அர்ச்சனா
ராமசுந்தரம் ஐபிஎஸ். இந்தப் பெயர் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரபரபப்பாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய புலனாய்வுத் துறைக்கு கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்ட தமிழக கேடரைச் சேர்ந்த அர்ச்சனா ராமசுந்தரத்தை அவர் மாநில அரசின் அனுமதியில்லாமல் மத்திய அரசுப் பணியில் சேர்ந்த காரணத்தால், அவரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் பின்புலம் என்ன ? அர்ச்சனா ராமசுந்தரத்துக்கு வலுவான அரசியல் பின்புலம் உண்டு. அவர் கணவர் ராமசுந்தரம் கருணாநிதிக்கு நெருக்கமோ நெருக்கம். கடந்த திமுக ஆட்சியில், வெரும் வருவாயை ஈட்டித் தரக்கூடிய பொதுப்பணித் துறையை கருணாநிதி தன் வசமே வைத்திருந்தார். அதன் செயலாளராக நியமிக்க கருணாநிதி தேர்ந்தெடுத்தது ராமசுந்தரத்தைத்தான். தலைமைச் செயலக கட்டிடம், அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளை, ராமசுந்தரம் முன்னின்று செயல்படுத்தி, கருணாநிதியின் நற்பெயரை ஈட்டினார். ஆனால் மிக மிக கவனமாக, திமுக ஆட்சி முடிவதற்குள்ளாகவே, விருப்ப ஓய்வு பெற்று, நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்தில் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் நிர்வாகியாகவும் பணியில் சேர்ந்தார்.
ராமசுந்தரத்தின் செல்வாக்கு காரணமாகவே, தற்போது அர்ச்சனா ராமசுந்தரம்தான் சிபிஐ கூடுதல் இயக்குநராக வேண்டுமென்று, சிபிஐ இயக்குநர் ஒற்றைக் காலில் நிற்கிறார். ஏன் அவர் அர்ச்சனா ராமசுந்தரம் என்ற பெட்ரோமாக்ஸ் லைட்டே வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.
சிபிஐ கூடுதல் இயக்குநர் பதவிகளுக்கான பெயர்களை பரிந்துரை செய்ய வேண்டிய பொறுப்பு, மத்திய கண்காணிப்பு ஆணையத்திடம் உள்ளது. மத்திய கண்காணிப்பு ஆணையர்கள், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் செயலர், மத்திய உள்துறை செயலர், ஆகியோர் கூடி முடிவெடுப்பார்கள். அந்த கூட்டத்துக்கு சிபிஐ இயக்குநர் தன் ஆலோசனைகளை சொல்வதற்காக சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுவார்.
அந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பச்னந்தாவை சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமிக்கலாம் என்று பரிந்துரைக்கிறது விழிப்பு பணி ஆணையம். விழிப்புப் பணி ஆணையர்கள் மூவர், பச்னந்தாவை பரிந்துரைக்கிறார்கள். ஆனால் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை செயலர் சர்க்கார், அர்ச்சனா ராமசுந்தரம்தான் வேண்டுமென்று கூறுகிறார். இவரும், அர்ச்சனா ராமசுந்தரமும் நெருக்கமான நண்பர்கள் என்பது தனிக்கதை.
அந்த நேரத்தில் கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளரான சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா பச்னந்தாவைப் பற்றி ஒரு ரகசிய கோப்பை எடுத்து தருகிறார். பச்னந்தாவைப் பற்றி சிபிஐயின் ரகசிய அமைப்பு விசாரணை நடத்தியதாகவும், அந்த விசாரணையில், சிபிஐயில் நியமிக்கப்பட பச்னந்தா தகுதியான நபர் அல்ல என்பது தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார். ஆனால், ரஞ்சித் சின்ஹா ஏதோ உள்நோக்கத்தோடு அந்த ரகசிய அறிக்கையை பரிந்துரை செய்கிறார் என்று கருதிய அந்த குழு, அவர் அறிக்கையை நிராகரித்து விட்டு, பச்னந்தாவை பரிந்துரை செய்கிறது.
அர்ச்சனா ராமசுந்தரத்தை எப்படியாவது சிபிஐ கூடுதல் இயக்குநராக ஆக்கியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இயங்கும், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை செயலர் ஷ்யமால் குமார் சர்க்கார் இந்த நியமனத்தை இறுதி செய்ய வேண்டிய அமைச்சரவை நியமனக் குழுவுக்கு (Appointments Committee of Cabinet) ஒரு அறிக்கையை அனுப்புகிறார். அந்த அறிக்கையில் தேர்வுக் குழு கூடி விவாதித்ததாகவும், அந்த விவாதங்களின்போது, சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்த எதிர்ப்புகளையும் பதிவு செய்து நியமனக்குழுவுக்கு அனுப்புகிறார்.
இவரது அறிக்கையின் அடிப்படையில், தேர்வுக்குழுவின் பரிந்துரைகளை புறந்தள்ளி விட்டு, நியமனக் குழு, அர்ச்சனா ராமசுந்தரத்தை சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமிக்கிறது.
இதற்குப் பிறகு தேர்வுக் குழு மீண்டும் கூடுகிறது. இந்த முறை சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா அழைக்கப்படவில்லை. ஏற்கனவே அவரது ஆலோசனைகள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்ட காரணத்தால் மீண்டும் அழைக்கப்படவில்லை. தற்போது, நியமனக்குழுவின் பரிந்துரையை நிராகரித்த தேர்வுக்குழு, மீண்டும் பச்னந்தாவையே பரிந்துரை செய்கிறது.
இது போல இருவேறு கருத்துக்கள் இருந்த காரணத்தால், மத்திய அரசு வழக்கறிஞர் மோகன் பராசரனிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு. அவர்கள் விரும்பியபடியே, மோகன் பராசரன் கருத்து அளிக்கிறார். “தேர்வுக்குழு ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்களைத்தான் அனுப்ப வேண்டும். ஒரு பெயரை அனுப்பினால், அதுவும் இரண்டு முறை அனுப்பினால், நியமனக்குழு, அதற்கு கட்டுப்பட வேண்டியதில்லை. நியமனக்குழு விரும்பும் நபர்களை நியமிக்கலாம்” என்று பரிந்துரை செய்ததன் அடிப்படையில், பிப்ரவரி ஏழு அன்று அர்ச்சனா ராமசுந்தரத்தை சிபிஐ கூடுதல் இயக்குநரான நியமித்து உத்தரவிடுகிறது மத்திய அரசு.
இதன் நடுவே, அர்ச்சனா ராமசுந்தரத்தின் நியமனத்தின் பின்னால் உள்ள அரசியலை நன்கு புரிந்து கொள்கிறார் ஜெயலலிதா. ராமசுந்தரத்துக்கும் கருணாநிதிக்கும் உள்ள நெருக்கத்தின் காரணமாக, ப.சிதம்பரத்தின் ஆதரவோடு, அர்ச்சனாவை சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமித்து, பின்னாளில், சிபிஐ இயக்குநராக்க நடந்த திட்டம் ஜெயலலிதாவின் கவனத்துக்கு வருகிறது. விடுவாரா ஜெயலலிதா ?
15 அக்டோபர் 2013 அன்று, மத்திய அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்று அர்ச்சனா ராமசுந்தரம் எழுதிய கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததே இதே ஜெயலலிதாவின் அரசுதான். ஆனால், அதற்குப் பின்தான் நிலைமை மாறி விடுகிறதே….
7 பிப்ரவரி 2014 அன்று அர்ச்சனா ராமசுந்தரத்தை சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமித்து, மத்திய அரசு உத்தரவிடுகிறது. 10 பிப்ரவரி 2014 அன்று தமிழக உள்துறை செயலருக்கு அர்ச்சனா, கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், தனது தந்தையார் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அதன் காரணமாக உடனடியாக தன்னை பணியிலிருந்து விடுவிக்குமாறும் கோருகிறார்.
14 பிப்ரவரி 2014 அன்று, அர்ச்சனா ராமசுந்தரத்தின் நியமனத்தை எதிர்த்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது தள்ளுபடி செய்யப்படுகிறது.
24 பிப்ரவரி 2014 அன்று மத்திய அரசு, தமிழக தலைமைச் செயலருக்கு, அர்ச்சனா ராமசுந்தரத்தை உடனடியாக விடுவிக்குமாறு கடிதம் எழுதுகிறது. அந்தக் கடிதத்துக்கு பதில் வராத காரத்தால், 10 மார்ச் மற்றும் 7 ஏப்ரல் அன்று மீண்டும் நினைவூட்டு கடிதம் எழுதப்படுகிறது.
24 மற்றும் 26 பிப்ரவரி 2014 அன்று ஜெயலலிதாவை சந்தித்த அர்ச்சனா ராமசுந்தரம், தன் தந்தையார் மிகுந்த உடல் நலிவுற்று இருப்பதகாவும், அதனால் உடனடியாக விடுவிக்குமாறும் கோருகிறார். இதற்கெல்லாம் மசிபவரா ஜெயலலிதா ? உடனடியாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தந்தைதையை சேர்த்தால் சிறந்த சிகிச்சை அளிப்பதாக அல்லவா சொல்லியிருப்பார் ?
பல முறை தமிழக அரசின் தலைமைச் செயலரையும் சந்திக்கிறார் அர்ச்சனா. ஒன்றும் நடக்கவில்லை. இதற்கிடையே, 28 ஏப்ரல் 2014 அன்று, வினீத் நாராயண் என்பவர், அர்ச்சனா ராமசுந்தரத்தின் நியமனம் விதிகளுக்கு புறம்பாக பிறப்பிக்கப் பட்டுள்ளது என்றும் அதை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்கிறார். அந்த வழக்கில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க மறுத்த உச்சநீதிமன்றம் வழக்கை 9 மே 2014 அன்று ஒத்தி வைக்கிறது.
உச்சநீதிமன்றம் எப்படிப்பட்ட உத்தரவை பிறப்பிக்குமோ என்ற அச்சத்தில், மத்திய அரசு அவசர அவசரமாக, 7 மே 2014 அன்று அர்ச்சனா ராமசுந்தரத்தை பணியில் சேருமாறு உத்தரவு பிறப்பித்து அதன் நகலை தமிழக அரசின் தலைமைச் செயலருக்கும் அனுப்புகிறது. அதே நாளில் அர்ச்சனா ராமசுந்தரம், மத்திய அரசின் ஆணையின் நகலை உள்துறை செயலாளருக்கும், தலைமைச் செயலாளருக்கும், தமிழக டிஜிபிக்கும் இணைத்து, அவர் தானே பணியிலிருந்து விடுவித்துக் கொள்வதாகவும், மத்திய அரசுப் பணியில் சேரப்போவதாகவும் கடிதம் எழுதுகிறார்.
8 மே 2014 அன்று, காலை 11 மணிக்கு, சிபிஐயின் கூடுதல் இயக்குநராக பணியில் சேர்கிறார் அர்ச்சனா. அதே நாளில், தமிழக அரசு, அர்ச்சனா ராமசுந்தரத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பணி இடைநீக்கம் செய்து உத்தரவிடுகிறது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அர்ச்சனா ராமசுந்தரம் என்ற பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டுமென்று, மத்திய அரசு இத்தனை பிடிவாதம் பிடிக்க வேண்டிய அவசியம் என்ன ? சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவும், அர்ச்சனாதான் வேண்டுமென்று துடியாகத் துடிப்பதன் பின்னணி என்ன ? அர்ச்சனா பணியில் சேராவிட்டால் சிபிஐ அமைப்பை இழுத்து மூடி விடுவார்களா என்ன ?
இந்த சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவின் நியமனமே சர்ச்சைக்குள்ளானதுதான். பீகார் கேடரைச் சேர்ந்த சின்ஹா, லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவர் என்றும், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சரிவர விசாரணை நடத்தாதா காரணத்தால் பீகார் உயர்நீதிமன்றம் அவர் மீது கடுமையான கண்டனங்களை பிறப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அவர் சரியான நபர் அல்ல என்று சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்ட பிறகு, அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆகையால், இப்படிப்பட்ட ரஞ்சித் சின்ஹா ஒரு பெட்ரோமாக்ஸ் லைட் மீது பிடிவாதமாக இருப்பது சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.
கேடி சகோதரர்கள் மீது வழக்கு தொடர்ந்த சிபிஐ, இந்த நாள் வரை அதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் இழுத்தடிப்பதன் பின்னணியிலும் ரஞ்சித் சின்ஹாவே உள்ளார். ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில்தான் வெளிநாட்டிலிருந்து ஆதாரங்கள் வர வேண்டும். போலி டெலிபோன் எக்ஸேஞ் அமைத்து, டெலிபோன் லைன்களை திருடிய வழக்கில் யாருடைய ஆதாரம் வர வேண்டும் ? அதில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ரஞ்சித் சின்ஹாவுக்கு என்ன கேடு ? ஆனால், இப்படியெல்லாம் பல்வேறு வழக்குகளில் உள்குத்தில் ஈடுபடுபவர்தான் இந்த ரஞ்சித் சின்ஹா. இவர் ஒரு நபருக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்றால் அதை சந்தேகக் கண்ணோடுதான் பார்க்க வேண்டியுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலாகவே மத்திய அரசின் அதிகாரங்கள் முடிந்து விட்டன. இந்த காரணத்தினாலேயே, ராணுவ தளபதியை நியமிக்கக் கூட தடை வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ அமைப்பின் கூடுதல் இயக்குநர் பதவியை நிரப்ப, அதுவும் சர்ச்சைக்குரிய முறையில் நிரப்ப மத்திய அரசுக்கு இத்தனை அவசரம் ஏன் ? மே 16க்குப் பிறகு, புதிய அரசு நியமனத்தை மேற்கொள்வதுதானே நியாயமாக இருக்கும் ?
இந்த விவகாரத்தில் உள்ள முரண்களையும், குழப்பங்களையும் நன்கு உணர்ந்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடக்கும் 14 ஜுலை 2014 வரை, அர்ச்சனா ராமசுந்தரம் கூடுதல் இயக்குநராக பணியாற்றக் கூடாது என்று தடை விதித்துள்ளது. நீதிபதிகள் தங்கள் உத்தரவில் “Having considered the statutory provisions, with regard to the appointment of officers above the level of SP, we find the petitioner [Vineet Narain] has been able to make out a strong prima facie case. It was an accepted position that the selectee [Ms. Ramasundaram] was not recommended by the selection committee. In these circumstances we do not find any justification for her to continue to function as Additional Director of CBI. We accordingly restrain the respondents from allowing Ms. Ramasundaram to function as Additional Director till the next date of hearing on July 14 … ,”
எஸ்.பி அந்தஸ்துக்கு மேல் உள்ள அதிகாரிகளின் நியமனங்கள் தொடர்பான விதிகளை பரிசீலித்ததில் வினீத் நாராயண், நியாயமான விவகாரங்களை எழுப்பியுள்ளார். அர்ச்சனா ராமசுந்தரத்தின் நியமனம், தேர்வுக்குழுவால் பரிந்துரை செய்யப்படவில்லை என்பது மறுக்கப்படவில்லை. இந்த நிலையில், அர்ச்சனா ராமசுந்தரம் சிபிஐ கூடுதல் இயக்குநராக தொடர்வது முறையல்ல. அதனால், மத்திய அரசு, அர்ச்சனா ராமசுந்தரத்தை ஜுலை 14 வரை, சிபிஐ இயக்குநராக பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என்று இதன் மூலம் உத்தரவிடுகிறோம். என்று கூறியுள்ளனர்.
அர்ச்சனா ராமசுந்தரம் டிஜிபி அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி. அவருக்குத் தெரியாத சட்டங்களோ விதிகளோ கிடையாது. மாநில அரசு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசுப் பணியில் இணைந்தால் சம்பளம் கூட வாங்க முடியாது என்பது அவருக்கு தெரியாதது அல்ல. அவருடைய நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அந்த வழக்கின் விசாரணை 9 மே அன்று வர இருக்கும் நிலையில், 8 மே அன்று பதவியேற்றுக் கொண்டது, நிச்சயமாக ஒழுங்கீனமான செயல்தான். அப்படி என்ன அவசரம் ? ஒரே நாளில் சிபிஐ வழக்குகள் அனைத்தையும் முடிக்கப் போகிறாரா ?
அர்ச்சனா ராமசுந்தரம், முழுமையாக மத்திய அரசுப் பணிக்கு போய் விடவில்லை. அயல்பணியில்தான் செல்கிறார். இப்படிப்பட்ட நிலையில், அவரை பணி இடைநீக்கம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. இந்த பணி இடைநீக்க உத்தரவை அர்ச்சனா நீதிமன்றம் சென்றுதான் ரத்து செய்ய முடியுமே தவிர, மத்திய அரசில் அவருக்கு இருக்கும் செல்வாக்கால் ரத்து செய்ய முடியாது. இது ரத்து செய்யப்படும் வரை, அவருக்கு ஊதியமும் வராது. இன்னும் நான்கு வருடங்கள் பணி எஞ்சியுள்ள நிலையில், மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை செயலர் அளித்த வாக்குறுதியையும் தன் அரசியல் செல்வாக்கையும் நம்பி இன்று திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறார் அர்ச்சனா. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசின் பணி நீட்டிப்பை ஏற்றுக் கொண்ட ராமானுஜம் கடந்த ஒன்றரை வருடங்களாக சம்பளம் இல்லாமல் இருப்பதும் அர்ச்சனா அறியாதது அல்ல.
அப்படி இருக்கையில் அர்ச்சனா அவசர அவசரமாக பதவியேற்றுக் கொண்டதற்கு ஒரே காரணம், பதவி வெறியும், அதிகார போதையுமே.
கட்டுரை முடியும் முன்பாக ஒரு கிளைக்கதை. தமிழ்நாட்டில் சஞ்சய் பின்டோ என்று ஒரு பத்திரிக்கையாளர் கம் லாபியிஸ்ட் கம் வழக்கறிஞர் இருக்கிறார். சொம்புக் கட்டுரைகள் எழுதுவதில் அவருக்கு இணையே கிடையாது. இவரைப் பற்றி சவுக்கு தளத்தில் ஏற்கனவே வந்துள்ள கட்டுரையின் இணைப்பு.
நேற்று மும்பையிலிருந்து வெளிவரும் டிஎன்ஏ நாளேட்டுக்கு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் சொம்பு பின்டோ. அதன் இணைப்பு . இந்தக் கட்டுரையில் இவர் குறிப்பிடுவது என்னவென்றால், தமிழகத்தை சேர்ந்த அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம் சிபிஐ கூடுதல் இயக்குநரானால் அது தமிழகத்துக்கே பெருமையாம். பல காவல்துறை அதிகாரிகளின் நண்பர் இந்த சஞ்சய் பின்டோ. இந்த நட்பின் காரணமாக, காவல்துறை அதிகாரிகள் என்ன செய்திகளை தருகிறார்களோ, அதை அப்படியே உண்மை போலவே பேசுவார் எழுதுவார். காவல்துறை அதிகாரிகளுக்கு சொம்படிப்பதில் சொம்பு பின்டோவுக்கு யாருமே நிகர் கிடையாது. இப்படி பல அதிகாரிகளோடு தொடர்பில் இருந்து நெருக்கமாக நட்பு பாராட்டும் சொம்பு பின்டோ மீது நக்கீரன் காமராஜ் ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
காமராஜின் மனைவி ஜெயசுதா, நீரா ராடியாவின் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக, சஞ்சய் பின்டோ என்டிடிவியில் எடிட்டராக இருந்தபபோது செய்தி வெளியாகியது. அந்த செய்திக்காக சஞ்சய் பின்டோ உள்ளிட்டோர் மீது காமராஜ் அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு தொடுக்கப்பட்டதும் அலறினார் பாருங்கள் சஞ்சய்… அப்படி ஒரு மரண ஓலம். நேரடியாக காமராஜின் வழக்கறிஞரையே போய் பார்த்து விட்டார்…. “சார் எனக்கு எதுவுமே தெரியாது சார்… எனக்கு கீழ வேலை பார்த்த ரிப்போர்ட்டர் இப்படி ஒரு நியூஸ் குடுத்துட்டான்… அவன் மேல கேஸ் போட்டுக்கங்க.. என்னை மட்டும் தயவு செய்து விட்டுடுங்க சார்… ப்ளீஸ் சார்” என்று அப்படி ஒரு கெஞ்சல். நக்கீரனில் வராத பொய் செய்தியா ? அவர்கள் சந்திக்காத வழக்குகளா ? அது போல இதை எதிர்ககொள்ள வேண்டுமா இல்லையா ? ஆனால், சொம்பு பின்டோவுக்கு அப்படி ஒரு பயம். அழுது கதறி விட்டார்.
அதன் பிறகு, உயர்நீதிமன்றத்தின் ஒரு மூத்த வழக்கறிஞர் மூலமாக, நீதிபதியை செட்டிங் செய்து, தன் மீதான வழக்கை மட்டும் ரத்து செய்தார் பின்டோ.
பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் இவரைப் போன்ற ஏராளமான சொம்புகள் திரிகின்றன. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.
நல்ல பெண் அதிகாரி என்று உங்களை நினைத்து இருந்தேன்….இப்படி செய்து விட்டீரே அம்மையாரே!!!..
கட்டுமரத்திடம் கூட்டு வச்சவங்க யாரு தான் நல்ல இருக்காங்க…….இப்படி அரசு உயர் அதிகாரிகளே செய்தால் சாமானிய மக்களின் நிலை என்னவாகும்… வரும் இளம் தலைமுறை அரசு அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல் பட வேண்டுகிறேன் ..நன்றி வணக்கம் …
Savvku,
some dubakkur persons are going to put their election after poll prediction results from today evening onward why cant you do a geniune post poll survey.
What about tasmac tamil can u continue tasmac tamil.
y so urgent in Ms ARCHANA joining CBI office when she was kept in suspension?
Are u read newspaper? It tells that She joins before suspension.So Dont Misinterprets
இரு திராவிட கட்சிகளிலும் எப்படி சொம்படிக்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்ள முடிந்தது. நன்றி. மற்றும் அந்த பத்திரிகையாளர் cum வழக்கறிஞர். பாவம் ஏதோ இவர்களெல்லாம் வயிற்றுப் பிழைப்பிற்காக சொம்படிக்கிறார்கள் (அல்லது சொம்படித்தால்தான் பிழைக்க முடியும் என்ற நிலை போலும்)..பிழைத்துப் போகட்டும் விடுங்கள். சொம்படிப்பதும் ஒரு தொழில்தான் என்று கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள்தான் போலும்.
அவசரமாகப் போய் ஒருத்தர் துண்டு போட்டு வைத்தால் அது பெரிய பாவமா என்ன?
வட போச்சே என்று உட்கார்ந்திருப்பவருக்காக கொஞ்சம் அனுதாபப்படக் கூடாதா?
அதானே. அதுவும் அடுத்தவர்களைக் கவிழ்த்து விட்டு அல்லது காலை வாரி விட்டு ஒருவர் பதவிக்கு வருவது முதல் தடவையாகவா நடக்கிறது. எந்தக் கட்சியிலும், எந்த பதவியிலும் மேலே இருப்பவர்கள் இந்த வழியைப் பின் பற்றிதானே அந்த நிலைக்கு வருகிறார்கள்.
Is it also true that Mr Sinha a close friend of Ramjethmalani, is instrumental in not naming Modi and Amith shah in Ishrath jehan fake encounter case?
Is it true that Ms. Archana is a relative of Kalaignar’s Longtime Personal Assistant Mr Shanmuganathan?
NO
No. Thats not true
She is from Uttar Pradesh.
Why are you so much biased and venom in your reporting this matter.Remember Yesterday argument in Pudhiyathalaimurai TV channel reg so much delay on the part of State Government Also reported by Ragavan Former CBI reg this.Also I have read that She is also straight forward lady officer anjd also solve so many cases.Kindly be impartial while reporting .That is good for journalism
Regret to state that your information is wrong.
Both husband and wife are the most corrupt officers in the force. .I should know. Because as complainant/Petitioner,after 4years of struggle only now the papers have moved from DVAC to the Chief Secretary.
I have facts and you are basing on HEAR SAY!!
SOUNDS FUNNY!
Regret to state that your information is wrong.
Both husband and wife are the most corrupt officers in the force. .I should know. Because as complainant/Petitioner,after 4years of struggle only now the papers have moved from DVAC to the Chief Secretary.
This is not a repeated or duplicate statement.
I have facts and you are basing on HEAR SAY!!
SOUNDS FUNNY!
Mr. Ravi Shankar, there are only allegations and nothing has been proved yet so it is highly unfair and prejudice on your part to be judgmental to say they are most corrupt etc. Remember Supreme Court has slapped the State government for the suspension order.
If so kindly publish it in savukku itself.It is regret to state that I have seen so many RTI related cases .It is indeed a bpowerful weapon for common man but misuse by certain people who think they are above the law including govt officials.Still red tapism still persists in so many govt offices.Also the so called intellectuals who misuse it not for the welfare of this country but their vengenance attitude.The four pillars of this democracy is already damaged including media.No transparency in these 4 pillars particularly media,Judiciary,Administartion etc
Good joke.
Ramasundaram swindled in millions in new secretariat and anna library building constructions.
Thats why took voluntary retirement and ran away.
Your detailed essay okay. but we dont have time to read all things.
will you make it short and simple.
Govindan
I can’t reduce the length govindan. If you are so busy that you can’t find time to read, how can I help it
Savukku,
To give full and detailed information, article has to be lengthy. No harm in that.
Please carry on.
இந்திய பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. மே 16 றிசல்ட் வெளிவர இருக்கிறது இந்த நேரத்தில் முக்கிய பணி நிர்ணயங்கள் நிச்சியம் அரசியல் ஆதாயம் கருதியதாகவே இருக்கும்.
மே 16க்குப் பிறகு, புதிய அரசு நியமனத்தை மேற்கொள்வதுதானே நியாயமாக இருக்கும் என்றல்லாவிட்டாலும் அதுதான் விதிமுறைக்கு சரியாக இருக்கும்.
ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்க கறுப்பு ஆடுகள் எப்படி முன்னெச்சரிக்கையாக வேலை செய்கின்றன என்பதற்கு இந்த சம்பவம் நல்ல உதாரணம்.
Super!
கட்டுரை நடை அற்புதம் .. அரசியல் அதிகாரம் பற்றி தெரியாதவர்கள் கூட எளிதில் புரிந்து கொள்ளும் அளவு கோர்வையான படைப்பு. நிச்சயம் இந்த வலைப்பக்கம் உலகளவில் வெற்றிப்பெரும்…நீங்கள் கிளார்க் அல்ல கிளர்ச்சியாளர்…
உங்கள் நெற்றிக்கண் திறந்தே இருக்கட்டும் …
சாவுக்கு சுழலட்டும் ….
I have under RTI ACT 2005 have voluminous evidence against the Home department in TN & else where.
If required am willing to share.
Regards
Please share at newsavukku@gmail.com
It runs to 1,637 pages – I have to compress it and send it. Do you have a decoder?
Put that in google drive and share the link. There are lot of cloud base shares….DROPBOX, GOOGLE DRIVE, ONEDRIVE from microsoft.
உறுத்து வந்து ஊட்டும் ஊழ்வினை கருணாநிதியையும் அவர் குடும்பத்தையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. வாக்குப் பதிவு முடிந்ததும் பல்வேறு கருத்துக்கள், திமுக எதிர்ப்பார்த்ததை விட, சிறப்பாகவே தேர்தலில் வெற்றி பெறும் என்று கூறிய மகிழ்ச்சி அடங்குவதற்குள், இடியாக வந்து இறங்கியது அமலாக்கப் பிரிவின் செய்தி.
மகளையும், மனைவியையும் சாமர்த்தியமாக 2ஜி வழக்கிலிருந்து காப்பாற்றி விட்டதாக இறுமாப்போடு இருந்த கருணாநிதியின தூக்கத்தை கலைத்துப் போட்டது அமலாக்கப் பிரிவின் இறுதி அறிக்கை. எந்த நீதிமன்றத்தில் கருணாநிதியின் குடும்பத்தின் தலையெழுத்து தீர்மானிக்கப்பட்டுக் கொண்டிருக்கிதோ, அதே ஓ.பி.சைனி நீதிமன்றத்தில், மீண்டும் ஒரு குற்றப்பத்திரிக்கை.
kanimozhi_illus_20110509
குடும்பத்தில் வேலைக்கு வந்த பாவத்துக்காக சிறை சென்று, தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் சரத் குமாரை பலியாடாக்கி, தன் மகளையும் மனைவியையும் காப்பாற்றி விடலாம் என்ற கருணாநிதியின் கனவு பொய்யாகிப் போனது.
2ஜி வழக்கில், மிக மிக சாமர்த்தியமாக மனைவி மற்றும் மகள் ஆகிய இருவரையும் காப்பாற்றினார் கருணாநிதி. தற்போது கருணாநிதியின் தந்திரம் வெற்றி பெற்றால், 2ஜி வழக்கில், சரத் குமார் மற்றும் ஆ.ராசா மட்டுமே தண்டிக்கப்படுவார்கள்.
2ஜி வழக்கில் சிபிஐ விசாரணையே நேர்மையாக நடைபெறவில்லை. சிபிஐ நடத்திய புலனாய்வின்படியே, ஸ்வான் டெலிகாம் உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்தையும் முதலீடு செய்து பின்னால் இருந்து இயக்கியது அனில் அம்பானி என்ற விபரம் சிபிஐ ஆவணங்களிலேயே இருக்கிறது. ஆனால் அனில் அம்பானி குற்றவாளியாக சேர்க்கப்படவேயில்லை. அதே போல, டாடா நிறுவனத்துக்கு இரட்டை லைசென்சுகள் (CDMA & GSM) வழங்கியதும், அந்த நிறுவனம், தங்களது பங்குகளை ஜப்பானைச் சேர்ந்த டோகோமோ நிறுவனத்துக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தது. இதற்கு பிரதிபலனாகத்தான், சென்னை அண்ணா சாலையில் உள்ள 300 கோடி ரூபாய் மதிப்பிலான வோல்டாஸ் நிலம். இந்த விவகாரத்தையும் சிபிஐ விசாரிக்கவே இல்லை.
2g