சில பொருளைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தாலும் பேசுவது தவிர்க்கப்படும். மார்க்சிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்து கொண்டு கோயிலுக்குச் செல்பவர்களைப் பற்றி அக்கட்சியில் பேசுவதைத் தவிர்ப்பார்கள். தேர்தலில் பங்கெடுப்பது தற்காலிகம்தான், மக்கள் புரட்சிதான் இறுதி லட்சியம் என்று கட்சி அறிக்கையில் எழுதி வைத்துக்கொண்டு, தேர்தல் சமயத்தில் கள்ள வோட்டு போடும் மார்க்சிஸ்டுகளைப் பற்றி கட்சியில் பேச மாட்டார்கள். இது போல பேசாத, பேசப்படாத பொருள்களில் ஒன்று தலித்துகளுக்குள் இருக்கும் சாதீய உள் முரண்பாடு.
மே 9 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்குள் இருக்கும் பிரிவினைகளை தவிர்த்து, “தலித்” என்று பொதுவாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
உடனே இதை எதிர்த்து, “மள்ளர் பேரவை” என்ற அமைப்பினர் தேவேந்திர குல வேளாளர்களை தலித் என்று பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருந்தவர்களை தலித் என்று சொல்லி, திருமாவளவன் இழிவு படுத்தி விட்டார் இதற்காக திருமாவளவன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தனர்.
தலித்துகளுக்குள் இருக்கும் இந்த உள்முரண்பாடுகளைப் பற்றி விவாதித்தே ஆக வேண்டிய தருணம் வந்து விட்டது. எவ்வளவு நாள்தான் மூடி மறைத்துக் கொண்டே இருப்பது ?
எத்தனையோ காவல்துறை அதிகாரிகளைப் பற்றியும், கருணாநிதியைப் பற்றியும், அவர் குடும்பத்தைப் பற்றியும் சவுக்கு கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறது. அவ்வாறு எழுதியதற்காக கடுமையான மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் வந்ததுண்டு. ஆனால், பரமக்குடியில் நடந்த படுகொலைகள் பற்றி சவுக்கில் எழுதிய கட்டுரைக்குப் பிறகு சவுக்குக்கு வந்த மிரட்டல்கள் போல் வேறு எப்போதும் வந்ததில்லை. மிரட்டலுக்கான காரணம், பரமக்குடியில் இறந்த ஆறு பேரும் தேவேந்திர குல வேளாளர்களாம். அவர்களை தலித் என்று சவுக்கில் எழுதியது மன்னிக்க முடியாத குற்றமாம். அதுவும் நள்ளிரவு 12 மணிக்கெல்லாம் தொலைபேசி அழைப்பு வரும். எடுத்த எடுப்பில் “நீ என்ன ஜாதிடா ?… எங்க வரலாறு தெரியுமாடா உனக்கு… ? எப்படிடா எங்களை தலித் என்று எழுதுவ…” இப்படியே பல நாட்கள் நீண்டு கொண்டே போனது அந்த மிரட்டல்கள். இந்து நாளிதழ் கூட தலித் படுகொலை என்றுதான் எழுதியிருக்கிறது என்று சொன்னாலும், இந்து எழுதட்டும், நீ எப்படிடா எழுதுவ என்று பல நாட்களுக்கு மிரட்டல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. அந்தக் கட்டுரையில் இது தொடர்பாக சில பின்னூட்டங்களும் உள்ளன. பிறகு, அவர்களே சலித்துப் போய் விட்டு விட்டார்கள்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ளபடி, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் மொத்தம் 76 சாதிகள் உள்ளன. ஆதிஆந்திரா, ஆதி கர்நாடகா, ஆதிதிராவிடா என்று தொடங்கி இந்தப் பட்டியலில் ஏராளமான சாதிகள் இருந்தாலும் தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் யாரென்றால், பள்ளர், பறையர் மற்றும் அருந்ததியர் ஆகிய மூன்று சாதியினரே. பள்ளர்கள் திருச்சி தொடங்கி தென்மாவட்டங்கள் முழுக்க நிரம்பியிருக்கிறார்கள். பறையர்கள் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருக்கிறார்கள். அருந்ததியர்கள், ஆங்காங்கு பரவிக்கிடக்கிறார்கள்.
பள்ளர்கள் என்று அழைக்கப்படும் தேவேந்திர குல வேளாளர்கள் 16ம் நூற்றாண்டுக்கு முன்பு ஆளும் வர்க்கமாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் உள்ளன. அவர்கள் நில உடைமையாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். விஜயநகர சாம்ராஜ்யத்தின் படையெடுப்பிற்குப் பிறகு தமிழ் மன்னர்களில் ஆட்சி வீழ்ந்தது. இதன்பிறகு நில உடைமையாளர்களாக இருந்த தேவேந்திர குல வேளாளர்கள் தங்கள் நிலங்களை இழந்து விவசாயக் கூலிகளாக்கப்படுகிறார்கள். பள்ளுப்பாட்டு பாடுபவர்கள் என்பதிலிருந்து பள்ளர் என்ற பெயர் வந்ததாக சான்றுகள் கூறுகின்றன.
16ம் நூற்றாண்டில் ஆண்ட திருமலை நாயக்கர் காலத்தில், பாண்டிய சாம்ராஜ்யத்தின் தடயத்தையே ஒழிக்க வேண்டும் என்பதற்காக, பாண்டிய சாம்ராஜ்யத்தோடு தொடர்புள்ள பல சமூகங்களை பகிஷ்காரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாகவும், அந்த உத்தரவைத் தொடர்ந்தே இவர்கள் மீது தீண்டாமை தாக்கியதாகவும் சான்றுகள் உள்ளன.
1957ல், இந்தச் சமூகத்தின் நிலையை நன்கு ஆராய்ந்து தமிழக அரசு தாழ்த்தப்பட்டோருக்கான பட்டியலில் இணைக்க பரிந்துரைத்தது.
தாழ்த்தப்பட்டோருக்கான பட்டியலில் இணைக்கப்பட்டாலும், தேவேந்திர குல வேலாளர்கள், மற்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களான பறையர்கள் மற்றும் அருந்ததியர்களோடு எந்த உறவையும் வைத்துக் கொள்வதில்லை. தென் மாவட்ட கிராமங்களில் சென்று பார்த்தீர்களேயானால், ஆதிக்க சாதியினரின் தெரு தனியாக இருக்கும், பள்ளர்களின் தெரு தனியாக இருக்கும். பறையர்களின் தெரு தனியாக தள்ளி இருக்கும்.
ஒரு கவுண்டர் சாதியைச் சேர்ந்தவரோ, ஒரு தேவர் சாதியைச் சேர்ந்தவரோ, ஒரு தலித்தை எப்படி இழிவாகக் கருதுவாரோ, அதே போலத்தான் பள்ளர்கள் பறையர்களைக் கருதுகிறார்கள். தென்மாவட்டங்களில் விசாரித்தவரை, பள்ளர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் யாராவது, பறையர் குடும்பத்தில் காதல் திருமணம் செய்து கொண்டால், அவர்களின் உறவினர்கள் அவர்களை ஒதுக்கி வைப்பார்கள் என்கிறார்கள். அந்த அளவுக்கு பள்ளர் சமூகத்திடம் சாதீய உணர்வு ஊறிப்போய் கிடக்கிறது. மற்ற ஆதிக்க சாதி இந்துக்களைப் போலவே, பறையர் சமூகத்தின் மீது தீண்டாமையைக் கடைபிடிப்பதில் தேவேந்திரக் குல வேளாளர்கள். தலித்துகள் பெரும்பான்மையாக இருக்கும் சென்னை சட்டக்கல்லூரி மாணவர் விடுதிகளில் பள்ளர் பறையர் சமூக மாணவர்களுக்குள் நடந்த தகராறில் வெட்டுக் குத்தெல்லாம் நடந்துள்ளது.
முகநூலில் ஒரு புகைப்படம்
சரி.. தேவேந்திரக் குல வேளாளர்கள் சாதிப் பெருமை பேசுவது தவறா ? தவறில்லை. தமிழகத்தில் உள்ள ஆதிக்க சாதிகள் அத்தனையும் சாதியப் பெருமை பேசுகையில் தேவேந்திரக் குல வேளாளர்கள் மட்டும் ஏன் சாதீயப் பெருமை பேசக்கூடாது. அதுவும் மன்னர் பரம்பரரை என்று கருதுபவர்கள் சாதீயப் பெருமை பேசுவது இயல்பே. தங்கள் சாதியை பெயருக்குப் பின்னால் அடைமொழியாகச் சேர்த்துக் கொள்வதற்கும், சாதீயப் பெருமை பேசுவதற்கும், அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.
பிறகு எதற்குத்தான் இந்தக் கட்டுரை ? இப்படி சாதிப்பெருமை பேசும், தேவேந்திரக் குல வேளாளர்கள் என்கிற மள்ளர்கள் என்கிற பள்ளர்கள் முதலில் தங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கிக் கொள்ளட்டும். பிற்படுத்தப்பட்ட கூட அல்ல. சாதீய அடுக்கில் முற்பட்ட வகுப்பில், பார்ப்பனர்களுக்கு ஒரு படி மேலே கூட தங்களை வைத்துக் கொள்ளட்டும். அப்படி தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பின், அவர்கள் தங்களை தலித் என்று அழைக்கக் கூடாது என்று உலகுக்குச் சொல்லட்டும். பறையர்கள் மட்டும் இல்லை. பள்ளர்களையும் ஆதிக்க சாதியினர் மனிதர்களாக மதிப்பதில்லை என்பதே இன்றும் கிராமப்புறங்களில் யதார்த்த நிலைமை.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்கு உண்மை அறியும் குழுவோடு சென்றிருந்தபோது கண்ட காட்சிகள் கண்ணில் கண்ணீர் வரவழைக்கத்தக்கன. திருச்சி, மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் இருப்பது போல விவசாயம் அந்த மாவட்டத்தில் செய்ய முடியாது. எங்கே பார்த்தாலும் பொட்டல் காடு. பனை மரங்களையும் கருவேல மரங்களையும் தவிர வேறு எதையுமே பார்க்க முடியாது. அப்படி ஒரு பொட்டல் காடு. பெரும்பாலான மக்களுக்குத் தொழில் அந்த கருவேல மரக் கட்டைகளை கரி மூட்டம் போட்டு கரியாக ஆக்கி விற்பனை செய்வதுதான். விவசாயத்திற்கு வழியே இல்லாததால், பெரும்பாலான பள்ளர் சமூக மக்கள், ஏழைகளாகவே இருக்கிறார்கள்.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முதல் நாள் நடந்த பழனிக்குமார் என்ற சிறுவன் கொல்லப்பட்ட பள்ளப்பச்சேரி என்ற கிராமத்திற்குச் சென்று, அச்சிறுவனின் பெற்றோர் தங்கவேல் மற்றும் புவனேஸ்வரியை சந்திக்க அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு வறுமைச் சூழலில் வாழ்கிறார்கள் என்பது தெரிய வந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதிதான் அந்த ஊரிலேயே பெரிய நகரம். கமுதி அருகே மண்டல மாணிக்கம் என்ற கிராமல் உள்ளது. அந்த கிராமத்தின் அருகே உள்ளதுதான் பள்ளப்பச்சேரி என்கிற கிராமம். பள்ளப்பச்சேரியில் 500 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதன் அருகே உள்ளது முத்துராமலிங்கம் புதூர். இந்த ஊரில் 200 குடும்பங்கள் உள்ளன. இவர்களும் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மண்டலமாணிக்கம் கிராமத்தில் முழுக்க முழுக்க தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே வாழுகிறார்கள்.
முத்துராமலிங்கம் புதூர் மற்றும் பள்ளப்பச்சேரியிலிருந்து கமுதி செல்லவேண்டுமானால், மண்டலமாணிக்கம் கிராமத்தைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். வேறு சாலை வழி இல்லை. இந்த கிராமங்கள் அனைத்துக்கும் சேர்த்து மண்டலமாணிக்கம் கிராமத்தில்தான் அரசுப்பள்ளி உள்ளது. அந்த அரசுப்பள்ளியில் சென்று படிப்பதால், ஆதிக்க சாதி மாணவர்களின் தொல்லை தாங்க முடியாத காரணத்தால், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளர் சமூக மாணவர்கள், கமுதியில் உள்ள பள்ளியில் சென்று சேர்ந்திருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக, கமுதி செல்வதற்கு வேறு பாதை அமைத்துக் கொடுங்கள் என்று அந்த கிராம மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்த வண்ணம் இருக்கிறார்கள். மண்டல மாணிக்கம் வழியாக கமுதி செல்வதே ஒரு பெரிய போராட்டம் என்று அந்தக் கிராம மக்கள் உண்மை அறியும் குழுவிடம் தெரிவித்தனர்.
தலித் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு ஒடுக்கப்பட்ட, உடைக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, துண்டு துண்டாக்கப்பட்ட என்ற பொருள் உண்டு. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 19ம் நூற்றாண்டின் சமூக சீர்த்திருத்தவாதி ஜோதிராவ் பூலே என்பவர் முதன் முதலாக தலித் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். மகாத்மா காந்தி, தாழ்த்தப்பட்டவர்கள் கடவுளின் குழந்தைகள் என்ற பொருளில் “ஹரிஜன்” என்று அவர்களுக்குப் பெயரிட்டாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் அந்தப் பெயரை விரும்பவில்லை. அவர்களாக விரும்பி ஏற்றுக் கொண்ட சொல்தான் தலித். இந்தச் சொல்லுக்கு பெரும்பாலான தலித்துகள் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காத காரணத்தால் தலித் இலக்கியம், தலித் போராட்டம் என்று இச்சொல் பரவலானது.
பள்ளர் சமூக மக்களையும் தலித் என்று அழைப்பதற்குக் காரணம், பள்ளப்பச்சேரி போன்ற தமிழகமெங்கும் உள்ள கிராமங்களில் ஒடுக்கப்பட்டு, ஆதிக்க சாதியினரின் அடுக்குமுறைக்கு அவர்கள் ஆளாகும் காரணத்தாலேயே. பள்ளர் சமூக மக்களை தலித் என்று அழைத்து அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கம், இந்து, ஃப்ரன்ட்லைன் போன்ற ஊடகங்களுக்கோ, சமூக ஆர்வலர்களுக்கோ, தொல்.திருமாவளவன் போன்றவர்களுக்கோ, சவுக்குக்கோ துளியும் கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் நிலைநாட்டப் பட வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது.
மகாத்மா காந்தி கூட, ஹரிஜன்கள் என்று தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்தாலும், அவர் இந்து மதத்தையும், அதன் சனாதன தர்மங்களையும் தீவிரமாக ஆதரித்தவர். அனைத்து சாதிகளும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று சொன்னாரே தவிர, காந்தி சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
தமிழகத்தில் குறைந்த சதவிகிதத்தில் இருக்கும் பல்வேறு சாதிகள் அதிகார மையங்களாக உள்ள நிலையில், தமிழகத்தில் கணிசமான சதவிகிதத்தில் இருக்கும் தலித்துகளுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்திலேயே திருமாவளவன் “தலித்” என்ற அடையாளத்தோடு சாதிக் கணக்கெடுப்பில் பதிவு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். திருமாவளவன் மீது ஆயிரம் விமர்சனங்களைச் சொன்னாலும், தலித்துகளுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்ற அவரது நோக்கத்தில் எவ்வித களங்கத்தையும் சுமத்த முடியாது. கிருஷ்ணசாமி போன்றோர், திருமாவளவனோடு கூட்டணி சேராமல் இருப்பதற்கு அரசியல் காரணங்களையும் தாண்டி, இந்த பள்ளர் பறையர் பாகுபாடு இருக்கிறது என்பதே உண்மை.
ஒடுக்கப்பட்ட மக்களை கைதூக்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் குரல் கொடுப்பவர்களிடம் சாதிப்பெருமை பேசுபவர்களை ஒருபோதும் தலித்துகள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.
தங்களை தலித் என்று அழைக்கக் கூடாது என்று விரும்பும் தேவேந்திர குல வேளாளர்கள் தங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து முதலில் நீக்கட்டும். அதைச் செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும் என்றால், மள்ளர் என்றும் தேவேந்திரர் என்றும் பெருமை பேசுபவர்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்குச் சேர்க்கும் போது, முற்பட்ட வகுப்பினர் என்று வகைப்படுத்துங்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை தலித்துகள் அனுபவிக்கட்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சலுகைகளை அனுபவிப்பதை தவிர்த்து விட்டு வந்து சொல்லுங்கள். உங்களை தலித் என்று அழைக்கமாட்டார்கள்.
சாதியத்தின் நவீன மீட்டுருவாக்கம் சமூக குழுக்களில் காலந்தோறும்
நடந்துகொண்டேதான் இருக்கும். தன்னையும் இன்னொரு உயர்சாதி முகமாற்றியாக பொருத்திப்பார்ப்பது
பரிணாமம் இயங்கியல் அடிப்படைதான். இதனால் சாதிய இறுக்கத்தில் தளர்வோ கூர்முனையின் மழுங்கும் தன்மையோ எள்முனை அளவும் ஏற்பட்டுவிடப்போவதில்லை என்பதே
உண்மை. மத குருமார்கள் தண்ணீர் தெளித்து ஏற்கும் நிலையுடைய பிரச்சனை இதுவல்ல. சட்டத்தின் வழி நின்று எது சாத்திப்படுமோ அதுவே
நிலையென கொள்ளுங்கள்.
அரச வம்சத்தை தால்தப் பட்டவர்கள்லுடண் சேர்க்க கூடாது நாங்களும் மதிக்கத் தக்கவர்கள் எங்களை உயர்த ஜாதியாக மதிக்க வேண்டும்
jaathiye solvathe oru vetka kedu ithilenna uyarnthathu thallnthathu epadi inth naadu urupadum ponga nanba
நீரும் பட்டியல் வெளியேற்றித்திற்கு உதவலாமே!.அப்புறம் பார் எங்கள் வளர்ச்சியை.
பட்டியலில் இருந்து வெளியேற்றுங்கள் என்று தான் போராடி வருகிறோம். நீங்கள் ஏன் அரசுக்கு நிர்பந்தம் கொடுக்க கூடாது. எங்களை பட்டியலில் இருந்து வெளியேற்றி தலித்தளுக்கு அவர்களுக்கு உரிய பங்கை பெற்று கொடுக்க கூடாது.
பசுவை வணங்கும் ஜாதி..
உழவுத் தொழில் செய்யும் ஜாதி..
மாட்டிறைச்சி உண்ணாத ஜாதி..
பாண்டியர் வம்சத்து ஜாதி..
வறுமையில் வாடினாலும் திருடித் திங்காமல் உயிரை மாய்த்துக் கொள்ளும் ஜாதி..
ஆங்கிலேயர் காலத்தில் வாக்களித்த ஜாதி…
தீட்டுத் தொழில் செய்யாத
ஜாதி….
எப்படி தாழ்ந்த ஜாதி ஆகும்?
We, Pallar or Pandiyar or Mallar or Devendira Kula velalar people worship cows as our god and treat them as our child.We mallars don’t eat beef. We don’t do any dirty work. bcoz Our occupation was agriculture. Our God was indiran- god of rain,thunder. We are descendent’s of Pandians. We are not dalits. One and only reason mallars were included in sc list was due to our poverty at that time. But we always asked the government to exclude us from sc list. We don’t want your sc reservations.. Include pallar or pandiyar or mallar or devendira Kula velalar people in MBC or BC list.
Pallar or Pandiyar or Mallar or Devendira Kula velalars were the true rulers of tamilnadu. They are the true pandiyas.. During 1920’s, Kollam court gave an judgement in a civil case, that says pallars are pandian kings and pandian peoples.. Orissa balu research also says that mallars are the true rulers of tamilnadu. (watch orissa balu seminar on youtube).. And sadly mallar kings lost their kingdom to telugu naickers around 1200b.c.. Madurai meenatshi amman temple, palani murugan temple, samayapuram amman temple and many more temples in tamilnadu have ownership documents, that says pallar or pandiyan kings built these temples.. Also every year in all these temples, the first respect (i.e. Mudhal mariyadhai parivattam) was given only to pallar or mallar or pandiyar people. If any one have doubt, then ask brahmin priests from these temples, they will say pallars were the owner of these temples and they were the pandiyan kings.
Dai nenga kodukura SC salugaigal engal mallar makkalukku vendam. MBC Ila BC la engala serunga.
ஐயா சவுக்கு, ஒட்டு மொத்த தேவேந்திரர்களும் ஒற்றுமையாக சொல்கிறோம் எங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து நீக்கிவிடுங்கள் என்று. தைரியமிருந்தால் நீக்கிப்பாருங்கள் எங்கள வளர்ச்சியை நாங்கள் பார்த்துக்கொளவோம்.
தமிழன் வரலாறு ————————————-“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி”.. உலகின் முதல் மனிதன் தமிழன். உலகின் முதல் மொழி நம் தமிழ் மொழி. உலகின் முதல் மதம் தமிழ் மதம். தமிழ் மதத்திலிருந்து தோன்றியதே இந்து மதம். முதன் முதலில் உழவுத் தொழிலை செய்தவன் மருத நிலத்தில் வாழ்ந்த தமிழன். அம்மருத நிலத்தில் வாழ்ந்த தமிழர்களிடம் இருந்து தான் உலகின் முதல் அரசர்களாகிய பாண்டியர்கள் சோழர்கள் வந்தனர். அவர்கள் உலகம் முழுவதும் பயனித்து, தாங்கள் உருவாக்கிய உழவுத் தொழிலை அனைவருக்கும் கற்றுத் தந்தனர். அவ்வாறு உலகம் முழுவதும் பயனித்த அந்த தமிழர்கள்,அரசர்கள், பாண்டியர்கள் யார்? அவர்கள் தான் மருதநில மக்களாகிய பள்ளர்கள்,மள்ளர்கள், தேவேந்திர குல வேளாளர்கள்… சோழர் பாண்டியர்களாகிய மள்ளர் குடி மக்களே உலகம் முழுவதும் பயனித்து உலகிற்கு உழவுத் தொழில் கற்றுத் தந்தனர்… அமைதியான நேரத்தில உழவர்களாகவும்(பள்ளர்கள்), பிற நாட்டினர் படையெடுத்து தன் நாட்டை தாக்க வந்தால் போர் வீரர்களாகவும்(மள்ளர்கள்) இருந்து வந்துள்ளனர் பாண்டிய மக்கள்.அவ்வாறு வாழ்ந்த பாண்டிய மள்ளர்கள் கி.பி. 1200 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, நாயக்கர்களின் படை எடுப்பின் போது, பாலை நில மக்களின் சூழ்ச்சியால், துரோகத்தால் தங்கள் நாட்டை இழந்தனர். பாண்டியர்களை காட்டிக்கொடுத்து அவர்களை வீழ்த்த உதவியதற்காக, நாயக்கர்கள் பாலை நிலத்து துரோகிகளுக்கு தாங்கள் கைப்பற்றிய பாண்டிய நாட்டின் சில பகுதிகளை பரிசாக அளித்தனர்.அதன் பின் பாண்டியர்களாகிய பள்ளர்களின் நிலம், செல்வம் பறிக்கப்பட்டு தங்கள் நாட்டிலேயே தனிமை படுத்தப்பட்டனர். அவர்களின் வரலாற்றைக் கூறும் அவர்கள் கட்டிய பல கோயில்களிலுள்ள ஓவியங்கள் அழிக்கப்பட்டன. பிறகு வந்தவர்கள் எல்லாம் தங்களை பாண்டியர்கள் என்றனர்(உதாரணமாக வந்தேறி தெலுங்கராகிய கெட்டி பொம்மு நாயக்கர், தன்னை வீர பாண்டிய கட்ட பொம்மன் என்று மாற்றிக் கொண்டதைப் போல)ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட தாங்கள் தான் பாண்டியர்கள் என்று ஒரு சமூகத்தினர் (பாலை நிலத்தவர்கள்)கொல்லம் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால் இறுதியில் நீதிமன்றம், பள்ளர்களே பாண்டியர்கள் என்று தீர்ப்பளித்தது. நாயக்கர் ஆட்சிக்கு முன் தமிழகத்தை ஆண்டவர்களே மருதநிலத்தில் வந்த சோழர்கள் பாண்டியர்கள் ஆவர். மள்ளர்களே பாண்டிய வம்சத்தினர், அவர்களே உலகம் முழுவதும் பயனித்து பிற நாட்டு மக்களுக்கு உழவுத் தொழிலை கற்றுத் தந்தனர் என்பதற்கு ஆதாரமாக, அமேரிக்கா, பிரான்ஸ், இட்டாலி, ஜெர்மனி, நார்வே, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, உள்பட உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் 3000 இடங்களின், ஊர்களின் பெயர் பள்ளர்,மள்ளர்,பாண்டியர் என்றே உள்ளது. இதனை உலகின் தலைசிறந்த ஆராய்சியாளரான ஒரிசா பாலு அவர்கள் கூறியுள்ளார் (யூ டியூப் இணையத்தில் orissa Balu அவர்களின் கூற்றினை காணலாம்). பழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள பல கோயில்களில் உள்ள செப்புப் பட்டயத்தில், பாண்டியர்களாகிய பள்ளர்களே அதனை கட்டியவர்கள் என்று உள்ளது. மேலும் இதனை உறுதி செய்யும் விதமாக ஆண்டு தோறும் இக்கோயில்களின் திருவிழாவின் போது, மள்ளர் மக்களுக்கே முதல் மரியாதை பரிவட்டம் வழங்கப்படும். இதனை மறுப்பவர்கள் இக்கோவில்களில் பணிபுரியும் பிராமண பூசாரிகளிடம் கேட்டால், பள்ளர்கள் மள்ளர்கள் தேவேந்திர குல வேளாளர்களே பாண்டிய மன்னர் வம்சத்தினர் என்பதை தெரிந்து கொள்ளலாம். தங்களை சோழர், பாண்டியர்கள் என்று கூற உரிமை உள்ள தமிழ் இனம் பள்ளர்களும், பள்ளியர்களும்( பள்ளர்களிடத்தில் இருந்து பிரிந்து சென்ற இன்றைய வன்னியர்கள்) மட்டுமே…
ஐயா சவக்கு, உங்களுக்கு அரசியல் ஊடகம் போன்று வேறு எந்த அளவுக்கு அதிகாரத்தை பயன்படுத்தி தேவேந்திரகுல வேளாளரகளை தயவுசெய்து தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து வெளியேற்றி விடுங்கள். உங்களுக்கு புண்ணிமாகட்டும். ஏனெனில் தேவேந்திரர்கள் ஏறகனவே மனதளவில் பட்டியலிலிருந்து வெளியேறிவிட்டார்கள். என்னுடைய குழந்தைகளை நான் Forward caste என்றும் தேவேந்திரகுல வேளாளர் என்று தான் வளர்க்கிறேன்
பள்ளர்களே பாண்டியர்கள் — நிலை நாட்டும் நீதி மன்ற தீர்ப்பு
========================================================
“செங்கோட்டையில் நடந்த பள்ளர்களுக்கும், மறவர்களுக்கும் இடையே தொடர் சாதிய மோதலையோட்டி,,
1920 கலீல் பாண்டியர் என்னும் பட்டம் தங்களுக்கே உரியதென்றும், பள்ளர்கள் தங்களைப் பாண்டியர் என்று அழைத்துக் கொள்ளக் கூடாதென்றும் மறவர்கள் சார்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட கொல்லம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். அந்த வழக்கில் செங்கோட்டைப் பள்ளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வரலாற்று ஆவணங்கள், நில ஆவணங்கள், அரசுப் பதிவுகள் ஆகிய ஆதாரங்களை ஏற்று ‘பள்ளர்கள் தான் பாண்டியர்கள்’ என்று கொல்லம் நீதி மன்றம் தீர்ப்பு தந்துள்ளது.”
எங்களுக்கு இட ஒதுக்கீடு தேவை இல்லைனு , பல வருடமாக போராடிக்கிட்டுதான் இருக்கோம்,, அரசு தான் வஞ்சகம் செய்யுது… SC மட்டுமல்ல MBC,BC யும் கூட தேவை இல்லைதான் சொல்லுறோம்…. மலம் அள்ளுபவர்கள், துணி துவைப்பவர்கள், முடி திருத்தம் செய்பவர்கள் தான் தலித் எனவும் , இட ஒதுக்கீடுக்கும் தகுதியானவர்கள்….. விவசாயம் செய்த எங்கள் பரம்பரையை sc யில் சேர்த்ததே எங்கள் பெருமைகளை அழிக்க செய்த சதி….
எங்களுக்கு சலுகைகள் வேண்டாம், தேவேந்தி குலம் என்ற அடையாளம் போதும் . நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை
மள்ளர் – தேவேந்திரகுல மக்கள் குறைவாக உள்ள ஊர்களில் மட்டும் கள்ளர்கள் அவர்களை அடிமை படுத்த நினைப்பார்கள். கள்ளர்களுக்கும், தேவேந்திரகுல மக்கள் நாடான்ட மள்ளர் இனத்தை சார்ந்தவர்கள் என்ற உண்மை தெரியும். தேவேந்திரகுல மக்கள் போர் குணம் படைத்தவர்கள். மற்றவர்களை போல் அவர்களை அடக்கவே முடியாது என்ற உண்மையும் அவர்களுக்கு தெரியும். கள்ளர்கள் நரி குணமும் மற்றும் திருட்டு குணமும் கொண்டவர்கள். ஆனால் தேவேந்திரகுல மக்கள் போர் குணமும் முரட்டு குணமும் கொண்டவர்கள். உண்மை வரலாறு தெரிந்தால், குற்ற பரம்பரையான கள்ளர் சமூகம், மள்ளர் (தேவேந்திரர்) இனத்தைவிட கீழ் சென்று விடும், என்பதால், கள்ளர்கள், மள்ளர்களை அரசியல் அதிகாரத்தை கொண்டு அடக்க முயற்சி செய்கிறார்கள். மள்ளர்களை அடக்கி விட்டால், அனைத்து இனத்தையும் அடக்கி விடலாம் என்று கள்ளர்களுக்கு தெரியும்.
ஆகவே, நாங்கள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வெளியேறுவதை தடுக்க நினைக்கிறார்கள். அதுபோல, சில தாழ்த்தப்பட்ட இன மக்கள், அவர்களுடைய பாதுகாப்பிற்காக நாங்கள் தாழ்த்தப்பட்ட பட்டியலில் இருந்து வெளியேறுவதை தடுத்து கொண்டு இருக்கிறார்கள்.
எப்படியாயினும், எங்கள் குல பெருமையை காத்தே தீருவோம்.
Paalai nilathil vaalugira makkalin tholil kollai adithal. Valippari, thiruttu…..
Avargalin kadavul kottravai….
Avargalin vilangu vali ilandha puli..
Avargalin makkal peyar maravan Marathi…
Ipdi kollai adikkum nilathula pirandha oru inathil irundha, pandiyargal cholargal vandhiruppargal? Allathu vivasayam seithu makkalin pasiyai theerkum marutha nila pallar mallar inathil irundhu pandiyargal vandhiruppargala? SIMPLE. Itha yosichu paatha yaar Mannar parambarainu theriyum….
Paalai nilathil vaalugira makkalin tholil kollai adithal. Valippari, thiruttu…..
Avargalin kadavul kottravai….
Avargalin vilangu vali ilandha puli..
Avargalin makkal peyar maravan Marathi…
Ipdi kollai adikkum nilathula pirandha oru inathil irundha, pandiyargal cholargal vandhiruppargal? Allathu vivasayam seithu makkalin pasiyai theerkum marutha nila pallar mallar inathil irundhu pandiyargal vandhiruppargala? SIMPLE. Itha yosichu paatha year Mannar parambarainu theriyum….
MBC தான் நாங்களும் கேக்குறோம்.
super sir your imformation..
realy miracle
எங்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து நீக்க பல ஆண்டுகளாய் போராடி தான் வருகின்றோம்.தலித் சலுகைகளை அவர்கள் அனுபவிக்கட்டும்.தவறில்லை..
Pallar or Pandiyar or Mallar or Devendira Kula velalars were the true rulers of tamilnadu. They are the true pandiyas.. During 1920’s, Kollam court gave an judgement in a civil case, that says pallars are pandian kings and pandian peoples.. Orissa balu research also says that mallars are the true rulers of tamilnadu. (watch orissa balu seminar on youtube).. And sadly mallar kings lost their kingdom to telugu naickers around 1200b.c.. Madurai meenatshi amman temple, palani murugan temple, samayapuram amman temple and many more temples in tamilnadu have ownership documents, that says pallar or pandiyan kings built these temples.. Also every year in all these temples, the first respect (i.e. Mudhal mariyadhai parivattam) was given only to pallar or mallar or pandiyar people. If any one have doubt, then ask brahmin priests from these temples, they will say pallars were the owner of these temples and they were the pandiyan kings.