை பற்றியே இருக்கும் .. தமிழின துரோகம் என்பது கருணாநிதியின்இரத்த சுழற்சியோடும் ..இதய துடிப்போடும் கலந்துவிட்ட ஒன்று …அவர் எது செய்தாலும் தீதுதான் ..தீயவரிடமிருந்து தீமைதான் வரும் ..தீயாரை காண்பது தீதே தீயார் சொல் கேட்பதும் தீதே தீயாரோடு இணங்கி இருப்பதும் தீதே 176000 ஈழ தமிழர்களின் உயிரை பறிகொடுத்தும் நமக்கு உணர்வு வரவில்லை என்றால் என்னசெய்வது மீதேன் திட்டத்தை கொண்டுவந்து தமிழக விவசாயத்தை பாழாக்கி .தமிழகத்திற்க்கே சோறு போட்ட விவசாயிகளை பிச்சை கார்களாக பார்க்கதுடித்த துரோகியை எப்படி ஏற்று கொள்ளமுடியும் ராஜபக்சே வீட்டில் விருந்து சாபிட்டுவிட்டு ..அவனிடம் பெட்டி நிறைய பணம் வாங்கிகொண்டு ..அவனை புகழ்த்து பேசிய குடும்பத்தை எப்படி நாம் ஏற்று கொள்ள முடியும் சொந்த கட்சி மாவட்ட செயலாளர் தா கிருஷ்ணன் நடை பயிற்சி சென்ற போது அவரின் மனைவி கண்ணெதிரே துடிக்கக் துடிக்க வெட்டி கொன்று தலை வேறு முண்டம் வேறாக வெட்டி கொன்ற பாவிகளை நாம் சகித்து கொள்ள முடியுமா அண்ணாமலை பல்கலை கழக மாணவன் உதயகுமார் ..கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை எதிர்த்தார் ,… அதற்காக அவனை கொல்வதா வெறும் கருந்து கணிப்பு நடத்திய பத்திரிகை அலுவலகத்தை கொளுத்திவிட்டு அங்கு வேலை செய்த ஊழியர்களை தீயிட்டு துடிக்க துடிக்க கொன்ற மனிதர்கள் தீய சக்தி என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது மதுரை கம்னியுஸ்ட் பெண் கவுன்சிலர் லீலாவதி என்ன பாவம் செய்தார் ? திமுக செய்த ஊழலை எதிர்த்த காரணத்தால் ..அரிவாளால் வெட்டி கொன்ற துரோகிகளை என்னவென்று சொல்வது ஈழ தமிழினமே மாண்டபோது இங்கு பதவி பேரம் பேசிகொண்டிருந்த இதயத்தில் ஈரமில்லா வஞ்சகர்களை எப்படி அழைப்பது பதவி , சுரண்டல் ,கொள்ளை , கொலை , துரோகம் , லஞ்சம் என்று தன் வாழ்க்கையையே மாற்றி கொண்ட மனிதனை எப்படி அழைப்பது கருணாநிதி தமிழ் தமிழ் என்று பேசுவது தமிழினத்தை அழிக்க போடப்படும் தூண்டிலில் மாட்டப்பட்ட புழுவிற்கு சமம் …புழுவுக்கு ஆசைப்பட்டு .சாகப்போகும் மீனா நம் தமிழினம்
மண் மூடிப்போன எங்கள் தமிழ் இனத்தின் சாபம் வீண் போகாது. இந்த தேர்தலுடன் thimuka தமிழின கொலைஞரின் திமுக மண்மூடிபோகட்டும். அடிமை ராணியின் ஆட்சியை அடுத்த தேர்தல் தீர்மானிக்கட்டும்
1)தியாகி இம்மானுவேல் சேகரனார் குருபூஜையில் 6 தமிழர்கள் சுட்டு கொலை
2)கரூர் +2 பள்ளி முடித்த மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இன்று வரை குற்றவாளி கண்டுபிடிக்கபடவில்லை
3)பெரம்பலூர் மாவட்டத்தில் ஈச்சம்பட்டி கிராமம் அருகே ஓடும் பேருந்தில் குண்டு வெடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நிவாரணமும் கொடுக்கப்படல, குற்றவாளியும் கண்டுபுடிக்கபடல
4)2012 -ம் ஆண்டு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கொலை. குற்றவாளி பல மதங்களுக்கு பிறகே நீதிமன்றத்தில் சரண்.
5)ராமஜெயம் கொலை வழக்கில் ஒரு முனேற்றமும் இல்லை
6)ஏறு தழுவல் விழா நடைபெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
7)நாளுக்கு நாள் கொலை, திருட்டு அதிகர்ப்பு
8)DSP போன்ற உயர் அதிகாரிகளே தற்கொலை செய்யும் அளவுக்கு ஆட்சி
நடப்பது அதிமுக ஆட்சி. ஆனாலும் பெரும்பான்மை அடிமைகள், அடி வருடிகள் ‘திமுக/கருணாநிதி யோக்கியம் இல்லை’ என்கின்ற வாசகத்தை சேர்த்தே கருத்துக்களை எழுதிகிறார்கள். இது பயத்தின் காரணமாக என்று தெரியவில்லை. சவுக்கின் இந்த விமர்சன கட்டுரை சரியா / தவறா? ஏற்புடையதா / இல்லையா? இதை விடுத்து சில கைக்கூலிகள் சவுக்கு எந்த கட்சி / சாதி என்பதனையே ஆராய்ச்சி செய்கின்றனர்.
மைக்ரோசாப்ட் தனது வியாபாரம் போய்விடுமே என்று தான் ஹில்லாரி கிளின்டனை விட்டு, ஜெ-வை ‘மாமூலாக’ சந்தித்து அதிக விலை கொடுத்து வின்டோஸ் OS-ஐ கணணிகளில் நிறுவியது. ஆனால் இது சம்பந்தமாக உமாசங்கர் இஆபா-வை பில்கேட்ஸ் பல தடவை சந்திக்க முயன்றும் தவிர்த்து விட்டார். இவர் தான் ‘விலையில்லா’ லினைக்ஸ் OS-ஐ நிறுவி புரட்சி செய்தவர். அமெரிக்க செய்தி தாள்களில் முக்கிய செய்தியாக பிரசுரமாயிருந்தது. ஐந்து லட்சம் இந்தியர் இறந்தாலும் கவலைப்படாத அமெரிக்கா, இந்த விண்டோஸ் விசயத்தில் அதிர்ச்சி அடைந்திருந்தது. இது தான் உண்மை.
உழவர் சந்தை மூடப்படவில்லை; அனாதையாக, ஆதரவற்ற நிலையில் இருக்கின்றது. ஆனால் இடையில் வியாபாரிகளிடமிருந்து (உற்பத்தியாளர்களிடமிருந்து அல்ல!)அதிக விலைக்கு வாங்கி ‘அம்மா காய்கறி’ கடை போட்டிருந்தார்கள் – என்ன ஆயிற்று தெரிய்வில்லை. ஆனால் நிரஞ்சன் போன்றவர்களுக்கு உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்கள் தெரியப்போவதில்லை.
ய்மகா நிறுவனம் – லஞ்சம் கொடுப்பதில்லை என்ற கொள்கையால், ஜெ-சசிஇன் அனுமதி கிடைக்காததால் கடந்த 3 ஆண்டுகளாக துறைமுகத்திலேயே இயந்திரங்களை முடக்கி வைத்திருப்பதும், இந்த நிறுவனத்தின் 90 ஜப்பான் பொறியாளர்கள் சென்னையில் அலைந்து கொண்டிருப்பதும் தெரியுமா?
இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.
ஆனால், ஊடகங்கள் /ஜால்ராக்களின் ஆக்கிரமிப்பால், இந்த பிறவியில் மக்களாட்சி என்றால் என்ன என்று தெரியாமலேயே சாகப் போகின்றோம். தூ……
ADMK Admi wanted SAVAKKU also Ching Cha…Ching Cha…Ching Cha…Ching Cha…Ching Cha…Ching Cha…Ching Cha…
They are not Accepting the truth.
இங்கு இருக்கும் அதிமுக அல்லக்கைகள் ஏன் என்று தெரியாமலேயே சொம்பு சுமக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அதல பாதாளத்திற்கு சென்று விட்டது பற்றி யாரும் கவலை படவில்லை….
என்னப்பா சவுக்கு !அப்ப திமுக சரியில்லை என்றீர் .இப்ப அதிமுக சரியில்லை என்கிறீர்கள் .அப்ப யார் யோக்கியன் .
Saavukku tha Vera yaaru
You are dump and stupid guy!!!! Have you ever visited rural Tamilnadu recently? How come you know about the pulse of Tamilnadu…
Please Mr. Kannan,
Kindly state which rural area to visit so that we can disprove Savukku Sankar (do you even have one??). By the way, do you even live in rural area?
On the other hand, even in Chennai the roads are yet to be relaid. If this is the state of your AMMA for a metro, then there is no need to talk about rural areas.!
By the way, I live in Chennai and travel every week to rural areas in entire TN.
Powerful article!!
அருமையான பதிவு… சரியான சவுக்கடி… ஆனால் அவருக்கு இது வலிக்காது… தோள் தடிப்பு அவ்வளவு… ஆனால் மக்கள் இதை புரிந்து கொண்டால் போதுமானது.
நல்ல காமெடியனாக நான் உங்களை பார்க்கிறேன் மிஸ்டர் சவுக்கு. ஏன் என்றால் நீங்கள் பத்தொட பதினொனன்று அத்தோட இதுவும் ஒன்று என்ற நல்ல பழமொழி இருக்கிறது அதற்கு ஏற்றார்போல் நீங்கள் செய்யும் ஒவ்வொரு காமெடியும் அமைந்து உள்ளது அது ஆட்சியாளர்கள் செய்தத உப்புக்கு சப்பா சொல்லிவிட்டு செய்யாதத எடுத்து சொல்லுவது போல் உள்ள உங்க காமெடி நல்லாதான் இருக்கு ஆட்சியை மாத்த வேண்டும் என்று சொல்ல உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்குன்னு நாங்க கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா? நடுநிலையாளரா நீங்கள்?
அய்யா சுப்புராஜ் , எது உப்பு சப்பு இல்லாத விஷயம் இல்லை எது காமெடி. உங்களிடம் உண்மை இருந்தால் நாட்டில் பாழும் தேணும் வடியுது என்பதற்கு சான்று குடுங்கள். இல்லை என்றம் மூடி கொண்டு போங்கள்
dei fact, people know what is truth and we do know how it was during 2006 – 2011.. don’t try to lie with your half baked facts..nee pocha mudikettu poda
As a common man, we have all the rights to throw this useless govt. நடுநிலையாளரா நீங்கள்? — you show one instance where he supported DMK or ADMK parties, its dumb question.
”But they got those offers in newly developing state like Gujarat.”- idhu mattum oru adimaiyin vasanam….
Thamizhagam jaya I -il vizha aarambiththathu. Ezhave mudiyatha nilaikku poi irukkirathu.
Mikach chirandha adhikaarikal kevalamaana panam vaangiththarum brokerkal aanaarkal.
karunanithi odnrum salaithtavan illai. irndume thiiya sakthikal….
thamizhaka makkalin tharamum kiizhe sendru kondu iruppathaal…. even kudi keduthaavathu enakku vendiyathai adiyath thudikkum maanang ketta mananilai anaithu nilaikalilum viravik kidakkirathu…
inge kurai solla yaarukkum yokkyathai illai… enendraal yaarukkum vetkammillai.
Naan yaarukum adimai illai, Kalainyar saitha nallathaiyum paarattiullom, aanal, ingu ivaarrin pathivil palla unmaigal maraikka pattu intha arasangam 5 varudamaaga verum Tamilnadu’ku kedu sethathai pol amaithullar. Athai thelivu paduthiulen. Ford tholirchalai angu sendrathuku TN gov kaaranamillai
Niranjan :- Fact fact fact .. But as said by shankar ….. govt is not so efficient and successful in handling all compelling issues
மிஷ்டர் சவுக்கு அவர்களுக்கு
நீங்கள் DMK or ADMK
ஏன் கேட்கின்றேன் என்றால் ஒரு அரசு செய்தது மற்றும் செய்யாதது இரண்டையும் கூறினால் அது பொதுவான கருத்து செய்தி அதுவே பொதுவான ஊடகம் ஆனால் இங்கு சற்று மாரி ஒருவரை குறை மற்றும் கூறி உள்ளீர்கள் ஆகவே நீங்களும் ஊடகவியலாக பார்க்கும் போது ஒருவரை மட்டுமே ஆதறிக்கின்றீர்கள் என்று எடுத்துக் கொள்ளளாமா?
Athuthaan unmai, Sabareesan’eedam villai poona pallaril ivarum oruvar..
You forgot who exposed 2G scams audio..
why he keep silent now .even the dayanithi maran case ?
Regarding Mathuravoyal-Ennore elevated express way. I don’t know how DMK gov’t gave clearance to this project which laid huge pillars in the coovam river. This ll interrupts the flow of water. DMK is known for sanctioning projects without knowing its consequences. They sanctioned Methane project n later ADMK govt stopped it as they promised to farmers. Later Stalin himself publicly apologised for sanctioning that project. Even this gov’t is ready to have express way to take goods to port. That’s y they speeden the Outer ring road project-2 which connects all major NH coming to city n port. Which ll be even reduce the traffic near Mathuravoyal, perungalathur..
DMK operated private Small buses in their binami names during last regime, they stop operating buses in the days when they would receive less profit but ADMK operated gov’t buses in those routes to help ppl to get uninterrupted services. Also introduced gov’t small buses to improve the financial status of TNSTC
Everyone knows State gov’t nothing to do with Nokia n Foxconn closure, this was due to the tax imposed by congress gov’t. Also worldwide Nokia suffered loss n left their business. This all due to DMK didn’t take necessary actions by the time when Nokia suffered loss. Instead of supporting the company to continue its operations here they imposed more taxes, which led to this failure. Even they can’t able to connect the taxes also from them which is additional loss
Regarding Industrial growth, Do u know TVS, Yamaha, Eicher motors, Daimler were started their industries during this regime, I personally witnessed the infra development in oragadam n irrungattukottai sipcot during this regime only. Ford n Hyundai went to other states because our law says they can only have subsidies for their first plant not to next plants. But they got those offers in newly developing state like Gujarat. So they went there. Also they placed there strategically to cover export to western countries
127 Lakhs tonne we produced last year even though there was huge decline in rainfall. This is the highest ever in TN. 2013 we also won best state award for agriculture
அதெல்லாம் சரி – இவரும் சரியில்லை அவரும் சரியில்லை எவரும் சரியில்லை…என்னதான் செய்யறது?
நாம்தான் (வாக்காளர்கள்தான் )சரியில்லை .வாக்கை அளித்தோமா அதை மறந்தோமா என்று இருக்க வேண்டும் .
Regarding windows OS in laptops, windows is the most user friendly n wide usen OS in the world, that’s the reason y it was adopted. Linux is not good for those who just starts using computer
so, when was the last time u used or even heard of Ubuntu?
Kalvi thuraiyil arasu palli, kalloori maanavargal velinattu sendru payela thittam vagukka pattu seyal muraiyil ullathu
Paal vilai uyartha pattalum athan palam vivasaigalai sendru adainthullathu, melum, pira maanilathai Vida paal vilai inguthaan kuraivu
really? we are still receiving the same amount in the milk society… for the past 3 years?
Perunthugalin avalanilai mutrilumaga agalavillai yendralum, sendra aatchiyai Vida tharam uyarnthu ullathu
Uzhavar santhai mooda padavillai, athu indrum iyangi varugirathu. Mellum Pasumai pannai thittam nagarpurangalil seyal padutha pattu varugirathu.