2011 பொதுத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதியைப் பார்த்து “ஒரு மூட்டையை தூக்கை வைப்பது போல வைக்கிறார்கள்” என்றார் ஜெயலலிதா. ஆனால் இன்று தனது முதல் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் நின்று கொண்டு உரையாற்றக் கூட முடியாமல் நாற்காலியில் ஐக்கியமாகி உரையாற்றினார். காலம்தான் ஒவ்வொருவருக்கும் எத்தகைய பாடங்களை கற்றுக் கொடுக்கிறது.
ஜெயலலிதாவின் முதல் தேர்தல் பரப்புரையில் பிரதானமாக இடம் பெற்ற விஷயம் மதுவிலக்கு.
“மதுவின் தீமையை மற்றவர் களைவிட முதல்வர் நன்கு அறிவார். இருப்பினும், மது விலக்கு நடைமுறையில் சாத்திய மில்லை. இந்த விஷயத்தில் மதுவை அறிமுகம் செய்த திமுக தலைவர் கருணாநிதி சொன்ன பதிலையே நானும் இரவல் வாங்கிச் சொல்கிறேன். ‘கொழுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கற்பூரத்தை எப்படி பாதுகாப்பது?’.
அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாதபோது தமிழகத்தில் அமல்படுத்தினால், அரசு கஜானாவுக்கு வரவேண்டிய வருவாய் கள்ளச்சாராயம் விற்போருக்கும் சமூக விரோதிகளுக்கும் போய்விடும். நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டுவந்து, வருவாயை மத்திய அரசு ஈடுசெய் தால், முதல் மாநிலமாக மது விலக்கை ஆதரித்து தமிழக அரசு அமல்படுத்தும். மதுக் கடைகள் நடத்த பல காரணங்கள் உள்ளன. அதில் வருவாயும் ஒன்று. அருகில் உள்ள மாநிலங்கள் மதுவிலக்கை அமல்படுத்தாத தால், தமிழகத்திலும் அமல்படுத்த முடியவில்லை. இந்த விவகாரத் தில், திமுக தலைவர் கருணாநிதி பேசியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ‘என் வீட்டு கோழி அடுத்த வீட்டில்போய் முட்டையிட அனுமதிக்கமாட்டேன்’. மது விலக்கு கொண்டு வந்தால் தமிழகத்துக்கு வர வேண்டிய வருவாய் அண்டை மாநிலத்துக்குப் போய்விடும். அதை எப்படி அனுமதிக்க முடியும்?
பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் மதுக்கடைகள் எண் ணிக்கை குறைவுதான். மக்கள் கோரிக்கையை ஏற்று பள்ளி, மருத்துவமனை அருகே உள்ள மதுக்கடைகள் அகற்றப்படு கின்றன. அவ்வாறு ஏதாவது அகற்றப்படாமல் இருந்து, அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மேற்கு வங்கத்திலும் கேரளா விலும் ஆட்சியில் இருந்தபோது மதுவிலக்கை கொண்டு வர வில்லை. தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்று கோருகிறீர்கள். உங்களுக்கு அங்கு ஒரு கொள்கை. இங்கு ஒரு கொள்கையா ?”
இது எப்போதோ பேசிய பேச்சு கிடையாது. இந்த ஆண்டு ஜனவரி 21 அன்று, சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, மதுவிலக்கு துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியது. இதுதான் தமிழக அரசின் கொள்கை. இதுதான் ஜெயலலிதாவின் கொள்கை.
ஆனால் இன்று தீவுத்திடலில் தன் பிரச்சாரத்தை தொடங்கிய ஜெயலலிதா, “தற்போது அனைவரும் மதுவிலக்கு, பூரண மதுவிலக்கு குறித்து பேசி வருகின்றனர். அதிலும், திமுக தலைவர் கருணாநிதி, திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்குதான் என பேசி வருகிறார்.
பூரண மதுவிலக்கை ஒரே கையெழுத்தில் கொண்டுவருவது என்பது இயலாது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சில்லறை மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். பின்னர் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். இதைத்தொடர்ந்து கடைகளுடன் இணைந்த மதுபானகூடங்கள் மூடப்படும், மேலும், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களளை மீட்கும் வகையில் மீட்பு நிலையங்கள் திறக்கப்படும்.” என்று பேசியுள்ளார்.
ஒரு சில வாரங்களுக்கு முன்பாகக் கூட மதுவிலக்குக்கு எதிராக ஒரு மாநாட்டை நடத்தியதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் பேச்சாளர்கள் மீது 26 மார்ச் 2016 அன்று தமிழக காவல்துறை தேச விரோத வழக்கு பதிவு செய்துள்ளது. “மூடு டாஸ்மாக்கை” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடந்த பிப்ரவரி மாதம் திருச்சியில் நடத்திய மாநாட்டுக்காக ராஜு, காளியப்பன், டேவிட் ராஜ், ஆனந்தியம்மாள், வாஞ்சிநாதன் மற்றும் தனசேகரன் ஆகிய ஆறு பேர் மீது தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக காவல்துறை.
மதுவிலக்குக்கு எதிராக ஒரு பாடலை பாடிய கோவனை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததும் இதே ஜெயலலிதாதான். மதுவிலக்குக்கு எதிராக தமிழகத்தில் எங்கே குரல் எழுந்தாலும் அந்தக் குரலை ஒடுக்குவதற்கான அத்தனை வேலைகளையும் ஜெயலலிதா செய்து வந்தார்.
மதுவிலக்குக்கு ஆதரவாக கூட்டம் போட்டவர்களை ஒரு சாதாரண வழக்கில் கைது செய்யலாம். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும், அவர்களை தேச விரோத வழக்கின் கீழ், அதுவும் நாடு முழுவதும் தேசவிரோத வழக்குப் பிரிவு துஷ்பிரயோகம் செய்வது குறித்து விவாதம் நடந்து வரும் நிலையில், கைது செய்ய ஜெயலலிதா உத்தரவிடுகிறார் என்றால் எந்த அளவுக்கு கடுமையான வன்மம் இருக்கும். இந்த வன்மம் எதற்காக வருகிறது ? வியாபாரம் பாதிக்கப்படுகிறது என்பதைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?
மதுவிலக்கு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது என்று பேசிய ஜெயலலிதாதான் உண்மையில் வேதம் ஓதும் சாத்தான்.
சசிபெருமாள் மரணத்தை ஒட்டி, தமிழகம் முழுக்க மதுவிலக்குக்கு ஆதரவாக பெருங்குரல் எழுந்தபோது கூட மதுவிலக்கு குறித்து வாய் திறக்க மறுத்தவர்தான் இந்த ஜெயலலிதா. ஆனால் இன்று தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசிய முதல் விவகாரமே மதுவிலக்கு. இது ஜெயலலிதா எந்த அளவுக்கு தேர்தலைக் கண்டு அஞ்சுகிறார் என்பதையே காட்டுகிறது.
படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்று ஜெயலலிதா அளித்துள்ள வாக்குறுதியை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள் என்பது அவருக்கும் நன்றாகவே தெரியும். ஜெயலலிதா இவ்வாறு சொன்னதும் எழும் அடுத்த கேள்வி, ஐந்தாண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதே. இதற்கு வெளிப்படையாக ஜெயலலிதா பதில் சொல்ல மாட்டார். ஆனால், அவ்வாறு அமல்படுத்தாமல் இருந்ததற்காக உண்மையான காரணம், அவர் பினாமி பெயரில் நடத்தும் மிடாஸ் நிறுவனமே என்பது அனைவரும் அறிந்ததே. சசிகலா டிசம்பர் 2011ல் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு உடனடியாக நிகழ்ந்த மாற்றங்களில் ஒரு முக்கிய மாற்றம், மிடாஸ் நிறுவனத்தில் மன்னார்குடியைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, அந்த இடத்துக்கு சோ ராமசாமி நியமிக்கப்பட்டதே. மீண்டும் போயஸ் தோட்டத்தில் மன்னார்குடி கருநாகம் புகுந்ததும், சோ வெளியேற்றப்பட்டு, ஜெயலலிதாவின் தற்போதைய பினாமியாக உள்ள டாக்டர் கே.எஸ்.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மிடாஸ் நிறுவனத்தில் தமிழக அரசு செய்த கொள்முதல் அளவு 2011-12ல் 1404 கோடி. 2012-13ல் 1729 கோடி. 2013-14ல் 2280 கோடி. 2014-15ல் 2736 கோடி. 2015-16ல் மிடாஸில் தமிழக அரசு வாங்கிய மதுவின் மதிப்பு 3283 கோடி மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் தனது நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டு விடுமே என்ற காரணம், மதுவிலக்கை அமல்படுத்தாமல் இருந்ததற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று.
டாஸ்மாக் மூடப்பட்டால், மிடாஸ் நிறுவனம் தயாரிக்கும் சரக்குகள் எங்குமே விலை போகாது என்பதுதான் உண்மை. வழக்கமாக மதுக்கடைகளில் மது வாங்குபவர்கள், தங்களுக்கு வேண்டிய பிராண்டின் பெயரைச் சொல்லித்தான் வாங்குவார்கள். தமிழகம் தவிர்த்த அனைத்து மாநிலங்களிலும் இதுதான் வழக்கம். ஆனால் தமிழகத்தில் மட்டும்தான், மதுக்கடைகளில் “நூறு ரூபா குவார்ட்டர், 110 ரூபா குவார்ட்டர்” என்ற குரல்களை கேட்க முடியும். பிரபலமாகாத பல ப்ராண்டுகளை தயாரிக்கும் மிடாஸ் நிறுவனத்தின் சரக்குகள், டாஸ்மாக்கைத் தவிர வேறு எங்குமே விலை போகாது என்ற ஒரே காரணத்தால்தான் மதுவிலக்கை இத்தனை ஆண்டுகளாக அமல்படுத்தாமல் தவிர்த்து வந்தார் ஜெயலலிதா.
மது விற்பனையை அரசு கையகப்படுத்திய 2002ம் ஆண்டுல்தான் மிடாஸ் நிறுவனமும் தொடங்கப்பட்டது என்பது மற்றொரு முக்கிய செய்தி.
இப்படி சொந்தமாக மது தயாரிப்பு நிறுவனம் நடத்தி, அதிலிருந்து கொள்ளை லாபம் அடித்துக் கொண்டு, மது விலக்கைப் பற்றி பேச ஜெயலலிதா வெட்கப்பட வேண்டும்.
ஆனால் வேறு வழியேயின்றி இன்று மதுவிலக்கு குறித்து ஜெயலலிதா பேசியிருக்கிறார் என்றால் அதற்கு முக்கியமான காரணம் உள்ளது. நாளை (10 ஏப்ரல் 2016) அன்று, வெளியிடப்பட உள்ள திமுகவின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு முக்கிய இடத்தை பிடிக்க உள்ளது என்ற தகவலை அறிந்தே ஜெயலலிதா இன்று மதுவிலக்கு குறித்து பேசியுள்ளார்.
பூரண மதுவிலக்கை ஒரே கையெழுத்தில் கொண்டு வருவது இயலாது என்பதெல்லாம் பசப்பு வார்தைகள் என்பது ஜெயலலிதாவுக்கு நன்றாகத் தெரியும். மதுவிலக்கு சாத்தியமே கிடையாது என்பதை நத்தம் விஸ்வநாதன் சட்டப்பேரவையில் பேசியபோது அதை அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தவர்தான் இந்த ஜெயலலிதா.
ஆனால் தேர்தல் பயம் அவரை மதுவிலக்கு குறித்தெல்லாம் பேச வைத்துள்ளது. ஆனால் ஜெயலலிதாவின் இந்த பசப்பு நாடகம் தமிழக மக்களிடம் நிச்சயம் எடுபடப்போவதில்லை. மதுவிலக்கு குறித்து ஜெயலலிதா பேசுவதுதான் சாத்தான் வேதம் ஓதுவது என்பதை தமிழக மக்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள்.
That’s not even 10 mieunts well spent!
The Hurt Locker deserved the Os08r&#a23c; if only Avatar was actually as good as your analysis of it. I fear that a movie that actually dealt with the pressing destiny of most of the western world would require an R-18 rating.
Looks like an awesome challenge! When I’m done with my current contest, might give this a whirl. I ha1nvRe7;t worked front squats yet but the other weights are all no problem. I can’t even squat body weight though so don’t have high hopes of winning! The other lifts are all there. Fun!
சவுக்கு தோழர்களுக்கு.
நெடுநாட்களாய் தங்களது ஆய்வுசார் உண்மை புலனாய்வுகளை படித்து வருகிறேன். கூடுமான வரையில் தாங்கள் நடுநிலையையே கையாண்டதாய் உணர்ந்தேன். ஆனால், தேமுதிக மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்த பிறகு, தங்களது நோக்கம் முழுவதும் அதிமுகவையும் திமுகவையும் தாக்குவதில் மட்டுமே செலவிடப்படுவதாய் உணர்கிறேன். ஜெயலலிதா உட்கார்ந்து பேசுவதை விமர்சிக்கும் தாங்கள், விஜயகாந்த் பேச்சையும் சற்று ஆய்ந்திருக்கலாமே. அதிமுக ஆதரவில் இன்னும் இராஜிய சபை உருப்பினர் பதவியிலிருக்கும் கம்யூனிஸ்டுகள் எந்த தார்மீக உரிமையில் அதிமுக ஊழலைப்பற்றி பேசுகிறார்களென்பதையும் ஆய்ந்திருக்கலாமே. அரசியல் பச்சோந்தி ஐய்யா வைகோ, எந்த கொள்கையின்கீழ் சந்திரகுமாரையும் கலைஞரையும் கொச்சையாய் பேசினாரென்றும் ஆய்ந்திருக்கலாமே. சவுக்கு தளத்திற்கு ஒரு நற்பெயருண்டு. அது தாங்கள் அறியாததன்று எனெனில் அத்தகைய நற்பெயர் தங்களால்தான் உருவாக்கப்பட்டது. அதை தாங்கள் பாதுகாக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். கூடுமானவரையில் நடுநிலையை கையாளுவீர்களெனும் நம்பிக்கையோடு முடிக்கிறேன்,
வாழ்க தமிழ்.
Super
தோழர்கள் எப்போதோ ஜால்ராகிவிட்டார்களே. அவர்களுக்கு கொள்கை என்று ஒன்று இருக்கிறதா என்ன? மேற்கு வங்கத்தில் காங்கிரஸூடன் நட்பு, டெல்லியி, தமிழ் நாடு, கேரளாவில் எதிர்ப்பு, பாஜாவுக்கு எதிர்ப்பு ஆனால் அதைவிட மோசாமான பார்ப்பனிய ஜெயாவுடன் நட்பு. தா. பாண்டியன் போயஸ் கார்டனில் துணி துவைக்காதது மட்டும்தான் பாக்கி. மக்கள் நல(??) கூட்டணி சில தனிபட்ட நபர்களுக்கு ஸ்டாலின் மேலுள்ள பகையால் திமுகாவை எப்படியும் தோர்க்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உண்டாக்கபட்ட கூட்டணி. இதில் மக்கள் நலம் ஒன்றுமில்லை, எல்லாம் சுயநலமும் தனிபட்ட பகையும்தான்
Good … சவுக்கு நடுநிலை தொய்வு ஏற்பட்டுவிட்டது …. தமிழக அதிமுக திமுக ரெண்டும் ஒரே குட்டியல உரின மட்டைங்க… ரெண்டும் மக்களை பகட்டு கட்சி… திமுக சாராய கடை ஏலம் விட்டபோ ஏதும் ஊழல் இருந்ததா ?
http://www.thangayugam.blogspot.in
இந்த முறை மக்கள் நலக் கூட்டணி 50 இடங்களாவது வெற்றி பெற வேண்டும் அப்பொழுதுதான் .. dmk admk இரு கட்சிகளுக்கும் மக்களின் வெறுப்பு செருப்பால் அடித்தது போன்றிருக்கும் ….. மூன்றவது ஒரு கட்சி வளரும் என்ற எண்ணமும் மக்கள் மனதில வளரும் ….. வாழ்க பாரதம் .. வெழ்க தமிழ்
மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற வாழ்த்துக்கள் . இறுதியாக மக்களும் இந்தக் கூட்டணிக்கு ஒத்துழைக்க வேண்டும் . தேர்தல் நேரத்தில் “ஆமா , என்னத்த மக்கள் நலக் கூட்டணி ” என்ற மனநிலைக்கு போக கூடாது . இந்த தேர்தலில் மாற்றத்திற்கு நாம் ஆதரவு அளிக்கா விட்டால் , இனி எந்த தேர்தலிலும் மாற்றத்திற்கு ஆன அணி அமையாமலே போய் விடும் . அதை பற்றி பேசுவதற்கு ஆன தகுதியையும் தமிழக மக்கள் இழந்து விடுவார்கள்
மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற வாழ்த்துக்கள் . இறுதியாக மக்களும் இந்தக் கூட்டணிக்கு ஒத்துழைக்க வேண்டும் . தேர்தல் நேரத்தில் “ஆமா , என்னத்த மக்கள் நலக் கூட்டணி ” என்ற மனநிலைக்கு போக கூடாது . இந்த தேர்தலில் மாற்றத்திற்கு நாம் ஆதரவு அளிக்கா விட்டால் , இனி எந்த தேர்தலிலும் மாற்றத்திற்கு ஆன அணி அமையாமலே போய் விடும் . அதை பற்றி பேசுவதற்கு ஆன தகுதியையும் தமிழக மக்கள் இழந்து விடுவார்கள்
மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற வாழ்த்துக்கள் . இறுதியாக மக்களும் இந்தக் கூட்டணிக்கு ஒத்துழைக்க வேண்டும் . தேர்தல் நேரத்தில் “ஆமா , என்னத்த மக்கள் நலக் கூட்டணி ” என்ற மனநிலைக்கு போக கூடாது . இந்த தேர்தலில் மாற்றத்திற்கு நாம் ஆதரவு அளிக்கா விட்டால் , இனி எந்த தேர்தலிலும் மாற்றத்திற்கு ஆன அணி அமையாமலே போய் விடும் . அதை பற்றி பேசுவதற்கு ஆன தகுதியையும் தமிழக மக்கள் இழந்து விடுவார்கள்
oho . rajathiyoda serndhu vechirukura nidhi’ku peru thaan ‘VAIPU’nidhiya???
நாம் தமிழா் ” தோ்தல் அறிக் கை மிகச்சிறப்பு
1.திருச்சிக்கு தலைநகா் மாற்றம் .. மதுரை , கோவை உள்பட 4 துணை தலை நகரங்கள்
2. பிளாஸ்டிக தடை
3. வருடத்திற்கு 10 ஏாிகள் உருவாக்கம்
4.வெள்ளைச் சக்கரை தடை
5. மது தடை .. இயற்க்கை கள் மாற்று …
6. இயற்க்கை வேளாண்மை.
7. ஆடு மாடு மேய்தல் , வளம் சார்ந்த தொழில் அமைப்புக்கள்.
முக்கியமாக நீர் அதாரம் பெருக்கி, விவசாயம் செழிக்க வழி செய்தல் என தோ்தல் அறிக் கை மிகச்சிறப்பு..
நாம் தமிழருக்கு வாக்களிப்போம்..தமிழர் ஒற்றுமையை உலகத்துக்கு பறை சாற்றுவோம்.. நாமே மாற்று. நாம் தமிழரே மாற்று.. ரெட்டை மெழுகுவத்தி. நமது சின்னம்.
நாம் தமிழர்.அருமையான பதிவு
நாமே மாற்று !!! நாம் தமிழரே மாற்று !!!
சேர்ந்திருந்த அதிமுக கூட்டணிக்கு சொம்பு தூக்கி இருந்தால் நல்லா பணம் சம்பிரிசிருகலம் !! அதையும் 6 மாசத்துலயே மக்கள் பிரச்சனைக்காக (பால் , பஸ் கட்டண உயர்வு ) சண்டை போட்டு கெடுதுகிடாரு!! இப்போ திமுகவுடன் போயிருந்தா , எளிதாக சில நூறு கொடிகள் வாங்கி இருக்கலாம் !! அதையும் கெடுத்துட்டு இப்போ மக்கள் நல கூட்டணியில் இருக்கிறார் !! இதுக்கு மேல என்ன பண்ணனும் ??
அதிமுகவிடம் பல கோடி வாங்கிவிட்டார் என்று சொல்லும் திமுக அடிமைகளே , ஏன் சென்ற 5 வருடம் ஜெயலலிதாவிடம் அடங்கி போய் இருந்தால் இதை விட அதிகமாக சம்பாரிச்சு இருக்கலாமே ??? 8 MLA பிடுங்கி விட்டு , பல வழக்கை போட்டு தமிழகம் முழுக்க அலைகளித்த ஜெயாவிடம் காசு வாங்கிவிட்டாராம் !! என்ன அருமையான லாஜிக் !!
அதிமுக அடிமைகள் கூற்றுப்படி – திமுகவிடம் 500 கோடி பேரம் படியாமல் , கூட்டணி சேரவில்லையாம் !! பேரம் பேசுருவன், 500 கோடி இல்லன 300 கோடிக்கு போக மாட்டானா??? ஆண்டிகளாக இருக்கும் மக்கள் நல கூட்டணிக்கு எதுக்கு போனும் ??
திமுகா வுடன் கூட்டணி சேராமலிருக்க 750 கோடி பிரேமலதாவிடம் ஒப்பந்தம் போடப்பட்டது கேப்டன் ரசிகர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவர் கட்சி தலைவர்களுக்கு தெரியும். விஜயகாந்த் ஒன்னும் கொள்கைக்காக ஜெயலலிதாவிடம் சண்டை போடவில்லையே, 2011 தேர்தலுக்கு முன் ஒப்பு கொண்டபடி, சென்னை மேயர் பதவியை தன் மனைவிக்கு தரவில்லை என்றுதானே ஒரே இரவில் புரட்சி கொடி தூக்கினார்
சவுக்குவும், அதன் கம்யூனிஷ்ட் தோழர்களும் வைகோவுடன் சேர்ந்து கூலிக்கு குலைக்க ஆரம்பித்து விட்டனர். சும்மா சொல்ல கூடாது, வாங்கின காசுக்கு நல்லாதான் குலைக்கிறிங்க
Apdiye jj avargalin properties plus mannarkudi properties and phoenix mall…natham and ops properties…senthil balaji and their p.a properties….ithaiyum kanakku poatu sonningana nalla irukum…
alert(“Hi”);
சந்திரகுமார் :அய்யா,
கருணாநிதி : தம்பி வாசல சத்தம் கேக்குது ,யார்ருன்னு பாரு .
ஸ்டாலின்:ஆளு வந்தருக்கு ,விஜயகாந்த் கட்சியை உடச்ச கூலி வாங்க
வந்து இருக்கு .
கருணா : என்ன காசு, வேலை சுத்தம் இல்லை,காவாசி கூட உடைக்கல , சரி சரி , அங்கேயே ஓரமா நில்லு
,தம்பி கூலிய கொடுத்து அனுப்பு .
ஸ்டாலின் : சரிப்பா
கருணா :அடுத்தது அந்த அல்போன்ஸ்சு வரன்னு சொன்னான் ,காசு கேட்டா கொடுக்காத ,வேலையை முடிச்சிட்டு வாங்கிக்கலாம்னு அப்பா சொல்லிட்டாங்க சொல்லிடுv
Support pwf support pwf
PWF WILL WIN IN TAMILNADU
Savukku is disgustingly biased
திமுக: திருட்டு முதலை கருணாநிதி
BY SAVUKKU · MARCH 31, 2011
கருணாநிதி மீண்டும் என்னை ஆறாவது முறையாக முதலமைச்சராக ஆக்குங்கள் என்று உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்காக கருணாநிதி தாக்கல் செய்துள்ள சொத்துக் கணக்கின் படி, (பிள்ளைகள், மகள், மகன்கள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள் சொத்து நீங்கலாக) பல கோடிக்கு அதிபதி.
சரி, தனது அரசியல் வாழ்வை தொடங்கி, அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஆரம்ப காலத்தில் கருணாநிதியின் சொத்துக் கணக்கை பார்ப்போமா ?
Kalangher
இந்த விபரங்கள் சவுக்கு சொல்வது இல்லை. கருணாநிதியின் ஊழல்களை விசாரித்த நீதிபதி சர்க்காரியா சொன்னது.
கோபாலபுரம் நான்காவது தெருவிலுள்ள இரண்டாவது எண்ணுள்ள வீட்டை ரூ.50,000க்கு வாங்கியது. அதற்காக நிதி ஆதாரம்.
MSR 1335 என்ற எண்ணுள்ள காரை 5,000
விற்றதிலிருந்து கிடைத்த தொகை
மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து 45,000
கடனாக பொற்ற தொகை
இந்த மேகலா பிக்சர்ஸ் நிறுவனமே ஒரு டுபாக்கூர் நிறுவனம். இந்த நிறுவனத்தில், யார் பங்குதாரர்கள் என்பது தெரிந்தால் உங்களுக்கே புரியும்.
மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் 1951ல் தொடங்கப் பட்டது. இந்த நிறுவனத்தில், கருணாநிதி, காசிலிங்கம் மற்றும், கேடி சகோதரர்களை பெற்றெடுத்த புண்ணியவான் மாறன் ஆகியோர் பங்குதாரர்கள்.
காசிலிங்கம் என்பவர், 1965ல் அந்நிறுவனத்திலிருந்து விலகிக் கொண்டார். பிறகு, மாமனும் மருமகனும் மட்டுமே பங்குதாரர்கள். இந்த நிறுவனம், கருணாநிதி முதலமைச்சராக இருந்து சம்பாதித்த கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காக பயன்படுத்தப் பட்டது.
கருணாநிதி முதலமைச்சரானதும், இந்நிறுவனத்தின் பங்குதாரராக இருப்பதிலிருந்து விலகுகிறார். விலகியபின், தயாளு அந்நிறுவனத்தின் பங்குதாரராகிறார். இந்த மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்திலிருந்து கருணாநிதி பெற்ற கடன் விபரங்கள்.
3
31.03.1967 2,55,112
31.03.1968 2,87,112
31.03.1969 2,77,112
31.03.1971 2,88,002
இந்த மேகலா பிக்சர்ஸ் நிறுவனம், கருப்பை வெள்ளையாக்குவதற்கு பயன் பட்டது என்று கூறப்பட்டது அல்லவா ? எப்படி வெள்ளையாக்குகிறார்கள் என்று பார்ப்போம்.
மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் கணக்குப் புத்தகங்களில் பல்வேறு நபர்கள் பல்வேறு தொகைகளை கடனாக கொடுத்ததாக எழுதப் பட்டிருந்தது. அவர்கள், விசாலாட்சி ஆச்சி, காசிநாதன் செட்டியார், ராமநாதன் செட்டியார், சௌந்தரவல்லி ஆச்சி, சொக்கலிங்கம் செட்டியார், சுந்தரம் செட்டியார், சோமசுந்தரம், ராம.வெள்ளையன், லட்சுமி, மாணிக்கச் செட்டியார், உண்ணாமலை ஆச்சி, இந்திரா ஆச்சி, லட்சுமணன் செட்டியார், திருநாவுக்கரசு செட்டியார், திண்ணப்ப செட்டியார், கருப்பன் செட்டியார், லட்சுமணன் செட்டியார் ஆகியோர்.
இவர்களிடம் கடன் பெறப்பட்டதாக கணக்கு எழுதப் பட்டிருந்தது. இந்தப் பெயர்களில் ராம.வெள்ளையன் என்பவர்தான், திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் வாங்கிக் கொடுக்கும் தரகராக செயல்படுபவர்.
இந்த ராம.வெள்ளையன் சர்க்காரியா கமிஷன் முன்பாக அளித்த சாட்சியம் என்னவென்று பார்ப்போமா ?
“இவர் 1976ம் ஆண்டு ஜுலை திங்கள் 5ம் நாளிட்ட தனது உறுதி மொழிப் பத்திரத்தில் தாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் என்றும், திரு.மு.கருணாநிதியை இருபது ஆண்டுகளாக்கு மேலாகத் தெரியும் என்று கூறியிருந்தா. 1970ல் எப்போதோ ஒரு தடவை மேகலா பிக்சர்ஸ்சாரின் கணக்குகளில் சிலரது பெயரில் ரொக்கக் கடன் வசதி பெறுவதற்காக குறிப்பாக, தேவக்கோட்டையில் பணம் தருபவராக பெயர் மட்டும் கொடுக்கின்ற செட்டியார்கள் சிலரின் பெயர்களை சேகரித்துத் தருமாறு திரு.கருணாநிதி இவரது உதவியை நாடினார். திரு.கருணாநிதி விரும்பியவாறே வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள் சிலரின் பெயரைச் சேகரித்துத தர சாட்சி ஒப்புக் கொண்டார். மேலும், தனது பெயரிலும், தனது மனைவி திருமதி.வி.லட்சுமி பெயரிலும், ரொக்க வரவு வைத்துக் கொள்ளவும் அவர் ஒப்புக் கொண்டார். இவ்வாறு மேகலா படத்தயாரிப்பு நிறுவனத்தின் கணக்குகளில் மேற்குறிப்பிட்ட 18 பேர்களில் மொத்தம் 2 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை கருணாநிதி கணக்கில் கொண்டு வந்தார். ராம.வெள்ளையன் மேலும் தெரிவித்ததாவது, 1973ம் ஆண்டு இறுதியிலோ, 1974ம் ஆண்டு தொடக்கத்திலோ திரு.கருணாநிதி அவரைக் கூப்பிட்டனுப்பி வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரித்து வருவதால், ரொக்க வரவுக்காக அவர் சேகரித்துத் தந்த பெயர்களில் அவர்கள் பணம் கொடுத்ததாக உறுதி செய்யும் கடிதங்களை தயாரித்து அவற்றில் அவர்களது கையொப்பங்களை பெற்றுத்தருமாறு அவரிடம் கேட்டார். ரொக்க வரவுக்கு ஆதரவாக போலி புரோநோட்டுக்களை தயாரிக்குமாறு திரு.கருணாநிதி ராம.வெள்ளையனிடம் கூறினார். அப்போது சில கடிதங்கள் மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் கணக்காளர் அழகுமாணிக்கம் என்பவரால் தயாரிக்கப் பட்டு தட்டச்சு செய்யப் பட்டன. காசோலைகள் கடன் கொடுத்தவர்கள் பெயருக்கு வழங்கப் படும் என்றும், அந்தக் காரோலைகளை மாற்றி பணத்தை மேகலா பிக்சர்ஸார் பயன் படுத்திக் கொள்வதற்காக காசோலைகளின் பின்புறத்தில் கடன் கொடுத்தவர்களின் கையொப்பத்தை அவர் பெற வேண்டும் என்றும் ராம.வெள்ளையனிடம் கருணாநிதி கூறினார்.
இது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் கீழ்கண்ட விபரங்கள் தெரிய வந்தன.
picture
கொடுத்துள்ளதாகக் கூறப்பட்ட கடன்களுக்கு ஆதரவாக இருக்கும் புரோநோட்டுக்களையும், கடனைத் திருப்பிக் கொடுத்தவகையில் வழங்கப்பட்டதாகத் தோன்றும், ரொக்கமாற்று காசோலைகளையும், சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள இந்தியன் வங்கி கிளையிடமிருந்து வருமான வரித் துறை கைப்பற்றியது. கொடுத்துத் தீர்க்கப் பட்ட புரோ நோட்டுக்களின் மீது கடன் கொடுத்ததாக கூறப்படுபவர்களின் கையொப்பத்திற்கும் கடன்கள் பெற்றுக் கொண்டதை உறுதிப் செய்து அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப் பட்டுள்ளதாக கூறப்படுபவைகளையும் 05.02.1974 அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு தாக்கல் செய்துள்ள கடிதங்களில் உள்ள அவர்களது கையொப்பங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. பல இடங்களில் கையொப்பங்கள் வேறுபட்டன. கடன்களை திருப்பிக் கொடுத்தவகையில் அவர்களுக்கு வழங்கப் பட்ட ரொக்க மாற்றுக் காசோலைகளின் பின்புறத்தில் அவர்கள் இட்டுள்ளதாக தெரியவந்த கையொப்பங்களும் வேறுபட்டிருந்தன.
மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் கணக்குப் புத்தகங்களை ஆய்வு செய்ததில், அந்நிறுவனத்தின் நிதிகளை கருணாநிதியும் அவரது நெருங்கிய உறவினர்களும் எடுத்துள்ள தொகை பின் வருமாறு:
1967-68
மு.கருணாநிதி 45,000.00
மாறன் 69,115.70
அமிர்தம் 3,179.73
1968-69
தயாளு 2,582.00
அமிர்தம் 1,320.00
1969-70
அமிர்தம் 1,320.00
1970-71
மாறன் 96,675.00
தயாளு 9,000.00
அமிர்தம் 600.00
1971-72
தயாளு 15,922.00
மாறன் 4,600.00
செல்வம் 15,000.00
1972-73
மாறன் 10,500.00
annadurai_mgr_karunanidhi
எப்படி கருணாநிதி குடும்பம் லஞ்சப் பணத்தை வெள்ளையாக்குவதில் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா ?
சரி… இவர்கள் கணக்குப் படியே வைத்துக் கொண்டாலும் கருணாநிதி மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து 45,000 ரூபாய் கடன் வாங்கித் தான் கோபாலபுரம் வீட்டை வாங்கினார். ஆக, 1971ம் ஆண்டு, கருணாநிதியிடம் 45,000 ரூபாய் கூட இல்லை.
2011ல் கருணாநிதியின் சொத்துக்களைப் பாருங்களேன்…..
கருணாநிதி கையில் உள்ள ரொக்கம் 15,000
இந்தியன் வங்கி கோடம்பாக்கம் கிளையில் நிரந்தர வைப்பு நிதி (Fixed Deposit) 3 கோடி, 1 கோடி, 33,920 ரூபாய், 13,15,232 ரூபாய்.
அடையாறு கரூர் வைஸ்யா வங்கி 13,74,664 ரூபாய்.
கர்நாடகா வங்கி வைப்பு நிதி 39,62,995 ரூபாய்.
இந்தியன் வங்கி ராயப்பேட்டை கையிருப்பு ரூபாய் 10,956
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மஹாலிங்கபுரம் ரூபாய். 11,135
இந்தியன் வங்கி கோடம்பாக்கம் ரூபாய் 11,39,441
ராசாத்தி அம்மாளுடன் ஜாயின்ட் அக்கவுன்ட்.
இந்தியன் வங்கி ராஜா அண்ணாமலை ரூபாய் புரம் ரூபாய். 13,15,180
KARUNANIDHI_M_8934e
முதலில் மனைவி தயாளு அம்மாள்.
ரொக்க கையிருப்பு ரூபாய் 30,000
நிரந்தர வைப்பு நிதி இந்தியன் வங்கி கோடம்பாக்கம் கிளை
1 கோடியே 20 லட்சம்.
3 கோடியே 50 லட்சம்
ரூபாய் 3,90,373
ரூபாய் 3,90,584
ரூபாய் 3,90,584
ரூபாய் 3,90,584
ரூபாய் 3,98,247
ரூபாய் 32,50,255
இந்தியன் வங்கி கொத்தவால் பாசார்
ரூபாய் 6,98,250
ரூபாய் 6,93,579
ரூபாய் 13,92,503
ரூபாய் 1,40,723
கர்நாடகா வங்கி. கோடம்பாக்கம்
ரூபாய் 13,74,664
கரூர் வைஸ்யா வங்கி, கோடம்பாக்கம்
ரூபாய் 30 லட்சம்
ரூபாய் 90 லட்சம்
ரூபாய் 90 லட்சம்
ரூபாய் 90 லட்சம்
சேமிப்புக் கணக்கு கையிருப்பு, இந்தியன் வங்கி, கோடம்பாக்கம்
ரூபாய்.2,66,226
சேமிப்புக் கணக்கு கையிருப்பு, இந்தியன் வங்கி, கோடம்பாக்கம்
ரூபாய்.1,65,380
Aug-15-c
அடுத்து துணைவி ராசாத்தி அம்மாள்.
இந்தியன் வங்கி, ராஜா அண்ணாமலை புரம்
நிரந்தர வைப்பு நிதி.
ரூபாய் 15,00,000
ரூபாய் 33,04,087
ரூபாய் 1,14,93,325
ரூபாய் 10,55,641
ரூபாய் 6 கோடியே 67 லட்சத்து 53 ஆயிரத்து 14
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, ராயப்பேட்டை
ரூபாய் 6 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 753
ரூபாய் 46,78,221
சேமிப்புக் கணக்கு, இந்தியன் வங்கி, ராஜா அண்ணாமலைபுரம்.
கையிருப்பு ரூ.11,378
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, ராயப்பேட்டை
ரூபாய்.4,84,027
தயாளு அம்மாள் வணிக முதலீடுகள்.
கலைஞர் டிவி பங்குகள் ரூபாய் 6 கோடியே 60 லட்சம்
ராசாத்தி அம்மாள் வணிக முதலீடுகள்
வெஸ்ட்கேட் லாஜிஸ்ட்டிக்ஸ் பங்கு 2 கோடியே 50 லட்சம்
சொந்தத் தொழில் முதலீடு
ரூபாய் 2 கோடியே 56 லட்சத்து 81 ஆயிரத்து 878
வாகனங்கள்.
தயாளு அம்மாள்.
ஹோண்டா அக்கார்டு கார்
ரூபாய்.16,02,321
இது வரை சொன்ன படி, கருணாநிதியின் மொத்த சொத்து மதிப்பு
ரூபாய் 4 கோடியே 96 லட்சத்து 56 ஆயிரத்து 855
மனைவி மற்றும் துணைவிகளின் சொத்து மதிப்பு
ரூபாய் 36 கோடியே, 2 லட்சத்து 47 ஆயிரத்து 287
இது போக தயாளு மற்றும் ராசாத்தியின் பெயரில் இருக்கும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு
தயாளு ரூ.5,51,1000
ராசாத்தி ரூபாய் 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628
கருணாநிதி, மனைவி, துணைவி ஆகியோரின் பெயரில் இருக்கும், சொத்துக்களின் மதிப்பு மட்டும் 44 கோடியே 18 லட்சத்து 93 ஆயிரத்து 770.
1580963828_4ea23b4ece_b
இந்தக் குடும்பத்திடம் மீண்டும் ஒரு முறை தமிழகத்தை ஒப்படைத்தால் என்ன ஆகும் ?
SARI JAYA, SASI, OPS PATTIYLA VELIYIDA VENDIYATHUTHANE///
நான் உங்கள் வீட்டு பிள்ளை . . . . . அடிக்க போறேன் கொள்ளை . . .. . நான் செல்லுகின்ற பாதை . . … . எங்க நைனா காட்டிய பாதை .. . . . .
PWF-DMDK, who will rule.
Vijayakanth, Pemalatha, Sathish, Vasan, Vaiko or CPM/CPI leaders
I remember vadivelu joke in one film he is having 52 kids yearly each kid will rule 1 week.
–
(((1)))ஆறு கட்சி கூட்டணி அருமை தான் . இப்பொழுது தான் 25 % நோக்கமே நிறைவேறி உள்ளது . இன்னும் 75 % பணிகள் மீதம் உள்ளது . தொகுதி பங்கீட்டை மறு பரிசீலனை செய்வது நல்லது . தொகுதி பங்கீடு இப்படி இருந்தால் நல்லது . கட்சிகளின் செல்வாக்கு மற்றும் தகுதியான நல்ல வேட்பாளர்களை கொண்டுள்ள கட்சிகள் என்ற வகையில் இப்படி பிரிப்பது சரியாக இருக்கும் . தேமுதிக : 75 த மா கா : 50 மதிமுக : 35 மா . கம்யூ : 28 இ . கம்யூ : 25 வி சி : 21. அதே போல , முதல்வர் வேட்பாளரை இப்பொழுது அறிவிப்பது சரியல்ல . தேர்தல் முடிந்து , இந்தக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போது , அனைத்து கட்சி எம் எல் ஏ க்களும் கூடி பேசி முடிவு எடுப்பதுதான் சரியாக இருக்கும் . தொகுதி எண்ணிக்கை பங்கீட்டை முடிவு செய்த பின்னர் , யார் யாருக்கு என்னென்ன தொகுதிகள் என்பதை அனைத்து கட்சிகளும் கூடி பேசி சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டும் . என்னென்ன கட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகள் என்பதை முடிவு செய்த பின்னர் , அந்தந்த தொகுதிகளுக்கு மட்டும் போட்டியிடும் கட்சிகள் வேட்பாளர் விருப்ப மனு பெற்று நேர்காணல் நடத்த வேண்டும் . அதன் பின்னர் , தகுதியான வேட்பாளர்களை செயற் குழுவில் கூடி முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் . (((2)))திமுக , அதிமுக கூட்டணிகள் பலம் பொருந்திய கூட்டணிகள் ஆகும் . வெளிப்பார்வைக்கு இந்த கூட்டணிகளை வீழ்த்தி மாற்று அணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும் என்று தோன்றும் . ஆனால் , இவர்களை வீழ்த்துவது அவ்வளவு சுலபம் அல்ல . திமுக , அதிமுக இரண்டும் அடிப்படை வாக்கு வங்கி உள்ள கட்சிகள் . இவ்விரண்டு கட்சிகளும் , பண பலம் , படை பலம் , கட்டமைப்பு பலம் உள்ள கட்சிகள் . இவர்கள் ஆட்சி செய்த காலத்தில் இவ்விரு கட்சியினரும் பல்வேறு தொழில்கள் செய்வதற்கு உரிமம் பெற்று , முறையாகவும் , முறைகேடாவும் பல கோடி சொத்து சேர்த்தவர்கள் . அதனால் , தேர்தலில் இவர்கள் தண்ணீர் போல பணத்தை செலவு செய்வார்கள் . அது போக ஊழல் செய்து சம்பாதித்த பணம் வேறு . அதனால் , பண பலத்தில் இவ்விருவரும் யானைகள்தான் . மக்கள் நலக் கூட்டணி இவ்விடயத்தில் ஒவ்வொரு தொகுதிகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் . ஒவ்வொரு கட்சியும் , தங்கள் கருவூலத்தை முறையாக பராமரித்து திட்டமிட்டு , ஒருங்கிணைந்து செலவழித்து மக்களிடம் பிரச்சாரத்தை கொண்டு போக வேண்டும் . இப்பொழுது , ம ந கூட்டணி தொண்டர் பலத்தில் திமுக , அதிமுக வுக்கு சளைத்ததல்ல என்பது ஆறு கட்சி கூட்டணியால் சாத்தியமானது .(((3)))அடுத்து மிக முக்கியமானது கட்டமைப்பு பலம். திமுக , அதிமுக ஆகிய கட்சிகள் தமிழ்நாட்டின் மூளை முடுக்கேலாம் நுழைந்த கட்சிகள் . மக்கள் வசிப்பிட பகுதிகளை பொறுத்து நிர்வாகிகள் : (1) ஊரக பகுதி , (2) வார்டு பகுதி , (3) சிற்றூர் , (4) பேரூர் , (5) நகர் , (6) நகர் வார்டு , (7) மாநகர் , (8) மாநகர் வார்டு , (9) மாநகர் மண்டலம் ஆகியன . நிலப்பகுதிகளை பொறுத்து நிர்வாகிகள் : (1) ஒன்றியம் , (2) வட்டம், (3) மாவட்டம் , (4) மண்டலம் , (5) மாநிலம் ஆகியன . இந்த அனைத்து பகுதிகளிலும் தலைவர் , செயலாளர் , பொருளாளர் , செயல்வீரர்கள் , தொண்டர்கள் ஆகியவர்களை உள்ளடக்கியது திமுக மற்றும் அதிமுக கட்சிகள் . இதுமட்டுமல்லாமல் , (1) அரசு ஊழியர் சங்கம் , (2) தொழிற்சங்கம் , (3) விவசாய சங்கம் , (4) நெசவாளர் சங்கம் , (5) கூட்டறவு சங்கம் ஆகியவற்றில் இந்த இரு கட்சிகளுக்கும் கணிசமான உறுப்பினர்கள் உள்ளனர் . அதனால் , இந்த அனைத்து பகுதிகளிலும் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது மிக அவசியம் . மற்ற கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்று மற்ற கட்சியினர் களப்பணி ஆற்றாமல் இருந்து விடக் கூடாது . டெல்லியில் ஆம் ஆத்மி ஏற்படுத்திய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்துவது என்பது இவ்வளவு தடைகளையும் தாண்டி தான் பெற வேண்டும் . (((4)))அது மட்டுமல்ல , திமுக , அதிமுக கட்சிகளின் அணிகளின் செயல்பாடு வேறு . வைகோ, திமுக பேரம் பேசிய விவகாரத்தை சொன்னவுடன் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை , தேர்தல் ஆணையத்தில் புகார் என்று எவ்வளவு செயல்பாட்டை செய்தது திமுக வழக்கறிஞர் அணி . ஆனால் , சந்திரக்குமார் வைக்கோவை அதிமுகவின் எஜன்ட் என்று கூறிய பின்னரும் அவர் மீது இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் பட வில்லை . திமுக , அதிமுக இரண்டும் மாணவர் அணி , இளைஞர் அணி , தொழிற்சங்க அணி , வழக்கறிஞர் அணி , மருத்துவர் அணி , பொறியாளர் அணி , மகளிர் அணி , இலக்கிய அணி என்று அணிகளைக் கொண்டு சீராக செயல்பட்டு வருகிறார்கள் . எனவே , இவ்வளவு தடைகளையும் தாண்டி மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் அனைத்து பகுதி நிர்வாகிகளும் , அணிகளின் நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம் . வைகோ போன்ற தலைவர்கள் நிதானமிழந்து , உணர்ச்சி வசப் பட்டு பேசுவதை நிறுத்த வேண்டும் . இப்பொழுது , ம ந கூட்டணியினர் எந்த பிரச்சாரத்திற்கும் போகாமல் இருப்பது நல்லது . தொகுதிப் பங்கீடு , வேட்பாளர் பட்டியல் இறுதி செய்த பின்னர் பிரச்சாரத்திற்கு செல்வது நல்லது .(((5)))பிரச்சாரத்தை மண்டல வாரியாக பிரித்து கொண்டு தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவது நலம் . உதாரணம் : (1) தென் தமிழகத்தின் திருநெல்வேலி , தூத்துக்குடி , குமரி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலம் என்று எடுத்துக் கொள்ளுங்கள் . வைகோ : திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பை, சேரை விஜயகாந்த் : நாங்குநேரி , வள்ளியூர், பணகுடி , சாத்தான்குளம் . ஜி . ரா : தென்காசி , கடையநல்லூர் , சங்கரன்கோயில் . திருமா : கோவில்பட்டி , ஓட்டப்பிடாரம் , விளாத்திகுளம் , முத்தரசன் : தூத்துக்குடி , திருசெந்தூர் , திருவைகுண்டம் , வாசன் : குழித்துறை , நாகர்கோயில் , கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்ய வேண்டும் . இரண்டு நாள் பிரச்சாரத்தை முடித்த பின்னர் , இரண்டாம் நாள் இரவில் மண்டல தலைநகர் எனப்படும் இடத்தில் அனைத்து தலைவர்களும் ஒரே மேடையில் ஒருங்கிணைந்து பொதுக்கூட்டத்தில் அனைவரும் பேச வேண்டும் . அதுமட்டுமல்லாமல் , கூட்டணிக்காக தேர்தல் அறிக்கைகளும் , தேர்தல் வாக்குறுதி பட்டியலையும் தயாரிக்க வேண்டும் . அதனை , மக்களிடத்தில் சரியான முறையில் விநியோக்கிக்க வேண்டும் . (((6)))மதச்சார்பின்மை , சாதிச்சார்பின்மை , ஊழல் தடுப்பு , இயற்கை வளம் சூறையாட தடுப்பு , அடிப்படைக் கட்டமைப்பு , தொழில் வள மேம்பாடு,மாநில பொருளாதார , மனித வளம் மேம்பாடு ஆகிய வற்றிற்கு சிறப்பான செயல் திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டும் . மக்களின் தேவைகளை சிறப்பான முறையில் பூர்த்தி செய்யக் கூடிய கூட்டணியாக மக்கள் நலக் கூட்டணி திகழக வேண்டும் . இன்னும் விரிவாக எழுதாலாம் . ஏன் என்றால் , தமிழ்நாடு என்ற மாநிலம் பல்வேறு விதமான பிரச்சினைகளை உள்ளடக்கிய மாநிலம் . எனவே , ஒவ்வொரு பிரச்சினைகளையும் ஆழ்ந்து படித்து சிறப்பான முறையில் தீர்வு காண வேண்டியது அவசியம் . மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற வாழ்த்துக்கள் . இறுதியாக மக்களும் இந்தக் கூட்டணிக்கு ஒத்துழைக்க வேண்டும் . தேர்தல் நேரத்தில் “ஆமா , என்னத்த மக்கள் நலக் கூட்டணி ” என்ற மனநிலைக்கு போக கூடாது . இந்த தேர்தலில் மாற்றத்திற்கு நாம் ஆதரவு அளிக்கா விட்டால் , இனி எந்த தேர்தலிலும் மாற்றத்திற்கு ஆன அணி அமையாமலே போய் விடும் . அதை பற்றி பேசுவதற்கு ஆன தகுதியையும் தமிழக மக்கள் இழந்து விடுவார்கள் . அனைவருக்கும் நன்றி .
Super sir,
You have boldly published about JJ strategy for capturing vote by way of BAN of alcohol phase to phase. The same way also central govt I.e BJP fake campaign done promised recovery of Black Money from Swiss Bank, as of now result is zero & single paise not recovered. The same result will given by JJ. So people already awaked not trusted JJ promises. Last five years JJ runned Paralysis Govt only.
I support you Savukku.
Don’t support DMK and ADMK, If you are correct person please support Makkal Nala Kootani
Super
MK’s achievements. ( some thing that i can do for kelavan sudalin and karunanidhi)
1. 2g mega great world scandal. Caught red handed by accepting 200 crore scam money for kalignar TV where main dmk family members kanimozhi, karunanidhi wife daylu main accused with substantial evidence.
2, Introduced 12 -14 hours power cut to all over tamilnadu to favour few industries in chennai for commission
3, unprecedented price raise.
5, land mafia under DMK ministers looted agriculture lands to real estate plots
6, DMK ministers and DMK secretaries in each region acted as small kings looted others properties like malls, cinema theatre’s, bus routes by black mailing.
7, DMK leaders watching namitha show and delighted with paid self praise shows.
8, Official sathik basha murder the witness in 2g scam. Ex DMK minister kiruttinan murder for DMK family interest.
Prison ex Ministers for looting others properties using political weight like kn nehru, ponmudi, veerapandi arumugam.
NKKP Raja for beating a man in open public for not accepting to agree to the demand to sell his land.
9, In the corruption of sand querying, granite querying, ration rice hijack, horlicks bottle scam
10, all headlines dayalu ammal (karunanidhi wife) Kanimozhi, Raja, dyanathi maran blockage in jail on various corruption charges.
The supreme Court denied bail and closed in tihar. Dayalu ammal to avoid jail quoted famous “alzemeir” disease pathetically.
11, Indian history of sakria commissison ruling of skillful scientific corruption to karunanidhi. later escaped from court sentence by making and begging to indra gandhi to with draw the case in exchange tamil nadu core interest like katcha thivvu, cauvery water etc
12, With proxy tatumanal corruption
13, Stalin and kanimozhi 5000 crore deal for malls in coimbatore, chennai etc
14, Police launched murderous attacks on lawyers and judges before the court.
15, Anti-Dalit and Anti backward class policies
17, court warned of law and order for numerous thefts and day time robbery.
18, Massacre of honest officers.
20, Blocked Granite investigation as Alagiri and dayanathi alagiri son/ grand son of karunanidhi directly involved.
21, cancellation of subsidies for the elderly.
22, Acting before public for liquor ban to cheat peopls when doing nothing for liquor ban during DMK rule when 60 % of DMK ministers and party mens owing the liquor factory that supplies liquor to tasmaq.
23, Used DMK supporter Cowan using corrupt money to raise voice for liquor ban hiding the facts DMK is the reason who brought liquor into the state.
25, Spend time watching “manda mayilada” the famous half nude namitha show with zero governance while the state was in 14 hours power cut.
26, Thirumangalam success the famous vote for money introduction by alagiri (son of karunanidhi)
27, Gave away Tamil nadu’s core river and dam interest like mullai periyar , cauvery to congress demand just for few ministerial posts to enjoy the looting and corruption in central government port folio’s.
28, Just for family interest and few ministerial posts that are key critical corrupt posts for looting, gave away Ellem tamil peoples and supported the congress/rajabaksha to lead the war that kill lakhs of peoples.
29, Famous three hours fasting drama for ellam war and cheated the TN people.
30, Went for most destructive Methane project approval by Stalin in the interest of corrupt commission money (http://www.thehindu.com/news/national/tamil-nadu/mou-signed-for-production-of-coal-bed-methane/article1033130.ece) even after knowing that it would spoil the entire lively hood of farming and farmers in delta to stone age from activist like nam alvar by repeated protest. As when caught red handed cunningly and shamelessly asking sorry as he signed with out knowing it.
31, Awarded Mani megali sonia for giving family members posts in central government and discarded Ellem peoples, southern districts peoples interest in mullai periyar.
32, Introduced family culture in politics discarding the core principles of DMK by its founding members like Annadurai.
இதற்குமேல எழுதற பொறுமை எனக்கில்லையே தவிர இது கையளவுதான்…இன்னும் கடலளவு இருக்கு
Savukku Mr.Shankar
I had been the follower, well wisher, patron of Savukku and Mr.Shankar, Your Ethical Professional Journalism especially on Jayalalitha has been below standard on one side and other side, I am not able to see Savukku standards for the past few months. Is it that somebody is writing the text on behalf of Savukku is my doubt. It is always a borrowed script or text or version. In this article, the substance what you are trying does not deserve this news article which you also know. After a long time, if an article is published, our expectations are high in terms of your deliverables and it is disappointing.
There s no analysis nor introspection to any of the recent articles published which is unusual of Savukkku
The point Savukku is trying to make is Jayalalitha’s statement on prohibition reveals her fear to face this election. Is it not true that it was Karunanidhi who revoked prohibition in the 70s ? Is it not true that it is very difficult even in a country like the USA to enforce total prohibition ? Is it not sound on the part of a political to foresee the moves of the main opponent and plan a counter strategy ? Did she not devote most of her speech to highlight how this government tried to serve the people ? I completely agree that there is no substance of worth in this article especially the point that she is afraid of facing this election. It is laughable to arrive at this conclusion about a political leader who is fielding candidates in almost all the constituencies. On the contrary from the beginning the opposition played a dull and lacklustre role in capturing popular imagination. It is Karunanidhi’s fear which is evident from the very beginning. Savukku is loosing its credibility and it is not clear what its agenda is. I am shocked at the appauling low standards of political discourse in this site!
yes Karthikeyan,
It seems somebody writing in the name of savukku. this is not savukku style.