இறுகும் சுருக்கு.

You may also like...

18 Responses

  1. shrek says:

    ஊர்க்குருவி and savukku are same? both are desperate to see that jaya escapes from this case. dont worry guys. as long as media supports jaya like the way it does now nothing will happen to madam.

  2. shrek says:

    /இப்படிப்பட்ட தில்லு முல்லுக்களையெல்லாம் செய்து ஜெயலலிதா தப்பிக்க வில்லையே என்ற சவுக்கின் ஆதங்கம் வியப்பாக இருக்கிறது./ WELL SAID. we all know where savukku’s allegiance is. hehehe.

  3. பொன்.முத்துக்குமார் says:

    ஏங்க இப்படி விபரம் தெரியாத கொழந்த மாதிரி எழுதறீங்க ? நம்மூருல எந்த பெரிய அரசியல்வாதி ஊழல் குற்றத்துக்காக ஜெயிலுக்குப்போயிருக்காரு ? அம்மாவாவது ஜெயிலுக்குப்போறதாவது ! கண்ண தொறந்து வச்சிக்கிட்டே கனவு காணுவீங்க போல ?

  4. dharmaraj says:

    எங்கே ஜெ வுக்கு சிரை தண்டனை கிடைக்குமோ என்ற கவலை தெரிகிறது

  5. Joshua says:

    சபாஷ் ஜட்ஜ் மைக்கேல் ஜி ….

  6. கட்டதொர says:

    ஆனால், வண்டு முருகன் போன்ற அறிவு ஜீவிகளின் அறிவுரையின்படி, அவசரக்குடுக்கைத்தனமாகவும், நான்தான் தமிழக முதல்வராயிற்றே…. உலகமே எனது காலுக்குக் கீழே என்ற அகந்தையின் காரணமாகவும், இன்று முட்டுச் சந்தில் வந்து நிற்கிறார் ஜெயலலிதா………………………..பேசாம முத்தமிழ் வித்தவரிடம் Idea கேட்டிருக்கலாம்.

  7. ஆர்.தியாகு says:

    நீங்க சொன்ன தவறை எல்லாம் உச்ச நீதிமன்றத்தில் ஜெ சரி செய்துவிடுவார், அவருக்கு கிடைக்கும் தண்டனை அவருக்கு ஒரு அனுதாபத்தை தமிழகத்தில் ஏற்ப்படுத்தும். தமிழக மக்கள் இன்னும் வளரணும்.

  8. ஏழைகளுக்கு நீதி காலம் கடந்தும் கிடைக்காது!ஜெயா,கருணா ,சோனியா,காவி கோஷ்டிகளுக்கு ,எவ்வளவு காலம் ஆனாலும் தண்டனை கிடைக்காது!சவுக்கு போன்ற கொஞ்சம் நல்லவர்களை C .T .செல்வம் ,காவல்துறை எல்லாம் புரட்டி புரட்டி நீதி, கவனிப்பு எல்லாம் கொடுக்கும் !இதுதான் இந்தியா!-நம்பிக்கை நாகராஜ் ,துபாய்.

  9. AAR says:

    Worst Govt in TN history was JJ Govt in 1991-96.

  10. Anjankumar says:

    இப்படிப்பட்ட தில்லு முல்லுக்களையெல்லாம் செய்து ஜெயலலிதா தப்பிக்க வில்லையே என்ற சவுக்கின் ஆதங்கம் வியப்பாக இருக்கிறது.

    தப்பு செய்தது யாராக இருப்பினும் கருணா நிதியோ, கனிமொழியோ, ராசாவோ, ஸ்டாலினோ, செல்வகணபதியோ, ஜெயலலிதாவோ, செல்வகணபதியோ, சோனியாவோ, ராகுலோ, பிரியங்காவோ, ராபார்ட்வதேராவோ, கட்காரியோ, எடியூரப்பாவோ, மோடியோ யாராகினும் நீதி மன்றத்தால் தண்டிக்கப் படவேண்டும் என்று எண்ணுவதும் எழுதுவதுமே நல்லவர் செயல்.

  11. பனையும் காகமும்
    ————————————-

    பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்

    ஒரு உற்சாகமான பிரளயத்தின்போது

    பித்தம் தலைக்கேற சித்தம் மயங்கி

    வளர்ப்பு பிராணி பப்பியின்

    பிறந்தநாள் விளம்பர பதாகையை

    பந்தாவாக ஏற்றி வைக்க

    அடிப் பனைமரத்தில் அடடித்த ஆணி

    கபாலம் வரை கறள் ஏறி

    மரத்தையே விழுத்திவிடும் என்று

    பல்லிகூட ஜோசியம் சொல்லவில்லை.

    .

    புளியமர இடுக்குக்குள் ஒளிந்திருந்து

    வடை தின்று நரியை ஏமாற்றிய

    அண்டங் காகம்

    ஒரு நூற்றாண்டை அண்மித்து

    பறக்கும் திறன் இழந்து

    கண் பஞ்சடைந்தபோதும்

    தன் குல குஞ்சுகளுக்காக

    உடைந்த சிறகை சிலுப்பி

    அடி வானத்தின் விடிவெள்ளியை நோக்கி

    பறக்க தயாராவதாக விடுப்பு காட்டுகிறது.

    .

    பனைமரம் வீழ்ந்துவிட்டால்

    புளியமரம் மவுசு ஏறிவிடும் என்பது

    அண்டங்காகத்தின் அபார நம்பிக்கை,

    கரியமில வாயுவின் அடர்த்தியால்

    புளியமரத்தின்கீழ் புல் பூண்டு முளைப்பதில்லை

    காகங்கள் மட்டும் கம்பீரமாக

    கிளைகள் அனைத்திலும் கூடுகள் அமைத்துவிட்டன

    பனைமரம் நிழல் கொடுக்காததால்

    அங்கேயும் புற்கள் இல்லை

    பனையில் கூடுகட்ட குருவிகளால் முடியவில்லை.

    நரிகூட காகத்துக்கு பயந்து

    வனாந்திரத்தை நோக்கி இடம் பெயர்ந்துவிட்டது.

    அண்டங்காகம் தன் பரிவாரங்களுடன்

    பனை மரத்தின் வீட்சியை மட்டுமே

    கூர்ந்து கும்மிருட்டிலும் நாசாரமாக கரகரக்கிறது.
    .

    ஊர்க்குருவி.

  12. vasan says:

    அடிமை,ஜட்ஜுகள் பணத்திக்கு ஆசைபடும் ஜட்ஜுகள்,இதுகூட உதவமாட்டார்களா என்ன .கருணாநிதி இந்திரா அம்மையாரை சரணாகதி அடைந்தது போல ‘இதுவும்'(அம்மா)மோடியேகதி என்று சரணடைந்தாலோ,பாண்டிசேரி ஜட்ஜு போல பணபேரம் பேசியோ..காரியத்தை முடித்துக்கொள்ள மாட்டார் என்றா நினிக்கிரீர்கள்.நமது”ஜட்சுகளைப்பற்றி நமக்குதேரியாததா . ​

  13. நீதிமன்ற போக்கின் பிரகாரம் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு பாதகமாக அமையும் என்ற நிலைப்பாட்டை அனைத்து ஊடகங்களும் மறைமுகமாகவேனும் செய்தியாக வெளியிடுவதால் கிட்டத்தட்ட ஜெயலலிதாவுக்கு நெருக்கடி ஏற்படும் என்ற மனநிலைக்குத்தான் யாரும் வரமுடியும், கட்டுமரம் கருணாவும் இரவிரவாக கண் முழித்து அதே கருத்தையோற்றி தொடர் கட்டுரைகள் வெளியிட்டு மகிழ்ச்சியடைந்ததையும் கவனத்தில் கொள்ளமுடியும்.

    ஆனால் ஜெயலலிதா தண்டனை பெற்று அதிகாரங்கள் பறிக்கப்படுவாராயின், ஒரு குற்றவாளி நீதி நியாயப்படி தண்டனை பெற்றவராகிவிட்டாலும் இன்னுமொரு நரகாசுரனையொத்த சமூகவிரோதி அந்த இடத்தை அபகரிக்க காத்திருக்கிறான் என்ற பயம் நடுங்க வைக்கிறது,

    ஜெயலலிதா மட்டுமல்ல ஊழல்வாதிகள் அனைவரும் நிச்சியம் தண்டனை பெறவேண்டியவர்களே,

    அதிமுக வில் அடுத்தகட்ட தலைவர் என்று எவரும் இல்லை, அந்த வெற்றிடம் பெரு முதலை காண்டாமிருகம் நரகாசுரன் கருணாநிதிக்கு சாதகமாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் பலரைப்போன்று என்னுள்ளும் எழுந்திருக்கிறது.

    தவிர இந்த தீர்ப்பாவது இன்னொரு திருட்டு அரசியல்வியாதி உருவாவதை தடுத்ததாக அமையட்டும்.

    எது எப்படியிருந்தாலும் கீழ்க்காணும் உரையாடல் நல்ல நகைச்சுவை.
    //எனக்கு உடம்பு சரியில்லை. மஞ்சள் காமாலை என்றார் அந்த நபர். (20 வருசமாவா ?) மருத்துவ சான்றிதழ் எங்கே என்று கேட்டார் நீதிபதி. உடனே அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இடைமறித்து, அவர் சித்த மருந்து உட்கொண்டு, மஞ்சள் காமாலையை சரி செய்தார் என்றதும் நீதிபதி அதற்கு மேல் பேசவில்லை.//

  14. fuz says:

    போச்சே போச்சே….

  15. Leo Joseph says:

    Amma Court aarambichirukalamo…!!!

  16. Shankar says:

    Amma unavagam, amma thanneer, amma pharmacy, ivalavu senju kadaisiyal la “ammavku theerpu” la kottai vittutanungale paya pullainga…

  17. அன்புஅன்பு says:

    வெட்கக்கேடு, இந்த கட்டுரை நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதை விட, ஜெயலலிதா தெரியாமல் மாட்டிக் கொண்டாரே என்று அவருக்காக வருத்தப்டும் தொனியில் தான் உள்ளது. இந்த நாட்டில் நீதி செத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே சவுக்கு அவர்களே வருத்தம் வேண்டாம் இதிலும் ஜெயலலிதா தப்பிப்பார்.

  18. Jaya says:

    thrilling. ivvalavu thrilling naan padikka villai ithuvarai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress