அன்பார்ந்த திரு. ஸ்டாலின்,
முதல்வராக பதவியேற்க இருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நீங்கள் இந்த பொறுப்பினை அடைய முழுத்தகுதி படைத்தவர் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை. மாணவப் பருவத்தில் இருந்து கட்சிக்காக உழைத்தவர் நீங்கள். ஆட்சியில் இருந்தபோது அனுபவித்ததை விட எதிர்க்கட்சியில்தான் நீண்ட நாட்கள் இருந்திருக்கிறீர்கள். மிகச் சிறந்த ஆட்சியை தருவீர்கள் என்று நம்புகிறேன்.
அதே சமயம் திமுகவுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி, உங்கள் தலைமைக்கோ, அல்லது திமுகவுக்கோ என்று நினைத்தீர்கள் என்றால் பிழையாகும் அது. இதுவும் பிஜேபிக்கு எதிராக விழுந்த வாக்குகளாகவே நான் பார்க்கிறேன். திமுகவுக்கு நிலையாக இருக்கும் 33% சதவிகித வாக்குகள் எப்போதும் மாறப் போவதில்லை. கூடுதலாக இப்போது விழுந்துள்ள 4.70%தான் உங்களை கரையேற்றியுள்ளது. கரையேற்றியுள்ளது என்ற வார்த்தையை தெரிந்தே பயன்படுத்துகிறேன்.
நீங்கள் பிரச்சாரத்தில் கூறியது போலவும், பிரசாந்த் கிஷோர் உங்களிடம் கூறியது போலவும், அதிமுகவுக்கு எதிராக எந்த அலையும் வீசவில்லை. வீசியிருந்தால் அதிமுக ஏன் 66 இடங்களில் வெற்றி பெறுகிறது ? பணம் ஒரு காரணம் என்று சொல்லாதீர்கள். உங்கள் கட்சியினரும்தான் பணம் கொடுத்தார்கள். உங்கள் கட்சி வேட்பாளர் ஒருவர் தனது தொகுதியில் உள்ள காவல் நிலையங்கள் அத்தனைக்கும் லஞ்சம் கொடுத்தார் என்பது அதில் ஒன்று. ஆகையால் பணம் ஒரு காரணம் அல்ல. உங்கள் மீதும், திமுகமீதும் இன்னும் நம்பிக்கை வரவில்லை என்பதாலேயே அது.
தொடர்ந்து பத்தாண்டுகளாக நீங்கள் பதவியில் இல்லாததன் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தை புரிந்து கொள்கிறேன். அதே நேரத்தில், கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும் வரையில் உங்களுக்கு பதற்றம் ஏன் ? நீங்கள் எந்தவொருஅனலிஸ்ட்டின் உதவியுமின்றி இந்த வெற்றியை பெற்றிருந்தால் இன்னமும் மகிழ்ந்திருப்பேன். சரி விடுங்கள்.
2024 தேர்தலிலாவது, இது போன்ற அனலிஸ்ட்டுகளிடம் அதிகாரத்தை ஒப்படைக்காமல், மக்களுக்கு செய்கிற தொண்டுகள் மூலமாக உங்கள் தலைமையில் தேர்தலை சந்தியுங்கள்.
திமுக இத்தேர்தலில் பெற்றுள்ள வாக்கு சதவிகிதம் 36.30.
அதிமுக இத்தேர்தலில் பெற்றுள்ள வாக்கு சதவிகிதம் 33.29.
வேறுபாடு 3.01. அமுமுக பெற்றுள்ள வாக்கு விகிதம் 2.47%. அமுமுகவோடு துண்டு துக்கடா கட்சிகளை சேர்த்து அதிமுக தேர்தலை சந்தித்திருந்தால் திமுக நிலை என்ன ? மேலும் 21 தொகுதிகளில், அமுமுக பெற்ற வாக்குகளே திமுகவின் வெற்றியை உறுதி செய்துள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்.
மேலும், திமுக பெற்றுள்ள 36.30 சதவிகிதத்தில், காங்கிரசின் 4.41, சிபிஐயின் 1.17, மதிமுகவின் 1.13, விசிகவின் 1.06, சிபிஎம்மின் 0.90 ஆகியவையும் அடக்கம் என்பதை மறந்து விடாதீர்கள். வெற்றி பெற்று விட்டோமே என்று திமுகவினர் தோழமை கட்சிகளுக்கு உரிய மரியாதையை அளிக்க தவறுவார்களேயானால், அதற்கான விலையை 2024ல் கொடுப்பார்கள்.
ஆகையால், உங்கள் தலைமைக்கோ, திமுகவுக்கோ கிடைத்த வாக்குகள் இவை என இறுமாந்து விட வேண்டாம்.
திமுகவின் அடிப்படை கொள்கைகளில் இருந்து வழுவாமல் நீங்கள் இந்த தேர்தலை சந்தித்திருக்கலாம். ஆனால், பிஜேபி விரித்த வலையில் நீங்கள் விழுந்தீர்கள். அவர்கள் வேலை தூக்கியதும் நீங்கள் பார்ப்பனீய எதிர்ப்பை கையில் எடுத்திருந்தால், அடங்கியிருப்பார்கள். அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவாயா என்று கேட்டிருந்தால் காத தூரம் ஓடியிருப்பார்கள். ஆனால் நீங்களோ, வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற அச்சத்தில் வேலை கையில் எடுத்தீர்கள்.
பிஜேபி கொரொனா காரணமாக இன்று பலவீனமாக உள்ளதால், உங்கள் ஆட்சிக்கு உடனடி ஆபத்து இல்லை. அவர்கள், திமுக எம்.எல்.ஏக்களை மிரட்டியோ, விலைக்கு வாங்கியோ எப்போது வேண்டுமானாலும் ஆட்சியை கவிழ்க்க தயங்க மாட்டார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.
பல பார்ப்பனக் குடும்பங்களில், “வந்துட்டானா இந்த சண்டாளான். இனிமே நாடு நாசமாப் போகும்” “இனிமே தமிழ்நாட்டை பகவான் தான் காப்பாத்தணும்” என்று சபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பார்ப்பனீய சக்திகளால் உங்களின் வெற்றியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
மிக மிகக் கவனமாக செயல்படவேண்டிய தருணம் இது. உங்களின் முதல் சறுக்கலுக்காக காத்திருக்கிறது பார்ப்பனீயக் கூட்டம். அந்த சறுக்கலை உங்கள் குடும்ப உறுப்பினர்களோ அவர்கள் நண்பர்களோ ஏற்படுத்தலாம். திமுகவினர் மீது இருக்கும் நில அபகரிப்பு, ரவுடியிசம் போன்ற அவச்சொற்கள் மீண்டும் இந்த ஆட்சி மீதும் படியாமல் காப்பீராக.
தமிழகம் மிக மிக திறமையான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். தமிழகத்தை முன்னேற்றுவதில் உங்களோடு துணை நிற்பார்கள், கவலை வேண்டாம். இத்தனை ஆண்டுகள் நீங்கள் சந்தித்து வெற்றிகண்ட சவால்களைப் போலவே, இந்த சவாலையும் நீங்கள் திறம்பட எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
உங்களிடம் எனக்கு ஒரே ஒரு கோரிக்கைதான் :
1996ல் கலைஞர் லஞ்ச ஒழிப்புத்துறையை முடுக்கி விட்டு, ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழுக்களை உருவாக்கி, பதிவு செய்த வழக்குதான், 21 ஆண்டுகள் கழித்து ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியது.
நீங்கள் உங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது போல, அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி பிரிவை உருவாக்கி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே கோரிக்கை.
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.
கலைஞர்மு.கருணாநிதி உரை:
ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈ.டுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்.
இக்குறளுக்கு ஏற்ப ஆட்சி நடத்துங்கள்.
அன்புடன்
சவுக்கு சங்கர்
4 மே 2021
Great Savukku Sir. Let’s remind our chief minster that DMK is awaiting threats on the post corona stage, which are most likely to be posed by Brahmin powers (BJP). Let’s hope that this term would turn on to be a reminder of the 60s.
How long you will do politics by making Brahmins as enemy? Nice wicked strategy from 1950s which is no more true to project them as dominating class.
Germany did the same against Jews, but Jews got their own country.
Already many Brahmins have left to US. In 50-100 years, their Percentage will decline to < 1% (probably already they are down to 2% which Census will show).
Only Islamic population will rise and no more dravidian politics against Brahmin will yield result .
You like it or not – its going to be Hindu Vs Others soon.
இரு தமிழ் வார்த்தைகளை கோர்வையாக பேச தெரியாத கிழட்டு சனியன் தெலுங்கு துண்டு சீட்டு பதவியை காப்பாற்ற பிஜேபியுடன் கூட்டு சேர்ந்து தமிழ் நாட்டை சூறையாடப் போவது நிச்சயம் . பிரஷாந்த் கிஷோர் மற்றும் கேடி சகோதர்கள் பிராமணர்கள் . துண்டு சீட்டு பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான்
இவன் அரை வேக்காட்டு journalist . redpix காரனுடன் சேர்ந்ததும் இவன் மாறி விட்டான். நாங்க பார்ப்பனர்கள் .எங்கள் குடும்பம் முழு வதும் ஸ்டாலின் மற்றும் கருணாநிதி அவர்களுக்கு தான் ஒட்டு போட்டு வருகின்றோம். ஆசிரியர்களுக்கு கலைஞர் நிறைய நன்மைகள் செய்து இருக்கிறார். அந்த நன்றிக்காக 20 வருடமாக உதய சூரியனுக்கு தான் வாக்கு அளிக்கிறோம்.ஜாதியை வைத்து அரசியல் செய்வது உன் போன்றவர்கள் தான். வேறு பிழைப்பு இருந்தால் தேடு. எவன் காசு கொடுத்தாலும் கட்டுரை எழுதி விடுவான். தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே ஆட்சி கவிழும் mla kal ஓடி விடுவார்கள் என்று நீட்டி முழக்கினான். இவன் எண்ணத்தில் இடி விழ.
முந்தைய ஆட்சிக்கும் இதை தான் செய்தான். திருடனுக்கு தான் அடுத்தவன் செய்யும் திருட்டு தனம் அத்துப்படி. அதனாலேயே இந்த திருடன் பிழைப்பு ஓடுகிறது.
I see that thro’ this post you’re trying to set yourself straight with DMK despite all your previous comments, accusations against them. திமுக யார், அவர்களி்ன் பழிவாங்கும் அரசியல் என்ன என்பது ஊரறிந்ததே. ஆட்சி மாற்றம் தேவை என்றபோதும், வேறு தகுதியடைய கட்சியோ, தலைவரோ இல்லாத நிலமையே திமுக வர காரணம். ஊழலில் திளைத்தவர்களில் திமுகவினர், அதிமுகவிற்க்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர். ஆதலால், நீங்கள் Stalin’ னுக்கு கொடுக்கும் தகுதி முட்டு ஏற்பப்புடையதாக இல்லை. Karunanidhi’ யின் மகன் என்பதாலேயே , அவருக்கு இத்தனை செல்வாக்கு, அதுவும் Karunanidhi’ யின் long term vision in placing him in the right position to takeover after him, was always apparent. But. Stalin will now leap 32 feet for his son “Vazhum Socrates”, learning from his father. Modern Politics is a business in which the services/schemes are designed around the people, but the profits are channelled towards the politicians. Let’s watch the space e.g. to whom all the contracts are being offered, favoured etc. I believe you too will also keep vigil, as you did for EPS & OPS. DMK’s promises are attractive, like abolition of NEET in TN, but possibilities are very limited. 5 more years to go. Lot to discuss. As you’ve always pointed out, it doesn’t matter if DMK or AIADMK is in power, as their ring master will always be the BJP, at least for the near future.
பொழுது போய் பொழுது விடிந்தா எப்படியாவது பாப்பார பசங்களத ஊம்பிடணும் இல்லனா உனக்கு தூக்கம் வரதுஇல்லை!!!!!!!!!
The Vote percentage of DMK is 37.7 % and not 36.3 % as you mentioned.
https://results.eci.gov.in/Result2021/partywiseresult-S22.htm?st=S22
Savakoo Sankar paarpan vassvai vittu vitoo, aakka purva veligal seingall
As long you target Brahmin you are bound to loose everything because people and public both watching, just over 3% population will decide stalin fate, as long afraid of Brahmin you continue to focus only blaming one community the periyaar and annadurai did the same mistakes. So stop targeting one community do constructive work DMK will come for next ,20 yrs
மிகவும் தேவையான பதிவு. நன்றி சவுக்கு.
appadi yeena thevaiyai paartha?
you are third rated cult… we know how you have changed yourself over time…. continue your sucking DMK MLAs
முதலில் பிஜேபி எதிர்ப்பு ஒட்டு என்றீர்கள், பிறகு அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளின் வாக்கு சதவிகிதம் தான் காரணம் என்கிறீர்கள்.
1. // இதுவும் பிஜேபிக்கு எதிராக விழுந்த வாக்குகளாகவே நான் பார்க்கிறேன். //
2. // வேறுபாடு 3.01. அமுமுக பெற்றுள்ள வாக்கு விகிதம் 2.47%. அமுமுகவோடு துண்டு துக்கடா கட்சிகளை சேர்த்து அதிமுக தேர்தலை சந்தித்திருந்தால் திமுக நிலை என்ன ? மேலும் 21 தொகுதிகளில், அமுமுக பெற்ற வாக்குகளே திமுகவின் வெற்றியை உறுதி செய்துள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்.
மேலும், திமுக பெற்றுள்ள 36.30 சதவிகிதத்தில், காங்கிரசின் 4.41, சிபிஐயின் 1.17, மதிமுகவின் 1.13, விசிகவின் 1.06, சிபிஎம்மின் 0.90 ஆகியவையும் அடக்கம் என்பதை மறந்து விடாதீர்கள். //
யப்பா டேய், என்ன உருட்டுடா இது?
பி.கு. உதயனா ஸ்டாலின் அய்யா சொன்ன எல்லாம் கேட்க மாட்டாரு. “உடனடி தலைமறைவு அவசியம்.”
Excellent, thank you savukki sir!
சவுக்கு நீயே ஒரு 420. பழைய சவுக்கு இருக்கே அது ஒரிஜினல் . ஜாபர் சேட்.,CT.செல்வம் இப்படி எல்லார் கண்ணுலயும் விரல விட்டு ஆட்டுன சவுக்கு சங்கர் நீ இல்லை. சோரம் போன சவுக்கு .
Do you mean to say DMK is not corrupt? People like A. Raja, Jagahthrakshakan are going to be punished. Don’t think Stalin is a paragon of virtue. He is lucky to be in power now. Now his attention should be to give good governance. No point in filing cases against AIADMK ministers. We know how clean is Senthil Balaji and so many who crossed floor.
We know about Thiruvannamalai MLA who made tons of money.
Stalin does not have to make money now. During his last days he should serve people. Don’t do ” kettle calling pot black”. Try to bring Kamaraj rule back again
Why not to file cases against ADMK ministers who looted even during corona crisis and tried to bring ecological disasters?Charges against Raja not yet proved.
அருமை தோழர்
மன சாட்சி இல்லை சங்கர். இன்று செய்திகளை பார்த்தீர்களா? உங்கள் கருத்துக்கு பார்ப்பநீயத்தை துணைக்கு அழைத்து உள்ளீர்கள். நான் பார்ப்பனர் இல்லை. Mla சீட் கொடுக்க பட்டதே பணத்தின் அடிப்படையில் தான். நடு நிலை தவறாதீர்கள்.
Good article….
Please check the percentage of votes which DMK in the article
மிகவும் சரியான கருத்து. உண்மைநிலையை உணர்த்தியுள்ளீர்கள்
அருமை
Same day we face one incident
https://twitter.com/search?q=%23%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D
DMK & ADMK does not make any difference
👍