மிகப் பெரிய வெற்றியாக அமைந்திருக்க வேண்டிய போராட்டம் மிக கரும்புள்ளியோடு முடிவடைந்திருக்கிறது. ஜல்லிக் கட்டுக்கான இந்த இளைஞர்களின் போராட்டம், வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டமா என்றால் நிச்சயமாக இது வரலாற்று சிறப்பு மிக்க போராட்டமே. தன்னெழுச்சியோடு அரசியல் கட்சிகளின் தலைமையின்றி ஒரு மிகப்பெரிய போராட்டத்தை தமிழக இளைஞர்கள் நடத்தி உலகையே தமிழகத்தை நோக்கி திரும்ப வைத்துள்ளனர். அப்படி உலகை வியக்க வைத்த ஒரு போராட்டம், இப்படித்தான் முடியும் என்று பலரும் ஆருடம் கணித்தது போலவே வன்முறையோடு முடிந்துள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சம்பிரதாயமான ஆர்ப்பாட்டங்களோடு ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் நிறைவடைந்து விடும் என்றே ஆட்சியாளர்கள் கருதினர். தடையை மீறி அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டையொட்டி கைது நடவடிக்கைகள் அரங்கேறின. போராட்டம் தீவிர வடிவம் பெறும் என்பதை அறியாத ஆட்சியாளர்கள் உச்சநீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற ஒரே காரணத்தால் அவசர அவசரமாக கைதில் இறங்கினர். மெள்ள மெள்ள ஜல்லிக்கட்டு தமிழர் அடையாளம் என்ற உணர்வு பரவி, தமிழகத்தின் இதர மாவட்டங்களில் போராட்டம் தொற்றிக் கொள்ளத் தொடங்கியது.
சென்னையில் போராட்டம் முழு வீச்சை அடைந்தது. பெருமளவில் மாணவர்களும், இளைஞர்களும் மெரினாவில் குவிந்தனர். சில நூறாக இருந்த எண்ணிக்கை லட்சங்களை தொட்டது. மாணவிகள் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. சென்னை கடற்கரை திருவிழாக் கோலம் பூண்டது. குடும்பம் குடும்பமாக மக்கள் இந்த மாபெரும் திருவிழாவில் பங்கெடுக்கத் தொடங்கினர். ஜல்லிக் கட்டுக்கு என்று குவிந்த கூட்டம், பண மதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சினை, காவிரி நீர் பிரச்சினை, அந்நிய குளிர்பானங்கள், என்று அனைத்து விவகாரங்களையும் விவாதிக்கத் தொடங்கியது. இவை குறித்த முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.
போராட்டத்துக்காக கூடிய கூட்டத்துக்கு உணவு, குடிநீர் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு வழங்கப்பட்டது. அடிப்படை சிக்கல்கள் இல்லாமல் இருந்ததால் போராட்டம் தொய்வின்றி நடந்தது.
தொலைக்காட்சி சேனல்கள் போராட்டத்தை கொண்டாடின. 24 மணி நேரமும் இடைவேளையின்றி நேரடி ஒளிபரப்பு செய்தன. செய்தி ஊடகங்களுக்குள் யார் இளைஞர்களின் நற்பெயரைப் பெறுவது என்பதில் பெரும் போட்டியே நடந்தது. முதல் இரண்டு நாட்கள் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருந்த தேசிய ஊடகங்கள், வேறு வழியேயின்றி போராட்டங்களை ஒளிபரப்பு செய்யத் தொடங்கின. நேரில் செல்ல வாய்ப்பு கிடைத்தவர்கள் நேரில் சென்றனர். வாய்ப்பு இல்லாதவர்கள் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் ஆர்வத்தோடு போராட்டத்தை பின் தொடர்ந்தனர். தமிழகமே திருவிழாக் கோலம் பூண்டது.
தன்னெழுச்சியான மாணவ இளைஞர் போராட்டம் போலத்தான் வெளிப்படையாக தெரிந்தது. ஆனால், இதில் எப்படி அரசியல் ஆதாயம் அடையலாம் என்று பல்வேறு சக்திகள் ஒரே நேரத்தில் இந்த போராட்டங்களை பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கின.
ஜெயலலிதாவின் உறவினர் தீபா, எம்ஜிஆர் சமாதியில் மலர் வளையம் வைத்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நாளில்தான் காலை ஏழரை மணி முதல் இளைஞர்கள் மெரீனாவில் கூடத் தொடங்கினர். தீபாவின் பத்திரிக்கையாளர் சந்திப்பை மறைத்து இருட்டடிப்பு செய்ய, ஆட்சியாளர்களுக்கு மாணவர்களின் போராட்டம் பெரும் உதவியாக இருந்தது. தங்கு தடையின்றி மாணவர்கள் கூட அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இப்படி கூடிய கூட்டம் மக்கள் வெள்ளமாக பெருகும் என்பதை, ஆட்சியாளரும் உணரவில்லை, மன்னார்குடி கூட்டமும் உணரவில்லை. ஆனால் இதில் தங்களின் அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொள்ள ஒரு அற்புதமான வாய்ப்பு உருவாகி உள்ளதாக இரு தரப்புமே உணர்ந்தது.
பன்னீர் செல்வம் தனது ஆளுமையை நிலை நிறுத்தவும், தனது முதல்வர் பதவியை காப்பாற்றிக் கொள்ளவும் இதை ஒரு நல்ல வாய்ப்பாக உணர்ந்து, உடனடியாக அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கைகளை தொடங்கினார்.
2009ம் ஆண்டு ஈழப் போராட்டம் நடந்தபோது, அப்போதைய திமுக அரசு, அந்தப் போராட்டங்களை திட்டமிட்டு படிப்படியாக உடைத்து நீர்த்துப் போகச் செய்தது. பெரும் இயக்கமாக உருவாக இருந்த அந்த இளைஞர் மற்றும் மாணவர் போராட்டம், காவல்துறை உதவியோடு பொய் வழக்களாலும், வன்முறையாலும் அடித்து நொறுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அப்படிப்பட்ட இழிவான முறைகளை பன்னீர்செல்வம் அரசு கையாளவில்லை. மாறாக மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முனைப்போடு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.
டெல்லி சென்று நரேந்திர மோடியை சந்தித்தபோது, அவர் உதவி செய்ய முடியாது என்று கைவிரித்த நிலையில், மாநில அரசின் சட்டத் திருத்தத்துக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை பெற்று வந்தார். அதோடு அல்லாமல், டெல்லியிலேயே தங்கி சட்டத்திருத்தத்தை உள்துறை, சட்டம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகங்களுக்கு அனுப்பி அவற்றின் ஒப்புதலை பெற்று, குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைத்தார்.
சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் என்பது தெரிந்ததும், தமிழக அரசு சார்பில் ஞாயிறன்று ஜல்லிக் கட்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெளியிடப்பட்ட அவசர சட்டம், விடுமுறை நாளில் பீட்டா உள்ளிட்ட அமைப்பினரால் உச்சநீதிமன்றத்தில் தடை பெற்று விடப்படுமோ என்ற அச்சத்தில், சட்ட நகல் ரகசியமாகவே வைக்கப்பட்டது. அரசு சார்பில் அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஞாயிறன்று ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடத்தப்பட்டன. இந்த இடத்தில் போராட்டம் நிறைவு பெற்று வெற்றி அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று போராட்டம் நடத்துபவர்கள் அறிவித்ததோடு, ஜல்லிக் கட்டு நடத்த விடாமல், பன்னீர்செல்வத்தையும் திருப்பி அனுப்பினர்.
இந்த இடத்தில்தான் சசிகலாவின் கணவரின் நடராஜ தாண்டவம் ஆரம்பமானது. போராட்டம் நிறைவுக்கு வந்து பன்னீர்செல்வம் தன் பதவியை நிலை நிறுத்திக் கொண்டு விடுவாரோ என்று அஞ்சிய நடராஜன், தனது தமிழ் தேசிய தொடர்புகள் மற்றும் விவி மினரல்ஸின் வைகுண்டராஜனின் உதவியோடு, போராட்டத்தை நீடிக்க செய்தார். வைகுண்டராஜனின் நியூஸ் 7, வேலை அசாதாரணமாக இந்த போராட்டத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது. ஒரு கட்டத்தில், அவசர சட்டத்துக்கு எதிராக மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்று வாட்சப்பில் வந்த வதந்தியை சரி பார்க்க வேண்டும் என்ற அடிப்படை நேர்மை கூட இல்லாமல் அதை அப்படியே செய்தியாக வெளியிட்டது. இந்த செய்தி இந்நிறுவனத்தின் உள்நோக்கத்தை வெளிப்படுத்தியது. இது போராட்டத்தை மீண்டும் தீர்வு காணாமல் நீட்டிக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே.
பின்னிருந்து இயக்குவோரின் சதித்திட்டம் புரியாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும், வறட்டுத்தனமான வாதங்களோடு போராட்டம் தொடர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தனர். நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். நிரந்தரத் தீர்வு என்ன என்பதற்கான விளக்கம் அவர்களிடத்தில் இல்லை. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறாத காரணத்தால், அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அவசரச் சட்டத்துக்கும், சட்டப்பேரவையில் இயற்றப்படும் சட்டத்துக்கும் ஒரே அதிகாரம் உள்ளது என்பதை யாருமே கவனத்தில் கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் நிரந்தரத் தீர்வு என்ற முழக்கத்தை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
அரசு நினைத்திருந்தால் எப்போதோ இந்த போராட்டத்தை ஒடுக்கியிருக்க முடியும் என்பதை யாருமே கவனத்தில் கொள்ளவில்லை. ஒரு மாநிலத்தின் முதல்வர் ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு ஊருக்கு சென்று, உள்ளே நுழையவிடாமல் திருப்பி அனுப்பப் பட்டது, எந்த அரசுக்கும் விடப்பட்ட நேரடி சவால். ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் இது நடந்திருக்குமா என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அரசின் பொறுமையை போராட்டக் குழுவினர் பலவீனம் என்று புரிந்து கொண்டனர்.
அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று தொடங்கிய போராட்டத்தின் இலக்குகள் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. ஜல்லிக் கட்டு நடத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்றிய பிறகு நிரந்தரத் தீர்வு என்ற குழப்பமான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமான தீர்வு என்பதே இல்லை என்பதை யாருமே புரிந்து கொள்ளத் தயாராக இல்லை. மாநில அரசோ, மத்திய அரசோ, எந்த அரசு சட்டம் இயற்றினாலும் அந்த சட்டம் நிச்சயமாக உச்சநீதிமன்றத்தில் சோதிக்கப்படும் என்பதை யாரும் புரிந்து கொள்ள தயாராக இல்லை. எந்த அமைப்பும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கக் கூடாது என்று ஒரு ஜனநாயகத்தில் எப்படியான நடவடிக்கை எடுக்க முடியும் ? உச்சநீதிமன்றத்தை மூடி விடலாமா ? அது சாத்தியமா ? ஆனால் இவற்றை விவாதிக்கவோ, புரிந்து கொள்ளவோ யாருமே தயாராக இல்லை.
ஜல்லிக்கட்டுக்காக தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி வந்த சேனாதிபதி, ராஜசேகர் உள்ளிட்டோர் போராட்டத்தை கைவிடுமாறு வெளிப்படையான கோரிக்கைகளை விடுத்தனர். போராட்டத்தில் முன்னணியில் இருந்த பலர், விடுத்த கோரிக்கைகளும் செவிசாய்க்கப்படவில்லை.
இன்று கிராமப்புரங்களில் விவசாயத்தின் நிலை என்ன ? கடுமையான நெருக்கடியில் விவசாயமும் விவசாயிகளும் இருக்கின்றனரா இல்லையா ? காளைகளின் பயன் என்ன ? அவை உழவுக்கு பயன்படுத்தப்படுவதில்லை. வண்டி மாடுகளாக பயன்படுத்தப்படுவதில்லை. ட்ராக்டர்தான். இனவிருத்திக்காக பயன்படுகின்றனவா என்றால் அதுவும் இல்லை. அரசின் கால்நடை பராமரிப்புத் துறை நிலையங்களில், வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படும், உயர் ரக மாடுகளின் விந்துகளே, இனவிருத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. அப்படி இருக்கையில் வருடம் முழுவதும் தீவனம் அளித்து, வருடத்தில் ஒரு நாள் நடக்கும் ஜல்லிக்கட்டுக்காக காளைகளை வளர்க்கும் பொருளாதார வசதி படைத்தது யார் ? கிராமங்களில் பணம் கொழுத்த பண்ணையார்களால்தான் இதை சாத்தியப்படுத்த முடியும். உள்ளுர் மாட்டினங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன என்று பலத்த கோரிக்கை எழுந்தது. உள்ளுர் மாட்டினங்களை வளர்க்க வேண்டாம் என்று உங்களை யார் தடுத்தார்கள் ? வீடுதோறும் காளை மாடுகளை, நாட்டின மாடுகளை வளர்க்க வேண்டாம் என்று தடுத்தது யார் ? யாரும் தடுக்கவில்லை. பொருளாதார ரீதியாக இப்படி மாடு வளர்ப்பது என்பது சாத்தியப்படாத ஒரு அவலச் சூழலில் விவசாயம் இன்று இருக்கிறது என்பதே முகத்தில் அறையும் உண்மை.
ஜல்லிக்கட்டை யுட்யூபில் மட்டுமே பார்த்த இந்த இளைஞர்கள் சென்னையில் லட்சக்கணக்கில் கூடிய போராட்டம், பல காலமாக அழுத்தப்பட்டிருந்த உணர்வுகளின் வெளிப்பாடு என்பதாகவே இந்த போராட்டத்தை புரிந்து கொள்ள முடியும். வேலையிழப்பு, பண மதிப்பிழப்பு, பொய்த்த விவசாயம், செயல்படாத ஒரு மாநில அரசு, பொய்களையே பேசும் மத்திய அரசு என்று பல்வேறு விவகாரங்களின் மீது உள்ள கோபம் ஒரு மையப்புள்ளியை அடைந்து, ஜல்லிக் கட்டு போராட்டமாக வெடித்தது என்றே இதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நாள் ஜல்லிக்கட்டு நடத்துவதால், தமிழகத்தின் எந்த வாழ்வாதார பிரச்சினைகளும் தீரப்போவதில்லை என்பது அனைவருக்கும் புரியாமல் இல்லை. ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.
இந்தப் போராட்டத்தில் திமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சிகளையும், மாணவர்கள் அனுமதிக்கவில்லை. இது அரசியல் கட்சிகளை கடும் அதிர்ச்சியடைய வைத்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அரசியல் தலையீட்டை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தடுத்த காரணத்தால் போராட்டத்துக்கு எவ்விதமான தலைமையும் இல்லாமல் போனது. போராட்டக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்த காவல் துறை முயன்றபோது, யாரோடு பேச்சுவார்த்தை நடத்துவது என்று புரியாமல் தவித்தனர். ஆர்ஜே பாலாஜி, ராகவா லாரன்ஸ், இயக்குநர் கௌதமன் போன்றோர் மாணவர்களின் பிரதிநிதிகளாக மாறினர். தலைமை இல்லாத காரணத்தால், எந்த கட்டத்தில் போராட்டத்தை நிறுத்துவது என்று யாருக்குமே புரியாத ஒரு குழப்பமான சூழல் இறுதி வரை நிலவியது.
பல்வேறு தமிழ் தேசிய இயக்கங்கள் மற்றும் நக்சல் ஆதரவு இயக்கங்களுக்கு, இளைஞர்களின் இந்த போராட்டம் வாராது வந்த மாமணியாக இருந்தது. தாங்கள் நடத்திய பல்வேறு போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின்போது, இது போன்ற கூட்டம் கூடியதை பார்த்தே இராத இந்த இயக்கங்கள், இந்த கூட்டத்தை எபப்பாடுபட்டாவது அப்படியே நிறுத்தி வைக்க வேண்டும் என்பதில் தீவிர முனைப்பு காட்டின. ஜல்லிக் கட்டுக்கு எதிராக கடுமையான நிலைபாடு கொண்டிருந்த இயக்கம் மக்கள் கலை இலக்கியக் கழகம். 2008ம் ஆண்டு புதிய ஜனநாயகம் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில், ஜல்லிக்கட்டு குறித்து இப்படி குறிப்பிடப்பட்டிருந்தது. “ஏறு தழுவுதல் மட்டும்தான் பாரம்பரியமாக வந்ததா? சாதிதீண்டாமை, வலங்கை இடங்கை வெறியாட்டங்கள் கூடப் பாரம்பரியமாக வந்தவைதான். அதற்காக அவற்றையெல்லாம் ஆதரிக்க முடியுமா? பாரம்பரியமாக நீடித்துவந்த பொட்டுக் கட்டுதலைச் சட்டம் போட்டுத் தடுக்க முற்பட்டபோது, பார்ப்பனஆதிக்க சாதியினர் பதறியதைப் போலத்தான் இருக்கிறது, சாதிவெறியை மறைத்துக் கொண்டு ‘தமிழன் வீரம்’, ‘பாரம்பரியம்’ எனப் பூசி மெழுகிடும் வாதமெல்லாம்.” இணைப்பு ஆனால் இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர்கள் மக்கள் அதிகாரம் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர்.
இளைஞர்களின் எழுச்சியை ஒவ்வொரு அமைப்பும் தங்களுக்கு சாதகமாக திருப்பவே முயற்சித்தன. ஏனெனில் இப்படியொரு மக்கள் திரளை அவர்கள் பார்த்ததேயில்லை. 1995ம் ஆண்டு, அப்போதைய ஆளுனர் சென்னா ரெட்டி, ஜெயலலிதா மீது வழக்கு தொடர சுப்ரமணியன் சுவாமிக்கு அனுமதி அளித்தார். இதனால், தமிழகத்தில் சுப்ரமணியன் சுவாமிக்கு செல்வாக்கு அதிகரித்தது. அவர் தனது ஜனதா கட்சியின் சார்பில் சென்னை மைலாப்பூரில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அதிமுகவின் ரவுடிகள் எஸ்டி சோமசுந்தரம் மற்றும் மதுசூதனன் தலைமையில் கூலிப் படையினர் அந்த கூட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டனர். மேடையில் கல்லெறியப்பட்டது. சுவாமிக்கு பாதுகாப்பாக இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே சுவாமியை பத்திரமாக ஒரு வேனில் ஏற்றினர். வேனில் ஏறிய சுவாமி, “என்ன ஆச்சு… எதற்காக வேனில் ஏற்றுகிறீர்கள்” என்றதும், உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளனர். என் கட்சிக்கு இப்படி கூட்டம் வந்தது இதுதான் முதல் முறை. இனி எப்போ வரும்னே தெரியலை. இப்போ போயி பேச விடாம தூக்கிட்டு வந்துட்டீங்களே என்று வருத்தப்பட்டுள்ளார்.
அவரின் வருத்தத்தைப் போலத்தான் இந்த அமைப்புகளின் வருத்தமும் இருந்தன. ஞாயிற்றுக் கிழமை சேனாதிபதி உள்ளிட்டவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் போராட்டத்தை கைவிடுமாறு கூறிய பிறகும், போராட்டம் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியது இத்தகைய அமைப்புகளே. ஞாயிறன்று இரவு மாணவர்களிடையே உரையாற்றிய இயக்குநர் கௌதமன், குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட அவசர சட்டத்தின் நகல், திங்களன்று வர உள்ளதாகவும், அதன் பிறகு கூடி என்ன செய்வது என்று முடிவு செய்யலாம் என்றும் இளைஞர்களிடையே கூசாமல் பொய் பேசினார். அவர்களும் ஹோ என்று ஒலியெழுப்பி ஆரவாரம் செய்தனர். அவசர சட்டம் வெளியிடப்படாமல், ஜல்லிக்கட்டை அரசு எப்படி நடத்த முன் வந்தது என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை. அன்றே பேசிய மற்ற இயக்கத்தினர், பெப்சி கோக்கை தடை செய்ய வேண்டும், பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டை தடை செய்ய வேண்டும், காவிரி நீர் மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகளை அடுக்கிக் கொண்டே சென்றனர். பீட்டாவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்பதை ஏறக்குறைய அனைவருமே வலியுறுத்தினர்.
பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றால், மனித உரிமைகளுக்காக போராடும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், சுற்றுச் சூழலுக்காக குரல் கொடுக்கும் க்ரீன் பீஸ் போன் அமைப்புகளையும் அல்லவா தடைசெய்ய வேண்டும் ? நமக்கு பிடிக்காது என்று பீட்டாவை தடை செய்ய தொடங்கினால், அவர்களுக்கு பிடிக்காது என்று மக்கள் அதிகாரம், மே 17 , நாம் தமிழர் என்று அவர்களும் தடை கோருவார்களே ? என்ன பதில் சொல்வீர்கள் ? பீட்டா போன்ற அமைப்புகளை கருத்து ரீதியாக எதிர்கொள்வதே ஜனநாயகம்.
ஞாயிற்றுக் கிழமை இரவைத் தாண்டி போராட்டம் திங்கட்கிழமை காலை நீடித்ததே வன்முறைக்கு வித்திடத்தான். திங்களன்று காலை, காவல்துறை சார்பில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மறுத்தனர். மிக மிக அதிசயமாக லத்தி இல்லாமல் அவர்களை கலைக்கச் சென்றது காவல்துறை. அவர்களோ, கடலோரம் தஞ்சம் புகுந்தனர். பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று அவர்களை அழைத்தபோதும், ஒருவரும் வரவில்லை. மாறாக, ஜல்லிக் கட்டுக்கு நிரந்தர தீர்வு என்று பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருந்தனர்.
மெரினா சூழலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த காவல்துறையும் மெரீனாவில் குவிக்கப்பட, நகரத்தின் இதர பகுதிகள், சமூக விரோதிகளின் கைகளுக்குள் சென்றது. ஐஸ்ஹவுஸ் போன்ற பதற்றமான பகுதிகளில் போதுமான காவல்துறையினரை நிறுத்தியிருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் சென்னை மாநகரத்தை பைனாக்குலர் மூலம் நிர்வாகம் செய்தார் ஆணையர் கமிஷனர் ஜார்ஜ்.
காவல் நிலையம் தாக்கப்பட்டது என்ற செய்தி பரவியதுமே, காவலர்கள் வேட்டை நாய்களைப் போல பாய்ந்தனர். கையில் சிக்கியவர்களை அடித்து நொறுக்கினர். வாகனங்களை நொறுக்கினர். தீ வைத்தனர். காவல்துறையினர் இல்லாத இடங்களில் பதிலுக்கு காவல்துறையின் வாகனங்களும் பொதுச் சொத்துக்களும் கொளுத்தப்பட்டன.
போராட்டத்தின்போது, கேக் வழங்கி அன்போடு பேசிய காவல்துறையினரைப் பார்த்ததும் இளைஞர்கள் காவல்துறை உண்மையிலேயே மக்களின் நண்பன் என்று தவறாக நம்பினர். காவல்துறையின் உண்மை முகம் வன்முறை மட்டுமே. வன்முறையை நிகழ்த்துவதற்காகவே அவர்கள் பயிற்சியளிக்கப்படுகிறார்கள். உருவாக்கப்படுகிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் 2009, பிப்ரவரி 19 அன்று நாள் முழுவதும் நடந்த காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்தை நேரில் பார்த்துள்ளேன். நேற்று நடந்தது ஒன்றுமே அல்ல. கொடியங்குளம், தாமிரபரணி, பரமக்குடி, உயர்நீதிமன்றம் என்று காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்துக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
ஒரு வார காலமாக விடுப்பு இல்லாமல், தொடர்ந்து வெயிலில் பணியாற்றி வைத்திருந்தவர்களை, அடியுங்கள் என்று அனுப்பினால் என்ன ஆகும் என்பதே நேற்றைய காவல்துறையின் வன்முறை. காவல்துறையின் மற்ற எல்லா வன்முறைகளையும் போல, இதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படப் போவதில்லை. ஒரு நாளும் எடுக்கப்படப் போவதில்லை. திமுக அரசாக இருந்தாலும் இது நடந்திருக்காது. ஏனெனில் இதுதான் சிஸ்டம்.
ஜல்லிக் கட்டுக்காக நடந்த இந்த போராட்டத்தைப் போலவே இதர மக்கள் பிரச்சினைகளுக்காகவும் மாணவர்களும், இளைஞர்களும் திரளுவார்களா அப்படி திரண்டாலும் அதை அரசு இயந்திரம் இது போல அனுமதிக்குமா என்பது சந்தேகமே. இருப்பினும், 1965க்கு பிறகு தமிழகத்தில் நடந்த எழுச்சிமிகு போராட்டம் இது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
தற்போதைய இளைய சமுதாயம் பொறுப்பற்ற செல்போன் தலைமுறை என்ற விமர்சனத்தை இளைஞர்கள் உடைத்தெறிந்துள்ளார்கள். செல்போன் மூலமாகவே சமூக பொறுப்புணர்வோடு போராட்டத்தை நடத்துவோம் என்பதை காட்டியுள்ளார்கள். செல்போன் மூலமாகவே ஒன்றிணைவோம் என்பதை உணர்த்தியுள்ளார்கள். சமூக அக்கறை மற்றும் பொறுப்புணர்வில் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதையும் நிரூபித்துள்ளார்கள். அந்த வகையில் ஜல்லிக்கட்டு போராட்டம் மகிழ்ச்சிதரத்தக்க வெற்றி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நாளைய தலைமுறை நம்பிக்கை அளித்துள்ளது.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”
“நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு – அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு”- கடுவெளிச் சித்தர்
.
இது யாருக்கு பொருந்துதோ இல்லையோ சவுக்குக்கு இப்ப நல்லா பொருந்துது.
இவ்வளவு ஆண்டுகாலம் ஆகியிருக்கு சவுக்கோட உணமை குணம் எனக்கு தெரிய.
இப்பவாது தெரிந்ததே என்று ஒதுங்கிக்கொள்ள வேண்டியதுதான்.
நான் சவுக்கை இனி பார்க்க மாட்டேன் நீங்கள் உண்மையை சொல்லாமல் பொய் தான் உங்கள் கட்டுரையில் உள்ளது
நடந்தது அறவழிப் போராட்டமென்றாலும் நிறைவடைந்தது வன்முறையில். சிங்கள அரசிற்கும் தமிழக அரசிற்கும் என்ன வித்தியாசமிருக்கிறது? ஒன்றுமில்லை. அறவழிப் போராட்டமென்றாலும் இது வித்தியாசமானது. எப்படி லட்சக்கணக்கான மக்கள் கூடினர் என அனைவருக்கும் வியப்பாக இருக்கிறது. இதில் வியப்புகொள்ள என்ன இருக்கிறது? மக்களுக்கான கோரிக்கையில் மக்கள் இணையாமல்? கருத்து மக்களை பற்றிக்கொள்ளும்போது அது மாபெரும் சக்தியாக உருவாகும் என்ற மார்க்சின் கூற்று மெரினாவில் மீண்டும் உண்மையாயிருக்கிறது. தமிழகம் இந்தியாவிலேயே வித்தியாசனது என்பதை நமது மாணவர்களின் மூலம் மீண்டும் நிரூபணமாயிருக்கிறது. நமது மாணவர்கள் அற்புதமானவர்கள். அந்த 6 நாட்களில் சோசலிச சமூகக் கூறை தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டி விட்டுச் சென்றிருக்கின்றனர் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
போராட்டத்தை சிதைக்க நினைத்த விஷமிகள் பிஜேபி, ஏபிவிபி, அதிமுக, மற்றும் போலீஸ் உளவாளிகளே. சவுக்கு இதை தெரிந்தே மறைத்ததோ அல்லது தெரியாமல் விட்டதோ சவுக்குக்கே வெளிச்சம். குறிப்பாக பொன்.ராதா என்ன சொன்னானோ அதையே ஆதி, ரஜினி முதல் பன்னீர் வரை ஒப்புவித்து கொண்டிருக்கின்றனர். துரோகிகள் இல்லாத போராட்டங்கள் இல்லை. துரோகிகளை ஒழிக்காமல் போராட்டங்கள் நிறைவடைந்த்தில்லை. காவல்துறை மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் துடைத்து எறிந்த இப்போராட்டம் மிகப்பெரிய வெற்றியே.
நிச்சயமாக உங்களுக்கு மாடுகளை பற்றிய அறிவும் அதன் பயனும் சுத்தமாக இல்லை… நானும் ஒரு விவசாயிதான்.. 7 மாடுகள் வளர்க்குறோம்… கண்டிப்பாக நாங்கள் பண்ணையார்கள் கிடையாது… உங்களுக்கு மாடுகளை பற்றி எதுவுமே தெரியாது நீங்கள் தெரிந்து கொள்ளப்போவதுமில்லை.. ஆனால் கோமாதா குலமாதா பாட்டு மட்டும் நல்லா பாடுவீங்க…. உங்களது பத்திரிக்கை தொழில்… அரசியல் பேசுங்கள் ஓகே… கார்பரேட் வாய்ஸ் தராதீர்கள் … அப்பறம் இதற்கு அடுத்த உங்களின் கட்டுரையான என்டிடிவி க்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் நன்றி…
Savukku, Article should send the message very strongly.
The 50 Member of Parliament have failed miserably as People Representative in Parliament and have not initiated any action so far. Now they are acting and that also in contradictory with the TN Chief Minister Agenda with Prime Minister which they should have done long back and sorted out this issue.
So far , the Srilankan Fishermen issue, Cauvery issue, Mullai Periyar Issue, Vardh Cyclone Relief Measures have to be talked in the Parliament. Thambi durai cannot think that he is the King of the Throne and Prince of Sasikala and talk only about her. First demand was for the MPs to resign and the People should make it happen.
The Government of Tamilnadu should Go and seek fresh mandate from People and not allow Sasikala to become CM. People did not elect the Government even for PanneerSelvam to become Chief Minister.
Law and Order, Education Ministry Governance, Corporation of Chennai Governance, People Welfare Measures and Issues , Women and Child Welfare Development measures are all being Mismanaged without proper direction. WE do not have a proper Government and the Bureaucrats do not have appropriate freedom to function as well.
Savukku, with your past history of Investigative Journalism, if you are the same Savukku now, should bring out the Truths and Facts.
அஸ்கரின் கருத்துகள் அருமையான கருத்துகள். சவுக்கு சக்களத்திக்கு சாமரம் வீசத் தொடங்கிவிட்டது. //போராட்டத்தின் ஆரம்பகட்ட கோரிக்கையான வீ வாண்ட் ஜல்லிகட்டு என்பது இப்போராட்டத்தின் ஒரு குறியீடு மட்டுமே. போராட்டத்தின் 2ம் நாளே பல கருத்துக்கள் மாணவர்களிடையே முட்டி மோதிக்கொண்டன. பலர் விவசாயிகளுக்காகவும், பலர் ஊழலுக்கெதிராகவும், டாஸ்மாக்குக்கு எதிராகவும், பலர் கார்ப்பரேட்டுகளின் அடக்குமுறைக்கெதிராகவும் கோஷமிட்டனர். தங்களது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தினர். 6 நாட்களும் நீடித்த போராட்டத்தின் ஊடாக தமிழகமே மாறப்போவதாகவும் மாறிவிட்டதாகவும் மகிழ்ச்சி கொண்டனர். இதை வெறுமனே ஜல்லிகட்டு கோரிக்கை என்ற ஒன்றினால் மட்டும் சாத்திமாகும் என்பதை ஏற்றுக்க்கொள்ள மாணவர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல. அவர்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினர். தங்களுடைய சுயநலத்திற்காக போராட்டத்தை நீட்டிக்க அனுமதியளித்த அரசு விழித்துக்கொண்டது. மேற்படி வெறிநாய்களை ஏவியது. வெறிநய்களும் அடங்கிக்கிடந்த அரிப்பை தணித்துக்கொண்டது. மர்றபடி ஏபிவிபி கூட்டத்தில் ஊடுறுவியிருந்ததைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!//
முகப்புப் படமே (மாணவன் கல்லெறிவது போன்ற) உன் முகமூடியைக் கழற்றிக் காட்டிவிட்டது. நடந்த வன்முறைகள் காவல்துறையாலும், திமுக போன்ற அரசியல் களவாணிகளாலும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை என்பது கண்கூடு.
ஜெயலலிதாவுக்கு எதிரான கருத்துகளை மட்டும், ஆதாரத்தோடு சொல்லி, திமுக களவாணிகள் எல்லாம் உத்தமர்கள் போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியவன்தானே நீ?
இந்த ஒரு கட்டுரை மூலம் உன் சாயம் வெளுத்துவிட்டது
ஒரு விபச்சாரி கூட இந்தக் கட்டுரை எழுதியவனைவிட நேர்மையாக நடந்துகொள்வாள். ஊடக விபச்சாரம் என்று பேசும், உன்னைப் போன்ற ஆட்கள்தான் இந்த சமூகத்தின் சாபக்கேடு. காவல்துறைதான் காவல்நிலையம் முன்பு நின்ற வாகனங்களில் தீவைத்து வன்முறையை ஆரம்பித்தது. பல இடங்களில் ஆட்டோக்களுக்கும் குடிசைகளுக்கும், மக்கள் உடைமைகளுக்கும் தீ வைத்தது. அதைப் பற்றி ஒரு வரி கூட எழுதாத நீ எல்லாம் என்ன மயிருக்கு எழுத வர்றே?
எல்லோரிடமும் எதிர்த்து நின்ற சவுக்கு, தற்போது சசிகலா காலில் விழுந்த, பன்னீர் காலில் விழுவது ஏனோ? அதே போல் ஜெயாவின் முந்தைய ஆட்சிக் கடைசிக்காலக்கட்டத்தில் எழுதிய சவுக்கு, அதர்க்குபின் நீண்ட இடைவேலியில். அதாவது ஜெயா அவர்கள் மரைந்தப்பிரகு எழுத துனிந்தது ஏனோ? இப்போது பன்னீருக்காக பரிந்து சவுக்கு வலைவது ஏனோ?
போராட்டத்தின் ஆரம்பகட்ட கோரிக்கையான வீ வாண்ட் ஜல்லிகட்டு என்பது இப்போராட்டத்தின் ஒரு குறியீடு மட்டுமே. போராட்டத்தின் 2ம் நாளே பல கருத்துக்கள் மாணவர்களிடையே முட்டி மோதிக்கொண்டன. பலர் விவசாயிகளுக்காகவும், பலர் ஊழலுக்கெதிராகவும், டாஸ்மாக்குக்கு எதிராகவும், பலர் கார்ப்பரேட்டுகளின் அடக்குமுறைக்கெதிராகவும் கோஷமிட்டனர். தங்களது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தினர். 6 நாட்களும் நீடித்த போராட்டத்தின் ஊடாக தமிழகமே மாறப்போவதாகவும் மாறிவிட்டதாகவும் மகிழ்ச்சி கொண்டனர். இதை வெறுமனே ஜல்லிகட்டு கோரிக்கை என்ற ஒன்றினால் மட்டும் சாத்திமாகும் என்பதை ஏற்றுக்க்கொள்ள மாணவர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல. அவர்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினர். தங்களுடைய சுயநலத்திற்காக போராட்டத்தை நீட்டிக்க அனுமதியளித்த அரசு விழித்துக்கொண்டது. மேற்படி வெறிநாய்களை ஏவியது. வெறிநய்களும் அடங்கிக்கிடந்த அரிப்பை தணித்துக்கொண்டது. மர்றபடி ஏபிவிபி கூட்டத்தில் ஊடுறுவியிருந்ததைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!
Nice article. It should have been even earlier. You could have guided them. You didn’t do it. Many people would have read your article had you written at the time of protest. People still believe you.
இது சரியான கட்டுரையா சவுக்கு விலைபேனது போல் தெரிகிறது
i aggreed.
One thing we understand from this, Any revolution at the end of everything needs leader to take it forward to make it success for long time. We need to identify the leader. There is no other right choice for tamilians at this time then Naam Tamiliar party and Seeman. We need to him to hunt this DMK and AIADMK. Tamilians should come out for this.
இக்கட்டுரையில் சில நல்ல தகவல்கள் இருந்தாலும், சில அட்டிபடைகளை சிந்திக்க வைக்க கூடிய கருத்துக்கள் இருந்தாலும் கூட, எதோ ஒரு பக்கசார்பு, அதற்கான தொரு இளையோட்டம் இருப்பது வெளிபடையாக தெரிகிறது, தயவு செய்து இனிவரும் காலங்களில் முழுமையாக நடுநிலையில் நின்று எழுதுங்கள். போலீஸ் நடவட்டிகை ஆரம்பமாகும் முன்னர் ஏன் திரு பன்னீர் செல்வம் அவர்கள் நாட்டு மக்களுக்கு தொலை காட்சியில் தோன்றி சகல விடயங்களையும் விளக்கி ஓர் உரை ஆற்றியிருக்க முடியாமல் போய்விட்டது. சுமுகமான முறையில் இதனை முடித்து வைபதற்கு நிறைய வாய்பபுகள் இருந்தும் அ தி மு க அரசு அதற்கு முயலாது செயல் பட்டமைக்கு பின்னணியில் நிச்சயமாக காரணம் உண்டு.
மெரினா அறப்போராட்டமும் கபட புல்லுருவிகளும்…
தானே சேர்ந்த கூட்டத்தை தனதாக்கிக்கொண்ட கயவர்கள்…..
OPS ஐ எதிர்க்கும் அதிமுக உயர் மட்ட கூட்டம் ..
அதிமுகவை அழித்துஆட்சியை பிடிக்க துடிக்கும் திமுக களவாணிகள் ..
மோடியை எதிர்க்கும் மதவாத சக்திகள்….
நாட்டில் நல்லதே நடக்க கூடாது என்ற சீரிய எண்ணம் கொண்ட இடதுசா ரி இயக்கங்கள் …
அறவழியில் சரித்திரம் படைத்துக்கொண்டிருந்த போராட்டடம் இந்த கயவர்களால் கடைசி நாள் அன்று திசை மாற போராட்டக்காரர்கள் இடம் கொடுத்தது ஒரு வரலாற்று பிழை……
OPS க்கு நல்ல ஜால்ரா
Finally the Youth Protest came to a Gangsters.
Ithu Sariya??—“பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றால், மனித உரிமைகளுக்காக போராடும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், சுற்றுச் சூழலுக்காக குரல் கொடுக்கும் க்ரீன் பீஸ் போன் அமைப்புகளையும் அல்லவா தடைசெய்ய வேண்டும் ? நமக்கு பிடிக்காது என்று பீட்டாவை தடை செய்ய தொடங்கினால், அவர்களுக்கு பிடிக்காது என்று மக்கள் அதிகாரம், மே 17 , நாம் தமிழர் என்று அவர்களும் தடை கோருவார்களே ? என்ன பதில் சொல்வீர்கள் ? பீட்டா போன்ற அமைப்புகளை கருத்து ரீதியாக எதிர்கொள்வதே ஜனநாயகம்.”
இந்த போரட்டத்திலன் முக்கிய காரணி வீரமற்ற தலைமையையை தமிழனால் ஜீரணிக்க முடியவில்லை என்பது தானே ஒழிய ஜல்லிக்கட்டு அல்ல. இந்த போராட்டத்தில் ஜல்லிக்கட்டு என்பது ஒரு குறியீடு தான், நோக்கமல்ல என்பதை உணர தவறிவிட்டீர்கள்.
எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் ஒன்றாக போராட தமிழராக திரண்டனர். அவர்களுக்கு பொது குறியீடு தேவை பட்டது அப்போது கிடைத்தது தான் ஜல்லிக்கட்டு.
ஜெயலலிதா மறைவுக்கு பின் பன்னீர் செல்வம் பதவியேற்றத்தை மக்கள் ஏற்று கொண்டார்கள். ஆனால் சசிகலா கட்டுப்பாட்டில் கட்சியும் ஆட்சியையும் வந்ததை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. பன்னீர் செல்வம் சசிகலாவுக்கு கட்டுப்படாமல் செயல் பட்டிருந்தால் அவர் ஏற்று கொள்ளபட்டிருப்பார். ஆனால் அவர் அனைவரையும் அனுசரித்து போக கூடியவர். அதன் காரணமாகவே இந்த பதவி அவருக்கு கிடைத்தது.
தமிழன் சர்வாதிகாரியையும் அயோக்கியனையும் கூட தலைவனாக ஏற்று கொள்வான் அவர்களுக்கு பேராண்மை இருந்தால். ஆனால், கோழையை ஒரு போதும் தலைவனாக ஏற்று கொள்ள மாட்டான்.
இதற்கு காரணம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நம் வரலாறை நாம் புரட்டி பார்க்க வேண்டும். ஏனெனில், தமிழனின் உளவியல், பல்லாயிரம் ஆண்டு வரலாற்றுடன் பின்னி பிணைந்தது. மூவேந்தர் காலத்தில் தலைவனுக்கு முதல் தேவை வீரம். வீரமற்றவனிடம் நாடு இருந்தால் பகைவனால் சூறையாடப்படும். அதனால் தான் தமிழன் எப்போதும் வீரத்தை முதலில் வைத்தான். இன்று காலங்கள் மாறினாலும், அந்த உளவியல் மாறவில்லை.
இன்றைக்கு வீரத்தை விட விவேகமும், நல்லொழுக்கமும் தான் தலைவனுக்கு தேவை என்று அவன் அறிவுக்கு தெரியும். அனால் துரதிர்ஷ்டவசமாக தமிழன் அறிவை விட உணர்வுக்கு கட்டுபட்டவன். இதனால் தான் உணர்ச்சியை தூண்டும் பேராண்மை கொண்டவர்களுக்கு அடிமையாக இருந்து வருகிறான். இது மாற பல்லாண்டுகள் ஆகலாம்.
இந்த போராட்டத்தில் பன்னீர் செல்வம் அனைவரையும் அனுசரித்து அதே நேரத்தில் காரியத்தையும் சாதித்தார். அவரின் சாதுர்யம் மெச்சப்படவில்லை, ஏனெனில் அவரிடம் மக்கள் எதிரிபார்த்தது அதுவல்ல. அனைத்துக்கும் உச்சமாய் ஒரு முதலைச்சரை ஒரு ஊருக்குள் வர விடாமல் தடுத்த போது அவர் அவருக்கே உரிய பணிவன்புடன் சென்னை திரும்பி வந்தார். இது அவரது பேராண்மைக்கு விடப்பட்ட சவால். அதை அவர் பணிவுடன் கையாண்டது பெரும் தவறு. அங்கே அவர் ஆளுமையை நிலை நிறுத்தியிருக்க வேண்டும். இது அவரின் வீரமின்மையை உறுதிப்படுத்தியது. இத்தனாலேயே போராட்டம் நிற்கவில்லை.
செய்வதரியாது திகைத்த அரசு, காவல் துறையிடம் நிலைமையை கையளித்தது. அதன் வழக்கமான கைங்கர்யத்துக்கு பின் தமிழனுக்கு புதிய குறியீடு கிடைத்து விட்டது.
அடிபட்ட வேங்கை மீண்டும் இப்போதே சீறலாம். அல்லது சொத்து குவிப்பின் தீர்ப்பு அல்லது இடைத்தேர்தல்/உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியை கடித்து குதறலாம்.
எப்படி இருந்தாலும் அது ரத்தம் பார்க்காமல் விடாது.
Firstly , 50 MPs should have resigned which was the first demand as Jallikattu was not initiated by these Members in the Parliament.
SEcondly, for the past 2 years, Tamilnadu BJP has only been singing MODI song and not concentrating on any Tamilnadu specific problems like Mullai Periyar, Srilankan Fisherman, Farmers Issues, Cauvery Issue. These people have mnot done any thing except simply talking
Thirdly, every political party, Cinema people including Ragava Lawrence, Hip Hop Adhi, RJ Balaji were only trying get mileage out of any big disaster happening. People like Kamalhasan, Samutrakani were also supporting but certainly they wre kept out by the Jallikattu protest team
Fourthly, There was no Legal team to safe guard them although Law college students were in the protest.
Fifthly , the foremost question AIADMK and Police atrocity has always been there with the Teachers protest, Political Protest, Disabled Protest, Any Protest for that matter, where they were not able to face and resolve or remedify or ratify the issues . Hence O.Panneerselvam is no exception
Sixthly undoubtedly THIS GOVERNMENT HAS TO GO WHICH HAS TO TAKE PEOPLE MANDATE AS PEOPLE DID NOT VOTE FOR OPS LEADERSHIP WHICH EVERY VOTABLE PERSON WILL ACCEPT. This will safe guard the interest of the People of Tamilnadu and Nation also.
we have to appreciate OPS and he should continue, otherwise somebody will occupy his position which will be dangerous for tamilnadu.
As like agitation ended in bad way you have ended article with soft corner towards police attack rather then tough. Firstly Police attacked peaceful protester instead of providing more clarity. Without giving ordinance details to agitator. You have made a point if ordinance is provide it will make peta to file case. Is it not diverting ?
அருமையான கட்டுரை
சவுக்கின் இந்த கட்டுரை உண்மையை உரைப்பதாகவே உள்ளது. நேற்று வரை நல்லவர்களாக விளங்கிய ஆதி,ஆர்ஜே.பாலாஜி, சேனாதிபதி போன்றோர்கள் இப்போது கெட்டவர்களாக தெரிகின்றனர். இது எத்தகைய வெளிப்பாடு? நல்லதை தெரிவிப்பவர்கள், உணர்ச்சியைத் தூண்டி எதிர்ப்பவர்கள் என்பவர்களுக்கு இடையே வேறுபாட்டை உணராத கூட்டமாகத்தான் இருந்தார்கள். உண்மையை உணர்ந்தவர்கள் விலகிவிட்டனர். சிலர் உண்மையைத் தெரிந்தும் போலியாக உணர மறுத்தனர்.இந்த போராட்டத்திலிருந்து தெரிந்துக்கொள்ள வேண்டியது.: மாணவ இளைஞர் சமுதாயம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். எந்த போராட்டத்திற்கும் வரையறுக்கப்பட்ட தெளிவான நோக்கம் அல்லது கோரிக்கை வேண்டும். நிச்சயம் ஒரு தலைமை தேவை. தவிர, கலவரம் என்றாலே அழிவும், இழப்பும்தான். இதில் ஒரு சாராரை மட்டும் குறை சொல்லி பயனில்லை. அரசு என்பது அரசுதான்.
As rightly pointed in the Savukku, though it is a himalayan victory for the general public by assembling such big crowd in the marina, the entire world talks about the agitation,but the ending was become sad due to non availability of readership of coordination among the Students,Social activities etc., It is natural in any movement the political parties will always try to sanitise the movements.Here also it happened.However we have to salute the entire people who have sat day and night to convey their feeling to the Governments. Please don’t criticize the voluntaries who have done good job for success of this agitation.
அருமையான கட்டுரை! எந்த போராட்டமும் உரிய நேரத்தில் முடிக்கவில்லை என்றால் அது வீணர்கள் கையில் கிடைத்துவிடும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஜல்லிக்கட்டு போராட்டம்.
Good artical..
true true true
சவுக்கு பன்னீர்க்கு ஜால்ரா அடிக்காதே நீ ஒரு ஆம்பளையா
மானம் கெட்டவனே மெரினா போரட்டம் மாபெரும் வெற்றி கரும்புள்ளி என உளறுகிறாயே மட சாம்பிராணி… புரட்சி புடலங்காய் ஒடி போ…
வழக்கம் போல் ஆழமான அலசல். இதை சொல்ல அறிவும் நேர்மையும் வேண்டும். சவுக்கை தவிர வேறு யாரை நம்ப முடியும்,
நல்ல திசை திருப்பும் கட்டுரை, இந்த கட்டுரையை நியமான கட்டுரையாக ஏற்றுகொள்ள முடியவில்லை. நீங்கள் கட்ரை எழுதிய உள்னோக்கமும், ஒருபச்சமாக எழுதியுள்ளதும் வெளிச்சம். ஆக இந்த கொத்துவிட்டு அளையிர கட்டுரை சொல்லாது. மீண்டும் முயற்ச்சிக்கவும்.
உங்க பதிவை கொஞ்சம் சீக்கிரமா பதிவிட்டிருக்கலாம்
கரும்புள்ளி மாணவர்க்கு இல்லை. காக்கும் கரங்களுக்கே
வசதியாக மறுக்கப்படும் நிஜங்கள்:
1. ஜல்லிகட்டு மட்டும் நிறைவேறிவிட்டால் போதுமா. இதற்கு மட்டும் ஆசைபட்டவர்கள் முந்தைய நாளே வெளியேறிவிட்ட குறுகிய குறிக்கோள்கொண்ட ?ஆதிக்க அமைப்புகள். 1 வாரம் ஜல்லிகட்டிற்கு போராடியது மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் மட்டுமே. ஜல்லிகட்டு அமைப்புகள் கூட்டம் திரட்டவில்லை.
2. அத்தகைய மாணவர் மக்களுக்கு ஜல்லிகட்டைவிட மிக அத்தியாவசியமான அவமானகரமான பிரச்சனைகளை கேட்பதற்கு கட்டாயம் உரிமை இல்லை என்றுகூறுவதுதான் காட்டுமிராண்டித்தனம். விவசாயிகள் தற்கொலை -காவிரி கிடைக்கவில்லை என்றாலோ -peta cocacola போன்ற அந்நியநாட்டு ஆதிக்க முதலாளிகளை எதிர்த்து கேள்விகேட்டால் இளைஞர்களுக்கு “தேசவிரோதிகள்” என்று முத்திரை குத்துவதா? peta ban முதல் 4 நாள் கோரிக்கை எங்கே போனது ஏன் மழுங்கடிக்கப்பட்டது. ஆதி வெற்றி meetல் சொல்கிறார் “jersey” மாடு, (இறக்குமதி, அதாவது A2 பால், குழந்தைகளின் உடல்நலம்,) Coke Pepsi எல்லாம் பற்றி அக்கறையில்லை என்று. திடீரென்று பின்வாங்க என்ன காரணம். அப்படியென்றால் போராடும் மாணவர் தங்களை எப்படி நம்புவர்.
3. மெரினாவில் மாணவர் கூட்டத்தில் தற்போதுவரை வன்முறை நடந்தது என்று காட்டமுடியுமா? கலவரம் கடற்கரைக்கு வெளியேத்தானே நடந்தது?
4. யார் வன்முறையில் ஈடுபட்டது என்பதை உள்ளூர் ஊடகங்கள் மறைக்கச்செய்தாலும் உலக ஊடகங்கள் yutubeல் அனைவரும் பார்க்கின்றனர்.நான் CNN 18 ல் பார்த்து வெட்கி தலைகுனிந்தேன்.
5. 3 வருடம் மத்திய மாநில ஆட்சியாளர்கள் இத்தகைய சட்டம் இயற்றாமல் தமிழக மக்கள் அனைவரையும் ஏமாற்றிவந்தது மெத்தனமாகவா கயமைத்தனமாகவா? இதை சுட்டிக்காட்ட தைரியம் இல்லாத ஊடகங்கள் no morality
6. தாங்கள் சொன்ன 2 அமைப்புகள் (ம.அதிகாரம் போன்றவை) களத்திலேயே தென்பட இல்லை.
7. சாலைகளில் வன்முறையில் ஈடுபட்டது அந்தந்த பகுதிமக்கள் மற்றும் xxx மாதிரித்தான் தெரிகிறது. அதுவும் மெரினாவில் கூட்டத்தை கலைத்ததற்காக என்றுபுலப்படுகிறது.
அப்பட்டமாக தவறான கருத்துரைகளை பரப்பி அறவழிப்போராட்டத்தை களங்கப்படுத்துவது கேவலம்.
போராட்டம் துவங்கும் போது இந்த இளைய தலைமுறை ஏட்டுச்சுரைக்காய்கள், முட்டாள்கள், அரசியல் அறிவு அற்றவர்கள் மேலும் இவர்கள் ஒரு இரவு கூட தாக்குபிடிக்க மாட்டார்கள் என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால் இன்றைய அரசியல் சூழல் அவர்களுக்கு உதவிவிட்டது. அதில் அவர்கள் வென்றும் இருக்கிறார்கள். ,சூழ்ச்சிகளில் சிக்கியது, அடி வாங்கியது, கூட்ட மனப்பான்மைக்கு மயங்கியதால் ஏற்பட்ட அனுபவங்களில் இருந்து நிறைய கற்றும் இருக்கிறார்கள். வெறும் பணங்காய்ச்சி மரங்களாக வளர்க்கப்பட்ட பிள்ளைகளுக்கு சமூக அக்கறை இருக்காது,சுயநலமிகளாக தான் இருப்பார்கள்,தனக்கெதுக்கு வம்பு என்று ஒதுங்கி இருப்பார்கள் என்ற பொதுபுத்தியை தகர்த்து விட்டார்கள்..
இன்றுள்ள அரசியல் சூழல் இளைஞர்களிடம் ஒரு பாதுகாப்பற்ற வாழ்க்கையை தந்துள்ளது.தற்போதைய இளைய சமுதாயம் பணமதிப்பு இழப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, வேலை நிச்சயமின்மை போன்றவற்றால் பாதிப்படைந்துள்ளனர். அரசு மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாமல் இருக்கிற இந்த சூழலும் புரட்சிக்கு வித்திட்டது. போராட்டம் கொண்டாட்டமானதும் இளைய சமுதாயத்தை எழுச்சி கொள்ள வைத்துவிட்டது…
இந்தப்புரட்சியின் விளைவு மெரினாவோடு போகாமல் தன்னளவில் இளைய சமுதாயம் விழிப்படைந்தால் அதுவே வெற்றி.
தாத்தா காலத்துக்கு ஒரு சுதந்திர போராட்டம்
அப்பா காலத்துக்கு ஒரு இந்தி எதிர்ப்பு போராட்டம்
நம்ம காலத்துக்கு இது (அறவழியில் உரிமை மீட்பு போராட்டம்)
மார்தட்டிக்கொள்ளலாம்
But why you don’t include RSS role in distrubing this protest ? They are man behind the fierce lathi charge …
மத்திய அரசு தொடர்ந்து சேகர் ரெட்டி, ராஜசேகர் ராவ் போன்றோரை குறி வைத்ததால் தன் பலத்தை காட்டவே இந்த போராட்டத்தை வேடிக்கை பார்த்தாரா OPS
இந்த கட்டுரை பண்ணீர்செல்வம் அவர்களுக்கு சோம்பு தூக்கும் வம்பு கட்டுரை !
எதோ பண்ணீர்செல்வம் அவர்கள் ஆளுமை மிகுந்த மனிதர் போலவும் மக்கள் நலனில்
அக்கறை கொண்டவர் போலவும் , காவல் துறை அவரின் ஆளுமையில் இல்லை என்பது போலவும்
பண்ணீர் செல்வத்திற்கு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது போலவும்
எதற்கு இந்த வீண் வேலை ?
பண்ணீர் செல்வம் முதல்வர் அனைத்து DEC 6 இன்று தேதி JAN 24 மாணவர்கள் போராடும் வரை
இந்த அவசர சட்டம் என்ற ஒரு வழிமுறையை என் அவர் கொண்டு வரவில்லை ?
இதை பொங்கல் முன்பே செய்து இருந்தால் இந்த போராட்டமே இல்லையா !
ஊரே பத்தி எறிந்தாள் தான் பண்ணீர் அசைவு கொடுப்பாரா ?
அதற்கு savvuku ஒரு பாராட்டு பாத்திரம் வேறு வாசிக்கிறார்
Jan 3 அன்று அலங்காநல்லூரில் எதிர்கட்சி தலைவர் போராட்டம் செய்தபோது இதே அவசர சட்டத்தை
கொண்டு வாருங்கள் என்று கூறினார் !
அது ஏன் பண்ணீர் காதில் விழவில்லை !
சசிகலாவிடம் இருந்து தன் பதவியை காப்பாற்றி கொள்ள இந்த போராட்டத்தை
பண்ணீர் அனுமதியளித்தார் , தண்ணீர் ஊத்தி வளர்த்தார் , அந்த வேலை முடிந்த உடன் அதை களைத்து விட்டார் போலீஸ் வெய்து
இது தான் நடந்தது !
இனி ஒவ்வொரு முறையும் இதே முறையை தான் அவர் கையாளுவார் !
Vaikunda Rajan is against present Government.. Other than that this article is more or less good
.பெரும்பாலும் போராட்டம் என்றால் ஆளும் கட்சியை எதிர்த்தே நடக்க வேண்டும் ( சில மிக குறுகிய போராட்டங்களை தவிர ). மக்களாட்சியில் பெரும்பாலும் பாதி பேருக்கு மேல் ஆளும் கட்சிக்காரர்களாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 30 விழுக்காடு ஆதரவாவது இருக்கும். அதனால் அவர்கள் முழு மனதோடு எந்த போராட்டத்திலும் ஈடுபடமாட்டார்கள். ஆகவே இது போன்று தமிழகமே ஒரே குரலை கேட்பது அரிது.
ஜெயலலிதா மரணத்துக்கு பின் சசிகலாவின் கட்டுப்பாடுக்குள் தமிழகம் வந்ததை அதிமுக அடி மட்ட தொண்டர்கள் ஏற்கவில்லை என்பது உலகறிந்த ரகசியம். அதனால் அவன் அரசை எதிர்த்து போராட தயங்கவில்லை. எதிர்கட்சி காரனுக்கு போராட காரணமே தேவையில்லை. இருவரும் ஒன்று சேர்ந்தால் ? இத்துடன் தான் வாக்களிக்காத நடுவண் அரசு. நடுவண் அரசை வெகுவாக வெறுக்கும் சிறுபான்மை சமுதாயம். வரலாறு காணாத சூழல், அதனால் வரலாறு காணாத போராட்டம்.
சுருங்க சொன்னால் இது சசிகலாவுக்கு எதிரான போராட்டம். ஆனால் எனோ இது பெரிதாக தெரியவில்லை. நுணுக்கமாக பார்த்தால் புலனாகும்.
இந்த போராட்டம் சுமுகமாக முடியவில்லை என்பதாலும். அடிப்படை கூறுகள் மாறவில்லை என்பதாலும் இது மீண்டும் வேறொரு வடிவத்தில் வெடிக்க வாய்ப்பு உள்ளது.
அப்படி வெடித்தால் அது இனி அற வழியாய் இருக்காது. ஆட்சி மாற்றமில்லாமல் முடியாது என்று எனக்கு தோன்றுகிறது.
உண்மை .தமிழக மக்கள் வெறுமையில் இருக்கிறார்கள் ,தாங்கள்தான் எஜமானர்கள் என்று தெரியாமலேயே ,தாங்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்களுக்கு அடிமைகளாய் வாழ்கிறார்கள் .
அருமை அண்ணா
ஆஹா, மெச்ச தகுந்த குறுக்கு வெட்டு தோற்றத்தை காட்டும் பார்வை மிக நீண்ட நாட்கள் கழித்து உங்களிடம் இருந்து….ஆயினும் காலம் கடந்த ஒன்று, இந்த சங்கை சரியான நேரத்தில் ஊதி இருந்தால், உங்களை ஆதர்சனமாக கொண்டு வரும் முன்னணி சமூக வலைதள போராளிகள் இதை கொஞ்சமாவது சரியான முறையில் முடித்திருப்பார்கள். போராட்டம் நடக்கும் போது வந்த உங்களின் பதிவுகளுக்கும், இதற்கும் – மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம்.
நிரந்தர சட்டம் பழைய பல்லவி என்ற கருத்து ஏற்ப்புடையதல்ல. அது குறித்து அரசோ, நீதித்துறையோ, ஊடகங்களோ, இதர பொது அமைப்புகளோ விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. எனவே இந்த தோல்வியானது அரசு, நீதித்துறை மற்றும் ஊடகங்களின் தோல்வி.
Very nice Mr.shankar sir.
மிகவும் அற்புதமான வார்த்தைகள் ஒவ்வொன்றும்.
முதல் 5 நாட்கள் மாணவர்கள் நடத்திய போராட்டம், அமைதியாக நடந்தது. பெற்றோர் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர் எனில், போராட்டம் எவ்வளவு நல்ல முறையில் நடந்திருக்கும் என்பதை அறியலாம். சனிக்கிழமை இரவு, போராட்டம் கைநழுவிப் போனதை நாம் ஆதி அவர்களின் முகப்பதிவு மூலம் அறிந்தோம். அதில், எவ்வாறு திசை திரும்பியது, தான் வெளியேறியது அனைத்தையும் விளக்கினார். திரும்பவும், சேனாதிபதி போன்றவர்கள் பத்திரிக்கை சந்திப்பு மூலம் எவ்வாறு வெற்றி கிடைத்தது, போராட்டத்தை நிறுத்தி வீடு திரும்ப கோரிக்கை வைத்தார். இதுவரை மாணவர் போராட்டம். இது மகத்தான வெற்றி பெற்றது.