கலிங்கப்பட்டி வீரர் வைகோ தற்போது கமலாலயத்தில் சரண் புகுந்திருக்கிறார். அப்படியும் அவர் வெல்வதற்கான வாய்ப்புக்கள் குறைவே என்கின்றனர் விவரமறிந்தவர்கள். அப்படித் தோற்றாலும் அவர் ஏதாவது புதிய பாடம் கற்றுக் கொள்ளப்போகிறாரா என்ன? அதெல்லாம் எதுவுமே இல்லை. மோடி பிரதமராகிவிட்டால் அவர் புகழ் பாடிக்கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இலங்கைத் தமிழருக்காக உருகிக்கொண்டு, தொடர்ந்து கல்லா கட்டுவார் அவ்வளவே.
தமிழ்த் தேசியர்கள் ஒரு பகுதியினரும், புலம் பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினரும் வைகோவை தங்கள் நாயகனாக வரித்து அவர் முதல்வராகிவிடமாட்டாரா, மத்தியில் வலிமையான சக்தியாகிவிடமாட்டாரா, தமிழ் ஈழத்திற்கு, ஏன் தனித் தமிழ்நாட்டிற்கே உந்து சக்தியாகிவிடமாட்டாரா என ஏங்கலாம். ஆனால் அவருடைய அரசியல் அந்தஸ்து இனியும் உயர வாய்ப்பிருப்பதாகவே நான் நினைக்கவில்லை.
தொடக்கத்திலிருந்தே தன்னை ஓர் பெரும் ஈழ ஆர்வலராகவே காட்டிக்கொண்டு வந்திருக்கிறார். 1990 ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த திமுகவின் திருப்பு முனை மாநாட்டில் விடுதலைப் புலிகளைப் பற்றி உக்கிரமாக முழங்கினார். ஒரே கை தட்டல். வெறும் ஜம்பம்தான். வார்த்தை அலங்காரம்தான். ஆனால் தொண்டர்களுக்கு மயிர் கூச்செறிந்திருக்கும். இரண்டு நாள் நிகழ்வென்றால் முதல் நாள் இரவு இறுதிப் பேச்சாளர் இவர்தான். கருணாநிதிக்கு அடுத்து மிகப் பெரிய அளவில் திமுகவினர் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தவர் வை.கோபாலசாமிதான் என்றால் அது மிகையாகாது.
அருவியாகப் பொழியும் அவரது தமிழ், அவரது கம்பீரம், வேகம் அனைத்துமே பலரை ஈர்த்தது. அவருக்கு உரிய கௌரவத்தினை தொடர்ந்து கருணாநிதி அளித்து வந்திருந்தால், திமுக கலைஞர் குடும்ப நிறுவனமாக மாறாதிருந்திருந்தால், சரியோ தவறோ ஒரு நல்ல திராவிட அரசியல்வாதியாக அவர் உருவெடுத்திருக்கக்கூடும். ஆனால் கருணாநிதி யாரை வாழவிட்டார்?
89ல் வி.பி.சிங் அமைச்சரவைக்கு திமுக சார்பாக ஏன் வைகோ அனுப்பப்படவில்லை? மாறனுக்குத்தானே அந்த வாய்ப்பு? அந்த நேரத்தில் ஸ்டாலின் இளைஞரணித் தலைவராகிவிட்டிருந்தார். மற்ற தலைகளெல்லாம் அவருக்கு வாழ்த்துப் பா பாடத்துவங்கியிருந்தனர். அந்நேரத்தில் அவருக்கெதிராக, இணையாக இன்னொரு தலைவரா என மாமனும் மருமகனும் யோசித்திருப்பார்கள்.
முரசொலி மாறன் அறிவு ஜீவி என்பது உண்மை. ஆனால் அவருக்கும் கட்சிக்கும் எத் தொடர்பும் இல்லை, கருணாநிதிக்கு சகுனி வேலை பார்த்த்து தவிர. பின்னர் 1998ல் அ இஅதிமுக திண்ணையைக் காலி செய்தபோது, ஓடிச் சென்று திமுக அந்த இடத்தைப் பிடித்ததற்குக் காரணமும் மாறனே. அரசியலை நல்ல பிசினசாகப் பார்த்த மனிதர். அவரது புதல்வர்கள் அவர் விட்டுச் சென்ற பணியினைத் தொடர்கின்றனர்.
வைகோவிற்கு அப்போதே புரிந்திருக்கவேண்டும். தன்னை தலைவர் வளரவிடப்போவதில்லை என. ஆயினும் வேறு வழியின்றி கட்சியில் தொடர்ந்தார். அவரும் வேறு வழியின்றி இவரை ஒரு நட்சத்திரப் பேச்சாளராகப் பயன்படுத்திவந்தார்.
அப்பின்னணியில்தான் வைகோ இலங்கைக்கு இரகசியப் பயணம் மேற்கொண்டார். கலைஞர் எனக்குத் தெரியாது என்றார் முதலில், பின்னர் கண்டிக்கிறேன் என்றார், கட்சியிலிருந்து இடைநீக்கமும் செய்தார். இலங்கைத் தமிழர் போராட்டத்தைத் தீவிரமாக ஆதரிப்பதாக சொல்லிக்கொண்ட கருணாநிதிக்கு வைகோவின் பயணத்தில் என்ன பிரச்சினை? தன்னை தடாவில் உள்ளே தள்ளிவிடுவார்கள் என்றா? இல்லை வைகோவின் புகழ் கூடுகிறது. குருவை விஞ்சிய சீடனாகிவிடுவார், ஸ்டாலினைக் காலி செய்துவிடுவார் என்ற கவலையே.
அப்படியும் கட்சியை விட்டு வைகோ வெளியேறுவதாகத் தெரியவில்லை. வேறு என்ன செய்ய? விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து தன்னைக் கொல்ல சதி செய்தார் என்று அபாண்டமாக ஒரு பழியை சுமத்தி கட்சியிலிருந்து வெளியேற்றினார்.
காலடியில் விசுவாசமாக கிடக்கும் ஒரு ஜீவனாக இருப்பான் என்றுதான் அவனை வழக்கறிஞருக்குப் படிக்க வைத்து பின்னாளில் வைகோ என்ற கேரக்டராக உருவாக்கி வைத்தேன். இப்போது வளர்த்த கடா மார்பில் பாய்கிறது என கருணாநிதி பேராசிரியர் அன்பழகனிடம் அப்போது புலம்பியதாகச் சொல்வார்கள். ஒரு மக்கள் தலைவரின் எதிர்பார்ப்பைப் பாருங்கள். இப்படிப்பட்டவருக்கு விசுவாசமாக இருப்பதுதான் குற்றம்.
அந்த நேரம் வைகோவிற்குப் பரவலான ஆதரவு இருந்த்து. 8 மாவட்டச் செயலாளர்கள் அவர் பக்கம் நின்றனர். மதிமுக உருவானது.
அக்கட்டத்தில் 13 பேர் தீக்குளித்தனர். அப்போது வீர வசனம் பேசியதைத் தவிர அது போன்ற கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவோ அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவ்வோ வைகோ முன்வரவில்லை.
இடுகாட்டில் இரண்டு மணிநேரம் பேசுவார். இடம் பொருள் ஏவல் எதுவும் தேவையில்லை அவருக்கு. தன் முழக்கத்தைத் தானே கேட்கவேண்டும். அப்படி ஒரு காதல் தன் குரல் மீது.
மதிமுகவின் முதல் பேரணி சென்னையை உலுக்கியது. அப்படி ஒரு பிரம்மாண்டம். அப்போதும் புதிதாக அவர் எதையும் சொல்லிவிடவில்லை. வழக்கமான திமுக பாணி வழ வழா கொழ கொழா தமிழ்த் தேசியம்தான். ஆனாலும் பாதிக்கப்பட்டவர், திறமைசாலி சற்று வித்தியாசமாக இருக்க்க்கூடும் அவரது அரசியல் என்றே பலரும் நினைத்தனர். 1996ல் பிராந்திய தேசியங்களை சந்தேக் கண்ணுடனேயே பார்க்கும் சிபிஎம் மதிமுகவுடன் கூட்டணி அமைக்க முன்வந்தது. ஆனால் திமுக-தமாகா அலையில் மற்ற கட்சிகள் எதுவும் கரை சேரமுடியவில்லை.
விரைவிலேயே சிபிஎம் கூட்டணியும் முறிந்தது. அதன் பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்து வந்த வைகோவிற்கு 1998 உதவிக்கரம் நீட்டியது. பாரதீய ஜனதாவுடன் கை கோர்த்தார் ஜெ. ஒரு திராவிடக் கட்சி இந்துத்துவ அமைப்புடன் கூட்டணி அமைக்க முன்வந்தது ஒருவிதத்தில் புரட்சியே. நசிந்து வந்த காங்கிரஸ் தீண்டப்படக்கூடாத கட்சியாகக் கருதப்பட்ட பாஜகவிற்கு புத்துயிர் அளித்த்து உண்மை என்றாலும் துணிச்சலுடன் முதலடி எடுத்து வைத்த்து ஜெயலலிதாதான். பாமகவும் மதிமுகவும் பின் தொடர்ந்தன. நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அமைச்சர் பதவி தன்க்கு வேண்டாமென ஒதுங்குவதாகக் காட்டிக்கொண்டு செஞ்சியாரையும் எல்.கணேசனையும் அமைச்சர்களாக்கினார். அவ்விருவருமே அவருடன் இப்போது இல்லை. அந்த அளவு சக தலைவர்களின் நம்பிக்கையைப் பெற்றவர் வைகோ.
அது ஒரு புறமிருக்க எவரால் தனக்குப் பயன் விளையக்கூடுமோ அவர்கள் பின்னாலெல்லாம் கூச்சமில்லாமல் அலைந்து திரிபவர் வைகோ. எல்லோருக்கும் முன்னால் மோடிக்காக இப்போது குரல் கொடுத்தார் என்றால் அந்தக் காலகட்டத்தில் வாஜ்பேயியின் பரம விசுவாசி. சென்னையில் பிரதமர் செய்தியாளர்களை சந்திக்கிறார். இவரும் அந்த அறைக்கு வந்து தனி ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து வாஜ்பேயின் கருத்துக்களுக்கு ஆஹா, ஓஹோ சபாஷ், போட்டுக்கொண்டு முடிந்தவுடன் அவர் பின்னாலேயே செல்கிறார்.
திருநெல்வேலி மாநாட்டில் நீட்டி முழக்கிப் பேசுபவர் இவர் என்று தெரிந்திருந்தும் இவரது வாக்கு வங்கியை நன்கு அறிந்து வைத்திருந்ததால் ஜெ ராமதாசுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். ஊட்டியில் பேசும்போது வைகோ வைகோ என்று யாரோ சிலர் கூவ, வைகோவை கேட்க இங்கு ஏன் வந்தீர்கள் என்று பகிரங்கமாக கடுப்படித்துவிட்டு, பின்னர் வைகோவின் பிரச்சாரக் கூட்டத்தையே புறக்கணித்தார் ஜெயல்லிதா. எல்லாவற்றையும் துடைத்துப்போட்டுவிட்டு அவரது கூட்டணியிலிருந்தவர், ஜெ பாஜக கூட்டை முறித்துக்கொண்டபோது உடன் செல்லவில்லை. மத்திய ஆட்சியில் பங்கு பெறுவதால் கிடைக்கும் பயன்களை ஏன் தியாகம் செய்யவேண்டும்? மதிமுக, பாமக, வாழப்பாடியின் தமிழக ராஜீவ் காங்கிரஸ் ஆதரவை திரும்பப் பெற மறுத்தன. 1999ல் திமுக தலைமையில் உருவான கூட்டணியில் இடம் பெற்றன. வைகோவிற்குக் கூச்சம் எதுவுமில்லையே, கலைஞருக்கும்தான்.
தேர்தல்களில் வாழப்பாடி தோற்றார். ஆனால் மதிமுக 4 தொகுதிகளிலும், பாமக ஐந்திலும் வென்றன. அவர்கள் பிசினஸ் செவ்வனே தொடர்ந்த்து.
தன்னுடன் வந்த மாவட்ட செயலாளர்களுக்கு இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் உள்பட பல நிறுவனங்களில் கேஸ் ஏஜன்சி ,பெட்ரோல் பங்க் என்று வைத்து கொடுத்து செட்டிலாக்கிவிட்டார். அப்படியானால் இவர் எவ்வளவு செட்டிலாகியிருப்பார் என்பதை கற்பனை செய்துகொள்ளலாம். 2003ம் ஆண்டில், செஞ்சி ராமச்சந்திரனின் உதவியாளர், 4 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கையும் களவுமாக பிடிபட்டார். செஞ்சியார் அமைச்சரவையிலிருந்து விலக நேர்ந்தது. செஞ்சியார், வைகோவுக்கு தெரியாமல் வசூல் வேட்டையில் ஈடுபட்டார் என்பதை நம்புவதற்கில்லை.
முல்லை பெரியார் பிரச்சினையில் நடைப் பயணம் சென்று அணையை மீட்கப்போவதாக போக்கு காட்டினாரே அதிலும் வியாபாரம் இருக்கிறது வைகோவின் குடும்பம் மற்றும் அவரது பினாமிகள் பெயரில் கம்பம் பள்ளதாக்கில் ஆயிரக்கணக்கில் முந்திரித் தோட்டமும், வயல்களும் இருக்கின்றன. ஆக அப்பயணமும் மக்களுக்காக இல்லை சுயநலனுக்காகவே.
ஹிந்துஸ்தான் லீவர் லிமிடேட் நிறுவனத்தில் விற்கப்படும் சோப்பு முதல் பிஸ்கட் வரை எல்லாமே வைகோவின் மகன் வையாபுரிதான் இலங்கை பிரச்சனை உச்சகட்டத்தில் இருந்து ஈழத்தில் உயிர்கள் கொல்லப்பட்ட சமயத்தில் கூட இலங்கைக்கு கள்ளத்தனமாக மளிகை பொருட்களை அதிக விலைக்கு அனுப்பி வைத்தவர்கள் இவர்கள்.
தென் மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் விடுதலை புலிகளுக்கு பெட்ரோல் தேவை படுகிறது என்று மிரட்டியும், இயல்பான அனுதாபத்தைப் பயன்படுத்தியும், நூற்றுகணக்கான லிட்டர் எரிபொருள்களை வாங்கி சென்று விடுதலைப்புலிகளிடம் நான்கு மடங்கு தொகைக்கு விற்றவர்கள் வைகோவிற்கு மிக நெருக்கமானவர்கள்.
வைகோவின் ’தனிச் சிறப்பம்சம்’ அவரது தமிழ்த் தேசியம்தான். மேற்குறிப்பிட்ட வணிக அம்சங்கள் போக வேறு பல விஷயங்களிலும் அவர் நேர்மையாக செயல்படவில்லை. கருணா பிரச்சினையின் காரணமாக விடுதலைப் புலிகள் பெரும் பின்னடவை சந்தித்து வந்த பின்னணியில்தான் அவர்கள் மணலாற்றில் போரை மீண்டும் துவக்குகின்றனர்.
தங்களின் இறுதிப்படலமும் துவங்கிவிட்டது என்பதை அவர்களே உணரவில்லை, இலங்கை அரசும் கூட.
அவர்களை எளிதில் வெற்றி கொள்ளமுடியும் அவர்கள் பின்வாங்குவர், அவர்களிடம் போதுமான ஆயுதங்கள் இல்லை என்பதை அப்போதுதான் தான் உணர்ந்த்தாக மஹிந்த ராஜபக்சே பின்னர் கூறினார்.
உண்மையிலேயே விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் அக்கறை கொண்டிருந்தவர்கள் ஏன் அந்தப் பின்னடைவு, அதிலிருந்து மீளமுடியுமா, மீள்வதானால் என்ன வழி என்பது பற்றி தீர ஆராய்ந்திருக்கவேண்டும், விடுதலைப் புலிகளின் தலைமையுடன் விவாதித்திருக்கவேண்டும், 9/11க்குப் பிறகு பன்னாட்டரசியல் தலைகீழாய் மாறியிருக்கிறது, புதிய ஆயுதங்கள் புலிகளைச் சென்றடையக் கூடாதென்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது என்றெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கவேண்டும்.
மாறாக மணலாறு மோதல்கள் போது துவங்கிய ’எழுச்சிமிகு’ ஆர்ப்பாட்டங்கள், தோள் தட்டுதல் முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது. எல்லாம் முடியப்போகும் தருணத்தில் “தம்பி பிரபாகரன் மீது ஒரு துரும்பு விழுந்தாலும் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும்…நம் தம்பிமார்கள் கடல் கடந்து அங்கே சென்று போரிடுவார்கள்…” என்றெல்லாம் வைகோ முழங்கினார். இவர் மகனையோ உறவினர் எவரையுமோ போர் முனைக்கு அனுப்பிவைத்த்தாகத் தகவல் இல்லையே.
காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையே உண்ணா நோன்பிருந்த பெருந்தகைக்கும் வைகோவிற்குமிடையே என்ன பெரிய வேறுபாடு? ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை நாடகம் அவ்வளவுதான்.
இன்னுஞ்சொல்லப்போனால் வைகோவின் துரோகம் இன்னமும் கொடுமையானது. 2009 தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுவிடும் அப்புறம் இந்திய ஆதரவு உறுதி, தனி ஈழமும் உறுதி, எனவே போர் நிறுத்தம் வேண்டாம் என வைகோ தகவல் சொல்லி அனுப்பியதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
பொடாவில் கைதாகி சில மாதங்கள் சிறையில் இருந்துவிட்டால் தியாகி ஆகிவிடுவாரா? பொடாவில் அவரை சிறையில் தள்ளிய அதே ஜெவிடம் தானே பின்னாளில் சரணடைந்தார் ? ராமதாஸ் போலவே இவருக்கும் கொள்கை என்பது எதுவும் கிடையாது. எல்லாம் ஒரு ஸ்டண்ட்தான் என்பதுதானே இன்று பொதுக்கருத்தாக இருக்கிறது?
சேதுசமுத்திரம் ஆ ஊ என்றார். இப்போது அது சுற்றுச்சூழலுக்கு எதிரானது எனக் கண்டுகொண்டேன் என்று மழுப்பி முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டார். கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து மணலில் புதைந்து போஸ் கொடுத்தவர் இப்போது அது பற்றி பேசுவதே இல்லை.
ஆனால் இவர் மூச்சுவிடாமல் இவர் பேசும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கூட இதுவரை பாரதீய ஜனதா ஏதாவது உத்திரவாதம் அளித்திருக்கிறதா அம்மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க ? குறைந்த பட்சம் தமிழக மீனவர்களைக் காக்க, இதை இதை செய்வோம் எனக் கூறியிருக்கிறதா? ஊழல் ஒன்றில் சிக்கி அவமானப்பட்ட நிதின் கட்காரியை அழைத்து உள்ளூரில் பல்வேறு பெண் பிரச்சினைகளில் சிக்கியிருக்கும் இல.கணேசனுக்கு வோட்டு கேட்க மதிமுக கூட்டம் போடுகிறது. இவரது தார்மீக நெறிகள்தான் என்ன?
ஆலயத் திருப்பணி மகான் என சிவந்தி ஆதித்தனைப் புகழுகிறார். ஆலயத் திருப்பணியைப் பற்றி ஒரு திராவிட இயக்கத் தலைவர் ஏன் கவலை கொள்ளவேண்டும்?
தனது ஊழியர்களை அடிமைகளாக நடத்துவார் சிவந்தி. சி.பா தொடங்கி என்னவெல்லாம் அவலங்கள் அங்கே அரங்கேறுகின்றன என்பதற்கு தனி ஆய்வு தேவை…அப்படியிருக்கையில் ஏன் இப்படி வைகோ நெகிழ்ந்துபோகிறார். விருது நகர் நாடார்கள் ஓட்டு வேண்டுமே. அவ்வளவுதான். கடைந்தெடுத்த ஒரு பிழைப்புவாதி.
இவரது செல்வாக்கு இவர் சார்ந்த ரெட்டியார்/நாயக்கர் சமூகத்தினர் மத்தியில்தான். 90களில் குறிஞ்சாக்குளம் தலித் இளைஞர்கள் நால்வர் படுகொலை செய்யப்பட்டனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு வைகோவின் உறவினர்களே அடைக்கலம் கொடுத்திருந்தனர். வைகோ படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்கவில்லை.
விருதுநகர் பகுதியில் ஒரு முறை தலித்துக்கள் தாக்கப்பட்டபோது நான் வைகோவின் அன்றைய ஆலோசகரிடம் கண்டன அறிக்கை விடுமாறு கேட்டுக்கொண்டேன். அப்படிச் செய்தால் தலித் மக்கள் மத்தியில் வைகோவின் செல்வாக்கு கூடும் என்றும் ஆசை காட்டினேன். அவரா ஏமாறுவார் ? அவரது பதில்: “நீங்கள் சொல்வது சரிதான்..வரப்போறத நெனச்சி இருக்கிறதை வுட்றக்கூடாதில்ல…நம்ம ஆளுங்க கோவிச்சிக்கிருவாங்க…” இன்று வரை தலித்துக்களுக்கு ஆதரவாக வைகோ குரல் கொடுத்ததே இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ராம்தாஸ், கொங்குமண்டலத்தார் கட்சி, அப்புறம் அகில இந்திய அளவில் சாதி இந்துக்களின் நலனை முன்னிறுத்தும் பாஜக இவற்றுடன் சரியாகத்தான் கரம் கோர்த்திருக்கிறார் வைகோ.
யாரும் கேட்காதபோதே, எல்லோரையும் முந்திக்கொண்டு, பாஜகவுடன் கூட்டணி, கோத்ரா நாயகரே இந்தியாவின் நாயகர் என அறிவித்தார். ஆனால் விஜயகாந்துடன் பேரம் படியாமல் மற்றவர்களுடன் இல்லை என்பதில் தமிழக பாஜகவினர் உறுதியாகவிருந்தனர். வைகோவின் செல்வாக்கு மீது அவ்வளவு நம்பிக்கை.
தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது வைகோ 12 இடங்கள் வேண்டுமென்கிறார். அப்போது “பெரியார் செருப்படி” புகழ் ஹெச்.ராஜா சிரித்துக்கொண்டே பதிலளிக்கிறார்: ” உங்களுக்கு சீட் ஒதுக்குவது பிரச்சனை இல்லை ஆனால் உங்களிடம் அவ்வளவு வேட்பாளர்கள் இருக்கிறர்களா? …” அதற்கும் வைகோ ஆத்திரப்படவில்லையே. ஆ ஊ என எகிறவில்லையே. அவர்தான் நல்லவராயிற்றே. எவ்வளவு அடித்தாலும் தாங்குவாரே…உடல் முழுதும் விழுப்புண்கள்தானே.
சமீபத்தில் பல சர்வே முடிவுகள் விருதுநகரில் வைகோ தோற்று விடுவார் மூன்றாவது முறையும் என்று சொல்லிவரும் நிலையில், வைகோ அதற்கெல்லாம் கலங்கியதாகத் தெரியவில்லை ஏன் என்றால் அவர் தோற்றாலும் எப்படியாவது எங்கிருந்தாவது மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்படுவார் என உறுதியளிக்கப்பட்டிருக்கிறதாம். இந்த பேரத்தில்தான் வைகோவின் கருப்பு துண்டு மீண்டும் காவித் துண்டு ஆனது.
கமலாலயத்தோடு நிற்கவில்லை சரணாகதிப் படலம். கொள்ளை அடித்த கோடிக் கணக்கான சொத்துக்களின் அதிபர் என்பதைத் தாண்டி எவ்வித அந்தஸ்துமே இல்லாத அழகிரியை மதுரை சென்று சந்தித்தார், எவ்வித அழைப்பும் இல்லாமலேயே. இதே வைகோதான் தா கிருட்டினன் கொல்லப்பட்டபோது அழகிரியைக் கடுமையாகத் தாக்கி, அவருக்குக் கொலைகாரன் பட்டமும் கொடுத்தவர்.
வைகோ அழகிரியை சந்தித்து விட்டுச் சென்ற அடுத்தநாளே மதுரை முழுதும் ”தா.கி.யை கொன்ற கொலைகாரனை வீடு தேடி சென்ற வைகோவை புறக்கணிப்பீர், அகமுடையார் சமுதாய மக்களே ,சிந்திப்பீர்” என்று போஸ்டர் ஒட்டபட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் போஸ்டர் ஒட்டியவர்களின் கைகளைப் பிடித்து கெஞ்சி ஒட்டிய போஸ்டர்களை கிழிக்க வேண்டியதாயிற்று.
இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத அரசியலால் வைகோ தொடர்ந்து தொண்டர்களை இழந்து வருகிறார். ஓபிஎஸ்சிற்கு இருக்கும் அளவிற்கு கூட தொண்டர்கள் இல்லை அவருக்கு. அனுதாபிகள், இரசிகர்கள்
இருக்கலாம் எல்லா கட்சிகளிலும். ஆனால் கட்சித் தொண்டர்கள் வெறுத்து ஒதுங்கிவிட்டனர். இன்னும் சில காலம் சென்றால் வெறும் அறிக்கை விடும் தலைவனாக மட்டும் இருப்பார் வைகோ என்று அவரது நலம் விரும்பிகள் சிலர் புலம்புகின்றனர்.
த.நா.கோபாலன்.
TNG sir, what a great article with facts… such a cheap politician is vai. goapalswami… krr thuuuu
The author is biased. Vaiko is a good man. He is qualified and honest. He may not be a successful politician but good human being. It is a known fact that every other politician in Tamilnadu is corrupt with stolen wealth, but not Vaiko. Good people in Tamilnadu politics is a rare commodity. Vaiko is one among the rarest of the rare. Let us not malign and lose him.
why not even a single proof for this article, and no proof in previous article about viko.
மற்றவர்களை பற்றி எழுதும் போது ஆதாரத்தோடு எழுதிய சவுக்கார் வைகோவை பற்றி எழுதும்போது மட்டும் பொத்தம் பொதுவாக எழுத வேண்டிய காரணம் என்ன?வைகோவை களங்க படுத்தத வேண்டும் அது தானோ உங்கள் நோக்கம்?
I lost respect to Savukku.
Vaiko is a good man.
May be Vaiko is not cunning politician but a good man.
Vaiko did not earn any money from politics.
The article is correct.but the feedbacks shows that people still believe vaiko.he has joined in the alliance where four divisions of people in the name hinduism is justified.in 2009 he is also one of the politicians who use eelam issue as one of the election tools.as an MP why not he started indefnite hunger strike before parliment. PEOPLE doesnt know that he tried to mr natesan to release statement in favour of MDMK
Savukku has changed it’s face i feel..
ஆர்கிமிடீஸ் போல புதிதாக ஒன்றை கண்டு பிடித்து விட்ட துள்ளலோடு ஒரு வித எள்ளலும் மலிந்து நிற்கும் பதிவு இது! கொள்கைக்காக அரசியல் செய்த காலம் எல்லாம் என்றோ மலையேறிப் போய்விட்டது என்பதை சவுக்கு இன்னும் உணரவில்லை போலும்! சமரசம் செய்து கொண்டு கொள்கைகளை நீர்த்துப் போக செய்தது என்னமோ வைகோ ஒருவர் மட்டும்தான் என்கிற தொனியே தவறு. 1999 இல் ஊழல் ராணியை ஒழிக்க மதவாத சக்திகளோடு கூட்டணி காண்கிறோம் என்று முரசொலி மாறன் பாஜகவுடன் உறவை நியாயப் படுத்தியதெல்லாம் மறந்து விட்டு வைகோவை இப்படி சாடுவானேன்? காங்கிரசை ஒழிக்க கிளம்பிய கட்சி அதோடு 7-8 வருடம் கட்டிப் புரண்டு உறவாடவில்லையா, பதவி சுகம் காணவில்லையா? எல்லோருமே விலை போன சூழலில் குற்றமற்ற நபர்கள் இருந்தால் அவர்கள் முதல் கல்லை வீசட்டும்! திருக் குவளையில் பிறந்து விட்டு , ஈரோட்டில் ஞான ஸ்நானம் செய்விக்கப் பட்ட பின்னர் மத வாதம் பேசும் இஸ்லாமிய அமைப்புகளுடன் திராவிட இயக்கங்கள் உறவு வைத்து கொள்ளும்போது உங்களைப் போன்றவர்கள் வாயடைத்துப் போய் அதை விமரிசிக்க முற்படாதது ஏனோ?
Well said
@சவுக்கு: அடங் கொய்யால, உன்னயெல்லாம் நல்லவன்னு நெனைச்சு இத்தனை நாள் படிச்சதுக்கு இது தேவைதான். அவரது அரசியல் முடிவுகளில் பிழைகள் இருக்கலாம், ஆனா அது அவர் கட்சியோட காலத்தின் கட்டாயம். மற்றபடி, அப்பட்டமான இட்டுக்கட்டிய, ஆதாரமில்லாத பதிவு. A big Bye Bye!!
Wonderful and brilliant analysis of this hypocrite and businessman thirutu vai ko. Please shed more about dinamalar and dinathanthi family. Just now I heard from a dinamalar employee that all the employees were told to attend work on election day. Most of them were forced to come and some did. Please enquire and confirm about this news.
Thanks for the well cooked story, Please add few forgery documents as you do always so that it may add value! Last but not least even today his facebook followers has crossed 100K, so work hard to spoil his image.Do your best for the money you took for this assignment! And Don’t ever behave like a human being else you have to use Savukku against you.
Everybody body has their own price
****** Understood Savukku sold out for a good price now**********
சவுக்கை சீரியஸா எடுத்துக் கிட்டா ஒரு தலைவர் கூட தேறமாட்டார்; அப்புறம் அரசியலும் பேச முடியாது. எல்லாப் பயலுகலுமே மோசம் என்று வீட்டோட முடங்கிப் படுக்க வேண்டியதுதான்! பாஜகவோடு கூட்டு சேர்ந்தது தான் உங்களை இவ்வளவு பாடு படுத்துது என்கிறது நல்லாவே தெரியுது! Totally disappointed with your approach. very baised!
I am a greatest fan of savukku, but this article simply blaming vaiko with out any evidence.
but Now i am having doubt of savukkus previous articles. whatever you say i wont believe.
vaiko is a good person as far as i know about him.
stop all your nonsense
//இன்னுஞ்சொல்லப்போனால் வைகோவின் துரோகம் இன்னமும் கொடுமையானது. 2009 தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுவிடும் அப்புறம் இந்திய ஆதரவு உறுதி, தனி ஈழமும் உறுதி, எனவே போர் நிறுத்தம் வேண்டாம் என வைகோ தகவல் சொல்லி அனுப்பியதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.//
I think this is true. i read some were else also
True One..
No would say Vaiko is a perfect leader. In fact, no one even in this world. We choose a better leader among what we got. Vaiko undoubtedly is the best. Your article has a tone of accusing rather than analysing his weaknesses and strengths. Disappointed with you.
@Savukku, why not even a single proof for this article, and no proof in previous article about viko.
Look like very intention,
Peter
வைகோ,பிஜேபி க்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்த பின்பே சவுக்கின் மாற்றம் தெரிந்தது.ஏதோ காழ்புணர்ச்சியில் புணரப்பட்ட வைகோ விற்கு எதிராக தொகுப்பு அல்ல!. அவர் அங்கம் வகிக்கும் பஜேபி பிக்கு எதிரான கோபம். நீங்கள் கூறும் எதிலும் ஆதாரம் இல்லை. பொத்தாம்பொதுவாக குறை கூறுகிறீர்கள். ஸ்கேன் காப்பி எல்லாம் அட்டாச் செய்வீர்களே!!இவர் விசயத்தில் எதுவும் கிடைக்க வில்லையா ? தேடினாலும் கிடைக்காது, ஏன் என்றால் அவரிடம் கரை இல்லை.
1. முந்திரி தோப்பு இவர் பெயரிலோ அல்லது இவர் பினாமி பெயரிலோ உள்ளது என்றால் ஆதாரம் எங்கே?
2. அவரது மகன் பெயரில் ஏஜென்சி உள்ளது என்றால் ஆதாரம் எங்கே?
3. தருமபுரி சம்பவமானாலும் சரி, பரமக்குடி கலவரமானாலும் சரி முதலில் பாதிக்கப்பட்டவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் மருத்தவ உதவியும் செய்தது வைகோ.
4. தனி ஈழம் ,அணு உலை, சேது சமுத்திர திட்டம், பொது சிவில் சட்டம் என தனது நிலைபாட்டை இப்போதும் பிரசார கூடங்களில் வலியுறுத்து தான் வாக்கு கேட்கிறார் .தேர்தலுக்காக கொள்கைகளை மறந்து வாக்கு கேட்கவில்லை.
5. கருத்து கணிப்பில் வைகோ விற்கு 3-ம் இடம் தந்து, ” மீசைக்கார கோபாலுடன் சவுக்கை இணைத்து விட்டீர்களே !! இது மிகவும் அபத்தம்!!
” சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி ”
நன்றி !!
KG.வெங்கடேஷ்
எல்லாரையும் பற்றி ஆதாரத்துடன் எழுதுவீர்களே, வைகோ பற்றி மட்டும் அவருக்கே இவ்வலவுன்னா, இவருக்கு எவ்வளவு சம்பாரிச்சிருப்பார்னு சொல்ர்ரிங்க. ரெம்ப தப்பா இருக்கே. நீங்க சொலறத நம்புற வாசகர்கள்னா, குமுதம் விகடனுக்கு ஆயுள் சந்தா கட்டிட்டு ஹாயா படிச்சிட்டு இருந்திருப்பமே. உண்மையைத்தேடி இங்க வரவேண்டியதில்ல்லை. நீங்க எங்களை ஏமாற்றம் அடையசெய்துவிட்டீர்கள்.. எனக்கு தேனி மாவட்டம் தான். அவர் பினாமி யார், எங்க சொத்து இருக்குன்னு சொல்லுங்க, கலைஞர் குடும்பத்தை பத்தி அக்கக்கா சொன்னீங்களே அதுமாதிரி. அப்புறம் ஹிந்துஸ்தான் லீவர் வைகோ மகனோடதா? சொல்லவே இல்லை? அரசியலுக்கு வந்தா வாரிசு அரசியல்ம்பீங்க. தொழில் பண்ணாலுமா? ஆதாரத்தோட பேசுங்க சவுக்கு, அவன் மேல தூ ந்னு நானே துப்புறேன்.
இதை படித்த பிறகு சவுக்கு மீதான நம்பிக்கையும், மதிப்பு குறைகிறது. . Not on Vaiko.
According to savukuu, only aravind kejriwal is the honest person. why savukku you are not writing anything about AAP
Savukkin tharam melum melum kuraindhu konde pogirathu. In valuable article. My rationg for this article is “ZERO”.
To be honest, Vai. Gopalaswami is a shame.
Savukkin tharam melum melum kuraindhu konde pogirathu. Invaluable article. My rating for this article is “ZERO”.
Savukkin tharam melum melum kuraindhu konde pogirathu. In valuable article. My rationg for this article is “ZERO”.
சவுக்கு சங்கர், நம்பகத்தன்மை இழந்த உன் முகத்தை இப்போது பார்க்க வேண்டும். தேர்தலுக்கு சரியாக 4 நாட்களுக்கு முன்பு இப்படி ஒரு கட்டுரை. கலைஞர் உடம்பிற்கு முடியாமல் தேவைப்படும் நேரத்தில் மருத்துவமனையில் படுத்துக் கொள்வது போல. இந்த மாமா வேலை பார்க்க எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? அல்லது எத்தனை வழக்குகளை திரும்பப் பெறுவதாக உறுதி அளித்துள்ளார்கள்? குடும்பஸ்தானாகி விட்ட பிறகு…நேர்மையாவது, வெங்காயமாவது. பிறந்த பிள்ளைக்கு காசு சேர்க்க ஆரம்பித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
Hi Mr.Savukku Why don’t you write abt congress ?
I have been following VAIKO for the last two decades and this is very accurate depiction of him. Now I support Seeman.
அட ங்கொய்யால,இதுக்கு எதுக்குய்யா வெள்ளை வேட்டி,கருப்புத்துண்டு?
Its true his district secretaries get the BPCL & IOCL agencies. He is an caste based politician in Virudhunagar. Its shame when he met Alagiri for 200 add votes in Thirumungalam and Thirupurangundram constituency. I am from Virudhunagar constituency.
vaiko 98 -04 varai bjp kootaniyil thaan irunthar enbathu savukkuku theriyatha.savukku congress matum admk vai vimarsikathathu savukku yaarukku jalra enbathu thelivaga therigirathu. neutrala irupavan pechu thaan edupadum illai alaiyoda odanum.online hits ipothu kurainthirukume apothe unaku therinthiruka vendum.thittum kooda vanthirukkum.pavam savukku
வணக்கம் சவுக்காரே!!!
நன்றி தகவல்களுக்கு….அடுத்த தலிவர் யாரை பற்றி எழுத போறீர்கள்…ரொம்ப ஆவலா இருக்கு…அப்படியே மசாலா படம் பார்த்த திருப்தி…. கொஞ்சம் ரொமான்ஸ் தான் கம்மி…. உங்க ஆளைப்பற்றி எழுதுங்கள் ரொமான்சுக்கு பஞ்சமிருக்காது.நன்றி வணக்கம்.
வணக்கம் சவுக்காரே!!! நீங்க நல்லவரா அல்லது கெட்டவரா????
Last election u spport vaiko and balmed jaya for not gave any seat to his party. Adhu appo NARA VAYA???????? In india we can trust any politician but not pree pros!!!!!
சவுக்கை படிபவர்கள் அப்படியே அதனையும் நம்பும், முரசொலி அல்லது நமது எம்.ஜி.அர் வாசகர்கள் அல்ல. நீங்கள் சொல்லுவது எந்த அளவு உண்மை என்பதை பகுத்தறிய திறமை உள்ளது. மேற் கூறிய பத்திரிக்கைகள் தரத்துக்கு சவுக்கு செல்லவேண்டாம் என சவுக்கின் மேல் அக்கறை உள்ள வாசகன் என்ற உரிமையில் கேட்டுக் கொள்கிறேன்
எந்த புற்றில் எந்த பாம்பு என்று நம்பமுடிவதில்லையே !
மற்றவர்களை பற்றி எழுதும் போது ஆதாரத்தோடு எழுதிய சவுக்கார் வைகோவை பற்றி எழுதும்போது மட்டும் பொத்தம் பொதுவாக எழுத வேண்டிய காரணம் என்ன?வைகோவை களங்க படுத்தத வேண்டும் அது தானோ உங்கள் நோக்கம்?
Correct. For all others Savukku is giving proof. But for Vaiko there is no proof. I am following Savukku for a long time. But this article create doubts in its creditability.
பாரதிய ஜனதா கட்சிக்கு தி மு க மறைமுக ஆதரவாமே!
சவுக்கிற்கு விபரம் தெரியுமா?