500 ரூபாய்க்கு ஆதார் தனி நபர் விபரங்களை பெற முடியும் என tribune பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது Source. ஹாக்கர்கள் மட்டும் இல்லாமல் அவ்வப்போது அரசாங்க இணையத்தளங்களும் பெருமளவு ஆதார் தனி நபர் விபரங்களை தெரிந்தோ தெரியாமலோ வெளியிட்டு விடுகிறது. இது வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய போதும், எளிய மக்களுக்கு அதனால் உண்டாகும் பாதிப்பு என்ன என்பதை உணரவில்லை. இதன் ஆபத்துக்களை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
முடிந்த அளவு தொழில்நுட்ப வார்த்தைகளை தவிர்த்து இந்த கட்டுரையை எழுத முற்படுகிறேன்.
ஆதார் உடன் இணைக்கப்படும் தனி நபர் விபரங்கள் இரண்டு வகைப்படும் டெமோகிராபி ( பெயர், புகைப்படம், பால், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ) , பயோமெட்ரிக் (கைரேகை, கருவிழி உடற்கூறு). இதில் உங்களை சிக்கலில் தள்ள வெறும் டெமோகிராபி விபரங்கள் மட்டும் கசிந்தால் போதும்.
ஆதார் எண்ணை பல்வேறு சேவைகளுடன் இணைக்கும் படி தினம்தோறும் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறோம், ஒரு ஒரு சேவைக்கும் வேறு வேறு விதமான விதிகள் என்று முற்றிலும் குழப்பமான சூழ்நிலை, இணைக்கவில்லை என்றால் நாம் பெற்றுக் கொண்டிருக்கும் பல சேவைகள் துண்டிக்கப்பட்டுவிடும் அபாயம் என நன்கு படித்தவர்களே தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில் இது பொருளாதார குற்றத்தில் ஈடுபடுவோர்க்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. இதன் தீவிரத்தை அறிய ஒரு சில உதாரணங்களை பார்ப்போம்.
ஸ்மார்ட் போன் வசதி இல்லாதோர் ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்க USSD வசதி ஒன்று உள்ளது, *99*99*1# என்ற எண்ணை பயன்படுத்தி ஒருவரின் ஆதார் எண்ணை கொடுத்தால் அந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கியின் பெயர் தெரிந்துகொள்ள முடியும். இந்த விபரத்தை வங்கிக்கணக்குடன் இணைத்த மொபைல் எண்ணில் இருந்துதான் பெறமுடியும் என்ற அவசியம் இல்லை. அதனால் யார் வேண்டுமானாலும் யாருடைய வங்கிக்கணக்கு வைத்திருக்கும் வங்கியை கண்டுபிடித்து விடமுடியும்.
இதை வைத்துக்கொண்டு உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது, அழைக்கும் நபர் தாம் ஒரு குறிப்பிட்ட வங்கியில் இருந்து பேசுவதாகவும் உங்கள் ஆதார் எண் இணைப்பதில் சிக்கல் இருப்பதால் மீண்டும் இணைக்க உதவுமாறும் கூறுகிறார். அவர் உங்கள் வங்கியின் பெயர், ஆதார் எண், பிறந்த தேதி, முகவரி மிக சரியாக கூறுகிறார். இது அவரின் மேல் உள்ள நம்பிக்கையை கூட்டுகிறது, மேலும் உங்கள் டெபிட் கார்டு எண்ணில் உள்ள 16 எண்ணில் முதல் 4 எண்ணை உறுதிப்படுத்துகிறார் ( மிக எளிது, வங்கி அளிக்கும் 16 இலக்க எண் ஒரு குறிப்பிட்ட தொடரில் இருக்கும், பெரும்பாலும் கடைசி 8-4 எண் மட்டுமே வேறுபடும் ).
இத்தனை தனிநபர் விபரங்களை துல்லியமாக கூறியபின், மீதம் உள்ள 12 எண்ணெயும், CVV எண்ணையும், மொபைல் எண்ணிற்கு வந்த OTP எண்ணை பகிரும் படி கூறுவார், அதை பகிர்ந்த மறுநொடி உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் வேறு வங்கிக்கணக்கிற்கு பரிமாற்ற பட்டிருக்கும். சீனியர் சிட்டிசன், பெண்களை குறிவைத்து இந்த வடிவ தாக்குதல் நடைபெறும்.
இதை போல் நூதன முறையை பயன்படுத்தி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 70 வயது பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 90 ஆயிரம் ரூபாய் திருடி அதை அறிந்த அவர் மாரடைப்பால் உயிர் இழந்தார். Source
Sim-Swap
ஒரு நபருக்கு அழைப்பு வருகிறது, தான் ஒரு டெலிகாம் கம்பெனியில் இருந்து தொடர்பு கொள்வதாகவும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வில்லை என்றால் சேவை துண்டிக்கப்படும் என்று கூறுகிறார். சேவையை தொடர சிம் கார்டு எண்ணை அந்த கம்பெனியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு அனுப்பும் படி கூறுவார். துளி சந்தேகம் ஏற்படாது ஏனெனில் நீங்கள் அனுப்பப்போவது வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு, அனுப்பிய மறு நிமிடம் உங்கள் சிம் டிஆக்டிவேட் செய்யப்பட்டு விடும். நீங்கள் இன்னும் சிறிது நேரத்தில் சரியாகி விடும் என நம்பி காத்திருக்கும் வேளை உங்கள் வங்கி கணக்கு முதல் facebook கணக்கு வரை சூறையாட பட்டிருக்கும்.
உண்மையில் என்ன நடக்கிறது என்றால், அந்த நபர் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்று சிம் கார்டு தொலைந்து விட்டது என்றும் வேறு சிம் கார்டு வேண்டும் என்றும் கூறுவார். புது சிம் கார்டு பெற பழைய சிம் எண்ணை வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு அனுப்பும் படி கூறுவார். அனுப்பியவுடன் பழைய சிம் கார்டை பிளாக் செய்து விட்டு புது சிம் கார்டு விநியோகிக்க படும்.
இப்பொழுது வாடிக்கையாளரின் ஆதார் தகவல்கள் மற்றும் அதில் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுடைய சிம் இரண்டையும் வைத்து கொண்டு அந்த நபரின் வங்கி கணக்கை UPI/BHIM ஆப் ஹேக் செய்யலாம் Source
கூகிள், facebook போன்ற சமுக வலைதள முகவரியை ஹேக் செய்ய மேல் சொன்ன முறைப்படி சிம் கார்டும், தனிநபர் தகவல்களே போதும், forget password போட்டு உங்கள் கணக்கை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட முடியும்.
இது வாடிக்கையாளரை ஏமாற்ற மட்டும் அல்ல, வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகளையும் ஏமாற்றி மேலும் உங்களை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள முடியும். பெருவாரியான வங்கிகள் உங்கள் வங்கி எண், பிறந்த தேதி , தாயின் பெயரை வைத்து பேங்க் பாலன்ஸ், கார்டு பிளாக், முகவரி மாற்றம் போன்ற மற்ற சேவைகளை எளிதில் செய்து அதன் மூலம் வேறு திருத்தங்களை நிகழ்த்த முடியும்.
இது போன்ற ஏமாற்று வேலை முன்பு இல்லையா என்றால் இருந்தது ஆனால் ஒரு தனி நபர் பற்றிய அனைத்து விபரங்களையும் அடைய மெனக்கெட வேண்டி இருந்தது. சேவை இணைப்பு மூலம் ஒரு சிறிய தவறு ஒரு தனி நபரின் மொத்த அடையாளத்தையும் அம்பலப்படுத்தி விடுகிறது .
காஸ் மானியம்
ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைத்த உடன் உங்களுக்கான கேஸ் மானியம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஒருசிலருக்கு தங்கள் மானியம் வேறு வேறு கணக்கில் டெபாசிட் செய்யப்படுவதை உணரலாம், நாம் காஸ் ஏஜென்டிடம் கொடுத்த வங்கி கணக்கு வேறு அப்படி இருக்கையில் இது எப்படி சாத்தியம்? ஆதார் பெமென்ட் பிரிட்ஜ் (APB) என்பதை பயன்படுத்தி தான் உங்கள் மானியம் உங்கள் வங்கி கணக்கிற்கு வருகிறது.
உதாரணத்திற்கு நீங்கள் ICICI வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்கள் அதில் உங்கள் காஸ் மானியம் வருகிறது. இப்பொழுது புதிதாக ஒரு வங்கி கணக்கு தொடர்கறீர்கள் அல்லது மற்றொரு வங்கி கணக்கில் உங்கள் ஆதாரை இணைக்கிறீர்கள். அப்படி செய்யும் பொழுது அந்த வங்கி APB யில் உங்கள் புதிய வங்கி கணக்கை பதிவு செய்கிறது. கடைசியாக பதிவு செய்யப்படும் வங்கி கணக்கிற்கே உங்கள் மானியம் வந்து சேரும் . இது பெரும்பாலும் மக்களுக்கு தெரியாது மேலும் எந்த வங்கி கணக்கில் மானியம் வாங்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர வங்கி இல்லை.
இந்த ஓட்டையை பயன்படுத்தி ஏர்டெல் நிறுவனம் சுமார் 190 கோடி ரூபாய் மானியத்தை தாங்கள் புதிதாக உருவாக்கிய ஏர்டெல் பெமென்ட் பேங்க் மூலம் பயனடைந்தனர். நீங்கள் உங்கள் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க சென்றிருப்பீர்கள், அவர்கள் அத்துடன் ஏர்டெல் வங்கி கணக்கை உங்களுக்கு தெரியாமல் துடங்கி APB அப்டேட் செய்து மானியத்தை பெற்றிருப்பார்கள். நீங்கள் மானியம் வரவில்லை என்று கவலைப்பட்டிருப்பீர்கள் அல்லது அதை கவனிக்காமல் கூட இருப்பீர்கள். Source. திருட்டுத்தனமாக, தனியாக வங்கிக் கணக்கை தொடங்கி மானியங்களை அபகரித்த விபரம் அம்பலமானதும், ஏர்டெல் நிறுவனம், 190 கோடி ரூபாயை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கே திருப்பி அளிப்பதாக உறுதி செய்தது. இணைப்பு. நம் கண் முன்னாலேயே, வெளிப்படையாக, எளிமையாக ஆதாரை பயன்படுத்தி நடத்தப்பட்ட கொள்ளை இது. இது ஒரு சாதாரண உதாரம் மட்டுமே. ஒரு பெரிய நிறுவனமே, இது போன்ற மோசடிகளில் பெரிய அளவில் ஈடுபடுகிறதென்றால், திருட்டுத்தனத்தையே முழு நேரத் தொழிலாக வைத்திருக்கும் தனி நபர்கள் என்ன செய்வார்கள் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
போலி சிம் கார்டு
சமீபத்தில் ஒரு பெண் தன் மொபைல் என்னுடன் ஆதாரை இணைக்க சென்றிருக்கிறார் பார்த்தால் அவர் ஆதார் என்னுடன் ஏற்கனவே 9 மொபைல் எண் இணைக்க பட்டிருப்பது தெரிய வருகிறது. அதை UIDAI இடம் தெரிவதால், இப்பொழுதாவது உங்கள் பெயரில் எத்தனை நம்பர் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிகிறது முன்பு அந்த வசதி எல்லாம் இல்லை என்று ஒரு பதில் வருகிறது
ஒருவர் பெயரில் எவனோ சிம் கார்டு வாங்கும் போது அதை தடுக்கவும் இல்லை, அந்த ஆதாரின் உரிமையாளரின் கவனத்திற்கும் கொண்டு செல்லவும் இல்லை. ஆனால் ஆதார் இணைப்பே போலிகளை களைவதற்கு என்று சொல்வது எவ்வளவு வேடிக்கை ?. இப்படி நானும் சொல்ல மாட்டேன், நீயே கண்டுபிடித்து விட்டாய், நீயே DOT இடம் புகார் செலுத்தி அதை நிவர்த்தி செய்து கோல் என்று சொல்வது எவ்வளவு அயோக்கியத்தனம்.
உங்கள் ஆதார் எண் எதனுடன் இணைக்க பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள Aadhaar Authentication History என்ற வலைதள வசதி UIDAI செய்து கொடுத்திருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த வலைதளத்தில் இருப்பது அனைத்தும் குறியீடுகளே, அதை வைத்து எத்தனை முறை உங்கள் ஆதார் ஆதென்டிகேஷன் செய்யப்படுகிறது என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். ஒரே பயன் உங்கள் உடல்கூறை பயன்படுத்தி ஆதென்டிகேஷன் நடந்திருப்பதை வைத்து அது நீங்கள் தான் செய்தீர்களா என்று யோசித்து பார்க்க உதவும். மேற்படி இத்தனை முறை நமக்கு தெரியாமல் நம் ஆதார் எண் உபயோகப்பட்டிருக்கிறதா என்று ஆச்சரிய பட்டு கொள்ளலாம் அவ்வளவே அதை யார் பயன்படுத்தினார்கள் என்ற விவரம் தெரியாது.
உங்கள் ஆதார் எண்ணை தெரிந்து வைத்து உங்களுக்கு வர வேண்டிய பென்ஷன் தொகை, மானிய தொகை அத்தனையும் சுருட்ட நவீன தொழில்நுட்ப திருடர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பலர் உணரவேயில்லை.
ஆதாரால், போலிகளை களைகிறோம், மானியங்கள் சரியான நபருக்கு சென்றடைவதை உறுதி செய்கிறோம், கள்ளத்தனத்தை தடுக்கிறோம் என்று அரசு உரத்த குரலில் ஒரு புறம் கூவினாலும், ஆதாரை பயன்படுத்தி, தொடர்ந்து நடந்து வரும் மோசடிகளுக்கு, அரசிடம் பதில் இல்லை என்பதே, முகத்தில் அறையும் உண்மை.
தனி நபர் உரிமை (Right to Privacy) அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை, அது பிரிக்க முடியாதது என்பதை 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு உறுதிப்படுத்தியுள்ள நிலையில், நமது தனி நபர் விபரங்களை, தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து, அவற்றை, அந்த நிறுவனங்கள் தங்கள் சொந்த லாபத்துக்காக பயன்படுத்துவது எத்தனை பெரிய மோசடி ?
சில நேரங்களில் பிழையாகவும், பல நேரங்களில் சரியாகவும் முடிவெடுத்து, நமது உரிமைகளை எப்போதும் நிலை நாட்டி வரும் உச்சநீதிமன்றம், இந்த ஆதார் விவகாரத்திலும், நியாயத்தை நிலை நாட்டும் என்பதை நம்புவோம்.
அது வரை, யாரும் அடித்துக் கேட்டாலும் ஆதார் எண்ணை அளிக்காதீர்கள்.
எந்த ஒரு விசயத்திலும், நல்லதும் இருக்கும், கெடுதலும் இருக்கும். புரிந்து வாழ்வதுதான் வாழ்க்கை! அரசை குறை சொல்வதில் அர்த்தமே இல்லை!!
ஆதார் தடை செய்ய வேண்டிய ஒன்று. இந்த பரதே* மோடியால் சாமானியன் இங்கு நிம்மதியாய் வாழ முடியாதென்பதில் இதுவுமொன்று கலிகாலம்
good write up with many practical problem situations well explained but the same process exists in US as well in the name of SSN Number (Social Security Number). It would be good to know if the author writes how SSN process is fool proof in US.
With all the good things about this article the biggest let down is the below comment. It should have actually been coined in the opposite way coz our Courts are as corrupt as other government organizations….
சில நேரங்களில் பிழையாகவும், பல நேரங்களில் சரியாகவும் முடிவெடுத்து, நமது உரிமைகளை எப்போதும் நிலை நாட்டி வரும் உச்சநீதிமன்றம்,
ஆதார் தரவில்லை என்பதற்காக எரிவாயு இணைப்பை துண்டித்து விட்டார்கள். உயர்நீதிமன்றத்தில் மார்ச் வரை பிரச்னை இல்லை என்றார்கள். ஜனவரி ஒண்ணாம் தேதியே இணைப்பை துண்டித்து விட்டனர். சம்பந்தப்பட்ட அலுவலகத்தை கேட்டால் ஆதார் குடுங்க அப்புறம் பேசுங்க என்கி்னறனர். ஆதார் இல்லாமல் இன்னும் எவ்வளவு நாட்கள் சமாளிக்க முடியும் தெரியவில்லை
சூப்பர்… செய்தி
நாங்கள் எல்லாம் துவக்கத்தில் இருந்தே பன்னீரை நம்பவில்லை.
‘‘ தர்மயுத்தத்தின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளன்று, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலும் வியப்பதற்கில்லை.’’
we are waiting
ஒருவர் பெயரில் எவனோ சிம் கார்டு வாங்கும் போது அதை தடுக்கவும் இல்லை, அந்த ஆதாரின் உரிமையாளரின் கவனத்திற்கும் கொண்டு செல்லவும் இல்லை. ஆனால் ஆதார் இணைப்பே போலிகளை களைவதற்கு என்று சொல்வது எவ்வளவு வேடிக்கை ? போலிகளை களைவதற்கு னு பதிலா போலிகள் கையாள்வதற்கு னு போட்டா பொருத்தமா இருக்கும். ஏர்டெல் எனும் மகா திருடன், மக்கள் மானிய பணம் 190 கோடி ரூபாயை அவன் அர்டெல் bank account போட்டு சுருட்ட பாத்தானே!! இது ஒண்ணே சாட்சி ஆதார் லட்சனதுக்கு.
I fully agree and it is a fraud done on us .It is against our tradition. Govt role in every individual’s life is very minimal and it dose NOTHING to guarantee anything for our basic needs . Some doling outs are happening for populist and vote bank politics. Modi’s arrogance on AADHAR is deplorable. He is incapable to stop any misuse but makes lofty claims. Almost NONE in the administration is dependable or honest to the core and they cannot be trusted. For pittance they will sell anything. I dont understand what makes Modiji to be so adamant on this. Hope the court gives some befitting reply soon.
IN VOTER LIST ALSO HAVING DETAILS LIKE PHOTO, NAME, RELATIVE NAME, AGE, RESIDENCE ADDRESS, ALL FINANCIAL INSTITUTAL HAS GOT PERMISSION TO VIEW INCOME RETURNS FILED BY INDIVIDUAL OR COMPANY.
*99*99*1# NOT WORKING, SIM CARD IT IS VERY OLD. NOW U CANNOT PURCHASE ANY SIM WITH OTHER AADHAAR CARD. SEVERAL PERSON ADDED THEY NAMES IN RATION CARDS IN MANY PLACE LIKE PARENTS RATION CARD, FATHER -IN-LAW RATION CARD, NATIVE PLACE ONE RATION CARD NOW IT IS TOTALLY VANISHED. SAME PERSON HAVING DIFFERENT NAMES IN DIFFERENT NAME WAS INDENTIFIED PLEASE CHECK SHANKAR SIR IN BOX OR MESSENGER A LADY HAVING DIFFERENT NAME .
Aadhar ஒரு நல்ல திட்டம்… சில குறைபாடு இருக்கலாம் அதனை சரி செய்துகொள்ள வேண்டும்… முற்றிலும் ஆதர் தவர் ஆகாது
அரசு மானியங்களை கொடுப்பதற்கு என்று கொண்டு வரப்பட்ட ஆதார் இன்று மூக்கை கூடாரத்திற்குள் நுழைத்து முழுவதும் உட்ம்பை நுழைத்த ஒட்டகம் போல அனைத்திலும் வியாபித்து நிற்கிற்து. பாஜக கட்டுப்பாட்டில் இருக்கும் உச்ச நீதிமன்ற்த்தில் நியாயம் கிடைப்பது பகல் கனவே . தனி நபர் உரிமை பற்றி தீர்ப்பு வந்த போதே , வழக்கு முடியும் வரை ஆதார் இணைபிற்கு தடை விதித்திருக்க வேண்டும் . எல்லா இணப்பும் முடிந்த பிற்கு , ஒரு வேளை தடை கொடுக்கப்பட்டால் என்ன செய்ய ?