உறுத்து வந்து ஊட்டும் ஊழ்வினை கருணாநிதியையும் அவர் குடும்பத்தையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. வாக்குப் பதிவு முடிந்ததும் பல்வேறு கருத்துக்கள், திமுக எதிர்ப்பார்த்ததை விட, சிறப்பாகவே தேர்தலில் வெற்றி பெறும் என்று கூறிய மகிழ்ச்சி அடங்குவதற்குள், இடியாக வந்து இறங்கியது அமலாக்கப் பிரிவின் செய்தி.
மகளையும், மனைவியையும் சாமர்த்தியமாக 2ஜி வழக்கிலிருந்து காப்பாற்றி விட்டதாக இறுமாப்போடு இருந்த கருணாநிதியின தூக்கத்தை கலைத்துப் போட்டது அமலாக்கப் பிரிவின் இறுதி அறிக்கை. எந்த நீதிமன்றத்தில் கருணாநிதியின் குடும்பத்தின் தலையெழுத்து தீர்மானிக்கப்பட்டுக் கொண்டிருக்கிதோ, அதே ஓ.பி.சைனி நீதிமன்றத்தில், மீண்டும் ஒரு குற்றப்பத்திரிக்கை.
குடும்பத்தில் வேலைக்கு வந்த பாவத்துக்காக சிறை சென்று, தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் சரத் குமாரை பலியாடாக்கி, தன் மகளையும் மனைவியையும் காப்பாற்றி விடலாம் என்ற கருணாநிதியின் கனவு பொய்யாகிப் போனது.
2ஜி வழக்கில், மிக மிக சாமர்த்தியமாக மனைவி மற்றும் மகள் ஆகிய இருவரையும் காப்பாற்றினார் கருணாநிதி. தற்போது கருணாநிதியின் தந்திரம் வெற்றி பெற்றால், 2ஜி வழக்கில், சரத் குமார் மற்றும் ஆ.ராசா மட்டுமே தண்டிக்கப்படுவார்கள்.
2ஜி வழக்கில் சிபிஐ விசாரணையே நேர்மையாக நடைபெறவில்லை. சிபிஐ நடத்திய புலனாய்வின்படியே, ஸ்வான் டெலிகாம் உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்தையும் முதலீடு செய்து பின்னால் இருந்து இயக்கியது அனில் அம்பானி என்ற விபரம் சிபிஐ ஆவணங்களிலேயே இருக்கிறது. ஆனால் அனில் அம்பானி குற்றவாளியாக சேர்க்கப்படவேயில்லை. அதே போல, டாடா நிறுவனத்துக்கு இரட்டை லைசென்சுகள் (CDMA & GSM) வழங்கியதும், அந்த நிறுவனம், தங்களது பங்குகளை ஜப்பானைச் சேர்ந்த டோகோமோ நிறுவனத்துக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தது. இதற்கு பிரதிபலனாகத்தான், சென்னை அண்ணா சாலையில் உள்ள 300 கோடி ரூபாய் மதிப்பிலான வோல்டாஸ் நிலம். இந்த விவகாரத்தையும் சிபிஐ விசாரிக்கவே இல்லை.
2ஜி வழக்கில் குடும்பத்தைக் காப்பாற்ற கருணாநிதி செய்த மிக முக்கியமான தந்திரம் வியக்க வைக்கக் கூடியது. 2ஜி விசாரணையை சிபிஐ தொடங்கியதும், ராசா கைது செய்யப்பட்டார். அப்போது கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் எப்படியும் அம்பலமாகும் என்பது கருணாநிதிக்கு தெரியும். காங்கிரஸ் கட்சி கருணாநிதியிடம் அளித்த வாக்குறுதி, குடும்பத்திலிருந்து யாராவது ஒருவர் வேண்டும். ஆனால் கைது இருக்காது என்பதே. அதனால், சாட்சிகளை விசாரணை செய்கையில் பெயர் குறிப்பிடாமல், “மிஸ் கருணாநிதி” என்று குறிப்பிடப்பட்டது. அது தயாளு அம்மாளுக்கும், கனிமொழிக்கும் பொருந்தும் அல்லவா ? நேராக வந்து, கலைஞர் டிவியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியபோதுதான், கலைஞர் டிவியின் தலைமை நிதி அதிகாரி என்ற முறையில் அமிர்தத்தை விசாரணை செய்கிறார்கள். அதிகாரிகள் கேள்வியை தொடங்கியதுமே, அமிர்தம் நெஞ்சை பிடித்துக் கொள்கிறார். உடனே சிபிஐ அதிகாரிகள் விசாரணையை நிறுத்துகிறார்கள். அந்த இடத்தில் இருந்த சரத் குமாருக்கு கருணாநிதியிடமிருந்து போன் வருகிறது. “யோவ்… அமிர்தத்துக்கு நெஞ்சு வலிய்யா.. நீ ஒத்துக்க. நான் டெல்லியில பேசிட்றேன். ஒன்னும் நடக்காது” என்று கருணாநிதி கூறியதும், சரத் குமார் அப்படியே ஒப்புக் கொண்டு விடுகிறார். சிபிஐ சரத்குமாரை குற்றவாளியாக சேர்க்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோடு ஏற்பட்ட ரகசிய ஒப்பந்தத்தின்படி, அமிர்தம் சாட்சியாக சேர்க்கப்படுகிறார். அதே போல, 60 சதவிகித பங்குகளை வைத்திருந்த தயாளு அம்மாள் குற்றவாளியாக சேர்க்கப்படாமல் சாட்சியாக சேர்க்கப்படுகிறார். கனிமொழி குற்றவாளியாக சேர்க்கப்படுகிறார்.
கைது நடவடிக்கை இருக்காது என்று அளித்த உறுதிமொழிக்கு மாறாக, கனிமொழி கைது செய்யப்பட்டார். கனிமொழி திஹார் சிறையில் இருந்தவரை, கருணாநிதி டெல்லியையே சுற்றி சுற்றி வந்தார். கனிமொழி கைது செய்யப்பட்டது குறித்து பேசிய கருணாநிதி “கனிமொழி சிறையிலே இப்பொழுது வாடிக்கொண்டிருக்கிறார். திகார் சிறைச்சாலை எப்படிப்பட்டது என்பதை சொல்கிறேன். ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில். அப்படிப்பட்ட இடத்தில்தான் இருக்கிறார் என் மகள் கனிமொழி. நானும் எனது மூத்த மகள் செல்வியும் ஆறுதல் கூறும்பொழுது, அக்கா நீங்கள் அப்பாவைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் வழக்கை சந்திக்கிறேன். இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன். இவையெல்லாம் எதிர்கொள்கின்ற சக்தியைத்தான் திராவிட முன்னேற்றக்கழகம் நமக்கு வழங்கியிருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள் என்று கனிமொழி என்ற பெண்மணி சொல்லுகின்ற அளவுக்கு நாம் சக்தியைப் பெற்றிருக்கின்றோம்”
அதன் பிறகு கருணாநிதி அரங்கேற்றிய திட்டம் சிறப்பாகவே செயல்பட்டது. கலைஞர் டிவியின் முக்கிய அதிகாரியான ராஜேந்திரன் தனது சாட்சியத்தில் 200 கோடி ரூபாய் வாங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்ட இயக்குநர்கள் கூட்டத்தில், கனிமொழி கலந்து கொள்ளவே இல்லை. அந்த கூட்டம் நடந்தபோது, கனிமொழி தனது இயக்குநர் பதவியை ராஜினாமா செய்து விட்டிருந்தார். அவர் இயக்குநராக அப்போது இல்லை. அந்தக் கூட்டத்தில் இருந்து கையெழுத்து போட்டது, தயாளு அம்மாள்தான் என்று சாட்சியம் அளித்தார். ராஜேந்திரனின் இந்த சாட்சியங்கள், ஆவணங்களால் உறுதிப்படுத்தப்பட்டன. ஆவணங்களால் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு வழக்கில், தயாளுவை விட்டு, கனிமொழி ஏன் கைது செய்யப்பட்டார், கைது செய்கையிலும், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்கையிலும், சிபிஐ ஏன் இந்த விபரங்களை சரிபார்க்கவில்லை என்பது சிபிஐ அதிகாரிகளுக்கே வெளிச்சம்.
கனிமொழி அந்தக் கூட்டத்தில் இல்லை, கலந்து கொள்ளவில்லை என்றால், இயல்பாகவே அந்தக் கூட்டத்தில் இருந்த மற்றொரு “மிஸ் கருணாநிதி” தயாளு அம்மாள்தானே ? இந்த நேரத்தில்தான் தயாளு அம்மாளுக்கு அல்சைமர்ஸ் வியாதி என்ற புதுக் கதை உருவாக்கப்படுகிறது. அவரால் நடக்க முடியாது, பேச முடியாத என்று அடுத்த கதையை அவிழ்த்து விடுகிறார் கருணாநிதி. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிபுணர் குழு தயாளு அம்மாளை பரிசோதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டு, அதன்படி பரிசோதிக்க வந்த மருத்துவக் குழுவை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்தை வைத்து சரிக்கட்டினார் கருணாநிதி. அந்த மருத்துவர் குழுவின் அறிக்கையின்படி, நீதிமன்றம், சென்னையில் உள்ள நீதிபதியே தயாளு அம்மாள் வீட்டுக்கு சென்று சாட்சியாக விசாரிப்பார் என்று உத்தரவிட்டது. கேட்ட கேள்விகளில் பத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்தார் தயாளு. எது கேட்டாலும் புரியாதது போலவே விழிக்கும்படி அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது.
ஒரு வழியாக, மகள், மனைவி என்று அனைவரையும் காப்பாற்றி விட்டு, சரத்குமாரையும் ஆ.ராசாவையும் பலியாடாக்கலாம் என்று கருணாநிதி அகமகிழ்ந்திருந்த வேளையில்தான், அமலாக்கப்பிரிவின் குற்றப்பத்திரிக்கை இடியாக இறங்கியுள்ளது.
குசேகான் ப்ரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் என்ற அந்த நிறுவனம், கலைஞர் டிவியில் 200 கோடி ரூபாயை முதலீடு செய்தது, ஒரு சாதாரண கடன் பரிவர்த்தனை, பின்னாளில் வட்டியோடு அந்தத் தொகை திருப்பிச் செலுத்தப்பட்டது என்ற வாதத்தை அமலாக்கப் பிரிவு நிராகரித்துள்ளது.
உண்மையான கடன் தொகையாக இருந்தால் சாதாரணமாக திருப்பிச் செலுத்தப்பட்டிருக்கும். கலைஞர் டிவி கடன் தொகையை திருப்பிச் செலுத்தத் தொடங்கிய நாள் 23 டிசம்பர் 2010. அந்த நாள் ஒரு முக்கியமான நாள். அன்றுதான், ஆ.ராசாவை விசாரிப்பதற்காக சிபிஐ சம்மன் அனுப்பியது.
200 கோடி பணத்தை கடனாக கலைஞர் டிவி குசேகான் ப்ரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் மற்றும் சினியுக் பிலிம்ஸ் மூலமாக வாங்கியது 2008ல். 200 கோடி ரூபாயை ஒரு நிறுவனம் வாங்குகையில் ஒப்பந்தம் இல்லாமல் வாங்கப்படாது என்பது அனைவருக்கும் தெரியும். டிசம்பர் 2008ல் வாங்கிய 200 கோடி தொடர்பாக கலைஞர் டிவி சினியுக் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டது எப்போது தெரியுமா ? ஜனவரி 2011ல் சிபிஐ 2ஜி வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்து, சோதனைகள் மேற்கொண்ட பிறகே ஒப்பந்தம் போடப்படுகிறது.
சினியுக் பிலிம்ஸ் மற்றும் கலைஞர் டிவி இடையே பங்கு பரிவர்த்தனைகள் தொடர்பான ஒப்பந்தத்தின் நகல் எங்கே என்று கேட்டபோது, கடைசி வரை இரு நிறுவனங்களுமே அதிகாரிகளிடம் அதை அளிக்கவில்லை.
31 மார்ச் 2009 வரை, சினியுக் பிலிம்ஸ் கலைஞர் டிவிக்கு 25 கோடியை வழங்குகிறது. அந்த 25 கோடி, கலைஞர் டிவியின் பங்குகளை வாங்குவதற்காக என்று கூறப்படுகிறது. ஆனால் மார்ச் 31, 2009 அன்று முடிவடையும் கலைஞர் டிவியின் ஆண்டுக் கணக்கில், பங்குகளை வாங்குவதற்காக 25 கோடியை கலைஞர் டிவி வரவு வைக்கவில்லை. சிபிஐ விசாரணை தொடங்கிய பிறகு, அடுத்த ஆண்டு கணக்கில் 31 மார்ச் 2010 அன்று, 25 கோடியை கடன் என்று வரவு வைத்துள்ளனர் கலைஞர் டிவியினர். இந்த பரிவர்த்தனை, சிபிஐ விசாரணை தொடங்கிய பிறகு, கடனாக காண்பித்து, லஞ்சத்தை மூடி மறைக்க எடுத்த முயற்சி என்றே கருதுகின்றனர் அமலாக்கப் பிரிவினர்.
கலைஞர் டிவியை 200 கோடி ரூபாய் வந்தடைந்த காலகட்ட 23 டிசம்பர் 2008 முதல் 7 ஆகஸ்ட் 2009 வரை. இந்த தொகை மொரிஷியஸைச் சேர்ந்த எடிசலாட் மிற்றும் ஜென்எக்ஸ் எக்சிம் வென்ச்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் முதலீடு செய்த பிறகே வந்துள்ளதால், இது லஞ்சப் பணமே என்று முடிவு செய்யப்பட்டுள்ளது அமலாக்கப் பிரிவால்.
கலைஞர் டிவி 200 கோடியை எப்படித் திருப்பிக் கொடுத்துள்ளார்கள் தெரியுமா ? பல்வேறு இடங்களில் 13.25% முதல் 14.5% சதவிகிதம் வரை வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்துள்ளார்கள். இத்தனை அதிக சதவிகித வட்டியில் கோடிக்கணக்கில் பணம் வாங்குவது எந்த நிறுவனத்துக்கும் வழக்கமல்ல. இத்தனை அவசரமாக அதிக வட்டியில் பணத்தை திருப்பிக் கொடுத்ததே, ஆ.ராசாவின் கைதுக்குப் பிறகான அவசர நடவடிக்கை.
சினியுக் பிலிம்ஸ், குசேகான் ப்ரூட்ஸ் அன்ட் வெஜிடெபிள்ஸ், டைனமிக் ரியாலிட்டி மற்றும் கலைஞர் டிவிக்கு இடையே நடந்துள்ள பணப்பரிவர்த்தனைகள், எவ்விதமான கொலாட்டரல் செக்யூரிட்டியோ அல்லது, முறையான ஒப்பந்தங்களோ இன்றி, சாதாரண கொடுக்கல் வாங்கல் போல நடந்துள்ளது என்கிறது அமலாக்கப் பிரிவு.
இந்த காரணங்களினால், அமலாக்கப் பிரிவு, 19 நபர் மற்றும் நிறுவனங்களின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த 19 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் (1) ஆண்டிமுத்து ராசா (2) ஷாஹீத் உஸ்மான் பல்வா (3) வினோத் கே கோயங்கா (4) ஆஸிப் பல்வா (5) ராஜீவ் பி அகர்வால் (6) கரீம மொராணி, (7) சரத் குமார் (8) தயாளு என்கிற தயாளு அம்மாள் என்கிற தயாளு கருணாநிதி (9) கே.கனிமொழி (10) பி.அமிர்தம் (11) ஸ்வான் டெலிகாம் (இப்போது எடிசலாட் டிபி பிரைவேட் லிமிட்டெட் (12) குசேகான் ரியாலிட்டி (முன்னர் குசேகான் ப்ரூட்ஸ் அன்ட் வெஜிடெபிள்ஸ் (13) சினியுக் மீடியா அன்ட் என்டெர்டெயின்மென்ட் (முன்னர் குசேகான் பிலிம்ஸ்) (14) கலைஞர் டிவி (15) டைனமிக்ஸ் ரியாலிட்டி (16) எவர்ஸ்மைல் கன்ஸ்ட்ரக்சன்ஸ் (17) கான்வுட் கன்ஸ்ட்ரக்சன்ஸ் (18) டி.பி ரியாலிட்டி மற்றும் (19) நிஹார் கன்ஸ்ட்ரக்சன்ஸ்
எப்படியோ நாம் தப்பித்து விட்டோம்… நம் குடும்பத்தைக் காப்பாற்றி விட்டோம் என்று புளகாங்கிதத்தில் இருந்தார் கருணாநிதி.
ஆனால் விடாது கருப்பு.
what happened to tasmak tamil, a good article now regularly missed from savukku.
என்னைப் பொறுத்தவரை விடாது கருப்பு இந்த சவுக்குதான். என்ன நடந்தாலும் விடாமல் இந்த தளத்தை நடத்துவதாக சொல்லியிருக்கிறீர்களே. நீங்கள் ப்ளாகரில் பதிவிட ஆரம்பத்திதிலிருந்தே படித்து வருகிறேன்.
DMK as a party ceases to exist. It has lived its life…
சர்காரியா கமிசனுக்கு ஆன கதிதான் இதற்கும் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. பார்ப்போம்.
இந்த புதிய தளம் வந்த பிறகு இந்த தளத்தில் இதுவரை டாஸ்மாக் தமிழ் வரவில்லை… டாஸ்மாக் தமிழை சவுக்கு தொடர்ந்து எழுதவும்…
நண்பர்களே தயவு செய்து கீழே உள்ள லிங்க்-இ படித்து பார்க்கவும் . நம் நாட்டின் உண்மை நிலவரங்களை அப்படியே பிரதிபலிக்கிறது .உண்மையில் சவுக்கில் வருவது போலவே மிகவும் நல்ல கட்டுரை . படித்துவிட்டு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும் .
http://villavan.wordpress.com/2014/04/29
சமூக அக்கறை உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்கவும். சவுக்கை படிக்கும் அனைவரும் சமூக அக்கறை உள்ளவர்க்பால் என்ற நம்பிக்கையில் இதை அனுப்புகிறேன்.
நம் நாட்டில் பணம் படைத்tha வர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கைது என்றவுடன் எப்படித்தான் நெஞ்சுவழி வருகிறது என்று தெரிவதில்லை. நம் நாட்டில் உள்ள டாக்டர்களுக்கு, நீதிபதிகளுக்கு பணம் கொடுத்தால் போதும்
பொய்யான அறிக்கையும் , சாதகமான நீதியும் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
உண்மைகளைத்தெரிந்துகொள்ள ஒரு சூத்திரம் (ஃபார்முலா) கருணாவைப்பற்றி ஜெயா கூறுபவை அனைத்தும் உண்மை. ஜெயாவைப்பற்றி கருணா கூறுபவை அனைத்தும் உண்மை. காங்கிரசைப்பற்றி பா.ஜ.க. கூறுபவை அனைத்தும் உண்மை. பா.ஜ.க. பற்றி காங்கிரசு கூறுபவை அனைத்தும் உண்மை. இவர்கள் அனைவருமே தங்களைப்பற்றிக்கூறுபவை மட்டுமே முழுப்பொய்கள். இவர்கள் அனைவருமே 50% உத்தமர்கள் ஆகின்றனர். என்ன, சரிதானே?
இது ஒரு கூட்டுக் கொள்ளை – இவர்கள் சுருட்டிய பணம் எந்த ஜென்மத்திலும் திரும்ப வராது – யாருக்கும் எந்த தண்டனையும் கிடைக்காது.
இந்த உடன் பிறப்பு கடிதமெல்லாம் இவர்களுக்குள் நடக்கும் ஒரு பேரம் – மக்களை முட்டாளாக்கும் யுக்தி.
மேலிருந்து கீழ்வரை அனைவரும் திருடர்கள். இந்த நாட்டை உடைத்தாலொழிய, 130 கோடி மக்களுக்கு எந்த ஜென்மத்திலும் விடிவுகாலம் வராது.
Anbulla NM avargale, indha vayadhilum thangaludaya kobam varaverkkavendiyadhe. Ungalukke ipdinna, enna maadhiri Judiciaryala-rape aana chinna pasanga engalukku epdi irukkum.
Naattai udaikka vendiyadhilla, indha naadharithigalai udhaiththale podhu, mainly therdhalil. still we vote only 45-52%. The day it touches 90%+, most of the filth will go away.
Don’t get fooled by psuedo-secular folks anymore. As many knows, this is internet/information age. The then sarkaria report is getting unearthed and shared even today.
No leader can get away by doing corruption/atrocities as they did in the past.
Secularism or corruption, in the age of AAP, internet, things soon will get better.
savukku.in
neethiyaithedi.org
http://indiancorruptjudges.com/
are all in the right direction. let us do our bit to improve things.
மீடியாக்களின் லாஜிக் புரியவில்லை ஆள்பவர்களை சொல்லும் போது மிக மென்மையான போக்கினையும் உடனடியாக கலைஞரையும் தாக்காமல் எந்த மீடியாக்களும் சமீபகாலமாக செய்தி வெளியிடுவதில்லை என்ற போக்கினை கடைபிடிக்கின்றனஉம் வரதராஜன் குடும்பத்திற்கும் ஜவஹர் குடும்பத்திற்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக குமுதம் திமுக வை தாக்கி எழுதுவது சொந்த நலனுக்காக ஓடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காக பாடுபடும் தலைவர்களை தாக்கி எழுதுவது எந்த வகை பத்திரிகாதர்மம்
தாங்கள் தெரிவித்துள்ளபடியே வைத்து கொண்டாலும் சரத் ராசா போன்றவர்கள் என்ன சின்னகுழந்தையா கலைஞரடம் ஏமாற திமுக மீது ஏன் பழி விழுந்தது என்பதனை பற்றி எல்லோருக்கும் நன்கு புரியும் சர்க்கரியாவாக்கட்டும் 2ஜி யாகட்டும் சிலரை சில காலம் ஏமாற்றலாம் ஆனால் பலரை பல காலம் ஏமாற்றமுடியாது
kalingar elloraiyum ellakaalamum ematruvar .endru mudikkavendum.
Why are the tapes given by you not taken seriously by the court?. That has lots of evidence. Is that not acceptable in the court of law?
methammula 1 lake 74 thousand crore enke ?
sethaanda Sekaru… :))
mikka magizhchi
ஆனால் விடாது கருப்பு.
ஆனால் விடாது கருப்பு.
ஆனால் விடாது கருப்பு.
ஆனால் விடாது கருப்பு.
ஆனால் விடாது கருப்பு.
ஆனால் விடாது கருப்பு.
ஆனால் விடாது கருப்பு.
ஆனால் விடாது கருப்பு.
ஆனால் விடாது கருப்பு.
ஆனால் விடாது கருப்பு.
ஆனால் விடாது கருப்பு.
ஆனால் விடாது கருப்பு.
ஆனால் விடாது கருப்பு.
ஆனால் விடாது கருப்பு.
ஆனால் விடாது கருப்பு.
ஆனால் விடாது கருப்பு.
ஆனால் விடாது கருப்பு.
நன்றி கறுப்பு,
நன்றி கறுப்பு,
நனறி கறுப்பு,
நன்றி கறுப்பு,
நன்றி கறுப்பு,
நன்றி கறுப்பு,
நன்றி கறுப்பு,
இவ்வளவு மலத்தையும் தானும் தன் குடும்பமும் உடல் முழுக்க பூசிக்கொண்டு பரிசுத்தவான்போல “சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு தொடர்கதை” என்று கடிதம் எழுத காண்டாமிருகத்தால் எப்படித்தான் முடிகிறது?
arumaiya sonneenga.
ஊர்குருவிசில நேரம் பருந்து என்று நினைப்பதுண்டு