சென்னை குடும்ப நல நீதிமன்ற வளாகத்தில் மொத்தம் எட்டு குடும்ப நல நீதிமன்றங்கள் உள்ளன. திருமண விவகாரங்கள் தொடர்பாக நூற்றுக்கணக்கான வழக்குகளை இந்த நீதிமன்றங்கள் கையாள்கின்றன. மாவட்ட நீதிபதிகளில் மூத்த நீதிபதிதான் இந்த குடும்ப நல நீதிமன்றங்களின் முதன்மை நீதிபதி.
AKA.ரஹ்மான் தற்போது சென்னை குடும்ப நீதிமன்றங்களின் முதன்மை நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு 2011ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்றிருந்தார். திருச்சி, தருமபுரி, அரியலூர் மாவட்டங்களில் பணியாற்றியிருக்கிறார். தனது பதவியை பயன்படுத்தி பெண் மனவியல் ஆலோசகர்களுக்கு பாலியல்ரீதியான தொல்லைகள் தந்ததோடு அவர்களை வேலையை விட்டு நீக்கியுமிருக்கிறார் நீதிபதி ரஹ்மான் என்று அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குடும்ப நீதிமன்றங்கள் எடுத்த உடன் விவாகரத்து கோரி வரும் தம்பதிகளுக்கு விவாகரத்து உத்தரவு வழங்கி விடாது. முதலில் ஆலோசனை கூறி இணைந்து வாழ்வதற்கான முயற்சியை மேற்கொள்ளும். அதற்கென மனவியல் ஆலோசகர்களை நீதிமன்றம் நியமித்துள்ளது. அவர்களுக்கென மதிப்பூதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் தரும் ஆலோசனையால் சில தம்பதிகள் இணைந்து வாழும் முடிவுக்கும் வந்திருக்கிறார்கள். இதுபோன்ற மனவியல் ஆலோசகர்களை முதன்மை நீதிபதி தான் நியமனம் செய்வார். தம்பதியினரிடம் கவுன்சிலிங் செய்யும் ஒவ்வொரு அமர்விலும் ஒரு ஆண் மற்றும் பெண் மனவியல் ஆலோசகர்கள் இடம்பெறுவார்கள். இவர்களுக்கான மதிப்பூதியம் ஒரு நாளைக்கு நானூறு ரூபாய். சைக்காலஜி அலது சோசியாலஜியில் முதுகலை பட்டப்படிப்பை இவர்கள் முடித்திருக்க வேண்டும் என்பது தான் இந்த பதவிக்கான தகுதி. இவர்களை குடும்பநல முதன்மை நீதிபதியாக இருப்பவர் எப்போது வேண்டுமானாலும் நியமிக்கலாம், பதவி நீக்கம் செய்யலாம்.
இங்கு தான் நீதிபதி ரகுமான் தன்னுடைய பாலியல் தொந்தரவினைத் தொடங்கியிருக்கிறார்.
ஊதியத்தை அதிகரித்து தருவதாகவும், தற்காலிக பணியில் உள்ளவர்களுக்கு பனி நிரந்தரம் செய்து தருகிறேன் என்றும் வாக்குறுதிகள் தந்து சில இளம் கவுன்சிலர்களிடம் பாலியல் ரீதியான நெருக்கத்துக்கு முயற்சி செய்துள்ளார்.
இப்படியான கவுன்சிலர்களை அவர் கவனமாகவே தேர்ந்தெடுக்கிறார். முதலில் இந்த ஆலோசகர்கள் பற்றிய தனிப்பட்ட விவரங்களை தெரிந்து கொள்வார். பிறகு கவனமாக காய் நகர்த்துவார். ரஹ்மானால் பாதிக்கப்பட்ட ஆலோசகர்கள் அனைவருமே திருமண வாழ்க்கையில் சிக்கல்களை சந்தித்து தனித்து வாழும் பெண்களே.
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான சங்கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சவுக்கிடம் பேசினார். “ஆரம்பத்தில் முதன்மை நீதிபதி மிக அன்புடன் நடந்து கொண்டார். நட்பாக பழகுவார். உதவிகள் செய்தார். எங்களுடைய கவுன்சிலிங் வேலை முடிந்ததும் எங்களை அவரது அறைக்கு (chamber) அழைப்பார். அன்றைய கவுன்சலிங் குறித்து விசாரிப்பார். நீதிமன்றத்தின் மற்ற பணியாளர்கள் அல்லது வழக்கறிஞர்கள் போன்றவர்களிடமிருந்து எந்தத் தொல்லையாவது இருந்ததா என்பதைப் பற்றி அதிகம் விசாரிப்பார். வேறு ஏதேனும் நடைமுறை சிக்கல்கள் இருக்கிறதா என்றும் கேட்பார்.
அவரிடம் நான் தனியாக வாழ்கிறேன் என்றும் பொருளாதார தேவைகள் இருக்கின்றன என்றும் சொன்னபோது ஊதியத்தை அதிகப்படுத்துகிறேன் என்று சொன்னார். ஒருநாள் எனக்கு பணி நிரந்தரம் செய்து தருவதாகவும் சொன்னார். எனக்கு அப்போது நீதிமன்ற வழக்கங்கள், அதன் சூழல், எப்படி பணி நியமனம் செய்வார்கள் என்பதெல்லாம் தெரியாது. எனக்கு எல்லாம் புதிது. அதனால் நான் அவரை நம்பினேன். எப்போதுமே அவரை சந்திபிப்பதற்கு என்னை மாலை 6.30 மணிக்கு தான் அழைப்பார். அது எட்டு அல்லது ஒன்பது மணி வரை நீளும். அவர் முதன்மை நீதிபதி என்பதால் சீக்கிரம் கிளம்ப வேண்டுமென்று என்னால் சொல்ல முடியாது. சந்திப்பை தவிர்க்கவும் முடியாது.
இரண்டு முறை இப்படியான சந்திப்புகள் நடந்த பிறகு அவரது நடத்தையில் மாற்றம் தெரிந்தது. குரலை கிசுகிசுப்பாக மாற்றிக் கொள்வார். தொடர்பில்லாமல் எதையோ பேசத் தொடங்கினார். எனக்கு சந்தேகம் வரத் தொடங்கியது, ஆனால் அப்படியெல்லாம் இருக்காது என்று நானே எனக்கு சமாதானம் செய்து கொண்டேன்.
ஒருநாள் அவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து என் அருகில் அமர்ந்தார். நான் என் கையை நாற்காலியில் வைத்திருந்தேன். என்னுடைய கைகளின் மேல் அவரது கைகளை வைத்தார். ‘உனக்கு எது வேண்டும் என்றாலும் என்னிடம் கேள்” என்றார். எனக்கு அதிர்ச்சியாகவும், பயமாகவும் இருந்தது. நான் சட்டென்று எழுந்து அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன்.
இதற்குப் பிறகும் சங்கீதாவுக்கு தொல்லைகள் தொடங்கியிருக்கின்றன.
மற்றொரு பாதிக்கப்பட்ட பெண்ணான காயத்ரியும் சவுக்கிடம் பேசினார். “எங்களிடம் இரண்டு வாட்ஸ் ஆப் குழுக்கள் இருக்கின்றன. ஒன்று FC Colleagues என்ற பெயரிலும், மற்றொன்று Family Court என்ற பெயரிலும் உள்ளன. நாங்கள் இந்தக் குழுவில் இருந்தபோதும் பொதுவாய் ‘சாட்’ செய்து கொள்வதில்லை. எங்களுடன் பணி செய்யும் ஸ்ரீதேவி என்பவர் தான் இந்த க்ரூப்பில் அடிக்கடி பதிவிடுவார். அவர்தான் இந்த குழுவின் அட்மின். நீதிபதி ரஹ்மான் இந்த வாட்ஸ் அப் க்ரூப்பில் ஸ்ரீதேவி என்ன எழுதினாலும் புகழ்வார். அடிக்கடி ஸ்ரீதேவியை உற்சாகப்படுத்துவார்.
எங்களைப் போன்ற ஒரு ஆலோசகர்தான் ஸ்ரீதேவி. ஆனாலும் அவர் நீதிமன்றத்துக்கு மதிய நேரங்களில் தான் வருவார். வந்ததும் உடனேயே நீதிபதியின் அறைக்கு சென்று விடுவார். அவருடன் பணி செய்யும் ஆண் ஆலோசகர் தனியாகவே ஒவ்வொரு முறையும் கவுன்சிலங்கை நடத்துவார். ஸ்ரீதேவிக்கு கொடுக்கப்படும் முன்னுரிமையால் மொத்த குடும்ப நல நீதிமன்றத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் அவர் வைத்திருக்கிறார். ஸ்ரீதேவி தான் எங்களுக்கு உத்தரவிடுவார்.
ஸ்ரீதேவி முதன்மை நீதிபதிக்கு நெருக்கமானவர் என்பது எல்லாருக்குமே தெரியும் என்பதால் நீதிமன்ற பணியாளர்கள் எல்லோருமே அவருக்கு பயப்படுவார்கள். ஸ்ரீதேவியை பகைத்துக் கொண்டாலோ, எதிர்த்தாலோ உடனேயே முதன்மை நீதிபதியின் கோபத்துக்கு அவர்கள் ஆளாவர்கள். இப்படி பலமுறை நடந்திருக்கிறது.
எப்போதெல்லாம் கவுன்சிலர்கள் சந்திப்பு நடக்கிறதோ, நீதிபதி ரஹ்மான் எங்கள் அனைவரின் முன்பாகவும் ஸ்ரீதேவியை அனாவசியமாக புகழ்வார்.
எங்கள் வாட்ஸப் க்ரூப்பில் யாருக்காவது பிறந்தநாள் வந்தால் வாழ்த்துக்கள் சொல்வோம். ஆனால், நீதிபதி ஒருவருக்கும் வாழ்த்துக்கள் சொல்வது கிடையாது. ஆனால் ஶ்ரீதேவிக்கு பிறந்தநாள் வந்தபோது, நீதிமன்ற ஊழியர்களையெல்லாம் அழைத்து, கேக் வெட்டி ஒரு விழாவாக நடத்தினார் நீதிபதி. இவற்றையெல்லாம் நாங்கள் யாருமே விரும்பவில்லைதான்.
அவர் எங்களுக்கு தலைமை பொறுப்பில் உள்ளவர். நாங்கள் என்ன செய்யமுடியும்?” என்றார் காயத்ரி வருத்தத்துடன்.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று, கவுன்சிலர் பணிக்கான முழுமையான தகுதி ஸ்ரீதேவிக்கு இல்லை என்பது தான். மற்ற கவுன்சிலர்கள் இளங்கலை மற்றும் முதுகலை சைக்காலஜி பட்டப்படிப்பினை நேரடி கல்வி மூலம் படித்தவர்கள். ஸ்ரீதேவி பிஎஸ்சி நர்சிங் முடித்தவர். தொலைதொடர்பு கல்வி மூலம் சைக்காலஜி படித்திருக்கிறார். எதற்காக மற்ற 16 ஆலோசகர்களை காட்டிலும் ஸ்ரீதேவிக்கு நீதிபதி ரஹ்மான் முக்கியத்துவம் தருகிறார் என்பது மர்மமான ஒன்றாகவே இருக்கிறது. எந்தளவுக்கு ஸ்ரீதேவிக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது என்றால், நீதிமன்ற வளாகத்துக்குள் நடந்த ‘Emotional Intelligence’ என்கிற கருத்தரங்கில் விழா மேடையில் ஸ்ரீதேவிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜனுக்கு அடுத்த இருக்கை அளிக்கப்பட்டிருந்தது. மற்ற குடும்ப நல நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்குக் கூட மேடையின் கீழேதான் இருக்கைகள் தரப்பட்டிருந்தன. மதுரையில் நடந்த அலுவல்ரீதியான ஒரு விழாவுக்கு ஸ்ரீதேவியை தன்னுடன் விமானத்தில் அழைத்துப் போயிருந்தார் நீதிபதி ரஹ்மான். ஒரு தற்காலிக ஆலோசகரை அலுவலக விழாவுக்கு விமானத்தில் அழைத்துப் போனதன் மர்மம் இன்னும் விளங்கவேயில்லை.
சவுக்கிடம் பேசிய காயத்ரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தானும் சங்கீதாவைப் போலவே உடல்ரீதியான தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்தார்.
இதுபோன்ற மோசமான அனுபவம் உமா மகேஸ்வரிக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நிகழ்ந்துள்ளது. இவரும் ஒரு ஆலோசகர்தான். இதே போன்ற உடல்ரீதியான தாக்குதல் தனக்கும் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கிறார். சவுக்கிடம் பேசிய அவர், “செப்டம்பர் 2019 சமயம் நானும் உடன் வேலை செய்பவர்களும் பேசிக்கொண்டிருந்தோம். வேலைமுடிந்ததும் படத்துக்கு போகலாம் என்று யாரோ ஒருவர் யோசனை சொல்ல நாங்கள் எல்லோரும் சம்மதித்து டிக்கெட் புக் செய்யலாம் என்று முடிவு செய்தோம். அப்போது ரிலீஸ் ஆகியிருந்த “ஒத்த செருப்பு” திரைப்படத்துக்கு போகலாம் என்று முடிவெடுத்திருந்தோம். எங்களைக் கடந்து சென்ற ஸ்ரீதேவி நாங்கள் பேசியதைக் கேட்டு தானும் வருவதாக சொன்னார். சிறிது நேரத்தில் வாட்ஸ் ஆப் குரூப்பில் ஸ்ரீதேவி ஒரு செய்தி அனுப்பியிருந்தார். நீதிபதி ரஹ்மான் அவர்களும் எங்களுடன் படத்துக்கு வர இருப்பதாகவும், மாலை காட்சிக்கு செல்லலாம் என்றும் வாட்ஸப் க்ரூப்பில் பதிவு செய்திருந்தார்.
எங்களுக்கு இது ஒருமாதிரி இருந்தது. மாலை நேரம் படத்துக்கு போனால் வீட்டுக்குத் திரும்ப நேரமாகிவிடும். எங்களில் பலருக்கு சிறு குழந்தைகள் இருக்கிறார்கள். அதுவும் முதன்மை நீதிபதியுடன் படத்துக்கு போவது சந்தோஷம் தரும் அனுபவம் அல்ல. நாங்கள் படத்துக்கு போவதே வழக்கத்துக்கு மாறான வாழ்க்கையிலிருந்து ஒரு உற்சாகத்தைத் தரும் என்பதால் தான். நீதிபதி எங்களுடன் இருந்தால் எங்களால் இயல்பாக இருக்க முடியாது’
அதனால் நாங்கள் ஒவ்வொருவரும் படத்துக்கு வர முடியாத காரணத்தை வாட்ஸ்அப்பில் சொல்லத் தொடங்கினோம். நீதிபதியிடமிருந்து இதற்கு எந்த பதிலும் வரவில்லை.
ஒரு வாரத்துக்கு பிறகு (29.09.2019), நீதிபதி ரஹ்மான் ஆலோசகர்கள் கூட்டத்துக்கு எங்களை அழைத்தார். அவருடன் படத்துக்கு வராததற்காக எங்களைப் பார்த்து அவர் சத்தம் போட்டார். ‘ஒரு நீதிபதி நான். என்னை நீங்கள் அவமானப்படுத்திவிட்டீர்கள். என்னை மாதிரி தகுதியில் உள்ள ஒருவர் உங்களுடன் படம் பார்க்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இது எனக்கு பெரிய அவமானம். என்னுடைய தயவில் தான் நீங்கள் எல்லாரும் இங்கே வேலை செய்கிறீர்கள் எனபதை மறந்துவிட்டீர்கள்” என்றார்.
அதன்பிறகு அங்கு நடந்ததை ராமச்சந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற மற்றொரு கவுன்சிலர் தொடர்ந்தார்.
“அந்த மீட்டிங் முடிந்ததும் எங்களில் ஐந்துபேரை மட்டும் அழைத்தார். நான், காயத்ரி, உமா மகேஸ்வரி, சங்கீதா மற்றும் ஆலோசகர் கோவிந்தசாமி என நாங்கள் அவருடைய அறைக்குள் சென்றபோது குரலை உயர்த்தி ‘பற ஜாதிப் பசங்களை உள்ள விட்டது பெரிய தப்பா போச்சு’ என்று கத்திக் கொண்டிருந்தார். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பதிலுக்கு எதுவும் பேச இயலவில்லை. “நீங்கள் எல்லாம் எப்படி ஃபேமிலி கோர்ட்டில் வேலை செய்கிறீர்கள் என்று பார்ப்போம். நீங்கள் இங்கே வேலை செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் எஸ்சி (SC) க்ரூப் மொத்தத்தையும் ஒழித்து விடுகிறேன்” என்று கத்தினார்.
“இப்படியான சாதியரீதியிலான தாக்குதலை நாங்கள் ஒரு மூத்த நீதிபதியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.” என்றார் ராமச்சந்திரன். இப்படி நீதிபதி சாதியரீதியிலான தாக்குதல் செய்திருக்கிறார் என்பதை அந்த நேரம் அங்கிருந்த கோவிந்தராஜ் நீங்கலாக அனைவரிடமும் கேட்டதில் உண்மை தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவிந்தராஜை தொடர்பு கொள்ள இயலவில்லை.
ராமச்சந்திரன் சவுக்கிடம் மேலும் சொன்னதாவது, “அந்த மீட்டிங்குக்கு போய் வந்த பிறகு தான் மற்ற பெண் கவுன்சிலர்கள் தங்களுக்கு நிகழ்ந்ததை சொன்னார்கள். அப்போது தான் தாங்கள் மட்டுமே பாதிக்கப்படவில்லை மற்ற பெண்ணுக்கும் நிகழ்ந்திருக்கிறது என்பது ஒவ்வொரு பெண் ஊழியர்ளுக்கும் தெரிய வந்தது. எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதனால் நாங்கள் உடனே பாலியல் தாக்குதல் போன்ற நடந்த எல்லாவற்றையும் எழுதி உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்த ராஜுக்கு ஸ்பீட் போஸ்ட்டில் 25.10.2019 அன்று அனுப்பி வைத்தோம். அப்போது நீதிபதி கோவிந்த ராஜு மதுரை பெஞ்சில் இருந்தார்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 31.10.2019 அன்று நாங்கள் நீதிபதி அனிதா சுமந்தினை சென்னையில் அவருடைய சேம்பரில் சந்தித்து எங்களது புகாரைத் தெரிவித்தோம். அவர் என்னை வெளியே அனுப்பிவிட்டு மற்ற பெண் ஊழியர்களிடம் பாலியல் தொல்லைகள் குறித்து கேட்டார். நீதிபதி கோவிந்த ராஜுவுக்கு அனுப்பிய அதே புகாரை நீதிபதி அனிதா சுமந்துக்கும் அனுப்பினோம்.
அதன்பிறகு வந்த மூன்று மாத காலத்தில் உயர்நீதிமன்றத்தில் இருந்து விசாரணை நடத்தப்படுமென்று காத்திருந்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக நீதிமன்ற அலுவலர் ஒருவர் 2019 நவம்பர் 11ம் தேதி எங்கள் வீடுகளுக்கு வந்து பணிநிறுத்த உத்தரவைத் தந்துவிட்டுப் போனார். பணி நிறுத்தம் செய்தது மட்டுமல்லாமல், ஃபேமிலி கோர்ட்டுக்குள் நாங்கள் வரக்கூடாது என்றும் நீதிபதி தடைவிதித்திருந்தார். எங்களது பணி நிறுத்த உத்தரவு நகலை உயர்நீதிமன்ற செக்யூரிட்டிகளுக்கும் அனுப்பியிருந்தார். எங்களது அடையாள அட்டையை ஒப்படைக்கும்படியும் எங்களுக்கு உத்தரவிட்டிருந்தார். உயர்நீதிமன்றத்தின் மேல் எங்கள் நம்பிக்கை போய்விட்டது” என்றார்.
பாதிக்கப்பட்ட ஐந்து பேருமே தலித்துகள். முதல் தலைமுறை பட்டதாரிகள். இந்தப் பணியில் கிடைக்கும் எட்டாயிரம் ரூபாய் ஊதியம் என்பது அவர்களுக்கு பெரிய அளவில் உதவக்கூடியது. இந்த வேலையை அவர்கள் விரும்பிச் செய்கிறார்கள். இதனை பெருமையான பணியாக நினைக்கிறார்கள்.
நீதிபதியின் பாலியல் ரீதியிலான அணுகுமுறையை மறுத்ததற்காக எவ்வாறு தான் பாதிக்கப்பட்டேன் என்பதை சங்கீதா சொல்லத் தொடங்கினார். கவுன்சிலிங்கில் ஏற்படுகிற முன்னேற்றங்கள் குறித்து மூன்று மாதத்திற்கு ஒருமுறையோ, மாதமொரு முறையோ தலைமை நீதிபதிக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்பட வேண்டும். அக்டோபர் 2019ல் நடந்த கசப்பான அனுபவத்துக்குப் பிறகு, இந்த அறிக்கையை தினமும் தரவேண்டும் என்று முதன்மை நீதிபதி ரஹ்மான் உத்தரவிட்டிருக்கிறார். “சில நேரங்களில் மாலை வரை கூட கவுன்சிலிங் நீளும். அதை முடித்துவிட்டு அதே நாளில் நாங்கள் அறிக்கை தயார் செய்து தரவேண்டும். எனக்கு இந்த வேலை முக்கியமானதாக இருந்ததால் எல்லா கஷ்டத்தையும் தாங்கிக்கொண்டேன்” என்றார் சங்கீதா.
அக்டோபர் மாதம் நீதிபதியுடன் நடந்த கசப்பான சந்திப்புக்குப் பிறகும் மனவியல் ஆலோசகர்களுடனான அலுவல்ரீதியிலான சந்திப்பு நடந்திருக்கிறது. ஆனால் இந்த ஐந்து பேர் மட்டும் அதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு கூட்டத்தின்போதும் இந்த ஐந்து பேரை காயப்படுத்தும் விதமாக மற்றவர்காளிடம் பேசியிருக்கிறார். அதோடு ஏதேனும் விசாரணை வந்தால் அவர்களை நீக்குவதற்கு மற்ற கவுன்சிலர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.
கீழ் நீதிமன்றங்களுக்கான பாலியல் ரீதியிலான புகார் கமிட்டி உயர்நீதிமன்ற வளாகத்தில் செயல்படுகிறது. மகிளா நீதிமன்ற நீதிபதி இதன் தலைமை பொறுப்பில் உள்ளார். துரதிருஷ்டவசமாக இப்படியொன்று இருப்பதே யாருக்கும் தெரிவதில்லை.
நீதிபதி ரஹ்மானின் கடந்தகால நடத்தை அவர் மேல் உள்ள புகார்களை வலுப்படுத்துகிறது. அரியலூரில் முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியாற்றியபோது தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக பாலியல் ரீதியாக அணுகியிருக்கிறார். இது வழக்கறிஞர் சங்க கவனத்துக்கு வந்து அவர் மீதான புகார் உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இத்தனை புகார்கள் முதன்மை நீதிபதியான ரஹ்மான் மீது இருந்தபோதும் உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டுமென்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பெயர் வெளியை விரும்பாத கீழமை நீதிபதி ஒருவர் சொன்னதாவது, “உயர்நீதிமன்ற விஜிலென்ஸ் R.பூர்ணிமா தான் கீழ் கோர்ட் நீதிபதிகளின் மீதான கையாள்பவர். இவர் தான் ரஹ்மானையும் தனது மற்ற பேட்ச் உறுப்பினர்களையும் தப்பிக்க வைக்கிறார் என்பதை நாங்கள் நம்ப விரும்பவில்லை என்றாலும், இந்த வதந்தியை புறக்கணிக்கவும் முடியவில்லை” என்றார். AKA ரஹ்மான் போலவே பூர்ணிமாவும் 2011 பேட்சில் நேரடியாக மாவட்ட நீதிபதியானவர்கள். பூர்ணிமா மற்றும் ரஹ்மான் மற்றும் சிலரும் உயர்நீதிமன்ற நீதிபதியாக வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கீழ் நீதிமன்ற உறுப்பினர் மேலும் சொன்னதாவது, “கீழ் கோர்ட்டுகளில் மாஜிஸ்திரேட் ஆக செயல்படும் எவர் மீதாவது பெயர் குறிப்பிடாமல் புகார் மனு அனுப்பி வைத்தால் உடனேயே விசாரணை மேற்கொள்ளப்பட்டு பணி இட மாற்றம் அல்லது பணி நீக்கம் செய்யப்படுவார்கள். ஆனால் 2011 பேட்சில் நேரடியாக மாவட்ட நீதிபதியாக நியமனம் செய்யபப்ட்டவர் மேல் இத்தனை புகார்கள் இருந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றார்.
தற்காலிக மனவியல் ஆலோசகர்கள் புகாரின் பேரில் மாவட்ட நீதிபதி உடனேயே தண்டிக்கப்பட வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அது சரியும் அல்ல.
ஆனால் சட்டப்படி விசாரணை நடந்திருக்க வேண்டும். அக்டோபர் 2019ல் நீதிபதி கோவிந்தராஜன் மற்றும் நீதிபதி அனிதா சுமந்திடம் அனுப்பிய புகாரின்பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அனுப்பிய புகாருக்கு கிடைத்த விளைவு அச்சுறுத்தக்கூடியதாய் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிப்பை ஏற்படுத்தியவர் அதே பதவியில் தொடர்கிறார்.
தங்களுக்கு கீழே பணிபுரியும் ஊழியர்களுக்கே நீதி வழங்க இயலாத, நீதி வழங்க மறுக்கும், இந்த உயர்நீதிமன்றங்கள் எதற்கு ?
கவுன்சிலர்களை (நியமிக்கும் மற்றும் நீக்கும்) அதிகாரம் உயர்நீதிமன்றத்திடமே உள்ளது.
நீதிபதி ரகுமான் தன்னிச்சையாக செயல்பட்டதுபோல் எழுதியுள்ளீர்கள்.
பொய் செய்திகளை சவுக்கில் போடவேண்டாம்.
உண்மையை ஆராய்ந்து களஆய்வு செய்து செய்தியை வெளியிடவும்.
சவுக்கில் வெளியிடும் செய்திகள் 101% உண்மையென நம்புபவன் நான்.
வாழ்க தமிழ்.
இப்படிக்கு
சவுகின்மேல் தீரக்தலுடன் வாசகன் மகேஷ்.
Yes. கவுன்சிலர்களை நியமிக்கும் அல்லது நீக்கும் அதிகாரம் மாண்புமிகு உயர்நீதிமன்றத்திடம் உள்ளது. Proceedings செயல்முறை ஆவணம் கொடுப்பது மட்டுமே PJ வின் அதிகார எல்லைக்குள் வரும்.
கலஆய்வு செய்யாமல் செய்தியை ஒருதலை பட்சமாக போட்டுள்ளது உண்மைக்கு புறம்பானது.
கொடுக்கப்பட்ட புகாருக்கு சாட்சியை போடாமல் பொய் புகாரை மட்டும் போட்டுள்ளது வீண்பழி சுமதியுள்ளதை தெளிவாக காட்டுகிறது.
you are wrong. PJ is the appointing authority in terms of counselor for all 8 family courts. High court nothing to do with subordinate court adhoc appointments.
வணக்கம்,
Counsellor ஐ நியமிக்கும் பொறுப்பு மாண்புமிகு உயர்நீதிமன்றத்திரமே உள்ளது.
இதுகூட தெரியாமல் நீங்கள் counsellor ஆக பணிபுரிந்துள்ளீர்கள்போலும்,
If you any doubt who is appointing authority to counsellor pls raise RTI to honourable high court of madras,
If what you say is true, how come he threatened them to remove from job and done the same afterwards?
சங்கர் சார் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் நீங்கள் வெளியிடும் செய்தியை உண்மையென நம்பும் லட்சக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன்.
நீதிபதி ரஹ்மான் மீது சுமத்தபட்டுள்ள பொய்ச்செய்தியை நீங்கள் வெளிட்டது கண்டு சவுகின்மேல் எனக்கும் வாசகர்களுக்கும் உள்ள நம்பிக்கை இழக்கும்படி உள்ளது.
வணக்கம், சென்னை குடும்பநல முதன்மை நீதிபதி அஜ்மல் ரஹ்மான் அவர்கள் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, அவர் மற்றவர்களின் திறமைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பவர், அவ்வாறு இருக்கையில் குடும்பநல நீதிமன்றத்தில் counselor ஆக பணியாற்றி வந்த திறமை இல்லாத சிலர் ( சித்ரா, சுதாரஞ்சினி, ராஜ மீனாட்சி, சுரேஷ்குமார் இப்பதிவில் பெயர்மாற்றம் செய்யப்பட்டவர்கள் ) இத்தகைய கீழ்தரமான செயலை செய்துள்ளனர், மேலும் இவர்கள் கொடுத்த புகாரை நிரூபிக்க இயலாததால், பொய்யான புகார் கொடுத்தமைக்காக உயர்நீதிமன்றம் இவர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது, இது கீழ்த்தரமானவர்களுக்கு கிடைத்த பரிசு, “வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்ற கூற்று உண்மையாயிற்று.
Appadi edhanum irundhal sollungal ennidamum oru poiyana pugar ulladhu, adhaiyum padhividungal
Shankar sir, ungal website la poi seithigalai upload seivatharku periya alavil panam perugireergalo, illai endral judge meedhu ungalukku edhavadhu kovam ulladha, oru nalla judge ya romba easy aga asingappadithiteenga.
Don’t stand behind of lie
சங்கர் சார் உண்மை யானவற்றை மட்டும் பதிவிடுங்கள் சார்
வணக்கம், சென்னை குடும்பநல முதன்மை நீதிபதி அஜ்மல் ரஹ்மான் அவர்கள் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே, அவர் மற்றவர்களின் திறமைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பவர், அவ்வாறு இருக்கையில் குடும்பநல நீதிமன்றத்தில் counselor ஆக பணியாற்றி வரும் திறமை இல்லாத சிலர் இத்தகைய கீழ்தரமான செயலை செய்துள்ளனர், மேலும் இவர்கள் கொடுத்த புகாரை நிரூபிக்க இயலாததால், பொய்யான புகார் கொடுத்தமைக்காக உயர்நீதிமன்றம் இவர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது, இது கீழ்த்தரமானவர்களுக்கு கிடைத்த பரிசு, “வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்ற கூற்று உண்மையாயிற்று,
மேலும், இப்பதிவில் குறிப்பிட்டுள்ள ஸ்ரீதேவி என்பவர் உளவியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,
சவுக்கு இணையதள நண்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள், இத்தகைய பொய்யான புகார்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டாம்.
திறமையானவர்கள் என்றும் மதிக்கப்படுவர்,
வாழ்க தமிழ்!
ஶ்ரீதேவியின் முனைவர் பட்ட விண்ணப்பம், சென்னாஇ பல்கலைக்கழகத்தால் நிராகரிக்கப்பட்டு உள்ளது. பொய் சொல்ல வேண்டாம்.
அது எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் ஒரு நேர்மையான நீதிபதி மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்துவது தவறு.
வாழ்க தமிழ்!
Savukku Sankar Sir,
A Small question to you reg CAA , It is initiated by Congress in 2003 with DMK’s support. During that time , Duraimurugan said ,it will have no impact on Indian Muslims. Now What has been changed in 2019 by BJP for protests. Can you write an article to explain this ?
Nee eruttula vesam pottu velichathula mattiketta
Lanjam vaangi mattikenu seen poduthu
நீதிபதி என்றல் எப்படி இருக்க வேண்டும் என்று இவரிடம் கற்க வேண்டும் அவரை பொய்யன குற்றம் சுமத்துவது முதல் நடவடிக்கை அவர்கள் மீது எடுக்கப்பட்ட வேண்டும் 8000 ரூ வைத்து எப்படி குடும்ப நடக்கிறது என்று விசாரணை நடத்தினால் உண்மையன குற்றவாளி யார் என்று தெரியவரும்
கவுன்சிலர் ன லஞ்சம் வாங்கினது தெரிஞ்சு வேலை விட்டு தூக்குனங்ளே அவங்களா
இந்திய உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இரஞ்சன் கோகாய் மீது தெரிவிக்கப்பட்ட புகாரின் கதி என்னவாயிற்று ?.!. நீதித்துறை மீதான நம்பிக்கை இழந்து விட்டோம். சட்டத்தின் ஆட்சி என்பதெல்லாம் பசப்பு வார்த்தை. நீதிபதி அரிபரந்தாமனின் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரும் கூட நம்பிக்கை இழந்து விட்டதை கண்டு வேதனை அடைந்தேன். ஆனால் அதிர்ச்சி அடையவில்லை.