பேராயர் கோடே்டோ (Couto) மற்றும் ஓய்வுபெற்ற ஜபிஎஸ் அதிகாரி ஜுலியோ ரிபேரோ (Julio Rebeiro) ஆகிய இருவரும் தங்களது வாழ்வில் வேறுப்பட்ட பாதைகளைத் தேர்ந்தெடுத்தனர். ஒருவர் சமயகுருநிலையை தழுவினார். மற்றொருவர் ஒரு காவல்துறை அதிகாரி ஆனார். தில்லி கத்தோலிக்க மறைமாவட்டத்தில் பேராயர் கோட்டோ ஒரு முக்கிய அலுவலகம் வைத்திருக்கிறார். ரிபேரோ ஓய்வுபெற்று நீண்டகாலமாகிறது. ஆனால், மும்பையில் போலீஸ் அதிகாரிகளிடையே அவர் ஒரு ஹீரோ. அவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் கவனத்தில் கொண்டுவந்தது எதுவெனில், மே 28, 2018 அன்று திருச்சபையிலுள்ள பங்கு தந்தைகளுக்கு (parish priests) பேராயர் எழுதிய கடிதம் மற்றும் அதேநாளில் ஒரு பிரதான பத்திரிகையில் ரிபேரோ எழுதிய கட்டுரை.
பிரார்த்தனை, கலகம் அல்ல
பேராயரின் கடிதம் அரசியலற்றதாக இருந்தது. அது நமது அரசியலமைப்பில் உள்ள ஜனநாயகக் கொள்கைகளுக்கு அச்சுறுத்தலாகவும், நமது நாட்டின் மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தலாகவும் உள்ள ஒரு கொந்தளிப்பான அரசியல் சூழலை பாரத்துக் கொண்டிருக்கும் நாட்டில் பிரார்த்தனை செய்வதற்கான ஒரு வேண்டுகோளாக இருந்தது. “… மே 13, 2018 ல் இருந்து நம் நாட்டிற்காக ஒரு பிரார்த்தனை பிரச்சாரத்தை ஆரம்பிப்போம் …” என அவர் கூறினார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு நாள் நோன்பு கடைப்பிடித்து, தவம் செய்யும்படி பங்கு தந்தைகளை பேராயர் கேட்டுக்கொண்டார். அது சிறந்த கிறிஸ்துவ பாரம்பரியத்தில் இருந்தது. பிரார்த்தனைக்கான ஒரு அழைப்பாக அது இருந்தது. ஆனால், சில அறிவாளி ஆண்களும், பெண்களும் அதை ஒரு கலகத்திற்கான அழைப்பாக எடுத்துக் கொண்டனர். ” சாதிகள் / சமுதாயங்களை தூண்ட முயற்சி செய்வது தவறு. சரியான வேட்பாளர் / கட்சிக்கு வாக்களிக்க அவர்களுக்கு நீங்கள் சொல்லலாம். ஆனால் ஒரு கட்சிக்கு வாக்களிக்கவும், மற்றொன்றுக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் பரிந்துரைப்பதும், உங்களை மதச்சார்பற்றவராகவும், போலி மதச்சார்பின்மை உடைய ஒரு நபராகவும் காட்டுகிறது. இது துரதிர்ஷ்டவசமானது,” என்கிறார் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷைனா NC. அமைச்சர் கிரிராஜ் சிங் தனது இயற்பியல் பற்றி ஆழமான அறிவுடன் எடைபோட்டார். ” ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு. வகுப்புவாத நல்லிணக்கத்தை பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நான் எடுக்கமாட்டேன். ஆனால் மோடி அரசாங்கம் உருவாகக்கூடாது என்பதற்காக மக்களிடம் தேவாலயம் கேட்டால், மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் இதற்கு எதிராக கீர்த்தனை பூஜை செய்வார்கள்.” என்கிறார் கிரிராஜ் சிங். அவர் கூறியதாக சொல்லப்படும் எதையும் பேராயர் கோட்டோ கூறவில்லை. ஆனால், பாஜகவின் குறும்புக்கார குள்ளர்கள் சமூக ஊடகங்கள்மூலம் ஒரு கடுமையான தாக்குதலை நடத்தினர்.
பேராயர் மீதான தேவையற்ற தாக்குதல் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ரிபேராவை ஒரு செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதச் செய்தது. தனது வார்த்தைகளை அவர் மறுக்கவில்லை, திரும்பப் பெறவில்லை.. அவர் ஒருபோதும் அவ்வாறு செய்ததில்லை. அவர் குறும்பு செய்பவர்களை அழைத்து அவர்களது கடந்தகால பேச்சுக்களையும் செயல்களையும் நினைவு கூர்ந்தார். அத்துடன், ” பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக அரசாங்கம், முந்தைய பாஜக தலைமையிலான அடல்பிஹாரி வாஜ்பாயி அரசாங்கத்திடமிருந்து முற்றிலும் விலகி, சிறுபான்மையினரின் தேசப்பற்று பற்றி சந்தேம் மற்றும் கேள்வி எழுப்புகிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது,” என பலர் சொல்ல விரும்பியதை ரிபேரோ சொன்னார். அவரது முன்னோர்கள் இந்துக்கள் என்பதையும் அவர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார். இது ஒரு பெரும்பான்மையான இந்து நாடு என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார். அவரது நண்பர்கள் மற்றும் சகாக்களுடைய வட்டாரத்தில் பெரும்பான்மையினர் இந்துக்கள் என்று அவர் வெளிப்படுத்தினார். “ஆனால், நான் பிறந்துவிட்ட மதத்தை நான் விரும்புகிறேன். சத்தியம், நீதி ஆகியவற்றின் மதிப்பினை அது எனக்குக் கற்றுக் கொடுத்தது, எனக்கு சேவை மனப்பான்மையை அது கற்பித்தது.” என அவர் பெருமையுடன் கூறினார். ஒரு இந்து அல்லது ஒரு முஸ்லீம் அவரது / அவளது மதத்தைப் பற்றி அதே விதமாக பெருமையுடன் சொல்லலாம்.
நமக்கு அவமானம்
ரிபேரோவின் இறுதி வார்த்தைகள் நம்மை அவமானத்தால் தலைகுனியச் செய்ய வேண்டும். ” இரண்டாம் தர குடியுரிமைக்கு நான் தயாராக இருக்கிறேன்…. .. ஆனால், தேசவிரோதி என்ற தவறான குற்றச்சாட்டையும், அதற்காக தண்டிக்கப்டுவதையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்,” என ரிபேரோ எழுதினார்.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், பழங்குடியினர் ஆகியோர் இரண்டாம் தர குடிமக்களாக தங்களை நினைக்கும் வகையில் நாம் அவர்களுக்கு என்ன செய்துள்ளோம் ? இந்த நாட்டை என்ன கதிக்கு ஆளாக்கி விட்டோம் ?
என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை நினைவு கூர்கிறேன். அப்போது, உங்கள் மேஜை தோழன் அல்லது வகுப்பில் மாணவர் தலைவர் ஒரு முஸ்லீமா அல்லது ஒரு கிறிஸ்துவரா என எவரும் கவனிக்கவில்லை அல்லது பொருட்படுத்தவில்லை. பிரபலமான “த மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி உயர்நிலைப்பள்ளி“ ஸ்காட்டிஸ் மதபோதகர்களால் நிறுவப்பட்டது. பழம்பெரும் குருவிலா யாக்கோபு 25 ஆண்டுகளாக அதன் தலைமை ஆசிரியராக இருந்தார். மாணவர்களில் பெரும்பான்மையாக இந்துக்கள், கணிசமான எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்கள் மற்றும் தெளித்தமாதிரி கொஞ்சம் முஸ்லீம்கள் இருந்தனர். அனைத்து ஆறு ஆண்டுகளிலும், ஒரு முஸ்லிம் என்னுடைய வகுப்பு மாணவர் தலைவராக இருந்தார். ஒரு நம்ப முடியாத உணர்வுடன், இன்று இந்த உண்மைகளை நான் நினைவுகூர்கிறேன். – அந்த நாட்களில் நாம் அவைகளை கவனிக்கவில்லை. பெரும்பாலான மாணவர்கள் அறநெறி விஞ்ஞான வகுப்புகளில் பைபிள் வகுப்புகளைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் ஒரு மதமாற்ற சம்பவம்கூட இல்லை. கல்லூரியில், வெளிநாட்டினர் (முக்கியமாக ஐரிஷ்) மற்றும் இந்திய சபையினர்களை (Jesuits) ஆசிரியர்களாகக் கொண்டிருந்தோம். ஆங்கிலத்தில் எப்படி சரியாக எழுத, பேச வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்த கிறிஸ்தவ ஃபாதர் கொயிலி என்பவரிடமிருந்து என்னையோ அல்லது வேறு எவரையுமோ மதமாற்றம் செய்ய ஒருவரும் முயற்சிக்கவில்லை.
தொழில், இலக்கியம், கலை, இசை, விளையாட்டு, அரசியல் போன்ற பல துறைகளில் பங்களித்துள்ள முஸ்லீம், கிறிஸ்டியன், ஜெயின், பௌத்த, சீக்கிய மற்றும் பார்சி குடிமக்களுக்கு இந்த நாடு நிறைய கடன்பட்டுள்ளது. உங்கள் கண்களை மூடி பெயர்களை நினைவுகூருங்கள்; அந்த எண்ணிக்கை மற்றும் வேற்றுமையில் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
உண்மையான அச்சங்கள்
”நம்முடைய இடம் இரண்டாம் தர குடிமக்கள்தான்” என மதச் சிறுபான்மையினர் தங்களது மனதில் ஆழமாக நினைத்துவிட்டால், நம்மை ஒரு ஜனநாயக நாடு என்றோ, குடியரசு நாடு என்றோ விவரிக்கப்படுவதற்கு தகுதியுள்ளவர்கள் அல்ல. ”இது நடந்தால், என்னுடைய இந்த நாடு ஒரு “காவி பாகிஸ்தானை“ விட எந்தவகையிலும் குறைவாக இருக்காது,” என்ற ரிபேரோவின் வேதனை முற்றிலும் உண்மையே. நரேந்திரமோடி மற்றும் மாநிலங்களில் அவரது கூட்டாளிகளின் கீழ், வாஜ்பாயி அரசாங்கத்தைப்போல் இல்லாமல், சகிப்பற்றதன்மை என்பது புதிய இயல்பாக இருக்கிறது. வசைபாடுவது புதிய நடைமுறையாகி வருகிறது. வெறுப்பு புதிய ஆயுதமாகி விட்டது. பயத்தை உருவாக்குதல் புதிய தந்திரமாகி விட்டது. பிரிவினை உண்டு பண்ணுதல் தேர்தல் உத்தியாகி விட்டது.
மக்களவைக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியிலிருந்து தபஸும் ஹஸன் என்ற இஸ்லாமிய பெண் ஒருவர் வெற்றிபெற்றிருப்பதன் மூலம் இன்னும் ஒரு நம்பிக்கை இருக்கிறது.
பேராயர் கோட்டோ மற்றும் ஜுலியோ ரிபேரோ போன்றோர் பேச மற்றும் எழுத முடிகிற வரை மற்றும் திருமதி தபஸும் ஹஸன் தேரந்தெடுக்கப்பட முடிகிறவரை, ஜனநாயகம் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கும்.
ப.சிதம்பரம்
எழுத்து விபச்சாரத்தில் சவுக்கின் மானசீக குரு(துரோணர்) நக்கி பொ\ழைக்கிற கோபால்
தனது பத்திரிக்கையில் சிங்கார வேலு தனது கட்டுரையில் பாஜகவை விமர்சித்து எழுதுகீறாம்
அதனால் எரிமலை வெடிக்கிறதாம் ,சுனாமி பொங்குகிறதாம் அதற்காக பழிவாங்கவே அவரது
குடும்பத்தினர்மீது வழக்கு தொடரப்படுகிறதாம் ????
இந்த சொம்பு திருடன் சிங்கார வேலு ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக திராவிட கட்சிகளின்
தோளில் ஏறி எம்பியாக இருந்த தொகுதியில் அப்பனும் மகனும் சுத்தி வந்து கடந்த நாடளுமன்ற
தேர்தலில் பெற்றது வாக்குகள் வெறும் 60000 மட்டும் ஆனால் ஒன்றை நினைவில் கொள்க இதே தொகுதியில் ஹெச்.ராஜா பெற்றது 120000 வாக்குகள்
இந்த திருட்டு பய கட்டுரை எழுதினா பூகம்பம் வருகிறது என்று மாமாபய கோபால் பில்ட்ப் கொடுக்கிறான்..
2ஜி ஊழலில் சம்பாதித்த பணத்தில் வெளிநாட்டில் நண்பர்கள் மற்றும் ஆடிட்டர் பெயரில்
சொத்து வாங்கி , அந்த சொத்துக்களை தனது பேத்தியின் பெயரில் உயில் எழுதி வாங்கி வைத்துக்கொண்டான். விதி சதி செய்தது அந்த உயில் இப்பொழுது சிபிஐ வசம்.
பஜாக மட்டும் அடுத்த தடவை ஆட்சியை பிடித்தால் களி நிச்சயம்.
இந்த புறம் போக்கு சொராபுதின் என்கவுண்டர் வழக்கில் மாபியா அன்னையின் ஆணைப்படி
அமித் ஷாவை வேண்டுமென்றே சிக்கவைத்தான் சார்ஜ் ஷீட்டில் அமித்ஷாவை இணைக்க்குமாறு இவன் எழுதிய குறிப்பு உள்ளது.
பாஜக அரசு பதவியேற்றதும் வழக்கு நெருக்கடிகள் ஆரம்பித்ததும் மாபியா அன்னை யைமிரட்டி
மகாராஷ்டிராவில் இருந்து ராஜ்யாசபா எம்பி பதவியை வாங்கி கொண்டான்.
நீங்கள் ஒனறை கவனிக்கலாம் இவன் மீது எடுக்கபட்ட சட்டபூர்வா நடவடிக்கைகள் குறித்து
காங்கிரஸ் கட்சி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
இந்த மூன்றாம் பாலின நடையழகன் ரஷ்யாவில் ஒரு சிடியில் சிக்கிகொண்டான் .
அதிலும் விதி சதி செய்தது அந்த சிடி தரகர் சாமியிடம் சிக்கியது.
அவர் எட்டு சி வாங்கி கொண்டு கொடுத்தார்.
தனது ட்விட்டர் பதிவில் சிங்கார வேலு ஆடையில்லாமல் ஒல்லியாக இருப்பதாக நையாண்டி செய்தார்.
ஆனால் சிங்கார வேலு இனி ரஷ்ய செல்ல தேவையில்லை ஜான் ஜானிகான் சாலை சென்ரால் போதும்.
இப்பொழுதூ இவனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் யார் தெரியுமா???
குஞ்சாமணியும், புரட்டு பொய்க்கலைஞன் தகர முத்துவும்.
Let P. Chidambaram tell the truth about his own scandal.
Savukku, Really, I pity your state of mind how guys like you were indoctrinated with “Dravida Mayai”.
prejudiced views!
sathaan odhiya vedham….. tamizharkalin avamaanach chinnam nermai patri pesukirathu..89-l Ennudaiya nambikkai natchathiramaaka irundhu
nambikkai mosadi seyytha oru pithalaattakkaaranin katturai idhu…kevalam……singaraveluvukku eppo njaanasnaanam senjaanga thambi….