பெருமாள் முருகனின் மாதொரு பாகன் புதினம் குறித்து, ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு விவாதங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், பெருமாள் முருகனின் பின்னால் முழுமையாக நிற்கவேண்டிய எழுத்தாளர்களே இரு தரப்பாக பிரிந்து கிடக்கின்றனர்.
மாதொரு பாகன் புதினம் குறித்தும், அதில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகள் குறித்தும், ஏராளமான விவாதிக்கப்பட்டுள்ளன. இப்புதினத்தி திறனாய்வு செய்த, தியோடர் பாஸ்கரன், இப்புதினம் குறித்து இவ்வாறு தெரிவிக்கிறார்.
“குழந்தைப்பேறற்ற குடியானவத் தம்பதியர் காளி – பொன்னாவை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இருவருக்கும் இடையே உள்ள உறவில் இழையோடும் நெருக்கம், ஆழமாக, இயல்பாக வெளிப்படுத்தப்படுகிறது. தொ. பரமசிவன் ‘பண்பாட்டின் அசைவுகள்’ என்று குறிப்பிடும் பாரம்பரியங்கள் சில பெருமாள்முருகனின் நாவலில் பதிவு செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் பல இடங்களில், வெவ்வேறு பின்புலத்தில் நிலவும் ஒரு பழக்கத்தைச் சார்ந்த கதை இது. பிள்ளைப்பேறு அற்ற பெண், திருவிழாவில் முன்பின் அறியாத, தனக்குப் பிடித்த ஆணுடன் பாலியல் தொடர்புகொண்டு கருவுருவது சமூகத்தால் காலங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மரபு. நூறாண்டுகளுக்கு முன் மின்விளக்குகள் கிடையாது என்பதை மனத்தில் கொள்ளுங்கள். டெஸ்ட் ட்யூப் குழந்தைகளுக்கு முற்பட்ட காலம். நானறிந்து முப்பதாண்டுகளுக்கு முன்வரை தமிழ்நாட்டில் நான் பணிபுரிந்த இரண்டு இடங்களில் நடந்த திருவிழாக்களில் இத்தகைய பழக்கம் இருந்ததைப் பற்றி அறிந்திருக்கிறேன். ஒன்று, கோடைக்காலத்தில் அகண்ட காவிரி நதிப்படுகையில் நடக்கும் ஒரு திருவிழா. அந்த ஊரில் அதற்குத் துப்பட்டி திருவிழா என்று பெயர். அருகிலுள்ள ஐந்து சிவன் கோவில் உற்சவ மூர்த்திகள் ஆற்றின் நடுவே எடுத்துவரப்படுவார்கள். சூரியன் மறைந்த பின்னும் திருவிழா தொடரும். இளைஞர்கள் துப்பட்டி ஒன்றைத் தோளில் போட்டுக்கொண்டு வந்துவிடுவார்கள். பரந்த காவிரி மணல் படுகை அவர்களது களமாகிறது. இன்னொரு திருவிழா அன்றைய வட ஆர்க்காடு மாவட்டத்தில் விஸ்தாரமான, நீண்ட பிராகாரம் கொண்ட ஒரு கோவிலில் நடைபெறுவது. ‘சாமி குடுத்த பிள்ள’ ‘சாமி கொழந்த’ போன்ற சொற்றொடர்கள் மூலம் அறிவது இதுதான் என்கிறார் ஆசிரியர். இத்தகைய சடங்குகளை நம் சமூகம் ஏற்றுக்கொள்வதைப் பற்றி ஜெயமோகன் அண்மையில் சிலுவையின் பெயரால் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார் “விதிவிலக்குகளுக்கு, மீறல்களுக்கு ஓர் இடம் இட்டுத்தான் இந்திய நடைமுறை ஒழுக்கம் இருந்திருக்கிறது. மீறல்கள் என்பவை ஒரு சமூகத்தின் தீவிரமான சில தளங்களில் நடைபெறுகின்றன என்றும் அவற்றைத் தடைசெய்ய முடியாது என்றும் இந்திய ஒழுக்க மரபு கருதியது.”
திருச்செங்கோட்டில் நடக்கும் தேர்த் திருவிழாவில் இந்த வழக்கம் இருந்திருக்கிறது. அந்தப் பகுதி மக்களிடம் வேரூன்றிப் போன அந்தக் கோவில் சார்ந்த பல நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. இந்த ஏற்பாட்டிற்குத் தன் கணவன் காளியின் அனுமதி இருக்கிறது என்றெண்ணிய பொன்னா ஒரு இரவு தனியாகப் புறப்பட்டுச் சென்று திருவிழாக் கூட்டத்துடன் கலந்துவிடுகிறாள். காளி அதை எவ்வாறு எதிர்கொள்கிறான்? மனித உறவுகள் சில சந்தர்ப்பங்களில் வெகு எளிதாக முறிந்து சிதைந்துவிடுவது பெருமாள்முருகனின் கவனிப்பைப் பெற்றிருக்கிறது. இதை ஏறுவெயில் நூலில் “உறவுகள் சிதறுவதையும் அது மனிதரின் பல முகங்களை வெளிப்படுத்தும் சக்தி கொண்டதையும்” அவர் பதிவுசெய்திருக்கிறார்.
பெருமாள்முருகனின் படைப்புகளில், உறவுகளைப்பற்றிய மின்னல் கீற்று போல் பளிச்சிடும் அவரது அவதானிப்புகள் புத்தகத்தை மூடிவைத்து, கண்களையும் மூடிச் சிந்திக்கவைக்கின்றன. “எத்தனை வருசக்கணக்காய் உடனிருந்தாலும் சில சந்தர்ப்பங்கள் அமையும்போதுதான் சில முகங்கள் தென்படுகின்றன. சந்தர்ப்பங்கள் வாய்க்காமல் உள்ளே மூடிக்கிடக்கும் முகங்கள் எத்தனையோ வெளிப்படாமலே புதைந்து போய்விடுகின்றன.” தனக்கு உறவுகளால் ஏற்படும் அதிர்வுகளை, காயங்களை எழுதுவதன் மூலம் ஆற்ற முடிகிறது என்று வேறோர் இடத்தில் அவர் கூறியிருக்கிறார்.
பல அரிய, பாரம்பரிய, ‘பாக்கு கடிக்கிற நேரத்தில்’ என்பது போன்ற சொற்பிரயோகங்களைப் பதிவுசெய்கிறார். மேகாலயாவில் வாழும் காசி மக்கள் இன்றும் தூரத்தை ஒரு பாக்கு மெல்லும் நேரம் என்ற அலகின் மூலம் குறிக்கிறார்கள். கொங்கு நாட்டுப் புறவுலகு சொற்களால் துல்லியமாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. தமிழ் மாதங்கள், பருவ காலங்கள் இவற்றின் பின் புலத்தில் போகும் கதையின் பின்னணியாக நாட்டார் மரபுகள், கலைகள் அமைகின்றன. இத்தகைய பதிவுகளால் நூலே ஒரு ஆவணக்களரியாகப் பரிணமிக்கிறது. தமிழ் மண்ணில் வேர்களை ஆழமாக, அகலமாகப் பதித்திருக்கும் படைப்பு இது.”
இதுதான் சர்ச்சையின் மையம். பெருமாள் முருகனுக்கு இது முதல் படைப்பு அல்ல. ஏற்கனவே கூளமாதாரி, கங்கணம் போன்ற படைப்புகளின் வழியே பரவலாக அறியப்பட்டவர். மாதொரு பாகன் படைப்பும் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திடீரென்று எழுந்த இந்த சர்ச்சையும், அதன் பின் உள்ள இந்துத்துவா மற்றும் சாதீய அமைப்புகளும் செய்த செயல்கள் வியப்பை ஏற்படுத்துவன அல்ல. ஆனால், இந்த விவகாரத்தில் அரசு நடந்து கொண்ட விதம்தான் வியப்பை ஏற்படுத்துவதோடு, நமது கண்டனத்துக்கும் ஆளாக்கப்பட வேண்டியதாக உள்ளது.
இந்தியாவில் ஒரு மிகப்பெரிய படைப்பை ஓரங்கட்டுவதற்கு குறைந்தது பதினைந்து நபர்கள் போதுமானதாக உள்ளது. அந்த குறிப்பிட்ட சில நபர்கள், தங்கள் சொந்த நலனுக்காகவோ, அல்லது மோசமான உள்நோக்கத்தோடோ, முன்னெடுக்கும் போராட்டங்களின் அடிப்படையில் எந்த படைப்பை வேண்டுமானாலும் தடை செய்ய முடியும் என்ற ஒரு அவல நிலையே இன்று இந்தியாவில் நிலவுகிறது. இந்த போக்கு, பிஜேபி ஆளும் மாநிலங்களில் அதிகமாகி வந்தது. தற்போது, மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்தபிறகு, இந்த போக்கு மிகவும் அதிகமாகியிருக்கிறது.
டேம் 99 போன்ற திரைப்படங்களை நமது வசதிக்காக தடை செய்ய வேண்டும் என்று எழுந்த கோரிக்கைகளின் பரிணாம வளர்ச்சியே பெருமாள் முருகன் நூலுக்கு எழுந்துள்ள தடை. திமுக அரசாக இருந்தாலும் சரி, அதிமுக அரசாக இருந்தாலும் சிறுபான்மையினரையோ, அல்லது சாதிய அமைப்புகளையோ திருப்தி செய்து வாக்கரசியல் செய்வதற்காக, கருத்துரிமையின் குரல்வளையை நெறிப்பதில் சற்றும் தயங்குவதில்லை. டாவின்சி கோட் என்ற தலைப்பில் டேன் ப்ரவுன் எழுதிய நாவல், உலகெங்கும் மிக மிக பிரபலமாக விற்பனையானது. வரலாற்று ஆராய்ச்சிக்குப் பிறகு, கிறித்துவ மதம் குறித்து எழுதப்பட்ட ஒரு புதினம். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த நாவலை தடை செய்ய வேண்டும் என்று பரவலாக புகார்கள் எழுந்தாலும், அந்நாடுகளில் எதுவும் நடக்கவில்லை. பின்னர், இந்தப் புதினம், திரைப்படமாக எடுக்கப்பட்டபோது, கிறித்துவ மதத்தினரிடமிருந்து பெரிய அளவில் கோரிக்கையே எழாவிட்டாலும், தானாக முன்வந்து அந்த திரைப்படத்தை தடை செய்தார் கருணாநிதி.
ஆனால் இன்று அவர் புதல்வர் மு.க.ஸ்டாலின், கருத்துரிமை குறித்து இவ்வாறு கூறுகிறார்.
“தமிழ் நாவலாசிரியரும் எழுத்தாளருமான பெருமாள் முருகனை குறி வைத்து நடத்தப்படும் சகிப்புத்தன்மையற்றவர்களின் தாக்குதல்களும், போராட்டங்களும் அடிப்படைவாதிகளால் ஆதரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது,இவர்களுடைய ஒரே நோக்கம் அமைதியாகவும் சுதந்திரமாகவும் இருந்து கொண்டிருக்கும் தமிழக மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்குவது மட்டுமே” என்று கூறியுள்ளார்.
மற்றவர்களின் உணர்வுகளை எப்போதும் மதிக்கத் தெரிந்த நாம் அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள தனி நபரின் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கு உறுதியுடனும் ஒற்றுமையுடனும் துணை நிற்கிறோம். வோல்ட்டயரின் வாசகமான, ‘நீங்கள் பேசுவதை நான் ஏற்று கொள்ளாவிட்டாலும்,உங்கள் பேச்சுரிமையை பாதுகாக்க என் உயிரையும் கொடுக்க நான் தயாராகவுள்ளேன்.’ என்பதை நினைவில் வைத்துக்கொள்ள இது சரியான தருணம்
திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற மத அடிப்படைவாதத்திற்கு என்றும் எதிராக இருக்கும் என்றும் இந்திய அரசியல் சட்டம் 19ன் கீழ் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை பாதுகாக்க கழகம் இறுதிவரை எவ்வித தொய்வுமின்றி உறுதியாக துணை நிற்கும்”.
ஆனால், திமுக மற்றும் இடதுசாரிகளைத் தவிர்த்து, எந்த அரசியல் கட்சியும் இந்த விவகாரத்தில் வெளிப்படையான நிலைபாட்டினை எடுக்கவில்லை. இதற்கு ஒரே காரணம், மாதொரு பாகன் புதினத்தில் குறிப்பிடப்படும் கவுண்டர்கள் சமூகத்தின் ஆதரவை இழக்க வேண்டும் என்பதே.
இந்து முன்னணி மற்றும், சங் பரிவார அமைப்புகள், மற்றும் கவுண்டர் சாதி அமைப்பு, திடீரென்று இந்த புதினத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதும், பெருமாள் முருகனை கைது செய்ய வேண்டும் என்றதும், மாவட்ட நிர்வாகம் சமாதானப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒரு கட்டப்பஞ்சாயத்து கூட்டத்தை நடத்துகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில், பெருமாள் முருகன் எந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு அவமானப்படுத்தப்படுகிறார். இணைப்பு. இதற்கு பின்னரே மனம் வெறுத்த பெருமாள் முருகன், எனக்குள் இருந்த எழுத்தாளன் இறந்து விட்டான் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்.
பெருமாள் முருகன் வாழும் இடம், பணியாற்றும் சூழல், அவர் உற்றார் உறவினர்கள் என்று அனைத்தையும் கணக்கில் கொண்டே, இனி எழுதப்போவதில்லை என்று அவர் அறிவித்திருந்தாலும், பெருமாள் முருகனின் இந்த முடிவு வருத்தம் அளிக்கக் கூடியது மற்றும் ஏற்றுக் கொள்ள இயலாதது. இந்த விவகாரத்தில் ஒரு சில குறுகிய வட்டத்தைச் சேர்ந்த நபர்களே பிரச்சினைக்கு காரணமாக உள்ளார்கள் என்பதும், பெரும்பான்மையோர் கடந்த நான்கு ஆண்டுகளாக இது குறித்து எதுவும் பேசாதவர்கள் என்பதும், இப்படியொரு நாவல் இருக்கிறது என்பதே இந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்குத் தெரியாது என்பதும், பெருமாள் முருகன் அறியாதது அல்ல. இத்தனை ஆதரவுகள் இருந்தும், பெருமாள் முருகன் எழுத்தை நிறுத்தியது வேதனையான நிகழ்வே.
ஆனால் இதற்கெல்லாம் பின்னணி யார் தெரியுமா ? ஜெயலலிதா என்ற முட்டாளின் அரசே. விஸ்வரூபம் விவகாரத்தில், அரசின் ஆதரவு இருக்கிறது என்று தெரிந்தபிறகே இஸ்லாமிய அமைப்புகள் கூட்டணி அமைத்து களத்தில் குதித்தன. இந்தத் திரைப்படம் வெளியிட அனுமதிக்கவே முடியாது. ஒரு நாளும் இதை வெளியிட விட மாட்டோம் என்று சூளுரைத்தன. இறுதியில் அரசு, ஒரு சமாதான உடன்படிக்கைக்கு வாருங்கள் என்று சூளுரைத்ததும், ஒரு சீன் கூட வெட்டி நீக்கப்படாமல், சில காட்சிகளில் வசனம் மட்டும் ம்யூட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இஸ்லாமியர்களை தூண்டி விட்டு, சிறுபான்மை சமூகத்தின் பாதுகாவலராக தன்னை காண்பித்துக் கொள்ள ஜெயலலிதா எடுத்த முயற்சியே விஸ்வரூபம். ஆனால், கரசேவையை வெளிப்படையாக ஆதரித்த ஒரே தலைவர் ஜெயலலிதா என்பதை மறந்த இஸ்லாமிய அமைப்புகள், சிறுபான்மை இனத்தவரின் ஒரே பாதுகாவலர் என்று ஜெயலலிதா பின்னால் ஒரே அணியில் திரண்டன. இது போன்ற அற்ப அரசியல் காரணங்களுக்காகத்தான் திராவிட அரசியல் கட்சிகள் கூசாமல் கருத்து சுதந்திரத்தை பறிக்கின்றன.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்து பதவியேற்ற அமைச்சர்களும், முதலமைச்சரும், அதிகாரிகளும், அந்த அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய உரிமையையே கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
எண்பதுகளின் இறுதியில், குறிப்பாக 7 ஆகஸ்ட் 1987 அன்று, ஒரே ஒரு கிராத்திலே என்ற திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர், அந்தப்படத்தின் சென்சார் சான்றிதழுக்காக விண்ணப்பிக்கிறார். அப்படத்துக்கு சென்சார் சான்று மறுக்கப்படுகிறது. மேல் முறையீடு குழு முன் முறையீடு செய்யப்படுகிறது. அங்கே அந்தப்படத்துக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுகிறது. அதை ஒரு நீதிபதி விசாரித்து, சான்றிதழை ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிடுகிறார். இரு நபர் நீதிபதி முன்பாக மேல் முறையீடு செய்யப்படுகிறது. இரு நபர் நீதிபதி அடங்கிய அமர்வு, சென்சார் சான்றிதழை ரத்து செய்து உத்தரவிடுகிறது.
வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது. மூன்று நீதிபதி அடங்கிய அமர்வு, இத்திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்கி உத்தவிடுகிறது. அந்தத் தீர்ப்பை பார்க்கும் முன்னதாக எதற்காக அந்தத் திரைப்படத்துக்கு எதிர்ப்பு என்பதை பார்த்து விடுவோம்.
ஒரு கிராமத்தில் சங்கர சாஸ்திரி என்பவர் இருக்கிறார். அவர் மனைவி சிறு வயதிலேயே இறந்து விடுகிறார். அவர்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை பெயர் காயத்ரி. தன் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தன் நண்பரான ஒரு தாசில்தாரின் உதவியோடு தன் மகள் காயத்ரியை ஒரு அனாதை என்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் கருப்பாயி என்று பெயர் மாற்றம் செய்து, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று சான்றிதழ் பெற்று விடுகிறார். அந்தப் பெண் மற்றொரு இடத்தில் வளர்ந்து பின்னாளில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகி விடுகிறார். கதையில் வரும் ஒரு வில்லனின் காரணமாக இந்த போலி சான்றிதழ் விவகாரம் மத்திய அரசுக்கு தெரிந்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. இறுதியாக ஊர் பொது மக்களின் பெரும் ஆதரவு காரணமாக, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்கிறது.
இந்தப் படத்தை எதிர்த்து, தமிழகத்தில் அப்போது இருந்த பல்வேறு தலித் அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. திருச்சி ரம்பா ஊர்வசி தியேட்டரில் இப்படம் வெளியிடப்பட்டால், அரங்கத்தில் பாம்புகள் விடப்படும் என்று தலித் அமைப்புகள் மிரட்டல் விடுத்தன. இதன் முடிவிலேயே உச்சநீதிமன்றம் பின்வரும் தீர்ப்பை அளித்தது.
This takes us to the validity of the plea put forward by the Tamil Nadu Government. In the affidavit filed on behalf of the State Government, it is alleged that some organisa- tions like the Tamil Nadu Scheduled Castes/Scheduled Tribes People’s Protection Committee, Dr. Ambedkar People’s Move- ment, the Republican Party of India have been agitating that the film should be banned as it hurt the sentiments of people belonging to Scheduled Caste/Scheduled Tribes. It is stated that the General Secretary of the Republican Party of India has warned that his party would not hesitate to damage the cinema theatres which screen the film. Some demonstration made by people in front of “The Hindu” office on March 16, 1988 and their arrest and release on bail are also referred to. It is further alleged that there were some group meetings by Republican .Party members and Dr. Ambedkar People’s Movement with their demand for banning the film. With these averments it was contended for the State that the exhibition of the film. will create very serious law and order problem in the State.
இப்போது தமிழக அரசு எடுத்திருக்கும் நிலைபாட்டை பார்ப்போம். மாநில அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் தமிழக எஸ்சி எஸ்டி பாதுகாப்பு குழு, அம்பேத்கர் மக்கள் இயக்கம், இந்திய குடியரசு கட்சி ஆகிய கட்சிகள், இத்திரைப்படம் தலித் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அதனால் இத்திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்றும் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தியக் குடியரசுக் கட்சியின் பொதுச் செயலர், இப்படம் திரையிடப்படும் தியேட்டர்களை தாக்குவதற்கும் தயங்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். இந்து நாளேட்டுக்கு எதிராக 16 மார்ச் 1988 அன்று நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் அது தொடர்பான கைதுகளையும் அந்த மனு குறிப்பிடுகிறது. இந்தியக் குடியரசு கட்சி மற்றும் அம்பேத்கர் மக்கள் இயக்கம் ஆகியவை இத்திரைப்படம் குறித்து நடத்திய கூட்டங்களும் குறிப்பிடப்படுகிறது. இவற்றை குறிப்பிட்டு, இத்திரைப்படம் திரையிட அனுமதி அளிக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
We are amused yet troubled by the stand taken by the State Government with regard to the film which has received the National Award. We want to put the anguished question, what good is the protection of freedom of expression if the State does not take care to protect it? If the film is unobjectionable and cannot constitutionally be restricted under Article 19(2), freedom of expression cannot be suppressed on account of threat of demonstration and processions or threats of violence. That would tantamount to negation of the rule of law and a surrender to black mail and intimidation. It is the duty of the State to protect the freedom of expression since it is a liberty guaranteed against the State. The State cannot plead its inability to handle the hostile audience problem. It is its obligatory duty to prevent it and protect the freedom of expression.
ஒரு தேசிய விருது வாங்கிய திரைப்படத்தின் மீதான தமிழக அரசின் நிலைபாடு நகைப்பை ஏற்படுத்துகிறது. ஒரு அரசு, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான பேச்சுரிமையை உறுதி செய்யாவிட்டால், அந்த அடிப்படை உரிமை எதற்கு என்ற வேதனையான கேள்வியை இந்த இடத்தில் எழுப்ப விரும்புகிறோம். அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 19 (2)ன் கீழ் ஒரு திரைப்படத்தை தடை செய்ய முடியாவிட்டால், போராட்டம், ஆர்ப்பாட்டம் அல்லது வன்முறை ஆகியவற்றை காரணம் காட்டி, அத்திரைப்படத்தை தடை செய்ய முடியாது. அப்படி தடை செய்வது, சட்டத்தின் ஆட்சியை புறந்தள்ளி, மிரட்டல் பேர்வழிகளிடம் சரணடைவதற்கு ஒப்பாகும். பேச்சுரிமையை பாதுகாப்பது ஒரு அரசின் கடமை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்ற காரணத்தின் அடிப்படையில் அரசு கைவிரிப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. அந்த மிரட்டலை தடுப்பதும், பேச்சுரிமையை பாதுகாப்பதும் அரசின் கடமையாகும்.
In this case, two Reversing Committees have approved the film. The members thereof come from different walks of life with variegated experiences. They represent the cross section of the community. They have judged the film in the light of the objectives of the Act and the guidelines provided for the purpose. We do not think that there is any- thing wrong or contrary to the Constitution in approving the film for public exhibition. The producer or as a matter of fact any other person has a right to draw attention of the Government and people that the existing method of reserva- tion in education institutions overlooks merits. He has a right to state that reservation could be made on the basis of economic backwardness to the benefit of all sections of community. Whether this view is right or wrong is another matter altogether and at any rate we are not concerned with its correctness or usefulness to the people.
இத்திரைப்படத்தை பொருத்தவரை இரண்டு மறு ஆய்வுக் குழுக்கள் இத்திரைப்படத்துக்கு அனுமதி அளித்துள்ளன. அக்குழுக்களின் உறுப்பினர்கள் சமூகத்தின் பல்வேறு தளங்களில் இருந்து வருகிறார்கள். அவர்கள் அத்திரைப்படத்தை, இதற்கென வகுத்துள்ள சட்டத்தின் பார்வையிலேயே ஆய்வு செய்து அனுமதி அளித்துள்ளனர். இப்படி அனுமதி அளித்ததில் தவறு இருப்பதாகவோ, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக உள்ளதாகவோ நாங்கள் கருதவில்லை. இத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கோ, அல்லது வேறு ஒருவருக்கோ, இன்றைய இட ஒதுக்கீட்டு முறையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்ட உரிமை உள்ளது. இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் வழங்கலாம் என்று சொல்வதற்கும் உரிமை உள்ளது. இது சரியா தவறா என்பது வேறு விவகாரம். அதை சரி அல்லது தவறு என்றோ, இதனால் மக்களுக்கு ஏற்படும் பயன் குறித்து சொல்தோ எங்கள் பணி கிடையாது.
We are only concerned whether such a view could be advocated in a film. To say that one should not be permitted to advocate that view goes against the first principle of our democracy. We end here as we began on this topic. Freedom of ex- pression which is legitimate and constitutionally protected, cannot be held to ransom, by an intolerant group of people. The fundamental freedom under Article 19(1)(a) can be reasonably restricted only for the purposes mentioned in Articles 19(2) and the restriction must be justified on the anvil of necessity and not the quicks and of convenience or expediency. Open criticism of Government policies and operations is not a ground for restricting expression. We must practice tolerance to the views of others. Intolerance is as much dangerous to democracy as to the person himself.
இப்படி ஒரு பார்வை ஒரு திரைப்படத்தின் வாயிலாக சொல்ல முடியுமா முடியாதா என்பதை மட்டுமே நாங்கள் ஆய்வு செய்கிறோம். இப்படியொரு பார்வை குறித்து பேசவே கூடாது என்பது, நமது ஜனநாயகத்தின் அடிப்படை நாதத்துக்கே எதிரானது. இந்த அளவில் இத்தலைப்பின் மீதான விவாதத்தை முடிக்கிறோம். கருத்துரிமை சட்டபூர்வமானதும், அரசியல் அமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டு வருவதுமாகும். சகிப்புத்தன்மையற்ற சில குழுக்கள் அதை அச்சுறுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பிரிவு 19 (2)ன் கீழ், கருத்துரிமை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அடிப்படையில் மட்டுமே கட்டுப்படுத்தப் பட வேண்டுமே ஒழிய, தேவைக்கு ஏற்றார்ப்போல கட்டுப்படுத்தக் கூடாது. அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிரான விமர்சனங்கள் என்பதால், கருத்துரிமையை கட்டுப்படுத்த முடியாது. சகிப்புத்தன்மையை நாம் வளர்த்துக கொள்ள வேண்டும். சகிப்பு அல்லாத நிலை ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, அதை முன்வைப்பவருக்கும் ஆபத்தானது.
இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி சென்னிமலை, இது மிகுந்த ஆபத்தான் போக்கு என்று தெரிவித்தார். அவர் இது குறித்து கூறுகையில் “மாதொரு பாகன் புதினத்தை முழுமையாக படித்தவர்கள் இப்படி கண் மூடித்தனமான எதிர்ப்பை தெரிவிக்க மாட்டார்கள். நான்கு வருடம் பழமையான இந்த நாவல் இப்போது சர்ச்சைக்குள்ளாக்கப் பட்டிருப்பது, இது அரசியல் ஆதாயத்துக்காக உருவாக்கப்பட்ட ஒரு பொய்யான சர்ச்சை என்பதையே காட்டுகிறது.
குழந்தைப் பேறு இல்லாத தம்பதியர்கள் அடையும் துயர் சொல்லி மாளாது. விஞ்ஞான வளர்ச்சி அடைந்த இந்த காலகட்டத்திக் கூட, குழந்தை இல்லாத தம்பதியினரில், அந்தப் பெண்தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார். விஞ்ஞான வளர்ச்சி அடையாத காலகட்டத்தில் குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினரின் மன உளைச்சலைப் போக்கும் பொருட்டு, இது போன்ற வழக்கங்கள் இருந்து வந்துள்ளன என்பதையே நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் மக்களை பிளவுபடுத்தி, இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதையே பிஜேபி உள்ளிட்ட சங் பரிவார சக்திகள் விரும்புகின்றன.
அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை உடைய மாவட்ட நிர்வாகம், இந்த விவகாரத்தில் தன் கடமையை மறந்து, அடிப்படைவாத சக்திகளிடம் தன்னை அடகு வைத்துள்ளது. குறிப்பாக, நூலாசிரியர், சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்குவதற்கு சம்மதம் தெரிவித்த பிறகும், அடிப்படைவாத சக்திகளின் பக்கமாக சார்பு நிலை எடுத்துள்ள மாவட்ட நிர்வாகம், எழுத்தாளர் பெருமாள் முருகனை கிட்டத்தட்ட மிரட்டியுள்ளது.
விஞ்ஞான வளர்ச்சி உள்ளிட்ட அனைத்திலும் நாம் மேற்கத்திய நாடுகளை உதாரணம் காட்டுகிறோம். ஆனால் இது போன்ற விவகாரங்களில் மேற்கத்திய நாடுகள் கடைபிடிக்கும் சகிப்புத்தன்மையை மட்டும் வசதியாக மறந்துவிடுகிறோம். மேற்கத்திய நாடுகளில் பரவலாக பின்பற்றப்படும் கிறித்துவ மதத்தை கடுமையாக பகடி செய்து வரும் திரைப்படங்கள் அங்கே தடை செய்யப்படுவதில்லை. அதற்கான இடம் அங்கே உள்ளது. ஆனால், நாம்தான் அவற்றை பின்பற்றத் தவறுகிறோம்.
கிறித்துவம், இஸ்லாம். இந்துத்துவம் உள்ளிட்ட மதங்கள் இது போன்ற சர்ச்சைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவை. மனிதனை பண்படுத்தவே அவை உருவாகின. ஆனால், அவற்றை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் சில அடிப்படைவாதிகள்தான் மதத்தின் பெயரால் திரிபு வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக மட்டுமே, பிஜேபி உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள், இது போன்ற பல்வேறு விவகாரங்களை எழுப்பி குளிர்காய்கின்றன. இது மிகவும் ஆபத்தான போக்கு” என்றார்.
தினமணி தனது தலையங்கத்தில் இந்த சர்ச்சையை அற்புதமாக கண்டித்திருந்தது. பெருமாளே என்று தலைப்பிட்ட அந்த தலையங்கத்தில் “கொங்கு மண்டலத்தின் பெருமைகளை, கலாசார விழுமியங்களை, பழக்கவழக்கங்களைப் பதிவு செய்த பாராட்டுக்குரிய எழுத்தாளர் பெருமாள் முருகன், மனம் நொந்து, தனது பேனாவை இனி திறப்பதில்லை என்று மூடி வைத்துவிட்டார். தன்னுள் இருக்கும் இலக்கியவாதிக்கு மரண சாசனம் எழுதவும் முற்பட்டிருக்கிறார்.
பிள்ளைச்செல்வம் இல்லாத பெண்கள் தெய்வத்தை வேண்டி, யார் எனத் தெரியாமல் “கண்மூடி’ ஏற்றுக் கருவுறுகிற, சாமி தந்த பிள்ளையாக அக்குழந்தையைப் பார்க்கிற, ஒரு பழைய நடைமுறையை அந்த நாவலில் பெருமாள் முருகன் பதிவு செய்திருக்கிறார் என்பதுதான் எதிர்ப்புக்குக் காரணம். அவர் எழுதியது பொய் அல்ல. சமூகத்தில் இருந்த பழக்கம்தான். கோயிலில் இரவு தங்கி இருத்தல், குறிப்பிட்ட நாளில் இரவு முழுவதும் கோயில் வளாகத்தில் கண்விழித்து மண்சோறு சாப்பிடுதல், தீர்த்தமாடுதல் இவை யாவும், “இத்தனை நாள் இல்லாமல் எப்படி இப்போது?’ என்கிற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சமூகம் தந்த அங்கீகாரச் சடங்குகள் என்பதை நாம் மறுத்துவிடலாகாது.
மலையாளத்தில் எம்.டி. வாசுதேவன் நாயர், “இரண்டாம் இடம்’ என்கிற நாவலை எழுதியிருக்கிறார். அதனை சாகித்ய அகாதெமி தமிழிலும் வெளியிட்டுள்ளது. பீமன் எப்போதும் தான் இரண்டாம் இடத்தில் வைக்கப்படுவதற்காக ஆதங்கப்படுவதுதான் கதை. “நான் அறியாப் பருவத்தில் தேரோட்டியுடன் கலந்து பெற்ற மகன்தான் கர்ணன். பாண்டுவை மணந்த பிறகு, பாண்டு மகாராஜா கலவிக்கும் தகுதியில்லாமல் இருதயமும் பலவீனமாக இருந்ததால், விதுரருக்கு பெற்ற மகன்தான் தருமன். மிகத் திடகாத்திரமான காட்டுவாசிக்குப் பிறந்தவன்தான் நீ…’ என்று குந்தி சொல்வதாகக் கதை செல்கிறது.
இந்த நாவலை மலையாள உலகம் எதிர்க்கவில்லை. பல பதிப்புகள் கண்ட நாவல் இது. இலக்கியத்தை இலக்கியமாகப் பார்க்கத் தெரிந்த சமுதாயம் அது. படைப்பிலக்கியவாதியின் கற்பனைக்குக் கடிவாளம் போடாத நாகரிக சமுதாயம் அது.
இலக்கியத்தை, கோயில் வழிபாட்டுச் சடங்குகளை எல்லாம் விட்டுவிடுவோம். இன்று “ஃபெர்டிலிடி சென்டர்’ எனப்படும் கருவூட்டு மருத்துவமனையில் என்ன நடக்கிறது? ஓர் ஆண், மலடு. பெண்ணோ கருவுறத் தகுதி படைத்தவள். அவர்கள் பெர்டிலிடி மருத்துவமனைக்குச் செல்லும்போது, “உங்கள் குடும்ப மரபீனி தொடர விரும்பினால், உங்கள் சகோதரர் யாரிடமாவது விந்து தானம் பெற்று, உங்கள் மனைவியை கருவுறச் செய்யலாம். இல்லையென்றால், விந்து வங்கியில் பெற்று கருவுறச் செய்யலாம். உங்களுக்குச் சம்மதமா’ என்பதுதான் நேர்மையான, நல்லிதயம் படைத்த மருத்துவரின் முதல் கேள்வி.
பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வசதி இல்லாத ஒரு தம்பதி, தங்களுக்கு பிள்ளை வரம் வேண்டும் என்பதற்காக சமூகம் அங்கீகரித்த, கோயில்கள் உருவாக்கித் தந்த, யார் யாருடன் என்றறியாத கண்மறைப்பு நடைமுறைகள் இன்று வழக்கத்தில் இல்லாததால், ஒரு பெண் தனக்கான விந்து தானத்தை, தானே தன் விருப்பப்படி, மகாபாரதக் குந்தியைப் போலத் தேர்வு செய்து கொள்கிறாளே, அதைத் தவிர்க்க முடியுமா, மறுக்க முடியுமா அல்லது தடுக்கத்தான் முடியுமா?
சங்க காலத் தமிழனின் காதல் வாழ்க்கையைப் பதிவு செய்ததுதானே அகநானூறு. தான் வாழ்ந்த காலத்தில், அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்த நடைமுறையை, தான் எழுதும் கதையில் பதிவு செய்வது என்பது படைப்பிலக்கியவாதியான பெருமாள் முருகனின் உரிமை, கடமை. இல்லாததையேகூட எழுதியிருந்தாலும் அது அவரது கற்பனைக்குத் தரப்பட வேண்டிய சுதந்திரம். அதைத் தடுக்க முற்படுவது எப்படி சரியாகும்?
எதைச் சொன்னாலும் அது யாராவது ஒருவர் மனதைப் புண்படுத்துகிறது என்கிற பெயரில் போராட்டம் நடத்துவது தற்போது வழக்கமாகிவிட்டது. ஒரு கருத்து ஏற்புடையதல்ல என்றால் அதற்கு மாற்றுக் கருத்தை முன்வைக்கலாம். மாறாக, யாரும் கருத்தே கூறக்கூடாது என்றால் எப்படி சரி? பெருமாள் முருகனுக்குப் பக்கபலமாக நின்றிருக்க வேண்டிய அரசு நிர்வாகம் போராட்டக்காரர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததேகூட மிகப்பெரிய தவறு.
சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது, நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தெளிவாக வழங்கிய தீர்ப்பு, “தணிக்கைக் குழுவால் சான்றிதழ் வழங்கப்பட்ட திரைப்படத்தை வெளியிடாமல் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. அந்தத் திரைப்படம் வெளிவருவதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உண்டு’ என்பது. அதுவே பெருமாள் முருகனின் “மாதொருபாகன்’ பிரச்னைக்கும் பொருந்தும்.
சாதியும், சமயமும், கணவனும் ஏற்றுக்கொண்டாலும் ஆணாதிக்க மானுடம் ஏற்க மறுக்கிறது. இது சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் மற்றொரு பாகம். இதுவே வெளிமாநிலத்திலோ, வெளிநாட்டிலோ நடந்திருந்தால் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக உலகமே திரண்டெழுந்திருக்கும். தமிழனாய் பிறந்தது பெருமாள் முருகனின் தவறு!”
பெருமாள் முருகன் எழுதியது சரியா, தவறா என்பது இங்கே சர்ச்சையே அல்ல. அது தவறு என்று சில விஷக்கிருமிகள் எழுப்பும் பிரச்சாரத்தின் அடிப்படையில் அரசு நிர்வாகமே, அந்த விஷக்கிருமிகளுக்கு ஆதரவாக களத்தில் இறங்குவதுதான் இங்கு விவகாரமே.
இன்று மரணமடைந்தது பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் அல்ல. ஜனநாயகமே.
இப்படிப்பட்ட அராஜகங்களை நாம் ஏதோ ஒரு காரணத்துக்காக இன்று ஆதரித்தோமேயானால், நாளை அரசுக்கும், நிர்வாகத்துக்கும் எதிராக நாம் வாயே திறக்க முடியாத நிலை ஏற்படும்.
கண்ணீர் விட்டே வளர்தோம் சர்வேசா
இப்பயிரை கருகத் திருவுளமோ.
மாதொரு பாகன் மின் நூலின் இணைப்பு
Friends, we are not against Perumal Murugan or his writings. Usually we tell our children and grand-children about the great things, we have done in our childhood. So that they will grow up as good persons. Nobody will tell what are the mischiefs one has done in his early years or how many times he earned bad name by his bad behaviour. There are lot of good things in our society to write about. There are various forms to express one’s ideas. Perumal Murugan’s book can be regarded as research work on a particular practice of a community once upon a time. But, who knows what happened in other communities in other areas. If somebody says Perumal Murugan himself is a “Samikuzhandhai” or his family women and community used to get children through village festivel, we strongly condemn it. There were practices which died longback. We know the child marriages where children who have not attained puberty were given in marriage. Old people marrying and spoiling you girls life. We are with you Perumal Murugan for your literary excellence. But, we dont support the theme. People please understand others’ feeling before writing something. We never force our muslim friends to speak in Tamil in their homes as we know their mother tongue is Urudu. We never force Naidu and Chettiar who speak Telugu in their homes. We know it will affect their feelings. We know even Dravida Kazakam people never say “No God” or preach atheism to our Muslim or Christian friends. There is limit and limitation to every act. Perumal Murugan dont worry, we are with you always. Be bold and write anything without hurting others feelings.
குறிஞ்சிநெட்டில் என் புத்தக அறிமுகக் கட்டுரை. பெருமாள்முருகனின் கங்கணம் நாவல்.
/மறந்து போவது வயதாவதன் சாதாரண அறிகுறியாக இருப்பினும் அதன் உச்சத்தில் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் கலந்துவிடுகின்றன. நிறைவேறாத ஆசைகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஆழ்மனது, மூளை பலவீனப்படும் இந்த இறுதிக்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு மேலே வந்து தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. உச்சமான போதையின் பிடியிலும் இது நிகழ்வதைக் காணலாம்/
http://kurinjinet.blogspot.sg/2015/05/10.html?m=1
பெருமாள் முருகனுக்கு ஆதரவாக எழுதும் சவுக்கு சங்கர், தன் மனைவியை திருச்சென்ட்கோட்டு திருவிழாவுக்கு வரும் வைகாசி தேர் திருவிழாவுக்கு அனுப்பி கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டட்டும்.. துணைக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துல நிறைய தேவடியாக்கள் இருப்பாங்க.. கூப்பிட்டுக்க.. என்ன சரியா..
இந்த பதிவ போட்டதில இருந்தே உன்னோட நடுநிலை என்ன யோக்கியதைல இருக்குதுனு தெரியுதுடா..
Nobody in Tamilnadu has any rights to talk about Freedom of Expression. In Tamilnadu there has always been double standards as for as Freedom of Expression is concerned. When Dam99 movie was banned where were all these people who are now talking about Karuthu Suthanthiram? That movie has nothing to do with Mullai periyar, then why was it banned? Madras Cafe was banned. For what reason? Where did Savukku and his chamchas go when these movies were banned. So anything which suits your ideology should be allowed and it that it called as Freedom of Expression. Anything which is against your ideology should be banned. This is the logic of the people here. This is called Double Standards. Go to hell!
கருத்து சுதந்திரம் என்பதும் ஒரு எல்லைக்குள் தான் இருக்கவேண்டும்.
ஒருவருடைய கருத்து சுதந்திரம் தனிமனிதனுடைய மனதை காயப்படுத்தவோ அல்லது ஒரு சமூகத்தையோ காயபடுத்தவோ கூடாது.
ஒருவன் குடித்து விட்டு தெருவில் ஆபசமாக திட்டிக்கொண்டு சென்றால் அது கருத்து சுதந்திரமா? அவன் திட்டுவதில் உண்மை இருந்தாலும் அதனை மன்னிக்க முடியுமா?
ஒரு சமூகத்தில் அப்படி பட்ட நிகழ்வு நடந்திருந்தாலும் இப்போது அதனை மறந்துவிட்டு கௌரவமாக வாழுகின்ற மக்களுக்கு மனதை வேதனை படுத்தாதா?
பெண்கள் கற்பை போற்றி பெருமை பட்ட நாட்டில் இதுபொன்ற பதிவுகள் தேவை இல்லை.
பெருமாள் முருகன் செய்தது கருத்து சுதந்திரம் அல்ல, கருத்து கொலை
TO Savukku Sankar.
what about your view on this;
http://www.jeyamohan.in/70704
PS: You have to buy 10 nos. gums to keep mum shut after reading this!!!
Iam surprised by the blind support the author is getting from the fringe elements. I read the novel and I was taken aback by the language used in that.
In old days, even sandilyan used to write sex stories and it used to be a nice read, but nowhere the characters are linked with the real life and no one would be offended by that. The same applies to all the characters in mahabaratha or ramayana. Nobody is claiming to be descendents of satyavathi or arjuna or bheema. So, if the author has written the novel as a fiction, it would have made a good read. but, trying to give originality to that as a real-life story and painting people with names as ‘sami kozhanda’ or samipillai’ as kids born out of illegal affair is really bad. Will the same people who are supporting this author allow a film to be screened if the name of the villain character is kept as either seeman or thiruma or stalin or azhagiri or karunanidhi or jayalalitha or even in the name of any other fringe leader? This novel was under the radr for the last four years but once it got translated into English and also an award was announced it came to limelight and hence the protests. It is childish to link this protests by local people with the central government and people who are always trying to get some change to beat Modi have taken up this as a protest by fringe elements.
If a writer has the freedom to write anything which conveys that sexual acts occured in a temple which is a place of gathering under belief of people or local society, then the society itself has the right to question such writings as their collective , shared belief is undermined. Does any one know that life goes on for many humans only if they have some belief whether it is on god , or on some fellow beings or on some principles etc.,
Hence those who disbelieve in god in the same family do not disturb who believe in god. Hence as the majority of people living in the area and even in other places have expressed their displeasure on the contents of the book, it is better that media and the group of mediamen, writers must behave properly and should not blindly support the book. Writers alone do not constitute the intellectual world as there are scientists, technocrats, etc who do their only job for the benefit of people and do not try to knock the feelings of the masses.
Author could have avoided the place name if it is fictional. If it is non fictional, he should give proof but that would be difficult. As any story becomes a history, this could be an embarrassment to the town…..
அரோஹரா, என்ற சொல்லின் அர்த்தம் தெரியாமல் கூட்டத்துடன் சேர்ந்து நாமும் அரோஹரா சொல்லுவதுபோல. பகவத் கீதை என்ற இலகுவில் படித்து அறிந்து கொள்ள முடியாத கிரந்தத்தில் ஓரிரு வரிகளை அறிந்துகொண்டு பகவத் கீதை பற்றி பேசுவதுபோல பெருமாள் முருகன் எழுதிய புதினத்தின் உள்ளடக்கம் மூலவேர் ஆழம் பற்றி அறியாமல் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல ஒரு சில முகமூடி குளப்பவாதிகளால் உண்டாவதுதான் இப்படியான சர்ச்சைகள்.
என்ன செய்ய. நாம் இன்னும் காட்டுமிராண்டிதனத்திலிருந்து வெளிவரவில்லை. இணைவி துணைவி சின்னவீடு போன்ற வற்றை கவுரவமாக துதிக்கும் மேட்டுக்குடி உயர்சாதி ஆள்க்காட்டிகள், சாதி இழிவுகள் பற்றி பேசிக்கொண்டு பண்ணை வீடுகளில் வேலைசெய்யும் தாழ்த்தப்பட்ட பெண்களை போகப்பொருளாக்கி பிள்ளை கொடுத்த கதைகள் இன்றும் தொடரத்தான் செய்கிறது. அதுபற்றி சில திரைப்படங்களில் சொல்லப்படுகிறது. ஆழமான இலக்கியப்படைப்புக்களில் சொல்லப்படும் உண்மைகளை பின்பற்றி வாழ்ந்துகொண்டிருக்கும் முகமூடி மிருகங்கள் அவற்றை பதிவிடுவதை எதிர்ப்பதன் மூலம் தம்மை புனிதர்களாக காட்டிக்கொள்ள விளைகின்றனர்.
இந்த விடயத்தை எதிர்ப்பவர்கள் எத்தனை பேருக்கு பெருமாள் முருகன் எழுதிய புதினம் பற்றிய புரிதல் உண்டு என்பது சிந்திக்கவேண்டிய விடயமாகும்.
Excellent say!!!
Perfect article….
கருத்து சுதந்திரம் – மாதொருபாகன் – சொந்த கருத்து
சமூகத்தில் உள்ள ஒரு நிகழ்வை புனைவாக தருவதில் தவறு இல்லை அதற்கு பெருமாள் முருகன் அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் அவர் ஒரு உண்மையான ஊரையும், அவ்வூரின் கோவில் மற்றும் அங்கு உள்ள குறிப்பிட்ட பிரிவினை சேர்ந்த மக்களையும் புனைவின் உள்ளே கொண்டு வரும் பொழுது அது ஒரு ஆவணம் அல்லது சரித்திரம் ஆக மாறுகிறது.
பெருமாள் முருகன் எழுதியது அந்த ஊரிலோ அல்லது நம் இந்திய நாட்டிலோ நடை பெறாத ஒரு நிகழ்வில்லை. அக்காலத்தில் கணவன் மலடாக உள்ளதால் குழந்தை பேரு இல்லாதவர்கள் ஒரு குழந்தையை பெற பின்பற்றியதில் இதுவம் ஒரு முறை என்பதை மறுப்பதற்கு இல்லை. ஏன் இக்காலத்திலும் இது நடை பெற்றுக்கொண்டு இருக்கும் ஒரு நிகழ்வுதான். ஆனால் இது குழந்தை இல்லாத எல்லா தம்பதியர்க்கும் ஒரு பொதுவான நிகழ்வாக எக்காலத்திலும் நாம் பொதுமைப்படுத்த முடியாது.
ஒரு உதாரணமாக, அந்நிய தேச எழுத்தாளர் ஒருவர் தமிழ்நாட்டில் குழந்தை இல்லாத பெண்மணிகள் அவர்களின் மத வழிபாட்டுத்தளங்களில் இரவில் சென்று திருமணம் ஆகாத வாலிபர்களோடு சேர்ந்து ஒரு குழந்தையை பெற்றெடுப்பார், இது தமிழகத்தில் நடக்கும் ஒரு வழக்கமான நடைமுறை என்று எழுதுகிறார். மேலும் இதை தான் ஆய்வு செய்து தெரிந்து கொண்டது என்கிறார். இது ஒன்றும் நடவாத ஒரு நிகழ்வல்ல, எனவே கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் இதை நாம் எல்லோரும் வரவேற்க வேண்டுமா ? இது உலக மக்களிடம் நம்மைப்பற்றி எப்படிப்பட்ட ஒரு பிம்பத்தை கட்டமைக்கும்?
ஏன் “மனு” என்ற நூலை எரிக்க வேண்டும் என்று பெரியார் வழி வந்த தோழர்கள் சொல்கிறார்கள்? ஏன் மனுவிற்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறது ? ஏனென்றால் அதில் உள்ள செய்தி பெரும்பான்மை மக்களுக்கு எதிரானவை. சூத்திரன் என்ற சொல்லை பெரியார் ஏன் எதிர்க்க வேண்டும்? புரட்சி பேசும் படித்தவர்கள் இப்பொழுது மஹாபாரதம் மற்றும் வேதங்களை தங்கள் துணைக்கு அழைப்பது நகைமுரண்.
ஆனால் பெருமாள் முருகனோ இன்றும் ஒரு சமூகமாக வாழும் மக்கள் மற்றும் அவர்கள் நடத்தும் விழாவை பற்றி ஒரு தவறான தகவலை பதிவு செய்துவிட்டு புனைவு என்று நியாயப்படுத்த முயல்கிறார். அவர் தன் நாவலின் முன்னுரையில் தான் பல ஆய்வுகள் செய்து “திருச்செங்கோடு” பற்றி தெரிந்து கொண்டதை அடிப்படை ஆக வைத்து எழுதியதாக சொல்கிறார்.
“சாமி கொடுத்த குழந்தை” என்று நம் மக்கள் சொல்வதே இப்படி தகாத உறவின் மூலம் பிறந்த குழந்தைகள் என்று தன் கதாபாத்திரங்கள் மூலம் நிறுவிகிறார். மேலும் திருவிழா வரும் அனைத்து பெண்களும் தேவிடியா என்றும் எழுதுகிறார். இது வருடந்தோறும் அக்கோவில் திருவிழா செல்லும் பெண்களை காயப்படுத்ததாதா? மேலும் பல கோவில்கள் சென்று தன் கணவனின் மூலம் காலம் தாழ்த்தி குழந்தை பெற்ற மனைவி மற்றும் கணவனை புண்படுத்தாதா?(குறிப்பாக திருச்செங்கோட்டில் வசிப்பவர்களுக்கு)
அப்பொழுது கருத்து சுதந்திரம் என்பது ஒரு சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்த அளிக்கப்பட்ட ஒரு உரிமமா?
சரி இதற்கு அவர் வரலாற்று ஆதாரங்களை ஏதும் தருகிறாரா ? திருச்செங்கோடு என்பது அழிந்து போன ஒரு ஊர் அல்லவே, ஊகங்களாக ஒரு கருத்தை சொல்வதற்கு. வாய்மொழியாக கேட்ட தகவல்களை அல்லது வதந்திகளை ஒரு அருமையான கதையாக தரும் உரிமை உள்ளதே தவிர அதற்கு உண்மை சாயம் பூசி தம் மேதாவித்தனத்தை நிரூபிக்க பெருமாள் முருகனுக்கு உரிமை இல்லை.
அடுத்து பெருமாள் முருகன் தான் ஊரின் பெயரை நீக்க சம்மதித்து விட்டாரே, அப்புறம் என்ன பிரச்சினை ?
சர்ச்சை எழுந்தவுடன் பெருமாள் முருகன் இந்த முடிவை எடுத்தாரா அல்லது தான் எழுதியது அனைத்தும் கற்பனை என்று சொன்னாரா, இல்லை . இது தான் பல அறிஞர் பெருமக்களிடம் கேட்டும் மற்றும் கள ஆய்வு செய்தும், பல ஆவணங்கள் மூலமாகவும் கண்டறிந்த உண்மை என்றே பேசினார். மேலும் இந்நூல் ரத்தன் டாடா அறக்கட்டளை மூலம் உதவி பெற்று கள ஆய்வு செய்து எழுதியது என்று அவரே முன்னுரையில் சொல்கிறார். எனவே ஒரு தவறான அல்லது ஆதாரமற்ற ஒரு தகவலை தரும் நூலை தடை செய்ய சொல்வது நியாயமே.
போராட்டம் வலுவடைந்த பின்பு பெருமாள் முருகன் மக்கள் முன் தான் சேகரித்த ஆவணங்களை கொடுத்து தன் கருத்தின் உண்மைத்தன்மையை நிரூபித்தாரா? இல்லை. எழுத்தாளனின் கருத்து சுதந்திரத்தை மதவாத மற்றும் சாதிய சக்திகளும் அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டினார் . பெருமாள் முருகனுக்கு ஆதரவு தந்த பெரும்பாலான மக்கள் இது ஒரு புனைவு என்ற விதத்திலயே ஆதரவு கொடுத்தார்கள். ஆனால் முன்னுரையிலயே “Its Based On True Story” என்று சொல்வதை போல நான் ஆய்வு செய்து காலத்தில் பின்னால் சென்று அம்மக்களுடன் பயணித்தேன் என்று சொல்கிறார். ஆக உங்கள் வரலாற்றுக்கு வலு சேர்க்கும் ஆவணத்தை கொடுங்கள் அல்லது புத்தகத்தை திரும்பப்பெறுங்கள் என்பது தவறான வாதம் அல்லவே.
அடுத்து ஒரு பெரும் குற்றசாட்டு, இது மதவாத மற்றும் சாதிய சக்திகளால் தூண்டிவிடப்பட்ட போரட்டம். போரட்டம் மதவாத கட்சிகளாலும் சாதிய கட்சிகளாலும் முன்னெடுத்து செல்லப்படுவதால் நாம் கண்ணை மூடிக்கொண்டு பெருமாள் முருகனை ஆதரிக்க தேவயில்லை. போராட்ட வழி முறைகள் தவறு என்பதற்காக அவர்கள் தரப்பு நியாயத்தை நிராகரிக்க தேவை இல்லை. பெருமாள் முருகனுக்கு எதிராக மிரட்டல்களோ வேறு வகையான அடக்குமுறையோ கையாளப்பட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது அல்ல தண்டிக்கத்தக்கது.
எனவே கருத்து சுதந்திரம், மதவாதம், சாதி, திராவிடம், பெரும்பான்மை, சிறுபான்மை என்று சொல்லி நீங்கள் அந்த மக்களின் உணர்வுகளையும் வலியையும் கொச்சைப்படுத்த முயலாதீர்கள்.
Well Said
savukku,
my question is very simple,
if TN Policy file case against & arrest those attackers yesterday against charu and even charu for used unparlimentary words — WILL YOU SUPPOERT TN POLICE?
SAY YES OR NO
though caste people were protest against the novell (still we should say ie; Novell????!!), nobody has been attack anyone including murugan. no one threaten. no one used ugly words against him.
BUT MURUGAN group attacked charu, used unparlimentary words etc etc… forced jeyamogan to remove published article etc etc….
AND
THE TITLE OF ARTICLE SAYS;
“ஜனநாயகத்தின் மரணம்”
Savukku,
unaga jathi (writers) trousters kalunduchu ippo (oorukku nalla updesam pannumaiya)
idho;
மனுஷ்ய புத்திரன் தன் முகநூலில் நேற்றைய சம்பவம் குறித்து எழுதியது:
இன்று புத்தகக் கண்காட்சியில் சாருவுக்கு நடந்தது என்ன?
…………………………..
இன்று புத்தகக் கண்காட்சியின் சிற்றரங்கில் எழுத்தாளர்- வாசகர் சந்திப்பில் சாருநிவேதிதா பங்கேற்றார். வழக்கம்போலநிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தேன். ஒரு வாசகர் ‘’ எல்லா எழுத்தாளர்களும் பெருமாள் முருகன்விவகாரத்தில் அவருக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும்போது நீங்கள் மட்டும் இந்த சமயத்தில் அவரை விமர்சித்துஎழுதியிருப்பது சரியா?’’ என்று கேட்டார். அதற்கு சாரு ‘’ நான் நீண்ட காலமாக பொது அபிப்ராயங்களுக்கு மாற்றானகருத்துக்களைத்தான் கூறி வந்திருக்கிறேன். மாதொரு பாகன் ஒரு ’மீடியாக்கர்’ நாவல். பொதுவாக இதுபோன்றநாவல்கள்தான் சர்ச்சைகள் மூலம் பிரபலமாகின்றன. உதாரணமாக தஸ்லிமா நஸ்லீனீன் லஜ்ஜா ஒரு குப்பை’’ என்றுகூறி தான் ஏன் மாதொரு பாகனை நிராகரிக்கிறேன் என்பது குறித்து பேச ஆரம்பித்தார். அப்போது மயிலை பாலு எழுந்து ‘நீ எழுதுறதுதான் குப்பை…வாயை மூடு’’ என்று சத்தம் போட ஆரம்பித்தார். பதிலுக்கு சாரு ’’ ஒரு புத்தகத்தை நிராகரிக்கஎனக்கு உரிமை இல்லையா? அதென்ன அவ்வளவு புனிதமான டெக்ஸ்டா?’’ என்று கேட்டார். ஆனால் மயிலை பாலுஅவரை பேசவிடாமல் ஏகவசனத்தில் சத்தம்போட ஆரம்பித்தார். பதிலுக்கு சாருவும் ’ என்னை பேசவிடாமல் தடுத்தால்செருப்பால் அடிப்பேன்’ என்றார். உடனே பாலுவும் அவருக்கு ஆதரவானவர்களும் சத்தம் போட ஆரம்பித்தனர். நான் ‘சாரு தன் கருத்தை சொல்லி முடித்ததும் நீங்கள் தாராளமாக அவரிடம் கேள்வி எழுப்பலாம். அவரை பேசஅனுமதியுங்கள்’’ என்றேன். அதை யாரும் கேட்கவில்லை. நான் பின்னால் இருந்து எழுந்த சப்தத்தைபொருட்படுத்தாமல் தொடர்ந்து கூட்டத்தை நடத்த முயன்றேன். பாதுகாவலர்கள் பாலுவை அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.
சிறிது நேரத்தில் பாலு வேறு சிலரை அழைத்துக்கொண்டு அரங்கத்திற்குள் வந்தார். அதில் ஒருவர் சாருவைமிகமோசமான வார்த்தைகளில் திட்டிக்கொண்டே அடிப்பதுபோல சாருவை நோக்கி வந்தார். அவர்பின்னால் சிலர்வந்தனர். அவர்களை வேறு சிலர் தடுத்தனர். பயங்கர கூச்சல் குழப்பம் நிலவியது. சிறிது நேரத்தில் காவல்துறையினர்வந்தனர். கூச்சல் போட்டுக்கொண்டுருந்தவர்களை வெளியேற்றினர். வெளியேற்றப்பட்டவர்கள் அரங்கத்திற்குவெளியே நின்று சிறிது நேரம் சப்தமிட்டுக்கொண்டிருந்தனர். காவலர்கள் ’இங்கே பெருமாள் முருகன் பற்றி எதுவும்பேசவேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டனர். ஒரு இறுக்கமான சூழலில் சாரு வேறு பல கேள்விகளுக்கு பிறகு பதில்அளித்தார். கூட்டம் முடிந்ததும் காவல்துறையினர் பாதுகாப்பாக சாருவை அழைத்துச்சென்றனர்.
எனக்கு இந்த சம்பவத்தில் புரியாத சில விஷயங்கள் இருக்கின்றன? சாரு ஒரு எழுத்தாளரை நிராகத்தால் அதற்காகஅவரைப் பேசவிடாமல் தடுப்பது என்ன நியாயம்? இப்படி தடுப்பவர்கள்தான் பெருமாள் முருகனுக்கு கருத்து சுதந்திரம்வேண்டுமென்று போராடுகிறார்கள். அப்படி என்றால் கருத்து சுதந்திரம் என்பது நாம் ஆதரிக்கிற ஒரு தரப்புக்கு மட்டும்உரிய ஒன்றா? முதலில் மோசமான ஒரு சூழலை ஏற்படுத்திவிட்டு பிறகு ‘ அவன் என்னை செருப்பால் அடிப்பேன் என்றுசொன்னான்’ எனச் சொல்லி அனுதாபம் தேடுவதற்காக ஆளைத்திரட்டிக்கொண்டு அடிக்க வருவதில் என்ன நியாயம்இருக்கிறது? மாற்று அபிப்பராயங்களை ஏற்க முடியாமல் திருச்செங்கோடில் சாதி வெறியர்கள் பெருமாள் முருகனுக்குஎதிராக நடந்துகொள்வதற்கும் இன்றைய கூட்டத்தில் சாருவுக்கு நடந்தற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. ?
முதல் முறையாக காவல்துறையின துணையுடன் ஒரு இலக்கியச் சந்திப்பை நடத்த நேர்ந்தற்காக மிகுந்தஅவமானமடைகிறேன். இது ஒட்டுமொத்தமாக பைத்தியக்காரத்தனமான ஒரு சூழல் . இதில் எல்லோருமேகோமாளியாகிக்கொண்டிருக்கிறோம்.
கடைசியில் எல்லாம் இதற்குத்தானா?
charu has threatened yesterday, jayamogan rollback the article in the overnight? who are the writers / supporters become rowdy’s suavukku? should they not face any CRIMINAL Act? or since those are your caste (writers), should they allow and encourage to do more rowdyisam?
ஜக்கி மாதிரி ஆளுங்க கோலோச்சுர இந்த கேடு கெட்ட நாட்டுல என்ன வேணும்னாலும் நடக்கும். பெருமாள் முருகன் பேசாமல் கனடா மாதிரி ஒழுக்கமான நாட்டில் குடியேறலாம்.
கிறித்துவம், இஸ்லாம். இந்துத்துவம் – Saakavendum savukku.. Bharat Mata Ki ja..
அணைத்து கிருதுவனுக்கும் தாய் மதம் இந்து தான்..
http://www.tamilhindu.com/2014/01/fishstory/
//ஆனால் சந்தனுவின் மரணத்துக்குப் பிறகு சத்யவதி பீஷ்மரின் உறவே மாறித்தான் போனது. சத்யவதியின் எந்த வேண்டுகோளையையும் பீஷ்மர் தன் தந்தையின் ஆணையாகவே கருதி செயல்படுத்தினார். பீஷ்மருக்கு தயக்கம் தரக் கூடிய எந்த வேண்டுகோளையும் சத்யவதி முன் வைக்கவும் இல்லை. சித்ராங்கதன் மரணம், விசித்ரவீர்யன் முடி சூடியது, காசி ராஜகுமாரிகளைக் கவர்ந்து வந்தது, அம்பாவின் எதிர்ப்பு, விசித்ரவீர்யன் இறப்பு என்று எந்த சுக துக்கத்திலும் அவர்கள் இருவரும் இணைந்தே செயல்பட்டனர். ஒருவர் மனதை, எண்ணங்களை வாய்விட்டுச் சொல்ல வேண்டிய தேவையே இருக்கவில்லை. அவர்கள் இருவரும் கொஞ்சம் வாதிட்டுக் கொண்டது அம்பிகா அம்பாலிகா இருவருக்கும் நியோகம் ஏற்பாடு செய்தபோதுதான். பீஷ்மர் பாலிகா நாட்டிலிருந்து தன் பெரிய தந்தையின் மகனான பூரிஸ்ரவஸ் மூலமாக நியோகத்தை நடத்தலாம் என்று எண்ணினார். சத்யவதியோ பாலிக நாட்டிலிருந்து பூரிஸ்ரவஸ் வரும் வரை ராணியர் இருவரும் உயிர் தரிக்க மாட்டார்கள், பீஷ்மரே நியோகத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினாள். வியாசர் என்ற புள்ளியில் இருவரும் சமரசம் செய்து கொண்டனர்.//
சணநாயகமே இல்லாத நாடுகளில்கூட
இதழ்களுக்கும் புத்தகங்களுக்கும் எழுத்தாலர்களுக்கும் சுதந்திறம் உண்டு.
இங்கு சணநாயகம் இருக்கிரதா?
இந்துமத தீவிரவாதிகள் ஆட்சிக்கு வந்ததில் இறுந்தே இதுப்போன்ற அத்துமீரல்களும் அணியாயங்களும் நடந்தேரிக்கொண்டேதான் இருக்கிரது.
ஆனால் அவர்கள் மட்டும் எதாவது கருத்து சொன்னால் அதும்மட்டும் அவரது தணிப்பட்ட கருத்து என்று தரிக்கெட்ட தமிழிசை ஓத்து ஊதுகிரால்.
அவர்கள் பானியிலே கூற விரும்புகிரேன். இந்த அனியாயத்தை முருகனும் பெருமாலும் இறுந்தால் அவர்களே பார்த்துக்கொல்லட்டும்.
யோவ் பக்கி, முதல்ல தமிழை ஒழுங்கா பிழையின்றி எழுத கத்துக்கோ, அப்புறம் உம் பஞ்சாயத்தை வச்சிக்கோ.
பெருமாள் முருகனுக்கு ஆதரவாய் பேசும் மக்களே, முதலில் உங்களின் மனைவிக்கும் , உங்களின் பெண் குழந்தைகளுக்கும் பெருமாள் முருகனின் ஆபாச வரிகளை படித்து காட்டுங்கள். அவர்கள் அதை படித்து விட்டு உங்களுக்கு உங்களுக்கு ஆதரவாய் கருத்து கூறினால் மட்டும் பெருமாள் முருகனுக்கு SUPPORT செய்யுங்கள்
அண்பு நண்பரே உங்களது கருத்தை ஞாயமாகவே எடுத்துக்கொல்வோம். இந்த புத்தகம் வெலிவந்து 4 ாண்டுகளுக்குமேல் ஆகிரது.
இதுவரை அந்த புத்தகத்தின் மீது 6 ஆய்வுகளுக்குமேல் நிகழ்த்தப்பட்டு அவர்களுக்கு பட்டங்களும் வழங்கப்பட்டுவிட்டன.
இத்தனை ஆண்டுகளாக உங்களது கன்களுக்கு இந்த புத்தகம் புலப்படவில்லையா?
ஆங்கிலத்தில் எவலவு கேவலமாக உங்களை சித்தரித்தாளும் அதை எற்றுக்கொள்ளும் உங்கள் மணது. உன்மையை பதிவாக கொண்டுவந்தாள் அதுமட்டும் உங்கள் பார்வைக்கு வக்கிரமாகவும் கேவலமாகவும் தெரியுமா என்ன?
யோவ் பக்கி, முதல்ல தமிழை ஒழுங்கா பிழையின்றி எழுத கத்துக்கோ, அப்புறம் உம் பஞ்சாயத்தை வச்சிக்கோ.
எலே பக்கி பீட்டர்…எவனாவது DCP ராகவன் மாதிரி உன் கண்ண பிதுக்கி அந்த புத்தகத்த படிக்க வக்கிறானா?
உன் பொண்டாட்டி புள்ளக்கி அந்த நாவல பத்தி தெரிய கூடாதுனா அந்த புத்தகத்த படிக்காத…
உனக்கு மொதல்ல….இப்படி ஒரு புக்கு இருக்குனு தெரியுமா…
போ மொதல்ல போய் பொழைக்கிற வழிய பாரு….
Niyoga
From Wikipedia, the free encyclopedia
Niyoga (Sanskrit: नियोग) is an ancient Hindu tradition, in which a woman (whose husband is either incapable of fatherhood or has died without having a child) would request and appoint a person for helping her bear a child. According to this Hindu tradition the man who was appointed must be or would most likely be a revered person.
There were various clauses associated with this process, as follows:
1. The woman would agree to this only for the sake of rightfully having a child and not for pleasure.
2. The appointed man would do this for Dharma, considering it as his duty to help the woman bear a child and not for pleasure.
3. The child, thus born would be considered the child of the husband-wife and not that of the appointed man.
4. The appointed man would not seek any paternal relationship or attachment to this child in the future.
5. To avoid misuse, a man was allowed a maximum of three times in his lifetime to be appointed in such a way.
6. The act will be seen as that of Dharma and while doing so, the man and the wife will have only Dharma in their mind and not passion nor lust. The man will do it as a help to the woman in the name of God, whereas the woman will accept it only to bear the child for herself and her husband.
7. There would be no foreplay, oral or any other type of sexual activity except the intercourse.
8. There would be a semi-transparent curtain covering the upper part of the woman, only allowing view and access to the womans lower part for the man performing Niyoga.
In Niyoga, the bodies were to be covered with ghee (so that lust may not take root in the minds of participants but actual act may take place for conception).
In the Mahabharata
The epic Mahabharata describes two instances of niyoga. Queen Satyavati compels her son and sage Vyasa to perform niyoga with the widows of her son Vichitravirya. The widows Ambika and Ambalika and one of their maids bear Dhritarashtra, Pandu and Vidura respectively. When Pandu is cursed to die on being intimate with any woman, his wives Kunti and Madri perform niyoga with the gods and mother five sons – the Pandavas. Pandu convinces Kunti to have niyoga with the gods and mother children for him, citing the example of Kalmashapada, who had been cursed to die if he touches any woman with amorous intent and requests his guru – the sage Vashishtha to have niyoga with his queen.
https://veyilaan.wordpress.com/2011/01/21/bull/
//
இது போன்ற விசயங்களைப் பேசிக் கொண்டு வரும் போது, என்னுடன் பயணித்த நண்பர்கள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்தை தம் சொந்த ஊராகக் கொண்டவர்கள். தம் ஊரில் முன்னர் நடந்து கொண்டிருந்த இருந்த ஒரு விஷயத்தைப் பற்றிச் சொன்னார்கள்.
முன்பெல்லாம், அவர்களுடைய கிராமத்தில் மைனர் கவுண்டர் என்று ஒருவர் இருப்பார். வாரிசு இல்லாத பெருந்தனக்காரர்கள், தமது சொத்துக்களை அனுபவிப்பதற்காவது, ஒரு குழந்தை வேண்டுமென்பதற்காக, மைனர் கவுண்டரை வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பார்கள்.
முன்கூட்டி முடிவு செய்த நாளில், இரவு நேரத்தில் குறிப்பிட்ட வீட்டிற்கு வில்லு வண்டியில் வருவார். சிறப்பு அசைவ விருந்து முடிந்ததும், தனியறையில் பால், பழவகைகள், முந்திரி, பிஸ்தா பருப்புகளுடன் முதலிரவு போல அலங்கரித்த படுக்கையில் அந்த வீட்டின் பெண்மணி காத்திருப்பார். அப்பெண்மணியுடன் கலவி முடித்து விடியும் முன் சென்று விடுவார்.
கரு உருவாகும் வரை மைனர் கவுண்டர் அந்த வீட்டிற்கு குறிப்பிட்ட இடைவெளியில் வந்து சென்று கொண்டே இருப்பார். எந்த வீட்டிற்கு சென்று வந்தோம் என்பதை வெளியிலும் சொல்ல மாட்டார். பொலிகாளைகளாக மைனர்கள் முன்னர் இருந்தாலும், கருத்தரித்தலுக்கு விந்தணுக் கொடை அளித்திருக்கிறார்கள். இப்போது மைனர்களும் இல்லை. இந்த வழக்கமும் இல்லை.
நன்றி – அதீதம் (இணைய இதழில் வெளியானது).
//
You dont tell me again and again that you are only showing the mirror. I hate you for making me see the ugly face in it. Why dont you leave my dreams intact where I look like a prince?
திருசெங்கோடு திருவிழா வருகை தரும் குழந்தை இல்ல பெண்கள் அனைவரும் “”””””””” என்று கேவலமாய் எழுதிய பெருமாள் முருகனுக்கு ஆதரவாய் பேசும் நபர்கள் யாரென்று பார்த்தால்.
1. அரசியில் ஆதாயம் தேடுபவர்கள் : சீமான், திருமாவளவன், சில கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தாவர்கள்.
2. ஹிந்துக்களை கேவலமாய் பேசினால் தான் தங்களுக்கு டிவி இல் பெட்டி தர அனுமதிப்பார்கள் என்று கருதி பெருமாள் முருகனை ஆதரிக்கும் குழு , ஞானி, மனுஷபுத்ரன்
3. Facebook மூலம் அரசியல் ஆதாயம் அடைய விரும்பும் நபர்கள்.
அலூர் ஷனனவாஸ், T N கோபாலன், கிஷோரே k சுவாமி
4. வெப்சைட் வினவு, கீற்று போன்ற முஸ்லிம் ஆதரவு வெப்சைட்.
பெருமாள் முருகனுக்கு ஆதரவாய் பேசும் மக்களே, முதலில் உங்களின் மனைவிக்கும் , உங்களின் பெண் குழந்தைகளுக்கும் பெருமாள் முருகனின் ஆபாச வரிகளை படித்து காட்டுங்கள். அவர்கள் அதை படித்து விட்டு உங்களுக்கு உங்களுக்கு ஆதரவாய் கருத்து கூறினால் மட்டும் பெருமாள் முருகனுக்கு SUPPORT செய்யுங்கள்
100% Correct
perfect!