ஹப்பிங்க்டன் போஸ்ட்டோடு இணைந்து சவுக்கு வெளியிட்டு வரும், கண்காணிப்பு தேசம் தொடரின் மூன்றாம் பகுதி.
தெலுங்கானா அரசு, மோடி அரசிடம், ஆதார் இல்லாமலேயே, 120 கோடி மக்களையும் கண்காணிக்கும் ஒரு மென்பொருளை உருவாக்கித் தருவதாக வாக்குறுதி அளித்தது.
19 அக்டோபர் 2018 அன்று, தெலங்கானாவின் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலர் ஜெயேஷ் ரஞ்சன், மத்திய தகவல் தொழில்நுட்ப செயலர் அஜய் பிரகாஷ் சாவ்னேவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதத்தில், தெலங்கானா அரசு ஏற்கனவே, அதன் மூன்று கோடி மக்களையும் 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்கும் வகையில், ஒரு மென்பொருளை தயாரித்து செயல்படுத்தி யிருப்பதாகவும், அதை இந்தியாவின் 120 கோடி மக்களுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் ஆதார் பயன்படுத்தலுக்கு வரைமுறைகளை விதித்து, அனைத்துக்கும் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது, தனிமனித சுதந்திரம் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கிய மூன்று வாரங்களில் இக்கடிதம் எழுதப்படுகிறது.
ஜெயரேஷ் ரஞ்சன் தனது கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “சமீபத்திய உச்சநீதிமன்றத்தின் ஆதார் தீர்ப்பின் காரணமாக, 360 டிகிரி கோணத்தில் ஆதார் அடிப்படையாக இல்லாமல் ஒரு மென்பொருளை உருவாக்குவதற்கான தேவை இருக்கிறது. தெலங்கானா அரசு, ஏற்கனவே “சமக்ராம்” என்ற ஒரு மென்பொருளை பயன்படுத்தி வருகிறது. ஒரே தரவின் அடிப்படையில் அல்லாமல், பல்வேறு தரவுகளின் அடிப்படையில், அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஒரு பெரும் டேட்டாபேஸ் தெலங்கானா அரசால் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
தெலங்கானா அரசின் சமக்ராம் மென்பொருள் எப்படி செயல்படுகிறது என்பதை, இக்கட்டுரை ஆசிரியர், குமார் துருவ் நேரடியாக பார்த்திருக்கிறார். தெலங்கானாவின் மூத்த அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஆகியோர் மிக எளிதாக தெலங்கானாவில் உள்ள ஒவ்வொருவரின் விபத்தையும் எடுக்க முடிந்ததை நேரில் பார்த்துள்ளார் துருவ். ஒருவரின் வம்சாவளி பாரம்பரியம் என்ன என்பதையும் அவர்களால் சமக்ராம் மென்பொருளை பயன்படுத்தி கட்டமைக்க முடிகிறது. தெலங்கானாவின் சமக்ராம் மென்பொருள் குறித்து ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது என்றாலும், இந்த மென்பொருள், எந்த அளவுக்கு ஒரு தனிநபரின் வாழ்வை ஊடுறுவியுள்ளது என்பது இப்போதுதான் முதன்முறையாக வெளிவருகிறது.
ரஞ்சன் தனது கடிதத்தில் மேலும் இவ்வாறு எழுதுகிறார். “தெலங்கானா அரசின் இந்த மென்பொருளை மத்திய அரசுக்கும், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் தர தயாராக உள்ளோம். இது தொடர்பாக டெல்லி வந்து நேரில் இத்திட்டம் குறித்து விளக்க தயாராக உள்ளோம்”.
தெலங்கானா அரசின் சமக்ராம் மென்பொருள், மோடி அரசின் தேசிய சமூக பதிவேட்டுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. 120 கோடி மக்களையும் கண்காணிக்கும் ஒரு பென்பொருள் என்பது லட்சிய கனவு அல்ல. செயல்படுத்தக் கூடிய ஒரு யதார்த்தம் என்பதை சமக்ராம் மென்பொருள் எடுத்து காட்டியது. ஏற்கனவே ஹப்பிங்க்டன் போஸ்ட் விளக்கியிருந்தது போல, சமூக பதிவேடு என்பது, ஒரு நபரின் வம்சாவளி, எங்கே பிறந்தார், எங்கே வளர்ந்தார், எங்கே படித்தார், என்ன வேலை செய்கிறார், என்ன சொத்துக்களை வாங்கினார், மனைவி, குடும்பத்தினரின் விபரங்கள், சாதி, வருவாய் உள்ளிட்ட அனைத்தையும் சேகரிக்கக் கூடியது.
சமூக-பொருளாதார கணக்கெடுப்பின் அடிப்படையில் சமூக பதிவேடு மென்பொருள் உருவாக்கப்படும் என்பதைப் போலவே, சமக்ராம் மென்பொருளும், தெலங்கானா அரசு, 2014ம் ஆண்டில் நடத்திய ஒருங்கிணைந்த கணக்கீடு என்ற சர்வேயின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இந்த சர்வேயில், ஒவ்வொரு தனி நபரின் சமூக-பொருளாதார விபரங்கள் சேகரிக்கப்பட்டன.
தெலங்கானாவின் சமக்ராம் மென்பொருள், வறுமை ஒழிப்புக்கும், சமூக நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக என்று சொல்லப்பட்டாலும், காவல் துறை உள்ளிட்ட அனைத்து புலனாய்வு அமைப்புகளாலும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் தேசிய சமூக பதிவேடு மென்பொருள் உருவாக்கத்தின் முன்னோடியாக இருந்த பொருளாதார ஆலோசகர் மனோரஞ்சன் குமார் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“நானாக இருந்தால், முழுமையான பாதுகாப்பு நடைமுறைகள் உருவாக்கப்படும் வரை இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்த மாட்டேன்.
தேசிய சமூக பதிவேடு உருவாக்கும் அதே நேரத்தில், தனிநபர் சுதந்திரம் மற்றும் உரிமைகள் குறித்தும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக அதிகார வர்க்கம் மற்றும் காவல் அமைப்புகள், தனி நபர் சுதந்திரத்தை மீறுவதற்கும், தவறான வழிகளில் இதை பயன்படுத்துவதற்கும் தயங்காத சூழலில், இது குறித்த கவனம் தேவை” என்கிறார் குமார்.
ஐதராபாத்தில் செல்வச் செழிப்புள்ளவர்கள் வசிக்கும் ஒரு பகுதியில், , பார்த்தால் சாதாரணமாக தோன்றும் ஒரு இரண்டுமாடி கட்டிடத்தில், நாடு முழுக்க புகழ்பெற்ற, ஐதராபாத்தை சேர்ந்த ஒரு விளையாட்டு வீரரின் பெயரை கணினியில் தட்டச்சு செய்தார் ஒரு மூத்த அதிகாரி. வினாடிகளில் அந்த இருவரோடு தொடர்புடைய 12 ஆவணங்கள் சுவரில் இருந்த மிகப் பெரிய மானிட்டரில் விரிந்தன. அவர்கள் முகவரி, தொலைபேசி எண், பள்ளி விபரங்கள், உயர்கல்வி விப்ரங்கள், ஓட்டுனர் உரிமம், அவர்கள் பெயரில் இருந்த வாகனங்களின் விபரம் என அத்தனையும் திரையில் விரிந்தது.
“பாருங்கள். நான்கு வாகனங்கள் வைத்திருக்கிறார்கள். பண்க்காரர்கள்தான்.” என்றார் அந்த அதிகாரி. “இப்போது இவர்களின் நெட்வொர்க் என்ன என்பதை கண்டுபிடிப்போம். இவர்களுக்கு மற்றவர்களோடு என்ன தொடர்பு என்பதை கண்டுபிடிப்போம். இது சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கான மென்பொருள். இதில் ஒரே ஒரு போன் நம்பரை அளித்தால் கூட, அனைத்து விபரங்களும் எடுத்து தரும்” என்று பெருமையோடு குறிப்பிட்டார் அந்த அதிகாரி.
கணினியின் மவுசை எடுத்து இரண்டு முறை கிளிக்கினார். இந்த இரண்டு பேரோடு தொடர்புடைய அத்தனை பேரின் விபரங்களும் திரையில் தோன்றியது. அந்த விளையாட்டு வீரரின் மனைவி, குழந்தைகள், பெற்றோர், அனைத்து விபரங்களும் தோன்றின. விளையாட்டு வீரரின் குழந்தையை சுட்டிக்காட்டிய அந்த அதிகாரி பெருமையோடு கூறினார் “இவர்கள் எந்த அரசு ஆவணத்திலும் அவர்கள் குழந்தையின் விபரத்தை தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த மென்பொருள் சரியாக இவற்றை கண்டுபிடித்துவிட்டது” என்றார்.
சம்பந்த்தப்பட்ட விளையாட்டு வீரரின் விபரங்கள், தனிநபர் சுதந்திரம் கருதி மறைக்கப்பட்டுள்ளன.
சமக்ரா மென்பொருள் குறித்து அந்த அதிகாரி பெருமிதத்தோடு விளக்கினார். “இந்த சமக்ரா மென்பொருள் ஐந்து வகையான உறவுகளை இணைத்து தருகிறது. பெற்றோர், குழந்தைகள், சகோதர சகோதரிகள், மனைவி / கணவன் ஆகியவற்றோடு அதே முகவரியில் வசிக்கும் நபர்களின் விபரங்கள், அதே தொலைபேசி எண்ணையோ, அதே மின்னஞ்சல் முகவரியையோ பயன்படுத்துவோர் ஆகியோரின் விபரங்களையும் இது அளிக்கிறது. இதில் எந்த லிங்க்கை க்ளிக் செய்தாலும், சம்பந்த்தப்பட்ட நபர் அவரது உறவினர்கள் ஆகியோரின் விபரங்கள் தொடர்ச்சியாக ஒரு மரம் போல விரியும். இதில் உள்ள அத்தனை இணைப்புகளையும் தேடி தேடி, ஒரு நபரின் அனைத்து விபரங்களையும் கண்டறியலாம்” என்றார் அந்த அதிகாரி.
இந்த மென்பொருள் மிக மிக சக்திவாய்ந்த மென்பொருள் என்பதால், காவல் துறையில் மிக மிக மூத்த அதிகாரிகளுக்கு மட்டுமே இதை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார். “நாட்டிலேயே தெலங்கானாவில்தான் இது முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு எவ்வளவு அதிகாரம் இதன் மூலம் கிடைத்துள்ளது என்று பாருங்கள்.
இதற்கு முன்னர் வெறும் பெயர், முகவரியை மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். ஆனால் இப்போது பாருங்கள். எவ்வளவு விபரங்கள் கிடைக்கின்றன” என்றார்.
நாட்டின் பல காவல்துறைகள், உளவு துறைகள், இது போன்ற மென்பொருளை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன என்றார் அவர்.
“காவல் துறை மட்டுமல்லாமல், மத்திய நிதி அமைச்சகம், வருமான வரித் துறை, NATGRID எனப்படும் மத்திய தொழில்நுட்ப உளவு நிறுவனம் என ஏறக்குறைய அனைத்து புலனாய்வு / உளவு அமைப்புகளும் இந்த தொழில்நுட்பத்தை கேட்கின்றன. பல துறைகள் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வந்தாலும், தெலங்கானாதான் இதில் வெற்றியடைந்த துறை” என்றார்.
தேசிய உளவு கட்டமைப்பு (NATGRID) தீவிரவாதத் தடுப்பு என்ற பெயரில், உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் அடிப்படையிலான ஒரு உளவு நிறுவனம். இந்நிறுவனம் இது போன்ற ஒரு மென்பொருளை உருவாக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது.
தெலங்கானா மென்பொருள், மிக மிக துல்லியமாக விபரங்களை அளிக்கிறது. இது ஒரு வகையில் அச்சமூட்டுகிறது, என்று பல அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
“பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஈடுபடுகிறோம். இதன் தடம் பல இடங்களில் பதிகிறது. யாராவது ஒருவரின் பெயரை கூறுங்கள். அவர் எந்தெந்த இடங்களில் டிஜிட்டல் தடங்களை விட்டுச் சென்றிருக்கிறார் என்பதை என்னால் துல்லியமாக எடுக்க முடியும். 96 சதவிகிதம் அது சரியாக இருக்கும்” என்று ஜூலை 2019ல் ஒரு பொது அரங்கில், தெலங்கானாவின் தகவல் தொழில்நுட்ப செயலாளர் ரஞ்சன் பேசினார்.
தெலங்கானா உருவாக்கியுள்ள சமக்ராம் மென்பொருள், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. அந்த மென்பொருள் தேவையான தரவுகளை சேகரித்து, ஒரு நபரின் விபரங்களை துல்லியமாக உருவாக்க தன்னை தானே பல முறை திருத்திக் கொள்கிறது.
தெலங்கானா அரசின் 30 துறைகளின் டேட்டாபேஸ்களை இணைத்து, ஒரு பெரும் டேட்டாபேஸை உருவாக்கி, அதிலிருந்து தரவுகளை சேகரித்து / பயன்படுத்தி சமக்ராம் மென்பொருள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தெலங்கானாவில் வசிக்கும் ஒவ்வொரு நபரையும் கண்காணிப்புக்கு உள்ளாக்க முடியும்.
ரஞ்சன், தனது உரையில், “உதாரணத்துக்கு நீங்கள் ஒரு வங்கி கணக்கை திறக்கிறீர்கள். வங்கியிடம் உங்கள் விபரங்கள் இருக்கும். ஒரு மொபைல் அல்லது சிம் கார்டு வாங்கினால் செல்பேசி நிறுவனத்திடம் உங்கள் விபங்கள் இருக்கும். வாக்காளர் பட்டியலில் உங்கள் விபரங்கள் இருக்கும். சொத்து வரி செலுத்தும் இடத்தில் உங்கள் விபரங்கள் இருக்கும். வணிகத்தில் ஈடுபட்டால் ஜிஎஸ்டியில் உங்கள் விபரங்கள் இருக்கும். நாம் அனைவரும், பல்வேறு டேட்டாபேஸ்களில் இருந்துகொண்டுதான் இருக்கிறோம்” என்று பேசினார் ரஞ்சன்.
ஒரு நபரின் பெயர் மற்றும் முகவரி / செல்போனை வைத்து சமக்ராம் மென்பொருள் அவரின் முழுமையான ப்ரொபைலை உருவாக்கும். கூடுதல் விபரங்களை அளித்தால் துல்லியமான விபரங்களை தருகிறது.
தெலங்கானா மாநில அதிகாரிகள், இப்படி ஒவ்வொரு குடிமகனின் விபரங்களை அவருக்கே தெரியாமல் சேகரிப்பதை, ஒருவரை கண்காணிப்பதை சிறந்த நிர்வாகம் வழங்க வேண்டும் என்ற காரணத்தை கூறி நியாயப்படுத்துகிறார்கள்.
“மாநில அரசுக்கு வர வேண்டிய நியாயமான வரி வருவாய்களான, சொத்து வரிகள், வணிக வரிகள் போன்றவை முழுமையாக வருவதில்லை. சொந்த கார் வைத்திருப்பவர் கூட, ஏழைகளுக்கான அரசின் நலத் திட்டங்கலை பெற்று வரும் நிகழ்வுகளும் உள்ளன. பலர் வசதியாக இருந்து கொண்டு, முதியோரு ஓய்வூதியம், ரேஷன் பொருட்கள் போன்றவற்றை பெறுகிறார்கள்” இவற்றையெல்லாம் தடுக்க சமக்ராம் பயன்படுகிறது என்கிறார் தெலங்கானா அரசின் மின்னணு சேவைகள் ஆணையர் வெங்கடேஷ்வர் ராவ்.
“சில நேர்வுகளில், உரிய நபர்களுக்கு அரசின் உதவிகள் கிடைக்காமல் கூட போகிறது. இவற்றையெல்லாம் சரி செய்யத்தான் சமக்ராம் மென்பொருளை உருவாக்கினோம். இது மேம்பட்ட நிர்வாகத்துக்கு உதவுகிறது” என்கிறார் ராவ்.
இந்த மென்பொருள் ஆதார் விபரங்களை பயன்படுத்தவில்லை என்பதால், 2019 உச்சநீதிமன்ற தீர்ப்பை இது மீறுவதாக ஆகாது.
தனிநபர் உரிமைகள் குறித்த உச்சநீத்மன்றத்தின் 2018 தீர்ப்பு முக்கியமானது என்றாலும், அதே தீர்ப்பில், நியாயமான காரணங்களுக்காக ஒரு அரசு தனிமனித உரிமைகளை மீறலாம் என்று கூறியிருக்கிறது என்கிறார் ராவ்.
மேலும், “ஒரு மாநிலத்தின் வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும், சமூக நலத் திட்டங்கள் உரியவர்களை போய் சேர வேண்டும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, குற்றம் தடுத்தல் போன்றவற்றிற்காக தனி நபர் உரிமைகளை மீறுவதை உச்சநீதிமன்றம் அனுமதித்திருக்கிறாது. ஏற்கனவே விவாதித்தபடி, சமக்ராம் மென்பொருள் உச்சநீதிமன்ற அனுமதித்த வரையறைக்குள்தான் செயல்படுகிறது” என்கிறார் ராவ்.
இவற்றையெல்லாம் உருவாக்க ஒரு நபரின் சம்மதத்தை பெற வேண்டியதில்லை என்கிறார் ராவ். “ஒரு நபரை பற்றி பல்வேறு துறைகளில் விபரங்களை சமக்ராம் மென்பொருள் ஒருங்கிணைக்கிறது. ஒரு நபர் அரசிடம் உதவித் திட்டம் கேட்கும்பொழுதோ, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாத பொழுதோதான், இந்த விபரங்கள் அலசப்படுகின்றன” என்றார் ராவ்.
“இந்த மென்பொருள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யார் இந்த மென்பொருளை பயன்படுத்துகிறார் என்பதை பதிவு செய்ய மென்பொருளிலேயே பதிவுகள் செய்யப்படுகின்றன” என்று கூறினார் ராவ்.
தனிநபர் சுதந்திர ஆதரவாளர்கள், ராவின் கருத்தில் முரண்படுகிறார்கள்.
தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை இயக்குநர் ஸ்மித கிருஷ்ண பிரசாத், “ஒரு அரசு நியாயமான காரணத்துக்காக ஒரு தனி நபரின் சுதந்திரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது உண்மைதான். ஆனால், ஒரு அரசின் நலன் என்பது, உச்சநீதிமன்றம் விதித்துள்ள பல கட்டுப்பாடுகளில் ஒரே ஒரு பகுதிதான்.
ஒரு தனி நபரின் சுதந்திரத்தை ஒரு அரசு மீறுவதற்கு சட்டம் வேண்டும். ஒரு அரசின் நியாயமான நோக்கமும், தனி நபரின் சுதந்திரத்தை மீறும் அளவும், பொருத்தமான வகையில் இருக்க வேண்டும்.
இது போன்ற நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்த காரணமே, அர்சின் நலன் என்ற போர்வையில், அரசுகள் தனி நபர் சுதந்திரத்தை பறித்து விடக்கூடாது என்பதற்காகத்தான். இதன் காரணமாகத்தான், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டிக் கூட, ஒட்டுமொத்த ஜனத் தொகையையும் கண்காணிப்பில் கொண்டு வரக் கூடாது” என்றார் ஸ்மிதா.
“தெலங்கானா அரசு விவகாரத்தில், ஒரு துறை, ஒரு காரணத்துக்காக சேகரிக்கும் விபரங்களை வேறொரு துறை வேறு காரணத்துக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. ஒட்டுமொத்த தெலங்கானா மக்களின் விபரங்களை சேகரிப்பதற்கு அரசு எந்த காரணத்தையும் சொல்ல முடியாது” என்றார் ஸ்மிதா.
இணைய சுதந்திரத்துக்கான அமைப்பு என்ற என்.ஜி.ஓவின் செயல் இயக்குநர் அபர் குப்தா பேசுகையில், “இந்தியாவில் டேட்டா பாதுகாப்பு குறித்து இது வரை வலுவான ஒரு சட்டம் இல்லாத காரணத்தால், குடிமக்களின் விபரங்களை 360 டிகிரி கோணத்தில் சேகரித்தால் அது பல வகைகளிலும் துஷ்பிரயோகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்த டேட்டாக்களை வணிக காரணங்களுக்காக விற்பனை செய்யலாம். அல்லது, இந்த விபரங்களை பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஒருவரின் மனதையே மாற்றும் அளவுக்கு மைக்ரோ டார்கெட் செய்யலாம். தொடர்ந்து ஒருவருக்கு குறிப்பிட்ட தகவல்களை அவருக்கு ஏற்றாற்போல அனுப்பி, அவரின் தன்மையையே மாற்றலாம்.
இவற்றையெல்லாம் இந்த டேட்டாபேஸை பயன்படுத்தி எளிதாக செய்ய முடியும். இதற்கான தொழில்நுட்பம் ஏற்கனவே இருக்கிறது அது பரவலாக பயன்படுத்தப்பட்டும் வருகிறது” என்கிறார் அபர் குப்தா.
ஆங்கில வடிவத்தின் இணைப்பு :
இந்த மென்பொருளை யாராவது hacking பண்ணிட்டா, ஒட்டு மொத்த இந்திய மக்களின் தகவல்களும் பிற நாடுகள் வசம் சென்றுவிடும். முதலில் cybersecurity கட்டுமானத்தை மேம்படுத்தி அதன் நம்பக தன்மையை உள்நாட்டில் உறுதி செய்த பின்னர் மக்களின் ஒப்புதலோடு இதை செயல்படுத்த வேண்டும்.
ஆதார் தகவல்கள் அனைத்து வங்கி மற்றும் தகவல்தொடர்பு நிறுவனங்களிடம் எந்த ஒப்புதலும் இன்றி பகிறப்பட்டுள்ளது…
அங்கிருந்து பல callcenter கள் நம்முடைய தேவைக்கேற்றார் போல் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடர்பு கொள்கின்றன….One of the reason is android mobile and google search/maps
Savukku Sankar sir,
Tracking people is not new anyway in any country in the world. We cannot say its wrong ,as long as it is limited. DeMo is the first major activity planned for tracking people to know who has how much money? Many said DeMo failed miserably but it gave brief idea to government what each and everyone hold. Now if you want to transact with cash, everyone is scared to go against law and it helps in controlling black money to an extent.
I saw in Part 1 of this series ,one guy anonymously asked what are the amendments added or changed by BJP govt in NRC/ NPR and CAA which got initiated by congress in 2003 and the bill was passed in both Lok and Rajyasabha.
I heard from my friends in countries like US, 85% of people pay their taxes and irrespective of we demand bill or not while purchasing , they will deduct appropriate tax amount even if its few paisa and pay to government. Imagine their tax is almost 30% . Similarly in UK / Canada its 40% tax. If we as citizens of India pay our taxes properly ( unfortunately around 2-3 % of Indian population pay income tax ) ,
Government need not track what we do. can you write an article to bring awareness ?
If our people stop Soft drinks like PEPSI / COKE / Other drinks for 3-6 months on COVID -19 scare , It will bring down our Exchange rate of Rupee vs US Dollar to less than 60 atleast.
Also I asked few questions earlier, which waits for your answer sir.
Please check and write articles to create awareness as well.
கடந்த நூற்றாண்டில் மனிதன் தனது வாழ்க்கை முறையை இயற்கையோடு இணைந்து நிம்மதியாக வாழ்ந்தான். ஆனால் அவனுடைய வாழ்க்கை தரம் இப்போது இருப்பது போல வசதிகளுடன் இல்லாமல் இருந்தாலும் சராசரி மனிதன் நிம்மதியாக வாழ்ந்து மறைந்தான். ஆனால்……. இன்று……. மனிதனின் வாழ்க்கை தரம் வசதிகளுடன் உயர்ந்தது. ! …. ஆனால் மனிதனின் தரம் மட்ட ரகமாக உள்ளது. ஆக வாழ்க்கை தரம் உயர்ந்தது. மனித தரம் குறைந்தது. அறிவியல் வளர்ச்சி மேலும் மேலும் உயரும் போது ஒரு கட்டத்தில் மனித குலத்தின் அழிவுக்கு வழி வகுக்கும் என்பது தான் நிதர்சனம்.