திங்களன்று, தமிழகத்தின் முன்னணி ஊடகங்களின் உரிமையாளர்கள் / செய்தி ஆசிரியர்கள் டெல்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்து வந்துள்ளனர். ஊடக உரிமயாளர்களும், பத்திரிக்கையாளர்களும் ஒரு பிரதமரையோ, முதல்வரையோ சந்திப்பது என்பது இயல்பானதே. ஆனால் இவர்கள் சந்தித்தது மோடி என்பதும், இந்த சந்திப்பு மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டது என்பதுமே இதை விவாதப் பொருளாக்குகிறது.
கடந்த முறை மோடி சென்னை வந்தபோது, இதே போல ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த சந்திப்பு ராஜ்பவனில் நடைபெற்றது. மோடியை சந்திக்கச் சென்ற ஊடகத்தினர், இரண்டு மணி நேரம் காத்திருந்தனர். அன்று #GoBackModi உலக அளவில் ட்ரெண்ட் ஆனதில், சமூக வலைத்தளங்கள் மூலமாகவே கட்சி நடத்தி, சமூக வலைத்தளங்கள் மற்றும் மென்பொருட்கள் மூலமாகவே பல கலவரங்களை உருவாக்கி பழகிய பரிவாரத்தினருக்கு அது பெரும் அதிர்ச்சி.
ட்விட்டரிலேயே அரசியல் செய்யும் மோடிக்கும் இது பெரும் அதிர்ச்சி. இதன் காரணமாக, சென்னை ஐஐடியின் இண்டு இடுக்குகளிலெல்லாம் புகுந்து வந்த மோடி #GoBackModi ட்ரெண்ட் ஆனதில் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார். இதனால் எதிர்ப்பார்த்த் போல அந்த ஊடகவியாளர்கள் சந்திப்பு நடைபெறவில்லை. இரண்டு மணி நேரம், குடும்பத்தினரோடு சென்று காத்திருந்த ஊடகவியலாளர்கள் ஏமாற்றத்தோடு திரும்பினர். மோடி அவர்களோடு செலவிட்டது வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே.
அதை சரி செய்யவே திங்களன்று நடைபெற்ற சந்திப்பு. இந்த சந்திப்பு, வழக்கம் போன்ற சந்திப்புகள் இல்லாமல் மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் பங்கேற்ற, மூத்த பத்திரிக்கையாளர்கள் தங்கள் அலுவலகத்தில் கூட எதற்காக டெல்லி செல்கிறோம் என்பதை சொல்லவில்லை.
எந்த ஒரு ஊடக நிர்வாகமும், தங்களிடம் பணிபுரியும் ஆசிரியர்களை டெல்லிக்கு சென்று பிரதமர்களை சந்தித்து வா என்றால் சந்தித்துதான் ஆக வேண்டும். முடியாது என்று சொல்லி விட்டு அவர்களால் வேலையில் தொடர முடியாது என்பது யதார்த்தம். ஆனால் எதற்காக இந்த ரகசியம் என்பதுதான் கேள்வி.
இந்த சந்திப்பின்போது, தமிழக பிஜேபியை சேர்ந்த கேடி.ராகவன், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், வானதி சீனிவாசன் ஆகியோர் மட்டுமே உடன் இருந்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனோ, தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனோ உடன் இல்லை.
சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாக, இச்சந்திப்பில் பங்கேற்ற மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், “வந்தவங்க எல்லாம், மோடியை கடவுளை பாத்த மாதிரி பாத்துக்கிட்டு இருந்தாங்க. எவனாவது ஒருத்தன் கேள்வி கேப்பான்னு பாத்தா, அத்தனை பேரும், பிஜேபி கட்சிக்காரங்க மாதிரி அமைதியா கையை கட்டிக்கிட்டு இருந்தாங்க. ஒரே ஒருத்தர் மட்டும் நீட் தேர்வால தமிழ்நாடு பாதிக்கப்பட்டிருக்குன்னு சொன்னார். அதுக்கு மோடி, இது தமிழ்நாட்டுக்கு மட்டும் கொண்டு வந்த திட்டம் இல்ல, இந்தியா முழுமைக்கும் கொண்டு வந்த திட்டம். பல ஸ்டேட்டுல ஸ்டேட் போர்ட் சிலபஸ்தான் இருக்கு. அது இல்லாம இதுல உச்சநீதிமன்றம் சம்பந்தப்பட்டிருக்குன்னு பதில் சொன்னார். அப்புறம் சில பேரு, எடப்பாடி பழனிச்சாமி அரசாங்கத்தை குறை சொன்னாங்க. ஆனா, எதுக்குமே மோடி வாயை திறக்கல.
சில பேர் சோசியல் மீடியா பத்தி பேசுனாங்க. அதுக்கும் மோடி வாயை திறக்கல. அமைதியா கேட்டுக்கிட்டு இருந்தாரு. பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறேன்னு எல்லாரையும் வரச் சொல்லி, நல்லா ஏமாத்தி அனுப்பிட்டாரு” என்றார் அவர்.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட பல பத்திரிக்கையாளர்கள், அவர்கள் நெருங்கிய நண்பர்களிடம் கூட, இந்த சந்திப்பு பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள். அதுதான் ஏன் என்பது புரியவில்லை. இவர்கள் அனைவரும் ஊடக அதிபர்கள். பத்திரிக்கையாளர்கள். இது போன்ற ஒரு சந்திப்பை ரகசியமாக வைக்க முடியாது என்பது கூட இவர்களுக்கு தெரியாமல் போனது வியப்பாகத்தான் இருக்கிறது.
ஊடக ஆதரவு என்பது ஒரு அரசியல் கட்சிக்கு பலம்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஊடகம் மட்டுமே போதுமானது என்று ஒரு அரசியில் கட்சி நினைக்குமானால், அதை விட பெரிய முட்டாள்த்தனம் இருக்க முடியாது. நெருக்கடி நிலை முடிந்து 1977ல் தேர்தல் நடைபெற்றபோது, ஏறக்குறைய ஊடகங்களே இல்லை எனலாம். அனைத்து செய்திகளும், மத்திய அரசு அதிகாரிகளின் தணிக்கைக்கு பிறகே வெளியிடப்பட்டன. ஒரே ஒரு வரி கூட அரசுக்கு எதிராக இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். ஆனாலும், Indian people defeated the Mighty Indira Gandhi. அதுவும், காங்கிரசுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணி இல்லாமலேயே.
தற்போது எதிர்க்கட்சிகளே இல்லாத நிலை நிச்சயம் இல்லை. ஆகையால் தமிழ்நாட்டின் ஊடகங்களை வளைத்து விட்டால், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று மோடி நினைப்பாரேயென்றால், அது பகல் கனவு மட்டுமே. இந்திய மக்கள் அத்தனை முட்டாள்கள் அல்ல.
அது ஒரு புறம் இருக்கட்டும். இப்படி ரகசியமாக மோடியை டெல்லி சென்று, சந்தித்து இந்த பத்திரிக்கையாளர்கள் என்ன சாதித்து விட்டார்கள் ? ஒரு வேளை மோடி, தொடர்ந்து பிஜேபிக்கு ஆதரவாக எழுத வேண்டும் என்று கூறினால் கூட, இவர்களால் அப்படி தொடர்ந்து எழுத முடியுமா ?
என்.ராம் போன்ற மூத்த பத்திரிக்கையாளர்கள் மோடியை கேள்வி கேட்டிருக்க வேண்டுமா வேண்டாமா ? பத்திரிக்கையாளர் என்ற முறையில் அது அவர்கள் கடமை இல்லையா ? எந்த கேள்வியும் கேட்காமல், சும்மா முணுமுணுத்து விட்டு வருவதற்கு இவர்கள் பிரதமரை பார்க்க சென்றார்களா, பெண் பார்க்க சென்றார்களா ?
நான்கு வருடமாக எந்த பேட்டியும் அளிக்காமல், பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தாமல், மனம் போன போக்கில் ஆட்சி நடத்தும் ஒரு பிரதமர், பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டும் என்று சொல்கையில், நாங்கள் எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்போம். அதற்கு பதில் சொல்வதாக இருந்தால்தான் நாங்கள் பிரதமரை சந்திப்போம் என்று கேள்வி எழுப்பியிருக்க வேண்டுமா இல்லையா ?
பாராளுமன்ற விவாதத்தில் நேருக்கு நேராக, ரபேல் ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கேள்வி எழுப்பினால், நான் ஒரு ஏழைத் தாயின் மகன் என்று மழுப்பும் ஒரு நபரை சந்தித்து இந்த மூத்த பத்திரிக்கையாளர்கள் என்ன சாதித்து விடப் போகிறார்கள் ?
குறைந்தது மோடியை சந்தித்து வந்தது குறித்து வெளிப்படையாக இவர்கள் அறிவித்திருக்க வேண்டுமா இல்லையா ?
டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள், எதற்காக உங்க ஆளுங்க இங்க வந்தாங்க ? எங்களுக்கே பேட்டி குடுக்காத மோடி, தமிழ்நாட்டுல இருந்து வந்தா உங்க ஆளுங்களுக்கு மட்டும் குடுத்துடுவாரா ? அவர் பேசறதை கேக்கறதுக்கு, வீட்டுலயே உக்காந்து மன் கி பாத் கேக்கலாமே. எதுக்கு டெல்லி வரணும் என்று கேட்கிறார்கள்.
டெல்லி சென்று மோடியை சந்தித்த மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக அதிபர்களை பத்திரிக்கையுலகின் ஜாம்பவான்கள் என்று அவர்களே கருதிக் கொள்கிறார்கள். இது நாள் வரை அவர்கள் அப்படி இருந்திருக்கலாம். அல்லது அப்படி நடித்துக் கொண்டிருந்திருக்கலாம்.
இவர்கள் மூத்த பத்திரிக்கையாளர்கள் அல்ல. ஆளுமை இல்லாத சுயநலமிகள் என்று மட்டுமே இவர்களை கருத முடியும்.
வெளிப்படைத்தன்மை இல்லை என்றாலே அங்கு ஏதோ தில்லுமுல்லு இருக்கின்றது என்றுதானே பொருள். *எவரும் எல்லோரையும் எல்லாக் காலங்களிலும் ஏமாற்றிக்கொண்டே இருக்கமுடியாது* என்பதனை மோசடிக்காரர்களும் புரிந்துக்கொள்வது நல்லது !!
சித்தாள் வேலைக்குப் போனால் கொத்தனார் சொல்ல கேட்டுதான ஆகனும். எதித்துகேள்வி கேட்கவா முடியும்?.
மிகத் துல்லியமான, சவுக்கடி தரும் பதிவு இது….. அருமை. புலனாய்வின் வீச்சம் இனியாவது அந்த மூத்த(!) பத்திரிகையாளர்கள் புரிந்திருக்கும்….. வரவேற்கிறேன்… இப்பதிவை… மொள்ளமாரியின் உச்சம்தான் பிஜேபி மற்றும் மோடி என்பதற்கு இதைவிட ஒரு சாட்சி வேண்டுமோ!!!!!!
Auvudiyappan, TN indiavukku ulletrhaan irukku. Engalukku theriyum…. MODIKKUthaan theriyalai….avaroda cabiinet ministerukku theiryalai……TN modikku vote podathu…. aana avrai ethiriya parthathu ille… ANA MODIyoda adipodi koottam apadi parkuthu…. adanale MODI inge verukkapadukirar….
தமிழக மக்கள் மோடியை வெறுக்கவில்லை. மக்கள் என்று நான் சொல்வது.. சில பல சினிமா பிரபலங்களோ,..ஹவாலா / போலி என்.ஜீ.ஓ க்களோ பொருளாதார குற்றவாளிகளோ ,உழுத்துப் போன திராவிட அடிவருடிகளையோ அல்ல.. உண்மையான தமிழ மக்கள்.. .. திராவிடம் என்றாலே திருட்டுத்தனம் என்பதை உணர்ந்த பொது மக்கள்.. .காசில்லாமல் . திருட்டு ரயில் ஏறி வந்தவன்.. எஞ்சினியரிங் படித்திருந்தானா? ( எந்த டுட்டோரியலில் படித்தான்? இது கலைஞரின் வசனம்) மருத்துவம் அல்லது ஐ.ஏ.எஸ் படித்திருந்தானா? அல்லது பரம்பரையாக பிரபல தொழில் அதிபரா? இல்லையே.. பிறகு எப்படி அவனுக்கு அவ்வளவு காசு வந்தது? என்று தமிழக மீடியாக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். சவுக்கு போன்ற ஜால்றாக்கள் கேட்க மாட்டார்கள். ஆனால் தமிழக மக்கள் கேட்பார்கள். தமிழக மக்களுக்கு தெரியும் உண்மையான 420 அரசியல்வாதி யார் என்று! ஐம்பதாண்டு அரசியல்வாதி எத்தனை வருடங்கள் ஆட்சியில் இருந்தார்? எதிர்க்கட்சியாக இருந்துதானே அதிகம்? ஐம்பதாண்டு அரசியல்வாதிக்கு ஒரு எம்.பி உண்டா? இல்லையே! ஏன்??தமிழக மக்களுக்கு யாரை எங்கே வைக்க வேண்டும் என்கிற நிதானம் தெரியும். எங்கே வைக்க வேண்டுமோ வைத்தார்கள். நடுவில் ஆளும் கட்சியாக சொற்ப காலத்துக்கு”” ஐம்பதாண்டு “” பதவியில் இருந்தது எல்லாம் .. மக்களுக்கு ஜெயா மீது இருந்த கோபத்தால் மட்டுமே! அதனால்.. மீடியாக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். என்னதான் திராவிடத்தை கருப்பு பெரியார் மதத்தை தூக்கி தூக்கி பிடித்தாலும் .. தமிழக மக்களுக்கு திராவிடம் பிடிக்காது! கருப்பு சட்டை பிடிக்காது! பெரியாரையும் பிடிக்காது! ராமர் ஒரு கல்! பிள்ளையார் வெறும் கல் ! என்று சொன்ன பெரியாரை அல்லது அவர் ஜால்றா வீரமணியை எங்கே கிராமத்தில் போய் சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்! “” கருப்பண்ண சாமி பொய்! கன்னிமார் பொய்! முனிசாமி பொய்! “” என்று!~ வெட்டி பொலி போட்டு விடுவார்கள் கருப்பண்ண சாமிக்கே! அந்த பயம் இருந்ததால்தான் … ராமரையும் பிள்ளையாரையும் மட்டும் தாக்கி விட்டு கருப்பண்ண சாமியை பழிக்காமல் தப்பித்துக் கொண்டார்கள் இந்த திராவிட விஷமிகள். தமிழக மக்களுக்கு எது உண்மை எது போலி என்று நன்றாகவே தெரியும் எனவே தமிழகம் மோடிக்கு ஒட்டு போடாது என்று நீங்களாக சொல்லிக் கொள்ளாதீர்கள். மோடியை இங்கு சித்தரித்த விதம் தவறு என்று நீங்கள் சொல்வது சரி! ஆனால் அது பிஜேபி கட்சிக்காரர்கள் செய்தது அல்ல. மோடியின் பொருளாதாரரா நடவடிக்கைகளால் பாதிக்கப் பட்ட ஹவாலா க்கள் / என்.ஜி .ஓ.க்கள் / உருப்படாத படத் தயாரிப்பாளர்கள் / மைனாரிட்டியின் பாதம் தடவி பிழைப்பு நடத்தும் திரவிடால்ஸ் .. போன்றவர்கள் நடத்தும் நாடக் அது ! அதுவும் புரியாத ஆட்கள் அல்ல.. மக்கள். மோடியை பற்ற i இங்கு சரியான முறையில் எடுத்து சொல்ல படும்போது .. தமிழகம் அவர்க்கு வாய்ப்பு அளிக்கும் .
india is not only in tamilnadu …..india will support modi …he will win in election …donot waist your time to attach modi
valthukkal Mr.Shankar, Unmaiyai irakka koorineerkal
Ram oru porambokku…kaasukkaka ehdaiyum seyyvan…aana communist card holder.adanale aal kaattiyum kuda..vevu parkavum poi irukkalam…. ragahavan chinna payyan…. avan annan Hindule economic editor… nalla vasathiyana, mariyathaiyana kudumbathai serndha payyan. enakku therinji aduthavanga kaasukku aasai padaatha kudumbam… vaanathikku konjam ketta peru irukku. Law padikkumpodhu nalla thaiyiriyamana ponnunu peru… kanavane chathru…. Nirmala background sariya iduvarai varalai… trichy SRCle padiccavangannu sollapaduthu. BUt her deeds are against tamil interests…Ivangalla Raghavan thavira yarume nambikkai tharalai…. but raghavanukku public suoport kidaikkave maatenguthu…BJPle nikka aalillathappove [90sle ] thayiriyama nininnu ninnu thothuponavan… senthil kumar sonnnathu pole partha porambokku list kudutha nalla irukkum…. IDNHA ALAVARRA ARIVU KONDATHAA NENICCI KITTU IRUKIRA PIRATHAMARUKKU>>>> TAMIL NATTILE KALUNDRA ENGA KITTTE ILLATHAHAI THANTHAA THAAN MUDIYUMNU EVAN SOLLUVAN…ie CORRUPTION FREE/ INTOLERANCE TOWARDS CORRUPTION…….. tea vithathukku padhila vadai suda pokalam indha PM
semma na
மோடியை பார்த்த மூத்தபத்திரிகையாளர்கள் பட்டியலை வெளியிடவும்
தமிழ்நாடு மக்கள் இதுவரை யார் வரக்கூடாது என்பதற்குத்தான் வாக்களித்து இருக்கிறார்கள் , ஒவ்வவொரு முறையும் இதுதான் நடக்கிறது , இந்த தடவை மக்கள் வாக்கு கண்டிப்பாக யார் வரவேண்டும் என்பதில் இருக்கும் என்பதை நம்ப வேண்டும்.
இப்படி அரசுக்கு ஜால்ரா அடிக்கும் முதலாளிகள் ….. தங்களுக்கு ஜால்ரா அடிப்பவர்களைதான் பொறுப்பில் வைத்திருக்கின்றனர். பாட்டுஎழுதுபவர்களை விட இப்படி பக்கவாத்தியம் வாசிப்பவர்களுக்குதான் பத்திரிகைகளில் மரியாதை. அவர்கள்தான் ‘மூத்த பத்திரிகையாளர்கள்’.
பத்திரிகை valaithal ஜெயித்து விடலாம் என நினைத்து கூப்பிட்டிருக்கர்.. தற்பொழுதய காலத்தில் அனைவருமே பத்திரிகையாளர்கள் தான். ஒரு தவறு செய்தால் உடனடியாக அனைவருக்கும் சென்று சேரும் அளவுக்கு தற்பொழுது டெக்னாலஜி உள்ளது. சமூக வலைத்தள வைத்து வெற்றி பெற்ற நமது பிரதமருக்கு இது தெரிய வாய்ப்பு இல்லையோ? இதற்கு சரியான பதில் அடியை இந்திய மக்கள் கொடுப்பார்கள்.