சொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை! – கருணாநிதி கடிதம்

You may also like...

8 Responses

  1. makkal says:

    thayalu entha oru varumanamum illamal ivvalvu soththu serththathu eppadi?…..

  2. vijay says:

    கருணாநிதி குடும்பமும் பரிசுத்தவான்போல “சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு தொடர்கதை” என்று கடிதம் எழுத எப்படித்தான் முடிகிறது?

  3. vijay says:

    2ஜி வழக்கில் சிபிஐ விசாரணையே நேர்மையாக நடைபெறவில்லை

    2ஜி வழக்கில் குடும்பத்தைக் காப்பாற்ற கருணாநிதி செய்த மிக முக்கியமான தந்திரம் வியக்க வைக்கக் கூடியது. 2ஜி விசாரணையை சிபிஐ தொடங்கியதும், ராசா கைது செய்யப்பட்டார். அப்போது கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் எப்படியும் அம்பலமாகும் என்பது கருணாநிதிக்கு தெரியும். காங்கிரஸ் கட்சி கருணாநிதியிடம் அளித்த வாக்குறுதி, குடும்பத்திலிருந்து யாராவது ஒருவர் வேண்டும். ஆனால் கைது இருக்காது என்பதே. அதனால், சாட்சிகளை விசாரணை செய்கையில் பெயர் குறிப்பிடாமல், “மிஸ் கருணாநிதி” என்று குறிப்பிடப்பட்டது. அது தயாளு அம்மாளுக்கும், கனிமொழிக்கும் பொருந்தும் அல்லவா ? நேராக வந்து, கலைஞர் டிவியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியபோதுதான், கலைஞர் டிவியின் தலைமை நிதி அதிகாரி என்ற முறையில் அமிர்தத்தை விசாரணை செய்கிறார்கள். அதிகாரிகள் கேள்வியை தொடங்கியதுமே, அமிர்தம் நெஞ்சை பிடித்துக் கொள்கிறார். உடனே சிபிஐ அதிகாரிகள் விசாரணையை நிறுத்துகிறார்கள். அந்த இடத்தில் இருந்த சரத் குமாருக்கு கருணாநிதியிடமிருந்து போன் வருகிறது. “யோவ்… அமிர்தத்துக்கு நெஞ்சு வலிய்யா.. நீ ஒத்துக்க. நான் டெல்லியில பேசிட்றேன். ஒன்னும் நடக்காது” என்று கருணாநிதி கூறியதும், சரத் குமார் அப்படியே ஒப்புக் கொண்டு விடுகிறார். சிபிஐ சரத்குமாரை குற்றவாளியாக சேர்க்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோடு ஏற்பட்ட ரகசிய ஒப்பந்தத்தின்படி, அமிர்தம் சாட்சியாக சேர்க்கப்படுகிறார். அதே போல, 60 சதவிகித பங்குகளை வைத்திருந்த தயாளு அம்மாள் குற்றவாளியாக சேர்க்கப்படாமல் சாட்சியாக சேர்க்கப்படுகிறார். கனிமொழி குற்றவாளியாக சேர்க்கப்படுகிறார்.

  4. கருணா குடும்பத்தின் சொத்து என்று இங்கு காட்டப்பட்டிருக்கும் பட்டியலின்படி முத்துவேல் கருணா உழைத்து சம்பாதித்த சொத்துக்களா என்பதையும் முக வெளிப்படுத்தினால் நன்று.

  5. ///ஜெயலலிதா முதல் முறையாக, முதல் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு அவருக்கு இருந்த சொத்து மதிப்பு அதாவது 1-7-1991 அன்றைய தேதியில் 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய். 30-4-1996 அன்று ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395 ரூபாயாகும். ///

    அந்த புள்ளிவிபரம் சரியானதாக இருந்தாலும் கருணாநிதி ஜெயலலிதாவின் ஊழல் பற்றி விமர்சனம் செய்ய ஒரி ஊசி முனையளவாகுதல் தகுதியுள்ள பிறவியா என்ற கேள்வி மலைபோல மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

    கருணாநிதியின் இந்த கடிதத்தை வாசிக்கும் அப்பாவித்தனமான ஒரு சிலர் கருணாநிதி ஒரு பரிசுத்தமான பிறவி என்று எண்ணவும் தோன்றும். அப்படி ஒரு தோற்றம் யாரிடமாவது கருக்கட்டுமாக இருந்தால் அது பேராபத்தாக முடியும், எனவே கருணாநிதி இந்த கடிதத்தை வெளியிடுவதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல வருகின்றார், உண்மையில் கருணா உத்தமர்தானா, இந்தக்கடிதம் சமூகத்தின் வளர்ச்சிக்கு உகந்ததா அல்லது அரசியல் வங்குரோத்தின் வெளிப்பாடாக மக்களை திசை திருப்ப பயன்படுமா? என்ற விடயத்தையும் கருணாநிதியின் அடிப்படை நோக்கத்தையும் பகிரங்கப்படுத்தவேண்டிய பெரும் பொறுப்பு சவுக்கு தளத்துக்கு உண்டு என்பதை பணிவுடன் தெரியப்படுத்துகின்றேன்.

    கீழே கருணாநிதி குடும்பத்தின் சொத்துக்கள் விபரம் தரப்படுகின்றது. அந்த விபரம் பல ஊடகங்களில் வெளியானதாக இருந்தாலும் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் சமன் செய்து பார்க்க அந்த விபரம் மக்களுக்கு நிறையவே உதவும்.

  6. 1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி.

    2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி.

    3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 2 கோடி.

    4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு – மதிப்பு 4 கோடி.

    5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு – மதிப்பு 2 கோடி.

    6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு – மதிப்பு 5 கோடி.

    7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு – மதிப்பு 2 கோடி.

    8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு – 12 கோடி.

    9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

    10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு – 10 கோடி.

    11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு – 2 கோடி.

    12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு – 2 கோடி.

    13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் – 100 கோடி.

    14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு – 10 கோடி.

    15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு – 2 கோடி.

    16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் ‘முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு – 20 கோடி.

    17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு – 5 கோடி.

    18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு – 100 கோடி.

    19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு – 50 கோடி.

    20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – 4 கோடி.

    21. பெங்களூரு – மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – 80 கோடி.

    22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – 120 கோடி.

    23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு – 108 கோடி.

    24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் ‘ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு – 48 கோடி.

    25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

    26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு – 50 கோடி.

    27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு – தெரியவில்லை.

    28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை.

    29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை

    30. முரசொலி அறக்கட்டளை – மதிப்பு தெரியவில்லை

    31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் ‘வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

    32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு – தெரியவில்லை.

    33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு – தெரியவில்லை.

    34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு – 1 கோடி.

    35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு – 60 லட்சம்

    36. மதுரை வடக்கு தாலுக்கா – உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

    37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு – 2 கோடி.

    38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு – 5 கோடி.

    39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு – 40 லட்சம்.

    40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.

    41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு – 1 கோடி.

    42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு – 2 கோடி.

    43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு – 2 கோடி.

    44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு – 60 லட்சம்.

    45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 20 லட்சம்.

    46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.

    47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.

    48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு – 5 கோடி.

    49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.

    50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு – 2.5 கோடி.

    51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு –

    3 கோடி.

    52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு – 3 கோடி.

    53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – 1 கோடி.

    54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு – 2 கோடி.

    55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு – தெரியவில்லை.

    56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட ‘தயா சைபர் பார்க்’ மதிப்பு – தெரியவில்லை.

    57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் ‘தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு – 1 கோடி.

    58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு – 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

    59. ‘வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு – 20 கோடி.

    60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – 30 கோடி.

    61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு – 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

    62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – 90 கோடி.

    63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை

    64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை.

    65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

    66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.

    67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் ‘சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ – மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

    68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

    69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

    • Shankar says:

      இவ்வளவு தகவல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி… இதை படித்துக் கொண்டிருக்கும்போதே திறந்த வாயை மூடவில்லை…ஒரு தலைமுறைக்கு சொத்து சேர்த்தால் கூட ஒத்துகொள்ளலாம்…ஆனால் 10/50/100 தலைமுறைக்கு சொத்து சேற்பவனை, எல்லா சொத்துக்களையும் பறிமுதல் செய்து நடுரோட்டில் அம்மணமாக ஓட விடனும்….நடக்குமா??

  7. கிராமத்து பண்ணை ஒன்றில் வேலைபார்த்த தந்தரசாலியான சுயநலவாதி பண்ணையாளன் ஒருவன் தான் வேலை பார்த்த பண்ணையில் பழுத்த வாழைப்பழங்களை சந்தையில் விற்று பணத்தை எடுத்துக்கொண்டு, எஜமானன் வீட்டுக்கென்று சில பழங்களை தலைச்சுமையாக சுமந்து எஜமான் வீட்டுக்கு கொண்டு சென்று பணத்தையும் பழங்களையும் கொடுத்து தான் ஒரு நேர்மையான கடின உடல் உழைப்பாளி போல் வெளிக்காட்டி வயிறு வளர்த்து வந்தான். பண்ணையாளன் தலைச்சுமையாக எஜமான் வீட்டிற்கு பழங்களை சுமந்து வரும்போது வழியில் நிற்கும் தனது குடும்பத்தினருக்கு ஒருபகுதி பழங்களை கொடுத்து திருட்டு வேலை செய்வதும் பழம் விற்ற பணத்தில் கையாடல் செய்வதும், எஜமானனுக்கு தெரிய வந்தது

    வழியில் வைத்து பழங்களை தனது குடும்பத்தினருக்கு பிடுங்கிக்கொடுப்பதாலும் தலைச்சுமையில் கொண்டு சென்று வழியில் இளைப்பாறலுக்காக பழச்சுமையை இறக்கி ஏற்றி கொண்டு செல்வதால் சென்று சேரும் மீதிப் பழங்கள் நசுங்கி கசங்கி தரமற்று இருந்தது. எஜமானன் எப்படி இதை நிறுத்துவது என்று சிந்தித்தான் பண்ணையாளனுக்கு பாடம் புகட்ட எண்ணி வெளியில் சொல்லிக்கொள்ளாமல் பண்ணையாளனை தந்தரமாக ஏதோ காரணங்களை காட்டி வேலையிலிருந்து வீட்டுக்கு அனுப்பிவிட்டான். அதன்பிற்பாடு பண்ணையில் வேலைக்கு சேர்ந்த இன்னொருவன் விற்ற பழங்களுக்கு சரியான ரசீதுகளுடன் வீட்டுக்கான பழங்களை ஒரு வண்டியில் பாதுகாப்பாக மூடி கட்டி எஜமான் வீட்டுக்கு அனுப்பி வைத்தான், எஜமானுக்கு அது திருப்தியாக இருந்தது. பழங்கள் கசங்காமல் நசுங்காமல் எஜமானன் வீடு சென்று சேர்ந்தது.

    ஆனால் திருட்டு பண்ணையாளனுக்கு நடந்த விபரம் புரிந்தாலும் வெளியாட்கள் தனது தில்லுமுல்லுகளை அறிந்திருக்கமாட்டார்கள் என்று தனதுபாட்டுக்கு தற்பெருமை பேசி வந்தான். ஆனால் கேட்பவர்கள் நமட்டு சிரிப்புடன் அவனை தாண்டி சென்றுகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress