சவுக்கில் “எத்தனை கோடி கொடுத்தாய் வைகுண்டராஜா ?” என்ற கட்டுரை வந்ததும், திங்கட்கிழமை இந்த வழக்கை, தனது போர்ட்ஃபோலியோ மாறினாலும் நீதிபதி கர்ணனே விசாரிக்கப் போகிறார் என்ற தகவலும் பதிவிட்டிருந்த பின்னாலும், தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி எந்த விதமான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
இத்தனைக்கும், வெள்ளி அன்றே, மனித உரிமை பாதுகாப்பு நடுவம் சார்பாக, அதன் வழக்கறிஞர் மீனாட்சியை ஏகவனசத்தில் பேசி, அவமானப்படுத்திய விவகாரம் அத்தனையும் தலைமை நீதிபதியிடம் மனுவாக தரப்பட்டு, இந்த வழக்கை நீதிபதி கர்ணனிடம் இருந்து வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கோரப்பட்டிருந்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
திங்களன்று காலை 11 மணிக்கு சாவகாசமாக வந்தார் கர்ணன். வந்ததும், மத்திய அரசு வழக்கறிஞரைப் பார்த்து, பதில் மனு தயாரா என்று கேட்டார். அவர், பதில் மனுவின் ஒரு பக்கத்தில் மட்டும் அதிகாரி தவறாக கையெழுத்திட்டிருக்கிறார். இரண்டு நாள் அவகாசம் கொடுத்தால், அனைத்து பக்கங்களிலும் கையொப்பம் பெற்று வருகிறேன் என்றார்.
வெகுண்டெழுந்தார் கர்ணன். இதெல்லாம் ஒரு காரணமா ? நீங்கள் ஏன் பதில் மனு தாக்கல் செய்வதில் தாமதம் செய்கிறீர்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். திங்கட்கிழமை, வேறு நீதிபதி வருவார், அவரிடம் தாக்கல் செய்யலாம் என்றுதானே உங்கள் திட்டம் ? அது நடக்காது. நான்தான் இந்த வழக்கை விசாரிப்பேன் என்று கூறி விட்டு, வைகுண்டராஜனின் வழக்கறிஞர் சுந்தரேசனை வாதிடச் சொன்னார்.
அப்போது வழக்கில் சேர்த்துக் கொள்வதற்காக மனித உரிமை பாதுகாப்பு நடுவத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்காக சங்கரசுப்பு ஆஜரானார். எங்களது மனுவை படியுங்கள் என்று கூறியதும், நீதிபதி கர்ணன் கடும் கோபமடைந்தார். எந்த முகாந்திரத்தில் இந்த வழக்கில் சேர்கிறீர்கள் ? மனுதாரருக்கம் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம் என்று கோபத்தோடு கேட்டார். மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளார். மனுதாரர் உண்மை அறியும் குழு அமைத்து, பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டுள்ளார். அந்தப் பகுதியின் சுற்றுச் சூழலே கடுமையான சேதமடைந்துள்ளது என்றார்.
உடனே வைகுண்டராஜனின் வழக்கறிஞர் சுந்தரேசன், இது இந்த மனுவின் வரையறைக்கு அப்பாற்பட்டது என்று கூறினார். ஆனால், மத்திய அரசின் அனுமதி ரத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தந்திரமாக மாநில அரசின் தடையை நீக்கியது மனுவின் வரம்புக்குள் வருமா வராதா என்பதை வசதியாக குறிப்பிட சுந்தரேசன் மறுத்து விட்டார்.
உடனே சங்கரசுப்பு, மனுவின் வரையரைக்குள் வருமா வராதா என்ற கேள்வியே இங்கு எழவில்லை. ஒரு மாநில அரசு சட்டவிரோதமாக கனிமவளங்கள் அள்ளப்படுகின்றன என்ற அடிப்படையில் ஒரு ஆய்வை நடத்தி, அந்த ஆய்வின் அடிப்படையில், கனிமம் அள்ளுவதை தடை செய்துள்ளது. அந்தத் தடையை விலக்கி, கனிமங்களை அள்ளுவதை இந்த நீதிமன்றம் அனுமதிப்பதன் மூலம், கனிமக் கொள்ளையர்களுக்கு இந்த நீதிமன்றம் உதவி செய்வதாக ஆகும் என்றார்.
வந்ததே கோபம் கர்ணனுக்கு. இனி நான் இந்த வழக்கை விசாரிக்கப் போவதில்லை என்று எழுந்து விட்டார் என்று நினைக்காதீர்கள். உடனே தன்னுடைய சுருக்கெழுத்தரை அழைத்தார். என்ன துணிச்சல் உங்களுக்கு ? நான் கனிமக் கொள்ளையர்களோடு தொடர்பில் இருக்கிறேன் என்று சொல்ல ? இப்போதே உடனடியாக நான் அவர்கள் கேட்ட கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உத்தரவி இட்டு விடுவேன். என்னுடைய அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது.
இப்படி சொன்னதும், சங்கரசுப்பு, மனுதாரரின் வாதத்தை கேட்க முடியாது என்று சொல்ல நீதிமன்றத்துக்கு உரிமை கிடையாது. நான் கனிமக் கொள்ளையர்களுக்கு நீதிமன்றம் துணை போகிறது என்று சொல்லவில்லை. நீதிமன்றம் துணை போய் விடக் கூடாதே என்று தான் சொன்னேன்.
உடனே நீதிபதி கர்ணன் எதற்கெடுத்தாலும் இப்படி எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டே இருந்தால் எப்படி ? கூடங்குளம் அணு உலைக்கு கூடத்தான் எதிர்ப்பு இருக்கிறது. அதற்காக அதை மூடி விடலாமா என்று கேட்டார். உடனே சங்கரசுப்பு, கூடங்குளம் அணு உலையை நடத்துவது அரசு. இது தனிநபர் அடிக்கும் கொள்ளை. இந்தக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம் என்றார்.
வைகுண்டராஜனால் அரசாங்கத்துக்கு எத்தனை வரி வருவாய் வருகிறது தெரியுமா ? (அரசுக்கு வருமானமா ? அல்லது…….. ) அப்படிப்பட்டவர்கள் தொழில் செய்வதால்தான் அரசுக்கு வரி வருவாய் வருகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் தொழில் எப்படி நடக்கும் என்றார். சங்கரசுப்புவோ, இந்தியாவில் வரியே செலுத்தாத தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்கள் 30 கோடிக்கு மேல் இருக்கிறார்கள். அவர்கள் வரி செலுத்தவில்லை என்பதற்காக அவர்களை கொன்று விடலாமா என்று கேட்டார். உடனே கர்ணன், தொழில் வளத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
தொழில் வளம் என்பது, சுற்றுச் சூழலை அழித்து வளர்ந்தால் அதை எதிர்க்க வேண்டியது எங்களது கடமை. இந்த கனிமக் கொள்ளையின் காரணமாக அந்தப் பகுதியில் கடலே சிவப்பு நிறமாகி விட்டிருக்கிறது. நாங்கள் தயாரித்த உண்மை அறியும் குழு அறிக்கையைப் பாருங்கள். அதில் பலர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். பலருக்கு தோல் வியாதியும், கேன்சர் போன்ற நோய்களும் வந்திருக்கின்றன என்றார். கேன்சர் வந்தது என்பதற்கான ஆதாரம் எங்கே…… ? மருத்துவ சான்றிதழ் எங்கே என்று கேட்டார் கர்ணன். உடனே சங்கரசுப்பு , அந்தப் பகுதியில் உள்ள 10 ஆயிரம் பேர்களையும் மனுத்தாக்கல் செய்யச் சொல்கிறேன் இந்த கனிமக் கொள்ளையால் எத்தனை பாதிப்பு என்று எனக் கூறினார்.
மீண்டும் கோபம் வந்தது கர்ணனுக்கு. என்ன செய்வீர்கள் ? என்னைப் பற்றி நோட்டீஸ் போடுவீர்கள் அவ்வளவுதானே. என்னுடைய சர்வீஸில் எத்தனையோ பார்த்து விட்டேன். இதெல்லாம் எனக்கு சாதாரணம். நான் இதற்கெல்லாம் பயப்படுபவன் அல்ல. நான் ஒரு அரசியல் அமைப்புச் சட்ட அதிகாரி. என்னுடைய அதிகாரம் மிகப் பெரியது. இதற்கெல்லாம் அசரும் நபர் நான் அல்ல என்று சகட்டு மேனிக்கு கத்தினார்.
வழக்கமாக ஒரு மணிக்கே எழுந்து சென்று விடுவார் நீதியரசர். இன்று காலை 11.30 முதல் 1.30 வரை அமர்ந்து இந்த வழக்கில் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார். மதியம் ஆனதும், மீண்டும் இந்த வழக்கில் வாதங்கள் மதியம் தொடரும் என்றார்.
மனித உரிமை பாதுகாப்பு நடுவ வழக்கறிஞர்கள் மற்ற வேலையை எல்லாம் விட்டு விட்டு, 2.30 மணி முதல் நீதிமன்றத்தில் காத்திருந்தனர். இந்த வழக்கை எடுப்பார் என்று பார்த்தால், கர்ணன் இதைத் தவிர மற்ற வழக்குகளையெல்லாம் எடுத்து விசாரித்துக் கொண்டிருந்தார். மாலை ஆனதும், அந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைக்கிறேன் என்று கூறினார். இந்த விஷயம் தெரியாத மனித உரிமை பாதுகாப்பு நடுவ வழக்கறிஞர்கள் 2.30 மணி முதல் தொடர்ந்து காத்திருந்தனர். ஆனால், வைகுண்டராஜனின் வழக்கறிஞர் சுந்தரேசனுக்கு இந்தத் தகவல் முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும். அவர் நீதிமன்றத்துக்கு மதியம் வரவேயில்லை.
வைகுண்டராஜன் அதிகமாக வரி கட்டுகிறார் என்று நீதிபதி கர்ணன் கவலைப்படுகிறார் என்றால் எந்த அளவுக்கு நாட்டின் சட்டத்தை விட, வைகுண்டராஜன் மீது அக்கறை கொண்டிருக்கிறார் என்று பாருங்கள்.
வி.வி.மினரெல் நிறுவனம் தங்கள் இணையதளத்தில் இந்தத் தாதுப் பொருட்களைப் பற்றி எப்படி குறிப்பிடுகிறது பாருங்கள்.
V.V. Mineral (VVM) is India’s largest Mining, Manufacturer and Exporter of Garnet & Ilmenite. At the global level, we are poised to rise above our number two position. VVM is the first private ILMENITE Exporter in India. Established in 1989, we have achieved significant market share in Europe, Middle East, East Asia, Australia and USA.
We owe our success to our primary objective -Customer Delight and Satisfaction – providing the best quality of Garnet, Ilmenite, Rutile and Zircon in lesser lead times at globally competitive prices.
வைகுண்டராஜன் கிட்டத்தட்ட இந்தத் தொழிலின் ஏகபோக முதலாளியாக இருக்கிறார். கார்னெட் மாஃபியாவின் ஒரே தலைவராக திகழ்கிறார் வைகுண்டராஜன். இவரது வலையில் விழாத பத்திரிக்கையாளர்களோ, அரசு ஊழியர்களோ, வழக்கறிஞர்களோ, நீதிபதிகளோ ஏறக்குறைய இல்லை என்றும் அளவுக்கு தமிழகத்தில் ஒரு தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார். இவருக்கு எதிராக எழுதினால், எழுதும் நபரை எப்படியாவது விலை கொடுத்து வாங்குவது, அல்லது மிரட்டுவது இதுதான் இவரது வாடிக்கை. சமீபத்தில் கூட சவுக்கின் புகைப்படத்தைக் கேட்டு அலைந்துள்ளனர்.
இப்படி சுற்றுச் சூழலை கொள்ளையடித்து, மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்து, கோடி கோடியாக லாபம் சம்பாதித்து, அந்தப் பணத்தில்தான் தற்போது, புதிய தலைமுறை தொலைக்காட்சியை விட, மிகச் சிறந்த தொழில்நுட்பத்தில் (Ultra High Definition) தொலைக்காட்சி செய்தி சேனல் தொடங்க உள்ளார்கள். தொலைக்காட்சி சேனல் தொடங்கினால், புதிய தலைமுறையின் பச்சமுத்து அடிக்கும் கல்விக் கொள்ளையை யாருமே கண்டு கொள்ளாதது போல, க்ரானைட் கொள்ளையையும் கண்டு கொள்ளாமல் இருக்கலாம் அல்லவா ? ஊடக பலத்தை வைத்து மிரட்டலாம் அல்லவா ? நாங்கள் சுற்றுச் சூழலின் ஒரே பாதுகாவலர்கள் என்று சொல்லலாம் அல்லவா ?
சூழலை நாசம் செய்துவிட்டு, வைகுண்டராஜனின் மகன் சுப்ரமணியம் உலக தண்ணீர் தினத்தைக் கொண்டாடுவதைப் பாருங்கள். சாத்தானின் வேதம் என்பது இதுதான்.
இணையதளத்தையும் தங்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு க்ரானைட் கொள்ளைக்கு தடை விதித்த பிறகு, http://vvmineral.wordpress.com/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டு, அதில் வைகுண்டராஜன், விவி மினரெல்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு முழு நேர சொம்படிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதற்காகத்தான் இந்தப் புதிய செய்திச் சேனல். செய்திச் சேனலின் நிர்வாகத்தையும் முழுமையாக கவனிப்பதற்கு, தொழில் நேர்த்தியான நபர்கள் நியமிக்கப்படாமல், வைகுண்டராஜனுக்கு “நெருக்கமான” பெண்மணி என்று கருதப்படும் சுப்புலட்சுமி என்ற பெண்மணியிடம் முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் இத்தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடங்க உள்ளது.
சூழலைப் பாழாக்கி, அந்தப் பகுதியையே சூறையாடி, அரசு அதிகாரிகளை நுழைய விடாமல், அனைவரையும் மிரட்டி, ஒரு தனி அரசாங்கத்தையே நடத்திக் கொண்டிருக்கும் வைகுண்டராஜனுக்கு நீதிமன்றங்கள் எப்படி துணை போகின்றன பார்த்தீர்களா ? வைகுண்டராஜனுக்கு எதிராக ஒரு கட்டுரையைக் கூட எந்த ஊடகத்திலும் வெளியிட முடியாத ஒரு மோசமான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.
தீர்ப்பை ஒத்தி வைத்திருக்கும் நீதி நாயகர் கர்ணண் என்ன தீர்ப்பு வழங்குகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Why don’t you write about Daya Devadoss? Do you know him? If you are right, should spare any wrong doers. Be impartial.
Sorry please note that I am not represent. Mr. Sankarasubbu sir only represent for us.
Dear Savukku…..I am represent as you stated. We engaging Mr.Sankarasubbu to represent for our Organisation. He only represented as you stated during the course of arguments. Please modify your statement. Thank you.
/// “ஊழலும் இந்தியாவும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் அறுவைச்சிகிச்சை ஒன்று தவிர எந்தக்கொம்பனாலும் ஊழலை தடுத்து நிறுத்த முடியாது.” //
——
தேசபக்தியுள்ள ஒவ்வொரு ஹிந்துவும் கோட்சேயாக மாறி அனைத்து அரசியல் தலைவர்களையும் போட்தள்ளினால், பாருக்குள்ளே நல்ல நாடாக பாரதநாடு ஆகி விடும்.
உனது நாட்டில் மானம் மரியாதையோடு நீ வாழவேண்டுமானால், உனக்கு ஜிஹாத் ஒன்றே கடைசி வழி – வேறு வழியே கிடையாது – இல்லாவிட்டால் புலம்பிக்கொண்டே சாவு.
This may be irrelevant to this article. But is this true? I read this somewhere
”
அறிஞர் அண்ணா சொன்னார்.”தமிழகத்திலே தட்டினால் தங்கம், வெட்டினால் வெள்ளி,எடுத்தால் இரும்பு “என்றார். இப்போது ஊதினாலே பறக்கும் கட்டிடங்கள் வந்துள்ளன. கட்டிடத்தொழிலளர்கள் நூறு பேருக்கு இருபது பேருக்குத்தான் பதிவு. ஆனால் அதில் ஐந்து பேருக்கு தான் இன்சூரன்ஸ் வசதி. ஆனால், இன்சூரன்ஸ் என்ற பெயரில், தின கூலியில் ஐந்து ரூபாய் அந்த நூறுபேரிடமும் பிடித்துகொள்கிறார்கள் இந்த கட்டிட நிபுணர்கள். விபத்து நேர்ந்தால் அந்த ஐந்து பேருக்குதான் நிர்வாகம் ஈடு கொடுக்கும். இத்தகைய ரத்த காட்டேரிகள் நிறைந்தது தான் இந்த ரியல் எஸ்டேட் துறை. இதற்க்கு கட்டிட தொழிலாளார் தலைவர்கள் உண்டு. நிர்வாகத்திடம் காசு வாங்கிக்கொள்ளவும் போலி கூச்சல் போடவும். அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. காரணம், இந்த தொழிலில் பல அரசியல் வாதிகளின் பினாமி பணம். போலி மருந்து தொழிற்சாலை சென்னை வடக்கில் மருந்து கண்காணிக்கும் ஆய்வாளர்கள் இருந்தும் வெகு ஜோராக ஒரு மந்திரியின் மாப்பிள்ளையின் உதவியோடு நடந்ததாக வெளி வந்தது. அந்த மருந்தினால் இறப்பும் ஏற்பட்டது. வழக்கு பதிவாயிற்று. அப்புறம் என்னவாயிற்று? கிழக்கு கடற்கரை சாலையில் இளங்கோவன் என்ற கப்பல் பொறியாளர் சுட்டு கொல்லபட்டார். அதில் ஒரு மந்திரியின் உறவினருக்கு இளங்கோவன் நிலம் விற்க மறுத்ததே. சுட்டவனும் சுடப்பட்டான்.காரணம் அவன் கூலி படையாம். அவரது மகளும் மாப்பிள்ளையும் ரகசியமாக வாக்குமூலம் கொடுத்துவிட்டு பிரான்சுக்கு போய்விட்டார்கள். அந்த வழக்கு இன்னும் தூங்குகிறது. ஒருகுடும்பமே அண்ணா நகரில் அரசியல் வாதிக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டது. அந்த வழக்கும் தொங்குகிறது. “தூங்காதே வழக்கே தூங்காதே, ஒரு பொய்வழக்கு என்ற பெயர் வாங்காதே”
நிறைய கருத்து எழுதவேண்டும் என்று மனதில் உணர்வு எழுந்தாலும் பிரயோசனமற்ற ஒன்றுக்கு கருத்து எழுதி என்ன பலன் என்று மனது சோர்வடைந்து விட்டது.
“ஊழலும் இந்தியாவும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் அறுவைச்சிகிச்சை ஒன்று தவிர எந்தக்கொம்பனாலும் ஊழலை தடுத்து நிறுத்த முடியாது.”
we shold not alowed this knd of people
தீர்ப்பை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன் ……
வைகுண்டராஜனை பற்றி எழுதும் நீங்கள் தயா தேவதாஸ் பற்றி எழுதாமல் இருப்பதேன் ? பேரம் முடிஞ்சிடா ?
//சமீபத்தில் கூட சவுக்கின் புகைப்படத்தைக் கேட்டு அலைந்துள்ளனர்.//
யாராவது ஒரு நீண்ட தடினமான சவுக்கை படம் எடுத்து அவருக்கு அனுப்பி வையுங்கள். சவுக்கு இப்படிதான் இருக்கும் என்று.
Savukku seems to be one of the most corrupted blog in the net. Its obvious from all the articles targeting, Savukku has taken a large amount from Daya Devadas who is a long time business rival of Vaikundarajan. Also quoting various court documents, showing the scanned documents of important court verdicts shows clearly the man behind these articles is Daya Devadas. And shamelessly claiming as the media who expose “truth”, Savukku is exposed as the most corrupted blog in the world. Wake up guys…Don’t believe this group of “Jobless Idiots”…who go around looking for “milking” money through this kind of cheap media. Shame on you…Ithu oru pozhappaadaa ungalukku?….Poi thetuvula picha edungada…Naaigalaa…
Belt Adi , not a good joke make it a readable joke
@Belt ADI , if you know about Daya Devadas illegal mining then write it in this blog, we support you.