இந்தியா முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகார் மீது உச்சநீதிமன்றம் எடுத்துள்ள நடவடிக்கை சாமானிய மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஏன் என்பதற்கு முன்பு ஒரு சிறு உதாரணம் பார்ப்போம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிகிறார் ஒரு இளநிலை உதவியாளர். அவர் தன்னை மாவட்ட ஆட்சியர் ஜாதியை சொல்லி திட்டி விட்டார் என்று புகார் கூறுகிறார். புகார் கூறிய இளநிலை உதவியாளர் ஒரு கிரிமினல் என்று கூறிய மாவட்ட ஆட்சியர் அந்தப் புகாரை விசாரிக்க அவருக்கு கீழே பணியாற்றும் மூன்று தாசில்தார்களை நியமிக்கிறார்.
இது மாவட்ட ஆட்சியருக்கு எதிரான புகார் என்பதால் அந்த விசாரணை வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், விசாரணையில் தனக்கு உதவியாக ஒரு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்றும் புகார் கூறிய இளநிலை உதவியாளர் கோரிக்கை விடுக்கிறார். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. பிறகு இளநிலை உதவியாளர், மாவட்ட ஆட்சியர் மீதான புகார் குறித்த ஆதாரங்களை அளிக்கிறார். வழக்கறிஞர் உதவி வழங்க முடியாது என்றும், விசாரணை அறிக்கையின் நகல் வழங்க முடியாது என்றும் கூறுகின்றனர்.
விசாரணையின் போது அந்த இளநிலை உதவியாளர், ஏறக்குறைய மிரட்டப்படுகிறார். அவர் வைத்த கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுகின்றன. அதனால் அந்த விசாரணையில் தன்னால் பங்கெடுக்க முடியாது என்று அந்த இளநிலை உதவியாளர் கூறுகிறார்.
பிறகு மூன்று தாசில்தார்களும் சேர்ந்து, இளநிலை உதவியாளர் அளித்த புகாரில்உண்மையில்லை என்று அறிக்கை அளிக்கின்றனர். சரி இப்போது இந்த அறிக்கையை எதிர்த்து, இளநிலை உதவியாளர் உச்சநீதிமன்றம் செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உச்சநீதிமன்றம் என்ன செய்திருக்கும் தெரியுமா ?
விசாரணை முறையில்லாமல் நடை பெற்றிருக்கிறது.
புகார் அளித்தவருக்குவழக்கறிஞரின் உதவி கூட வழங்கப்படவில்லை.
விசாரணை வெளிப்படையாக நடத்தப்படவில்லை.
மாவட்ட ஆட்சியருக்கு கீழான பதவியில் உள்ள தாசில்தார்கள் எப்படி மாவட்ட ஆட்சியர் மீதான புகாரை விசாரிக்க முடியும் ?
புகார் அளித்தவருக்கு போதுமான வாய்ப்புகள்வழங்கப்படவில்லை.
விசாரணை ஒருதலை பட்சமாக நடந்துள்ளது.
புகார் அளித்தவர் விசாரணையில் பங்கெடுக்காத நிலையில் நடந்து முடிந்த விசாரணை சட்டவிரோதமானது.
ஆகையால், இந்த விசாரணையை ரத்து செய்து, மாவட்ட ஆட்சியரை விட உயர்ந்த அதிகாரம் பெற்ற ஒரு அதிகாரியை வைத்து விசாரணை நடத்த உத்தரவிடுகிறோம் என்று கூறி விட்டு, அந்தத் தீர்ப்பில், அரசியல் அமைப்புச் சட்டம், அடிப்படை உரிமை, சமத்துவம், பழைய உச்சநீதிமன்றதீர்ப்புகள், இங்கிலாந்தின் ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் தீர்ப்புகள் எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்வார்கள்.
இப்போது நாம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மேல் எழுந்த புகார் குறித்த விசாரணைக்கு வருவோம்.
மேற்சொன்னது போன்றதான புகார்தானே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது எழுந்துள்ளது ? இதற்கு மட்டும் எந்த விதிகள், தீர்ப்புகள், நடைமுறைகள் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் ஒருதலைபட்சமாக விசாரணை நடத்தலாமா ? புகாரளித்த பெண்ணுக்கு உதவியாக வழக்கறிஞரை கூட அமர்த்திக் கொள்ள அனுமதி அளிக்காமல் விசாரணை நடத்தலாமா ?
இந்திய நீதித்துறையின் ஒரு கீழான தருணம் 1975ம் ஆண்டு ஏ.டி.எம்.ஜபல்பூர் வழக்கில் நிகழ்ந்தது. அது நெருக்கடி நிலை அமலில் இருந்த காலம். அரசியல் அமைப்பு சாசனம் பிரிவு 21ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘வாழும் உரிமை’ குறித்த விதிமுறைகள் நெருக்கடி நிலை காலகட்டத்திற்குப் பொருந்துமா என்கிற வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்திரா காந்தி தலைமையிலான அரசு, நெருக்கடி நிலை காலத்தில் அடிப்படை உரிமையான வாழும் உரிமை இல்லை என்று வாதிட்டது. தலைமை நீதிபதி, ஏ.என்.ரே, நீதிபதிகள் எச்.எம்.பேக், ஒய்.வி.சந்திரசூட், பிஎன்.பகவதி மற்றும் எச்.ஆர்.கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, நெருக்கடி நிலை காலத்தில் வாழும் உரிமை இல்லை என்று பெரும்பான்மை அடிப்படையில் தீர்ப்பினை வழங்கியது. நீதிபதி எச்.ஆர்.கண்ணா மட்டும் இதை எதிர்த்து தனித் தீர்ப்பு எழுதினார்.
இதே போன்ற ஒரு நெருக்கடியான சூழலைத் தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகாரை கையாள்வதில் உச்ச நீதிமன்றம் சந்தித்து வருகிறது. அந்தப் புகார் உண்மையா இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும். அந்தப் புகாரை உச்சநீதிமன்றம், கையாண்ட விதம்தான், இந்திய நீதித் துறையைத் தலைகுனிவுக்கு ஆளாக்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் ஒரு சாதாரண கடைநிலை ஊழியர் தலைமை நீதிபதி தன்னை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியதாக புகார் கூறுகிறார். பாலியல் தொல்லைக்கு சம்மதம் தெரிவிக்காததால், தான் வேலை நீக்கம் செய்யப்பட்டதாகவும், பொய் வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டதாகவும், காவல் துறையில் உள்ள தன் கணவரும் அவர் சகோதரரும் அற்ப காரணதுக்காக பணி இடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் 22 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு புகார் அனுப்புகிறார். இது ஊடகங்களில் செய்தியாகிறது.
ஒரு நல்ல உச்சநீதிமன்ற நீதிபதி, உடனடியாக, தன் மீது அந்த பெண் கூறிய புகாரை, வெளிப்படையாக விசாரிக்க வேண்டும் என்று, தனக்கு அடுத்த நீதிபதிக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால், புகாருக்குஉள்ளான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ஒரு விடுமுறை நாளில், அவரே தலைமை ஏற்று, வேறு இரண்டு நீதிபதிகளை தேர்ந்தெடுக்கிறார். புகார் அளித்த பெண்ணை கிரிமினல் என்று கூறுகிறார். இது நீதித்துறையின் சுதந்திரத்துக்கு விடப்பட்ட சவால் என்கிறார். தன் வழக்குக்கு தானே நீதிபதியாக இருக்கக் கூடாது என்ற அடிப்படை சட்டத்தை மீறுகிறார்.
ஓரிரு நாளில், சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு வழக்கறிஞர், தாவூத் இப்ராஹிமும், ஜெட்ஏர்வேஸ் உரிமையாளர் நரேஷ்கோயலும் சேர்ந்து நீதித்துறையை முடக்க சதி செய்வதாக கூறுகிறார். இது குறித்து மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பட்நாயக், இந்தப் புகாரை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது. இதன் பின்னணியில் தான் ரஞ்சன் கோகோய் மீதான வழக்கினையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை, இரண்டாவது மூத்த நீதிபதி போப்டே, ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய குழு விசாரிக்கும் என்று முடிவெடுக்கப்படுகிறது.
புகார் தலைமை நீதிபதி மீதானது. விசாரணைக் குழுவில் உள்ள நீதிபதிகள் அனைவரும் தலைமை நீதிபதிக்கு கீழ் பணியாற்றுபவர்கள். நேர்மையாக, பாரபட்சமின்றி விசாரணை நடக்கிறது என்பதை உலகுக்கு வலியுறுத்தும் வகையில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அந்த விசாரணை குழுவில் இடம் பெற செய்திருந்தால், அந்த விசாரணைக் குழுவின் முடிவை எந்த வகையிலும் கேள்விக்குள்ளாக்க முடிந்திருக்காது. ஆனால், அதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்யவில்லை.
விசாரணைக் குழு அமைக்கப்பட்டதும், புகாரளித்த பெண், தனக்கு உதவியாக வழக்கறிஞர் வேண்டும் என்றும், விசாரணை, வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறார். இந்த கோரிக்கையில் என்ன தவறு இருக்க முடியும் ? எல்லாவற்றிலும்வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று பல்வேறு வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியுள்ள உச்சநீதிமன்றத்துக்கு இந்தக் கோரிக்கையில் என்ன நெருக்கடி அமைந்து விட முடியும் ? இன்னும் சொல்லப் போனால், விசாரணை வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தால், விசாரணை பாரபட்சமானது என்று யாருமே சொல்ல முடியாமல் போயிருக்கும் அல்லவா ? அப்படி இல்லாமல் பூட்டியஅறையில், யாருக்கும் தெரியாமல், விசாரணையை நடத்த வேண்டிய அவசியம் என்ன ?
வழக்கறிஞர் உதவி, வீடியோ பதிவு ஆகிய தனது கோரிக்கைகள் மறுக்கப்பட்டதால், அந்தப் பெண், இனி இந்த விசாரணையில் பங்கெடுக்க முடியாது என்று சரியாகவே முடிவெடுத்தார். ஏன் விசாரணையில் பங்கெடுக்க முடியாது என்பதற்கானவிளக்கத்தை அளித்த அந்த பெண், “வழக்கறிஞர் உதவி இல்லாமல் நடக்கும் விசாரணை தனக்கு அச்சமூட்டும் வகையில் உள்ளது. எனக்கு வலது காது கேட்காத காரணத்தால், விசாரணையில் என்ன வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது என்பது எனக்கு புரியவில்லை. ஏப்ரல் 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பதிவு செய்யப்பட்ட எனது வாக்குமூலத்தின் நகல் கூட எனக்கு வழங்கப்படவில்லை. இனியும் என்னால் விசாரணையில் பங்கெடுக்க முடியாது” என்று கூறி விசாரணையில் இருந்து விலகினார்.
இந்தக் கட்டத்தில், விசாரணை குழு உறுப்பினர்களாக இருக்கும் நீதிபதிகளுக்கு கடிதம் எழுதிய, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தனது கடிதத்தில், “உச்ச நீதிமன்றத்தின் மாண்பு இந்த விசாரணை எப்படி நடைபெறுகிறது என்பதை பொறுத்தே அமையும். நியாய உணர்வு கொண்டோர், பாரபட்சமில்லாதோர் என்றுமக்கள் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அந்த பெண் விசாரணையில் இருந்து விலகியதற்காக கூறிய காரணங்களை ஆராய்ந்து, அந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். புகாரளித்த பெண்ணுக்கு வழக்கறிஞரின் உதவி வழங்க மறுத்தது ஒரு மோசமான பிழை. அந்தப் பெண்ணின் மாண்பை காக்க வேண்டியதும் உச்ச நீதிமன்றத்தின் கடமை. வழக்கறிஞரின் உதவி என்பது சலுகை அல்ல. அந்த பெண்ணின் உரிமை. ஒரு மூத்த பெண் வழக்கறிஞரை விசாரணைக் குழுவுக்கு உதவியாக (Amicus Curiae) நியமிக்க வேண்டும்” என்று தனது கடிதத்தில் நீதிபதி சந்திரசூட் கூறியிருந்தார்.
ஆனால், நீதிபதி சந்திரசூடின் கடிதம் கணக்கில் கொள்ளப்படவேயில்லை. அந்த பெண் விசாரணையில் பங்கெடுக்காமலேயே, விசாரணை குழு தனது முடிவை வெளியிட்டுள்ளது. அந்தப் பெண் அளித்த புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது. மேலும், விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்படாது என்றும் அந்த செய்திக் குறிப்பு கூறுகிறது.
இதுதான் ஒரு விசாரணையை நடத்தும் முறையா ? இந்தியாவின் அனைத்து துறைகளுக்கும், அமைப்புகளுக்கும், நியாயமான வழிமுறை, நீதி, நேர்மை, நியாயம் என்பதை கற்றுக் கொடுக்கும், வழிகாட்டும் உச்சநீதிமன்றம், தங்களது நீதிபதிகளில் ஒருவர் மீது புகார் வந்தால் எப்படி நடந்து கொள்வோம் என்பதில் நேர்மை முகமூடியை இழந்து அம்பலப்பட்டு நிற்கிறது.
எங்கள் நீதிபதிகளில் ஒருவர் மீது புகார் வந்தால், நியாயமான வழிமுறைகள், நீதி பரிபாலனம், இயற்கை நீதி, அரசியல் சாசனம் என்ற எதையுமே மதிக்க மாட்டோம் என்பதையே ஒரு செய்தியாக உலகுக்குஉணர்த்தியுள்ளதுஉச்சநீதிமன்றம்.
சட்டத்தின் மாண்பை நிலைநாட்ட வேண்டிய, அரசியல் அமைப்பு சட்டத்தின் காவலனான உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாங்கள் சட்டத்தை மதிக்க மாட்டோம் என்பதையே உரத்த செய்தியாக உலகுக்கு உணர்த்தியுள்ளார்கள்.
இந்திய அரசியல் அமைப்புச்சட்டப்பிரிவுகள் 14 மற்றும் 21 ஆகியவை வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் எல்லோருக்கும் சமம் எனும்போது ஒரு பெண் உச்சநீதிமன்ற ஊழியர் என்பதனால் மட்டும் இல்லாமல் போய் விடுமா என்ன ?
ஹரியாணாவை சேர்ந்த நவீன்என்பவர், ரஞ்சன்கோகோய் மீது புகாரளித்த பெண், உச்சநீதிமன்றத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி, 50 ஆயிரம் ரூபாய் ஏமாற்றியதாக டெல்லி திலக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். அவர் பணம் கொடுத்ததாக கூறுவது 2017ம், ஆண்டு. அவர் குடியிருப்பதோ ஹரியானாவில். ஹரியானாவிலிருந்து, 2019 ஏப்ரல் மாதம் டெல்லி வந்து, திலக் நகர் காவல் நிலையத்தில் இந்த பெண் மீது புகார் அளிப்பதும், உடனடியாக டெல்லி காவல் துறையினர் அப்பெண் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதும்யதேச்சையானதா என்ன ? காவல் துறையில் பணியாற்றும் அப்பெண்ணின் கணவரும், அவர் சகோதரரும், ஒரே நாளில் பணி இடை நீக்கம் செய்யப்படுவதும் யதேச்சையான நிகழ்வா என்ன ?
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் சேர்ந்து வெளியுலகத்துக்கே தெரியாமல், ஒரு விசாரணையை நடத்தி முடித்து, அந்த விசாரணை அறிக்கையையும் வெளியிட மாட்டேன் என்று சொல்வது எத்தகைய அநீதி ?
எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவுக்கே சட்டம் சொல்லித் தரும் உச்சநீதிமன்ற நீதிபதிகள், சட்டம் எங்களுக்கு இல்லை என்று சொல்கிறார்கள் என்பதே இவர்கள் நடத்தையின் பொருள்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது சுமத்தப்பட்ட பாலியல் புகாரில் முகாந்திரம் இல்லை என்று அறிக்கை அளித்ததும், புகாரளித்த பெண், இவ்வாறு கூறினார்.
“உச்சநீதிமன்றத்தின் விசாரணைக் குழு, நான் அளித்த புகாரில் முகாந்திரம் என்று முடிவெடுத்திருப்பதை கண்டு, ஒரு முன்னாள் உச்சநீதிமன்ற ஊழியராக, விரக்தியடைகிறேன். இந்நாட்டின் ஒரு பெண் குடிமகளாக எனக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக கருதுகிறேன்.
எனது பணி இடைநீக்கம், சட்டவிரோதமான பணி நீக்கம், மற்றும் நானும் என் குடும்பத்தினரும் சந்தித்த அவமானங்கள் குறித்த அனைத்து ஆதாரங்களையும் அளித்த பின்னரும், எனக்கு நீதி வழங்கப்படவில்லை. எனக்கு நீதி கிடைக்காது என்ற எனது அச்சம் உண்மையாகி உள்ளது”.
இதை விட உச்ச நீதிமன்றத்துக்கு வேறு அவமானம் இருப்பதாக நான் கருதவில்லை.
உச்சநீதிமன்ற விசாரணைக் குழுவின் முடிவை எதிர்த்து, இன்று பெண்களும், சமூக ஆர்வலர்களும் உச்சநீதிமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். உச்சநீதிமன்றத்தை சுற்றி 144 தடை சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகாரை மூடி மறைக்க முயற்சி செய்வதன் மூலம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒரு வரலாற்று பிழையை இழைத்துள்ளார்கள்.
ஏ.டி.எம்.ஜபல்பூர் தீர்ப்பில் இழைக்கப்பட்ட வரலாற்றுப் பிழையை, உச்சநீதிமன்றம், 40 ஆண்டுகள் கழித்து திருத்திக் கொண்டது. அந்த ஐந்து நபர் அமர்வு வழங்கியத் தீர்ப்பை, “தனி நபர் உரிமை” தொடர்பாக தீர்ப்பு வழங்கிய 9 நீதிபதிகள் அமர்வு, திருத்தியது.
இது போல 40 ஆண்டுகளை எடுத்துக் கொள்ளாமல் இந்த பிழையை உச்சநீதிமன்றம் திருத்திக் கொள்ளும் என்று நம்புவோம். நாற்பது ஆண்டு காலம் கழித்து தான் இந்த வழக்கிற்கு நியாயம் கிடைக்குமென்றால் அது வெற்றுக் காதிதக் குறிப்பாக இருக்குமே தவிர, பாதிக்கபப்ட்ட பெண்ணுக்கான நீதியாக இருக்காது,
ஏனெனில் இந்தப் புகாருக்கான விசாரணை என்பது தனி நபர் ஒருவரைக் காப்பாற்ற வேண்டி மேற்கொள்ளப்பட்டது மட்டும் அல்ல, இந்த நாட்டில் வாழ்கிற ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள உழைக்கும் பெண்களையும் மையமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய விசாரணை. இதில் ஏற்பட்டிருக்கிற சறுக்கல் என்பது ஒட்டுமொத்த இந்திய உழைக்கும் பெண்களையும் மறைமுகமாக அச்சுறுத்துவது தான்.
மரணித்திருந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நல்லடக்கம் செய்திருக்கிறார்கள்
This not a mistake to be rectified. This is violation of natural justice, the committed person should be punished.
Leave the trial. One can imagine if the women adjust with Chief justice she can manipulate the judgement easily thereby earn huge amount of money. Isn’t that woman so much Noble ? reject that chance.
Other way what is the purpose that 65 years old learnt judge to indulge in so cheap activity knowing that exposure will tornish his own status also the nation. Both the questions are logical , can’t answer.
இல்லை இரண்டும் சரி கிடையாது. இதற்கு முந்தைய கட்டுரையை வாசித்து பாருங்கள், கோகோய் அந்த பெண்ணை சரி கட்ட நினைத்தபோது அவரின் மைந்துனருக்கு வழங்கப்பட்ட பணி ஆணை இந்த பெண்ணுக்கு பணி இடம் மாற்றப்பட்டு கோகோயின் வீட்டில் பணியாற்ற உத்தரவிட்டது, அந்த பெண்ணின் கணவருக்கு பணியிடை நீக்கம் அளித்தது, இப்பெண்ணுக்கு பணியிடை நீக்கம் அளித்தது போன்ற உத்தரவுகளின் தேதிகளையும் அவைகள் எவ்வளவு வேகமாக நடைமுறைபடுத்தப்பட்டது என்பதையும் உற்றுநோக்கினால் நீங்கள் சொன்ன இரண்டு லாஜிக்கில் ஒன்று மட்டுமே உண்மையாக இருக்க முடியும் என்பது தெளிவாகும் நண்பரே…
அந்த பெண் அவ்வளவு நேர்மையாக இருந்தார் என்றால் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் தான்.
ஆனால் அவருக்கு ஆதரவு குரல் கொடுக்க பெண்ணிய அமைப்புக்கள் முன் வராதது ஆச்சரியமாக உள்ளது.
ஆம் பெண்ணிய அமைப்புகள் நீதிமன்றத்திற்கு வெளியே போராடினார்கள், ஆனால் அது செய்தியாக விடவில்லை மற்றும் நீதிமன்றத்திற்கு வெளியே 144 தடை போடப்பட்டது நண்பா..
சட்டம் தன் கடமையைச் செய்யும்! சாமானிய மக்களுக்கு மட்டும் அதிகாரம், பதவியில் இருப்பவர்கள், பெரும் நிறுவன தலைவர்களுக்கு இல்லை மற்றும் ஒருமுறை வலராற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது வாழ்க ஜனநாயகம் இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் … அனைவரும் இந்தியர் என்பதில் பெருமை கொள்ளுவோம்
When it applies to the judge himself the Justice became cruel, now you can understand that in this system right from justice to any thing is possible for rich & powerful person only no for common man
இந்த கட்டுரையை உடனுக்குடன் இன்றே வெளியிட்டதற்கு நன்றி.!
நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல் பாடுகளை ஆட்சேபித்து இந்த நீதிபதி இரஞ்சன் கோகாய் மூன்று சக நீதிபதிகளுடன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து நியாயம் கேட்டவர். தற்போது இந்த மாதிரி செயலை செய்திருக்கிறார் என்பதையும் நம்ப முடியவில்லை.
எது எப்படியோ, இப்போது நடத்த பட்ட உள் விசாரணை in-camera proceeding சரியான முறையில் நடக்கவில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. உச்ச நீதிமன்றமே தடம் புரண்டு விட்டால் முடிவு என்னாகும்?
இந்த நாட்டில் நேர்மையான அரசியல் கட்சிகள் இருந்தால் impeachment கொண்டு வந்து தவறை சீர்படுத்தி ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். அதுதான் இங்கே இல்லையே!
Government in a fraudulent body to make any crime legally