கருணாநிதி எது பேசினாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அப்படி இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்புவார். லாட்டரி அதிபர் மார்ட்டின் தயாரித்து கருணாநிதி கதை வசனம் எழுதிய இளைஞர் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் போது கருணாநிதி பேசியது, “பேசா படத்தில், திரைக்கு முன்னே படம் தெரிந்தால் கூட, நாம் அமர்ந்திருக்கின்ற இடத்திற்கு பின்னால் ஒருவன் கையிலே மெகாபோனை வைத்துக் கொண்டு, திரையில் என்ன நடக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருப்பான்.
‘அதோ பார், பீமசேனன் வருகிறான், அதோ பார், பகாசூரன் வருகிறான், பீமசேனன் கீசகனை வதைக்கிறான்’ என்பதை வர்ணித்துக் கொண்டே ஒருவன் இருப்பான்.
‘பீமசேனனைப் பார், பகாசூரனைப் பார், பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்’ -என்று வர்ணிப்பான். படம் பார்க்கின்ற யாருக்கும் ‘பல்லுக்குப் பல் இருகாதம்’ என்கின்றானே, எப்படி அது? காதம் என்றால் பத்து மைல் அல்லவா? இருகாதம் என்கிறபோது இருபது மைல் அல்லவா? பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம் என்றால் முப்பதும் இருபதும் ஐம்பது மைல் அல்லவா? ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையே ஐம்பது மைல் அகலம் என்றால், வாய் எவ்வளவு அகலம் இருந்திருக்கும்? இப்படி ஒருவர் இருந்திருக்க முடியுமா-பகாசூரன் என்று? அன்றைக்கு யாரும் கேட்டதில்லை. இன்றைக்கு மட்டும் கேட்கிறார்களா என்ன?
ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் என்று சொல்லும்போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்த தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? யாராவது ஒருவர் அதை அபகரித்திருந்தால் இவ்வளவு பெரிய கணக்கை-ஒரு தாளிலே எழுதிக் காட்டினால், அதை எப்படி இன்றைக்கு நம்புகிறோமோ, படித்தவர்கள் நிறைந்த, அறிவு பரவியிருக்கிற, சட்டம் தெரிந்த, நாணயத்தின் மதிப்பை உணர்ந்த இந்தக் காலத்திலே கூட ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் என்றால் அதை நம்புகின்ற நாம்-அன்றைக்கு “பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்” என்று அவனுடைய வாயே முப்பதாயிரம் மைல் என்று பகாசூரனை வதைத்தபோது, அதை ஆனந்தமாக கேட்டுக்கொண்டுதான் படத்தை பார்த்தோம். அப்படி படம் பார்த்த ஏமாளிகளிலே ஒருவனாக நான் அன்றைக்கு இருந்தேன்.
படம் பார்த்தவர்களுடைய ஏமாளித்தனம் அப்படி இருந்தது. எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு ஒரு மனிதன் அந்த காரியத்தை செய்கிறான் என்றால், அவன் விஞ்ஞான ரீதியாகத்தான் செய்ய முடியும்.”
கருணாநிதியின் பேச்சின் சாரம் என்ன என்றால் ஒருவரே ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழலைச் செய்திருக்க முடியுமா என்பதுதான். அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. இத்தனை ஆயிரம் கோடியை ராசா மட்டுமே சுருட்டி எடுத்துச்செல்வதை காங்கிரஸ் கட்சி அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஆனால் ராசா மட்டுமே இந்த ஊழலை செய்தார் என்று காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல், நீதிமன்றங்களும் சொல்லி வருவதுதான் வேதனையிலும் வேதனை.
கடந்த வாரம் டெல்லி சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே எடுத்துக் கொள்வோம். சிதம்பரத்தை குற்றவாளியாக சேர்க்க சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஓ.பி.சைனி தனது தீர்ப்பில்,
“However, there is no material on record to show that Mr. P. Chidambaram was acting malafide in fixing the price of spectrum at the 2001 level or in permitting dilution of equity by the two companies. These two acts are not per se illegal and there is no further material on record to show any other incriminating act on the part of Mr. P. Chidambaram. A decision taken by a public servant does not become criminal for simple reason that it has caused loss to the public exchequer or resulted in pecuniary advantage to others. Merely attending meetings and taking decisions therein is not a criminal act. It must have the taint of use of corrupt or illegal means or abuse of his official position by public servant for obtaining pecuniary advantage by him for himself or for any other person or obtaining of pecuniary advantage by him without any public interest. There is no material on record to suggest that Mr. Chidambaram was acting with such corrupt or illegal motives or was in abuse of his official position, while consenting to the two decisions. There is no evidence that he obtained any pecuniary advantage without any public interest. I may add that there is such incriminating material against other accused persons, who stand charged and are facing trial.
68. There is no evidence on record to suggest that there was an agreement between him and Mr. A. Raja to subvert telecom policy and obtain pecuniary advantage for himself or for any other person. There is no evidence of any substantive act being committed by him. A bit of evidence here and a bit there does not constitute prima facie evidence for showing prima facie existence of a criminal conspiracy. Anybody and everybody associated with a decision in any degree cannot be roped as an accused. The role played by the decision maker, circumstances in which the decision was taken and the intention of the decision maker are the relevant facts. Intention is to be inferred from the facts and circumstances of the case. One cannot be held guilty merely by association with a decision and a decision by itself does not indicate criminality. There must be something more than mere association. Innocent and innocuous acts done in association with others do not make one a partner in crime, unless there is material to indicate otherwise, which is lacking in this case.
69. In the end, Mr. P. Chidambaram was party to only two decisions, that is, keeping the spectrum prices at 2001 level and dilution of equity by the two companies. These two acts are not per se criminal. In the absence of any other incriminating act on his part, it cannot be said that he was prima facie party to the criminal conspiracy. There is no evidence on record that he was acting in pursuit to the criminal conspiracy, while being party to the two decisions regarding non-revision of the spectrum pricing and dilution of equity by the two companies.”
ஓ.பி.சைனியின் தீர்ப்பை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.
However, there is no material on record to show that Mr. P. Chidambaram was acting malafide in fixing the price of spectrum at the 2001 level or in permitting dilution of equity by the two companies. These two acts are not per se illegal and there is no further material on record to show any other incriminating act on the part of Mr. P. Chidambaram.
2001 விலையில் 2008ல் ஸ்பெக்ட்ரம் வழங்கியதிலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளிநாட்டுக்கு விற்றதும் சட்டவிரோதமானது அல்ல. மேலும் இதில் சிதம்பரத்துக்கு பங்கு இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை.
இதில் முதல் பகுதியை கவனமாக பார்க்க வேண்டும். 2001 விலையில் ஸ்பெக்ட்ரத்தை வழங்கியது சட்டவிரோதமானது அல்ல என்றால், ராசா எதற்காக சிறையில் இருக்க வேண்டும் ? ஒவ்வொரு அரசாங்கத்திலும் நிதித்துறை என்பது மிக மிக முக்கியமானது. நிதித்துறையின் பொறுப்பு, அரசாங்கத்தின் நிதி சரியான முறையில் வரவு வைக்கப் படுகிறதா, சரியான முறையில் செலவு செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்வது. ஒவ்வொரு அரசாணையிலும் பார்த்தீர்கள் என்றால், This order is issued with the concurrence of the Finance Department என்ற வாசகம் தவறாமல் இருக்கும். அரசு நிதி சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களிலும், நிதித்துறை அரசின் நலனை பாதுகாக்கும் வகையில் முடிவெடுக்க வேண்டும் என்பதற்காகவே இருப்பதுதான் நிதித்துறை. அப்படிப்பட்ட நிதித்துறையின் அமைச்சராக இருப்பவர், ஆயிரக்கணக்கான கோடிகள் இழப்பை ஏற்படுத்தும் ஆ.ராசாவின் முடிவுக்கு ஏன் மௌன சாட்சியாக இருந்தார் ? லைசென்சுகள் வழங்கப்பட்ட பிறகு, நிதி அமைச்சகம் ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறது. “2001ல் முடிவு செய்யப் பட்ட விலையான 1600 கோடி எப்படி 2007ல் பொருந்தும் என்பது புதிராக உள்ளது. இத்தனை பெரிய நிதி விவகாரம் இதில் சம்பந்தப் பட்டிருப்பதால், நிதி அமைச்சகத்தை கலந்தாலோசித்திருக்க வேண்டும். அதனால் உடனடியாக இந்த விஷயத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அது வரை கொடுக்கப் பட்ட லைசென்சுகளை நிறுத்தி வைக்கவும்.” என்று நிதி அமைச்சகம் எழுதுகிறது.
இதன் பிறகு ராசாவும் சிதம்பரமும் சந்திக்கிறார்கள். அந்தச் சந்திப்புக்குப் பிறகு, சிதம்பரம், 2001 விலையில் ராசா லைசென்சுகள் வழங்கிய விவகாரம் ஒரு முடிந்த விவகாரம் என்று பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். இத்தனை ஆயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய விவகாரம் முடிந்து போன விவகாரம் என்று சிதம்பரம் ஏன் சொல்கிறார் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது அல்லவா ? இது ஏன் ஓ.பி.சைனிக்கு தோன்றவில்லை ?
அடுத்த விவகாரம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், தங்கள் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கி கொள்ளை லாபம் பார்த்த விவகாரம்.
ஜனவரி 2008ல் டாடா நிறுவத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்த ராசா, 2001ல் உள்ள விலையில் ஒதுக்கீடு செய்கிறார். அதாவது டாடா நிறுவனம் ஸ்பெக்ட்ரத்துக்காக செலுத்திய தொகை, 1658 கோடி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்ட 7 மாதங்களில் டாடா நிறுவனம், அதன் 26 சதவிகித பங்குகளை ஜப்பானைச் சேர்ந்த டோகோமோ என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்கிறது. எவ்வளவு தெரியுமா ? 14,000 கோடி. வெறும் 26 சதவிகித பங்குகள் 13 ஆயிரம் கோடியை பெற்றுத் தந்திருக்கிறது என்றால், டாடா பெற்ற ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பு எவ்வளவு என்று பாருங்கள்.
ஸ்வான் டெலிகாம் ஸ்பெக்ட்ரம் பெறுவதற்கு அரசுக்கு செலுத்திய தொகை, 12 ஆயிரத்து, முன்னூற்று எண்பத்து ஆறு கோடி. தங்களின் 50 சதவிகித பங்குகளை, துபாயைச் சேர்ந்த எடிசலாட் நிறுவனத்துக்கு விற்ற விலை, 58 ஆயிரத்து நாற்பத்து ஒன்பது கோடி. யூனிடெக் நிறுவனத்துக்கு, ஸ்பெக்ட்ரம் அரசால், 12 ஆயிரத்து, முன்னூற்று எண்பத்து ஆறு கோடிக்கு வழங்கப் பட்டது. நார்வேயைச் சேர்ந்த, டெலிநார் நிறுவனத்துக்கு 67.25 சதவிகித பங்குகளை விற்ற வகையில், யூனிடெக் நிறுவனத்துக்கு கிடைத்த வருவாய், 67 ஆயிரத்து, தொள்ளாயிரத்து, அறுபது கோடி.
கண்முன்பாகவே இப்படிப்பட்ட கொள்ளை நடைபெறுவதை வேடிக்கை பார்த்த சிதம்பரம் தவறு செய்யவில்லை என்று எப்படி சொல்கிறார் ஓ.பி.சைனி… லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், தங்கள் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்காமல் தடைசெய்வது நிதி அமைச்சகத்தின் பணி அல்லவா ?
மேலும், சுப்ரமணியன் சுவாமி தொடுத்த வழக்கின் மற்றொரு அம்சம், உள்துறை அமைச்சகம் தடை செய்திருந்த இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு – எடிசலாட் மற்றும் டெலிநார் தங்கள் பங்குகளை விற்க அனுமதித்ததன் மூலம் நம்பிக்கை மோசடிக் குற்றத்தை (Criminal Breach of Trust) சிதம்பரம் புரிந்துள்ளார் என்பதுதான். இந்த இரண்டாவது பாகத்தை ஓ.பி.சைனி கண்டுகொள்ளவே இல்லை என்பது வினோதம்.
ஆ.ராசா தொடக்கத்திலிருந்தே சொல்லி வந்தது போல, இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மன்மோகன் சிங்குக்கு தெரிந்தே அத்தனை முடிவுகளும் எடுக்கப் பட்டுள்ளன. இத்தனை விவகாரங்களும் தன் கண் முன்னே நடைபெறுவதைப் பார்த்துக் கொண்டு தடுக்கத் தவறிய மன்மோகன் சிங்கை சிபிஐ சாட்சியாகக் கூட விசாரிக்கவில்லை என்பது விநோதத்திலும் விநோதம். ஸ்பெக்ட்ரம் ஊழலில் மன்மோகன் சிங்கின் பங்கு குறித்து, “ஊமை ஊரைக் கெடுக்கும்” என்ற கட்டுரையை படிக்கவும்.
ஸ்பெக்ட்ரம் விசாரணையில் சிக்காமல் தப்பித்த மற்றொரு முக்கிய நபர், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் குலாம் வானாவதி. வானாவதியின் ஒப்புதலுடனேயே லைசென்சுகள் பெறுவதற்கான கடைசித் தேதி மாற்றியமைக்கப் பட்டது என்றார்.
சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், “A Raja struck out the last para of the press release, at the same time he also inserted in his aforementioned note dated 07.02.2008 the words “press release appd as amended”. This insertion in the note was done willfully by A.Raja after the then solicitor general had had already recorded his note dated 07.01.2008 after his note, on the running note sheet. By this dishonest act A.Raja in conspiracy with accused Siddarth Behura portrayed to the Department of Telecommunication that the amended draft had the consent of the then Learned Solicitor General. In this manner he falsified the records in furtherance of his design to cheat the DoT by manipulating the draft in a manner wrongfully benefitting the accused private persons / companies.”
அதாவது அரசுத் தலைமை வழக்கறிஞர் ஒப்புதல் கொடுத்த வரைவு பத்திரிக்கைச் செய்தியை, தனி நபர்கள் சட்டவிரோதமாக பலனடையும் வகையில் ராசா திருத்தம் செய்துள்ளார், அரசு வழக்கறிஞரின் கருத்தை திரித்து ஏமாற்றியுள்ளார்.
அந்த பத்திரிக்கை செய்தியின் முதல் பாராவில் ட்ராய் 28.08.2007 அன்று ஸ்பெக்ட்ரம் வழங்குவதில், ஒரு வட்டத்துக்குள், வழங்கப்படும் லைசென்சுகளுக்கு வரையறை வேண்டியதில்லை என்று அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, 25.09.2007க்குள் விண்ணப்பித்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு லைசென்சுகளுக்கான கடிதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.”
இதன்படி, ஏற்கனவே 01.10.2007 என்று முடிவெடுக்கப்பட்டிருந்த கடைசி தேதியை ராசா 25.09.2007 என மாற்றுகிறார். இப்படி மாற்றியதன் மூலமாகத்தான் 26.09.2007 முதல் 01.10.2007 வரை விண்ணப்பித்திருந்த 343 விண்ணப்பதாரர்களை தகுதியிழப்பு செய்து, யூனிடெக், மற்றும் ஸ்வான் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்கிறார்.
பத்தி இரண்டில் பல்வேறு தொழில்நுட்ப விபரங்கள் உள்ளன. மூன்றாவது பத்தியில் ராசா, “தொலைத்தொடர்புத் துறை முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கைளை கடைபிடித்து வருகிறது. அதன்படி முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு லைசென்சுகளுக்கான கடிதம் வழங்கப்பட்டு, அதில் உள்ள விதிமுறைகளை அவர்கள் பூர்த்தி செய்தால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும்”
இது முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு எதிரானது. “விதிமுறைகளை பூர்த்தி செய்வது” என்றால், பல கோடி ரூபாய்க்கு டெபாசிட்டுகளை டிமான்ட் ட்ராப்ட் மூலம் செலுத்துவது. இப்படிப்பட்ட நிபந்தனையை ராசா விதித்ததால்தான், ஏற்கனவே இந்த விதிமுறையைப் பற்றி அறிந்திருந்த ஸ்வான், யூனிடெக், சிஸ்டெமா ஷ்யாம் போன்ற நிறுவனங்கள், குறிப்பிட்ட நேரத்தில் தயாராக வரைவோலையோடு காத்திருந்தன.
சிபிஐ இயக்குநர் மற்றும் வானாவதி
இதற்கு அடுத்து நான்காவதாக இருந்த ஒரு பத்தியை ராசா நீக்குகிகிறார். “ஒரே நாளில் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர் வருவாரேயானால், விண்ணப்பம் அளித்த நேரம் மற்றும் பதிவு செய்த நேரம் (Inter-se seniority) கணக்கிலெடுக்கப்படும்”
இந்த நான்காவது விதிமுறையைத்தான் ராசா வானாவதியின் ஒப்புதலுக்குப் பிறகு நீக்கி முறைகேட்டிலும் ஆவணத்திருத்தத்திலும் ஈடுபட்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறது சிபிஐ.
ஆனால், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கையில், அடிப்படைத் திருத்தத்தைக் கொண்டுவருவதே மூன்றாவது பத்திதான். லைசென்சுக்கான கடிதத்தைப் பெற்று, நிபந்தனைகளை பூர்த்தி செய்பவருக்கே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற நிபந்தனைதான்,
இந்த நிபந்தனை காரணமாகத்தான் 10.01.2008 அன்று மதியம் தொலைத்தொடர்புத் துறை அலுவலகத்தில் அடிதடியோடு ஸ்பெக்ட்ரம் விநியோகிக்கப் பட்டதற்கான காரணமே மூன்றாவது பத்திதான்.
ஆனால், நான்காவது பத்தியை நீக்கியதுதான் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே காரணம் என்று வாதிடுகிறது சிபிஐ. ஆனால் மூன்றாவது பத்தியின் தொடர்ச்சியே நான்காவது பத்தி. முதலில் வருபவர், “அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்” என்ற நிபந்தனையிலேயே அனைத்தும் அடிபட்டுப் போய் விடுகின்றன.
மேலும் சிபிஐ செய்த மிகப் பெரிய அயோக்கியத்தனம், வானாவதியைக் காப்பாற்றியதுதான். ஸ்பெக்ட்ரம் வழங்கும் கோப்பின் முதல் பத்தியிலேயே, ஆ.ராசா அரசு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்டுப் பெறலாம் என்று எழுதுகிறார். இந்தக் கோப்பு சட்ட அமைச்சகத்துக்குச் செல்லும்போது, அப்போதைய சட்ட அமைச்சர் பரத்வாஜ், இந்த விஷயத்தின் முக்கியத்துவம் கருதி, இதை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பலாம் என்று எழுதுகிறார். வானாவதியைப் பற்றி நன்கு தெரிந்ததால் இப்படி எழுதினாரா என்பது தெரியவில்லை.
வானாவதியை காப்பாற்றுவதற்கு சிபிஐ பகீரத பிரயத்தனம் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. தொலைத்தொடர்புத் துறை 25.09.2007 என்று கடைசித் தேதியை நிர்ணயித்து வெளியிட்ட பத்திரிக்கைக் குறிப்புக்கு ஒப்புதல் தந்த வானாவதி அந்தக் கோப்பில் கீழ் கண்டவாறு எழுதுகிறார்.
“I have seen the notes. The issue regarding new LoIs are not before any court. What is proposed is fair and reasonable. The press release makes for transperancy. This seems to be in order”
“நான் குறிப்புகளைப் பார்த்தேன். புதிய லைசென்சுகள் வழங்குவது தொடர்பான வழக்குகள் எந்த நீதிமன்றத்திலும் நிலுவையில் இல்லை. எடுக்கப்படப்போகும் நடவடிக்கை நியாயமாக உள்ளது. பத்திரிக்கைக் செய்தி வெளிப்படைத் தன்மையை உறுதி செய்கிறது. சரியாக உள்ளது” என்று எழுதியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க மத்திய அமைச்சரவைக் குழுவுக்கு இந்தக் கோப்பை அனுப்பலாம் என்று சட்ட அமைச்சர் எழுதியுள்ளார் இது வானாவதியின் கண்ணுக்குப் படவில்லை. தொலைத்தொடர்புத் துறையின் நிதிக்கான உறுப்பினர் மஞ்சு மாதவன் அதே கோப்பில், “We are in receipt of a communication dated 22.11.2007 from the Department of Economic Affairs wherein they have expressed concern that we are offering the rates obtained in 2001 as entry fee even in 2007, without any indexation/current valuation… Since the rates have not been revised and the Finance Secretary has raised the issue, I’m of the view that this issue should be examined in depth before any further steps are taken.” என்று எழுதியுள்ளார். அதாவது, 2001 விலையில் 2007ல் லைசென்சுகளை வழங்குவது குறித்து பொருளாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது. விலைகள் மறுஆய்வு செய்யப்படாததாலும், நிதித்துறைச் செயலர் இது குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளதாலும், இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் முன்னர் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளார். இதுவும் வானாவதியின் கண்ணுக்கு படவில்லை.
மேலும் அரசு வழக்கறிஞர் ஒரு பொருள் குறித்து கருத்து தெரிவிப்பதென்றால், சட்ட அமைச்சகத்தின் மூலமாகத்தான் அந்தக் கோப்பு அவரிடம் வர வேண்டும். சட்ட அமைச்சகத்தின் மூலம் வராமல், நேரடியாக தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து வந்த கோப்பில் வானாவதி கருத்து தெரிவித்தது ஏன் ? மேலும் அதே கோப்பில், தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் (ஆ.ராசா) அரசு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கலாம் என்று எழுதியுள்ளதை, சட்ட அமைச்சர் மறுத்துள்ள பிறகும், இப்படி நேரடியாக கருத்து தெரிவித்தது ஏன் ? பிரதமரின் முடிவை மீறி ராசா எடுத்த நடவடிக்கைகள் குற்றம் என்றால், சட்ட அமைச்சரின் கருத்துரையை மீறி, 2ஜி கோப்பில் கருத்துரை அளித்த வானாவதி செய்ததும் குற்றம் தானே.. ?
மேலும் வானாவதி கருத்துரை அளித்தபின், திருத்தப்பட்ட பத்திரிகை செய்தியை ராசா வெளியிட்டார் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு. இதே பத்திரிக்கைச் செய்தியை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும், எஸ்.டெல் நிறுவனத்தின் சார்பாக வழக்கு தொடுக்கப் பட்டது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜராகி வாதாடிய வானாவதி, இதே பத்திரிக்கைச் செய்தியை சரி என்றுதானே வாதடினார் ? பின்னாளில், எஸ்.டெல் நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி, அந்நிறுவனத்தை வழக்கை வாபஸ் பெற வைத்தார் ராசா.
தான் கருத்துரை அளித்தபிறகு, பத்திரிக்கைச் செய்தி திருத்தப்பட்டிருந்தால், அப்போதே வானாவதி எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டுமா இல்லையா ? அப்போதே எதிர்ப்புத் தெரிவித்திருந்தால், இப்படி ஒரு நஷ்டம் ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம் அல்லவா ?
10.01.2008 நாளிட்ட பத்திரிக்கைச் செய்தியின் அடிப்படையில்தான் சிபிஐயின் வழக்கே உள்ளது. அந்தப் பத்திரிக்கைச் செய்தி வெளிப்படைத் தன்மையோடு உள்ளது என்று கருத்துரை அளித்த வானாவதியை குற்றவாளியாக சேர்க்காததன் காரணம் என்ன ?
சிபிஐ செய்த மற்றொரு மிகப்பெரிய அயோக்கியத்தனம், வானாவதிக்கும் ராசாவுக்கும் இடையே சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை என்பது. சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் The investigation has not revealed any discussions with the then Learned Solicitor General என்று சொல்லியுள்ளது.
ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட கடிதத்தில் வானாவதியின் அலுவலகத்திலிருந்தே வந்த பதிலில், 2007 டிசம்பர் முதல் வாரத்தில் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியோடு ஒரு கூட்டம் நடந்ததாகவும், அதில் ஆ.ராசா உடன் இருந்ததாகவும், தொலைத் தொடர்புத் துறை குறித்து விவாதிக்கப் பட்டதாகவும், இந்தக் கூட்டம் குறித்து குறிப்புகள் தயாரிக்கப்படவில்லை என்றும் கடிதம் வழங்கப் பட்டுள்ளது. இந்தச் சந்திப்பை சிபிஐ ஏன் மறைத்தது ? 2007 டிசம்பர் முதல் வாரத்தில் நடந்த இந்தச் சந்திப்புக்குப் பிறகே, வானாவதி (07.01.2008) ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பாக குறிப்பு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
இது போல பல்வேறு கேள்விகள் இன்னும் விடை சொல்லப்படாமலேயே உள்ளன. ஆனால், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் 2ஜி விசாரணை நடைபெறும் போக்கைப் பார்த்தால் அத்தனை ஊழல்களையும் செய்தது ராசா மட்டுமே என்ற தொனியிலேயே நடைபெற்று வருகிறது. ராசா மட்டும்தான் குற்றவாளி என்றால் மற்றவர்கள் அனைவரும் உத்தமர்களா ?