சிறைபிடித்த கும்பல்
முதல் முறை மதுரையில் 15 மாதங்கள். இரண்டாம் முறை ஏறத்தாழ ஐந்தாண்டுகள். முன்னர் குறிப்பிட்டதை போன்று ஒரு செய்தியாளன் என்ன செய்ய வேண்டுமோ அதை மன நிறைவோடு செய்தது மதுரையில்தான்.
தொட்டது துலங்கும் என்பார்களே அது போல நான் எதைப் பற்றி செய்தி கொடுத்தாலும் அதற்கொரு தாக்கம் இருந்தது. ஒடுக்கப்படும், பாதிக்கப்படும் மக்க ளின் நிலை குறித்து இயன்றவரை எழுத வேண்டும், அவர்களுக்கு சிறிய அளவிலேனும் தீர்வு கிடைக்க வேண்டும், அப்படி செய்வதுதான் ஊடகன் கடமை. அதிலும் குறிப்பாக மார்க்சீயர்களுக்கு என்பது என் நம்பிக்கை. என் நோக்கம் அதிகம் பழுதுபடாமல் நான் செயல்பட முடிந்தது மதுரையில்தான்.
1984 பிப்ரவரியில் அங்கு சென்றவுடனே மதுரை திருச்சி எல்லையில் அதவத்தூர் எனும் கிராமத்தில் தலித் துகளுக்கும் முக்குலத்தோருக்கும் ஏதோ சச்சரவு. வழக்கம் போல் குடிசைகளை எரிக்கின்றனர்.
ஒரு கிறிஸ்துவ தன்னார்வ குழுவிடமிருந்து எனக்குத் தகவல் வந்தது. ஏதோ ஒரு வழியில் கிறிஸ்தவர்களுக்கும் எனக்கும் நெருக்கமான தொடர்பு இருந்து வந்திருக்கிறது. கல்லூரி நாட்களில், எனது முட்டாள் தனங்களின் விளைவாய் பட்டப்படிப்பு முடிப்பேனா என்ற நிலையில், எனக்கு கைகொடுத்தது ஆங்கில இலக்கிய பேராசிரியர் ஜோசப் சின்னப்பா.
ஆருயிர் துணையினை இழந்து நின்ற நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருந்தவர் கத்தோலிக்க பாதிரியார் முற்போக்கு சிந்தனையாளர் இம்மானுவேல் அல்போன்ஸ்.
தன்னார்வ குழுக்களின் உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது, பல்வேறு போராட்டங்களில் கலந்து கொள்ள உதவியது நண்பன் ஹென்றி டிபேன்.
பின்னாளில் நெருக்கடியின் போதெல்லாம் கை கொடுத்தது தியான் சந்த்கார். இவர்கள் அனைவருக் குமே நான் மார்க்சிஸ்ட், இறைப்பற்று இல்லாதவன் என்பது தெரிந்தும் நட்பு பாராட்டினர். எந்த ஒரு கட்டத்திலும் அவர்களில் எவரும் மதம் பற்றி விவாதித்ததே இல்லை. அதுவே எனக்கு அவர்களிடம் பிடித்த விஷயம்.
அதவத்தூர் செய்தி கொண்டு வந்தது பேராசிரியர் ஜோசப் சின்னப்பாவின் மகள் சிஸ்டர் கிளேர். அவரும் ஒரு இடதுசாரி. அந்த கிராமத்தை பிடிப்பதே சிக்கலாக இருந்தது. வழிகாட்ட வந்தவர்களுக்கும் தெரியவில்லை. ஒரு வழியாக கிராமத்தை எட்டும்போது இரவாகிவிட்டது. ஊர் என்றால் ஆதிக்க சாதியினர் வாழும் பகுதி. காலனிதானே தலித்துக்கள் இருப்பிடம். அந்த அளவில் நாங்கள் சென்றடைந்தது யார் தீ வைத்தார்களோ அவர்கள் பகுதியில்.
சில நிமிடங்களில் சூழ்ந்துகொண்டார்கள். ஆளாளுக்கு நீங்கள் யார், என்ன என மிரட்டும் பாணியில் கேட்கத் துவங்கினர்.
அண்மையில் மாட்டிறைச்சி வைத்திருந்ததான சந்தேகத்தில் ஒருவர் கொல்லப்பட்டாரே, உத்தர பிரதேச தாத்ரியில், அங்கே செய்தி சேகரிக்க சென்ற ஊடகர்கள் எதிர்கொண்ட அதே சூழல். போதாக்குறைக்கு நாங்கள் சென்றிருந்தது தன்னார்வ குழுவின் வேன். அதில் சிலுவை படம் பெரிதாக!
“நீங்கள் எங்களுக்கு எதிரிகள்… சிறிய விஷயத்தை ஊதிப் பெரிதாக்குவீர்கள்… இந்த பாதிரிமார்தான் தலித்துக்களை எங்களுக்கு எதிராக தூண்டி விடுகின்றனர்… நீங்களும் அந்த வேலை செய்யத்தான் வந்திருக்கிறீர்கள்..”
இப்படி ஆண்களும் பெண்களுமாய், ஆளாளுக்கு, கண்டனக் கணைகளும் கேள்விகளும்.
நேரம் போய்க்கொண்டே இருக்கிறது. கேள்வி கேட்க வேண்டிய நான் பதில் சொல்ல வேண்டியதாயிற்று. வழிகாட்ட வந்தவர் ஒரு பாதிரியார். நல்லவேளை அவர் மப்டியில் இருந்தார். இல்லாவிடில் அவருக்கு ஒரிசாவில் கிரஹாம் ஸ்டெயின்சுக்கு நடந்த கதி ஏற்பட்டிருக்குமோ என்னவோ?
கொஞ்சம் மிரட்டல், கொஞ்சம் கெஞ்சல், கொஞ்சம் விளக்கம் இப்படியாக சூழ்ந்து கொண்ட கிராமத்தினரை சமாளிக்க முயல, பதட்டம் சற்றே தணிந்தது. இறுதியில் அவர்கள் இட்ட உத்தரவு: “நீங்கள் இங்கிருந்து நாளை காலை வரை ஒரு அடி நகரக்கூடாது. கட்டில் போடுகிறோம். இல்லையானால் திண்ணையில் படுங்கள். நாளை காலை இன்ஸ்பெக்டர் வருவார்.. அவர் உங்களை விசாரித்து, உங்களை போகவிட்டால் கிளம்பலாம்…”
‘‘அவர் அனுமதிக்கவில்லை என்றால்?”
“அப்போது உங்களை என்ன செய்வது என்று நாங்கள் முடிவெடுப்போம்.”
கூட்டம் கலைந்தது. ஆனால் எங்களுக்குக் காவலாக ஒரு நாலு பேர் சுற்றி நின்றுவிட்டார்கள். தனியாக எங்களுக்குள் எதுவும் பேசிக்கொள்ளவும் முடியாது. மொபைல் இல்லாத நேரம், பப்ளிக் பூத்தும் கிடையாது. எனவே யாருக்கும் எதுவும் சொல்ல முடியாது. காலையில் வரப்போகும் இன்ஸ்பெக்டர் என்ன டைப்போ, யார் கண்டது? நான், பாதிரி, வேன் டிரைவர், மூவரும் மிரண்டுதான் போனோம்.
வேன் டயரில் காற்றை பிடுங்கிவிட்டார் ஒருவர் முன்னெச்சரிக்கையாக!
பாதிரியார் ஜெபித்தாரா இல்லையா எனக்கு நினைவில்லை. அச்சத்திற்கு அப்பால் எனக்கு கொஞ்சம் ஜாலியாகத்தான் இருந்தது. நம்மை ஏதோ பெரிய சக்தியாக மதித்து இப்படி மிரட்டிக் கொண்டிருக்கிறார்களே என ஒரு கிக். இன்னொரு புறம் சமூகம் இப்படி சீரழிந்து கிடக்கிறதே என்ற வேதனை. எங்களால் கூடுதல் சிக்கல் வருமோ என்ற கவலை வேறு.
விஷயம் தெரிந்து எந்த தலித்தாவது எங்களை அணுகியிருக்க முடியுமோ? அதற்கும் வாய்ப்பில்லை. உப்புக் கண்டம்தான். மேலும் தாக்குதல் ஏதேனும் நடைபெறாமல் இருக்க வேண்டுமே என்று அவர்கள் நடுங்கிக் கொண்டிருந்திருப்பார்கள்.
ஒரு விநோதம் என்னவென்றால் எங்களை மிரட்டியவர்களிலேயே சிலர் பரிதாபப்பட்டு உப்புமா செய்து கொடுத்து பசியாற உதவினர்.
காலை எட்டு மணி வாக்கில் இன்ஸ்பெக்டர் வந்தார். அவரும் முதலில் சற்று முரட்டுத்தனமாக பேசினார். நான் பத்திரிகையாளன், உடன் வந்தவர் வழிகாட்டி அவ்வளவே என்று திருப்தி அடைந்த பிறகு, “ஏன் சார் இங்கெல்லாம் வந்து மாட்டிக்கிறீங்க… டென்ஷன் ஸ்பாட்… எங்களுக்குத்தான் தலையெழுத்து. உங்களுக்கும் அதுதானோ” என்று சொல்லி சிரித்தார்.
‘‘சரி, சரி, ஜாக்கிரதையா போய்ச் சேருங்க…இதெல்லாம் சகஜம். இந்த ஆளுங்க ஒரு மாதிரி” என்று எச்சரிக்கை விடுத்து எங்களை வழியனுப்பி வைத்தார்.
இறுதிவரை நாங்கள் காலனி பக்கம் செல்ல முடியவில்லை என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். தன்னார்வக் குழு அலுவலகத்தில் ஓரிருவர் எங்களை வந்து சந்தித்தனர் அவ்வளவுதான்.
தலித் மக்கள் பற்றிய நிலை குறித்தான புரிதல் துவங்கிய நேரம் அதுதான். ஊரின் மேல், கிராமத்தின் மேல் அவர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. ஊர் தெருக்கள் வழியே பஸ் ஸ்டாண்டுக்கு செல்லலாம், ஊருக்குள் இருக்கும் தபால் நிலையம், மளிகைக் கடைக்கு செல்லலாம். நான் இத்தொடரை அர்ப் பணித்திருக்கும் மதுரை. ராஜன் மூலமாகத்தான் தலித் பிரச்னைகளின் பல்வேறு பரிமாணங்களை அறிந்து கொண்டேன். பள்ளி நாட்களிலிருந்து நாளேடுகள் படிப்பவன். அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு செல்பவன். பின்னர் மார்க்சீயத்தால் ஈர்க்கப்பட்டவன். பிறகு நிருபராகவும் ஆனேன். ஆனால் ராஜனை நான் சந்திக்கும் வரை தலித்துக்களிடையே உள்ள உட் பிரிவுகள் பற்றி எதுவும் தெரியாது.
Protection of Civil Rights Act என்பது வெறும் ஏட்டளவிலேயே. அதை சிலர் சொந்தக் காரணங் களுக்காக பயன்படுத்தி விடுகின்றனர். பிளாக் மெயில் கூட செய்வார்கள். தலித்துக்களின் நியாயமான உரிமைகளை நிலை நாட்ட அந்த சட்டம் அறவே பயன்படுவதில்லை. அச்சட்டத்தினை அமல்படுத்த உருவாக்கப்பட்ட காவல்துறை டம்மி பீஸ் என்பதை யெல்லாம் ராஜனிடமிருந்துதான் தெரிந்து கொண்டேன்.
பிசிஆர் பிரிவுக்கான வசதிகள் மிகக் குறைவு. அத் துறையே ஏதோ தீண்டத்தகாதவர் துறையாக நடத்தப் படுகிறது. அதில் பணியாற்றுவோர் அதை ஒரு தண்டனைக் காலமாகக் கருதுவர் என்பதை அறிந்த எனக்கு அதிர்ச்சி.
அதன் பின்னர் தேவேந்திர குல வேளாளர்/பள்ளர், ஆதிதிராவிடர்/பறையர் அருந்ததியர்/சக்கிலியர் ஆகிய மூன்று பிரிவினரின் நிலை பற்றியும், பிசிஆர் போலீசாரின் இயலாமை/அசட்டை, அச்சட்டம் மற்றும் பின்னர் இயற்றப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம் இவையெல்லாம் எந்த அளவில் தலித்துக்களுக்கு பாதுகாப்பை அளிக்கிறது என்பது குறித்து பலரிடம் பேசி விரிவான கட்டுரைகள் எழுதி னேன்.
அக்கட்டுரைகளுக்காக நான் சுற்றுப் பயணம் செய்தபோது இரட்டைக் குவளை இன்னமும் நடை முறையில் இருக்கும் பல கிராமங்களைக் கண்டு, அவற்றை பட்டியலிட்டேன்.
அதே நேரம் இஸ்திரி மடிப்பு கலையாத தூய வெள்ளை சட்டை, வேட்டி, மேலே துண்டு, கறுப்புக் கண்ணாடி சகிதமே அந்தந்த ஊர் தலித் தலைவர்களை சந்திப்பேன். எனக்கு சற்று கோபம் வரும். ஆனால் போகப் போக தெரிந்து கொண்டேன். அதுவே ஆதிக்க சாதியினருக்கு விடும் சவால் என்று.
செருப்பணிந்து செல்லக்கூடாது, சைக்கிளில் ஊர் தெருக்கள் வழியே செல்ல முடியாது இந்த அவல நிலைதான் தலித்துக்களுக்கு எனும் போது, நான் இப்படியும் வருவேன் உன்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்பது போல தலித் தலைவர்கள் வெள்ளை உடை, கறுப்புக் கண்ணாடியுடன் வலம் வருகின்றனர் என்பதை உணர்ந்தேன்.
25 ஆண்டுகள் கழித்து பிபிசி தமிழோசைக்காக தலித் மக்கள் நிலை குறித்து ஒரு தொடர் தயாரிக்கிறேன். அப்போதும் அவர்கள் நிலையில் சொல்லிக் கொள்ளும் படியான மாற்றமில்லை என்பது வேதனையே.
பேசுவோம்…
Savukku always on wrongview.good thingd cannot visible by Savukku because it is a bad EVIL
I too faced a similar situation when my leftists friends and social activists alerted me about dalits facing discrimination at Avinashi near here. Social activists took me to the area where dalits were not allowed to either pass through or ride any bicycle. Moreover, the caste Hindus never allowed the wards of dalits to get education. The headmaster became pawns in the hands of caste Hindus more particularly Kongu Velala Gounders. I was shocked to witness twin tumbler system prevalent at tea shops in the interior areas of Avinashi belt. I like to thank my editor Aditya Sinha, who encouraged me and gave a prominent space in TNIE to highlight the pathetic plight of dalits. There is no denying the fact that there is much awareness among dalits about their rights (M Thangavel of Avinashi based Vizhuthugal organisation is championing the cause of dalits). Comrade TNG continue your ‘whipping’.
தேவேந்திர குல வேளாளர், ஆதி திராவிடர், அருந்ததியினர் இவர்கள் ஒரே மாதிரி தாழ்த்த பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தி அரசு திட்டங்கள் வகுப்பது தவறு. அருந்ததி மக்கள் தெலுங்கு பேசுகின்றனர். இவர்களின் பழக்கம், தொழில், வெவேரானவை.
வேலை வாய்ப்பில் தேவேந்திர குல வேளாளர் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். Tnpsc போன்ற தேர்வு வாரியங்களிலும் ஆதிக்க சாதிகள் ஊடுருவி ஊழல் செய்து தேர்வு பெறுகின்றனர். ஜெயலலிதா சசிகலா இதில் தேர்ந்தவர்கள். அதிகாரத்தை வைத்துக்கொண்டு தேர்வுவாரியங்களில் இவர்கள் மூலம் தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் நிறைய பேர். தேர்வு பெற்றபின் மக்களுக்கு சேவை செய்யாமல் பெரும்பாலும் தேர்ந்து எடுத்தவர்களுக்கு நன்றி கடன் செலுத்துவதே முக்கியமான வேலையாக செய்கின்றனர்.
நீங்கள் சொல்லும் தலித்துகள் ஆப்பிரிக்கர்கள் , என்றுமே முன்னேறேமுடியது . பாபு ராவ் முதல் இளைய ராஜா வரை நம் கண் முன்னால் முன்னேறியவர்கள் ஏராளம். ப்ளாக் மெயில் செய்வது , மதம் மாறி இந்துக்களை காசுக்கா கேவல் படுத்தும் தலித்துகள் என்றுமே முன்னெர்வதுஇல்லை.
BBC துட்டுக்கு கூவும் மனிதனே ஏன் ஆப்பிரிக்கர்கள் இன்றும் அயிரம் வருடம் கழித்தும் ஏசுவால் விமோசனம் இல்லாமல் இருகிரர்கள் . அதற்க்கு பதில் தான் இதுக்கும்.
முட்டாள் தனமான ஆதிக்க சாதியினரின் கருத்து.
“அதே நேரம் இஸ்திரி மடிப்பு கலையாத தூய வெள்ளை சட்டை, வேட்டி, மேலே துண்டு, கறுப்புக் கண்ணாடி சகிதமே அந்தந்த ஊர் தலித் தலைவர்களை சந்திப்பேன். எனக்கு சற்று கோபம் வரும். ஆனால் போகப் போக தெரிந்து கொண்டேன். அதுவே ஆதிக்க சாதியினருக்கு விடும் சவால் என்று”
Instant of doing like this, they can do some more favor to their group. until unless they grow by education/economic, nothing or no one can change anything.
I strongly feel they want to hold their caste more than other caste people.
அய்யா,
உங்கள் பணிகள் சிறக்க என் வாழ்த்துக்கள். தயவு செய்து தலித் என்ற வார்த்தை உபயோக படுத்த வேண்டாம். அவர்கள் ஆதி தமிழர்கள். ஹரிஜன் , தலித் என்று கூறி அவர்களை நாமே தாழ்த்துவது நன்றாக இருக்குமா? நான் BC. நாங்களே சில ஆதிக்க சாதிகளிடம் அடிமை பட்டு கிடக்கிறோம். அப்படியென்றால் ஆதி தமிழர் எவளவு அல்லல் பட்டு இருப்பார்கள் என்பது என்னால் விளங்கி கொள்ள முடிகிறது. நீங்கள் கூற வரும் நிலை நன்றாக புரிகிறது. நன்றி அய்யா!