வெங்கடாச்சலம். இந்தப் பெயரைக் கேட்டாலே தமிழகத்தில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அனைவரும் நடுங்குவார்களோ இல்லையோ, பம்முவார்கள். அப்படியொரு சக்திவாய்ந்த பெயர் இந்த வெங்கடாச்சலம்.
ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் வேந்தர்தான் இந்த வெங்கடாச்சலம். இவரைக் கிட்டத்தட்ட கடவுள் என்றே சொல்லலாம். பார்ப்பவர் அனைவரும் காலில் விழாத குறையாக வணங்குபவர் கடவுள்தானே…. ?
அப்படிப்பட்ட வெங்கடாச்சலத்தை சிபிஐ கைது செய்தது என்று அறிந்ததும் அதிர்ச்சி, ஆனந்தம், மகிழ்ச்சி எல்லாமுமே. ஆனால், நம் நாட்டில் சட்டத்தின் முன் எல்லோரும் சமமா என்ன ?
அப்படி என்ன குற்றம் செய்து விட்டார் வெங்கடாச்சலம் ? ஒரு ஏழெட்டு வெளிநாட்டுக் கார்களை வாங்கி விட்டார். இது ஒரு குற்றமா ? ஒரு எம்பிபிஎஸ் சீட்டுக்கு 75 லட்சம் வாங்கும் ஒரு கல்லூரியின் வேந்தருக்கு சொகுசுக்கார்கள் வாங்கக் கூட உரிமையில்லையா ? சமீபத்தில் ராமச்சந்திர பல்கலைக்கழகத்தில் எம்.டி ரேடியாலஜி சீட்டுக்கு ஏகத்துக்கும் டிமான்ட். கடைசியில் என்ன ஆனது தெரியுமா ? பெங்களுரில் சீட்டை ஏலம் விட்டார்கள். ஏலத்தில் வெற்றி பெற்றவர் செலுத்திய தொகை என்ன தெரியுமா ? நாலேமுக்கால் கோடி. இது போல பல்வேறு சீட்களை வைத்து வியாபாரம் செய்யும் ஒரு நபர், ஒரு எட்டு வெளிநாட்டுக் கார்களை வாங்கி வைத்திருந்தார். இதற்குப் போய் சிபிஐ கைது செய்து விட்டார்கள்.
வெளிநாட்டுக் கார்களை நேரடியாக வாங்குவதென்றால் கிட்டத்தட்ட 300 சதவிகித வரி கட்ட வேண்டும். என்னதான் பணம் கொழுத்த முதலை என்றாலும், எதற்காக அரசாங்கத்துக்குப் போய் வரி கட்டிக் கொண்டு ? அதனால்தான், எளிமையான முறையில் அலெக்ஸ் ஜோசப் மூலமாக கார்களை வாங்கினார்.
நீங்களோ நானோ கார் வாங்க வேண்டும் என்றால், முதலில் பழைய கார்களை விசாரிப்போம். சரிவரவில்லையென்றால், ஆல்டோ. இன்டிகா போன்ற கார்களை வாங்கலாம் என்று திட்டமிடுவோம். ஆனால், பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்றே தெரியாத வெங்கடாச்சலம் போன்ற ஆட்களால் ஆல்டோ, இன்டிகா போன்ற கார்களில் பயணம் செய்வதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இருப்பதிலேயே விலை உயர்ந்த கார் எது என்று விசாரிப்பார்கள். அந்த காரையும் நேர்மையாக வரி கட்டி வாங்க மாட்டார்கள். அற்பத்தனமாக திருட்டுத்தனத்தில் ஈடுபடுவார்கள். ஏன் இவ்வளவு துணிச்சலாக திருட்டுத்தனத்தில் ஈடுபடுகிறார்கள் தெரியுமா ? நம்மை யாருமே எதுவுமே செய்ய முடியாது என்ற துணிச்சலே. நாம்தான் காவல்துறை, நாம்தான் நீதிமன்றம், நம்மை யார் என்ன செய்து விட முடியும் என்ற இறுமாப்பே இப்படி நடந்து கொள்வதற்கு காரணம்.
வெங்கடாச்சலத்தின் செல்வாக்குக்கு மற்றொரு உதாரணம் உச்சநீதிமன்றம் மருத்துவ கல்லூரிகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தது. இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் சேர்த்து ஒரு பொது நுழைவுத் தேர்வு இருந்தது. அந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சியடையாதவர்கள் மருத்துவராக முடியாது என்ற கட்டுப்பாடு இருந்தது. இப்படியெல்லாம் கட்டுப்பாடுகள் வைத்தால், 35 மதிப்பெண்கள் பெற்றவர்களெல்லாம் எப்படி மருத்துவர் ஆவது ? இதன் காரணமாக, தனியார் மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் சேர்ந்து இந்த பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
அப்போதைய தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் ஓய்வு பெறும் நாளன்று அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பு வெளிவந்த அன்று காலை, ஒரு வழக்கறிஞர், இணையதளத்தில் இந்தத் தீர்ப்பு இப்படித்தான் வரப்போகிறது என்று ஆரூடம் சொன்னார் அவர் கூறியது போலவே அச்சு பிசகாமல் தீர்ப்பு வந்தது. வழக்கறிஞர் என்றல்ல, வெங்கடாச்சலம் மூலமாக பல கல்லூரி அதிபர்களுக்கும் அனைத்து விபரங்களும் தெரிந்திருந்தது என்றால் வெங்கடாச்சலத்தின் திறமையையும் வலிமையையும் நாம் புரிந்து கொள்ளலாம்.
இந்தத் தீர்ப்பு குறித்து, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், வெளிப்படையாக விமர்சித்தார். இதன் பிறகு, ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், எனது எதிரிகளில் பிரசாந்த் பூஷணும் ஒருவர் என்றார். அவர் ஏன் உங்களை எதிரியாக நினைக்கிறார் என்று பிரசாந்த் பூஷணிடம் கேட்டபோது, அவர் இவ்வாறு பதிலளித்தார். ”
I can understand why he thinks that. It is because I told him to recuse himself from several cases which he should not have dealt with. He also knows that I was openly talking about the fact that his judgment in the NEET case had been leaked well before it was delivered. Although he said it was not leaked from his chamber, but his body language gave him away. It was obviously given to the private medical colleges well before it was given to his brother judge Justice Dave.
The draft judgment was ready at least by the first of July because on that date my application was listed before him and that time I had information that the draft judgment was already with these private medical colleges. Therefore, I am not surprised at his statement. Every corrupt judge would regard me as his enemy because I have been speaking out against corrupt judges and corruption. I am not surprised he regards me as his enemy.”
’எனக்கு புரிகிறது கபீரின் ஆத்திரம். பல வழக்குக்களை அவர் விசாரிக்கக்கூடாது என நான் நேரடியாகவே கோரியிருக்கிறேன். இந்த நேரடித் தேர்வு வழக்கில் இப்படித்தான் தீர்ப்பு வரப்போகிறது என்பதை நான் கணித்து பலரிடம் வெளிப்படையாகவே பேசிவந்தது கபீருக்குத் தெரியும். தனது அலுவலகத்திலிருந்து தீர்ப்பு விவரங்கள் கசியவில்லை என்றார் ஆனாலும் அவரது உடல் மொழி அவரைக் காட்டிக்கொடுத்தது….சக நீதிபதி தவேக்கு முன்பே தீர்ப்பின் நகல் தனியார் கல்லூரி அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. ஜூலை முதல் நாளன்று என்னுடைய வழக்கு அல்டமாஸ் கபீர் முன் வருமென்று அறிவிக்கப்பட்டது, அப்போதே தீர்ப்பு தயாராகியிருக்கவேண்டும், கல்லூரி அதிபர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கவேண்டும்… கபீர் என்னை தன்னுடைய விராதி என வர்ணித்தது எனக்கொன்றும் வியப்பை அளிக்கவில்லை… நான் ஊழல் பேர்வழிகளைப் பற்றித் தொடர்ந்து பேசிவருவதால் அப்படிப்பட்டவர்கள் என்னை நண்பனாகவா நினைப்பார்கள்?” என்றார் சாந்தி பூஷன்.
பாதாளம் வரை மட்டுமல்ல உச்சநீதி மன்றம் வரையும் பணம் பாயும். வெங்கடாச்சலத்திடம் கொட்டிக்கிடக்கிறது அது. அப்புறம் கேட்பானேன் அனைவரும் எழுந்து நின்று சலாம் அடிக்க அல்லது காலில் விழ.
காவல்துறையின் உயர் அதிகாரிகள் அனைவரும் இவரது ஆளுகைக்கு உட்பட்டவர்களே….. சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருக்கும் டி.கே.ராஜேந்திரனின் மகள் ராமச்சந்திராவில்தான் படிக்கிறார். உளவுப் பிரிவு இணை ஆணையர் வரதராஜுவின் இரண்டு பிள்ளைகளும் ராமச்சந்திராவில்தான் படிக்கிறார்கள். இது போல பல முக்கிய உயர் உயர் அதிகாரிகளின் பிள்ளைகள் அனைவரும் ராமச்சந்திராவில்தான் படிக்கிறார்கள். இங்கே முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயம், மிகப் பெரிய அதிகாரிகள் என்பதால், அவர்களுக்கு இலவசமாக சீட் கிடைக்கும் என்று நினைத்து விடாதீர்கள். யாராக இருந்தாலும் பணம்தான். நீங்கள் உயர் உயர் அதிகாரியாக இருந்தால், இரண்டோ அல்லது மூன்றோ லட்சம் குறைத்துக் கொள்வார். அவ்வளவுதான்.
கடந்த வாரம், சம்மன் செய்து விசாரணைக்காக அழைக்கப்பட்ட வெங்கடாச்சலத்தை, சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். யார் கைது செய்யப்பட்டாலும், அவர்களை சிறைக்கு அனுப்பும் உத்தரவை பிறப்பிப்பது, நீதிபதியே. வழக்கமாக காவல்துறை அதிகாரிகள், 14 அல்லது 15 நாட்களுக்கு கைது செய்யப்பட்டவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு வேண்டுகோள் விடுப்பார்கள். அதன்படி, நீதிபதியும் உத்தரவிடுவார். ஆனால், சிபிஐ நீதிபதி கிருஷ்ணமூர்த்தி வெங்கடாச்சலத்துக்கு ஒரு நாள் நீதிமன்றக் காவல் என்று உத்தரவிட்டார். இந்த ஒரு நாள் நீதிமன்றக் காவல் கேள்விப்பட்டதேயில்லை. நீதிமன்றக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், புழல் சிறைக்கு அண்ணனை அழைத்துச் செல்கிறார்கள். சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் அனைத்து கைதிகளையும், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது வழக்கம். அதன்படி, ஸ்டான்லி மருத்துவமனையில் வெங்கடாச்சலத்துக்கு பரிசோதனை நடக்கிறது.
வெங்கடாச்சலத்தை பரிசோதித்த மருத்தவர்கள், இவருக்கு கடுமையான நெஞ்சு வலி இருக்கிறது. ஒரு இன்ச் நகர்த்தினாலும் உயிருக்கே ஆபத்து என்றனர். காவல்துறை அதிகாரிகள் என்ன செய்ய முடியும் ? சரி என்று அங்கேயே அட்மிட் செய்தனர். பிறகு, வழக்கத்துக்கு மாறாக, சிபிஐ நீதிபதி கிருஷ்ணமூர்த்தி, மருத்துவமனைக்கே சென்று, வெங்கடாச்சலத்தை 15 நாட்கள் ரிமாண்டு செய்தார்.
வெங்கடாச்சலம் மருத்துவமனையில் இருந்த அந்த ஒரு சில நாட்களில் ஏராளமான பார்வையாளர்கள். ஸ்டான்லி மருத்தவமனையின் மொத்த மருத்துவர்களுமே அங்கே குழுமினார்கள். வெங்கடாச்சலத்துக்கு கை கால் அமுக்கி விடுவதைத் தவிர மற்றதனைத்தையும் செய்தார்கள். இப்படி மகிழ்ச்சியாக மருத்துவமனையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார் வெங்கடாச்சலம்.
கைது செய்யப்பட்ட அன்று இரவு வரை, மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தார் வெங்கடாச்சலம். அப்போது, அவர்களிடம். எப்போ சார் ஸ்டேட் போலீஸ் வரும் என்று நச்சரித்தவண்ணம் இருந்திருக்கிறார் வெங்கடாச்சலம். ஸ்டேட் போலீஸ், நமது கைப்பாவை என்பது, வெங்கடாச்சலம் அறியாததா என்ன ? அதுவும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியின் மகளே அவரது கல்லூரியில் படிக்கையில், அது இவரது ஏவல் துறை அல்லவா ?
இவ்வாறு அவர் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கையில் வெங்கடாச்சலத்தை கஸ்டடி எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தனர் சிபிஐ அதிகாரிகள். வெங்கடாச்சலத்தின் ஜாமீன் மனுவும் நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்காக வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, கஸ்டடி கேட்ட சிபிஐயின் மனுவை தள்ளுபடி செய்தார். கஸ்டடியில் விசாரிக்க போதுமான ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பிக்கவில்லை என்ற காரணத்தினால் தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார். அதே நேரத்தில் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தார்.
(கனம் கோர்ட்டார் அவர்களே, அத்தகைய ஆதாரங்களை சேகரிக்கவே குற்றம் சாட்டப்படுபவரை கஸ்டடியில் வைத்து விசாரிப்பார்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்.)
ஆனால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யும் அளவு துணிவா என வியக்கவேண்டாம். பொதுவாகவே சிபிஐ நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டால், அந்த நீதிபதிகள் கொஞ்சம் ஒழுங்காக இருப்பார்கள். அது வரை வசூலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், சிபிஐக்கு வந்ததும், மிகுந்த நேர்மையாளர்கள் போல நடந்து கொள்வார்கள். சிபிஐ மீது அவ்வளவு பயம். இந்த கிருஷ்ணமூர்த்தியோ ஒரு வருடத்துக்குள் ஓய்வு பெற உள்ளார். ஓய்வு பெறும் நேரத்தில் சிபிஐ சிக்கலை இழுத்து விட்டால்? எனவே பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் விலாங்கு மீனாக, சிபிஐ கஸ்டடி இல்லை ஆனால் ஜாமீனும் இல்லை என்ற ரீதியில் தீர்ப்பு.
வெங்கடாச்சலம் வழக்கில் அதன் பிறகு நடந்தவையே இன்னும் சுவையானவை. கோடை விடுமுறை காலங்களில், விடுமுறை நீதிமன்றங்கள் செயல்படும். அந்த நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்வது, திங்கள் மற்றும் செவ்வாய். என்ன வழக்கு, ஏன் அவசரம் என்பன போன்றவற்றை, விடுமுறை நீதிமன்ற பதிவாளரிடம் விளக்கி, அவர் அனுமதித்தால் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். விசாரணை புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும். இதைத் தவிர்த்து வேறு நாட்களில் தாக்கல் செய்யவோ, வாதிடவோ முடியாது.
இந்த வாரத்துக்கு விடுமுறை கால நீதிபதி, நீதி நாயகன் கர்ணன். திங்கள் மற்றும் செவ்வாய் அன்றுதானே வழக்கு தாக்கல் செய்ய முடியும். ஆனால் வெங்கடாச்சலத்தின் ஜாமீன் மனு குறித்து, வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர், அவசர மனுவாக விசாரணை செய்ய வேண்டும் என்று கோருகிறார். துடிதுடித்தார் கர்ணண்….. எங்கே சிபிஐ வழக்கறிஞர். ? மதியம் நான் இதை விசாரணைக்கு எடுக்கும்போது சிபிஐ பதில் மனு தயாராக இருக்க வேண்டும். தாமதித்தால் நான் ஜாமீன் வழங்கி விடுவேன் என்று எச்சரித்தார் (தாக்கல் செஞ்சா நியாயப்படி விசாரிப்பீங்களா ?)
சிபிஐ அமைப்பை பொறுத்தவரை, உயர்நீதிமன்றத்தில் எந்த மனு தாக்கல் செய்வதாக இருந்தாலும், அதை இணை இயக்குநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் என்றால் இயக்குநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். எதற்காக இந்த ஏற்பாடு என்றால், சிபிஐ போன்ற சிறந்த அமைப்பு, தப்பித் தவறிக் கூட நீதிமன்றத்தில் தவறாக எதையும் தாக்கல் செய்து விடக்கூடாதே என்பதற்காகத்தான்.
ஆனால் கர்ண மகாராசா இப்படி உத்தரவிட்டதும், அடித்து பிடித்துக் கொண்டு வேலை செய்தனர் சிபிஐயின் மூத்த அதிகாரிகள். கர்ணன் கேட்டபடியே, மதியம் பதில் மனுவையும் தாக்கல் செய்கிறார்கள்.
ஜாமீன் வழங்குவதை எதிர்த்து கடுமையாக வாதாட வேண்டிய சிபிஐ வழக்கறிஞர் சந்திரசேகரோ, கல்லுருண்டை மாதிரி நிற்கிறார். “மை லார்ட்…. இன்வெஸ்டிகேஷன்” என்று மென்று விழுங்குகிறார். இதற்குள் கர்ணன்… “என்னங்க கேஸ் இது… ? இத்தனை வருஷம் கழிச்சு இதை ஏன் விசாரிக்கிறீங்க ? அவர்தான் எவ்வளவு வரி கட்டணுமோ அதை கட்டறேன்னு சொல்லிட்டாருல்ல… அப்புறம் எதுக்குங்க அரெஸ்ட் பண்றீங்க ? வெரி பேட்” என்கிறார். பதில் மனுவை தருகிறார்கள். வாங்கிப் பார்த்து அதைக் கடாசிவிட்டு, ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறார் கர்ணன்.
சிபிஐ வழக்கறிஞரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்! மத்திய புலனாய்வுத்துறை தொடுக்கும் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மிக மிக முக்கிய புள்ளிகளாக இருப்பார்கள். கல்வித் தந்தைகளாக இருப்பார்கள். அது போன்ற வழக்குகளிலெல்லாம் உள்குத்தில் ஈடுபடுபவர்தான் சந்திரசேகர். வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலரது கல்வி ஆலயங்களில் நீதிபதிகளின் அருமை வாரிசுகளுக்கு இடம் பெற்றுத் தரும் வல்லமை படைத்தவர் சந்திரசேகர்.
முன்பொருமுறை சுரானா என்ற மார்வாடி வணிகரின் 400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் மார்வாடிக்கு சாதகமாக இவர் நடந்து கொள்ள இருந்தை, சிபிஐ அதிகாரிகள் கண்ணும் கருத்துமாக கண்காணித்த காரணத்தால் தடுத்தது குறித்து முன்னரே விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.
இவர் இரண்டாவது முறையாக சிபிஐ வழக்கறிஞராக நியமிக்கப்பட்டதற்கு காரணம் தற்போது உளவுத்துறை டிஜிபியாக இருக்கும் அசோக் குமார். அவரது பணி மூப்பு தொடர்பான வழக்கை எண்பது மற்றும் தொண்ணூறுகளில் நடத்தி வெற்றி கண்டவர் சந்திரசேகர்தான். அந்த நன்றியில், நல்லெண்ணத்தில் இரண்டாம் முறையாக அவர் சிபிஐ வழக்கறிஞராக உதவியிருக்கிறார் டிஜிபி.
அசோக் குமாரிடம் உள்ள ஒரு குறைபாடு, யாராவது ஒருவரை நல்லவர் என்று நம்பினால், அந்த கருத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டார். அது சந்திரசேகர் போன்றோருக்கு வசதியாகவிருக்கிறது.
2011ம் ஆண்டில் ஜெயலலிதா மீதான பிறந்தநாள் பரிசு வழக்கில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. வழக்கு கே.என்.பாஷா முன்னிலையில் வர இருந்தது. பாஷாவிடம் வழக்கு விசாரணைக்கு வந்தால், ஊற்றி மூடி விடுவார் என்றுணர்ந்தோ என்னவோ சிபிஐ அதிகாரிகள் தாமதம் செய்கின்றனர். அப்போது சந்திரசேகர் துடித்தார் பாருங்கள்…. அப்படி ஒரு துடிப்பு. டெல்லிக்கு பேசினார். டெல்லியில் இருந்து உடனடியாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவு வந்ததும், வேறு வழியின்றி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் எதிர்பார்த்தது போலவே ஜெயலலிதா மீதான வழக்கை ரத்து செய்தார் கே.என்.பாஷா. இதே போல, ஜெகதரட்சகனின் மகள் மற்றும் மகன் மீதான வழக்கில் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவும் பெருமளவில் சந்திரசேகர் உதவி செய்துள்ளார் என்கின்றன சிபிஐ வட்டாரங்கள்.
இப்போதெல்லாம், சந்திரசேகரனின் வண்டவாளங்கள் சிபிஐ அதிகாரிகளுக்கு முழுக்க தெரிந்து விட்டதால், அவருக்கு அடுத்த பணி நீட்டிப்பு வழங்கவில்லை. ஆனால் மங்குணி சிபிஐ அதிகாரிகள் சந்திரசேகருக்கு அடுத்த வழக்கறிஞரை தேர்வு செய்வதில் காட்டி வரும் தாமதத்தினால் இவர் தொடர்ந்து சிபிஐ வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார்.
அப்படிப்பட்ட புத்திசாலிக்கு வெங்கடாச்சலம் ஜாமீன் பெற என்ன செய்யவேண்டும் என்பது தெரியாதா?
சமீபத்தில் நர்சிங் கல்லூரிகளுக்கான ஆடிட் பணியை செய்ய வேண்டிய அதிகாரியான 2005ம் ஆண்டு பேட்ச்சைச் சேர்ந்த ஐஏ அன்ட் ஏஎஸ் அதிகாரி பரமசிவத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவர் புழல் சிறையில் இருந்தார். கர்ணன் நீதிபதி என்றதும் அவசர அவசரமாக ஜாமீன் மனு கர்ணன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து வந்தனர். மனு விசாரணையின் போது, கர்ணன், சிபிஐ வழக்கறிஞரைப் பார்த்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார். சந்திரசேகர், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கூறியதும், நான்தான் ஜாமீன் வழங்கப் போகிறேனே…. பிறகு எதற்கு பதில் மனு என்று கூறி, உடனடியாக ஜாமீன் வழங்கினார்.
இப்போதும் நீதிபதி கர்ணன் இரண்டு நாட்கள் ஜாமீன் விசாரிக்கும் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருப்பார் என்பதை அறிந்து அவர் முன் வெங்கடாச்சலம் தொடர்பான வழக்கை எடுத்துச் செல்லும் தொழில் இரகசியமெல்லாம் சந்திரசேகருக்கு அத்துபடி.
வெங்கடாச்சலம் மட்டுமல்ல கார் கடத்தலின் கதாநாயகன் அலெக்ஸ் ஜோசப்பும் கர்ணனின் கருணையால் உய்வு பெற்றார். அலெக்ஸ் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது கர்ணன் கடுமையாகவே கோபப்பட்டார்.
“குற்றப்பத்திரிக்கைதான் தாக்கல் செய்தாயிற்றே…. எதற்காக இவரை இன்னும் சிறையில் வைத்திருக்கிறீர்கள்… பதில் மனுவெல்லாம் தேவையில்லை. நான் ஜாமீன் தரப்போகிறேன். வேண்டுமென்றால் அவர் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்துக் கொள்ளுங்கள்” என்றார். அலெக்ஸ் ஜோசப் மீது நிலுவையில் உள்ள மற்றொரு வழக்கு போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்றது குறித்து என்பதை நீதி நாயகனுக்கு யார் புரிய வைப்பது ? சந்திரசேகருக்கு அப்படிப் புரியவைக்க பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன !
இந்த வழக்குகளிலெல்லாம், உச்சநீதிமன்றம் சென்று ஜாமீன் மனுவை ரத்து செய்ய வைக்கலாம்தான். ஆனால், சிபிஐ போன்ற அமைப்புகளில் உச்சநீதிமன்றம் செல்ல பல்வேறு படிகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். அதற்குள், ஒரு வருடம் ஆகி விடும். இந்த நாட்டில் இன்னமும் ஓரளவுக்கு நம்பிக்கையோடு உள்ள ஒரு அமைப்பு, சிபிஐ. இது போன்ற ஒரு அமைப்புக்கே, பதில் மனு தாக்கல் செய்யக் கூட அனுமதி மறுக்கிறார் என்றால், கர்ணன் யார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த அகர்வால், வேதனையோடு, கர்ணன் பற்றி புகார் அனுப்பி, கிட்டத்தட்ட மூன்று மாதங்களான பின்னாலும் இது வரை அவரை சிக்கிம் அல்லது வேறு ஏதாவது மாநிலத்திற்கு மாற்றாமல் வைத்திருந்தால் அவர் நினைத்ததை ஏன் செய்யமாட்டார்?
அகர்வால் ஓரம் கட்டினால் பகிரங்கமாகவே மோதுகிறார். தேசீய பட்டியலினத்தவர் ஆணையத்திடம் முறையிடுகிறார் தான் தாழ்த்தப்பட்டவர் என்பதால் பழிவாங்கப்படுவதாக. செய்தியாளர்களை சந்தித்து எச்சரிக்கை விடுகிறார்.
இந்நிலையில் அகர்வால் மிரண்டாரா உச்ச நீதிமன்றமே மிரண்டதா நமக்குத் தெரியாது, இறுதியில் அகர்வாலின் வேண்டுகோள் நிறைவேற்றப்படவில்லை.
தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரி அப்பதவியில் ரெகுலரைஸ் ஆகவேண்டும், எனவே எப்பிரச்சினையிலும் சிக்கிக்கொள்ள விரும்பமாட்டார் என்கின்றன நீதித்துறை வட்டாரங்கள்.
எனவே நீதிபதி கர்ணன் போன்றோருக்கு ஜாக்பாட்தான். அவர் விரும்பும்வண்ணம் ஜாமீன் நீதிமன்றப் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
அவரது ஆங்கிலப் புலமை அனைவரும் அறிந்ததே. அப்படியிருக்கும்போது பக்கம் பக்கமாக அவரது தீர்ப்புக்கள் எப்படி எழுதப்படுகின்றன என்பது தனிக்கதை.
இத்தகைய பின்னணியில்தான் கல்வியை வியாபாரம் செய்து கொழிக்கும் சமூக விரோதிகள், சட்ட விரோதமாக காரை கடத்தி, வரி ஏய்ப்பு செய்வதைக் கண்டுபிடித்து ஓர் அமைப்பு நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றங்கள் கைகொடுக்கின்றன.
என்ன செய்யலாம்? சவுக்கில் புலம்பலாம். சட்டம் என்பது இருளில் மூழ்கிவிடாமல் அனைவர்க்கும் நீதி கிடைக்கும் நாள் வாராதா என ஏங்கலாம். வேறு என்ன செய்ய முடியும் ?
the more i read savukku, the more i lose the respect for Indian Judiciary
ஒவ்வொரு இந்தியனுக்கும் “பொறுப்பு” வந்தால் தான் இந்த நிலை மாறும். இந்திய ஜனநாயகம் கொஞ்ச நாளக்கி விடுமுறையில் சென்றால் நன்றாக இருக்குமோ என்று ஏங்க துடிக்குது சவுக்காரே!
ராணுவ ஆட்சி இருந்தால் இவர்களை கட்டு படுத்தலாமா என்று யோசித்து பார்க்கிறேன்
MR. SAVUKKU,
There is a valid question by Justice Karnan, “If Venkatachalam need to be punished for the tax issue, then the Customs officers who decided the tax are the one to be punished”
I believe its exactly valid question. How can Venkatachalam can be punished in this case? As per Karnan, the custom officers should have been arrested for the low tax fixed right?
Let the people know the answer for it.
Krishna.
ஏண்டா மண்ட கிருஷ்ணா,
சவுக்கு எழுதுறது எல்லாமே சட்டம் பேசிக்கிட்டே எப்டி நீதியரசர்,வக்கீல், அரசியவாதி, போலீஸ் ஆபிசர் எல்லாம் ஆட்டய போடுறானுங்க அப்டினுதான்..இங்கேயே வந்து ஓட்ட சட்டம் பேசுறியே ..மானங்கெட்ட ஈத்தர பயலே ….போய் எலெக்சன்ல நின்னு குவார்ட்டர் , பிரியாணி வாங்கிகிட்டு ஓட்டு போடுவான் பாரு மாக்கானுங்க ..அவன்கிட்ட பொய் ஒன ஓட்ட சட்ட பிரசங்கம் பண்ணுடா..
you are absolutely correct…..
Mr. Krishnan, you are absolutely correct… But you should open your another eye…. Do not see this with only one eye… you should look in two eyes… Hope you catch my point…
சவுக்கில்
புலம்பலாம்…..காலம் இப்படியே போகப் போகிறதா என்ன?
#REF Kumar#
/// Nigeria’s militant Islamist group Boko Haram – which has caused havoc in Africa’s most populous country ///
அய்யோ உனது வீட்டுக்கூரையில் தீ, ஏதாவது செய்யென்று சொன்னால் “முஸ்லிம் வீட்டுக்கூரையிலும் தீ – அப்பாடா, இனி எனக்கு எந்த கவலையுமில்லை” என்று சொல்லும் காபிரை எப்படி திருத்த முடியும்?.
“நான் எக்கேடு கெட்டாலும் சரி – என் கண் முன்னால் முஸ்லிம் நல்லாயிருக்கக் கூடாது” என நினைக்கும் காபிருடன் எப்படி முசல்மான் சேர்ந்து வாழமுடியும்?
—–
காபிர்களை ஒழி என்று கூக்குரலிடும் நைஜீரியாவில் மூன்று லட்சத்துக்கும் மேலான ஹிந்துக்கள் பிழைக்கின்றனர் – இவர்களை என்னவென்று அழைப்பது?
அவன் அவனுடைய தேசத்தை அயோக்கியரிடமிருந்து மீட்க ஜிஹாத் செய்கிறான் – நீ உனது தேசத்தை அயோக்கியனிடம் அடகு வைத்துவிட்டு முஸ்லிம், கிருத்துவ நாடுகளுக்கு துண்டக்காணோம் துணியக்காணோமென ஓடுகிறாய் – உனக்கு எந்த ஜென்மத்தில் விடிவுகாலம் கிட்டும்?.
உன்னை நினைத்தால் அழுவதா சிரிப்பதா புரியவில்லை.
why don’t you go and live in pakistan??
Blast near Kohati Gate in Pakistan, 4 injured
India Today-16 minutes ago
At least four persons were injured in an explosion near Kohati Gate in Peshawar on Saturday
Blast Hits Pakistani Army Convoy, Killing 9 Soldiers
New York Times-08-May-2014
ISLAMABAD, Pakistan — A powerful explosion hit a Pakistani Army convoy early Thursday in the North Waziristan tribal region, killing at least
Blast in SW Pakistan claims two lives
Kuwait News Agency-08-May-2014
ISLAMABAD, May 8 (KUNA) — At least two people were killed and over 15 others were wounded in a powerful blast in Quetta city
Blast Kills 9 Soldiers in Northwest Pakistan
Voice of America-08-May-2014
A roadside bomb in Pakistan’s northwest has killed at least nine … Pakistani authorities said Thursday’s blast in the North Waziristan
Pakistan blast: Three Karachi pupils killed at seminary
BBC News-28-Apr-2014
At least three children have been killed and several others wounded in a blast at a religious school in the southern Pakistani city of Karachi
14 Militants Killed in Pakistan Gunfight, Bomb Blast
NDTV-06-May-2014
Miranshah, Pakistan: At least 12 militants died during a shootout between rival factions in a restive Pakistani tribal region near th
Two killed, 16 injured in Quetta blast
Geo News, Pakistan-08-May-2014
QUETTA: At least two people were killed and 16 others injured in an explosion near double road here on Thursday. According to initial police
WE GOT HALF PAKISTAN IN 1947 — Another half Pakistan and 400 MILLION Muslim brothers are stuck with the devil Bharat Mata — Time for PAKISTAN-2.
டேய் பாடு, அடங்குடா!!! உனக்கு பாகிஸ்தான் தானே வேண்டும்..எடுத்து கோடா உன்னால் முடிந்தால்…..உங்களுக்கு என்னடா தெரியும்… நல்லா பாம் வெக்க தெரியும்….வைடா…..பாகிஸ்தான் பயல கூட நம்பலாம், ஆணா, இந்தியால இருந்து கிட்டு இந்தியாவையே மோசமா பேசுற தேவிடிய பய உங்கள தாண்ட நம்ப கூடாது…..பாகிஸ்தான் போக வேண்டியது தானே….அதான் TRAIN கூட இருக்குதே !!! மோடி வராண்டா,.,,,,வெக்கிறாண்டா வேட்டு…….
1947ல், 40 சதவீத முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதி பாக்கிஸ்தானாக பிரித்து தரப்பட்டது. மீதி 60 சதவீத முஸ்லிம்கள் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை பரவி இருந்ததால் அவர்களுடைய நிலப்பங்கை பிரிக்க முடியவில்லை.
வேறு வழியில்லாமல் இந்த குருட்டுக்கிழவியிடம் மாட்டிக்கொண்டோம்.
ஆனால் இன்று நிலமை வேறு – கிட்டத்தட்ட 70 சதவீத முஸ்லிம்கள் (30 கோடி) கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீஹார், மேற்குவங்காளம், அஸ்ஸாம் ஆகிய 9 மாநிலங்களில் (மத்திய இந்தியா) வாழ்கின்றனர் –
கஷ்மீர், காலிஸ்தான், தமிழ்த்தேசம் ஆகிய மூன்றும் விடுதலையின் விளிம்பில் நிற்கின்றன – ஏதாவது ஒன்று வெளியேறினால், பொலபொலவென்று இந்தியா உடையும் – மத்திய இந்தியா லட்டு போல் இஸ்லாமிஸ்தானாக எங்கள் கையில் விழும்.
இனியும் எவ்வளவு நாளைக்குத்தான் குருட்டுக்கிழவி தாங்கும்?
முட்டாள் தனமான வாதம்.இந்தியாவை பிரிக்க முடியாது.
டேய் பாடு, அடங்குடா!!! உனக்கு பாகிஸ்தான் தானே வேண்டும்..எடுத்து கோடா உன்னால் முடிந்தால்…..உங்களுக்கு என்னடா தெரியும்… நல்லா பாம் வெக்க தெரியும்….வைடா…..பாகிஸ்தான் பயல கூட நம்பலாம், ஆணா, இந்தியால இருந்து கிட்டு இந்தியாவையே மோசமா பேசுற தேவிடிய பய உங்கள தாண்ட நம்ப கூடாது…..பாகிஸ்தான் போக வேண்டியது தானே….அதான் TRAIN கூட இருக்குதே !!! மோடி வராண்டா,.,,,,வெக்கிறாண்டா வேட்டு…….
தகவல் அருமை.
ஊர்குருவி// சம்பந்தமில்லாமலே எதாவது ஒரு கமெண்ட்ஸ் போடுரது வாடிக்கையா போச்சு. பெரியார் ஒரு பழமொழி சொல்வார் நம்ம ஆடகள் சண்டை போட்டால் வீட்டில் இருக்கிற பொருட்களை வெளியில் பொடுவார்கள் ஆனால்பார்ப்பான் சண்டை போட்டால் வெளியில் இருக்கிற பொருட்களையல்லாம் உள்ளே வாரி போடுவார்கள்
தத்துவம் சுத்தமாத்தான் இருக்கு.
பூ.ஆ.இளையரசன் நீங்க அள்ளிவிட்ட பழமொழி பிரகாரம் பார்ப்பன்னருக்கு கட்டுரைக்கும் இப்போ என்ன சம்பந்தம்.
இந்த கட்டுரைக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்மந்தம் இந்த கட்டுரைக்கு சம்ந்தமில்லாமல் கருத்து சொன்னா எப்படி?
திரு, நஞ்சுண்ட மூர்த்தி அவர்களே !
மேலே கொடுக்கபட்டுள்ள தலைப்பு என்ன ?
நீர் கொடுக்கும் கமெண்ட் என்ன ?
போலி குல்லா போட்டுகிட்டு முஸ்லிம் , இந்து மக்களிடை பிரிவினை விதைக்கும் நஞ்சு உமிழும் மூர்த்தியாக
இருக்காதீர் !!!!!!!!!!
நாட்டிலே அநீதி தாண்டவமாடுதே, என்ன செய்வது என கேட்கிறார் கட்டுரையாசிரியர்.
அநீதிக்கெதிராக என்ன செய்ய வேண்டுமென திருக்குரான் சொல்கிறது?
//////////என்ன செய்யலாம்? சவுக்கில் புலம்பலாம். சட்டம் என்பது இருளில் மூழ்கிவிடாமல் அனைவர்க்கும் நீதி கிடைக்கும் நாள் வாராதா என ஏங்கலாம். வேறு என்ன செய்ய முடியும் ///////////?
காலம் மாறும் … சாவுக்கு சுழலட்டும் …
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் ….. இது தான் என் நினைவுக்கு வருகிறது ….இதை படித்த பிறகு…
கலைஞர் ரிவிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முத்துவேலு கருணாநிதி. கலைஞர் ரிவிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை கனிமொழி கருணாநிதி கலைஞர் ரிவிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தயாளு கருணாநிதி, கலைஞர் ரிவிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஸ்ராலின் கருணாநிதி, கலைஞர் ரிவிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தமிழரசு கருணாநிதி, கலைஞர் ரிவிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ராசாத்தி இராஜகருணா.
செய்திக்கும் தாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கும் என்ன சம்பந்தம் ஊர்குருவி உங்களை போன்றவர்கள்ல் தான் நாடு இந்நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கு
ஆமா ஊர்க்குருவி கொமன்ட் போடுறத்துக்கு முன்னர் சட்டமும் ஒழுங்கும் வானத்தில் பளிச்சென்று தெருஞ்சுது ஊர்க்குருவியின் கொமன்டுக்கு பொறவுதான் சட்டமும் ஒழுங்கும் “முகிலுக்குள்ள” மறைஞ்சு தலைவிரிச்சு ஆடுது.
முகில் அண்ணாச்சி நீங்க நாட்டுப்பற்றை பத்தவைச்சு யாரை பிணையெடுக்க வார்ரீங்க எங்கிறது நல்லாவே தெரியுது.
அடிப்படையில் அரசியலமைப்பு சட்டம், குற்றவியல் தண்டனை சட்டம் போன்றவைகளில் தலைகீழான திருத்தம் கொண்டுவராதவரை இந்த கறுப்பு ஆடுகள் அகலக்கால் வைத்து நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் மேய்ந்து கொண்டுதான் இருக்கும். ஆட்சி மாற்றம் வந்தால் நாடு சீராகும் என்பதெல்லாம் திருடர்களை மாற்றுவதற்கான வீண் செலவீனமே தவிர வேறொன்றும் நிகழ்ந்துவிடப்போவதில்லை.
காங்கிரஸ் பாஜக, பாஜக காங்கிரஸ், திமுக அதிமுக, அதிமுக திமுக இப்படிதிருடர்கள் மாறி மாறி நாட்டை பசியாறிக்கொண்டிருக்கின்றனர்.
கட்டுரை சிபிஐ நம்பிக்கையான ஒரு அமைப்பு என்பதுபோல விதந்துரைக்கிறது, ஆனால் சோனியா மற்றும் மன்மோகன் சிங்கம் ஆகியோர் சிபிஐயை பரிபாலனம் செய்து கொண்டிருப்பதாகவே 2ஜி ஸ்பெக்ரம் ஊழல் விசாரணைகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.
நேற்றைய நிகழ்வில் கனிமொழி பல கேள்விகளுக்கு தெரியாது என்று பதிலளித்து சாதனை செய்திருக்கின்றார், அத்துடன் கலைஞர் ரிவிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றும் தான் கலைஞர் ரிவியில் பங்குதாரர் அல்ல என்றும் பதிலளித்திருக்கிறார். கருணாநிதியும் முன்னர் கலைஞர் ரிவி பற்ரி தனக்கு தெரியாது என்று வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார். இப்படியான வாக்குமூலங்கள் ஒன்றும் சாதாரணமாக செய்துவிடக்கூடிய விளையாட்டு அல்ல நீண்டகால திட்டமிடல்களுடன் ஆவண ரீதியாக தயார் செய்யப்பட்டு காலதாமதத்தின்பின் ஏமாறப்படுகிறது.
இவைகள் எல்லாவற்றிற்கும் நீதித்துறையுல் இருக்கும் முறைகேடுகளும் ஊழல்களுமே மூலவேராக இருந்து வருகின்றன.
நாட்டின் பொருளாதாரத்தில் 98 சத விகிதம் அரசியல்வாதிகளிடமும். நாட்டிலுள்ள 98 சதவிகித மக்களிடம் 2 சத விகித பொருளாதாரமும் புரளுவதாக ஒரு புள்ளி விபரம் சொல்லுகின்றது.
இதை மாற்றியமைக்கவேண்டுமென்றால் பெரியதொரு பலமான புரட்சி பிறப்பெடுக்கவேண்டும். அது எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம்.
இந்தியாவில் ஜனநாயகம் இருப்பதாக காட்டப்படுவதே மிகப்பெரிய ஏமாற்றுக்கான வழித்தடம் என்பதே உண்மை.
தமிழ் நாட்டில் இந்த நிலை என்றால் மற்ற மாநிலங்களில்? இங்காவது ஒருவர் சவுக்கை சுழற்றுகிறார். (குறைந்த பட்சம் தன் எதிர்ப்பையாவது காட்ட முடிகிறது.) மற்ற இடங்களில் ஏன் என்று கேட்க கூட நாதியற்றுதான் இருக்க வேண்டும். ஓரளக்கு மேல் போனால் அழிவுதான். யாருக்கு என்பதுதான் தெரியவில்லை. அதாவது இதில் சம்பந்தப் பட்டவர்களுக்கு மட்டுமா அல்லது இந்த நட்டிற்கேவா என்பதுதான்.
நீதிமன்ற வியாபாரிகள் விபச்சாரிகள் . படித்தவன் சூது செய்தால் ஐயோ என்று போவான்
ஒரு பெரிய நிலம், அதைச் சுற்றி ஒரு பொது வேலி, அதில் பத்து பேர் பங்குதாரர், அதை காவல் காக்க பத்து பேர் என வைத்துக் கொள்வோம் – காலப்போக்கில் “உன் நிலத்தை நான் மேயலாம், என் நிலத்தை நீ மேயலாம், ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கமாட்டோம்” எனும் உடன்படிக்கை காவல்காரர்களுக்குள் வந்துவிட்டால், நிலத்துக்கு சொந்தக்காரன் என்ன செய்யமுடியும்?
வேலியே பயிரை மேய்ந்தால் என்ன தீர்வு? – பழைய வேலியை உடைத்து, அவரவர் நிலப்பங்கை சுற்றி ஓட்டை உடைசல் இல்லாத புதிய வேலியை அமைத்துக் கொள்வதே சாலச்சிறந்தது – அவன் நிலத்துக்கு அவன் பொறுப்பு, உன் நிலத்துக்கு நீ பொறுப்பு – பிரச்னையென்ன?
Ithu pondra karnanankalukku Kannan varuvaan..Saavu mani adikka..Makkal Vadivil…
மிக அருமையான பதிவு!
Panamirunthal potum inthannattil yaraiyyum vilaikku wangalam ethaiyyum sayyalam neethi settupoi pala aanduhal aahivittana
// சவுக்கில் புலம்பலாம். சட்டம் என்பது இருளில் மூழ்கிவிடாமல் அனைவர்க்கும் நீதி கிடைக்கும் நாள் வாராதா என ஏங்கலாம். வேறு என்ன செய்ய முடியும் ? //
“அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்” என திருக்குரான் தெள்ளத் தெளிவாக சொல்கிறது.
Mr. Kanjunda Moorthu..Athai thaan naanga paarkirome da..Sontha makkalai kundu vachu kolrathe thaan seyuthu..unga J…….dh..
Nigeria’s militant Islamist group Boko Haram – which has caused havoc in Africa’s most populous country through a wave of bombings, assassinations and now abductions – is fighting to overthrow the government and create an Islamic state.
Its followers are said to be influenced by the Koranic phrase which says: “Anyone who is not governed by what Allah has revealed is among the transgressors”.
Nigeria’s Islamic extremist leader threatened in a videotaped statement seen on Monday to sell the more than 200 teenage girls abducted from a school in the remote northeast of the country three weeks ago.
Hour-long video
Abubakar Shekau for the first time also claimed responsibility for the April 15 mass abduction, in a video reviewed by The Associated Press. “I abducted your girls,” said the leader of Boko Haram, which means “Western education is sinful.”
“By Allah, I will sell them in the marketplace,” he said in the hour-long video that starts with fighters lofting automatic rifles and shooting in the air as they chant “Allahu akbar!” or “God is great.”
It was unclear if the video was made before or after unverified reports emerged last week that some of the girls have been forced to marry their abductors and that others were carried into neighbouring Cameroon and Chad.
An intermediary who has said Boko Haram is ready to negotiate ransoms for the girls also said two of the girls have died of snakebite and about 20 are ill. He said Christians among the girls have been forced to convert to Islam.
Boko Haram promotes a version of Islam which makes it “haram”, or forbidden, for Muslims to take part in any political or social activity associated with Western society.
This includes voting in elections, wearing shirts and trousers or receiving a secular education.
Boko Haram regards the Nigerian state as being run by non-believers, even when the country had a Muslim president.
எப்பா சாமி …….அப்படியாவது போங்கடா …….
Your comment is awaiting moderation.
திரு, நஞ்சுண்ட மூர்த்தி அவர்களே !
மேலே கொடுக்கபட்டுள்ள தலைப்பு என்ன ?
நீர் கொடுக்கும் கமெண்ட் என்ன ?
போலி குல்லா போட்டுகிட்டு முஸ்லிம் , இந்து மக்களிடை பிரிவினை விதைக்கும் நஞ்சு உமிழும் மூர்த்தியாக
இருக்காதீர் !!!!!!!!!!
இந்த அரேபியா கொசு தொல்லை தாங்கலட ………இருக்குற ஒரு பாகிஸ்தானே போதும் ……இன்னும் எவ்வளவவு தாண்ட வேனும்……….எங்கே போனாலும் நீங்க உங்களையே குண்டு வச்சிகபோறது தான் உண்மை ……..:-)
// இந்த அரேபியா கொசு தொல்லை தாங்கலட //
காபிர்களை அழிக்க வந்த இஸ்லாமிய நாடான அரேபியாவில் 10 லட்சம் காபிர்கள், பெரும்பாலும் தமிழர், ஏன் டாய்லட் கழுவி பிழைக்கின்றனர்?
இது குருட்டுக்கிழவி பாரதமாதாவுக்கு செய்யும் துரோகமல்லவா?
டேய் பாடு, அடங்குடா!!! உனக்கு பாகிஸ்தான் தானே வேண்டும்..எடுத்து கோடா உன்னால் முடிந்தால்…..உங்களுக்கு என்னடா தெரியும்… நல்லா பாம் வெக்க தெரியும்….வைடா…..பாகிஸ்தான் பயல கூட நம்பலாம், ஆணா, இந்தியால இருந்து கிட்டு இந்தியாவையே மோசமா பேசுற தேவிடிய பய உங்கள தாண்ட நம்ப கூடாது…..பாகிஸ்தான் போக வேண்டியது தானே….அதான் TRAIN கூட இருக்குதே !!! மோடி வராண்டா,.,,,,வெக்கிறாண்டா வேட்டு…….
தங்களின் கருத்து தலைப்புக்கு சம்ப்ந்தமில்லாமல் இருக்கிறது நஞ்சுண்ட மூர்த்தியே. அர்த்தமற்ற விவாதத்தை தவிர்க்கவும்.
சட்டம் இருளில் முழ்கி நாட்கள் பல ஆகிறது 🙁 மீட்கத் தான் ஆள் இல்லை…