÷நீலகரி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் கண்காணிப்பு ஆணையம் சார்பில் உதகையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தல் பங்கேற்ற அமைச்சர் ராசா, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அலைகற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இவ்வழக்கில் மத்தியப் புலனாய்வு அமைப்பின் நடவடிக்கைகளை உச்சநீதி மன்றம் கண்டித்துள்ளது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு ஆ.ராசா முதலில் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.
÷இருப்பினும் செய்தியாளர் ஒருவர் அவரைத் தொடர்ந்து இதே கேள்வியை எழுப்பினார். அப்போது அவர் கூறியது:
÷உச்ச நீதிமன்றத்தில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் இறுதித் தீர்ப்பு அல்ல. இதுதொடர்பாக எனது வழக்கறிஞர்களுடன் இதுவரை ஆலோசிக்கவில்லை. அவர்களிடம் பேசிய பின்னரே கருத்து கூற முடியும். இப் பிரச்னையை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று ஆ.ராசா குறிப்பிட்டார்.