சனிக்கிழமை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்காமல் கர்நாடக முதலமைச்சராக பதவி விலகியதன் மூலம் அடல் பிஹாரி வாஜ்பாயாக ஆக பி.எஸ்.எடியூரப்பா முயற்சித்துள்ளார். இந்தியாவின் மிகக் குறுகிய முதலமைச்சர் பதவிக்காலங்களில் ஒன்றை நிறைவுசெய்து, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (மதச்சார்பற்றது) ஆகிய கட்சிகளிலிருந்து போதுமான எம்.எல்.ஏக்களை அவரது பக்கம் கொண்டுவருவது சாத்திம் என இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் நினைத்ததைச் செய்ய முடியாமல் தோற்று விட்டதை ஒப்புக்கொண்டுள்ளார் எடியூரப்பா.
அவரது ராஜினாமா உரை ஒரு தோல்வியின் உணர்வுடன் பிணைக்கப்பட்டிருந்தது. அவரது ராஜினாமா உரையில் விவசாயிகளின் நிலை பற்றி பேசியதோடு, 2019ம் ஆண்டில் மாநிலத்தின் அனைத்து 28 மக்களவைத் தொகுதிகளையும் வென்றெடுப்போம் என சூளுரைத்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அக்கட்சி பத்திரமாக பூட்டி வைத்துக் கொணடது. அவர்களது மனசாட்சியை நெருங்கக்கூட பாஜகவை காங்கிரஸ் அனுமதிக்கவில்லை என அவர் குறை கூறினார்.
ஆனால் உண்மையான கதை என்னவென்றால், ஒரு உறுதியான காங்கிரஸ் மற்றும் ஒரு ஒருமுகப்படுத்தப்பட்ட ஜனதா தளம் (மதச்சார்பற்றது) ஆகிய கட்சிகளால் பாஜக பின்னுக்குத் தள்ளப்பட்டது.. உச்சநீதிமன்றத்தின் மிகவும் அரிதான நள்ளிரவு விசாரணையை பெறும் அதிர்ஷ்டம் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கூட்டாளிகளுக்கு இருந்தது. சட்டமன்றத்தில் பலத்தை நிரூபிக்க ஆளுநர் வஜுபாய் வாலா கொடுத்திருந்த கால அவகாசத்தை உச்ச நீதிமன்றம் 15 நாட்களிலிருந்து ஒரு நாளாக குறைத்தது.
கடந்த நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து தோல்விகளையே சுவைத்த காங்கிரஸுக்கு, எதிர்க்கட்சியின் கோட்டையை உடைக்க முடியவில்லை என பாஜகவின் ஒரு அனுபவமிக்கவரே ஒத்துக்கொண்டிருப்பது காங்கிரஸின் காதுகளுக்கு தேனாக இருக்கும்.
இதை கர்நாடகாவில் வெற்றி என்பதோடு மட்டுமல்லால், நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் தேர்தல் மற்றும் அரசியல் இயந்திரத்தின் தோல்வி என காங்கிரஸ் காட்டும்.
தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் உள்ள பற்றாக்குறையை சரிகட்ட முடியும் என எப்படி நம்புகிறீர்கள் என பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ”கவலைப்படாதீர்கள். எங்களிடம் அமித் ஷா இருக்கிறார்” எனச் சொல்லி அர்த்தத்துடன் சிரித்தார். அவரது சிரிப்பு தொலைக்காட்சி அறிவிப்பாளர்களிடமிருந்து கட்டுப்பாடில்லாத சிரிப்பலைகளைத் தூண்டியது.
பிரதமர் மற்றும் பாஜக தலைவரை சுற்றியிருந்த வெல்ல முடியாத ஒளிவட்டம் கர்நாடகாவில் ஊசியால் குத்தி துளை போடப்பட்டுள்ளது. இது 2019 பொதுத் தேர்தலுக்கு முன்னால் காங்கிரஸ் தொண்டர்களின் மன உறுதியை அதிகரிக்கும்.
அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக தனது புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு தந்திரத்தையும் முயன்றது. போதுமான எண்ணிக்கை இல்லாதபோதும், எடியூரப்பாவை அரசு அமைக்குமாறு அழைத்தார் பழைய பாஜக-காரரான ஆளுநர். பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 15 நாள் கால அவகாசம் கொடுத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா. இதுதான் பாஜகவின் நம்பிக்கையின்மையின் முதல் அறிகுறியாகும். பெரும்பான்மையை அடையமுடியும் என அக்கட்சி உறுதியாக இருந்திருந்தால், சட்டப்பேரவைரயில் தனது பலத்தை நிரூபிக்க அது முந்தியிருக்கும். அக்கட்சி 15 நாட்கள் கேட்டது என்பது அந்த காரியம் அவ்வளவு எளிதாக இருக்காது என்பதை தெளிவுபடுத்தியது. அதுபோலவே அது நிரூபித்துள்ளது.
சுறுசுறுப்பான நகர்வுகள்
அனேகமாக, கோவா மற்றும் மேகாலயாவில் ஏமாந்ததைப் போல அல்லாமல், அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்தது காங்கிரஸ். கோவா மற்றும் மேகாலயாவில் அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் காங்கிரஸால் அங்கே ஆட்சி அமைக்க முடியவில்லை. முதலமைச்சர் பதவியை எச்.டி.குமாரசாமிக்கு விட்டுக்கொடுத்தது ஒரு முக்கியமான நகர்வு. இது மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் நெருக்கத்தை உத்தரவாதம் அளித்து உறுதிப்படுத்தியது. பாஜகவுடன் ஒப்பந்தம் போடுவதற்கு அக்கட்சிக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. பாஜகவும் இதுபோன்று சிறிய கட்சிக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்திருக்காது. காங்கிரஸ் கட்சி அதனுடைய மாநில கிளைக்கும் புது தில்லியில் அக் கட்சி தலைமைக்கும் இடையே ஒரு திறமையான ஒருங்கிணைப்பை காட்டியது. நள்ளிரவு விசாரணை கேட்டு இந்தியாவின் தலைமை நீதிபதியை எழுப்பும் வேலை அக்கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி-க்கு கொடுக்கப்பட்டது.. உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி பலத்தை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட உச்ச நீதிமன்றத்தை ஒப்புக்கொள்ள செய்ததன் மூலம் அக்கட்சிக்கு பாதி வெற்றி கிடைத்தது.
பெங்களுருவில், பாஜகவினர் நெருங்க முடியாதவாறு, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சுற்றிவளைக்கப்பட்டு தொலைதூர இடங்களில் உள்ள ஓட்டல்களுக்கு அனுப்பப்பட்டனர். சனிக்கிழமையன்று வாக்கெடுப்புக்கு முன்னதாக, எடியூரப்பா மற்றும் பிற பாஜக தலைவர்கள் எதிர்தரப்பு எம்.எல்.ஏக்களுக்கு அணி மாறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயற்சித்ததைக் காட்டும் ஆடியோ டேப்களை காங்கிரஸ் வெளியிட்டது.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை ஒன்றாக பாதுகாத்து வைக்கும் பணி முன்னாள் எரிசக்தி அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ராஜ்ய சபா தேர்தலின்போது அக்கட்சியின் குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்கு தாவாமல் பாதுகாத்து சிவக்குமார் தனது திறமையை ஏற்கெனவே நிரூபித்திருந்தார். வழக்கம்போல் இல்லாமல், எம்.எல்.ஏக்களை கட்டுப்டுத்தும் பணியை கட்சி தலைமையால் நியமிக்கப்படுபவர்க்கு வழங்காமல் கட்சியின் உள்ளுர் தலைவருக்கு வழங்கும் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியமானது என்பதை நிரூபித்தது.
ஆயினும், எடியூரப்பா ராஜினாமா செய்த உடனேயே, அதை ராகுல் காந்தியின் வெற்றியாக காட்ட காங்கிரஸ் முயன்றது. ஐந்து நாட்களாக செயலில் காணாமல் போனவர் திடீரென தோன்றி, டெல்லியில் பத்திரிகையாளர் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, மோடி ஊழலில் ஈடுபடுவதாகவும், நிறுவனங்களை சேதப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார். ஆனால், அந்த மாநிலத்தை கிட்டத்தட்ட தன்னுடைய விரல்களுக்கிடையே நழுவ விட்டுவிட்டு இதை ஒரு சமாதானமாகவே அவர் கூறிக்கொள்ள முடியும்.
விளையாட்டு இன்னும் முடியவில்லை என்பதை காங்கிரஸ் நினைவில்கொள்ள வேண்டும். இப்போது, அரசு அமைக்க குமாரசாமியை ஆளுநர் அழைப்பார். வரும் நாட்களில் இந்த கூட்டணி சட்டப்பேரவையில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டியிருக்கும். மீண்டும் எப்போது தேர்தலில் போட்டியிடப் போகிறோம் என்பது தனக்கு தெரியாது என எடியூரப்பா தனது உரையில் தெரிவித்தார். அது இன்னொரு தேர்தலை சந்திக்கும் கட்டாயத்தை ஏற்ப்படுத்தினால்கூட கவலைப்படமால், எதிர்தரப்பு எம்.எல்.ஏக்களை வளைக்க பாஜக முயற்சி செய்யும் வாய்ப்பு உள்ளது என்பதையே உணர்த்துகிறது. ஒரு மெல்லிய பெரும்பான்மை கொண்ட இந்த காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி, நீடிக்க வேண்டுமானால், பல குழுக்களின் நலன்களை அது சமன் செய்ய வேண்டும்.
ஸ்ருதிசாகர் யமுனன்
சவுக்கு,திருமா தி வேல்முருகன் போன்ற அரசியல் கூலிப்படைகள் இன்று களிப்புற்றூ இருக்கலாம்.
ஆனால் ஒன்றை மறந்துவிட்டு ஆனந்த களி நடனம் ஆடுகிறார்கல்
180 இடங்களில் தோற்று 147 இடங்களில் டெபாசிட்டு இழந்து 37 இடங்களில் மட்டுமே
ஜெயித்த கட்சி ஆட்சி அமைப்பது ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் செயல்.
இந்த பருப்பு “வயர்|” சிந்தனையாளர்கள் ஒன்றை எளிதாக மறந்துவிட்டார்கள்.
காங்கிரஸ்காரன் எந்த மைனாரிட்டி கட்சி ஆளுவதை பொறுத்துக்கொண்டு இருக்கமாட்டான்.
இது சரன்சிங்,நம்மூர் ஜானகி அம்மாள், பின்னாளில் சந்திரசேகர் என்று காலை வாரிய வரலாறு
நிறைய உண்டு.
இப்பொழுதே இலாக ஒதுக்குவதில் முட்டல் முனகல் என்று செய்தி.
சிறியார் வீட்டு வெள்ளாமை விளஞ்சாலும் களம் சேராது என்ற பழமொழி தமிழகத்தில் உண்டு,
The game changer was Supreme Court ruling day 1 to 36 hrs, and day 2 Live telecast order!! That cooked BJP goose!!
All NON BJP parties,must now come united to work alliance to keep BJP at bay!! As Jayalitha used to ask “SEIVEERGAALA” ahhahah!!!! I think the right signs are being seen with all Non BJP CM and leaders invited for swearing in ceremony on 23rd Wed.
I was aghast to see Ram Madhav talking so blatantly!! What a Dumb Ass shows how much contempt/condescendence they have for democratic norms !! ( I am reminded of my wife’s chiding to her students—-> மேல் மாடி காலி )
I hope Congress and JD(S) take this attempted bribing of MLAs issue seriously like the PV Narashima Rao bribing for Jarkhand Mukthi Morchaa MPs as criminal offence!!! BJP need to be taught lessons on criminal side too!!
I am sure this would the last nail on BJP South India coffin!!! The fear of BJP entering back door once again would keep this Karnataka alliance intact until 2019 at least.
Instead of winning Modi and Amit shah, let Congress and other opposition parties try to win people’s heart. Sacrificing the power to 38 seats party is not a victory it’s a shame to Congress