பிஜேபிக்கு மலிவு விலையில் விளம்பரங்கள் அளித்த பேஸ்புக் – 3

You may also like...

4 Responses

  1. தொழிற் செல்வி. பா says:

    சரண் அவர்களின் பதிவு தமிழ் மக்களின் அழிவின் போக்கை எச்சரிக்கிறது தமிழக அரசு இதை கண்காணிக்க வேண்டும். உரிய நடவடிக்கையும் எடுக்கவேண்டும்.

  2. saran says:

    சமீபத்தில் கொடைக்கானல் சென்றபோது சின்னஞ்சிறு மலை கிராமங்களில் உள்ள கோவில்களில் ஆர்எஸ்எஸ் ஊடுருவி இருப்பதை காணமுடிந்தது. இதேபோல மேகமலை சென்றபோதும் பார்த்தேன். குன்னூருக்கு சென்றபோதும் ஒரு சோயா பீன்ஸ் கடைக்காரர் தானொரு ஆர் எஸ் எஸ் இயக்கத்தவர் என்பதை பெருமையாக சொல்லிக் கொண்டதை கவனித்தேன். இவர்கள் ஆதிக்க சாதியோ, பார்ப்பனர்கள் கூட்டமோ அல்ல. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், பழங்குடியினர் என்பதுதான் ஆச்சரியம். ஆனால் இது இன்னமும் மிகச்சிறிய அளவில்தான் இருக்கிறது. இந்தப் பகுதிகளில் ஆர்எஸ்எஸ் நிறைய செலவழித்தாலும் மக்களை ஒன்றிணைக்க தடுப்பது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும், திமுகவும் தான். ஆச்சர்யமாக இந்தப் பகுதிகளில் கம்யூனிஸ்ட் கொடியை பார்க்க முடியவில்லை. மூணாறு உள்ளிட்ட கேரள இடுக்கி மாவட்டத்தின் தமிழர்கள் மட்டும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பழக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

    நமது திராவிட மண்ணில் பார்ப்பனியத்தை காலாகாலமாக எதிர்த்து வந்து கொண்டே இருந்திருக்கிறோம். அவர்கள் தெய்வமான பிரம்மனுக்கு இங்கு எந்த காலத்திலும் கோவில் இல்லை. ஆகவே நமது நாட்டார் தெய்வங்களை தங்களது தெய்வமாக வரித்துக் கொண்டு வேதியம் தனது ஊடுருவலை செய்தது. கோவில்களில் பூசாரிகளை வெளியே அனுப்பிவிட்டு இவர்கள் அமர்ந்துகொண்டார்கள். அப்பொழுது கூடவே தமிழையும் கோவிலிலிருந்து வெளியே அனுப்பினார்கள்.

    இன்று இதே விதமான அரசியல் நகர்வுகளை சாமானிய மக்களிடம் செய்து கொண்டிருக்கிறார்கள். முன்பு கிராமத்து கோவில் திருவிழாக்களில் ஒருபோதும் இவர்கள் பங்களித்ததில்லை. இன்று எந்த ஒரு சிறு கோவில் திருவிழா என்றாலும் இந்து மகாசபை, பாரத சேனை என்ற பெயர்களில் ஊடுருவி வருகிறார்கள். கோவில் காரியம் என்பதால் மக்கள் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை.

    மேலும் இவ்வாறான திருவிழாக்கள் முடியும் போதெல்லாம் அங்கு நிரந்தரமாக இவர்களுக்கு ஒரு இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். பிஜேபியின் கொடியை ஏற்றுகிறார்கள். அங்குள்ள மக்களை வைத்து ஒரு அமைப்பை நிறுவுகிறார்கள்.

    இது சில வருடங்களில் வேறு பல விளைவுகளை கொண்டு வருகிறது. வள்ளி திருமண நாடகம் நிகழ்த்தி வந்த இடத்தில் அதை நீக்கிவிட்டு கதாகாலட்சேபம் வைக்கிறார்கள். பார்ப்பதற்கு இது மேம்போக்கான நிகழ்வாக இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் இந்த மண்ணின் முற்போக்கு எண்ணங்களில் நிகழ்த்தப்படும் தாக்குதலாக இதைப் பார்க்க வேண்டும்.

    வள்ளி திருமண நாடகம் என்பது கிராமிய நாடகக் கலையும் கலப்புத் திருமணத்தை வலியுறுத்தும் கருத்தும் இணைந்தது. மக்கள் மனதில் சாதிய உணர்வுக்கு எதிராக தமிழ் கடவுளின் வாயிலாகவே சொல்வது. அதை மாற்றுவது என்பது மிகப்பெரும் அச்சுறுத்தலாக பார்க்க வேண்டும்.

    இவ்வாறு திருவிழா கமிட்டிகளில் கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் தங்கள் அதிகாரத்தை செலுத்த தொடங்கி உள்ளார்கள்.

    பேருந்து போக்குவரத்து குறைந்த பகுதிகளில் கூட இவர்களது ஊடுருவல் நிகழ்த்தப்படுகிறது. அங்குள்ள இளைஞர்களை திரட்டி இலவச பயிற்சி என்று சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு அழைத்துச்சென்று மனதில் விஷ விதைகள் ஏற்றப்படுகிறது. ABVP கிராமங்கள் வரை வந்து விட்டார்கள். இதில் அவர்களது முக்கியமான எளிமையான குறி ஊர்சேரிகள்.

    பெரும் ஊர் திருவிழாக்களில் சேரிகளுக்கு எந்த பங்கும் கொடுக்கப்படாத பட்சத்தில் அதை பிஜேபியினர் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி அவர்களுக்கு கட்சியின் வழியாக ஒரு அங்கீகாரத்தை கொடுக்கும்போது இயல்பாக அந்த மக்களில் உள்ள சில இளைஞர்கள் மடை மாறுகிறார்கள்.

    அதேபோல ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பெரும் சாதிக் சங்கங்களுடன் இவர்கள் இணைந்து ஊர் விழாக்களில் பங்கெடுக்கிறார்கள். 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் இவர்களின் டார்கெட். அவர்களை வைத்து தங்களது விளம்பர யுத்திகளை செயல்படுத்துகிறார்கள்.

    இதை தடுக்க நாம் பலவழிகளில் முயற்சிக்க வேண்டும்.

    கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு திராவிட முற்போக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

    சேரிகளில் உள்ள இளைஞர்கள் அனைவருக்கும் சமூக அங்கீகாரமும் பயிற்சியும் கொடுக்கப்பட வேண்டும்.

    இந்த இளைஞர்களை வைத்து ஊர் திருவிழாக்களில் சமூக நல்லிணக்க நாடகங்கள் நடத்தப்பட வேண்டும். ஒரு நாடகம் நடத்தப்படும்போது அதில் பங்கேற்பவர்கள் திரும்பத் திரும்ப பயிற்சி எடுப்பதன் மூலம் அவர்களது ஆழ்மனதில் அந்த கருத்துக்கள் ஆழமாக வேரூன்ற தொடங்கிவிடுகின்றன.

    சிறார்கள் ஆக இருந்து இளைஞர்களாக மாறும் பருவத்தினருக்கு இங்குள்ள அரசியல் பற்றிய பயிற்சிகள் பல்வேறு வடிவங்களில் நாம் கொடுத்தாக வேண்டும். 10 ஆண்டு கால கருத்தாக்க முதலீடாக இதனை செய்ய வேண்டும்.

    பிஜேபியினர் தேர்தல் சமயத்தில் மட்டும் மக்களை சென்றடைவதில்லை மாறாக எல்லா காலகட்டத்திலும் பல வழிகளில் ஊடுருவ முயற்சிக்கிறார்கள். அதனைத் தடுக்க முற்போக்கு இளைஞர்களாகிய நாமும் பலவித பதில் நடவடிக்கைகள் தொடர் பயிற்சிகள் நமது துணை அமைப்புகளின் வழியாக நடத்தப்பட வேண்டும்.

    வருடத்திற்கு 4 முறை கிராமங்களில் உள்ள நமது அமைப்புகளை வலுப்படுத்த அங்குள்ள மாணவர்களை நகரங்களுக்கு அழைத்து வந்து அவர்களை நல்விதமாக நடத்தி பயிலரங்குகள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

    பிஜேபியினர், இந்து மகா சபையினர் என்னவிதமான கருத்தாக்க ஆயுதங்களை பயன்படுத்துகிறார்களோ அதற்கு மாற்று ஆயுதங்களை நாம் நமது இளைஞர் பயிற்சி அரங்கில் கற்றுக் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு முற்போக்கு கருத்துக்கள் பள்ளி மாணவர்கள் வரை நுணுக்கமாக பல வழிகளில் சென்று சேர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    திமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட கழக அமைப்புகள் இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள் அனைவருக்கும் இது பற்றிய புரிதல் பயிற்சி வகுப்புகள் கொடுக்கப்பட்டு ஒவ்வொருவரையும் பயிற்சியாளராக உருவாக்கி அவர்கள் மூலமாக சிறு நகரங்கள் கிராமங்கள் எல்லாவற்றுக்கும் சென்று பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். இதில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் அவர்களுக்கு பதவி கொடுக்கப்பட வேண்டும். அப்படி செயல்படும் போதுதான் முற்போக்கு இயக்கங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருக்கும்.

    பெண்களுக்கு தனி பயிற்சிகள், பயிலரங்குகள் நடத்தப்பட வேண்டும். அவர்களது சமூக உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கும் நமது கிராமம் அமைப்புகளில் முக்கியமான பதவி கொடுக்கப்பட வேண்டும். பெண்களைவிட நல்ல பயிற்சியாளர்கள் வாய்ப்பது கடினம். அவர்கள் ஒவ்வொருவரையும் திராவிட முற்போக்கு சமூக நீதிப் பயிற்சியாளர்களாக உருவாக்க வேண்டும்.

    மேலும் இந்த அமைப்புகள் மூலம் அரசின் திட்டங்கள் எளிய மக்களுக்கு எடுத்துச் செல்ல உதவ முடியும். அதனை கண்காணிக்க முடியும். முற்போக்கு கட்சிகளுக்கும் மக்களுக்குமான பாலமாக இவர்கள் எப்போதும் இயங்க வேண்டும்.

    இவ்வாறு பல்வேறு தொடர் செயல்பாடுகள் மூலம் நமது மக்களின் மனதில் திராவிட முற்போக்கு கழகம், கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முற்போக்கு கட்சிகள் ஒரு தலைமுறைக்கான நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்று கட்சியின் தலைமைகளை கேட்டுக்கொள்கிறேன். Karthikeyan

    • Anonymous says:

      காங்கிரஸ் கட்சியின் மத சார்பற்ற தேசிய சித்தாந்தத்தையும் , முற்போக்கு சிந்தனைகள் கூட விதைக்க வேண்டும் … இன்று இந்த மதசார்பற்ற தேசிய சிந்தனைகள் போகாத இடங்களில் பிஜேபி மெல்ல பாய் விரிக்கிறது ….தேசியத்தை ஒதுக்கினால் அங்கு பிஜேபி நுழைந்து அந்த இடத்தை ஆக்ரமித்துக்கொள்வார்கள் ….

  3. அரங்க ராஜா says:

    அப்பாடியோ. சரி நம்ம தமிழக ரரக்களும், உபிக்களும் எவ்வலவு செலவு இதுக்கு பன்னிருப்பாங்க?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress