உலகில் வெகு சில படங்களே பெரும்பாலானோரால் கொண்டாடப்படுகின்றன. வசூலை வாரிக்குவித்த ஹாலிவுட் படங்கள் பல உண்டு. ஜுராஸ்ஸிக் பார்க், அவதார், டைட்டானிக், போன்ற படங்கள் வசூலில் பெரும் வெற்றி பெற்றவை. அதே நேரத்தில், பலரை கவர்ந்தாலும், வசூலில் பெரும் வெற்றி பெறாத படங்களும் உள்ளன. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளிவந்துள்ள தி போஸ்ட் என்ற திரைப்படம், வசூல் ரெக்கார்டுகளை உடைக்கப் போவதில்லை. ஆனால், பலராலும் மனதார நேசிக்கப்படும் ஒரு படம்.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்படும், நேர்த்தியான பல திரைப்படங்கள், பார்ப்பவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும், பரவசமூட்டுவதாகவும் அமைவது வழக்கம். இது போல ஹாலிவுட்டில் பல திரைப்படங்கள் உருவாகி வரவேற்பை பெற்றுள்ளன. Schindller’s List, The Worlf of wall street, The Aviator, The imitation Game, American Sniper, Argo, Sea Biscuit, Erin Brokovich, Catch me if you can, A beautiful mind, Saving Private Ryan, Mary Kom, Munich, The Insider, All the President’s men, போன்ற படங்களை சொல்லாம்.
அந்த வரிசையில் வந்து, நம்மை வசீகரிக்கும் ஒரு படம்தான் தி போஸ்ட். அறுபதுகளின் இறுதியில், அமெரிக்க பத்திரிக்கையான வாஷிங்டன் போஸ்ட் தினசரியில் நடந்த ஒரு கதைதான் இந்த படம். கதை சுவராஸ்யமானது என்பதில் சந்தேகம் இல்லை. பலருக்கு தெரிந்த கதை. ஆனால் ஏதோ தெரியாத ஒரு கதையைப் பார்ப்பது போன்ற உணர்வை படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும் திறனும் அபார சினிமா அறிவும் பெற்றவர்தான்.
அறுபதுகளில், அச்சுக்களை கோர்த்து, செய்தித் தாள்களை அச்சிடும் காலம். செல்பேசிகள், கம்ப்யூட்டர்கள் எதுவும் கிடையாது. ஊடகங்கள் வலுவாக தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு செய்திகளை வெளியிட்ட காலம் அது. அரசின் செய்தித் தொடர்பாளர்கள் பேசுவதையும், அரசின் செய்திக் குறிப்புகளையும் வெளியிடுவதில் நடக்கும் தற்போதைய போட்டி போன்றது அது கிடையாது. உண்மையாகவே போட்டி.
படம் தொடங்கும்போதே, அமெரிக்க அதிபர் குடியிருக்கும் வெள்ளை மாளிகையின் வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளரை இனி வெள்ளை மாளிகைக்குள் வரக் கூடாது என்று உத்தரவு விவாதிக்கப்படுகிறது. வேறு செய்தியாளரை அனுப்புங்கள் என்ற வெள்ளை மாளிகையின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் பென் ப்ராட்லீ கூறுகிறார். அப்படியென்றால், அதிபர் நிக்சனின் மகள் திருமண புகைப்படங்களை எப்படி எடுப்பது என்று விவாதம் நடக்கிறது.
அதைத் தொடர்ந்து பென் ப்ராட்லீ, தனது சக பத்திரிக்கையாளர்களிடம், கடந்த மூன்று மாதங்களாக, நியூ யார்க் டைம்ஸின் பிரபல பத்திரிக்கையாளர் நீல் ஷீஹன், எந்த கட்டுரையும் எழுதவில்லை என்றும், அவர் ஏதோ ஒரு முக்கிய புலனாய்வுக் கட்டுரையை எழுதி வருகிறார் என்றும் சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார். இந்த விஷயம், எடிட்டர் ப்ராட்லீயின் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது.
இதனிடையே வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை நிதி நெருக்கடியில் இருக்கிறது. குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த பத்திரிக்கை, கேத்தரீன் தந்தை இறந்த பிறகு, கேத்தரீனின் கணவர் அதை நிர்வகிக்கிறார். அவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டதால், பத்திரிக்கை கேத்தரீன் க்ரஹாமிடம் வருகிறது. அவர் ஆடிட்டர்கள் நிதி ஆலோசகர்களிடம் கலந்து பேசிய பிறகு, பத்திரிக்கையை பொது பங்கு வெளியீடாக பங்குச் சந்தையில் வெளியிட்டு, நிதி திரட்ட முடிவெடுக்கிறார்.
பெரும் பத்திரிக்கையின் ஒரே வாரிசாக கேத்தரின் இருப்பதால், அவருக்கு அமெரிக்க அரசின் ராணுவ அமைச்சர்கள், வெளியுறவு அமைச்சர்கள் ஆகியோர் நண்பர்கள். அப்படி ஒரு நாள் ராணுவ அமைச்சர் மெக் நமாராவோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் சில நாட்களில் தன்னைப் பற்றிய மோசமான செய்தி வருகிறது என்று கூறுகிறார். கேத்தரின் தன் செய்தித் தாளின் ஆசிரியர், ப்ராட்லீயிடம் இந்த விஷயத்தை கூறுகிறார். ப்ராட்லீக்கு நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் நீல் ஷீகன் ஏதோ ஒரு புலனாய்வு செய்திக்கான பணியில் உள்ளார் என்பது ப்ராட்லீக்கு உறுதியாகிறது. உடனே, தனது அலுவலகத்தில் உள்ள ஒரு செய்தியாளரை அழைத்து, நியூயார்க் டைம்ஸ் அலுவலகம் சென்று, நீல் ஷீகன் என்ன புலனாய்வு செய்கிறார் என்பதை கண்டறிந்து வரச் சொல்கிறார்.
அந்த செய்தியாளர், நியூயார்க் டைம்ஸ் அலுவலகம் சென்று சில விபரங்களை கண்டறிந்து வருகிறார். வந்து, அடுத்த நாள் செய்தித்தாளுக்கான வடிவமைப்ப பார்த்ததாகவும், அதில் தலைப்புக்கு கீழே ஒரு கட்டம் போட்டு அதில் நீல் ஷீகன் என்று எழுதியிருப்பதாக சொன்னதும், வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் ப்ராட்லீக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது.
மறு நாள் காலை முதல் செய்தித்தாள் கட்டு வரும் இடத்துக்கு நண்பர்களோடு ஓடுகிறார். முதல் செய்திதாளை அனைவரும் எடுத்து படிக்கிறார்கள்.
பென்டகன் பேப்பர்ஸ் என்று அழைக்கப்பட்ட ஆவணங்களை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டது.
இந்த பென்டகன் பேப்பர்ஸ் என்னவென்றால், அமெரிக்கா வியட்நாம் மீது படையெடுத்தது, குறித்து அமெரிக்க அரசு நடத்திய ஆய்வு அறிக்கை. 1950 முதல், வியட்நாமில் உள்ள ஹோ சி மின்னின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதற்காக, அங்கே உள்ள சிறு ஆயுதக் குழுக்களுக்கு ரகசியமாக ஆயுதங்களை வழங்கி கலவரத்தை தூண்டி வந்தது. நேரடியாக போரில் இறங்காவிட்டாலும், ஆயுதக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கவென்றே, இரு ராணுவ தளபதிகளை அமெரிக்கா நியமித்தது.
அதன் பின் வந்த ஆண்டுகளில் அமெரிக்கா நேரடியாகவே துருப்புகளை அனுப்பி வியட்நாமோடு போரில் இறங்கியது. இந்தப் போரில், அமெரிக்கா கடும் பின்னடைவை சந்தித்தது. அமெரிக்க படை வீரர்கள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர். வியட்னாம் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் வீரர்கள் கொரில்லா முறையில் நடத்திய தாக்குதல்களை அமெரிக்க வீரர்களால் தாங்க முடியவில்லை. பதிலடியாக அமெரிக்கா, நேபாம் எனப்படும் தீக்குண்டுகளை வீசியது. காடுகளுக்குள் வியட்நாம் வீரர்கள் ஒளிந்து கொள்கிறார்கள் என்பதால், காடுகளில் உள்ள மரங்களின் இலைகள் உதிரும் வகையில், ஏஜென்ட் ஆரஞ்ச் என்ற ரசாயன குண்டுகளை அமெரிக்கா வீசியது.
இந்தப் போரில் ஏறக்குறைய 60 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் இறந்தனர்.
இந்த போர் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த சமயத்தில்தான் அமேரிக்க ராணுவ அமைச்சர் மெக்நமாரா தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜான்சன் விமானத்தில் பயணிக்கையில் மெக்நமாரா மற்றும் அமெரிக்க அதிபர் ஜான்சனோடு, வெள்ளை மாளிகை அதிகாரி டேனியல் எல்ஸ் பர்க் என்பவரும் இருந்தார்.
அப்போது எல்ஸ்பர்கை அழைத்த மெக்நமாரா, அதிபர் ஜான்சன் முன்னிலையில் இந்தப் போரைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்டதும், எல்ஸ்பர்க் நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறார். உடனே ராணுவ அமைச்சர் மெக்நமாரா, இதைத்தான் நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நாம் இந்த போரில் தோல்வியடைந்து கொண்டே இருக்கிறோம் என்கிறார். விமானம் தரை இறங்கியதும், ராணுவ அமைச்சர் மெக்நமாரா, செய்தியாளர்களிடம், அமெரிக்கா வியட்நாம் போரில், பெரும் வெற்றியை அடைந்து கொண்டு உள்ளது. போர்க்களத்தில் இருந்து வரும் செய்திகள் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளன என்று பேட்டியளிக்கிறார்.
விமானத்தின் உள்ளே ஒன்று பேசிவிட்டு, வெளியில் வந்து தலைகீழாக பேசும் ராணுவ அமைச்சரின் செய்கையைப் பார்த்ததும், மனமுடைகிறார் வெள்ளை மாளிகை அதிகாரி எல்ஸ்பெர்க்.
நேராக அலுவலகம் சென்று, மெக்நமாரா ஆய்வறிக்கைகளை நகலெடுக்கிறார். மெக்நமாரா அறிக்கையில், தற்போதைய அதிபர் நிக்சனுக்கு முன்னால், இருந்த அதிபர்களான ஜான்சன், கென்னடி ஆகியோர் காலம் முதலாவே, வியட்னாம் மீது போர் தொடுத்தால் அமெரிக்கா தோற்கும் என்று பல்வேறு அறிக்கைகள் அளிக்கப்பட்டிருந்தன. அந்த அறிக்கைகளில் இறுதி முடிவாக, அமெரிக்கா வியட்நாம் போரை தொடர்ந்து நடத்துவதற்கான காரணம், வெறும் ஈகோ மட்டுமே என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த நகல்களில் ஒரு பகுதிதான், நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் நீல் ஷீகன் கையில் கிடைக்கிறது. எங்களிடம் உள்ள பல ஆவணங்களின் முதல் பகுதி என்று அந்த ஆவணங்களை வெளியிடுகிறது.
நியுயார்க் டைம்ஸ் செய்தியை பார்த்த, வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் ப்ராட்லீ, நம்மால் இதை செய்ய முடியாமல் போய் விட்டதே என்று வருந்துகிறார். எரிச்சலடைகிறார். அவரது பத்திரிக்கையில் துணை ஆசிரியராக இருந்த பென் பாக்திக்கியான் என்வரை, எப்படியாவது இந்த ஆவணங்களில் வெளியாகாமல் இருக்கும் பகுதிகளை கண்டு பிடிக்குமாறு கூறுகிறார். ஆனாலும் அவரால் உறங்க முடியவில்லை.
உடனே பத்திரிக்கையின் அதிபர், கேத்தரீனை சந்திக்கிறார். பாதுகாப்பு அமைச்சர் மெக்நமாரா உங்கள் நண்பர்தானே. அவரிடம் கேட்டு, அந்த அறிக்கையின் நகலை வாங்குங்கள் என்கிறார். கேத்தரின் கோபமடைகிறார். அவர் என் குடும்ப நண்பர். எனது நட்பை பயன்படுத்தி, ஒரு அரசாங்க ரகசியத்தை கேள் என்று எப்படி கூறுகிறாய் என்கிறார். நட்பை விட, நாட்டு மக்கள் குறித்த கடமை உங்களுக்கு முக்கியம் என்கிறார் ப்ராட்லீ. அவர் உங்களை கேத்தரீன் என்பதற்காக பழகவில்லை. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை அதிபர் என்பதற்காக பழகுகிறார் என்கிறார் ப்ராட்லீ.
இதற்கு முன் கென்னடி அதிபராக இருந்தபோது, வாரா வாரம் நீ வெள்ளை மாளிகையில் விருந்து உண்டிருக்கிறாய். கென்னடி, உன்னை ப்ராட்லீ என்பதற்காக அழைத்தாரா, இல்லை வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர் என்பதற்காக அழைத்தாரா ? அப்போது நாட்டு மக்களுக்கான கடமைகளை மனதில் வைத்து எத்தனை ரகசியங்களை, ஊழல்களை நீ வெளியிட்டாய் என்கிறார் கேத்தரின். பதில் சொல்ல முடியாமல் ப்ராட்லீ, திரும்புகிறார்.
இதற்குள், அப்போது அதிபராக இருந்த நிக்சனையும், வெள்ளை மாளிகையையும், நியூயார்க் செய்திக் கட்டுரை உலுக்குகிறது. உடனடியாக தேசிய ரகசியங்களை வெளியிட்டதாகவும், வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், மேலும் கட்டுரைகளை வெளியிடக் கூடாது என்றும் அறிவுரை வழங்கப்படுகிறது. நியூயார்க் டைம்ஸ் அதை கேட்க மறுக்கிறது.
நிக்சன் அரசு, உடனடியாக நீதிமன்றத்தில், இனியும் மெக்னமாரா அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்று தடை உத்தரவு பெறுகிறது. நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதாக கூறி, மேல் முறையீடு செய்கிறது.
இந்த நிலையில், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் துணை ஆசிரியர் பென் பாக்திக்கியான், அந்த அறிக்கைகளை நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த எல்ஸ்பர்கை கண்டு பிடிக்கிறார். எல்ஸ்பர்க், அவருக்கு நீண்ட நாட்களுக்கு முந்தைய நண்பர். அவர் இருக்குமிடத்துக்கு சென்று, என்னிடம் கொடுத்திருக்கலாமே. எதற்காக நியூயார்க் டைம்சுக்கு கொடுத்தீர்கள் என்று கேட்கிறார். இப்போது நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு விட்டது. தடையும் விதித்து விட்டார்கள் என்கிறார்.
உடனே எல்ஸ்பர்க், நியூயார்க் டைம்ஸிடம் கொடுத்தது, நான்கு வால்யூம்கள்தான். மொத்தம் 47 வால்யூம்கள் இருக்கிறது. அதை நான் தருகிறேன். உங்களால் நீதிமன்ற உத்தரவை மீறி பதிப்பிக்க முடியுமா ? நான் எவ்வளவு ரிஸ்க் எடுத்து, இந்த ஆவணங்களை எத்தனை மாதங்களாக நகலெடுத்தேன் தெரியுமா என்று கேட்கிறார் எல்ஸ்பர்க்.
துணை ஆசிரியர் பாக்திக்கியான், நிச்சயம் பதிப்பிக்கிறோம் என்று உறுதி அளித்து விட்டு, விமானம் ஏறுகிறார். ஆசிரியர் பென் ப்ராட்லீயிடம் தொலைபேசி செய்து, ஆவணங்கள் கிடைத்து விட்டன என்பதை கோடிட்டுக் காட்டுகிறார். ப்ராட்லீ, நேராக என் வீட்டுக்கு வந்து விடு என்கிறார். அலுவலகத்தில், முக்கியமானவர்களை வீட்டுக்கு வரவழைக்கிறார். அந்த ஆவணங்கள் அத்தனையும், கலைந்து போய், பக்க எண்கள் இல்லாமல், எது தொடக்கம், எது முடிவு என்பது தெரியாமல் இருக்கின்றன.
அலுவலகத்தில் இருந்து வந்தவர்களிடம் நாம் அச்சுக்கு செல்வதற்கு இன்னும் 10 மணி நேரம் உள்ளது. இந்த பத்து மணி நேரத்தில் நாம் இந்த ஆவணங்களை வரிசையாக அடுக்கி, செய்திக் கட்டுரை தயார் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அப்போதெல்லாம் கம்ப்யூட்டர் இல்லை. தட்டச்சுதான்.
அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்து விட்டு, நேராக வாஷிங்டன் போஸ்ட் அதிபர் கேத்தரீனை சந்திக்க செல்கிறார். அன்று கேத்தரீனின் பிறந்தநாள். பாதுகாப்பு அமைச்சர் மெக்நமாரா, உள்ளிட்ட அமைச்சர்களும், வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரிகளும் வந்திருக்கின்றனர். கேத்தரீனை தனியாக அழைத்து, ஆவணங்கள் கிடைத்த விபரத்தை கூறுகிறார்.
கேத்தரீன், மற்ற போர்ட் டைரக்டர்களோடு விவாதிக்கிறேன் என்று கூறுகிறார். பிறந்த நாள் பார்ட்டியை பாதியில் நிறுத்தி விட்டு, போர்ட் ஆப் டைரக்டர்களோடு விவாதிக்கிறார். அவர்கள் அத்தனை பேரும், பதிப்பிக்கக் கூடாது என்று ஒரே குரலில் கூறுகின்றனர். பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிடும் இந்த நேரத்தில், பதிப்பாளரும், ஆசிரியரும் சிறைக்கு சென்றால், முதலீட்டாளர்கள் யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள் என்று கூறுகிறார்கள். இதை பதிப்பிக்காமல் தவிர்த்தால், நாளை வேறு நல்ல செய்திகளை வெளியிட முடியும். ஆனால் வெளியிட்டால், பத்திரிக்கையே இருக்காது என்று கூறுகின்றனர். வழக்கறிஞர் வருகிறார்.
பதிப்பிக்கவே கூடாது. பதிப்பித்தால் அனைவரும் சிறை செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். இறுதியாக கேத்தரீன், பதிப்பிக்கலாம் என்று கூறுகிறார். வழக்கறிஞர்கள் ஒரு சமரசத் திட்டத்தை கூறுகின்றனர். அமெரிக்காவின் தலைமை வழக்கறிஞரிடம், ஆவணங்கள் தங்களிடம் கிடைத்த விபரத்தை கூறி, அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று இரண்டு நாட்கள் காத்திருப்போம் என்று ஆசிரியர் ப்ராட்லீயிடம் கூறுகின்றனர். ப்ராட்லீ அவர்களைப் பார்த்து, எங்களிடம் ஆவணங்களை கிடைத்துள்ளது என்று முன்னதாகவே தகவல் தர சொல்கிறீர்களா என்று கேட்கிறார். ஆமாம். அவர்கள் அனுமதி பெற்று செய்தியை வெளியிட்டால் பிரச்சினை இல்லை. இல்லையென்றால் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையே இருக்காது என்கின்றனர். அதற்கு ஆசிரியர், ப்ராட்லீ, வெள்ளை மாளிகை அனுமதியை பெற்று செய்தியை வெளியிட்டாலும் வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கை இல்லாதது போலத்தான் என்கிறார்.
இறுதியாக கேத்தரீன் முடிவு எதிர்ப்புகளோடு ஏற்கப்படுகிறது. அச்சுக்கு செல்ல இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கையில் கட்டுரை தட்டச்சு செய்ய தொடங்கப்படுகிறது. கட்டுரை முடித்து, அச்சுக்கு அனுப்பப்படுகிறது. அப்போது அச்சு கோர்த்துதான் ப்ரின்ட் செய்ய வேண்டும் என்பதால் வேக வேகமாக அச்சு கோர்க்கப்பட்டு, அச்சுக்கு தயார் என்ற நிலை வருகையில், வழக்கறிஞர் மீண்டும் வருகிறார்.
பாக்தீக்கியானை நோக்கி செல்கிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஆவணங்களை அளித்தவரும், உங்களுக்கு ஆவணங்களை அளித்தவரும் ஒரே நபரா என்று கேட்கிறார். இவர் இருக்கலாம் என்கிறார். சரியாக சொல்லுங்கள் என்றதும் ஆம் ஒரே நபர்தான் என்கிறார் பாக்தீக்கியான்.
வழக்கறிஞர், ஒரே நபர் அளித்த ஆவணங்களை வெளியிட்டதற்காக நீதிமன்றம் நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு விதித்த தடை, வாஷிங்டன் போஸ்டுக்கும் பொருந்தும். ஆசிரியர் ப்ராட்லீயும், அதிபர் கேத்தரீனும் சிறை செல்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்று கூறுகிறார். போர்ட் ஆப் டைரக்டர்ஸ் அனைவரும், கேத்தரீன் வீட்டுக்கு சென்று, தூங்கிக் கொண்டிருந்த கேத்தரீனை எழுப்புகின்றனர்.
கேத்தரீன் எழுந்து வந்து என்ன என்று கேட்டதும் விபரத்தை சொல்கின்றனர். நீண்ட நேரம் யோசிக்கிறார் கேத்தரீன். அவர் மனதில், பங்கு வெளியூடு, பத்திரிக்கையின் எதிர்காலம், ஒரு பெண் என்பதால் (அறுபதுகளின் இறுதியில்), தன் முடிவை எளிதாக குறை சொல்லுவார்கள் என்பது, கணவர் இறந்ததால் கைக்கு வந்த பத்திரிக்கையை பொறுப்பில்லாமல் நாசமாக்கி விட்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளிட்ட அத்தனை எண்ணங்களும் கேத்தரீன் மனதில் ஓடுவதை நம்மால் உணர முடிகிறது.
கேத்தரீன் பாத்திரத்தில் நடித்திருந்த மெரில் ஸ்ட்ரீப், அவர் மனக் குழப்பத்தை அத்தனை துல்லியமாக தன் நடிப்பால் உணர்த்தியிருந்தார்.
அச்சகத்தில், அச்சடிக்க செல்லலாம் என்ற உத்தரவுக்காக தொலைபேசியின் அருகே அத்தனை பணியாளர்களும் காத்திருக்கிறார்கள். காட்சிகள் அச்சகம், அச்சு கோர்ப்பது, கேத்தரினுடனான கூட்டம் என்று மாறி மாறி, பின்னணி இசையோடு பரபரப்பை ஏற்படுத்துகிறது.
நாற்காலியில் கையை வைத்து யோசிக்கும் கேத்தரீன், இறுதியாக, தன் சம்மதத்தை தெரிவிக்கிறார். அடுத்தவர்கள் ஆட்சேபிக்கும் முன்பாக, கேத்தரீனே பேசுகிறார். இந்த பத்திரிக்கையை யாரோ ஒருவர் தொடங்கியிருந்தாலும் அது அவர் மகனுக்கு வந்தது. அவர் இறந்த பிறகு அவர் மனைவியான எனக்கு வந்தது. இந்த பத்திரிக்கை என்னுடையது என்பதை மறந்து விடாதீர்கள். என் தூக்கத்தை கெடுக்காதீர்கள். நான் தூங்க வேண்டும் என்று கூறி விட்டு செல்கிறார்.
செய்தித் தாள் வேக வேகமாக அச்சடிக்கப்பட்டு வருகிறது. முதல் காப்பியை எடுதது ஆசிரியர் ப்ராட்லீயும் மற்றவர்களும் பார்க்கிறார்கள். அவர்கள் அனைவரின் முகத்திலும் பெருமிதமும், திருப்தியும்.
மறுநாள் வெள்ளை மாளிகை ஆடிப் போகிறது. தலைமை வழக்கறிஞர் ஆசிரியர் ப்ராட்லீயை அழைக்கிறார். நீங்கள் செய்துள்ள காரியம் தேசத் துரோகமாகும். இதனால் பெரும் ஆபத்து விளைந்துள்ளது. அடுத்த கட்டுரையை பதிப்பிக்காமல் நிறுத்த வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்ய நேரிடும் என்கிறார். அதற்கு ப்ராட்லீ, மிகுந்த மரியாதையோடு உங்கள் கோரிக்கையை நிராகரிக்கிறேன் என்கிறார்.
அரசு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறுவதற்கு முன், நாமே நீதிமன்றத்தை அணுகலாம் என்று வாஷிங்டன் போஸ்ட் முடிவெடுக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இதற்கு நடுவே அரசு தீவிரமாக விசாரணை நடத்திய நிலையில், ஆவணங்களை வெளியிட்ட டேனியல் எல்ஸ்பர்க், தானாக காவல்துறையிடம் சரணடைகிறார். அவர் மீது வழக்கு விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் எல்ஸ்பர்குக்கு 115 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.
உச்சநீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து, பத்திரிக்கை சுதந்திரமே பிரதானம். பத்திரிக்கைகள் ஆவணங்களை வெளியிட்டது தவறில்லை என்று தீர்ப்பளிக்கிறது.
இந்த சம்பவங்கள்தான், மிக மிக நேர்த்தியாக, உலகின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ஸ்டீவன் ஸ்பீல்பர்கால் இயக்கப்பட்டு, மெரில் ஸ்ட்ரீப் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியராக டாம் ஹேங்க்ஸ் நடிப்பில் வெளியாகியுள்ளது.
ஸ்பீல்பர்க் திரைப்படத்தின் நேர்த்தி மற்றும் நுணுக்கங்களை விரிவாகக் கூற வேண்டியதில்லை.
இந்த கதையில் கதாநாயகர்கள் யாரென்று வரிசைப்படுத்தினால் முதலிடம், நிச்சயமாக டானியல் எல்ஸ்பர்குக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும். அவர் அந்த ஆயிரக்கணக்கான ஆவணங்களை ரகசியமாக, உயிரைப் பணயம் வைத்து நகலெடுத்திருக்காவிட்டால், நியூயார்க் டைம்ஸோ, வாஷிங்டன் போஸ்டோ, எந்த செய்தியையும் வெளியிட்டிருக்க முடியாது. நாடு மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர் சிறைக்கு செல்லவும் தயங்காமல் ஆவணங்களை திருடி, ஊடகங்களுக்கு அளித்தார். தன்னை காவல்துறையிடம் ஒப்படைத்துக் கொண்டபோது எல்ஸ்பர்க் என்ன கூறினார் தெரியுமா ? “ஒரு பொறுப்பான அமெரிக்க குடிமகனாக, என்னால் இந்த ரகசியங்களை அமெரிக்க மக்களிடமிருந்து மறைத்து வைக்க முடியாது. எனக்கு ஆபத்து நேரும் என்று தெரிந்தே நான் இதை செய்கிறேன். இதற்கான விளைவுகளை நான் சந்திக்கத் தயாராக உள்ளேன்“ என்றார்.
அவரைப் போன்ற கதாநாயகர்கள், அமேரிக்க உளவு கேபிள்களை திருடி விக்கிலீக்ஸை வெளியிட்டு, இன்று வரை சிறையில் உள்ள ப்ராட்லி எட்வர்ட் மேனிங், அதை வெளியிட்டு அமெரிக்க அரசை நிலைகுலைய செய்த, ஜுலியன் அசாஞ், அமெரிக்கா அனைவரையும் உளவு பார்ப்பதற்னாக ஆதாரங்களை வெளியிட்டு, கைதுக்கு பயந்து தப்பியோடி, ரஷ்யாவில் குடியிருக்கும் எட்வர்ட் ஸ்னோடன் போன்றவர்கள் வரலாறு நெடுக கலகக்குரல்களை எழுப்பிக் கொண்டுதான் இருப்பார்கள். தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் மக்களுக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்த இவர்கள்தான் முதல் கதாநாயகர்கள். அந்த வகையில் இந்த கதையில் டேனியல் எல்ஸ்பர்க்தான் முதல் கதாநாயகன்.
இரண்டாவது இடம், வாஷிங்டன் போஸ்ட் அதிபர் கேத்தரீன் க்ரஹாமுக்கு. தான் கைது செய்யப்படலாம், தன் பத்திரிக்கை மூடப்படலாம், தனது வசதியான வாழ்வு பறிக்கப்படலாம், தனது சக்தி வாய்ந்த நண்பர்கள் தன்னை விட்டு விலகலாம் என்பதைப் பற்றி கவலைப்படாமல், துணிச்சலாக செய்தியை வெளியிட முடிவெடுத்ததற்காக கேத்தரீனுக்கு இரண்டாவது இடம்.
ஒரு பத்திரிக்கையாளன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகவே வாழ்ந்து காட்டிய, வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் பென் ப்ராட்லிக்கு மூன்றாவது இடம்.
இந்த படத்தை பார்த்து முடித்தபோது, நம்மையறியாமல், தற்போது நம் நாட்டில் உள்ள பத்திரிக்கைகளின் நிலைமையையும், பத்திரிக்கை சுதந்திரத்தையும், ஒப்பிடுவதை தவிர்க்க முடியவில்லை. மதவெறி வன்முறைகளை ஆவணப்படுத்திய இந்துஸ்தான் டைம்ஸ் எடிட்டரை பதவி நீக்கம் செய்வதும், பத்திரிக்கையாளர்களையே சந்திக்காமல் ஆட்சி நடத்துவதும், ஊடகங்களை மிரட்டுவதும், எதிர்த்து செய்தி வெளியிடும் என்டிடிவி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்வதும் என்று ஒரு பாசிஸ்டின் பிடியில் நாடும் பத்திரிக்கைகளும் சிக்கிக் கொண்டு உள்ளன.
இந்தியாவில், வாஷிங்டன் போஸ்டின் உரிமையாளர் கேத்தரீன் போலவே, அதிகாரத்தையும், அடக்குமுறையையும் எதிர்த்து நின்ற ஒரே ஒரு பத்திரிக்கை அதிபர் யாரென்றால் இந்தியன் எக்ஸ்பிரஸ் உரிமையாளர் ராம்நாத் கோயங்காதான். நெருக்கடி நிலை காலத்தில், இந்திரா காந்தி கடுமையான நெருக்கடி கொடுத்தபோதும், துணிச்சலாக நெருக்கடி கால கொடுமைகளை அம்பலப்படுத்தினார் கோயங்கா. அதன் பிறகு, ராஜீவ் காலத்தில் திருபாய் அம்பானியின் மோசடிகளைப் பற்றி எழுதியதற்காக, மின்சாரம் உள்ளிட்ட அனைத்தும் துண்டிக்கப்பட்டபோதும், தொடர்ந்து எழுதினார் கோயங்கா. எதற்கும் அசரவில்லை.
அந்த எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வரும் நாளிதழ்தான் தினமணி. அதில் ஆண்டாளைப் பற்றிய ஒரு மேலை நாட்டு ஆராய்ச்சியாளரின் கட்டுரையை மேற்கோள் காட்டிய ஒரே காரணத்துக்காக, தினமணியின் மேடையில் பேசிய ஒரு கவிஞரை, ஒரு பிஜேபி தலைவன், தாசியின் மகன் என்கிறான். வீதிதோறும் கொடும்பாவியை கொளுத்துகிறார்கள். போராட்டம் நடத்துகிறார்கள். அந்தக் கவிஞனும் வருத்தம் தெரிவித்தான். தினமணியும் பெரிய அளவில் வருத்தம் தெரிவித்தது.
எதிர்ப்பு தெரிவித்த வாசகர் கடிதங்கள் முழுமையாக பிரசுரிக்கப்பட்டன. இதற்கு பின்னரும் வேலையில்லாத பண்டாரங்கள் சேர்ந்து போராட்டம் நடத்தினார்கள். அந்த பண்டாரங்களின் பின்னணியில், நாட்டின் பிரதமர் இருக்கிறாரோ… இருப்பாரோ என்று அஞ்சி, கோயங்காவின் வாரிசு, சோந்தாலியா, தன் ஆசிரியரை மன்னிப்பு கேட்கச் சொல்லி திருவில்லிப்புதூர் அனுப்புகிறார்.
பாரதியின் வரிகளை ஓயாமல் பேசும் அந்த ஆசிரியர், திமிர்ந்த ஞானச் செறுக்கோடு வாழ்வேன், வேடிக்கை மனிதரைப் போல வீழ மாட்டேன் என்று கூறாமல், ஒரு திமிரெடுத்த பண்டாரத்தின் காலில் வெட்கமே இல்லாமல் வீழ்ந்து, தன் வேலையை காப்பாற்றிக் கொள்கிறார்.
இதுதான் இன்றைய பத்திரிக்கை சுதந்திரத்தின் நிலை. இந்த நிலையில் தி போஸ்ட் படம், கண் முன் கனவாகத்தான் விரிந்தது.
அசாஞ் கற்பழிப்பு குற்றம் ஸ்விடனில், அமெரிக்காவில் இல்லை. டேனியல் எல்ஸ்பெர்க் காலத்தில் ரகசியங்களை கத்தை கத்தையா பேப்பர் காப்பியில் வெளியிட வேண்டும். எட்வர்ட் ஸ்னோடனோ அத்தனையும் pen drive ல்தான் வைத்திருந்தான். இந்த இண்டெர்னெட் யுகத்தில் இருந்த இடத்திலிருந்தே டெர்ர பைட்டில் அப்லோட் செய்திருக்க முடியும்.
அமெரிக்கா அடக்குமுறை நாடாம், இவன் தஞ்சமடைந்திருக்கும் ரஷ்யா சுதந்திர பூங்காவாம். நேற்று கூட புட்டினிக்கு எதிர்கட்சியை சேர்ந்த Alexei Navalny ஐ காரணமின்றி கைது செய்து விட்டார்கள். உங்களை மாதிரி ரஷ்ய, சீன ஜால்ரா இந்திய இடது சாரிகளுக்கு மற்றவர்கள் எல்லமே CIA agentகள் தான். நீங்க என்ன KGB கூலியா?
ஸ்வீடன் எந்த நிர்பந்தத்தில் அந்த வழக்கை பதிவு செய்தது என்பது உலகத்திற்க்கே தெரியும் ,அமெரிக்காவை கண்டித்தால் உங்களைப் போன்ற அம்பிகளுக்கு ஏன் பொத்துக் கொண்டு வருகிறது ….அவர் ஸ்வீடனில் இருந்திருந்தால் கைது செய்யப்பட்டு அமெரிக்கா விற்கே அனுப்பி வைக்கப்பட்டிருப்பார் என்பது சிறு குழந்தைகளும் அறியும் …
தம்பி அஹமத், நான் “அம்பி” இல்லை. மிக சாதாரண antyaja (last born)
கற்பழிப்பு புகார் கொடுத்தது ஸ்வீடனில் உள்ள ஒரு பெண். ஒரு வேளை அவளும் நீங்கள் சொல்லும் CIA ஏஜெண்ட்டாக இருப்பாளோ!! ISISI தலைவன் Abu Bakr al Baghdadi கூடத்தான் அமெரிக்காவை திட்டுகிறான். அமெரிக்காவை திட்டுகிறவனெல்லாம் யோக்கியனல்ல.
என் வாதம் அமெரிக்காவை ஆதரிப்பதில்லை. அஸாஞ், ஸ்னோடன், மேன்னிங் போன்றவர்களை கதாநாயகர்களாக கருதகூடாது என்பதே. இதுவே இவர்களை போன்றவர்கள் இந்தியாவுக்கு எதிராக இப்படி செயல்பாட்டால் நாம் அவர்களை ஹீரோக்கள் என்று சொல்லுவோமா, என்பதே என் கேள்வி?
Incidentally, Manning has filed for Senate Run. That is America
“இதுவே இவர்களை போன்றவர்கள் இந்தியாவுக்கு எதிராக இப்படி செயல்பாட்டால் நாம் அவர்களை ஹீரோக்கள் என்று சொல்லுவோமா, என்பதே என் கேள்வி?”
ஐயா நாட்டு மக்களின் நலம் தான் அரசாங்கங்களின் தலையாய கடமை ,அதிலிருந்து நழுவும் ,அல்லது மக்களுக்கு விரோதமாக நடக்கும் ,அல்லது உண்மையை மக்களிடம் மறைத்து ,தங்கள் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சி செய்யும் யாராக இருந்தாலும் ,அது இந்திய அரசாக இருந்தாலும் ,குற்றம் குற்றமே ,அரசில் வெளிப்படைத் தன்மை வேண்டும் ,அரசின் நடவடிக்கைகளை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது ,ஓர் அரசு மக்களிடம் மறைக்கும் உண்மையை மக்கள் நலன் கருதி வெளியிடுபவர்களை ஹீரோ க்களாக பார்க்காமல் வேறு எப்படி பார்ப்பது , மக்களின் உழைப்பை சுரண்டி
அரசுகள் வாங்கும் வரிப்பணத்தை மக்கள் நலனுக்கு செலவழிக்காமல் ,தேவையற்ற போர்களை உருவாக்கி ஆயுத வியாபாரம் செய்யும் அரசுகள் ….அது இந்தியாவாக இருந்தாலும் சரி …தவறுதான் ….அப்படி ஒரு நிலையில் ,ஊழல்களை ,உண்மைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக இந்தியாவிற்கு எதிராக ஸ்நோடன் ,அசாஞ்சே ,வெளியிட்டு இருந்தாலும் அவர்கள் போற்றப்படவேண்டிய ஹீரோக்கள்தான் ,
நல்லக் குடிமக்களை உருவாக்க உதவும் இது போன்றக் கட்டுரைகள்.மக்கள் இது போன்றக் கட்டுரைகளைப் படித்து உந்தப் பட வேண்டும்.
டேனியல் எல்ஸ்பர்குடன் எட்வர்ட் ஸ்னோடன், ஜூலியன் அசாஞ்சை ஒப்பிடுவது ஆப்பிள் பழத்துடன் அழுகிய முட்டையை ஒப்பிடுவது போல.
சரியோ, தவறோ, போலிஸில் தன்னை ஒப்படைத்து கொண்டு சட்டத்தை எதிர்கோள்ள எல்ஸ்பர்க் தயாராக இருந்தார். ஆனால், தனி மனிதன் சுதந்திரத்திற்காகவும், அமெரிக்க
அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்தும் போராடுவதாகவும் தன்னை பற்றி சொல்லிகொள்ளும் ஸ்னோடன், சட்டத்துக்கு பயந்து ஹாங்காங்கில் ஒடி ஒளிந்து கொண்டு
பிரிட்டனை சேர்ந்த இடது சாரி பத்திரிகை ”தி கார்டியன்” மூலமாக ரகசியங்களை வெளியிட்டு, பிறகு கொஞ்சமும் தனி மனிதன் சுதந்திரம் இல்லாத, தனது அதிகார
துஷ்பிரயோகத்தின் மூலமே ஆட்சி செய்து கொண்டிருக்கும் புட்டின் என்ற சர்வாதிகாரியின் பிடியில் இருக்கும் ரஷ்யாவில் தஞ்சமடைந்து, அங்கிருந்து கொண்டு இந்தியா
போன்ற நாடுகளின் பத்திரிகை சுதந்திரத்தை பற்றி டிவிட்டர் விமர்சனம் கொண்டும் இருக்கிறான். இவனா ஹீரோ?? இது போல் இந்திய அதிகாரி ஒருவன், அரசாங்க
ரகசியங்களுடன் பாகிஸ்தானில் தஞ்சமடைந்து அங்கிருந்து கொண்டு இந்தியாவை காப்பாற்றவே இப்படி செய்தேன் என்று சொன்னால் அவனை “சவுக்கு” ஹீரோ என்று
சொல்லுமா இல்லை அமெரிக்காவை காட்டி கொடுப்பவர்கள் மட்டும்தான் சவுக்கின் பார்வையில் ஹீரோக்களா?
அமெரிக்க அரசாங்கம் செய்வதாக ஸ்னோடன் சொன்ன அதே குற்றங்களை தங்கள் அரசாங்கங்களும் செய்வதாக பிறகு ஜெர்மன், பிரிட்டன், பிரான்ஸ் பத்திரிகைகள்
எழுதினவே. சவுக்குக்கும், ஸ்னோடனுக்கும் அமெரிக்கா மட்டும்தான் இளிச்ச வாயனா?
”சவுக்கின்” அடுத்த ஹீரோ ஜூலியன் அசாஞ். இவன் ஸ்விடனில் ஒரு கற்பழிப்பு வழக்கிலிருந்து தப்பித்து இங்கிலாந்துக்கு ஓடி வந்தவன். இவன் ஒரு மன நோயாளி
(narcissist), விளம்பர பிரியன், என்று “THE FIFTH ESTATE” படம் பார்த்தாலே தெரியும். இந்த “ஹீரோ” தைரியமாக ஸ்வீடன் சென்று தன் மீது இருக்கும் கற்பழிப்பு வழக்கை
சந்திப்பதுதானே? ஏன் இடது சாரி ஆட்சி புரியும் இக்விடோர் நாட்டு தூதரகத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறான். இவன் எப்பவாது ரஷ்ய அரசாங்கத்து ரகசியம் அல்லது சீன
அரசாங்கத்து ரகசியம் ஏதாவது ஒன்றாவது வெளியிட்டிருக்கிறானா? இல்லை.
Chelsea (Bradley) Manning போன்றவர்கள் வக்கிரம புத்தியாலும், விளம்பரத்துக்காகவும் ரகசியங்களை வெளியிடுகிறார்கள். அவர்கள் அதிர்ஷ்டம் மேற்கத்திய நாடுகளில்
வசிக்கிறார்கள். மற்ற நாடுகளாக இருந்தால் இன்னேரம் இருக்க மாட்டார்கள். மக்களே அடித்து கொன்றிருப்பார்கள்.
சவுக்குக்கு அமெரிக்காவை காட்டி கொடுத்தால் எட்டப்பனும் வீரபாண்டிய கட்டபொம்மனாகி விடுவான். அவ்வளவு ”இடது” பாசம்.
யார் நீங்கள் ? ஏன் இத்தனை அமெரிக்க பாசம் ? டேனியல் எல்ச்பர்க் எடுத்த அதே துணிச்சலான முடிவைத்தான் எட்வர்ட் ஸ்னோடன், ஜூலியன் அசாஞ் இருவரும் எடுத்திருக்கிறார்கள் ,அவர் கைதாக தயாராக இருந்தார் ,இவர்கள் அரசின் அடக்குமுறையில் சிக்கினால் மேலும் விவரங்களை வெளியிட முடியாது என்பதால் ,அங்கிருந்து வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் அடைகிறார்கள் ,டேனியல் எல்ச்பர்க் அனைத்து ஆவணங்களையும் வெளியிட்டு விட்டதால் சரணடைந்தார் ,இவர்களுக்கு வெளியிட வேண்டிய ஆவணங்கள் இன்னும் இருந்ததால் சரணடையவில்லை ,
வெளிப்படையாக நடக்க வேண்டிய ஜனநாயக அரசுகள் சிகப்பு நாடா முறையை கடைபிடிப்பதால் ,மக்களின் நலன் கருதி எட்வர்ட் ஸ்னோடன், ஜூலியன் அசாஞ் எடுத்த முடிவை ,அவர்கள் கற்பழிப்பு குற்றவாளிகள் ,விளம்பரப் பிரியர்கள் ,என அமெரிக்க அரசு வாந்தி எடுத்த பொய்யான குற்ற சாட்டுக்களை நீங்களும் கூறுவதை பார்த்தால் நீங்கள் CIA உளவாளியோ என்ற சந்தேகம் வருகிறது
அஹமத்துக்கு அமெரிக்கா மேலுள்ள வெறுப்பு புரிகிறது. எது உண்மை எது சரித்திர வாந்தி என்று தெரியும் அளவுக்கு தெளிவு இல்லாததால்தானே இத்தனை jihadists கிளம்பியிருக்கிறிர்கள்
அசாஞ் கற்பழிப்பு குற்றம் ஸ்விடனில், அமெரிக்காவில் இல்லை. டேனியல் எல்ஸ்பெர்க் காலத்தில் ரகசியங்களை கத்தை கத்தையா பேப்பர் காப்பியில் வெளியிட வேண்டும். எட்வர்ட் ஸ்னோடனோ அத்தனையும் pen drive ல்தான் வைத்திருந்தான். இந்த இண்டெர்னெட் யுகத்தில் இருந்த இடத்திலிருந்தே டெர்ர பைட்டில் அப்லோட் செய்திருக்க முடியும்.
அமெரிக்கா அடக்குமுறை நாடாம், இவன் தஞ்சமடைந்திருக்கும் ரஷ்யா சுதந்திர பூங்காவாம். நேற்று கூட புட்டினிக்கு எதிர்கட்சியை சேர்ந்த Alexei Navalny ஐ காரணமின்றி கைது செய்து விட்டார்கள். உங்களை மாதிரி ரஷ்ய, சீன ஜால்ரா இந்திய இடது சாரிகளுக்கு மற்றவர்கள் எல்லமே CIA agentகள் தான். நீங்க என்ன KGB கூலியா?
சிறப்பான விமர்சனம். நான் எழுத நேரம் வாய்க்கவில்லை. யாராவது எழுத வேண்டும் என விரும்பினேன். ஒரு தமிழ் நாளிதழ் விமர்சனம் வாசித்தபின் ஏக்கமே உண்டானது. குறுகிய காலத்தில் ஸ்பீல்பர்க் இதை முடித்தது சாதனை. மெரில் ஸ்ட்ரீப் யெஸ் சொல்லும் இடம், அதை எடுக்க அவர் எத்தனை சிரமப்பட்டிருப்பார் என்று டாம் ஹேங்சுக்கு மனைவி உணர்த்தும் காட்சி, பெட்டிகளில் என்ன என்ற ஹோஸ்டஸ் கேள்விக்கு அரசாங்க ரகசியங்கள் என்று பாப் ஓடன்கிர்க் பதில் சொல்லும் சீன்.. என்று டைரக்டர் டச் நிறைய. நீங்கள் எல்லாரும் கண்டித்த ட்ரம்ப் அரசை பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லையே என்று கேட்கிறார்கள். இதுதான் என் பதில் என்றார். Magnificent. படத்தோடு உங்கள் விமர்சனம் நின்றிருந்தால் இன்னும் நிறைவாக இருந்திருக்க கூடும். சவுக்கு வாசகர்கள் விழிப்பானவர்கள். Spoon feeding தேவையில்லை. படத்தில் எந்த பாத்திரமும் சோடை இல்லை. கச்சிதமான நடிப்பு. சாரா பால்சன் உட்பட. 1970 களின் போஸ்ட், டைம்ஸ் நியூஸ்ரூம் சூழலும் அச்சக அவசரங்களும் என் ஆரம்பகால வேலை வாசங்களை மறுபடி முகர வைத்தன. தேசிய கீதம் இசைக்காமல் விட்டிருந்தாலும் நின்று சல்யூட் அடித்து விட்டுதான் தியேட்டரை விட்டு வந்திருப்பேன். நன்றி சங்கர்.
NDTV oru kavalamaana fraudoda channel who cheated the govt and on that MONEY basis he established his/ her empire. SANDHUKKULLESINDHU paada vendaam. vaidhyanathan Karunanithi kaalai semmozhi maanaattin podhu nakkiya podhe mariyathai izhanduvittar. Vairamuthu thevai illamal andha reference thandirukkirar . ADHU onrum MELAI naattu reference illai. indha oor pakki sonnathu. Mylapore Archbishopp kiitte HINDU matham patri kevalama ezhuthina papanukku samam. MARRAPADi I liked the other things on Washington POST….
I really appreciate your talent by how hiding inner hindu hate and publish article. . Boss , did u really know what would be reaction if any case of Muslim or Christian. Post 70 years HIndu Religion was very mcuh insulted . Hindus had great patient by tolerating such intolerable insults. If going forward if any one insult then all are doubt over manhood. you have to understand this reaction .
Wonderful work done by you Mr.Shankar the way you collect data with evidence and critically analyze it, unimaginable, Hats off to you and your team.
மிக அருமையான ஆழமான சிந்திக்க தூண்டும் கட்டுரை. எப்படி மக்களுக்கு உண்மையான தகவல்களை அறியும் உரிமை உள்ளது, அதை பொறுப்புள்ள பத்திரிகைகள் தர கடமைப்பட்டுள்ளது என்பதற்கு இது ஒரு முண்உதரனமாகும். இக்கட்டுரையின் ஆசிரியர் தற்பொழுது தமிழகத்தில் நடைபெறும் கருத்துரிமை மீறல்களுடன் ஒப்பிட்டு, நன்றாக இக்கட்டுரையை படைத்துள்ளார். மிக்க நன்றி . ஒரு சிறு திருத்தத்தை தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிரேன். கட்டுரையில் இருபதுபோல் “அமேரிக்க உளவு கேபிள்களை திருடி விக்கிலீக்ஸை வெளியிட்டு, இன்று வரை சிறையில் உள்ள ப்ராட்லி எட்வர்ட் மேனிங், அதை வெளியிட்டு அமெரிக்க அரசை நிலைகுலைய செய்த, ஜுலியன் அசாஞ், ………………” ப்ராட்லி எட்வர்ட் மேனிங், உலக மக்களின் தொடர்ந்த மேனிங்ய் விடுதலைக்கான கோரிகையை, அமரிக்க அரசு ஏற்று , அவரை. சில மாதங்களுக்கு முன் விடுதலை செய்தது எனும் நல்ல செய்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
Edward manning(now goes by Chelsea manning after gender surgery) released from prison last year and is currently running for Senate seats from Maryland district
Wonderful review.
Just finished reading your book. ஊழல் உளவு அரசியல். டேனியல் எல்ஸ்பெர்க் ஆக கண்ணுக்கு சவுக்கு சங்கர் தெரிகிறார்.
Dr. P.Muthiah.
If a question is asked, “Which institution deriving constitutional powers in India is performing its duty as per the law both in spirit and letter?”, the answer will be easy – no institution is anywhere close to performing its constitutional duties.
Take the legal and judicial system, consider the political system with its MLAs and ministers, or any other system, including pressmen – all are filled with unscrupulous, selfish fellows who do not respect the laws of the land, swindle from common man.
True there may be a few outliers in each system who are honest and try to live honorably by doing their job and earning their rightful wages. But they are very few and far in between
General public are the root cause.
See if Mr. Dhinakaran can win the by-election after all the negative news about him and his family, what are we to talk about?
The leaders of judicial system have been known for the last 30 years or so are followers of ruling politicians.