கர்நாடக இசை குறித்து முன்னணி இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா கூறிவரும் கருத்துக்கள் நம்மை தி. ஜானகிராமனின் இசைப்பயிற்சி சிறுகதை பக்கம் அழைத்துச் செல்கிறது. தலித் இளைஞன் ஒருவனுக்கு கர்நாடக இசையைச் சொல்லிக் கொடுக்க முடிவு செய்யும் மல்லி என்ற பிராமணரின் எண்ண ஓட்டத்தை அற்புதமாக எழுதியிருப்பார் ஜானகிராமன். “முந்தாநாள் காலை, பிள்ளையார் கோவிலை ஒட்டின சத்திரத்துக் கொல்லையில் பூப்பறித்துக் கொண்டிருந்தார் மல்லி. பவழமல்லி மரத்தை உலுக்கிவிட்டு, கீழே விழுந்த பூக்களைப் பொறுக்கிக் குடலையில் போடும்போது ஒரு ராகத்தை__ தன்யாசிதானே__ தன்யாசிதான்__முணு முணுத்துக் கொண்டேயிருந்தது தொண்டை. என்னமோ பவழமல்லியின் செங்காம்பைப் பார்க்கும்போது அந்த ராகம் பாடவேண்டும் போலிருக்கும். என்ன சம்பந்தமோ! அப்பொழுது அவர் இழுப்பதையெல்லாம் வாங்கி வேறு ஒரு குரல் எங்கோ பாடுவது கேட்டது. அவர் ஒரு பிடி பிடித்தால், அதையே இன்னும் கொஞ்சம் கூட்டிச் சேர்த்து அழகாகப் பிடித்தது அது. சற்று நிறுத்திக் கவனித்தார் அவர். என்ன குரல்! இந்த மாதிரி ஒரே ஒரு குரலைத்தான் கேட்டிருக்கிறார் அவர். சென்னையில் ஜார்ஜ் டவுனில் பன்னிரண்டு குடிகளுக்கு நடுவில் ஒரு குடியாக, கீழே சமையலறையும் மாடியில் படுக்கையறையுமாகக் குடித்தனம் செய்த காலத்தில் இரவு ஒரு மணி இரண்டு மணிக்கு ஒரு பயல் பாடிக்கொண்டு போவான். அவன் ஒரு மோட்டார் கார் க்ளீனர். கிட்டப்பா, ராஜரத்னம், பாகவதர் என்று நாடக சினிமாப் பாட்டுக்கள், ராகங்களையெல்லாம் அச்செடுத்துப் பாடுவான். குரலில் ஒரு கம்மல்__அவர் பொறாமைப் படுகிற தெளிவு, புரளல், ரவைகள், அன்றுதான் ஒன்று புலப்பட்டது__பிறவி வேறு, பயிற்சி வேறு என்று. சபைகளிலும் சங்கீத உலகிலும் முதல் பீடங்களில் உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாம் முக்காலே மூன்றுவீசம் பயிற்சி பயின்றவர்கள், பாடப்பிறந்தவர்கள் இல்லை என்று அப்பொழுது என்னமோ தோன்றிற்று. ” ஆனால் கதை முடியும் போது இயலாமையால் தவிக்கும் மல்லியின் நிலைமை நம்முடைய நெஞ்சு நிறைய புகுந்து கொண்டு கட்டைபோல் அடைத்து நிற்கும். இன்று தலித்துகளுக்கு இசைப் பயிற்சி அளிப்பதை யாரும் எதிர்க்கப் போவதில்லை. தன்னுடைய தகுதியை வளர்த்துக் கொண்டு திரைப்படத்துறையிலோ இசைக் குழுக்களிலோ அல்லது இசைக் கல்லூரியில் ஆசிரியராகவோ ஒரு தலித் இளைஞன் வலம் வரலாம். ஆனால் கச்சேரி மேடைகளில் ஏறி சோபிப்பது அவ்வளவு எளிதானதாகத் தோன்றவில்லை.
மறைந்த வயலின் மேதை லால்குடி ஜெயராமனின் வாழ்க்கை வரலாற்றை வெளியிடுவதற்காக வந்திருந்த இசைஞானி இளையராஜாவின் காலில் தடால் தடால் என்று பிராமணர்கள் விழுந்தார்கள். அவர் தேர்ந்தெடுத்துள்ள துறையின் தன்னிகரற்றக் கலைஞனாக இளையராஜா வலம் வருவதே அதற்கு காரணம். இதே சாதனையை கர்நாடக இசைத்துறையில் அவரால் சாதித்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. அது போல வெஸ்லியன் பல்கலைக் கழகத்தில் டி. பாலசரஸ்வதியின் சகோதரர் டி. விஸ்வநாதனுக்குப் பிறகு, பேராசிரியராகும் வாய்ப்பு சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தலித் இளைஞர் பாலுவுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமா என்றால் அக் கேள்விக்கும் பதில் இல்லை. கிருஷ்ணா குறிப்பிடுகிறார் – “ஒரு பிராமணராகவோ தலித்தாகவோ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவோ யாருமே பிறப்பதில்லை. ஒரு குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோதான் பிறக்கிறது. பிறகு, அந்தக் குழந்தையைச் சுற்றியுள்ள சூழல் அதன் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கிறது. வழக்கமான பொருளில் சொல்வ தென்றால், நான் ஒரு பிராமணக் குடும்பத்தில்தான் பிறந்தேன். ஆனால், பாரம்பரியம், நம்பிக்கைகள், மாச்சர்யங் கள் ஆகியவற்றின் குறுகலான பார்வை இல்லாத குடும்பத்தில் பிறந்ததற்கு நான் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலி. எல்லாக் குடும்பங்களையும் போலவே எங்கள் குடும்பத்துக்கும் பலவீனங்கள் இருந்தன. ஆனால், மதரீதியிலான சகிப்பின் மையோ மூடநம்பிக்கைகளிலும் ஆச்சார அனுஷ்டானங்களிலும் ஊறிப்போன வைதீகத்தின் தாக்கமோ நல்லவேளை எங்கள் குடும்பத்தில் இருந்ததில்லை. நான் கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் படிப்பதற்கு ஏற்ற வீட்டுச் சூழலிலிருந்து வந்தேன் என்று சொல்லக் கூடாது. அந்தப் பள்ளியில் சாதி, மதம் போன்றவற்றுக்குக் கொஞ்சமும் இடம் இல்லை… “நீயே சுயமாகச் சிந்தித்துப்பார், உனது அறிவைப் பயன்படுத்து, உன் உள்ளுணர்வையும் கற்பனையையும் பயன்படுத்து, வெறும் மையுறிஞ்சு தாளாக இருக்காதே, எவ்வளவு அழகான மையாகவும் வடிவமைப்பாகவும் இருந்தாலும்கூட” என்று நம் அனைவருக்குள்ளும் இருந்துகொண்டு ஏதோ ஒன்று ஏதோ ஒரு புள்ளியில் சொல்கிறது. வழிவழியாக வந்த சங்கீதம், கச்சேரியில் முழு வீச்சில் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கும்போது இசைக் கலைஞரும் மேற்கண்ட புள்ளியைச் சந்திப்பார். அப்போது, ஓர் உள்ளொளி அவரைத் தொட்டுச் சொல்லும்: “இதோ பார், இப்போது நீ முழுக்க விடுதலை அடைந்தவன்… பறக்கத் தொடங்கு…” கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் யதார்த்தமென்ன? கர்நாடக இசை உலகம் பிராமண இசை உலகமாகத்தான் இருக்கிறது. மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இத்துறையில் எவ்வளவு ஈடுபாடு இருக்கிறது என்பது கேள்விக்குரியது என்றாலும், இசைத் துறையில் காலம் காலமாக கோலோச்சிய இசை வேளாளர் சமூகத்தினருக்கே இங்கு இடம் இல்லை. அவர்கள் பாடினாலோ, புல்லாங்குழல், வயலின் அல்லது மிருதங்கம் வாசித்தாலோ இடமிருக்கும். ஆனால் இசை வேளாளர்களின் முக்கிய இசைக் கருவிகளான நாகசுரமும் தவிலும் சற்றேறக்குறைய ஓரங்கட்டப்பட்டு விட்டன. எல்லா இசை அரங்குகளிலும் தொடக்க விழாவுக்கு மங்கள வாத்தியமாக சுமார் 45 நிமிடம் மட்டுமே நாகசுர இசைக்கும் அனுமதி கிடைக்கிறது. அது கூட வழக்கமான மேடையில் இல்லாமல், திரைச்சீலையை உயர்த்தாமலே, அதற்கு முன்னால் ஜமக்காளத்தை விரித்து, அவசர அவசரமாக வாசிக்க சொல்லி விட்டு, சிறப்பு விருந்தினர் வந்ததும், மேடையில் ஓரத்தில் நின்று சைகை மூலம் நிறத்தச் சொல்லி விட்டு விழா தொடங்கும். இதுகூட ஒருவகையில் சாதீய அணுகுமுறைதான் எனலாம். தற்போது சென்னையில் உள்ள கிருஷ்ண கான சபாவும் பிரம்ம கான சபாவும் மட்டும் ஆண்டு தோறும் தனியாக நாகசுர இசை விழாக்களை நடத்துகின்றன. அன்றிலிருந்து இன்றுவரை நாகசுரமும் தவிலும் இசை வேளாளர் சாதியுடன் அடங்கிப் போய்விட்டிருக்கின்றன. ஆந்திர மாநிலம் காரவடியில் 300 ஆண்டுகளாக முஸ்லீம்கள் சிலர் நாகசுரத்தில் பரம்பரையாக தேர்ச்சி பெற்று தமிழகத்தில் பிரபலமாகின்றனர். அந்த ஒரு விதிவிலக்கைத் தவிர்த்து பொதுவாக இசை வேளாளர்கள் மட்டுமே இக்கலையில் ஈடுபடுகின்றனர். நாட்டியம் கூட ஒரு காலத்தில் தேவதாசிகள் மற்றும் இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் வசமே இருந்தது. அவர்கள் ஆடிய போது அதை சதிர் என்றார்கள். நாட்டிய ஆசான்களான நட்டுவனார்கள் அனைவருமே இசை வேளாளர்களே. ருக்மணி அருண்டேல் நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடத் தொடங்கிய போதுதான் சமூகத்தில் அதற்கு தனியோர் அந்தஸ்து உருவானது. அந்நிலையில் பிராமணர்கள் ஓடோடியும் வந்து அதில் பயிற்சி பெறத் துவங்கினர். நாட்டியக் கலையின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்த சிருங்காரத்தை பெரும்பாலும் வடிகட்டியே அருண்டேல் அரங்கேற்றியதும், பிராமணப் பெண்கள் அக் கலையில் ஆர்வம் காட்டியதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். எப்படியோ . நாட்டியம் கற்றுக் கொள்வது இன்று பிராமணப் பெண்களுக்கு ஒரு தகுதியாகக் கருதப்படுகிறது. அவர்கள் மட்டுமல்ல மற்ற உயர்சாதிப் பெண்கள், அனைத்து சாதியிலும் வசதியான குடும்பத்தினர் எனப் பலரும் பரத நாட்டியத்தால் ஈர்க்கப்படுகின்றனர். நாட்டியம் போலவே கர்நாடக இசை பக்கமும் நீண்ட காலமாக பிராமணப் பெண்கள் வருவதில்லை. அதுவும் தேவதாசிகளின் கலையாகவே கருதப்பட்டது. ஆனால் டி.கே பட்டம்மாள் போன்றவர்கள் துணிச்சலுடன் மேடைகளில் பாட முன்வந்து புகழும் பெற்ற பின்னணியில் மற்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். ஆனால் நாகசுரத்தையும் தவிலையும் பிராமணர்கள் தொடவே இல்லை. பிராமணர்களே கர்நாடக இசை இரசிகர்களில் மிகப் பெரும்பான்மையினர். அவர்களது ஆர்வத்தால் நிகழ்ச்சிகளை நடத்தமுடிகிறது எனும்போது, நாகசுரத்தை அவர்கள் ஏதோ காரணங்களினால் தொடாமலிருப்பதால்தான் அல்லது போதிய ஆர்வம் காட்டாததால்தான் அக்கலை நலிவடைகிறதோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, செவ்வியல் இசை மரபுகளைப் பயில்வது மட்டுமே சிறப்பான விஷயம் என்ற வாதம்கூட கேள்விக்குரியதே. தலித்துக்களோ அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களோ கர்நாடக சங்கீதத்தைப் பயின்று எங்கு போய் கச்சேரி செய்யப் போகிறார்கள்? இசைமேடைகளில் அவ்வளவு எளிதில் அவர்களுக்கு இடம் கிடைத்து விடுமா என்பது ஒரு பக்கம் என்றால் கோயில் நுழைவதற்கே அனுமதி மறுக்கப்படுபவனுக்கு கோயிலில் கச்சேரி செய்யும் வாய்ப்பு மட்டும் கிட்டப்போகிறதா என்ன? இன்னொன்றையும் நாம் இங்கே நோக்கவேண்டும். தலித்துக்களும் மற்ற சாதியினரும் ஏதோ ஒருவகையில் அவரவர்களுக்கான இசைமரபுகளோடு வாழ்ந்து வருகிறார்கள். அது முழுக்க முழுக்க நாட்டுப்புற இசையாக இருக்கலாம். அல்லது செவ்வியல் கூறுகளை உள்ளடக்கிய நாட்டுப்புறக் கலையாக இருக்கலாம். நலிந்து வரும் அக்கலைகளுக்கு உயிரூட்டும் பணியில் அச்சமூகத்தினர் மேலதிகக் கவனம் செலுத்தவேண்டுமென நான் நினைக்கிறேன். தமிழகத்தின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முதல் தலைவராக இருந்த சட்டநாதனின் தந்தை நாகசுரம் வாசித்தவர்தான். தன்னுடைய வாழ்க்கைச் சரித்திரத்தில் அவர் இதைத் தெரிவித்திருக்கிறார். செங்கோட்டைத் தாலுகாவில் வசிக்கும் படையாச்சிகள் காலம் காலமாக இத்துறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் கர்நாடக இசையை மட்டுமே வாசிப்பவர்களும் உண்டு. நையாண்டி மேளம் வாசிப்பவர்களும் உண்டு. அவர்கள் வாசிக்கும் நையாண்டி மேளத்தில் செவ்வியல் கூறுகள் ஓங்கியிருப்பதை நான் கேட்டிருக்கிறேன். காவடிச் சிந்து, பள்ளு, கிளிக்கண்ணி, நொண்டி சிந்து, நையாண்டி, மகுடி என தவிலும் முரசும் பம்பையும் ஒலிக்க வெளுத்துக் கட்டுவார்கள். நையாண்டி மேளம் வாசிப்பவர்களின் காலப்பிரமாணம் அசாத்தியமானது. இன்று நிலமை மாறி, சினிமாப் பாடல்களை அச்சுமாறாமல் வாசிப்பதே தகுதி என்றாகி விட்டது. தென் மாவட்டங்களில் படையாச்சிகளைத் தவிர, கம்பர், சுண்ணாம்புப் பரதவர், காவேரி நாவிதர் மற்றும் தலித்துகள் இசைத்துறையில் ஈடுபட்டு வருகிறார்கள். கம்பர்கள் பெரும்பாலும் இராஜ மேளம் என்று கூறப்படும் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளையே நடத்துவார்கள். இத்துடன் காளிக்கோயில் பூசையும். இவர்களுக்குத் தொழில். அண்மையில் நையாண்டி மேளமும் வாசிக்க ஆரம்பித்துள்ளார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வள்ளியூர் எம்.எஸ். ராசுக்குட்டியும் அவரது சகோதரர்களும். வீணைக் கொடியுடைய வேந்தனே என்று பாட்டை எடுக்கும் முன், இலேசாக மோகனத்தையும், திருமால் பெருமைக்கு நிகரேது என வாசிக்கையில் மத்யமாவதியையும், ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே வாசிக்கையில் மாண்டுவையும் ஆலாபனை செய்வார்கள் அவ்வற்புதக் கலைஞர்கள். ஆனால் பிழைப்புக்கு நையாண்டி மேளமே கதி என்றாகிப் போனது. சுண்ணாம்புப் பரதவர்கள் கடற்கரையில் சிதறிக்கிடக்கும் சிப்பிகளைச் சேகரித்து சுண்ணாம்புக் கலவையில் வைத்து நீற்றி, விழாக் காலங்களில் வீடுகளுக்கு வெள்ளையடிப்பதற்காக விற்பனை செய்வார்கள்.அச்சமூகத்தைச் சேர்ந்த கடையநல்லூர் சண்முகசுந்தரம், சிங்கிக்குளம் கணேசன் என்ற இரு தன்னிகரற்றக் நையாண்டி மேளக்கலைஞர்களே என் சிறுவயது கதாநாயகர்கள். கோயில் கொடை விழாக்களுக்கு போஸ்டர் ஒட்டப்படும் போது ஞானப்பழம் புகழ் ஓ.எஸ். சண்முகசுந்தரம் என்ற பெயரை பார்த்தால் எனக்கு இருப்பு கொள்ளாது. கே.பி. சுந்தராம்பாள் வாய்ப்பாட்டில் செய்யும் மாயாஜாலத்தை நாகசுர குழலில் செய்து காட்டி, அது முடிந்ததும் முத்தைத் திருபத்தித் திருநகை என்று அருணகிரியாரின் திருப்புகழை தாளக்கட்டுடன் வாசிக்கையில் உலகத்தில் பிறவி எடுத்ததே சண்முகசுந்தரத்தின் மேளத்தைக் கேட்பதற்காகத்தான் என்று தோன்றும். சிங்கிகுளம் கணேசன் சுமார் ஆறடி உயரத்தில் கருங்கல்லில் செதுக்கியது போல் இருப்பார். அவர் பக்கத்தில் தம்பி சிவக்கொழுந்து. அவர் அத்தனை உயரம் இல்லை. மருதமலை மாமணியே. தில்லையம்பல நடராஜா, சொல்லச் சொல்ல இனிக்குதடா என்ற வாசித்து சொக்க வைப்பார்கள். மருதமலை மாமணியே பாட்டில் கடைசியில் வாசிக்கப்படும் சந்தங்கள் மெய் சிலிர்ப்பை ஏற்படுத்தும். முரசு வாசிக்கும் வீரவநல்லூர் கோவிந்தன் தாத்தாவின் தலையில் செருகப்பட்டிருக்கும் கொண்டை ஊசிகள் தெறிக்கும். பாட்டு முடியும் போது சோவென்று மழை பெய்த உணர்வு. படையாச்சிகளில் அம்பாசமுத்திரம் எம்.எ.துரைராஜ் பிரசித்தம். அந்த ஒல்லி உடலில் இருந்து நாகசுரத்தின் வழியே அனைவரையும் மெய்சிலிர்க்கவைக்கும் நீண்ட கார்வை எழுவதை நினைத்து அடிக்கடி வியப்பேன். காதல் கனி இரசமே என்று அவர் வாசித்ததை அறியாப் பருவத்தில் கேட்டது இன்றும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சென்னை சங்கீத வித்வத் சபை, அதாவது மியூசிக் அகாதெமியில் இசை விழா தொடக்கத்தில் தியாகராஜ சுவாமிகளின் நாத தனும் அனிசம் பாடுகையில் துரைராஜ் மனக்கண்ணில் நிழலாடுவார்.
யாரும் தொட்டு விட முடியாத உயரங்களைத் தொட்ட காருக்குறிச்சி அருணாசலம் தொடக்கத்தில் நையாண்டி மேளம் வாசித்தவர்தான். நாகசுர இசைச் சக்கரவர்த்தி டி.என்.இராஜரத்தினத்தால் கண்டெடுக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டார். அருணாச்சலத்தின் இனிமையை இதுவரை விஞ்சியவர்கள் எவரும் இல்லை. அவர் புலவர் குலம் என்று அழைக்கப்படும் பண்டாரம் சாதியைச் சேர்ந்தவர். பண்டாரம் இல்லாமல் எந்த முருகன் கோவிலிலும் காவடி எடுப்பதில்லை. தலித்துகளில் சிறந்த மேளக்காரர்களும் உண்டு. திசையன்விளை குழந்தையாழ்வார், பிரம்மதேசம் சுகுமாறன் என பலர் உண்டு. இத்துடன் கணியான் கூத்தில் வாசிக்கப்படும் உச்சம், மந்தம் என்ற தோல் வாத்தியங்கள் மூலம் எழும் ஒலிகள் முழுக்க முழுக்க செவ்வியல் இசைக்கூறுகளைக் கொண்டவையே. ஆக, தமிழகத்தில் பிராமணர்கள், இசைவேளாளர்கள் ஆகிய இரு பிரிவினரைத் தவிர்த்து பல இனத்தவர் ஏதோ ஒரு வகையில் இசை மரபோடு தொடர்பு கொண்டிருக்கிறார்கள். சிக்கல் என்னவென்றால், பிராமணர்களைத் தவிர, மற்ற இனத்தவர்களுக்கு இசையை, குறிப்பாக செவ்வியல் இசையை ஒரு குழுவாக சேர்ந்து அனுபவிக்கும் மனநிலை இல்லை. கடை விரித்தேன் கொள்வாரில்லை என்றார் இராமலிங்க சுவாமிகள். கொள்வதற்கு ஆள் இல்லாத சமூகத்தில் இசைக்கடையை பரப்ப யார் முன் வருவார்கள்? தமிழகத்தில் இன்று ஏறக்குறைய 17 மாவட்டங்களில் தமிழக அரசால் இசைப்பள்ளிகள் நடத்தப்படுகின்றன. நாகசுரம், தவில், குழலிசை, தேவாரம், நாட்டியம் உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றைப் பயிலுபவர்கள் பெரும்பாலும் இசை வேளாளர்கள் குழந்தைகளும் தலித்துக்களுமே. அப்பிள்ளைகள் அங்கே பயிலுவது கூட வேறு வழியின்றிதான். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றி இலட்சங்களை அள்ள நினைக்கும் சமூகத்தில், பள்ளிப் படிப்புக்கு வழியில்லாத, அல்லது படிப்பைப் பாதியில் நிறுத்திய குழந்தைகள் மட்டுமே இவ்வாறு இசைப்பள்ளிகளில் சேர்கின்றனர். அந்த நிலையில் அம்மாணவர்களின் ஆர்வம் எந்த அளவு இருக்கும் என்பதை நாம் எளிதில் ஊகிக்கலாம். பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, ஆசிரியர் ஈடுபாடு அனைத்திலும் சிக்கல்கள் ஏராளம் எனப் பலரும் எடுத்துச் சொல்லியும், அரசு செவிசாய்பதாய் இல்லை. சிறந்த முறையில் நிர்வகித்தால் கூட இப்பள்ளிகள் உருவாக்கும் கலைஞர்கள் எந்த அளவு ஒளிரமுடியும், தங்கள் வாழ்வாதாரங்களை உறுதி செய்துகொள்ளமுடியும், என்பதெல்லாம் கேள்விக்குறியாய் இருக்கும்போது, அடிப்படையே மிக மோசமாக இருந்தால், அம்மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? திருமண வீட்டில் தாலி கட்டுவதற்கு முன்னால் வாசிப்பதற்கு நாட்டைக் குறிஞ்சியில் ஒரு கீர்த்தனை, நலுங்கு பாட்டுகள் இரண்டு அத்துடன் சில உருப்படிகளை பாடம் கேட்டு விட்டு, பொருளீட்டப் புறப்படும் இளைஞர்கள் அநேகர். இசையை ஆழக்கற்று சிறக்க வாய்ப்பேதும் இல்லை அவர்களுக்கு. வாய்ப்பாட்டு பயின்ற இளைஞர்கள் மெல்லிசைக் குழுக்களில் பாடுவதற்கு வாய்ப்புத் தேடி அலைகிறார்கள். அதிகப் பட்சமாக பலர் இசை ஆசிரியர்களாக வலம் வருகிறார்கள். அவ்வளவுதான். மாறாக, பிராமணர்களைப் பொறுத்தமட்டில், அடிப்படைக் கல்வியில் எப்போதும் சமரசம் செய்வதில்லை. காலையில் படிப்பு, மாலையில் கனிவு தரும் நல்ல பாட்டு என்று இரண்டையும் சமமாகப் பாவித்துப் பயின்று, நல்ல பணியில் அமர்ந்து, ஒரு கட்டத்தில் இசைத்துறையில் சாதிக்க முடியும் என்ற நிலையை எட்டியதும் மற்றப் பணிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முழுநேர இசைக்கலைஞர்களாகின்றனர்.
இன்று முன்னணி இசைக் கலைஞர்கள் அனைவருமே மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் கல்வி பயின்றவர்கள். அந்த சமூகத்தில் இசைக்கலைஞன் அங்கீகரிக்கப்படுகிறான். கச்சேரி செய்பவர்களுக்குப் பெண் கொடுக்க பிராமண சமூகம் மட்டுமே முன் வரும். மற்ற சமூகங்களில் இதை எண்ணிக்கூடப் பார்க்க முடியாது. டாடா நிறுவன வேலையை விட்டு விட்டு கச்சேரி செய்யப் போகிறேன் என்று யாராவது புறப்பட்டால் அந்த நபரை ஒரு தினுசாகத்தான் பார்ப்பார்கள். இந்த இடத்தில் மால்கம் கிளாட்வெல் எழுதிய அவுட்லையர்ஸ் புத்தகத்தில் காணப்படும் தகவல்கள் முக்கியமானதாக இருக்கும் என்று கருதுகிறேன். அமெரிக்காவில் குடியேறிய யூதர்கள் தொடக்கத்தில் எல்லா விதமான தொழிலையும் செய்தார்கள். பொருளாதார நிலையில் உச்சத்தை எட்டியதும் பல யூத குடும்பங்களின் இளைஞர்கள் தங்கள் குடும்பங்கள் செய்து வந்த பணம் கொழிக்கும் வர்த்தகங்களை உதறி விட்டு, அறிவுத்துறையை நோக்கி தங்கள் கவனத்தை செலுத்தினார்கள் என்று அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவுத்துறையில் அவர்களின் ஆதிக்கம் இன்றும் தொடர்கிறது. இந்தியாவில் எத்தனைக் குடும்பத்து இளைஞர்கள் அத்தகையை முடிவை எடுப்பார்கள். அவர்கள் அப்படி முன் வந்தாலும் பெற்றோர் சம்மதிப்பரா என்பதும் கேள்வியே. இருபத்தொன்றாம் நூற்றாண்டை எட்டிய பிறகும் சாதிய மனோபாவம் இந்தியர்களின் அடிமனதில் நன்றாகவே ஒட்டிக் கொண்டிருக்கிறது. சாதி அரசியல் இச் சாதிக் கண்ணோட்டத்தினை மேலும் மேலும் உறுதிப்படுத்துகிறது. பிறப்பால் ஒருவனுக்கு சில திறமைகள் வாய்க்கின்றன என்பதை இன்னும் நம்புகிறார்கள். அதிலும் தலித்துகள் இன்னமும் இரண்டாந்தரக் குடிமக்களாகப் பார்க்கப் படுகின்றனர். எல்லோரையும் ஒரே நிறையாகப் பாவிப்பதற்குத் தயங்கும் இச்சமூகத்தில், அவ்வாறு தாழ்ந்துகிடக்கும் மக்கள் இசையைப் பயின்று அதன் சிகரங்களைப் பிடிக்க முடியுமென்று டி.எம். கிருஷ்ணா நம்புவது மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் அது குறித்த ஆக்க பூர்வமான நடவடிக்கைகளையும் அவர் மேற்கொள்ளவேண்டும். தொடர்ந்து தன் இரசிகர்கள் மத்தியிலும் இது குறித்து அவர் விவாதிக்கவேண்டும். அவரது கலகக் குரலுக்கு செவிசாய்ப்போர் எவ்வளவு பேர் இருப்பார்கள், அவரால் பாரதூர மாற்றங்களை உருவாக்க இயலுமா என்பது குறித்து ஐயங்கள் பல இருப்பினும், இளைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் முன் முயற்சி வரவேற்கத் தகுந்ததே. இசையில் மேலும் பல சிகரங்களை அவர் எட்டவும், கர்நாடக இசையின் சமூகச் சூழலில் ஆரோக்கியமான மாற்றங்களை உருவாக்கவும் நமது வாழ்த்துக்கள்.
ஆரியருக்கும் திராவிடருக்குமுள்ள பத்து வித்தியாசங்களை அடிப்பிறழாமல் எழுதுக:
1. பொன்னிற மேனி, கருத்த ஒடம்பு
2. கூரிய நாசி, சப்ப மூக்கு
3. செவ்விதழ்கள், தடித்த ஒதடு
4. தாமரை விழிகள், ஆந்தை முழி
5. அகன்ற நெற்றி, குறுகிய மண்டை
6. மென்மையான கேசம், சுருண்ட முடி
7. பரந்து விரிந்த தோள்கள், சூம்பிப்போன நெஞ்சு
8. உருண்டு திரண்ட மார்பு, காஞ்சி போன காம்பு
9. அறிவுக் கூர்மை, ஆட்டு மூளை
10. கோபுரக் கும்பம், வத்தல் கும்பி
11. “சந்ரோதயம் ஒரு பெண்ணானதோ, செந்தாமரை இரு கண்ணானதோ”, கட்டப்புள்ள குட்டப்புள்ள கருகமணி போட்ட புள்ள
So what?
// மறைந்த வயலின் மேதை லால்குடி ஜெயராமனின் வாழ்க்கை வரலாற்றை வெளியிடுவதற்காக வந்திருந்த இசைஞானி இளையராஜாவின் காலில் தடால் தடால் என்று பிராமணர்கள் விழுந்தார்கள் —- கச்சேரி செய்பவர்களுக்குப் பெண் கொடுக்க பிராமண சமூகம் மட்டுமே முன் வரும்.//
——————
சாதி வேற்றுமைகள் மிக வேகமாக மறைந்து வருகிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
இசை ஞானிகளாகவும், பரத நாட்டியக் கலைஞர்களாகவும் தலித்துக்கள் உயரும் பொழுது, வெகுவிரைவில் பூணூல் அணிந்து பஞ்சகச்சம் கட்டிய மண்ணாங்கட்டிகளும் முனியாண்டிகளூம் வேத பண்டிதராகவும், தலித் சங்கராச்சாரியார்களாகவும் பதவியேற்பர் என அடித்துச் சொல்லலாம்.
சாதிகள் இல்லையடி பாப்பா என பாடிய பாரதியின் கனவு நனவாக வேண்டுமானால், தலித்துக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பிராமின்ஸாக ஜாதி மாறவேண்டும் – அப்புறம் இந்தியாவில் பாலும் தேனும் ஆறாக ஓடும்.
அப்பப்பா … நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது.
Read the following on music by your rasool and you will be really more thrilled.
There is a narration by Ibn Maajah in Kitaabul Fitan in the chapter on punishments. The translation is:
The messenger of Allah said: “A people of my ummah will drink wine, calling it by other than its real name. Merriment will be made for them through the playing of musical instruments and the singing of lady singers. Allah will cleave the earth under them and turn others into apes and swine.”
Jealousy …. Why are you fearing this 3% community?
தன் கையாலாகா தனத்தில் வெருப்பேற்படவே எப்போதும் போல…
கூந்தல் இருக்கிறவன் அள்ளி முடியறான், பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்.
இதில் ஜாதி ஆதிக்கம் என்ற கூற்று எள்ளி நகையாடகுரியது.
பொழுது போகலைன்னா ‘பார்ப்பனீயம்’ இருக்கவே இருக்கு. Start music…
மிக சிறப்பான கட்டுரை சார் . உங்கள் பனி சிறக்க எனது வாழ்த்துக்கள். ஒரு தலித் ஆக இந்த கட்டுரையை படிக்கும் பொழுது எனக்கு மிக பெரிய ஊக்கத்தை தட்டுகிறது – நான் தேர்ந்துடுக்கம் தொழிலில் மிக சிறப்பாக முன்னேறி செல்ல வேண்டும் என எனக்கு உங்கள் எழுத்துகள் என்னை தூண்டுகிறது.பல தடைகளை தாண்டி செயல் பட்டுவரும் சவுக்குக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஊர்க்குருவி சிறப்பான பதிவு. நன்றி
மிக்க நன்றி.
These articles are not serving any purpose. Savukku is deviating from its original form. In early days we used to wait eagerly for Savukku’s articles blasting and deep rooted corruption in various fields. Please avoid articles on individuals like Krishna and others who fish for compliments.
குடும்பத்தலைவன் கட்டுமரம் கருணா தாத்தாவும் இசை வேளாளர் இனத்தவர் என்று கூறுகிறார்கள், அவர் எந்த நாட்டியத்தில் அல்லது எந்த வாத்தியத்தை வாசிப்பதில்? சிறந்து விளங்கினார் என்பதையும் தெரியப்படுத்தினால் நல்லது.
“கச்சேரி செய்பவர்களுக்குப் பெண் கொடுக்க பிராமண சமூகம் மட்டுமே முன் வரும். மற்ற சமூகங்களில் இதை எண்ணிக்கூடப் பார்க்க முடியாது. டாடா நிறுவன வேலையை விட்டு விட்டு கச்சேரி செய்யப் போகிறேன் என்று யாராவது புறப்பட்டால் அந்த நபரை ஒரு தினுசாகத்தான் பார்ப்பார்கள்”
It’s a nice statement and something that should be learnt from the Brahmin community. A lot needs to be done to revive Nadaswaram and due respect needs to be given to the Nadaswaram artists and other contemporaries.
Brahmin community always looks up to people like M.S.Subbulakshmi, Bala murali Krishna, L.Subramaniam (Violin) etc and they respect them but we fail to do that with the Nadaswaram, Tavil and Thara thappattai artists. We are rather more particular in criticizing Brahmins for their inclination towards Carnatic music instead of doing some constructive progress from our end.
நாட்டில் காலா காலமாக இருந்துவரும் சாதி குறித்து சக மனிதனை பிரித்து பிற்படுத்தப்படும் நடைமுறையிலிருந்து இருபதாம் நூற்றாண்டு தாண்டியும் சமூகம் மாறுபட்டு சாதியம் குறைந்து போனதற்கான சான்று எதுவும் நாட்டில் நடைமுறைச் சிந்தனையில் இருப்பதாக தெரியவில்லை,
கல்வி, மற்றும் உலகமயமான தொழில்நுட்ப வளர்ச்சியும் உலகமயத்தை நோக்கிய சர்வதேச பரம்பல் தொடர்பாடல்களும் அடக்குமுறைகளை கட்டிக்காக்க கங்கணம் கட்டி நின்ற உயர் சமுக மனவோட்டத்தை தாண்டி நிறைய மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது.
இருந்தும் இசைத்துறையில் கணிசமான மதிப்புடன் இருந்துவரும் டி எம் கிருஷ்ணாவின் சிந்தனை வரவேற்புக்குரியது.
இன்றைக்கும், இந்த நூற்றாண்டிலும் சாதியை இல்லாது ஒளிப்பதற்கான தடை விசயாக கல்வி மற்றும் பொருளாதாரம் குறுக்கீடு செய்து மக்களை பிரித்து ஆளுவதாகவே உணர முடிகிறது. உண்மையும் அதுதான் என்பது எனது தனிப்பட்ட குற்றச்சாட்டும் கூட.
அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து எதிர்நீச்சலிட்டு படித்து முன்னேறியவனை செல்வம் சேர்த்துக்கொண்டவனை சமூகம் சாதியை காட்டி ஓரங்கட்ட முடியவில்லை.
இசையை நன்கு ரசிக்கத்தெரிந்த எனக்கு முறைப்படியான பாரம்பரிய சாஸ்திரிய சங்கீத அறிவு இல்லாத காரணத்தால் இந்த கட்டுரைக்கு கருத்து எழுதுவதே சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்.
இருந்தும் ஆண்டான் அடிமை உயர்சாதி கீழ்சாதி என்ற அடக்குமுறையை ஜீரணிக்க முடியாத மனவோட்டம் உள்ளவன் என்பதால் எனது கருத்தை பணிவுடன் பதிவு செய்கிறேன்.
பாரம்பரியத்தின் வழிவந்து உயர்சாதியென்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் உடல் உழைப்பை அதிக சேதாரம் செய்யாத நயனமாக மக்களை தம்பால் கவரக்கூடிய கலைகளை தமது கலைகளாக தேர்ந்தெடுத்திருக்கின்றனர் என்ற விடயத்தை நான் முன்மொழிய விரும்புகின்றேன்.
இன்றைக்கு டிஎம் கிருஷ்ணா, பாலமுரளி கிருஷ்ணா, எம் எஸ் சுப்புலட்சுமி, சுதா ரகுநாதன், நித்தியஶ்ரீ, உன்னிகிருஷ்ணன், போன்றவர்கள் கர்னாடக இசைக்கலைஞர்களாக உயர்குலத்து சமுகத்தினரால் அறியப்பட்டிருந்தாலும்
ரிஎம் சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், PB ஶ்ரீனிவாஸ், சுசீலா, ஜானகி, ஸ்வர்ணலதா, எஸ்பி பாலசுப்பிரமணியம். கேஜே ஜேசுதாஸ், சித்திரா, சந்திரபாபு, இசைஞானி இளையராஜா, தேவா, தொடங்கி இன்றைய கானா பாலா வரை பட்டி தொட்டி எங்கும் இசை கலைஞர்களாக நிறைய ரசிகர்களை தம்மகத்தே கொண்டு இவர்களும் பிரகாசித்தவர்களாகவே இருக்கின்றனர்.
டிஎம் கிருஷ்ணா, பாலமுரளி கிருஷ்ணா, எம் எஸ் சுப்புலட்சுமி, சுதா ரகுநாதன், நித்தியஶ்ரீ, உன்னிகிருஷ்ணன், போன்றவர்களில் ஒருசிலர் சினிமாவில் பாடியதால் என்போன்றவர்களாலும் ஓரளவு பரவலாக அறியப்பட்டவர்களாக இருக்கின்றனர்,
மேடைக் கச்சேரிகளில் மிளிரும் பாடகர்கள் பற்றிய விவாதங்கள்கூட உயர்மட்ட குடியினரின் விவாதமாகவே மட்டுப்ப்படுத்தப்பட்டு இருந்து வருகிறது அதிகமான ஊடகங்களும் பிராமணர்களின் கையில் இருப்பதால் அந்த விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
சினிமாவில் மிளிர்ந்த கலைஞர்களில் ஒரு சிலர் உயர் வகுப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அங்கு பாமர மக்களின் ரசிப்புத்தன்மையே அவர்களை உலகத்தரத்துக்கு அறியக்கூடிய கலைஞர்கலாக்கி உச்சாணிக்கொம்பில் உட்கார வைத்திருக்கிறது சாதி அங்கு தடையாக இல்லை. தூக்கி வீசப்பட்டிருக்கிறது
உதாரணத்துக்கு இளையராஜா என்ற ஒப்பற்ற கலைஞர் ஒருவரையே குறியீடாக காட்டிக்கொள்ளலாம்.
எனது இளப்பராயத்தில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய “நித்தம் நித்தம் மாறுகின்ற தெத்தனையோ” என்ற பாடல் எனக்கு அப்போதே பழைய பாடலாக இருந்தது, மறைந்த பின்னணிப்பாடகர் PB ஶ்ரீனிவாஸ் அவர்கள் பாடிய “மயக்கமா கலக்கமா மனதிலே குளப்பமா” ரிஎம் எஸ் அவர்களின் “கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா” உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை” என்ற பாடல்களும் எனக்கு அன்றைய பழைய பாடலாக இருந்தது இன்றைக்கு எனது முதல்த்தரமான பாடல்களாக இருப்பது குறிப்பிட்ட அப்பாடல்களே.
எனவே ரசனை என்பது வேறு சாஸ்திரீய சங்கீதத்தில் இருக்கும் நயனங்களை அறிவதென்பது வேறு, மிருகங்கள் பறவைகள் தமது பாஷையை தமது இனம் அறிந்து கொள்வது போன்றதே இந்த மேட்டுக்குடிகளின் சங்கீதம்,
ஞானச்செருக்கும் வித்தக காய்ச்சலும் அங்கு குடிகொண்டிருக்கும், கர்னாடக சங்கீதம் என்ற சமஸ்கிருத கிரந்தத்தை அறிவதற்கு அந்த குழுவினரால் மட்டுமே முடியும்.
பசிக்கு உணவு என்பதுபோல கிராமத்து பாடல்களும் சினிமா பாடல்களும் கொட்டிக்கிடக்கிறது, ஐந்து நட்சத்திர ஹோட்டகில் அதே உணவை வர்ண கோப்பைகளில் இட்டு அதிக விலைக்கு விற்பதுபோல கச்சேரி விற்பன்னர்கள் மோசடி செய்கின்றனர் அவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டாலே மலிவு விலைக்கு அவைகளையும் வாங்கிக்கொள்ளலாம்.
ஊர்க்குருவி.
The excellence in any field is liked by the people. For an expert the caste and religion are not barriers.
Shenoy maestro ustad bismillah khan used to play for God Vishwanath with total dedication.
Similarly, Naushad is a great music director for films and liked by everybody.
MS Subbulakshmi amma is not brahmin. But she is dear to every brahmin hearts.
I was thinking that the wonderful music director MS Viswanathan is a brahmin. But learnt that he is not. I always taste his melodies.
In which caste the musician is born is not important but the music. I feel that people see only the music and not the caste of the music player.
Small correction M.S.Subbulakshmi amma is a Brahmin. She is born to Subramaniam Iyer and Shanmukavadiver Ammal in a Madurai Brahmin family. She is not just dear to Brahmin hearts but to every one who like Music. But I liked your point. Thanks!
I don’t think MS Subbulakshmi is Bramin, Later days she said her father is Subramania iyer, But her mother did not reveal her father’s identity. She married to Bramin Kalki Sadasivam. I don’t want to create controversy about it, but this is what i read. She was music genius.
Why no author name? 😛
//அவ்வாறு தாழ்ந்துகிடக்கும் மக்கள் இசையைப் பயின்று அதன் சிகரங்களைப் பிடிக்க முடியுமென்று டி.எம். கிருஷ்ணா நம்புவது மகிழ்ச்சியைத் தருகிறது.//
Why is TMK trying to learn the other music strains and aiming for the peaks? Shouldn’t he be working to provide a platform for the neglected music strains and musicians using his status and influence? Strange !!
படித்தேன். நான் எழுதிய கட்டுரையின் முறையீடுகள் பல இதிலும் இருக்கின்றன. முக்கியமாக இந்த “தலித் இசை” எந்த அளவிற்கு சாத்தியம் என்ற கேள்வியே மிஞ்சி நிற்கிறது. விவாதம் தொடரட்டும். ஆனால் வழி பிறக்குமா? இப்பொழுதுள்ள தலித்துகள் வேறு வேறு இலக்குகளை நோக்கிப் பயணிக்கிறார்கள். பெரும்பாலும் “உல்லாச” வாழ்க்கைகுப் பின் செல்கிறார்கள் என்பது வருந்தத்தக்க விஷயம். ஆக பொறுத்திருந்து பார்க்க வேண்டியது தான்! நன்றி.
Excellent. karunaignana.wordpress.com
Excellent article. But always blaming brahmins for everything. If you are having competency you will be recognised. Here no caste religion barriers.