மயானத்திலிருந்து ஒரு அழுகுரல்.

You may also like...

5 Responses

  1. கலங்காதே மனமே!

    ”சுடுகாட்டு கூரை ஊழல் விவகாரத்தில், சென்னை, சி.பி.ஐ., நீதிமன்றம் இரண்டாண்டு சிறை தண்டனை விதித்துள்ளதால், ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்துள்ளேன்; அதற்கான கடிதத்தை, ராஜ்யசபா தலைவருக்கு அனுப்பியுள்ளேன்,” என, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள், தமிழக அமைச்சர் செல்வகணபதி கூறினார். தன் பதவியை, அரசு பறிக்கும் முன்பே, தானாக முன்வந்து, அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.

    இது குறித்து, தர்மபுரியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:இது, எனக்கு சோதனையான மற்றும் சவாலான காலம். சுடுகாட்டு கூரை ஊழல் தொடர்பான வழக்கில், எனக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனால், என் எம்.பி., பதவியை ராஜினாமா செய்து, ராஜ்யசபா தலைவருக்கு, இன்று (நேற்று) கடிதம் அனுப்பி உள்ளேன்.பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, பலர் மீது வழக்கு தொடர்வது வாடிக்கையாக உள்ளது. இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கை தொடர்வது வருத்தம் அளிக்கிறது.சுடுகாட்டு கூரை ஊழல் தொடர்பான வழக்கில், 21 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 323 அரசு தரப்பு சார்ந்த ஆவணங்கள் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.எதிர்தரப்பு ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நான், நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதிப்பவன். நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட, 71 சாட்சிகளில், ஒரு சாட்சிகள் கூட, நான் லஞ்சம் பெற்றதாக

    கூறவில்லை.இதே போல், எந்த ஆவணத்திலும் என் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குறிப்பிடப்படவில்லை. எனவே, சென்னை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.

    சுடுகாட்டு கூரைஅமைப்பது தொடர்பாக, அப்போதைய, ஜெயலலிதா அரசால் நிறுவப்பட்ட உயர்மட்ட குழுவின் படியே அத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், என் தன்னிச்சையான முடிவு எதுவும் இல்லை.நாகப்பட்டினத்தில் சுடுகாட்டுக்கு, கூரை அமைத்த ஊழலில், 23 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, என் மீது குற்றச்சாட்டு உள்ளது.ஒரு பணியை நிறைவேற்றும் போது, அப்பணியை கண்காணிக்க வேண்டியது, அதிகாரிகள் மட்டுமே. மதிப்பீடு குறைவாக இருந்தால், அப்பணி குறித்து அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.அமைச்சராக இருந்த போது, இத்திட்டத்தில் கையெழுத்து மட்டும் தான் போட்டேன்.கடந்த 2004ல், தலைமை செயலர் சங்கர், ‘சுடுகாட்டு கூரை அமைப்பது தொடர்பாக, யாரும் தவறு செய்யவில்லை’ என, கடிதம் எழுதியதால், பல மாவட்டங்களில், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.இவ்வழக்கில், எங்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களை பார்த்தால், உண்மை புரியும். இவ்வழக்கில், இழப்பீடு குறித்து மதிப்பீடு செய்ய, அரசுஅதிகாரிகள், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடப்பது, ஜனநாயகத்தில் உள்ள மிகப்பெரிய குறைபாடு.இந்த தீர்ப்பில் அரசியல் தலையீடு இருக்குமா என தெரியவில்லை. இவ்வழக்கில், என்னுடன் சேர்ந்த ஐந்து பேர் தண்டனை பெற்றுள்ளனர். நீதிமன்றமே, ‘இவ்வழக்கில் கூட்டு சதி இல்லை’ என, கூறிய நிலையில், ஐந்து பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இந்த ஒரு வழக்கை தவிர, என் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்கிலும், ‘நான் குற்றமற்றவன்’ என்பதை நிரூபித்துள்ளேன். இவ்வழக்கிலும், என் மீது குற்றம் இல்லை என்பதை உயர் நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன்.என் ராஜினாமா முடிவு குறித்து, கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளேன்.இவ்வாறு செல்வகணபதி கூறினார்.

    பணமும் சட்டத்தில் நுழையக்கூடிய ஓட்டைகளும் இருக்கும்வரை இந்த ஆடுகளை ஒன்றுமே செய்யமுடியாது.

    அப்படியே கருணாநிதி பேசியதுபோலவே செல்வகணபதியும் பேசி தன்னை பரிசுத்தமானவராக நிலைநிறுத்திக்கொண்டார்

  2. மீசைக்கார நண்பன் செல்வகணபதி அம்மாவின் நிழலில் நின்று சுடுகாட்டில் குளல் ஊதி சங்கம் வளர்த்தார். அம்மாவின் அனுக்கிரகம் இடம்மாறி அம்மணமானபோது நவக்கிரகங்களில் நிழல்க் கிரகமான சாயக்கிரகம் கருணாநிதியின் நிழலில் இளைப்பாறினார். இன்றையை சுற்றுவட்டத்தை அசுர குரு என்ற அம்மா சுவீகரித்துக்கொண்டபோது கால் யுகமான 18 ஆண்டுகள் கழித்து சுடுகாட்டின் அழுகுரல் அடக்கிவிட்டது மீசைக்கார நண்பனை சாயாக்கிரகம் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. மீசைக்கார நண்பன் நிர்வாணமாக்கப்பட்டிருக்கிறார். இருந்தும் அவர் நீதிக்கு மதிப்பளித்து வெளியேறுவதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் அவருக்கு இப்போ தேவையெல்லாம் ஏதாவது ஒரு கிரகத்தின் அரவணைப்பு அது காவியாக இருக்கலாம், கையாகவும் இருக்கலாம். கிரகங்கள் ஒரே இடத்தில் நிற்பதில்லை என்பதுதானே விதி

  3. Ji M says:

    Stll, regrets are there as by escaping of Mr,Sampath.
    Despite Mr.Uma Shakar’s recent Christianity activities, we salute him for his past achievements whihc are really brave.

  4. Joshua says:

    நேர்மையான அதிகாரிகளை எந்த அரசுமே விரும்புவதில்லை. அது திமுகவாக இருந்தாலும் சரி. அண்ணா திமுகவாக இருந்தாலும் சரி. கருணாநிதி ஒரு வேட்டி கட்டிய ஜெயலலிதா, ஜெயலலிதா ஒரு புடவை கட்டிய கருணாநிதி என்பது மறுக்க முடியாத உண்மை.

  5. இராமசாமி இளங்கோவன் says:

    ”………….ஆனாலும் பைத்தியக்காரப்பட்டத்தோடு பிடிவாதமாக நெருக்கடியிலும்,பிரச்னைகளின் நடுவிலும் வாழ்ந்தே தீருவேன் என்று இருப்பவர்களும் ……” (சஙகர், உமாசங்கர், சகாயம், சந்துரு, புகழேந்தி, இராதாகிருஷ்ணன், உபாத்யாயா) இருக்கத்தான் செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress