ஒங்க அண்ணாத்தே கலாநிதி லேங்குவேஜ்ல பேசுனாத் தானே சார் ஒனுக்கு நெல்லா புரியும் ? அதுனாலதான் அதே லேங்குவேஜ்….
இன்னா தெனாவெட்டா இருந்த சார் நீ ? என்னா நெக்கலு, நையாண்டி ? யாருமே ஒன்ன ஒன்யும் பண்ண முடியாதுன்னு என்னா திமிரு ஒனுக்கு ?
நாளு பூரா ரிக்ஷா வலிச்சாலும், சாயங்காலம் ஒரு கட்டிங்குக்கு கூட தேர மாட்டேங்குது… சனியன் இந்த கஸ்மாலத்த உட்டுட்டு, சால்ட் கோட்ர்ஸ்ல மூட்ட தூக்கலான்னு பாத்தா ஒடம்பு கோஆப்பரேட் பண்ண மாட்டேங்குது… கட்டினு வந்த மூதேவி எப்போ பாத்தாலும், துட்டு குடு, துட்டு குடுன்னு கூவிக்கினே கீது… அது பெத்து வெச்சுருக்குற சனியன் பொஸ்தகம் வாங்கனும், பொயல வாங்கனும்னு பேஜார் பண்ணிக்கினு இருக்கு…. பொயப்பு வாயிக்கும் வவுத்துக்கும் கரீட்டாக் கீது….. பொயப்பே போராட்டமா எங்க லைஃப் போயிக்குனுக் கீது….
நீங்க இன்னாடான்னா, தெனிக்கும் ஒரு காரு…. ஊரு ஊருக்கு பங்களான்னு வாங்கிக்குனே போறீங்க… ? சரி… எல்லாம் பெரீய்ய எடத்து வெவகாரம்… அவுங்கள்ளாம் பொறக்கும்போதே பணக்காரங்களா கீறாங்க…. நம்ப தலையெயுத்து… இப்டி கெடந்து அல்லாடுறோம்னு நென்சுக்கினு இருந்தேன்….
நமக்கு ஒன்யும் படிக்கத் தெரியாது சார்…. ஆனா நம்ப கபாலி தெனிக்கும் தந்தி பேப்பர் படிப்பாம்பா… அதுல பட்சுட்டு சொல்றான்.. எல்லா துட்டும் பேமானித்தனம் பண்ணித்தான் சம்பாரிச்சீங்களாமே…. ? பெருமைக்காக சொல்லிக்கல சார்… இத்தினி நாளா ஒரு கட்டிங்குக்கு கூட துட்டு இல்லாம பேட்டரித் தண்ணியெல்லாம் குட்சுட்டு கவுந்தட்சு பட்துர்க்கேன்.. ஆனா நான் பேமானித்தனம் பண்ணதில்ல நைனா…. போன வெசால கெயமை கூட… “கன்னிம்மா … ஒது கட்டிங்குக்கு துட்டு குடும்மே…” ன்னு கேட்டேன்… “அந்தாண்ட போ… கயுவி மூஞ்சுல ஊத்திடுவேன்… நானே பொயலைக்கு கூட துட்டு இல்லாம அல்லாடிக்கினு கீறேன்.. வந்துட்டாரு” ன்னு திட்டி உட்ருச்சு பா…
ஆனா கூட நான் கவுந்தட்சு பட்தேனோ காண்டி, தப்பு காரியம் செய்யல சார்..
ஏன் சார்.. நீ பொறக்கும் போதே பணக்காரனாத்தானே பொறந்தே… ? என்ன மாதிரி ஒனக்கு என்ன அன்னாடம் காச்சி பொயப்பா ? அப்புறம் ஏன் சார் இப்புடி திருடித் தின்னே ? ஒனுக்கு இன்னா சோறு துன்றதுக்கே துட்டு இல்லாமயா இருந்துச்சு… அமேரிக்காவுலயெல்லாம் போயி பட்சுட்டு வந்தியாமே சார் நீ.. ? அமேரிக்காவுல போயி, அட்தவன் காச எப்டி திருடுறது எப்டின்னுதான் கத்துக்கினியா சார் ?
இன்னான்னமோ கதயெல்லாம் சொல்றாங்க சார் ஒன்னயும், ஒங்க அண்ணாத்தேயையும் பத்தி…. ஒங்க அண்ணாத்தே வாயத் தொறந்தா கூவம் நாறீப் பூடுமாமே ? அவ்ளோ கலீஜா பேசுவாராமே? ஒனுக்கு கீழே வேல செய்றவனயெல்லாம் தே… பையான்னு திட்டுவாராமே… ? அமேரிக்காவுல போயி என்னாத்த பட்சீங்களோ போங்க….
அது என்னாமோ ஒங்க தோஸ்து பேரு ஒன்னு சொல்றாங்கப்பா… சாக்ஸோ ஷுவோ… அந்த ஆளு வேற ஏகப்பட்ட துட்டு அட்சுர்காராமே… ? அவரு சினிமாக்காரங்க நெறய்ய பேர ஏமாத்தி துட்டு அட்சுட்டாருன்னு சொல்றான் நம்ப டோனி…. ஏகப்பட்ட பேரு கம்ப்ளெயின்ட் குடுக்க ரெடியா கீறாங்களாமே… அது காண்டி இல்லாம, அந்த சாக்சு, யாரோ பொம்மனாட்டியை கையப் புட்சு இசுத்துட்டு, அதுல கலாட்டா ஆயி, ஓட்டல அட்சு ஒட்சுட்டாராமே…. பட்ச ஒங்கள மாதிரி ஆளெல்லாம் இப்டி ரவுடித்தனம் பண்ணா இந்தப் போலீஸ் காரங்க கண்டுக்க மாட்றாங்க…. இன்னா சார் நாயம் இது ?
அப்போ யாரோ கண்ணாயிரம்னு ஒர்த்தர் போலீஸ் கமிஷனரா இருந்தாராமே…. அந்த மன்சன் தான் இந்த சாக்ஸை தொவைக்க விடாம, ச்சை, அரெஸ்ட் பண்ண வெடாமா காப்பாத்துனாராமே… ? என்னா ஒலகம் சார் இது ? ஏயைன்னா ஒரு நாயம்… பணக்காரன்னா ஒரு நாயமா சார் ?
ஒரு தபா, நம்ப ரிக்ஷாவுலோ ஒரு பெர்சு ஏறுச்சு சார்…. எறங்கும் போது அது பைய நம்ப ரிக்ஷாவுலயே வுட்டுட்டு போயிடுச்சு சார். நானும் அந்தப் பெர்சு வந்தா குட்துடலாம்னு அந்தப் பைய வெச்சுருந்தேன். பையில என்னா கீதுன்னு பாத்தா, ஒரு சுருக்குப் பையில துட்டு, இன்னாமோ பேப்பர்லாம் இர்ந்துச்சு சார். சரி… பெர்சு வந்தா பையக் குட்துடலாம்னு, நம்ப இஷ்டாண்டுல இர்ந்த புள்ளாண்டானுங்க கைல சொல்டு சவாரிக்கு போயிட்டேன் சார்..
அதுக்குள்ள போலீஸ இட்டாருமா அந்தப் பெர்சு ? போலீஸ் காரனோட வந்ததும், சார் இந்தா சார் அந்தப் பையின்னு சொல்லிக் குட்த்தேன் சார்.. பைய திருப்பிக் கொடுத்ததுக்குப் போயி, ‘ஏண்டா திருட்டுக் கம்மினாட்டி… நேரா டேசனுக்கு வராம எங்கடா ஊரு மேயப் போன…. சோமாறின்னு போலீஸ்காரன், செவுட்டுலயே உட்டான் சார் ஒரு அறை. “சார் இல்ல சார்.. சவாரிக்கு தான் சார் போனேன்…. நம்ப இஸ்டான்டுல கூட சொல்லிக்கினு தான் சார் போனேன்” னு சொன்னதுக்கு திருப்பி ஒரு அறை விட்டான் சார்…
“….த்தா திருட்டு…………….. பையா…. இப்டி திருடிப் பொயக்கறதுக்கு ஒம்பொண்டாட்டிய கூட்டிக் கொடேண்டா” ன்னு ஒரு வார்த்தை கேட்டுட்டான் சார்…. அப்டியே கண்ணுல தண்ணி வந்துட்சு சார்…. அன்னிக்கு புல்லா ரிக்ஷா மெறிச்சு, ஒரு கோட்டர் அட்சுட்டு தான் சார் பட்தேன்…..
ஒயுக்கமா பைய திருப்பிக் கொடுத்ததுக்கே போலீஸ்காரன், செவுட்டுல அறையறான்… ஒரு பொம்பளைய கையப் புட்சு இசுத்துட்டு ஓட்டல அட்சு ஒட்சவன, அரெஸ்ட் பண்ணாம, வேடிக்கை பாக்குதே சார் போலீஸ்…. என்னா ஒலகம் சார் இது ?
அப்பாலிக்கா டோனி இன்னொரு மேட்டர் சொன்னான் சார்… அது என்னாமோ 2ஜியாமே… நமக்கு வாயக்கா பஜ்ஜிதான் சார் தெர்யும்…. அதுல கோடி கோடியா துட்டு அட்சுட்டீங்களாமே… அப்டியா சார்… சவாரிக்கு ஒரு முப்பது ரூபா கேட்டா இன்ன பேச்சு பேசுதுங்க தெர்யுமா சாவுகிராக்கிங்க… ? மொத்தம் எத்தினி கோடி அட்சுருப்பாங்கன்னு கேட்டேன்… அது கணக்கே தெர்யாத அளவுக்கு அட்சுட்டாங்கன்னு சொல்றான்… மொத்தம் எத்தினி கோட்டர்டா டோனி வரும்னு கேட்டேன்… வாய்க்க முயுக்க குட்சாக் கூட அந்தத் துட்டு தீராதாமே… அவ்ளோ துட்டா சார் நீ அட்ச ?
இன்னா சார் நீ… அவ்ளோ துட்ட வச்சு இன்னா சார் பண்ணுவ ? காலில நாஷ்டாவா 5 இட்லி துண்ணுவியா சார் ? இல்ல 10 இட்லின்னே வச்சுக்கோ…. அதுக்கு மேல ஒன்னால துன்ன முடியாதுல்ல சார் ? அப்புறம் எதுக்கு சார், இவ்ளோ துட்ட திருடுன ? பெரிய பங்களா வெச்சுருக்கியாமே நீ… பளா பளான்னு நெறய்ய காரு வெச்சுருக்கியாமே…. எல்லா வசதியும் வோனும்னு நெனைக்றது தப்பு இல்ல சார்… அத்த ஒயச்சு சம்பாதிக்க வாணாமா ? இப்டியா திருடித் திம்ப ? இன்னா சார் நீ… எவ்ளோ பட்சும் ஒனக்கு புத்தி இப்டி ஆயிடுச்சே சார்……
ஒனுக்குதான் ஏற்கனவே டிவி நூஸ் பேப்பர்லாம் இருக்குதாமே சார்… பெரிய்யய பணக்காரனாமே நீ… சன் டிவியே உன்தாமே….. அதுல தலிவர் படமெல்லாம் பாத்ருக்கேன் சார்…… ஒங்க தாத்தா கலிஞரு, எல்லாருக்கும் ப்ரீ டிவி குட்த்தாரு சார்… அப்போல்லாம் குஜாலியா இருக்கும்…. நம்பளயும மத்சு டீவிலாம் குடுக்குறான் புண்ணயவான்னு நென்சேன் சார்… ஆனா, அந்த டீவியால ஒனுக்குதா லாபமாமே…. அதுனால நெறய்ய துட்டு சம்பாதிச்சுருக்கிறயாமே……… இன்னா சார் பண்ணப் போற அவ்ளோ துட்ட……
போன வாரம், வால்டாக்ஸ் ரோடுல, நம்ப சேரிலேயே நமக்கு பக்கத்து வூட்ல கீற கொமரேசு ஆக்சிடெண்டுல பூட்டான் சார்… லாரி வந்து ஏத்திட்சு… அந்த கொமரேசு இன்னா ஆட்டம் போடுவான் தெரியுமா… என்னிக்காவது துட்டு கெட்சுட்டா அவன் பண்ற ரவுசு இருக்கே… அப்டி ஒரு ரவுசு பண்ணுவான் சார்…. ரொம்ப திமிறா பேசுவான் சார்… யாருக்கம் மருவாதி கொடுக்க மாட்டான். இப்போ செத்து பூட்டானே… இன்னா சார் ஆச்சு… இன்னாத்த கொண்டு போனான் ? அது மாதிரி தானே சார் நீயும் என்னிக்கு வேணாலும் சாவ ? நீ மட்டும் என்னா இர்ந்துக்குனே இருக்க போறியா இன்னா ?
எங்க ஆத்தா காரி ஒரு கெயவி ஒன்னு இருக்கும் சார்… இப்போ மண்டைய பூட்சு… அது எப்போ பாத்தாலும் சொல்லும் சார்… ஒத்த காசா இருந்தாலும், ஒயச்சு சம்பாதிக்கனும்னு….. நமக்கு ஒன்ன மாதிரி பங்களாவெல்லாம் இல்ல சார்…. பெரிய பெரிய ஓட்டலும் தெரியாது சார்.. நமக்கு ப்ளாட்பாரம் தான் வூடு… எப்போவும் அங்கதான் பட்துருப்பேன்.. நம்ப குட்சையில, எடம் பத்தாது சார்… பட்த்தா ஒரு நூறு கொசு கடிக்கும்…. நானும் அந்த கொசுவ அடிக்கவே மாட்டேன் சார்… ஏன்னா, நாம குட்சுட்டு போதையில இருக்கோம்… அந்த கொசு நம்பள கட்சுட்டு அதுவும் போதையாவட்டுமேன்ற ஒரு நல்ல மன்சு சார்…. இன்னா சார் சொல்ற ? ஆனா கூட, ப்ளாட்பாரத்துல பட்த்தா கூட தூக்கம் நிம்மதியா வரும் சார்…. எப்பயாவது கட்சி மாநாடு பந்த்னா மட்டும் வூட்டுக்குள்ள போயி பட்துக்குவேன். ஏன்னா, போலீஸ் காரன் பிளாட்பாரத்துல பட்துருக்கவங்கள புட்சுட்டு போயிடுவான் சார்…..
அப்பாலிக்கா ஒன்ன என்னமோ வடநாட்டு ஜெயில்ல வெக்க போறாங்களாமே சார்… மொதல்ல நீ போவியாம்.. அப்பாலிக்கா ஒங்க அண்ணன், அண்ணி கூட போவாங்களாமே சார்… பணக்காரன் பணக்காரன் தான் சார்… ஜெயிலுக்கு கூட வடநாட்டு ஜெயில்லதான் ஒன்ன வெக்கிறாங்க பாரு… முந்தாநேத்தி கூட, நம்ப சேரிலேர்ந்து மன்னார புட்சுட்டு போயிட்டாங்க சார் சண்ட கேசுல…. ஆனா நேரா பொயல்ல தான் சார் மன்னார அடச்சாங்க… இப்போ கூட மன்னாரு அங்கதான் சார் இருக்கான்…. நீ பொயலுக்கு போனா கூட, நம்ப மன்னார வுட்டு ஒன்ன நல்லா பாத்துக்க சொல்லுவேன்.. ஆனா நீ வடநாட்டு ஜெயிலுக்குப் போறியே சார்….
டோனி இன்னோரு மேட்டர் கூட சொன்னான் சார்…. ஒன்னப் பத்தி நூஸ் வந்துச்சுன்னா அந்த நூஸ் பேப்பர் மேல கேஸ் போடுவியாமே சார்.. அவங்கள மெரட்டுவியாமே.. அப்டியா சார்… என்னா சார் நீ…. நூஸ்பேப்பர் காரங்க அவங்க வேலைய செய்றாங்.. அவங்கள எதுக்கு சார் நீ மெரட்டுற ? இப்போல்லாம் யாரும் ஒன் மெரட்டலுக்கு பயப்டறதே இல்லன்னு சொல்றான் சார் டோனி…..
என்ன மாதிரி படிக்காத டோமருங்க கூட ஒயுங்கா ஒயச்சு வாய்க்கைய ஓட்டிக்கினு கீறாங்க சார்…. ஆனா ஒன்ன மாதிரி பட்சவங்க பண்ற அயோகியத்தனம் அநியாயமா கீது சார்… அதுவும் நீ அமேரிக்காவுலயெல்லம் பட்ச ஆளு… இப்டியா திருடித் துன்னுவ ?
என்னமோ போ சார்… சொல்லனும்னு தோணுச்சு.. சொல்டேன்.. எனக்கு சவாரி வந்துட்சு சார்.. அப்பாலிக்கா கண்டுகறேன் சார்..