ட்விட்டர் வலைத்தளத்தில் வெளியிடும் கருத்துக்கள் மூலமாகவே தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை கமல்ஹாசன் ஏற்படுத்தியுள்ளார். அரசியல்வாதிகள் பதைபதைக்கிறார்கள். ஆத்திரமடைகிறார்கள். வசவுகளை அள்ளி வீசுகிறார்கள். கமல்ஹாசன் நேரடியாக எடப்பாடி அரசையும் அதன் அமைச்சர்களையும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குகிறார். கேள்விகளால் துளைக்கிறார். அந்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காத அமைச்சர்கள், அவர் மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடுக்கிறார்கள்.
கமல் குற்றச்சாட்டால் பாதிக்கப்பட்ட அதிமுக பிரமுகர்கள் எதிர் தாக்குதல் தொடுப்பதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் பிஜேபி தலைவர்கள் கமலை பிராண்டுகிறார்கள். எங்கே நேரடியாக அரசியலுக்கு வந்து விடுவாரோ என்று அஞ்சுகிறார்கள். அதிமுகவினர் கமல் மீது தொடுக்கும் தாக்குதலை விட, பிஜேபியினர் தொடுக்கும் தாக்குதல் மிக கடுமையாக இருக்கிறது.
கமல் திரைப்படங்கள் சிறு வயதில் என்னுள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. ஏழு வயதில் மூன்றாம் பிறை திரைப்படம் பார்த்தபோது, அந்த படம் எனக்கு துளியும் பிடிக்கவில்லை. முதன் முதலாக எனக்கு பிடித்த கமல் திரைப்படம், சகலகலா வல்லவன். பெற்றோர்களோடு பார்த்த பிறகு, வீட்டுக்கு எந்த உறவினர் வந்தாலும் அவர்களை சகலகலா வல்லவன் திரைப்படத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்டு பல முறை பார்த்துள்ளேன். இறுதியாக தஞ்சாவூரில் குடியிருந்தபோது, இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஹவுசிங் போர்டு காலனியில் சகலகலா வல்லவன் திரைப்படத்தை திரையிடுகிறார்கள் என்று அறிந்து வீட்டில் சொல்லாமல் சென்று அந்த திரைப்படத்தை இரவு பார்த்து விட்டு, வீட்டுக்கு வந்த பிறகு, அம்மா காலையில் என்னை வீட்டின் வெளியே இருந்த மின்சார கம்பத்தில் கட்டி வைத்து உரித்து எடுத்தது இன்னும் நினைவிருக்கிறது.
அதன் பிறகு பார்த்த திரைப்படங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஒரு தீபாவளி அன்று, கமல்ஹாசனின் நாயகன், ரஜினிகாந்தின் மனிதன் மற்று விஜயகாந்தின் நல்லவன் ஆகியவை அனைத்தும் ஒன்றாக ரிலீஸ் ஆனது. பின்னாளில் கம்யூனிஸ்டாக மாறிய நண்பன், நாயகன்தான் பார்க்க வேண்டும் என்றான். நானும் மற்ற நண்பர்களும் மனிதன் தான் பார்க்க வேண்டும் என்றோம். இறுதியாக டிக்கெட் கிடைக்காமல் நல்லவன்தான் பார்த்தோம். நாயகன் எப்படிப்பட்ட ஒரு காவியம் என்பதை நான் அறிந்து கொள்ள பல வருடங்கள் ஆகியது. ஒரு பேட்டியில் கமல்ஹாசன், எங்கள் தெருவில், ஒவ்வொருவரும காட் ஃபாதர் நாவலை படித்து விட்டு மூன்று ஸ்க்ரிப்ட் வைத்திருப்போம் என்று சொன்னது எனக்கு அப்போது புரியவில்லை. நாயகன் படத்தின் முக்கியத்துவத்தை நான் புரிந்து கொள்ள பல வருடங்கள் ஆகியது.
பல ஆண்டுகள் கழித்து சென்னையில் உள்ள பெரியார் திடலுக்கு கமல்ஹாசன் வந்திருந்தார். கமல் ஒரு பிராமணர் என்பது நன்றாக தெரியும். அவரை கி.வீரமணி அழைத்ததும், அதற்கு ஒப்புக் கொண்டு கமல் வந்திருந்ததும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்தது. முதன் முதலாக கமல் அந்த மேடையில்தான் தன்னை நாத்தீகன் என்று அறிவித்தார். கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தார். “அக்ரஹாரத்தில் இருந்து புறப்பட்ட ஒரு புயல் இன்று பெரியார் திடலை வந்தடைந்திருக்கிறது” என்றார் கமல். நான் ஒரு நாத்தீகன் என்பதை முன்பே அறிவித்திருப்பேன். இன்றைய நிகழ்ச்சிக்கு நான் பென்ஸ் காரில் வந்துள்ளேன். முன்னதாகவே நாத்தீகன் என்று அறிவித்திருந்தால், ஆட்டோவில் வந்திருப்பேன் என்று கூறினார். அப்போது என்னை ஆக்ரமித்திருந்த மிகத் தீவிர நாத்தீக உணர்வு கமல்ஹாசனை மிக பிரமிப்பாக பார்க்க வைத்தது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து சென்னை புத்தக கண்காட்சியில் கமல்ஹாசன் ஆற்றிய உரை அவர் மீதான மரியாதையை உயர்த்தியது. அன்பே சிவம் திரைப்படம் கமல் மீது ஒரு பெரும் பிரமிப்பை உண்டாக்கியது.
ஹேராம் மற்றும் அன்பே சிவம் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாக கமலுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது என்றாலும், அது போன்ற படங்களைத்தான் அவர் தொடர்ந்து எடுத்து வந்தார். அதனால் ஏற்பட்ட பொருளாதார நஷ்டங்களை அவர் பெரிய அளவில் பொருட்படுத்தவில்லை. திரையுலகில் விசாரித்துப் பாருங்கள். இன்று வரை, தனக்கு தரப்பட வேண்டிய மொத்த ஊதியத்தையும் கருப்பில் வாங்காமல் வெள்ளையில் வாங்குவது கமல்ஹாசன் மட்டுமே.
தமிழக அரசியல் இன்று ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்து வரும் அராஜகங்களும் அட்டூழியங்களும் மக்களை கடும் கோபமடைய வைத்துள்ளன. ஆனால் இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றது என்பதால் அனைவரும் கையறு நிலையில் இருக்கின்றனர். இந்த அரசை ஆட்டம் காண வைக்க வேண்டிய பிரதான எதிர்க்கட்சியான திமுக புதிய வடிவங்களும், ஆலோசனைகளும் இல்லாமல் திணறிக் கொண்டிருக்கிறது. 1991 ஆட்சி காலத்தில் திமுகவுக்கு பரிதி இளம்வழுதி என்ற ஒற்றை எம்எல்ஏ மட்டுமே இருந்தார். அன்று அதிமுகவோடு கூட்டணி சேர்ந்து ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி வெகு சில காலங்களிலேயே கூட்டணியை முறித்தது. அன்று திமுகவின் ஒற்றை எம்எல்ஏ பரிதியும், காங்கிரஸ் எம்எல்ஏக்களும் சேர்ந்து சட்டப்பேரவையை ஸ்தம்பிக்க வைத்தனர். உள்ளிருப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி, மக்களின் கவனத்தை தங்கள் பால் ஈர்த்தனர். ஆனால் இன்று திமுகவுக்கு 89 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். சட்டப்பேரவை கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படும் அளவுக்கு போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். இந்த ஊழல் ஆட்சிக்கு எத்தகை தொந்தரவுகளை தர முடியுமோ அத்தனை தொந்தரவுகளையும் தந்திருக்க வேண்டும். ஆனால், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் எடப்பாடியின் ஆட்சி நிம்மதியாக சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்தி முடித்திருக்கிறது. புளிமூட்டை பழனிச்சாமி கூட்டத் தொடர் வெற்றிகரமாக முடிந்ததை கொண்டாடும் வகையில் ஜெயலலிதா சமாதியில் சென்று அஞ்சலி செலுத்துகிறார். அதிமுகவினர் வெற்றி முரசு கொட்டுகின்றனர்.
புளிமூட்டை பழனிச்சாமியின் ஆட்சியில் அங்கிங்கெனாதபடி, எங்கெங்கும் ஊழல் நிறைந்துள்ளது அப்பட்டமாகவே தெரிகிறது. அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை வாரிக் குவிக்கின்றனர். சாதாரண பணியிட மாற்றம் முதல், பல கோடி ரூபாய் கான்ட்ராக்டுகள் வரை, லஞ்சம் பெருமளவில் தலை விரித்து ஆடுவது கண் கூடாகவே தெரிகிறது. அடுத்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதை அறிந்த ஆளுங்கட்சி எம்எல்ஏக்களும் அமைச்சர்களும், ஒவ்வொரு நாளையும் பொன் போல கருதி வசூலை குவித்து வருகின்றனர். இவை அனைத்தும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிந்தாலும், அறிக்கை விடுவதைத் தாண்டி அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஊழல் இலை மறை காயாக நடைபெற்றது என்றால், தற்போது வெளிப்படையாகவே நடைபெற்று வருகிறது. ஊழல் மற்றும் தமிழகத்தின் நலன்களுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிராக நடைபெறும் சில போராட்டங்களில் ஈடுபடுவோரையும், தமிழக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்கிறது. வெறும் துண்டறிக்கைகளை விணியோகம் செய்த காரணத்துக்காக ஒரு கல்லூரி மாணவியான வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. இதை சட்டப்பேரவையிலேயே புளிமூட்டை பழனிச்சாமி நியாயப்படுத்தியுள்ளார். இப்படிப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களில் தலையிட்டு நியாயத்தை நிலை நாட்ட வேண்டிய நீதிமன்றங்கள், அமைதியாக வேடிக்கை பார்த்து வருகின்றன.
அயோக்கியத்தனத்தின் உச்சமாக, குட்கா வியாபாரத்துக்கு ஒத்துழைத்ததற்காக பல கோடி ரூபாயை லஞ்சமாக பெற்ற டிகே.ராஜேந்திரனை பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி, நள்ளிரவில் டிஜிபியாக இரண்டாண்டு பணி நீட்டிப்பு கொடுத்து நியமனம் செய்தது எடப்பாடி அரசு. பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு புளி மூட்டை பழனிச்சாமி அளிக்கும் மரியாதையின் அளவுகோல் இதுதான்.
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக ஒரு வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலகட்டத்தில் ஒரு இறுக்கமான மவுனம் தமிழகத்தில் நிலவுகிறது. பல்வேறு காரணங்களால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முடியாமல் தனித்தனியாக நின்று, எடப்பாடி அரசை பலப்படுத்தி வருகின்றன. பெரிய அளவில் எந்தவொரு அரசியல் அனுபவமோ, சாணக்கியத்தனமோ இல்லாமல், குண்டூசியின் மீது நின்று கொண்டிருக்கும் எடப்பாடி அரசு, ஒய்யாரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது.
இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில்தான் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தை பார்க்க வேண்டும். கமல்ஹாசன் இந்த முயற்சியில் வெற்றி பெறுவாரா, அல்லது தோல்வியை சந்திப்பாரா என்பதற்கான விடை காலத்தின் கைகளிலேயே இருக்கிறது. ஆனால் வரலாற்று தரும் உதாரணங்களை வைத்து நாம் ஒரு ஊகத்துக்கு வர முடியும். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனைப் போல பெரிய ரசிகர் கூட்டத்தையும் பின்தொடர்பாளர்களையும் வைத்திருப்பவர் அல்ல விஜயகாந்த். இருவரோடு ஒப்பிடுகையில், விஜயகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார் அல்ல. ஆனால் 14 செப்டம்பர் 2005 அன்று கட்சி தொடங்கிய விஜயகாந்த், 2006 சட்டமன்றத் தேர்தலில் 10 சதவிகித வாக்குகளைப் பெற்று அனைத்துக் கட்சிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். விஜயகாந்த்தின் தேமுதிக அந்த தேர்தலில் போட்டியிடாமல் போயிருந்தால், திமுக மைனாரிட்டி அரசாக உருவாகியிருக்காது.
அன்று விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது, இருந்த சூழல் வேறு. அன்று கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகள் வலுவாக இருந்தனர். முழுமையான செயல்பாட்டில் இருந்தனர். தீவிர அரசியலில் இருந்தனர். அப்படி இருந்தும், விஜயகாந்த்தால் 30 லட்சம் வாக்குகளை பெற முடிந்தது. ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ். கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகளும் முழுமையான அரசியல் செயல்பாட்டில் இல்லை. ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆகர்ஷிக்கும் ஒரு தலைமை தமிழகத்தில் இல்லை. எடப்பாடி பழனிச்சாமியும் அவரது அமைச்சர்களும், உதிரிகளாக உலா வந்து கொண்டிருக்கின்றனர். சிறப்பான அரசியல் செய்தாலும், பாட்டாளி மக்கள் கட்சியால், சாதிக் கட்சி என்ற முத்திரையை உதற முடியவில்லை. வட தமிழகத்தைத் தாண்டி, இதர மாவட்டங்களில் காலூன்ற முடியவில்லை. இடது சாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இதர கட்சிகளின் பலம் மிகக் குறைவே. ஒட்டுமொத்த தமிழகத்தையும் தங்கள் வசப்படுத்தும் பலம் அவர்களுக்கு இல்லை.
பிரதான எதிர்க்கட்சியான திமுகவோ, முட்டுசந்தில் மாட்டிக் கொண்டது போல முழிக்கிறது. சட்டப்பேரவையில் எடப்பாடி அளிக்கும் பதிலில் சமாதானமடையும் அளவிலேயே ஸ்டாலின் இருக்கிறார். சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளன்று, சட்டவிரோதமாக விற்கப்படும் குட்காவை அவைக்கு எடுத்து வந்ததற்காக, உரிமை மீறல் புகார் என்று ஆளுங்கட்சியினர் குரல் எழுப்பியபோது, ஆம், உரிமை மீறல்தான். சட்டவிரோத பொருட்கள் சகஜமாக கடைகளில் விற்கப்படுவதை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை. இது விதி மீறல் என்றால் இந்த விதி மீறலை தொடர்ந்து செய்வோம் என்றே பதில் அளித்திருக்க வேண்டும். ஆனால் பதில் அளிக்க முடியாமல் திமுகவினர் திணறினர்.
அரசியலுக்கு வர கமலுக்கு தகுதி இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஜெயலலிதாவுக்கு என்ன தகுதி இருக்கிறது. அவர் ஆளவில்லையா ? எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன தகுதி இருக்கிறது. அவர் ஆளவில்லையா ? அதிமுகவின் அமைச்சர்கள் பலருக்கு என்ன தகுதி இருக்கிறது அவர்கள் ஆளவில்லையா ? விஜயகாந்துக்கு என்ன தகுதி இருக்கிறது. அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகவில்லையா ?
செந்தில் முருகன் என்ற தொழிலதிபர் இது குறித்து பேசுகையில், “வாக்களிக்கும் உரிமை உள்ள அத்தனை பேருக்கும் அரசியலில் இறங்க தகுதி இருக்கிறது. நாம் உண்ணும் உணவு முதல் அருந்தும் தண்ணீர் வரை அனைத்திலும் அரசியல் இருக்கிறது. இந்தியா முழுக்க பல்வேறு சூப்பர் ஸ்டார்கள் ரசிகர் மன்றம் வைத்திருந்தாலும், அந்த மன்றத்தை நற்பணி மன்றம் என்று மாற்றி, உறுப்பு தானம், ரத்த தானம் என்ற பழக்கத்தை பல ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கியவர் கமல்ஹாசன். தற்போது ரத்ததானம் மற்றும் அனாதை குழந்தைகளுக்கு பிறந்தநாளில் உணவிடுவது ஃபேஷனாகி விட்டது. ஆனால் இதற்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னால் இதை செய்தவர் கமல்ஹாசன்.
ஜெயலலிதா பலம் பொருந்திய மிகப்பெரும் ஆளுமையாக இருந்த காலத்தில், கலைஞர் கருணாநிதியின் நள்ளிரவு கைதை வெளிப்படையாக கண்டித்தவர் கமல்ஹாசன் என்பதை மறந்து விடக்கூடாது” என்றார்.
கமல்ஹாசனுக்கு சாதி மதத்தை கடந்த ஏற்புணர்வு இருக்கிறது. அவரின் தமிழறிவு மற்ற எவருக்கும் சளைத்ததில்லை. மொழி என்ற அடிப்படையில் மட்டுமே திமுக ஆட்சியை பிடித்திருக்கிறது என்பதை நாம் மறக்க முடியாது. கமலை கடுமையாக விமர்சித்து வரும் பிஜேபியின் எச்.ராஜா, கமல் விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் மண்டியிட்டார் என்று விமர்சிக்கிறார். விஸ்வரூபத்தின் அடிப்படை பிரச்சினை, மன்னார்குடி மாபியாவின் கட்டளைக்கு இணங்க, விஸ்வரூபம் திரைப்படத்தை குறைந்த விலைக்கு ஜெயா டிவிக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பதே. இது தொடர்பாக கமலஹாசனின் சகோதரர் சந்திரகாசன் சசிகலாவோடு பேச்சுவார்த்தை நடத்துகிறார். மன்னார்குடி கூட்டம் கேட்ட குறைந்த விலைக்கு விற்பனை செய்யமுடியாது என்பதை வெளிப்படையாக தெரிவித்த பிறகே, திரைப்படம் தடை செய்யப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து எதுவுமே அறியாத இஸ்லாமிய இயக்கத்தினர் ஜெயலலிதா விரித்த வலையில் விழுந்தனர்.
இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் கோழை போல செயல்பட்டார் என்று விமர்சனம் செய்பவர்கள் ஒரு விஷயத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தன் வாழ்நாள் முழுக்க சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் ஒரே திரைப்படத்தில் இழக்கும் வலி என்ன என்பதை உணர்ந்தவர்கள், கமல் மீது இப்படிப்பட்ட விமர்சனத்தை வைத்திருக்க மாட்டார்கள். கமல் மீது பல விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் வைக்கும் எச்.ராஜா, வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் அவர் கணவர் மீது குவியும் புகார்கள் குறித்து வாயே திறப்பதில்லை. மேலும், வானதி மீது குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்கள், பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் அல்ல. பாஜகவின் முக்கிய பிரமுகர்களே அந்த குற்றச்சாட்டுகளை முன்னெடுப்பவர்கள்.
கமலின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்தளித்த தி வீக் ஆங்கில வார இதழின் தமிழக தலைமை செய்தியாளர் லட்சுமி “அரசியலும் திரைத்துறையும் பின்னிப் பிணைந்திருக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களில், பிரபலமானவர்கள் அரசியலில் குதிப்பது புதிதன்று. கமல்ஹாசன், தான் எடுக்கும் நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்காதவர். பல விஷயங்களில் குழப்பமில்லாமல் தெளிவான நிலைப்பாட்டை எடுப்பவர். எல்லைகளை மீறுவது, கமலுக்கு இயல்பான ஒன்று. தேவைப்படுகையில் எல்லைகளை தாண்டுவதற்கு தயங்காதவர் கமல்ஹாசன். விஸ்வரூபம் விவகாரத்தில் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று வெளிப்படையாக அறிவிப்பதாக இருக்கட்டும், ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான கருத்துகளாக இருக்கட்டும். விளைவுகள் குறித்து கவலைப்படாமல் தெளிவான முடிவெடுப்பவர் கமல்ஹாசன். ஒரு கருத்தை தெரிவித்து, ஒரு சில நாட்களில் பின்விளைவுகளை கருதி அதிலிருந்து பின் வாங்கும் இதர நட்சத்திரங்களை போன்றவர் அல்ல கமல்ஹாசன். அவர் ரஜினிகாந்தைப் போல அரசியல் குறித்து சிந்திப்பவர் அல்ல. ஊழலுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் என்பதை செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்.” என்றார்.
கமலின் அரசியல் பிரவேசம் குறித்து பேசுகையில் ரஜினிகாந்தின் நிலைபாட்டோடு ஒப்பிடுவதை தவிர்க்க இயலாது. 1996ம் ஆண்டு, காலம் ரஜினிக்கு அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. ஆனால் அரசியலை விட, தனது சினிமா வியாபாரத்தையே பிரதானமாக ரஜினி கருதினார். ஒவ்வொரு முறையும், தனது அரசியல் பிரவேசம் என்ற விவகாரத்தை தனது சினிமா வியாபாரத்துக்காக மட்டுமே ரஜினிகாந்த் பயன்படுத்திக் கொண்டார். தனது சொந்த நலன்கள் பாதிக்கப்படுகையில் மட்டுமே ரஜினி அரசியல் வசனங்களை உதிர்த்தார். தனது வார்த்தைகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து, மிகவும் கவலைப்படுபவர்தான் ரஜினிகாந்த். சிஸ்டம் சரியில்லை என்று வக்கணையாக பேசும் ரஜினிகாந்த், கோச்சடையான் திரைப்பட வியாபாரத்தில், தனது குடும்பத்தினரே மோசடியில் ஈடுபட்டு காவல்துறை வரை புகார் சென்றபோது, அதை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எந்த விவகாரமாக இருந்தாலும், தெளிவான நிலைபாட்டை எடுக்காமல், அதை குழப்பி, தனக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்பவர்தான் ரஜினிகாந்த்.
பாரதீய ஜனதா கட்சியினர், ரஜினிகாந்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாதுவதும், கமல்ஹாசனை கடுமையாக விமர்சிப்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே. ரஜினிகாந்த் ஒரு சாமியார் மட்டுமல்லாமல் ஒரு கோழை. எந்த விவகாரத்திலும் வெளிப்படையாக கருத்து கூற தயங்கக் கூடியவர். மாட்டிறைச்சி விவகாரத்தில், எனது உணவை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது என்று கமல் வெளிப்படையாக கருத்து கூறியபோது, வாயே திறக்காமல் அமைதியாக இருந்தவர்தான் ரஜினிகாந்த். இவரைப் போன்ற மவுனிகளும், சுய சிந்தனை இல்லாத கோழைகளையுமே பிஜேபி விரும்புகிறது. கமல் போன்ற துணிச்சலான சிந்தனைகள் உள்ளவர்களை அல்ல.
கமலின் அரசியல் பிரவேசம் குறித்து பேசிய திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனிடம் பேசினோம். “அவரது அரசியல் பிரவேசம் வரவேற்கப்பட வேண்டியதே. எல்லா குடிமகன்களையும் போல, அவருக்கு கருத்து சுதந்திரம் உண்டு. ஆனால் அவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், தனிப்பட்ட முறையில் அவர் மீது தொடுக்கப்படும் தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியது. ” என்றார். ரஜினியை பாஜக முன்னிறுத்துவதால், கமல்ஹாசனை திமுக முன்னிறுத்துகிறது என்ற கேள்விக்கு, “திமுக ஒரு மிகப்பெரிய இயக்கம். ஒரு நடிகரையோ அல்லது வேறு நபரையோ பின்னிருந்து இயக்கித்தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற தேவை திமுகவுக்கு ஒரு போதும் கிடையாது. ஒரு அரசியல்வாதி மட்டுமே கருத்து கூற முடியும் என்பது போல பிஜேபியும், அதிமுகவும் கமலை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. வாக்களிக்கும் உரிமை உள்ள ஒவ்வொருவருக்கும், அரசை விமர்சனம் செய்யும் உரிமை உண்டு. ” என்றார்.
அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் ஆவடி குமார், கமல்ஹாசன் மீது அவரது விமர்சனத்தை முன்வைத்தார். “எல்லா குடிமகன்களையும் போல, கருத்து சொல்வதற்கு கமல்ஹாசனுக்கும் உரிமை உண்டு. அவர் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார். பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டு சொல்கிறார். இந்த இடத்தில் ஊழல், இவர் ஊழல் செய்திருக்கிறார் என்று தெளிவாக ஒரு குற்றச்சாட்டையும் கமல் இது வரை சொல்லவில்லை. ஒரு பிரபலமாக இருப்பவர், பொறுப்போடு பேச வேண்டும். ஆனால் கமல்ஹாசன் வாய்க்கு வந்த குற்றச்சாட்டுகளை ஆட்சியின் மீது அள்ளி வீசுகிறார். இப்படி பொத்தாம் பொதுவாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சொல்கையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நாங்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்” என்றார்.
ஒரு பத்திரிக்கையாளன் மற்றும் பொதுமக்கள், குற்றச்சாட்டுகளைத்தான் தெரிவிக்க முடியும். அதற்கான ஆதாரங்களை புலனாய்வு செய்து தேட வேண்டியது ஒரு அரசின் கடமை. ஆதாரங்களோடு குட்கா ஊழலை ஊடகங்கள் வெளியிட்டபோது, அதன் மீது எடப்பாடி அரசு எடுத்த நடவடிக்கை என்ன ? லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை என்ற பெயரில், அந்த ஊழலை மூடி மறைப்பதைத் தவிர வேறு என்ன செய்தது இந்த அரசு ? இப்போது ஆதாரங்களை அனுப்பினால் மட்டும் நடவடிக்கை எடுத்து விடுவார்களா என்ன ? எல்ஈடி பல்பு ஊழல், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம், குட்கா ஊழல் என்று எத்தனை ஊழல்கள் ஆதாரத்தோடு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன ? என்ன நடவடிக்கை எடுத்தது இந்த அரசு ?
அதிமுக அடிமைகளை விட, பிஜேபியினர் கமல்ஹாசனை கரித்துக் கொட்டுவதுதான் புதிராக உள்ளது. எதற்காக அவர்களுக்கு இந்த கோபம் என்பது புரியவேயில்லை. பிஜேபியின் செய்தித் தொடர்பாளர் கல்யாண் இது குறித்து பேசுகையில், “கமல்ஹாசனால் தனது குடும்பத்தைக் கூட ஒழுங்காக வைத்துக் கொள்ளத் தெரியவில்லை. அவரது மனைவிகளையும், வைப்பாட்டிகளையும் (Concubine) கூட அவரால் அவரோடு தக்க வைக்க முடியவில்லை. இதைக் கூட செய்ய முடியாத ஒரு நபரால், எப்படி ஒரு மாநிலத்தை வழிநடத்த முடியும்” என்றார்.
கமலஹாசன் ஒரு போதும் தான் திருட்டுத்தனமாக ஒரு பெண்ணோடு குடும்பம் நடத்துதாக ஒரு சொன்னதில்லை. நான் இந்தப் பெண்ணாடு அவர் சம்மதத்தோடு வாழ்கிறேன் என்பதை வெளிப்படையாக அறிவித்தே வந்துள்ளார். மோடியின் நிலைபாடு என்ன ? நிர்மலா பேன், என் கணவர் என்னை கைவிட்டு விட்டார் என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளாரா இல்லையா ? கமலின் தனிமனித ஒழுக்கம் குறித்து பேசும் நபர்கள், மோடியை கேள்வி கேட்டு விடை கிடைத்த பிறகு வேறு வார்த்தை பேசட்டும்.
எனக்கு பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பல நண்பர்கள் உள்ளனர். நான் ஒரு தீவிரமான மோடி எதிர்ப்பாளர் என்பதை நன்றாக அறிந்தும் என்னோடு நட்பு பாராட்டுகிறார்கள். அவர்கள் நட்பு பாராட்டுவதற்கான ஒரே காரணம், பொய் சொல்ல மாட்டான். சொந்த ஆதாயத்துக்காக ஒரு போதும் எழுத மாட்டான் என்பது மட்டுமே. அப்படிப்பட்ட எனது நண்பர்கள், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் மீது சுமத்தும் பெண் தொடர்பான குற்றச்சாட்டுகளை எழுத பல கட்டுரைகள் தேவைப்படும். அவர்களுக்கும் அந்த விஷயங்கள் வெளிப்பட வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. ஏனென்றால் கட்சி பாதிக்கப்படும். ஆனால் தங்கள் ஆதங்கத்தை என்னோடு பகிர்ந்து கொள்கிறார்கள். கமலாலயத்தில் உள்ள படுக்கையறையில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை வையுங்களேன். துடிதுடித்து உங்களை கடுமையாக விமர்சிப்பார்கள். ஏனென்றால் அங்கே நடப்பவை அனைத்தும் அதுதான். இன்னும் சில பெண் பிரமுகர்கள் குறித்து என்னால் எழுத முடியும். நாகரீகம் கருதி தவிர்கிறேன்.
இன்று ஆர்எஸ்எஸ்ஸின் ஊதுகுழலாக இருக்கும் விஜயபாரதத்தின் ஆசிரியர் குழந்தைகளோடு செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஒரு பீடோஃபைலா இல்லையா என்று கேளுங்கள். நேர்மையான ஆர்எஸ்எஸ் அன்பர்கள் இதை மறுக்க மாட்டார்கள். நிரந்தரமாக சிறையில் இருக்க வேண்டிய ஒரு பீடோஃபைலை விஜயபாரதத்தின் ஆசிரியராக நியமித்து அதை வழிநடத்தும் ஒரு அமைப்பை தாங்கிப் பிடிக்கும் எச்.ராஜாவுக்கு கமல்ஹாசனின் ஒழுக்கத்தை பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது ?
பிஜேபியினரின் கமல் மீதான கருத்துக்கள் வெறித்தனமாக இருக்கிறது. பரம்பரை சொத்துக்களை கமல் களவாண்டவர் போல பேசுகிறார்கள். அவர்களின் இந்த கருத்து, கமல்ஹாசனை எந்த அளவுக்கு ஆபத்தாக பார்க்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.
மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மணி இது குறித்து விளக்கினார். “கமலின் அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டமாக அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் எனக்கு வியப்ப அளிக்கிறது. கமல் இப்படி வெளிப்படையாக பேசுவார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. மாநில அரசின் மீது அவரது நேரடியான தாக்குல் வியப்பை ஏற்படுத்துகிறது. எந்த விஷயத்திலும் அவர் இது வரை பின்வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். ஊழலுக்கு எதிரான அவரது நிலைபாடுதான் இருப்பதிலேயே மிகச் சிறப்பானது. இதனால் அவர் மீதான மரியாதை அதிகரித்திருக்கிறது.
ஆனால் அதே நேரத்தில், தனது திரைத்துறை முழுக்கவே கருப்புப் பணத்தில் இயங்குகிறது என்பதையும் கமல் அறிவார். அவர் அது குறித்தும் பேச வேண்டும். கமல் எந்த அளவுக்கு ஆபத்தானவர். அவரால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை முழுக்க உணர்ந்தவர்கள் பிஜேபியினர். அதனால்தான் அவர் மீது கடுமையான தாக்குதலை தொடுக்கிறார்கள். பிஜேபி தலைவர்கள் கடுமையான பயத்தில் உள்ளார்கள். அந்த பயம்தான் அவர்களை வரம்பின்றி வார்த்தைகளை பிரயோகிக்க வைக்கிறது.
அதே நேரத்தில் ட்ராஃபிக் கான்ஸ்டபிளும், விஏஓவும் வாங்கும் 100 அல்லது 200 ரூபாய் மட்டும் லஞ்சமல்ல. அதை விட அமைச்சர்கள் கோடிக்கணக்கில் வாங்கும் லஞ்சத்தின் தீவிரத்தை புரிந்து கமல் செயலாற்ற வேண்டும். ” என்றார்.
காவல்துறையில் ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி கமலின் அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். “கமல் ஒரு அற்புதமான நடிகர் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. ஆனால் ஒரு நிர்வாகத்தை நடத்த நடிப்புத் திறன் மட்டும் போதுமானதல்ல. ஒரு வரி செலுத்தும் குடிமகனாக, வாக்களிக்கும் குடிமகனாக அரசாங்கத்தை கேள்வி கேட்க அவருக்கு எல்லா உரிமையும் உள்ளது. அவரின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை. அதே நேரத்தில் தேசத்தையே உலுக்கிய 2ஜி ஊழலின் போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார் ? இலங்கையில் அரசுகளின் துணையோடு மக்கள் கொல்லப்படுகையில் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்விகளை தவிர்க்க முடியவில்லை.
வெறும் நடிகர் என்ற அடிப்படையில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் வகையில் மக்கள் முட்டாள்கள் அல்ல. மக்கள் மிக மிக புத்திசாலிகள். அரசியலில் பல நடிகர்கள் இறங்கியிருந்தாலும், எம்ஜிஆர், என்டி.ராமாராவ் மற்றும் ஜெயலலிதாவை மட்டுமே வெற்றி பெற வைத்தார்கள். பிரேம் நசீர், சிவாஜி கணேசன், எஸ்எஸ்.ராமச்சந்திரன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர் போன்றோரை மண்ணைக் கவ்வ வைத்தார்கள். எம்ஜிஆருக்கு நிகரான புகழைப் பெற்ற சிவாஜி தனது சொந்த மண்ணிலேயே தோற்றார் என்பதை நாம் புறந்தள்ள இயலாது.
சிலரைத் தேர்ந்தெடுத்து பலரை மக்கள் உதாசீனப்படுத்துவதற்கான காரணத்தை மக்களே முடிவு செய்வார்கள். அவர்களின் அறிவை என்றுமே குறைத்து மதிப்பிட முடியாது. கமலஹாசன் இம்மக்களின் அறிவை உணர்ந்து செயல்படுவாரோயானால் அவர் வெற்றி பெறுவார். அதை விடுத்து, அவசர கதியில், உடனடி முதல்வர் கனவில் அவர் இருப்பாரோயானால் அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்றார்.
பல்வேறு ஆதரவான கருத்துக்களையும் எதிர்க் கருத்துக்களையும் பார்த்தோம். கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டுமா கூடாதா என்ற கேள்விதான் இறுதியில் நிற்கிறது. அவர் வர வேண்டும் என்பதை தீர்மானமாக சொல்கிறது சவுக்கு. கூத்தாடிகள் மிக எளிதாக அரசியலில் வந்து வெற்றி பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மையே. கூத்தாடிகள் வரக்கூடாதென்றால், அரசியலில் வெற்றி பெறுபவர்கள் அனைவரும், சுதந்திரப் போராட்ட தியாகிகளா என்ன ? திமுவை எடுத்துக் கொண்டால் கூட, முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகள்தானே இன்று பதவிக்கு வருகிறார்கள் ? முக.ஸ்டாலினின் நம்பிக்கையைப் பெற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி மொழிப்போர் தியாகியா என்ன ? டிஆர்.பாலுவின் மகன் டிஆர்பி.ராஜா அரசியல் விஞ்ஞானியா ?
ஒரு சாதாரணர், கடைநிலையில் உள்ளவர், அரசியலில் குதித்து வெற்றி பெறுவது நடக்காத ஒரு காரியம் என்பதை நாம் அனைவருமே அறிவோம். அதுதான் யதார்த்தம். யதார்த்தத்தின் புரிதலோடு தமிழகத்தை காப்பாற்ற வேண்டுமென்றால், பிரபலமான, அனைவருக்கும் ஏற்புடைய ஒருவர் வர வேண்டும். அது கமலஹாசன் மட்டுமே.
கருப்புப் பணத்தை வைத்து மட்டுமே தொழில் நடத்தும் திரைத்துறையில் நான் கணக்கில் காட்டப்படும் வெள்ளைப் பணத்தை மட்டுமே வாங்குவேன் என்று பிடிவாதமாக இருக்கும் ஒரே ஒரு குணம் மட்டுமே கமல்ஹாசனை அரசியலுக்கு வர தகுதியானவராக்குகிறது. நான் கருப்புப் பணம் வாங்கிதில்லை என்று ரஜினியை சொல்லச் சொல்லுங்கள் ? ராஜ்குமார் வீரப்பனால கடத்தப்பட்டபோது அவருக்கு பிணைத் தொகையை வசூல் செய்து நான் தரவிலை என்று ரஜினியை சொல்லச் சொல்லுங்கள்…….!!!!! அவரால் சொல்ல முடியாது. சொல்லவும் மாட்டார்.
இதனால்தான் சொல்கிறது சவுக்கு. வாருங்கள் கமல்ஹாசன். வழிநடத்துங்கள்.
வாருங்கள் கமல்ஹாசன்.
குறிப்பு : தயவு செய்து, ட்விட்டரில் தமிழில் எழுதுங்கள். புறநானூறு நடையில் எழுதினால் அதை புரிந்து கொள்வதற்குள் மண்டை காய்கிறது. நீங்கள் படித்த அதே முத்தையா செட்டியார் பள்ளியில்தான் நானும் படித்தேன். உங்களுக்கு ஆசிரியராக இருந்த கேடி.கோவிந்தராஜன் எனக்கு தலைமை ஆசிரியர். அவருக்கு நீங்கள் வாங்கிக் கொடுத்த சைக்கிளை அவர் பல முறை அன்போடு ப்ரேயர் கூட்டங்களில் நினைவு கூர்ந்துள்ளார். இறுதி வரை அவர் சைக்கிளில்தான் வந்தார். அந்த பள்ளிதான் என்னை செதுக்கியது. உங்களையும் செதுக்கியதை என்னால் காண முடிகிறது. வாருங்கள். கொள்ளைக் கூட்டத்தை விரட்டி அடியுங்கள்.
Naam Thamilar Katchi Orunkinaippalar Mr. Seeman Oru Interview-l Solliyurukkiraar. Cine Field-l Correcta Tax Kattupavargal Irandu per. Ondru Kamal Innoruvar Mathavan. Im the big fan of Seeman.
Money Earning field Cinema field. Appadipatta idathil irunthu kondu Varumana vari olungaga Kattuvathu enbathu Migaperiya Visayam. Kamal Tax Kattum Kaasai Vaithu Innoru Cinema Edukkalam allathu Matra Nadigargal Maathiri Business Pannalaam. Aanaal Kamal Black Money Vaanguvathu Kidayaathu, Veru Business Pannuvathum Kidayaathu. Avarukku therintha Ore Business Cinema Mattume. Athayum White Money-l Edukkirar Endral Ithai Vida Oru Qualification Enna Vendum Avarathu Nermaikku. Kamal is an Honest Man. Royal Salute Mr. Kamal haasan
Nice Article. Welcome Kamal Sir.
I am a big supporter of Savukku, but I don’t agree with this. By seeing current situation in the state and the central, only so called racist people like Seeman can save TN by God’s grace in my perspective. Please don’t just look out for the present, think about our next generations. They should get water, healthy food and a good life style as we get in our early stages of life, not a corporate lifestyle. He is a one of the few political leaders think about not just human beings and also think about animals.
தற்போது தமிழகத்தில் நடப்பது பிஜேபியின் பினாமி ஆட்சி, பிஜேபியையோ, அதிமுக ஆட்சியையோ குறைகூறினால் என்னாகும் என்று அனைவருக்கும் தெரியும்.
ஏற்கெனவே 2G ஊழல் மற்றும் நிறைய ஊழல்கள் என்று திமுக விற்கு உள்ளது, மத்திய அரசாங்கத்தால் தற்போது அனைத்து கோப்புகளும் தூசிதட்டி தயாரான நிலையில் இருக்கும், எப்போது மத்திய IT துறையினர் ரைடு மற்றும் பழைய நிலுவையில் உள்ள வழக்கள் பாயும் என்ற பயத்தில் திமுக இருப்பது போல் உள்ளது, மேலும் நீதி துறையும் அவாள்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
இன் நிலை அறிந்தே திமுக வாய் மூடி மௌனியாக …!
எஸ்எஸ்.ராமச்சந்திரன்-please correct as S.S.RAJENDRAN.
Now PMK is only party for long term view
Savukku, Ever since Dravida parties took over Tamilnadu in 1967, Tamilnadu has witnessed anti-brahmin, anti-religious until 1977 when MGR took over. He was the first to introduce HR & CE ministry which was totally against Dravida parties ideology, MGR did not care about that. He became Mr.Clean and ruled TN. But MGR was a politician , propaganda bugle for DMK under Annadurai and he accepted Karuna leadership also. he was groomed, moulded and mentored as a season politicians and depicted in all his movies and films also. he ensured and secured the victory of party and individuals like Karuna in the elections not standing in the elections. he started serving the people without post, position, power and secured charisma and became a leader from a worker. He brought Jayalalitha and groomed her when Jayalalitha worked on the streets as a propaganda secretary and MGR made her work slogging her ivelihood in the party among workers.
Now connecting the context to Rajinikanth and Kamalahasan , where are these people. Where did they meet the people. What service have they done. Rajinikanth and his family has full financial fraudulent cases running in courts and legal platform with banks, financiers financial institutions meaning Money , Money and Money. kamalahasan dedicated to Filmdom and earnings were said to be invested and he was only serving the society. Condemning acts, Expression of Opinion were done by Press, Journals, Federations, Associations, Common man like Kamalhasan and Rajinikanth. Dont portray Kamalahasan as Gandhi or Nelson Mandela. Both have not done anything to the Film association except earning. Rajinikanth went one step ahead of accumulating and assimilating wealth of land, business, equity, real estate, etc which Kamalhasan did not do. But both are same.
We require someone to lead Tamilnadu like Mr.Chandrababu Naidu, Mr.S.M.Krishna one who can utlize the resources and drive the state. Why should we require another Actor like Kamalahasan > Stupid and Idiotic.
We require a person who can empower the State of Tamilnadu in Education, Industry , Energy and other Verticals. Please stop writing such articles misleading Youth to think that they have to depend on such cinematic oppotunitic people to ruin Tamilnadu.
We expect a qualified article from you Savukku.
உங்களுக்கு இனவாதம் பேசுகிறார் என்று சீமான் மீது வெறுப்பு இருக்கலாம். அதன் பொருட்டு நா.த.க-வை கணக்கில் எடுக்லையோ? கடந்த இரு வருடங்களாக நாம் தமிழர் கூட்டங்களை கவனிப்பவன் என்ற முறையில் அதன் ஆதரவு பொதுத்தளத்தில் பெருகி வருகிறது என்பதை உணர்கிறேன். எதிர்காலத்தில் அது ஒரு வலுவான கட்சியாக வளரும். தமிழக மக்கள் ஏற்கிறார்களோ இல்லையோ சீமான் என்ற மனிதனின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மறுக்க முடியாதது, மறைக்க முடியாது.
சட்ட மன்றத்தில் திமுக தன் கடமையை சாியாகதான் செய்து வருகின்றது. ரொம்ப பேசினால் சபை தலைவா் பேச அனுமதி மறுக்கின்றாா். அதை கண்டித்து வெளிநடப்பு செய்தால் இங்குள்ள சில விபசார ஊடகங்கள் சில விபசார பத்திாிக்கைகள் அதனை திாித்து திமுக வெளிநடப்பு என்று பொிதாக போட்டு மக்களை திசை திருப்பி விடுகின்றன. இவா்கள் எவ்வளவு ஊழல் செய்தாலும் இவா்களை விசாரணை செய்யாமல் மத்திய அரசின் துறைகள் எருமை மாட்டின் மீது மழை பெய்ததது போல
இருந்து விடுகிறது. நீதி மன்றத்திலும் நீதி கிடைக்க நிரம்ப நாளாகின்றது. அரசு செய்யக் கூடிய செயல்களை திமுக செய்து வருகின்றது. இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் திமுக எதிா்கட்சி என்ற முறையில் சிறப்பாக செய்து வருகின்றது என்பதை யாராலும் மறுக்க இயலாது
அரசியல் கருத்துகள் பேசுவது , தேர்தலில் நிற்பது போன்றவை யாவும் அனைவருக்குமான அடிப்படை உரிமைகள், இதில் கமலுக்கும் ரஜினிக்கும் மட்டும் விதிவிலக்கு கிடையாது… ஆனால் இவன் தகுதியானவன், தகுதியில்லாதவன் என்பதை முடிவு செய்வது மக்கள் தான்.. அதனால் வரட்டும் யார் வேண்டுமானாலும்…. நாங்கள் தயார்
கேள்விகள் கேட்க!!!
அரசியல் கருத்துகள் பேசுவது , தேர்தலில் நிற்பது போன்றவை யாவும் அனைவருக்குமான அடிப்படை உரிமைகள், இதில் கமலுக்கும் ரஜினிக்கும் மட்டும் விதிவிலக்கு கிடையாது… ஆனால் இவன் தகுதியானவன், தகுதியில்லாதவன் என்பதை முடிவு செய்வது மக்கள் தான்.. அதனால் வரட்டும் யார் வேண்டுமானாலும்…. நாங்க தாயார் கேள்விகள் கேட்க!!!
Well written article. Congratulations.
I support Kamal Sir
Because he has leadership skills and guts to go against anyone unlike Rajinikanth who is a coward and good for nothing..
பிரபலமான குசு
ஒரு பிரபல மனிதருக்கு
எப்போதாவதுதான்
குசு விடவேண்டும் போலிருக்கிறது
அப்போது அவர்
எல்லோருக்கும் கேட்கும்படியாக
ஒரு குசு விடுகிறார்
அது நகரத்திற்கு மேலாக
‘டமாரெ’ன்று வெடிக்கிறது
போன மாதம்
இன்னொரு பிரபலமான மனிதர்விட்ட குசுவைவிட’
இந்தக் குசு பெரிதாக இருந்தது.
நகரவாசிகள் அனைவரும்
அந்த சத்தைக் கேட்கிறார்கள்
அவர்கள் அந்த இடத்தை நோக்கி ஓடுகிறார்கள்
அந்த குசு வெடித்த இடத்தில்
ஒரே புகைமண்டலமாக இருக்கிறது
சத்தம் கேட்டு நிறையக் கேமிராக்கள்
சில நொடிகளில் வந்துவிட்டன
ஒரு குசுவை படம் பிடிப்பதில்
அங்கு ஒரே தள்ளு முள்ளு நடக்கிறது
அவர் ஏன் இப்போது
குசுவிடுகிறார் என்று கேட்கப்படுகிறது
இதற்கு முன் அவர் ஏன் குசு விடவில்லை
என்றுகூட கேட்கப்படுகிறது
ஒரு பிரபல மனிதருக்கு எப்போது
அஜீரணம் உண்டாகும் என்று
யாருக்குத் தெரியும்
ஒரு கெட்டுபோன பதார்த்தம்
வயிற்றுக்குள் போனால்
பிறகு எதுவுமே அவர் கட்டுப்பாட்டில் இல்லை
மேலும் பிரபல மனிதர்கள் விடும் குசு
அவர்களின் குசுதானா என்பதே சந்தேகத்திற்குரியது.
பிரபலமான மனிதர்
தான் வெறுக்கும்
யாரோ ஒருவர் முகத்தில்தான் குசுவிடுகிறார்
ஆனால் அது ஒரு வரலாற்று தருணமாக
மாறிவிடுகிறது.
அந்தக் குசுவின் வாசனை பற்றி
நகரமே விவாதிக்கிறது
அதன் நறுமணங்கள் பற்றி
வேறு வேறு வியாக்கியானங்கள்
பரவிக்கொண்டிருக்கின்றன
சிந்தனையாளர்கள்
அதன் மருத்துவகுணங்களைப் பற்றி பேசுகிறார்கள்
அவநம்பிக்கைவாதிகள்
அது தொற்று நோய்களை உண்டாக்கக்கூடியது
என்கிறார்கள்
சதிக்கோட்பாட்டாளர்கள்
அது ஒரு உண்மையான குசுவே அல்ல
என்று சாதிக்கிறார்கள்
அவரது எதிரிகள்
அவரின் ஆசன வாயிலில்
தார் ஊற்றி மூடவேண்டும் என்கிறார்கள்
மக்களுக்கு மிகவும் அலுப்பாக இருக்கிறது
அவர்கள் வாழ்க்கையில்
எந்த மாற்றமும் நடப்பதில்லை
திடீரெனெ விடப்படும்
ஒரு சப்தமான குசு
ஒரு ஆசுவாசத்தைக் கொண்டுவராதா
என்று ஏங்குகிறார்கள்
குசுக்கள் காற்றில் கலைந்து செல்பவை
என்பதை அவர்கள் நினைக்கவிரும்பவில்லை.
மக்கள் தெருக்களில் நின்று
தினம் தினம்
எதெதற்காகவோ போராடுகிறார்கள்
முழக்கங்களை எழுப்புகிறார்கள்
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்
அதிகாரத்தால் தாக்கப்படுகிறார்கள்
அவர்களின் குரல்
இந்த நகரத்தில் யாருக்கும் கேட்பதில்லை
ஆனால் ஒரு பிரபலமான குசுவின் சப்தம்
நம் காதையே செவிடாக்குகிறது.
அதிகாரம் துப்பாக்கி முனையில்
பிறந்தது ஒரு காலம்
இப்போது அவை பிரபலமான குசுக்களிடமிருந்து
பிறக்கின்றன.
இந்த நகரத்தில்
மாதத்திற்கு ஒரு முறை
யாரேனும் ஒரு பிரபல மனிதர்
தன் பிரமாண்டமான குசுவை
விடுவதற்கு வருகிறார்.
நன்றி: – மனுஷ்ய புத்திரன்
I didn’t understand one thing, if somebody express their political view, should they always come to politics ?
Can’t Kamal be a just like a press man expressing his views and increase awareness of public ?
Why everybody says Kamal is aspiring to be politician or Kamal needs to jump into politics.?
ஆட்சியை பிடிக்க ஓட்டு வேண்டும். காசு வாங்கி ஓட்டு போடும் கூட்டமும், இலவசத்தால் ஏமாறும் கூட்டமும் இருக்கும் போது “வெறும் நடிகர் என்ற அடிப்படையில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் வகையில் மக்கள் முட்டாள்கள் அல்ல. மக்கள் மிக மிக புத்திசாலிகள். ………………… எம்ஜிஆருக்கு நிகரான புகழைப் பெற்ற சிவாஜி தனது சொந்த மண்ணிலேயே தோற்றார் என்பதை நாம் புறந்தள்ள இயலாது.
சிலரைத் தேர்ந்தெடுத்து பலரை மக்கள் உதாசீனப்படுத்துவதற்கான காரணத்தை மக்களே முடிவு செய்வார்கள். அவர்களின் அறிவை என்றுமே குறைத்து மதிப்பிட முடியாது.” என்ற கூற்றை ஆமோதிக்க முடியாது.
மக்கள் மிக மிக புத்திசாலிகள் என்றால் காமராஜர் தோற்று இருக்க மாட்டார்.
போராளிக்கு கிடைத்த வோட்டு 90 தான். இப்போதைய தேவை புதிய இரத்தம். ஒரே குட்டையில் ஊறிய மட்டைக்கு பதிலாக வேறு குட்டையில் ஊறிய மட்டை. அது அன்புமணியாலும் சீமானாலும் நல்லகண்ணுவாலும் கிடைக்கவில்லை.
rajinikanth is 100% better than Kamal.
சவுக்கு நீங்கள் எழுதியதை , அதுவும் ரஜினிகாந்த் பற்றி எழுதியதையதை மீண்டும் வாசித்து பாருங்கள் ..எதாவது உண்மை இருக்கிறதா என்று ..கமல் எவ்வளவு பெரிய சந்தர்ப்பவாதி என்பது புரியும் .. ஆனால் அப்படியே மறைத்து விட்டு .. கமல் விஸ்வரூபம் பட பிரச்சினையில் , பிரச்சினையை எதிர் கொள்ள முடியாமல் நாட்டை விட்டே ஓடிவிடுவேன் என்று சொல்லி பேசினத்தையும் , அதே JJ டிவியில் பட்டிமன்றம் நடத்த ஒத்து கொண்டதையும் ..அதே ஜேஜே ஆட்சிக்கு வர முடியாது என்ற நம்பிக்கையில் எலேச்டின் நெருங்கும் நேரத்தில் வெள்ள பாதிப்புக்கு குரல் கொடுத்ததையம் ..கலைஞர் கட்சி எவ்வளவு ஊழலில் ஈடு பட்டபோது ஒன்றுமே சொல்லாததும் ..பிரமிட் ஷமீரா படம் நடிக்கிறேன் என்று சொல்லி அவர்கள் கேஸ் போட்டதும் 40 கோடி கேட்டு கேட்டதும் ..தன்னோட படத்தை ரிலீஸ் பண்ண முடியாம (viswaroopam2 , சபாஷ் நாயுடு ) யாரும் படம் எடுக்க வரவில்லை என்று தெரிந்ததும் புரிந்ததும் , பிஜிபோஸ்ன்னு போயிட்டு அதை பிரபல படுத்த அரசியல் கருத்து சொல்லுவதும்ம் ஒரு பஞ்சொந்தியாய் செயல் படும் கமல் ஹசன் நீங்கள் உய ர்த்தி பிடிக்க வேண்டும் என்றால் எழுதுங்கள் ..ஆனால் தேவையே இல்லாமல் ரஜினி கோழை என்று எப்படி சொல்லுகிறீர்கள் ..1996-ல் எங்கே ஓட்டு பிரிந்துவிடும்
என்று கருதி கூட்டணிக்கு ஆதரவு சொன்னவர் ரஜினி , தான் முதல்வர் ஆவதை விட ஜேஜே இருக்க கூடாது என்று நினைத்தவர் ரஜினி ..1998 கோவை போம் ப்ளாஸ்டில் அப்பவாவி முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக இருந்தவர் ரஜினி ..போற போக்குல ரஜினிகாந்த் மீது சேரை அடிக்காதீர்கள் ..சவுக்கு உங்கள் மேல் இருந்த மரியாதை குறைந்து போய் விட்டது ..ரஜினி பத்தி நேர்மையாக விமர்சனம் செய்யுங்க ..ஆனால் ரஜினியை விட கமல் என்ற கண்ணோட்டத்தில் அல்ல ….தேவர் மகன் படம் எடுத்த பிறகு எதனை சாதி கலவரங்க ..சினிமாவே ஜாதியின் பின்னல் திரிந்தது என்பதை மறந்து விடாதீர்கள்..உன்னை போல் ஒருவன் என்று படம் எடுத்தையும்..மறந்து விடாதீர்கள் .
..innum irukku kamal santharppavaathathiku ..naan rajini rasigan alla..savukku rasigan
I fully agree with you. Kamalahasan is an opportunist. Rajinikanth is a Business man. Rajini Kanth whole family is in Financial Fraud and mal practice. Rajinikanth is not an open person as he speaks. Kamalahasan and Rajinikanth have not proven their leadership so far. They are not good leaders also.
இதில் எதற்கு ரஜினி யடன் ஒப்பிடல். ரஜினி யின் தனிபட்ட வாழ்க்கை பக்கத்தில் கமல் வர முடியுமா. ஒருவர் அமைதியாக இருந்தால் அவர் கோழையா. என்ன ஒரு கணிப்பு இது. கமலுக்கு ஆதரவாக ரஜினி நிலைப்பாடு எடுத்தால் உங்கள் கருத்து வேறுமாதிரி இருந்திருக்குமோ.. think before you ink
kamalhaasan is 100% better than rajinikant (coward)
அற்புதம் நிகழும்
சவுக்கு சரியான நேரத்திலேதான் கட்டுரைய எழுதி இருக்கு.கமல் தான் அரசியலுக்கு வர்ரதா எங்கயுமே சொல்லலையே, அதுக்குள்ள எதுக்கு இப்படி ஒரு இராமாயணம்.
சரி கமல் வர்ரதா அறிவிச்சார்னா:அப்படி வந்தா வரவேற்கலாம்.ஏன்னா ,தமிழக மக்களுக்கும் ஒரு மாற்று அரசியல் தேவை தான்.சவுக்குல சொல்றமாதிரி கமலுக்கு ஒன்றும் அரசியல் கடினமானது இல்லை.அவர் ஒன்றும் படிக்காத உலகம் தெரியாத நடிகர் இல்லை.மேலும் சிலர் சொன்னார்கள்.அவர் இலங்கை தமிழர்க்கும் மற்றும் சிலவற்றுக்கும் குரல் கொடுக்கவில்லை என்று.இப்பதான் அவரு அரசியல பத்தியே பேசராறு,அவரப் போயி பத்து வருஷம் முன்னாடி அவரு அதப் பண்ணல,இதப் பண்ணல அப்படின்னா எப்படி.so avara discourage செய்ய வேண்டாம்.கமல் பாஷையில சொல்லனும்னா:கமல் அரசியலுக்கு வரமாட்டாரான்னு தெரியாது,ஆனா வந்தா கண்டிப்பா நல்லா இருக்கும்.
An long explanation is needed at this junture …yes for people to know about an actor ….and behind what is hidden…..well explained…..lets wait and see what is going to happen ….still a lot more to go…….we cannot come to an conclusion now…….
Kamalhassan is genius and honest I support kamal sir
அடஅட இந்த கட்டுரையை பார்க்க பின்னர் தான் காமராஜர் ஐயா சொன்னது நியாபகம் வருகிறது… கூத்தாடி பின்னாடி போங்க, அவன் நாட்டை கூத்தியாளிடம் கொடுப்பான் என்று…..
தமிழ் நாட்டில் எப்படி பட்ட பிரச்சினைகள் நடந்து கொண்டு இருக்கிறது, இன்னும் முட்டாள் தமிழன் திரையில் தனது தலைவனை தேடி கொண்டு இருக்கிறார்கள்…….
குருட்டு தமிழர்களுக்கு போராட்ட களத்தில் நிற்கும் தமிழ் தலைவர்கள் கண்களில் தெரியாமல் போனது ஏனோ???
இதற்கு கட்டுரை வேர……
மேன்மையான பதிப்பு. இடை விட வேறு வரவேற்பு பதிவு என்பது ரொம்ப கடினம். வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் அவர்களுக்கு.
அண்ணா(வா) வா, அரசியலுக்கு வா
ஒரு வாரமாக நான் அவரை பார்த்து வியக்கிறேன்…
சவுக்கு எந்த தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும் ஒரு நிலைப்பாட்டை எடுத்ததில்லை என்பது எந்த அளவு முற்றிலும் உண்மையோ, அந்த அளவு சவுக்கு தனிப்பட்ட விருப்பு/வெறுப்புகளின் அடிப்படையிலேயே பெரும்பாலான கருத்து பதிவுகளை இடுகிறர் என்பது உண்மை. இதை மறுப்பதும் மறப்பதும் சவுக்கின் உரிமை.
Really wonderful, to Read about kamal on the positive
Kalyanaraman en nanpan. Appazhukkarra thesa pakthan….Piraccinai BJP is now filled with brokers and pimps. HE in fact serves BJP thereby the NATION..mostly by his income from personal business for which he doesnt need any political support. The news about Vjayabaratham editor is surprising . He wrote AYYAKANNU is an anti national quoting H. RAJA. Ayyakannu was with BKS an rss’ kissan sangh till last year. He becomes aninational once he left them. If he was with them he would have continued as a DESABAKTH it seems. These thugs are like KARUNANITHI thasildhar….. who used to certify on WHO IS TAMIL? NOW the whole sale dealership for DESABHAKTHAN and THESA VIRODHI is vested with BJP…. I would like to call them PSEUDO NATIONALISTS.
Kamal pathi edhum perisa soll edhumillai… varattum parkalaam…..oorama niinu koovikittu irundhallam pathathu…. kalathile iruangattum…. YOSIPPOM….
anyway well written article….. Rajini oru thara some ten years back thaan WHITElethaan vangurathaa sonnathaa njyaapakam….check pannikonga…
நான் கமலின் பல படங்களை பார்த்து இருக்கிறேன்… ஆனால் அவரை எனக்கு பிடிக்காது…
ஆனால்…
ஆனால்…
ஒரு வாரமாக நான் அவரை பார்த்து வியக்கிறேன்….
I start to admire his way of conducting bigboss program…
My vote for Mr.kamal
Good article…
அண்ணா நிதர்சனமான உண்மை
நிதர்சனங்களை நறுக்கு தெறித்தாற்போல் கூறியது அருமை.
வாழ்த்துக்கள்! கமல் கரங்களை வலுப்படுத்துவோம்.
சூப்பர் சவுக்கு ! அருமையான கட்டுரை
சூப்பர் சவுக்கு ! அருமையா கட்டுரை
ராஜேந்தர பாலாஜி எந்த ஆதாரங்களை காண்பித்து பால் விற்பனையாளர்கள் மீது குற்றம் சுமத்தினார் ..அதற்க்கு நியாயம் கற்பித்த அமைச்சர்கள் கமலை மட்டும் ஆதாரத்தோடு குற்றம் சாட்ட வேண்டும் என்று பாடம் எடுக்கின்றனர் …
வாருங்கள் கமல்
கமலஹாசன் இதுவரை நடித்த படங்களுக்கு எல்லாம் ஊதியத்தை காசோலை மூலமாக வாங்கி அதற்கு வரியும் செலுத்தியுள்ளார் என்பது உண்மையானால், அதைவிட மென்மையான தகவல் ஒன்று இருக்க முடியாது. அந்த ஒரு காரணத்திற்காகவே அவர் ஆட்சி நடத்த தகுதி பெறுகிறார்.
ஆனால் ஒரு விஷயம் உறுத்துகிறது.(இதை ஏன் சவுக்கு மறந்தது அல்லது மறைத்தது என்பது ஒரு புதிர்): அன்புமணி நல்ல விஷயங்களை சொன்ன போதிலும் அவர் கட்சி சாதி கட்சி என்று அடித்து சொல்லும் சவுக்கு, கமலஹாசன் நேர்மையானவர்தான், ஆனால் அவர் சார்ந்த சினிமா உலகம் ஊழலில் திளைத்தது, எனவே அவரால் நேர்மையான ஆட்சியை கொடுக்கமுடியுமா என்ற சந்தேகத்தை ஏன் எழுப்பவில்லை? அன்புமணிக்கு ஒரு நீதி, கமலஹாசனுக்கு ஒரு நீதியா ?
சவுக்கு எந்த தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும் ஒரு நிலைப்பாட்டை எடுத்ததில்லை என்பது எந்த அளவு முற்றிலும் உண்மையோ, அந்த அளவு சவுக்கு தனிப்பட்ட விருப்பு/வெறுப்புகளின் அடிப்படையிலேயே பெரும்பாலான கருத்து பதிவுகளை இடுகிறர் என்பது உண்மை. இதை மறுப்பதும் மறப்பதும் சவுக்கின் உரிமை.
மேன்மையான*
I support
நடுநிலை தவறா, எச்சார்பும் இல்லா அருமையான உரை. சவுக்கு சவுக்கு தான்.! குறைகள் குறைவாக உள்ளவரை அரசியலுக்கு ஏன் அழைக்கக்கூடாது? ஏன் வரக்கூடாது?
The article on Kamal is well researched one. Kamal should enter into active politics as it is the very apt time. The BJP wants to project Rajni who is a BJP sympathizer. They are afraid of Kamal who will not toe the BJP’s Hindutva line.
அருமையான கட்டுரை..!
அருமை..அருமை தோழரே..தெளிவான நடை..தேர்ந்த விளக்கங்கள்…அற்புதம்
Kamal and Seeman should join. They have good intentions. They may each have to give up a bit.
Welcome Kamalhasan gentle man Humanitarian . IncidentallySeeman and Kamal both are from nearby towns Sivaganga & Paramakudi.
அருமையான பதிவு
தல சூப்பர், மிகவும் அருமை
Great
#கூத்தாடிகள் வரக்கூடாதென்றால், அரசியலில் வெற்றி பெறுபவர்கள் அனைவரும், சுதந்திரப் போராட்ட தியாகிகளா என்ன ?#
I support :வாருங்கள் கமல்ஹாசன்….
ஏன் சகோதரி போராட்ட களத்தில் நிற்கும் சீமானை போன்றவர்கள் உங்கள் கண்களுக்கு தெரியாமல் போனது ஏனோ?.. கமலை ஏதிர்க வில்லை…. அனால் கண்முடி தனமாக ஆதரவு கொடுக்க காரணம்?? யோசியுங்க….
Vanga theliva Yarium pappom