குஜராத் தேர்தல் பிஜேபியின் வாழ்வா சாவா போராட்டம் என்பது போன்ற ஒரு பிம்பத்தை பிரதமர் மோடி அவர்களே முன்னின்று உருவாக்கினார். அமித் ஷாவோ, மொத்தம் உள்ள 182 இடங்களில், 150ல் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார். 150 இடங்கள் வெல்ல முடியாத ஒரு எண்ணிக்கை அல்ல என்றார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அதே ராகுல் காந்தியை மனதில் வைத்தே இந்த எண்ணிக்கையை அமித் ஷா சொல்லியிருப்பார்.
ஆனால், ஓட்டப்பந்தயத்தின் எல்லைக் கோட்டை, தொடுவதற்குள், தட்டுத் தடுமாறி, மூச்சுத் திணறி, தொட முடியுமோ இல்லையோ என்ற மலைப்போடே பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளனர். வெளிப்புறத் தோற்றத்துக்கு புன்னகையோடு பேட்டியளித்து, இனிப்புகளை பரிமாறிக் கொண்டாலும், உள்ளுக்குள் பிஜேபியினருக்கு இந்த வெற்றி நூலிழையில் கிடைத்த வெற்றி என்பதும் நன்றாகவே புரிந்திருக்கும். 3000 வாக்குகளுக்கும் குறைவான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் 16 தொகுதிகளில் தோற்றுள்ளனர். இந்தத் தொகுதிகளில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் பிஜேபி வேட்பாளரின் வாக்கு வித்தியாசத்தை விட அதிகம். அந்த வாக்குகள் காங்கிரசுக்கு கிடைத்திருந்தால், காங்கிரஸ் ஆட்சியை பிடித்திருந்தாலும் பிடித்திருக்கும். மிக மிக மெல்லிதான ஒரு கயிற்றின் மீது நடக்க வேண்டிய நெருக்கடிக்கு பிஜேபி தள்ளப்பட்டிருக்கிறது.
2017 குஜராத் தேர்தல் பிஜேபியின் அசல் முகத்தை காண்பித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இந்தியா முழுக்க நடந்த அத்தனை மாநில சட்டமன்றத் தேர்தலிகளிலும், பாராளுமன்றத் தேர்தல் சமயத்திலும், குஜராத் மாடல் என்ற ஒற்றை கோஷத்தை வைத்தே, மோடியின் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது என்பதை மறந்து விடக்கூடாது. 2014 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் அதன் பின்னர் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில், மோடியின் இந்த வாக்குறுதிகள் பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. குறிப்பாக 2014 பாராளுமன்றத் தேர்தலில், மோடியை முழுமையாக நம்பினார்கள். அதனால்தான் அந்த பிரம்மாண்டமான பெரும்பான்மை.
அதற்கு பின் நடந்த பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், காங்கிரஸை பிஜேபிக்கு ஒரு வலுவான மாற்றாக மக்கள் நம்ப மறுத்தார்கள். உத்தரப் பிரதேசத்தில், காங்கிரஸ் ஒரு தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்தாலும், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை மீறி ஒரு தாக்கத்தை அதனால் ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் அதே நேரத்தில் பஞ்சாபில் நடந்த தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதை நாம் ஒதுக்கி விட முடியாது.
அம்மாநில தேர்தல்களுக்கு பிறகு, குஜராத் தேர்தல் நெருங்க, நெருங்கத்தான், ராகுல் காந்தி பரவலாக கவனிக்கப்பட ஆரம்பித்தார். அவரின் ட்வீட்டுகளும், அவருக்கு ஊடகங்களில் பிஜேபியின் அழுத்தத்தையும் மீறி கிடைத்த ஆதரவுகளும், பிஜேபியை கவலை கொள்ள வைத்தன. மேலும், கடந்த ஒரு ஆண்டாக, பண மதிப்பிழப்பு, பொருளாதார மந்த நிலை, தவறாக செயல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி உள்ளிட்டவை குறித்த தரவுகள் வெகுஜன ஊடகங்களில் வர விடாமல் தடுக்க பிஜேபி எடுத்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றாலும், அதையும் தாண்டி, செய்திகள் வரவே செய்தன. தி வயர், ஸ்க்ரால் போன்ற இணையதளங்களிலும் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது குறித்து விரிவான ஆய்வுக் கட்டுரைகள் வரத் தொடங்கின.
கடந்த தீபாவளியின்போது, பல்வேறு வணிகர்கள், ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் தாங்கள் இழந்தவை குறித்து பேசத் தொடங்கினார்கள். ஆகையால் 22 ஆண்டு காலம் ஆளும் குஜராத் என்ற கோட்டையை எப்படியாவது மீண்டும் மீட்டெடுத்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடிக்கு பிஜேபி தள்ளப்பட்டது.
காங்கிரஸ் இம்முறை குஜராத் தேர்தலில், மக்கள் செல்வாக்கை பெற்ற வலுவான இளைஞர் தலைவர்களை தங்கள் அணியோடு இணைத்தது. தலித்துகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜிக்னேஷ் மேவானி, தாக்கூர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அல்பேஷ் தாக்கூர் மற்றும் பட்டேல்கள் தலைவரான ஹர்திக் பட்டேல் ஆகியோரை இணைத்து தேர்தலை சந்தித்தது.
தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், ராகுல் காந்தி எளிய மக்களை கவரும் வகையில், மோடியின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்தவர், குஜராத்தில் தாண்டவமாடும் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, குழந்தைகள் நலன், பெண்கள் நலன் ஆகியவற்றை முன்வைத்து பிரச்சாரம் நடத்தினார். அரசு ஊழியர்களே தொகுப்பூதியம் பெறும் அவல நிலையை விமர்சித்தார். வளர்ச்சி, வளர்ச்சி என்று முழக்கமிட்டு கடந்த 22 ஆண்டுகளாக குஜராத்தை ஆண்டு கொண்டிருந்தவர்கள், குஜராத்தின் ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் எதையுமே செய்யவில்லை என்பதை சுட்டிக் காட்டினார்.
குஜராத் மாநிலம் ஒரு பிரத்யேக தன்மை உள்ள ஒரு மாநிலம் என்பதையும், மதரீதியாக மிக மிக ஆழமாக குஜராத் பிளவுபட்டு உள்ளது என்பதையும், காங்கிரஸ் நன்றாகவே புரிந்து வைத்திருந்தது. பிரச்சாரத்தில் எந்த ஒரு இடத்திலும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களோ, ராகுல் காந்தியோ, குஜராத் கலவரத்தைப் பற்றியோ, போலி என்கவுன்டர்கள் பற்றியோ பேசவில்லை. மிக கவனமாக அதை தவிர்த்தனர். கோவில்களுக்கு சென்று கடவுளை வணங்கி, காட்சியளித்து, ஒரு மென்மையான இந்துத்துவா தந்திரத்தை கடைபிடிக்கவும் காங்கிரஸ் தயங்கவில்லை.
22 வருடங்களாக ஆட்சியில் இருந்து விட்டு, இப்போது வந்து குஜராத்திலேயே குஜராத் மாடல் பற்றி பேசினால், மக்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை மோடியும், அமித் ஷாவும் நன்றாகவே உணர்ந்திருந்தனர்.
மோடிக்கு தேர்தலில் வெற்றி பெறுவது என்பது, தண்ணீரில் மூழ்கிய நிலையில் எப்படியாவது காற்றை சுவாசிக்க வேண்டும் என்று மேலே எம்பி வருபவனின் தவிப்பை போன்றது. வெற்றி பெறாவிட்டால் இறந்தே விடுவோம் என்று கருதக் கூடியவர் மோடி. அந்த வெற்றியை பெறுவதற்காக, அவர் எதையும் செய்வார், என்ன வேண்டுமானாலும் செய்வார்.
மணி சங்கர் அய்யர் அவரை கீழ்த்தரமான மனிதர் என்று வர்ணித்ததில் துளியும் தவறு கிடையாது. அது பற்றி பின்னர் பார்ப்போம்.
2002ம் ஆண்டு தேர்தல்தான், மோடி முதலமைச்சராக சந்தித்த முதல் குஜராத் தேர்தல். அப்போதுதான் குஜராத் கலவரம் நடந்து முடிந்திருந்தது. அப்போது தேர்தலை உடனடியாக நடத்தும் சூழ்நிலை இல்லை என்பதை உணர்ந்திருந்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஜேஎம்.லிங்டோ, தேர்தலை தள்ளி வைத்தார். இதை மனதில் வைத்து, தேர்தல் பிரச்சார சமயத்தில் பேசிய நரேந்திர மோடி, “சில பத்திரிக்கையாளர்கள், என்னிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஜேம்ஸ் மைக்கேல் லிங்டோ இத்தாலியிலிருந்து வந்தவரா என்று கேட்டார்கள். அவரின் ஜாதகம் என்னிடம் இல்லை. ராஜீவ் காந்தியைத்தான் கேட்க வேண்டும் என்றேன். அதே பத்திரிக்கையாளர்கள், என்னிடம் அவர்கள் தேவாலயத்தில் சந்திக்கிறார்களா என்றார்கள். நான் இருக்கலாம் என்றேன்”
“ஜேம்ஸ் மைக்கேல் லிங்கேடா அகமதாபாத் மற்றும் வதோத்ராவுக்கு வருகை தந்தார். சில அதிகாரிகளிடம் நாகரீகமற்ற முறையில் பேசினார். (லிங்டோ பேசியது என்ன தெரியுமா ? தேர்தல் நடத்த ஏற்ற சூழல் இருக்கிறது என்று சொன்ன ஒரு அதிகாரியிடம், மக்கள் இன்னும் முகாம்களில் இருக்கிறார்கள். தேர்தல் நடத்தலாம் என்று சொல்கிறீர்கள். உங்களை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக் கொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா, என்று கேட்டார்)
குஜராத்திகள் இது போன்ற ஒரு வார்த்தைகளை எப்போதும் பயன்படுத்த மாட்டார்கள். நமது உயர்ந்த கலாச்சாரமும் பாரம்பரியமும் அவற்றை அனுமதிக்காது. தேர்தல் நடத்தக் கூடாது என்று லிங்டோ ஒரு பத்வா பிறப்பித்தார். (பத்வா என்பது இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் உருதுச் சொல்).
நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். அவர் வெறும் சிறுபான்மை சமூக மக்களை மட்டுமே பார்த்து விட்டு இந்த முடிவுக்கு வந்துள்ளார். சிறுபான்மை மக்கள் மட்டும்தான் இந்திய குடிமக்களா ? பெரும்பான்மை மக்கள் இந்திய குடிமக்கள் கிடையாதா ? தேர்தல் ஆணையம் சிறுபான்மை மக்களுக்காக மட்டும்தான் இருக்கிறதா ? லிங்டோ எப்போதாவது கோத்ரா படுகொலையில் கொல்லப்பட்ட மக்களின் உறவினர்களை சென்று பார்த்திருக்கிறாரா ? ஏன் அவர்களை பார்க்கவில்லை. தேர்தல் நடத்த ஏற்ற சூழல் இருக்கிறதா என்று ஏன் அவர்களை கேட்கவில்லை ? சொல்லுங்கள் ஜேம்ஸ் மைக்கேல் லிங்டோ அவர்களே… நான் கேட்கவில்லை. குஜராத் மக்கள் கேட்கிறார்கள்.
இங்கே கூடியுள்ள ஒரு லட்சம் மக்கள் தேர்தல் நடத்த ஏற்ற சூழ்நிலை என்று கருதினால் அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தி ஆம் என்று கூறவும். இந்த ஒரு லட்சம் மக்கள், குஜராத்தின் புகழை மறைக்க செய்யப்படும் சதி இது என்று கருதும் மக்கள் கரங்களை உயர்த்தி ஆம் என்று கூறுங்கள். பார்த்தீர்களா. அனைவரும் ஆம் என்கிறீர்கள். ஐந்து கோடி குஜராத்திகளும் இதைத்தான் சொல்லப் போகிறார்கள்.
ஜேம்ஸ் மைக்கேல் லிங்டோ ஃபத்வா உத்தரவு பிறப்பித்த அன்று, காங்கிரஸ் அவர்களுக்கே தெரிந்த முறையில் அதை கொண்டாடியது. (தோராஜியில் நடைபெற்ற வன்முறையை குறிப்பிட்டு). நாற்பது கடைகளை கொளுத்தியுள்ளார்கள். 15 பேர் காயம் பட்டுள்ளனர். அவர்களுக்கு கொண்டாட்டமளிக்கும் தினம் இது. வரும் நாட்களில் என்ன செய்யப் போகிறார்கள் ?
தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே, கூலிப்படையை அனுப்பி கொலையையும் நிகழ்த்த தயங்க மாட்டார்கள். சோட்டா ஷகீல், தாவூத் இப்ராகிமுக்கு 5 கோடியை கொடுத்து, ராஜஸ்தானில் மதக் கலவரத்தை உருவாக்க தயங்க மாட்டார்கள். ஜோத்பூர், உதய்ப்பூர், பரத்பூர் போன்ற இடங்களில் கொலைகளும் கொள்ளைகளும் நடக்கும். உடனே ஜேம்ஸ் மைக்கேல் லிங்டோ வந்து, 40 பக்க அறிக்கையை அளித்து, ராஜஸ்தான் தேர்தல் நடத்த ஏற்ற இடம் இல்லை என்று கூறுவார். ஜனநாயகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது ? ஐந்து கோடி குஜராத்தியர்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. “
2002 தேர்தலில் மோடி பேசிய பேச்சு இது. இணைப்பு. பிரதமர் வாஜ்பாயே, தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். இணைப்பு
நாகரீகம், அடிப்படை பண்பு, அடிப்படையான மனிதக் கூறுகள் இவை எவையுமே இல்லாத ஒரு அநாகரிகமான, கீழ்த்தரமான மனிதர் மோடி என்றால் அது மிகைச் சொல் அல்ல. ஒரு தலைமைத் தேர்தல் அதிகாரியை, அவர் மதத்தை வைத்து விமர்சிப்பது என்பது எத்தனை கேவலமான புத்தி ? ஆனால் மோடி அதை செய்வார். செய்து கொண்டும் இருக்கிறார் என்பதை சமீபத்திய தேர்தலில் பார்த்தோம்.
2002 தேர்தலில் பேசிய மோடி, அப்போதும் பாகிஸ்தானை இழுத்தார். மியான் முஷாரப் மோடி குஜராத் தேர்தலில் தோற்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார் மோடி.
2012 தேர்தலிலும் இதே அற்பத்தனத்தை மோடி தொடர்ந்தார். அப்போதைய குஜராத் தேர்தலுக்கு சற்று முன்னதாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார் மோடி. குஜராத் பாகிஸ்தான் எல்லையில் உள்ள 96 கிலோ மீட்டர் சர் க்ரீக் என்ற பகுதியை பாகிஸ்தானுக்கு தருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என்று ஒரு கடிதத்தை எழுதி விட்டு, அது பிரதமர் அலுவலகத்தை அடையும் முன்பே ஊடகங்களுக்கு அதை வெளியிட்டார் மோடி. இணைப்பு
2014 பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த நீசத்தனம் தொடர்ந்தது. “பாகிஸ்தானுக்கு உதவ மூன்று ஏகேக்கள் இருக்கின்றன. ஒன்று ஏகே 47 துப்பாக்கி. அது காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உதவுவது. இரண்டாவது ஏகே, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏகே அந்தோணி. அவர்தான் பாகிஸ்தான் ராணுவம் நம் வீரர்களின் தலையை துண்டித்ததை மறைத்து, பாகிஸ்தானை சேர்ந்த மக்கள் ராணுவ உடை அணிந்து வருகின்றனர் என்று கூறுகிறார். மூன்றாவது ஏகே, அரவிந்த் கேஜ்ரிவால்”. இப்படி ஒரு தேர்தலுக்காக, ஒரு மாநில முதலமைச்சரையும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரையும், பாகிஸ்தான் கைக்கூலிகள் என்று சொல்ல எந்தத் தயக்கமும் காட்டாதவர்தான் மோடி.
இதற்கு முந்தைய தேர்தலிகளிலெல்லாம், பெருமளவில் நெருக்கடிகளை சந்திக்காதபோதே, இப்படி கேவலமான பிரச்சார யுக்திகளில் இறங்கிய மோடி, ஒரு கடுமையான நெருக்கடியான சூழலில், எந்த அளவு கீழே இறங்கிப் போவார் என்பதை சொல்ல வேண்டியது இல்லை.
அந்த தந்திரத்தின் அடிப்படையில்தான், என்னை ஏன் வெறுக்கிறீர்கள் என்று நீலிக் கண்ணீர் வடித்ததெல்லாம். மணி சங்கர் ஐயர், மோடி ஒரு கீழ்த்தரமான மனிதர் என்று சொன்னார். அதை அப்படியே திரித்து, மணி சங்கர் அய்யர் என்னை கீழ்சாதி மனிதர் என்று கூறி விட்டார் என்று திரித்து, மொள்ளமாறித்தனம் செய்வதெல்லாம் மோடிக்கு கைவந்த கலை. தேர்தல் வெற்றிக்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார் மோடி. காங்கிரஸ் கட்சி மணி சங்கர் ஐயரை, கட்சியை விட்டு இடைநீக்கம் செய்த பிறகு கூட, பிஜேபியினர் அந்த விவகாரத்தை விடவில்லை.
இதற்கு அடுத்ததாக மோடி செய்த செயல்தான் இருப்பதிலேயே மிக மிக கீழ்த்தரமானது. மணி சங்கர் ஐயர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பாகிஸ்தான் தூதரோடு சேர்ந்து, ஒரு ரகசிய கூட்டம் நடத்தி, தன்னை குஜராத்தில் தோற்கடிக்க பாகிஸ்தானோடு சேர்ந்து சதி செய்கிறார்கள் என்றார். வழக்கமாக, வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தும் மன்மோகன் சிங் அவர்களே, கடுமையான வார்த்தைகளோடு மறுப்பு வெளியிட்டார்.
அதே போல, குஜராத்தில் அகமது மியான் பட்டேல் என்ற இஸ்லாமியரை முதல்வராக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்று பச்சைப் பொய்யை பொதுக் கூட்டத்தில் பேசினார் மோடி.
வாக்குச் சாவடியில் இருந்து குறிப்பிட்ட தூரத்துக்கு பிரச்சாரம் செய்யக் கூடாது, சின்னத்தை காட்டக் கூடாது என்று தெளிவான விதி இருந்தும் 2014 பாராளுமன்றத் தேர்தலில், வாக்களித்து முடித்த பிறகு, வாக்குச் சாவடிக்கு வெளியே வந்து, தாமரை சின்னத்தை கையில் எடுத்து வைத்து, செல்பி எடுத்து, அதை நாடெங்கும் ஊடகங்களை ஒளிபரப்ப வைத்த அற்ப மனிதர்தான் மோடி.
அதே போலத்தான் குஜராத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென்பதற்காக, அத்தனை மலிவான தந்திரங்களிலும் இறங்கினார். பெரும்பான்மையான மக்களிடமிருந்து பிஜேபியும், மோடியும் குஜராத்தை பொறுத்தவரை அந்நியப்பட்டுப் போனார்கள் என்பது ஒரு வகையில் உண்மையே என்றாலும், பாகிஸ்தான் சதி, மோடியை கீழ் சாதி என்று ஒருவர் கூறியதாக சொன்ன பொய்க் குற்றச்சாட்டு, மோடி இல்லையென்றால், இஸ்லாமியர்கள் இந்துக்களை வாழ விட மாட்டார்கள் என்று பரவலாக மக்கள் கருதுகிறார்கள்.
பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற தாக்கங்கள், இந்தியாவின் பிற பகுதி மக்களை பாதித்தது போலவே, குஜராத்தின் நகர்ப்புற மக்களையும் பாதிக்கத்தான் செய்திருக்கிறது. ஆனாலும், மோடி இல்லையென்றால், பாகிஸ்தான் நம்மை கபளீகரம் செய்து விடும் என்ற பிரச்சாரம் வலுவாகவே நகர்ப்புறங்களில் இறங்கியிருக்கிறது.
வாட்ஸப், சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பொழுதைப் போக்கும் நகர்ப்புற இளைஞர்களிடையே பிஜேபியின் இந்த பொய்ப் பிரச்சாரம் எடுபட்டுள்ளது. இதன் காரணமாகத்தான், பங்களாதேஷிலோ, பாகிஸ்தானிலோ, மாடுகளை வெட்டும் படங்களையும், யாராவது ஒருவர் தாக்கப்படும் வீடியோவையும், இந்தியாவின் ஒரு மாநிலத்தில் நடத்ததாக கூசாமல் சமூக வலைத்தளங்களில், பிஜேபி ஐடி விங் பரப்ப தயங்குவதேயில்லை.
இது போன்ற கோயபல்ஸ் பிரச்சாரம்தானே இட்லரை ஆட்சியை பிடிக்க வைத்தது ?
ஆனால் மாறாக, காங்கிரஸின் பிரச்சாரம் நாகரீக எல்லைகளை தாண்டாமல் நடக்குமாறு பார்த்துக் கொண்டார். பிஜேபியினர் தரம் தாழ்ந்த விமர்சனங்களை வீசியடித்தபோதும், அவற்றை பண்புடனே எதிர் கொண்டார். மணி சங்கர் ஐயர், மோடியை கீழ் சாதி மனிதர் என்று சொல்லவேயில்லை என்பதை நன்றாக அறிந்தும் கூட, அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தார். மோடியிடம் மணி சங்கர் ஐயர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.
நாள்தோறும் மோடிக்கு கேள்வி என்று ட்விட்டரில் ராகுல் எழுப்பிய கேள்விகளுக்கு, பிஜேபி ஒரு நாளும் பதில் கூறவில்லை. மாறாக, பிஜேபி ட்ரோல் ஆர்மியை வைத்து, ராகுலை ட்ரோல் செய்வதில் மட்டுமே பிஜேபி ஈடுபட்டது.
கடந்த மூன்றாண்டுகளாக இருந்த காங்கிரஸ் கட்சியை ஒப்பிடுகையில், ஒரு புதிய உத்வேகத்தோடு, இழந்த தன் பொலிவை மீட்டெடுக்கும் பணியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது. ஒரு முயற்சியையும் தவிர்க்காமல், அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக எடுத்து, சுணக்கமில்லாமல் போட்டியிட்டது. குறிப்பாக அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து செல்வதில் ஒரு வகையில் காங்கிரஸ் வெற்றி கண்டுள்ளது.
வெற்றிகள் எளிதில் வந்து விடாது. அதுவும் குறிப்பாக, மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்தியாவது அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கும் ஒரு கட்சி, தீவிரமான மத துவேஷத்திலும், போலி தேச வெறியை ஊட்டுவதிலும் தீவிரமாக ஒரு புறம் இறங்கியிருக்கையில், அவர்களை எதிர்த்து நாகரீக அரசியல் நடத்துவது எளிதான காரியம் அல்ல. கோபப்படுவது எளிது. வார்த்தைகளை கோபத்தில் அள்ளி வீசுவதும் எளிது. பிஜேபி போல, அவர்கள் தரத்துக்கு இறங்கிப் பேசுவதும் எளிதே. பிரதமர் முதலைக் கண்ணீர் வடிக்கையில், அவரை விட கூடுதலாக அழுது, மக்கள் அனுதாபத்தை பெறலாமே என்ற எண்ணம் தோன்றுவது இயல்பே. ஆனால் அது போன்ற தூண்டுதல்களுக்கு ராகுல் பலியாகவில்லை. வயதுக்கு மீறிய பக்குவத்தோடு, ஒரு கண்ணியமான அரசியல்வாதியாகவே இந்தத் தேர்தலை ராகுல் சந்தித்திருக்கிறார்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற 77 இடங்கள் ஒரு பெறும் வெற்றிதான் என்றாலும், ராகுலின் பணி இதோடு முடிந்து விடவில்லை. 2019ல், மோடியை எதிர்கொள்ள ஒரு வலுவான ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க வேண்டியது ராகுலின் முன்பு உள்ள வலுவான சவால். லாலு, முலாயம், மாயாவதி, மம்தா பேனர்ஜி, பிரகாஷ் காரத், போன்றவர்களை இணைத்து, ஒரு அணிக்குள் அடக்குவது எளிதான காரியம் கிடையாது. மிகுந்த பொறுமையும், தளராத நமபிக்கையையும் கேட்கும் சிரமமான பணி அது.
அதுதான் ராகுல் ஒரு ஸ்டேட்ஸ்மேனா இல்லையா என்பதை தீர்மானிக்கும். 2019 இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறதே என்று தோன்றும். ஆனால் ஒரு நொடிப் பொழுதில் இந்த காலம் கடந்து போய் விடும். உத்தரப் பிரதேச தேர்தலுக்காக பிஜேபி இரண்டு வருடங்கள் முழுமையாக உழைத்தது என்பதை மறந்து விடக் கூடாது. பிஜேபியிடம் உள்ளது போன்ற ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் காங்கிரஸிடம் இல்லை. ஆர்எஸ்எஸ் ஊழியர்கள், ஒரு தேர்தல் சமயத்தில் ஒரு வாக்காளரைக் கூட விடாமல், தேடிச் சென்று பிரச்சாரம் செய்வார்கள். வாக்காளரோடு நேரடி தொடர்பில் இருப்பார்கள். ஆனால் இது போன்ற கட்டமைப்புகள், காங்கிரஸ் கட்சிக்கோ, வேறு கட்சிகளுக்கோ இல்லை.
2019 தேர்தலில், மோடி இதை விட மிக மிக கேவலமான தந்திரங்களில் நிச்சயம் இறங்குவார். மலிவான உத்திகளை கையாளுவார். வேறு தந்திரங்கள் சரிப்பட வில்லையென்றால், பாகிஸ்தானோடு போரிடக் கூட தயங்க மாட்டார். தேர்தல் வெற்றி மட்டுமே அவரது குறிக்கோள். 2014ல் வாக்குச் சாவடியில் தேர்தல் சின்னத்தை காண்பித்தற்காக மோடியை தூக்கிலா போட்டு விட்டார்கள் ? தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, எதையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்பது மட்டுமே மோடியின் அடிப்படை கொள்கை.
இப்படிப்பட்ட மனிதனை எதிர்த்துத்தான் ராகுல் காந்தி 2019ல் களமிறங்கப் போகிறார். அந்தப் பாதை எளிதானது அல்ல. குஜராத் தேர்தலை ராகுல் காந்தி அணுகியதை பார்க்கையில் அவர் மோடிக்கு சரியான சவாலாக இருப்பார் என்றே நம்புகிறேன்.
நம்பிக்கையோடு காத்திருப்போம்.
மக்கள் செல்வாக்கை பெற்ற வலுவான இளைஞர் தலைவர்களை தங்கள் அணியோடு இணைத்தது. தலித்துகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜிக்னேஷ் மேவானி, தாக்கூர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அல்பேஷ் தாக்கூர் மற்றும் பட்டேல்கள் தலைவரான ஹர்திக் பட்டேல் ஆகியோரை இணைத்து தேர்தலை சந்தித்தது.///இதை தமிழ் நாட்டில் பாமக செய்தால் சாதியவாதம் அதை காங்கிரஸ் திருடர்கள் செய்தால்
சோசியல் இஞ்னியரின் என்று சொல்வது
பெரியாரிய மாமாவாதம்
மக்கள் செல்வாக்கை பெற்ற வலுவான இளைஞர் தலைவர்களை தங்கள் அணியோடு இணைத்தது. தலித்துகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜிக்னேஷ் மேவானி, தாக்கூர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அல்பேஷ் தாக்கூர் மற்றும் பட்டேல்கள் தலைவரான ஹர்திக் பட்டேல் ஆகியோரை இணைத்து தேர்தலை சந்தித்தது.///
மக்கள் செல்வாக்கை பெற்ற வலுவான இளைஞர் தலைவர்களை தங்கள் அணியோடு இணைத்தது. தலித்துகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜிக்னேஷ் மேவானி, தாக்கூர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அல்பேஷ் தாக்கூர் மற்றும் பட்டேல்கள் தலைவரான ஹர்திக் பட்டேல் ஆகியோரை இணைத்து தேர்தலை சந்தித்தது.
very very nice and correct article.
என்னை பொறுத்தவரை பிஜேபி ன் சரிவுக்கு காரணம் நிறைய …..அனால் அதை ராகுலின் வெற்றி என்பது உங்ககளின் விசுவாசம் வெளிபடுகிறது …..
தற்பாேதைய நிலைமை பற்றி எழுதினால் … உடனே பாட்டன… முப்பாட்டன் பற்றி குறிப்பிடுவதும் … மதப்பிரசாரத்தை காட்டுவதும் …தேவையில்லாத ஒன்று … சவுக்கு கருத்துக்கு ஏற்ற விவாதம் காணாமல் பாேவதும் … ஏன் …?
I ACCEPT YOUR THOUGHT SIR. JUST I TRIED TO EXPLAIN HOW CONGRESS STATESMEN SPOILED OUR HONORABLE NATION FOR THE PAST DECADES. I WILL ACCEPT YOUR THOUGHT AND ANALYSE ABOUT THE ARTICLE. THANKS.
நண்பரே …! அவர்கள் சரியில்லை என்பதால் தானே இவரகள் …! இவர்களின் முந்தைய அரிதுபெரும்பாண்மை தற்பாேது ஏன் குறைந்தது என்பதைப்பற்றிய ஆய்வுதான் முக்கியமே தவிர கடந்த காலத்தை கிளறினால் இரு பக்கமும் நாற்றமடிப்பதை விவதிப்பதால். யாது பயன் …? என்பதுதான் எம்மைப் பாேன்ற நடுநிலை பாமரர்களின் கேள்வி …!
காங்கிரஸுக்கும் பிஜேபிக்கும் உள்ள ஒரே வித்யாசம் ஹிந்துயிசம் மட்டும் தான். மற்றபடி இரண்டும் ஒரே வேலையைத்தான் செய்கின்றனர். ஊழலுக்கு எதிரானவர் மோடி என்றால் ஏன் இன்னும் admk வை விட்டு வைத்திருக்கிறார். ரெய்டு மேல் ரெய்டு பண்ணி யாரை என்ன செய்திருக்கிறார். ஆட்சி மாற்றம் வந்து கொண்டிருந்தால் தான் அடக்கி வசிப்பார்கள். அதற்க்கு வழி இல்லையென்றால் ஆட்சியாளர்களை கையில் பிடிக்க முடியாது. தமிழ் நாடே இதற்கு சாட்சி.
சவுக்கு, ஏன் இப்படி எழுதியுள்ளீர்கள்? உண்மையில், BJP-யின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் எந்த பிழையும் இல்லை. ஆனால், அதற்காக காங்கிரஸை இந்த அளவிற்கு ஆதரித்து எழுதியிருப்பது, சவுக்கு ஊழலைத் தோலுரிக்கும் நடுநிலைப் பத்திரிக்கை என்பதிலிருந்து விலகுகிறதோ என வாசகர்களுக்கு எண்ணத் தோன்றுகிறது!
2019-நாடாளுமன்ற தேர்தலில் BJP தோற்றே ஆக வேண்டும் என்பது போல எழுதியுள்ளீர்கள். அதற்கு, காங்கிரஸ் ஒரு பெரிய தேர்தல் கூட்டணியை உருவாக்க வேண்டும் என நீங்கள் கூறியுள்ள காட்சிகள் ஊழலே செய்யாத உத்தம புத்திரர்கள் அல்லவா? இது போன்ற கட்சிகளுடன் இதற்கு முன்பு கூட்டணி வைத்து இவர்கள் செய்த ஊழல்கள் போதாதா? இதில் அழகாக திமுகவின் பெயரை தவிர்த்திருக்கிறீர்கள்!
மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள், பண மதிப்பிழப்பு, GST போன்றவைகளை ஊழல் செய்யவா BJP கொண்டுவந்தது? இது போன்ற திட்டங்களால் எதிர்வரும் தேர்தலில் தோற்கவும் வாய்ப்பு உண்டாகிவிடும் என்பது மோடிக்கும் தெரியாதா?
இமாச்சல பிரதேசத்தில் பண மதிப்பிழப்பும், GST-யும் நடைமுறைப்படுத்தவில்லையா? அங்கு எப்படி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றார்கள்? ஒருவேளை குஜராத்தில் BJP தோல்வியுற்றிருந்தால், பண மதிப்பிழப்பும், GST-யும் தான் காரணம் என நாமே முடிவு செய்திருப்போம், இல்லையென்றால் இதுதான் காரணம் என நம்மேல் திணித்திருப்பார்கள்!!
நமக்கு நல்லதும் நடக்க வேண்டும், ஆனால், அதற்காக நமக்கு சிறு துன்பம் கூட ஏற்படக்கூடாது என்றுதான் நம் எண்ண ஓட்டங்கள் இருக்கின்றன. அல்லது, இருக்கும்படி நம்மீது திணிக்கப்படுகிறது!!! எங்கும் எதிலும் ஊழல் புரை ஓடியிருக்கும் நம் நாட்டில் இது இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் படியான திட்டங்கள் வகுக்க சாத்தியமா??
சவுக்கு, நடுநிலைமையான செய்திகள் என சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி விளம்பரம் செய்வது போல் கட்டுரை எழுதாதீர்கள். உங்களுடன் எங்களை இணைப்பதே, ஊழலுக்கு எதிராக நீங்கள் சுழற்றும் சவுக்குதான்!!!
Well said.
இந்த விமர்சனங்களின் மூலம் ”சவுக்கை” அதிகமாக காவிமார்கள்தான் படிக்கிறார்கள் என்று தெரிகிறது
savuku don’t foolish people
செந்தில்குமார் அவர்களே, நேருவை பற்றி உங்களின் மேலே சொன்ன குற்ற சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா அல்லது காவி பரிவார்கள் மீண்டும் மீண்டும் பல ஆண்டு காலமாக சொல்லிவரும் ஆர்ஸ்ஸ் சேரு அள்ளி வீசும் தூற்றல்கள்தானா?? இந்திய பாகிஸ்தான் பிரிவினை பற்றியும், இந்தியாவில் அரச மாகாணங்கள் சேர்ந்ததை பற்றியும், காஷ்மீர் பற்றியும், நேருவிக்கும் மௌண்ட்பேட்டன் மனைவி எட்வினாக்கும் இருந்த அந்தரங்க உறவு பற்றியும் பல புத்தகங்கள்-இந்தியராலும், வெளி நாட்டவராலும் வெளிவந்துள்ளன, நானும் அவற்றை படித்திருக்கிறேன். நீங்கள் சொன்னது அனைத்தும் RSS ன் கற்பனை ஜோடனைகள். நேரு குடும்பத்தின் மீதுள்ள கொழுந்துவிட்டு எரியும் வெறுப்பு
Dear Mr.Sikkander, I am a Indian. I am not belongs to any political party or religious party. do you people accept, for the past 60 years decades congress statesmen worst tenure? Katch island is gave to Sri Lankan government because of Mrs.Indira Gandhi, if you search about corruption during Congress government in India for the past 60 years, it will become 500 chapters book. They are the only people, brings religious issues and caste issues to Republic of India. I am against a worst political party, who kills the own people for their party and family development. Now, BJP is three years only. Many problems arose now, but we people easily forgot about the 60 years worst tenure. Please remember Mr.Sikkander
People simply don’t vote for the speech of leaders. You are just keep on mentioning about his speech.
Liquor lobby is powerful, they will swallow ruling party, opposition etc. BJP govt didn’t llow free alcohol supplies till now. Gujaratis are business minded, BJP govt did one thing, they didn’t spoil them. TN people are equally brilliant, but state govts are continuously spoiling them for last 20 years.
Battling anti incumbency of 22 years of ruling is a very tough thing, they did it.
You could be very disappointed to see BJP numbers from Gujarat in 2019.
இன்றைய சூழலில் மக்கள் காங்கிரசை புறக்கணித்ததற்கு ஊழல் ஒரு முக்கிய காரணம. இப்போது மக்களின் முன்னாள் நிற்பது மதம் சார்புடைய மன்னர் ஆட்சியா ஊழல் கூட்டணியுடன் ஆட்சியா. ஒரு ம் கட்சியின் மீது இருக்கிற வெறுப்பின் பேரிலே இன்னொரு கட்சிக்கு மக்கள் பெரும்பாலும் வாக்கு அளிக்கிறார்கள். இன்று மோடி நல்ல தலைவர் இல்லையென்றால் ராகுல் நல்ல தலைவராகி விட முடியாது. ராகுல் இன்னும் அவரது ஆளுமையை , இயக்க திறமையை , நிர்வாக திறமையை நிரூபிக்க இயலவில்லை என்பதே உண்மை. கடந்த பதினாறு தேர்தலிலும் தோல்விதான் . மோடி முதல் அமைச்சராக இருந்து இப்போது பிரதம மந்திரியாக இருக்கிறார். அவரது ஆளுமைக்கு ஒப்பிட்டு சொல்ல வேண்டுமானால் திருமதி ஷீலா திக்ஷித் , திரு ஜோதி பாசு திரு கலைஞர் கருணாநிதி போன்றோருடன் ஒப்பிட்டு பேச வேண்டுமே தவிர ராகுலுடன் அல்ல. முதலில் இரண்டையும் ஒப்பிட்டு பேசுவதோ எழுதுவதோ தவறு. எல்லோருமே கட்சியில் ஒரு பதவியை நிர்வாகம் செய்து மேற் பதவியை அடைந்தார்கள். சவுக்கு நினைத்தால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைத்து எழுதுவது பத்திரிக்கை தர்மது செய்யும் துரோகம்
anti incumbency, demonitisation, gst, human development rating etc. Did Rahul take advantage on any of these? Nothing. There is no Rahul magic in Gujarat. Rahul is in active politics from past 20 years. He got this position without any hard work & effort. Also, he didn’t take advantage on any of the above. We need a true, smart statesman to defeat BJP.
சவுக்கு நல்ல தெளிந்த மன நிலையோடு இதை எழுதியதாக தெரியவில்லை. ராகுல்கானின் வம்சம் இல்ல விட்டால் பாரத நாட்டிற்கு தலைமை என்பதே கிடைக்காது என்பது போல் பேசுகிறீர்கள். மணிசங்கர் ஐயர் மற்றும் பி.சிதம்பரம் இந்த இரண்டு மகானுபாவந்கள் மயிலாடுதுறையுலும், காரைக்குடியிலும் தனியாக நின்று ஒரே ஒரு வார்டு கவுன்சிலர் ஆக சொல்லுங்கள். எப்போது வாயை திறந்தாலும் பாகிஸ்தான் என்ற தீவிரவாத நாட்டிற்கு ஆதரவாக பேச வேண்டியது. இப்போது ராகுல்கானின் தாத்தா பக்கம் போவோம்
உலக மணிமனிதர், ரோஜாவின் ராஜா, மனிதருள் மாணிக்கம் என்று எல்லாம் பொய் ஊடகங்கள் வர்ணித்த மாமேதை ஜவஹர்லால் நேரு பற்றிய ஒரு அருமையான புரிதல் விளக்கம் . லண்டனில் வாழ்ந்த தன்னுடைய (கள்ள?) காதலிக்கு நித்தமும் காதல் கடிதம் வரைந்து, அதனை தனி ஏர்இந்தியா விமானத்தில் அனுப்பிய மைனர் யார்?
? தன்னுடைய வெளிநாட்டுக் காதலியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மரியாதை செலுத்த மலர்வளையம் தாங்கி இந்திய நாட்டின் இராணுவக் கப்பல்களை அனுப்பிவைத்த தேசபக்தர் யார்?
? பாக்கிஸ்தானுக்கு 85,800 சதுர கிலோமீட்டர்களையும், சீனாவுக்கு 37244 சதுர கிலோமீட்டர்களையும் அள்ளிக்கொடுத்த இந்தியாவின் தேசபக்த பிரதமர் யார்?
? ஹைதராபாத்தை கட்டுப்பாட்டில் வைத்துதிருந்த பாக்கித்தான் ஆதரவு ரசாக்கார் படைகள் மீது நாணுவ நடவடிக்கை எடுக்காமல் ஐநா விக்கு அனுப்பி, அதை இன்னொரு காஷ்மீர் ஆக்க முயற்சி செய்த தேசபக்த பிரதமர் யார்?
? ஸ்வதந்திரய வீர சவர்க்கர் முதலிய தேசபக்தர்கள் 13 ஆண்டுகள் காலாபானி என்ற வெஞ்சிறையில் சிறையில் கொடுமையை அனுபவித்து வந்தபோது, பைவ் ஸ்டார் வசதியுடன் 3 வருடம் சொகுசாக பாட்மிட்டன், தோட்டம் வளர்ப்பு மற்றும் சமையல் என்று சிறப்பு கவணிப்பு யாருக்கு கிடைத்தது?
? கல்வியால் நான் ஆங்கிலேயன், எண்ணத்தால் நான் சர்வதேசன், பண்பாட்டால் நான் ஒரு இஸ்லாமியன் ஆனால் நான் ஒரு இந்துவாக தவறிப் பிறந்துவிட்டேன். அது ஒரு விபத்து என்று கூறிய தலைவர் யார்?
? சரோஜினி நாயுடுவின் மகள் பத்மஜா நாயுடு அவர்களுடன் மேய்ந்து குலாவிவிட்டுப் பின்னர் அந்தப்பெண்மணியை மேற்கிவங்கத்தின் ஆளுனராக நியமனம் செய்தது எந்த பாரபட்சமற்ற பிரதமர்?
? பாபாசாகேப் அம்பேத்கர் இங்கே அரசியலமைப்பு சட்டத்தை எழுதித் தொகுத்துக் கொண்டிருந்தபோது, தன்னுடைய காதலி ப்ரான்ஸுவா குந்தர்ருக்கு – உன்னுடைய கடிதத்தை தொடும்போது உன்னுடைய கைகளை தொடுவது போல் உணர்கிறேன் என்று சொன்னது யார்?
? 15க்கு 13 மாகாணங்களின் காங்கிரஸ் தலைவர்கள் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அபரிமிதமான ஆதரவு கொடுத்தும், தானே பிரதமர் ஆகவேண்டும் என்று அடம்பிடித்த பிரதமர் யார்?
? சுதந்திரம் பெற்றவுடன் நேபாளம், பலுசிஸ்தான் முதலிய நாடுகள் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தபோது அதனை வேண்டாமென நிராகரித்த பிரதமர் யார்?
? சொன்னதைச் செய்யாவிட்டால் நேத்தாஜி பற்றிய உண்மைகளை வெளியிட்டுவிடுவோம் என்று ரஷ்ய அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சும் நிலையில் இருந்த பதவி வெறிபிடித்த பிரதமர் யார்?
? நேத்தாஜியின் புகழைக் கண்டு பயந்துபோய் அவரை அச்சு நாடுகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால் போர்க்குற்றவாளி என்று வர்ணித்து நேசநாடுகளுடன் சேர்ந்து உறவாடிய அரசியல்வாதி யார்?
? 1950ல் சர்தார் பட்டேல் இறந்தபோது அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளக் கூடாது என்று அனைத்து மந்திரிகள் மற்றும் அரசுச் செயலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது எந்த பிரதமர்?
? மேற்குவங்கத்தையும் பாக்கிஸ்தானுக்கு தாரைவார்க்கப்பட வேண்டும் என்று சொன்ன எந்த அரசியல் பெரும்புள்ளியின் கோரிக்கையை ஸ்யாமா ப்ரஸாத் முக்கர்ஜீ முறியடித்தார்?
? ஸ்ரீநகரில் தன்னுடைய நண்பர் ஷேக் அப்துல்லாவின் உதவியுடன் திரு ஸ்யாமா ப்ரசாத் முக்கர்ஜீயை கொன்றதாக சந்தேகிக்கப்பட்டு, பின்பு அன்னாரின் விபரீத மரணத்தைக் குறித்து விசானணை ஏதும் நடக்காமல் பார்த்துக்கொண்டது யார்?
? மிக உயர்ந்த கல்விமானாக விளங்கிய டாக்டர் அம்பேத்கரைப் பார்த்து பொறாமை கொண்டு, அவரை லோக்சபா தேர்தலில் தோற்கடிக்க யுக்திகள் வகுத்து அவரை பாராளுமன்றம் புகாமல் பார்த்துக்கொண்டது யார்?
? டாக்டர் அம்பேத்கர் அவர்களது பரிந்துரையான பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த இந்தியப் பிரதமர் யார்?
? இந்திய இறையாண்மைக்கு எதிரானதால் டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தில் புறக்கணித்த ஷரத்து 370ஐ, கோப்பால் ஐயங்கார் என்பவரை நியமித்து, காஷ்மீருக்கு தனிநிலை, தனி அரசியலைப்பு, தனிக் கொடி ஏற்படுத்திக் கொடுத்தது யார்?
? படையெடுப்பில் இடிக்கப்பட்ட சோமநாதர் ஆலயத்தை மீண்டும் கட்டமைக்க எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், மதச்சார்பின்மையை காரணம் காட்டி ஜனாதிபதி நாஜேந்திர பிரசாத்தையும் போககூடாது என தடுத்தது யார்?
? இந்தியாவிலேயே யார் மிகுந்த இஸ்லாமிய தேசியவாதி என்று சர்தார் பட்டேல் அவர்களை வினவியபோது அவர் யாரைக் குறிப்பிட்டார்?
மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒரே விடை – ஜவகர்லால் நேரு. அன்னாரின் தாந்தோறிதனத்தாலும் எதேச்சாதிகார முடிவுகளின் விலையை இந்தியா இன்னும் கொடுத்துக்கொண்டிருக்கிறது…
ஆகையால் நேரு அவர்களின் குடும்பம் மட்டும்தான் ஏதோ பாரத தேசத்தை காக்க வந்த கடவுள் போல் கட்டுக்கதை காட்டாதீர்கள்
செந்தில்குமார் அவர்களே, நேருவை பற்றி உங்களின் மேலே சொன்ன குற்ற சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா அல்லது காவி பரிவார்கள் மீண்டும் மீண்டும் பல ஆண்டு காலமாக சொல்லிவரும் ஆர்ஸ்ஸ் சேரு அள்ளி வீசும் தூற்றல்கள்தானா?? இந்திய பாகிஸ்தான் பிரிவினை பற்றியும், இந்தியாவில் அரச மாகாணங்கள் சேர்ந்ததை பற்றியும், காஷ்மீர் பற்றியும், நேருவிக்கும் மௌண்ட்பேட்டன் மனைவி எட்வினாக்கும் இருந்த அந்தரங்க உறவு பற்றியும் பல புத்தகங்கள்-இந்தியராலும், வெளி நாட்டவராலும் வெளிவந்துள்ளன, நானும் அவற்றை படித்திருக்கிறேன். நீங்கள் சொன்னது அனைத்தும் RSS ன் கற்பனை ஜோடனைகள். நேரு குடும்பத்தின் மீதுள்ள கொழுந்துவிட்டு எரியும் வெறுப்பு
https://nehrufamily.wordpress.com
City Kotwal was an important post like today’s Commissioner of Police. It appears from Mughal records that there was no Hindu Kotwal employed. It was extremely unlikely for a Hindu to be hired for that post. Compulsorily only Mohammedans of foreign ancestry were hired for such important posts.
Jawaharlal Nehru’s second sister Krishna Hutheesing also mentions in her memoirs that her grandfather was the city Kotwal of Delhi prior to 1857’s uprising when Bahadur Shah Zafar was still the sultan of Delhi. Jawaharlal Nehru, in his autobiography, states that he have seen a picture of his grandfather which portrays him like a Mughal nobleman. In that picture it appears that he was having long & very thick beard, wearing a Muslim cap and was having two swords in his hands. Jawaharlal Nehru also states in his autobiography that on their way to Agra (a seat of Mughal influence) from Delhi, the members of his grand father’s family were detained by the British. The reason for the detention was their Mughal features. They however pleaded that they were Kashmiri Pandits and thus got away. The Urdu literature of the 19th century, especially the works of Khwaja Hasan Nizami, are full of the miseries that the Mughals and Mohammedans have to face then. They also describe how Mughals escaped to other cities to save their lives. In all probability, Jawahar Nehru’s Mughal grandfather and his family were among them.
https://www.speakingtree.in/blog/hidden-facts-about-the-nehru-gandhi-dynasty-178195
Some hidden facts about the Nehru-Gandhi dynasty
The Nehru-Gandhi dynasty starts with the Mughal man named Ghiyasuddin Ghazi. He was the City Kotwal i.e. police officer of Delhi prior to the uprising of 1857, under the Mughal rule. After capturing Delhi in 1857, in the year of the mutiny, the British were slaughtering all Mughals everywhere. The British made a thorough search and killed every Mughal so that there were no future claimant to the throne of Delhi. The Hindus on the other hand were not targeted by the British unless isolated Hindus were found to be siding with the Mughals, due to past associations. Therefore, it became customary for many Mohammedans to adopt Hindu names. So, the man Ghiyasuddin Ghazi (the word means kafir-killer) adopted- a Hindu name Gangadhar Nehru and thus saved his life by the subterfuge. Ghiyasuddin Ghazi apparently used to reside on the bank of a canal (or Nehr) near the Red Fort. Thus, he adopted the name ‘Nehru’ as the family name. Through out the world, we do not find any descendant other than that of Gangadhar, having the surname Nehru. The 13th volume of the “Encyclopedia of Indian War of Independence” (ISBN:81-261-3745-9) by M.
K. Singh states it elaborately. The Government of India have been hiding this fact.
City Kotwal was an important post like today’s Commissioner of Police. It appears from Mughal records that there was no Hindu Kotwal employed. It was extremely unlikely for a Hindu to be hired for that post. Compulsorily only Mohammedans of foreign ancestry were hired for such important posts.
Jawaharlal Nehru’s second sister Krishna Hutheesing also mentions in her memoirs that her grandfather was the city Kotwal of Delhi prior to 1857’s uprising when Bahadur Shah Zafar was still the sultan of Delhi. Jawaharlal Nehru, in his autobiography, states that he have seen a picture of his grandfather which portrays him like a Mughal nobleman. In that picture it appears that he was having long & very thick beard, wearing a Muslim cap and was having two swords in his hands. Jawaharlal Nehru also states in his autobiography that on their way to Agra (a seat of Mughal influence) from Delhi, the members of his grand father’s family were detained by the British. The reason for the detention was their Mughal features. They however pleaded that they were Kashmiri Pandits and thus got away. The Urdu literature of the 19th century, especially the works of Khwaja Hasan Nizami, are full of the miseries that the Mughals and Mohammedans have to face then. They also describe how Mughals escaped to other cities to save their lives. In all probability, Jawahar Nehru’s Mughal grandfather and his family were among them.
SENTHIL KUMAR G பல்லாவரத்தில் ஒரு பிசினஸ் செய்த நல்ல மனிதர் டெமோனிடைசேஷனால் தான் இறந்து விட்டார். இது போல பலரும் சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் தவிக்கின்றனர். எத்தனை மனிதர்கள் வங்கியில் பணம் எடுக்கும் போது இறக்க வைத்தீர்கள்… இன்னும் எத்தனை பேரை சாகடிக்க காத்திருக்கிண்டீர்கள்…
நம் இனம் அழிய காரணமாய் இருந்த காங்கிரஸுக்கு ஆதரவாய் எழுதும் அளவுக்கு சவுக்கு அவர்களின் மதம் அவரை தூண்டுகிறது .தமிழனின் அழிவுக்கு தமிழனே காரணமாய் இருப்பான் என்பதற்கு இவரே ஒரு எடுத்து காட்டு
//கடந்த ஒரு ஆண்டாக, பண மதிப்பிழப்பு, பொருளாதார மந்த நிலை, தவறாக செயல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி உள்ளிட்டவை குறித்த தரவுகள் வெகுஜன ஊடகங்களில் வர விடாமல் தடுக்க பிஜேபி எடுத்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றாலும், அதையும் தாண்டி, செய்திகள் வரவே செய்தன. தி வயர், ஸ்க்ரால் போன்ற இணையதளங்களிலும் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தது குறித்து விரிவான ஆய்வுக் கட்டுரைகள் வரத் தொடங்கின.//
IMF கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை உங்கள் கண்களுக்கு தெரியாமல் இருட்டடிப்பு செய்தது யார்…
Scroll.. wire…போன்ற கம்யூனிஸ்ட் ஆதரவு website’ஐ நீங்கள் தொடர்ந்து துதி பாடுவது உங்கள் நிலையை நியாயமாக கொண்டிருக்கவில்லை என காட்டுகிறது…
நன்றாக… கத்துங்கள்… கதறுங்கள்..
மோடியை மேலும் மேலும் உயரத்துக்கு கொண்டு செல்லுங்கள்…
Finally won. No point talking like karunanidhi. Additionally HP got. Congress lost it. Net result zero.
5 வருடத்துக்கு முன்னால் பிஜேபியை ஆதரிக்க வேண்டிய நிலை இப்போது காங்கிரசை ஆதரிக்கவேண்டிய நிலை..
மாறி மாறி மக்கள் மட்டுமல்ல கட்டுரையாளரும் சாயவேண்டிய நிலை.. புது சிந்தனைக்கான கூட்டம் எந்த 5 வருடத்திலும் உயிர்ப்பிபதில்லை..
super very true..
ஜெயிப்பதற்கு யாரோடு வேண்டுமானாலும் கூட்டணி….எந்த சமரசத்துக்கும் தயார்… ஊழலில் திளைத்த திருடர்கள், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள்…ஏதோ தேசத்தை காக்க வந்த கடவுள் அளவுக்கு ராகுல் துதி. இந்தக் கட்டுரை யாரால் யாருக்காக எழுதப்பட்டது என்பது தெளிவாகிறது.
ராகுல் ஒன்றும் புத்தனல்ல. அவன் வம்சம் முழுவதும் இன்று வரை பிரித்தாழும் சூழ்ச்சி செய்து இந்நாட்டை ஆள துடிக்கிறது. பேராசை பிடித்து எல்லா மதத்தினரின் ஓட்டுக்களை பெற மாறு வேடம் அணிந்து திரியும் இந்த குள்ளநரியின் காலை ஒரேயடியாக நக்க வேண்டாம்.இவன் ஒட்டுக்கு வேண்டி காட்டியும்….கொடுப்பவன். மக்கள் யாவரும் அறிவர்.