சென்னை நகரில் போட் கிளப் ரோட் என்பது, பெரும் செல்வந்தர்கள் மட்டுமே வசிக்கும் ஒரு குடியிருப்புப் பகுதி..
இந்த போட் கிளப் ரோட்டில் ஒரு கிரவுண்ட் (2400 சதுர அடி) விலை 9 கோடி ரூபாய். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும், பரம்பரை பணக்காரர்கள் மட்டுமே, இந்த இடங்களை வாங்க இயலும். சென்னை நகரத்தில் போக்குவரத்து காரணமாக சுற்றுச் சூழல் மாசு அவ்வளவாக இல்லாத ஒரு இடம் தான் போட் கிளப் சாலை. சொல்லப் போனால், போட்கிளப் சாலையில் இடம் வைத்திருப்பது என்பது ஒரு கவுரவம்.
தமிழகமெங்கும், இடங்களை வளைத்துப் போட்டது போலவே போட் கிளப் சாலையிலும், இஷ்டத்துக்கு வாங்கித் தள்ளியிருக்கிறார்கள், இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள்.
சாம்பிளுக்கு, இந்தச் செல்வந்தர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் போட் கிளப் சாலையில் வாங்கிய சொத்துக்களை மட்டும் பார்ப்போம்.
3.86 கிரவுண்ட் நிலம், வாங்கியவர் கல் பப்ளிகேஷன்ஸ், (கேடி சகோதரர்கள்) எண் 229, கச்சேரி ரோடு, மைலாப்பூர், (ஆவண எண், 1259/2007) ஆவண மதிப்பு, 2.58 கோடி. அசல் மதிப்பு, 32 கோடி.
2.6 கிரவுண்ட் நிலம். வாங்கியவர் கயல்விழி வெங்கடேஷ், (அழகிரியின் மகள்) எண்.24, பத்மம், கலாஷேத்ரா அவென்யூ 1வது தெரு, திருவான்மியூர், சென்னை (ஆவண எண் 993/2008) ஆவண மதிப்பு 2.20 கோடி. அசல் மதிப்பு 25 கோடி.
1800 சதுர அடி நிலம். வாங்கியவர் கயல்விழி வெங்கடேஷ், (அழகிரியின் மகள்) எண்.24, பத்மம், கலாஷேத்ரா அவென்யூ 1வது தெரு, திருவான்மியூர், சென்னை (ஆவண எண் 996/2008) ஆவண மதிப்பு 1.08 கோடி. அசல் மதிப்பு 7 கோடி.
3 கிரவுண்டு நிலம். வாங்கியவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா (சன் பிக்சர்ஸ் தலைமை அதிகாரி) ப.எண் 142/A புதிய எண் 60, ஹபிபுல்லா ரோடு, தி.நகர், சென்னை. (ஆவண எண். 979/2009) ஆவண மதிப்பு 1.29 கோடி. அசல் மதிப்பு 27 கோடி.
1 கிரவுண்ட் மற்றும் 1400 சதுர அடி. வாங்கியவர் மகேஷ்பாலா ஹன்ஸ்ராஜ் (சக்சேனா மனைவி) ப.எண் 142/A புதிய எண் 60, ஹபிபுல்லா ரோடு, தி.நகர், சென்னை. (ஆவண எண். 2024/2010) ஆவண மதிப்பு 2.40 கோடி. அசல் மதிப்பு 14 கோடி.
லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட்……..
2.217 கிரவுண்ட் அல்லது, 5321 சதுர அடி…. வாங்கியவர் டேனியல் சாமுவேல் (ராசாத்தி அம்மாள் வீட்டில் பணியாற்றுபவர்) எண்.1, குறுக்குத் தெரு, ஸ்ரீநகர் காலனி, சைதாப்பேட்டை, சென்னை. (ஆவண எண் 961/2010) ஆவண மதிப்பு, 3.33 கோடி. அசல் மதிப்பு 25 கோடி.
கடைசியாக உள்ள இந்தச் சொத்து, 2ஜி விவகாரத்தில் தொடர்புடைய சொத்தாக இருக்கலாம். சிபிஐ அதிகாரிகள் இதை கவனத்தில் எடுத்து, இதையும் அட்டாச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புவோம்.
இந்த செல்வந்தர்களின் சொத்துக்களை பார்த்து விட்டோம் அல்லவா ? கடந்த இதழ் டெஹல்காவில் மீனாட்சி என்ற ஒரு முதியவரைப் பற்றி ஒரு செய்தி வந்திருக்கிறது.
இந்த மீனாட்சிக்கு 5 மகள்கள். இவர் மீனாட்சியம்மன் கோயில் வாசலில் பூ விற்றுக் கொண்டிருக்கிறார். இவர் கணவர் உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். மொத்தம் ஐந்து மகள்கள். இதில் ஒரு மகள் விவாகரத்து செய்து, மூன்று குழந்தைகளோடு, மீனாட்சியோடு வசித்து வருகிறார். காலை 10 மணி முதல் மல்லிகை மற்றும் கனகாம்பரம் வியாபாரம் செய்தால் ஒரு நாளைக்கு 50 முதல் 100 வரை லாபம் கிடைக்குமாம். சில நாட்களில் வியாபாரம் சரியாக ஆகா விட்டால் வெறும் 20 ரூபாயோடு, வீட்டுக்கு செல்லுவார். வியாபாரம் ஆகாத பூக்களை மீனாட்சியம்மனுக்கு படைத்து விட்டுச் செல்வாராம்.