படிச்சவன் சூதும் வாதும் செஞ்சா போவான் போவான் அய்யோன்னு போவான் என்றான் பாரதி.
லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள படித்த அதிகாரிகள் அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
“தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையும் அதன் அதிகாரிகளும், குற்றவாளியோடு கைகோர்த்துக்கொண்டு, முக்கியமான ஆதாரங்களை மறைத்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது நீதிமன்றத்திடம் செய்யப்படும் மோசடியாகும். இதை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த வழக்கில் புகார்தாரரான லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் 2000ம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கும் இவ்வழக்கு தொடர்பான சொத்து குறித்த வழக்கு விபரத்தை சொல்லியிருக்க வேண்டும். அரசு வழக்கறிஞர் மற்றும் நீதிமன்றத்திற்கு இந்த விபரங்களை தெரியப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறை குற்றவாளிகளோடு கை கோர்த்துக் கொண்டு இந்தத் தகவலை அரசு வழக்கறிஞர் மற்றும் நீதிமன்றத்துக்கு தெரியாமல் மறைத்து இருட்டில் வைத்துள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் நியமிக்கப்பட்டுள்ள அரசு சிறப்பு வழக்கறிஞர்தான் இது தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவுக்கு மாறாக, தமிழக அரசின் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பாக ஆஜராகி வாதாடியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கின் குற்றவாளிகள் தாக்கல் செய்துள்ள மனுக்களின் நகல்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இது நாள் வரை லஞ்ச ஒழிப்புத் துறை நிறைவேற்றவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஒழுங்கினம் மற்றும் கடமையிலிருந்து தவறிய குற்றமிழைத்துள்ளார்கள் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. இதற்காக, இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, இறுதித் தீர்ப்பின்போது பரிந்துரைக்கப்படும்”
இதுதான் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா கடந்த வாரம் அளித்த தீர்ப்பு.
1996ம் ஆண்டு திமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி, ஏறக்குறைய அதிமுகவை அடியோடு அழித்து விட்டே ஆட்சிக்கு வந்தது. அன்றைய ஒரே முழக்கம் ஊழல். கருணாநிதி கடைசியாக அன்றைய தேர்தலில் பேசிய பிரச்சாரக் கூட்டத்தில், மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு இருந்த இடம் ஓட்டையாக இருக்கும் என்று சொன்னார். அப்போது அது மிகையான சொல்லாக யாருக்கும் படவில்லை. அப்போது வீடியோ மூலமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ரஜினிகாந்த், ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று சொன்னார். அப்படிப்பட்ட ஊழல் ஒழிப்பு வாக்குறுதியின் அடிப்படையில்தான் திமுக ஆட்சிக்கு வந்தது. சொன்னது போலவே, பல்வேறு ஊழல் வழக்குகளையும் தொடர்ந்தது.
அது வரை, விஏஓக்களையும், பில் கலெக்டர்களையும் பிடித்து வந்த லஞ்ச ஒழிப்புத் துறை, முதன் முறையாக, அரசியல்வாதிகளை கைது செய்தது. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு வழக்குகளை தொடர்ந்தது. சிபி சிஐடியும் தொடர்ந்தது. ஜெயலலிதா மீது மட்டும் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டதாக நினைவு.
ஜெயலலிதா, ஏறக்குறைய அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இறுதியாக அவருக்கு தலைவலியாக அமைந்தது சொத்துக் குவிப்பு வழக்கு.
2001ல் முழுப் பெரும்பான்மையோடு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தன்மையே மாறியது. லஞ்ச ஒழிப்புத் துறையில் அப்போது கே.ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கை கவனித்துக் கொள்ளும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்தார். வழக்கின் விசாரணை அதிகாரியாக சவுந்தரராஜன் என்ற ஒரு அதிகாரி இருந்தார். அப்போது நாஞ்சில் குமரன் லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநர்.
இந்த மூவர் அணி சேர்ந்து, இந்த வழக்கில் ஜெயலலிதாவை காப்பாற்ற என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தனர். எந்த அளவுக்கு சென்றனர் என்றால், அப்போது சென்னையில் நடந்து கொண்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்கில், விசாரணை அதிகாரியான நல்லமா நாயுடு சாட்சி சொல்ல வேண்டும். சாட்சி சொல்வதற்காக, அவருக்கு வழக்கு ஆவணங்களை பார்வையிடக் கூட அனுமதிக்கவில்லை இந்த அதிகாரிகள்.
அதன் பிறகு, லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநர் அலுவலகத்திலேயே தினந்தோறும் சதியாலோசனை நடக்கும். எந்தெந்த சாட்சிகளை மீண்டும் அழைப்பது, எந்தெந்த சாட்சிகளை பிறழ் சாட்சிகளாக மாற்றுவது, எப்படி வழக்கை 10 நாட்களில் முடிப்பது என்று தினந்தோறும் பூட்டிய அறைக்குள் சதியாலோசனை நடக்கும். பல்வேறு ஆலோசனைகளை வழங்குவார் ராதாகிருஷ்ணன். இந்த சதியாலோசனைகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில், மற்ற அதிகாரிகளோ, ஊழியர்களோ உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தினந்தோறும் சாட்சிகள் ஏற்கனவே சொன்ன சாட்சியங்களை மாற்றிச் சொன்னார்கள். அப்போது இருந்த நீதிபதியும் இதற்கு ஏற்றார்ப் போல நடந்து கொண்டார். பிறழ் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய அரசு வழக்கறிஞரோ, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அதன் பிறகுதான் 2003ம் ஆண்டில் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாக, சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 2003ல் மாற்றப்பட்ட பிறகும், இந்த வழக்கில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாமல் எவ்வளவு தாமதம் ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு தாமதம் ஏற்படுத்தப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்தின் உதவியோடு, எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும், எந்த அரசு வழக்கறிஞர் விசாரிக்க வேண்டும் என்ற விசித்திரமான மனுக்களும் உச்சநீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட அவலம் நிகழ்ந்துகொண்டுதான் இருந்தது.
ஓய்வு பெற இருந்த நீதிபதி பாலகிருஷ்ணா பதவி நீட்டிப்பு வேண்டாம் என்று கூறி விட்டதால், வேறு வழியின்றி புதிய நீதிபதியான மைக்கேல் டி குன்ஹாவை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அரசு வழக்கறிஞராக ஜெயலலிதாவே விரும்பிய பவானி சிங் நியமிக்கப்பட்டதும், ஜெயலலிதாவுக்கு சாதகமாக என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்தார். உடல் நிலை சரியில்லை என்றார், சிகிச்சை எடுக்க வேண்டும் என்றார். இதையெல்லாம் காரணமாக காட்டி, உச்சநீதிமன்றம் சென்று எனக்கு விடுப்பு வேண்டும் என்றார். அதுவும் ஏற்கப்பட்டு, வழக்கு விசாரணைக்கு மூன்று வார காலம் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் வழக்கை மேலும் தாமதப்படுத்த, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சில நிறுவனங்கள் மூலமாக, சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வருமானத்துக்கு அதிகமாக 1991 முதல் 1996 வரை சொத்துக்களை சேர்த்த ஜெயலலிதா 35க்கும் அதிகமான நிறுவனங்களை தொடங்கினார். பெரும்பாலான நிறுவனங்களில் அவரும் சசிகலாவும் இயக்குநர்கள். இந்த நிறுவனங்கள் அனைத்தும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். எந்தவிதமான பணப்பரிவர்த்தனையிலும் ஈடுபடாது. ஆனால் இந்த நிறுவனங்களில் பெயரில் லட்சக்கணக்கில் சொத்துக்கள் வாங்கிக் குவிக்கப்பட்டிருக்கும். இதுதான் சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படை.
லெக்ஸ் ப்ராப்பர்டீஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் வழக்கு முடியும் தருவாயில் ஒரு புதிய தந்திரத்தை கையாள்கின்றன. அது என்னவென்றால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்களில் சிலவற்றுக்கும், சொத்துக் குவிப்பு வழக்குக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆகையால் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து இந்த சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்பதே. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு கொலை வழக்கில் ஒரு மாருதி கார் கைப்பற்றப்பட்டு உள்ளது. கொலை செய்ய அந்த கார் பயன்படுத்தப்பட்டது என்று அரசுத் தரப்பு சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த வாகனம் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். திடீரென்று ஒருவர் வந்து, இந்த வாகனம் என்னுடையது. இந்த வழக்குக்கும் வாகனத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த வாகனம் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பதை வழக்கின் இறுதியில்தான் முடிவு செய்ய முடியும். ஒரு வேளை அந்த வாகனம் சம்பந்தப்படவேயில்லை என்றால், வழக்கின் இறுதியில் அதன் சொந்தக்காரரிடம் வாகனம் ஒப்படைக்கப்படும். இதுதான் வழக்கின் நியதி. அப்படியே ஒருவர் வழக்கு நடந்து கொண்டிருக்கையிலேயே இப்படி கேட்கிறார் என்று வைத்துக் கொண்டாலும், இந்த மனுவை முடிவு செய்யும் வரை, கொலை வழக்கையே நடத்தக் கூடாது என்று சொல்ல முடியுமா ? வாகனம் யாருடையது என்பதை முடிவு செய்வதற்காக கொலை வழக்கின் விசாரணையை நிறுத்த முடியுமா ? அதுதான் ஜெயலலிதாவின் வழக்கில் நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் திடீரென்று நான்கைந்து நிறுவனங்கள், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்களில் சில எங்களுக்கு சொந்தமானது. அதை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோருகிறார்கள். அவர்கள் கோரிக்கை நியாயமாக இருந்தாலும் கூட, இந்த கோரிக்கைகளை முடிவு செய்யும் வரை, வழக்கையே நடத்தக் கூடாது என்று கோர முடியுமா ?
இப்படித்தான் லெக்ஸ் ப்ராப்பர்டீஸ், மீடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ ப்ராடக்ட்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் மற்றும் சிக்னோரா பிசினெஸ் என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள், மனு மீது மனுவாக தாக்கல் செய்து கொண்டுள்ளன. என்ன மனு என்றால், எங்கள் நிறுவனத்துக்கும், இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை. ஆகையால், எங்கள் சொத்துக்களை விடுவியுங்கள். இந்த மனுக்களை முடித்து விட்டு, பிறகு சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதி விசாரணையை தொடரலாம் என்பதே அந்தக் கோரிக்கை.
இந்த நிறுவனங்களின் பதிவு சான்றிதழ், ஒப்பந்தங்கள் அனைத்தும், வழக்கின் ஆவணங்களாக சிறப்பு நீதிமன்றத்திலேயே உள்ளன. இதன் நகல்கள் அனைத்தும், குற்றவாளிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறப்பு நீதிமன்றம், கம்பெனிகளின் பதிவாளருக்கு, இந்த நிறுவனங்களின் ஆவணங்களை சம்மன் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆவணங்கள் அனைத்தும் குற்றப்பத்திரிக்கையின் ஒரு பகுதியாக, பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்திலேயே உள்ளன என்பதை நன்றாக அறிந்தும் இப்படி ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்து சிறப்பு நீதிபதி மைக்கேல் குன்ஹா, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஒரு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளார். அந்த வாக்குமூலத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் யார், பங்குதாரர்கள் யார், வங்கிக் கணக்குகளின் விபரங்கள் ஆகியவற்றை தாக்கல் செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்திலேயே இவர்கள் கேட்ட பல ஆவணங்கள் இருந்ததையும் எடுத்து அவர்களிடம் காண்பித்துள்ளார் மைக்கேல் குன்ஹா. வழக்கின் இறுதி விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்ற நிறுவனங்களின் கோரிக்கையை மைக்கேல் டி குன்ஹா தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து இந்த நிறுவனங்கள் பெங்களுரு உயர்நீதிமன்றம் சென்றன. பெங்களுரு உயர்நீதிமன்ற நீதிபதியும், இந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டு, இவ்வாறு கூறினார்
“It appears that DVAC is favouring the accused. You have to file your objections, but so far you have not done so. This clearly shows that you are colluding with the accused. If this is the situation, you cannot render justice,”
இப்படி ஒவ்வொரு கட்டத்திலும், ஜெயலலிதாவுக்கு துணையாக நிற்பது, லஞ்ச ஒழிப்புத் துறையில் இருக்கும் அதிகாரிகளே. ஒரு நீதிமன்றம், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டும் அதைத் தாக்கல் செய்யாமல் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானாலும் பரவாயில்லை என்று இருக்கிறார்கள் என்றால், அதிமுகவில் அமைச்சர்களாக உள்ள அடிமைகளுக்கும் இந்த அதிகாரிகளுக்கும் என்ன வேறுபாடு ?
“இந்திய அரசியல் அமைப்பின்பால், உண்மையான நம்பிக்கையும், மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும், உண்மையாகவும், உளச்சான்றின் படியும், என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியல் அமைப்பிற்கும், சட்டத்திற்கும் இணங்க, அச்சமும், ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு, வெறுப்பை விளக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும், நேர்மையானதை செய்வேன்” என்று உறுதிமொழி எடுத்து பணியாற்றும் இந்த அதிகாரிகள், சட்டத்திற்கு இணங்க, அச்சமும் ஒருதலை சார்பும், விருப்பு வெறுப்பின்றியா பணியாற்றுகிறார்கள் ?
நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அந்த ஆவணங்களை பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்திருக்க வேண்டியது இந்த அதிகாரிகளின் கடமை இல்லையா ? தாங்கள் அரசு அதிகாரிகள் என்பதை மறந்து, ஒரு குற்றவாளிக்கு ஆதரவாக, ஆதாரங்களை மறைப்பதும், நீதிமன்றத்தை துச்சமாக மதிப்பதும்தான் இந்த அதிகாரிகளின் லட்சணம். இந்த அதிகாரிகளுக்கெல்லாம் நேர்மையான அதிகாரிகள் என்று ஊர் உலகத்தில் பெயர் வேறு.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கீழ்படிந்தால், ஜெயலலிதா என்ன தலையையா சீவி விடுவார் ? அதிகபட்சம் வேறு இடத்துக்கு மாற்றுவார். அவ்வளவுதானே….. ? இந்த சாதாரண மாறுதல் உத்தரவுக்கே பயந்து கொண்டு, அம்மாவின் அடிமைகளாக இருக்கும் இது போன்ற அதிகாரிகள்தான் பசுத்தோல் அணிந்து நேர்மையாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அதிகாரிகள், திமுக அல்லது அதிமுக என்று பிரிந்து கிடக்கிறார்கள். தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள எத்தகைய சமரசத்துக்கும் தயாராக இருக்கிறார்கள்.
இப்படி படித்த அதிகாரிகளே சூதும் வாதும் செய்தால் நாம் எங்கே சென்று முறையிடுவது ?
sir regarding ur article ur lamentations are understandable.but what we do against these type of organisations that are excluded from rti act.first lets fight to bring dvac under RTI act.
WHO IS RTI COMMISSIONER u KNOW ?????? SAVUKKU KNOW .HE IS THE PERSON WHO IS AGAINST THE ACT
ஆஹா, ஹிந்துக்களின் மாவீரன் மோடி வந்துவிட்டான் — இனி இந்த தரித்திரியம் பிடித்த நாட்டில், பாலும் தேனும் ஆறாக ஓடும்.
மானமிழந்து மதிகெட்டு அரபு நாட்டில் முசல்மானின் அடிமையாக டாய்லட் கழுவி பிழைக்கும் லட்சக்கணக்கான காபிர்கள் கூடியவிரைவில் தாய்நாடு திரும்பி விடுவரென எதிர்பார்ப்போம்.
Savukku!
Instead of being vexed at everything bad, kindly fight like Arvind Kejriwal fought for RTI act and got Magsasay award! (After that , he went bad, was another story).Start a forum like V.R.Krishna Iyer and Justice Tharkunde center for Justice and civil rights and start putting Writ petitions in the form of Fax with request to consider as writ to any court in India with all details you have against accused and join as a party and fight your cause! Surely, initially you will get lot financial, police, justice, physical and political threats! But after sometime, all will fear for Savukku and your legal forum!You have the guts, age, lawyer and journalists to back you! You are an institution and so dont run/supprt after Kejriwals, jayalalitas and Udayakumars! Best wishes for your vexing till u institutionalise your fightings!–Nambikai Nagaraj-Dubai
In the famous decision of Zahira Habibulla H. Sheikh (supra), SC held that :- 56…..”The law should not be seen to sit by limply, while those who defy it go free, and those who seek its protection lose hope.” Courts have to ensure that accused persons are punished and that the might or authority of the State are not used to shield themselves or their men. It should be ensured that they do not wield such powers which under the Constitution has to be held only in trust for the public and society at large. If deficiency in investigation or prosecution is visible or can be perceived by lifting the veil trying to hide the realities or covering the obvious deficiencies, courts have to deal with the same with an iron hand appropriately within the framework of law. It is as much the duty of the prosecutor as of the court to ensure that full and material facts are brought on record so that there might not be miscarriage of justice. (Emphasis added)
The above principles makes the position clear to the effect that the administration of justice, lethargic action of courts may result in failure of justice and, therefore, when deficiency in investigation or prosecution is visible or can be perceived by lifting the veil and thereby tried to hide the realities the Court should deal with the same with the iron hand appropriately within the framework of law.
In the decision of National Human Rights Commission Vs. State of Gujarat and others reported in (2009) 6 SCC 767, in paragraph 40, this Court issued directions in order to ensure that the criminal prosecution which was entrusted with special investigation team is not hampered by any other intruders including the State Government and ensure that the real culprits are brought to book.
ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டு மண்னர் ஆட்சிமுறைகளை அரசியற் கட்சிகள் புளக்கத்தில் வைத்திருக்கின்றன.
கட்சிகளை மதங்கள்போலவே கட்சி தலைமைகள் திட்டமிட்டு மக்கள் மனதில் பதியம்போடப்படுகின்றன,
அதற்காகவே ஆளும் கட்சிகள் இலவசங்களை அறிமுகப்படுத்தி மக்களை மந்தைக்கூட்டங்களைப்போல கவனமாக வைத்து காப்பாற்றி வருகின்றன.
ஆட்சியை கைப்பற்ற முடியாத கட்சிகள் இலவசத்தை எதிர்த்தும் மதுவுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து கணிசமான வாக்கை பெற்றுவிடலாமென்று அர்சியல் செய்கின்றன,
இன்னும் சில ஏமாற்றுவாதிகள் சாதியை வைத்து அரசியற் பிழைப்பு நடத்துகின்றன,
சன் ரீவி, விஜய் ரீவி போன்ற பணக்கார வெகுஜன மீடியாக்கள் மேல்த்தட்டுமக்களின் வாழ்வையும் பொருளாதாரத்தையும் இந்தியாபோல, தமிழ்நாடுபோல நிகழ்ச்சிகள் நடத்தி ஆட்சியாளர்களின் ஆதரவுடன் உலகுக்கு காட்டுகின்றது,
அரச அதிகாரிகள் என்றால் ஆட்சியாளர்களின் தொண்டர்கள் என்பதாகவே விதிக்கப்பட்டிருக்கிறது.
புதிய அரசை நிர்மாணிக்க இருக்கும் பாஜக இன்னும் அதிகமாக பழமைவாதத்தையும் ஆண்டான் அடிமை முறைமையையும் வழிமொழிய இருப்பதாகவே பிரதமருக்கான மோடி, தமிழக பாஜக வின் தமிழகத் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் ராஜ்நாத் சிங் போன்றோரின் ஆட்சி அமைப்புக்கு முந்திய பேச்சுக்கள் அச்சமூட்டுகின்றன,
நீதிபதிகள் கடவுளுக்கு சமமாக தாங்கள் மதிக்கப்படுவதாக நினைத்து அனைத்து முறைகேடுகளுக்கும் துணைபோய்க்கொண்டிருக்கின்றனர்.
அப்துல்கலாம் போன்ற துறவி நிலையை எட்டியவர்கள் கனவு காணுங்கள் எல்லாம் பலிக்கும் என்று பாலபாடம் நடத்தி தன்பாட்டிற்கு ஒரு உலகத்தில் மிதக்கின்றார்.
முதலமைச்சர் வானத்தில் விமானப் பயணம் செய்யும்போது கீழே தெருவில் வாகனப்போக்குவரத்தை நிறுத்தி காவல்த்துறை அம்மாவின் அனுக்கிரகத்தை பெற்று நிம்மதியடைகின்றனர்.
ஊழலின் மொத்த உருவமான கட்டுமரம் எல்லாம் கைவிட்டுப்போன நிலையிலும் உடுக்கை அடித்து ஓதிக்கொண்டே இருக்கிறது.
கேட்டால் நாம் உலகில் மிகப்பெரிய ஜனநாயகர்கள் என்று ஆட்சியாளர்களும் பத்திரிகை மீடியாக்கள் தோள் தட்டுகின்றன.
ஒன்றுக்கும் யாரிடமும்……………………………..
/// இப்படி படித்த அதிகாரிகளே சூதும் வாதும் செய்தால் நாம் எங்கே சென்று முறையிடுவது ? ///
முதல்வன் முதல் குடியரசுத் தலைவன் வரை திருடன், பிரதமன் கொலைகாரன் – ஆனால் சட்டப்படி எந்த ஆதாரமும் இல்லை.
இந்த தரித்திரியம் பிடித்த நாடு இருக்கும் வரைதானே இவர்களால் ஆட்டம் போடமுடியும்?.
இந்த நாட்டை “தமிழ்த்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், தலித்துஸ்தான், நக்ஸல்புரி, ஆரியவர்த்தா, பிராமணஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான்” என உடைத்தால்தான் நாம் ஓரளவு நிம்மதியாக வாழமுடியும்.
நாம் பிழைக்க, ஏன் குருட்டுக்கிழவி பாரதமாதாவை உதைக்கக்கூடாது?
hi, if you don’t stop refraining from making anti national comments we’ve to lodge a complaint against you.
Shankar, please stop encouraging this guy.
நண்பர் Kumar அவர்களே நாட்டில் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் நாட்டுக்கும், அப்பாவி மக்களுக்கும் செய்யும் துரோகங்களை விட நஞ்சுண்ட மூர்த்தியில் கருத்து மோசமானதாக படவில்லை சிடி செல்வம் என்ற நீதிமான் அதிகாரத்தை வைத்துக்கொண்டு சவுக்கின் கருத்துச்சுதந்திரத்துக்கும் ஊடக சுதந்திரத்திற்கும் ஆப்படிக்க முற்பட்டார், அதிகாரம் கையில் இருப்பதால் செல்வம் சொல்லுவது சட்டப்படி சரியாக இருக்கும் என்று பலரும் நினைக்கக்கூடும், நஞ்சுண்டமூர்த்தியின் கருத்துக்கள் எனக்கும் நெருடலாகத்தான் இருந்தது ஆனால் நாட்டின் நிர்வாகம் ஆட்சியாளர்களின் திருட்டுத்தனம் ஆகியவைகளை பார்க்கும்போது அவர் எங்கோ மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதன் எதிரொலிதான் அவரது கருத்துக்கள் என்று யதார்த்தத்தை புரிந்துகொள்ள முடிகிறது நஞ்சுண்ட மூர்த்தி திரை மறைவில் சதி செய்யவில்லை வெளிப்படையாக தனது கோபத்தை வெளிவிடுகிறார் மனுநீதி அரசர்கள் இந்த நாட்டை ஆண்டால் நீன்ங்கள் கோவிப்பது சரியாக இருக்கும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டீர்கள்போல் தெரிகிறது பொறுத்திருந்து பார்ப்போம் நஞ்சுண்ட மூர்த்தியின் பதிவுகள் ஆட்சியாளர்களையுன் சிந்திக்க வைக்கும். உங்கள் நாட்டுப்பற்றுக்கும் நியாயமான சிந்தனைக்கும் நான் மதிப்பளிக்கிறேன், நன்றி.
நான் ஒரு தேசத்துரோகி. ஆனால், மனிதாபிமானி – என்னால் ஒரு ஈ எறும்புக்கு கூட எந்த இன்னலும் வராது – நான் தருவது முடங்கிப்போன சிந்தனைக்கு சவுக்கடி – இது ஒரு தருமயுத்தம்.
கொலைகாரன் மோடியிடம் போய் சொல். சைனாவுக்கு வரச்சொல் – புடுங்கக்கூட முடியாது.
ஒன்று செய். ஓடிப்போய் குருட்டுக்கிழவி பாரதமாதாவின் மீது அய்யோ அய்யோ என முட்டிக்கொள் – இல்லாவிட்டால் பாழுங்கிணற்றில் குதித்து சாவு.
Dear Savukku
If i type more than 13 lines, the post comment button goes down the page and disappears – I am unable to post the comment.
I am using firefox browser – Kindly look into this issue and rectify asap. Thanks.
for your idiotic comments not a single letter should be typed.
Really? You always copy\paste the same idiotic comments and why do u need keyboard. Control cand v is not enough?