கேடி சகோதரர்கள், உண்மையும், ஊழலும் என்று கேடி சகோதரர்களின் முகத்திரையை கிழிக்கும் ஒரு புத்தகம் நாளை வெளியிடப் பட உள்ளது. புதிய தமிழகம் வார இதழின் ஆசிரியர் திரு.அன்பழகன் இந்த நூலை எழுதியுள்ளார். கேடி சகோதரர்களின் ஆரம்ப கால வரலாறு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இப்புத்தகம் கொண்டுள்ளது என்று தெரிகிறது.
நாளை காலை 11 மணிக்கு, சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், இப்புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுபவர் மூத்த பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான திரு.தி.சு.கிள்ளிவளவன் அவர்கள் வெளியிடுகிறார்.