சவுக்கு வாசர்கள் நீதிபதி கர்ணன் குறித்த முந்தைய கட்டுரையில், அந்த நீதிமன்ற ஊழியரை ஒரு வழக்கை ஏன் அன்று விசாரணைக்கு கொண்டு வரவில்லை என்று திறந்த நீதிமன்றத்தில், அனைவரின் முன்னிலையில் திட்டியதையும், நீதிக்கே அவமானம் என்ற கட்டுரையில் படித்திருப்பீர்கள். படிக்காதவர்கள் படித்து விட்டு வாருங்கள்.
நீதியரசர் கர்ணன் அப்படி ஏன் கோபப்பட்டார் ? அப்படி என்ன அவசரமான வழக்கு அது ? யாருடைய உயிரைக் காப்பாற்றும் வழக்கு அது என்று சவுக்கு வாசர்கள் பலருக்கு வியப்பாக இருந்திருக்கும். அப்படி நீதியரசர் அவசரப்பட்ட வழக்கு என்னவென்று பார்ப்போம்.
இந்தியாவில் எம்எம்டிசி என்று ஒரு மத்திய அரசு நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் வேலை, கனிமங்கள் மற்றும், தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதுதான். இந்த மத்திய அரசு நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னால், தங்கம் இறக்குமதி செய்ய ஒரே ஏகபோக நிறுவனமாக இருந்து வந்தது. இந்நிறுவனம் தங்கம் இறக்குமதி செய்தபிறகு, இந்த மத்திய அரசு நிறுவனத்திடமிருந்துதான், லலிதா ஜுவல்லர்ஸ், சரவணா செல்வரத்தினம், நாதெள்ளா சம்பத்து சட்டி கஸானா, ஜாய் ஆலுக்காஸ், ப்ரின்ஸ், ஜிஆர்டி போன்ற நிறுவனங்கள் வாங்கி விற்க வேண்டும்.
இந்த எம்எம்டிசி நிறுவனம், மூன்று வழிகளில் தங்கத்தை விற்பனை செய்கிறது. முதல் வழி நேரடி விற்பனை. இந்த முறையின்படி, தங்கம் வேண்டும் நிறுவனங்கள், பணத்தை எம்எம்டிசியில் முதலீடு செய்ய வேண்டும். எம்எம்டிசி அந்தத் தொகையை வங்கியில் வைப்பு நிதியாக டெபாசிட் செய்யும். அதற்குறிய தங்கத்தை வெளிநாட்டிலிருந்து 90 நாள் கடன் வசதியோடு எம்எம்டிசி வாங்கி, ஆர்டர் செய்த நிறுவனங்களுக்கு வழங்கும். வங்கியில் வைக்கப்பட்ட வைப்பு நிதியில் வரும் வட்டி, தங்கம் வாங்கும் நிறுவனத்துக்கே தரப்படும். வெளிநாட்டிலிருந்து தங்கம் வரவழைப்பதற்கான செலவு, வங்கிச் செலவுகள் ஆகியவற்றை தங்கம் வாங்கும் நிறுவனம் அல்லது நபர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது முறை, ஒரு நிறுவனம் அல்லது நபர் எம்எம்டிசியிடம் தங்கம் வாங்கும்போது, வாங்கும் தங்கத்தின் விலையை விட 110 சதவிகிதத்துக்கான வங்கி உத்தரவாதத்தை (Bank guarantee) அளித்தால், 90 நாள் கடன் வசதியோடு தங்கம் வழங்கப்படும்.
இந்த மூன்றாவது முறை இருக்கிறதே… இதில்தான் அனைத்து தில்லு முல்லுகளும் நடந்துள்ளன. சுரானா கார்பரேஷன் என்ற ஒரு வட இந்திய மார்வாடி நிறுவனம் ஒன்று தமிழகத்தில் உள்ளது. தமிழனின் ரத்தத்தை சுரண்டி, தமிழக பொருளாதாரத்தையே தனது கட்டுக்குள் கொண்டு வந்த மார்வாடி வகையராவில் ஒரு வகையராதான் சுரானா கார்பரேஷன். ஜி.ஆர்.சுரானா, சாந்திலால் சுரானா, விஜய்ராஜ் சுரானா மற்றும் தினேஷ்சந்த் சுரானா ஆகிய நான்கு சகோதரர்கள் சுரானா குழும நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இந்த சுரானா குழுமம் இரும்பு, கட்டமைப்பு ஆகிய தொழிலோடு தங்க வியாபாரத்தையும் பிரதான தொழிலாக செய்து வருகிறது.
சுரானா குழுமத்தின் தங்க வியாபாரத்தை பார்த்துக் கொள்பவர்கள் சாந்திலால் சுரானா மற்றும் விஜய்ராஜ் சுரானா.
இந்த மூன்றாவது முறை எப்படியென்றால். வெளிநாட்டிலிருந்து தங்கம் வழங்கும் நிறுவனத்துக்காக, எம்எம்டிசி நிறுவனம் கடன் பத்திரம் (Stand-By-Letter-of-Credit SBLC) ஒன்றை உருவாக்கும். எம்எம்டிசியிலிருந்து தங்கம் வாங்குபவர்கள், தங்களுக்கு தங்கம் தேவைப்படும் அளவுக்கான விலையை, எம்எம்டிசியில் செலுத்த வேண்டும். எம்எம்டிசி அத்தொகையை வைப்புத் தொகையாக (Fixed Deposit) வங்கியில் செலுத்தும். இம்முறையில் அதிகபட்சமாக 180 நாட்கள் வரை கடன் வசதி உண்டு. வெளிநாட்டு நிறுவனத்துக்கு எப்போது தங்கத்துக்கான விலையை அளிக்க வேண்டுமோ, அப்போது அந்த வைப்புத்தொகை முழுமையடையும் வகையில் அந்த வைப்புத்தொகை வங்கியில் செலுத்தப்படவேண்டும். உரிய தேதி வந்ததும் வெளிநாட்டு நிறுவனத்துக்கு தொகை, வங்கியிலுள்ள வைப்புத் தொகையிலிருந்து எடுத்துத் தரப்படும். இதில் வங்கியில் உள்ள வைப்புத் தொகைக்கான வட்டி, தங்கம் வாங்கும் நபருக்கு வழங்கப்படும்.
இந்த சுரானா குழுமம் எம்எம்டிசி தங்கம் விற்கும் மூன்றாவது முறையில், எம்எம்டிசியில் இருந்து ஏராளமான தங்கத்தை வாங்குகிறது. இந்த முறையின் கீழ் எம்எம்டிசியிலிருந்து தங்கம் வாங்கிய சுரானா நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு, சுரானா நிறுவம் எம்எம்டிசிக்கு வழங்க வேண்டிய 18 கோடி ரூபாயை வசூல் செய்யாமல், சுரானா நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்று, எம்எம்டிசி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதன் தலைமைப் பொது மேலாளர் குருசாமி, நிதி மற்றும் கணக்குக்கான பொது மேலாளர் குருமூர்த்தி ஆகியோர் செயல்பட்டனர் என்பதே குற்றச்சாட்டு.
இந்த இரண்டு குருக்களும், அப்படி என்ன சுரானா நிறுவனத்துக்கு ஆதரவாக செய்து விட்டார்கள் ? எம்எம்டிசி தங்கம் விற்பனை செய்யும் முறையில் மூன்றாவது முறை உள்ளதல்லவா ? அந்த மூன்றாவது முறையின்படி செய்யப்படும் வர்த்தகங்கள் அனைத்தும் “புல்லியன் ட்ரேடிங் சிஸ்டம்” என்ற அடிப்படையிலேயே செய்யப்படவேண்டும். இந்த புல்லியன் ட்ரேடிங் சிஸ்டம் முறை முழுவதும் கணினி மயமாக்கப்பட்டது. ஆனால் இந்த இரண்டு குருக்களும் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா ? அந்தக் காலத்து கணக்குப் பிள்ளைகள் போல, நோட்டில் எழுதியிருக்கிறார்கள். எதற்கான இந்த குருக்கள் இப்படி நோட்டில் எழுத வேண்டும் என்றால், கணினி மயமாக்கப்பட்ட புல்லியன் ட்ரேடிங் முறையில் செய்தால், அன்றைய தங்க விலை என்னவோ அந்த விலையை மாற்ற முடியாது.
ஆனால், இந்த கணக்குப்பிள்ளைகள் இருவரும், நோட்டுப் புத்தகத்தில் எழுதுவதன் மூலம், சுரானா நிறுவனத்துக்கு என்று விலை ஆதாயமாக இருக்கிறதோ, அன்று தங்கம் வழங்கியது போல கணக்கு எழுதி, தங்கத்தை வழங்கியிருக்கிறார்கள். (அவனவன் கம்ப்யூட்டர் காலத்துல, டேலி, அது இதுன்னு பல சாப்ட்வேரை பயன்படுத்திக்கிட்டு இருக்கான்.. இந்த நாதாறிங்க ரெண்டும் திருப்பி மாட்டுவண்டி காலத்துக்கே போயிருக்கு பாத்தீங்களா ?) இதனால் எம்எம்டிசி நிறுவனம் 18 கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருக்கிறது. தங்கம் ஆர்டர் செய்யும்போது, ஒரு தோராய விலை நிர்ணயித்து ரசீது வழங்கப்படும். தங்கம் வழங்கும் அன்று, விலை ஏறியிருக்கும் என்பதால், அன்று என்ன விலையோ அந்த விலைக்கே வழங்க வேண்டும். ஆனால், இந்த குருக்கள் இருவரும், தோராய விலை நிர்ணயித்து வழங்கப்பட்ட ரசீதை, தங்கம் வழங்கப்பட்ட அன்று வழங்கிய ரசீது போல, மொள்ளமாறித்தனம் செய்து, சுரானா நிறுவனம் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்கு வழிவகை செய்திருக்கிறார்கள்.
அன்றாட தங்க விலையில் ஏற்படும் மாறுதல்களுக்கு ஏற்ப, தங்கம் வாங்கும் நபரிடமிருந்து சரியான தொகையை வசூல் செய்ய வேண்டும். ஆனால் இந்த குருக்கள் இருவரும் சுரானா நிறுவனத்திடமிருந்து அதை வசூல் செய்யவேயில்லை. சரி உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும். 18 கோடி ரூபாய் கணக்கில் உதைக்குமே.. இதை எப்படி சரிசெய்வார்கள் என்று. இந்த மூன்றாவது முறையின் கீழ் தங்கம் வாங்க எம்எம்டிசி நிறுவனம், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒரு கடன் பத்திரம் வழங்க வேண்டும் அல்லவா ? அந்த கடன் பத்திரத்தில் இந்த 18 கோடியும் அடக்கம் என்பது போல குருக்கள் இருவரும், ஆவணங்களை உருவாக்கியுள்ளனர். இந்த அதிகாரிகள் தவறுதலாகக் கூட இப்படிச் செய்திருக்கலாமே என்று உங்களுக்குத் தோன்றும். இப்படித் தப்பும் தவறுமாக வேலை செய்யும் அதிகாரிகளை அவர்கள் ஓய்வு பெற்றதும் ஏன் சுரானா நிறுவனம் இயக்குநர்களாக அமர்த்தியது ? எம்எம்டிசி நிறுவனத்தில் அவர்கள் பணியாற்றியபோது, சுரானா நிறுவனத்துக்கு காட்டிய விசுவாசம்தான். குருசாமி சுரானா நிறுவனத்தின் இயக்குநர். குருமூர்த்தி, ஜிஆர்டி தங்க மாளிகையில் இயக்குநர். ஜிஆர்டி நிறுவனம், சுரானா நிறுவனத்தின் நெருங்கிய தொழில் கூட்டாளி. சுரானா சகோதரர்களின் அறிவுறுத்தலின்படியே ஜிஆர்டி நிறுவனம் குருமூர்த்தியை இயக்குநராக சேர்த்துக் கொண்டுள்ளது.
சுரானா நிறுவனத்தின் மற்ற இயக்குநர்கள் யார் தெரியுமா ? எச்.பி.ராஜ்தேவ். இவர் எம்எம்டிசி நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர். வி.என்.சுவாமி. இவர் அலஹாபாத் வங்கியின் முன்னாள் பொது மேலாளர். திலக் ராஜ் ஜெயின். இவர் வருமான வரித்துறையின் முன்னாள் ஆணையர். இந்த திலக் ராஜ் ஜெயின், சுரானா சகோதரர்கள் சார்பாக, தனது வட இந்தியத் தொடர்புகளைப் பயன்படுத்தி, நீதிபதிகளையும், அதிகாரிகளையும் சரிகட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். வருமான வரித்துறையில் ஏதாவது சோதனை என்றால், உடனடியாக சுரானா சகோதரர்களுக்கு தகவல் சொல்வதும் இந்த திலக் ராஜ் ஜெயின்தான்.
இந்த விபரங்களையெல்லாம் சிபிஐ ரகசிய விசாரணை நடத்தி முழுவதுமாக சேகரித்தது. சேகரித்து ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ததும், குருக்கள் வீடுகள், சுரானா சகோதரர்களின் வீடுகள், ஆகிய இடங்களில் சோதனைகள் மேற்கொண்டது.
இந்தச் சோதனையின் போது, சுரானா சகோதரர்களின் அலுவலகத்தில், 400 கிலோ தங்கமும் 4 கோடி ரொக்கமும் சிக்கியது. சிக்கிய அத்தனையும் சிபிஐ அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. சுரானா சகோதரர்களின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
400 கிலோ தங்கம் சிக்கியதும் மிரண்டனர் சுரானா சகோதரர்கள். என்ன செய்வது என்று புரியாமல் அரண்டனர். சிபிஐ அதிகாரிகளிடம் கெஞ்சினர். விட்டு விடுங்கள் பறிமுதல் செய்யாதீர்கள் என்று மன்றாடினர். உலகத்தில் அத்தனை பேருமா லஞ்சம் வாங்குபவனாக இருப்பான் ? நேர்மையான அதிகாரிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
சிபிஐ சோதனை நடந்த மறுநாளே, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர் சுரானா சகோதரர்கள். சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. ஜெயலலிதாவுக்காக பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகும் பி.குமார், சுரானா சகோதரர்களுக்காக ஆஜரானார். இரண்டு நாட்கள் வாதம் நடந்தது. இறுதியில், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்ற சுரானா சகோதரர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள் சுரானா சகோதரர்கள். இந்த வழக்கு நீதிபதி சுதந்திரம் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. வழக்கறிஞராக இருந்தபோது நான் ஏற்கனவே சுரானா சகோதரர்களுக்காக ஆஜராகியிருக்கிறேன். அதனால் இந்த வழக்கை நான் விசாரிக்க இயலாது என்று அவ்வழக்கை வேறு நீதிபதிக்கு அனுப்புமாறு தலைமை நீதிபதியிடம் பரிந்துரை செய்தார். தலைமை நீதிபதி, இவ்வழக்கை நீதிபதி சி.எஸ்.கர்ணன் முன்பு விசாரணைக்கு அனுப்பும்படி உத்தரவிட்டார். கர்ணனைப் பற்றி நன்கு தெரிந்தும், இந்த வழக்கை அவரிடம் விசாரணைக்கு அனுப்பும் தலைமை நீதிபதி எப்படிப்பட்ட நபராக இருக்கிறார் என்பதைப் பாருங்கள் !!!!!
இந்த வழக்கு விசாரணைக்கு வரவில்லை என்பதனால்தான், அந்த நீதிமன்ற ஊழியர் லட்சுமணனுக்கு வியாழக்கிழமை மண்டகப்படி நடத்தினார் கர்ணன்.
இந்த வழக்கு, தூக்குக் கொட்டடியில் இருக்கும் ஒரு உயிரைக் காப்பாற்ற அல்ல…
காவல்துறையின் கட்டுப்பாட்டில் சித்திரவதைக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனைக் காப்பாற்றுவதற்கு அல்ல.
காவல்துறையால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லத் திட்டமிடப்பட்டு உயிரை இழக்கப்போகும் ஒரு நக்சலைட்டின் உயிரைக் காப்பாற்ற அல்ல … …
சிறைக் கொடுமைக்கு ஆளாகி, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒரு கைதியின் உயிரைக் காப்பாற்ற அல்ல.. …
வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்படும் ஒரு இளம்பெண்ணைக் காப்பாற்ற அல்ல…
சாதி இந்துக்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரு தலித்தைக் காப்பாற்ற அல்ல.
தங்கள் குடிசையிலிருந்து அப்புறப்படுத்தப்படும் ஏழை சேரி மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற அல்ல…
அரசின் நடவடிக்கையால் அழிக்கப்படக் காத்திருக்கும் ஒரு புராதானக் கலைக் கட்டிடத்தை அல்ல..
இந்த வழக்கு, மத்திய அரசையும், மாநில அரசையும் ஏமாற்றி, மத்திய அரசு நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்தி, இந்தியப் பொருளாதாரத்தைச் சுரண்டும் ஒரு மார்வாடியின் 400 கிலோ தங்கத்தைத் திருப்பித் தரக்கோரும் வழக்கு. வட இந்தியாவிலிருந்து வந்து குடியேறி, பொருளாதார ரீதியாக இன்று தமிழகத்தையே ஆண்டு கொண்டிருக்கும் மார்வாடிக் கும்பலைச் சேர்ந்த ஒரு கொள்ளைக்காரன் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 400 கிலோ தங்கத்தை திருப்பித் தரக்கோரும் வழக்கு.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏன் போடவில்லை என்பதற்காகத்தான், அந்த நீதிமன்ற ஊழியர் மீது எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் புகார் கொடுக்கப்போவதாக மிரட்டினார் மைலார்ட்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் கிருஷ்ணன் வாதாடினார்.
இந்த வழக்கை சுரானா சகோதரர்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 397ன் கீழ் தாக்கல் செய்துள்ளனர். இப்பிரிவு என்ன கூறுகிறதென்றால், கீழமை நீதிமன்றத்தில் உள்ள ஒரு நீதிபதி, ஒரு தவறான உத்தரவை பிறப்பித்திருந்தார் என்றால், உயர் நீதிமன்றம் அதைச் சரிசெய்யும் அதிகாரம் உள்ளது என்று கூறுகிறது.
இந்தப் பிரிவின் கீழ் வாதத்தை எடுத்து வைக்கும் சுரானா தரப்பு என்ன வாதாட வேண்டும் ? சுரானாவின் மனுவை தள்ளுபடி செய்த கீழமை நீதிபதி, இந்தத் தவறை செய்துள்ளார். அவர் இந்தப் பிரிவை ஒதுக்கி விட்டார். இந்தச் சட்டத்தின்படி இது தவறு என்றல்லவா வாதிட வேண்டும் ?
சுரானா தரப்பில் என்ன சொல்லப்பட்டது என்றால், சுரானா நிறுவனத்துக்கு 01.04.2010 முதல் 31.03.2011 வரை, தங்கம் இறக்குமதி செய்து கொள்ள லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சுரானா நிறுவனத்தில் 500 தங்க வேலைசெய்யும் கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள். கடந்த ஆண்டின் மொத்த விற்றுமுதல் 8666 கோடி. அதில் லாபம் 67.69 கோடி. தங்கம் ஏற்றுமதி செய்த மொத்த விலை 1509 கோடி. செலுத்திய சுங்க வரி 209.62 கோடி. வருமான வரி 18.77 கோடி. வாட் வரி 137 கோடி என்று கூறினார். (இதுக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம் ?)
எம்எம்டிசியை சுரானா நிறுவனம் ஏமாற்றியதாகச் சொல்கிறார்கள். ஆனால் கடந்த காலத்தில் எம்எம்டிசி நிறுவனமே 20 கோடி ரூபாயை சுரானா நிறுவனத்துக்கு திருப்பி அளித்துள்ளது. எம்எம்டிசிதான் சுரானா நிறுவனத்துக்கு 8 லட்ச ரூபாய் தர வேண்டியுள்ளது (இது வேறயா ?) சுரானா நிறுவனம் எந்தக் காலத்திலும் ஏமாற்று வேலையில் ஈடுபட்டதில்லை. (எம்எம்டிசியே உங்க நிறுவனம்தானே.. இதுல ஏமாத்தறதுக்கு என்ன இருக்கு ?) சுரானா நிறுவனம் புள்ளி 5 சதவிகிதம் லாபத்துக்காக மட்டுமே இத்தொழில் செய்கிறது (அப்படி கஷ்டப்பட்டுகிட்டு யார் தொழில் செய்யச் சொன்னது ? வடநாட்டுக்கு ஓட வேண்டியதுதானே ) நாங்கள் எம்எம்டிசியோடு இது வரை நடத்தியுள்ள அத்தனை வியாபாரங்களின் ஆதாரங்களையும் தருகிறோம் (சிபிஐதான் அத்தனையும் பொய்க்கணக்குன்னு சொல்லுதே.. அதே கணக்கை திருப்பித் தந்தா ?)
நாங்கள் எம்எம்டிசிக்கு எந்தத் தொகையும் தரவேண்டியது இல்லை. எம்எம்டிசிக்கு ஏற்பட்ட நஷ்டம் என்று சொல்லப்படும் 18 கோடியை கட்டத் தயாராக இருக்கிறோம். எம்எம்டிசி கணக்குப் பார்த்த பிறகு அந்தத் தொகையை தரட்டும். நாங்கள் தரவேண்டியது இருந்தால் அந்தத் தொகையை பிடித்துக் கொள்ளட்டும். 18 கோடி நஷ்டத்துக்கு 130 கோடி மதிப்புள்ள தங்கத்தை ஏன் பறிமுதல் செய்ய வேண்டும் ? அந்த 400 கிலோ தங்கமும், இங்கே உள்ள வாடிக்கையாளர்களுக்காக வரவழைக்கப்பட்டது. அவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும்.
ஒரு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை வைத்து, எம்எம்டிசிக்கும், எங்களுக்கும் சமரச ஏற்பாட்டுக்கு உத்தரவிட்டால் நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம் (பணியில் இருக்கும் நீதிபதிகளையே விலைக்கு வாங்குவார்கள். இதில் ஓய்வு பெற்ற நீதிபதி என்றால் கேட்கவே வேண்டாம்.)
ஒரு முறை 20 கிலோவுக்கு பதிலாக எம்எம்டிசி 40 கிலோ அனுப்பி விட்டது. நாங்கள் நேர்மையாக திருப்பிக் கொடுத்து விட்டோம் (அங்க இருக்கறது எல்லாம் உங்க ஆளுதானே… அப்புறம் ஏன் 40 கிலோ கொடுக்க மாட்டான்)
தயவு செய்து 400 கிலோ தங்கத்தை விடுவியுங்கள். என்ன நிபந்தனை விதித்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். (400 கிலோ தங்கத்தை கேட்கக் கூடாது என்பதுதான் நிபந்தனை)
இவ்வாறு வாதாடினார் சுரானாவின் வழக்கறிஞர். குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 397க்கும், இவர்கள் வாதாடியதற்கும் என்ன சம்பந்தம் ? கீழமை நீதிபதியின் தீர்ப்பில் ஏதாவது தவறு இருக்கிறதா என்பதைத்தானே நீதிமன்றம் ஆராய முடியும் ?
சிபிஐ வழக்கறிஞர் சந்திரசேகர் வாதாடும்போது, ஒரு வழக்கில் முதன்மையான பிரச்சினை முடிவடையாத நிலையில், பிறப்பிக்கப் படும் இடைக்கால உத்தரவு, முதன்மையான பிரச்சினையை முடித்து வைப்பதாக இருந்தால், அவ்வாறு செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதை குறிப்பிட்டார். வழக்கு விசாரணை இப்போதுதான் தொடங்கியுள்ளது. 18 கோடி என்பது உத்தேசமான தொகை. முழுமையான விசாரணை முடிந்தபிறகே, எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய முடியும் வழக்கு விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ள நிலையில், மனுதாரரின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்று வாதிட்டார்.
இருவர் வாதாடும்போதும், அவ்வப்போது குறுக்கிட்ட நீதிபதி கர்ணன் பல்வேறு கருத்துரைகளைக் கூறினார்.
சிபிஐ வழக்கறிஞரைப் பார்த்து, “மனுதாரரின் பாஸ்போர்ட்டை ஏன் பறிமுதல் செய்தீர்கள்… குற்றப்பத்திரிக்கை எப்போது தாக்கல் செய்வீர்கள்..” என்ற கேட்டார். சிபிஐ வழக்கறிஞர், நீதிமன்றத்தின் அனுமதியோடு பாஸ்போர்ட்டை திருப்பித் தருவதில், சிபிஐக்கு ஆட்சேபணை இல்லை என்று கூறினார்.
நீதிபதி கர்ணன் “மறு ஆய்வு குறித்த 397 பிரிவு மறு ஆய்வுக்கான வரம்பை குறுகலாகத்தான் வைத்துள்ளது. நீங்கள் வாதிட வேண்டியது, கீழமை நீதிபதியின் உத்தரவு சரியா தவறா என்பது பற்றித்தான். தற்போது வழக்கின் புலனாய்வு ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால், எம்எம்டிசிக்கு எவ்வளவு நஷ்டம் என்பதை புலனாய்வு அதிகாரி இன்றும் அளவிட்டிருக்க மாட்டார்.
உங்கள் தங்கம் எங்கே போய் விடப்போகிறது. சிபிஐ என்பது ஒரு பொறுப்பு வாய்ந்த மத்திய அரசு அமைப்பு. அவர்களிடம் தங்கம் பத்திரமாகத்தான் இருக்கும். மேலும் தங்கம் அழுகக்கூடிய பொருள் அல்ல. பிறகு ஏன் கவலைப்படுகிறீர்கள்… …. தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே இருப்பதால், உங்களுக்கு சிபிஐ திருப்பித் தரும்போது அதிக விலைதானே கிடைக்கும்.
புலனாய்வு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், அதுவும் ஆரம்பக் கட்டத்தில் எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும் ?” என்று சராமாரியாகக் கேள்விக்கணைகளை அடுக்கிக் கொண்டே சென்றார். நீதிபதி கர்ணன் இப்படியெல்லாம் சராமாரிக் கேள்விகளை அள்ளி வீசியதும், சுரானாவின் வழக்கறிஞர் ஒரு கட்டத்தில் கோபமடைந்து, நியாயமாக தொழில் நடத்துபவர்களுக்கு இதுதான் கதியா என்று உரத்த குரலில் கேட்டார்.
நீதிபதி கர்ணனும் எரிச்சலடைந்து, “உங்கள் தொழிலை நீங்கள் ஒழுங்காக நடத்தினீர்கள் என்றால் எதற்காக சிபிஐ உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப் போகிறது ? நேர்மையான நபராக இருந்தால் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டியதுதானே.. எதற்காக நீதிமன்றம் வருகிறீர்கள்” என்று அவரும் உரத்த குரலிலேயே பதில் சொன்னார்.
சுரானா தரப்பு வழக்கறிஞர் ஏன் இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் வாதிடுகிறார் என்று உங்களுக்கு வியப்பாக இருந்திருக்கும். அவர் அப்படி சட்டம் தெரியாத நபர் அல்ல. நன்றாகவே சட்டம் தெரிந்தவர். பிறகு ஏன் அப்படி வாதாடுகிறார் ? ஏன் என்றால், சுரானா நிறுவனத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கத்துக்கும் எந்தவிதமான ஆவணமும் சுரானா நிறுவனத்திடம் இல்லை. இறக்குமதி செய்திருந்தால், அதற்கான கிளியரன்ஸ் உத்தரவு வேண்டும். விமானத்தில் தங்கம் வந்திறங்கியதற்கான என்ட்ரி பில்கள் வேண்டும். 400 கிலோ தங்கம் இறக்குமதி செய்து இருப்பில் வைத்திருப்பதற்கு, மத்திய வணிக அமைச்சகத்தின் ஆணை வேண்டும். எந்த நாட்டிலிருந்து வந்தது, அதற்கு உரிய வரிகள் கட்டப்பட்டனவா என்பதற்கான ஆவணங்களும் வேண்டும்.
இவை எதுவுமே சுரானா நிறுவனத்திடம் இல்லை. சட்டத்தின் பார்வையில் அந்த 400 கிலோ தங்கமும் கடத்தி வரப்பட்டதே. எந்த விதமான ஆவணமும் இல்லாமல் இப்படி பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தங்கத்தை விடுவிக்க வேண்டும் என்றுதான் சுரானா சகோதரர்கள் தலை கீழாக நிற்கிறார்கள்.
இந்தத் தங்கம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படாமல் போனால், சுரானா நிறுவனத்துக்கு 130 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். சுரானா சகோதரர்கள் இப்படித் துடிப்பதற்கு மற்றொரு காரணம், இந்தத் தங்கம் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளது என்று நிரூபணம் ஆனால், தங்கம் இறக்குமதி செய்யும் சுரானா சகோதரர்களின் லைசென்சும் ரத்து செய்யப்படும். கிட்டத்தட்ட தொழிலே நசிந்து போய் விடும். மேலும் ஆவணம் இல்லாமல் தங்கம் வந்திருப்பதால், அந்தத் தங்கம் முழுமையும் அரசுக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்காகத்தான் சுரானா நிறுவனத்தினர் இப்படித் துடிக்கிறார்கள்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கர்ணன், சிபிஐ வழக்கறிஞரைப் பார்த்துக் கேட்டார். “சரி.. ஒரு வேளை, இந்த நீதிமன்றம், இந்த மனுவை அனுமதித்து, மனுதாரர் தனது பொருட்களை எடுத்துக் கொள்ள அனுமதித்தால் அது வழக்கின் புலனாய்வை பாதிக்குமா ?” என்று கேட்டார்.
சிபிஐ வழக்கறிஞர், நிச்சயம் பாதிக்கும். நான்கு மாதங்கள் அவகாசம் கொடுத்தால் சரி இறுதி அறிக்கை தாக்கல் செய்து விடுகிறோம் என்று கூறினார்.
சரி. தீர்ப்பை ஒத்தி வைக்கிறேன் என்று கூறி, வழக்கை ஒத்தி வைத்தார் நீதிபதி கர்ணன். இவ்வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
நீதிபதி கர்ணன், இவ்வழக்கு விசாரணையின்போது பேசியவற்றை பார்த்தால் முகாந்திரமே இல்லாமல் வழக்கு தொடர்ந்துள்ளார்கள் என்று தள்ளுபடி செய்துவிடுவார் போலத்தான் தோன்றுகிறது. ஆனால் இவ்வளவும் பேசி விட்டு, கடைசியில் கேட்ட கேள்வியைப் பாருங்கள் ….
ஓபனிங் நல்லாத்தான் இருக்கு. ஃபினிஷிங் எப்படி என்பதை நீதிபதி கர்ணன் தீர்ப்பு வழங்கும்போதுதான் பார்க்க முடியும்.
அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள்.
அன்று உழைப்பை சார்ந்து உழைப்பாளர்களாலும் தொழிலாளர்ளாலும் உருவாக்கப்பட்ட விவசாயப்பொருட்கள், உற்பத்திப்பொருட்கள் போன்றன தங்கத்திற்கும் வெள்ளிக்கும் கைமாறின. ஆனால் இன்று தங்கம், வெள்ளிக்கு கைமாறியது போய் சர்வதேச செலாவணியான எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) அச்சிட்ட அமெரிக்க டாலருக்கு மக்களின் உழைப்பும், நாடுகளின் இயற்கை வளங்களும், உற்பத்தி பொருட்களும் கைமாறுகின்றன என்றும், ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, கடனட்டைகள் மூலம் சாதாரண மக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.
தனிநபர்களும், பெருநிறுவனங்களும், வங்கிகளிடமிருந்து நுகர்வு மற்றும் முதலீட்டுக் கடனை நம்பி இயங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டது. எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி, வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களைப் பெற்றுக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிகளின் நுகர்வோர் கடன், ஈட்டுக் கடன் மற்றும் கடனட்டைகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்களும், நிரந்தரமாகக் கடன்காரர்களாக மாற்றப்படுவதோடு இவ்வங்கிக் கடன்பழுக்கள் மேலும் உயருமே தவிர, முற்றாக திருப்பிச் செலுத்தப்பட இயலாது.
வங்கிக் கடன்தான் மூலதனம் என மாறிப்போயுள்ள, சேமிப்பே இல்லாத “கடன்” (CREDIT) மயமான உலகில், தொடர்ந்து துரத்தும் கடன் பழுவால் ஏற்படும் பணப் பாய்ச்சல் (CASH FLOW) குறைவினால், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்கள் மற்றும் கடனட்டைகள் மூலமாக தம்மைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்ற ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள்.
நாட்டு மக்களின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றை பேண, செலவிடப்பட வேண்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்கங்களின் வங்கிக் கடன் சுமைக்கு வட்டியாக செலவிடப்படுகின்றது. 20,000 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் மூழ்கி இருக்கும் அமெரிக்க அரசாங்கம் முதல் 500 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் ஆழ்ந்து போயுள்ள கிரேக்க அரசாங்கம் வரை அனைத்து அரசாங்கங்களும், பெருவர்த்தக நிறுவனங்களும், சாதாரண மக்களும் தீராத வங்கிக் கடன்களில் மூழ்கி, முன்னொருபோதும் முகம் கொடுத்திருக்காத புதிய “கடன்” சவால்களை எதிர் கொண்டு திண்டாடும், அனைத்தும் “கடன்” மயமான இன்றைய உலகில், வீடுகள், வியாபாரங்கள் உட்பட அனைத்தும் ஈட்டுக் கடன்கள் மூலம் வங்கிகளின் கைவசமான இன்றைய காலகட்டத்தில், உலக நிதிச் சந்தையில் உண்மையான உற்பத்தி சம்பத்தப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் வெறும் 1 சதவீதமாகவும், 99 சதவீதமான பரிவர்த்தனைகள் பந்தய ஒப்பந்தங்களும் ஊக வணிகங்களாகவும் (FUTURES & DERIVATIVES) மாறிவிட்ட தற்போதைய சூழ்நிலைகளில் “மூலதனம்” பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பல விடயங்களெல்லாம் இத்துப்போன கருத்துக்களினதும் காலாவதியான தகவல்களினதும் குவியல்களாக மாறிவிட்டன.
உலகம் பூராக, உலகவங்கி (WORLD BANK), சர்வதேச நாணய நிதியம் (INTERNATIONAL MONETARY FUND), பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE), உள்ளிட்ட பல்வேறு வங்கிகளினதும், நிதி மையங்களினதும் சொந்தக்காரர்களான சர்வவல்லமை பொருந்திய ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (J.P.MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளினதும் “பணநாயகம்” அனைத்து நாடுகளிலும் ஜனநாயகத்தை அழித்தொழித்துவிடும்.
அமெரிக்கா முதல் ஆபிரிக்கா வரை உலகளாவிய ரீதியில், மக்களனைவரும் அச்சுறுத்தல்கள் மூலமும், பயத்தினூடாகவும், கட்டுப்படுத்தப்பட்டு, இலகுவில் ஆளப்படக் கூடியவர்களாக உருவாக்கப்படுகின்றார்கள். 99 சதவீதமான மக்களின் சிந்தனை அன்றாட வேலைச் சுமையுடனும், அடுத்தநேர உணவுடனுமே மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.
எண்பதுகளில் மேற்குலகமும், சோவியத் யூனியனும் பொருந்திக் கொண்டிருந்த போது, சோவியத் யூனியனை வீழ்த்துவதற்காக, ஆப்கானிஸ்தானில் வேற்றுநாட்டு இசுலாமிய தீவிரவாத இளைஞர்களை ஆயுதபாணிகளாக்கி, சோவியத் யூனியனுக்கு எதிராக யுத்தத்தை நடாத்தி வந்த அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, இதரநாடுகளுக்கும் எதிர்காலத்தில் அதே இசுலாமிய தீவிரவாத இளைஞர்களால், பலத்த பிரச்சனைகள் வருவதோடு, எதையும் உருப்படியாக மக்களுக்காக செய்யாது அழிவை மட்டுமே செய்கின்ற இசுலாமிய தீவிரவாத இளைஞர்களினால், அதிகளாவினாலான உயிரிழப்புகளையும், அழிவுகளையும் ஏற்படுத்த முடியுமே அன்றி, ஒருபோதும் மக்களுக்கு அமைதியையும் நிம்மதியையும் ஏற்படுத்த இயலாது
– நல்லையா தயாபரன்
நாம் அனைத்து மக்களுக்கும் இது கடன்களை கொடுக்க இங்கே, கடன் வருக
நாடு முழுவதும். எனது நிறுவனம் ஒரு உண்மையான மற்றும் உண்மையான கடன் நிறுவனம் ஆகும். என்றால்
நீங்கள் உங்கள் ஐடி கொண்டு விண்ணப்பிக்க மற்றும் நாம் செய்வோம் கடன் பெற, கடன் வேண்டும்
இரண்டு நாட்களுக்குள் உங்கள் கணக்கு மாற்றிவிடுகிறது. மின்னஞ்சல்:
abdulrasyindiloancenter@gmail.com
நீங்கள் ஒரு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வேண்டும்? நீங்கள் இது தவறான அல்லது நற்பெயர் இல்லை? நீங்கள் ஒரு வணிக தொடங்கும் பணம் தேவை? நீங்கள் ஒரு கார் கடன் வேண்டும்? நீங்கள் உங்கள் வீட்டில் மீண்டும் அடகு வைக்க வேண்டும்? நீங்கள் ஒரு பெரிய அளவிலான நிறுவனத்தை தொடங்கும் ஒரு பெரும் மூலதன தேவை ? நீங்கள் இந்த ஒரு சரியான தீர்வு வேண்டும்! கடன் மற்றும் கடன் விதிமுறைகளில் உள்ள மேலும் , ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து. அனைத்து விசாரணைகளையும் ஒரு சாதாரண வடிவில் இயக்கிய வேண்டும் கீழே காணப்படும் தொடர்பு தகவல் toviajames9@gmail.com வழியாக எங்களை E-mail:
கீழே கடன் விண்ணப்ப படிவம் நிரப்ப.
கடன் விண்ணப்ப படிவம் .
1) . முழு பெயர்கள் :
2). நாடு:
3). மாநிலம்:
4). பெருநகரம்:
5). விண்ணப்பதாரர் முகவரி:
6). தொலைபேசி:
7). பால்:
8). திருமண நிலை:
9). தொழில்:
10). மாத வருமானம் :
11). கடன் தொகை:
12). கடன் காலம்:
13). கடன் நோக்கம் :
தயவுசெய்து அன்புடன்
அவசர கடன் வேண்டும்?
* உங்கள் வங்கி கணக்கில் மிகவும் வேகமாக மற்றும் அவசர பரிமாற்ற
நீங்கள் பணத்தைப் பெற்ற பின்னர் * கொடுப்பனவு எட்டு மாதங்கள் ஆரம்பித்தது உங்கள்
வங்கி கணக்கு
* குறைந்த வட்டி விகிதங்கள் 2%
* நீண்ட கால கொடுப்பனவு ( 1-30 ஆண்டுகள்) கால
* நெகிழ்வான கடன் விதிமுறைகளில் மற்றும் மாதாந்திர பணம்
* . எப்படி நீண்ட அதை நிதி எடுக்கும்? ஒரு கடன் விண்ணப்பம் பதிவு செய்த பின்னர்
நீங்கள் எதிர்பார்க்க முடியும் என்று 24 மணி நேரத்திற்கும் குறைவாக ஆரம்ப நடவடிக்கையாக மற்றும்
நாம் வேண்டும் தகவல் கிடைத்ததும் 72-96 மணி நேரத்திற்குள் நிதி
நீங்கள் .
முறையான மற்றும் உரிமம் பெற்ற கடன் நிறுவனத்தின் அதிகாரி தொடர்பு
மற்ற நாடுகளில், என்று நிதி உதவி .
இப்போது தொடர்பு மூலம் மேலும் தகவலுக்கு , கடன் விண்ணப்பம்
மின்னஞ்சல்: maryrobert422@gmail.com