உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா.

You may also like...

18 Responses

  1. Subburaj says:

    சவுக்கு சங்கறே வெட்டி முன்டம் வீனாபோன தன்டம் இவன் சீமானை பற்றி புரளி பரப்புபவன் இதை எப்படி நம்புவது

  2. Prem says:

    //கட்சி வேறுபாடுகளை மறந்து, ஸ்டாலின், டிடிவி தினகரன், பாட்டாளி மக்கள் கட்சி, வைகோ, திருமாவளவன், இடது சாரிகள், இதர இயக்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவர் அமைச்சர்களின் வீடுகளை முற்றுகை இட வேண்டும். //

    its so funny to see Shankar still living in an inferiority complex when it comes to Naam Tamizhar Katchi bcos in the above list NTK has higher vote shared that vaiko, thirumavalavan and left but as usual Mr.Shankar wantedly avoids mentioning Seeman… “Seeman peralam solli ethuku avara naamale periyal aakanumnu” yenga aiya savukku shankar nenaikraru (as usual)… Funny guy

  3. Selvarajan says:

    ” ஆட்சியில் இல்லாத தலைவர்களின் தற்போதைய நிலைப்பாடு ” …: பாவப்பட்ட மக்கள் — ” எங்களையும் ஏதோ முடிந்ததை செய்கிறார்கள் என சகித்துக் கொள்கிறார்கள் ” ….?

    உண்மைதான் …! தினம் ஏதாவது ஒரு வாழ்வாதார பிரச்னை அரசுகளால் ஏற்படுத்தப்பட்டு கொண்டு இருப்பதால் இப்போதெல்லாம் எங்களால் முடிந்தது – ஒரு அறிக்கை விடுவது – அப்புறம் குறட்டை விட்டு அடுத்த அறிக்கைக்கு ரெடியாவது — தனியே செய்துக் காட்டிய போராட்ட சூடு – சொரணை எல்லாம் — தற்போது ” மரத்து போய் ” தோழமை என்று கூட்டாக செய்து காட்டும் நிலையில் இருக்கிறோம் …!

    காவிரி மற்றும் ஜீவாதார உரிமைகளுக்கு ஆளும் கட்சியாக இருக்கும் பாேது விறுவிறுப்பு காட்டாமல் அடக்கியே வாசிப்பாேம் … எங்களுக்கு நல்ல பதவிகளுக்கு மட்டும் குரலை உயர்த்தி உரிமைக்காக பாேராடுவாேம்…

    அதுமட்டுமில்லாமல் — நீட் – வன்கொடுமை – கந்து வட்டி – கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை — ஏன் இந்த துப்பாக்கி சூடுக்கும் — போன்ற பல உயிர் இழப்புகளுக்கு – அரசு நிர்ணயிக்கிற உயிருக்கான விலையை — நாங்கள் கொஞ்சம் அதிகமான விலையை நிர்ணயித்து கொடுக்க சொல்லி அறிக்கை விடுகிறோம் — இறந்தவரின் வீடுகளுக்கே சென்று ” ஒப்பாரி ” வைத்து கண்ணீர் சிந்தி எங்களது திறமையைக் காட்டுகிறோம் …சிபிஐ விசாரணை என்று கூக்குரல் இடுகிறோம் … !

    சாலை மறியல் – மனித சங்கிலி — பிற ரகப் போராட்டங்களை அனைத்துக் கட்சியினருடனும் சேர்ந்து செய்து — கைதாகி குளிர்சாதன வசதியுள்ள திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் தங்கி உயர் ரக உணவை உண்டு — உறங்கி மாலையில் விடுதலையாகி கம்பீரமாக வெளியே வருகிறோம் … நாங்கள் இந்த கிளை சிறைச்சாலை — மத்திய சிறைச்சாலை பக்கமெல்லாம் சென்று பல வருடங்கள் கடந்து விட்டன …! சட்டசபைக்குள் சென்றதும் — உடனே வெளிநடப்பு செய்து ” கின்னஸ் ” சாதனைக்காக காத்திருக்கிறோம் …!!

    தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து நாங்கள் மக்களுக்கு ஆற்றும் தொண்டு எல்லோரும் அறிந்ததே … ! எங்களை போல மக்களின் ஜீவாதார உரிமைகளுக்கு போராடுபவர்கள் வேறு யாராவது இருந்தால் காட்டுங்கள் பாப்போம் …
    என்ன சில நேரங்களில் ” பகுத்தறிவு ” பேசி நாங்கள் யார் என்பதை நிலை நிறுத்திக் கொள்கிறோம் — அவ்வப்போது மறைந்த தலைவர்களின் கொட்டேஷன்களை தொட்டு — மதவாதம் — பிரிவினை — வன் கொடுமை — ஊழல் — லஞ்சம் –தொழிலாளர் நலன் — மாநில உரிமை — கல்விக் கொள்கை — கையாலாகாத அரசு என்று மறக்காமல் வார்த்தையாடுகிறோம் — எழுதுகிறோம் ….!
    ஊழல் — லஞ்சம் – லாவண்ணியம் என்று – அதில் ஊறிப்போனவர்களுடன் சேர்ந்து நாங்கள் குரல் கொடுப்பது உலக முழுக்க பிரபலம் … என்னவோ எங்களால் முடிந்தளவு செய்கிறோம் … அவ்வளவே …!!!
    மறைந்த தலைவர்களின் மரணத்தை நாங்கள் பிழைப்பாக்கி எந்த சேதாரமும் இல்லாமல் வாழ்கிறோம் …. ! மக்களும் எங்களால் முடிந்ததை செய்கிறோம் என்று நினைத்து ஒத்து போகப் பழகி விட்டார்கள் …!!!
    இன்று நீலிக்கண்ணீர் வடிப்பதெல்லாம் எதற்கு — ஓட்டு பொறுக்கத்தான் … ! ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும் — ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலைப்பாடும் இவர்களுக்கு கை வந்த கலை …!! மக்கள் தான் பலியாகிறார்கள் — இவர்கள் சொகுசாக பவனி வருகிறார்கள் — நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைக் கெட்டவர்களை பார்க்கும் போது … மாறும் — எல்லாமே மாறும் …!!!

  4. karpanai says:

    I don’t think Tuticorin plant will never be shut down by vedanda unless some miracle happens

    why?
    some facts:
    1. Sterlite is the leading copper supplier in india. As per vedantha site 36% of copper used in india, is been supplied by sterlite Tuticorin
    2. This plant operates in high profit margin for the current production 400kton with Revenue of 25000 crore per year

    As India is copper hungry nation. And copper price is increasing across the world due to economic activity. Hence vedantha decided to double the production from 400tonnes to 800 tonnes with investment of 700 millon dollar in that it already spend $200 million as per today’s Q3 statement filed in london

    So once extended plant is operational the sterlite would make a revenue of more than 50,000 crore/year from Tuticorin plant at current copper price. This will increase significantly if the copper price increase .

    Now with such a figure, don’t you think they will go for any extent?

    For further info, In Q3 figure they have mentioned they have cost burden is increasing but revenue is not increasing (partly down to closure of Tuticorin plan though they don’t say it directly). Due to the Q3 result published today their mkt share is been down 11.5% today.

    Hope people can link all …

  5. Anonymous says:

    திராவிட அரசியலின் கள்ள காமத்தில் பிறநத குழந்தயை இந்த ஸ்டெரிலைட்டு.
    இதன் பெற்று எடுத்தவள் அழுகி செத்தாள்,இதை வளர்த்த தந்தை அழுகி கொண்டிருக்கிறான்.
    இராமசாமி பயல் தமிழினம் மீண்டு வரமுடியாத சுயநல புதை குழிக்குள் தள்ளிவிட்டுவிட்டான்.

    இன்று நீட்டுக்காக சட்டையை கிழித்துக்கொள்ளும் தனியார் மருத்துவக்கல்லுரிகளின் தளபதி.

    இன்று மூன்று மாவட்ட அளவில் பந்திற்காவது அழைப்புவிடுத்திருக்க வேண்டும் ஆனால்
    நடிகர் விவேக் சொன்னதை போல் ரவுடி என்றால் எங்கவது செல்ல வேண்டும் ,வேகமாக ரிட்டன் ஆகவேண்டும் அதைப்போல துப்பாக்கி சூட்டிற்க்காக உத்தரவிட்ட தலைமை செயலாளரை போய் சந்தித்தார்.

    உண்மை நிலவரம் தெரியுமா துத்துக்குடி தொகுதி எதிர்க்கட்சி எம் எல் ஏ எங்கே இருக்கிறார் என்று இன்று வரை தெரியவில்லை . வாங்கிய காசு க்கு விசுவாசாமா ?????

    கொல்லபட்டவர்களின் உடம்பில் பாய்ந்த புல்லட்களில் அடிமைக்கழகம் மற்றூம் கொள்ளைகார
    கழகம் பேர் மட்டும்மில்லை

    அய்யா, அம்மா என்று சொல்லி காசு வாங்கிக்கொண்டும் ,வாங்கமலும் ஏறத்தாழ ஐம்பதுக்கு
    மேற்பட்ட அடிமைகளையும் ,திருடர்களையும் டெல்லிக்கும் ,சென்னைக்கும் அனுப்பி வைத்தவர்களின்
    பெயரும் இருக்கிறது.

    தமிழகத்தில் சென்ற எம்பிக்கள் இரு அவையிலும் இணைந்து ஸ்டெரிலைட்டை மூட விட்டால்
    காஷ்மீர் பிரிவினை வாதத்தை ஆதரித்து குரல் கொடுத்தால் போதும் எந்த மத்திய அரசும் சுப்ரிம்
    கோர்ட்டிற்கு நாம் காத்திருக்க தேவையில்லை.

    ஆனால் இவர்களது மடிமுழுவதும் திருட்டு கனம் ஆதலால் வழி நெடுகிலும் பயம்.

  6. tharini says:

    தூத்துக்குடி…

    1) ஊர்வலம் பனிமய’மாதா’ கோயிலில் (சர்ச்) தொடங்கியது ஏன்?

    2) ‘அறவழிப்’ போராட்டக் காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டது ஏன்?

    3) காவல்துறை வாகனம் ‘வஜ்ரா’ கவிழ்த்துப் போட்டு எரிக்கப்பட்டது ஏன்?

    4) காவல்துறையினர் சுமார் 10 பேர் – தமிழர்கள் – தாக்கிக் குதறப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது ஏன்?

    5) கலெக்டர் அலுவலகம் தாக்கப்பட்டது ஏன்?

    6) ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்புகள் – தொழிலாளத் தோழர்களின் வீடுகள் – தாக்கப்பட்டது ஏன்?

    7) தனியார் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டது ஏன்?

    இத்தனை ‘ஏன்’ களுக்கும், “ஆம், அது அப்படித்தான்; அது போராடுபவர்களின் உரிமை”- என்பது எவரது பதிலாகவும் இருக்குமானால் எனது பணிவான பதில் இதுதான்:- ‘சட்டம் ஒழுங்கு, சமூக அமைதி இரண்டையும் விரும்பும் சாதாரணப் பிரஜை என்ற வகையில் போலீஸ் வேறு வழியின்றி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர எடுத்த நடவடிக்கை சரியே’!

    20000 பேர் கலந்து கொள்ளும் ஊர்வலத்தில் அத்தனை பேரும் வன்முறையாளராக இருக்க முடியாது! ஒரு 20 பேர் வன்முறையைத் தொடங்கினால் போதும்! அது 100, 200, 300 என்று பரவி ஒரு Mob Psychology ல் பலரிடமும் தொற்றிக் கொள்ளும்!

    கூட்டம் கொடுக்கும் தைரியம் இது! சாதாரணமாக ‘ஏட்டு’ எதிரே வந்தாலே, பீடியை ஒளித்துக் கொள்பவன் கூட அப்போது போலீஸ் ஜீப்பை எட்டி உதைப்பான்! ஆனால் அந்த முதல் வன்முறைத் தீக்கங்கு எங்கிருந்து புறப்பட்டது? அந்த முதல் 20 பேர் யார்?

    ‘முதல் கல்லை எறிந்த’- அந்தப் ‘பரிசுத்தவான்’ யார்? நெக்கி நெருங்கியடித்து, பல்கிப் பெருகும் ஆவேசத்தோடு கலவரக் கும்பல் நெருங்கும் போது, போலீஸ் துப்பாக்கி இந்த ஆராய்ச்சி எல்லாம் செய்யாது! கடைசியில் எவன் தூண்டிவிட்டானோ அவன் வேடிக்கை பார்க்க வந்தவன் போல் வெகுளியாய் முகம் மாறுவான்! ஜனத்தோடு ஜனமாய்க் கரைந்துவிடுவான்! எவனோ இன்னொரு அப்பாவி அடி வாங்குவான்!

    சுழலும் லட்டிக்கும், சீறும் துப்பாக்கிக்கும் முதல் கல் எறிந்தவன் யார், ஓரமாய் நின்று பார்த்தவன் யார் என்றெல்லாம் தெரியாது! ‘POLICE FIRED AT THE MOB!’- அப்படிதான் செய்தியே வரும்!

    எனவே கல்வீச்சையும், தீவைப்பையும் நியாயப் படுத்தாமல், அப்படி முதலில் கல் எறிந்து, முதல் நெருப்பைப் பற்றவைத்துக் கலவரத்தைத் தூண்டிவிட்டு, ஒளிந்துகொண்டு ”அப்பாவி உயிர்கள்”- பலியாகக் காரணமான, அந்த ‘வீரத் தமிழர்களை’ அடையாளம் காண அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்!

    அப்படி ஒருவேளை செத்தவனில் சிலர்”அப்பாவி தமிழன்”- இல்லை; அவனும் ஒரு கல் எறிந்த, அவனும் ஒரு பொறி பற்றவைத்த “அடப் பாவி தமிழனாக” இருந்தால், அவனுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதை அரசியல் கட்சிகள் நிறுத்தட்டும்!

    இவன் எவனாவது அவனவன் கட்சி ஆபீஸ் மேல் கல்லை விட்டு எறிந்தால் – “அது போர்க்குணம் சார்”- என்று பாராட்டுவானா? “அடித்தட்டு மக்களின் அழுத்தப்பட்ட உணர்வு பீறிடுகிறது சார்!”- என்பானா? எனவே அரசியல் கட்சிகளின் பொறுப்பு கூடுதலாகிறது!

    CCTV காமெரா, இதர வீடியோ பதிவுகள் மூலம் கல்லெறியாத, தீ வைக்காத ‘அப்பாவித்’ தமிழர்களையும், கல் வீசிய, தீ வைத்த ‘அடப் பாவி’ தமிழனையும் இனம் பிரித்துக் கண்டெடுத்துக் கண்ணீர் சிந்தவும், கண்டனம் செய்யவுமான பெரும் பொறுப்பு அரசியல் கட்சிகளின் முன்னே இருக்கிறது! அவர்கள் “பொறுப்பானவர்கள்”- “சத்தியமே பேசக்கூடியவர்கள்” என்று நம்ப வேண்டிய “பொறுப்பு” நமக்கு இருக்கிறது!!!

    • அறிவு says:

      காலா காலம் இந்த மாதிரி அரச பயங்கர வாத‌ங்களை திசை திருப்ப கையாலப்படும் யுக்தியே உம்ம கேள்விகள் அனைத்தும்.

      நீர் குறிப்பிட்ட அந்த ‘Mob’ மனப்பான்மை ‘அரச அதிகாரம்’ அறியாதா? என்ன செய்தால் அறவழிப் போராட்டங்கள் கல‌வரமாக மாறும் என்பதையும் அந்த‌ ‘அரச அதிகாரம்’ அறியாதா?

      தூத்துக்குடி ‘அறவழிப்’ போராட்டத்தை கலவரமாக மாற்ற முதலில் தடி(லத்தி) எடுத்து கலைக்க முற்பட்டது யார்? ஏன்? எதனால்?

      இது தான் ஆரம்ப புள்ளி.

      ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளும் போது பலதரப்பட்டவர்களும் வருவார்கள் என்று தெரியாதா? அதில் நீர் குறிப்பிடும் அந்த சமூக விரோதிகளும் வருவார்கள் என்பதை அறியாததா அரசு? அதை முன் கூட்டிய செயல் திட்டத்துடன் மக்களுக்கு பாதுகாப்பளித்து அவர்களின் கோரிக்கையை செவிமடுத்து அமைதியாக கலைய செய்திருக்க முடிந்திருக்குமா முடியாதா? அப்படி செய்திருந்தால் கல் வீச்சு எப்படி நடந்திருக்கும் அதையொட்டிய கலவரம் எப்படி நடந்திருக்கும்.

      எந்த கலவரத்தையும் கட்டுக்குள் கொண்டு வரத்தான் அரசும் அதன் போலிசும். அமைதியாக நடந்த அறவழிப் போராட்டத்தை திட்டமிட்டு கொலைக்களமாக ஆக்கி கொன்று குவித்த குற்றம் யாருடையது? அது எந்தவிததில் நியாயம்.

  7. Anonymous says:

    //இந்த இரண்டு புகழுக்கும் சொந்தக்காரர் டிகே.ராஜேந்திரன்தான். இப்படிப்பட்ட மங்குணியை எடப்பாடி பழனிச்சாமி நள்ளிரவில் பதவி நீட்டிப்பு அளித்து டிஜிபியாக்குகிறார் என்றால் எடப்பாடி எப்படிப்பட்ட மங்குணி என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.//
    100% correct..!

  8. vivek Tamilan says:

    உலகாள உனது தாய் மிக
    உயிர் வாதை யடைகிறாள்;
    உதவாதினி ஒரு தாமதம்
    உடனே விழி தமிழா!

    ippa உடனே விழி தமிழா nu podura idho da adutha stage Devar ,Nadar…… nu poduviya SHANKAR Ref Unga latest Youtube Interviewla seeman pathi Question ketapa ipadai dhan nee soona SHANKARU….

  9. Anonymous says:

    Value points..salute..

  10. Suresh C says:

    This killings will continue for Nutrino, Sagar Mala, Methane, Hydro carbon, Salem Green ways Project, Ariyalur Cement Factories…Finally our Tamil will be like Srilankan Tamil one day..

  11. Anonymous says:

    அருமை

  12. Ilavarasan alias Ila says:

    Sir an excellent valuable timely released article sir u have exposed AtoZ u r doing the job of opposition party work u alone can do this job we need u sir pl continue ur services to the people u r not bothered who is who ur aim is always people welfare pl continue sir darkness should be eliminated u alone can bring bright light to world u r a warrior ur the ultimate winner we r all with u people r after u sir u alone lead Tamilnadu in future sir

  13. Senthil says:

    காவல்துறை என்பது ஒரு வேட்டை நாய். அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வரையில்தான் அது சாதுவான பிராணி. அதை கட்டவிழ்த்து விட்டால், வேட்டை நாய்க்கான குணத்தோடுதான் பாயும். அப்படித்தான் அது பயிற்றுவிக்கப்படுகிறது

  14. Anonymous says:

    ஸ்டாலின் வேஸ்ட் பீஸ்

  15. Selvan says:

    I agree police are hunting dogs and bark on masters order..but mad hunting dogs to be put down..

  16. முட்டாள் தமிழன் says:

    தோழர், கொல்ல ப் பட்டவர் கள் மிக முக்கியமாக இந்த 100 நாள் போராட்டம் நடத்தியவர்கள்…திட்டமிடப்பட்டு குறிபார்த்து ஸ்னைபர்களை கொண்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. முகநூலில் kaaritv என்னும் பக்கத்தை பார்க்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress