கவுண்டமணி. தமிழ்த் திரையுலகில், நகைச்சுவையில் ஒரு மைல் கல் என்றால் அது மிகையல்ல. அவ்வப்பொழுது, மழைக்காலம், வெயில்காலம் போல, தமிழ்த்திரையுலகில் காமெடி நடிகர்கள் தோன்றி மறைவார்கள். ஆனால், காலத்தைக் கடந்து இன்றளவும் நகைச்சுவையாக அன்றாடம் நடைபெறும் உரையாடல்களில் இடம் பெறும் வகையில் ட்ரென்ட் செட்டர்களாக இருப்பவர்கள் கவுண்டமணி மற்றும் வடிவேலு மட்டுமே.
அப்படிப்பட்ட கவுண்டமணியின் புகழ்பெற்ற நகைச்சுவைக் காட்சிதான் சூரியன் திரைப்படத்தில் இடம்பெற்ற, ஸ்டார்ட் ம்யூசிக் என்ற நகைச்சுவைக் காட்சி. இந்தக் காட்சியைப் பற்றி திடீரென்று எதற்காக இப்போது சவுக்கில் எழுத வேண்டும் என்று கேட்டால் காரணம் இருக்கிறது.
சைதை துரைசாமியைப் பற்றி அலிபாபாவும், ஆயிரம் திருடர்களும் என்று எழுதப்பட்ட கட்டுரைக்காக, மனிதநேய அறக்கட்டளையின் இயக்குநரான கார்த்திகேயன் என்பவர் வழக்கறிஞர் அறிவிக்கை (Lawyer Notice) அனுப்பியிருக்கிறார்.
அதில் மனிதநேய அறக்கட்டளை, உலகத்திலேயே ஒரு மிகச்சிறந்த அப்பாடக்கர் அறக்கட்டளை என்றும், அந்த அப்பாடக்கர் அறக்கட்டளையின் மீது சவுக்கு அவதூறு ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார். அந்த அறிவிக்கையில், தெரிவித்துள்ள மறுப்பினை அப்படியே வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஒரு ஊடகத்தில் ஒரு கட்டுரை வந்தால், அதில் சம்பந்தப்பட்டவர் மறுப்பு தெரிவித்தால் அதை அப்படியே வெளியிடுவது ஊடக தர்மம்.
ஆனால், அந்த அறிவிக்கையின் இறுதியில் அந்த மறுப்பை அப்படியே வெளிடாவிட்டால் சட்டரீதியாக வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துள்ளார். (இப்படியெல்லாம் ஒரு பச்சப்புள்ளையப் போயி மெரட்டுனா அது பயந்து போயிடாது…. ?)
வெளியிடாவிட்டால் வழக்கு தொடரப்படும் என்ற மிரட்டலுக்கு என்ன பதில் தெரியுமா ?
வெளியிட முடியாது.
வெளியிட முடியாது என்றவுடன் வழக்கு தொடுக்கப் போகிறார்களே…. இதற்கு என்ன பதில் ?
இதற்குத்தான் கவுண்டமணியின் இந்த வீடியோ காட்சி.
ஐ யம் வெரி ஹேப்பி…. ஸ்டார்ட் ம்யூசிக்…
சைதை துரைசாமி என்கிற அலிபாபா அவர்களே….. சவுக்கு யாரென்று விசாரித்தீர்களா… விசாரித்துமா இந்த மிரட்டல் ? சவுக்கு தளத்தின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா ? தெரியாவிட்டால், தமிழகத்தின் சக்ரவர்த்தியாக இருந்த ஜாபர் சேட் ஐபிஎஸ் என்ற அதிகாரியிடம் கேட்டுப்பாருங்கள். சவுக்கு தளத்தால் அவர் பட்ட பாட்டை கதை கதையாகச் சொல்லுவார்.
வழக்கு தொடுக்கும் உங்கள் முடிவை சவுக்கு முழு மனதோடு வரவேற்கிறது. உங்கள் வழக்கை சட்டரீதியாக நீதிமன்றத்தில் சந்திக்க சவுக்கு தயாராக இருக்கிறது.
கார்த்திகேயன் உங்கள் சார்பாக அனுப்பிய அறிக்கையில், அலிபாபா 1980 முதலே சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் செய்த, செய்து வரும் சமூக சேவைகளின் பட்டியலாக அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பது…
எண்பதுகளில் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்துள்ளார்.
வேளச்சேரியில் இலவச திருமண மண்டபம் கட்டிக் கொடுத்துள்ளார்.
இறந்தவர்களின் உடல்களை வைக்க இலவச குளிர்பதனப் பெட்டி
நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கட்டுகிறார்
இலவச ஹாஸ்டல்கள் நடத்துகிறார்
முதியோர் ஓய்வூதியம் வழங்குகிறார்
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குகிறார். இவையெல்லாம், மனிதநேய அறக்கட்டளையின் வழியாக செய்யப்படும் உதவிகள் என்று சொல்லப்பட்டுள்ளது அந்த அறிக்கையில்.
சரி… மனிதநேய அறக்கட்டளைக்கு, அலிபாபாவைப் போன்ற ஏராளமான புரவலர்கள் நிதி உதவி செய்வார்கள், அதை வைத்து, தொழில் நடத்துகிறார்…. மன்னிக்கவும்…. சேவை செய்கிறார் என்று பார்த்தால் அந்த அறிவிக்கையில் உள்ள அடுத்த வரி… அதிர்ச்சி அடைய வைக்கிறது.
It is also for you to understanding that it is managed with the personal funds of Thiru.Saidai Sa.Duraisamy. The byelaws of the trust say that “NO DONATIONS SHOULD BE ACCEPTED EITHER IN CASH OR IN KIND”.
உங்கள் புரிதலுக்காக (சவுக்கின் மரமண்டையில் உறைக்கும் வகையில்) சொல்லிக்கொள்வது என்னவென்றால் மனிதநேய அறக்கட்டளையின் விதிகளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பது பணமாகவோ, பொருளாகவோ எந்த வகையிலும் மனிதநேய அறக்கட்டளை நன்கொடைகளைப் பெறாது. அந்த அறக்கட்டளை முழுமையும், சைதை துரைசாமியின் சொந்த நிதியினால் நடத்தப்படுகிறது.
இன்று உலகிலேயே மிகப் பெரிய புரவலாக அறியப்படுபவர் வாரென் பஃபெட் எனப்படுபவர். அமெரிக்கக் குடிமகனான இவர் 2008ல் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் உலகிலேயே பெரிய பணக்காரராக அறிவிக்கப்பட்டார். 2008ம் ஆண்டில் இவரது சொத்து மதிப்பு மட்டும் 62 பில்லியன் டாலர்கள்.
வாரன் பஃப்பெட்
ஜுன் 2006ல் தனது சொத்துக்களை சமூக சேவை அமைப்புக்களுக்கு எழுதி வைக்கப் போவதாக அறிவித்தார். பில்கேட்ஸ் நடத்தும் சமூக சேவை அமைப்புக்கு 30.7 பில்லியன் டாலர்களை எழுதி வைத்தார்.
இவர் பெயரிலேயே பஃப்பெட் பவுன்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கி அதற்கு தன் மனைவி பெயரிலிருந்த 2.6 பில்லியன் மதிப்பிலான எஸ்டேட்டை எழுதி வைத்தார். அணு ஆயுத எதிர்ப்புக்காக 50 மில்லியன் டாலர்களை வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும், தன்னோடு விருந்துண்ணும் வாய்ப்பை ஏலம் விட்டு, அதன் மூலம் வரும் வருமானத்தையும் சமூக சேவை அமைப்புக்களுக்கு வழங்கினார். தான் சமூக சேவைக்காக பணம் வழங்குவது அல்லாமல், உலகின் மற்றொரு பெரிய பணக்காரரான பில் கேட்ஸையும், ஃபேஸ் புக் நிறுவனர் மார்க் ஸுக்கர் பெர்கையும் தங்கள் மொத்த சொத்தில் 50 சதவிகிதத்தை சமூக சேவைக்காக எழுதி வைக்கும் ஒரு ஒப்பந்தத்தில் 2 டிசம்பர் 2010 அன்று கையெழுத்திட வைத்து, இவரும் கையெழுத்திட்டார்.
இன்று உலகின் மிகப்பெரிய புரவலராக வாரன் பஃப்பெட் அறியப்படுகிறார்.
வாரன் பஃபெட்டின் வாழ்கை ஒரு திறந்த புத்தகம். வாரன் பஃப்பெட் பற்றி 20க்கும் மேற்பட்ட நூல்கள் வந்துள்ளன. 1930ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்கா மாகாணத்தில் வாரன் பஃப்பெட் பிறந்தது முதல், காலையில் என்ன சிற்றுண்டி உண்ணுகிறார் என்பது வரை, அத்தனையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அலிபாபா அனுப்பியுள்ள வழக்கறிஞர் அறிவிக்கையைப் பார்க்கும் போது, அலிபாபா அவரை விட மிகப்பெரிய புரவலராக இருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது. சரி.. அப்படியே ஏற்றுக் கொள்வோம். வாரன் பஃபெட்டின் வாழ்க்கை அவருக்கு எப்படிப் பணம் வந்தது, எப்படி செலவு செய்தார், எப்படி தானம் செய்து கொண்டிருக்கிறார் என்பன போன்ற அத்தனையும் வெளிப்படையாக உள்ளது.
ஆனால் சைதை துரைசாமியைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. சைதை துரைசாமியோடு ஆரம்ப காலங்களில் பழகியவர்களைக் கேட்டால், இவர் கரூரிலிருந்து சென்னைக்கு வருகையில் ஒரு சாதாரண நபராக… சென்னை மொழியில் சொன்னால் காயிதம் பொறுக்கியாக வந்தார் என்று கூறுகிறார்கள்.
இன்று சைதை துரைசாமியின் சொத்து மதிப்பு, 41 கோடி ரூபாய். சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பெருங்குடியில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 400 சதுர அடியில் வணிக வளாகம் வைத்துள்ளார். இந்த இடத்தை 2004ம் ஆண்டு வாங்கியபோது அதன் மதிப்பு 41 லட்சத்து 52 ஆயிரம் என்று குறிப்பிட்டுள்ளார். 2004லேயே, பழைய மகாபலிபுரம் சாலையில் 2 லட்சம் சதுர அடி குறைந்தது 2 கோடி இருக்கும். ஆனால் இவர் 41 லட்சத்துக்கு வாங்கியதாக கூறுகிறார். சரி அப்படியே இவர் இதை உழைத்து வாங்கினார் என்று வைத்துக் கொள்வோம்.
2005ல் 17 லட்ச ரூபாய்க்கு ஒரு ஹ்யுண்டாய் கார் வாங்கியுள்ளார். இவர் மனைவி 2006ல் 8 லட்ச ரூபாய்க்கு ஒரு ஸ்கார்ப்பியோவும், 2008ல் 20 லட்ச ரூபாய்க்கு ஒரு போர்ட் என்டவர் காரும் வாங்கியுள்ளனர். இது போக இரண்டு அம்பாசிடர் கார்கள் உள்ளன.
சின்னதாராபுரத்தில் 1969ம் ஆண்டு வெறும் பத்தாம் வகுப்பு படித்த ஒருவர், இப்படி வாரன் பஃபெட்டுக்கு இணையான புரவலராகியிருக்கிறார் என்றால் அது மகிழ்ச்சிக்குரிய விஷயமே.
மார்ச் 2011 அன்று உள்ளபடி இவருக்கு வெளிப்படையாக உள்ள கடன் 44.83 கோடி. ஆண்டு வருமானமாக இவர் வருமான வரித்துறையிடம் காட்டும் தொகை வருடத்துக்கு 1.2 கோடி.
இந்த 1.2 கோடி, இவர் மாதந்தோறும் செலுத்த வேண்டிய தவணைத் தொகைகளைக் கழித்த பிறகு என்று வைத்துக் கொள்வோம். இவருக்கு மாதந்தோறும் வரும் வருமானம் 10 லட்சம்.
இந்த 10 லட்சத்தில், இவருக்கு மாதாந்திர செலவுக்கு ஐந்து வாகனங்களுக்கு பெட்ரோல், வாகன ஓட்டுநருக்கான ஊதியம், இவரின் வாழ்க்கை ஸ்டைலுக்கு ஏற்றவாறு ஏற்படும் செலவுகள், தொலைபேசிக் கட்டணம், வேலைக்காரர்களுக்கு மாத ஊதியம், இதர செலவுகள் ஆகியவற்றுக்கு குறைந்தது 4 லட்ச ரூபாய் தேவைப்படும். மீதம் உள்ள தொகை 6 லட்சம்.
இப்போது சைதை துரைசாமி, தனது சொந்த செலவில் மனிதநேய அறக்கட்டளையின் மூலமாக செய்து வரும் நலத்திட்டங்கள் என, அவரது மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர் அறிவிக்கையில் தெரிவித்துள்ளதை மீண்டும் ஒரு முறை பார்ப்போம்.
ஏற்கவே அலிபாபா கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல, வேளச்சேரி திருமண மண்டபம் மொத்தம் 18 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் உடல்களை வைக்க இலவச குளிர்பதனப் பெட்டி
நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கட்டுகிறார்
இலவச ஹாஸ்டல்கள் நடத்துகிறார்
முதியோர் ஓய்வூதியம் வழங்குகிறார்
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குகிறார்.
இவை சைதை துரைசாமி அனுப்பிய அறிவிக்கையில் உள்ளவை. அவர்கள் சொல்லாமல் விட்டதை சவுக்கு சொல்கிறது கேட்டுக் கொள்ளுங்கள்.
மனிதநேய அறக்கட்டளை, கிராமப்புற மாணவ, மாணவிருக்காக இலவச ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். மற்றும் குரூப்-1 தேர்வு ஆகியவற்றுக்கான இலவசப் பயிற்சிகளை அளித்துவருகிறது. இந்த பயிற்சி பெறும் மாணவ, மாணவியருக்கு இலவச விடுதி, உணவு மற்றும் பாடநூல்கள்கள் உள்பட பல்வேறு வசதிகளை இலவசமாக செய்து தருகிறது.
தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி.யில் இருந்து பட்டப்படிப்பு, மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் போன்ற உயர்கல்வி படிக்கும் ஏழை மாணவர்கள் 1,100 பேருக்கு மனிதநேய அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு தேறிய மாணவ, மாணவிகள் 50 பேரை தேர்ந்தெடுத்து, அவர்கள் மேல்நிலை கல்வி, கல்லூரி படிப்பு மற்றும் ஐ.ஏ.எஸ். போன்ற உயர்கல்விகள் படிப்பது வரையிலான முழுச் செலவையும் மனிதநேய அறக்கட்டளையே ஏற்கிறது.
மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் 50 மாணவ, மாணவியருக்கு கடந்த 26 வருடங்களாக இலவச நோட்டு, புத்தகங்களை மனிதநேய அறக்கட்டளை வழங்கி வருகிறது.
மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்தும் வகையில், குடிப்பழக்கத்தை கைவிடும் நபர்களுக்கு 1 சவரன் தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டு வருகிறது.
ஏழை, எளிய மக்களின் அவசரத் தேவைக்கு உதவும் வகையில், இறந்தவர்களின் உடலை பாதுகாப்பதற்காக குளிர்சாதன சவப்பெட்டிகள், மற்றும் இலவச அமரர் ஊர்தி போன்ற சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
750க்கும் அதிகமான ஊனமுற்றோருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஏழை, எளிய மக்களுக்கு ஈமச்சடங்குகள் செய்வதற்கான உதவித்தொகை
நலிந்த நடைபாதை வியாபாரிகளுக்கு உதவித்தொகை
அரவாணியர் வசதிக்காக தகவல் தொடர்புக்கான அலுவலகம்
இந்த சேவைகளும் முழுமையான பட்டியல் அல்ல. இவரின் சேவைகள் கணக்கிலடங்கா.
சவுக்கு வாசர்களுக்கு ஓரளவு, கணக்கு, புள்ளி விபரம், விலைவாசி நிலவரம் தெரியும் என்று நினைக்கிறேன். இவை எல்லாவற்றையும் செய்ய, மாதம் 6 லட்ச ரூபாய் வீதம், ஆண்டுக்கு 72 லட்ச ரூபாய் போதுமா ? ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல, தற்போது மனித நேய அறக்கட்டளையின் பயிற்சி மையங்கள் தமிழகத்தில் 10 இடங்களில் செயல்பட்டு வருகின்றன என்பதையும் கணக்கில் கொள்ளுங்கள்.
இவை அத்தனையும் ஒரு வருடத்துக்கு 72 லட்ச ரூபாயில் செய்ய முடியுமா ? எப்படி முடியும் என்று சந்தேகம் வருகிறதா இல்லையா…
இதத்தானேய்யா கேட்டான் அந்த சவுக்குப்பய… இதுக்குப் போயி அவனுக்கு நோட்டீஸ் அனுப்புனா… என்ன கொடும சைதை இது… ?
3 பில்லியன் டாலர்களை சாதாரணமாக, தானமாக கொடுத்திருக்கும் வாரன் பஃபெட் கூட இந்த அளவுக்கு அலட்டிக் கொள்ளவில்லை…. ஆனால் இந்த சைதை துரைசாமி கொடுக்கும் பில்டப் இருக்கிறதே….
புரட்சித் தலைவி அம்மாவின் கனிவான பார்வைக்கு இந்த வீடியோ சமர்ப்பிக்கப்படுகிறது.. …
பார்த்து விட்டீர்களா… இது மட்டுமில்லை… பத்திரிக்கையாளர்களிடம் பணம் கொடுத்து சைதை துரைசாமி தன்னைப் பற்றி ஊடகங்களில் வரவழைத்துள்ள செய்திகளைப் பாருங்கள்….
பார்த்து விட்டீர்களா…. இது குறித்து சவுக்கு எதுவும் சொல்லப்போவதில்லை… கவுண்டமணியின் இந்த வீடியோவைப் பாருங்கள்..