அன்புள்ள கலைஞர் அவர்களே… மன்னிக்கவும் டாக்டர் கலைஞர் அவர்களே… மீண்டும் மன்னிக்கவும். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களே.
எனது பிறந்த நாளில், எனக்கு இருக்கும் ஒரே ஆசையை தாங்கள் நிறைவேற்றித் தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால்தான் நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
நீங்கள் பிற்பட்ட சமூகத்தில் பிறந்தவர். நான் தாழ்த்தப் பட்ட சமூகத்தில் பிறந்தவன். நீங்கள் தமிழர்களை ஏய்த்து முன்னுக்கு வந்தவர். நான் தலித்துகளை ஏய்த்து முன்னுக்கு வந்தவன். மொத்தத்தில் ஏய்த்துப் பிழைப்பதில் நான் எந்த வகையிலும் உங்களுக்கு சளைத்தவனில்லை என்பதை இந்த நேரத்திலே சொல்லிக் கொள்ளுகிறேன்.
எனது வாழ்வை சென்னை பல்கலைகழகத்தில் தொடங்கும் போது நானும், உங்களைப் போலவே ஏழ்மையைச் சந்தித்தவன். புறக்கணிப்பை சந்தித்தவன். கல்லூரியில் நடக்கும் சிம்போசியத்தில் கலந்து கொள்ள நல்ல செருப்பு இல்லாமல், நண்பர்களின் செருப்பை வாங்கிப் போட்டுக் கொண்டு சிம்போசியத்தில் கலந்து கொண்டவன். ஆனால், இன்று உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவு வசதி வாய்ப்போடு இருக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால், தலித்துகளை ஏய்க்கும் கலையில் நான் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று என் கோரிக்கையெல்லாம் ஒன்றுதான். முத்தமிழறிஞராகிய நீங்கள் என்னை “சின்னக் கருணாநிதி“ என்று அறிவிக்க வேண்டும். அதற்கு நான் தகுதியானவனா என்பதற்கு உங்களுக்கு விளக்கம் அளிக்கவே இந்தக் கடிதம்.
இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலையில் ஏற்பட்ட கொடுமைகளால் இறந்தவர்களில் சிட்டிபாபுவின் கல்லறை ஈரம் கூட காயாத நிலையில் இந்திராவோடு கை கோர்த்தவர் நீங்கள்.
ஜெயலலிதாவோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். நீங்கள் வாக்குறுதி கொடுத்தது போல வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கினீர்கள். உடனே, வாய் கூசாமல், நான் பேசினேன் ஞாபகம் இருக்கிறதா ? “பெரிய டிவி கொடுப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஒரு கையகல டிவி கொடுத்து ஏமாற்றி விட்டார்கள்“ என்று பேசினேன். “கேபிள் இணைப்பு கொடுத்தீர்களா ? “ என்று கேட்டேனே. கடந்த மூன்று வருடங்களாக கேபிள் இணைப்பை பற்றியோ, கையகல டிவி என்பது பற்றியோ பேசினேனா ?
நீங்கள் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு அந்தர் பல்டி அடித்தது போல நான் அடிக்கவில்லையா ?
“அடங்க மறு, அத்து மீறு“ என்ற வெற்று முழக்கங்களை இன்று அறிவாலய கழிப்பிடத்திற்குள் ஓரமாக வைத்து விட்டு உங்கள் பின்னால் நிற்கவில்லையா ?
மற்றவற்றையெல்லாம் விடுங்கள். நீங்கள் நாலு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்ததை போல, நான் நாலு நாட்கள் உண்ணாவிரதம் இருக்கவில்லையா ?
நீங்கள் வெற்று விளம்பரம் செய்து கொள்வதைப் போல, நான் அனைத்து காலை மற்றும் மாலை நாளிதழ்களில் நான் படுத்துக் கொண்டிருப்பது போல போஸ் கொடுத்து புகைப்படத்தோடு விளம்பரம் கொடுக்க வில்லையா ? அந்த விளம்பரங்களில் “தலைவர் உயிரைக் காப்பாற்றுங்கள்“ என்று யாரிடம் மன்றாடுகிறோம் என்பதே தெரியாமல் சிறுத்தைகள் விளம்பரம் தரவில்லையா ?
அந்த மேடையில், இனி சாகும் வரை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று முழங்கி விட்டு, தேர்தல் வந்ததும், கல்லெறிந்தால் இரண்டு கால்களுக்கிடையே வாலை மடக்கிக் கொண்டு ஓடும் நாய் போல உங்கள் பின்னே ஓடி வரவில்லையா ?
இதையெல்லாம் விடுங்கள். இலங்கை சென்ற நான் நடத்திய நாடகத்தைப் பார்த்து நீங்களே அசந்து போயிருப்பீர்கள். இங்கே தமிழகத்தில் இருந்த வரை, கொலைகார ராஜபக்ஷே என்றும், தமிழர்களின் ரத்தத்தை குடித்தவன் என்றும் ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும், ஊர்வலங்களும் நடத்தி விட்டு எம்.பிக்கள் தூதுக்குழுவினரோடு இலங்கை சென்று ராஜபக்ஷேவை சந்தித்ததும், மாமூல் கேட்கும், கோர்ட் ப்யூன் போல பல்லிளித்துக் கொண்டு வரவில்லையா ?
இலங்கை சென்ற எம்பிக்கள் குழு டெல்லி சென்று பிரதமரை சந்திக்கச் சென்ற போது என்னை வேண்டுமென்றே புறக்கணித்தீர்களே ? ஒரு மூச்சு விட்டிருப்பேனா நான் ?
இலங்கை சென்று ராஜபக்ஷேவுடன் கைகுலுக்கி, விருந்துண்டு, அவரின் விருந்தோம்பலை மனம்விரும்பி ஏற்று, மகிழ்ந்து, மனமார இளைப்பாறி விட்டு தமிழகம் திரும்பியவுடன், ராஜபக்ஷே சகோதரர்களை போர்க்குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும் என வாய் கூசாமல் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை ?
சென்னை மெமோரியல் ஹால் சுவர்களைக் கேட்டால் சொல்லுமே என் இரட்டை நாக்கை.
இலங்கை சென்ற போதும் ராஜபக்ஷேவுடன் மட்டுமா அளவளாவினேன் ? சென்னை சூளை மேட்டில் திருநாவுக்கரசு என்ற வழக்கறிஞர் ஆக விரும்பிய ஒரு தலித் இளைஞரை பட்டப் பகலில் ஒரு தீபாவளி நாளில் சுட்டுக் கொன்று விட்டு, வழக்கை சந்திக்காமல் இலங்கைக்கு தப்பி ஓடிய கயவன் டக்ளஸ் தேவானந்தாவுடன் விருந்துண்டு மகிழவில்லையா ?
அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை பெருமையாக அறிவிக்கவில்லையா ?
கொல்லப்பட்டவன் ஒரு தலித் இளைஞன், அந்தக் குடும்பம் ஒரு விளிம்பு நிலைக் குடும்பம் கொலைகாரன் அமைச்சனாக, இலங்கையின் அதிகார பீடத்தில் உட்கார்ந்திருக்கிறானே என்று கொஞ்சமாவது ரோஷப்பட்டேனா நான் ?
விடுதலைப் புலிகளை அன்றும் ஆதரிப்பேன், இன்றும் ஆதரிக்கிறேன், என்றும் ஆதரிப்பேன் என்று வீர வசனங்கள் பேசிய நான், புலிகளும், தமிழ் மக்களும் அழித்து ஒழிக்கப் பட்ட போது நீங்கள் நடத்திய உண்ணாவிரத நாடகத்தின் முதல் பார்வையாளனாக இருக்க வில்லையா ?
ஈழம் சென்று பிரபாகரனுடன் படம் எடுத்துக் கொண்டு அதை பெருமையாக என்னுடன் இருக்கும் இளைஞர்களை ஆகர்ஷிக்க பயன் படுத்திக் கொண்ட நான், பிரபாகரனின் நெருக்கடியான நேரத்தில், அவருக்கு உதவாமல், அவரை அழித்தொழிக்க முயற்சித்த சிங்களக் காடையர்களுக்கு உங்களுடன் சேர்ந்துதானே உதவினேன் ?
“எழும் தமிழ் ஈழம்“ என்ற தலைப்பில், சோர்ந்து போயிருக்கும் எனது சிறுத்தைகளை உசுப்பேற்றுவதற்காக புல்லா அவென்யூவில் ஒரு மாநாடு நடத்தப் போகிறேன் என்று அறிவித்தேன். ஈழம் என்ற வார்த்தையே ஒரு பாவச் சொல் என்பது போல, உங்கள் காவல்துறையினர், இரவோடு இரவாக, பிரபாகரனின் படம் இருந்த பேனர்களையும், ஈழம் என்ற வார்த்தையின் மேல் தாளை ஒட்டி அதை மறைத்தும் நடவடிக்கை எடுத்த போது ஒரு வார்த்தை பேசினேனா ?
ஈழம் என்ற வார்த்தை என்ன அப்படி ஒரு பாவச் சொல்லா என்று வெகுண்டெழுந்தேனா ? அந்தச் சூழலில் கூட, கொஞ்ச நஞ்சம் சூடு சொரணை இருப்பது போல நடந்து கொண்டேனா ?
சென்னை நூறடி சாலையில், கட்டப் பஞ்சாயத்து செய்யும் போது அபகரித்த ஒரு கட்டிடத்தில் சிறுத்தைகள் அலுவலகம் வைத்து நடத்தி வந்து கொண்டிருந்தேன். திடீரென்று நீதிமன்றம் அந்த அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட போது, கட்டப் பஞ்சாயத்து செய்து அபகரித்த இடமாயிற்றே என்று கொஞ்சமாவது தயங்கினேனா ? மீண்டும் நீதிமன்றத்தை அணுகி, தடை உத்தரவு பெற வேண்டும் என்றும், கட்டப் பஞ்சாயத்து செய்து வந்த இடம் கை விட்டுப் போய் விடக் கூடாது என்றும் எத்தனை முறை நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கியிருப்பேன். ?
ஒரே ஒரு காடுவெட்டி குருவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததற்காக பாட்டாளி மக்கள் கட்சியுடனான கூட்டணியே உடைந்தது.
விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள் ஈழ ஆதரவு போராட்டங்களின் போது கைது செய்யப் பட்டனர். கைது செய்யப் பட்ட 16 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை போட்டு, அன்னை சோனியாவை திருப்தி படுத்தினீர்களே ? ஏதாவது கேட்டேனா ? தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் இருந்த அந்த 16 பேரின் குடும்பங்கள் என்ன ஆயிற்று என்று கவலைதான் பட்டிருப்பேனா ?
நான் எப்போதும் அரசியல் முடிவுகள் எடுக்கும் போது என்னுடன் கடற்கரையில் கலந்து ஆலோசிக்கும் எனது பல ஆண்டு கால நெருங்கிய நண்பர் என்னை பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு போகச் சொல்லியும் கூட, ஜெயலலிதாவை விட மோசமான தமிழினத் துரோகி நீங்கள் தான், அதனால் உங்களுடன் தான் கூட்டணி என்று இறுதி முடிவு எடுக்கவில்லை ? அதனால் அந்த நண்பர் இன்று வரை என்னடன் பேசவில்லை என்றாலும் கூட, நான் என்ன நட்பை இழந்ததற்காக கவலைப் பட்டேனா ?
அந்த நண்பரை விட, என்னை உங்களோடு இணைத்து வைத்த ஆருயிர் நண்பர் காமராஜ் தானே இப்போது எனக்கு முக்கியமாக இருக்கிறார் ? காமராஜோடு நட்பாக இருப்பதை விடவும், எனக்கு உங்கள் வாரிசாக இருக்க வேறு என்ன தகுதி வேண்டும் ?
பாராளுமன்றத் தேர்தலில் இரண்டு இடங்கள் விடுதலைச் சிறுத்தைகளுக்கு கொடுக்க பட்ட போது நான் ஒரு இடத்தின் நின்றேன். இன்னோரு இடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆரம்பகாலம் முதல் என்னோடு உழைத்து இயக்கத்துக்காக பாடு பட்டவர்களுக்கா கொடுத்தேன் ? வேலாயுதம் என்ற மோசடி பேர்விழிக்குத் தானே கொடுத்தேன் ?
தலித் சமுதாயத்திற்காக பாடு படுகிறேன் என்று அரசியலுக்கு வந்து விட்டு உங்களைப் போலவே சினிமாவில் நடிக்கிறேன் என்று சில காலங்கள் கூத்தடித்துக் கொண்டிருக்கவில்லையா நான் ?
நீங்கள் நினைத்திருந்தால் எனக்கு ஒரு துணை அமைச்சர் பதவியையாவது வாங்கித் தந்திருக்க முடியும் என்றாலும், நீங்கள் மாற்றான் வீட்டுப் பிள்ளை போல என்னை கண்டு கொள்ளாமல் இருந்தும், ஒரு முறையாவது ரோஷப் பட்டுக் கேட்டிருப்பேனா உங்களிடம் ? தலைவர் கொடுத்தார். நான்தான் வேண்டாம் என்று விட்டேன் என்றல்லவா ஊர் முழுக்க சொல்லிக் கொண்டு திரிகிறேன்.
தலித்துகளுக்கு இதயத்தில் இடம் இருக்கிறது என்று நீங்கள் சொல்லும் கட்டுக் கதையை நம்பிக் கொண்டு, தலித் சமுதாயத்தினருக்கு உங்கள் அரசு இழைக்கும் கொடுமைகளை கண்டும் காணாமல் இருக்கவில்லையா நான் ?
இப்போத பணி இடை நீக்கம் செய்யப் பட்டிருக்கும் உமாசங்கர் தலித்தாக இருந்தும், தமிழ்நாட்டில் உள்ள அத்தனை தலித் அமைப்புகளும் அவருக்கு ஆதரவாக திரண்டுள்ள நிலையில், இன்று வரை ஒரு வார்த்தை பேசியிருப்பேனா நான் ?
இப்போது சொல்லுங்கள். உங்கள் வாரிசாக என்னை விட தகுதியானவன் யார். அதனால், எனது பிறந்த நாளான இன்று முதல், என்னை “சின்னக் கருணாநிதி“ என்று அழைக்குமாறு உங்கள் கழக உடன்பிறப்புகளுக்கு கட்டளையிட்டீர்கள் என்றால், இதை விட எனக்கு சிறந்த பிறந்த நாள் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை.
சவுக்கரே உங்கள் கட்டுரை திருமா செருப்புக்கு சமம்
இது பதிவு செய்ய படாது என்று தெரியும் இருந்தாலும் என் கருத்தை பதிவு செய்கிறேன்
கொன்ற வெறியர்கள் அவர்கள் .. அப்படிருக்க அவர் மட்டும் தனியே சென்று இருந்தால் கண்டிப்பாக அண்ட வெறியர் ஒரு சமுக போராளியை இழக்க நேர்ந்து இருக்கும் ..அதனால் இந்திய பிரதிநிதி போர்வையில் சென்று வந்தார்.அங்கு கூட அந்த கொடூரன் திருமாவளனிடம் “நீ பிரபாகரனுக்கு நேருக்க மாணவர் அல்லவா ! நல்ல வேலை நீங்கள் போர்களத்தில் இல்லாமல் சென்றுவிட்டீர் ,, எல்லை இல்லை என்றால் உன்னையும் போர் களத்திலேயே கொன்று இருப்போம் , இன்று போராட யாரும் இருந்திருக்க மாட்டார்கள் உன் போன்ற எழுச்சி மிக்கவர் என்று பகிங்கரமாகவே தன் எச்சரிக்கையை பதிவு செயிதிருகிறான் “. இதுவெல்லாம் சென்று வந்ததை குற்றமாக சித்தரிக்கும் இன்ட மூடர் களுக்கு தெரியுமா ! ..சென்று வண்ட பிறகு கூட அவர் ஓய்வு எடுக்கவா சென்றார் எல்லை சோனியா அம்மையார் கலீல் விழ சென்றாரா ,, இல்லையே ராஜபசெவும் அவன் தம்பியையும் போர் குற்றவாளிகளாக அறிவிக்கவும் , அங்கு தமிழர்களை முல்வேளிக்கும் போட்டு வதைகிரரர்கள் என்று இந்த உலகிற்கு தமிழ் சொந்தங்களுக்கு கொந்தளிப்பு குரல் கொடுத்ததும் அவர் தானே…மாநிலங்களையில் கூட தமிழகதிளிரிந்து சென்றவர்கல் அங்கு மக்கள் எதற்காக நம்மை இங்கு தேர்வு செய்து அனுபினர்கள் என்பதை மறந்துவிட்டு உறங்கி விட்டு வரும் பொது , இவர் மட்டும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஈழ தமிழர்களுக்காக உரக்க குரல் கொடுத்து வருகிறாரே இன்ட குருடரதை பார்க்க வில்லையா ? .. தயவு செய்து அதேல்லாம் பாருங்கள் , அவர் எடுக்கிற ஒவ்வொரு அசைவையும் தமிழ் உணர்வோடு பாருங்கள் , சதி உணர்வோடு பார்ககாதிர்கள்..அவருடைய ஒவ்வொரு போராட்டத்திற்கும் தோல் கொடுங்கள் , அதை சாதி காழ்புணர்ச்சி , அரசியல் காழ்புணர்ச்சி கண்ணோட்டத்தோடு பார்காதீர்கள்… தமிழ் உணர்வோடு பாருங்கள் … என் கருத்து தவராக இருந்தால் மன்னித்து விடுங்கள் நண்பர்களே !..எழுச்சி தமிழரின் சேவை , தமிழுக்கும் தமிழர்க்கும் ,ஈழ ் ண
சவுக்கரே..! திருமா பறையன் என்பதால் உன் எழுத்திலேயே தெரிகிறது , ஜாதி வெறி ,உன் அரசியல் தெளிவின்மை ,, ஒரு தலித் தலைவன் வளர்கிரனே என்ற காழ்புணர்ச்சி, இனி யாரை அடிமை படுத்துவது என்ற கொந்தளிப்பு…உன் போன்ற காழ்புணர்ச்சி கொண்ட வெறியனுக்கு எங்கள் எழுச்சி தமிழரை குறை கூற தகுதி எல்லை.எவ்வளவு விளக்கம் கற்பனை செயிது எழுகிறாயெ நி என்ன ஈழ தமிழருக்காக போரடிருக்கிறையா ? இல்லை தமிழர் ஒற்றுமைக்காக குரல் கொடுத்து இருக்கிறயா ? உஒரு மயிராய் கூட பிடிக்கியது கிடையாது ..உனக்கெல்லாம் அவரை பற்றி பேசவேடகுதி கிடையாது . அவர் கட்சி தொடங்கிய கலதிளிருண்டே சாதி ஒலிப்பே மக்கள் விடுதலை என்று முழங்கி வருகிறார் . 1990 முதல் இன்று வரை வெளிபடையாகவெ ஈழ தமிழருக்காக திருமணம் கூட செய்யாமல் போராடி வருகிறார் .அடனலை தன் கட்சிக்கு கூட ஈழ விடுதலைக்கு போராடும் இயக்கத்தை ஒட்டிய விடுதலை சிறுத்தைகuள் என்றே வைத்தார் . தயவு செயுது அந்த வரலாறுகளை தெரிந்து கொண்டு கருத்தை பதிவு செய்யவும் …ஈழ தமிழருக்கு விடுதலை வாங்க போராடிய இயக்கத்தை பற்றி பேசவே தயங்கிய களம் அது . அந்த காலத்திலும் தைரியமாக ஓங்கி குரல் கொடுத்த ஒரே தலைவன் திருமா தான் என்பதை இந்த தமிழ் சமுகம் அறிவார்கள் , விடுதலை சிறுத்தைகள் அறிவார்கள் . இப்போது இருக்கும் தலைவார்கல் போல் ஓட்டுக்காக மேரி பேசுபவர் திருமா அல்ல , ஈழ விடுதலைக்காக தன் கல்லுரி பருவத்திலேயே ரெயில் மறியல் போராட்டம் நடத்தி 1985-86 லில் சிறை சென்றவர் தன் திருமா . எப்போது இருக்கும் தலைவர்கள் போல் சுய நலத்துக்காக ஈழம் பத்தி நீலி கண்ணீர் வடித்து ஓட்டுக்காக வேடம் போடுபவறல்ல அவர் , ஈழ போரட்டகளுக்காகவும் , தமிழர் ஒற்றுமைக்காகவும் ஓயாமல் குரல் கொடுக்க தன் தமிழ்நாடுஅரசு பணியையே ராஜினாமா செய்துவிட்டுஇர்க்கக என்று போடு வாழ்வில் தனகென்று திருமனம் கூட செய்து கொள்ளாமல் தமிழினத்திற்காக போராடிவருகிரார்ன்.எவன் இன்ட காலத்தில் இதுபோல இருக்கிறான் .சொல்லப்போனால் இந்த நூற்றாண்டின் தலை சிறந்த தலைவன் இவர் தான். இவருக்கு உங்களை போன்ற வரலாறு தெரியாதவர்கள் கொடுக்கும் பட்டம் சின்ன கருணாநிதி , கட்ட பஞ்சாயத்துக் காரன். அல்லவா .. உண்மையில் சமுக நல்லிணக்க பார்வையில் உங்கள் அறியாமை கண்டு ஒரு தமிழனாய் வெக்கி தலைகுனிகிறேன் ..இப்படி பட்ட தலைவனை வசை பாடியவர்கலும் ஒரு விதத்தில் சமுக நல்லிணக்க போர்வை போர்த்திய வெறியர்களே !…கொழும்பு சென்று ராஜபக்சேயை சாந்திட்டு உண்மை தான். நங்கள் இல்லை என்று மறுக்க வில்லை , அவர் செல்லவில்லை என்றால் அவர் தனியாக சென்று அண்ட மக்களின் அவல நிலையை பார்க்க முடியுமா ? .. இல்லை பார்க்க தான் விடுவார்களா !! அங்கு சமுக சேவை செய்ய சென்ற ஜேர்மனிய செஞ்சிலுஎரியர்கல் அவர் வை சங்க உருபினர்கலையே இரக்கமில்லாமல் சுட்டு கொன்ற வெறியர்கள் அவர்கள் .. அப்படிருக்க அவர் மட்டும் தனியே சென்று இருந்தால் கண்டிப்பாக அண்ட வெறியர் ஒரு சமுக போராளியை இழக்க நேர்ந்து இருக்கும் ..அதனால் இந்திய பிரதிநிதி போர்வையில் சென்று வந்தார்.அங்கு கூட அந்த கொடூரன் திருமாவளனிடம் “நீ பிரபாகரனுக்கு நேருக்க மாணவர் அல்லவா ! நல்ல வேலை நீங்கள் போர்களத்தில் இல்லாமல் சென்றுவிட்டீர் ,, எல்லை இல்லை என்றால் உன்னையும் போர் களத்திலேயே கொன்று இருப்போம் , இன்று போராட யாரும் இருந்திருக்க மாட்டார்கள் உன் போன்ற எழுச்சி மிக்கவர் என்று பகிங்கரமாகவே தன் எச்சரிக்கையை பதிவு செயிதிருகிறான் “. இதுவெல்லாம் சென்று வந்ததை குற்றமாக சித்தரிக்கும் இன்ட மூடர் களுக்கு தெரியுமா ! ..சென்று வண்ட பிறகு கூட அவர் ஓய்வு எடுக்கவா சென்றார் எல்லை சோனியா அம்மையார் கலீல் விழ சென்றாரா ,, இல்லையே ராஜபசெவும் அவன் தம்பியையும் போர் குற்றவாளிகளாக அறிவிக்கவும் , அங்கு தமிழர்களை முல்வேளிக்கும் போட்டு வதைகிரரர்கள் என்று இந்த உலகிற்கு தமிழ் சொந்தங்களுக்கு கொந்தளிப்பு குரல் கொடுத்ததும் அவர் தானே…மாநிலங்களையில் கூட தமிழகதிளிரிந்து சென்றவர்கல் அங்கு மக்கள் எதற்காக நம்மை இங்கு தேர்வு செய்து அனுபினர்கள் என்பதை மறந்துவிட்டு உறங்கி விட்டு வரும் பொது , இவர் மட்டும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஈழ தமிழர்களுக்காக உரக்க குரல் கொடுத்து வருகிறாரே இன்ட குருடரதை பார்க்க வில்லையா ? .. தயவு செய்து அதேல்லாம் பாருங்கள் , அவர் எடுக்கிற ஒவ்வொரு அசைவையும் தமிழ் உணர்வோடு பாருங்கள் , சதி உணர்வோடு பார்ககாதிர்கள்..அவருடைய ஒவ்வொரு போராட்டத்திற்கும் தோல் கொடுங்கள் , அதை சாதி காழ்புணர்ச்சி , அரசியல் காழ்புணர்ச்சி கண்ணோட்டத்தோடு பார்காதீர்கள்… தமிழ் உணர்வோடு பாருங்கள் … என் கருத்து தவராக இருந்தால் மன்னித்து விடுங்கள் நண்பர்களே !..எழுச்சி தமிழரின் சேவை , தமிழுக்கும் தமிழர்க்கும் ,ஈழ தமிழர்க்கும் கண்டிப்பாக தேவைஎன்பத உணர்த்து செயல்படுங்கள் …நன்றி வணக்கம் !…
savukkare itha padichavathu intha thalith makkalukku soodu soranai varanum! varuma……
vara vaiyungal….. sattayai sulatrungal
sokka vaichetteenga savukku sir, ivanellam nandukkittu saagama innum iruukkane; adnga maru athu meeru nnu yethukku sonnano? sex veriyana iruppano? nadigai meena kitta adanga maruthan athu meeri yiruppan intha para thamilan!
மானுட உரிமையில் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல்
ஐநாவில் தமிழில் பேசிய இராச பக்சேவிற்கும்
இங்கே தமிழ் தமிழ் என்று பிழைப்பு நடத்துபவர்களுக்கும்
பெரிய வேறுபாடுகள் இல்லை…
ஈழத்தில் நிகழும் இறப்பும் இழப்பும்
நமக்கு பெரும் வலியை ஏற்படுத்துகிறது என்றால், ஈழத் தமிழனை
கருப் பொருளாக்கி இங்குள்ள தமிழன் ஒருவனை ஒருவன் தாக்கிக்
எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் அலைவது இன்னும் அதிக
வலியை ஏற்படுத்துகிறது. ஓட்டுப் பொறுக்குவதற்காக ஏற்படுத்தப்படும்
தமிழ்நாட்டு கூட்டணி அரசியலைப் பற்றி கவலைப்படாமல்,
கட்சி பாகுபாடுகளை மறந்து, தமிழர்கள் அனைவருடைய ஒட்டுமொத்த
கோபமும் தமிழினத்தின் உண்மையான எதிரிகளான காங்கிரஸ் தலைவர்களை
நோக்கி திரும்ப வேண்டும். அதே வேளையில் காங்கிரஸ் எதிர்ப்புக்கு ஆதரவு
என்று வரும் மதவாதிகளிடம் இருந்தும் நாம் விலகி இருக்க வேண்டும். சோ
இராமசாமியும் சுப்பிரமணியசாமியும் கூட தமிழர்களின் எதிரிகள்தாம்.
அவர்கள் தமிழின ஒற்றுமையை கெடுத்து விடுவார்கள்.
VIROTHIKAL MANNIKKAPPADALAM,AANAAL THUROGIKAL MANNIKKAPPADAKKOODAATHU.
KAALAMTHAN PAADAM PUGATTAVEDDUM
ma.karun@yahoo.com
ARPUTHAM….
நல்ல கட்டுரை. தொடர்ந்து எழுதி பிற கழிசடைகளையும் அடையாளம் காட்டுங்கள்
Nalla katturai. Elloraiyum sindhikka seithaale pothum.
Thodarattum ungal pani.
அப்போது தான் திருந்தாத நாய்களின் திருட்டுத்தனத்திற்கும், அவர்களின் உயர்சாதிதிமிருக்கும் நாங்கள் மருத்துவம் பார்க்க முடியும்.என்று ஒரு .. கேட்டுள்ளான்.நீ என்ன மருத்துவம் பாக்கப்போற ?
1.அதுசரி ஒன்னோட தலிவன் தலைமையில் எப்போது இஸ்லாத்துக்கு மாறப்போற ?.
2,மலேசியா ,சிங்கப்பூரில் இருந்து எதற்கு பணம் வந்தது அது தாய் மண் அறக்கட்டளைக்கு எப்படி மாறியது என்று திரும்மவிடம் கேள் ?
3. 2003 இல் கொழும்பு விமான நிலையத்தில் அனைத்து சி டி களையும் உடைத்து தொடை நடுங்கி தலைவன் தான் இந்த திருமா ?
“திருமா ஒரு வெறுமா” என்பது அவரை நன்றாக அறிந்தவர்களுக்கு தெரியும்.
வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றி. இவனுங்க பன்ற கட்ட பஞ்சாயத்துகளுக்கும் ஒரு முடிவு கட்டினால் நன்றாக இருக்கும்.
இது சவுக்கின் பார்வைக்குமட்டும் கொமன்ரல்ல,
http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=1647:2010-08-1
http://www.nerudal.com/nerudal.18548.html
இரண்டு இணையத்தில் வெளியிட வைத்துள்ளோம்,
கனகதரன்,
சென்னையில் கல்லூரி சாலையில் இந்த சொங்கி திருமா பொம்மை துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கிறார். போராளியாக ஒப்பனை செய்தாலும் நக்கிப்பிழைப்பவன் என்று திருமாவின் முகத்தில் தெரிகிறது.
சவுக்கை ஆதரிக்கிறோம்..
அன்பு நண்பர் அவர்களுக்கு.
திருமா ஒரு தலித் என்பதால் அவர் உங்களுக்கு எளிதான டார்கெட் ஆகிவிட்டார். அவரை எப்போது யாரும் நம்புவதும் இல்லை, ஏன் திரும்பி பர்பதுகுட இல்லை. ஈழ தமிழர் விவகாரத்தில் அவர் கொஞ்சம் ஓவர் அக்டிங் செய்துவிட்டார். அதை எல்லோரும் புரிந்துகொண்டார்கள். ஆனால் ஈழ தமிழர் விவகாரத்தில் அவர் மட்டும் ஒன்னும் செய்து விட வில்லை. செய்துவிடவும் முடியாது. ராமதாஸ், வைகோ, திருமாவளவன், பழ.நெடுமாறன் என யார் தமிழ் நாட்டின் முதல்வராக இருந்திருந்தாலும், இனிமேல் ஆனாலும் ஈழ தமிழர்களுக்காக அவர்களால் ஒரு மயிரை கூட புடுங்கி இருக்க முடியாது. புடுங்கவும் முடியாது. போர் உச்ச கட்டமாக நடந்து கொண்டிருக்கும் போது கருணாநிதி சொன்ன வசனத்தை கவனிக்கவேண்டும் . “நானே அடிமை, ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்”. இதுதான் உண்மை. இங்கே இருக்கும் ஈன பயல் அரசியல்வாதிகளால் எதையும் புடுங்க முடியாது.
மிஸ்டர் சவுக்கு உங்கள் மீது மிகுந்த அன்பும், நம்பிக்கையும் வைத்திருக்கிறேன். தயவு செய்து அரசியல் பற்றி எழுதும் போது கவனமாக எழுதுங்கள்.
To Mr.ஜானகிராஜா –
போய் ஓரமா ஒக்காந்து ஒப்பரிவைங்க…
“எங்க சிறுத்தை செத்துபோய் ரொம்ப நாளாச்சு
எங்க தலைவர் செத்துபோய் ரொம்ப நாளாச்சு…
ஈழமக்களுக்கு வாய்பேச்சு வீரனடி அவன்
எங்க தலித் மக்களுக்கும் ………அவன்”
சவுக்கிற்குப் பட்டம் கொடுக்கத் தெரியவில்லை. சின்னக் கலைஞர் என்றுதான் பட்டம் கொடுக்க வேண்டும். அதை ஒரு சாரார் சின்ன எட்டப்பன் எனக் கருதலாம். மறுசாரார் பாராட்டாகக் கருதலாம். எவ்வாறிருப்பினும் எழுச்சித் தலைவர் திருமா அவர்கள் தன்னைப்பற்றி மறு ஆய்வு செய்ய உங்கள் படைப்பு அவருக்கு உதவும். எனினும் ஒன்றை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். சிலக் கசப்பான சூழல்களில் அவர் எடுத்த அரசியல் கூட்டணி முடிவு அவருக்கு எதிராக உள்ளதை அவரே அறிவார். பிற அரசியல் தலைவர்களை ஒப்பிடுகையில் திருமாவின் நெஞ்சுரம் பாராட்டத்தக்கதே. தன்னை நிலைப்படுத்திக் கொண்டால்தான் தன் குரலை ஒலிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற கண்ணோட்டத்தில் அவரது கூட்டணி கொலைகார அணியில் இணைந்தது மிகத் தவறுதான். எனினும் அடுத்த நிலைத் தலைவர்களில் வைக்கோ , திருமா முதலானவர்கள் இணைந்தால்தான் தமிழினம் எழுச்சி பெறும். தமிழரசி நடராசன் இதற்கான முயற்சியில் ஈடுபடலாம். பிறந்த நாள் கண்டுள்ள திருமாவிற்கு நல்வாழ்த்து சவுக்கின் சார்பாக நான் தெரிவிக்கின்றேன். அவர் மீது விழுந்த கரும்புள்ளிகளை அகற்றித் தமிழர் தாயகம் அமைவதில் தன் பங்களிப்பைப் பெருக்கி வருங்காலத்தில் முதல்வராகத் திகழ்ந்து தமிழின உரிமைக்கு வழிகாட்டுவாராக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ம்… சுழலட்டும் உங்க சவுக்கு!
அருமை.. அருமை.. சுழலட்டும் சவுக்கு..
கருத்துச்சுதந்திரம் யாவருக்கும் உண்டு. இந்த கருத்துரிமைக்காக எத்தனையோ எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநாடு கண்டவர் நீங்கள் சொல்லும் சின்ன கருணாநிதி என்பதை மறக்கவேண்டாம். இரண்டு முறை தனித்து தேர்தலைச் சந்தித்த போது அவருக்கு சாதிமுத்திரை குத்தினார்கள். நீங்கள் இன்று சின்ன கருணாநிதி என்னும் முத்திரையைத் தந்துள்ளீ்ர்கள். தோழமையைப் புரிந்து கொள்ளவில்லையா? அல்லது, புரிந்து கொள்ள மறுக்கிரீர்களா? உங்களின் தோழமையை இனம்காட்டியமைக்கு நன்றி. மாதம் ஒரு போராட்டம் நடத்தி ஈழவிடுதலை கருத்தியலை அடைகாத்ததும் அடைகாத்து வருவதும் இந்த சின்ன கருணாநிதிதான். ஈழம் குறித்து சிந்திக்காத ஒரு சமுதாயத்தையே ஈழம் குறித்து பேச வைத்தது இந்த சின்ன கருணாநிதிதான். அனைத்துத் தரப்பும் போராடி ஓய்ந்துவிட்ட போது பெரிய கருணாநிதி குறித்து கவலைபடாது சாகும் வரை உண்ணா நோன்பு கண்டது இந்த சின்ன கருணாநிதிதான். நெடுமாறன், சீமான், தா.பாண்டியன், வைகோ, சவுக்கு, சவுக்கின் கட்டுரையைப் பாராட்டும் மேதாவிகள் கடைசி வரை ஈழப்போரை ஆதரித்து பெயருக்குக்கூட எதிர்ப்பு தெரிவிக்காத செயலலிதாவிற்கு வால் பிடித்தார்களே தவிர, தி.மு.க. அ.தி.மு.க. காங்கிரசு அல்லாத அணியை அமைப்போம் என்ற திருமாவின் முயற்சியை சவுக்கே வரவேற்கவில்லையே?. தேர்தல் முடிந்த பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் இந்தியாவும் காங்கிரசு அரசும் ஈழத் தமிழருக்கும் தமிழகத் தமிழரின் எண்ணத்திற்கும் துரோகம் இழைத்துவிட்டது என முழங்கியதும் இந்த சின்ன கருணாநிதிதான். தமிழக எம்.பி.கள் குழுவில் இடம்பெற்று அங்குள்ள நிலைமையைக் கண்டு வந்த பிறகு, இராசக்சே சகோதரர்களை போர் குற்றவாளிகாளாக அறிவிக்க வேண்டும் என போராட்டம் நடத்தியது இந்த சின்ன கருணாநிதிதான். மீண்டும் இலங்கைக்கு சென்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரது இரங்கல் நிகழ்ச்சியில் பசில் இராசபக்சேவின் முன்னிலையில் இலங்கை அரசின் இனவாதத்தைக் குறிப்பிட்டு முழங்கியதும் இந்த சின்ன கருணாநிதிதான். தமிழீத தேசியத் தலைவரின் தந்தையார் இறுதிச் சடங்கிற்கு நேரில் சென்று மகன் ஆற்ற வேண்டிய கடமையைச் செய்த சின்ன பிரபாகரனுக்கு நீங்கள் அளிக்கும் பட்டம் சின்ன கருணாநிதியா? வாதக்குறாங்களய்யா..! ஆவணப்படம், முத்துக்குமார் பாசறை, தமிழீழ அங்கீகார மாநாடு, எழும் தமிழ் ஈழம், விடுதலைச் சிறுத்தைகளின் இல்ல அழைப்பிதழ்கள் அனைத்திலும் தேசியத் தலைவரின் படம் இடம்பெற வேண்டும் என்ற வேண்டுகோள் என தொடர்ந்து ஈழத்தளத்தில் இயங்கிவருவதும் இந்த சின்ன கருணாநிதிதான். மத்திய காங்கிரசு அரசிடமோ?, சோனியா, மண்மோகன், சிதம்பரம் என யாரிடமாவது இந்த சின்ன கருணாநிதி சின்ன உதவியை சின்ன பதவியைக் கேட்டதுண்டா? அடுத்தடுத்த தோல்விகளால் தலித் இயக்கங்கள் சந்திக்கும் நெருக்கடிகள் என்ன என்பது இவர்களில் யாருக்காவது தெரியுமா? இந்த முறையும் தோல்வி கண்டிருந்தால் சிறுத்தைகளின் அரசியல் தளம் முடங்கியிருக்கும், இன்று ஈழம் என உரைக்கக் கூட உங்களின் மொழியில் வேடமிட கூட இயலாமல் போயிருக்கும் என்பது சவுக்குக்குப் புரியுமா? சரி, இந்த வாதங்கள் எதையும் நீங்கள் ஏற்க வேண்டாம்.நீங்கள் செவிடர்கள் என்பது எமக்குத் தெரியும். வாதத்திற்கு வருகிறேன் திருமா எதையும் புடுங்கவில்லை. திருமாவின் படத்தி்ல் காறிதுப்பத் துடிக்கும் நண்பர், சவுக்கு, சாதிய வன்மத்தோடு விழுந்து விழுந்து பாராட்டும் முண்டங்கள் ஈழவிடுதலைக்காக புடுங்கியது என்ன என்பதைச் சவுக்கு எழுதுமா?. சவுக்கு உள்ளிட்ட அனைவரின் ஈழப் பற்றை வரவேற்கிறோம். ஆனால், உங்களுக்கு எந்த விதத்திலும் திருமாவின் ஈழப்பற்று குறைந்ததில்லை என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி
சவுக்கு அடுத்து புலனாய்வுக்கு ஒரு தகவல்;
http://inioru.com/?p=16263
karthee நீங்க ஒன்றும் பயப்பட வேண்டாம் ,நாங்கள் ஈழத்தமிழர்கள் 2009 தேர்தலில் காளவாயன் கருணாவோடு திருவன் திருமா கூட்டுவைச்சதோடு நல்லாவே புரிந்து கொண்டோம், இருந்தும் உங்கள் ஆதங்கத்துக்கு மிக்க நன்றிகள்,
மிக தெளிவான விளாசல், ஆனாலும் இவனை தொடரும் சனங்களுக்கு உறைக்காதே.
you done a very good job.kavignar thanigai..
குறிப்பிட்ட சிலரை மட்டும் தொடர்ந்து தாக்கும் சவுக்கு நிர்வாகத்திற்கு மற்ற அரசியல்வாதிகளின் ஊழலும், இரட்டை வேடமும் கவனத்திற்கு வராமல் போனது விந்தையே… அனைத்து இந்திய அண்ணா திராவிட (சவுக்கு) முன்னேற்ற கழகமாக மாற்றி விடாதீர்கள்.
மக்களுக்கு துரோகம் செய்யும் அனைவரும் குற்றவாளிகளே!
நீங்கள் விக்கி லீக்ஸ் போல செயல்பட எங்கள் வாழ்த்துக்கள். அதற்கு அவசியம் நடு நிலைமை தேவை.
தொலைபேசி ஒட்டு கேட்பது மட்டும் தமிழ் நாட்டில் நடக்க வில்லை. அன்றாடம் கூலி வேலை செய்யும் மக்கள் சுரண்டபடுகின்றனர். ஒவ்வொரு துறையிலும் அரசியல், அதிகாரிகளின் ஆணவம் கொடி கட்டி பறக்கின்றது. எல்லாவற்றையும் எழுதுங்கள். உங்களால் ஒரு மறுமலர்ச்சி வரட்டும்.
– பாரதி.