ஆசிரியர் குழுவுடன் மோதல்
பத்திரிகை அலுவலகங்களில் செய்தியாளர்களுக்கும் ஆசிரியர் குழுவுக்கும் இடையே ஒரு பதற்றமான சூழலே நிலவும். ‘நீ பெரியவனா, நான் பெரிய வனா?’ என்ற ஈகோ க்லாஷ் நாள்தோறும் நடக்கும். தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆசிரியர் மிகவும் கடுமையாக நடந்து காள்ளக் கூடியவராக இருந்தாலும்கூட இந்த மோதலை தவிர்க்க இயலாது. ஒரு சமயம் நிருபர்கள் பக்கம் சாய்ந்து, இன்னொரு சமயம் ஆசிரியர் குழு பக்கம் என பேலன்ஸ் செய்துதான் செல்ல வேண்டியிருக்கும்.
நிருபர்களின் பணி செய்தி சேகரிப்பது. ஆனால் செய்தித்தாளை வடிவமைப்பது ஆசிரியர் குழுதான். எனவே எந்த செய்தி இடம் பெறவேண்டும், எப்படிப்பட்ட முக்கியத்துவம் கொடுக்கலாம் என்பதை எல்லாம் முடிவு செய்வது அவர்களே. நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் இருக்கலாம்; இவர்களாகவும் இந்த செய்தி முதலாளியின் நலனை பாதிக்கும், அல்லது வேறு ஏதேனும் சிக்கல் வரும், அல்லது இப்படி செய்தி வெளியிடுவதே தவறு என்று ஏதோ ஒரு அளவுகோலின் படி செய்திகளை நிறுத்தி விடுவார்கள்.
மறுநாள் போய் சண்டை பிடிக்கலாம். அவ்வளவு தான்.போனது போனதுதானே. ஓரிரு நேரங்களில் பிரசுரிக்கு மாறு வற்புறுத்தி வெற்றி பெறலாம். ஆனால் எப்போ தாவதுதான்.
இப்போதெல்லாம் நாள்தோறும் காலையில் போஸ்ட் மார்ட்டம் என்கிறார்கள். மற்ற பத்திரிகைகள் தவறவிட்ட எந்தெந்த செய்திகளை நாம் பிரசுரித்து இருக்கிறோம்; அவர்கள் வெளியிட்ட எதையெல்லாம் நாம் கோட்டை விட்டிருக்கிறோம் என்று பரிசீலிக்கவும், இன்று என்னவெல்லாம் செய்திக்கு வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து விவாதிக்கவும், மாலையில் என்னென்ன செய்திகளை நிருபர்கள் தருகின்றனர் என்று தெரிந்து கொண்டு, சிறப்புச் செய்தி என்றால் எப்படி வெளியிடலாம் என்பது குறித்து ஆலோசிக்கவும் கூட்டங்கள் நடைபெறுகின்றன. முக்கிய பொறுப் புகளில் உள்ளவர்கள் கலந்து கொள்வார்கள்.
சயீது நக்வி சென்னையில் பொறுப்பேற்கும் வரை அப்படியான கூட்டங்கள் நடந்ததில்லை. அதன் பிறகுகூட முறையாக எதுவும் கிடையாது. ஏதாவது முக்கிய நிகழ்வுகளின்போது மட் டும் கூடி பேசிக்கொள்வார்கள்.
தேவை இருந்தால் ஒழிய சம் பந்தம் ஆசிரியர் குழு அறை பக்கம் போகவே மாட்டார். மாஸ் டர் என்று அழைக்கப்பட்ட மூத்த செய்தி ஆசிரியர் எப்போதா வது எங்கள் பிரிவு பக்கம் வந்து போவார், ஒரு சிலரிடம் ஏதாவது கேட்டுவிட்டு சென்றுவிடுவார்.
மாஸ்டர் எனும் சி பி சேஷாத்ரி பத்திரிகை உலக ஜாம்பவான் என்று போற்றப்பட்டவர். ஆனால் வெளி உலகத்தாருக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாது. அவர் ராம்நாத் கோயங்கா வீட்டு பிள் ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்ததனால் மாஸ்டர், ஆசிரியர் என்று அறியப் பட்டவர். எக்ஸ்பிரஸ் வளாகத்திலேயே அவரது குடியிருப்பு. அலுவலகத்திலேயே அவரது இருக்கைக்கு அருகே ஒரு சாய்வு நாற்காலி போடப் பட்டிருக்கும். களைப்பாக இருந்தால் அதில் சாய்ந்து சிறிது நேரம் ஓய்வெடுப்பார்.
அந்த நாற்காலியை தவிர, அவரது பார்வைக்கு வரும் செய்திகளை தவிர வேறு எதுவுமே அவருக்கு தெரியாது என்று கலாய்ப்பார் சம்பந்தம்.
கருணாநிதி ஆகாது. ‘எப்போ அந்தாளு மண்டையப் போடுவார்’ என்று எல்லாரையும் கேட்டுக் கொண்டிருப்பார். ஆனால் ஜெயலலிதா ஆதரவாளர் என்றும் சொல்லிவிட முடியாது. பிராமண இளைஞர்கள் மேல் கூடுதல் நேசம் காட்டுவார். ஆனால் சாதிவெறி என்றும் சொல்ல முடியாது. செய்தி பிரசுரிப்பதில் பாரபட்சம் காட்டிய தாகவும் சொல்ல முடியாது. பொது வாக ராம்நாத் கோயங்காவின் அனைத்து நலன்களையும் பாதுகாப்பது தன்னுடைய கடமை என்பது போல நடந் கொண்டார். அவ்வளவுதான்.
சுவையான தலைப்புகள் அவருக்கு கைவந்த கலை: The sorrow behind the sparkle. கண்ணைப் பறிக்கும் ஒளிக்குப் பின்னர் துயரம். – நான் சிவகாசி பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் நிலை பற்றி எழுதிய கட்டுரைக்கு அவர் கொடுத்த தலைப்பு… Children of storm bring tales of sorrow – சூறாவளியின் குழந்தைகள் கொண்டுவந்த சோகக் கதைகள். 81ல் நடந்த கலவரத் திற்குப் பின்னர் இந்தியா வந்த இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் குறித்து.
இப்படி பல. அந்தக் காலத்து இண் டியன் எக்ஸ்பிரசை ஆய்வு செய்தால் இது போன்ற அருமையான தலைப்புகள் கிடைக்கும். அவற்றில் பலவற்றை மாஸ் டர்தான் எழுதியிருப்பார்.
அவருக்கு என்னைப் பிடிக்கும். என் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவார். சந்திக்கும் போதெல்லாம் பாராட்டுவார்.
ஆனால் அவராலேயே எனக்கு அடுத்த அடி.
ஏதோ ஒரு மாஜிஸ்ட்ரேட், ஒரு வழக்கில் அரசை கடிந்து கொண்டிருந்தார். அந்தச் செய்தியை மறுநாள் எக்ஸ்பிரசில் பார்த்தபோது அதிர்ச்சி. கடுமையின் தீவிரத்தை நீக்கச் செய்திருந்தார்கள். தொலைகிறது, இது சகஜம்தானே என விட்டிருக்கலாம். புத்தி இல்லையே, நிதானம் இல்லையே.
துணை ஆசிரியர்கள் நாக்கைப் பிடுங்கிக்கொள்வது போல ஏதோ நாலு வார்த்தை டைப் செய்து எங்கள் நிருபர்கள் பிரிவு அறிவிப்புப் பலகையில் ‘பின்’ செய்துவிட்டேன்.
ஆங்கிலத்தில் wooden என்றால் உணர்ச்சியற்ற என்ற பொருளும் உண்டு. ஆசிரியர் குழுவை news desk என்றும் சொல் வார்கள். நான் desk உண்மை லேயே wooden ஆகி விட்டது, உணர்ச்சி மரத்துப் போய் விட்டது, ‘இந்து’வில்கூட சற்று அந்த மாஜிஸ்ட்ரேட் செய்தி காரமாக இருந்தது, ‘‘அரசாங்கத்துடன் மோதியே புகழ் பெற்ற எக்ஸ்பிரசுக்கா இந்த நிலை?” என்று கேட்டிருந்தேன்.
அது நாங்கள் வழக்கமாக செய்வதுதான். எங்கள் ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ள அல்லது ஒருவரை ஒருவர் கலாய்க்க அந்த பலகையை பயன்படுத்திக்கொள்வோம்.
ஆனால் நான் அத்துடன் நிற்கவில்லை என நினைவு. இன்னொரு பிரதி எடுத்து ஆசிரியர் குழுவுக்கே அனுப்பிவிட்டேன். ஆளாளுக்கு கொதித்திருக்கின்றனர்.
வேறு வழியின்றி மாஸ்டர் மேடம் கோயங்காவை ராம் நாத் கோயங்காவின் மருமகள் சரோஜை – நேரில் சந்தித்து, என்னுடைய கமெண்ட்சை காண்பித்து ‘‘இனி இவன் இங்கே இருக்கக்கூடாது, எங் களுக் கெல்லாம் பெரும் அவமானம்” என்று சொல்லியிருக்கிறார்.
அப்புறம் என்ன? அடுத்த 24 மணி நேரத்தில் பறந்து வந்தது மும்பைக்கு மாற்றல் உத்தரவு. இல்லத்தில் மிக நெருக்கடியான ஒரு நிலை. அந்த நேரத்தில் மும்பையா? எனக்கு அதிர்ச்சி. சம்பந்தம் தலையிட மறுத்துவிட்டார். ‘‘போய் மாஸ்டரிடம் பேசிப்பார்” என சொல்லிவிட்டார்.
மாஸ்டர் உட்பட அனைவருக்கும் தெரியும் என் நிலை. அதனால்தான் நான் மதுரையிலிருந்தே மாற்றல் பெற்று வந்திருந்தேன். அப்படியும் மனிதாபிமானம் இல்லாமல் நிர்வாகம் என்னை மாற்றியிருக்கிறது.
எனக்கு கடுங்கோபம். யார் காலிலும் விழத் தயாராய் இல்லாமல், மாற்றலை ஏற்றுக்கொண்டேன். வேலையை இழக்கும் நிலையில் இல்லையே.
சென்னையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளன்று சக நிருபர்களில் ஜி.சி.சேகர் மட்டும்தான் என் மீது அனுதாபம் காட்டி, என்னுடன் வெளியே வந்து அருகிலிருந்த ஒரு ரெஸ்டா ரண்டில் ஏதோ ஜூஸ் வாங்கிக்கொடுத்து, ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார். மற்றவர் களெல்லாம் பேருக் காகக்கூட அனுதாபம் தெரிவிக்கவில்லை.
(ஜி.சி.எஸ். தற்போது டெலிகிராஃபில் பணி புரிகிறார். துடிப்பானவர், சம்பந்தத்திற்கு நெருக்கம், ஆனால் வால் பிடிப்பது, கோள் சொல்லி அவ ரிடம் நல்ல பெயர் வாங்குவது இதெல்லாம் அவருக்குப் பிடிக்காது.)
மும்பை சென்று அங்கிருந்த மானேஜரிடம் முறையிட்டேன். அவரோ “நான் ஒன்றும் செய் வதற்கில்லை. உனக்குத்தான் நிறைய லீவ் இருக்கிறதே. நான் sanction செய்கிறேன். அவ்வளவுதான் என்னால் முடிந்தது, நீ சென்னைக்குப் போய் யார் காலில் எல்லாம் விழ வேண்டுமோ விழுந்து வேலையை காப்பாற்றிக்கொள்,” என வண்டி வண்டியாய் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.
அஞ்சியபடியே புற்றுநோய் வென்றது. ஆனாலும் என் மூச்சு நிற்கவில்லையே. உழைத்துப் பிழைக்க வேண்டிய கட்டாயம். நிர்வாகத்திடம் வயதான என் பெற் றோரின் நலனை உத்தேசித்து என்னை மீண்டும் சென்னைக்கே மாற்றுமாறு விண் ணப்பித்தேன்.
சம்பந்தம் நக்வியிடம், “அவன் வந்துவிட்டுப் போகட்டும்.. ஆனால் இங்கே வேண்டாம்.. மதுரைக்கு அனுப்பிவிடுங்கள்,” என்று சொல்லிவிட்டார்.
பேசுவோம்…
TNG sir, I had been a regular reader of your razor edged stories right from my college days at Jamal and Coimbatore PSG. My memory is still fresh when I used to get express from Madurai since it was the biggest edition catering to readers downsouth starting from Madurai to Kanyakumari and from Tiruchy to Nagai while western region from Coimbatore to Dharmapuri besides Nilgiris. I think express was covering nearly 19 districts. Madurai Musings was quite popular those days and who can forget ‘Nandalala’. Keep jotting your memories in express.
கருணா கவிதை:
சுந்தரியே………
சோனியா..ஜி
உன் சுரு சுருத்த விழி வீச்சு
கிடைக்கப்பெற்றேன்-எனை
சுணக்கமின்றி தாக்கியது
பிய்ந்து போனேன்.
மெல்லிய உன்
மார்பகத்தின் மினுப்பு கண்டு
மீண்டெழுந்து
என் ஆண்மை குமுறியது.
கட்டிய கோவணமோ
கனியக்கண்டேன்
கவட்டுக்குள் என்னமோ
நெளியக்கண்டேன்.
உண்ணுதற்கோ மனமில்லை
உறங்குதற்கோ வேளையில்லை
உலைகின்றேன் நான்….
கள்ளியவள் ராசாத்தி
அறிந்தாளென்றால்
கட்டையாலே அடிப்பாளோ
பயம் எனேறாலும்
வெண்மணியே
சோனியா உன்
விடலை வீக்கம்
விண்ணென்று என் கண்ணை
மறைக்குதடி.
சோனி பதில் கவிதை:
விண்ணவரே…..
உங்களது விளங்காத
கவி மழையை விழங்கிக்கொண்டேன்
மண்மீது என் கால்கள் படியவில்லை
மிதக்கின்றேன் வான்மீது
தண்ணியில்லா குளமாக
வறண்ட எந்தன்
சர்க்கரையில்
தேன் வந்து பாயக்கண்டேன்
மெல்ல மெல்ல
என் மார்பு மலைபோலாக
மன்னவனே
உன் கையால் மசாஜ்சு ச்செய்வாய்
கருணா பதில் கவிதை:
கள்ளியடி
நீ எந்தன் கவலை தீர்த்தாய்
கனி மழையே
உன் பதிலால் கரைந்துபோனேன்
இன்றிரவு பின்னேரம்
வருவாய் இங்கே
ஒருவரும் இல்லாத இருட்டில் நாங்கள்
புண்ணியமாய் பாவங்கள்
போக்கி ஒன்றாய்
பன்னீரின் புஷ்ப்பங்கள்போல்
கலப்போம் ஒன்றாய்.
This shows entirely unknown dimensions of press functioning that we, people, so far unaware. This is an eye opener who wants to deal with press at any point of time. Kudos to you for coming out candidly and willing to write honest writings. Now you have nothing to lose and a lot of reputation to gain from readers.
ஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 19 is not traceable . Please publish that also