சிறைச்சாலைகளில் இருக்கிற முஸ்லிம்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 14.2% பேர் முஸ்லிம்கள் என்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு. இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களில் 15.8% பேர் முஸ்லிம்கள் என்கிறது ஒரு ஆய்வு. முஸ்லிம் சிறைவாசிகளில் 21% பேர் தண்டிக்கப்பட்ட கைதிகள்.
காவல் துறையால் கைது செய்யப்பட்டு குற்றம்சாட்டப்படுகிற கணிசமான முஸ்லிம்கள்தான் அவற்றைச் செய்தார்கள் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்ற விசாரணையில் அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர் என்பதை இது காட்டுகிறது. ஆனால்,, அதற்குள் பல ஆண்டுகள் ஓடிவிடுகிறது. பத்தாண்டுகள் வரை சிறையில் வாடியவர்கள் உண்டு.
தண்டிக்கப்பட்டவர்களுக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதற்கும் இடையே இடைவெளி இருக்கிறதே, அது காவல் துறையினரின் மத்தியில் உள்ள பாரபட்சத்தை மட்டும் காட்டவில்லை. நமது நீதித் துறையில் தொழில்முறை நிபுணத்துவம் இல்லை என்பதையும் அது காட்டுகிறது.
நீதித் துறையின் கீழ்மட்டத்துக்கு போகும்போது தொழில்முறை நிபுணத்துவம் குறைவதை ஒருவர் பார்க்கலாம்.
மோஷின் ஷேக் படுகொலை தொடர்பான நீதிமன்ற விசாரணை ஒரு பாடம். புனே நகரைச் சேர்ந்த 24 வயதான அந்த கம்ப்யூட்டர் இன்ஜினீயர் மசூதியிலிருந்து வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார். சமூக வலைதளங்களில் மராத்திய மன்னர் சிவாஜி, சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே தொடர்பான தரக்குறைவான படங்களைப் போட்டதை கண்டித்து இந்து ராஷ்ட்டிர சேனா என்ற அமைப்பு அந்த நேரத்தில் பேரணி நடத்திக்கொண்டிருந்தது. பேரணியில் சென்றுகொண்டிருந்த சுமார் 20 பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கியது.
முஸ்லிம் போல தோற்றமளித்ததால் மோஷ்ஹின் தாக்கப்பட்டதாக நீதிமன்றம் கருதியது. அவரைத் தாக்கிய 23 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் பரோலில் செல்வதற்கு அனுமதி கோரினார். மோஷினின் மதத்தின் காரணமாக அவர்கள் தூண்டப்பட்டார்கள் என்ற அடிப்படையில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி அவர்களுக்கு அனுமதி அளித்தார்.
கொல்லப்பட்டவருக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் இடையில் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. கொல்லப்பட்டவர் வேறு ஒரு மதத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் அவர் செய்த தவறு. இந்த அம்சத்தைக் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாக நான் கணக்கில் எடுத்துக்கொள்கிறேன் என்றார் அந்த நீதிபதி.
கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. கொல்லப்பட்டவர் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராக இருப்பது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர் கொல்லப்பட்டதற்கான நியாயப்படுத்தலாக இருக்க முடியாது என்றது அது. பல்வேறு சமூகங்களின் உரிமைகள் பற்றிய பிரச்சினையை எதிர்கொள்ளும்போது நாட்டின் பன்முகத்தன்மை பற்றிய முழுமையான புரிதலோடு கீழ்நிலை நீதிமன்றங்கள் இருக்க வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியது.
நீதித் துறையின் உச்சியாக இருக்கிற நீதிமன்றம் இத்தகைய அறிவுறுத்தலைத் தர வேண்டியிருக்கிறது என்பது முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு எந்த அளவுக்கு நாட்டின் கட்டமைப்பில் ஊடுருவியிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிற சான்றாக நிற்கிறது.
மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் நிலவுகிற பாகுபாட்டு உணர்வுகளுக்கு எதிராக முஸ்லிம்களைக் காத்து நிற்பதில் உச்ச நீதிமன்றத்துக்கு ஒரு வரலாறே இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றம் அயோத்தி வழக்கு விவகாரத்தில் சர்ச்சைக்கிடமான தீர்ப்பை 2010இல் வழங்கியது. முஸ்லிம்களின் வஃக்ப் வாரிய சொத்துகள் உரிய கட்டிட விதிமுறைகளின்படி கட்டப்படவில்லை என்று 2018இல் தீர்ப்பளித்தது. இரண்டிலுமே தனிப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் அவை அமைந்தன.
அந்தத் தீர்ப்புகளை பாஜக அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு முன்பாக உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்கு உதவ உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிவந்தது. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய கவுன்சிலும் தப்பவில்லை. சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் என்கிற அந்தஸ்து கோரி விண்ணப்பிக்கிற அமைப்புகளை ஆய்வு செய்து முடிவு செய்வதே இந்த கவுன்சிலின் நோக்கம். 2004இல் மன்மோகன் சிங் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த கவுன்சில் இயங்க முடியுமா என்ற அபாய கட்டத்துக்குத் தற்போது வந்துவிட்டது.
இந்த கவுன்சில் உருவாக்கப்பட்டதிலிருந்து 2017 வரையில் 13,331 கல்வி நிறுவனங்களுக்கு ‘சிறுபான்மையினர் நிறுவனம்’ என்ற அந்தஸ்தை வழங்கியிருக்கிறது. கடைசியாக அதன் தலைவராக செயல்பட்டவர் நீதிபதி எம்எஸ்ஏ சித்திக். அவர் 2014இல் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதற்குப் பிறகு யாரும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவில்லை.
இந்த கவுன்சில் எடுத்த முடிவுகளை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. 2018 ஏப்ரலில் உச்ச நீதிமன்றத்துக்கு முறையீடு செய்யப்பட்டபோது கவுன்சில் எடுத்த முடிவுகளை அது உறுதி செய்தது. மத மற்றும் மொழிச் சிறுபான்மையோருக்கு இந்திய அரசியல் சாசனம் வழங்குகிற உரிமைகளை மீண்டும் வலியுறுத்துவதற்கான வாய்ப்பாகவும் இதை உச்ச நீதிமன்றம் பயன்படுத்திக்கொண்டது.
பெரும்பான்மைக் கண்ணோட்டம் உயர் நீதிமன்றங்களில் நடைமுறையில் இருப்பது என்பது நீதித் துறையில் இஸ்லாமியர்களின் பங்கேற்பு குறைவாக இருப்பதோடு இணைந்திருக்கிறது.
2010ஆம் ஆண்டிலிருந்து ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தவிர, மற்ற உயர் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளில் அந்தந்த மாநிலங்களில், இஸ்லாமியர்களின் மக்கள்தொகை விகிதத்துக்கு மிகவும் குறைவான விகிதத்திலேயே முஸ்லிம்கள் நீதிபதிகளாக உள்ளனர்.
ஹைதராபாத் மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றங்களைத் தவிர மற்றவற்றில் இந்த எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்துகொண்டே வந்திருக்கிறது.
மேற்கு வங்கத்தில் 1991இல் முஸ்லிம் நீதிபதிகள் 25% பேர் இருந்தனர். அது 2011இல் எட்டு சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், இதே காலத்தில் மேற்கு வங்கத்தின் முஸ்லிம் மக்கள்தொகை 23.6%இலிருந்து 27 %ஆக உயர்ந்து வந்திருக்கிறது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 1961இல் 67% முஸ்லிம்கள் இருந்தனர். 2011இல் அதுவே 2.9% ஆகக் குறைந்துவிட்டது. அதே நேரத்தில் கர்நாடகத்தில் முஸ்லிம் மக்கள்தொகை சதவீதம் 9.87இலிருந்து 12.9 ஆக உயர்ந்துவிட்டது. இதே காலகட்டத்தில் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் உயர் நீதிமன்றத்தில் முஸ்லிம் நீதிபதிகளின் எண்ணிக்கை 14.3% இலிருந்து 2.9% ஆகக் குறைந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் அதே காலகட்டத்தில் முஸ்லிம்கள் மக்கள் தொகை சதவீதம் 4இலிருந்து 6.6 ஆக அதிகரித்துள்ளது.
இதே கதைதான் பாட்னாவிலும். 1951இல் 25% முஸ்லிம் நீதிபதிகள் இருந்தார்கள். 2011இல் அதுவே 5.4 ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் பிஹார் மாநிலத்தின் மக்கள்தொகையில் முஸ்லிம்களின் சதவீதம் 12.45இலிருந்து 16.9 ஆக உயர்ந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்திலும் இத்தகைய போக்குதான் உள்ளது. 1950களில் உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட 24 நீதிபதிகளில் நான்கு பேர் முஸ்லிம்கள் (16.6%). 60 களில் நியமிக்கப்பட்ட 16 நீதிபதிகளில் எவரும் முஸ்லிம் இல்லை. 70களில் இருந்த 26 நீதிபதிகளில் இருவர்தான் முஸ்லிம்கள். 80களில் இருந்த 33 நீதிபதிகளில் நான்கு பேர்தான் (12%) முஸ்லிம்கள்.
1980களுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் முஸ்லிம்களின் சதவீதம் குறைகிற அதேநேரத்தில் நியமிக்கப்படுகிற முஸ்லிம் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவந்திருக்கிறது. 90களில் இருந்த 40 நீதிபதிகளில் மூன்று பேர், 2000களில் இருந்த 49 பேரில் 2 பேர், 2010 -லிருந்து இருக்கிற 40 பேரில் மூன்று பேர். ( 2012இல் எம்ஒய். இக்பால் மற்றும் எப்எம். இப்ராஹிம் ஆகியோரும் 2017இல் எஸ்எம்.அப்துல் நஜீர் ஆக மூன்று பேர்)
2018 முன்பாக உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள 229 நீதிபதிகளில் 18 முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய மக்கள் தொகையில் 14.2% இருக்கிற முஸ்லிம்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் எட்டு சதவீதத்துக்கும் குறைவாகவே பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பதுதான் மொத்தத்தில் நாம் புரிந்துகொள்ளவேண்டியது.
முஸ்லிம்களின் பங்கேற்பு மேலும் மேலும் குறைந்து வருகிற நிறுவனங்களான மாநில சட்டப்பேரவைகள், காவல் துறை, ராணுவம், அரசு நிர்வாகம் ஆகியவற்றின் வரிசையில் உயர் நீதிமன்றங்களும் சேர்ந்துவிட்டன . உச்ச நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில் அத்தகைய நிலைமையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை மேற்கண்ட எண்ணிக்கை விவரங்கள் காட்டுகின்றன.
மிக முக்கியமானதொரு அமைப்பில் இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மை இனத்தின் பிரதிநிதித்துவம் எப்படி இருக்கிறது என்பதை இந்த எண்ணிக்கை விவரங்கள் காட்டுகின்றன.
வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் புரியும் ஒரே விதமான குற்றங்ங்களுக்கு வேறுபட்ட தண்டனைகள் வழங்கப்படுகின்றன . மேலும் அதிகமான முஸ்லிம் , தலித் நீதிபதிகள் பதவிகளில் இருந்தால் இத்தகைய போக்கு குறையும் என்று ஒருவர் வாதிடலாம் . ஆனால், இதனால் குற்றம் சாட்டப்பட்டிருக்கிற முஸ்லிம்களின் பிரச்சினை தீரும் என்றோ மாவட்ட நடுவர் மட்டத்தில் முஸ்லிம்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் கிடைத்தால் அவர்களும் மற்றவர்களுக்கு சமமாக வாதாடி தங்களது வழக்குகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வார்கள் என்றோ இந்த நிலைமைகளிலிருந்து நாம் முடிவுக்கு வரக் கூடாது.
உயர் சாதிகளைச் சேர்ந்த ஆண்களும் நீதிபதிகளின் வாரிசுகளும் கலந்த முறையில் உச்ச நீதிமன்றத்தின் சமூகக் கலவை இருக்கிறது. இத்தகைய முறையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாத தன்மையோடு உச்ச நீதிமன்றம் இருந்தாலும் சிறுபான்மையோர் உரிமைகளை பாதுகாப்பதிலும் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை உயர்த்திப் பிடிப்பதிலும் நமது உச்ச நீதிமன்றத்துக்கு ஒரு வரலாறு இருக்கிறது என்பதே உண்மை.
ஆனாலும் அதிகாரமிக்க அமைப்புகளில் முஸ்லிம்களின் பங்கேற்பு கணிசமான அளவுக்கு இல்லை என்ற நிலை தொடர்கிறது. இத்தகைய அமைப்புகளில் ஓரளவு இருப்பவர்களின் எண்ணிக்கையும் குறைகிறது. இது, இந்தியாவின் பொதுவாழ்வில் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையும் அனைவரும் பங்கேற்கிற நிலைமையும் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்களை சங்கடப்படுத்துகிற சூழலாகவே இருந்துவருகிறது.
கிறிஸ்டோபர் ஜெப்ரோலொட், கில்ஸ் வெர்னியேர்ஸ்
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் (செப்டம்பர் 10, 2018)
தமிழாக்கம்: த.நீதிராஜன்
@ thennavan முட்டாளே அவன் செய்வது போல் நீயும் செய்ய சொன்னால் உனக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம்?
முட்டாளே அவன் செய்வது போல் நீயும் செய்ய சொன்னால் உனக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம்?
Echha biryani savukku varaikum supply panniviittargala..
https://chat.whatsapp.com/AlWJY1EIdo3FJEWuA5FPMg
*பாரதப் பிரதமர் மண்புமிகு.திரு.நரேந்திர மோடி அவர்கள் பாகிஸ்தான் அரசியல் சட்டைத்தைப் போல் இந்தியாவிலும் சட்டம் இயற்ற வேண்டும் என இந்து சங்கம் கோரிக்கை விடுக்கிறது.*
*மதச்சார்பற்ற நாடு என்று உலகில் எதுவும் இல்லை எனவே இந்தியா இந்துக்களுக்கான நாடு என்பதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும்.*
*இந்துக்கள் கட்சி,காவி கட்சி என்று பெயர் எடுத்த பின்பு நீங்கள் இனித் தயங்கித் தயங்கி நிற்க வேண்டிய அவசியமில்லை.*
*கிருத்துவ,இஸ்லாமியஅடிமைகள் மீண்டும் இந்தியாவை ஆளத் துடிக்கிறார்கள் இப்படிப்பட்ட குழப்பவாத அரசியலில் இந்திய மக்களுக்கு நன்மைகள் செய்து விட முடியாது எனவே இந்துக்கள் மட்டுமே இந்திய அரசியலில் போட்டியிட முடியும் என்ற சட்டத்தை உடனடியாக பிரதமர் அவர்கள் இயற்ற வேண்டும்.*
*கிருத்தவன்,முஸ்லீம் இங்கு வாழலாம் வார்டு உறுப்பினர் கூட ஆக இந்தியாவில் கனவு கூட காணக் கூடாது என்ற நிலைமையில் சட்டம் இயற்ற வேண்டும்.*
*உலகில் 400 கோடி இந்துக்கள் உள்ளனர் ஆனால் இந்துகளுக்கு என ஒரு நாடு இல்லை எனவே இந்துகளுக்கான நாடு இந்தியா என்பதை பிரதமர் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.*
*இந்து மதத்திற்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம் அவற்றை இந்துக்களாகிய நாங்கள் பேசி முடித்துக் கொள்கிறோம் மற்றவர்கள் எங்களுக்குள் தலையிட உரிமையில்லை.*
*பாகிஸ்தானின் மத அரசியல்.*
*பழைய கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, பாக்கிஸ்தானிலே மத அமைப்புகள் தேர்தலிலே தோற்றுவிட்டன என நம்மூர் மூளை செத்த மீடியாக்கள் ஊளையிடுகின்றதே. என்ன உண்மை?*
*பாக்கிஸ்தானிலே அகமதியாக்கள் எனப்படும் ஒரு பிரிவினர் சட்டப்படி அவர்களை முஸ்லீம்கள் என சொல்லிக்கொள்ள முடியாது. சொன்னால் சிறைத்தண்டனையிலே இருந்து தூக்கு வரை உண்டு.*
*பாஸ்போர்ட் வாங்கும் போது முஸ்லீம் என்றால் அவர்களின் மதச்சடங்கு ஒன்றை செய்யவேண்டும். இதுவும் அகமதியாக்களை கண்டுபிடிக்க.*
*பாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்திலேயே முஸ்லீம்கள் மட்டும் தான் பிரதமர், ஜனாதிபதி, ராணுவ தளபதி போன்ற பதவிகளுக்கு வரமுடியும் என இருக்கிறது.*
*பாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டம், குற்றவியல் சட்டம் என எல்லாவற்றிலும் முஸ்லீம் சட்டங்களை பின்பற்றியே இருக்கிறது. ஹுடூட் சட்டம் என முஸ்லீம் மத சட்டத்தை முழுமையாக பின்பற்ற வழிசெய்யும் சட்டம் தனியே உண்டு.*
*நவாஸ் ஷெரீப் பதவி நீக்கம் செய்யப்பட்டதும் இந்த மத சட்ட அடிப்படையிலே நேர்மையாக இல்லை என.*
*இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்களுக்கு தனி வாக்குரிமை தனி தொகுதிகள் தான். அவர்கள் பொது தொகுதிகளிலே போட்டியிடமுடியாது. மொத்தமாக பத்து தொகுதிகள் தேசிய சட்டமன்றத்திலே. வாக்காளர் பட்டியல், மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியல் எல்லாமே தனிதான்.*
*போட்டியிடுவேன் என கிளம்பிய சீக்கியரை குண்டு வைத்து கொன்றார்கள்.*
*பெடரல் ஷரியத் கோர்ட் எனும் முஸ்லீம் மத சட்ட நிர்ணைய நீதிமன்றம் இருக்கிறது. முஸ்லீம் மத சட்டங்களின் படி தான் அரசு செயல்படுகிறதா என்பதை இது கண்கானிக்கும் இதன் தீர்ப்புகளை ஷரியத் அமர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் அமர்விலே மட்டுமே மேல்முறையீடு செய்யப்படும்.*
*மத நிந்தனைக்கான சட்டம் மிகவும் கொடுமையானது. அதிலே இதுவரை கிறிஸ்துவர்களே பெரும்பாலும் தண்டனை அனுபவித்து வந்துள்ளர். மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு கிறிஸ்துவ சிறுமிக்கு விடுதலை தரவேண்டும் என சொன்னதற்காக மாநில ஆளுநர் அவரின் பாதுகாப்பு படையினராலேயே சுட்டுகொல்லப்பட்டார்.*
*முஸ்லீம்களின் மதவழிபாட்டிடத்திலே இருந்து தண்ணீர் குடித்தற்காக மதநிந்தனை குற்றம் சாட்டப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவர்கள் உண்டு.*
*தேர்தலிலே போட்டியிடும்போதே மத சடங்கை செய்து கையெழுத்து போட்டுத்தான் போட்டியிட முடியும். போன மாதம் எல்லா அரசு ஊழியர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அவர்களின் மதத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.*
*தேர்தலிலே போட்டியிடும் போது மத சடங்கை செய்யவேண்டியதில்லை எனும் விதியை தளர்த்த முயன்ற போது பாக்கிஸ்தானிய தலைநகரத்தை தீவிரவாதிகள் முற்றுகையிட்டு அரசை மன்னிப்பு கேட்க வைத்தார்கள். பின்னர் அது எழுத்துப்பிழை என திரும்ப பெறப்பட்டது.*
*சாக்கடை அள்ளுதல், குப்பை பொறுக்குதல், போன்ற வேலைகளுக்கு இந்துக்களையும் கிறிஸ்துவர்களையும் மட்டுமே வேலைக்கு எடுக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டு அதன் படியே இந்துக்களும் கிறிஸ்துவர்களும் மட்டுமே வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள்.*
*மூஸ்லிம் மத சடங்கு இருப்பதால் சாக்கடையிலே விழுந்த நோயாளியை பார்க்க மாட்டேன் என சொன்ன அரசு மருத்துவர்களும் உண்டு. இன்று வரை நிலை அப்படித்தான்.*
*இப்போது பிரதமர் ஆக இருக்கும் இம்ரான்கானின் கைபர் பக்குன்வா மாநிலத்திலே ஆட்சியிலே இருந்த போது தீவிரவாதிகளின் அமைப்புகளுக்கு பல ஆயிரம் கோடிகளை அள்ளி வீசியிருக்கிறது. பஞ்சாப்பிலும் சிந்துவிலும் தீவிரவாத அமைப்புகளிடம் எல்லா கட்சிகளும் ஆதரவு கேட்டு பின்னரே வென்றிருக்கின்றன. எதிர்த்து பேசிய ஆட்கள் குண்டு வைத்து கொல்லப்பட்டார்கள்.*
*கவுன்சில் ஆப் இஸ்லாமிக் ஐடியாலஜி , இஸ்லாமிய கொள்கைக்கான கூட்டம் எனும் அமைப்பு மத்திய அரசும் மாநில அரசும் நிறைவேற்றும் சட்டங்களும் விதிகளும் முஸ்லீம் மத சட்டப்படி இருக்கிறதா என சரிபார்த்து அரசுக்கு ஆலோசனைகள் சொல்லும். கற்பழிப்புக்கு மரபணு சோதனைகளை ஏற்ககூடாது என சொல்லியிருக்கிறது.*
*விபத்திலே இந்துக்களோ சீக்கியர்களோ கிறிஸ்துவர்களோ இறந்தால் சவப்பெட்டியை தனியெ வைத்து காபிர் என அடையாளமிடுவது தான் பாக்கிஸ்தானிய வழக்கம்.*
*பாகிஸ்தானில் நிலைமை இவ்வாறாக இருக்கிறது ஆனால் இந்தியாவில் மட்டும் இந்துக்களையும்,இந்திய நாட்டு வளங்களையும் சுரண்டித்தின்று வருகிறார்கள் கிருத்துவர்கள்,இஸ்லாமியர்கள் எனவே இனி இந்துக்கள் விழிப்புடன் இருப்போம் இந்து தேசம் அமைக்க இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு ஒவ்வொரு இந்துகளும் அழுத்தம் கொடுப்போம்.
மிகச்சரியான பதிவு