இந்த டெசோ மாநாட்டைப் பற்றியும், கருணாநிதி அன் கம்பேனி நடத்திய பல நாடகங்கள் பற்றியும் கருணாநிதி பாணியிலேயே சொன்னால் பல முறை இடித்துரைத்தாயிற்று. இதற்கு மேல் இந்த மானங்கெட்டவர்களைத் திட்ட சவுக்குக்கே அலுப்பாக இருக்கிறது…
இது இன்று திமுக நடத்திய கூட்டத்திற்கு பின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு… நீங்களே படித்து விட்டு திட்டிக் கொள்ளுங்கள்..
செய்தியாளர்கள் சந்திப்பு
(3-10-2012)
தலைவர் கலைஞர் :- “”””டெசோ”” அமைப்பின் கூட்டம் இன்று காலையில் பத்து மணி அளவிலே தொடங்கி, இதுவரையில் (பிற்பகல் 1.00) நடைபெற்று – விரைவில் ஐ.நா. மன்றத்தினுடைய கவனத்திற்கு, இந்தத் தீர்மானங்கள் அடங்கிய மகஜரை எடுத்துச் செல்ல இருக்கிறார்கள். அப்போது ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் இடத்திலே நேரில் எத்தகைய கருத்துக்களை வலியுறுத்திச் சொல்வது, வேண்டுகோளை வைப்பது என்பது பற்றிய ஆலோசனைகளை “டெசோ” அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கின்ற பேராசிரியர் அவர்களும், திராவிடக் கழகத் தலைவர் வீரமணி அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களும், திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களும் கலந்து கொண்டு ஆய்வு செய்தோம். ஜெனிவாவில் உள்ள மனித உரிமை ஆiணையத்திடமும், நியூயார்க்கிலே உள்ள ஐ.நா. மன்றச் செயலாளரிடமும் நேரில் மகஜர் கொடுப்பதற்காக, நான் ஏற்கனவே அறிவித்தவாறு செல்லவிருக்கின்ற தி.மு.கழகத்தின் பொருளாளர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற தி.மு.க. கட்சித் தலைவராக இருக்கின்ற டி.ஆர். பாலு இருவரும் செல்வது குறித்து, எடுத்துச் சொல்லி, அதன் தொடர்பான விளக்கங்களை யெல்லாம் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட நாங்கள் விவாதித்தோம். இன்றைய கூட்டத்தின் சார்பில் அவர்களுக்கு ஒப்புதல் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. உரிய தேதி, உறுதியான தேதி ஜெனிவாவில் சென்று பார்ப்பதற்கும், நியூயார்க்கில் சென்று பார்ப்பதற்கும் கிடைத்தவுடன் நான் குறிப்பிட்ட இருவரும் அந்த வேண்டுகோள் மகஜருடன் செல்லவிருக்கிறார்கள்.
செய்தியாளர் :- அங்கே செல்வதற்கான தேதி உறுதியாகி விட்டதா?
கலைஞர் :-அங்கேயிருந்து தேதி குறிப்பிட்டு இதுவரையில் பதில் வரவில்லை. அவர்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்ந்து பேசிவருகிறோம். உறுதியான தேதி தெரிந்த பிறகு உங்களுக்குத் தெரிவிக்கப் படும்.
செய்தியாளர் :- இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற உதவிகள் உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா?
கலைஞர் :- இதுவரை வந்துள்ள தகவல்கள்படி, அங்கே பணிகள் திருப்தி இல்லை என்ற செய்தி எங்களுக்கு கிடைத்திருக்கின்ற காரணத்தால் தான், அதையும் இந்த மகஜரில் சேர்த்து, அதைப் பற்றியும் விரிவாக எடுத்துச் சொல்ல இந்த பயணத்தை பாலுவும், ஸ்டாலினும் மேற்கொள்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செய்தியாளர் :- பிரதமர் உங்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதம் திருப்தி அளிக்கிறதா?
கலைஞர் :- டெசோ மாநாட்டுத் தீர்மானங்களும், அந்தத் தீர்மானத்தில் நாம் கொடுத்த அழுத்தமும் அது பற்றி மீண்டும் டெசோ உறுப்பினர்களை கலந்து கொண்டு நான் பிரதமருக்கு எழுதிய கடிதமும் அதற்கு பிரதமர் அவர்கள் எனக்கு அனுப்பிய விளக்கமான பதிலும் நேற்றையதினம் ஏடுகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று வந்துள்ள செய்தியின்படி இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர், ஐ.நா. வின் பொதுச் செயலாளரைச் சந்தித்த போது, ஐ.நா. பொதுச் செயலாளர் அவரிடம் சொன்னதாக வெளிவந்துள்ள கருத்துக்கள் இந்த நேரத்திலே முக்கியமானவை என்பதையும் – அந்தக் கருத்துக்களையும் இணைத்து டெசோ சார்பில் ஐ.நா. மன்றத்திற்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் இங்கிருந்து செல்கிற நம்முடைய பிரதிநிதிகள் பாலுவும் ஸ்டாலினும் எடுத்துரைப்பார்கள். செய்தியாளர் :- ஐ.நா. மன்றத்திற்கு செல்வதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து விட்டதா?
கலைஞர் :- பொதுவாக சாதாரணமானவர்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கும் பிரச்சினையே வராது. செல்பவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ., என்பதால் மத்திய அரசின் அனுமதி தேவைப்படுகிறது. அந்த அனுமதியை மத்திய அரசு அளித்து விட்டது.
செய்தியாளர் :- இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டுமென்று போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இதிலிருந்து அந்த இடங்கள் எல்லாம் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலே தான் இருக்கின்றன என்று தெரிய வருகிறது. இந்த நிலை எப்போது மாறும் ?
கலைஞர் :- அங்கே போர் முடிந்த பிறகும் எதிர்பார்த்த அமைதி ஒன்றும் ஏற்படவில்லை என்பதற்கு இவைகள் எல்லாம் அடையாளங்கள். இவைகளை யெல்லாம் இணைத்துத் தான் நம்முடைய பிரதிநிதிகள் டெசோhவில் இருக்கின்ற கட்சிகள் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் ஈழத் தமிழர்களுடைய எதிர் கால நல் வாழ்வுக்கான – அமைதி வாழ்வுக்கான நிலைமைகளை, கருத்துக்களை அந்த மன்றத்திலே விவாதிப்பார்கள்.
செய்தியாளர் :- இலங்கையில் முள்வேலி முகாம்களில் தமிழர்களே இல்லை, அவர்களை யெல்லாம் இலங்கை அரசு வெளியேற்றி விட்டதாகச் சொல்கிறார்கள். அதைப்பற்றி?
கலைஞர் :- முள்வேலி முகாம்களிலே கொடுமைகள் இன்னும் நின்ற பாடில்லை. முள்வேலி முகாம் மாத்திரமல்ல, அந்த முகாமுக்கு வெளியே இருக்கின்ற ஈழத் தமிழர்களும் கொடுமைகளுக்கு உள்ளாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
செய்தியாளர் :- இன்றைக்கு ஐ.நா. மன்றத்திற்கு செல்கின்ற இது போன்ற நடவடிக்கைகளை முன்பே எடுத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறார்களே?
கலைஞர் :- அப்போது தான் போர் நடந்து கொண்டிருந்தது. போர் முடிந்த பிறகு அங்கே அமைதி ஏற்படும் என்பதால் அந்தச் சூழ்நிலையில் நாங்கள் அந்த முயற்சிகளை மேற்கொள்ள இயலவில்லை.
செய்தியாளர் :- தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய சில அகதிகள் முகாம் களில் இருப்பவர்களை, திறந்த வெளி முகாம்களுக்கு அனுப்ப வேண்டுமென்று தொடர்ந்து போராட்டம் நடத்துகிறார்களே?
கலைஞர் :- தமிழ்நாட்டில் அகதிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறீர்கள். “தமிழ்நாட்டிலேயே அகதிகளுக்குப் பாதுகாப்பு இல்லை, அவர்கள் எல்லாம் ஈழத் தமிழர்கள், எனவே இலங்கையிலே மாத்திரம் அவர்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும்” என்று அவர்கள் வாதாடுவதற்குத் தான் உங்கள் கேள்வி உதவியாக அமையும். தமிழ்நாட்டிற்கு அகதிகள் வரக் காரணமே, சிங்களவர்களின் கொடுமை தான். சிங்கள அரசு காட்டிய அலட்சியமும், கொடூரத் தாக்குதல்களும் தான் இங்கே அகதிகள் வரக் காரணம். அந்த அகதிகள் இப்போது பராமரிக்கப்படாமல் அல்லது கவனிக்கப்படாமல் கஷ்டப்படுகிறார்கள் என்றால், அதற்கு இங்கே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ள அரசு காரணமாக இருக்கலாம். நான் இந்தக் கூட்டத்தை அரசியல் விவகாரத்துக்குப் பயன்படுத்த விரும்பவில்லை. ஆகவே நான் இதைப் பற்றி அதிகமாக விளக்க விரும்பவில்லை.
செய்தியாளர் :- சிறப்பு முகாம்களில் இருப்பவர்கள், திறந்த வெளி முகாம்களுக்கு அனுப்புவதற்காக மத்திய அரசுடன் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா?
கலைஞர் :- சிறப்பு முகாம்களில் இருப்பவர்களைப் பற்றி மத்திய அரசுக்கு தெரியும். மத்திய அரசு இலங்கை அரசு செய்வதை விட முந்திக் கொண்டு உதவிகளைச் செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதைச் செய்வார்களா என்ற கேள்விக்கு மத்திய அரசு நல்ல பதிலை அளிக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.
திருமாவளவன் :- செங்கற்பட்டு முகாம்களில் உள்ளவர்கள் கஷ்டப் படுவதைப் பற்றி அவர்களைக் காப்பாற்ற முயற்சி எடுக்கப்படுமா என்று கேட்கிறார்கள் அய்யா ?
கலைஞர் :- செங்கற்பட்டு முகாம்களில் உள்ளவர்களுக்காக இப்போதே சில சில போராட்டங்கள் சில அரசியல் கட்சிகள் சார்பில் நடைபெற்றிருக்கின்றன. நம்முடைய திருமாவளவன் தலைமையில் கூட அந்த முயற்சியெல்லாம் நடைபெற்றது, போராட்டம் நடைபெற்றது. இது போன்றவற்றுக்கு எல்லாம் சேர்த்து நாம் எழுப்புகின்ற குரல் தான் இலங்கையிலே ஈழத் தமிழர்கள் எதிர்காலத்திலே சுயமரியாதையோடும், சுதந்திரத்தோடும் வாழ்வதற்கு இன்றைக்கு இங்கே காலையிலிருந்து விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகள். பொதுவாக இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் எல்லாம் போக வேண்டுமென்றால், ஐ.நா. மன்றத்தில் இடம் பெற்றிருக்கின்ற நாடுகளின் ஆதரவோடு, குறிப்பாக இந்தியப் பேரரசின் அழுத்தமான ஆதரவோடு டெசோ சார்பாக எடுத்துள்ள முடிவுகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும், நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்.
செய்தியாளர் :- போருக்குப் பிறகு இலங்கை அரசு அங்கே அமைதியை உருவாக்கும் என்ற நம்பிக்கையோ, எதிர்பார்ப்போ உங்களுக்கு இருந்ததா ?
கலைஞர் :- இலங்கையைப் பொறுத்தவரை சிங்களவர்கள், அங்கேயுள்ள தமிழர்களை அமைதியாக வாழ விடுவார்கள் என்ற நம்பிக்கை என்றைக்கும் இருந்ததில்லை. அதனால் தான் அந்தக் காலத்திலிருந்து தமிழர்கள் சுதந்திர வாழ்வு, அமைதியான வாழ்வு வாழ்வதற்கு அவர்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளக் கூடிய உரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்று இன்று நேற்றல்ல, செல்வநாயகம் அவர்கள் காலத்திலிருந்து இலங்கையிலே போர்க்குரல் அமைதியாகவும், அகிம்சை வடிவிலும், ஆயுதமின்றியும் நடந்திருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.
செய்தியாளர் :- தமிழ்நாட்டிலே உள்ள, திமுக உள்ளிட்ட எல்லா கட்சிகளும் இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் மத்திய அரசு, இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வந்தபோது அவருக்கு சிகப்புக் கம்பள வரவேற்பு கொடுத்திருக்கிறதே ?
கலைஞர் :- ஒரு நாட்டினுடைய தலைவராக அந்த நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள், ஜனநாயகம் அனுமதிக்கப்படுகிற வரையிலே அந்தப் பதவியிலே இருப்பவர்கள் அதிபர் பொறுப்பிலிருந்து இன்னொரு நாட்டிற்கு வந்தால், அப்படி வருகிறவர்களை வரவேற்பு என்பது இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு விருந்து கூட அளிப்பதென்பது மரபாகவே இருந்து வருகிறது. அந்த மரபையும், மீறுகின்ற உணர்வு, இந்தியாவிலே இருக்கின்ற அரசுக்கு வர வேண்டாமா என்று நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். எல்லோரிடத்திலும் அந்த உறுதியை எதிர்பார்க்க முடியாது. உங்களுக்கு ஒன்றை நினைவூட்டுகிறேன். அமைதிப்படை என்ற பெயரால், இலங்கைக்குச் சென்று அங்கேயிருந்த தமிழர்களை அமைதிக் குறைவாக நடத்துகின்ற அளவிற்கு நம்முடைய இந்திய நாட்டு சிப்பாய்கள் அங்கே சென்று, பிறகு அவர்கள் திரும்பி வந்த போது, அந்த அமைதிப்படைக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்ற மரபு வழியில், நான் அறிவுறுத்தப்பட்டேன். தமிழ்நாட்டில் அன்றைக்கு இருந்த ஆளுநர் மூலமாக வலியுறுத்தப்பட்டேன். ஆனால் நான், என்னுடைய தமிழர் களைக் கொன்று குவித்த அந்த அமைதிப் படைக்கு வரவேற்பளிக்க நான்
செல்ல முடியாது என்று முதலமைச்சராக இருந்து கொண்டே நான் மறுத்ததை நீங்கள் வசதியாக மறந்து விடாதீர்கள், ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
செய்தியாளர் :- இலங்கையிலே மனித வளம் குறைந்து வருகிறது என்றும், உலகத்திலே பல நாடுகளில் இருக்கின்ற அகதிகள் எல்லாம் இலங்கைக்குத் திரும்ப வேண்டுமென்று இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் சொல்லியிருக்கிறாரே?
தலைவர் கலைஞர் :- அது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதை நான் பொதுக் கருத்தாக ஏற்றுக் கொள்ள முடியாது.
செய்தியாளர் :- டெசோ அமைப்பின் சார்பாக மாநாடு நடத்தினீர்கள். அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
கலைஞர் :- மாநாடு நடத்துவது மாத்திரம் டெசோவின் திட்டம் அல்ல. மாநாடு நடத்தி, அதனால் ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுஅளிக்க முடியுமா என்று யோசித்து, அவைகளை வலியுறுத்துவதும் டெசோ அமைப்பின் நோக்கமாகும். அந்த நோக்கத்தை தமிழ்நாட்டு மக்களிடத்திலே எந்த அளவிற்குப் பரப்பி வெற்றி காண முடியுமோ, அதன் மூலமாக அயல் நாடுகளிலே உள்ள சுதந்திரத்தை விரும்புகின்ற மக்களிடமும், அந்தக் கருத்தை வலியுறுத்தி தமிழ் ஈழ மக்கள் இன்றைக்குப் படுகின்ற வேதனைகளிலிருந்து அவர்களை மீட்பதற்கு பணியாற்றுவது தான் டெசோவின் குறிக்கோள். அதிலே ஒரு கட்டம் தான் இப்போது அனுப்பப்படுகின்ற டெசோவின் பிரதிநிதிகள் ஐ.நா. மன்றத்திற்குச் செல்வதாகும்.
செய்தியாளர் :- தி.மு.க. நடத்துகின்ற மனித சங்கிலிக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்து விட்டதா?
கலைஞர் :- மனிதச் சங்கிலிக்கு தென் சென்னை மாவட்டக் கழகத்தின் செயலாளர் ஜெ. அன்பழகன், எம்.எல்.ஏ., அவர்கள் முறைப்படி போலீசாரிடம் அனுமதி கேட்டிருக்கிறார். அவர்கள் இன்னமும் நாங்கள் கேட்ட அந்த வழியிலே அனுமதியை உறுதி செய்யவில்லை. நாங்கள் கேட்டிருப்பது – சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கடற்கரை சாலை வழியாக, ஐ.ஜி. அலுவலகம் எதிரில் உள்ள கலங்கரை விளக்கம் வரை அனுமதி கேட்டிருக்கிறோம். அதற்கு மாற்றாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் சென்னை உயர் நீதி மன்றம், சென்ட்ரல், பல்லவன் சாலை, அண்ணா சாலை, தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் வரை என்று கேட்டிருக்கிறோம். அந்த இரண்டு வழியும் சரிப்பட வராவிட்டால், சென்னை ஐ.ஜி. அலுவலகம் எதிரில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் சாந்தோம், சத்யா ஸ்டுடியோ, அடையாறு பேருந்து நிலையம், காந்தி மண்டபம் வரையில் என்று கேட்டிருக்கிறோம். இந்த மூன்றிலே எதற்கும் இன்னமும் அனுமதி கொடுக்கவில்லை. கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் இது மனிதச் சங்கிலி அணிவகுப்பு. கருப்புச் சட்டை அணிந்து சாலையோரத்திலே – ஓரமாக யாருக்கும் இடையூறு இல்லாமல் ஊர்வலமாகச் செல்வது கூட அல்ல – நிற்பது என்ற அப்படிப்பட்ட மனிதசங்கிலி அணி வகுப்பைத் தான் நடத்தவிருக்கிறோம். அதற்கு போலீசார் நிச்சயமாக அனுமதி தருவார்கள் என்று நம்புகிறோம். இந்த மூன்று வழிகளிலே ஒரு வழியில் தான் நாங்கள் அனுமதி கேட்கிறோம்.
Hallo Michaela,es ist schön zu sehen, wie alles bei dir läuft. Ich freue mich immer wieder auf die neue Fotos, die mich aus dem Alltag entführen Dir wünsche ich weiterhin viel Freude und alles Gute im neuen Jahr!Liebe Grüße, Daniela
enormous huglAbso*utely I will be praying and thinking of you. Call me whenever you might need my ear. You can wake me up at any hour if you need to. I mean that. Okay?<3