அமைச்சரவை குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற சட்டம் மற்றும் நீதித்துறையின் பரிந்துரையை ராசா புறந்தள்ளியதற்கு வலுவான காரணம் இருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்குவதற்கான கடைசித் தேதியை 25.09.2007 என நிர்ணயிக்க வேண்டுமென்று, ராசா முடிவெடுத்த உடனேயே, பல்வேறு நகரங்களுக்கு வழங்க வேண்டிய ஸ்பெக்ட்ரம், சில இடங்களில் மிகக் குறைந்த அளவே இருப்பதாலும், தொலைத் தொடர்புத் துறை கொள்கை 99க்கு எதிராக இருக்கும் என்பதாலுமே, தொலைத் தொடர்பு அலுவலர்கள் ஸ்பெக்ட்ரம் இருப்பை பரிசீலிக்க வேண்டும் என்று ராசாவிடம் சுட்டிக் காட்டினர். அவர்கள் அவ்வாறு கவலை தெரிவித்ததற்கான காரணம், பல மாநிலங்களில் புதிய விண்ணப்ப தாரர்களுக்கு வழங்குவதற்கான ஸ்பெக்ட்ரம் இருப்பில் இல்லை என்பதே. உதாரணத்திற்கு, மிக மிக அதிக வருவாயை ஈட்டித் தரக்கூடிய டெல்லி மாநகரத்தில் ஒரே ஒரு நிறுவனத்திற்கு வழங்க மட்டுமே ஸ்பெக்ட்ரம் இருப்பில் இருந்தது. குஜராத் மாநிலத்தில் இரண்டு. ராஜஸ்தானில் சுத்தமாக இருப்பில் இல்லை. ஹரியானா மாகாணத்தில் ஒன்றே ஒன்று. காஷ்மீர், வடக்கு மற்றும் தெற்கு உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம் மற்றும், வட கிழக்கு மாகாணங்களில் தலா இரண்டே இரண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு மட்டுமே ஸ்பெக்ட்ரம் இருப்பில் இருந்தது. இதை கருத்தில் கொண்டே, தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
25.10.2007 அன்று, அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலர், குறைந்த பட்சம், ட்ராயின் கருத்தைக் கேட்டாவது முடிவெடுக்கலாம் என்றும், ஒவ்வொரு மாநிலத்திலும், ஸ்பெக்ட்ரம் எவ்வளவு உள்ளது என்பதையும், பல மாநிலங்களில் கையிருப்பு மிகக் குறைவாக உள்ளது என்பதையும் ராசாவின் பார்வைக்கு, சுட்டிக் காட்டி அலுவலகக் குறிப்பு ஒன்றை வைக்கிறார். பின்னாளில் அளித்த ஒரு பேட்டியில், அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் டி.எஸ்.மாத்தூர் தெரிவித்தது என்ன தெரியுமா ?
“மே 2007ல் மந்திரியாக ஆனதும், ராசா என்னை அழைத்தார். ‘சார் குறைஞ்சது 500 லைசென்ஸாவது குடுக்கனும். என்ன பண்ணலாம்னு சொல்லுங்க’ என்று கூறினார். அதற்கு மாத்தூர், ஸ்பெக்ட்ரம் அந்த அளவுக்கு இல்லை. கொடுக்க இயலாது என்று தெரிவிக்கிறார். உடனே ராசா ‘லாஸ்ட் டேட்ட மாத்திட்டா குடுக்கலாம்ல ?’ என்று எதிர்க் கேள்வி போடுகிறார். அதற்கு மாத்தூர், இது இயற்கை நீதிக்கு எதிரானது. 1 அக்டோபர் 2007 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் கடைசித் தேதியை மாற்றுவது என்பது தவறானது அதனால் அவ்வாறு செய்ய இயலாது” என்று கூறுகிறார். மாத்தூர் இவ்வாறு மறுத்ததும், அவர் விடுப்பில் சென்ற ஒரு நாள் அன்று, தொலைத் தொடர்புத் துறை கமிஷனின், தொழில்நுட்ப உறுப்பினராக இருந்த ஸ்ரீதரன் என்பரிடம் கையெழுத்து வாங்கி விடுகிறார் ராசா….
இது போல ராசாவுக்கு, பல்வேறு எச்சரிக்கைகள் விடப்பட்டன. பல்வேறு மட்டங்களில் அதிகாரிகள், ராசாவின் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டே வந்தனர்.
ராசா எச்சரிக்கையை சட்டை செய்பவரா என்ன ? பெயருக்கேற்றார் போல எதேச்சதிகாரமாக செயல்பட்டார். தகத்தகாய கதிரவனல்லவா ? 02.11.2007 அன்று, 25.09.2007 அன்று வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் படும். அதுதான் கடைசித் தேதி என்று முடிவெடுக்கிறார். இந்த முடிவின் முக்கியப் பின்னணி, 25.09.2007 அன்று கடைசி தேதி என்று முடிவெடுத்தால், டெல்லியில் உள்ள ஒரே ஒரு நிறுவனத்துக்கான ஸ்பெக்ட்ரம், ராஜாதி ராசாவுக்கு நெருக்கமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு கொடுக்க இயலும்.
இப்படி சட்ட திட்டங்களை மீறி, இஷ்டத்துக்கு தேசத்தின் சொத்தை விற்ற ராசா, பல கோடிகளுக்கு அதிபதியாக இருந்த ராசா, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் யுனிடெக் மற்றும் ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகளின் பிணை மனு விசாரணையில் இருந்த போது, இரண்டு மாதம் சிறை உணவை உண்டு நாக்கு செத்துப் போனதால், சிக்கன் கபாப் வாங்கி வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்ததும், விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, மூச்சு முட்டுகிறது என்ற காரணத்தைக் கூறி, நீதிபதியிடம் அனுமதி வாங்கி, வெளியில் வந்து, வழக்கறிஞர்கள் கொடுத்த அந்த சிக்கன் கபாபை ஆசையோடு சாப்பிட்டார் என்று செய்தி அப்போது ஊடகங்களில் வெளியானது.
எதற்காக இப்படி ஒரு அயோக்கியத்தனத்தை செய்ய வேண்டும், எதற்காக இப்படி அவஸ்தைப் பட வேண்டும் ? அப்படி சிறையில் கொடுமைகளை அனுபவித்து, தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் ராசாதான், இன்று தன்னை புரட்சியாளராக அறிவித்துக் கொள்கிறார்.
சரி. நான் எடுத்ததுதான் முடிவு என்று தொலைத் தொடர்புத் துறையில் சொல்லியாகி விட்டது. ட்ராய் அமைப்புக்கு கூட தகவல் தெரிவிக்க மாட்டேன், என்றும் சொல்லியாகி விட்டது. இத்தோடு விவகாரம் முடிந்து விடுமா என்ன ? ராசாவுக்கு மேல் சக்கரவர்த்தி என்று ஒருவர் இருக்கிறாரே…. மன்மோகன் சிங். அவருக்கு சொல்ல வேண்டாமா ?
02.11.2007 அன்று, ராசா பிரதமர் மன்மோகனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். 25.09.2007தான் விண்ணப்பம் அளிக்க கடைசி தேதி என்ற விபரம் பத்திரிக்கைகளில் அறிவிப்பாக வந்ததாக கூசாமல் ஒரு பொய்யை எழுதுகிறார். அதோடு நில்லாமல், சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம், ஸ்பெக்ட்ரம் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாளை நிர்மாணிப்பது தொடர்பான விவகாரத்தை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறிய கருத்து, தவறானது என்றும் குறிப்பிடுகிறார். எப்படி இருக்கிறது ? சட்டத்துறை அமைச்சகம் தவறாக கூறியதாம். இவர் சரியாகச் சொன்னாராம். இது மட்டுமல்லாமல், ஸ்பெக்ட்ரம் வழங்குவது தொடர்பான விவகாரத்தில், தொலைத் தொடர்பு அமைச்சகம், சட்டத்திற்கு உட்பட்டு, நூல் பிசகாமல் நடந்து கொள்வதாகவும் ராசா தெரிவித்திருந்தார். சட்டத்துறை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று பரிந்துரைத்து, தனது அதிகாரத்தில் குறுக்கிடுவதாகவும் அங்கலாய்த்தார் ராசா.
99ம் ஆண்டின் தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை பத்தி 3.1.1ல் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டதை ராசா வசதியாக குறிப்பிட மறந்தார்.
இந்தக் கடிதத்தை ராசா அனுப்பி 02.11.2007 அன்றே, பிரதமர் ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், “அன்பான ராசா, ஸ்பெக்ட்ரம் கொஞ்சூன்டு தான் இருக்கு. நெறய்யயய பேரு அப்பிளிகேசன் போட்ருக்காங்க.. நெறய்ய பேரு கேட்ருக்கதால, இன்னும் பல வருசத்துக்கு ஸ்பெக்ட்ரம் இருக்காதுன்றதால, அப்ளை பண்ண நெறய்ய பேருக்கு ஸ்பெக்ட்ரம் கெடைக்காம பூடும். அத்தோட இல்லாம, டெலிகாம் பாலிசின்னு ஒன்னு வச்சுருக்காங்க. அது படி பாத்தா, இருக்கற ஸ்பெக்ட்ரம்மை, எல்லாருக்கும் நயந்து குடுக்குனும்னு அதுல சொல்லிருக்கு. அதனால, எவ்ளோ ஸ்பெக்ட்ரம் கீதுன்னு, பாத்துப்புட்டு, அப்புறமா லைசென்ஸ் குடுங்க. ஸ்பெக்ட்ரமே இல்லாம வெறும் லைசென்ஸ் மட்டும் குடுத்தீங்கன்னாக்கா, அந்த கம்பேனிக்காரன் லைசென்சை வச்சுக்கிட்டு என்ன பண்ணுவான் ?” என்று எழுதுகிறார்.
அவ்வளவுதான், ராசாவுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. என்னடா இது, நம்பளுக்கு தெரியாதது எதுவுமே இல்லை. நம்பகிட்டயே இவரு கேள்வி கேக்கறாரே என்று அதிசயித்த ராசா, இரவோடு இரவாக, அவருக்கு பதில் அனுப்ப முடிவு செய்கிறார். அது மட்டும் அல்லாமல், ராசா, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், எல்லாவற்றையும் சரியாக செய்திருக்கிறேன் என்று அனுப்பிய கடிதம், பிரதமர் அலுவலகத்தை அடையும் முன்பே, பிரதமரின் கடிதம் வந்து சேர்ந்ததால் ராசாவின் அதிர்ச்சி மேலும் கூடியது.
அன்று இரவே பதில் கடிதம் தயாரிக்கலாம் என்ற முடிவெடுத்து, தனது செயலாளர் சந்தோலியாவை வரவழைக்கிறார். அவர் வந்தால் போதுமா… கடிதத்தை டைப் அடிக்க நம்பகமான ஆள் வேண்டுமில்லையா….. அதனால், 2004ம் ஆண்டு முதல், ராசாவின் காரியதரிசியாக இருந்த, ஆச்சார்யா ஆசீர்வாதம் என்பவரை, இரவு 8 மணிக்கு உடனே வீட்டுக்கு வாருங்கள் என்று கூறுகிறார். அனைவரும், ராசாவின் வீட்டில் கூடுகிறார்கள்.
ஆசீர்வாதம் வீட்டுக்கு வந்ததும், ராசாவே அவரோடு அமர்ந்து கடிதத்தை டிக்டேட் செய்கிறார். “கண்மணி, அன்போட….” என்று அல்ல. “டியர் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்” என்று தொடங்கும் அந்தக் கடிதத்தில், ராசா, “எல்லாம் சரியாத்தான் நடக்குது. ஒரு தப்பும் பண்ணல. இந்த மாதிரி வெளிப்படையா யாருமே நடந்து கிட்டது இல்ல. இப்போ மட்டும் இல்ல.. ப்யூச்சர்ல கூட, இதே மாதிரி சட்ட திட்டங்களின்படி, எல்லாம் நடக்கும். அதனால கவலைப் படாம கம்முனு இருங்க” என்று பதில் எழுதுகிறார்.
ராசா, சந்தோலியா, தொலைத் தொடர்புக் கமிஷன் உறுப்பினர் ஸ்ரீதர், ஆகியோர் சேர்ந்து இந்த கடிதத்தை தயார் செய்கிறார்கள். இரவு 11 மணிக்கு வேலை முடிகிறது. இரவோடு இரவாக, சிறப்புத் தூதுவர் மூலம், அந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.
என்ன ஆயிற்றோ தெரியவில்லை. 26.12.2007 அன்று சந்தோலியா, அந்தக் கடிதத்தை தயாரித்த ஆசீர்வாதத்தை அழைத்து, நீங்கள் அடித்த கடிதம் எங்கே என்று கேட்கிறார். அவர் இந்தக் கம்ப்யூட்டரில் தான் இருக்கிறது என்று கூறியதும், அதை பென் டிரைவில் காப்பி செய்து, மீண்டும் ப்ரின்ட் எடுத்து, பிரதமருக்கு அனுப்பப் படுகிறது.
இந்த ஆசீர்வாதம், சிபிஐ ன் முக்கிய சாட்சியாக சேர்க்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது. அவர் சமீபத்தில் பிஜேபியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.
அப்போது, தொலைத் தொடர்பு கமிஷனின் நிதிக்கான உறுப்பினராக இருந்த மஞ்சு மாதவன் என்பவர், இது வரை லைசென்ஸ் கொடுத்து வந்தது 2001ல் உள்ள விலை. இப்போது ஸ்பெக்ட்ரத்துக்கான தேவை (Demand) மிக அதிகமாக உள்ளது. அதனால், ஏலம் விட்டால், அதிகத் தொகையை ஏலத்தில் கேட்பவர்கள், ஸ்பெக்ட்ரம் பெற இயலும், மேலும், அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று, சம்பந்தப் பட்ட கோப்பிலேயே எழுதுகிறார். ஆனால், தகத்தகாய கதிரவன், அவ்வாறு எழுதப்பட்டதன் மீது, எந்த முடிவும் எடுக்காமல், கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்.
அப்போதைய தொலைத் தொடர்புத் துறைச் செயலர் மாத்தூர், “இது தொடர்பாக நடைபெற்ற கூட்டங்களில் விவாதிக்கும் போதெல்லாம், ஏலமெல்லாம் விட முடியாது என்பதை தீர்மானமாக ராசா கருத்து தெரிவித்தார். மேலும், 2001ல் உள்ள விலைக்குத் தான் கொடுக்க முடியும்” என்றும் ராசா கூறினார் என்கிறார் மாத்தூர்.
ராசா 2001ல் வாங்கிய வீட்டை, இன்று அதே விலைக்கு கொடுப்பாரா ?
இவ்வாறு ராசா பிரதமருக்கு கடிதம் அனுப்பியவுடன் பிரதமர் என்ன செய்திருக்க வேண்டும் ? சட்ட அமைச்சகம் அமைச்சரவை குழுவுக்கு அனுப்பவும் என்று தெரிவித்த கருத்தை மீறி, நீங்கள் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கக் கூடாது, அதனால் நான் அந்தக் கோப்பை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்புகிறேன் என்றல்லவா உத்தரவிட்டிருக்க வேண்டும். பிரதமரும் பதில் கடிதம் அனுப்பினார். ஆனால் அந்தக் கடிதத்தில், உங்களின் 02.11.2007 நாளிட்ட கடிதத்தை வரப்பெற்றேன் என்று பதில் எழுதுகிறார்.
ஏன் இவ்வாறு எழுதுகிறார் என்று கேட்கிறீர்களா ? ராசா திமுகவின் அமைச்சராயிற்றே….. மன்மோகன் பிரதமாராக இருக்க வேண்டாமா ? மன்மோகன் பிரதமர் பதவியில் நீடித்ததற்காகத் தான் இந்தியா ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை இழந்தது. அன்று மன்மோகன், அந்தக் கோப்பை ராசாவிடமிருந்து பறித்து, அமைச்சரவை குழுவுக்கோ, அல்லது தன்னிடமோ மாற்றியிருந்தால், இந்த நஷ்டம், ஊழல் விசாரணை இதெல்லாம் தேவையா ?
இந்த வழக்கில் நடந்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக மன்மோகன் சிங்கும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சேர்க்கப்படவில்லை. மன்மோகன் சிங் பெயரை இழுத்தால் தான் தப்பித்து விடலாம் என்று எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார் ராசா. ஆனால், அவரது எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை.
தொடரும்
தங்களின் நான்கு பகுதியய் படித்ததில் மற்றும் ராசா பேட்டி கண்டதிலும்(புதிய தலைமுறை TV) யார் உண்மை பேசுகிறார்கள், இந்தியா, பெருத்த பண முதலைகளின் கூடாரம், சாமானியனின் வளர்ச்சியயை பல அயிரம் ஆண்டுகள் பொருத்துகொண்டதில்லை, இதுவும் அப்படிதானே?
http://harithipavi.blogspot.in/2014/03/2g-scam.html
நீங்கள் ஒரு விஷயத்தை தவறாகவே புரிந்து கொண்டுள்ளீர்கள்.நீங்கள் மட்டுமல்ல அதி மு க அனுதாபிகள் என்ற போர்வையில் நிறைய பேர் தவறான செய்திகளை பரப்புகிறீர்கள் அல்லது வேண்டுமென்றே புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் நான் தி மு க அனுதாபி அதிமுக அனுதாபி என பார்க்கவில்லை நடுநிலய்யாளன் என்கிற முறையில் தெரிவிக்கிறேன் சரி தவறு என முடிவு செய்யுங்கள் திராவிடம் என்பது ஒரு அரசியல் சித்தாந்தத்தையும் தாண்டி நல்ல விஷயங்கள் இருப்பதால் நல்லது என படுவோரே அதை பின்பற்றட்டும் அதை தி மு க வினால் தான் எடுத்து செல்ல வேண்டும் என்பதில்லை அதற்கான சுமந்து செல்லும் பொருள் ஒரு அரசியல் கட்சியாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை ஆனால் திராவிடம் வழக்கு ஒழிந்து விட்ட தாக நினைத்து கொள்ளுவார்கள் அல்லது விரும்புவர்கள் எல்லாம் ஒரு சித்தாந்தம் சிதைந்து விட்டது போல
நினைத்து வேண்டுமானால் கருதி கொள்ளலாம் அதனால் என்ன பயன் இன்னொரு மாற்று வழி நல்லதாக இருப்பதாக காண்பித்தால் அதையும் ஏற்று கொள்ளும் பக்குவம் தான் திராவிடம் என்பதற்கு சித்தாந்த ரீதியான பொருள். மெய்பொருள் காண்பது அறிவு என்பது தான் இதன் சாராம்சம் அப்பிடி இருக்கையில் பயப்பட் தேவையில்லை அனால் ஊடக செய்திகள் அனைத்திலும் ஊக செய்திகளை ஒரு மஞ்சள் பத்திரிக்கை போல வெளியிடும் கலாச்சாரம் தான் இப்போது வட இந்தியாவிலி உள்ள ஊடகங்கள் மிக திறமையாக செய்து வருகின்றன .. இந்தியா முழுவதும் ஓன்று விடாமல் மிக சிறிய ஊடகம் முதல் பெரிய கார்போரேட் ஊடக நிறுவனங்கள் வரை எதையும் விடாமல் திட்டமிட்டு ஒரு பொய் பிரச்சாரம் மிக துல்லியமா ரகசிய சதி எண்ணத்தோடு பரப்பி வருகிறார்கள் இதை திட்டமிட்டு செய்பவர்கள்..பார்க்கவும் வடக்கில் டெல்லி யில் இருந்து மூன்று ஊடகங்கள் தமிழ் நாட்டில் உள்ள மூன்று தமிழ் பத்திரிகைகள் [தினமலர், தின தநதி குரூப் , மற்றும் குமுதம் ]அனைத்துக்கும் சேர்த்த மாதிரி சுமார் 450 கோடி ரூபாசெலவில் [வெளி நாட்டில் உள்ள தம்புராஸ் இயக்கத்தினர் ரகசிய கணக்கு மூலம் பெற்ற வெளிநாட்டு நிதி இங்கு உள்ள துக்ளக் சோ, ஜெயா டிவி இயக்குனர் சுப்ரமணிய சுவாமி , ஆகிய மூவரும் அதி மு க வில் ஜெ , சசிகலா குடும்பம் ,மற்றும் ஜெயா டிவி யில் தலைமை பார்ட்னர்களை வைத்து ஆக இந்த ஏழு பேர் கொண்ட குழு இந்த 450 கோடி சதி திட்டத்துக்கு ஊடகத்தை மிக சரியாக பயன் படுத்தி வருகிறார்கள் இதில் தின தந்திக்கு மட்டும் 90 முதல் 100 கோடி வரை பொய் கருத்து கணிப்புக்கு செலவிட்டு உள்ளார்கள் .. !!!அவர்கள் பத்திரிகையிலும் தந்தி டிவி சானலிலும் நாற்பது இடங்களும் அதி மு க விற்கே என்ப்பது போல பொய் கணிப்பை வெளியிட்டு மோசம் செய்கிறார்கள் …!!! தின மலர் க்கு இதில் கணிசமான் பங்கு போய் சேர்ந்து உள்ளது. அவர்களும் அவர்கள் பங்குக்கு தந்தி பத்திரிக்கை போலவே பொய் செய்தி வெளியிடுகிறார்கள் …!!! இதை போல வட இந்தியாவிலும் மோடி க்கு வேண்டிய ஊடகங்களை வைத்து மேற் சொன்ன ஏழு பேர் குழு வில் சுப்ரமணிய சாமி மூலம் மூன்று டிவி [ஹிந்தி சேனல் ]மூலம் இங்கு அ.தி.மு.க தான் அதிக இடங்களை பிடிக்கும் என்று தவறாக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் பண்ணி வருகிறார்கள். இதுவும் ஒரு ஊக செய்தி தான் இதை மறுப்பவர்கள் அவர்கள் தரப்பு நியாயம் சொல்லுவார்கள். அதை போல தான் கனிமொழி தப்பே விவகாரமும் காஞ்சி சங்கராச்சாரியார் நீதிபதி ரகசிய உரையாடல் டேப் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பு வந்து உள்ளதே அப்பா அது பொய் தானே. அது போல ஊடகங்கள் நினைத்தால் எதையும் பொய்யாக திரிக்க முடியும். கனிமொழி டேப் விஷயமும் அது போல தான் இப்ப புரிகிறதா நான் எல்துவதில் தவறு உள்ளதா
yov loosaada nee
sariyaa padida nayee
இது எல்லாம் பண்ணிட்டு ஸ்பெக்ட்ரம் ராசா ஊட்டில் வெற்றி பெற்றுவிடுவார். அது தான் மிகவும் வேதனை தர கூடிய விஷியம்.
3G is compared on an equivalent basis. 2G is much more valuable than 3G because of its reach & subscription base. If Govt can get X crores from 3G, they can expect 3X crores from 2G for indication. In 2007/8, the market was unsaturated and so growing at a rapid pace. So getting spectrum was high value at that time. The situation was different in 2012/13 when it was auctioned as growth from the current level was sluggish. That is why the valuations were subdued.
The loss figure is assessed by credible data such as T Sel’s offer at the relevant point in time for spectrum and Govt’s refusal to take them. Phone call rates came down as a result of market size expansion and competition. Indian rates are still higher compared to US / Singapore and other developed countries. So it is not an innovation by our ‘honest’ minister at that time!
One other factor could be Govt did some manipulations in terms of a high floor price to ward off many potential bidders so that only a few chosen people are left in the fray to bid and control final winning price. It is interesting to note that the same people got the licenses for the same areas as given earlier which got cancelled by Supreme Court! May be Govt made sure that the original allotees were given the licenses as otherwise they would want their bribe monies back.
Many indian banks have given guarantees for these allotees which are in the write off stage when enforced by Govt for non performance. It adds a significant sum to the NPA of Indian Banks which is already at an alarming level due to which India is facing a rating downgrade from Fitch & S&P this year!
Another point is none of these 122 license allottees rolled out their services before their cancellation. So Raza’s assertion that he brought down the call rates by these allotments is false too.
It is not logical to extend comparison to BJP saying that they started the policy of First Come first Served etc. The world is dynamic with vast changes happening particularly in the field of technology and we expect our governors to be knowledgeable enough to protect country’s interests in securing the best deal. We don’t want inefficient people who say ‘I just followed my predecessor’ without application of mind. however , in this case, there has been more than application of mind in the wrong direction.
Going by the money trails that were investigated & are being tracked, it is clear that the politicians involved in this deal made a whopping sum. Of course they could not get 1,76,000 Crores that is loss to the nation. Certainly TN people must have got 15-20,000 crores.
Please do not hope that Raza can talk his way out of this crime (he being a clever (by half) lawyer. Please care a little for the nation and its 119,5 crore poor people living without basic necessities. You will be committing a sin against them by supporting looters.
Your explanation laughable In BJP period paticularly Mahajan and Shourie favors to Airtel so that Govt organisations like VSNL,MTNL suffers.If you think you can change apolicy it is not so even lower level Govt dept itself like private Then how will u change a major policy like auction drawn by TRAI Why RAJA not permitted to appear in PAC to dispose /crossexamination.We have so many audit reports so many persumptive loss.Your arugment I think that when BJP done like Adhani etc you hav accpt and even arugue there is no loss but when any other it is national loss.super comedy OOR Kurvi sila nram barundhu endr neenaipathundu
குட்டிச் சாத்தான் அட்டமத்துச் சனியன்
கோடரிக் காம்பு கொபேறி மூக்கன்,
அன்னக் கிளியும் ஆறுகால் பூச்சியும்
தின்னக்கிடைக்கா திரவியமான
காற்று வெளியின் காந்த அலையை
சுத்தம் செய்து விற்றபோது,
கூரையில் இருந்த குருட்டுச் சேவல்
இருட்டு விலகிட விடியும் என்றதாம்.
கண் தெரியாத மண்ணுண்ணி பாம்பு
தின்னகாணோம் மண்ணை என்று
தலையை சேற்றுள் புதைத்து கிடந்ததாம்
பூச்சியும் புன்னகை சாற்றி கடற்கரை
மேட்டினில் பட்டினி என்று பாசாங்கு செய்தது
கோவாலபுரத்தில் கூட்டம் போட்ட
ஆலகாலத்து ஆறுகால் பூச்சி
கண்ணீர் விட்டு கதறி அழுதது
காந்த அலைக்கும் கன்னி மொழிக்கும்
வீண் பெயர் வந்தது விதிவசம் என்றதாம்.
கனிமொழி நண்பன் கதிரவனுக்கும்
புறநானூற்றின் புடையன் பாம்பு
விடுதலை வேங்கை தகதகு சூரியன்
விடுதலை பெற்று சாந்தி கிடைக்க
சன்னதம் ஆடி சங்கடம் கொண்டது
வானம் பார்த்த ஜாலம் போட்டது.
கதிரவன் மீது சாணி அடிப்பது
தவறு என்றழுதது சன்னதம் கொண்டது
தலித்து என்பதால் பழிப்பு என்றது.
சிஐடி நகரின் அடுப்படி திண்ணையில்
சுதிப் பெட்டி கூட்டி
இடுப்பினில் கறுப்பு துண்டையும் போர்த்தி
நடுவினில் குஞ்சா மணி விடை திருத்த
ஆலய மணியில் சிவாஜியைப்போல
புறம்போக்கு காம ராசு தவில் கொறிக்க
அழுக்கு மணம் கமழ்
துரை முருகன் கடுப்பினை உதிர்க்க
கேள்விச் செவியன்
ஜாபர் சேட்டு திடமது உரைக்க
அடங்க மறுப்போம் திருமா
முகமது சுருக்க
ஆயுட்கால அடிமை அன்பழகன்
தாம்பூலம் தரிக்க
ஆறுகால் பூச்சி
பொய்யுரை வாசித்து முடித்தது
சல்லரி முழங்கிட சஞ்சரி கலைந்தது
அன்னக்கிளியும் அடையாய் போனது
ஆறுமாதம் கடையது வறண்டு காய்ந்தது
கூண்டுக் கிளியாய் குப்புறக் கிடந்தது
ஆறுகால் பூச்சி நடையாய் நடந்தது
அன்னையின் காலில் அம்மணமானது
காலம் மாறி காட்சியும் மாறி
சோகம் வெளியே தெரியா வண்ணம்
சொந்த சூனியம் துன்பமாய் விடிந்தது.
இதை தான் நானும் சொன்னேன் எப்பவோ நடந்த சர்க்காரியா கமிஷன் எதுவும் கண்டுபிடிக்காமல் கைகழுவி விடப்பட்டும் அதை திரும்பநொண்டி நொங்கு எடுப்பது ஏன். இப்ப சமீபமாக உள்ள ஜெ இன் சொத்து குவிப்பு பற்றி சவுக்கின் ஹோம் பேஜ் யில் போடாமல் பழைய கட்டுரையாக போஸ்ட் பண்ணியிருப்பதில் இருந்தே சவுக்கின் உள் நோக்கம் தெரிகிறது. தேர்தல் நாளை நடக்கையில் சர்க்காரியா மட்டும் நினைவுக்கு வருகிறது ஜெ இன் ஊழல் நினைவுக்கு வர வில்லையாக்கும் நல்ல வேடிக்கை.
சுமார் ஒன்றரை ஆண்டுகளாகியும் சிறையில் இருந்தும் ஆ ராசா விடம் இருந்து எந்த உருப்பிடியான ஆதாரங்களை சிபிஐ யினால் பெற முடியவில்லை. மட்டுமல்ல ஆ ராசா தனது வருமான கணக்கு விபரத்தில் 55 லட்சம் நச்ட கணக்கு தானே காட்டி உள்ளார். மேலும் அவரது உறவினர்கள் வீட்டில் சோதனையிலயும் எதையும் சிபிஐ பெறவில்லை. அவரது பினாமி என்று சந்தேகித்தவர்களிடம் பெற்றவையும் பலன் இல்லா ஆதாரங்கள் மேலும் நீதி மன்றம் இன்னும் கூடி வழக்கை நடத்தமுடியாத படிக்கு திணறி வருவதாக எண்ணம் வருகிறது. இன்னும் எந்த ஆதாரத்துக்காக waiting ? ஆக இந்த கட்டுரைப்படி கற்பனையாக வேண்டுமானால் வழக்கு ஜோடிக்கலாம் பொறுத்து இருந்து பார்ப்போம். ஆ ராசா வின் பேட்டியை பாருங்கள் https://twitter.com/THIRAVIDAKALAI/status/454232962393841665
ராசா 2001ல் வாங்கிய வீட்டை, இன்று அதே விலைக்கு கொடுப்பாரா ?
தாங்கள் எழுதியுள்ள கருத்து தங்களுக்கும் பொருந்தும் தானே எப்படி 2ஜி யின் விலையை 3ஜி விலையுடன் ஓப்பிட்டு நட்டம் என சொல்ல முடியும் யானையை பார்த்த குருடரை போல் உத்தேச விலையை உண்மை விலை என ஊடகங்கள் எழுதுவதன் மர்மம் என்ன அரசின் கொள்கை முடிவு ட்ராயின் கொள்கை முடிவு எல்லாமே தவறு என்று சொல்ல வில்லையே ஏன் எல்லா லைசென்ஸ் கான்சல் செய்து பிறகு ஏலம் வைத்த போது ஏன் ஊடகங்கள் சொன்ன 176லட்சம் கோடி அரசிற்கு வருமானம் வரவில்லை சிலரை சில காலம் ஏமாற்றலாம் எல்லோரையும் எல்ல காலங்களிலும் ஏமாற்றமுடியாது மேற்கண்ட கொள்கை ஆரம்பித்து வைத்த பிஜேபி மீது எந்த வித கண்டனமும் ஊடகங்கள் செய்யவில்லை
2G and 3G can never be compared. Now 4G has come. When new technology come’s old technology’s value will get reduced. In 2007 2G was the only technology available. Based on that the notional loss is 1.76 lac crores. In 2013 when you auction 2G it will be of less value, because of 3g and 4g are already available. So there was less buyers in 2013 for 2G. Kapil Sibal can’t fool people. Still the loss of 1.76 lac crores holds good.
How Much Nokia N73 mobile during 2007 and how much Nokia Lumia series now in 2014 ?
(and how much N73 now ? no more production)
– Do you know that the technology is improving…
– Now they’are checking for 5G.
– Its an open book & known to every one that (this was the big mistake in this scam) these companies sold their 30% 40% 50% of their spectrum licence more than the value of their buying margin.