கும்ப்டுக்கிறேன் தல.
எம்பேரு வண்ணாரப்பேட்டை லுச்சா பையன் தல. நான் நெம்ப நாளா ஒன்ன பாலோ பண்ணிக்கினே கீறேன் தல. நம்ப இஸ்டேட்லயே தில்லான ஒரே ஆளு நீதான் தல. சார்ட்டா சொல்லனுன்னா நீ ஒரு தில்லு தொர தல.
இவ்ளோ நாளு கயிச்சு ஒனக்கு ஒரு கட்தாசு போட்லான்னு மன்சு கெடந்து அட்சுக்குது தல. அதான் தல எயுதறேன்.
நீ எவ்ளோ பெரிய ஆளு. இன்னா பவரு ஒனக்கு. ஒன்ன போயி இப்டி டம்மி பீஸாக்கி ஒக்கார வெச்சத நென்ச்சா மன்ஸுக்குள்ள பேஜாராயிருக்கு தல. ஒனக்கு இருக்கற பவருக்கு, நீ அமேரிக்கான்னு ஒரு நாடு இருக்காமே. அங்க போய் டிஎம்கே கட்சி நடத்தனும் தல. ஏதோ ஒன் கெட்ட நேரம், எங்க நல்ல நேரம், நீ நம்ப ஸ்டேட்டுலயே இருக்கற தல.
நேத்து வந்த தம்மாத்தூண்டு பசங்கல்லாம், இன்னா பாலிடிக்சு பண்ணுதுங்கோ. நீ இன்னா தல, மதுரையில போயி குந்திக்கினு கீற.
இந்த ஜெயா டிவிலே, போன மாசம் பூங்கோதைன்னு ஒரு மினிஸ்டர் கீதே. அது ஒன்ன ரொம்ப கேவலமா பேசுச்சாம்மே தல. கேட்டதுமே மன்ஸு பேஜாரா பூட்ச்சு தல. ரொம்ப பேஜாரானதால, ரெண்டு கோட்டர் அட்ச்சு கவுந்தட்ச்சு பட்துக்குனேன் தல.
யாரு தல அந்த பூங்கோத… நேத்து வரைக்கும், அமேரிக்காவுல கொயந்தைங்களுக்கு ஊசி போட்டுட்ருந்த டாக்டர் தல. இன்னக்கி நீ மன்சு வச்சதால மினிஸ்டர் ஆயிக்கீது தல. அந்தப் பொம்பள இன்னா பேச்சு பேசுத தல… யாரோ டெல்லில ரேடியோன்னு ஒரு பொம்பள கீதாம்மே….. அந்தப் பொம்பளையோட, இந்தக் கசுமாலம் பூங்கோதை பேசுறத டிவில போட்டாங்க தல. ஒன்ன ரொம்ப கலீஜா பேசிடுச்சாமே தல… அத்துக் கேட்டுட்டு இன்னுமா தல நீ கம்முனு கீற ?
இந்த ராஜா ராஜான்னு ஒரு டவுசர் பையன் இருக்கானாமே… நீ பாத்து அரசியலுக்கு வந்த பிள்ளக்கா பையன் அவன், ஏதோ பெரிய அமவுண்ட அடிச்சுட்டானாமே.. அந்த அமவுண்டுல ஏகப்பட்ட சைபர் கீது தல… எனிக்கு ஒன்னும் அன்டர்ஸ்டாண்ட் ஆவுல. ஆனா பெரிய அமவுண்ட்டுனு மட்டும் தெரீது தல.
அவ்ளோ பெரிய அமவுண்ட அடிச்சுட்டு, ஒரு மருவாதிக்கு ஒனக்கு துட்டு குடுத்தானா தல அந்த பையன்…. ஒன்னுமே கொடுக்காம கொஞ்சம் கூட மருவாதி இல்லாம ஒன்ன மாதிரி தில்லு தொரக்கிட்டயே மோதறான்னா, நீ யாருன்னு காட்டத் தேவல்ல ?
ஒரு மவுடர் பண்ணிருப்பானா தல அவன். கிஷ்ணன் அண்ணாத்தேய எப்பிடி மவுடர் பண்ணன்ற கதைய அவன் கைல சொல்லு தல. சாதாரணமா மவுடர் பண்ணிட்டு, ஆந்தரா வரேக்கும் போய், கேச நடத்தி எப்பிடி ஜெயிச்சுட்டு வந்தன்ற வெவரத்த அந்த பேமானிக்கு சொல்லு தல….
இன்னா மேரி கேரட்டர் தல நீ…. ஒன் தெகிரியம் என்ன… ஒன் தெறம என்ன… நேத்து பொறந்த பிள்ளக்கா பசங்கள்ளாம் ஒன்ன எதுத்து பாலிடிஸ் பண்றத பாக்கும் போது, கஷ்டமா கீது தல…
கருத்துக் கண்புன்னு ஒன்னு கீதாமே… ? அந்த கண்பு நடத்தி ஒனக்கு ஜனங்க கைலே ஆதரவு ஒன்யுமே கெடையாதுன்னு போட்டானுங்களே சோமாறி கேடி பெரதர்ஸ்… அவுங்களே ஒன்யும் பண்ணாம, அங்கே டூட்டி பாக்குற மூனு பேர, கைமா பண்ணியே தல…. அதுலேயே நீ எவ்ளோ பெரிய தில்லாலங்கடின்னு இந்த சோமாறிங்க புரிஞ்சுக்க வேணாம்.
அத்தக் கூட வுட்டுறலாம் அண்ணாத்தே… ஒங்க நைனா ரெண்டாவதா ஒன்ன கண்ணாலங் கட்டிகினு இட்டாந்தாரே… அதுக்கு ஒரு மவ இருக்குதாமே… அந்த மவ அடிக்கிற லூட்டியப் பாத்தன்னா மன்சே வெட்சுரும் தல… ஒன்ன யாரும் சேத்துக்க மாட்டேங்கிறாங்கன்னு, ரொம்ப ஃபீலிங்ஸ் ஆயி, நீ சோகத்துல ஒக்காந்துனுக்கீற… அத்தம்மாவோட மவோ, கனிமொயி, ஃபுல்லா டான்ஸ் ப்ரோக்ராம் பாத்துக்கினு கீது தல…
ஒன் தங்காசி கூட, கசுப்பருன்னு ஒரு பேமானி கீறான் தல… ஒன் தங்காசிய தாறுமாறா டான்ஸ் ப்ரோக்ராம்கெல்லாம் இட்டுனு போறது அந்த சோமாறி தான் தல… அவன கன்டி நான் நேர்ல பாத்தா, நெஞ்சுல கீற மஞ்சா சோத்த எட்த்ருவேன் தல…. ஆனா அவன் நல்ல நேரம் டபாஞ்சுகினே கீறான்.
நான் கூட ஒரு நாள் டான்ஸ் பாக்க போய்ட்டேன் தல… அங்க போனப்பொறம் தான் தெரிஞ்சுது, இந்த பேமானி ஊட்ல சிபிஐ ரெய்டு வுட்டாங்களாமே… அதுக்கப்புறமும், இந்த பேமானி டான்ஸ் ப்ரோக்ராம் நடத்றான்னா இன்னா தெகுரியம் இருக்கனும்…. ? எல்லாம் நீ கொடுக்கற எடம் தல… ஒன்னயும் கண்டுக்காம, மதுரையில போய் குந்திக்கினு, கோனார் மெஸ்சுல சோறு துன்னுனு கீற நீ….
இங்க என்னடான்னா ஒன் தம்பி, பூந்து கலாசிகினு கீறாரு. நீ பாத்து வள்ந்த பய இன்னைக்கு என்னடான்னா தொணை முதல்வருன்னு சீனப் போடுறாரு. ஆனா நீ இத்தயெல்லாம் கண்டுகிட மாட்டேங்கிற….
ஒங்கூட படா பேஜாராப் போச்சு தல.. ஒன்ன தலன்னு சொல்லிகினாவே வெளில அடி வுயும் போல கீது.. ஊர்ல எவ்ளவோ தலிவனுங்க இருந்தாலும், ஒன்ன மாதிரி வராதுன்ற ஒரே ரீசன் தான் தல.. ஒன் பின்னாடி இந்த லுச்சாப் பையன் நிக்குறான். நீ கன்டி வெளில வந்து ஒன் முளுத் தெறமையையும் காட்லனா, இந்த லுச்சாப் பையன் ஒன் பின்னாடி நிக்க மாட்டான் தல.
ஒங்க நைனா எப்போ பாத்தாலும், ஒன் தம்பிக்கே சப்போர்ட் பண்றாரு. அவர மட்டும் தொணை முதல்வர் ஆக்குறாரு. கச்சியில பொருளாளர் ஆக்குறாரு. ஆனா ஒன்ன மட்டும் வாயில நொழையாத தெம்மண்டல அமுக்குற செயலாளருன்னு ஏதோ புது போஸ்டா குட்து ஏமாத்தினு கீறாரு. நீ இத்தையும் கேக்க மாட்டேங்குற. பெர்சு இன்னும் எம்மாம் நாளுதான் ஒனக்கு இப்டி அல்வாவ கிண்டு குட்துக்கினே இருக்கும்னு தெர்லே… ஒன்ன சிஎம் போஸ்டுல ஒக்கார வெச்சு அயகு பாக்கறத உட்டுட்டு, பெர்சு இன்னான்னமோ கதையெல்லாம் உட்டுக்கினு கீது. நீயும் கேட்டுகினு கீற…
இந்த மாதிரி நீ மதுரையிலேயே குந்திக்கினு இருந்தேன்னா ஒன்ன ஏமாந்த சோனகிரியாக்கி, ஒன் தம்பியும், தங்காசியும், முந்திகினு பூடுவாங்க தல.. பொறவு நீ மதுரையிலேயே குந்திக்கினு ஜல்லிக்கட்டு வேடிக்கை பாத்துக்கினு இருக்க வேண்டியதுதான் தல… சட்டு புட்டுனு ஒரு முடிவ எட்து, பெர்சு கிட்ட என்னா ஏதுன்னு கேளு தல… இல்லாகாட்டி, ஒங்க நைனா சொல்ற மாதிரி ஒனக்கு இஸ்டரில எடம் வெக்க மாட்டாங்க தல..
இப்டிக்கு
வண்ணாரப்பேட்ட லுச்சாப்பையன்.