சவுக்கு தளத்தில், முன்னாள உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட் மற்றும், கலைஞர் டிவியின் மேலாண் இயக்குநர் சரத் குமார் ரெட்டி இடையேயான உரையாடல் சனியன்று வெளியிடப்பட்டது.
இந்த உரையாடல் அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜாபர் சேட், காவல்துறை அதிகாரியாக செயல்படாமல், ஒரு அரசியல் தரகர் போல செயல்பட்டு வருவது குறித்தும், காவல் துறை அதிகாரியாக தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது குறித்தும், நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை நியமித்து, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு புகார் அனுப்பப் பட்டுள்ளது.